சனி, 9 நவம்பர், 2013

நடராஜன் பணத்தில் நெடு வைகோ தேனிசை காசி தமிழருவி சிவப்புகள் கும்மாளம் ! ஜெயா பயத்தில் நடா திக் திக்

தமிழ்தேசிய புரவலர் நடராசன்ஜெயா எக்ஸ்பிரஸ்சில் இனி ஆர்.ஏ.சி கூட கிடைக்காது என்பது தெரிந்து போனதால் வைகோ  அதிகம் விமர்சனம் செய்தது ஜெயலலிதாவைத்தான். கிட்டத்தட்ட ஜெயாவை சர்வாதிகாரிக்கு  ஒப்பிட்டு நடராஜன் கண்களுக்கு மரண பயத்தைக் காட்டினார் வைகோ. அந்த ஒளி வெள்ளத்திலும் நடராசனின் முகம் இருண்டு கிடந்தது.
ங்களுக்கு தஞ்சாவூர் என்றால் பெரிய கோயில் நினைவுக்கு வருவதைப் போல, தஞ்சை மக்களுக்கு விளார் என்றால் நினைவுக்கு வருவது நடராஜன்தான். அவரது சொந்த ஊர் என்பதைத் தவிர விளாருக்கு வேறு வரலாறும் கிடையாது. அந்த விளார் சாலைக்கு ஒரு அடையாளம் தரவும் நடராஜனுக்கு ஒரு நிரந்தர பட்டத்துக்கு ஏற்பாட்டை செய்யவும் நடந்த ஏற்பாட்டுக்கான ஒரு விழா நேற்று 8.11.2013 அன்று நடந்திருக்கிறது.
ஒருவேளை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ராஜராஜன் என்றொருவன் பிறக்காதிருந்தால் இன்றைக்கு தஞ்சையின் அடையாளமாக சசிகலாவும் நடராஜனும்தான் இருந்திருப்பார்கள். ராஜராஜன் கொஞ்சம் முந்திக்கொண்டு பிறந்து ஒரு பெரிய கோயிலையும் கட்டித் தொலைத்ததால் தமிழ்தேசிய புரவலர் நடராஜனுக்கு ஒரு கட்டிடம் கட்டி தன் பெயரை நிலை நாட்டியாக வேண்டிய அவசியம் உருவாகிறது. மற்றபடி அவர் தஞ்சைக்கு செய்ய வேண்டிய பணிகளை செவ்வனே ஆற்றிக்கொண்டுதான் இருக்கிறார். தஞ்சையின் ரியல் எஸ்டேட் விலையை சகட்டு மேனிக்கு ஏற்றியது முதல் மார்க்கெட் போன நடிகைகளை தஞ்சாவூருக்கு பொங்கல் சமயத்தில் அழைத்து வருவது வரை நடராஜன் செய்த பணிகளை ராஜராஜனே வந்தாலும் செய்ய முடியாது.
தமிழ்தேசிய புரவலர் நடராசன்
அந்த நடராஜன் நடத்தும் விழாவை ஒரு தஞ்சாவூர்காரனான நான் புறந்தள்ளுவது பெரும் வரலாற்றுப் பிழையாகி விடுமாகையால் எப்பாடுபட்டாவது சென்று விடுவது என தீர்மானித்தேன்.

BJP: ஜே.பி.சி. அளித்த 2ஜி விசாரணை அறிக்கையை நிராகரிக்க வேண்டும்:


ஜே.பி.சி. அளித்த 2ஜி விசாரணை அறிக்கையை நிராகரிக்க வேண்டும்: சபாநாயகருக்கு பா.ஜனதா கடிதம் 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் (ஜே.பி.சி.) அறிக்கையை சபாநாயகர் மீரா குமார் நிராகரிக்க வேண்டும் என்று பா.ஜனதா வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா, சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், 2ஜி ஊழல் தொடர்பாக ஜே.பி.சி. இறுதி அறிக்கையில் விதிமுறைகள் கடுமையாக மீறப்பட்டிருப்பதாகவும், தாங்கள் அனுப்பிய அதிருப்தி குறிப்பு நீக்கப்பட்டிருப்பதால் அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்றும் குறிப்பட்டுள்ளார். நாங்கள் அனுப்பிய அதிருப்தி குறிப்பில் பாராளுமன்ற விதிகளுக்கு மாறாக, பொருத்தமற்ற கருத்துக்கள் எதுவும் தங்கள் இடம்பெறவில்லை. அப்படியிருக்கும்போது, கருத்துக்களை நீக்க தலைவருக்கு உரிமை இல்லை. இப்பிரச்சினையில் சபாநாயகர் கவனம் செலுத்தி, நீக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் சின்கா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எம்.பி. வீட்டில் இறந்த பெண்ணின் உடல் கேட்பாரின்றி பிணவறையில் காத்திருக்கும் அவலம்


எம்.பி. வீட்டில் இறந்த பெண்ணின் உடல் கேட்பாரின்றி பிணவறையில் காத்திருக்கும் அவலம்உ.பி. மாநிலம் ஜான்பூர் தொகுதியின் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. தனஞ்செய் சிங்கின் டெல்லி வீட்டில் வேலை பார்த்த ராக்கி என்ற பெண் கடந்த திங்கட்கிழமை மாலை மர்மமான முறையில் மரணமடைந்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராக்கியின் உடலில் காயங்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். மேலும் மீனா என்ற பெண்ணும் தாக்குதலுக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர்கள் இருவரும் கம்பி மற்றும் குச்சியால் அடிக்கப்பட்டுள்ளனர் என்று பின்னர் நடந்த பல்வேறு விசாரணையில் தெரியவந்தது. இதனடிப்படையில் கைது செய்யப்பட்ட எம்.பி. தனஞ்செய் சிங் மற்றும் அவரது மனைவி டாக்டர் ஜக்ரிதி சிங்கிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சாட்சிகளின் விசாரணை அடிப்படையில்,  ஜக்ரிதி சிங் மரணம் விளைவிக்கும் விதத்தில் அடித்ததால், ராக்கி மரணமடைந்து இருக்கிறார் என்று பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகிறது.

ப்பா... யார்ரா அது பேய் மாதிரி’ காயத்ரியிடம் கலாய்ப்பு

சென்னை:‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் நடித்திருப்பவர் காயத்ரி. தற்போது பல்வேறு தமிழ் படங்களில் நடித்து வருகிறார். நடுவுல கொஞ்சம்... படத்தில் அவர் திருமணத்துக்காக ஓவர் மேக்கப்போட்டு வந்து மேடையில் நிற்கும்போது அருகில் நிற்கும் விஜய்சேதுபதி அவரைப் பார்த்து ப்பா யார்ரா அது பேய் மாதிரி இருக்கு என்று அதிர்ச்சி அடைந்து வசனம் சொல்வார். அடிக்கடி இந்த வசனத்தை > சொன்னதால் பிரபலம் ஆனது. அதுவே இப்போது காயத்ரிக்கு தலைவலியாகிவிட்டது. புதிய படங்களின் விழாக்கள் அல்லது ஷாப்பிங் செல்லும்போது அவரை பார்க்கும் ரசிகர்கள் ‘ப்பா...‘ என்று சொல்லி கிண்டல் செய்கின்றனர். சில சமயம் அதை காதில் கேட்டும் கேட்காததுபோல் சென்றுவிடுவார். சில சமயம் லேசாக புன்னகை புரிந்துவிட்டுகோபத்தை அடக்கிக்கொண்டு சென்றுவிடுகிறார்.>பொது இடங்களில் ‘ப்பா‘ என்று ரசிகர்கள் கிண்டல் செய்யும்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும் என்றதற்கு காயத்ரி பதில் அளித்தார். ‘ரசிகர்கள் மனதில் இடம்பிடிப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. பல இடங்களில் என்னைப்பார்த்து ப்பா என்று சொல்வதால் எனக்கு கோபம் வருவதில்லை. என்னை அடையாளம் காட்டும் வசனமாகவே அதை எடுத்துக்கொள்கிறேன்‘ என்று நமட்டு சிரிப்புடன் சொல்லி விட்டு நகர்ந்தார். tamilmurasu.org

அஞ்சலிக்கு பிடியாணை ! களஞ்சியத்தின் படத்திற்கு கால்ஷீட் கொடுக்கவில்லையாம் ?

