சனி, 11 ஜூன், 2016

மதுரை அரசு மருத்துவமனை: லஞ்சம் கொடுக்க மறுத்ததால் மகனை பறிகொடுத்த தந்தை

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஊழியருக்கு 300 ரூபாய் லஞ்சம் கொடுக்க மறுத்ததால் தாமதமான சிகிச்சையால் மகனை பறிகொடுத்த தந்தை போலீஸில் புகார் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை கோ.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கணபதி. தட்டச்சு வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள், ஒரு மகன் உள்ளனர். மகன் ராஜேந்திர பிரசாத்துக்கு, (18) கடந்த 2-ம் தேதி காலை 10.30 மணியளவில் வலிப்பு ஏற்பட்டதால், 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
மருத்துவமனையில் இறங்கியதும் உடனடியாக அவசர சிகிச்சை வெளிநோயாளிகள் வார்டுக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது, அங்கிருந்த மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சை அளிக்காமல், மருத்துவர் சீட்டு எழுதி வாங்கிக் கொண்டு, அவசர சிகிச்சைப் பிரிவு உள்நோயாளிகள் பிரிவுக்குக் கொண்டு செல்லும்படி கணபதியிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வன்னியர் கல்வி அறக்கட்டளை VS எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம்: மோசடியில் யார் நம்பர் 1?

thetimestamil.com :வேந்தர் மூவிஸ் மதனுக்கும் எஸ் ஆர் எம் அதிபர் பாரிவேந்தர் பச்சமுத்துவுக்கும் ஏற்பட்ட பிணக்கை அறிக்கைவிட்டு அடுத்த ட்விஸ்ட் கொடுத்தவர் பாமக நிறுவனர் ராமதாஸ். ராமதாஸின் அறிக்கை இப்படிச் சொன்னது:
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து என்கிற பாரிவேந்தருக்கு நெருக்கமானவரும், வேந்தர் மூவீஸ் நிறுவனத்தின் அதிபருமான மதன் தலைமறைவாகி ஒரு வாரத்திற்கு மேலாகியும், அவரை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது பச்சமுத்துவுக்கும், மதனுக்கும் இடையிலான பிரச்சினை என்ற நிலையைத் தாண்டி, நூற்றுக்கணக்கான மாணவர்களை பாதிக்கும் சிக்கலாக மாறியிருக்கிறது.

குறைந்த பட்ஜெட்டில் திரைப்படம் எடுக்க 10 யோசனைகள்!


0a2wசினிமா மீதான ஆர்வம் கொண்டவர்களுக்கும், குறைவான முதலீட்டைக் கொண்டோ, ‘ஜீரோ’ பட்ஜெட்டிலோ படம் எடுக்க நினைக்கும் அறிமுக இயக்குநர்களுக்கும் அனுராக் காஷ்யப் பத்து வழிமுறைகளை ‘எம்.டிவி இந்தியா’ மூலம் வழங்கியிருந்தார். அதன் எழுத்து வடிவம் இதோ..
  1. குறைவான இடங்களில் கதைக்களம் அமைப்பீர்

பாரிவேந்தருக்கு ஜால்ரா அடிக்கும் இயக்குனர்கள் சங்கம்... வள்ளல் வழுக்கை வேந்தர் எங்க முதலாளி....

parivendharஎங்க முதலாளி, நல்ல முதலாளி; வள்ளல் குணம், நல்ல மனம் உள்ள முதலாளி” பார்வேந்தர் குறித்து பாட்டாகவே பாடிய இயக்குநர்கள் சங்கம்
கடந்த இரண்டு வாரங்களாக தமிழக ஊடகங்களில் பாரிவேந்தருக்கும் வேந்தர் மூவிஸ் மதனுக்குமான ‘சண்டைகள்’தான் தவிர்க்க முடியாத செய்தியாக இடம்பெறுகின்றன.  பாரிவேந்தர் என்று அழைக்கப்படும் எஸ் ஆர் எம் குழுமத் தலைவர் பச்சமுத்துக்குச் சொந்தமான புதிய தலைமுறை தொலைக்காட்சி சில நாட்கள் இந்தச் செய்தியைத் தவிர்த்து வந்தது, பிறகு மதன் தரப்பிலான செய்திகளும் இடம் பெற ஆரம்பித்தன. மதனின் கடிதம், மருத்துவக் கல்லூரிக்காக லட்சக் கணக்கில் பணம் பெற்றதை உலகத்துக்குச் சொன்னது. பணம் கொடுத்து ‘ஏமாந்த’ பல மாணவர்கள் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளிக்க வரிசை கட்டி நின்றார்கள். மருத்துவ கல்லூரியில் ஒரு சீட்டுக்கு ரூ. 1 கோடி கேட்டதாகவும், மதனிடம் முன்பணமாக 10 லட்சம் தந்ததாகவும் புகார் அளித்தார் ஒரு மாணவர். விவகாரம் சூடுபிடிக்க ஆரம்பித்தது.

துணைவேந்தர் பதவிகள் எட்டு கோடி ரூபாய் வரை விலை போகிறது'

தமிழகத்தில் காலியாக உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிகள் நிரப்பப்பட்டு வருகின்றன. ' கடந்த காலங்களில் 3 கோடி ரூபாய் அளவுக்குப் பேரம் பேசப்பட்டு வந்த துணைவேந்தர் பதவிகள், இப்போது எட்டு கோடி ரூபாய் வரை விலை போகிறது' என வேதனைப்படுகிறார்கள் கல்வியாளர்கள். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக போராசிரியர் கணபதி நியமிக்கப்பட்டிக்கிறார். அதேபோல், தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் பாஸ்கரன் நியமிக்கப்பட்டிருக்கிறார். இதனால், இந்த இரண்டு பல்கலைக்கழகங்களிலும் நீடித்து வந்த குழப்பங்கள் நீங்கிவிட்டன. ஆனால், சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த தாண்டவனின் பதவிக்காலம் நிறைவடைந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டன.

திண்டுக்கல். தலித் பெண் கொலை... 3 கொடியவர்கள் பாலியல்... ஜாதி பார்க்கும் போலீஸ்

திண்டுக்கல் அருகே 21 வயது பெண் கடந்த மாதம் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து 3 பேரை போலீசார் கைது செய்த பின்னரும் கூட, இந்த விவகாரத்தின் பின்னணி என்ன என்று சரிவர தெரியவில்லை என பெண்ணின் தந்தை கூறியுள்ளார்.
ரேகா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) கடந்த மேய் மாதம் 2 ஆம் தேதி திடீரென காணாமல் போனார். இந்நிலையில் அவரது சடலம் மேய் 6 அன்று  திண்டுக்கல் அருகே கண்டெடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, ரேகாவின் உறவினர்கள், அவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டினாலும், போலீசார், அவர் கற்பழிக்கப்பட்டார் என்ற  குற்றச்சாட்டை ஏற்க மறுத்து வருகின்றனர்.

