சனி, 9 ஏப்ரல், 2016

ஜெயலலிதா:படிப்படியா மதுவிலக்கு....கொலை கொலையா முந்திரிக்கா......நரியை நரியை சுத்திவா.....

படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவேன் என்ற ஜெயலலிதா பேச்சுக்கு கலைஞர் பதில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று மாலை சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப்பேசினார். அப்போது அவர், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவேன்’’என்று கூறினார். மதுவிலக்கு பற்றி பேச திமுகவுக்கு தகுதி கிடையாது என்றும் கூறினார். அவர் மேலும், அதிமுக ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்டார். இதுகுறித்து திமுக தலைவர் கலைஞரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, சிறிது நேரம் எதுவும் சொல்லாமல் செய்தியாளர்களை அமைதியாகப்பார்த்த கலைஞர், ‘’உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் நாளை மாலை பதில் சொல்லப்படும்’’ என்று தெரிவித்தார்.  nakkheeran.in

பெண்களின் பொற்கால ஆட்சி இது... மீண்டும் தொடரவேண்டும் : பிரச்சாரத்தை தொடங்கினார் ஜெ

தமிழகத்தில் அதிமுக ஆட்சி பெண்களுக்கு பொற்கால ஆட்சி இதுவாகும். இந்த நல்லாட்சி தொடரவேண்டும் அதிமுகவிற்கு வாக்களியுங்கள் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் மே 16ம்தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் 22ம்தேதி துவங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 12 நாட்களே உள்ளன. அதிமுக 227 தொகுதிகளில் போட்டியிடும் என்றும், கூட்டணிக் கட்சிகள் 7 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் ஜெயலலிதா கடந்த 4ம்தேதி அன்று அறிவித்து 227 தொகுதிகளுக்கும் அண்ணா தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலையும் அன்றைய தினமே வெளியிட்டார். கூட்டணிக் கட்சிகளும் 7 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடுகிறது. Jayalalitha kick start campaign in Chennai ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

பீட்டர் அல்போன்ஸ் போர்க்கொடி! வாசன் முடிவு ஏற்றுகொள்ள முடியாது.... தமாகவின் நோக்கம் சிதைக்கபட்டு விட்டது

தமிழ்மாநில காங்கிரஸ் விஜயகாந்த் அணியுடன் சேர்ந்ததை என்னால் ஏற்றுகொள்ள முடியாது. தமிழக காங்கிரசின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் முன்னாள் எம்எல் ஏவுமான திரு.பீட்டர் அல்போன்ஸ் அறிவிப்பு. கடந்த சில நாட்களாக வாசனின் திரை மறைவு பேச்சுக்களில் அதிருப்தி உள்ளவராகவே இருந்தார். ஆனாலும் கண்ணியம் கருதி மௌனமாகவே இருந்தார். தமாக தொடங்கப்பட்டதின் நோக்கமே அடியோடு இல்லாமல் போய்விட்டதாக தொலைகாட்சி பேட்டிஒன்றில் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். தமாகவின் முக்கியமான தலைவரின் இந்த அதிருப்தி நிச்சயம் உள்ளே ஒரு போராட்டம் வெடித்து உள்ளதையே காட்டுவதாக பலரும் கருதுகிறர்கள
இன்று சத்திய மூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் மீண்டும் காங்கிரசில் சேரவேண்டும்.

அதிமுக.....திமுக...நேரடிப்போட்டி...176 தொகுதிகளில்

சென்னை,ஏப்.09 (டி.என்.எஸ்) காங்கிரஸ் - திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு ஒருவழியாக முடிவடைந்துவிட்ட நிலையில், திமுக 176 தொகுதிகளில் போட்டியிடப் போகிறது.
திமுக-வுடன் கூட்டணி சேர்ந்துள்ள காங்கிரஸுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதோடு, அவை எந்த எந்த தொகுதிகள் என்ற விபரமும் அறிவிக்கப்பட்டு விட்டது.
மேலும், திமுக கூட்டணியில் ஈடுபட்டுள்ள மனித நேய மக்கள் கட்சிக்கு–5, முஸ்லிம் லீக் கட்சிக்கு–5, புதிய தமிழகம் கட்சிக்கு–4, பெருந்தலைவர் மக்கள் கட்சி, சமூக சமத்துவ படை, தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா 1 இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் சிவகாமி IAS....பெரம்பூர் NR தனபாலன்.....திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டுள்ளது

தி.மு.க. கூட்டணியில் பெருந்தலைவர் மக்கள் கட்சி,சமூக சமத்துவப்படை ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கபட்டு உள்ளது. இதன் தலைவர்கள் என்.ஆர் தனபாலன், சிவகாமி ஆகியோர் இன்று கோபாலபுரத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதியுடன் சந்தித்து போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு பெரம்பூர் தொகுதியும் , சமூக சமத்துவப்படைக்கு பெரம்பலூர் தொகுதி ஒதுக்கூவது எனவும்ன் முடிவு nakkheeran.in

தேமுதிக 104, மதிமுக 29, சிபிஐ 25, சிபிஎம் 25, விடுதலை சிறுத்தைகள் 25, த.மா.கா 26.....தொகுதிப் பங்கீடு விவரம்

தேமுதிக மக்கள் நலக் கூட்டணியில் இணைந்துள்ளது த.மா.கா. இதனைத் தொடர்ந்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு த.மா.கா. தலைவர் வாசன் சென்றார். அங்கு விஜயகாந்த், வைகோ, ஜி.ரா, முத்தரசன் ஆகியோருடன் வாசன் பேச்சுவார்த்தை நடத்தினார்.இறுதியில், தேமுதிக 104, மதிமுக 29, சிபிஐ 25, சிபிஎம் 25, விடுதலை சிறுத்தைகள் 25, த.மா.கா. 26 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன nakkheeran,in

சயீப் அலிகான், கரீனா கபூர், கரிஷ்மா கபூர் பனாமா கருப்பு பண பட்டியலில் இன்னும் பல இந்தியர்கள்

இந்தியாவை சேர்ந்த பலர் சுவிஸ் வங்கியில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள தகவல்கள் ஏற்கனவே வெளியானது. அவர்களின் பெயர் பட்டியலும் வந்தது. இது குறித்து மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் விசாரணை மேற்கொண்டுள்ளன. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் பனாமா ஆவணங்கள் என்ற பெயரில் இன்னொரு கருப்பு பண பதுக்கல் பட்டியல் வெளியாகி நாட்டை உலுக்கி இருக்கிறது. வெளிநாடுகளில் கருப்பு பணத்தை பதுக்கியதாக உலக அரசியல் தலைவர்கள் 140 பேர் இந்த பட்டியலில் உள்ளனர். இந்தியாவை சேர்ந்த நடிகர்-நடிகைகள் உள்பட 500 பிரபலங்களின் பெயர்களும் இதில் இருக்கிறது. இந்தி நடிகர் அமிதாப்பச்சன், நடிகை ஐஸ்வர்யாராய் ஆகியோரின் பெயர்களும் இதில் உள்ளன. அமிதாப்பச்சன் இந்தியாவில் சம்பாதித்த பணத்தில் வரி ஏய்ப்பு செய்து அதனை வெளிநாடுகளில் உள்ள கம்பெனிகளில் முதலீடு செய்து வருமானம் பார்த்ததாக கூறப்பட்டது.

தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் தமாகாவுக்கு 30 தொகுதிகள்- இன்று அறிவிப்பு?

சென்னை: தேமுதிக - மக்கள் நலக்கூட்டணியில் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 30 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தற்போதைய அந்த கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வருகிற சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடும் அளவுக்கு த.மா.கா.வுக்கு பலம் இல்லை. மக்கள் விரும்பும் கூட்டணியில் தான் த.மா.கா இடம் பெறும் என்று ஜி.கே.வாசன் தொடர்ந்து கூறிவந்தார். பின்னர் அதிமுகவுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தமாகா ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

யமுனா நதியில் பெண் நீதிபதியை படம்பிடித்த ஆண் போலீஸ்காரர் இடைநீக்கம்

டெல்லி,ஏப்.08 (டி.என்.எஸ்) யமுனையில் தனது குடும்பத்தினருடன் குளித்த பெண் நீதிபதியை போட்டோ எடுத்த போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
டெல்லி மாநகர நீதிமன்றத்தில் பெண் நீதிபதியாக இருக்கும் ஒருவர் தனது கணவர் மற்றும் 7 வயது மகனுடன் யமுனை நதிக்கு சென்று புனித நீராடினார்.
3 நிமிடங்கள் வரை யமுனையில் குளித்து பிரார்த்தனை செய்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த டெல்லி ஜெய்த்பூர் போலீஸ் நிலைய போலீஸ்காரர் பெண் நீதிபதியை தனது செல்போனில் படம் பிடித்தார். இதை நீதிபதி பார்த்து விட்டார்.