வலியுடன் ஒரு காதல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் களஞ்சியமும் கலந்து கொண்டார். விழாவில் தனது ஊர்சுற்றி புராணம் படத்தைப் பற்றியும் குறிப்பிட்டார்.இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதுதான் நடிகை அஞ்சலி பாதியில் ஓடினார். இன்றுவரை அவர் படப்பிடிப்புக்கு திரும்பவில்லை. அதன் காரணமாக படமும் பாதியில் நிற்கிறது. போட்ட காசுக்கு வட்டி கட்டிக் கொண்டிருக்கிறார் களஞ்சியம். இயக்குனர்கள் சங்கம், தயா‌ரிப்பாளர்கள் சங்கம், பெப்சி என்று எத்தனையோ சங்கங்கள் இருந்தும் அஞ்சலியை களஞ்சியத்தின் படத்தில் நடிக்க வைக்க எந்தச் சங்கமும் முயற்சி எடுக்கவில்லை. களஞ்சியம் அளித்த புகார்களை அவர்கள் கண்டு கொண்டதாகவே தெ‌ரியவில்லை. பிரச்சனைகளை தீர்க்கத்தானே இந்த சங்கங்கள்? இவர்கள் இப்படி நடந்து கொண்டால் சிறு முதலீட்டு தயா‌ரிப்பாளர்கள் எப்படி நம்பிக்கையுடன் படம் தயா‌ரிக்க முடியும் என கேள்வி எழுப்பினார் களஞ்சியம்.நியாயமான கேள்வி. தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை என்று பெயரளவில் தென்னிந்தியாவை தாங்கிப் பிடிக்கும் சங்கங்கள் இதற்கு என்ன பதில் தரப்போகின்றன? இனியாவது தமிழ்நாடு திரைப்பட வர்த்தக சபை, தமிழ்நாடு நடிகர் சங்கம் என பெயர் வைக்கும் சொரணை இவர்களுக்கு வருமா?

ஆ.ராசா: என் தரப்பு வாதங்களை சேர்த்துக் கொண்டால் மட்டுமே அறிக்கையை ஏற்கவேண்டும்

நவ. 7-2ஜி ஸ்பெக்ட்ரம் விவகா ரம் தொடர்பாக விசா ரணை நடத்திய பி.சி.
சாக்கோ தலைமையி லான நாடாளுமன்ற கூட்டுக்குழு(ஜேபிசி), சமீபத்தில் தனது விசா ரணை அறிக்கையை மக்களவைத் தலைவர் மீரா குமாரிடம் ஒப் படைத்தது. வரைவு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் அனுப்பிய கடிதங்களும் இறுதி அறிக்கையில் இணைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், நாடா ளுமன்ற கூட்டுக்குழு அளித்த அறிக்கையை மக்களவைத் தலைவர் ஏற்கக் கூடாது என்று முன்னாள் தொலைத் தொடர்பு துறை அமைச் சர் ஆ.ராசா கடிதம் எழுதியுள்ளார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான ஜேபிசி விசாரணைக்கு ஆஜராக என்னை அனு மதிக்கவில்லை. மேலும் நான் அனுப்பிய எழுத் துப்பூர்வ அறிக்கையை யும் ஜேபிசி கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. இது நாடாளுமன்றத் திற்கு அநீதியை சேர்த் துள்ளது. எனவே, இந்த அறிக்கையை நிராகரிப் பதுடன், ஜேபிசி தலை வர் பி.சி.சாக்கோவுக்கே திருப்பி அனுப்ப வேண்டும். என் தரப்பு வாதங்களை சேர்த்துக் கொண்டால் மட்டுமே அறிக்கையை தாங்கள் ஏற்கவேண்டும் என்று ராசா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

கம்போடியாவில் இருந்து 32,000 டன் மணல் இறக்குமதி: தனியார் நிறுவன முயற்சி

சென்னை: கட்டுமான பணிகளுக்கு தேவையான, ஆற்று மணல் கிடைப்பதில், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம், கம்போடியாவில் இருந்து, 32 ஆயிரம் டன் மணலை இறக்குமதி செய்து, புதிய வாய்ப்பை உறுதி செய்துள்ளது.சுற்றுச்சூழல் பாதிப்பு, விதிமீறல், பசுமை தீர்ப்பாய தடை, "யார்டு' ஒப்பந்ததாரர்கள் முறைகேடு போன்ற காரணங்களால், தமிழகத்தில் செயல்பட்டு வந்த, 40க்கும் மேற்பட்ட மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், கட்டுமான பணிக்கு தேவையான மணல் கிடைப்பதில், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில், லாரிகளுக்கு ஒரு லோடு மணல் கிடைக்க இரண்டு நாள்கள் வரை ஆகிறது. அதனால், ஒரு கன அடி மணல், 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி, 8 நவம்பர், 2013

கனிமொழி...2G ஸ்பெக்ட்ரம் ! கனிமொழிமீது ஏன் இந்த வன்மம் ? உண்மையில் அது பெரியாருக்கு எதிரான காய்ச்சல் !


கனிமொழியின் இந்த பேச்சை கேட்கும் பொழுது மிகவும் தெளிவாக விளங்குகிறது, தமிழ்நாட்டில் தந்தை பெரியாரின் உண்மையான ஒரு பெண் வாரிசாக கனிமொழி வளர்வதை விரும்பாத மனுசாஸ்திர கும்பலின் சதி தான் கனிமொழி மீதான ஸ்பெக்ட்ரம் குற்றச்சாட்டு .

நடிகர் சிட்டிபாபு சிகிச்சை பலனின்றி காலமானார்


நடிகர் சிட்டி பாபு சிகிச்சை பலனின்றி  மருத்துவ
மனையில் காலமானார் .சர்க்கரை நோய் பாதிப்பு அதிகமானதால், மூளைக்குச் செல்லும் நரம்பில் ரத்தம் உறைந்து, அடைப்பு ஏற்பட்டதால் கோமா நிலையை அடைந்து வென்டிலேட்டர் உதவியுடன்  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்த சிகிச்சை பலனின்றி இறந்தார்.நடிகர் சிட்டிபாபு ( வயது49). திருமணமாகி, ஜரினா என்ற மனைவியும், இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். பல ஆண்டுகளாக, நீரிழிவு நோய் பாதிப்பு இருந்ததால், அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.மூன்று நாட்களுக்கு முன், வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். சென்னை, முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மூளையில் அடைப்பு ஏற்பட்டு, ஆபத்தான நிலையில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து,  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐ.சி.யூ., பிரிவில், டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். உடல் நிலையில், முன்னேற்றம் ஏற்படவில்லை; தொடர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று (8.11.2013) சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.nakkheeran.in

17 ஆண்டுகளின் பின் பிள்ளைகளுடன் இணைகிறார் ஒரு ஈழத்தாய் ! விதியின் விளையாட்டில் சிக்கி கொண்ட தாயின் கதை!

1990-ம் ஆண்டு  இலங்கையில்  போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நேரம், உயிரைப்பிடித்தபடி குழந்தைகளுடன் பொதுமக்கள் திக்கு தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தனர். அந்த மக்களோடு மக்களாக, வவுனியா, மாரம்பக்குளம் பகுதியில் செல்வராணி என்ற இளம்பெண் தனது கணவர் பிரான்சிஸ் சேவியர், மகள் திரானி, 1 ½ வயது மகன் தினேசுடன் தவித்துக் கொண்டிருந்தார்.
தினமும் செத்து.. செத்து.. எத்தனை நாள்தான் வாழ்வது என்று முடிவுக்கு வந்த செல்வராணி, இனி உயிர் வாழ வேண்டும் என்றால், அண்டை நாடான இந்தியாவில் தஞ்சம் அடைவோம் என்ற எண்ணத்தில் படகில் ஏறி குடும்பத்துடன் இந்தியா வந்தார்.
இந்தியா வந்த அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள சேவலூர் முகாமில் அடைக்கப்பட்டனர். கொழும்பில் வங்கி மேலாளராக வசதியாக இருந்த பிரான்சிஸ்க்கு சேவலூர் முகாமில் குழந்தைக்கு பால் டப்பா வாங்க கூட காசு இல்லாமல் தவித்தார்.

தாது மணல் கொள்ளை வைகுண்டராஜனை ஏன் இதுவரை கைதுசெய்யவில்லை?

இந்து முன்னணியும் தென்னிந்திய திருச்சபையும் ஓரணியில் இணைந்து வைகுண்டராஜனை ஆதரித்து மனு கொடுக்கிறார்கள். சீமான், வைகுண்டராஜன் வீட்டுத் திருமணத்துக்குச் சென்று கலந்து கொள்ளும் அளவுக்கு நெருக்கமாக இருக்கிறார். ஆக, அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் இந்தச் சுரண்டலுக்கு ஆதரவாகவே இருக்கின்றனர்”தென் மாவட்டங்களில் நடக்கும் தாது மணல்கொள்ளை குறித்து ஆனந்த விகடன் 13-11-2013 தேதியிட்ட இதழில் வெளியான மனித உரிமைப் பாதுகாப்புக் கழக வழக்கறிஞர்  வாஞ்சிநாதனின் பேட்டி :
தாது மணல் கொள்ளைக்கு எதிராக மக்களின் போராட்டங்களும் எதிர்ப்புக் குரல்களும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தென் தமிழகக் கடலோரத்தில் கேட்கின்றன. தாது மணல் நிறுவனங்களைப் பற்றி பேசினால் உயிர் இருக்காது என்ற அச்சத்தில் உறைந்திருந்த மக்கள், வாய் திறந்து பேசத் தொடங்கியுள்ளனர். ககன்தீப் சிங் பேடி தலைமையிலான ஆய்வுக் குழுவினரை தங்கள் ஊருக்கும் ஆய்வுக்கு வரச்சொல்லி மக்கள் மனு கொடுத்த காட்சி, புத்தம் புதியது.