வெள்ளி, 10 ஜூன், 2016

ஷகீலா ; சினிமா வாய்ப்புக்காக நான் ஒருபோதும் தரம் தாழ்ந்தது இல்லை

சினிமாவில் நடிக்கும் வாய்ப்புக்காக நான் எங்கேயும் கீழ்ப்படியவில்லை. யாருக்கும் இரையாகவில்லை”: ஷகிலாவின் சுயசரிதையிலிருந்து எதிர்பார்க்கவே இல்லை. ‘ப்ளே கேர்ள்ஸ்’ என்ற என் முதல் படம் பாக்ஸ் ஆஃபீஸில் பெரிய ஹிட் ஆனது. சில்க் ஸ்மிதாவுடன் நடித்த அந்த சினிமாவின் வெற்றி என்னை ஆனந்தத்தின் உச்சத்துக்குக் கொண்டு சென்றது. சினிமா என்னும் பிரம்மாண்ட உலகத்தில் என் எதிர்காலம் நிச்சயிக்கப்பட்டுவிட்டது. அத்தனை நாள் யாராலும் அறியப்படாமல் கோடம்பாக்கத்தின் ஒரு சாதாரண இளம்பெண்ணாக இருந்த நான் தென்னிந்தியா முழுக்க அறியப்பட்டுவிட்டேன். சினிமாவின் டிக்ஷனரியில் ஷகீலா என்ற பெயர் பதிவுசெய்யப்பட்டுவிட்டது. இவ்வளவு பெரிய வெற்றியும் கவனமும் எனக்குக் கிடைக்கும் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை.  மலையாள திரையுலகில் பெரிதாக கலை கொள்கை  முழக்கம் இடும் மோகன்லால் மம்முட்டி போன்ற வியாபாரிகள் நடிகை ஷகீலாவை ரொம்ப மோசமாக திரை உலகை விட்டு அப்புறப்படுத்தினார்கள் ..

விகடனின் புண்ணாக்கு ஒப்பீடு : வடிவேலு ,பெரியார், அம்பேத்கர், ஜெயகாந்தன், புதுமைப்பித்தன்

இந்த விகடனின் தடம் என்ற இதழ், ஏதோ கலை, இலக்கியத்தை உய்விக்க ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்டது என்ற ரீதியில் எழுதி சூடம் கொளுத்தி தங்களின் பக்தியை பறைசாற்றும் பதிவுகளை வாசிக்க முடிந்தது. நானும் இதழை வாங்கி புரட்டிப் பார்த்தேன், பக்கவாட்டில் சாய்த்து, அண்ணாந்து தூக்கிப்பார்த்தேன், குனிந்து கீழே இறக்கிப் பார்த்தேன், சிரகாசனத்தோடு கண் சிவக்க பார்த்தேன். எந்த கோணத்திலும் பார்த்தாலும் எனக்கு இலக்கியமும் தெரியவில்லை, லேகியமும் தெரியவில்லை. இப்படி சகட்டு மேனிக்கு பார்த்ததில் உடலில் கண்ட இடத்தில் சுளுக்கு வந்ததுதான் மிச்சம். போதாக்குறைக்கு அட்டைப்படத்தில் பெரியார், அம்பேத்கர், ஜெயகாந்தன், புதுமைப்பித்தன் கோட்டோயோவியங்களோடு சிரிப்பு நடிகர் வடிவேலு படத்தையும் போட்டு யாரை கேவலப்படுத்துகிறார்கள் எனத்தெரியவில்லை.    எஸ் எஸ் வாசனே கொக்கோக சாத்திரம் என்றா காம கிளர்ச்சி நூலை அந்த காலத்திலேயே எழுதி பணம் பார்த்தவர் .. விகடன் குழுமம் புலிகளின் அத்தனை  மோசமான விடயங்களையும் நியாயப்படுத்தி பணம் பண்ணியவர்கள்

அதிமுகவில் சேர்ந்தால் எல்லாம் பெறலாம்.. பகிரங்கமாக வலைவிரிக்கும்"570 கழகம்"

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தனி பெரும்பான்மையாக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது அதிமுக. வலிமையான எதிர்கட்சியாக திமுக சட்டமன்றத்திற்குச் சென்றுள்ளது. இந்நிலையில் திமுகவைச் சேர்ந்த மாநில மகளிரணி துணைச் செயலாளர் ஜி.விஜயகுமாரி , திமுக மாநில பிரசாரக்குழுச் செயலாளர் கண்மணி,
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றிய முன்னாள் திமுக செயலாளரும், போளூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டவருமான ஏழுமலை, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி முன்னாள் துணை அமைப்பாளரும், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருமான செந்தில்குமார், நகைச்சுவை நடிகர் கேதீஸ்வரன் என்ற போண்டா மணி உள்ளிட்டோருடன் மேலும் சிலர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

ராமதாஸ் கட்சிக்காக என்னிடம் கைநீட்டினார் ! பாரிவேந்தர் பச்சமுத்து கிளறிய பிளாஷ்பேக்

சென்னை: வேந்தர் மூவிஸ் நிறுவனத்தன் மதன் காணாமல் போன விவகாரத்தில் பாரிவேந்தர் மீது ராமதாஸ் குற்றம்சாட்டியிருந்த நிலையில், கட்சி மாநாட்டுக்காக ராமதாஸ் என்னிடம் கை நீட்டினார் என பாரிவேந்தர் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக பாரிவேந்தர் வெளியிட்ட அறிக்கை:
எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரி மற்றும் வேறுபல கல்லூரிகளிலும்  இடம் வாங்கித் தருவதாக மாணவர்களிடம் பொய்யான வாக்குறுதி மூலம் பணத்தை பெற்றுக்கொண்டு தலைமறைவாகி விட்ட மதன் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சூழலில், பாமக நிறுவனர் ராமதாஸ், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் மீதும் தனிப்பட்ட முறையில் என் மீதும் அடுக்கடுக்கான பொய்களை கோர்த்து சற்றும் மனசாட்சியின்றி அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். .. வழுக்கை வேந்தர்  லேசுப்பட்ட ஆளில்லை  பாஜகவின்  அடியாள் இவர் ..  மதன் விவகாரம் இவரது கைவண்ணம்தான்

பெற்றோர்களே நீங்கள் குற்றவாளிகள் இல்லையா ?

தனியார் பள்ளி - அரசுப் பள்ளி
சென்ற வருடம் பள்ளி பொதுத் தேர்வு முடிவுகள் வெளிவந்த சமயத்தில் நமக்கான கல்வி எப்படி இருக்க வேண்டும்? கல்விக்கான நமது அடிப்படை உரிமையை மீட்டெடுக்க போராடுவதன் அவசியம் என்று எனது பள்ளி கல்லூரி வாழ்க்கை அனுபவத்தை (மாணவர் + பெற்றோருக்கு ஒரு ஆராய்ச்சி மாணவன் கடிதம்) உங்களிடையே பகிர்ந்திருந்தேன். இப்பொழுது இந்த வருட தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. கடந்த ஒரு வருடத்தில் நாம் பெற்ற அனுபவம்; பெற்றுக்கொண்ட படிப்பினைகள், போக வேண்டிய தூரம் என்ன என்பதை இக்கட்டுரையில் தொட்டுச் செல்வோம்.

ஜே.பரம்ஸ்மல் வெட்டி கொலை.. தகவல் அறியும் உரிமையாளர் ..

