சனி, 3 ஜூன், 2023

யாழ்ப்பாண - தமிழக விமான சேவை வாரத்தின் 7 நாட்களுக்கும் விரிவாக்கப்படும் .. அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

 ஹிருனியுஸ் : யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வாரத்தின் ஏழு நாட்களும் சேவைகளை முன்னெடுப்பது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடப்பட்டதாக துறைமுகங்கள், கற்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
தற்போது வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரமே யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளத்தை விஸ்தரிப்பதற்கான கடன் வசதியை இந்தியாவிடம் இருந்து எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டார்.

ஜஸ்டின் ட்ருடோ : 'இதயத்தை நொறுக்குகின்றது' - ஒடிசா தொடரூந்து விபத்துக்கு கனடா பிரதமர் இரங்கல்!

Statement By the Prime Minister of Canada on The Assassination of President  of Haiti Jovenel Moïse - Drishti Magazine

ஹிரு நியூஸ் : ஒடிசாவில் நடந்த பயங்கர தொடரூந்து விபத்துக்கு கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் கடுகதி தொடரூந்து ஒடிசா மாநிலத்தின் பாலாசூர் மாவட்டம் அருகே நேற்று (ஜூன் 2) இரவு மற்றொரு சரக்கு தொடரூந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
ஒடிசாவின் பாஹா நாகா பஜார் தொடரூந்து நிலையம் அருகே தொடரூந்துகள் மோதிய இந்த விபத்தில் 238 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

கலைஞர் 100 பிறந்தநாள் நிகழ்ச்சிகள் நிறுத்தம் ! திமுக அறிவிப்பு!

மின்னம்பலம்  :  இன்று (ஜூன் 3) நடைபெறவிருந்த மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக திமுக அறிவித்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வரும், திமுகவின் தலைவருமான கலைஞரின் நூற்றாண்டு விழா பல்வேறு நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.
அதற்கான ஏற்பாடுகள் மாநிலம் முழுவதும் சிறப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் அருகேவுள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று ஜூன் 2ஆம் தேதி இரவு 7.20 மணிக்கு சென்னைக்கு வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உட்பட மூன்று ரயில்கள் விபத்தில் சிக்கியது.

ஒடிசா ரெயில் விபத்து- உயிரிழந்த 237 பேரில் 70 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

 மாலைமலர் :  ஒடிசாவில் கட்டாக் மருத்துவமனையில் தமிழக அதிகாரிகள் குழு ஆய்வு நடத்தினர்.
ஒடிசா ரெயில் விபத்தில் இறந்த 237 பேரில் 70 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
 ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகா என்ற இடத்தில் நேற்றிரவு 3 ரெயில்கள் விபத்துக்குள்ளாகிய கோர சம்பவம் நடைபெற்றது.
இந்த கோர விபத்தில் 17 பெட்டிகள் தடம்புரண்டன. இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 261 ஆக அதிகரித்துள்ளது.
900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஒடிசாவில் கட்டாக் மருத்துவமனையில் தமிழக அதிகாரிகள் குழு ஆய்வு நடத்தினர்.

ஒடிஷா கோரமண்டல் ரயில் விபத்தில் 120 பேர் உயிரிழப்பு! மேலும் எண்ணிக்கை அதிகரிக்கலாம்

 மின்னம்பலம் - கவி : ஒடிஷா கோரமண்டல் ரயில் விபத்தில் 120 பேர் வரை உயிரிழந்திருப்பதாகவும், மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் ஒடிசா தீயணைப்பு சேவைகள் பிரிவு தலைவர் சுதான்ஷு சாரங்கி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்துக்கு நேற்று பிற்பகல் 3.20 மணிக்குக் கிளம்பி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஒடிசா அருகே பாலசோர் பகுதியில் விபத்துக்குள்ளானது.
விபத்து நடந்த இடத்தில் ஒடிசா பேரிடர் மீட்பு படை, தேசிய பேரிடர் மீட்பு படை, ஒடிசா தீயணைப்புத் துறை, மேற்கு வங்கத்திலிருந்து வந்த ஸ்பெஷல் டீம் என பலரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ரயிலின் பல பெட்டிகள் தடம் புரண்டிருப்பதால், பெட்டிகளுக்கு அடியில் சிக்கி இதுவரை 120 பேர் வரை உயிரிழந்திருக்கின்றனர்.