அணுக்குண்டு ஆயுத சந்தைக்கு வந்து விட்டதா ? சவுதி பணம் கொடுத்த அணுகுண்டு பாகிஸ்தானில் ரெடி! BBC Newsnight

சவுதி அரேபியாவுக்காக அணு ஆயுதம் ஒன்றை பாகிஸ்தான் தயாரித்து விட்டது. தற்போது அணு ஆயுதம், சவுதிக்கு அனுப்ப தயார் நிலையில் உள்ளது” BBC Newsnight-ல் வெளியான இந்த செய்திதான் இன்றைய ஹாட் டாபிக்.
இந்த அதிரடிச் செய்தியை வெளியிட்ட பிரிட்டனின் BBC Newsnight, தமக்கு பல தரப்புகளில் இருந்து இந்த தகவல் கிடைத்ததாக குறிப்பிட்டுள்ளது. தகவலின் மூலத்தை அவர்கள் குறிப்பிடவில்லை என்றபோதிலும், பி.பி.சி.யின் நம்பகத்தன்மை காரணமாக இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியா கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தானின் அணு ஆயுத திட்டங்களுக்கு நிதியுதவி அளித்துவருகிறது. அத்துடன் சவுதி, கடந்த 20 ஆண்டுகளாகவே தமது ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை வாங்கி குவிக்கும் நடவடிக்கையையும் மேற்கொண்டு வந்துள்ளது.
1999-ம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சவுதி அரேபிய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சர் இளவரசர் சுல்தான்பின் அப்துல்லாஸிஸ் அல் சவுத், பாகிஸ்தானின் அணு ஆயுத தி்ட்டத்தில் மிகவும் ஆர்வம் கொண்டவராக இருந்தார்.

சிபிஐ சட்டவிரோத அமைப்பு, வழக்குகளை விசாரிக்க முடியாது - குவஹாத்தி உயர்நீதிமன்றம்

குவஹாத்தி: சிபிஐ ஒரு அரசியல் சட்டவிரோதமான அமைப்பு. எனவே அது குற்ற வழக்குகளை விசாரிக்க முடியாது என்று குவஹாத்தி உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவை அளித்துள்ளது.
இந்த உத்தரவால் மத்திய அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையிட அது முடிவு செய்துள்ளது.
அரசியல் சட்டத்தின் கீழ் சிபிஐ அமைப்பு செயல்படவில்லை. எனவே அது குற்ற வழக்குகளை விசாரிக்க முடியாது என்பது குவஹாத்தி உயர்நீதிமன்றத்தின் கருத்தாகும்.
ஏற்கனவே சிபிஐக்கு போதிய சுதந்திரம் இல்லை. மத்திய அரசு அதைக் கட்டுப்படுத்துகிறது என்று சர்ச்சை உள்ளது. உச்சநீதிமன்றமும் இதுதொடர்பாக மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளது. இந்த நிலையில் சிபிஐ அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று குவஹாத்தி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி: கல்லூரி மாணவி முகத்தில் ஆசிட் வீச்சு...

A 35-year-old man and his two associates were arrested for allegedly kidnapping a 19-year-old polytechnic student from Pollachi and trying to force her into a marriage against her wishes, here on Wednesday. Police said that D Selvam (35), a resident of Valparai, used to accompany his friend during the latter’s visit to a private polytechnic college hostel on Palladam road to meet his sister. Selvam reportedly fell in love with one Jansi (name changed), an inmate of the hostel. Despite Selvam’s efforts, Jansi used to shun his advances.
திண்டுக்கல்: பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் நீலமலை கோட்டை கிணத்துப்பட்டியை சேர்ந்தவர் சுபா (20). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் பொள்ளாச்சி அடுத்த புளியம்பட்டியில் தனியார் பாலிக்டெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கிறார். பாலக்காடு ரோட்டில் உள்ள ஒரு விடுதியில் தங்கி உள்ளார்.கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் வால்பாறையை சேர்ந்த தோழி வீட்டுக்கு சுபா அடிக்கடி செல்வார். அப்போது தோழியின் அப்பாவின் நண்பரும் மர வியாபாரியுமான செல்வம் (38) என்பவருடன் சுபாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. செல்வம் அடிக்கடி சுபாவுக்கு போன் செய்து பேசுவது வழக்கம். கடந்த சில வாரங்களுக்கு முன்பு சுபாவிடம் செல்போனில் பேசிய செல்வம், உன்னை காதலிக்கிறேன். திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சுபா, ‘உங்களை அப்பா மாதிரி நினைத்துதான் பழகினேன். காதலிக்கவில்லை என கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

டின்னர் செட் மட்டும் ரூ.1.5 கோடி... ம.பி. பாஜக தல

போபால்: மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜனதா தலைவர் யசோதரா ராஜே சிந்தியா தன்னிடம் ரூ.1.5 கோடி மதிப்பிலான டின்னர் செட் இருப்பதாக தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் வரும் 25-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. குவாலியரின் முன்னாள் அரச குடும்பத்தைச் சேர்ந்த சிந்தியா தற்போது எம்.பி.யாக உள்ளார். ஆனால் இப்போது சிவபுரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்துள்ள யசோதரா ராஜே சிந்தியா, வேட்பு மனுவுடன் தனது சொத்து விவரங்களையும் தாக்கல் செய்திருந்தார். அதில் இந்த விலை உயர்ந்த டின்னர் செட் தன்னிடம் இருப்பதை குறிப்பிட்டுள்ளார்.
tamil.oneindia.in

விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற 7 மாணவிகள் ! மதுரை

மதுரை ஆசிரியர்கள் கண்டித்ததால் மனம் உடைந்த பள்ளி மாணவிகள் 7 பேர் விஷம் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றனர்.
மதுரை–அழகர்கோவில் சாலையில் உள்ளது, பொய்கைகரைப்பட்டி. இங்கு, மதுரை கிழக்கு ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது.
இந்தப் பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த வினிசிகா, செல்வி, ஜெயந்தி, ஜெகதீஸ்வரி, ஒய்யம்மாள், சிவனேஸ்வரி, ஆழிப்பொண்ணு ஆகியோர் 7–ம் வகுப்பு படித்து வருகிறார்கள். இவர்கள் 7 பேரும் தோழிகள்.
 இவர்கள் சரியாக படிப்பது இல்லை என ஆசிரியர்கள் அடிக்கடி கண்டித்து வந்தனர். நேற்றும் இதேபோல மாணவிகளை அவர்கள் கண்டித்தனர்.

BSP MP இன் மனைவி தீயால் சுட்டார்; நாய் போல் நடத்தினார் ! பெண் மரணம் !

புதுடில்லி: மாயாவதியின் தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி., ஒருவரின் மனைவி வேலைக்கார பெண்களை தீயினால் சுட்டும், மிருகத்தை விட கேவலமாகவும் நடத்திய கொடுமை தற்போது வெளியே தெரிய வந்துள்ளது. உத்திரபிரதேச மாநிலம் ஜூவான்பூர் தொகுதியை சேர்ந்தவர் தனஞ்செயின். இவர் பகுஜன்சமாஜ் கட்சி எம் .பி., ஆவார். இவரது மனைவி ஜாக்ரிதிசிங். இவரது வீட்டில் ஒரு பெண் காயமுற்ற நிலையில் பிணமாக கிடந்தார். இது தொடர்பான விசாரணையில் இவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இவரது வீட்டில் வேலை பார்த்த மீனாசர்தார் என்ற பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளார். இவர் தற்போது ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். கொத்தடிமை நடந்து கொண்டிருக்கிறது ...இன்னும் தெரியாமல் எங்கெங்கு இருக்கிறதோ இதை அவாள் செய்திருந்தால் சும்மா அலறியிருக்கும். இது ஒரு நவீன தீண்டாமை, நவீன தலித் கொடுமை. எங்கே போயி முட்டி கொள்வது. யாரும் வாயை திறக்க மாட்டார்கள்  

மோனோ ரயில் திட்டம் என்னவாச்சு ? மெட்ரோ ரயில் திட்டத்திற்கு யார் காரணகர்த்தா?