J Parasmal For over a decade, whenever J Parasmal entered a government building in Chennai, warnings of his arrival were whispered among government officials.
On Tuesday, Parasmal was on his way to his office on Narayanamurthy street when assailants struck on Baker Street in Choolai.
He jumped off his bike and began running, but a group of men cornered him near a cowshed and brutally hacked him to death with sickles. Police have not yet ascertained who the killers are.
Parasmal’s reputation for an uncompromising attitude towards corruption preceded him wherever he went, especially in government offices, says Senthil (name changed).

திமுகவில் மாவட்ட பொறுப்பாளர்கள் மாற்றம்.. கோவை, நாமக்கல், நெல்லை...

கோவை மாநகர் வடக்கு, நாமக்கல் கிழக்கு, திருநெல்வேலி மேற்கு மாவட்டங்களின் திமுக பொறுப்பாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் எம்.வீரகோபால் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, மு.முத்துசாமி கோவை மாநகர் வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் செ.காந்திசெல்வன் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, பார்.இளங்கோவன் நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி மேற்கு மாவட்டக் கழகச் செயலாள கி.துரைராஜ் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு சிவ.பத்மநாபன் திருநெல்வேலி மேற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராகவும் நியமிக்கப்படுகிறார்கள்.

விழுப்புரம் :13 மாணவர்களுக்கு சூடு வைத்த ஆசிரியை வைஜெயந்திமாலா

சரியாகப் படிக்கவில்லை என்று கூறி மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியை ஒருவர் கற்பூரத்தால் சூடு வைத்த சம்பவம் விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் பெற்றோர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உளுந்தூர்பேட்டையை அடுத்து இருக்கிறது பாலி ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளி. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இருக்கும் இந்தப் பள்ளியில் சுமார் ஐம்பது மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். கோடை விடுமுறை முடிந்து கடந்த 2ம் தேதி தான் பள்ளி திறக்கப்பட்டது. அப்போது ஏற்கனவே படித்த மாணவர்கள் அடுத்த வகுப்பிற்கும், பல புதிய மாணவர்களும் சேர்ந்திருக்கின்றனர். இந்நிலையில் ஆரம்பத்திலேயே மாணவர்களை பயமுறுத்தினால்தான் நம்மிடம் பயப்படுவார்கள், படிப்பார்கள் என்பதற்காக நெஞ்சைப் பதற வைக்கும் வேலையை செய்திருக்கிறார் அப்பள்ளியின் ஆசிரியை வைஜெயந்திமாலா. இவர் இதே பள்ளியில் 14 வருடங்களாக பணி புரிந்து வருகிறார்.

கன்னய்யா குமார் மீண்டும் கைது!

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவரான கன்னய்யா குமாரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். பாட்னா கலை கல்லூரியில் பீகார் காவல்துறை கண்மூடித்தனமாக மாணவர்களைத் தாக்கியதாகக் கூறி டெல்லி பிகார் பவனில் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து கன்னய்யா குமார் உள்ளிட்ட 42 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். நக்கீரன்.இன்

தலித் எழுத்தாளர் துரை குணா கைது.. ஊரார் வரைந்த ஓவியம் நாவலை

Muthu Krishnan's photo.Muthu Krishnan's photo.இன்று அதிகாலை ‘ஊரார் வரைந்த ஓவியம்’ நாவலை எழுதிய எழுத்தாளர் துரை.குணாவை காரணங்கள் ஏதும் இல்லாமல் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சட்டைகூட அணிந்திராத நிலையில் எந்த அவகாசமும் அளிக்காமல் இழுத்து சென்றுள்ளது காவல்துறை. அவர் தற்சமயம் புதுக்கோட்டையில் உள்ள கரம்பக்குடி காவல் நிலையத்தில் உள்ளார். அவரது குடும்பத்தாரைக் கூட காவல்துறையினர் சந்திக்க அனுமதிக்கவில்லை.
கைதுக்கான காரணத்தை இன்ஸ்பெகடர் சகாயம் அன்பரசுவிடம் வற்புறுத்தி கேட்டதற்கு, ”உன் புருஷன் ஒரு பையனை கத்தியால் குத்தி தையல் போட்டு ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருக்கான். அதுக்காகத்தான் கைது பண்ணியிருக்கோம்” என்று கோகிலாவிடம் கூறினார். கத்தியால் குத்தப்பட்டதாகச் சொல்லப்படும் நபரை துரை. குணாவிற்கு யாரென்றே தெரியாது எனகிறார் கோகிலா.

ஜெயலலிதாவின் காழ்ப்புணர்ச்சியின் விலை 1800 கோடி ரூபாய்...ரத்து...சென்னை துறைமுகம் - மதுரவாயல் விரைவுச்சாலை

பிரபல எழுத்தாளர்'s photo.துரவாயல் திட்டமாவது.சேதுசமுத்திர திட்டமாவது மெட்ரோ ரயிலாவது மேம்பாலமாவது ....இதெல்லாம் வீண் வேலைகள்.. இதைவிட ஒரு ரூபாய்க்கு ரெண்டு உளுந்தவடைணு ஒரு திட்டம் கொண்டுவந்தால் மட்டும் போதும். அடுத்த முறையும் ஜெயலலிதா தான் முதல்வர்.திமுக கொண்டு வந்த சென்னை துறைமுகம் - மதுரவாயல் விரைவுச்சாலை திட்டத்தை இதுவரை கிடப்பில் போட்டு வந்த அதிமுக அரசு நேற்று அத்திட்டத்தையே மொத்தமாக ரத்து செய்துள்ளதாக செய்தி. சென்னையின் அடிப்படை கட்டமைப்பை அடுத்த இடத்திற்கு கொண்டு செல்லும் மிக முக்கிய திட்டம் இது. 2009 ஆம் ஆண்டு திமுக அரசால் அறிவிக்கப்பட்டு பிரதமர் மன்மோகன் சிங்கால் அடிக்கல் நாட்டப்பட்ட, 1800 கோடி ரூபாய் மதிப்புள்ள இத்திட்டம் 19 கி.மீ நீளமுள்ள பறக்கும் சாலை அமைப்பை கொண்டது. சென்னை துறைமுகத்திலிருந்து மதுரவாயல் புறநகர் சாலை வரை நாள் கணக்கில் நிற்கும் லாரிகளால் போக்குவரத்து நெரிசலிலும் சுற்றுச்சூழல் சீர்கேட்டிலும் சிக்கித் தவிக்கிறார்கள் அப்பகுதி மக்கள். மேலும் ஏற்றுமதி - இறக்குமதி நிறுவனங்களுக்கு நேர விரையம். சென்னை துறைமுகத்திற்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு.  மதுரவாயிலாவது  சேதுசமுத்திரமாவது

வீரமணி அறைகூவல் : பார்பன மனுதர்ம கல்வியை ஒருபோதும் அனுமதிக்க முடியாது

இந்தியக் கல்வித்திட்டத்தில் செய்ய இருக்கும் மாற்றங்கள் குறித்து கல்வியமைச்சர் ஸ்மிருதி இரானி கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘இந்தியாவுக்குப் புதிய கல்வி என்ற ஒரு திட்டத்தைக் காவி அமைப்புகள் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரிடம் அளித்தன. பெருநகரங்களில் உள்ள பள்ளிகள் 12 மணிநேரம் செயல்படவேண்டும். இரு பகுதிகளாக பிரித்து முதல்பாதி படிப்பும், அடுத்த பாதி தொழில் கல்வியும் வழங்கவேண்டும். முக்கியமாக பெற்றோர்கள் எந்த தொழில் செய்கிறார்களோ அந்த தொழிலில் ஆர்வமாக உள்ள குழந்தைகளுக்கு அந்த தொழிலை நவீனமயமாக்கும் முறையை கற்றுக் கொடுக்க வேண்டும்.

