சனி, 28 ஜனவரி, 2023

கிளிநொச்சியில் செல்லப்பிராணியை மீட்க கிணற்றில் இறங்கிய இளைஞர் சடலமாக மீட்பு! -

battinews.com :  கிளிநொச்சியில் செல்லப்பிராணியை மீட்க கிணற்றில் இறங்கிய இளைஞர் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் கிளிநொச்சி – உதயநகர் பகுதியில் இன்று காலை இடம்பெற்றது.
24 வயதுடைய விவேகாந்தன் வேணிலவன் என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டார்.
வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட நாய் கிணற்றில் விழுந்தது. குறித்த நாயை மீட்பதற்காக இளைஞர் பாதுகாப்பற்ற கிணற்றில் தும்புக் கயிறைப் பயன்படுத்தி இறங்கினார்.
அதன்போது கயிறு அறுந்ததால் அவர் கிணற்றுக்குள் விழுந்தார்.

திருப்பூரில் factcheck “வட மாநில இளைஞர்கள் துரத்தி தாக்கினார்களா ?” - உண்மை என்ன? : விவரிக்கும் திருப்பூர் காவல்துறை!

 Kalaignar Seithigal  -  Prem Kumar  : திருப்பூரில் தமிழ் இளைஞர்களை வடமாநில இளைஞர்கள் தாக்குவதாக வெளியான வீடியோ உண்மையில்லை என போலீஸ் விளக்கம் அளித்துள்ளது.
திருப்பூர் அனுப்பர்பாளையம் திலகர் நகரில் தமிழ் தொழிலாளர்களை வட மாநில தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் துரத்திச் சென்று தாக்குவதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து பலரும் உண்மை நிலவரம் தெரியாமல் வடமாநில தொழிலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்பலரும் கோரிக்கை வைத்தனர். நகைச்சுவை நடிகர் மதுரை முத்து இதுதொடர்பாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

திருவனந்தபுரம் மாநகராட்சியில் வீடுகளில் 2 நாய்களுக்கு மேல் வளர்க்க தடை

 மாலைமலர் :  திருவனந்தபுரம்: நாய்களை கண்டால் சிலருக்கு பயம்.
ஆனால் சிலருக்கோ அது உற்சாகம்.
அவர்கள் தங்கள் வீடுகளில் எண்ணற்ற நாய்களை வளர்த்து வருவதும் உண்டு. சாதாரண வீடுகள் மட்டுமின்றி அடுக்குமாடி குடியிருப்புகளிலும் பலர் நாய்களை வளர்த்து வருகின்றனர்.
அவர்களுக்கு அது ஆனந்தமாக இருந்தாலும் பக்கத்து வீடுகளை சேர்ந்தவர்கள் தொல்லையாக கருதுகின்றனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வீடுகளில் வளர்க்கும் நாய்களால் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் பாதிப்பு ஏற்படுவதாக கூறி இருப்பது தான் பிரச்சினையாகி உள்ளது.
இதுதொடர்பாக திருவனந்தபுரம் மாநகராட்சிக்கு அவர்கள் புகார்களும் அனுப்பினர்.

Tyre Nicholas death கறுப்பின இளைஞரை பொலிஸார் தாக்கும் வீடியோ- பல அமெரிக்க நகரங்களில் ஆர்ப்பாட்டம்.

 வீரகேசரி : வெளியானது கறுப்பின இளைஞரை பொலிஸார் கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ- பல அமெரிக்க நகரங்களில் ஆர்ப்பாட்டம்.
அமெரிக்காவில் 29 வயது கறுப்பின இளைஞன் டயர் நிக்கொலஸ் உயிரிழந்தமை தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
காரில் பயணித்துக்கொண்டிருந்த ஒருவரை கறுப்பின பொலிஸார் காலால் உதைப்பதையும் அடிப்பதையும் அவர் அலறுவதையும் காண்பிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
அமெரிக்க பொலிஸ் திணைக்களம் நான்கு வீடியோக்களை வெளியிட்டுள்ளது.
முதலாவது வீடியோ பொலிஸார் நிக்கொலசை காரிலிருந்து இறங்குமாறு சத்தமிடுவதை காண்பித்துள்ளது.

கௌதம் அதானி தூக்கத்தைக் கெடுத்த Hindenburg.. இந்த நிறுவனம் யாருடையது தெரியுமா..?

Hindenburg Research கெட்டி
யாரு சாமி நீ..?!

  tamil.goodreturns.in  - Prasanna Venkatesh :  இந்தியாவையே புரட்டிப்போடும் அளவிற்கு அதானி குழுமத்தின் பங்கு வீழ்ச்சி காரணமாகப் பாதிக்கப்பட்டு உள்ள மக்கள் கோடிக்கணக்கான பேர் உள்ளனர்.
அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு புதன் மற்றும் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் மட்டும் 2.3 லட்சம் கோடி ரூபாய் அளவில் சரிந்துள்ளது.
இந்த வீழ்ச்சி காரணமாக அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி சொத்து மதிப்பு 10 பில்லியன் டாலருக்கும் அதிகமாகச் சரிந்தது மட்டும் அல்லாமல் 100 பில்லியன் டாலர் சொத்து மதிப்புக் கொண்ட பணக்காரர்கள் பட்டியலில் இருந்து பல மாதங்களுக்குப் பின்பு கீழ் இறங்கியுள்ளார்.
யாரு சாமி நீ..?!

தமிழ்நாட்டு அரசியல் விவாதங்கள் எங்கே செல்கிறது?