சென்னை: 'மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, தாங்கள் காரணகர்த்தா என்பதை போல, பெருமை தேடிக்கொள்ள முயற்சிக்கின்றனர்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:சென்னையில், மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்துள்ளார். அங்கே அவர் பேசவில்லை என்றாலும், அந்த திட்டத்தை பற்றிய குறிப்பு, அரசினால் தரப்பட்டுள்ளது. அதில் அந்த திட்டத்தை பற்றிய குறிப்புகள் விவரிக்கப்பட்ட போதிலும், கவனமாக, அது எந்த ஆட்சிக்காலத்தில் துவங்கப்பட்டது என்பதை மறைத்து விட்டனர். அந்த திட்டம் தி.மு.க., ஆட்சியில, நான் முதல்வராக இருந்த போது துவக்கப்பட்ட திட்டம். "மெட்ரோ ரயில் திட்டத்தை ஏற்கக் கூடாது' என, முதல்வர் ஜெயலலிதாவின் காழ்ப்புணர்ச்சி காரணமாக, அறிவிக்கப்பட்ட போட்டித் திட்டம், மோனோ ரயில் திட்டம். இரண்டரை ஆண்டு காலமாக, இன்னமும் அந்த திட்டம் ஒப்பந்த புள்ளிகளை பரிசீலிக்கும் நிலையில் தான் உள்ளது.

விஜயகாந்த் ஏற்காட்டை விட்டு டெல்லி சட்டசபை தேர்தலில் கவனம் ! அப்படியே அவரது வடநாட்டு ஹீரோயின்களையும் பாத்துட்டு வரலாம்லே ?

தமிழக அரசியல் வட்டாரத்தில், எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஏற்காடு இடைத்தேர்தலில், தே.மு.தி.க., போட்டியிடுவதற்கான வாய்ப்பு குறைந்து வருகிறது. என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருந்த விஜயகாந்த், முடிவெடுப்பதற்கு முன், தன் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் சிலரை, ஏற்காடு தொகுதிக்கு அனுப்பி வைத்தார். அவர்கள், அங்கு சென்று, நிலைமையை ஆராய்ந்து, விஜயகாந்த்துக்கு தெரிவித்து உள்ளனர்."ஏற்காட்டில் ஆளும் கட்சி சார்பில், அமைச்சர்கள் உள்ளிட்ட, 62 பேர் அடங்கிய பெரும் படை, களம் இறங்கியுள்ளது. தி.மு.க., சார்பிலும், அதற்கு சமமாக, நிர்வாகிகள் வந்து குவிந்துள்ளனர். தேர்தல் பணிகளை, இரு கட்சிகளும் மிக சுறுசுறுப்பாக செய்து கொண்டிருக்கின்றன. அதிகார பலம், பண பலம், ஆள் பலம் ஆகியவற்றை, தே.மு.தி.க.,வால் எதிர்கொள்ள முடியாது.

கனிமொழிக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை ! சிபிஐ அதிகாரி ! சார் அவர் ஒரு சூத்திரர் என்ற ஆதாரம்தான் உள்ளதே ?

2ஜி அலைக்கற்றை வழக்கின் விசாரணை அதிகாரியும் சிபிஐ துணை கண்காணிப்பாளருமான எஸ்.கே. சின்ஹா தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் வியாழக்கிழமை அளித்த வாக்குமூலம், திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழிக்கு சாதகமாக அமைந்தது.
இந்த வழக்கு விசாரணையை முன்னிட்டு, குற்றம்சாட்டப்பட்டுள்ள கரீம் மொரானி நீங்கலாக மற்ற அனைவரும் தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் வியாழக்கிழமை ஆஜராயினர்.
ராம் ஜேத்மலானி குறுக்கு விசாரணை
இதையடுத்து, வழக்கின் விசாரணை அதிகாரியான சிபிஐ துணை கண்காணிப்பாளர் எஸ்.கே. சின்ஹாவிடம் கனிமொழி சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ராம் ஜேத்மலானி உள்ளிட்டோர் குறுக்கு விசாரணை நடத்தினர்.
அதற்கு எஸ்.கே. சின்ஹா அளித்த பதில்: "இந்த வழக்கின் தலைமை விசாரணை அதிகாரியான விவேக் பிரியதர்ஷியுடன் சேர்ந்து நான் ஒருதலைபட்சமாக குற்றப்பத்திரிகை தயாரித்ததாகக் கூறுவது தவறு.
கலைஞர் டிவிக்கு குசேகான் ஃபுரூட்ஸ் உள்ளிட்ட சில தனியார் நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட நிதி, அவற்றின் பரிவர்த்தனைகள் மீது எனக்கு சந்தேகம் எழுந்தது. அவை தொடர்பாக நான் விசாரணை நடத்தினேன். கலைஞர் டிவி நிர்வாகிகள் ஜி. ராஜேந்திரன், அமிர்தம் ஆகியோரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்தேன். அதான் திமுக ஆட்சி ஒரு திராவிடர் ஆட்சி என்ற வலுவான நோக்கம்  இருக்கிறதே ?

ஆடிட்டர் ரமேஷை பின் தொடர்ந்து கொன்றது எப்படி?

சேலத்தில், ஆடிட்டர் ரமேஷை, பின் தொடர்ந்து சென்று, கொலை செய்தது எப்படி' என, போலீஸ் அதிகாரிகளிடம், பயங்கரவாதி பிலால் மாலிக் விவரித்தான்.தமிழகத்தில், இந்து அமபை்பு தலைவர்கள் கொலையில் தொடர்புடையதாக கைதான, 'போலீஸ்' பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோரிடம், சேலம், சூரமங்கலம், அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், சிறப்பு புலனாய்வு பிரிவான, எஸ்.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விசாரணையின் எட்டாவது நாளான நேற்று, எஸ்.ஐ.டி., போலீசார், அதிகாலை, 4:45 மணிக்கு, பிலால் மாலிக்கை, சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

கந்து வட்டியால் குடும்பமே தற்கொலை ! சேலத்தில் நான்கு உயிர்கள் பலி !

சேலத்தின் நடந்த அவலம்: கந்­து­வட்டிக் காரர்­களின் மிரட்­டலால் காவு­கொள்­ளப்­பட்ட நான்கு உயிர்கள்

கந்­து­வட்டிக் கொடு­மை­யினால்  ஒரு குடும்­பமே   தற்­கொலை செய்­து­கொண்ட சம்­பவம் ஒன்று    இந்­தி­யாவின்   சேலத்தில் இடம்­பெற்­றுள்­ளது. வாழ்க்கைச் செலவு அதி­க­ரித்துச் செல்லும் வேகத்தில் கந்­து­வட்­டிக்கு பணம் கொடுப்பவர்க­ளதும் பணம் வாங்­கு­ப­வர்­க­ளி­னதும் எண்­ணிக்­கையும் அதி­க­ரித்துச் செல்­கின்­றது. இந்­தி­யாவைப் பொறுத்­த­வரை அதி­க­மான பணக்­கா­ரர்­களும் அதி­க­மான ஏழை­களும் அங்­குதான் நிறைந்­துள்­ளார்கள்.
இந்தக் கந்து வட்­டியின் விளைவு இப்­போது சிறிது சிறி­தாக புலப்­பட ஆரம்­பித்­துள்­ளது. அதன் உச்­சக்­கட்­ட­மாக அண்­மையில் ஓர் இளம் குடும்­பமே காவு கொள்­ளப்­பட்­டுள்­ளது.

அரசு பங்களாக்களை இடித்து மாளிகை கட்டினார் மாயாவதி !

புதுடில்லி : உ.பி., முன்னாள் முதல்வரும், மத்தியில் ஆளும், காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு இடர்பாடு வரும் நேரமெல்லாம் காப்பாற்றும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான, மாயாவதிக்கு, சட்ட விதிகளை மீறி, டில்லி, வி.வி.ஐ.பி., பகுதியில், மூன்று பெரிய பங்களாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.நாட்டின் அதிக பாதுகாப்பு மிக்க பகுதியான, டில்லியின், லுட்யன்ஸ் பங்களா பகுதியில், மாயாவதிக்கு ஏற்கனவே, குருத்வாரா ரகாப்கஞ்ச் சாலையில், 4ம் எண் பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது. வி.வி.ஐ.பி., அந்தஸ்தில் உள்ள அந்த பங்களாவிற்கு, பாதுகாவலர்கள், வேலையாட்கள், தோட்டத்தொழிலாளர்கள் என, 15க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.இந்நிலையில், 4ம் எண் பங்களாவை விட, சற்று பெரிய அளவிலான பங்களாக்கள், 12, 14 மற்றும் 16, மாயாவதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

வியாழன், 7 நவம்பர், 2013

மாயாவதியின் தம்பி மிகவும் கஷ்டப்பட்டு சேமித்த 400 கோடியை வருமான வரி துறையினர் திருப்பி கொடுத்தனர்,


புதுடெல்லி: உ.பி.முன்னாள் முதல்வர் மாயாவதியின் சகோதரரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 400 கோடியை வருமானவரித்துறையினர் திருப்பி கொடுத்துள்ளனர். இந்தப் பணம் தொடர்பாக மாயாவதி சகோதரர் அளித்த விளக்கத்தை, வருமானவரித்துறை ஏற்றுக் கொண்டுள்ளது.உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை கடந்த ஆண்டு சி.பி.ஐ வாபஸ் பெற்றது. மத்தியில் உள்ள ஐ.மு.கூட்டணி அரசுக்கு வெளியில் இருந்து மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு அளித்து வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் தி.மு.க ஆகிய கட்சிகள் ஐ.மு.கூட்டணியிலிருந்து விலகியதை தொடர்ந்து பகுஜன் கட்சியின் ஆதரவு அதிக முக்கியத்துவம் பெற்றது. இதற்கு பிரதிபலனாக சொத்து குவிப்பு வழக்கு வாபஸ் பெறப்பட்டதாக பா.ஜ உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின.