திருப்பதியில் மூன்று தமிழர்கள் சித்ரவதை.. தனி அறையில் அடைத்து வைத்து காவல்துறை

 திருப்பதியில் செம்மரம் வெட்ட வந்ததாக கூறி பிடித்து சென்ற மூன்று தமிழர்களை வனத்துறை அதிகாரிகள் தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாக தகவல் வெளியாகி இருக்கிறது. செம்மரக் கடத்தல் வழக்கில் கைதாகும் தமிழகக் கூலிகள் விடுதலையாகிவிட முடியாதபடி ஆந்திர அரசு வனத்துறை சட்டத்தைத் திருத்தியது. இதன்படி, செம்மரக் கடத்தலில் முதன்முறையாக கைது செய்யப்படுபவர்களுக்கு, 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.3 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். இரண்டாவது முறை கைது செய்யப்பட்டால், அவர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையுடன் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

தமிழக மத்திய அரசுகளின் உதவியின்றி முல்லை பெரியாறு அணை கட்ட முடியாது...கேரளா முதல்வர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம், முல்லைப்பெரியாறில் தமிழக அரசின் உதவியின்றி புதிய அணை கட்ட முடியாது என்று கூறிய கேரள முதல்-மந்திரி அனைத்துக்கட்சி கூட்டத்தை நிராகரித்தார். கேரளாவில் சமீபத்தில் முதல்–மந்திரியாக பொறுப்பேற்ற பினராயி விஜயன், முல்லைப்பெரியாறு பிரச்சினையில் இருவேறு கருத்துகளை வெளியிட்டு இருந்தார். அங்கு புதிய அணை கட்ட தேவையில்லை என முதலில் கூறியிருந்த அவர், பின்னர் அதை மறுத்தார். இவ்வாறு முதல்–மந்திரியின் கருத்தில் குழப்பம் நிலவியதால், அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி உறுதியான முடிவு ஒன்றை அறிவிக்க வேண்டும் என மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

பொன்.ராதாக்கிருஷ்ணன் வெளியேறுகிறாரா? நிச்சயமா என்னவோ நடக்கிறது.

நாகர்கோவில்: குளச்சலில் வர்த்தக துறைமுகம் அமைவதற்கு இடையூறு ஏற்பட்டால் மத்திய இணை அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்வேன் என்று பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களிடம் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது: குளச்சலில் வர்த்தக துறைமுகம் அமைய வேண்டும் என்பது இம்மாவட்ட மக்களின் 60 ஆண்டு கால கனவு. மத்தியில் ஆளும் பாஜக அரசு இத்திட்டத்தை நிறைவேற்ற ரூ.23 ஆயிரம் கோடி பணம் ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் இருந்தபோதும் பொன்னார் தனி ஆவர்த்தனம் நடத்தி வருவது குறித்து தொடர்ச்சியாக புகார்கள் மேலிடத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறதாம்.
அண்மையில் ஒருபொதுக்கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் பெயரைக் கூட பொன். ராதாகிருஷ்ணன் உச்சரிக்கவில்லை என்பது சர்ச்சையானது.  பாஜகவின் தமிழக கிளையாக அதிமுகவே போதும்? ஜெயாவின் கண்டிசனுக்கு மோடி ஆமா ஆமா ஆமா? 

வியாழன், 9 ஜூன், 2016

ஒவ்வொரு குடிமகனும் தன் வழக்கில் தானே வாதாடும் உரிமை...மறுக்கும் சைதாப்பேட்டை வழக்கறிஞர்களின் தாக்குதல்

வழக்கறிஞர்கள் அனைவரையும் தலை குனிய வைக்கும் செயலை செய்தவர்கள் மீது அனைத்து தரப்பிலும் கண்டனங்கள் குவிந்து கொண்டு இருக்கிறது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தன்னுடைய வழக்கில் தானே வாதாட சட்டம் அனைத்து உரிமைகளையும் வழங்கியுள்ளது. அது போல வாதாடும் போது நீதிமன்றத்தில் அமரலாம் என்றும் நீதிமன்ற தீர்ப்புகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வளவு தெளிவான சட்டங்கள் இருந்தும் இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் தனக்காக தானே வாதாட சென்ற சட்ட பஞ்சாயத்து இயக்க தலைவர் சிவஇளங்கோ அவர்களை கும்பலாக வந்த சில வழக்கறிஞர்கள் ஆளாளுக்கு உங்கள் வழக்கில் வாதாடினால் நாங்கள் எப்படி வக்கீல் தொழில் பார்ப்பது? வழக்கறிஞர்கள் இருக்கையில் அமர உனக்கென்ன உரிமை உள்ளது என்று கூறி தாக்கியுள்ளனர். 

23 ஆம் அதிகாரி ராம் மோகன் ராவ்....22 பேரை முந்திக்கொண்டு வந்த தலைமை செயலர்.... கமிஷன்,கலெக்ஷன் கண்காணிப்பு....

மூத்த அதிகாரிகள் 22 பேரை விலக்கிவிட்டு இராமமோகன் ராவை தலைமைச் செயலராக நியமிக்கும் அளவுக்கு அவருக்கு சிறப்புத் தகுதி ஏதேனும் உள்ளதா? என்று கேட்டால், இல்லை என்பது தான் தமிழக அரசியல் நிலவரம் அறிந்த அனைவரின் பதிலாக இருக்கும். ஆனால், மூத்த அதிகாரிகளுக்கு இல்லாத சில சிறப்புத் தகுதிகள் இராம மோகன் ராவுக்கு உள்ளன. ஆட்சியாளர்களின் ஊழல்களுக்கு உதவியாக இருப்பார், அதிகாரத் தரகராக இருப்பார், அமைச்சர்கள் எந்தெந்த பணிகளுக்காக யாரிடம் பேரம் பேசுகின்றனர் & அதற்காக எவ்வளவு தொகை கைமாறுகிறது என்பன உள்ளிட்ட விவரங்களை சேகரித்து முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் தெரிவிப்பது ஆகியவை தான் அவருக்கு உள்ள தகுதிகளாகும். கடந்த 5 ஆண்டுகள் முதலமைச்சரின் செயலாளராக பணியாற்றிய போது தமது திறமைகளை அவர் சிறப்பாக வெளிப்படுத்தியதற்கான பரிசு தான் இப்பதவி என்று கூறப்படுகிறது.