வாரிசுகள்.... தமிழக காங்கிரஸ் தலைவர்களின் வாரிசுகள் பெருமளவில் சீட்டு வேட்டை

தி.மு.க., தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில், முதல் கட்டமாக, தி.மு.க.,- காங்கிரஸ் கூட்டணி உறுதியான பின், இரண்டாவது கட்டமாக, தொகுதி பங்கீடு உறுதி செய்வது குறித்து, கருணாநிதி யுடன் காங்கிரஸ் மேலிட தலைவர் குலாம்நபி ஆசாத் நடத்திய பேச்சு தோல்வி அடைந்தது. தோல்வி, தொண்டர்கள் மத்தியில் எந்த சலசலப்பையும் ஏற்படுத்தவில்லை. எதையும் எதிர்பார்க்காத தொண்டர்களுக்கு அது ஏமாற்றத்தையும் தரவில்லை. ஆனால், எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் கோஷ்டி தலைவர்கள் தான், தி.மு.க., கூட்டணியை முறித்துக் கொள்ளக் கூடாது என்பதில், ஒருமித்த கருத்துடன் கூடி ஆலோசித்தனர். அதன் விளைவு, தனித்து போட்டியிட விரும்பிய காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் மனதை, கோஷ்டி தலைவர்கள் கரை கரை என கரைத்தனர். இதற்கு முக்கிய காரணம், வாரிசுகளை தலைதுாக்கி விடும், 'பொறுப்புள்ள அப்பாக்களாக' நடந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை.   கட்சிக்காக பல வருடம் உழைத்த அடிமட்ட தொண்டனுக்கு இப்பொழுதாவது உறைத்தால் நல்லது....அவனவன் கோடீஸ்வரன் ஆயிட்டான் நீ இப்பவும் போயி கொடி பிடிசுகிட்டு நாதாரி 

மக்கள் நல கூட்டணியில் தமாக......வைகோவின் பதவி இனி வாசனுக்கு?

விகடன்,காம் :போயஸ் தோட்டத்தின் கதவுகளுக்குப் பிடி கொடுக்காத வாசன், இப்போது மக்கள் நலக் கூட்டணியில் ஐக்கியமாக இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. 'ஓரிரு நாளில் இதுபற்றிய முறையான அறிவிப்பை வாசன் வெளியிடுவார்' என்கின்றனர் த.மா.காவினர். 'தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியோடு பா.ஜ.க பேசிக் கொண்டிருக்கிறது' என அதிர வைக்கிறார் தமிழிசை சௌந்தர்ராஜன். இதற்கு வாசன் தரப்பில் எந்தப் பதிலும் இல்லை. 'வேட்புமனுத் தாக்கலுக்கு இன்னும் பதினைந்து நாட்கள் இருக்கிறது. விரைவில் எங்கள் முடிவை அறிவிப்போம்' என யோசித்துக் கொண்டே இருக்கிறார் வாசன். இதுவரை நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் வாசன் அளவுக்கு யோசித்தவர்கள் யாராவது இருப்பார்களா என்பது சந்தேகம்தான்."என்ன முடிவில்தான் இருக்கிறார் வாசன்?" என்ற கேள்வியை த.மா.காவின் மூத்த தலைவர் ஒருவரிடம் கேட்டோம். பழைய விட்டலாச்சாரியின் விடாகண்டன் கொடாக்கண்டன் படம் ஞாபகத்துக்கு வரது  இதெல்லாம் என்ன உறவோ இன்ன பிரிவோ காசு பார்க்கும் மேடையில்

தேமுதிகவின் இரு அணிகளும் 10-ம் தேதி போர் முழக்கம்....ஒழுங்கு நடவடிக்கைகளில் இருபகுதியும் வேகம்.....

விகடன்.காம் :தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் வரும் 10-ம் தேதி செயற்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அதே நாளில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சந்திரகுமார், அதிருப்தியாளர்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் திமுகவுடன், தேமுதிக கூட்டணி சேரும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள், விஜயகாந்தை நேரில் சந்தித்து கூட்டணிக்கு அழைத்தனர். இந்த நிலையில், திமுகவுடன் கூட்டணி பேச்சு நடந்து வருவதாக தகவல் பரவியது. இந்த சூழ்நிலையில், தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக விஜயகாந்த் அறிவித்தார். இந்த அறிவிப்பு திமுகவினரையும், அக்கட்சியினரையும் அதிர்ச்சியடைய வைத்தது. இதனால் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து பல மாவட்டச் செயலாளர்கள் முதல் வட்டச் செயலாளர்கள் வரை பின்வாங்கினர். 

சேலத்தின் அடுத்த வீரபாண்டி ஆறுமுகம் நான்தான்...!'- தேமுதிக எம்.எல்.ஏ. பார்த்திபனின் 'பகீர்' அரசியல்!

விகடன்.காம் :விஜயகாந்த் மீதும், அவரின் மனைவி பிரேமலதா மீதும் பல்வேறு திடுக்கிடும் குற்றச்சாட்டுகளைக் கூறி அக்கட்சியில் இருந்து வெளியே வந்து பரபரப்பான  பேட்டிகளைக் கொடுத்தனர்  எம்.எல்.ஏ.கள் சந்திரகுமார், எஸ்.ஆர்.பார்த்திபன் மற்றும் சேகர் ஆகியோர். இதனையடுத்து தேமுதிக தலைமை அவர்கள் மீதும்,  அவர்களின் ஆதரவாளர்கள் மீதும் கட்சியை விட்டு நீக்கும் நடவடிக்கையை எடுத்தது.
தேர்தல் நேரத்தில் இது போன்று தேமுதிக பிளவுபட்டு நிற்பது பெரும் பரபரப்பான விவாதத்தை தமிழக அரசியல் அரங்கில் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ.வான எஸ்.ஆர்.பார்த்திபன் மீது ஏற்கனவே உள்ளூர் பல்வேறு திடுக்கிடும் புகார்களை,  அத்தொகுதி மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியதும், உள்ளூர் தேமுதிகவினரும் தங்களது கட்சித்தலைமைக்கு இவரைப்பற்றி கடந்த காலங்களில் பக்கம் பக்கமாக புகார்களை தட்டிவிட்ட கதையும் இப்போது சென்னை வரைக்கும் பேசப்படுகிறது. 

106 கோடியை சுருட்டிய மத்திய அமைச்சர் சுஜானா சவுத்திரிக்கு கைது வாரன்ட்... மொரிசியஸ் வங்கியில்.... Arrest Warrant to Union Minister Sujana Chowdary


ஐதராபாத்: மொரீஷியசை சேர்ந்த வங்கியில் கடன் பெற்று, திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், மத்திய அமைச்சருக்கு எதிராக, 'பிடிவாரன்ட்' பிறப்பிக்கப்பட்டு உள்ளது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை இணையமைச்சராக பதவி வகிப்பவர், ஒய்.எஸ்.சவுத்ரி. தெலுங்கு தேசம் கட்சியின் ராஜ்யசபா எம்.பி.,யான இவர், 'சுஜானா இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனங்களின் இயக்குனராகவும் உள்ளார். மொரீஷியஸில் இவர் நடத்தும் நிறுவனத்துக்காக, அந்நாட்டு வங்கியில், 106 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார். இந்த கடனை திருப்பிச் செலுத்தாததால் அவருக்கு எதிராக, மொரீஷியஸ் வங்கி சார்பில், ஐதராபாத் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.  இவனையும் பக்குவமாக லண்டனுக்கு  அனுப்பு வைப்பாங்க

குற்றப்பரம்பரை விவகாரம்:பாலாவுக்கும் பாரதிராஜாவுக்கும் அக்கப்போர்....

சென்னை: குற்றப்பரம்பரை பட விவகாரம் தொடர்பாக பாரதிராஜாவுக்கும் ரத்னகுமாருக்கும் எச்சரிக்கை செய்வதாக இயக்குநர் பாலா கூறியுள்ளார். குற்றப்பரம்பரை படத்தை யார் எடுப்பது என்பதில் இயக்குநர் பாலா மற்றும் பாரதிராஜா இடையே கடுமையான போட்டி நிலவிவந்தது. இதையடுத்து இப்படத்தை மதுரை அருகே உள்ள பெருங்காமநல்லூரில் பூஜையுடன் தொடங்கினார் இயக்குநர் பாரதிராஜா. Director bala warns to bharathiraja இந்நிலையில் சென்னை பிரசாத் லேபில் இன்று மாலை பத்திரிகையாளர்களை சந்தித்தார் பாலா. அப்போது பாரதிராஜா மற்றும் ரத்னகுமாருக்கு வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்தார். இதுகுறித்து மேலும் அவர் பேசுகையில், குற்றப்பரம்பரை பட விஷயத்தில் நான் மிகவும் காயப்பட்டிருக்கிறேன். கூட்டாஞ்சோறு என்று வேல ராமமூர்த்தி எழுதிய கதை, அடுத்த பதிப்பில் குற்றப்பரம்பரை என்று வெளியானது. அந்தக் கதையின் ஒரு விஷயத்தை நான் திரைக்கதையாக்கி படமாக எடுக்கப் போகிறேன்.

JNU ஷேஹ்லா ரஷீத் மதுரையில் : மோடி அரசு பல்கலை கழகங்கள் ,புத்தி ஜீவிகள் மீது தாக்குதல்....பிஜேபி எம்பி மல்லியா ஓடியது ரகசியமாகவா?



நேர்மையான அரசைத் தேர்வு செய்ய மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மதுரையில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் துணைத்தலைவர் வலியுறுத்தினார். அகில இந்திய மாணவர் கழகம் சார்பில் தேச பக்தி-தேசத் துரோகம் என்ற தலைப்பில் மதுரை இறையியல் கல்லூரி வளாகத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், அகில இந்திய பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் கூட்டமைப்பு நிர்வாகி விவேகானந்தன் தலைமை வகித்தார். இதில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் துணைத் தலைவர் ஷெஹ்லா ரஷீத் பேசியது: தேசியம் எனும் கொள்கை ஜெர்மனி நாட்டில் ஆரம்பித்து மெல்ல மெல்ல ஆசிய நாடுகளுக்குள் பரவியது. இந்தியாவில் தற்போது தீவிரமாக வளர்ந்துள்ளது.

