சனி, 18 ஜனவரி, 2020

தோழர் சோழனை' படித்து விட்டு விமர்சியுங்கள். மகிழ்ச்சி அடைவேன்... சிவசங்கர் எஸ்.எஸ் முன்னாள் எம் எல் ஏ

சிவசங்கர் எஸ்.எஸ் : "தோழர் ஹரன் பிரசன்னா" அவர்களுக்கு,
அமேசான் 'pen to publish' போட்டி குறித்து தாங்கள் எழுதியுள்ள கருத்துகள் 100 சதவிகிதம் சரி. எழுத்தின் தரம் குறித்துக் கணக்கில் கொள்ளாமல் விற்பனை, விமர்சனம், படிக்கப்பட்டுள்ள பக்கங்களை கணக்கில் கொண்டு அமேசான் முதல் சுற்று வெற்றியை அறிவிப்பதாக அறிகிறேன்.
ஆனால் இன்னொன்றையும் கணக்கில் கொள்ள வேண்டும். அமேசான் இந்தப் போட்டியை நடத்துவதே, "அமேசான் கிண்டிலை" பிரபலப்படுத்திக் கொள்ளத் தான். அதனால் அவர்கள் விறபனையை தான் குறி வைப்பார்கள்.
தங்கள் நூல் விற்பனையாக வேண்டும் என்பதும், அதன் மூலம் முதல் சுற்றில் நுழைய வேண்டும் என்பதும் நூல் எழுதியவர்களின் விருப்பமாக இருக்கும். அப்படி இருந்தால் தான் போட்டியில் கலந்து கொள்வார்கள்.
அதனால் விற்பனை அதிகரிக்க, நூல் எழுதியவர்கள் தாங்கள் நூல் எழுதியதை விளம்பரப்படுத்துவது தவிர்க்க இயலாதது. அப்படி வெளியில் சொல்லா விட்டால், புதிய எழுத்தாளர்கள் நூல் எழுதியதே தெரியாமல் போய் விடும்.
விளம்பரத்தை கண்டு, புத்தகத்தை வாங்கும் புதியவர்கள் அமேசானில் இருக்கும் மற்ற புத்தகங்களை வாங்குவார்கள் என்பது அமேசானின் வியாபார கணக்கு.

சமூக வலைதளங்கள் எல்லா தனிமனிதர்களுக்கும் ஒரு பொதுவாழ்க்கை உருவாகி இருக்கிறது.

Don Ashok -Ashok.R : நான் ஆர்குட் காலத்தில் இருந்து பல குழுக்களில் உறுப்பினராகவும், நிர்வாகியாகவும் இருந்திருக்கிறேன். ஒற்றுமையாக இருந்த பெரும் குழுக்கள் கல்லெறியப்பட்ட காக்கைக் கூட்டமாய்ச் சிதறுவதை பலமுறை பார்த்திருக்கிறேன். உற்ற அண்ணனாக இருந்தவர்கள் வேறு கட்சி மாறினாலும் அண்ணனாகவே இருப்பதையும் பார்த்திருக்கிறேன், ஒருகாலத்தில் ஒன்றாய் இருந்த அண்ணன்கள் இப்போதும் ஒரேகட்சியில் இருந்தாலும் கால ஓட்டத்தில் சல்லிப்பயல்கள் ஆனதையும் பார்த்திருக்கிறேன். உற்ற நண்பர்களாக நான் நினைத்தவர்கள் துரோகம் செய்து "யாரோ போல்" ஆகியதையும் பார்த்திருக்கிறேன். இதிலிருந்தெல்லாம் நான் கற்றுக்கொண்டது ஒரே ஒரு பாடம்தான். நிற்க.
சமூக வலைதளங்கள் வந்தபின் எல்லா தனிமனிதர்களுக்கும் ஒரு பொதுவாழ்க்கை உருவாகி இருக்கிறது. அதை அவரவர் எழுத்துத் திறனுக்கேற்ப விரிவாக்கிக் கொள்கிறார்கள். அப்படி விரிவாகும்போது பலர் அறிமுகம் ஆவார்கள். பலர் நம்மைப் பின்தொடர்வார்கள். பலர் நம்மை அமைதியாகக் கவனிப்பார்கள். பலர் நம்மைத் தூக்கி விடுவார்கள். பலர் நம்மைப் புறக்கணிப்பதன் மூலம் அற்பசுகம் காண்பார்கள். பலர் நம்மைப் போற்றுவார்கள். பலர் நம்மைத் தூற்றுவார்கள்.
ஆனால் மேற்சொன்ன எல்லாவற்றிலும் பொதுவான விஷயம் என்பது 'பலர்'. இந்தப் 'பலர்' என்பது மக்கள். மக்கள் கூட்டம் விரிவடையும்போது அவர்களின் ஈகோவையும் நாம் சரியாக ஹேண்டில் செய்ய வேண்டியிருக்கும். மிகமிக நல்லவர்களுக்குக் கூட மிக அதிகமான ஈகோ உண்டு. அது மனிதனின் அடிப்படைத் தன்மை. அதும் ஒரு வகையில் சுயமரியாதைதான். அதைத் தெரியாமல் கூட சீண்டிவிடக் கூடாது. அதை பிடுங்கியெறிந்து அழிக்கவும் தேவை இல்லை. தடவிக்கொடுத்து வளர்க்கவும் தேவை இல்லை. தேவை இல்லாதவற்றைப் பேசி அதைச் சீண்டாமல் இருந்தாலே போதும், அதுபாட்டுக்கு ஒரு ஓரமாக இருக்கும்.

ஆக்ரோஷமாக வந்த காளை: எதிரே வந்த தாய்,குழந்தை – நெஞ்சை தொட்ட காளை வீடியோ


Manjuvirattuவெப்துனியா :சிவகங்கையில் மஞ்சுவிரட்டில் ஆக்ரோஷமாக வந்த காளை ஒன்று எதிரே வந்த தாய் மற்றும் குழந்தையை கண்டதும் செய்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
Bullபொங்கலையொட்டி தமிழத்தின் பல பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகள் நடைபெற்றன. சிவகங்கை சிராவயல் பகுதியில் மஞ்சு விரட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது. இதை காண சுற்றிலும் பல ஊர்களில் இருந்தும் மக்கள் வந்திருந்தனர். மஞ்சு விரட்டுக்காக கொண்டு வரப்பட்ட காளை ஒன்று வாகனத்தில் கட்டப்பட்டிருந்தது. திடீரென கயிறை அறுத்துக்கொண்டு மக்கள் இருக்கும் திசையில் ஓடத்தொடங்கியது காளை. இதை அறியாமல் அந்த பக்கம் தன் குழந்தையோடு நின்று கொண்டிருந்த பெண் ஒருவர் காளை வேகமாக வருவதை கண்டு திகைத்து நின்றார்.
பெண்ணும், குழந்தையும் குறுக்கே நிற்பதை கண்ட காளை வேகத்தை குறைக்க முடியாமல் அருகே வந்ததும் சடாரென துள்ளி குதித்து அவர்களை தாண்டியது. பிறகு வேகத்தை குறைக்காமல் ஓடி விட்டது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. பெண்ணையும், குழந்தையையும் தாக்கிவிட கூடாது என காளை செய்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஆர்ஓ தண்ணீர் சுத்திகரிப்பான்களுக்கு தடை?- மத்திய அமைச்சகத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

ban-for-ro-systems.hindutamil.in : ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் எனப்படும் ஆர்ஓஅடிப்படையிலான (தலைகீழ் சவ்வூடுபரவல் முறை) தண்ணீர் சுத்திகரிப்பான்களை தடை செய்வது தொடர்பாக அறிவிப்பாணையை வெளியிட வேண்டும்என்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைக்கு (எம்ஓஇஎப்) தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதை அமல்படுத்த 4 மாதம் தேவைப்படுகிறது என மத்திய அமைச்சகம் அவகாசம் கோரியுள்ளது.
ஆழ்குழாய் மூலம் பெறப்படும் நிலத்தடி நீரை சுத்திகரிக்க ஆர்ஓ முறை நாடெங்கிலும் பரவலாக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.5 ஆயிரம் முதல் ஆர்ஓ தண்ணீர் சுத்திகரிப்பான்கள் சந்தையில் கிடைக்கின்றன. இதை ஏராளமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
புதிய உத்தரவு
இந்நிலையில் ஆர்ஓ தண்ணீர் சுத்திகரிப்பான் தொடர்பான ஆய்வு முடிவுகள் குறித்து நிபுணர் குழு, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இதையடுத்து தீர்ப்பாயம் மத்திய அமைச்சகத்துக்கு ஒரு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அம்மாவின் கழுத்தை அறுத்தேன்.. துண்டு துண்டாக வெட்டினேன்.. பீச்சில் கொண்டு போய்.. வைத்த மகன்!

