சனி, 16 நவம்பர், 2019

சென்னை ஐ ஐ டி ... பாத்திமா லதீப் .. சில விபரங்கள் ...

ஐ ஐ டி பேராசிரியர் சுதர்ஷன் பத்மநாபன் ஜெர்மனி சென்ற போது ஹிட்லரின் கேஸ் சேம்பரின் முன் விக்டரி சைகை காட்டி ஒளிப்படம் எடுத்திருந்தார்! .
Geetha Narayanan : · ஃபாத்திமாவைப் பற்றி படித்து விளங்கிக் கொண்டதை எழுதியிருக்கிறேன்..ஃபாத்திமாவிற்கு ஒரு இரட்டைச் சகோதரி இருக்கிறார்.தாய்,தந்தை,சகோதரி,தம்பி என அனைவரிடமும் அன்பாக இருந்த பெண்.இந்தக் குடும்பம் சவுதியில் இருந்திருக்கிறது.ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதுதான் குடும்பம் கேரளா திரும்பியிருக்கிறது.
சிவில் சர்வீஸ் படிக்கும் ஆசையில் பத்தாம் வகுப்பிற்குப் பின் ஸ்டேட் போர்டிற்கு மாறியிருக்கிறார்.இவருடைய இரட்டைச் சகோதரி ஆயிஷா சட்டம் படிக்கிறார்.
ஃபாத்திமா இறந்தது 9 நவம்பர் அன்று.நவம்பர்.8 ஆம் தேதி சவுதியில் இருந்த தந்தையோடு பேசியிருக்கிறார்.பேசும்போது நிறைய அழுதிருக்கிறார்.அப்போது மூக்குத்தி அணிந்த ஒரு பெண் ஃபாத்திமாவை சமாதானப் படுத்தியிருக்கிறார்.அந்தப் பெண்ணைத் தேடிக் கொண்டொருக்கிறார் ஃபாத்திமாவின் தந்தை.அந்தப் பேச்சின் சாரம் என்னவென்று தெரியவில்லை.
ஆயிஷா படித்துக் கொண்டிருந்தது இண்டிக்ரேட்டட் எம்.ஏ. பிறர் குறிப்பிட்டுள்ள படி வீட்டைப் பிரிந்த மனச் சோர்வால் அவர் இறந்திருக்க வாய்ப்பில்லை என்கிறது அவர் குடும்பம்.ஏனெனில் நவம்பர் 15 செமஸ்டர் தேர்வு.27 ஆம் தேதி அவர் விடுமுறைக்கு வீட்டிற்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார்.

600 ஆய்வுக்கட்டுரைகளையும் 81 நூல்களையும் எழுதிய வசந்தா கந்தசாமியை பேராசிரியாராகக்கூட ஐஐடி கருதவில்லை”

த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 24, 2016 :
600 ஆய்வுக்கட்டுரைகளையும் 81 நூல்களையும் எழுதியிருக்கும் என்னை பேராசிரியாராகக்கூட ஐஐடி கருதவில்லை”: பேரா. வசந்தா கந்தசாமி சென்னை ஐ.ஐ.டி.யில் கடந்த 1995-ஆம் ஆண்டு ஜனவரியில் இணைப் பேராசிரியர்கள், பேராசிரியர்கள் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. கணிதத் துறையில் இணைப் பேராசிரியர் பதவிக்கு, டாக்டர் டபிள்யூ.பி.வசந்தா கந்தசாமி விண்ணப்பித்தார். ஆனால் அவர் தேர்வாகவில்லை. அதே சமயம், பேராசிரியர் தேர்வில் கலந்து கொண்ட அவர், இணை பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.
பேராசிரியர் பணிக்கு தன்னை தேர்வு செய்யாததை எதிர்த்தும், அடிப்படை தகுதிகள் இல்லாத சிலர் இணை பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டதாகக் கூறியும், அவர்களின் நியமனத்தை எதிர்த்தும், இந்த முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பேராசிரியர் வசந்தா வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கடந்த 2013-இல் இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஐஐடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி ஏ. செல்வம், பொன். கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இலங்கை: மலையகத்தில் பெருமளவு வாக்குப் பதிவு செய்த இந்திய வம்சாவளி தமிழர்கள்!

tamil.oneindia.com : நுவரெலியா: இலங்கை அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளி தமிழர்கள் மிகவும் ஆர்வத்துடன் காலை முதல் மாலை வரை மலையகப் பகுதியில் வாக்களித்தனர். கொட்டும் மழைக்கு நடுவே இந்திய வம்சாவளித் தமிழர்கள் வாக்களித்தனர்.
இலங்கையில் 8-ஆவது அதிபர் தேர்தல் இன்று நடைபெற்றது. பலத்த பாதுகாப்புகளுடன் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி மாலை 5 மணிவரை நடைபெற்றது. மொத்தம் 12,845 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 1.60 கோடி வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர்.
இந்த தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்குப் பதிவில் இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்கள் (மலையகத் தமிழர்கள்) ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.
நுவரெலியா மாவட்டத்தில் 488 வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களித்தனர். நுவரெலியா – மஸ்கெலியா தொகுதியில் 256 வாக்குசாவடிகளும், கொத்மலை தொகுதியில் 81 வாக்குசாவடிகளும், வலப்பனை தொகுதியில் மூன்று இடங்களில் இரட்டை வாக்கு சாவடிகள் உட்பட 76 வாக்கு சாவடிகளும், ஹங்குராங்கெத்த தொகுதியில் 75 வாக்கு சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தன.
இப்பகுதிகளில் காலை முதலே மழைக்கும் நடுவே பெரும் எண்ணிக்கையில் மலையகத் தமிழர்கள் வாக்களித்தனர்.

வடநாட்டு டி டி ஆரின் அடாவடிக்கு சிதம்பரம் சரவணன் உயிரிழப்பு!