ஆசிரியை திட்டியதால் 7 மாணவிகள் தற்கொலை முயற்சி

தலைமை ஆசிரியை திட்டியதால் 7 மாணவிகள் தற்கொலை முயற்சி
மதுரை அருகே உள்ள கள்ளந்திரியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 7–ம் வகுப்பு படிப்பவர்கள் செல்வி (வயது 12), மெய்யம்மாள் (12), ஜெயந்தி (12), வினிதா (12), ஜெகதீஷ்வரி (12), சிவனேஸ்வரி (12), ஆழி (12). இவர்கள் இன்று காலை பள்ளிக்கு வந்த போது தலைமை ஆசிரியை ஏதோ ஒரு காரணத்திற்காக திட்டியதாக கூறப்படுகிறது.இதனால் மன வேதனை அடைந்த அவர்கள், சிறிது நேரம் பள்ளி வளாகத்திற்குள்ளேயே நின்றுள்ளனர். இந்த நிலையில் 7 மாணவிகளும் திடீரென மயங்கி விழ, பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக ஆம்புலன் சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மாணவிகளை பரிசோதித்தபோது விஷம் சாப்பிட்டது தெரிய வந்தது. வாழைப்பழத்தில், பேன் மருந்து கலந்து 7 மாணவிகளும் சாப்பிட்டதாக கூறப்படுகிறது.>இதனை தொடர்ந்து அந்த மாணவிகள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளி வளாகத்திலேயே 7 மாணவிகள் விஷம் சாப்பிட்டு மயங்கி விழுந்த சம்பவம் மதுரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. nakkheeran.in

மாலி நாட்டில் பிரான்சு நிருபர்கள் 2 பேர் கடத்தி கொலை: அல்கொய்தா தீவிரவாதிகள் அட்டூழியம்


Family mourns: A coffin bearing the body of one of the two French radio journalists killed in Mali.

Family mourns: A coffin bearing the body of one of the two French radio journalists killed in Mali is carried upon arrival at Roissy Charles de Gaulle Airport. Photo: AP
ஆப்பிரிக்காவில் உள்ள மாலி நாட்டில் அரசுக்கு எதிராக அல்கொய்தா
இயக்கத்தின் ஆதரவுடன் தீவிரவாதிகள் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மாலி அரசுக்கு உதவுவதற்காக பிரான்சு நாட்டு படைகளும் அங்குள்ளன.
இந்த நிலையில் பிரான்சு நாட்டு செய்தி நிறுவனம் ஒன்றின் பெண் நிருபர் கிறிஸ்டினா (வயது 57), கிலவுட் வேரியான் (56) ஆகியோர் மாலி நாட்டில் செய்தி சேகரிக்க சென்றனர். அவர்கள் ஜிதால் என்ற இடத்தில் உள்ளூர் தலைவர் ஒருவரை பேட்டி எடுப்பதற்காக சென்றனர்.
அப்போது இரு நிருபர்களையும் அல்கொய்தா தீவிரவாதிகள் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர். அவர்கள் இருவரையும் சுட்டு கொன்றுவிட்டதாக அல்கொய்தா இயக்கம அறிவித்துள்ளது

பள்ளி மாணவனை அடித்த போலீஸ் எஸ்.பி,யின் மனைவி !

சேலம் பழைய சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (30). இவரது மனைவி லத்திகா (26), இவர்களது மகன் ஷியம்சுந்தர் (8), சிறுவன் ஷியாம் சுந்தர் சூரமங்கள் பகுதியில் உள்ள “ஸ்கை கிட்ஸ்” என்ற  தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான இந்த பள்ளியை போலீஸ் எஸ்.பி. ஈஸ்வரன் என்பவரின் மனைவி பிரியா என்பவர் நடத்தி வருகிறார். கடந்த 1ம் தேதி மதியம் சிறுவன் ஷியாம்சுந்தர் உடலில் கை கால் ஆகிய பகுதிகளில் வீங்கிய நிலையில், உடலெல்லாம் கீரல் காயங்களுடன் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான்.
மாணவன் ஷியாம் சுந்தரை பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் வெளியாட்கள் சேர்ந்துகொண்டு தாக்கியதில் அவனது உடலில் காயங்கள் ஏற்பட்டதாக சூரமங்கலம் காவல் நிலையத்தில் சிறுவனின் பெற்றோர்கள் சார்பாக புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால், போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், மாவட்ட கல்வித்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திலும் இதுகுறித்து புகார் தெரிவிக்கப்பட்டது.இதுகுறித்து, விசாரணை மேற்கொண்ட குழந்தைகள் நல அலுவலர் தேவகி மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் மறுநாள் பள்ளிக்கு சென்றுள்ளனர். ஆனால், பள்ளியின் நிர்வாகியான பிரியா அலுவலர்களை பள்ளிக்குள் விட மறுத்ததுடன், நான் நாளை “பிரஸ் மீட்” வைக்கிறேன், உங்களுக்கு தேவையான தகவல்களை அங்கே வந்து தெரிந்துகொள்ளுங்கள் என்று கூறிவிட்டார்.உங்கள் பள்ளியில் படிக்கும் குழந்தை பலமாக தாக்கப்பட்டு, மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகிறான், இது குறித்து விசாரணை நடத்த நீங்கள் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும், இல்லையென்றால் நாங்கள் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டிவரும் என்று எச்சரிக்கை செய்த பிறகு பள்ளிக்குள் சென்று விசாரணை நடத்த அனுமதித்தார்.இந்த நிலையில், விசாரானை முடிந்து வெளியே வந்த தேவகி செய்தியாளர்களிடம் கூறும்போது, பள்ளியில் நிர்வாகி பிரியாவுடன், அவரது “கேஸ் ஏஜென்சி”யில் வேலைபார்க்கும் நபர்களான ராஜேஷ் மற்றும் தினேஷ் என்ற இருவரும் சேர்ந்து சிறுவன் ஷியாம் சுந்தரை அடித்துள்ளனர்.

ஆர் ,ராசா மீது ஊடகங்களுக்கு ஏன் இவ்வளவு வன்மம் ? பார்ப்பனர்களின் ஜாதிவெறி அல்லாமல் வேறென்ன ?


சொகுசு வாகனங்களுடன் ஆடம்பரமாக வாழ்ந்த பாகிஸ்தான் தலிபான் தலைவன்

தலிபான் பயங்கரவாத தலைவரான ஹக்கீமுல்லா எங்கு வாழ்ந்தார்? எப்படி வாழ்ந்தார்? அதிர்ச்சித் தகவல்!
அமெரிக்ப்படையினரின் ஆளில்லா விமானத் தாக்குதலில், கொல்லப்பட்ட தலிபான் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவரான ஹக்கீமுல்லா மசுத் தொடர்பாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.அமெரிக்காவிற்கு மிகப் பெரும் சவாலாக இருந்த தலிபான் அமைப்புகளின் தலைவராக இருந்த ஹகிமுல்லா மெசூத் ரூ.1.28 கோடி மதிப்புள்ள பண்ணை வீட்டில் சொகுசாக வாழ்ந்துள்ளார் என தெரியவந்துள்ளது. தலிபான் தலைவராக இருந்ததால் அவர் மலைக் குகை களுக்குள்ளும், அடர்ந்த வனப்பகுதி யிலும் வாழ்ந்திருப்பார் என்றுதான் பலரும் எண்ணியிருக்கக் கூடும். ஆனால், அவர் எட்டு அறைகள் கொண்ட பண்ணை வீட்டில் மிக சொகுசாக வாழ்ந்துள்ளார்.

சாக்கோ MP மீது ஆர் .ராசா கடும் குற்றச்சாட்டு ! கோழைத்தனமான கட்சி அரசியல் கண்ணோட்டத்தில் கூட்டு குழு அறிக்கை !