நண்பன் விர்ஜூ tamil.oneindia.com/thiruvananthapuram :  கோழிக்கோடு: அம்மாவின் கழுத்தை நெரித்து கொன்று ஃபேனில் தொங்க விட்டேன்.. இஸ்மாயிலை கத்தியால் குத்தி கொன்று, தலை, உடம்பு, கை, கால்களை தனித்தனியாக வெட்டி எடுத்தேன்.. மொத்தமாக சடல குவியலை மூட்டை கட்டிக் கொண்டு பீச்சில் போட்டுவிட்டேன்" என்று தாய், நண்பனை கொன்ற நபர் போலீசில் வாக்குமூலம் தந்துள்ளார்.
கோழிக்கோடு அருகே முக்கம் கிழக்கு மணாஞ்சேரியை சேர்ந்தவர் ஜெயவள்ளி.. ஏகப்பட்ட சொத்துக்கு சொந்தக்காரர்.
இவரது மகன் விர்ஜூ.. 53 வயதாகிறது.. அடிக்கடி தன் தாய் ஜெயவள்ளியை மிரட்டி சொத்துக்களை எழுதி வந்தார். ஒரு கட்டத்தில் சொத்துக்களை தர முடியாது என்று ஜெயவள்ளி கண்டிப்பாக சொல்லவும், அவரை கொல்ல முடிவு செய்தார் மகன்.
இந்த கொலையை செய்வதற்காக நண்பர் இஸ்மாயிலிடம் உதவி கேட்டார்.. அதற்கு இஸ்மாயில் 2 லட்சம் தந்தால் கொலை செய்வதாக தெரிவிக்கவும், அதற்கு விர்ஜு சம்மதம் சொன்னார். அதன்படி, கடந்த 2014-ம் வருடம், மார்ச் 5-ந் தேதி தூங்கி கொண்டு இருந்த ஜெயவள்ளியின் கழுத்தை விர்ஜூவும், இஸ்மாயிலும் சேர்ந்து நெரித்து கொன்றனர்.

BBC : சீனாவில் வறுமையால் இறந்த இளம்பெண்: மக்கள் கோபத்தை தூண்டிய மரணம்

சினாவில் வறுமையால் இறந்த இளம்பெண்: மக்கள் கோபத்தை தூண்டிய மரணம்ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிருக்கு போராடி கொண்டிருந்த இளம்பெண்ணுக்காக திரட்டப்பட்ட 10 லட்சம் யுவான் (சுமார் ஒரு கோடி இந்திய ரூபாய்) நிதியில் சொற்ப பணமே அவர் உயிரிழப்பதற்கு முன்பு வரை அளிக்கப்பட்ட சம்பவம் சீன மக்களிடையே கோபத்தைத் தூண்டியுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் மூச்சுத் திணறலுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வு ஹுயானின் பின்னணி குறித்து தெரிந்த உடன் அவருக்கு அந்நாடு முழுவதுள்ள மக்கள் நிதியுதவி செய்தனர்.
சுமார் ஐந்தாண்டுகளுக்கு தொடர்ச்சியாக தினமும் சொற்ப பணத்தில் வாழ்க்கையை நடத்தி வந்த அவரது உடல் எடை வெறும் 20 கிலோதான். தன் தந்தையும், பாட்டியும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குரிய பணமில்லாததால் அவர்கள் எப்படி உயிரிழந்தார்கள் என்று வு ஹுயான் அளித்த விளக்கம் அந்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

ஸ்டாலினிடம் பேசிய சோனியா:! கலைஞரை தனது தந்தை போல் ... சோனியா அம்மையார்

ஸ்டாலினிடம் பேசிய சோனியா: கூட்டணி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!மின்னம்பலம் : திமுக-காங்கிரஸ் இடையேயான கூட்டணி சர்ச்சைக்கு 8 நாட்களுக்குப் பிறகு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி தர்மத்தை மதிக்கவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் கடந்த 10ஆம் தேதி வெளியிட்ட அறிக்கை திமுக-காங்கிரஸ் கூட்டணியில் விரிசலை உண்டாக்கியது. இது டெல்லி அளவுக்கு தாக்கத்தையும் ஏற்படுத்தியது. அறிக்கையைக் காரணமாக வைத்து காங்கிரஸ் கூட்டிய எதிர்க்கட்சிகள் கூட்டத்தை திமுக புறக்கணித்தது.
விவகாரம் பெரிதானதை உணர்ந்த டெல்லி மேலிடம், கே.எஸ்.அழகிரியை டெல்லிக்கு அழைத்தது. இதனையடுத்து, டெல்லி சென்ற கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து தனது அறிக்கை தொடர்பாக விளக்கம் அளித்தார்.

ஷீரடி சாயி பாபா கோயில் மூடப்படுகிறது ? தாக்கரேயின் ரூ.100 கோடி அறிவிப்பு; கொந்தளித்த பக்தர்கள்!

உத்தவ் தாக்கரேஷீரடிராம் பிரசாத்- vikatan.com : தாக்கரேயின் ரூ.100 கோடி அறிவிப்பு; கொந்தளித்த பக்தர்கள்!- ஷீரடி சாய்பாபா விவகாரத்தில் என்ன நடந்தது? ஜனவரி 19-ம் தேதி முதல் ஷீரடி சாய்பாபா கோயில் காலவரையறையின்றி மூடுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியானது. மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகரில் உள்ள `ஷீரடி’-யில் சாய்பாபா, தன் வாழ்நாளில் பெரும்பாலான காலத்தைக் கழித்தார். `ஷீரடி’யில் உள்ள ஒவ்வோர் அடி மண்ணும் சாய்பாபாவின் திருவடி
ஸ்பரிசத்தால் மகிமை பெற்றுத் திகழ்வதாக அவரது பக்தர்கள் நம்புகின்றனர். இங்கு பாபாவுக்கு எனப் மிகப்பெரிய கோயில் உள்ளது.
சாய்பாபா வாழ்ந்து மறைந்த இடமான ஷீரடியில் பாபாவின் சமாதி மந்திர், அவர் வசித்த துவாரகாமயி, சாவடி, குருஸ்தான், லெண்டித் தோட்டம், மகல்சாபதி இல்லம் என்று பல இடங்களைப் பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். இந்தநிலையில்தான் ஜனவரி 19-ம் தேதி முதல் ஷீரடி சாய்பாபா கோயில் காலவரையறையின்றி மூடுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியானது. இது சாய்பாபா பக்தர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

ஸ்டாலின் : கூட்டணி குறித்து தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் பொதுவெளியில் பேசவேண்டாம்- திமுக அறிக்கை

மாலைமலர் : திமு.க., காங்கிரஸ் கூட்டணி குறித்து இரண்டு கட்சியினரும் பொது வெளியில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
 சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு, மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அதிருப்தியுடன் வெளியிட்ட கருத்தைத் தொடர்ந்து கூட்டணியில் பிரச்சனை ஏற்பட்டது. இந்நிலையில், தமிழ்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, கட்சியின் மூத்த தலைவர்கள் கே.வி.தங்கபாலு, கே.ஆர்.ராமசாமி ஆகியோர் இன்று மதியம் அண்ணா அறிவாலயம் சென்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்கள்.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, திமுக-காங்கிரஸ் இடையிலான பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பாக பேசியதாக கூறினார்.
மேலும் வரும் சட்டமன்ற தேர்தலிலும் அதற்கு பிறகும் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்றும் குறிப்பிட்டார்.
அதன்பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திமு.க., காங்கிரஸ் கூட்டணி குறித்து இரண்டு கட்சியினரும் பொது வெளியில் பேசுவதை தவிர்க்க வேண்டும்’ என கேட்டுக்கொண்டார்.

5,8 ஆம் வகுப்பு பொது தேர்வு இனி சொந்த பள்ளிகளில் எழுத தடை. மாணவர்கள் மீதான தொடர் தாக்குதல்

ஆலஞ்சியார் : என்ன வக்கிரம் . ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு
பொதுதேர்வெழுத வேறுபள்ளிக்கு செல்லவேண்டுமாம். பத்துவயது குழந்தை மீது திணிக்கபடும் பொதுதேர்வே சகிக்கமுடியாத பெரும்குற்றம் ..வெகுவாக குழந்தைகளை மனதளவில் பாதிக்கும் கொடுஞ்செயல் இதில் படித்த பள்ளியில் எழுத கூடாதென்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்
ஆட்சியாளர்கள் அடிமைத்தனத்தில் ஊறுப்போனதால் சிந்திக்கும் ஆற்றலை இழந்தார்கள் இப்போது சைக்கோவாகவே மாறியிருப்பதை தான் இது காட்டுகிறது ..
சாதாரணமானவனுக்கு மிகவும் விளிம்புநிலை மக்களுக்கு,ஏழைகளுக்கு கல்வி மறுக்கபடுவதற்கு சமம் தொடர்ந்து மனதளவில் தளர்த்தி அக்குழந்தையை உயர்கல்விக்கு தகுதியில்லாதவனாக மாற்றி ..அப்பன் தொழிலை செய் அடிமையைபோல கூலிப்பணிக்கு செல் கல் உடை என சொல்லாமல் சொல்கிறது .. கல்வி எல்லோருக்கும் எளிமையாக கிடைக்கவேண்டுமென்பதற்காக உலகில் எல்லா நாடுகளும் எளிமையான முறையில் பயிற்றுவிக்க நினைக்கிறது ஆனால் இந்தியாவில் தலைகீழ் .. filter வடிகட்டுவதாக சொல்லி தகுதியுள்ளவர்கள் மேலே வரட்டுமென திசை திருப்பி ஒரு குறிப்பிட்ட வர்க்கம் பணமுள்ளவன் மட்டுமே கல்விகற்கும் நிலைக்கு கொண்டுவருவதே அரசின் நோக்கமென்கில் இந்த அரசை வீழ்த்தியே ஆகவேண்டும் ..