வெள்ளி, 8 ஏப்ரல், 2016

உயிர்பயத்தில் கண்ணதாசன் சித்திரா தம்பதிகள்...சாதி வெறியர்கள் தலைவர்கள் ஆகிறார்கள்..

கடந்த மார்ச் 13 அன்று, உடுமலைபேட்டையில் சங்கர் – கௌசல்யா என்ற இளம் தம்பதியினரை நடுரோட்டில் வைத்து மூன்று பேர் கொண்ட கும்பல் தாக்கிய சம்பவம் தமிழகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேவர் சமூகத்தை சேர்ந்த கௌசல்யா, சங்கர் என்ற தலித் இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதே அதற்கு காரணம். இந்த தாக்குதலில் சங்கர் அதே இடத்தில் பலியாக, கௌசல்யா படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அதிமுக தேர்தல் கமிஷன் ரகசிய பேச்சுவார்த்தை.....இம்முறையும் வாங்கப்பட்டுவிட்டதா?

விகடன்.காம் ;தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் தொடர்பாக, சென்னை வந்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியிடம் அ.தி.மு.க நிர்வாகிகள் பேசிய ரகசிய பேச்சின் சாராம்சம் அம்பலமாகியுள்ளது. சட்டமன்றத்  தேர்தல்,  வருகிற மே 16-ம் தேதி நடக்க இருக்கிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக, கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலுக்கு வந்தார் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி. இப்படியே போனா நாட்டிலேயே அம்பானி. டாடா, அதானி போன்றவர்களை விட தமிழக தேர்தல் ஆணையர்கள் வெற்றிகரமான....

மோடி : ரிமோட் கன்ட்ரோலை வேறு யாரிடமும் கொடுத்துவிடாதீர்கள்...அசாம் பிரசாரத்தில் அடம்பிடிக்கும் மோடி

அசாம் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதற்கட்டமாக 65 தொகுதிகளுக்கு கடந்த 4-ம்தேதி தேர்தல் நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக வரும் 11-ம் தேதி 61 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி தலைவர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.< அவ்வகையில், பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரச்சாரம் செய்தார். ராகா என்ற இடத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் மோடி பேசியதாவது:- அசாமில் காங்கிரஸ் கட்சியின் 15 ஆண்டுகால ஆட்சியில் எந்தவித வளர்ச்சியும் இல்லை. ஒட்டுமொத்த வளர்ச்சிப்பட்டியலில் மாநிலம் கீழ்மட்டத்தில் உள்ளது. தனது 15 ஆண்டு கால ஆட்சியில், தனது மகனின் அரசியல் எதிர்காலத்தை நிறுவுவதற்கே தருண் கோகாய் உழைத்து இருக்கிறார்.   இத்தனை வயசுக்கு பெறகும் விளையாட ரிமூட் கன்ட்றோலை கேட்டு அடம் பிடிக்கிராய்ன்ல?  வெளங்கிடும்  பார்த்தாலும் ஒருமாதிரியாதான் தெரியறான்..  

‘தி இந்து’: ஒரு சிறுபான்மை விளிம்புநிலைச் சமூகத்திலிருந்து வந்து, அரை நூற்றாண்டுக்கும் மேலாக....


சமஸ் : அவர் வரலாற்றில் இருக்கிறார்!  மனிதர்களை மதிப்பிடும்போது அவரவர் சாதியின் பின்னணியைக் கொண்டுவந்து பொருத்திப் பேசும் அசிங்கம் இங்கு பொதுவானதாகவே இருக்கிறது. ‘‘பார்ப்பானில் இருந்துதானே பார்ப்பனியம் வந்தது. எனவேதான், பார்ப்பான் ஒழிய வேண்டும் என்கிறேன்” என்று சொன்னவர் பெரியார். எனினும், வேறுபாடு இருக்கிறது. ஆதிக்கச் சாதியை நோக்கிய வசை என்பது வலியில் உருவாகும் கோபத்தின் வெளிப்பாடு. ஒடுக்கப்பட்ட சாதிகளை நோக்கிய வசை என்பது இழிவான எண்ணத்தின் வெளிப்பாடு.  நிதானம் அல்ல; நிதானமின்மையே மனிதர்களுக்குள் இருக்கும் மனிதர்களை வெளிக்காட்டுகிறது. நம்மூரில் ‘‘இந்த வேலையைச் செய்ததற்கு நீ வேறு வேலை செய்து பிழைக்கலாம்’’ என்று கூறினாலே அது எந்த வேலையைக் குறிக்கும் என்பது எல்லோருக்கும் புரியும். திமுக தலைவர் கருணாநிதி மீதான விமர்சனத்தின்போது, நீட்டி முழங்கி, வலிய கருணாநிதியின் சாதியை இந்த வசவின் பின்னணியில் கொண்டுவந்து இணைத்தார் மதிமுக பொதுச்செயலர் வைகோ. “நான் ஒன்றும் தவறாகச் சொல்லவில்லை. அவருக்கு நாகஸ்வரம் வாசிக்கக் கூடியத் தொழில் தெரியும். அதனால் சொன்னேன்” என்றபோது வைகோவிடமிருந்து வெளிப்பட்ட உடல்மொழி, அவரது வார்த்தைகளைக் காட்டிலும் ஆபாசமானது. திமுக மீதான பலரின் காழ்ப்புணர்வுக்குப் பின்னணியிலும்கூட என்னைப் (கலைஞர்) போன்ற ஒரு எளியவன் தலைமையில் அது இயங்குவதைத் தாங்கிக்கொள்ள முடியாத ஆற்றாமை இருப்பதை உணர்ந்திருக்கிறேன். எவ்வளவு உயரம் போனாலும் இங்கு சாதியம் பின்னின்று தாக்குதல் நடத்தும்.

கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நடிகர்கள் மக்களிடம் உண்டியல் ஏந்தலாமா? உங்க கட்டிடத்துக்கு ஏன்யா நான் தரணும்?

நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக நிதி திரட்டும் பொருட்டு ஏப்ரல் 17 -ஆம் தேதி நட்சத்திர கிரிக்கெட்நடத்தப்படுகிறது.டிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் தங்களின் சங்க கட்டிடத்தை கட்டவும் பொதுமக்களிடம்தான் உண்டியல் ஏற்க வேண்டுமா என்று கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. நடிகர் சங்க கடனைஅடைக்க, விஜயகாந்த் சங்க தலைவராக இருந்தபோது வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.
அதில்கலந்து கொள்ள மறுத்த அஜித், வேண்டுமானால் பணம் தருகிறேன் என்றார். அதனை ஏற்க மறுத்த விஜயகாந்த், ரஜினி, கமலிடம் இல்லாத பணமா? உன் பணம் தேவையில்லை என்று அஜித் கொடுக்க முன்வந்த 10 லட்சத்தை ஏற்க மறுத்ததுடன் அவரை ஏக வசனத்தில் விமர்சிக்கவும் செய்தார்.

காங்கிரஸ் 12 தொகுதிகளுக்கான உத்தேச வேட்பாளர்கள்... யசோத, திருநாவுக்கரசர், வசந்தகுமார், விஜயதரணி......

சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் குஷ்பு, திருநாவுக்கரசர், வசந்தகுமார் வேட்பாளர்களாக களமிறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சட்டசபை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள காங்கிரஸ் கட்சி 41 தொகுதிகளில் போட்டியிடுகிறது. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து நேற்று உடன்பாடு கையெழுத்தானது.  இதனிடையே காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அதிகாரப்பூர்வமகா வெளியாகும் முன்னதாக 12 தொகுதிகளுக்கான உத்தேச வேட்பாளர்கள் பெயர்கள் வெளியாகி உள்ளது. ஸ்ரீபெரும்புதூர்-டி.யசோதா; அம்பத்தூர்- அசன்; ராயபுரம்- மனோ; மயிலாப்பூர்-குஷ்பு; செய்யாறு- விஷ்ணு பிரசாத்; ஓசூர்- கோபிநாத்; காட்டுமன்னார்கோயில்- வள்ளல் பெருமான்; பாபநாசம்- ஆர்.கே.ராஜா; திருச்சி கிழக்கு- ஜெரோம் ஆரோக்கியதாஸ்; அறந்தாங்கி- திருநாவுக்கரசர்; நாங்குநேரி- வசந்த குமார்; விளவங்கோடு- விஜயதாரணி ஆகியோர் வேட்பாளர்களாக களம் இறங்கக் கூடும் என கூறப்படுகிறது.