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றிய பாராளுமன்ற கூட்டுக்குழு அறிக்கைக்கு ஆ.ராசா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கை அரைவேக்காட்டு தனமானது, அதை சபாநாயகர் திருப்பி அனுப்ப வேண்டும் என்று அவர் கூறினார்.
கூட்டுக்குழு
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கை தாக்கல் செய்தார். இந்த ஊழல் பற்றி சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியாக முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு துறை மந்திரி ஆ.ராசா சேர்க்கப்பட்டுள்ளார்.மேலும், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி விசாரிக்க காங்கிரஸ் எம்.பி. பி.சி.சாக்கோ தலைமையில் பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. அதில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 30 எம்.பி.க்கள் இடம்பெற்றனர்.

அசராம் பாபு சுவாமிஜி மீது 1,000 பக்க குற்றபத்திரிகை ! மேலும் பல பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவருகின்றன ?

ஜோத்பூர்: சிறுமியை பாலில் பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் அசராம் பாபுக்கு எதிராக 1,011 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்தனர்.மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் ஆசிரமம் நடத்தி வரும் சாமியார் அசராம் பாபு, மத்திய பிரதேசத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. சிறுமிக்கு பேய் பிடித்திருப்பதாகவும் அதற்கு பரிகார பூஜை செய்வதாகவும் கூறி  ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில் சிறுமியை அசராம் பாபு பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதன் பேரில், இந்தூரில் உள்ள ஆசிரமத்தில் அசராம் பாபுவை ராஜஸ்தான் போலீசார் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி கைது செய்து ஜோத்பூர் சிறையில் அடைத்தனர்.

வைகோ : இனி அதிமுகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி சேரமாட்டேன் ! முன்பும் நானாக அதிமுகவுடன் கூட்டணி சேரவில்லை ! அட்ரா சக்கை அப்படி போடு !

சென்னை: ''அ.தி.மு.க.,வுடன் கூட்டணி சேர்ந்து பட்டது போதும்; இனிமேல், அக்கட்சியுடன் கூட்டணி சேர மாட்டோம்,'' என, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ கூறினார்.
ம.தி.மு.க., அலுவலகத்தில், நேற்று புதிய உறுப்பினர்கள் கட்சியில் சேர்ந்ததை வரவேற்று வைகோ பேசியதாவது: அ.தி.மு.க., - தி.மு.க., இரண்டுமே ஊழல் கட்சிகள். அ.தி.மு.க.,வுடன் இனிமேல் கூட்டணி சேர மாட்டோம். இதற்கு முன் கூட்டணி சேர்ந்தபோது, நான் முடிவெடுத்து சேரவில்லை. என்னுடன் இருந்தவர்கள் தான், 'அ.தி.மு.க.,வுடன் கூட்டணி சேரவேண்டும்' என, வற்புறுத்தினர். அவர்களின் விருப்பத்தால் தான், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி சேர்ந்தோம். ஆனால், கூட்டணிக்கு என்னை நிர்ப்பந்தித்தவர்கள் இப்போது, ம.தி.மு.க.,வில் இல்லை. அதில் பலர் தி.மு.க.,வுக்கும், சிலர் அ.தி.மு.க.,வுக்கும் சென்றுவிட்டனர். அ.தி.மு.க.,வுடன் கூட்டணி சேர்ந்து, கடந்த சட்டசபை தேர்தலில் பட்டதுபோதும்; இனிமேல், அக்கட்சியுடன் கூட்டணிஇல்லை. இந்த ஒன்னும் தெரியாத பாப்பா சினிமாவுக்கு போயிருந்தா சிவாஜிக்கு அடுத்த இடம் இவருக்குதான்

Chennai மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் ! திமுகவின் திட்டம் என்றாலும் பெரிய மனதுடன் அம்மா முடக்காமல் விட்டுள்ளார் !

சென்னை : போக்குவரத்து நெரிசலில் சிக்கி, வாழ்ந்து வரும் சென்னை மக்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் ஒரு வரப்பிரசாதம் ஆகும். லோக்கல் ரயில்களில் நெரிசலில் பயணித்து அலுத்து போன இந்த மக்களுக்கு மெட்ரோ ரயில் சேவை விரைவில் துவங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். தற்போது, கோயம்பேட்டில் இருந்து ஆசர்கானா வரையிலான மெட்ரோ ரயில் பாதைகளில், பெரும்பாலான பணிகள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில், மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. இதற்காக, கோயம்பேட்டில் உள்ள ஷெட்டில் இருந்து 800 மீட்டர் தொலைவிற்கு அனத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. இந்த சோதனை ஓட்டத்தை முதல்வர் ஜெ., இன்று துவக்கி வைத்தார். சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு ரூ. 14 ஆயிரத்து 600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நவீன வசதிகள் கொண்ட மெட்ரோ ரெயில் முழுவதும் ஏ.சி. வசதி செய்யப்பட்ட ரெயில் பெட்டிகள், ஆட்டோ கதவுகள், குஷன் இருக்கைகள் என சொகுசான பயணத்தை தரப்போகிறது.
அம்மா மெட்ரோ"ன்னு பெயர் வச்சி, "விலையில்லா ரயில்" விட்டாத் தான் மம்மிக்கு புகழ்.. இல்லைன்னா இது கருணா, ஸ்டாலின் ஆரம்பிச்ச திட்டம் என்று திமுகவினர் பொய்யுரை பரப்பி வருகின்றனர் என்று உளவுத் துறை ரகசிய தகவல் அனுப்பி உள்ளது..

சுவேதா மேனன் காங்கிரஸ் MP மீது மீண்டும் : கீழ்த்தரமாக உரசிக்கொண்டே இருந்தார் !

காங்கிரஸ் எம்.பி., மேடையில் இடித்துக்கொண்டே இருந்தார்: நடிகையின் வாக்குமூலம் கோர்ட்டில் தாக்கல்
நடிகை சுவேதா மேனன் கடந்த வெள்ளிக்கிழமை, கேரள மாநிலம் கொல்லத்தில் நடைபெற்ற பிரசிடண்ட் கோப்பை படகு பந்தய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு காங்கிரஸ் எம்.பி. பீதாம்பர குருப் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சுவேதா மேனன் போலீசில் புகார் கொடுத்தார்.
கொச்சியில் உள்ள தனது வீட்டில் தன்னை சந்தித்த பெண் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் தலைமையிலான குழுவிடம் அவர் இந்த வாக்குமூலத்தை அளித்தார்.
இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது புகாரை வாபஸ் பெறுவதாக அவர் அறிவித்தார்.

புதன், 6 நவம்பர், 2013

காதல் திருமணம் செய்த மகளை தந்தையே கற்பழித்து கொலை செய்தார் ! Honor killing before honor Raping ?

Mumbai:  A 17-year-old from Uttar Pradesh has allegedly been raped and killed on the outskirts of Mumbai by her father and his friend. Both men have been arrested.
காதல் திருமணம் செய்யும் பெண்களால் தங்கள் கவுரவம் பாதிக்கப்படுவதாக கூறி அவர்களை கவுரவக் கொலை செய்வது அதிகரித்து வருகிறது.
இதுபோன்ற சம்பவங்களை தடுக்க பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், குழந்தைகளுக்கு  ஒழுக்கநெறியை போதிக்க வேண்டும் என்று  நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள நிலையில், மும்பை அருகே நடந்த கொடூரமான கவுரவக் கொலை சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அமோல் பலேகர்: மாநில மொழிப் படங்களை புறக்கணிப்பது வேதனை அளிக்கிறது

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் மாநில மொழிப் படங்கள் புறக்கணிக்கப்படுவது வேதனை அளிக்கிறது என்று, இந்தி நடிகரும், இயக்குநருமான அமோல் பலேகர் தெரிவித்தார்.பெங்களூருவில் திங்கள்கிழமை பெங்களூரு பத்திரியாளர் சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியது: தேசிய அளவில் இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது.
 மகாராஷ்டிரத்திலும் விழா கொண்டாடப்படுகிறது. ஆனால், விழாவில் மாநில மொழிப் படங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. இது என் போன்றோருக்கு வேதனை அளிக்கிறது.
 தாதாசாகேப் பால்கே பிறந்த மாநிலமான மகாராஷ்டிரத்தில் மாநிலப் படங்கள் புறக்கணிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
 விழாவில், அதிக அளவு கலைப் படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. வசூல் ரீதியில் வெற்றிப் பெற்ற கமர்ஷியல் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

மங்கள்யான் விஞ்ஞானிகள் திருப்பதிக்கு சென்று தரிசனம் செய்தனர் , முதல்ல கக்கூசு கழிவு நீரை அகற்ற ஒரு வழி பண்ணுங்க ! தினமும் தாழ்த்தப்பட்டவன் செத்துகிட்டு இருக்கான் சார் !