நடிகர் ரஜினிகாந்த் மீது போலீசில் புகார்... பெரியார் பற்றி பொய்யான செய்தி கூறினார்

நக்கீரன் : துக்ளக் இதழின் 50 ஆவது
dravidian group files complaint on rajinikanth over his statement about periyarஆண்டுவிழாவில் நடிகர் ரஜினிகாந்த பேசியது குறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், 1971 ஆம் ஆண்டு பெரியார் நடத்திய ஊர்வலம் குறித்து ரஜினி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் மீது கோவை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. துக்ளக் விழாவில் பேசிய ரஜினிகாந்த், சேலத்தில்
பெரியார் தலைமையில் நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணியில் ராமர் - சீதையின் ஆடையில்லா படங்கள் செருப்பு மாலையுடன் இடம்பெற்றதாகவும், அதனை துக்ளக் பத்திரிகை மட்டுமே தைரியமாக வெளியிட்டதாகவும் பேசினார். இந்த தகவல் தவறானது என பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்தன. இந்நிலையில் ரஜினியின் இந்த பேச்சு அமைதியை குலைக்கும் விதமாக இருப்பதாக கூறி திராவிடர் விடுதலை கழகம் சார்பில் கோவை காவல்துறை ஆணையாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வீடுகள் கணக்கெடுப்பு: வரும் ஏப்ரல் முதல் வீடு வீடாக ஆய்வு

houseதினமணி  : தமிழகத்தில் மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு முன்பாக, ஒவ்வொரு பகுதியிலும் வீடுகளின் எண்ணிக்கையைக் கணக்கிடும் பணி நடந்து வருகிறது.
இதைத் தொடா்ந்து, வீடுகளின் நிலை, குடும்பங்களுக்கு கிடைக்கும் வசதிகள் உள்ளிட்டவை குறித்த கணக்கெடுப்பு ஏப்ரலில் தொடங்கவுள்ளது.
இந்தியாவின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 1872-ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. ஒரே நேரத்தில் நாடு முழுவதற்குமான ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு 1881-ஆம் ஆண்டு நடந்தது. அதிலிருந்து தொடங்கி பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் விடுபடாமல் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

பஞ்சாப் சட்டசபையில் சிஏஏ க்கு எதிரான இந்தத் தீர்மானம்.. கேரளாவை தொடர்ந்து ...அதிரடி

punjab moves resolution against caaநக்கீரன் : குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த சட்டத்தை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்தமாட்டோம் என கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநில அரசுகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இந்நிலையில் கேரள சட்டசபை கூட்டத்தில், இந்த சட்டத்திற்கு எதிராக முதலமைச்சர் பினராயி விஜயன் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். அதில், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கேரளா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  இந்நிலையில், கேரளாவைத் தொடர்ந்து, காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநில சட்டசபையில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பஞ்சாப் சட்டசபையில் இரண்டு நாள் சிறப்பு சட்டசபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அம்மாநில அமைச்சர் மொஹிந்திரா சிஏஏ க்கு எதிரான இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.<

காணும் பொங்கல் உற்சாக கொண்டாட்டம்...அலை மோதிய மக்கள் கூட்டம் சென்னையில்...

கடற்கரை, பூங்கா, பொருட்காட்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்களில்அலை மோதிய மக்கள் கூட்டம்சென்னையில் காணும் பொங்கல் உற்சாக கொண்டாட்டம் தினத்தந்தி ::  சென்னையில் காணும் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கடற்கரை, பூங்கா, பொருட்காட்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
சென்னை, தமிழகத்தில் காணும் பொங்கல் பண்டிகை நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னையில் மெரினா கடற்கரையில் குடும்பம், குடும்பமாக பொதுமக்கள் அதிக அளவில் திரண்டனர். கடற்கரை மணற்பரப்பில் அமர்ந்து ஓடி, ஆடி விளையாடி மகிழ்ந்தனர். சிறியவர்கள், பெரியவர்கள் என வயது வித்தியாசமின்றி அனைவரும் உற்சாகத்தில் திளைத்தனர். மெரினா கடற்கரையில் உள்ள ராட்டினம் உள்பட விளையாட்டு உபகரணங்கள் நேற்று ஓய்வில்லாமல் இயங்கின. குதிரை சவாரியும் விறுவிறுப்பாக நடந்தது.
வழக்கம் போல் கடலில் குளிக்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். எனவே மணற்பரப்பில் அமர்ந்து கடல் அலையை மக்கள் ரசித்தனர்.

ஆள்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்த பெண் குழந்தை.. பத்திரமாக மீட்ட இளைஞநர்கள்

மண் சரிவு
அலறல் /tamil.oneindia.com :விழுப்புரம்: குழந்தை உடம்பெல்லாம் மண்ணு... வெறும் 15 நிமிஷம்தான்.. குழிக்குள் விழுந்த 3 வயது சிறுமியை பக்கத்திலேயே இன்னொரு குழியை தோண்டி பத்திரமாக மீட்டுவிட்டனர் நம் இளைஞர்கள்.. இந்த வீடியோ இப்போது வெளியாகி புல்லரிக்க வைத்துள்ளது.
 புதுச்சேரி - விழுப்புரம் மாவட்டம் எல்லையில் உள்ள பகுதி சின்னபாபு சமுத்திரம்.. இங்கு சரோஜா என்பவர் வீடு ஒன்றை கட்டி வருகிறா ; அதற்காக 10 அடி ஆழத்தில் போர்வெல் மெஷின் போட ஏற்பாடு நடந்தது.. 10 அடி ஆழம், ஒரு அடி அகலத்துக்கு குழி ஒன்று போடப்பட்டுள்ளது.. ஆனால் போர்வெல் பணி நின்றுவிடவும், அந்த குழியும் அப்படியே உள்ளது.. யாருமே மூடவும் இல்லை.அப்போது, குழி அருகே விளையாடிக் கொண்டிருந்த பாஸ்கர் என்பவரது 3 வயது மகள் கோபிணி, இதில் தவறி விழுந்துவிட்டாள்.. குழிக்குள் இருந்து அலறல்.
அப்போது, குழி அருகே விளையாடிக் கொண்டிருந்த பாஸ்கர் என்பவரது 3 வயது மகள் கோபிணி, இதில் தவறி விழுந்துவிட்டாள்.. குழிக்குள் இருந்து அலறல் சத்தம் கேட்டு கொண்டே இருந்தது.. அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து சத்தம் வருகிறது, ஆளை காணோமே என்று பதறினர்.. பிறகுதான் குழிக்குள் இருந்து சத்தம் வருகிறது என்று தெரிந்து எட்டி பார்த்தனர்.

ரஜினி-காங்கிரஸ்- திருமாவளவன்: ரகசிய நகர்வுகள்

 டிஜிட்டல் திண்ணை:  ரஜினி-காங்கிரஸ்- திருமாவளவன்: ரகசிய நகர்வுகள்மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.
“திமுகவுக்கும் காங்கிரசுக்கும் இடையிலான கூட்டணிப் பூசல் நாளுக்கு நாள் தீவிரமாகிக் கொண்டிருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி தர்மத்தை மீறிவிட்டது என்று காங்கிரஸ் தலைவர் கே..எஸ்.அழகிரியும், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர். ராமசாமியும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் கூற, அதில் இருந்து புறப்பட்ட சர்ச்சைகள் இன்னும் ஓயவில்லை.
கடந்த ஜூன் மாதமே காங்கிரஸ் கட்சியின் தென் சென்னை மாவட்டத் தலைவராக அப்போது இருந்த கராத்தே தியாகராஜன், ‘உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸுக்கு உரிய இடங்கள் ஒதுக்கப்படாவிட்டால் நாம் தனித்தே போட்டியிடலாம்’ என்று பேச அதற்கு முன்னாள் அமைச்சர் கே.என். நேரு காரசாரமாக பதில் கூறினார். ‘திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்’ என்று நேரு திருச்சி ஆர்ப்பாட்டத்தில் பேசினார். இந்த சர்ச்சையில் கராத்தே தியாகராஜனின் தலை உருட்டப்பட்டு அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால் இன்னும் அவர் சிதம்பரத்துடன் நெருங்கிய தொடர்பில்தான் இருக்கிறார். சில நாட்கள் முன்புகூட ப.சிதம்பரத்துடன் ஒரே விமானத்தில் பயணித்தார் கராத்தே.
கராத்தே தியாகராஜன் அன்று சொன்னதைத்தான் 5 மாதங்களுக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல் வந்த பின் ஒவ்வொரு மாவட்ட தலைவரும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியைத் தொடர்பு கொண்டு கூற ஆரம்பித்தனர்.

வெள்ளி, 17 ஜனவரி, 2020

2020ம் ஆண்டின் தலை சிறந்த நாடுகள் பட்டியல் ..: சுவிட்சர்லாந்து முதலாவது இடம்!

202001161512075473_1_switzerland-iStock._L_styvpf 2020ம் ஆண்டின் தலை சிறந்த நாடுகள் பட்டியல் வெளியீடு:  சுவிட்சர்லாந்து முதலாவது இடம்! 2020ம் ஆண்டின் தலை சிறந்த நாடுகள் பட்டியல் வெளியீடு:  சுவிட்சர்லாந்து முதலாவது இடம்! 202001161512075473 1 switzerland iStock மாலைமலர் :  2020ம் ஆண்டிற்கான அதன் அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ள நாடுகள் வருமாறு:-
இயற்கையான சூழலில் வாழக்கூடிய நாடுகள்
: 1) சுவீடன் , 2 சுவிட்சர்லாந்து 3) பின்லாந்து
 மிகவும் பலம் வாய்ந்த நாடுகள்:   1) அமெரிக்கா 2) ரஷியா 3) சீனா
கல்வியில் சிறந்த நாடுகள்: 1) அமெரிக்கா 2) பிரிட்டன் 3) கனடா
தொழில் தொடங்க ஏற்ற நாடுகள்: 1) தாய்லாந்து 2) மலேசியா 3) சீனா பெண்களுக்கான நாடுகள்: 1) டென்மார்க் 2) ஸ்வீடன் 3) நெதர்லாந்து
சிறப்பான வாழ்க்கைத்தரம் உடைய நாடுகள்: 1) கனடா 2) டென்மார்க் 3) ஸ்வீடன்
அனைத்து விதத்திலும் சிறந்த நாடுகள்: 1) சுவிட்சர்லாந்து 2) கனடா 3) ஜப்பான் 4) ஜெர்மனி 5) ஆஸ்திரேலியா 6) பிரிட்டன் 7) அமெரிக்கா 8) ஸ்வீடன் 9) நெதர்லாந்து 10) நார்வே.