குபேரன் பதிவுகள் K Ambethkar : வடநாட்டான் அடாவடிக்கு சிதம்பரம் சரவணன் பலி.!
தியாகு தேநீர் மைய உதவியாளர் சரவணன் மறைவு ..
ஆழ்ந்த இரங்கல்கள்..
சிதம்பரம் காசுக்கடைதெருவில் இயங்கிவரும் தியாகு தேநீர் மையத்தில் ரவி அவர்களுக்கு உதவியாளராகவும் இந்த பகுதியில் பலருக்கு பரிட்சையமானவர் சரவணன்.
இன்று காலை கடலூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு அவரது வயது முதிர்ந்த தாயுடன் சரவணன் விழுப்புரம் சென்றிருக்கிறார்கள்.
ரயில் புறப்பட ஆரம்பித்ததால் அவர்கள் அவசரத்தில் முன்பதிவு கம்பார்ட்மெண்டில் ஏறி விட்டார்கள்.
ரயில் திருப்பாப்புலியூர் வரும்பொழுது அதில் வந்த ஒரு வடநாட்டு டிடிஆர் அவர்களை வலுக்கட்டாயமாக இறங்க சொல்லியிருக்கிறார்.
அவர்கள் அடுத்த ஸ்டேஷனில் இறங்கி விடுவோம் என்று சரவணனும் அவரது தாயாரும் சொன்னது இந்திகார டி.டி.ஆர் க்கு புரியவில்லை.
இதனால் ரயிலிலிருந்து வலுகட்டாயமாக
டிடிஆர் இறக்கி விட்டுள்ளார்.
இதனால் இரயிலிருந்து இறங்கி
தாயும் மகனும் சேர்ந்து முன்பதிவு இல்லாத பெட்டியை ஏற முற்படும்போது மகன் ஏறிவிட்டார்.

இலங்கை அதிபர் தேர்தலில் வாக்களித்தோர் ... மாவட்ட ரீதியான புள்ளி விபரம்..

Jeevan Prasad : 1. Jaffna 67%
2. Vanni 73%
3. Batti 71%
4. Ampara 77.5%
5. Trinco 77%
6. Kurunegala 83%
7. Puttalam 74%
8. Anuradhapura 83%
9. Polonnaruwa 84%
10. Badulla 83%
11. Monaragala 84%
12. Ratnapura 85%
13. Kegalle 84%
14. Colombo 83%
15. Gampaha 83%
16. Kalutara 85%
17. Kandy 83%
18. Matale 82.5
19. Nuwaraeliya 82%
20. Galle 83.5%
21. Matara 83.5%
22. Hambanthota 84%

81.52% all island

Final Analysis- Nov 13 (Strictly for release on Nov 14)
IT’S THE CANDIDATE. PERIOD.
After six weeks of tracking polling sentiments interesting insights emerge- many of them unprecedented in SL elections. We have also triangulated the analysis (Via the stratified data) from multiple directions including Rural/Urban, Gender, Age, Ethnicity, Caste and Religion and summarised the findings below.

பஞ்சமி நிலம்.... உதயநிதிக்கு ஆணை !

மின்னம்பலம் : பஞ்சமி நில விவகாரம்
தொடர்பாக முரசொலியின் நிர்வாக இயக்குனர் உதயநிதி ஸ்டாலின் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 17ஆம் தேதி, தனுஷ் நடித்த அசுரன் படத்தைப் பார்த்த திமுக தலைவர் ஸ்டாலின் பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் அசுரன் படத்திற்கு பாராட்டுக்கள் என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதைப் பார்த்த பாமக தலைவர் ராமதாஸ், முரசொலி அலுவலகமே பஞ்சமி நிலத்தில்தான் கட்டப்பட்டது என்றார். அதை மறுத்த ஸ்டாலின், பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் இல்லை என்பதை நான் நிரூபித்தால் ராமதாஸும், அன்புமணியும் அரசியலை விட்டே விலகத்தயாரா? என்றும், அப்படி நிரூபித்தால் நான் அரசியலை விட்டே விலகுகிறேன் என்றும் ஸ்டாலின் கூறினார். அத்துடன் முரசொலி அலுவலக இடத்தின் பட்டாவை வெளியிட்டார். ஆனால் அதுமட்டும் போதாது வேறு சில ஆவணங்களும் வேண்டும் என ராமதாஸ் அப்போது பதிலளித்தார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வந்த 10 பெண்களை திருப்பி அனுப்பியது கேரளா அரசு!


சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வந்த 10 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் தினத்தந்தி :சபரிமலையில் அய்யப்பன் கோவிலுக்கு ஆந்திராவின் விஜயவாடாவில் இருந்துவந்த 10 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயதுடைய பெண்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கும்படி சுப்ரீம் கோர்ட் கடந்த ஆண்டு தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை மறுசீராய்வு செய்யக் கோரி 66 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது. அதேசமயம் கடந்த ஆண்டு வழங்கிய தீர்ப்புக்கு அவர்கள் எந்த தடையும் விதிக்கவில்லை.
இந்த நிலையில் 41 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் மண்டல பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை சுட்டிக்காட்டி சாமி தரிசனத்திற்காக ஆன்லைன் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட இளம்பெண்கள் முன்பதிவு செய்து உள்ளனர். பெண்கள் ஆர்வலரான திருப்தி தேசாயும் சபரிமலை வர உள்ளதாக அறிவித்து உள்ளார்.

இலங்கை அதிபர் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது


இலங்கை அதிபர் தேர்தலில் 80 சதவீதம் வாக்குப்பதிவு-  பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதுமாலைமலர் : இலங்கை அதிபர் தேர்தலில் 80 சதவீதம் வாக்குப்பதிவு-  வடபகுதியில் 65 வீதம் மட்டுமே! பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது இலங்கையில் 8-வது அதிபரை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. கொழும்பு: இலங்கையின் தற்போதைய அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் வரும் ஜனவரி மாதம் 9-ம் தேதி முடிகிறது. இதையொட்டி, அங்கு அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது.
இந்த தேர்தலில், முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் தம்பி கோத்தபய ராஜபக்சே (70), பொது ஜன பெரமுனா கட்சியின் சார்பில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஐக்கிய தேசிய கட்சி சார்பில், முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் மகனான சஜித் பிரேமதாசா (52) போட்டியிட்டார். மொத்தம், 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

BBC : இலங்கை தேர்தல்: முஸ்லிம்கள் பயணித்த பேருந்து மீது 17 முறை துப்பாக்கிச்சூடு..