தி இந்து:சென்ட்ரல் ஸ்டேசனை அக்ரஹாரமாக்கு? ...கிரிக்கெட், ஃபில்டர் காபி, கர்நாடக சங்கீதம், சங்கராச்சாரி....கருவாடு.

central-station
உழைக்கும் மக்கள் மீதான ‘தி இந்து’ வின் வக்கிரம்.கிரிக்கெட், ஃபில்டர் காபி, கர்நாடக சங்கீதம், சங்கராச்சாரி ஆகிய இந்த நான்கு துறை சங்கதிகளின் மேன்மைகளை பேசும் மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு (தி இந்து) அலுத்து சலித்து வீதி உலா வரும் பொழுது தவிர்க்கவியலாதபடி சூத்திர – பஞ்சமர்களின் கருவாட்டு வீச்சம் மூக்கைத் துளைத்து விடுகின்றது. சென்ற சீசனில் கருவாட்டிற்காக மவுண்ட் மகாவிஷ்ணு ருத்ர தாண்டவம் ஆடியதை அறிந்திருப்பீர்கள்.
இந்த சீசனில்தி இந்துவிற்கு வேலைப்பளு கொஞ்சம் ஜாஸ்தி! அமித் ஷா சென்னைக்கு வந்து காஞ்சி சங்கராச்சாரியின் சந்திர ஹர்ஷ தரிசனத்தில் கலந்து கொண்டு சனாதன தர்மத்தைக் காக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த பொழுது அதை ஃபுல் கவரேஜ் செய்தது மவுண்ட்ரோடு தான். மேலும் ‘ஆயுஷ்மான் பவ செளம்ய’ என்று நியுஜெர்சியில் காஞ்சிப் பெரியவாளுக்கு சிலை எடுத்த செய்தியை கவரேஜ் செய்ததும் மவுண்ட் ரோடு மகாவிஷ்ணுவின் மைல்கல் சாதனைகள்! இவ்வளவு வேலைப்பளுவிற்கு மத்தியில் நடுப்பக்க கட்டுரை ஆசிரியர் சமஸின் தனி ஆவர்த்தன சல்லை வேறு! இதனால் உலகளந்த கஸ்தூரிரங்க பெருமானால் அடிக்கடி வீதி உலா வரமுடிவதில்லை.

பாகிஸ்தான் : அல்லாவின் ஆட்சியில் ஆணாதிக்கத்தை எதிர்க்கும் பெண்கள்

தப்பஸும் அத்னான் ஒரு பெண் எழுந்து என்னிடம் ”உங்களுடைய குழந்தையின் முகத்தில் அவளின் தந்தையே ஆசிட் விசீனால் அந்த இடத்தில் மன்னிப்பதை பற்றி யோசிப்பீர்களா?” என்றாள். நான் வாயடைத்து நின்றேன்
பாகிஸ்தானைச் சேர்ந்த தப்பஸும் அத்னான் குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்டு பின் அதிலிருந்து மீண்டு மனித உரிமை பாதுகாவலராக பணியாற்றுபவர்.
தப்பஸும் அத்னான்
13 வயதில் திருமண செய்யப்பட்டவர் 20 வயதில் 3 குழந்தைகளுக்கு தாயாகவும், 30 வது வயதில் கணவனால் கடுமையாக சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதால் மணமுறிவும் பெற்றவர். அப்போது எந்தவித பொருளாதார ஆதரவும் இன்றி துரத்தப்பட்டார்.

ஏழை சிறுநீரகங்களை விற்கும் அப்பல்லோ மருத்துவமனை... பூசி மெழுகும் மெயின் மீடியா வியாபாரிகள்

அப்பலோ மருத்துவமனை
டில்லி அப்பலோவில் கைது செய்யப்பட்டவர்கள்டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் நடந்து வரும் சிறுநீரக மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  மக்களின் வறுமையை பயன்படுத்தி  சில லட்சங்களை விட்டெறிந்து சிறுநீரகங்களை பிடுங்கிக்கொள்ளும் கொடூரம் தெரியவந்துள்ளது. டில்லி அப்பல்லோவில் கைது செய்யப்பட்டவர்கள்</ இக்குற்றச்சாட்டு தொடர்பாக கடந்த வெள்ளியன்று அப்பல்லோவின்  மூத்த சிறுநீரக பிரிவு மருத்துவர் ஒருவரின் உதவியாளர்கள் சைலேஷ் சக்சேனா, ஆதித்யா சிங் ஆகிய இருவர்  மற்றும் மருத்துவமனையிலிருந்த  மூன்று இடைத்தரகர்களான சிக்தர், மவுலிக், பிரகாஷ்  உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். சிறுநீரக பிரிவு மூத்த மருத்துவர் தற்போது வெளிநாட்டில் இருப்பதாக பத்திரிகைகள் கூறுகின்றன.

அ.தி.மு.க ரவுடிகளால் சிதைக்கப்பட்ட மாணவி, எரிக்கப்பட்ட வீடு – படங்கள்

Jpeg
Jpegமாணவியை சிதைத்து வீட்டை தீக்கிரையாக்கியஅ.தி.மு.க குண்டர்கள்

பெண்கள் மீது தொடரும் பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவு கட்டு!
  • குறிஞ்சிப்பாடி – தையல்கொணாம்பட்டினத்தில் 10-ம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ மீது பாலியல் வன்முறை! வீடுகள் சூறை – தீக்கிரையாக்கம்!
  • அ.தி.மு.க ரவுடிகள் மணிகண்டன், செல்வகுமார், வைரமுத்து கும்பல் வெறியாட்டம்
  • அ.தி.மு.க கிரிமினல்களை சட்டம் தண்டிக்காது!

தபால் வாக்குகளில் 23,000 வாக்குகள் செல்லாத வாக்குகள்... ஜெயலலிதா இப்படித்தான் திருடினார்

சென்னை: சில்லறை வாக்கு வித்தியாசத்தில் எம்.எல்.ஏ ஆக முடியாமல் போன தவிப்பில் பலரும் உள்ளனர். அது காரணம், இது காரணம் என்ற வாதப் பிரதிவாதிங்களும் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் பதிவான தபால் வாக்குகளில் 23,000 வாக்குகள் செல்லாத வாக்குகள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. சிதம்பரம் தொகுதியில்தான் அதிக அளவிலான செல்லாத தபால் வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தபால் வாக்குகள்தான் பலரது வெற்றி வாய்ப்பை பறித்துள்ளதாகவும் தெரிகிறது. சிதம்பரம் தொகுதியில் 777 தபால் வாக்குகள் செல்லாத வாக்குகள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. திமுக 2வது இடத்தைப் பிடித்தது. மற்ற அணிகள், கட்சிகள் அட்ரஸ் இல்லாமல் போய் விட்டன
தமிழக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. திமுக 2வது இடத்தைப் பிடித்தது. மற்ற அணிகள், கட்சிகள் அட்ரஸ் இல்லாமல் போய் விட்டன
பலர் தோல்வி திமுகவைச் சேர்ந்த பலர் மிக மிக சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றுள்ளனர். அதேபோல விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வெறும் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார். ராதாபுமரம் திமுக அப்பாவு 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.

அமெரிக்காவில் 74 கைத்தட்டல்களை பெற்ற மோடியின் டெலிபிராம்ப்ட்கருவி !

அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டுக்கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் உரைக்கு 66 முறை அமர்ந்தும் 8 முறை எழுந்து நின்றும் அமெரிக்க எம்.பிக்கள் கைதட்டி ஆர்ப்பரித்தனர் என இந்திய ஊடகங்கள் மோடியின் அமெரிக்க நாடாளுமன்ற உரை குறித்து புகழ்ந்து எழுதிவருகின்றன. இந்நிலை மோடி ஆற்றிய நாடாளுமன்ற உரை அவருடைய உள்ளத்திலிருந்து தோன்றியது அல்ல, எதிரே இருக்கும் திரையில் ஓடியது என ஆதாரபூர்வமாக வெளியாகியுள்ளது. அதாவது நாடாளுமன்றத்தில் மோடி உரையாற்றும் போது எதிரே வைக்கப்பட்டிருந்த நவீன தொழிற்நுட்பங்களுடன் கூடிய எழுத்துத் திரை(டெலிபிராம்ப்ட்)யைப் பார்த்தே படித்திருக்கிறார். இந்திய பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட படங்களிலேயே மோடி முன்பு பிராம்ப்ட் இருப்பது பதிவாகியுள்ளது.

ஆவணப்பட இயக்குநர் ஆண்டோவுக்கு அஞ்சலி...வாட்டர், துரும்பர்கள்,யாருக்காக.....

ஹெச்.ஜி.ரசூல்:
ஹெச்.ஜி.ரசூல்ஆவணப்பட இயக்குநர் ஆன்றோவை ஒரு சில மாற்றுத்திரை திரையிடல் நிகழ்ச்சிகளில் சந்தித்திருக்கிறேன். கலை இலக்கியப்பெருமன்றம் ,கீற்று வெளியீட்டகம் நடத்திய திரைவிழாக்கள் அவை. தமிழகத்தின் ஆவணப்படவரலாற்றில் துரும்பர்கள் எனப்படும் புதிரை வண்ணார்கள், நீலகிரிவாழ் ஆதிப்பழங்குடிகள் என அடித்தளமக்கள் சார்ந்த உலகத்தையும் வாழ்வியல் துயரங்களையும் ஆன்றோவின் ஆவணப்படங்கள் நம்மிடையே காட்சிப்படுத்தி உள்ளன. புனைவுகளின்றி உள்ளதை உள்ளபடியே காட்சிப்படுத்தும் ஒரு படைப்பாக்கமுறையைக்கொண்டதுதான் டாக்குமென்டரி ரியலிசம் – ஆவணப்பட யதார்த்தம் என்னும் வகைமை.தனது தும்பல் என்னும் கிராமத்து மண்ணிலிருந்து பயணத்தை துவங்கிய ஆன்றோவின் தும்பலில் இன்று குடியரசு தினம் எளியமக்களின் நிறைவேற்றப்படாத கனவுகளையும் தேவைகளையும், ஆளும் அரசுகளின் போலிமையான கொண்டாட்டங்களையும், ஏமாற்றுகளையும் ஒரு சேர காட்சிகளின் வழியாக விவரணையாக்கம் செய்திருந்தது.

ஸ்மிருதி இரானி: ஜுன் 16 முதல் வேதபாடத் துறை அமல்படுத்தப்படும்..வேதங்களை பயிலாமல் நமது கலாச்சாரத்தை.....

கல்வித் திட்டத்தில் சமஸ்கிருத மொழி மட்டுமே உள்ள
வேதப்பாடத் துறை (வேதிக் போர்டு) வரும் ஜுன் 16 முதல் மத்திய அரசு செயல்படுத்தும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார். ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உள்ள தனியார் கல்லூரி விழாவில் கலந்துகொண்டு பேசிய ஸ்மிருதி இரானி, மாணவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
‘நமது கலாச்சாரம் என்பது வேதங்களில் ஊறியுள்ளது. வேதங்களைப் பயிலாமல் நமது கலாச்சாரத்தை நாம் முன்னிறுத்த முடியாது.  ஸ்மிருதி இராணி வேதத்தை எப்படி வளர்த்தாங்க என்று நெறைய flashback நியுஸ் உண்டுங்க

ஜெயா to கோகுல இந்திரா :திரும்பவும் அழுது என்னை ஏமாற்றப் பார்க்காதீங்க. வெளியில போங்க...’


ஆன்லைனில் தயாராக இருந்தது வாட்ஸ் அப். ஏதோ மெசேஜ் டைப்பிங் ஆனபடி இருந்தது. சற்றுநேரத்தில் வந்து விழுந்த அந்த மெசேஜ் இது.
“முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராமீது முதல்வர் ஜெயலலிதா கடும் கோபத்தில் இருப்பதாக கார்டன் வட்டாரத்திலிருந்தே தகவல் கசிய ஆரம்பித்துள்ளது. அண்ணாநகர் தொகுதியில் போட்டியிட்ட கோகுல இந்திரா, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மோகனிடம் தோற்றுப்போனார்.
கடந்த 2011 தேர்தலில், அதிமுக வென்று ஆட்சியமைத்தபோது வணிகவரித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டவர் கோகுல இந்திரா. ஆனால், பதவிக்குவந்த சில மாதங்களிலேயே பல புகார்கள் கிளம்பியது. உடனடியாக, கோகுல இந்திராவை அந்தத் துறையில் இருந்து சுற்றுலாத் துறைக்கு மாற்றினார் ஜெயலலிதா. அங்கேயும் துறைசார்ந்த புகார்கள் கோகுல இந்திராவைச் சுற்றிவந்தன.

570 கோடி : 2 வாரத்திற்குள் சிபிஐ பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கண்டெய்னர் லாரிகளில் ரூ.570 கோடி பிடிப்பட்ட விவகாரத்தில் 2 வாரத்திற்குள் சிபிஐ பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் 3 லாரிகளில் சிக்கிய ரூ.570 கோடி ஹவாலா பணமாக இருக்குமா? என்ற கோணத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டுமே தவிர வருமான வரித்துறை விசாரணைக்கு தேர்தல் ஆணையம் ஆணையிட்டது தவறானது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

நீங்களே தேடிக் கொண்டது; அனுபவித்துத் தானே ஆக வேண்டும்!: கலைஞர்

மதுரவாயல் பறக்கும் சாலை விவகாரம் குறித்து திமுக தலைவர் கலைஞர் எழுதியிருக்கும் கடிதம் : 9-6-2016 தேதிய “தி இந்து” ஆங்கில நாளிதழில் முக்கியமான ஒரு செய்தி! “NHAI  terminates  Contract for elevated corridor project”  என்ற தலைப்பில் வந்துள்ள செய்திதான் அது.  இந்தத் தலைப்பின் கீழ் வந்துள்ள செய்தியில், “தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் 1,815 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான சென்னைத் துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டத்திற்கான காண்ட்ராக்டருடன் செய்து கொள்ளப் பட்ட ஒப்பந்தம் அண்மையில் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு விட்டது” என்று “இந்து” எழுதியுள்ளது. அதனைப் படிக்கும் போது பெரிதும் வருந்திய நான், அந்தத் திட்டத்திற்காகத் தொடக்கத்திலிருந்து பாடுபட்டவன் என்ற முறையில் பல்வேறு  நினைவுகள் என் சிந்தையில் எழுந்தன.