பிறப்பின் வலி ....

Devi Somasundaram : சில வருடம் முன்ன அட்வகேட்டா இருக்கற என் சித்திகிட்ட ஒரு கேஸ் வந்துச்சு . விவாகரத்து வழக்கு .மனைவிக்கு குழந்தை டெலிவரி
ஆகி பத்து நாள்குல்ல மனைவிய செக்ஸ்க்கு கணவன் வற்புறுத்த மனைவி உடம்பு முடியலன்னு மறுக்க கணவன் அடிச்சதுல தலைல அடிபட்டு பாதிக்கப் பட்ட தங்கச்சிக்கு அவள் கணவர்கிட்டேர்ந்து விவாகரத்து கேட்டு வழக்கு .
பிரசவ வலின்ற வரை மட்டும் நம் சமூகம் சொல்லி வைத்து இருக்கு..வெறும் லேபர் பெய்ன் மட்டும் பிரசவ வலி இல்லை .3 கிலோ வெய்ட் உள்ள
ஒரு தேங்காய உங்க வயித்துகுல்ல போட்டுட்டு அதை உங்க ஆனஸ் வழியா பிதுக்கி எடுத்தா எப்படி இருக்கும் .
ரெக்டம் கிழிஞ்சு, வஜைனாலேர்ந்து சதை கிழிந்து மலக்குடல் சதை அழுத்தப்பட்டு பைல்ஸ் வரும் அளவு சதை லூசாகி ..கர்ப்பப்பை தளர்ந்து ,இடுப்புக்கு கீழ எல்லா சதையும் தளர்ந்து.
கிழிந்த இடம் தையல் போடப் பட்டு, இப்பலாம் புரோட்டின் ஸ்டிச் , முன்னாடி நரம்பு தையல் , உட்கார்ந்தாலே குத்தும் .
புரோட்டின் ஸ்டிச் ஆற் ஆற காயம் குத்தும்
அதோட குழந்தைக்கு உட்கார்ந்து பால் தரணும் .2 மணி நேரத்துக்கு ஒரு முறை 20 நிமிடம் பால் தரணும்..
நைட்ல தூங்க முடியாது.காயம் வலிக்கும் ,டயர்ட்னெஸ். காலை மடிச்சு உட்கார முடியாது, ஸ்டிச்சஸ் விட்றும். ( ஒவ்வொரு முறை எழுந்து உட்காரும் போதும் அண்ணி வலில தவிக்கிறது கொடுமையா இருக்கு) .
குழந்தை வாய் குட்டியா இருக்கு, நிப்பில் வாய்குல்ல போகவே மாட்டுது .அழுத்தி குடுத்தா நிப்பில் வெடிச்சு ரத்தம் வருது .( இதைலாம் பார்த்தா சத்தியமா கல்யாணம் பண்ணிகிற ஆசைலாம் வரவே வராது ) .

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி: 16 காளைகளை அடக்கி முதலிடத்தை பெற்ற ரஞ்சித்குமாருக்கு கார் பரிசு!


தினத்தந்தி : அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 16 காளைகளை அடக்கி முதலிடத்தை பெற்ற ரஞ்சித்குமாருக்கு கார் பரிசாக வழங்கப்படுகிறது. மதுரை, தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு விழா விமரிசையாக நடைபெறும். அவனியாபுரத்தில் பொங்கல் தினத்தன்றும், தை 2-ம் நாள் பால மேட்டிலும், 3-ம் நாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும்.
இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு விழாவை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான குழுவை மதுரை ஐகோர்ட்டு நியமித்தது. இந்த குழுவில் மதுரை மாவட்ட கலெக்டர் வினய், மதுரை போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், சூப்பிரண்டு மணிவண்ணன், மாநகராட்சி கமிஷனர் விசாகன் உள்ளிட்ட அதிகாரிகளும், பிரமுகர்களும் இடம் பெற்று உள்ளனர்.
பொங்கல் பண்டிகையான நேற்று முன்தினம் அவனியாபுரத்திலும், மாட்டுப் பொங்கல் தினமான நேற்று பாலமேட்டிலும்,  உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது.

ரஜினிகாந்த் வீட்டுக்கு வருமான வரித்துறை ஒருபோதும் .... ஏன்?

சையத் சுபஹான் : ஆகச் சிறந்த காரியக் குடிகாரன்....
முத்து, படையப்பா எல்லாம் வெற்றியாக இருக்கலாம், ஆனால் கே.எஸ்
ரவிக்குமார் உடைய இரண்டு படங்கள் தோல்வியாகிய பிறகு அவருக்கு ரஜினி வாய்ப்பே வழங்கவில்லை,
சந்திரமுகி வெற்றியாக்கிய பி. வாசு விற்கு குசேலன் தோல்விக்கு பிறகு ரஜினி வாய்ப்பு வழங்கவில்லை,
இன்று வரை தன்னுடைய TITLE CARD யின் பின்னால் வரக்கூடிய இசையை வடிவமைத்த தேவா விற்கு, திரைத்துறையில் இன்று வரை உச்சத்தில் இருக்கும் ரஜினி ஏதும் மறுவாய்ப்பு கிடைக்க உதவினாரா என்று தெரியவில்லை,
கபாலி வெற்றிக்கு பிறகு ரஜினி தொடர்ந்து ரஞ்சித்துக்கு வாய்ப்பு கொடுத்தால் கூட சாமர்த்தியமாக கலைப்புலி தாணுவை கழட்டிவிட்டவர், வசூல் கொடுத்து பெயர் பெற்ற கபாலி திரைப்படத்தின் இயக்குனர், இசையமைப்பாளர் என்று அதே கூட்டணியில் மற்றுமொரு வெற்றியை சுவைக்க எண்ணிய ரஜினிகாந்த் பணத்தை மட்டும் வேறுஒருவருக்கு தர மனமில்லாமல் கபாலி தயாரிப்பாளர் தாணுவை கழட்டி விட்டு தன்னுடைய மருமகனை தயாரிப்பாளராக ஆக்கியவர்.
மேலே குறிப்பிட்ட நபர்களை போல தான் ரஜினிகாந்த்தின் ரசிகர்களும் அவருக்குள் அடங்குவர்..
ரஜினிகாந்த் என்கிற தனி மனிதர் ஆகசிறந்த காரியக்காரன், தன்னுடைய தனி வெற்றிக்காக அந்த அந்தக் காலகட்டத்தில் பலரை பயன்படுத்திக்கொண்டவர்.
திரை வெற்றி என்றால் எதையுமே யோசிக்கமாட்டார்,

சினிமா வெறியின் 40 ஆண்டுகள்

Ravi Palette : என்னுடைய வண்ண உள் ஓவியங்களுடன் நேர்த்தியான புத்தக வடிவமைப்பில், ஷாஜி எழுதிய ‘சினிமா வெறியின் 40 ஆண்டுகள்’ புத்தகம் டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடாக வந்திருக்கிறது. தமிழில்
முதன்முறையாக முழுவண்ண ஓவியங்களுடன் அநேகமாக இந்தப் புத்தகம்தான் வெளிவந்திருக்கிறதென நினைக்கிறேன்.
தலைப்புதான் சினிமா வெறியென ஆரம்பிக்கிறதே தவிர, சினிமா சம்பந்தப்பட்ட புத்தகமென இல்லை,
இது நம் எல்லோரையும்போலவே சினிமா வியப்பில் ஆழ்ந்த, மலைக்கிராமத்தில் பிறந்த ஒரு எளிய வறிய சாமானியனின் வாழ்வியல் அனுபவம் என்பது இத்தொடரை முழுமையாக வாசித்தவர்களுக்குத் தெரியும்.
நான் இந்தக் கேரள மலைப்பகுதிகளில் கொஞ்சம் அலைந்துதிரிந்திருக்கிறேன் என்பதால் இத்தொடர் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாகவும் ஆத்மார்த்தமாகவும் இருந்தது.
இதை முழு புத்தகவடிவில் மாத்ருபூமி வெளியீடாக மலையாளத்தில் எனது கோட்டோவியங்களுடன் வெளிவந்திருந்தாலும், வழக்கமான புத்தக வடிவமில்லாமல் சிறப்பான வடிவமைப்புடன் வண்ணப்புத்தகமாக காணும்போது இன்னும் அழகாக இருக்கிறது.

அனந்தரங்கம் பிள்ளை டைரி குறிப்புகள்: எளிய வடிவில் சென்னை புத்தக கண்காட்சியில்

படிக்க எளிய வகையில் அனந்தரங்கம் பிள்ளை டைரி குறிப்புகள்அனந்தரங்கம்BBC : 18ஆம்  நூற்றாண்டின் துவக்கத்தில் ஃப்ரெஞ்ச் கிழக்கிந்திய கம்பெனியில் மொழிபெயர்ப்பாளராக இருந்த அனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகள், தற்காலிக வாசிப்புக்கு ஏற்ற வகையில் திருத்தப்பட்டு, மீண்டும் வெளியிடப்பட்டுள்ளன.
படிக்க எளிய வகையில் அனந்தரங்கம் பிள்ளை டைரி குறிப்புகள்தற்போது சென்னையில் நடந்துவரும் புத்தகக் கண்காட்சியை ஒட்டி இந்தப் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையில் பிறந்த அனந்தரங்கம் பிள்ளை, புதுச்சேரியின் ஃபிரெஞ்சு ஆளுநராக த்யூப்ளே இருந்தபோது, 1746ல் தலைமை மொழிபெயர்ப்பாளராக நியமிக்கப்பட்டார். 1756வரை அவர் அந்தப் பதவியில் இருந்துவந்தார். 1761ல் அவர் மரணமடையும்வரை, தொடர்ச்சியாக நாட்குறிப்பில் அன்றாட நிகழ்வுகளைப் பதிவுசெய்துவந்தார். 1736 செப்டம்பர் 6ஆம் தேதி முதல், அவர் மரணமடைவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக, அதாவது 1761 ஜனவரி பத்தாம் தேதிவரை இந்த நாட்குறிப்புகளை சுமார் 25 ஆண்டுகளுக்கு அவர் தொடர்ச்சியாக பதிவுசெய்து வந்திருக்கிறார்.