மயிலாபூரில் காங்கிரஸ் குஷ்பு.....அதிமுக Ex டிஜிபி நடராஜ்... இளங்கோவன் முயற்சி.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்புவை மயிலாப்பூர் தொகுதியில் களம் இறக்கி அதிமுக வேட்பாளரை வீழ்த்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் இளங்கோவன் விரும்புவதாக கூறப்படுகிறது. >மயிலாப்பூரில் அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவர் முன்னாள் டிஜிபி நட்ராஜ் ஆவார். மயிலாப்பூர் தொகுதியானது அதிகம் படித்தவர்களை கொண்ட தொகுதி என்பதால் அங்கு நட்ராஜ் வெற்றி பெறுவது எளிது என்கிறார்கள்.திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

த.மா.கா.வுடன் தமிழிசை சவுந்தரராஜன் கூட்டணி பேச்சுவார்த்தை

பா.ஜனதா கூட்டணியில் சேர்க்க த.மா.கா.வுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். இதுபற்றி அவர் கூறியதாவது, பா.ஜனதா கூட்டணியில் த.மா.கா.வை சேர்ப்பது குறித்து அக்கட்சியின் 2–வது கட்ட தலைவர்களுடன் பேச்சு நடத்தி வருகிறோம். ஊழலுக்கு எதிரான கட்சிகளை பா.ஜனதா கூட்டணியில் சேர்க்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தார். nakkheeran.in

ம.ம.கட்சி இராமநாதபுரம், ஆம்பூர், நாகப்பட்டினம், தொண்டாமுத்தூர், உளுந்தூர்பேட்டை தொகுதிகளில் திமுக கூட்டணில்

ம.ம.க. போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி இணைந்துள்ளது. இதில் அக்கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து இரு கட்சிகளின் தொகுதி உடன்பாடு குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் மனித நேய மக்கள் கட்சி இராமநாதபுரம், ஆம்பூர், நாகப்பட்டினம், தொண்டாமுத்தூர், உளுந்தூர்பேட்டை ஆகிய தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்யப்பட்டது. ராமநாதபுரம், ஆம்பூர் ஆகிய தொகுதிகள் மனித நேய மக்கள் கட்சி வசம் உள்ளன. naakkeeran.in

நாகப்பட்டினம், ஒட்டன்சத்திரம்..அதிமுக கூட்டணியில் ம.நே ஜனநாயக கட்சிக்கு ஒதுக்கபட்டுள்ளது

மனித நேய ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு அதிமுக கூட்டணியில் மனித நேய ஜனநாயக கட்சிக்கு நாகப்பட்டினம், ஒட்டன்சத்திரம் இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த நிலையில் மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் இரண்டு தொகுதியின் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். நாகப்பட்டினம் - தமிமுன் அன்சாரி ஒட்டன்சத்திரம் - ஹாரூன் ரசீத் nakkheeran.in

முருகதாஸ் + விஜய் திருடிய குறும்படம் தாகபூமி.......கத்தி


முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்து 2014 இல் வெளியான கத்தி படத்திற்கான சிக்கல் நீண்டுகொண்டே இருக்கிறது. தஞ்சையைச் சேர்ந்த அன்புஇராசசேகர் என்பவர் இது தன்னுடைய தாகபூமி என்கிற குறும்படத்தை அப்பட்டமாகத் திருடித்தான் முருகதாஸ் கத்தி படத்தை எடுத்தார் என்பதற்கான சாட்சிகளை வெளியிட்டுள்ளார். அப்படம் வெளிவந்த சில நாட்களில் விசயமறிந்து தன்னுடைய போராட்டத்தைத் தொடங்கிய அன்புஇராசசேகருக்கு முருகதாஸ் தரப்பிலிருந்து எந்தப் பதிலும் இல்லையாம். அவருக்கு மின்னஞ்சல் அனுப்பியும் பதில் இல்லை, சந்திக்க முயன்றும் முடியவில்லை என்பதற்குப் பிறகு நீதிமன்றம் போயிருக்கிறார் அன்புராசசேகர். தஞ்சை மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு வழக்கும் மதுரையில் ஒரு வழக்கும் நடந்துகொண்டிருக்கிறது.

அதிமுகவில் நடிகர் சங்கத்தின் இரு அணிகளுக்கும் ஆளுக்கொரு தொகுதி...நடிகனுங்க பூரா பிரசாரத்துக்கு வந்துடணுல...

Jayalalithaa allots 2 seats for Nadigar Sangam arch rivalsநடிகர் சங்கத்தில் எலியும் பூனையுமாக மோதிக் கொண்டிருந்த சரத்குமார் மற்றும் கருணாஸை தேர்தல் களத்தில் ஒன்றாக்கிவைத்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா.
நடிகர் சங்க வரலாறு காணாத தேர்தல் என்றால், அது 2015-ல் நடந்த தேர்தல்தான். வழக்கமாக இது போன்ற தேர்தல்களில் ஃபீல்ட் அவுட் ஆன நடிகர்கள்தான் மும்முரம் காட்டுவார்கள். ஆனால் இந்த முறை முன்னணி நடிகர்கள் பலரும் களமிறங்கினர்.

குறிப்பாக விஷால்தான் பெரிய அளவில் வரிந்து கட்டிக் கொண்டு, தலைவராக இருந்த சரத்குமார், செயலர் ராதாரவிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். அவருக்கு ஆதரவாக கருணாஸ் வந்தார்.
சட்டமன்றத் தேர்தலே தோற்றுப் போகும் அளவுக்கு பிரச்சாரங்களும், அவதூறுப் பேச்சுகளும் என அனல் பறந்தது.

உடுமலை அரிவாளும் வைகோவின் நாதசுரமும் ! காமிராவில் சிக்கியதே...

‘’நான் அந்தப் பொருளில் பேசவே இல்லை. மனதால் கூட அப்படி நினைக்கவில்லை’’ என்கிறார் வைகோ. வைகோவுக்கு பார்ப்பனியத்தைக் கேலி செய்து பேசுவதற்கு மட்டும் நாக்கு வரவில்லை என்றால், அது தற்செயல் அல்ல; நேற்றுப் பேசியதும் தற்செயல் அல்ல. மேலே உள்ளவனின் காலைப் பிடிப்பதும் கீழே உள்ளவனை ஏறி மிதிப்பதும்தானே சாதிய மனோபாவம்!உள்ளத்திலிருந்து சாதி ஆதிக்க உணர்வை அகற்றியவன் முழு போதையில் இருந்தாலும், அவன் வாயிலிருந்து சாதிவெறி வசைச்சொல் வருவதில்லை. திருடுவது குற்றம் என்று பயின்ற ஒரு சிறுவன், பசி கண்ணை இருட்டினாலும், கடையிலிருந்து தின்பண்டத்தைத் திருட கை நீட்டுவதில்லை.
பெண்ணை ஒரு நுகர்வுப் பண்டமாகக் கருதாதவன், பேருந்தில் அழகான ஒரு பெண்ணைக் கண்டு உள்ளம் கிளர்ச்சியுற்றாலும், அவள் மீது அனிச்சையாக கை போடுவதில்லை.

பிரேமலதா ரகசிய யாகம் ! பலான படத்த சாமி படம்ன்னுவாங்க.....வட்டமா உக்காந்து சரக்கடிக்கரத யாகம்ன்னுவாங்க....

பிரேமலதாவின் பேச்சு  அவர் எப்படியாவது அடுத்த ஜெயலலிதாவாக ஆகிவிட எண்ணுவதாகவே தெரிகிறது . அதற்காக பிரபலம் ஆகிட முதல்வர் அம்மா அவர்களை கேவலம் சொல்லி பேசினார்..நீ யாரு..உன்னோட ஆசை என்ன..உனக்கெல்லாம் நாங்கள் பதில் சொன்னால் எங்களின் கவுரம் என்னாவது என்று எவருமே அந்த பிரேமாவுக்கு பதில் சொல்லவே இல்லை..அப்படிப்பட்டவர் கேப்டனை மூலையில் உட்காரவைத்துவிட்டு..அவரிடத்தை பிடிக்க ஆசைப்படுகின்றார்..விஜயகாந்துவின் இந்த நிலைக்கு முதற்காரணமே இந்த பிரேமாதான்..வி காந்துவை கட்டுப்படுத்தி இருக்கலாம்..எவ்வளவோ ட்ரீட்மென்ட் இன்றைக்கு உள்ளன..அவற்றை கண்டு விஜயகாந்துவை குணப்படுத்தி இருக்கலாம்..ஆனால் எதனை தடுக்க சொன்னார்களோ..அதனை இந்த பிரேமா அவர்கள் தடுக்கவில்லை..மாறாக உற்ச்சாகப்படுத்தி இருக்கின்றார்..எதற்கு? அரசியல் பதவி அவரை வாட்டி எடுத்துள்ளதே காரணம். வி காந்துவின் விடா முயற்சி..இன்றைக்கு பிரேமாவிற்கு லாபம் ஈட்டித்தருகின்றது..விஜயகாந்துவை பற்றிய கவலை இல்லாமல் யாகம் நடத்துகின்றாரே..அந்த நேரத்தில் விஜயகாந்துவிற்கு சிகிச்சைக்கு ஏதாவது சிந்தித்திருக்கலாமே..செய்வாரா? ஹ்ம்ம்...குணமடைந்துவிட்டால்..அப்புறமா எப்படி நாற்காலி கனவு காண்பது..யாகம் நடத்துவது எல்லாம்..நல்ல மாந்தர்கள் போங்கோள்!தினமலர்.காம்

விஜயகாந்த் வீட்டில் நள்ளிரவு யாகம்...முதல்வர் பதவிக்காக

விஜயகாந்த் வீட்டில், நேற்று முன்தினம் நள்ளிரவு ரகசிய யாகம் நடந்துள்ளது. தே.மு.தி.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:தஞ்சாவூரில் இருந்தும், கேரளாவில் இருந்தும் வேத விற்பனர்கள், நேற்று முன்தினம் காலை சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.
வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். அன்று நள்ளிரவு, விஜயகாந்த் வீட்டிற்கு அவர்கள் வந்தனர்.வீட்டின் கதவுகளை அடைத்து விட்டு, யாகம் நடத்தியுள்ளனர்.   என்னாது.. PROMPTING-பிரேமலதா முதல்வர் ஆகணுமா..? விஜய பிரபாகரன் அரசியல்ல வெற்றி பெறனுமா..? சம்முக பாண்டி சினிமால தொடர்ந்து நடிக்கணுமா..? அடப்பாவிகளா.. மொத்தத்துல உலகம் சீக்கிரமா அழியனும்னு யாகம் பண்ணியிருக்கானுங்க.. என்ன அநியாம்யா இது..?