🔴LIVE : Coromandel Express Accident | சென்னை நோக்கி வந்த ரயில் ஒடிசாவில் தடம்புரண்டு விபத்து

வெள்ளி, 2 ஜூன், 2023

அண்ணாமலை பார்ப்பனர்களுக்கு எதிரி - எஸ் வி சேகர் கடுமையான குற்றச்சாட்டு

 tamil.samayam.com  :  சமீபகாலமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து பாஜக நிர்வாகி எஸ்.வி. சேகர் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
அந்த வகையில், சில தினங்களுக்கு முன்பு தன்னை பிராமணர்களின் விரோதி என எஸ்.வி. சேகர் கூறியதற்கு அண்ணாமலை பதிலளித்துள்ளார்.
தூத்துக்குடி: பிராமணர்களுக்கு விரோதி என எஸ்.வி. சேகர் பேசியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "நான் கொஞ்சம் திமிரு பிடித்தவன்.. இப்படித்தான் இருப்பேன்; என்னை யாராலும் கட்டுப்படுத்த முடியாது" என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தமிழக பாஜகவில் சமீபகாலமாக பல கோஷ்டிகள் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி- சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

 மாலைமலர் : சென்னை சேலம் மாவட்டம் ஓமலூரைச் சோ்ந்த கல்லூரி மாணவா் கோகுல்ராஜ். இவா் கடந்த 2015-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தாா்.
அவர் காதல் விவகாரத்தில் ஆணவக்கொலை செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
பின்னர் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால், கோகுல்ராஜ் இறப்பு விவகாரம் குறித்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது.
அவர்கள் விசாரணைக்கு பின்பு, இது தொடர்பாக சங்ககிரியை சோ்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது கூட்டாளிகள் உள்பட 17 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ராகுல் காந்தி வாஷிங்டனில் L 2024 பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் மக்களை ஆச்சரியப்படுத்தும்

 மாலைமலர் :   ராகுல் காந்தி 10 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
முதலில் சான்பிரான்சிஸ்கோ சென்ற அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
வாஷிங்டன்:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 10 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
முதலில் சான்பிரான்சிஸ்கோ நகரின் சாண்டா கிளாராவில் நடந்த நிகழ்ச்சியில் அமெரிக்கவாழ் இந்தியர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.
இந்நிலையில், வாஷிங்டன் டிசியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தியிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

வியாழன், 1 ஜூன், 2023

ஒன்றிய அரசின் அவசர சட்ட மசோதாவை எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் எதிர்க்க வேண்டும் - அரவிந்த் கெஜ்ரிவால்

 தினத்தந்தி : மத்திய அரசின் அவசர சட்ட மசோதாவை எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் எதிர்க்க வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
சென்னை,
சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரிய பிறகு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-
டெல்லி மாநில மக்களின் நலனுக்காக திமுக அரசு தோள் கொடுத்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மீறி மாநில அரசின் உரிமையை பறிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது. மத்திய அரசின் நடவடிக்கை அரசியல் சாசனத்திற்கு எதிரானது, ஜனநாயகத்திற்கு விரோதமானது.