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் ... சிதம்பரம் போன்றோர் தயங்கியது ஏன்?


Mohamed Rafi : ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளாரக அறிவிக்க தடை போட்டதே சிதம்பரம் போன்ற மூத்த காங்கிரஸ் தலைவர்கள் தான்.
அதை எல்லாம் மீறி திமுக தலைவர் ஸ்டாலின் தான் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தான் எங்களின் பிரதமர் வேட்பாளர் என அறிவித்தார். அதை ஆமோதிக்ககூட சிதம்பரம் உட்பட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பலர் முன்வரவில்லை. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் கூட காங்கிரஸ் பிரதமர் வேட்பாளரை அறிவிக்காமல் தேர்தலை சந்தித்து படுதோல்வியடைந்தது.
இந்த லட்சணத்தில் திமுக தலைவரை முதல்வராக விடாமல் திமுக மூத்த தலைவர்கள் செயல்படுகிறார்கள் என காங்கிரஸ் கட்சியின் சில அல்றசில்லறைகள் பேசிட்டு இருக்காங்க....
தமிழகத்தில் கிராமம், நகரம், படித்தவர் என எல்லா மட்டத்திலும் சிறியவர் முதல் பெரியவர்வரை தெரிந்த அரசியல் முகம் ஸ்டாலின். தமிழக மக்களுக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் மீது நீண்ட நாட்களாக ஒரு சாப்ட்கார்னர் இருக்கிறது அது கண்டிப்பாக வரும் தேர்தலில் பெரிய வெற்றியை கொடுக்கும்.
எடப்பாடியின் அடிமைத்தனம் தமிழகம் அறிந்தது. அடுத்த தேர்தலில் அதிமுக மற்றும் பிற உதிரிக்கட்சிகளின் தொண்டர்களே திமுகவுக்கு மட்டுமே ஓட்டு போடுவார்கள்..

மலேசியா பாமாயில் .. சொந்த செலவில் சூனியம் வைத்து கொண்ட இந்திய அரசு

Mahalaxmi : பாமாயில்_வாங்க_மாட்டங்களாம்
குடியிருப்பு சட்டத்திற்கு எதிராக மலேசியா பிரதமர் பேசியதிற்கு இந்திய அரசு பாமாயில் வாங்க மறுப்பு எதற்கும் கவலை கொள்ளாத மலேசியா அரசு பணத்திற்காக வாய் மூடி நிற்க முடியாது என்று திட்டவட்டமாக கூறி உள்ளது
கடந்த ஆண்டு மலேசியாவில் இருந்து அதிகமான எண்ணெய் வாங்கிய நாட்டில் இந்தியா முதலிடம் இந்திய அரசாங்கத்தால் மலேசியா அரசுக்கு எண்ணெய் வணிகத்தில் லாபம் அதிகம்
பொருளாதாரத்தில் கைவைத்தால் மலேசியா அரசு தனது கருத்தை பின் வாங்கி கொள்ளும் என்று எண்ணிய இந்திய அரசு, எண்ணெய் வணிகத்தில் கைவைத்தது
அதற்கு சற்றும் கவலை கொள்ளாத மலேசியா அரசு, இந்தியா என்பது பெரிய சந்தை தான் ஆனால் அதற்காக அநீதியை கண்டு வாய்மூடி இருக்க முடியாது இந்தியா எண்ணெய் வாங்கவில்லை என்றால் பிலிப்பைன்ஸ் சவுதி பாகிஸ்தான் மியான்மர் எகிப்து வியட்நாம் அல்ஜீரியா எத்தொப்பியா மற்றும் ஜோர்டான் நாட்டில் நமது எண்ணெய்களை விற்பனை செய்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்துள்ளது
மலேசியா பயந்து விடும் என்று நினைத்த இந்திய அரசு தனது கணக்கு தவறியதால் நிச்சயமாக வருங்காலத்தில் எண்ணெய் பற்றாக்குறை இந்தியாவுக்கு வர வாய்ப்புள்ளதை கருதி மலேசியாவை விட 10% விலை அதிகம் கொடுத்து இந்தோனேசியாவில் எண்ணெய் இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது
இதில் என்ன வேடிக்கை என்றால் , இன்றுவரை தனது எண்ணெய் சந்தையை பூர்த்தி செய்ய இந்தோனேசியா மலேசியாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து கொண்டு இருக்கிறது

வியாழன், 16 ஜனவரி, 2020

ஜல்லிக்கட்டு: 16 காளைகளை பிடித்து பரிசாக காரை தட்டிச்சென்ற இளைஞர்...


palamedu jallikattu event nakkeeran : மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்க 700 காளைகளுக்கும், 923 மாடுபிடி வீரர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
மேலும், பாதுகாப்பிற்காக 1500க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியமர்த்தப்பட்டு இருந்தனர். இந்நிலையில் ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான குழுவின் மேற்பார்வையில் நடைப்பெற்ற இந்த நிகழ்வில் 659 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.
இதில் 26 பேர் காயமடைந்தனர்.>
இதில் மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் களத்தில் நின்ற ரமேஷ் என்பவரின் காளைக்கு முதல் பரிசாக காங்கேயம் பசு,கன்றுக்குட்டி வழங்கப்பட்டது. செல்வம் என்பவரின் காளைக்கு 2ஆம் பரிசு வழங்கப்பட்டது. அதேபோல 16 காளைகளை பிடித்து முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர் பிரபாகரனுக்கு பரிசாக மாருதி கார் வழங்கப்பட்டது. 13 காளைகளை பிடித்த ராஜா இரண்டாம் இடத்தையும், 10 காளைகளை பிடித்த கார்த்திக் என்பவர் 3ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

இலங்கை குடியுரிமை குறித்து நீங்கள் அறிந்ததும் அறியாததும்!

indianexpress.com   : 1964இல் விண்ணப்ப காலம் முடிவுற்ற நிலையில் 1,62,000 தமிழர்களுக்கு மட்டுமே இலங்கை குடியுரிமை வழங்கப்பட்டது. இந்தியா 3,50,00 க்கும் அதிகமானவர்களுக்கு குடியுரிமை வழங்கியது.
: Story of Sri Lanka’s citizenship law : 2019ம் ஆண்டு, டிசம்பர் மாதம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் “புதிய குடியுரிமை சட்டம்” தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் இந்தியா கடந்த காலத்தில் சிறப்பு காரணங்களுக்காக இந்தியாவிற்கு தப்பி ஓடிவந்த வெளிநாட்டவருக்கு சிறப்பு உரிமைகளின் கீழ் குடியுரிமை வழங்கியுள்ளது என்று கூறியிருந்தார்.  4.61 லட்சம் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை 1964-2008 காலங்களில் வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். இது 1964ம் ஆண்டு இலங்கையில் வாழ்ந்து வந்த இந்திய பூர்விக தமிழர்கள் குறித்து சாஸ்திரி-பண்டாரநாயக்கே இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தை மேற்கோள் காட்டியுள்ளனர். வெளியிடப்பட்ட இந்த அறிக்கை அவ்வளவு துல்லியமானதாகவும் இல்லை. ஆனால் இலங்கை சுதந்திரம் பெற்ற சில மாதங்களிலேயே இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டதால் ஏற்பட்ட விளைவினை மேற்கோள்காட்டுகிறது.
1948ம் ஆண்டு, நவம்பர் மாதம் இலங்கையில் கொண்டு வரப்பட்ட குடிமக்கள் சட்டம், இலங்கையில் எடுக்கப்பட்ட மிக முக்கியமான பிளவு நடவடிக்கைகளில் ஒன்றாகும். அரசியல் தளங்களில் முக்கிய முடிவுகளை எடுக்க பெரும்பான்மை சமூகத்தினரான சிங்களர்களுக்கு மட்டுமே உரிமை அளிக்கப்படும் வகையில் உருவாக்கப்பட்ட நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

பாஜக தேசிய தலைவராக ஜே பி நட்டா பதவி ஏற்பு?

வெப்துனியா: பாஜக தேசிய தலைவராக ஜே.பி.நட்டா வரும் 22 ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்தியில் ஆளும் தேதிய கட்சியான பாஜகவில் ஒருவருக்கு ஒரு பதவி மட்டுமே என்ற விதி பின்பற்றப்படுவதால், மத்திய உள்துறை அமைச்சராக பதவி வகித்து வரும் அமித்ஷா, கட்சித் தலைவராக தொடர்ந்து பதவி வகிக்க முடியாது.
ஆனால், அமித்ஷா கடந்த சில மாதங்களாக இரு பதவிகளில் இருந்து வந்தார். எனவே, பாஜகவுக்கு புதிய தலைவரை நியமிக்க முடிவுசெய்யப்பட்டு தற்போது இது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தகவலின் படி, பாஜக தேசிய தலைவராக ஜே.பி.நட்டா வரும் 22 ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே இவர் தான் தலைவராவர் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த தகவல் இதனை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. ஜே.பி.நட்டா ஏற்கனவே மோடி அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

5,000-க்கும் மேற்பட்ட தற்காலிக ஆசிரியர்கள் பதவி விலகினர்... தமிழக அரசால் தற்காலிகமாக ...