யூ.எல். மப்றூக் -  பிபிசி தமிழுக்காக...
 ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக புத்தளத்திலிருந்து மன்னார் - மறிச்சிக்கட்டி நோக்கி முஸ்லிம் மக்கள் பயணித்த பேருந்து மீது 17 தடவை துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டுள்ளதாக களத்தில் நின்ற எம்.எஸ். முபீஸ் என்பவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். மன்னார் மறிச்சிக்கட்டி பிரதேசத்தில் வசித்த முஸ்லிம் மக்களில், கணிசமானோர், யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து தற்போது புத்தளத்தில் வசித்து வருகின்றனர்.
இவர்கள் தேர்தல்களில் வாக்களிப்பதற்காக புத்தளத்திலிருந்து தமது சொந்த பிரதேசமான மன்னார் - மறிச்சுக்கட்டிக்கு செல்ல வேண்டியுள்ளது.
இந்தப் பின்னணியிலேயே, நேற்று இரவு 8.00 மணியளவில் புத்தளத்திலிருந்து நான்கு பேருந்துகளில் 200க்கும் மேற்பட்டோர் மன்னார் - மறிச்சிக்கட்டி நோக்கி இன்றைய வாக்களிப்பில் கலந்து கொள்வதற்காக பயணத்தை ஆரம்பித்தனர்.
அந்தப் பயணத்தில் என்ன நடந்தது என்பதை, அந்த பேருந்துகளில் ஒன்றில் பயணித்த முபீத் என்பவர் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.
"அரச போக்குவரத்து சபைக்குச் சொந்தமான நான்கு பேருந்துகளில் நாங்கள் பயணித்தோம். இடையில் நொச்சியாகம போலீஸ் நிலையம் சென்று, எங்கள் பயணம் பற்றி தெரியப்படுத்தினோம்.
நான்கு பேருந்துகளில் ஒன்று, 50 கிலோமீட்டர் முன்னால் சென்று கொண்டிருந்தது. ஏனைய மூன்று பேருந்துகளும் குறுகிய இடைவெளியில் பயணித்துக் கொண்டிருந்தன.

உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை ... எல்லோரும் படிக்க கூடாதா?

ஃபாத்திமா லத்தீஃபிற்கு ஆதரவாக ஜவஹர்லால் நேரு பல்கலைகழ மாணவர் தலைவி அஃப்ரின் பாத்திமா..
மெட்ராஸ் ஐஐடியில் நிறுவனக் கொலை செய்யப்பட்ட ஃபாத்திமா லத்தீஃபிற்கு நீதி வேண்டி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தின் மாணவர் தலைவரும் , மொழி மற்றும் இலக்கியத்துறை கவுன்சிலருமான அஃப்ரின் பாத்திமா JNU வளாகத்தில் ஆற்றிய ஆங்கில உரையின் மொழிபெயர்ப்பு.
ஐஐடி மெட்ராஸ் கல்வி வளாகத்தில் மீண்டெமொரு நிறுவனக் கொலை நடந்திருக்கிறது. ஃபாத்திமா லத்தீஃப் ற்கு நீதிவேண்டி நாம் இங்கே கூடியிருக்கிறோம். 19வயதான பாத்திமா லத்தீஃப் என்ற மானுடவியல் படிக்கும் மாணவி தற்கொலை செய்திருக்கிறார். அவர் மரணிப்பதற்கு முன்பாக தனது கைப்பேசியில் ஒரு பதிவு எழுதியிருக்கிறார். அதில் தனது மரணத்திற்கு முழுக்க காரணம் தனது பேராசியர்கள்தான். அதிலும் குறிப்பாக சுத்ஷன் பத்மநாபன் எனும் மானுடவியல் பேராசிரியர் தான் என்று எழுதியிருக்கிறார். மதத்தின் பெயரால் தனது பெயரை வைத்து பாகுபாடு காட்டியதன் பெயரில் தான் இந்த தற்கொலை நடந்திருக்கிறது. இது ஏதோ தனித்தனியாக எப்போதோ நடப்பதல்ல. முதல் முறையும் அல்ல. தொடர்ந்து உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர்.

திருச்சியில் ஜார்கண்ட் மாணவி தற்கொலை ....: கல்லூரி மாணவிகள் சொல்வது என்ன?

Samayam Tamil : திருச்சி மாணவி தற்கொலை வழக்கில் திருப்பம்: கல்லூரி மாணவிகள் சொல்வது என்ன?</ ஜார்கண்டைச் சேர்ந்த ஸாஃப்ரா பர்வீன் என்ற மாணவி திருச்சி கல்லூரி விடுதியில் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. திருச்சி மாணவி தற்கொலை வழக்கில் திருப்பம்: கல்லூரி மாணவிகள் சொல்வது என்ன?
பேராசிரியர்கள் கொடுத்த நெருக்கடியால், சென்னை ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலை செய்துகொண்டார் என்ற அதிர்ச்சி அடங்குவதற்குள், திருச்சியில் ஜார்க்கண்ட் மாநில மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி கே.கே.நகர் அடுத்த கே.சாத்தனூர் பகுதியில் உள்ளது அய்மான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இஸ்லாமிய சிறுபான்மை கல்வி நிறுவனமான இங்கு, தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர். தற்கொலையில் 'சிறந்து' விளங்கும் தமிழ்நாடு: அதிர்ச்சி ரிப்போர்ட்!

என் மகளுக்கு தூக்கு கயிறு எப்படி கிடைத்தது.. சுதர்சன் பத்மநாபனை விடக்கூடாது.. பாத்திமா தந்தை ஆவேசம்

Hemavandhana - tamil.oneindia.com : :  சென்னை: எனது மகள் சடலத்தைப் பார்த்தபோது அவர் தற்கொலை செய்து கொண்டது போலவே தெரியவில்லை. அவரது மரணத்திற்கு சுதர்சனன் பத்மநாபன்தான் காரணம். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி ஒரு பெண் பிள்ளை மரணிக்கக் கூடாது என்று பாத்திமா லத்தீபின் தந்தை அப்துல் லத்தீப் ஆவேசமாக கூறியுள்ளார். பாத்தமா லத்தீபின் பெற்றோர், உறவினர்கள் சென்னை வந்துள்ளனர். ஐஐடி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் உட்பட 3 பேராசிரியர்கள் கொடுத்த நெருக்கடியே தற்கொலைக்கு காரணம் என்றும், நடவடிக்கை தேவை என்றும், கேரள முதல்வரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார். 
அந்த மனுவை கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பி வைத்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் டிஜிபி ஜே.கே.திரிபாதி ஆகியோரை சந்திக்க அவர்கள் சென்னை வந்திருந்தனர். முதலில் அவர்கள் டிஜிபியை சந்தித்து மனு கொடுத்தனர். பின்னர் செய்தியாளர்களை அப்துல் லத்தீப் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: 
தைரியசாலி எனது மகள் மிகவும் நல்ல படிப்பாளி, தைரியமானவள், எல்லாவற்றிலும் நம்பர் ஒன். எதையும் எங்களிடம் பகிர்ந்து கொள்வாள். இங்கு வந்து சேர்ந்த சில மாதங்களிலேயே அவர் உயிரிழந்துள்ளாள். அவளுக்கு மிகவும் கடுமையான நெருக்கடிகள் தரப்பட்டுள்ளன. 
சுதர்சனன் பத்மநாபன் எனது மகளை துன்புறுத்தியுள்ளார் என்று ஏற்கனவே கூறியுள்ளாள். 