சென்னையில் CM ஸ்டாலின் CM அர்விந்த் கெஜ்ரிவால் சந்திப்பு .. ஒன்றிய அரசுக்கு எதிரான சக்திகளை ஒன்றிணைக்கும் முயற்சி

 தினத்தந்தி  :  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சென்னையில் சந்தித்து பேசுகிறார். அப்போது, மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டத்துக்கு எதிராக ஆதரவு கோருகிறார்.
சென்னை,
தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, ஆட்சி அதிகாரத்தில் உள்ளது.
மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கும், ஆம் ஆத்மி அரசுக்கும் இடையே அதிகாரப்பகிர்வு, ஆட்சி அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு நிலவி வருகிறது. இது பல்வேறு சம்பவங்களில் வெளிப்படையாகவே தெரிந்தது.

அமெரிக்க என் ஆர் ஐக்கள் அதிர்ச்சி! பிறப்புரிமை மூலம் குடியுரிமை ரத்து.. டொனால்டு டிரம்ப் அறிவிப்பு

 tamil.goodreturns.in  - Prasanna Venkatesh  :  அமெரிக்க அரசின் கடன் வரம்பை அதிகரிப்பதில் நாடாளுமன்ற ஒப்புதலுக்காக அந்நாட்டின் பொருளாதாரம் வாழ்வா, சாவா போராட்டத்தில் இருக்கும் வேளையில்,
2024 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் அதிபர் தேர்தலுக்கான அதிரடிகளும் ஒரு பக்கம் நடந்து வருகிறது.
2024 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் டெமாக்ரடிக் கட்சி சார்பாக மீண்டும் ஜோ பைடன் போட்டியிடும் வேளையில், குடியரசு கட்சி சார்பாக டொனால்டு டிரம்ப் உட்பட சில இந்திய அமெரிக்கர்களும் போட்டிப்போட உள்ளனர்.
குடியரசு கட்சி அதன் அதிபர் வேட்பாளர் யார் என்பதை இதுவரையில் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் Donald Trump 2024 ஆம் ஆண்டு மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு தானாக கிடைக்கும் குடியுரிமையை ரத்து செய்ய முற்படுவேன் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை கூறியுள்ளார்.

புதன், 31 மே, 2023

பாம்புபிடி வீரர் நரேஷ் ஸ்கூட்டருக்குள் வைத்த நாக பாம்பு தீண்டி பலி. bredcrumb ராஜநாகம்.. மலைப்பாம்புகளை மீட்ட

tamil.oneindia.com - Halley Karthik  : பெங்களூரு: கர்நாடக மாநிலம் சிக்மகளூருவில் விஷ பாம்பு கடித்ததில், பாம்பு பிடி வீரர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் மனிதர்கள் பரிணாமம் அடைவதற்கு முன்னரே பாம்புகள் தோன்றிவிட்டன. அது தோன்றிய காலம் முதல் பாம்பு-மனிதன் மோதல்கள் தவிர்க்க இயலாததாக நீடித்து வருகிறது.
பாம்பு எல்லா காலநிலைக்கும், எல்லா இடத்திலும் வாழும் தன்மையை பெற்றிருப்பதால் விவசாய நிலங்கள் தொடங்கி வீடுகள் வரை இந்த மோதல்கள் நிகழ்ந்துவிடுகிறது.
இருப்பினும் மனிதன் இயற்கையை மெல்ல புரிந்துக்கொள்ள தொடங்கிய பின்னர் பாம்புகள் குறித்தும் சரியான புரிதலை வளர்த்துக்கொண்டான்.

இறந்த மூதாதையர்களை நாம் சந்திக்க முடியுமா? - ஐன்ஸ்டீனின் குவாண்டம் மெக்கானிக்ஸ் சொல்வது என்ன?