 ராதா மனோகர்  : தமிழ்நாட்டு அரசியல் ஒரு கொதிநிலை

அரசியலாக மாறிக்கொண்டு வருவது போல தோன்றுகிறது.
படித்தவர்கள் அதிகமாக உள்ள தமிழ்நாட்டுக்கு இந்த கொதிநிலை அரசியல் ஏற்புடையதல்ல.
எந்த விடயத்தை பற்றி பேச தொடங்கினாலும் அது ஒரு அடிப்படை வாதத்திற்குள் போய் நிற்கிறது.
அதனால் நியாயமாக பேசவேண்டிய பல விடயங்களை பேசாமல் கடந்து போகவேண்டிய நிலை ஏற்படுகிறது
குறிப்பாக திமுக அரசு மீது விமர்சனங்கள் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது பல நல்ல விடயங்களை பாராட்ட வேண்டித்த்தான் இருக்கிறது.
ஆனாலும் இங்கேயும் ஒரு சிக்கல் இருக்கிறது
தவறை தவறென்றும் கூறினால் உடனே அவரை ஒரு எதிரியாக்கும் மனோபாவம் வளர்ந்து வருகிறதோ என்ற அச்சம் உண்டாகிறது
மறுபுறத்தில் நல்ல விடயங்களை மனப்பூர்வமாக பாராட்டி விட்டாலும் உடனே இவர் சொம்பு தூக்குகிறார்.  ஏதோ ஒரு பயனை வேண்டி பாடுகிறார் என்றெல்லாம் கருதி விடக்கூடிய அளவுக்கு பஜனைகளும் உச்சஸ்தாயியில் ஒலிக்கிறது.
அதிமுக போன்ற கட்சிகளின் கெமிஸ்ட்ரியோடு திமுகவை ஒப்பிட்டு பார்க்க முடியாது

மீண்டும் இந்தி: வெறும் மொழித் திணிப்பல்ல! | வீடியோ

 vinavu.com  :  மோடி-அமித்ஷா கும்பல் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், இந்திய உழைக்கும் மக்கள் மீது தொடுத்துவரும் பல்வேறு தாக்குதலில் ஒன்று, இன-மொழி அடிப்படையிலான தாக்குதலாகும். இவற்றில் முதன்மையானது இந்தி மொழித்திணிப்பாகும்.
இந்தித் திணிப்பின் அடிப்படை, அகண்ட பாரதம், பார்ப்பன வர்ணாசிரம ஆதிக்கம், சமஸ்கிருத மேலாதிக்கம் என்கிற அடிப்படையிலான ‘இந்து-இந்தி-இந்தியா’ என்ற கோட்பாடாகும்.
இந்த இந்தித் திணிப்பு என்பது தமிழகத்தின் மீது திணிக்கப்படுவதாகவும் அதனை எதிர்த்து முறியடிக்கப்பட வேண்டும் என்றும் நம்மவர்கள் பேசி வருகின்றனர்; இது முழு உண்மையல்ல. இந்தித் திணிப்பு என்பது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மேற்கொள்ளப்படுகிறது. மேற்கு வங்கம், கேரளா, தமிழகம், பஞ்சாப், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் இந்தித் திணிப்பை எதிர்த்தாலும், அதனை வீரத்துடன் எதிர்த்துப் போரிட்ட வரலாறு தமிழகத்திற்கு மட்டுமே உள்ளது.

உக்ரைனுக்கு படையெடுக்கும் ஜெர்மன் டாங்குகள்.. ரஷ்யா பகிரங்க மிரட்டல்.. அடுத்தகட்டத்துக்கு நகரும் போர்!

 கலைஞர் செய்திகள் - பிரவீன் : உக்ரைன் போரில் மேற்கத்திய நாடுகளின் நேரடி பங்கேற்பு அதிகரித்துள்ளதாக ரஷ்யா பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையேயான 10 மாத போர் தற்போது உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.

யாழ் மாவட்டத்தில் 4,111 பேர் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றனர்

 ஹிருநியூஸ் : யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 402 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நான்காயிரத்து 111 பேர் போட்டியிடவுள்ளதாக மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் இ.அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண தேர்தல் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 13 அரசியல் கட்சிகளும் 15 சுயேட்சை குழுக்களும் போட்டியிடுகின்றன.
இந்த முறை தேர்தலில் வாக்களிப்பதற்கென யாழ்ப்பாண மாவட்டத்தில் 4 லட்சத்து 86 ஆயிரத்து 423 வாக்காளர்கள் தகுதிப் பெற்றுள்ளனர்.
இதற்காக 514 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக போட்டியிடவுள்ளதாக மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் இ.அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

சிங்கள இடதுசாரி தலைவர்களின் இனவெறுப்பு அரசியல் வரலாறு

இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே இடது சாரி இயக்கங்கள் இலங்கையில் வேகமாக காலூன்றின குறிப்பாக மலையகத்தில் . பல சிங்கள இடதுசாரி தலைவர்கள் மலையக மக்களின் வாக்குகளிலும் ஏனைய சிறுபான்மையின மக்களின் வாக்குகளிலுமே தங்கள் அரசியல் மேடையை அமைத்துக்கொண்டார்கள். இந்த பின்னணியில் சில விடயங்களை ஆய்வு செய்தல் அவசியம். 

ராதா மனோகர் : இலங்கை சிங்கள இடதுசாரிகள் சிங்கள

A.E.Gunasinga
மக்களிடையே தங்கள் கம்யூனிச கருத்துக்களை எடுத்து செல்வதில் வெற்றி பெறவில்லை . மறுபுறத்தில் அப்பாவி மலையக மக்களிடையே பெரு வெற்றி பெற்றனர்  
தமிழக இடதுசாரி கட்சிகள் இந்த விடயத்தில் இலங்கை சிங்கள இடதுசாரிகளோடு ஒன்றாக வேலை செய்து சிங்கள இடதுசாரிகளின்   ் வேலையை இலகுவாக்கினார்கள்
சுதந்திர இலங்கையின் முதல் நாடாளுமன்றத்தில் அன்றைய சுதந்திர இலங்கையின் தேசியக்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி பெரும்பான்மை பெறமுடியாமல் போனது
மறுபுறத்தில் பல இடதுசாரி கட்சிகள் மலையக மற்றும் இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்கள் முஸ்லிம்கள் போன்ற சிறுபான்மையோரின் ஆதரவில் வெற்றி பெற்றிருந்தனர்.
பல சிங்கள இடதுசாரி தலைவர்கள் வெற்றி பெற்றது இந்த வாக்குகளால்தான்
அன்றே மலையக மக்கள் மீது  ஒரு கம்யூனிச லேபிளை ஓட்டினார்கள் அந்த இடதுசாரிகள்

வெள்ளி, 27 ஜனவரி, 2023

காங்கிரஸ் கட்சியுடன் மக்கள் நீதி மய்யம் இணைப்பு? - பரவும் செய்தி .. ஜன.30-ல் ?

 tamil.news18.com : மக்கள் நீதி மய்யம் கட்சியை அகில இந்திய காங்கிரஸ் கட்சியுடன் கமல்ஹாசன் இணைக்கவுள்ளதாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியான செய்தி அறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக வலைதளத்தில் வெளியான அந்த அறிக்கையில், “மகாத்மா காந்தி இந்துத்துவ வெறியரால் கொல்லப்பட்ட நாளான ஜனவரி 30-ம் தேதியன்று மக்கள் நீதி மய்யம் கட்சியானது காங்கிரஸுடன் இணைக்கப்படுவதாகவும்,
கமல்ஹாசன் மற்றும் ராகுல் காந்தி முன்னிலையில் டெல்லியில் இந்த இணைப்பு விழா நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் கமல்ஹாசன் முன்னாள் காங்கிரஸ் தலைவரைச் சந்தித்துவிட்டுத் திரும்பியதிலிருந்து தனது அடுத்த நகர்வுகளை யோசித்து வந்ததாகவும்,

பரந்தூரில் விமான நிலையம்.. இடத்தை தேர்வு செய்தது தமிழ்நாடு அரசு தான்.. மத்திய இணையமைச்சர் விகே சிங்!