விபத்தில் தமிழகம் முதலிடம் ! 69,059 சாலை விபத்துக்கள்....குண்டு குழிகளில் முதலிடம்

தமிழகம் முதலிடம் - அதுவும் விபத்தில்!  குண்டும் குழியுமாக உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் பட்டியலில் தமிழகம் முதலிடம்!
கடந்தாண்டு நாடு முழுவதும் நடந்த சாலை விபத்துக்களில் 1.46 லட்சம் பேர் பலியாகியுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் சாலை விபத்தில் தில்லியில் மட்டும் 1,622 பேர் பலியாகியுள்ளனர்.சாலை விபத்துக்களில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. கடந்த ஆண்டு தமிழகத்தில் மட்டும் 69,059 சாலை விபத்துக்கள் நடந்துள்ளன எனக்கூறப்பட்டுள்ளது.

உத்தா பஞ்சாப் படத்துக்கு 89 இடங்களில் வெட்டு... உயர்நீதி மன்றம் கேள்வி!

மும்பை: இயக்குனர் அபிஷேக் சவுபே இயக்கத்தில் இந்தி நடிகர் ஷாகித் கபூர் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘உத்தா பஞ்சாப்’. இந்த படத்தில் அலியா பட், கரீனா கபூர் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து உள்ளனர். போதைப்பொருட்கள் பற்றிய விழிப்புணர்வை கருப்பொருளாக கொண்ட இந்த படத்தை அனுராக் காஷ்யப் உள்ளிட்டோர் தயாரித்து உள்ளனர். இந்த படம் 17-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, ‘உத்தா பஞ்சாப்’ படத்தை தணிக்கை செய்த சினிமா தணிக்கை குழு, அதில் சில காட்சிகள் ஆட்சேபனைக்கு உரியதாக இருப்பதாக கூறி நீக்கியது. மேலும், 89 இடங்களில் மாற்றம் செய்யுமாறு பரிந்துரை அளித்தது. அத்துடன் படத்தின் தலைப்பில் ‘பஞ்சாப்’ பெயர் இடம்பெறுவதற்கும் கண்டனம் தெரிவித்தது. இதனால், வேதனை அடைந்த தயாரிப்பாளர் அனுராக் காஷ்யப், மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி தர்மாதிகாரி 89 இடங்களை வெட்டி நீக்க வேண்டும் என்பதற்கான காரணத்தை கூறும்படி மத்திய தணிக்கை குழுவிற்கு உத்தரவிட்டார்.

துவராக சங்கராச்சாரியின் சொகுசு பேருந்துக்கு வரிவிலக்கு ... 1.35 கோடி...சுமார் 11 லட்சம் பிரீ....

போபால்: மத்திய பிரதேசத்தில் சங்கராசார்யா சாமியாரின் 1.35 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு பஸ்சிற்கு அம் மாநில அரசு வரிவிலக்கு அளித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள சங்கராசார்யா சாமியாருக்கு சகல வசதியுடன் கூடிய சொகுசு பேருந்து ஒன்று உள்ளது. இந்த பேருந்து 15 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டு பின்னர் வாஷிங் அறை, லிப்ட், பெட் போன்ற சகல வசதிகளுடன் 1.30 கோடி ரூபாய்க்கு மறுசீரமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.  இந்த வாகனம் சங்கராசார்யா ஜோதிஷ்பீதா, ஸ்வாமி ஸ்வரூபானந்தா சரஸ்வதி என்ற பெயரில் வாங்கப்பட்டுள்ளது. இந்த பேருந்திற்கு சாலை வரியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் பூபேந்திர சிங் அமைச்சரவைக்கு பரிந்துரை செய்தார்.சாமிகள் பேருந்துக்குள் என்னன்னா பண்ணுவார்?

இனிமே உங்கட ஆட்களுக்கும் அட்வைஸ் பண்ணுகோ

நேற்று ஒரு அமெரிக்கவாழ் சிலோன் தமிழருடன் பேசிக்கொண்டிருந்தேன். பேச்சு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பக்கம் திரும்பியது. அவர் ஹிலாரி ஆதரவாளர். நான் வேண்டுமென்றே இந்தமுறை ட்ரம்ப் தான் வரவேண்டும். ட்ரம்ப் வந்தால்தான் அமெரிக்கர்களின் வாழ்வு செழிக்கும் என பேசத்தொடங்கினேன். கொஞ்ச நேரத்தில் கடுப்பாகிவிட்டார். "சார் ட்ரம்ப் அறிவில்லாத இனவெறியன் சார். உங்களுக்கு அவனைப் பற்றி என்ன தெரியும்? அவன் ஆட்சிக்கு வந்தால் எங்களைப் போன்ற புலம்பெயர்ந்தவர்களுக்கு எவ்வளவு பிரச்சினை ஆகும் தெரியுமா?" என புலம்பினார். நான், "அதெல்லாம் எனக்கு தெரியுது, தெரியலேன்றதை விட்ருவோம். ஆனா அமெரிக்க, கனடா, ஃப்ரான்ஸ்ல உக்காந்துகிட்டு உங்காளுங்க சீமான் மாதிரியான நாஜிக்களுக்கு காசுபிச்சை போட்டு தூண்டிவிடும் போதும், கொஞ்சம் கூட இந்திய-தமிழக அரசியல் சூழல் அறிவே இல்லாமல் காங்கிரசை அழிக்க மோடிக்கு ஓட்டு போடுங்க, திமுகவை அழிக்க ஜெயலலிதாவுக்கு ஓட்டு போடுங்கனு பிரச்சாரம் பண்ணும்போதும் எங்களுக்கும் இதே கடுப்புதானே வரும்? என்னைக்காவது அதைப் பத்தி நினைச்சுபாத்திருக்கீங்களா சார்? இனிமே உங்கட ஆட்களுக்கும் அட்வைஸ் பண்ணுகோ," என சொல்லிவிட்டு பேச்சை முடித்துவிட்டேன்.- நெடிசன் டான் அசோக்

அம்மா தாயே....கருணாநிதி ஒழிக ... தர்மம் பண்ணுங்க தாயே !

