 |
இந்துபோர்ட் ராசரத்தினம் |
 |
சேர் பொன்.ராமநாதன் |
இலங்கை தமிழர்களின் அரசியல்
கலாச்சாரம், சமுகவியைல் என்பது
எல்லாம் ஒரு குறிப்பிட்ட வகைய சார்ந்தது என கருதப்படுகிறது. ஆனால் உண்மையில் அப்படிஅல்ல!
வடமாகாண மக்களின் கலாச்சாரம் அரசியல் சார்ந்த சிந்தனையும் கிழக்குமாகாண மக்களின் நிலையும் சில வேறுபாடுகளை கொண்டிருக்கிறது.
 |
சேர் பொன்அருணாசலம் |
மலையக மக்களின் சிந்தனையானது முற்றிலும் வேறு ஒரு விதமாக இருக்கிறது .
 |
மணி அய்யர் |
எல்லோரும் தமிழர்கள்தான் என்றாலும் நுட்பமான வேறுபாடுகள் உள்ளன.
கிழக்குமாகாணம் ஓரளவு பல்லின மக்கள் வாழும் இடமாக இருப்பதுவும்,
வடக்கு மாகாணம் பெருமளவு தமிழர்கள் மட்டுமே வாழும் இடமாக இருப்பதுவும் கவனத்தில் கொள்ளவேண்டிய
விடயமாகும்.
மலையக மக்கள் வடக்கு மக்களோடு தொடர்புகள் அற்ற நிலையில் இருப்பது வெறுமனே ஒரு பூகோள ரீதியான விடயம் மட்டும் அல்ல.
இங்கேதான் வடமாகாண மக்களின் ஜாதீய மதவாத சிந்தனையின் பரிணாமம் பற்றி கவனத்தில் கொள்ளவேண்டியதாக உள்ளது .
இதன் பின்னணியில் நடந்து முடிந்த போராட்டத்தின் பல தன்மைகளை உற்று நோக்கவேண்டி உள்ளது.
விடுதலை போராட்டத்தை பாசிச சக்திகள் ஹைஜாக் பண்ணி முழுக்க முழுக்க ஒரு பாசிச வெறியாட்டமாக ஆடி முடித்த வரலாறு ஒரு பெரிய பாடத்தை உலகுக்கு வழங்கி இருக்கிறது
ஜாதி மத பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை உள்ளகத்தே ஒழித்து மறைத்து கொண்டு எழும் குறுந்தேசிய வாதம் எப்படி இருக்கும் என்பதை இது காட்டுகிறது.
இந்த பாசிச சக்திகளின் உருவாக்கம் வளர்ச்சியானது வடமாகாண தமிழர்களின் வாழ்வியலின் ஒரு அரசியல் பரிணாம வளர்சியாகத்தான் பார்க்க வேண்டி இருக்கிறது.