மாற்றப்படும் திமுக மாசெக்களின் பட்டியல்!

மின்னம்பலம் :  மொபைல் டேட்டா ஆன் செய்ததும் வாட்ஸ்அப் ஆன்லைனில் வந்தது.
“உள்ளாட்சித் தேர்தலுக்காக இருபெரும் கட்சிகளான திமுகவும் அதிமுகவும் மிக வேகமாக தயாராகிக் கொண்டிருக்கின்றன. அதேநேரம் உள்ளாட்சித் தேர்தல் எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் உறுதியாக நடக்குமா என்ற சந்தேகமும் இரு கட்சி நிர்வாகிகளிடையே பலமாக பேசப்பட்டு வருகிறது.
இப்போது வந்தாலும் எப்போது வந்தாலும் எதிர்கொள்ள தயார் என்ற ரீதியில்தான் திமுகவும் அதிமுகவும் உள்ளாட்சித் தேர்தல் பணிகளை செய்து வருகின்றன. வரையறைகள் செய்வதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதை சுட்டிக்காட்டி உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப் போடுவதற்கு அதிமுக அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது என்று நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார். அதிமுக தரப்போ, இரண்டு இடைத்தேர்தல் வெற்றி என்ற சூட்டோடு சூடாக உள்ளாட்சித் தேர்தலை அதிகாரபலம் கொண்டு நடத்தி முடித்து விடலாம் என்ற திட்டத்தில் இருப்பதாக தெரிகிறது.

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி: சிவசேனாவுக்கு முதல்-மந்திரி பதவி; குறைந்தபட்ச செயல் திட்டம் தயாரானது

தினத்தந்தி : மராட்டியத்தில் 3 கட்சிகள் அமைக்கும் அரசில் சிவசேனாவுக்கு
முதல்-மந்திரி பதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அரசில் செயல்படுத்த வேண்டிய குறைந்தபட்ச செயல் திட்டம் தயாராகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மும்பை, மராட்டிய சட்டசபை தேர்தல் முடிவை தொடர்ந்து எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாததால் கடந்த செவ்வாய்க்கிழமை மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
பாரதீய ஜனதாவுடன் கூட்டணியை முறித்து கொண்ட சிவசேனா எதிரணியை சேர்ந்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து கூட்டணி அரசு அமைக்கும் முயற்சியில் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது.
புதிய அரசை அமைப்பதற்கு 3 கட்சிகளும் குறைந்தபட்ச செயல்திட்டத்தை வகுக்க பேச்சுவார்த்தை நடத்தின. கட்சிகள் இடையேயான அதிகார பகிர்வு குறித்தும் பேசப்பட்டது.

இலங்கை அதிபர் தேர்தல் வாக்கு பதிவு தொடங்கியது .. நள்ளிரவு முதல் முடிவுகள் வெளியாகும் ....

இலங்கை அதிபர் தேர்தல்- வாக்குப்பதிவு  தொடங்கியதுதினத்தந்தி :இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
 கொழும்பு, இலங்கையின் தற்போதைய அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் வரும் ஜனவரி மாதம் 9-ந்தேதி முடிகிறது. இதையொட்டி, அங்கு அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்  இன்று (சனிக்கிழமை)  நடைபெற்று வருகிறது.  காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலை முன்னிட்டு இலங்கை முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த தேர்தலில், முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் தம்பி கோத்தபய ராஜபக்சே (வயது 70), பொது ஜன பெரமுனா கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து ஐக்கிய தேசிய கட்சி சார்பில், முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் மகனான சஜித் பிரேமதாசா (52) போட்டியிடுகிறார். மொத்தம், 35 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள்.

இஸ்லாமிய சமூக பெண்கள் படிப்புக்காக வெளியே வருவதை பிடிக்காதவர்கள் .. ....


M.m. Abdulla : இஸ்லாமிய சமூகத்தில் இருந்து மிகச் சமீபகாலமாகத்தான் பெண் குழந்தைகள் படிப்பதற்கு வெளியில் வருகிறார்கள்.
வயதுக்கு வரும் வரை பள்ளிக்கல்வி..பிறகு சராசரியாக 16 வயதில் திருமணம். இப்படித்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது.
என் மனைவியையே திருமணமான பிறகு நான் தான் ஆசிரியர் பயிற்சி பள்ளிக்கு அனுப்பினேன்! என் வீட்டிலேயே இதுதான் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்த நிலை!!
வீட்டுச் சுவர்களின் பின்னும், பர்தாவின் உள்ளேயேயும் மறைந்திருந்த சிறுபான்மைச் சமூகப் பெண்கள் பரவலாக மெல்ல வெளியில் தலை காட்டத் துவங்கி இருப்பது தற்போதுதான்!! இதற்கே எத்தனை தூரம் சொந்த சமூக ஆண்களின் எதிர்ப்பை கடக்க வேண்டி இருக்கும் கொடுமையை அவர்கள் மட்டுமே அறிவார்கள்!!
உள்ளிருந்து தங்கள் சமூகத் தொடர்பில் மட்டுமே வாழ்ந்து வந்த அவர்களுக்கு புறச் சமூகம் குறித்த புரிதலோ சாதிய மதவாத அழுத்தங்களோ அவர்களுக்கு அறவே புரியாது!!
ஒரு விசயம் நடக்கும் போது இதற்குக் காரணம் இதுதான் என்பதை உணரும் அளவிற்கு இன்னும் அவர்களிடம் தெளிவு இல்லை. புரிந்து கொள்ளவும், எதிர்த்து நிற்கவும் இன்னும் சில பத்தாண்டுகள் ஆகும்.
ஆதிக்க சமூகங்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒரே செய்திதான்... இந்த உலகம் மிகப் பெரியது. அனைவருக்குமான இடம் அனைவருக்கும் இருக்கிறது! தன் சொந்த சமூக ஆண்களின் எதிர்பின் ஊடே வெளியில் வரும் அந்தப் பெண்களும் ஒரு ஓரமாக இருந்துவிட்டு போகட்டும். பாவம் விட்டுவிடுங்கள்.