மத்திய அரசுக்கு தொடர்பில்லை tamil.oneindia.com  -  Yogeshwaran Moorthi  : திருநெல்வேலி: பரந்தூர் விமான நிலையம் அமைவதற்கான இடத்தை மாநில அரசு தான் தேர்வு செய்து கொடுத்தது என்றும்,
அதில் மத்திய அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் மத்திய இணையமைச்சர் விகே சிங் தெரிவித்துள்ளார்.
அதேபோல் சேலம் - சென்னை எட்டு வழிச்சாலையை பசுமை வழிச்சாலையாக மாற்றும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.
சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க பரந்தூர் சுற்று வட்டார கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் பரந்தூர் உட்பட 13 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு புதிய விமான நிலையம் உருவாக்கப்பட உள்ளது.
பரந்தூர் விமான நிலையம் கட்டமைப்புக்கான பணிகளை தொடங்குவதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. ஆனால் பரந்தூர் மற்றும் சுற்றுவட்டார மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

பட்டியலினத்தவர், பழங்குடியினர் புத்தொழில் நிதித்திட்டம்- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

 மாலைமலர் : சென்னை புதுயுக தொழில்முனைவில் அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியினை அடைவதற்காக தமிழ்நாடு பட்டியலினத்தவர், பழங்குடியினர் புத்தொழில் நிதித்திட்டம் என்ற புதிய திட்டம் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், பட்டியலின மற்றும் பழங்குடியின பிரிவுகளைச் சார்ந்த தொழில்முனைவோர்களால் தொடங்கி, நடத்தப்பட்டு வரும் புத்தொழில் நிறுவனங்களுக்கு பங்கு முதலீடாக அல்லது பிணையில்லா கடனாக நிதி வழங்கப்படும். இந்நிதியத்திற்கு முதற்கட்டமாக 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டமானது தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில் பயன்பெற கடந்த மே 2022-லிருந்து தொழில்முனைவோர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, இதுவரை 330 நிறுவனங்களிலிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

தமிழ்நாடு வாழ்க' .. ஆளுநர் முன்பு அணி வகுத்துச் சென்ற அரசின் சாதனை விளக்க ஊர்திகள்!

 Kalaignar Seithigal  -  Lenin  : தமிழ்நாடு சென்னை மெரினாவில் நடந்த குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அரசின் சாதனைகளை விளக்கும் அலங்கார ஊர்தியில் 'தமிழ்நாடு வாழ்க' வாசகம் இடம் பெற்று இருந்தது.
நாட்டின் 74வது குடியரசு தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். அதேபோல் அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர்கள் தேசியக் கொடியை ஏற்றிவைத்தனர்.
தமிழ்நாட்டில் சென்னை மெரினாவில் தேசியக் கொடியைத் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றிவைத்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா : நான் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி சட்டத்தை நடைமுறைப்படுத்துவேன்-

 hirunews.lk :  யாழ்ப்பாணம் பலாலி காணி விடுவிக்கப்படும் திகதி குறித்து தான் பாதுகாப்புச் செயலாளர், பாதுகாப்பு பணிக்குழாமின் பிரதானி மற்றும் முப்படை பிரதானிகளுடன் தான் கலந்துரையாடியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (26) இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டின் போதே ஜனாதிபதி இந்த கருத்தை வெளியிட்டார்.
அவர் தொடர்ந்து கருத்துவெளியிடுகையில், “பாதுகாப்பு பிரதானிகளின் தீர்மானத்திற்கமையவே நாம் செயற்பட்டோம். காணி விடுவிப்பு தொடர்பில் எந்தவொரு விடயத்தையும் நாம் மறுக்கவில்லை.
நான் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி. அந்த வகையில் இருக்கும் சட்டத்தை நான் நடைமுறைப்படுத்துவேன்.
எமது அரசியலமைப்பில் கடந்த 37 ஆண்டுகளாக 13ஆவது அரசியல் திருத்தம் உள்ளடக்கப்பட்டுள்ளது. நான் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.

மோடி - பிபிசி ஆவணப்படத்தை செல்போனில் பார்த்த சென்னை மாநகராட்சி சிபிஎம் கவுன்சிலர் கைது

hindutamil.in  :  மோடி - பிபிசி ஆவணப்படத்தை செல்போனில் பார்த்த சென்னை மாநகராட்சி சிபிஎம் கவுன்சிலர் கைது
கைது செய்யப்பட்ட கவுன்சிலர் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்
சென்னை: பிபிசி வெளியிட்ட குஜராத் கலவரம் குறித்த ஆவணப்படத்தை செல்போனில் பார்த்த சிபிஎம் கவுன்சிலர் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.
பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது நடைபெற்ற மதக்கலவரம் குறித்து ‘இந்தியா: மோடி கேள்விகள்’ என்ற ஓர் ஆவணப்படத்தை பிபிசி வெளியிட்டிருந்தது.