கொடைநாட்டிலும்,சிறுதாவூரிலும் ஓய்வெடுத்து ஓய்வெடுத்து......கட்சிக்காரங்க முகமெல்லாம் மறந்து போச்சு....இதாங்க பிரச்னை!

சசிகலா கை ஓங்குகிறதா அ.தி.மு.க.,வில் சலசலப்பு அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியலில், சசிகலா குடும்பத்தினர் ஆதரவு பெற்றவர்கள், அதிக அளவில் இடம் பெற்றுள்ளனர். வேட்பாளர் மாற்றத்திலும், அவர்களின் கை ஓங்கியிருப்பது, கட்சியினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க.,வை பொறுத்தவரை, சாதாரண தொண்டன் உயர் நிலைக்கு வருவதும், உயர் நிலையில் இருப்பவர், ஒரே நாளில் சாதாரண நிலைக்கு தள்ளப்படுவதும் சாதாரணம். யாருக்கு வேண்டுமானாலும் வாய்ப்பு கிடைக்கும் என்பதால், இம்முறை ஏராளமானோர், சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, மனு கொடுத்தனர். 'சீட்' வாங்கி தருவதாகக் கூறி, ஏராளமானோர் வசூல் வேட்டையில் ஈடுபட்டனர்.  

வைகோவின் ஜாதீய உணர்வு ! பாட்டாளி மக்கள் கட்சிக்கும் இவங்கதான் பி டீம் ஆக இருக்குமோ?

வைகோவுக்கு கூட்டணியில் எச்சரிக்கை! 'போக்கு இப்படியே தொடர்ந்தால், கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்ய நேரிடும்' என, கம்யூனிஸ்டுகள், வைகோவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மக்கள் நலக்கூட்டணி ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் வைகோ பேசுபவை, கூட்டணிக்கு பெரும் நெருக்கடி ஏற்படுத்துகிறது என, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் ஏற்பட்ட எதிர்ப்பைத் தொடர்ந்து, வைகோவுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.எல்லை கடந்த பேச்சு:'
தே.மு.தி.க.,வை கூட் டணிக்கு இழுக்க, 500 கோடி ரூபாய் பணம் கொடுக்க தி.மு.க., முயற்சி; பத்திரிகையாளர்கள் பணம் வாங்கிக் கொண்டு செயல்படுகின்றனர்.கோவில்பட்டியில் நடந்த ரயில் மறியலின் போது கொரில்லா தாக்குதல் நடத்தினால் என்ன செய்வீர்கள்  
 தி.மு.க., தலைவர் கருணாநிதி, தே.மு.தி.க., சந்திரகுமார் ஆகியோர் வேறு தொழில் செய்யலாம்; கருணாநிதி ஜாதி பெயரைச் சொல்லி திட்டியது' என, வைகோவின் பேச்சும் செயலும், நாளுக்கு நாள் எல்லை கடந்து சென்றது.    வைகோ ஜாதி வெறியர்தான். அவரை தங்கள் வீட்டு நிகழ்ச்சிக்கு அழைப்பவர்கள் இதை அனுபவித்து உள்ளனர். அவருடைய இனத்தவர்கள் தவிர வேறு யார் சமைத்தாலும் சாப்பிட மாட்டார் என்று அவருடைய செயலர் ஒருவரை அறிமுகப்படித்தி வைப்பார். இவரை கூப்பிடுங்கள் இவர் சமைத்து கொண்டுவருவார். இதைத்தான் வைகோவிற்கு பரிமாற்ற வேண்டும் என்று. பல சமயங்களில் பொது மேடைகளில் பலருடைய இனத்தின் பெயரை இவர் சொல்லி இருக்க கேட்டிருக்கிறோம். வைகோவின் வேடம் கலைகிறது

அழகிரி....ஆடிய பாதங்களும் பாடிய வாயும் ஒய்ந்திடல் கூடுமோ? அதாங்க அஞ்ச நெஞ்சன் மீண்டும் ஆக்டிவ்!

அழகிரி ஆக்டிவ் திரைமறைவில் இருந்தபடி, தி.மு.க.,வில் அழகிரி, 'ஆக்டிவ்' ஆக செயல்படுவது தெரியவந்துள்ளது. 'தில்லுமுல்லு கட்சி' எனக் கூறிய பிரேமலதாவுக்கு, முதல் ஆளாக பதில் சொன்னதாகட்டும்; கருணாநிதியை அவதுாறாக பேசிய வைகோ கொடும்பாவியை கொளுத்தியதாகட்டும், அழகிரி ஆட்டம் ஆரம்பமாகி உள்ளதையே காட்டுகிறது.
கட்சியை விட்டு நீக்கப்பட்டிருந்தாலும், கட்சி விவகாரங்களில், அழகிரி அடிக்கடி மூக்கை நுழைக்கிறார் என்பது, தி.மு.க.,வினருக்கு தெரியாதது அல்ல. இவ்வளவு நாளும், 'தே,மு.தி.க.,வுடன் சேர்ந்தாலும், தி.மு.க., ஜெயிக்காது' என, திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்த அழகிரி, சமீபத்தில், அப்பாவை சந்தித்த பிறகு, ஆக்டிவாக செயல்பட துவங்கி
இருக்கிறார் என்கிறது, அறிவாலய வட்டாரம்.

வியாழன், 7 ஏப்ரல், 2016

சினிமாவுக்குப் போன ஜெயகாந்தன்....பிரபலமடையவோ பொருள் ஈட்டவோ சினிமாவுக்கு வந்தவர் அல்லர்


அம்ஷன் குமார்: சினிமா எவ்வாறு தமிழ்ச் சமூகத்தைச் சீரழிக்கிறது என்பது பற்றி ஒரு தலைமுறைக்கே அது குறித்த எண்ணங்களைத் தோற்றுவித்த ஆசானாக விளங்கினார் ஜெயகாந்தன்.
ஜெயகாந்தன் எழுத வந்த காலத்தில் தமிழில் பத்திரிகை உலகும் சினிமா உலகும் பெரும் தொழில் நிறுவனங்களாக ஆகிவிட்டிருந்தன. பல இலக்கிய எழுத்தாளர்கள் மக்களிடையே செல்வாக்குப் பெற்ற பெரும் பத்திரிகைகளில் தங்கள் படைப்புகளை வெளியிட்டனர். நாவல்கள், கதைகள் மட்டுமின்றி கட்டுரைகளும் அவற்றில் வந்தன. இலக்கியச் சிறப்பு மிக்க உ.வே.சாமிநாத அய்யரின் சுயசரிதை ‘என் சரித்திரம்‘ ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது என்பது இன்று பலருக்கும் வியப்பினைத் தரக்கூடும்.

40 தொகுதிகளில் அதிமுக - காங்கிரஸ் நேரடி போட்டி... காங்கேயத்தில் மட்டும் தனியரசுடன் போட்டி

சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் அதிமுக - காங்கிரஸ் கட்சிகளிடையே 40 தொகுதிகளில் நேரடியான போட்டி நிலவுகிறது. காங்கேயத்தில் மட்டும் அதிமுக கூட்டணி கட்சியான கொங்கு இளைஞர் பேரவை தனியரசுடன் காங்கிரஸ் கட்சிக்கு நேரடி ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலுக்காக திமுக-காங்கிரஸ் நடுவே கூட்டணி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு திமுக 41 தொகுதிகளை ஒதுக்கியது. இதற்கான ஒப்பந்தம் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் காங்கிரஸ் மேலிடத் தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோர் சந்திப்பில் இறுதியானது. Direct challenge between admk and congress 40 constituencies இந்நிலையில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகளும் சுமூகமாக நடந்து முடிந்துள்ள நிலையில், ஒப்பந்தமும் கையெழுத்தானது. இதையடுத்து தற்போது காங்கிரஸ் போட்டியிடும் 41 தொகுதிகளின் பட்டியலும் வெளியிடப்பட்டன.

சிதம்பரத்தில் பிராமணாள் அசிங்கம் அகற்றப்பட்டது....திராவிடர் கழகத்தின் முயற்சிக்கு வெற்றி


சிதம்பரம், ஏப்.7_ ஆடல்வல்லான் உயர்தர பிராமணாள் ஓட்டல், பெயர் பலகையில் “பிராமணாள்’’ சொல் அகற்றப்பட்டது. சிதம்பரம் மாவட்ட கழகம் சார்பில், சென்ற வாரம் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில், மாவட்டக் கழகத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், மாவட்ட கழகச் செயலாளர் அன்பு.சித்தார்த்தன், மாவட்ட அமைப்பாளர் கு.தென்னவன், நகர கழகத் தலைவர் கோவி.குணசேகரன், நகர அமைப்பாளர் இரா.செல்வரத்தினம், இளைஞரணித் தலைவர் ப.ஆ.முரளிதரன் ஆகியோர் - சிதம்பரம் கீழ வீதியிலுள்ள ஆடல்வல்லான் பிராமணாள் உயர்தர சைவ ஓட்டல் பலகையிலுள்ள “பிராமணாள்’’ சொல்லை அகற்றவேண்டும் என மனு அளித்தனர்.