வெள்ளி, 15 நவம்பர், 2019

யார் தமிழர்கள்? என் ஜாதியை கேட்கிறார்கள் .. முனைவர் சுபாஷினி பேட்டி ... வீடியோ


Subashini Thf : லண்டன் IBC Tamil தொலைக்காட்சிக்கு நான் வழங்கிய பேட்டி.
எனது செயல்பாட்டினைத் திரித்து அவதூறு பரப்புகின்ற சில போலி தமிழ்த்தேசியவாதிகளுக்கு எனது பதில்!
இப்பேட்டியில் யூடியூப் பக்கத்தில் சிலர் எனது பேட்டியைச் சிறிதும் கேட்காமல் மிக மோசமாக பின்னூட்டங்களைச் சேர்த்திருக்கின்றனர். தமிழ் மொழியில் நல்ல பண்புள்ள சொற்கள் இருக்கும் போது தரக்குறைவான சொற்களை பயன்படுத்துகின்ற இத்தகையோர் தம்மை திருத்திக் கொள்ளவேண்டியது மிக முக்கியம். அதிலும் குறிப்பாக பெண்கள் என்றால் தரக்குறைவாக அவர்களை இழிவு படுத்திப் பேசலாம் என நினைப்போர் நிறுத்தி நிதானித்து எழுத வேண்டியது அவசியம். இப்படி எழுதுவதால் எழுதுபவர்கள் தான் தன்னை அசிங்கப்படுத்திக் கொள்கின்றனர்.
இவர்களை மிக மோசமாக வழிநடத்திக் கொண்டிருக்கும் இவர்களது தலைவர்கள் எத்தகைய
மோசமான நிலையில் சாதி வெறியையும் இனவெறியையும் இளைய தலைமுறைக்கு கற்றுக் கொடுக்கின்றோம் என்பதையும் இதனால் கெட்டுப்போகும் மனித நல்லொழுக்கத்தையும் பற்றி யோசிக்க வேண்டும்.

அமித் ஷா மகன் ஜெய் ஷா நிறுவனம் 2014ல் வெறும் 79 லட்சம்... 2019ல் 119 கோடி.. அசுர வளர்ச்சி ..

Muralidharan Pb : ஒரு இந்தியக் குடிமகன் தொழில் தொடங்கி நடத்தினால் 3 வருடங்களில் லாபம் பார்க்கலாம் என்பது சராசரி நிலைமை.
அதுவே வளர்ந்து வரும் ஒரு துறையில் கொஞ்சம் வேகம் கூடும். முதலாண்டிலேயே 100% லாபம் வரலாம்.
குசும் ஃபின்சேர்வ் என்பது அமித் ஷா மகன் ஜெய் ஷா நிறுவனம். அந்நிறுவனம் 2014ல் வெறும் 79 லட்சம் வணிகம் செய்தது. அது 2019ல் அசுர வளர்ச்சி பெற்று 119 கோடி ஆனது. மிகக் குறிப்பாக 15000 % லாபம் என்பது super exorbitant அதீத அளவுக்கடந்ந எண்ணிக்கை. கடத்தல் அல்லது கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்டால் தான் இது சாத்தியம். கள்ளப் பணம் இருக்க வாய்ப்பில்லை. காரணம் நமது பிரதமர் மோடிஜி 2016ல் அதை ஒழித்துவிட்டார்.
அப்போ எப்படி இது சாத்தியம்?
மிகவும் கவனிக்கப்படவேண்டிய செய்தி என்னவெனில் இந்த 5 ஆண்டுகளில் 2 ஆண்டுகள் தொடர்ச்சியாக வருமான வரி விவரங்களை சமர்ப்பிக்கவில்லை.
LLP என வகைபடுத்தப்பட்ட நிறுவனமானது அக்டோபர் 30க்குள் ஆண்டு தோறும் கணக்கு வழக்குகளை சமர்ப்பிக்க வேண்டும் என்பது கம்பெனிகளின் சட்டம்.
2017, 2018 ஆண்டுகளில் அவை சரியான நேரத்தில் அந்த நிறுவனத்தால் வழங்கப்படவில்லை. பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகே இது சமர்ப்பிக்கப்பட்டது.

சென்னை மேயர் தேர்தலில் உதயநிதி போட்டியிடமாட்டார் .. சென்னை மாவட்ட திமுக உதயநிதி பொறுப்பில்?

Udhayanidhi Stalin, Udhayanidhi Stalin News, Udhayanidhi Stalin DMK, Udhayanidhi Stalin Chennai Mayor, உதயநிதி ஸ்டாலின், சென்னை மேயர் பதவி, மேயர் தேர்தல்tamil.indianexpress.com : சென்னையில் 3 எம்.பி.க்கள் அலுவலகங்களை உதயநிதி மூலமாக திறந்திருப்பதும் கட்சியின் சில மட்டங்களில் விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
உதயநிதி ஸ்டாலின் நேரடி கண்காணிப்பில் சென்னை திமுக நடவடிக்கைகள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இதன் ஒரு அம்சம்தான், திமுக.வின் 3 எம்.பி.க்களின் அலுவலகங்களையும் உதயநிதி மூலமாக திறக்க வைத்தது! இன்னொரு முக்கிய செய்தி, வருகிற மேயர் தேர்தலில் போட்டி இல்லை என முடிவு செய்திருக்கிறார் உதயநிதி.
உதயநிதி ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளர் ஆனபோதே, கட்சியின் அடுத்தக் கட்ட தலைமை தயாராகிவிட்டதை கட்சி நிர்வாகிகள் புரிந்து கொண்டார்கள். அதை நிரூபிக்கும் வகையில் நாடாளுமன்றத் தேர்தல், வேலூர் இடைத்தேர்தல், விக்கிரவாண்டி மற்றும் நாங்குனேரி இடைத்தேர்தல் என ஒவ்வொரு களத்திற்கும் நேரடியாக சென்று பிரசாரம் செய்தார் உதயநிதி. அதாவது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக, மாநிலம் முழுவதும் திமுக.வுக்கு உழைக்கும் தலைவராக உதயநிதி அடையாளம் காட்டப்பட்டார்.