வியாழன், 26 ஜனவரி, 2023

மற்ற மதங்கள் அபின் என்றால் கம்யூனிஸம் ஹெரோயின்

 Rishvin Ismath  :  "மற்ற மதங்கள் அபின் என்றால் கம்யூனிஸம் ஹெரோயின்"
-(சில) சிவப்பு சங்கிகளைப் பார்க்கும் போது இப்படித் தான் தோன்றுகிறது.
தெக்குத்தெரு ஹமீது : எப்பேர்பட்ட கட்சியா இருந்தாலும்
அது வளரும் ெரைதான் நேர்வழி
வளர்ந்த பிறகு கட்சியின் ஓனர் வைத்தது தான் சட்டம்
சரிங்க பாய்
வழக்கம்போல உங்களுக்கு எதிரா பதில சொல்றவனை உள்ளே தூக்கி போட்டுட்டா மேட்டர் ஓவர்
Shameel Jainulabdeen :  தெக்குத்தெரு ஹமீது குண்டு வ்சிக்கிரவன் உள்ளே போனா உனக்கேன் வலிக்குது? பதில் சொல்றவன உள்ளே போட்ரதுன்னா சனோபர் அலி, ஷேக் ஹிதாயதுல்லா லாம் இங்கே எப்போ எதுக்கு பதில் சொன்னான்? சொல்லு பார்க்கலாம்?
சும்மா விக்டிம் கார்ட் ப்ளே பண்ணி தீவிரவாதிகளை நல்லவங்களா காட்ட முயற்சி பண்ணாதே.

அமெரிக்காவை அசத்திய தமிழக இருளர்களுக்கு பத்மஸ்ரீ விருது: யார் இவர்கள்?

 minnambalam.com  -  Kavi : தமிழ்நாடு இருளர் சமூகத்தைச் சேர்ந்த மாசி சடையன் மற்றும் வடிவேல் இருவரது புகைப்படம் தான் நேற்று இரவு முதல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்கா அழைத்த தமிழக இருளர்கள்!
பொதுவாக அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஆன்சைட்டுக்குத்தான் அழைக்கப்படுவார்கள். ஆனால் இவர்கள் பாம்பு பிடிக்க அழைக்கப்பட்டனர். குறிப்பாக ட்ரம்ப் அதிபராக இருந்த காலக்கட்டத்தில்.
அமெரிக்கா அதிபராக இருந்த ட்ரம்ப் அமெரிக்கர்களுக்குத்தான் முன்னுரிமை என கொள்கையில் இருந்த காலம் அது.
விசாக்கள் ரத்து செய்யப்பட்டதால் ஐடி வேலைகளில் இருந்தவர்கள் ஆன்சைட்டுக்கு செல்ல முடியாமல் தவித்த காலம் அது. இப்படிப்பட்ட நிலையில் இவர்கள் இருவரையும் அமெரிக்காவே தனது சொந்த செலவில் அழைத்தது.

Gautam Adani accused of pulling the ‘largest con in corporate history’ - Daily Mirror

 dailymirror.lk : \Indian billionaire Gautam Adani who has his businesses in several countries including investments in Sri Lanka's wind and renewable energy sector, has been accused of pulling off the 'largest con in corporate history' through the Indian-based Adani Group Corporation.
US investor Hindenburg Research, which has begun short selling the conglomerate through bonds, conducted a two-year probe against head Gautam Adani, who is worth $125 billion.
The firm alleges that Adani and his family controlled a web of offshore shell accounts that it used to carry out corruption, money laundering and taxpayer theft, all while siphoning money from the companies they owned.
Adani has pulled off this gargantuan feat with the help of enablers in government and a cottage industry of international companies that facilitate these activities,' the firm wrote in its report published Tuesday.
The Adani Group immediately denied the claims and expressed their shock at the allegations which cost the company $12billion in market value and saw its flagship firm Adani Enterprises fall nearly 4 percent on Wednesday.
In its scathing report, Hindenburg questioned how the Adani Group used its offshore entities in tax havens like Mauritius, the Caribbean Islands, and the United Arab Emirates, adding that certain offshore funds and shell companies tied to the group 'surreptitiously' own stock in Adani-listed firms, according to UK's Daily Mail.

சென்னையில் குடியரசு தினம்: முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கொடியேற்றிய ஆளுநர்

BBC :  சென்னை மெரினாவில் இந்தியாவின் 74வது குடியரசு தினவிழா கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.
தமிழ்நாடு ஆளுநர் ரவி தேசியக் கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். முதல்வர் ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்களும் கொடி ஏற்றும் நிகழ்வில் பங்குபெற்றுள்ளனர்.
குடியரசு தின நிகழ்வின் ஒரு பகுதியாக மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அண்ணா பதக்கம் மற்றும் காந்தியடிகள் விருது உள்ளிட்ட விருதுகள் அளிக்கப்பட்டன.

தடை செய்யப்பட்ட பிபிசி ஆவணப்படத்தை கேரளாவில் திரையிட்டது காங்கிரஸ்

மாலை மலர்  :  திருவனந்தபுரம் கடந்த 2002-ம் ஆண்டு நிகழ்ந்த குஜராத் கலவரத்தோடு, அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மோடியை தொடர்புபடுத்தி பிபிசி ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. 'இந்தியா: மோடிக்கான கேள்விகள்' எனும் தலைப்பிலான இந்த ஆவணப்படம் இரண்டு பாகங்களாக தயாரிக்கப்பட்டுள்ளது.
அதில், ''இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இந்தியாவின் முஸ்லிம் சிறுபான்மையினருக்கும் இடையே இருக்கும் பதற்றங்களை பாருங்கள்.
ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட 2002 குஜராத் கலவரத்தில் நரேந்திர மோடிக்கு உள்ள பங்கு குறித்து விசாரிக்க வேண்டும் என்பதை இது வலியுறுத்துகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் பாரத மாதா சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற தலித் மாணவர் மீது கொடூர தாக்குதல்

 தினத்தந்தி : ஷாஜகான்பூர், உத்தரபிரதேசத்தின் ஷாஜகான்பூரை சேர்ந்த அர்ஜூன் ராணா என்ற தலித் மாணவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, அங்குள்ள பாரத மாதா சிலைக்கு 'ஷூ' அணிந்து கொண்டு மாலை அணிவிக்க முயன்றார்.
இதை மாற்று சமூக மாணவர்கள் தடுத்து நிறுத்தினர். என்றாலும் ஆத்திரம் அடங்காத அவர்கள், அர்ஜூன் ராணா மீது கோபத்திலேயே இருந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி கல்லூரி மைதானத்தில் அர்ஜூன் ராணா தனியாக நின்றிருந்தார். அப்போது அங்கே வந்த மாணவர்கள், அர்ஜூன் ராணாவை சரமாரியாக தாக்கினர்.
 கொடூரமாக தாக்கப்பட்டதில் படுகாயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த கொடூர தாக்குதல் சம்பவம் அடங்கிய வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் பரவி மாநிலம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதன், 25 ஜனவரி, 2023

ஐஸ்வர்யா ராஜேஷ் : பெண்கள்னா தீட்டா? சாமி சொல்லுச்சா?