ஐன்ஸ்டீன்

bbc.com  -  டாலியா வென்ச்சுரா : சபின் ஹோசன்ஃபெல்டர் ஓர் இளைஞருடன் டாக்ஸியில் இருக்கும் போது தான் ஓர் இயற்பியலாளர் என்று அறிமுகப்படுத்தியதும் அந்த இளைஞர் அவரிடம் ஒரு கேள்வியைக் கேட்டார்.
"குவாண்டம் மெக்கானிக்ஸ் காரணமாக என் பாட்டி இன்னும் உயிருடன் இருப்பதாக ஒரு மதகுரு என்னிடம் சொன்னார். அது உண்மையா?" என்பதே அந்தக் கேள்வி.
இது மாதிரியான கேள்விகளைக் கேட்க அவர் பொருத்தமானவர்தான்.
ஏனெனில், ஜெர்மனியின் மியூனிக் பல்கலைக்கழக கணித தத்துவ மையத்தில் பணிபுரியும் விஞ்ஞானியான சபின் ஹோசன்ஃபெல்டர், இது போன்ற கேள்விகளுக்கான பதில்களைத் தேடுவதில் நேரத்தை செலவிடுபவர்.

7 ஆயிரம் நெல் மூட்டைகள் மாயமாகவில்லை- கலெக்டர் விளக்கம்

 மாலைமலர் ; தருமபுரி தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம் தமிழ்நாடு வாணிப கழக திறந்த வெளி குடோனில் 22 ஆயிரம் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அதில் 7 ஆயிரம் மூட்டைகள் மாயமானதாக புகார் எழுந்தது. இதனால் தருமபுரி மாவட்டத்தில் பரபரப்பு நிலவியது.
இந்த நிலையில் நெல் மூட்டைகள் மாயமானதாக கூறப்பட்ட தருமபுரி வாணிப கழக திறந்த வெளி குடோனில் இன்று மாவட்ட கலெக்டர் சாந்தி மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

தடகள வீராங்கனை என தெரியாமல் வருமான வரித்துறை பெண் அதிகாரி மீது கை வைத்த தி.மு.க.,வினர்

Gayatri who achieved in athletics that day… The female officer who was attacked in the IT raid தடகள வீராங்கனை என தெரியாமல் வருமான வரித்துறை பெண் அதிகாரி மீது கை வைத்த தி.மு.க.,வினர்

dinamalar.com : சென்னை: கரூரில், அமைச்சர் செந்தில்பாலாஜி சகோதரர் அசோக் வீடு முன், அவரது ஆதரவாளர்களால் தாக்குதலுக்கு உள்ளான வருமான வரித்துறை அதிகாரி காயத்ரி, தடகள வீராங்கனை என்பதும், பல போட்டிகளில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களை வென்றவர் என தற்போது தெரியவந்துள்ளது.
நாட்டிற்காக பதக்கங்களை வென்றவர் குறித்து அறியாமல் தாக்குதல், நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

செவ்வாய், 30 மே, 2023

சாலை வசதி இல்லாததால் பறிபோன குழந்தையின் உயிர் : தமிழ்நாட்டு மலைகிராமங்களில் ஏன் இந்த நிலை?

ிவ்யா ஜெயராஜ் - பதவி, பிபிசி தமிழ்   : அந்த பெற்றோர் இறந்துபோன தங்கள் குழந்தையின் உடலை கைகளில் சுமந்துகொண்டு , மலையேறி தங்களது கிராமத்திற்கு நடந்து செல்லும் காட்சி சமூக ஊடகங்களில் கடந்த ஞாயிறன்று  அதிகமாக பகிரப்பட்டு வந்தது.
அவர்களின் ஊருக்கு சாலை வசதி இல்லாததால், அந்த குழந்தையின் உடலை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் அவர்களை பாதி வழியிலேயே இறக்கிவிட்டுச் சென்றது, குழந்தையை இழந்து தவித்திருந்த அவர்களை மேலும் உடைந்துபோக செய்தது. கிட்டதட்ட இரண்டு மணி நேரத்தில், பத்து கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று தங்களின் கிராமத்தை அடைந்த அவர்கள், தங்கள் குழந்தையின் இறுதிசடங்கை செய்து முடித்தனர்.
அந்த குழந்தையின் பெயர் தனுஷ்கா. வயது 18 மாதங்கள்! ஊர் - வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதியை அடுத்த அல்லேரி மலைப்பகுதிக்கு உட்பட்ட அத்திமரத்துக்கொல்லை கிராமம், தமிழ்நாடு.
வேலூர் அல்லேரி மலைப்பகுதி மட்டுமல்ல, தமிழகத்தின் பல்வேறு மலைகிராம பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்கள் இன்றளவும் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல்தான் வாழ்ந்து வருகிறார்கள் என்று கூறுகிறார்கள் பழங்குடியின மக்களின் நலனுக்காக செயல்பட்டு வரும் செயற்பாட்டாளர்கள்.