கரூர் .. 400 க்கும் மேற்பட்ட தி.மு.கவினர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

karurவெப்துனியா  :தி.மு.க கூடாரம் கூண்டோடு காலி – சரிந்தது செந்தில் பாலாஜியின் செல்வாக்கு – கரூர் மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் 400 க்கும் மேற்பட்டோர் தி.மு.க கட்சியிலிருந்து அ.தி.மு.க கட்சியில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் இணைந்தனர்.
கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், தினந்தோறும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு, பொதுமக்கள் பிரச்சினைகளை ஆய்வு செய்தும் தீவிர ஆய்வு மேற்கொண்டும் பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார்.
இந்நிலையில், முதல்வரின் உத்திரவிற்கிணங்க, ஆங்காங்கே பல்வேறு சிறப்பு திட்டங்களும், ஏரி, குளங்கள், கால்வாய்களை தூர்வாருவதிலும் தமிழக அளவில் பெரும் முயற்சியெடுத்து செயல்படுத்தி வரும் நிலையில், கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி அந்த தி.மு.க கட்சியில் இணைந்த நாள் முதல் தினந்தோறும் கரூர் மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் ஏராளமான தி.மு.க வினர் சப்தமே இல்லாமல், அ.தி.மு.க வினர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் இணைந்து வருகின்றனர்.

சபரிமலை வரும் பெண்களுக்கு பாதுகாப்பு தர மாட்டோம்- கேரள தேவசம்போர்டு மந்திரி பேட்டி

சபரிமலை வரும் பெண்களுக்கு பாதுகாப்பு தர மாட்டோம்- கேரள தேவசம்போர்டு மந்திரி பேட்டி
திருப்தி தேசாய்மாலைமலர் :சபரிமலைக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் வந்தால் பாதுகாப்பு தர மாட்டோம் என தேவசம்போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரம்: கேரள தேவசம்போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
சபரிமலை சீராய்வு மனு தீர்ப்பு குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை கேட்டுள்ளோம். சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் பலர் சட்ட நுணுக்கங்களை தெரிவித்துள்ளனர். அதன்படி இப்போதைக்கு சபரிமலை கோவிலுக்கு இளம்பெண்கள் வருவதை அரசு ஊக்குவிக்காது. நாளை நடை திறக்க உள்ள நிலையில் பெண்கள் கோவிலுக்கு வரவேண்டும் என்று விரும்புவதை அரசு ஆதரிக்காது.
சபரிமலை கோவிலில் தற்போதுள்ள நிலையே தொடரும். 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் சபரிமலைக்கு வந்தால் அவர்களுக்கு பாதுகாப்பு தரமாட்டோம். நீதிமன்ற அனுமதி பெற்று வரும் பெண்களுக்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

பாத்திமா மரணம் தற்கொலை அல்ல- மு.க.ஸ்டாலின்! வீடியோ

mk stalin

  பா.சந்தோஷ் . நக்கீரன் :  சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு சென்ற ஐஐடி மாணவி பாத்திமாவின் தந்தை லத்தீஃப், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள குறிப்பில், சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மரணம் தற்கொலை அல்ல; அதில் பல மர்மங்கள் அடங்கி இருப்பதை அவரது பெற்றோர் எழுப்பும் கேள்விகள் உணர்த்துகிறது! அவர்களின் கண்ணீருக்கு நீதி கிடைக்க வேண்டும்! குற்றவாளிகளை
உடனடியாகக் கைது செய்வதன் மூலமாக நியாயத்தின் பக்கம் நிற்பதை தமிழக அரசு நிரூபிக்க வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தின் ஊழல் .. ..பிரசாந்த் பூஷன்

Prashant Bhushan · SC today dismissed review petitions in Rafale. However Joseph J has said that our complaint makes out a serious case&FIR should have been registered&investigation done by CBI. But because PC Act was changed to require govt permission,that must be taken. Why is CBI not seeking it?
சாவித்திரி கண்ணன் : உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் ஊழல்களை, ஊழலுக்கும்,அதிகாரத்திற்கும் துணை போகும் நீதிபதிகளை தொடர்ந்து விமர்சித்து வருபவர் பிரசாந்த் பூசன்!
’’ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது. ஆனால்,அதை உச்ச நீதிமன்றம் விசாரித்து பாரபட்சமின்றி உறுதி செய்யும் என்று நாம் நம்பிவிட முடியாது . ஏனெனில் உச்ச நீதிமன்றத்திலும் ஊழல் உள்ளது“ என்று முன்பே கருத்து தெரிவித்திருந்தார் பிரசாந்த் பூசன்!
இப்போதும் 526 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்க வேண்டிய போர் விமானங்களை ரூபாய் 1670 கோடி கொடுத்து ஏன் வாங்கினார்கள் என்பதற்கு போதிய விளக்கம் கிடைக்கவில்லை.
பிரசாந்த் பூசன் போன்ற ஒரு சிலராவது இருப்பதால் தான் ஜனநாயகத்தின் மீது ஒரு நம்பிக்கை ஏற்படுகிறது.

சீமானுக்கு பின்னே இருப்பது மாபா பாண்டியராஜன்.....?

பிள்ளைகளுக்கு தந்தை யார் மிஸ்டர் மாஃபா ?