 மின்னம்பலம் - Kavi : சபரிமலையில் பெண்களுக்கு மறுப்பு தொடர்பாகப் பேசியுள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இவர்கள் தான் கோயிலுக்கு வர வேண்டும், இவர்கள் எல்லாம் வரக்கூடாது என சாமி ஒன்றும் சட்டம் இயற்றவில்லை என்று தெரிவித்துள்ளார்.
புதிதாகத் திருமணமான பெண் ஒருவர், பழமைவாதக் கொள்கைகளும் ஆணாதிக்கமும் நிறைந்த கணவரின் குடும்பத்தில் படும் கஷ்டங்கள், தொடர்ந்து அவர் எடுக்கும் முடிவு என்ன என்பதைச் சொல்லியிருந்த படம் மலையாளத்தில் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் படம்.
தமிழில் ரீமேக் செய்யப்பட்ட இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் ரவீந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதி!

மின்னம்பலம் - Selvam :  திராவிட இயக்க பேச்சாளரும், எழுத்தாளருமான நாஞ்சில் சம்பத் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் இன்று (ஜனவரி 25) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பேச்சு, எழுத்து, இலக்கியம், அரசியல் என அனைத்து துறைகளிலும் இயங்கி வருபவர் நாஞ்சில் சம்பத்.
மதிமுகவில் தனது அரசியல் பயணத்தை துவங்கிய இவர், அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், மதிமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அவருக்கு அதிமுகவில் கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. பின்னர் 2016-ஆம் ஆண்டு அவர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

மோடி குஜராத் - பிபிசி ஆவணப்படத்தை புதுவை பல்கலைக்கழகத்தில் திரையிட மறுப்பு: செல்போன், லேப்டாப்பில் பார்த்த மாணவர்கள்

பி.பி.சி.யின் ‘இண்டியா: தி மோதி க்வெஸ்டின்’ ஆவணப்படம்

BBC News தமிழ்  :  இந்திய பிரதமர் மோடி  குறித்து பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்தை புதுவை பல்கலைக்கழகத்தில் திரையிட அனுமதி மறுத்த நிலையில், மாணவர்கள் அவர்களது தொலைபேசி மற்றும் லேப்டாப்பில் பதிவிறக்கம் செய்து பார்த்தனர்.
பாதுகாப்பு கருதி புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள புதுவை பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது.
பி.பி.சி.யின் ‘இண்டியா: தி மோதி க்வெஸ்டின்’ (India: The Modi question) ஆவண படம் பல்கலைக்கழக வளாகங்களில் திரையிடப்படும் என்று இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு மாணவர் அமைப்புகள் அறிவித்திருந்தன.

ரெயில் நிலையங்களில் உணவு பண்டங்கள் விலை உயருகிறது- டீ, காபி, தண்ணீர் பாட்டிலில் மாற்றம் இல்லை

 மாலைமலர் : திருச்சி நாடு முழுவதும் குறைவான கட்டணத்துடன் நிறைவான பயணத்தை அளிப்பதில் ரெயிலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மாணவ, மாணவிகள் முதல் வேலைக்கு செல்வோர் வரை அனைத்து தரப்பினருக்கும் ரெயில் சேவை வசதியாக உள்ளது.
ரெயில் பயணிகளின் வசதிக்காக முக்கிய ரெயில் நிலைய சந்திப்புகள் மற்றும் ரெயில் நிலையங்களில் உரிமம் பெற்ற தனியார் உணவு விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்ற மத்திய அரசின் நிபந்தனையின் பேரில் இங்கு உணவு வகைகள் வழங்கப்படுகிறது.
குறிப்பாக இந்த உணவகங்களில் இட்லி, பரோட்டா, சப்பாத்தி, பொங்கல், தோசை, சாம்பார், தயிர், புளி, எலுமிச்சை, தேங்காய் சாதங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த உணவுப் பொருட்களின் விலை கடந்த 2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் தற்போது உயர்த்தப்பட இருக்கிறது. விலைவாசி உயர்வு, சமையல் பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இவற்றின் விலையை உயர்த்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மதுரை -ஆபாச வீடியோ.. பள்ளி மாணவியை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை.. காதலன் உட்பட 3 பேர் கைது!

 tamil.news18.com :  மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமி ஒருவரை கார்த்திக் என்ற இளைஞர் காதலிப்பது போல நடித்துள்ளார்.
 ஒரு கட்டத்தில் சிறுமியை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி நம்பவைத்த அவர்,
சிறுமியை பல முறை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் கீரைத்துறையில் ஆள் இல்லாத இடத்திற்கு சிறுமியை கார்த்திக் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததை அவரது நண்பர்கள் மறைந்திருந்து செல்போனில் படம்பிடித்துள்ளனர்.
இதையடுத்து, சிறுமிக்கு வீடியோவை காட்டி மிரட்டி கார்த்திக் துணையோடு அவரது நண்பர்கள் ஆதி மற்றும் ஹரிஸ் ஆகியோர் சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

அண்ணாமலை தேஜஸ்வி எமெர்ஜென்சி கதவு திறப்பு விவகாரம்; நேரில் பார்த்த சாட்சி!

Annamalai and Tejesvi Airplane emergency door open

nakkheeran.in அண்ணாமலையும் தேஜஸ்வி சூர்யாவும் விமானத்தின் கதவைத் திறந்தது ஏன்? ஏன்? ஏன்? என தற்பொழுது தெரிய வந்துள்ளது.
அனைத்திற்கும் காரணம் கொடைக்கானல் பகுதியில் விளையும் ஒருவித போதைக்காளான்தான் எனச் சொல்கிறார்கள் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள்.
பா.ஜ.க.வை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது உறவினர் கரூர் மாவட்டம், இலுப்பூரைச் சேர்ந்த சக்தி. தமிழ்நாடு போலீசார் ஒரு போதை நெட்வொர்க்கை பிடித்தபோது,
அவர்களிடமிருந்த செல்போன் எண்ணை வைத்து இவரை கைது செய்கிறார்கள்.
இலங்கை உட்பட பல நாடுகளுக்கு கொகைன், ஹெராயின் போன்ற போதைப் பொருள்களை சப்ளை செய்யும் போதை கும்பலின் அங்கம்தான் இந்த சக்தி. சக்தியின் உறவினரான செல்வகுமார், சமூக வலைதளங்களில் அண்ணாமலையின் புகழைப் பாடுபவர்.
சக்தி கைது செய்யப்பட்டதும் தன்னை நோக்கி போலீசார் வருவார்கள் எனத் தெரிந்துகொண்ட செல்வகுமார், அண்ணாமலையிடம் சரணடைகிறார்.