5,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ராஜினாமா... காரணம் என்ன?zeenews.india.com : மாநில அரசின் பதிலில் திருப்தி இன்றி, பல்வேறு அரசு நடத்தும் பள்ளிகளில் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட 5,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தங்கள் வேலையை ராஜினாமா செய்துள்ளனர் என்னும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது!
முன்னாள் முதல்வர் J.ஜெயலலிதாவின் பதவிக்காலத்தில் ரூ.5 ஆயிரம் ஒருங்கிணைந்த சம்பளத்துடன், 2011-ஆம் ஆண்டில் சுமார் 16,700 ஆசிரியர்கள் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியத்தின் (TNTRB) மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கின்றார்.
"இந்த ஆசிரியர்கள் 6,7 மற்றும் 8-ஆம் வகுப்புகளை மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கற்பிக்க நியமிக்கப்பட்டனர்," என்று அவர் தெரிவித்துள்ளார்
2016-ஆம் ஆண்டில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, ​​அவர்களின் சம்பளம் மாதத்திற்கு ரூ.7,000 ஆகவும், 2017-ல் அவர்களின் ஊதியம் 7,700 ஆகவும் உயர்த்தப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு.. ஒருவர் உயிரிழப்பு .. திருச்சி சூரியூரில்...

ஜல்லிக்கட்டு: விளையாட்டும் மரணமும்!மின்னம்பலம் : பொங்கல் பண்டிகையை ஒட்டி நடந்துவரும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு இடையே மாடு முட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் போன்ற பகுதிகளில் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு போன்ற வீரவிளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று( ஜனவரி 15) பொங்கலை முன்னிட்டு அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்ற நிலையில், மாட்டுப் பொங்கல் தினமான இன்று(ஜனவரி 16) பாலமேடு பகுதியில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான குழுவின் கண்காணிப்பில் நடைபெற்று வரும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட ஆட்சியர், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் பார்வையிட்டு வருகின்றனர். 700-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்க உள்ள இந்தப் போட்டியில் அவற்றை அடக்க ஆயிரக்கணக்கான வீரர்கள் களமிறங்கியுள்ளனர்.

இந்துநேசன் . துக்ளக். குமுதம், ஜூனியர் விகடன் . (மஞ்சள்) இன்வெஸ்டிகேடிவ் ஜேர்ணலிஸ்ம்?

Krishnavel T S : 1940களில் சினிமா தூது என்ற பெயரில் லட்சுமிகாந்தன் என்ற நபர் ஒரு பத்திரிக்கை நடத்தி வந்தார்
இவரது வேலை மிகவும் சிம்பிள் சினிமாவில் இருக்கும் நடிகர் நடிகைகள் இயக்குனர்கள் பற்றி ஆபாச கிசுகிசுக்கள் எழுதி வெளியிடுவது மட்டுமே
பிரபலமானவர்களை பணம் கேட்டு மிரட்டுவது அவர்கள் கொடுக்க மறுத்தால் அவர்களை பற்றி கேவலமாக ஆபாசமாக தன் பத்திரிகையில் எழுதுவது
அந்த சினிமா தூது பத்திரிக்கை பின்னர் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது
உடனே லட்சுமிகாந்தன் இந்து நேசன் என்ற பத்திரிக்கையை விலைக்கு வாங்கி தன் ஆபாச பணியை சாரி ஆராய்ச்சிப் பணியை அதாவது இன்வெஸ்டிகேடிவ் ஜேர்ணலிஸ்ம் பணியை தொடர்ந்து கொண்டிருந்தார்
அந்த இந்து நேசன் பத்திரிக்கை மக்கள் மஞ்சள் பத்திரிக்கை என்று சொல்வார்கள்
இந்த நிலையில் 1944இல் வேப்பேரி அருகே அவர் கொலை செய்யப்பட்டார்
அந்த வழக்கில் அப்போது திரை உலகத்தின் உச்சத்திலிருந்த என் எஸ் கிருஷ்ணன் தியாகராஜபாகவதர் ஆகிய இருவர் பார்ப்பனர் அல்லாதவர் என்ற ஒரே காரணத்தால் அந்த வழக்கில் இணைக்கப்பட்டு மூன்று நான்கு வருடங்களுக்குப் பிறகு அவர் குற்றவாளி இல்லை என்று விடுவிக்கப்பட்டார்கள்
லட்சுமிகாந்தன் தன் பத்திரிக்கையில் எத்தனையோ பார்ப்பன நடிகர் நடிகைகளை பற்றி ஆபாசமாக எழுதி இருந்தாலும் அவர்கள் யாரையும் அந்த வழக்கில் இணைக்கவில்லை

காணும் பொங்கல்: கடலில் கால் வைக்க தடை


minnamblam : காணும் பொங்கல் அன்று சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடமான மெரினா, பெசன்ட்நகர், நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
பொங்கல் பண்டிகையையொட்டி கடற்கரைகள், கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்ட முக்கிய இடங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பாக, காணும் பொங்கல் (ஜனவரி 17) அன்று மெரினா, பெசன்ட்நகர், நீலாங்கரை போன்ற கடற்கரையில் அதிகமாக மக்கள் கூடுவர். இதனால், பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

பெரியார் விருது செஞ்சி ராமச்சந்திரனுக்கு... ஸ்டாலின் கேள்விக்கு பதில்

பெரியார் விருது குறித்து ஸ்டாலின் கேள்வி:தந்தை பெரியார் விருது செஞ்சி ராமச்சந்திரனுக்கு அறிவிப்பு
தினத்தந்தி : பெரியார் விருது குறித்து ஸ்டாலின் கேள்வி:தந்தை பெரியார் விருது செஞ்சி ராமச்சந்திரனுக்கு அறிவிப்பு பெரியார் விருது அறிவிக்கப்படாதது குறித்து ஸ்டாலின் கேள்வி எழுப்பிய நிலையில், 2019ஆம் ஆண்டின் தந்தை பெரியார் விருது செஞ்சி ராமச்சந்திரனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் தந்தை பெரியார் விருது யாருக்கு என்பது அறிவிக்கப்படவில்லை. கடந்த
ஆண்டு முன், சொந்தக் கட்சியைச் சேர்ந்தவருக்கு வழங்கியதைப் போல் இந்தாண்டு வழங்க ஆள் இல்லையா? அல்லது டெல்லி எஜமானர்களின் மனம் குளிர்வதற்காக தவிர்க்கப்பட்டுள்ளதா? என  திமுக ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில் 2019ம் ஆண்டுக்கான தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி விருதுகள் அறிவிக்கப்பட்டன. கபிலர் விருது - புலவர் வெற்றி அழகன், உ.வே.சா. விருது - வெ.மகாதேவன், கம்பர் விருது - முனைவர் சரஸ்வதி ராமநாதன், அம்மா இலக்கிய விருது - உமையாள் முத்து உள்ளிட்ட பல விருதுகள் அறிவிக்கப்பட்டன.

பொங்கல் இந்து பண்டிகை; இஸ்லாமிய மாணவர்கள் கொண்டாட கூடாது' - மலேசிய அரசு


பிரதமர் மகாதீர் மொஹமத்மலேசிய மனிதவளத் துறை அமைச்சர் குலசேகரன்BBC :பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களில் இஸ்லாமிய மாணவர்கள் பங்கேற்கக் கூடாது என்று அறிவுறுத்தி மலேசிய கல்வித்துறை சார்பில் அந்நாட்டில் இயங்கும் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை இந்துக்களால் கொண்டாடப்படுவது என்றும், அதற்கும் இஸ்லாத்துக்கும் எந்தவகையிலும் தொடர்பில்லை என்றும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக மலேசிய ஊடகங்ககள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜனவரி 13ஆம் தேதியிட்ட இந்தச் சுற்றறிக்கை மலேசியக் கல்வி அமைச்சகத்தின் சார்பாக அனைத்து மாநில கல்வித்துறை இயக்குநர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இஸ்லாமிய வளர்ச்சித் துறை சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் பொங்கல் பண்டிகையானது ஒரு சமயப் பண்டிகை என்றும், அதில் இஸ்லாமியர்கள் பங்கேற்கக் கூடாது என்றும் முடிவெடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

உதயநிதி : பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே திமுகக்காரன்!

polimernews.com:  முரசொலியை கையிலேந்தி, பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே திமுகக்காரன் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக இளைஞரணி செயலாளரான அவர் தமது டுவிட்டர் பக்கத்தில், முதல்வர்னா முத்தமிழறிஞர், தலைவன்னா புரட்சித் தலைவன், தைரியலெட்சுமினா அம்மா- என்று கால்நூற்றாண்டாக கால்பிடித்து காலம்கடத்தி ‘தலைசுத்திருச்சு’ என நிற்கும் காரியக்காரருக்கு மத்தியில், முரசொலியை கையிலேந்தி, பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே திமுகக்காரன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் திமுகக்காரன் என்றும் பொங்கல் வாழ்த்துகள் என்றும் அவர் கூறி உள்ளார். சென்னையில் நடைபெற்ற துக்ளர் இதழ் விழாவில் பேசிய ரஜினி, முரசொலி வைத்திருந்தால் திமுக காரன் என்பார்கள். துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள் என்று பேசியது குறிப்பிடத்தக்கது.

புதன், 15 ஜனவரி, 2020

உங்களை நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்களா?... ஆரம்பம் இன்றே ஆகட்டும் ..