அஜித் Vs விஷால்.....அஜித் ஏன் விளயாடவரல்ல? Cricket

சென்னை,ஏப்.07 (டி.என்.எஸ்) தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் புதிய கட்டிடம் கட்டுவதற்காக சங்க நிர்வாகிகள் பல்வேறு வகையில் நிதி திரட்டி வருகிறார். அதில் ஒன்று தான் நட்சத்திர கிரிக்கெட் போட்டி. சென்னையில் நடைபெறும் இப்போட்டியில் முக்கிய முன்னணி நடிகர்கள் பங்கேற்று விளையாடுகிறார்கள். ரஜினிகாந்த், கமல் என அனைத்து முன்னணி நடிகர்களும் இதில் கலந்துக்கொள்ளப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு, கோடி கோடியாய் பணம் சம்பாதிக்கும் நடிகர்களே நிதி வழங்குவதை விட்டுவிட்டு, மக்களிடம் சுரண்ட பார்ப்பதாகவும், நிதிக்காக மக்களிடம் நடிகர்கள் பிச்சை எடுப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.
மேலும், மக்களிடம் சுரண்டாமல், நடிகர்களே நிதி வழங்க வேண்டும், என்றும் தனது பங்கிற்கு நிதி தர தான் தயார் என்றும், நடிகர் அஜித் கூறியதாக செய்திகள் பரவியது.

ம.ந.கூட்டணியில் வீரலட்சுமி: என்னை முதலமைச்சர் வேட்பளராக அறிவிக்கப்பட்டால் ஏற்றுகொள்வேன்!

கோயம்பேட்டில் கட்சித் தொண்டர்களை சந்தித்துப் பேசுவதற்கு நேரம் ஒதுக்காத விஜயகாந்த், இன்றைக்கு தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமியை சந்தித்துப் பேசியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. மக்கள் நலக் கூட்டணி சார்பில் வேட்பாளராகவும் போட்டியிடப் போகிறார் வீரலட்சுமி. அவரிடம் பேசினோம். >விஜயகாந்த்தை சந்திக்க எப்போது அழைப்பு வந்தது?< மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் வைகோவை முன்பே சந்தித்துப் பேசிவிட்டேன். விஜயகாந்த் அண்ணனை சந்திக்க நேரம் கிடைக்கவில்லை. இன்று காலையில் சந்திக்க நேரம் ஒதுக்கியிருந்தார் விஜயகாந்த். உடனே, வைகோ அண்ணனோடு போய் சந்தித்தேன். ரொம்ப சந்தோஷமா இருந்துச்சுஉங்களிடம் விஜயகாந்த் என்ன பேசினார்? 'சட்டமன்றத் தேர்தலில் நன்றாக வேலை பார்க்க வேண்டும். 234 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும்' என்றார்.

இயற்கை வையாக்கிராவை வீட்டில் தயாரிக்க முடியுமாமே?

கோடை காலத்தில் நாம் சாப்பிடும் தர்பூசணியை வைத்து, எளிமையான வழியில் வீட்டிலேயே இயற்கை வயாகராவை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம். கோடை காலத்தில் மட்டும் விற்பனைக்கு வரும் தர்பூசணியை பிடிக்காதவர்கள் யாரும் கிடையாது. நீர் சத்து அதிகமாக இருப்பதால், வெயிலில் தாகத்தை தணிக்க அனைவைரும் தர்பூசணியை விரும்பி சாப்பிடுகிறார்கள்.சுவை மட்டுமின்றி அதில் பல மருத்துவ குணம் இருப்பது பலருக்கும் தெரியாது. தர்பூசணியில் பசலைக்கீரைக்குச் சமமான அளவு இரும்புச் சத்து,  வைட்டமின் சி, ஏ, பி6, பி1 ஆகியவை சத்துகள் அதிக அளவு உள்ளது. பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது பொருட்களும் உள்ளது. கிராம் தர்பூசணியில் 90 சதவீதம் தண்ணீர் மற்றும் 46 சதவீத கலோரி மற்றும் கார்போஹைட்ரேட் 7 சதவீதம் உள்ளது. 

கலைஞர் எச்சரிக்கை :திமுக பேச்சாளர்கள் கண்ணியத்துடன்,நாகரீகத்துடன் பேசவேண்டும்

திமுக பேச்சாளர்கள் கண்ணியம், நாகரிகத்துடன் பேச வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சேலத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய நாகை நாகராஜன் என்பவர், இஸ்லாமிய மதம் குறித்து தவறான கருத்துக்களை பேசியதாக வார இதழ் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தலைமை கழகப் பேச்சாளராக நாகை நாகராஜன் என்றொருவர் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இருந்தாலும், திமுக மேடைகளில் உரையாற்றுவோர் நமது இயக்கத்திற்குரிய கண்ணியத்தோடும், நாகரிகத்தோடும் பேச வேண்டும்.

கலைஞரின் வீடே ஒரு சமத்துவபுரம்தான் ....அம்பட்டன் கருணாநிதி என்று வெறுப்பாளர்கள்...யுவகிருஷ்ணா ..

சாதியை கடப்பது சாமானிய சாதி மறுப்பாளனின் பெருங்கனவு. தந்தை பெரியாரின் குடும்பத்திலேயே கூட முழுமையாக நடைமுறைக்கு வராத இந்த சாதனையை தன் குடும்பத்தில் முழுக்க நிகழ்த்திக் காட்டியவர் கலைஞர் ஒருவர்தான். உயர்சாதியான பார்ப்பனரில் தொடங்கி, கடைநிலையில் இருக்கும் தாழ்த்தப்பட்டோர் வரை கலைஞரின் குடும்பத்தில் உண்டு. சாதியெதிர்ப்பு/மறுப்பு பேசுபவர்கள், இந்தியாவில் வேறு எந்தத் தலைவனின் குடும்பமாவது இப்படி சமத்துவபுரமாக மாறியது என்று உதாரணம் காட்ட முடியுமா? சாதிய அடையாளத்திலிருந்து வெகுதூரத்துக்கு வந்துவிட்ட கலைஞரைதான் இன்னமும் அவர் பிறந்த சாதி துரத்திக் கொண்டே இருக்கிறது என்பதே வேதனை. 
luckylookonline.com :சிறுவயதிலிருந்தே அந்த சலூனில்தான் சிகையலங்காரம். அங்கே காந்தி கண்ணாடியும், குல்லாவும் போட்ட ஒரு மனிதரின் கருப்புவெள்ளை புகைப்படம் பிரேம் போட்டு மாட்டப்பட்டிருக்கும். ஆரம்பத்தில் அந்த மனிதர் சலூன் உரிமையாளரான மோகன் அண்ணாவின் தாத்தா என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். பிற்பாடு கொஞ்சம் வாசிக்க ஆரம்பித்தபிறகுதான் அவரை அறிந்துக் கொண்டேன்.

திமுக கூட்டணியில் புதிய தமிழகம் 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது

புதிய தமிழகம் கட்சி  தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி,  இன்று பகல் 12.15 மணிஅளவில் கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை டாக்டர் கிருஷ்ணசாமி சந்தித்து பேசினார். அப்போது தி.மு.க. பொரு ளாளர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி., முதன்மை செயலாளர் துரை முருகன், ஆர்.எஸ்.பாரதி, ஐ.பெரியசாமி, தயாநிதி மாறன் ஆகியோர் உடன் இருந்தனர். கருணாநிதி- கிருஷ்ண சாமி சந்திப்பின்போது தி.மு.க. கூட்டணியில் புதிய தமிழகம் இணைவது என்றும், அந்த கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது என்றும் முடிவானது. இது தொடர்பான உடன் பாட்டில் இரு கட்சி தலைவர் களும் கையெழுத்திட்டனர்.

காங்கிரஸ் போட்டியிடும் 41 தொகுதி பட்டியல்...திமுக கூட்டணியில்....

அம்பத்தூர், மயிலாப்பூர், மதுரவாயல், ஸ்ரீபெரும்புதூர், ஆற்காடு, திருச்சி, முசிறி, வேதாரண்யம், நாங்குநேரி, குளச்சல், திருத்தணி, ராயபுரம், ஓசூர், கலசபாக்கம், நாமக்கல், செய்யாறு, சங்ககிரி, ஆத்தூர்( தனி), உதகமண்டலம், காங்கேயம், கோவை தெற்கு, கோபிசெட்டிப்பாளையம், தாராபுரம், சூலூர், அறந்தாங்கி, வேடசந்தூர், சிவகாசி, முதுகுளத்தூர், தென்காசி, விளவங்கோடு, கிள்ளியூர், ஜெயங்கொண்டம், பாபநாசம், காட்டுமன்னார்கோவில்,ஸ்ரீவைகுண்டம், கோவை கிழக்கு, மதுரை வடக்குக், பட்டுக்கோட்டை, காரைக்குடி,
காங்கிரஸ் போட்டியிடும் 41 தொகுதிகள் 2016 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இணைந்துள்ளது. காங்கிரசுக்கு 41 தொகுதிகள் என்று உடன்பாடு ஏற்பட்டது.

அ.தி.மு.க.விடம் இருந்து ரூ.1,500 கோடி வாங்கவில்லை; வைகோ பேட்டி

அ.தி.மு.க.விடம் இருந்து ரூ.1,500 கோடி வாங்கவில்லை என்று வைகோ தெரிவித்தார்.
ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ நேற்று சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. அலுவலகமான தாயகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
கருணாநிதி கூறிய சமாதானம் கடந்த 2004–ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது, பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருந்தேன். ஆனால் என்னுடன் ஆலோசிக்காமல், எனது கட்சிக்கு வெறும் 4 தொகுதிகளை கருணாநிதி ஒதுக்கி விட்டு, அதற்கான ஒப்பந்தத்தில் எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோரிடம் கையெழுத்து வாங்கி கொண்டார்.
நான் சிறையில் இருந்து வந்தவுடன், கருணாநிதியை சந்தித்து என்னுடன் சிறையில் இருந்த கணேசமூர்த்திக்கு மட்டும் பழனி அல்லது திருச்செங்கோடு தொகுதி தருமாறு மன்றாடி கேட்டுக்கொண்டேன். ஆனால் கருணாநிதி அதனையெல்லாம் கேட்காதீர்கள் என்று சொல்லி விட்டார்.