சொந்த தேசத்து மக்களையே லட்சக் கணக்கில் கொன்று குவித்த கம்யூனிஸ ஜோசெப் ஸ்டாலின்.

 Rishvin Ismath :  மிகைல் கொர்பச்சேவ் என்ற ஒரு மாமனிதர் தோன்றி சுதந்திரம் பெற்றுக் கொடுப்பதற்கு முன்னர் சோவியத் ஒன்றிய மக்கள் கம்யூனிஸ அடக்கு முறையின் கீழ் சொல்லனாத் துயரங்களை அனுபவித்தனர்.
சொந்த தேசத்து மக்களையே லட்சக் கணக்கில் கொன்று குவித்தான் கம்யூனிஸ கொடுங்கோலன் ஜோசெப் ஸ்டாலின்.
மாமனிதர் மிகைல் கொர்பச்சேவின் புத்திசாலித்தனமான நகர்வுகளால் சோவியத் ரஷ்யச் சிறை தகர்க்கப்பட்டு மக்கள் சுதந்திரம் பெற்று 30 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது,
அந்த சோவியத் சிறையில் வாழ்ந்த மக்களோ, தேசங்களோ மீண்டும் கம்யூனிஸ சோவியத் வேண்டும் என்று கேட்டதில்லை.
ஆனால் கம்யூனிஸத்தின் கீழ் ஒரு போதும் வாழாத தோழர்கள் சில புத்தகங்களை மட்டும் படித்துவிட்டு கம்யூனிஸ ஆட்சி என்றால் சொர்க்கம் என்பது போன்ற கற்பனையில் மிதக்கின்றனர்.

செவ்வாய், 24 ஜனவரி, 2023

இந்தியாவின் உதவியே பயங்கரவாதத்தை நாம் தோற்கடிக்க உதவியது.”- இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி

 தேசம்நெட் - அருண்மொழி :  “இந்தியாவின் ஆதரவு இல்லாவிட்டால் 26 வருடங்களாக எங்கள் நாட்டிற்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தி வந்த  பயங்கரவாத அமைப்பை நாங்கள் தோற்கடித்திருக்க மாட்டோம்.”  என இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி இந்திய ஊடகமொன்றிற்கான பேட்டியில் தெரிவித்துள்ளார்
இது குறித்து அவர் தெரிவித்துள்ளது
இந்தியாவுடனான உறவுகள் வரலாற்று ரீதியிலானவை, நாங்கள் ஒரு நாகரீகத்தை பகிர்ந்துகொள்கின்றோம். எங்கள் மத கலாச்சார பொருளாதார சமூக பாதுகாப்பு  கரிசனைகள் பொதுவானவை.
கருத்துவேறுபாடுகள் ஏற்பட்ட காலங்களும் உள்ளன. குடும்பங்களில் கூட அது சாத்தியம்,ஆனால் நாங்கள் எப்போதும் நல்ல நண்பர்களாக இருந்துள்ளோம். இந்தியா எப்போதும் இலங்கைக்கு ஆதரவாக இருந்துள்ளது,இந்தியாவின் ஆதரவு இல்லாவிட்டால் 26 வருடங்களாக எங்கள் நாட்டிற்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தி வந்த  பயங்கரவாத அமைப்பை நாங்கள் தோற்கடித்திருக்க மாட்டோம். அதற்காக நாங்கள் நன்றியுடையவர்களாக உள்ளோம்.

தொண்டர்கள் மீது கல்லை எடுத்து வீசிய அமைச்சர் நாசர்.. சேர் எடுத்து வருவதற்கு தாமதம்... கோபத்தில்

மாலை மலர்  : திருவள்ளூர்  அருகே வேடங்கிநல்லூரில் திமுக சார்பில் நாளை நடைபெற உள்ள மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
இதனை முன்னிட்டு விழா ஏற்பாடு பணிகளை ஆய்வு செய்த பால்வளத்துறை அமைச்சர் நாசர், வந்திருக்கும் நிர்வாகிகள் உட்காருவதற்கு நாற்காலிகளை எடுத்து வரும்படி கட்சித் தொண்டர்களிடம் கூறினார்.
கட்சி நிர்வாகிகள் அதிக அளவில் இருந்த நிலையில், ஒருசில நாற்காலிகள் மட்டுமே எடுத்து வரப்பட்டதோடு, தாமதமும் ஆனதால் தனது கோபத்தை தொண்டர்கள் மீது அமைச்சர் நாசர் வெளிப்படுத்தினார்.
அமைச்சர் சா.மு.நாசர், தொண்டர்கள் மீது கல்லை எடுத்து வீசினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது

தமிழ்நாடு அலங்கார ஊர்தியில் பெண்களுக்கு முக்கியத்துவம்

nakkeeran    டெல்லியில் கடந்த ஆண்டு நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காகத் தமிழக அரசின் சார்பில், இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்களித்த வீரர்களின் உருவங்கள் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் தயார் செய்யப்பட்டிருந்தன.
ஆனால், தமிழக அரசின் ஊர்திக்கு மத்திய அரசு அனுமதியளிக்க மறுத்துவிட்டது.
இதையடுத்து, அந்த அலங்கார ஊர்திகள் சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்றதோடு தமிழகம் முழுவதும் கொண்டு செல்லப்பட்டுக்  காட்சிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், இந்த ஆண்டு டெல்லி செங்கோட்டையில் நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்திகள் இடம் பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனையொட்டி நேற்று டெல்லி கடமை பாதையில் குடியரசு தினவிழா முழு அணிவகுப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

பெருந்தலைவர் காமராஜர் பற்றி ஆ ராசா என்னதான் பேசினார்?