ஜெயலலிதாவிடம் இருந்து பிச்சை எடுக்க ஒரே வழி  "கருணாநிதி ஒழிக"
கேள்வி :- ஈழக்கருமாதி புகழ் வசூல் ராஜா திருமுருகன் காந்தி நடத்திய செல்ஃபி மெழுகுவர்த்தி கூட்டத்தில், கலைஞரை ஈழப்படுகொலையாளர் என்று படம் போட்டு காட்டினார்களமே?
பதில் :- ஒரு கதை சொல்றேன். வீடு புகுந்து கொலை,கொள்ளை கற்பழிப்பு செய்யும் மகா கொடூர திருடனை மக்களும் போலிசாரும் ஒருநாள் கண்டுபிடித்து துரத்தினார்களாம். அனைவரும் நெருங்குகையில், கருணாநிதி ஒழிக, ஈழப்படுகொலையாளி கருணாநிதி ஒழிக, இனப்படுகொலையாளி கருணாநிதி ஒழிக தொடர்ந்து கத்தினானாம். போலிசாரும் மக்களும் அடடே, இந்த மகா திருடன் மிக மிக நல்லவன் போலவே என்று அவனுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டு, உண்மையான தமிழ்த்தேசியருடன் ஒரு தருணம் என்று பேஸ்புக்கில் போட்டுக்கொண்டனராம். இந்தக்கதை மாதிரிதான் தமிழ்நாஜியத்தில் பங்குனிகள், மங்குனிகள் மக்களைக் கொண்டு நடத்துகின்றனர். டான் அசோக் சொன்னதைப்போல ஜெ.விடம் இருந்து அயோக்கியர்கள் தப்பிக்க எடுக்க ஒரே ஆயுதம் "கருணாநிதி ஒழிக". இந்த அயோக்கியர்களை அடையாளம் கண்டு, ஜெ.வையும் மக்களையும் ஏமாற்றும் இவர்களை சந்திக்க சிரிக்க வைப்பது அதிமுக சார்பு நடுநிலையாளர்களின் பொறுப்பு. நானே எவ்வளவு நாள்தான் தண்டோரா போடுவது.-  நெடிசன் கிளிமூக்கு அரக்கன்

பார்ப்பனர்களின் வழக்கும் Non பார்ப்பனர்களின் வழக்குக்கும் என்ன வித்தியாசம்?

கேள்வி: லாலு, ஆ.ராசா போன்ற தலைவர்களின் மீதான ஊழல் வழக்குகளுக்கும், ஜெயலலிதா விஜய் மல்லியா போன்ற  பார்ப்பன தலைவர்கள் மீதான ஊழல் வழக்குகளுக்கும் என்ன வித்தியாசம் அரக்கரே?
பதில்: ஆ.ராசா, லாலுவுக்கு ஆதரவாக அவர்களது வக்கீல்கள் வாதாடுவார்கள். பார்ப்பனத் தலைவர்களுக்கு ஆதரவாக நீதிபதியே வாதாடுவார். இதுதான் வித்தியாசம்.  - நெட்டிசன் கிளுமூக்கு அரக்ஸ்

சிறுநீரக மோசடி! கொல்கொத்தாவில் கைது.... ரானா ராஜ்குமார் ராவ் தெலுங்கான

கொல்கத்தா, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சிறுநீரக மோசடியில் ஈடுபட்ட திருரானா ராஜ்குமார் ராவை டெல்லி போலீசார் கொல்கத்தாவில் கைது செய்தனர். சிறுநீரக மோசடி இந்தியாவின் கிராமப்புறங்களில் வாழும் ஏழைகளிடம் இருந்து ஒரு சிறுநீரகத்தை தானமாக பெற்று பெரும் செல்வந்தவர்களுக்கு அதிக விலைக்கு விற்கும் சிறுநீரக மோசடி சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதற்காக நாட்டின் பல்வேறு நகரங்கள் மற்றும் பெருநகரங்களில் ‘நெட்வொர்க்’ அமைத்து ஒரு பெரும் கும்பல் செயல்பட்டு வருகிறது.

மதன் உயிரோடுதான் இருக்கிறார்... உபியில் தலைமறைவு? SRM பச்சமுத்துவின் பினாமி மதன்...

வாரணாசி: கங்கையில் மூழ்கப் போகிறேன் என்று கடிதம் எழுதி வைத்து விட்டுத் தலைமறைவான வேந்தர் மூவிஸ் மதன் உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது. அவர் உ.பி. மாநிலம் பபத்பூர் விமான நிலையத்திலிருந்து போலீஸ் பிடியில் சிக்காமல் தப்பியுள்ளார். 2 வாரங்களுக்கு முன் காணாமல் போன வேந்தர் மூவிஸ் மதன் உயிருடன் இருக்கிறாரா? இல்லை கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் தேடி வந்தனர். அவரைக் கொன்று எரித்து விட்டதாக கூட செய்திகள் வெளியாகின. மதன் விவகாரத்திற்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று எஸ்ஆர்எம் குழுமத்தின் நிறுவனர் பாரிவேந்தர் கூறியது இந்த விவகாரத்தை மேலும் விஸ்வரூபமெடுக்க வைத்தது. மதன் தாயார், மனைவிகளும் சரமாரியாக புகார்களைக் கூறி வந்தனர்

புதன், 8 ஜூன், 2016

டாக்டர் கிருஷ்ணசாமி: நான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும். ராஜேஷ் லக்கானியிடம் கோரிக்கை


' ஓட்டப்பிடாரம் தொகுதியில் முறைகேடு செய்துதான் அ.தி.மு.க வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்தார்கள். அதனை ரத்து செய்து,  நான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்' என தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியிடம் மனு கொடுத்திருக்கிறார் புதிய தமிழகம் நிறுவனர் டாக்டர்.கிருஷ்ணசாமி .சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் இணைந்து போட்டியிட்டார் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி.
தேர்தல் முடிவில்,  493 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் அ.தி.மு.க வேட்பாளர் சுந்தர்ராஜிடம் தோற்றுப் போனார். இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியை சந்தித்து புகார் மனு கொடுத்திருக்கிறார் கிருஷ்ணசாமி.

Non Stop கூரியர்.. சதுரங்க வேட்டையை மிஞ்சிய மோசடி... கோடிக்கணக்கில் சுர்ட்டிய சையத் அன்வர்

"இனிமே இதுதான்... இதுமட்டும்தான்... நான் ஸ்டாப் கூரியர்... நான் ஸ்டாப் கூரியர். வாடிப்பட்டியோ, வாடிகன் சிட்டியோ மிஸ்டுகால் கொடுத்தால் போதும்... கூரியர் இலக்கை சென்று சேரும். குறித்த நேரத்தில் சென்று சேரும். இது நம்ம கூரியர்...''’ பிரபல நடிகை தேவயானி இப்படி டி.வி. விளம்பரத்தில் வந்து "‘நீங்களும் பிராஞ்ச்சஸை தொடங்கி செயல்பட வேண் டுமா? உடனே தொடர்பு கொள்ளுங்கள்'’என்று நான்ஸ்டாப்பாக கூவி அழைத்தால், பிசினஸ் தொடங்கவேண்டும் என்ற ஆசையில் இருக்கும் நீங்கள் என்ன செய்வீர்கள்?
இந்தியா முழுக்க கிளை பரப்பிக்கொண் டிருக்கும் சென்னை வடபழனியை (7, சிவன் கோயில் தெரு) தலைமையிடமாகக் கொண்ட "நான்ஸ்டாப் கூரியர் அண்ட் கார்கோ'’ கம்பெனியின் ஏஜென்சியாக செயல்பட டோல்ஃப்ரீ நம்பருக்கு தொடர்புகொண்டவர் களுக்கு ஏற்பட்ட ஏமாற்றம், நக்கீரனுக்கும் காவல்துறைக்கும் புகார்களாய் குவிய... விசாரிக்கத் தொடங்கினால் "சதுரங்க வேட்டை'’ சினிமா வையே ஓவர்டேக் செய்கிறது இந்தக் கூரியர் நிறுவனத்தின் ஓனர் சையத் அன்வரின் சீட்டிங் வேட்டை.