ப.சிதம்பரம் :ரூ.2 ஆயிரம் நோட்டு வாபஸ்: இந்திய பணத்தின் மீதான நேர்மையில் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது

மாலை மலர் : மும்பை :ரிசர்வ் வங்கி சமீபத்தில் புழக்கத்தில் இருந்த ரூ.2 ஆயிரம் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் மும்பை வந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது:-ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டில் ஆட்சியும், கொள்கையும் அனைத்து அலைகளையும் தாங்கி நிற்கும் படகை உருவாக்க வேண்டும். அந்த வகையில் கடந்த 9 ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது.

கொடுமை என்னவென்றால் அரசு தனது தவறுகளை சரிசெய்து அனைத்து மக்களுக்குமான ஆட்சியை செய்ய முயற்சி எடுக்கவில்லை.

திங்கள், 29 மே, 2023

40சதவீத கமிஷனால் கதறும் கான்ட்ராக்டர்கள்!

40 percent commission of the screaming contractors!  40சதவீத கமிஷனால் கதறும் கான்ட்ராக்டர்கள்!

 தினமலர் : ''இன்னும் ஆட்டம் அடங்கலை ஓய்...'' என, 'பில்டர்' காபியை பருகிய படியே, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''யாரைச் சொல்றீங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''சென்னையை அடுத்துள்ள ஆவடி மாநகராட்சி கூட்டத்தை, தொடர்ந்து நடத்தாம ரத்து பண்ணிட்டே போறா...  கடந்த,  ௨௫ம் தேதி கூட்டம் நடத்தி, 140 தீர்மானங்களை நிறைவேற்ற இருந்தா ஓய்...
''ஆனா, கவுன்சிலரா  இருக்கற, 'மாஜி'யின் மகன் முட்டுக்கட்டையால கூட்டத்தை ரத்து பண்ணிட்டா...  கூட்டம் நடத்தி, தீர்மானங்களை நிறைவேற்றி, அடிப்படை வசதிகளுக்கான பணிகளை துவங்க இருந்தா ஓய்...
''ஆனாலும், 'கட்டிங்' பேரம் படியாம போனதால, 'மாஜி'யின் மகன் கூட்டத்தை நடத்த விடாம தடுத்துட்டார்... இத்தனைக்கும், இவரது அடாவடியால தான், அவரது பதவி, தந்தை பதவிகளை சமீபத்துல பறிச்சிருக்கா... அப்புறமும் அடங்க மாட்டேங்கறா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீது 8 பிரிவுகளில் வழக்கு