கமலஹாசனின் நமக்கு வாய்த்த அடிமை ஒருவரின் குழந்தைக்கு Hoshika Mrinalini..கமலஹாசன் வைத்த பெயர்...

ஒரு பார்ப்பானும் தன் குழந்தைக்கு பெயர் வைக்குமாறு யாரையும் கேட்கமாட்டான். ஏனைய சாதி மக்களிடம்தான் இந்த அடிமைத்தனம் இருப்பதாக தெரிகிறது. கமலஹாசனின் அடிமை குழாத்தில் இருக்கும் ஒரு இயக்குனர் தனது குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு கேட்க கமலஹசனும் இந்த வேற்று மொழி பெயரை சூட்டி உள்ளார். தமிழ் மீது கமலஹாசனுக்கு அத்தனை வெறுப்பு. பார்பான் பார்ப்பான்தான் . அன்பே சிவம் அது இது என்றெல்லாம் படம் பண்ணி காசு பார்த்துவிட்டு...... தன்னிடம் உதவி இயக்குநராக பல ஆண்டுகள் பணியாற்றியவரும் தூங்கா வனம் பட இயக்குநருமான ராஜேஷ் எம் செல்வாவின் மகளுக்கு சமஸ்கிருதத்தில் பெயர் சூட்டியுள்ளார் கமல் ஹாஸன். ராஜேஷ் எம் செல்வாவுக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்தது. இதற்காக வாழ்த்துத் தெரிவித்த கமல் ஹாஸனிடமே, தன் குழந்தைக்கு ஒரு பெயர் வைக்குமாறு கேட்டுக் கொண்டார் ராஜேஷ்.

விஜயகாந்த் ஆணை :ஜெ., - ஸ்டாலினை திட்டி தீருங்க.....ஓஹோ இதாய்ன் கொள்கை விளக்கம் என்கிறதா?

ஜெயலலிதா மற்றும் ஸ்டாலினை திட்டி தீர்த்து பேட்டி அளித்த பிறகே, விஜயகாந்தை சந்திக்க, தே.மு.தி.க., நிர்வாகிகள் அனுமதிக்கப்பட்ட தகவல் அம்பலமாகிஉள்ளது. தே.மு.தி.க., நிர்வாகிகள் யாரும் பத்திரிகை மற்றும், 'டிவி'க்களுக்கு பேட்டி அளிக்க கூடாது; 'டிவி' விவாதங்களில் பங்கேற்க கூடாது என, அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் கட்டுப்பாடுகள் விதித்துள்ளார்.இந்நிலையில், விஜயகாந்திற்கு எதிராக, புதிய அணியை சந்திரகுமார் உருவாக்கி உள்ளார். அவரை தொடர்பு கொண்டு, பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

தி.மு.க., - காங்கிரஸ் தொகுதி பேச்சு வார்த்தை..சிக்கல் தொடர்கிறது

தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியில், இரண்டு கட்சிகளும் போட்டியிடக் கூடிய தொகுதிகளை பிரித்துக் கொள்வதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளை, தி.மு.க., விட்டுக் கொடுக்க மறுப்பதால், தொகுதி பங்கீட்டில் கடும் இழுபறி ஏற்பட்டுள்ளது.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு, 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தி.மு.க., சார்பில் பொருளாளர் ஸ்டாலின், துணை பொதுச் செயலர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் கொண்ட குழு, தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் தங்கபாலு, தனுஷ்கோடி ஆதித்தன் கொண்ட காங்கிரஸ் குழுவிடம், போட்டியிடும் தொகுதிகளை கண்டறிவது தொடர்பாக நேற்று, சென்னை அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நடிகை சமந்தா படம் தயாரிக்க போகிறார்.......

ரஜினி, கமல் தொடங்கி விஷால், ஆர்யா, அருண்விஜய் என பல ஹீரோக்கள் சொந்த நிறுவனம் தொடங்கி படங்கள் தயாரிக்கின்றனர். ஹீரோயின்களை பொறுத்தவரை தயாரிப்பில் ஈடுபடுவது மிக குறைவு. ‘புன்னகை பூவே’ கீதா தற்போது பட தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார். விசாகா சிங்கும் ெசாந்த படம் தயாரிக்க பேச்சு நடக்கிறது. இந்த பட்டியலில் இணைகிறார் சமந்தா. தமிழ், தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வரும் சமந்தா விரைவில் சொந்த படம் தயாரிக்க முடிவு செய்துள்ளதுடன் அவரே ஹீரோயினாக நடிக்கிறார். கன்னடத்தில் வெளியாகி ஹிட்டான ‘யு டர்ன்’ படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார். இப்படத்தை கன்னடத்தில் பவன்குமார் இயக்கி இருந்தார். ஏற்கனவே இவர் கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான ‘லுசியா’ படத்தை இயக்கியவர். இப்படம் தமிழில் ‘எனக்குள் ஒருவன்’ பெயரில் ரீமேக் ஆகி இருந்தது. இதில் சித்தார்த் நடித்திருந்தார் தினகரன்,com

புதன், 6 ஏப்ரல், 2016

திருமாவளவன்,ஜி.ராமகிருஷ்ணன் வருத்தம்.... வைகோவின் கலைஞர் மீதான சாதி விமர்சனத்துக்கு பலரும் வருத்தம்..

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சனம் செய்து பேசியுள்ளதற்தற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச்செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று சென்னையில் உள்ள மதிமுக கட்சி தலைமை அலுவலகமான தாயகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கருணாநிதி குறித்து வைகோ கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். thirumavalavan,G.R, condemns vaiko speech about karunanidhi இது குறித்து கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் மாநிலச்செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், திமுக தலைவர் கருணாநிதி மற்றும் தேமுதிக எம்எல்ஏக்கள் தொடர்பாக அரசியலுக்கு அப்பாற்பட்டும், சாதீய தொழில் குறித்தும் தெரிவித்த கருத்துக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏற்புடையதல்ல என்று ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பாஜகவிடம் பிரேமலதா கேட்டது : சுதீசுக்கு ராஜ்யசபா...பிரேமலதாவுக்கு தேசிய மகளிர் ஆணையதலைவி(காபினெட் அந்தஸ்து) பெரும் தொகை பணம்....


சென்னை: பாஜக கூட்டணியில் சேருவதே விஜயகாந்த்தின் முதல்திட்டமாக இருந்தது. பிரேமலதாவும் அதைத்தான் விரும்பினார். ஆனால் திடீரென பிரேமலதா, வைகோவைச் சந்தித்துப் பேசி கூட்டணியை மாற்றி விட்டார் என்று கூறியுள்ளார் வி.சி.சந்திரகுமார். அதற்குக் காரணம், பிரேமலதா கேட்ட சில கோரிக்கைகளை பாஜக நிராகரித்ததே என்று சந்திரகுமார் கூறியுள்ளார். Vijayakanth wanted alliance with BJP : VC Chandrakumar சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் தேமுதிகவின் கூட்டணி தொடர்பான பல ரகசியங்களை அம்பலப்படுத்தினார் சந்திரகுமார். அதில் ஒன்று பாஜகவுடன் விஜயகாந்த் கூட்டணி வைக்க விரும்பியுத. இதுகுறித்து சந்திரகுமார் கூறுகையில், பாஜக கூட்டணிக்குப் போவது தான் விஜய்காந்த்தின் திட்டமாக இருந்தது. பிரேமலதாவும கூட அதை விரும்பினார். பாஜகவுடன் கூட்டணி அமைவதையே அவரும் விரும்பினார். இதைதான்  நாம நெடு நாளாக  சொல்லி வருகிறோம் ...சுப்பிரமணியம் சாமியின் சொல் கேட்டுதான் விஜயகாந்தும  பிரேமலதாவும்  அரசியல் பண்றாங்க  இந்த கோரிக்கைகள் கூட சாமியின் அஜெண்டாதான்...இப்போது இவங்களை   ஜெயலலிதா காசு கொடுத்து வாங்கிவிட்டார்

நக்கீரன்ல வந்திருக்கு பாருங்க..: சந்திரகுமார் பதில்

தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்ட சந்திரகுமார் தலைமையிலான அணியினர் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சந்திரகுமார் பதில் அளித்தார்.....கேள்வி: காஞ்சிபுரம் மாநாட்டுக்குப் பிறகு நீங்கள் ஒரு வீடியோ வெளியிட்டீர்கள். அதில் எந்த ஒரு கட்சியுடனும் கூட்டணி பேசவில்லை என்று கூறினீர்கள். திடீரென எப்படி கூட்டணி வந்தது.

பதில்: அப்போது திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக பரவலாக பேசப்பட்டது.

தவறுக்கு வருந்துகிறேன்!: மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்: தாயுள்ளத்தோடு கலைஞர் ஏற்றுகொள்ள வேண்டும்...