தாம் சொல்லிய சொற்களை, சொல்லவில்லை என மறுப்பது, தாம் எடுத்த வாந்தியை தானே திரும்ப விழுங்குவது போன்று அருவருப்பானது. "நாய் தான் கக்கியதை தானே திங்குமாம்...'' என்பது ஒரு பிரபல சொலவடை. இப்போது மாஃபா பாண்டியராஜன் அந்த வேலையை தான் செய்து கொண்டிருக்கிறார்.
தி.மு.க தலைவர் தளபதி அவர்களை விமர்சிக்கிறேன் என தரம் தாழ்ந்து பேசி விட்டு, ஆப்பசைத்த "குரங்காய்" முழிக்கிறார் இப்போது. 'மிசாவில் கைதாகவில்லை ஸ்டாலின்' என அன்று சொல்லிவிட்டார், மண்டபத்தில் எவனோ எழுதிக் கொடுத்ததை நம்பி. அடுத்தக்கட்டமாக ஒரு படி மேலே போய், 'விரைவில் ஆதாரம் தருகிறேன்', என்றார். கழகத் தோழர்கள் அடுக்கடுக்காய் ஆதாரத்தைக் காட்டிவிட்டார்கள். இன்று பொய் சொல்லி மாட்டிக் கொண்டு, நான் அப்படி சொல்லவில்லை, இப்படி சொல்லவில்லை என உழப்புகிறார் மாஃபா.
அ.தி.மு.க அமைச்சர்களின் இமேஜை உயர்த்த ஒரு கார்ப்பரேட் நிறுவனம் அமர்த்தப்பட்டுள்ளதாக பரவலாகத் தகவல். அந்த நிறுவனம் சொன்னதை கேட்டு தான், மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த பச்சிளம் குழந்தை சுர்ஜித்தை காப்பாற்ற போராடுவதாக மண்ணை பூசிக் கொண்டு மருத்துவம் விஜய்பாஸ்கர் நான்கு நாட்கள் பேட்டிக் கொடுத்தது. அதே போல தான் எதை செய்தும் செல்லுபடியாக முடியாமல் தவிக்கும் மாஃபாவுக்கு இந்த ஆலோசனை கொடுக்கப்பட்டுள்ளது போலும். அதை நம்பி சேற்றில் சிக்கிக் கொண்டுள்ளார்.

ஊடகங்கள் மறைக்கும் மக்கள் பிரச்சனைகள் ... பட்டியல்!

Kalai Selvi : ஊடகங்களால் விவாதிக்க வேண்டிய மக்கள் பிரச்சினைகள்:
1. சட்டசபையில் ஏக மனதாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா ஏன் நிராகரிக்கப்பட்டது?
2. நீட் தேர்வில் நடந்த ஆள்மாறாட்டத்திற்கான சட்ட நடவடிக்கை என்ன?
3. தமிழ் நாடு அரசு பணிகளில்(TNPSC) பிற மாநிலத்தவர்களை பணியமர்த்தும் சட்ட திருத்தம் செய்து தமிழ் இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியதற்கு என்ன பதில்?
4. தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே, வங்கி, அஞ்சல் துறை பணிகளில் தமிழர்களை தேர்ந்தெடுக்காதது ஏன்?
5. அதிமுக பேனர் விழுந்து இறந்ததற்கு பேனர் வைத்தவர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன?
6. ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டத்தில் போலிசாரால் கொல்லப்பட்ட 15 பேருக்கான விசாரணை நிலை என்ன?
7. பொள்ளாச்சி பாலியல் கொடுமையில் கைது செய்யப்பட்ட அனைவரும் வெளியே வந்தது எப்படி?
8. படிப்படியான மதுவிலக்கு என்ன ஆனது?
9. ஆர் கே நகர் பணப்பட்டுவாடா வழக்கு என்ன ஆனது?
10. இளைஞர்களை சீரழிக்கும் குட்கா வழக்கின் நிலை என்ன?
11. 11 எம்எல்ஏக்கள் மீதான வழக்கு என்ன ஆனது?
12. ராதாபுரம் தொகுதி அஞ்சல் வோட்டு முடிவுகளை எப்போது அறிவிப்பார்கள்?
13. கல்லூரி மாணவிகளை பாலியல் பலாத்காரத்திற்கு கட்டாயப்படுத்திய நிர்மலா தேவி வழக்கு என்ன ஆனது?
14. ஜெயலலிதா மரணத்திற்கான ஆறுமுகம் கமிஷன் என்ன ஆனது?
15. ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடந்த கொலைகளின் குற்றவாளி யார்?
16. தானே கேட்டுப்பெற்ற ஆறுமுகசாமி கமிசனில் ஒபிஎஸ் ஏன் ஆஜராகமாட்டேன் என்கிறார்?
17. கவர்னரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் எழுவர் விடுதலை என்ன ஆயிற்று?
18. கோவில் சிலைக்கடத்தல் வழக்கு ஏன் நின்று போனது?
இன்னும் பல பிரச்சினைகள். ஆனால் ஊடகங்கள் விவாதிப்பது என்ன?
இது குறித்து நாம் அதிகமதிகம் பதிவுகள் செய்வோம்...
இதை விட கேவலம் இந்த ஊடகங்களுக்கு இருக்க முடியுமா?

திருக்குறளில் இடைச்செருகல்கள் .. கடவுள் வாழ்த்து அதிகாரம் திருவள்ளுவர்_எழுதியது_இல்லை .. வ உ சி

Parimala Rajan ; திருக்குறளில் உள்ள  கடவுள்  வாழ்த்து எனும் அதிகாரம் !
திருவள்ளுவர்_எழுதியது_இல்லை
இப்படி சொல்பவர் பெரியாரோ அல்லது கடவுள் நம்பிக்கை இல்லாத அறிஞர் ஒருவரோ அல்ல.
திருக்குறளை ஆய்வு செய்து திருக்குறளில் உள்ள இடைச்செருகல்களை ஆதாரங்களுடன் நிறுவியவர் வ_உ_சி அவர்கள்.ஆம் இந்திய சுதந்திர போராட்ட தியாகி என புகழப்படும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களேதான். வ.உ.சி.கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ளவர் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
திருக்குறளில் #கடவுள்_வாழ்த்து எனும் அதிகாரம் மட்டுமல்ல,வான்_சிறப்பு, #நீத்தார்_பெருமை ஆகிய அதிகாரங்களும் திருவள்ளுவர் எழுதியவை இடைச்செருகல்களே என்று ஆய்வு செய்து கூறுகிறார் வ.உ.சி.“அவை திருவள்ளுவர் காலத்திற்குப் பிற்காலமும் முந்திய உரையாசிரியர்கள் காலத்திற்கு முற்காலமுமாகிய இடைக் காலத்துப் புலவர் ஒருவரால் பாடிச் சேர்க்கப் பட்டவையென்றும் யான் கருதுகிறேன்” என்று கூறுகிறார்.
அல்ல.அவை
பரிமேலழகர் என்பவர் எழுதிய திருக்குறள் உரை ஆரிய சார்பானதாக இருப்பதை ஏற்க மறுத்து (அப்போது சுயமரியாதை இயக்கமோ,பகுத்தறிவு கருத்துக்களோ வீரியமாக பேசப்படாத காலம் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.) ஏற்கும்படி இருக்கும் மணிகுடவர் எழுதிய திருக்குறள் உரையிலிருந்து திருக்குறள் அறத்துப்பால் மணிக்குடவர் பதிப்பு எனும் தலைப்பில் 140 பக்கங்கள் கொண்ட நூலை 1917 ஆம் ஆண்டு பதிப்பித்தார் வ.உ.சி.