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் அறிவு மிக மிக அபூர்வமானது. நிச்சயமாக அது ஒரு நிகரற்ற அறிவுதான்.
அவரவர்களுக்கு ஏற்ற தேவையான அறிவு ஒவ்வொரு ஜீவராசிக்கும் மிக சரியாகவே உள்ளது.
நாம் இயற்றி கொண்ட அளவுகோல்கள் மிகவும் குழந்தைத்தனமாக இருப்பது போல்தான் தெரிகிறது.
ஆத்மீக வேட்கை உள்ளவர் எப்பொழுதும் சாந்த சொருபியாக சுயநலம் அற்று பரோபகார சிந்தை உள்ளவராக இருக்கவேண்டும் . அத்தோடு அவர் மிகவும் சக்தி வாய்ந்தவராக இருக்கவேண்டும் . அதாவது அமானுஷ்யமான மர்ம சக்திகள் உள்ளவராகவும் இருக்கவேண்டும் போன்ற எதிர்ப்பார்ப்புக்கள் நமக்குள் குடி கொண்டுவிட்டது.
;நாம் இது போல ஏராளமான கோட்பாடுகளை கண்டு பிடித்திருக்கிறோம்.
இந்த வகை கோட்பாடுகள் ஒரு வகையில் கோழிக்கூடுகள் போன்றவை.
இதில் வளர்க்கப்பட்ட  நாமும் ஒருவகை பிராய்லர் கோழிக்குஞ்சுகள் போலத்தான் வாழ்கிறோம்.
இந்த பிரபஞ்சத்தின் இயக்கம் பற்றியும் நமது பிறப்பு இறப்பு போன்ற வாழ்க்கை சங்கிலி தொடர் பயணம் பற்றியும் எதுவித சுய ஆராய்ச்சியும் மேற்கொள்ள தெரியாமல் இருக்கிறோம்.
எமது அடிப்படை கேள்விகளுக்கு எந்தவித சுய சந்தேகமும் கொள்ளாமல் சமுதாயம் கூறும் பதில்களை அப்படியே விழுங்கி கொண்டிருக்கிறோம்.
அதற்கு காராணம் நாம் சுயமாக வளரவே இல்லை என்பதுதான்.
பிரபஞ்சம் பற்றிய எல்லா கேள்விகளுக்கும் பதில்களை மதங்கள் எறிகின்றன.
அந்த பதில்கள் பிராய்லர் குஞ்சுகளுக்கு போடுவது போன்ற உணவு போன்றதாகும் .

பெண்களுக்கான ஜல்லிக்கட்டு? திருச்செங்கோட்டில் ஏராளமானோர் பங்கேற்பு



modern-jallikattu-for-women-a-large-number-of-participants-in-thiruchengodehindutamil.in/ : நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பெண்களுக்காக மட்டுமே நடத்தப்படும் நவீன ஜல்லிக்கட்டுப் போட்டி வெகுசிறப்பாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஏராளமான பெண்கள், சிறுமிகள் கலந்து கொண்டனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நந்தவனத் தெரு பகுதியில் கடந்த 11 ஆண்டுகளாக பெண்கள் மற்றும் சிறுமிகள் மட்டுமே கலந்துகொள்ளக் கூடிய நவீன ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று நடைபெற்றது. ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் காளையர்கள் காளைகளைப் பிடிப்பது வழக்கம் . இதில் பெண்களுக்கு அனுமதியில்லை. இது குறித்த நகைச்சவையாக சிந்தித்த இந்தப் பகுதி இளைஞர்கள் நவீன ஜல்லிக்கட்டு என்ற பெயரில் ஒரு போட்டியை ஏற்பாடு செய்து அந்தப் போட்டியில் கோழியைப் பிடிப்பது என்றும் அதுவும் பெண்கள் மட்டும் இதில் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவித்து நடத்தி வருகின்றனர்.

3 நாட்களில் 32,000 பேரை குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் அடையாளம் கண்ட உத்தரப்பிரதேச அரசு


BBC :இந்தியா முழுவதும் பெரும் போராட்டங்கள் நடைபெறக் காரணமாக குடியுரிமை திருத்த சட்டம் இருந்தது.
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்த 32 ஆயிரம் அகதிகளை உத்தரப்பிரதேச மாநில அதிகாரிகள் அடையாளம் கண்டு, அவர்களது விவரங்கள் கொண்ட பட்டியலை இந்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் நோக்கில் இந்தப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து வந்த, அந்த நாடுகளின் சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த அகதிகள் பற்றிய தகவல்களை இந்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பிய முதல் மாநிலமாக உத்தரப்பிரதேசம் விளங்குகிறது.
ஜனவரி 10ஆம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியா முழுவதும் அமலுக்கு வந்தது. இது அமலான மூன்றே நாட்களில் 32 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பெரியாரின் உயரம், ‘சோ சாருக்கும்’ ரஜினி சாருக்கும் புரியவே புரியாது! - சுப. வீரபாண்டியன் பதிலடி!

suba vee about rajini speech in thuglak function
nakkheeran.in - அதிதேஜா : துக்ளக் இதழின் 50 ஆவது ஆண்டுவிழாவில் நடிகர் ரஜினிகாந்த பேசியது குறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், 1971 ஆம் ஆண்டு பெரியார் நடத்திய ஊர்வலம் குறித்து ரஜினி பேசியதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன், தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார்.  இதோ அவரது முகநூல் பதிவு -
 ‘பொங்கல் நாளில் மகிழ்ந்து பொங்கும் நிலையைத்  தாண்டி, நேற்றையப் பொய்களைக் கண்டு பொங்கும் மனத்துடன் இந்தப் பதிவை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.  14.01.2020 அன்று சென்னையில் நடைபெற்ற துக்ளக் ஆண்டுவிழாவில் பேசிய திரு. ரஜினி, "1971 சேலத்தில் பெரியார் அவர்கள்,  ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சிலை, அது வந்து உடையில்லாம,  செருப்பு மாலை போட்டு ஊர்வலமா எடுத்துட்டுப்போனாரு" என்று பேசியுள்ளார். "அதனை எதிர்க்க வேறு எந்தப் பத்திரிகைக்கும் தைரியம் இல்லாதபோது, சோ சார், துணிச்சலா அட்டைப்படத்துலயே போட்டு விமரிசிச்சாரு" என்றும் பேசியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்துக்கு விசா வழங்க இலங்கை அரசு மறுப்பு?

நடிகர் ரஜினிகாந்துக்கு விசா வழங்க இலங்கை அரசு மறுப்பு?தினத்தந்தி : யாழ்ப்பாணத்திற்கு வருகை தர உள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு விசா வழங்க இயலாது என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
கொழும்பு இலங்கை வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன், சமீபத்தில் சென்னை வந்திருந்த போது, நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்தார். அப்போது, இலங்கைக்கு வருமாறு, ரஜினிகாந்துக்கு அவர் அழைப்பு விடுத்து இருந்தார்.
இந்த நிலையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தர உள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு விசா வழங்க இயலாது என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை- துரைமுருகன்

கேஎஸ் அழகிரிதிமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை- துரைமுருகன்மாலைமலர் : திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை என்று காட்பாடியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.
தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் உள்ளாட்சி தேர்தல் இடஒதுக்கீடு தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இலைமறை காயாக இருந்த இந்த பிரச்சினை, மறைமுகத் தேர்தலின்போது வெளிச்சத்துக்கு வந்தது. தி.மு.க., கூட்டணி தர்மத்தை மீறி விட்டதாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேரடியாக குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டார். மறைமுகத் தேர்தலிலும் தி.மு.க.வை விட கூடுதல் இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது.
அதாவது, மறைமுக வாக்கெடுப்பின்போது, தி.மு.க.வை காங்கிரஸ் கைவிட்டது வெளிப்படையாகவே தெரிந்தது. இது தி.மு.க. தலைமையை கோபம் கொள்ளச் செய்தது. குறிப்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் அதிருப்தியில் இருந்து வந்தார். டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில், முதலில் தி.மு.க. முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு எம்.பி. பங்கேற்பதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அது ரத்து செய்யப்பட்டது.

இடைத்தேர்தலுக்கு முன் ஏன் இந்த ஞானம் வரவில்லை? - துரைமுருகனுக்கு கார்த்தி சிதம்பரம் கேள்வி

இடைத்தேர்தலுக்கு முன் ஏன் இந்த ஞானம் வரவில்லை? - துரைமுருகனுக்கு கார்த்தி சிதம்பரம் கேள்விமாலைமலர் : இடைத்தேர்தலுக்கு முன் ஏன் இந்த ஞானம் வரவில்லை? என திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு, கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார். < சென்னை: தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் உள்ளாட்சி தேர்தல் இட ஒதுக்கீடு தொடர்பாக பிரச்சனை இருந்து வந்தது. இலைமறை காயாக இருந்த இந்த பிரச்சனை, மறைமுகத் தேர்தலின்போது வெளிச்சத்துக்கு வந்தது.
தி.மு.க., கூட்டணி தர்மத்தை மீறிவிட்டதாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேரடியாக குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டார். மறைமுகத் தேர்தலிலும் தி.மு.க.வை விட கூடுதல் இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது. அதாவது, மறைமுக வாக்கெடுப்பின்போது, தி.மு.க.வை காங்கிரஸ் கைவிட்டது வெளிப்படையாகவே தெரிந்தது. இது தி.மு.க. தலைமையை கோபம் கொள்ளச் செய்தது. குறிப்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் அதிருப்தியில் இருந்து வந்தார்.

ஜல்லிகட்டு சீறும் 700 காளைகள்.. களமிறங்கிய 730 வீரர்கள்.. அவனியாபுரம் ... வீடியோ ஜல்லிக்கட்டு!