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கை :இன்று 6.4.2016 ஆம் நாளன்று, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகமான தாயகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து விளக்கம் அளித்தேன்.>அக்கட்சியின் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும், சில மாவட்டச் செயலாளர்களும் அக்கட்சித் தலைமை சட்டமன்றத் தேர்தல் குறித்து மார்ச் 23 ஆம் தேதியன்று எடுத்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தலைமையைக் கடுமையாக விமர்சித்து நேற்றைய தினம் பத்திரிகையாளர்களைச் சந்தித்துக் கூறிய கருத்துகளுக்குப் பதில் சொல்லும் விதத்தில் சில விளக்கங்கள் அளித்தேன்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினரை தலைமைக்கு எதிராக அறிக்கை விடச் செய்ய திராவிட முன்னேற்றக் கழகம் கோடிக்கணக்கில் பணத்தைக் கொடுத்து, வலை வீசுகிறார்கள்   அய்யோ அய்யோ இந்த ஆளு ரோதனை தாங்க ....முடியல..

சினிமா கவர்ச்சி மட்டும் போதுமா?எந்தவித கொள்கையோ நல்ல நோக்கமோ தேவை இல்லையா?

வினவு: எந்தவிதப் பொது அறிவோ, அரசியல் அறிவோ, சமுதாய அறிவோ இல்லாத தார்மீக ஒழுக்கமற்ற, பண்பாடற்ற, சமூக மதிப்பீடற்ற வெத்துவேட்டு சினிமா நாயகர்களை (ஹீரோக்களை) சகலகலா வல்லவர்களாகச் சமூகத்தில் உலவ விடுவதே சினிமா, செய்தி ஊடகம் இரண்டினது வியாபார உத்தியாக உள்ளது.வரும் சட்டமன்றத் தேர்தலில் கருணாஸ், சரத்குமார் உள்ளிட்டோர் போட்டியிடுவது மட்டுமல்ல, அ.தி.மு.கவின் முழுப் பிரச்சாரமே தமிழகத் திரையுலக நட்சத்திரங்களால் நடத்தப்படுகிறது. இதிலிருந்து அடுத்த ‘அம்மா’ ஒருவர் உருவாகலாம், அது விந்தியாவாகக் கூட இருக்கலாம். ஆளும்கட்சி என்பதால் அ.தி.மு.கவில் நடிகர்கள் அதிகம் இருப்பினும் தி.மு.க, பா.ஜ.க கூட முடிந்த வரை இழுத்துப் போடுகிறார்கள். விஜயகுமார், கங்கை அமரன் முதலானோர் பா.ஜ.கவில் சங்கமித்திருக்கின்றனர். காங்கிரசிலோ குஷ்பு, நக்மா முக்கியமான தலைவர்களாக முன்னிறுத்தப்படுகின்றனர். நடிகர் விஜய் உள்ளிட்டோர் தமது அரசியல் பிரவேசம் குறித்து ஒரு திட்டத்தை வைத்திருக்காமல் இல்லை. ரஜினி ஓய்ந்து போனாலும் பா.ஜ.க இன்னும் தீவிரமாக அவரை இழுத்துப் போட முயல்கிறது. இப்படி சினிமா உலகம் பின்னே அரசியல் உலகம் ஓடுவது பொதுவில் சமூகத்தின் சீரழிவாக மட்டுமல்ல அரசியல் உலக ஆண்டைகளின் பாசிச நாயகர்களாகவும் இவர்களே உருவெடுக்கிறார்கள். மக்கள் முன்னே நடிப்பவர்களை வைத்து மக்களை ஏமாற்றி பிறகு அதே மக்களை ஒடுக்கவுமே இந்த நட்சத்திர உலகம் பெரும் மூலதனத்துடன் களமிறக்கப்படுகிறது. அதன் உலகைப் பற்றி பேசுகிறது 12 ஆண்டுகளுக்கு முன்பு வந்த இந்த புதிய கலாச்சாரம் கட்டுரை!

பாரதிராஜா:என் இனிய தேவர் சாதி மக்களே! சாதி அடையாளங்களை மறந்துவிடாதீர்கள்....?

குற்றப்பரம்பரை யார் பக்கம் என்பதை சில நாட்களுக்கு முன்பு உறுதிப்படுத்தியிருக்கிறார் பாரதிராஜா. கொஞ்ச காலமாகவே குற்றப்பரம்பரை என்ற தலைப்பில்  யார் படமாக்குவது என்ற போட்டி இயக்குநர்களான பாரதிராஜாவிற்கும், பாலாவிற்கும் இடையே நிலவி வருகிறது.
இந்நிலையில் குற்றப்பரம்பரை படத்திற்கான தொடக்கவிழாவை உசிலம்பட்டியில் நடத்தி அனல் பறக்க பேசினார் பாரதிராஜா. அவர் பேசியதாவது, “என் இனிய தமிழ்மக்களே, ஒரு காலத்தில் நீங்கள் என்ன இனம் என்று கேட்டால், தமிழ் என்று தான் சொல்லுவேன். அதற்காக என் தந்தையையும், தாயையும் நினைவு கூறவில்லையென்றால் நான் மனிதனே இல்லை. அதுபோல் நான் பிறந்த இடம் தான் எனக்கு அடையாளம். என் அடையாளத்தைத் தொலைத்துவிட மாட்டேன்.  பாரதிராஜா என்ற ஒரு நல்ல கலைஞன்  காணாமல் போனதால் கவலை அடைகிறோம் ...பாரதிராஜா என்கின்ற சின்னசாமி மீண்டும் புத்தி தெளிந்து  பழைய பாரதிராஜாவாக வரவேண்டும் என்று  வாழ்த்துகிறேன்

தேமுதிக MLA பார்த்திபன்: கேப்டனை அழிக்க ஜெயலலிதா ஏவிய ஏவுகணைதான் (புரோக்கர்) வைகோ

விகடன்.com :தே.மு.தி.கவில் இருந்து மூன்று எம்.எல்.ஏக்கள், நான்கு மாவட்டச் செயலாளர்கள் தலைமைக்கு எதிராக அதிருப்தி தெரிவித்ததையடுத்து, அவர்களை கட்சியில் இருந்து நீக்கியிருக்கிறார் விஜயகாந்த். 'நாங்கள்தான் உண்மையான தே.மு.தி.க' என தனியாக கொடி பிடிக்க ஆரம்பித்திருக்கிறது அதிருப்தி அணி. இந்நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏக்களும், மாவட்டச் செயலாளர்களும் தொண்டர்களை இணைக்கும் வகையில் பிரமாண்ட திருமண மண்டபத்தைத் தேடி வருகிறார்கள். கேப்டனுக்கு சவால்விடும் வகையில் பெரும் எண்ணிக்கையில் கூட்டத்தைக் கூட்டவும் அவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். அந்த ஆளு ஒரு கூலிப்படைன்னு இப்பதாய்ன் தெரிஞ்சுதா?

அப்படி என்ன பேசினார் வைகோ? அந்த பரபரப்பு வீடியோ


தேமுதிகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறி வருகின்றனர். தேமுதிக உடைந்து வருவது குறித்து கருத்து தெரிவித்த வைகோ, தேமுதிக உடைவதற்கு திமுக தலைவர் கலைஞர்தான் காரணம் என்று கூறி, கலைஞரை மிகவும் அவதூறாக பேசினார். இதனால் ஆவேசமடைந்த திமுகவினர் வைகோவின் உருவபொம்மையை எரித்து, வைகோவுக்கு எதிரான கண்டன முழக் கங்களை எழுப்பி வருகின்றனர்.  nakkheeran,in

ஜெ.வால் உருவானது ம.ந.கூ.: 1500 கோடி கொடுக்கப்பட்டிருக்கிறது: சந்திரகுமார்

தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்ட சந்திரகுமார் தலைமையிலான அணியினர் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சந்திரகுமார் பதில் அளித்தார்.

கேள்வி: ஊழல் இல்லாத மக்கள் நலக் கூட்டணியிடம் சேர்ந்தால் என்ன?

பதில்: ஊழல் குற்றச்சாட்டு இல்லை என்று யார் சொன்னார்கள். இந்த கூட்டணி உருவாக காரணமானவர் ஜெயலலிதா. இது அதிமுகவின் பி டீம். இதற்கு மிகப் பெரிய ஒரு தொகை, தொகையை சொல்ல விரும்பவில்லை. வைகோ மூலமாக எல்லாருக்கும் கொடுக்கப்பட்டிருப்பதாக குற்றம் சொல்கிறார்கள். பட்டிதொட்டியெல்லாம் போய் கேளுங்கள். அப்படி இருக்கும்போது அந்த கூட்டணியில் இருக்கிற வைகோ மற்றவர்கள் மீது இல்லை என்பதை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். 

கேள்வி: நீங்கள் கூட 3 கோடி ரூபாய் வாங்கியதாக சொல்கிறார்களே.

ஜெயலலிதாவை எதிர்த்து மா.சுப்பிரமணியம் போட்டி? தெறிக்க விடலாமா…!

வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது முதல், அவரை எதிர்க்கக்கூடிய வலிமையான வேட்பாளர் யார் என்பது குறித்து சமூகவலைத்தளங்களில் விவாதம் நடத்தப்பட்டு வருகிறது.
சென்னையை வெள்ளம் நாசக்காடாக்கியபோது சொதப்பியவர் ஜெயலலிதா; ஆனால், சென்னையின் உயர்வுக்காக உழைத்தவர் என கட்சி பேதங்களுக்கு அப்பாற்பட்டு பாராட்டப்படுபவர் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியம். வெள்ள சேதத்தின்போது அ.தி.மு.க. அரசு காட்டிய மெத்தனம் மொத்தமும் மா.சுப்பிரமணியத்துக்கு அத்துபடி. இந்த அடிப்படையில் ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து மா.சுப்பிரமணியத்தை தி.மு.க. களமிறக்க வேண்டும் என்று ட்விட்டரில் ஒருவர் கொளுத்திப் போட்டுள்ளார்.