செவ்வாய் கிரகத்துக்கு
‘மங்கள்யான்’ விண்கலத்தை ஏவும் பணி
வெற்றிகரமாக முடிவடைந்தது. இதையடுத்து, ‘இஸ்ரோ’ தலைவர் கே.ராதாகிருஷ்ணன், இத்திட்டத்தில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் புடைசூழ இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்கிறார். அங்கு சாமி தரிசனம் செய்கிறார். < இத்தகவலை தேவஸ்தான வட்டாரங்கள் தெரிவித்தன. ‘மங்கள்யான்’ விண்கலத்தை ஏவுவதற்கு முன்பும், ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் கே.ராதாகிருஷ்ணன் வழிபட்டது குறிப்பிடத்தக்கது maalaimalar.com

கோவாவில் நைஜீரியர்கள் போதைவஸ்து அட்டகாசம் ! நைஜீரியாவில் உள்ள இந்தியர்களை வெளியேற்ற போவதாக தூதரக அதிகாரி மிரட்டல்


பனாஜி : 'கோவாவில், வசிக்கும் நைஜீரிய மக்களை, வெளியேற்றுவதை போலீசார் நிறுத்த வேண்டும்; இல்லையேல், நைஜீரியாவில் வசிக்கும் இந்தியர்களை விரட்டி அடிப்போம்' என, நைஜீரிய தூதரக அதிகாரி எச்சரித்துள்ளார். கோவாவில் அத்துமீறல கோவாவில் வசிக்கும் நைஜீரியாவைச் சேர்ந்த, 200க்கும் மேற்பட்டோர், தங்கள் நாட்டை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதை கண்டித்து, சில நாட்களுக்கு முன், தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் குதித்தனர். இதனால், பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பின், நைஜீரியர்கள், வன்முறையில் இறங்கினர். போலீஸ் வேன்களை அடித்து நொறுக்கியதோடு, போலீசாரிடமிருந்து லத்திகளை பறித்து, போலீசாரையும், உள்ளூர் மக்களையும் மிரட்டினர்.பிணத்தை நடுரோட்டில் போட்டு, தங்கள் நாட்டு தூதரக அதிகாரி வந்தால் தான் வெளியே றுவோம் என, மிரட்டல் விடுத்தனர். வன்முறையில் ஈடுபட்டதாக, 50 நைஜீரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, டில்லியில் உள்ள நைஜீரிய தூதரக அதிகாரி, ஜேக்கப் நவாடியா நேற்று, கோவா வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட, நைஜீரிய மக்களை
சந்தித்து பேசினார்.
கொஞ்ச நாள் கழிச்சு பாருங்க. இவங்களும் இட ஒதுக்கீடு கேட்டு போராடுவாங்க.

ஜெயமோகன்: நேரு, இந்திரா காந்தி செய்யாததை தொழில்நுட்பம் செய்தது !

சாம் பிட்ரோடா 1988 ல்  : இந்தியாவின் குன்றுகளில் நிலைநாட்டப்படும் கோபுரங்கள் வழியாக ஒட்டுமொத்த இந்தியாவையே ஒரே தொலைதொடர்புவலையில் இணைத்துவிடலாம். அதன்பின் தொலைபேசிக்கட்டணம் குறைய ஆரம்பிக்கும். மீன் விற்பவரும் கீரை விற்பவரும் கையில் ஒரு கம்பியில்லா தொலைபேசியை வைத்திருப்பார்கள். அதைக்கொண்டு ஒருநாளுக்கு ஐந்துமணிநேரம் அவர்கள் பேசினாலும் இன்று ஒரு அழைப்புக்கு ஆகும் செலவுகூட ஆகாது’ அவர் செங்கல் அளவிருந்த ஒரு கருவியை காட்டி ‘இதைக்கொண்டு பஸ்சில் போனபடியே பேசமுடியும்’

ராஜீவ்காந்தியின் தொழில்நுட்ப ஆலோசகராகப் பதவியேற்று இந்திய தொலைதொடர்புத்துறையை நவீனப்படுத்தும் முயற்சியை ஆரம்பித்திருந்தார். நான் தற்காலிக ஊழியராக தொலைபேசித்துறையில் பணியாற்றிவந்தேன். < அன்று தொலைதொடர்பை நவீனப்படுத்துவதற்காக கோடிக்கணக்கான ரூபாய் ராஜீவ் அரசால் ஒதுக்கப்பட்டது. வழக்கம்போல அதற்கு இடதுசாரிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.
கோடிக்கணக்கான மக்கள் பட்டினி கிடக்கும் தேசத்தில் பணக்காரர்கள் தொலைபேசியில் பேசிக்களிக்க பணம் வீணடிக்கப்படுகிறது என்று இடதுசாரிகள் பிரச்சாரம் செய்தார்கள். உண்மையில் அன்று தொலைபேசி என்பது பணக்காரர்கள் மட்டுமே வைத்திருக்கும் ஒரு கருவி. நான் தொலைபேசித்துறையில் வேலைக்குச் சேரும்போது இரண்டுமுறைதான் தொலைபேசியில் பேசியிருந்தேன். கார், தொலைபேசி இரண்டும் அந்தஸ்தின் சின்னங்கள் மட்டுமே.

அரியானாவில் இறந்த குழந்தை உயிர் பிழைத்தது:

ஹிசார்:அரியானாவில், டாக்டர்கள் இறந்து விட்டதாக கூறிய, பச்சிளம் குழந்தை, புதைக்கும் நேரத்தில் சிணுங்கியதால், பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.அரியானா மாநிலம், பால்சமந்த் கிராமத்தை சேர்ந்த விவசாயி, சத்பால். இவரது மனைவி, பூஜா, ஏழு நாட்களுக்கு முன், அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். பிறந்தது முதல், ஆரோக்கியமாக இருந்த குழந்தைக்கு, திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. சற்று நேரத்தில், மூச்சுப் பேச்சற்று மயங்கியதால், குழந்தையின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மொதோ இவர்கள் போனது government ஆஸ்பத்திரியா என்று விசாரிங்க. பிரைவேட் என்றால் இறந்தே போயிருந்தாலும் நாலு நாளைக்கு வச்சி தான் அனுப்புவாங்க. அரசு ஆஸ்பத்திரி தான் உயிரோட இருக்குரவனையும் செத்துட்டான்னு மார்ச்சுவாரிக்கு அனுப்பி காரியமே பண்ணிருவாங்க.. ஆக மொத்தம் என் தேசத்தில் வாழ்வதே ஒரு சவால் தான்.

இந்திய சீன கூட்டு ராணுவ பயிற்சி 10 நாட்களுக்கு பயிற்சி நடைபெறும்

பீஜிங்:  தீவிரவாதம் தடுப்பது குறித்து இந்திய ராணுவ வீரர்கள், சீன ராணுவ வீரர்களுடன் 'ஹேண்ட் இன் ஹேண்ட்-2013' கூட்டு போர்பயிற்சி நேற்று துவங்கியது.இந்தியா-சீனாவுக்குஇடையே நல்லுறவை வளர்க்கும் வகையில் இருநாட்டு ராணுவ வீரர்களும் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது.
இதன்விளைவாக,சீனாவின் குன்மிங் நகரில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் கூட்டு போர் பயிற்சி நடந்தது. அதை தொடர்ந்து 2008-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெல்காமில் நடைபெற்றது. அதன்பின்னர் காஷ்மீரை பிரச்சினைக்குரிய பகுதி என கூறி அங்கு பணி புரிந்த ராணுவ தளபதிக்கு விசா வழங்க சீனா மறுத்ததை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டு பிரச்சினை இருந்து வந்தது.அதை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டு போர் பயிற்சியில் தடை ஏற்பட்டது. இரு தரப்பினருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட சுமூக முடிவின் கீழ் காஷ்மீரில் வாழ்பவர்களுக்கு விசா வழங்க சீனா சம்மதித்தது.

செவ்வாய், 5 நவம்பர், 2013

உபி எம்.பி. கைது ! வேலைக்கார பெண் மர்மச்சாவு ! BSP MP யின் பாலியல் பலாத்காரம் ?

மெட்ரோ ரயில் நாளை சோதனை ஓட்டம்.