 மாலைமலர் : சென்னை: பெருந்தலைவர் காமராஜர் குறித்து தவறாக பேசிய தி.மு.க. எம்.பி. ஆ.ராசா-வுக்கு என்.ஆர்.தனபாலன் தலைமையில் நடந்த நாடார் சங்கங்கள் கூட்டத்தில் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
சென்னையிலுள்ள நாடார் சங்க நிர்வாகிகள் கூட்டம் தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என்.ஆர்.தனபாலன் தலைமையில் அசோக்நகர் என்.ஆர்.டி.டவரில் நடந்தது.
இக்கூட்டத்தில் முத்துரமேஷ் நாடார், மின்னல் ஸ்டீபன், எம்.வி.எம்.ரமேஷ்குமார், கொளத்தூர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அவை வருமாறு:-
பெருந்தலைவர் காமராஜர் பற்றி பேசுவதற்கு இன்றைய தி.மு.க. நிர்வாகிகள் யாருக்கும் தகுதியோ, அருகதையோ இல்லை என்பதால் காமராஜர் பற்றி பேசுவதை தி.மு.க. நிர்வாகிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

திங்கள், 23 ஜனவரி, 2023

பென்ஷன் மற்றும் கிராஜுவிட்டி இனி இல்லை! பணியில் கவன குறைவு மற்றும் குற்றம் இழைத்த ஒன்றிய ஊழியர்களுக்கு அதிர்ச்சி

 zeenews.india.com  : மத்திய ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் போனஸ் வழங்கிய பிறகு,
இப்போது ஊழியர்களுக்கான 18 மாத நிலுவைத் தொகையை வழங்க அரசாங்கம் பரிசீலிக்கும் என்று எதிர்பார்த்து கொண்டிருக்கும் சமயத்தில் அரசு தற்போது ஒரு முக்கிய விதியை மாற்றியுள்ளது.  
அதாவது அரசு இப்போது அதன் ஊழியர்களுக்கு மிகக்கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது,
இதனை ஊழியர்கள் பின்பற்றாமல் புறக்கணிக்கும் பட்சத்தில் அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டி வழங்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது.  
அரசின் புதிய விதிகளின்படி, பணியில் கவனக்குறைவுடன் அலட்சியமாக செயல்படும் ஊழியர்கள் பணியிலிருந்து பணி ஓய்வுப்பெற்ற பின்னர் அவர்களுடைய ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டி நிறுத்தப்படும் என்று ஊழியர்களை அரசு அறிவுறுத்தியுள்ளது.  

ஸ்வீடனில் குர்ஆன் எரிப்பு ! இது “கேவலமான செயல்” என்று துருக்கி குறிப்பிட்டுள்ளது.

 bbc.com  :  ஸ்வீடனில் நடந்த ஒரு போராட்டத்தின்போது இஸ்லாமிய மதத்தில் புனிதமாகக் கருதப்படும் குர்ஆன் பிரதி எரிக்கப்பட்ட சம்பவத்தை துருக்கி கடுமையாக விமர்சித்துள்ளது. மேலும், இது “கேவலமான செயல்” என்றும் குறிப்பிட்டுள்ளது.
இத்தகைய போராட்டங்களை அனுமதிக்கும் ஸ்வீடன் அரசின் முடிவு “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று துருக்கி தெரிவித்துள்ளது.
ராஜ்ஜீய மட்டத்தில் துருக்கிக்கும் ஸ்வீடனுக்கும் இடையிலான மோதல் வலுவடைந்து வருகிறது.
போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருமாறு ஸ்வீடனிடம் துருக்கி கோரிக்கை விடுத்துள்ளதுடன், ஸ்வீடனின் பாதுகாப்பு அமைச்சர் பால் ஜான்சனின் துருக்கி பயணத்தையும் ரத்து செய்துள்ளது. இந்த சுற்றுப்பயணம் இப்போது அதன் முக்கியத்துவத்தையும் அர்த்தத்தையும் இழந்துவிட்டதாக துருக்கி அரசு கூறுகிறது.

திருச்சி அருகே தொழிலதிபர் வீட்டில் 300 சவரன் நகைகள் கொள்ளை

 maalaimalar.com : திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள ஐஏஎஸ் நகரில் வசித்து வருபவர் தொழிலதிபர் நேதாஜி. இவரது தம்பி தேவேந்திரன். இவர்கள் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.
தேவேந்திரனின் மகன் நிச்சயதார்த்த விழா திருச்சியில் இன்று நடைபெற்றது.
இதற்காக குடும்பத்தினர் அனைவரும் திருச்சிக்கு வந்துவிட்டனர்.
இந்நிலையில், நேதாஜியின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள்,
300 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.

ஹிட்லர் தெரியுமா உங்களுக்கு.. மோடிக்கும் அதே கதிதான்.." சித்தராமையா சொன்னதும்.. கொதித்தெழுந்த பாஜக

 tamil.oneindia.com  -  Vigneshkumar  : பெங்களூர்: கர்நாடகாவில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா பிரதமர் மோடியை ஹிட்லருடன் ஒப்பிட்டுக் கூறிய கருத்துகள் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கர்நாடகாவில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு இப்போது பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு நடந்து வரும் நிலையில், சில மாதங்களில் அங்குத் தேர்தல் நடைபெற உள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி வலுவாக உள்ள நிலையில், அங்கு இரு தரப்பிற்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்று சொல்லப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என்ற போதிலும் இப்போதே தேர்தல் களம் சூடுபிடித்துவிட்டது.
கர்நாடக தேர்தல்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் எப்.பி.ஐ FBI அதிரடி சோதனை...!

தினத்தந்தி  : வாஷிங்டன், அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் வீடு மற்றும் அவரது தனி அலுவலகத்தில் இருந்து அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவை அனைத்தும் ஜோ பைடன் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக இருந்த 2009 முதல் 2016 ஆண்டு வரையிலான ஆணவங்கள் ஆகும்.
அரசின் அதிமுக்கிய, ரகசிய ஆவணங்கள் அதிபர் ஜோ பைடனின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட நிலையில் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சுமார் 13 மணி நேரம் நடந்த சோதனையில் ஏராளமான ரகசிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். அமெரிக்க அதிபர் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து கோரவிபத்து-3 பேர் உயிரிழப்பு அரக்கோணம் கீழவீதி திரௌபதி அம்மன் கோயில்

 நக்கீரன் : அரக்கோணம் அருகே கோவில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
அரக்கோணம் கீழ்வீதியில் திரௌபதி அம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்பொழுது ராட்சத கிரேன் மூலம் சாமிக்கு மாலை செலுத்து முயற்சித்த போது எதிர்பாராத விதமாக கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பலர் காயமடைந்த நிலையில், பலத்த காயமடைந்த முத்து, பூபாலன், ஜோதிபாபு ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் பட்டம் வென்றார் அசீம்

