![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYlgpFJS_tWKLNQZHSx-F5TWVz_qbQ_py0XjVCdAqZmBsrjOQvjuuRf8XugWGL3BPMPDVNVU5AhVW09aqFsvqHSj4dmkL4IsqnYfvWqAY68JNwlawUQ9sMf-BfWP8RzF9W-djNasPPl08w/s200/78237746_2859710950740068_5490684438859743232_o.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWxvSURwmPHXC8dHSn3Zy7-x7a2B5MTOB6p0ryknDY8utyB0gMHufju9wRPvvRQFoob6WB3PkTDqrBAdWXOBdQhai53i9n3ECpKIysy3Sf_nlH8HwTA6lhsaCypjaAXs9B8bxYQpR2QHY1/s320/82408709_2959720210739141_592340410332872704_n.jpg)
அமேசான் 'pen to publish' போட்டி குறித்து தாங்கள் எழுதியுள்ள கருத்துகள் 100 சதவிகிதம் சரி. எழுத்தின் தரம் குறித்துக் கணக்கில் கொள்ளாமல் விற்பனை, விமர்சனம், படிக்கப்பட்டுள்ள பக்கங்களை கணக்கில் கொண்டு அமேசான் முதல் சுற்று வெற்றியை அறிவிப்பதாக அறிகிறேன்.
ஆனால் இன்னொன்றையும் கணக்கில் கொள்ள வேண்டும். அமேசான் இந்தப் போட்டியை நடத்துவதே, "அமேசான் கிண்டிலை" பிரபலப்படுத்திக் கொள்ளத் தான். அதனால் அவர்கள் விறபனையை தான் குறி வைப்பார்கள்.
தங்கள் நூல் விற்பனையாக வேண்டும் என்பதும், அதன் மூலம் முதல் சுற்றில் நுழைய வேண்டும் என்பதும் நூல் எழுதியவர்களின் விருப்பமாக இருக்கும். அப்படி இருந்தால் தான் போட்டியில் கலந்து கொள்வார்கள்.
அதனால் விற்பனை அதிகரிக்க, நூல் எழுதியவர்கள் தாங்கள் நூல் எழுதியதை விளம்பரப்படுத்துவது தவிர்க்க இயலாதது. அப்படி வெளியில் சொல்லா விட்டால், புதிய எழுத்தாளர்கள் நூல் எழுதியதே தெரியாமல் போய் விடும்.
விளம்பரத்தை கண்டு, புத்தகத்தை வாங்கும் புதியவர்கள் அமேசானில் இருக்கும் மற்ற புத்தகங்களை வாங்குவார்கள் என்பது அமேசானின் வியாபார கணக்கு.