/tamil.oneindia.com : சென்னை: தமிழர் பண்டிகையான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு,
மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி மிக சிறப்பாக நடந்து வருகிறது. தமிழர் பண்டிகையாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. எல்லா மதத்தினரும் இயற்கையை போற்றி இந்த பொங்கல் பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.
தமிழர் மரபுகளை நினைவு கூறுவதும், பாரம்பரியத்தை நினைவு கூறுவதும், பழமையை நினைவு கூறுவதும் இந்த பண்டிகையின் முக்கிய நோக்கம் ஆகும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளில் உரிய அனுமதியுடன், மாபெரும் பாதுகாப்புடன் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் பாராமபாரியமான மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது.
இதனால் அவனியாபுரம் பகுதியில் மாபெரும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த போட்டி நடக்கிறது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் கண்காணிப்பில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் அசம்பாவிதத்தை தவிர்க்கும் வகையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வீரர்களுக்கும், மாடுகளுக்கும் உதவும் வகையில் மருத்துவர்கள், கால் நடை மருத்துவர்கள் அங்கு உள்ளனர்.

முரசொலி படித்தால் திமுககாரர் .. துக்ளக் படித்தால் அறிவாளி .. ரஜினி பேச்சு .... வீடியோ


tamil.oneindia.com : சென்னையில் துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு சிறப்பு மலரை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டார். இதை நடிகர் ரஜினிகாந்த் அவரிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.
உழைப்பு முக்கியம் இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது, உழைப்பால் உயர்ந்து துணை குடியரசு தலைவர் ஆனவர் வெங்கையா நாயுடு. பத்திரிகைத் துறையை ஆயுதமாக கையில் எடுத்தவர் சோ.பெரியாரை கடுமையாக விமர்சித்தவர் சோ. இந்து கடவுள்களை பெரியார் விமர்சித்ததை யாருமே எழுதவில்லை. ஆனால் சோ மட்டும் தைரியமாக துக்ளக்கில் எழுதினார்.
அப்போதைய முதல்வர் கலைஞர்  அதை கடுமையாக எதிர்த்தார். இதனால் துக்ளக் பத்திரிக்கை நாடு முழுக்க பிரபலம் அடைந்தது.
கலைஞர்  துக்ளக் பத்திரிகைக்கு இலவச விளம்பரம் செய்ததாக சோ குறிப்பிட்டு இருந்தார். அ
ரசை பலமுறை கடுமையாக விமர்சித்தவர் சோ.
கலைஞர்  எப்படி சோ போன்ற பத்திரிக்கையாளர்கள் தற்போது அதிகம் வேண்டும்.பத்திரிக்கைகள் நடு நிலையுடன் செயல்பட வேண்டும். உண்மையில் பொய் என்ற தண்ணீரை கலக்க கூடாது.
எது பால், எது தண்ணீர் என்று பத்திரிக்கையாளர்தான் சொல்ல வேண்டும்.

Chennai book fair அரசை சார்ந்துதான் செயல்பட வேண்டியிருக்கிறது: Bapasi பபாசி தலைவர் பேட்டி


BBC : தற்போது நடந்துவரும் சென்னை புத்தகக் கண்காட்சியில் தமிழக அரசுக்கு எதிரான புத்தகங்களை விற்றதாகக் கூறி, பத்திரிகையாளர் அன்பழகன் என்பவரை வெளியேற்ற முயன்றபோது ஏற்பட்ட தகராறை அடுத்து, அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் பெரும் சர்சையாக உருவெடுத்தது. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது, தென்னிந்திய புத்தக பதிப்பாளர் - விற்பனையாளர் சங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதெல்லாம் குறித்து, செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார் அதன் தலைவர் ஆர்.எஸ். சண்முகம். அவரது பேட்டியிலிருந்து:  
கே. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது?
ப. எங்கள் சங்கம் 400 உறுப்பினர்களைக் கொண்ட சங்கம். அவர்களுக்காகவே நாங்கள் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சியை ஏற்பாடு செய்து நடத்திவருகிறோம். அதை ஒட்டி எங்கள் சங்கத்தில் உறுப்பினரல்லாத, புத்தகங்களை வெளியிடுகிற பதிப்பாளர்கள் சிலரும் இங்கே அரங்கு வேண்டுமென கேட்பது வழக்கம். அதன்படி பலருக்கு அரங்குகளை ஒதுக்குவது வழக்கம். 1976ல் 27 பேரோடு இந்த புத்தகத் திருவிழா துவங்கப்பட்டது. இன்று 43 ஆண்டுகளுக்குப் பிறகு, விஸ்வரூபம் அடைந்திருக்கிறது.

செவ்வாய், 14 ஜனவரி, 2020

நம்மை அடையாளமாக்கும் முதல் முயற்சிதான் தமிழ் நாடு என்ற பேர் மாற்றம்

Devi Somasundaram : தமிழ் நாடு என்ற பேர் எத்தனை முக்கியமானது ? .
மனிதர்களை எப்படி அடையாளப் படுத்துவோம்...உள்ளூர்ல ரோட்ல போனா " போறது தெக்கு தெரு சிவசாமி இருக்கார்ல அவர் மூத்த பையன்" ..நம்மை பற்றி பேசுகிறவர்கள் அவர்கள் ஏற்கனவே அறிந்து வைத்துள்ள அடையாளத்தில் இருந்தே மனிதர்களை அடையாள படுத்துவார்கள்.
சென்னைல தின்னவேலியா தம்பின்னு ஊர் பேர் அடையாளமாகும் .டெல்லில மதராஸியா என்ற அடையாளம்..வெளினாட்ல இண்டியனா என்ற அடையாளம்... இப்படி உலகம் எதை அறிந்து வைத்திருகிறதோ அப்படி தான் அடையாள படுத்த படுவோம்.
உலகம் முழுக்க indigenous மனிதர்கள் இருக்கிறார்கள்... Aboriginal எனப்படும் புவி அமைப்பு சார்ந்து கலோனியல் ஆதிக்கத்தால் தன் இன அடையாளம் பாதிக்கபடும் மக்கள் தன் சுதந்திர வரலாற்றை ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா என்று உலகம் முழுவதும் பதிவு செய்திருக்கிறார்கள்..

உ.பி. ஆஸ்பத்திரியில் ஆபரே‌ஷன் தியேட்டருக்குள் புகுந்து குழந்தையை கொன்ற நாய்

மாலைமலர் :உத்தரபிரதேச மாநிலத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் தியேட்டருக்குள் புகுந்த தெரு நாய் பிறந்து சில மணிநேரமே ஆன பச்சிளங்குழந்தையை கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆக்ரா: உத்தரபிரதேச மாநிலம் பரூக்காபாத் நகரை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி கஞ்சன். நிறைமாத கர்ப்பிணியான கஞ்சனை பிரசவத்துக்காக நேற்று அப்பகுதியில் உள்ள ஆகாஷ் கங்கா என்ற தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு கஞ்சனை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு சுகப்பிரசவம் நடைபெறும் என கூறி உள்ளனர்.
ஆனால் சிறிது நேரத்தில் கஞ்சனுக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை நடத்த வேண்டும் என கூறவே ரவிக்குமாரும் சம்மதித்தார். உடனே கஞ்சனை அறுவை சிகிச்சை அரங்குக்குள் அழைத்து சென்றனர். அவருக்கு நல்லபடியாக அறுவை சிகிச்சை முடிந்து குழந்தை பிறந்தது.

எஸ்.ஐ வில்சன் கொலையில் பொன்.ராதாவுக்கு தொடர்பு: அப்பாவு

எஸ்.ஐ கொலையில் பொன்.ராதாவுக்கு தொடர்பு: அப்பாவுமின்னம்பலம் : எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலையில் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தொடர்பு இருப்பதாக அப்பாவு குற்றம்சாட்டியுள்ளார்.
காவல் துறையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய வில்சன், கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் கடந்த 8ஆம் தேதி துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரது மரணத்திற்கு இஸ்லாமிய தீவிரவாதிகள்தான் காரணம் என பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினர் தொடர்ந்து பேட்டியளித்துவந்தனர். ஒருபடி மேலே சென்ற பொன்.ராதாகிருஷ்ணன், ‘பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டுள்ள முஸ்லீம் தீவிரவாதிகளுக்கும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தொடர்பு இருக்குமோ என்ற கேள்வி எழுகிறது’ என்று சந்தேகம் எழுப்பியிருந்தார்.

போகி பண்டிகை.. சென்னையில் அபாய கட்டத்தை எட்டிய காற்று மாசு.. டெல்லியை விட மோசம்?

சொந்த ஊர்கள் எவ்வளோ அளவு tamil.oneindia.com/authors/vishnu-priya. சென்னையில் போகிப்பண்டிகையால் மாசடைந்த காற்று.. வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் அவதி - வீடியோ சென்னை: இன்று போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்களை எரித்ததால் சென்னையில் காற்று மாசு அபாய கட்டத்தை எட்டியதாக கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பழையன கழிதல் , புதியன புகுதல் என்ற பழமொழிக்கேற்ப, பழைய பாய்கள், துணிகள் உள்ளிட்டவற்றை தீயிட்டு கொளுத்துவது வழக்கம். இன்னும் சிலர் டயர் ஆகியவற்றையும் கொளுத்தி காற்று மாசடைய செய்வர்.
இந்த நிலையில் சென்னையில் காலை முதலே போகி பண்டிகை கொண்டாடப்பட்டு வந்தது. அப்போது மக்கள் தேவையில்லாத பொருட்களை எரித்தனர். இதனால் பல இடங்களில் மார்கழி பனிக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு புகை மூட்டமாக இருந்தது.
விமானம் ரத்து அதிகாலை இதனால் காற்று மாசு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள மணலியில் 795 குறியீடுகளும், அண்ணாசாலையில் 272 அளவும், வேளச்சேரியில் 100 அளவும் காற்று மாசு பதிவாகியிருந்தது. இதில் மணலியில்தான் அபாயகரமான அளவுக்கு காற்று மாசு சென்றது.