 மாலைமலர் : சென்னை: பிக்பாஸ் சீசன் 6 போட்டி மொத்தம் 21 போட்டியாளர்களுடன் தொடங்கியது.
இந்த சீசனில் 3 போட்டியாளர்கள் மட்டுமே இறுதிப் போட்டிக்கு தேர்வாகினர்.
பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் யாருக்கு என்ற போட்டியில் அசீம், விக்ரமன், ஷிவின் ஆகியோருக்கு இடையே போட்டி தீவிரமானது.
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி 6-வது சீசனின் வெற்றியாளர் அறிவிக்கும் நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது.
இதில் வெற்றி பெற்றவர்கள் யார் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்புடன் பேசப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர் யார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, பிக்பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னராக அசீம் அறிவிக்கப்பட்டார். இரண்டாவது இடம் விக்ரமனுக்கும், மூன்றாவது இடம் ஷிவினுக்கு வழங்கப்பட்டது.

ஞாயிறு, 22 ஜனவரி, 2023

ஈரோடு கிழக்கு தொகுதி- காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டி .. இடைத்தேர்தல்..

maalaimalar :  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தனக்கு பதிலாக எனது இளைய மகன் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார்.
இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுவார் என அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக அதிமுக போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
திமுக சார்பில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிடும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
ஆனால், வேட்பாளர் யார் என்பது குறித்து அறிவிக்கப்படாமல் இருந்தது.

பொய் வழக்குகளால் தூக்கிலிடப்படும் இரான் இளைஞர்கள் - வாதாட 15 நிமிடம்தான் கொடுக்கப்படுகிறது

BBC :  எனக்கு மரண தண்டனை அளித்துவிட்டார்கள், ஆனால் இது அம்மாவுக்கு தெரிய வேண்டாம்"
 இரானில் அரசுக்கு எதிரானவர்கள் என்று குற்றம்சாட்டப்படுபவர்கள்  தங்களது தரப்பு நியாயங்களை முன்வைப்பதற்காக  சொந்த வழக்கறிஞர்களை பெறுவதற்கு உரிமை இருக்கிறது.
ஆனால் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபடுவோர்களுக்கு இந்த உரிமை வழங்க படுவதில்லை.
ஏற்கனவே அதிகாரிகள் தயார் செய்த பட்டியலில் இருந்துதான் அவர்களுக்கு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
அதேபோல் பத்திரிகையாளர்களும், குற்றம்சாட்டப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களும் நீதிமன்றத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை. எனவே உண்மையிலேயே நீதிமன்றத்திற்குள் என்ன நடக்கிறது என்பதை, நீதிமன்றம் சார்பில் வெளியிடப்படும் தொகுக்கப்பட்ட காட்சிகளின் மூலமே நம்மால் அறிந்துகொள்ள முடியும்.

கடவுள் நம்பிக்கையோடு பொருத்தப்பட்ட எக்ஸ்ட்ரா கோட்பாடுகள் God With Extra Fittings.. வாழ்வியல் சிந்தனைகள்

ராதா மனோகர் : எமது அடிமனதில் பல பல ஆண்டுகளாக விதைக்கப்பட்டு எம்மோடு பிரிக்கவே முடியாத வாறு உருவாகிய எண்ணங்களில் முக்கியமானது கடவுள் நம்பிக்கை.
இந்த கடவுள் நம்பிக்கை என்ற ஒன்று தனியாக ஒரே ஒரு எண்ணமாக இல்லை .
இதனோடு கூடவே ஏராளமான இதர எக்ஸ்ட்ரா நம்பிக்கைகளும் பின்னி பிணைந்தே வளர்ந்து விட்டிருக்கிறது.
இவற்றில் பல நம்பிக்கைகள் ஒன்றோடு ஒன்று மிகவும் முரண்பட்ட எண்ணங்களாக உள்ளது.
பல முரண்பாடுகள் நிறைந்த பல விதமான நம்பிக்கைகளின் கூட்டு சாம்பாராக ஒட்டு மொத்த கடவுள் நம்பிக்கை என்ற பெயரில் எமது தலையில் சுமக்கின்றோம்.
அனேகமாக எமது வாழ்வின் குழப்பங்களுக்கு இந்த சாம்பார்தனமான நம்பிக்கை கோட்பாடுகள்தான் காரணம்,
இதை விளங்கி கொள்வது இலகுவல்ல. கடவுள் என்று நாம் கருதிக்கொண்டு இருக்கும் கடவுள் ஏழைகளில் மிகவும் விருப்பம் கொண்டவர்.,

தமிழ்நாடு அரசின் கூர்நோக்கு இல்லத்தில் இறந்த சிறுவன் - அதிகாரிகளின் 'அட்மிசன் அடி' காரணம்!

 bbc.com- பிரமிளா கிருஷ்ணன் :  தமிழ்நாடு அரசின் கூர்நோக்கு இல்லத்தில் இறந்த சிறுவன் - அதிகாரிகளின் 'அட்மிசன் அடி' காரணமா? - BBC News தமிழ்
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிறார் கூர்நோக்கு இல்லத்தில் கடந்த டிசம்பர் மாதம் சிறுவன் கொலையானதாகச் சொல்லப்படும் சம்பவத்தை அடுத்து, அந்த இல்லத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள சிறார்களின் பாதுகாப்பு மற்றும் பணிபுரிந்த அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
சிறுவனின் மரணத்திற்குக் காரணமான அதிகாரிகள் மீது தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அந்த கூர்நோக்கு இல்லம் குறித்து அங்கு முன்னர் பணிபுரிந்த அதிகாரிகளிடம் பிபிசி பேசியது.

India: A Modi Question (Documentary) மோடியை பற்றி பி பி சி தயாரித்த ஆவணப்படம் .. தேடி தேடி முடக்கப்படுகிறது ..

 மோடியை பற்றி பி  பி சி தயாரித்த India: A Modi Question (Documentary) என்ற ஆவணப்படம் சங்கிகளால் தேடி தேடி முடக்கப்படுகிறது .. இதுதான் அந்த ஆவணப்படம்  மோடியின் முகபாவங்களை பாருங்கள்   குரூரம் வெளிச்சமாகிறது