சென்னையில் பெரும் பொருட் செலவில் நிர்மானிக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் நாளை நடைபெறுகிறது. முதல்வர் ஜெயலலிதா இந்த சோதனை ஓட்டத்தை கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். 2 வழித் தடங்களில் தற்போது அமைக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டத்தால் சென்னை நகரின் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ. 14,600 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது
இரு வழித் தடங்களில், கிட்டத்தட்ட 45.1 கிலோமீட்டர் தொலைவுக்கு இந்தத் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.
23.1 கிலோமீட்டர் தொலைவிலான முதல் வழித்தடமானது வண்ணாரப்பேட்டையிலிருந்து சென்னை விமான நிலையம் வரை அமைக்கப்பட்டுள்ளது.23.1 கிலோமீட்டர் தொலைவிலான முதல் வழித்தடமானது வண்ணாரப்பேட்டையிலிருந்து சென்னை விமான நிலையம் வரை அமைக்கப்பட்டுள்ளது.
2வது திட்டத்தின் தொலைவு 22 கிலோமீட்டர் தூரமாகும். இது சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து பரங்கிமலை வரையிலானதாகும்
முதல் வழித்தடத்தில் சுரங்கப் பாதையில் 11 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை வண்ணாரப்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அமைக்கப்பட்டுள்ளது

167 ராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை ! 74 பேர் பலியான வங்கதேசக் கலவரம்

 டாக்கா: எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கிடையே நடந்த கலவரத்தில் 74 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 167 ராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை விதித்து வங்கதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு வங்கதேச எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களுக்கிடையே பயங்கர கலவரம் ஏற்பட்டது. இதில், 57 ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 74 பேர் கொல்லப்பட்டனர். இக்கலவரம் தொடர்பாக ஆயிரக்கணக்கான வீரர்கள் கைது செய்யப்பட்டனர். 74 பேர் பலியான வங்கதேசக் கலவரம்: 167 ராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை டாக்காவில் உள்ள 3-வது கூடுதல் பெருநகர அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், கிளர்ச்சி செய்த வீரர்களில் 167 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவர்களை சாகும்வரை தூக்கிலிட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

மாங்குளத்தில் முரளி கிண்ண கிரிகெட் போட்டியில் பெண்கள் கலக்கல் !


நல்லிணக்கத்துக்கான முரளி கிண்ண கிறிக்கெற் போட்டி – 2013 கிளிநொச்சியில் மாங்குளத்தில் கடந்த 01 ஆம் திகதி ஆரம்பம் ஆனபோது இடம்பெற்ற சில சுவாரஷியங்களை காட்டக் கூடிய பதிவு இது.
இலங்கை கிறிக்கெற் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககார உட்பட்ட பேராளர்களுக்கு தமிழ் பாரம்பரிய நடனம் மூலம் வரவேற்பு வழங்கப்பட்டது.
குமார் சங்ககரா அடங்கலாக கிறிக்கெற் நட்சத்திரங்களை பெண் வீராங்கனைகள் மொய்த்து நின்று ஆட்டோகிராப் வாங்கினார்கள்.
பெண் வீராங்கனைகள் மிகுந்த உற்சாகம், உத்வேகம் ஆகியவற்றுடன் போட்டியில் கலக்கினார்கள்.

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்குப் பிராந்தியத்தில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிப்பதற்காகவும் இளைஞர்களை கிரிக்கெட்டின் பக்கம் ஈர்க்கும் முயற்சியாகவும் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் முத்தையா முரளிதரனின் பெயரில் தொடங்கப்பட்ட முரளி ஹார்மனி கப் கிரிக்கெட் சுற்றுப்போட்டிகள் இம்முறையும் முன்னார் போர் வலயங்களான வடக்கு மாகாணத்தின் பல இடங்களில் நடந்துள்ளன.
நவம்பர் 1-ம் திகதி தொடங்கிய இந்தப் போட்டியில் வடக்கு கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த பாடசாலைகளிலிருந்தும் தென்னிலங்கையில் கிரிக்கெட்டில் பிரபலமான முக்கிய சில பாடசாலைகளிலிருந்துமாக 16 கிரிக்கெட் அணிகள் மோதின.

காஞ்சி காமகோடி சங்கராச்சாரி மீதான சங்கரராமன் கொலைவழக்கு தீர்ப்பு 12ந் தேதி

புதுச்சேரி: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் புதுச்சேரி நீதிமன்றம். வரும் 12ந் தேதி தீர்ப்பு வழங்க இருக்கிறது. சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உட்பட 24 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்துவிட்டாலும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. இ நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தீர்ப்பு வழங்குவது குறித்து நீதிபதி கருத்து கேட்டதற்கு, தீர்ப்பை வழங்குவதில் தங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று சங்கரராமனின் மகன் கூறினார். இதையடுத்து கொலை வழக்கின் தீர்ப்பை வரும் 12ந் தேதி அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்தார்
tamil.oneindia.in/

லாலு பிரசாத் யாதவுக்கு சிறையில் தோட்டக்காரர் வேலை: தினமும் ரூ.14 சம்பளம்

ரூ.950 கோடி மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்– மந்திரி லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டுகால ஜெயில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அவரது ஜாமீன் மனுவை ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு கடந்த மாதம் 30–ந் தேதி தள்ளுபடி செய்தது.
லாலுபிரசாத் தற்போது ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனி அறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு படுக்கை, மின்விசிறி, நாளிதழ், டி.வி. என எல்லா வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
லாலுவுக்கு ஜெயிலில் என்ன வேலை கொடுக்கலாம் என்று சிறைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர். அவர் உள்ள ஜெயிலில் 30 சதவீத கைதிகள் மாவோயிஸ்ட்டு தீவிரவாதிகள் என்பதால் மற்றவர்கள் நெருங்காதபடி வேலை கொடுக்க தீர்மானிக்கப்பட்டது.
நீண்ட ஆய்வுக்குப் பிறகு லாலு பிரசாத்துக்கு தோட்டக்காரர் வேலை கொடுக்கப்பட்டுள்ளது. அவர் அடைக்கப்பட்டுள்ள 52 ஏக்கர் பரப்பளவு கொண்ட சிறையின் பெரும் பகுதியில் காய்கறி, பூஞ்செடிகள் பயிரிடப்பட்டுள்ளன.

தமிழை ஆங்கில எழுத்தில் எழுதவேண்டுமாம் ! சொல்பவர் ஜெயமோகன் ! Why this kolaiveri jemo?

ஜெயமோகனின் தங்கிலீஷ் தமாக்கா
தி இந்துவில் வெளிவந்த ஜெயமோகனின் கட்டுரையை வாசித்தீர்களா? இல்லையென்றால் ஐந்து நிமிடங்களை ஒதுக்கி அதை வாசித்துவிடுங்கள். நேரமில்லையென்றால் விட்டுவிடுங்கள். கட்டுரையின் அடிப்படையான சாராம்சத்தைச் சொல்லிவிடுகிறேன். இனிமேல் தமிழை ஆங்கில எழுத்துருவில் எழுதலாம் என்கிறார் ஜெமோ. அதாவது ‘Vanakkam, Nalla irukeengala?’ என்று எழுத வேண்டுமாம்.
தலைப்பை பார்த்தவுடன் காமெடிக் கட்டுரை போலிருக்கிறது எனத் தோன்றியது. ஆனால் ஜெமோ சீரியஸாகவேதான் எழுதியிருக்கிறார். அடுத்தவர்களை தயவு தாட்சண்யமே இல்லாமல் ‘அசடு, அசடு’ என்று விளித்துக் கொண்டே இப்படியான கட்டுரைகளை எழுதுவதற்கு அசட்டுத் தைரியம் வேண்டும். இப்படியெல்லாம் கட்டுரை எழுதுவதற்கு முன்பாக குறைந்தபட்சம் தனது வலைத்தளத்தில் இதை பரிசோதித்து பார்த்திருக்கலாம். நிறைய வேண்டாம்- இரண்டு கட்டுரைகள் போதும். பெரும்பாலானவர்களின் ரியாக்‌ஷனைத் தெரிந்திருக்க முடியும். ஆனால் அவர் செய்ய மாட்டார். இந்த கான்செப்ட் எந்தக் காலத்திலும் வேலைக்கு ஆகாது என்பதை ஜெயமோகனுக்கும் தெரியும். ஆனால் அவருக்கு அவ்வப்போது இப்படியான அதிரடி ஆக்‌ஷன் தேவைப்படுகிறது. தம்மை நோக்கித் திரும்ப வைக்கும் வித்தை. இந்த வித்தைக்கு இப்பொழுது அவரிடம் தமிழ் சிக்கிக் கொண்டது, பாவம்.

'வீடியோ ஸ்டோரி டெல்லிங்' குறுகியகால ஆன்லைன் பெல்லோஷிப் பயிற்சி

9.9 ஸ்கூல் ஆப் கம்யூனிகேஷன் மற்றும் இன்டர்நேஷனல் சென்டர் பார் ஜர்னலிஸ்ட்(ஐசிஎப்ஜெ) இணைந்து 'வீடியோ ஸ்டோரி டெல்லிங்' என்ற குறுகியகால ஆன்லைன் பெல்லோஷிப் பயிற்சி அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ ஸ்டோரி டெல்லிங் பயிற்சி, எம்மி விருது வென்ற வீடியோ பத்திரிகையாளர் மூலம் வழங்கப்படுகிறது. ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் வெளியிட்டப்பட்டுள்ளது.
இந்த பயிற்சி வீடியோவில் ஆர்வமுள்ளவர்கள் மேலும் முன்னேறுவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்று தொழில் சேவைகள் 9.9 அசோசியட் தலைவர் மற்றும் குன்ஜன் அகர்வால் தெரிவித்துள்ளார்.