மாலை மலர் : புதுடெல்லி இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக பா.ஜனதா எம்.பி. பிரிஜ் பூசன் சரண்சிங் உள்ளார்.இவர் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் கூறி இருந்தனர். பிரிஜ் பூசன் மீது நடவடிக்கை எடுக்க கோரி கடந்த மாதம் 23-ந் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்களும், வீராங்கனைகளும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர் மீது போக்சோ சட்டப்படி வழக்குப்பதிவு செய்த போதிலும் அவரை கைது செய்யக் கோரி போராட்டம் தொடர்கிறது. இந்த நிலையில் மல்யுத்த வீரர்-வீராங்கனைகள் நேற்று பாராளுமன்ற கட்டிடம் முன்பு போராட்டம் நடத்த ஊர்வலமாக செல்ல முயன்றனர். ஆனால் போலீசார் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்த முயன்றனர். தடுப்புகளை அகற்றி விட்டு வீரர், வீராங்கனைகள் செல்ல முயன்றனர். அப்போது இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சில வீராங்கனைகள் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். அவர்களை போலீசார் கைது செய்தனர்.பஜ்ரங்புனியா, வினேஷ் போகட், அவரது சகோதரி சங்கீதா போகட், சாக்ஷி மாலிக் ஆகிய பிரபல மல்யுத்த வீரர், வீராங்கனைகளை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இதில் வினேஷ் போகட்டை மற்றும் விடுவித்தனர்.

ஞாயிறு, 28 மே, 2023

Sundar Pichai: கஷ்டப்பட்டு கட்டினதுபா: நடிகருக்கு வீட்டை விற்றபோது அழுத கூகுள் சிஇஓ சந்தர் பிச்சையின் அப்பா

tamil.samayam.com : மதுரையை சேர்ந்த சுந்தர் பிச்சை தான் கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ. அவர் சென்னையில் வளர்ந்த வீடு விற்பனைக்கு வந்தது.ுந்தர் பிச்சையின் வீடு என்பதால் அதை வாங்க பலரும் போட்டி போட்டார்கள். இறுதியில் நடிகரும், தயாரிப்பாளருமான மணிகண்டனுக்கு தான் அந்த வீடு கிடைத்திருக்கிறது.ென்னை அசோக் நகரில் இருக்கும் அந்த வீட்டில் தங்கி தான் பள்ளியில் படித்தார் சுந்தர் பிச்சை. அந்த வீட்டை மணிகண்டனுக்கு விற்பனை செய்தார் சுந்தர் பிச்சையின் அப்பா. மேலும் வீட்டை தன் செலவிலேயே இடித்தும் கொடுத்திருக்கிறார்.

அது குறித்து மணிகண்டன் கூறியதாவது, சென்னையில் வீடு வாங்க வேண்டும் என தேடிக் கொண்டிருந்தேன். அந்த வீடி வழியாக பலமுறை சென்றிருக்கிறேன். ஆனால் அது சுந்தர் பிச்சையின் வீடு என எனக்கு தெரியாது.

3 அரசு மருத்துவ கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்வதை கைவிட வேண்டும்- வைகோ வலியுறுத்தல்

maalaimala : 500 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை தடைபடும் நிலைமை உருவாகி இருக்கிறது. 

மருத்துவக்கல்லூரி நிர்வாகங்கள் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்து, அங்கீகாரத்தை ரத்து செய்தது வன்மையான கண்டனத்துக்கு உரியது. 

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தேசிய மருத்துவ ஆணையம், தமிழ்நாட்டின் பழமை வாய்ந்த சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மற்றும் திருச்சி, தர்மபுரியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடிவு செய்திருப்பது அதிர்ச்சி தருகிறது றிய பா.ஜ.க அரசின் இந்நடவடிக்கையால் இந்த 3 கல்லூரிகளில் நடப்பு ஆண்டில் மருத்துவக்கல்விக்கான 500 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை தடைபடும் நிலைமை உருவாகி இருக்கிறது.

3 அரசு மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து- தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

maalaimalar :கிட்டத்தட்ட 500 மருத்துவ இருக்கைகளை இழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
  • தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கிற்கு, அலட்சியப் போக்கிற்கு, கவனக் குறைவிற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
  • முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றிற்கான அங்கீகாரம் ரத்தாகும் அபாயம் உள்ளதாகவும், இதன் காரணமாக வரும் கல்வியாண்டில் இந்த கல்லூரிகளில் மருத்துவ இருக்கைகளை நிரப்ப முடியாத சூழ்நிலை உள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.