அதானி கம்பனி ஒன்பது மாதத்தில் 200 மடங்கு லாபம் பார்த்தது

Chinniah Kasi : தீக்கதிர் - நவம்பர் 15, 2019 : புதுதில்லி:
பிரதமர் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்புவரை, நாட்டின் பணக்காரர் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள்கூட இல்லாதவர் கௌதம் அதானி. ஆனால், தற்போது முகேஷ்அம்பானிக்கு அடுத்த இடத்தில், நாட்டின் இரண்டாவது பெரும் பணக்காரராக அதானி உருவெடுத்து இருக்கிறார்.
அவரது அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது.அந்த வகையில், அதானி குழுமத்தைச் சேர்ந்த ‘அதானி க்ரீன் எனர்ஜி’ (Adani Green Energy limited) என்ற மரபுசாரா எரிசக்தி நிறுவனம், கடந்த 9 மாதங்களில் மட்டும் 200 சதவிகித அளவிற்கு லாபமீட்டி, சக கார்ப்பரேட் நிறுவனங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.கடந்த 2018-19 நிதியாண்டின், ஜூலை - செப்டம்பர் காலாண்டில், அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் நிகர லாபம் மைனஸ் 187 கோடி ரூபாயாக இருந்தது. அதாவது 187 கோடி ரூபாய் நஷ்டத்தில் இருந்தது. ஆனால், 2019-20 நிதியாண்டின் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 102 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டிஇருக்கிறது. அதேபோல, முந்தைய 2018 - 19 நிதியாண்டின், இரண்டாவது காலாண்டில், அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் வருவாய் 449 கோடி ரூபாயாக இருந்துள்ளது.

மகாராஷ்டிரா .. பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சிவசேனா , காங்கிரஸ் . தேசியவாத காங்கிரஸ் ஆட்சி ..?

tamil.samayam.com :
தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆதரவுடன், சிவசேனா தலைமையில் மகாராஷ்டிரத்தில் கூட்டணி ஆட்சி அமையும் சூழல், தற்போது மீண்டும் உருவாகியுள்ளது. சிவசேனாவோட பேசி ஒரு முடிவுக்கு வந்திடுச்சாம் காங்கிரஸ் ! இனியாவது ஆட்சி அமைப்பா...
பாஜக ,சிவசேனா கட்சிகளுக்கிடையே அதிகார பகிர்வில் உடன்பாடு ஏற்படாததையடுத்து, மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜகவால் மீண்டும் ஆட்சியமைக்க முடியாமல் போனது. இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன், சிவசேனா தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், கடைசி நேரத்தில் காங்கிரஸ் சோதப்பியதால், சிவசேனாவாலும் அங்கு ஆட்சி அமைக்க முடியாமல் போனது. அத்துடன், மகாராஷ்டிரத்தில் தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. எடப்பாடியாரிடம் அரசியல் பாடம் படிங்க அமித் ஷா

இலங்கை ஜனாதிபதி தேர்தல் .... கருத்து கணிப்புகளும் கள நிலவரங்களும்

Jeevan Prasad : மஹிந்த,மெதமூலன வீட்டுக்கு சென்று விட்டார். பசில் - கோட்டா மூட்டை முடிச்சுகளை கட்ட நினைக்கிறார்கள். பிரதேச தலைவர்களோ அடித்தாவது பறிக்கலாமா என யோசிக்கிறார்கள்!
ஜனாதிபதி தேர்தல் குறித்த கருத்து கணிப்புகளும் கள நிலவரங்களும் கோட்டாபய தோல்வியடைவார் என சென்ற வாரத்தில் தெரியவந்தது. இதிலிருந்து மீள கோட்டாவின் தேர்தல் பணிகளை பசில் மற்றும் மகிந்த தமது கரங்களில் எடுத்தும் கடும் பிரயத்தனத்தை காட்ட முற்பட்ட போதும் அவை நினைத்த அளவு வெற்றி அழிக்கவில்லை.
நேற்று பசில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கோட்டா தோல்வியடைவதை தெரிந்து விட்டது போல கருத்து பகர்வுகள் இடம்பெற்றன.
எது எப்படியோ மகிந்த தற்போது மெதமூலனவில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பிச் சென்றது தோல்வியை அவரே உறுதி செய்து விட்டார் என அவரோடு இருந்தோர் தெரிவிக்கின்றனர். பசிலும் கோட்டாவும் நாட்டை விட்டு வெளியேற முயல்கின்றனர். இவர்களது கடவுச் சீட்டுகள் நீதிமன்றத்தில் உள்ளமையால் அரசில் உள்ள ஒரு பிரபல அமைச்சரை கொண்டு பெற பேச முயன்றுள்ளார்கள். ஆனாலும் அவர் அது கடினமான விடயம் என கைகழுவி விட்டதாக அறியக் கிடைக்கிறது.

மாணவி அல்பியா ஜோஸ் : கல்வி பிராமணர்களுக்கு மட்டுமே என்ற மனுதர்மத்தினை உயர்த்தி பிடிக்கிறது ஐ ஐ டிக்களும் ஐ ஐ எம் போன்ற

ஃபாத்திமாவிற்கு ஆதரவாக ஐஐடி மாணவி அல்பியா ஜோஸ்...
மெட்ராஸ் ஐஐடியில் நிறுவனக் கொலை செய்யப்பட்ட ஃபாத்திமா லத்தீபிற்கு ஆதரவாக ஐஐடி மெட்ராஸின் மானுடவியல் துறை ஆராய்ச்சி மாணவி அல்ஃபியா ஜோஸ் ஆங்கிலத்தில் எழுதிய பதிவின் மொழிபெயர்ப்பு.
நான் ஒரு ஐஐடி மெட்ராஸின் மாணவன். எனது கல்வி வளாகம் வரு ஒரு உயரடுக்கு சாதியவாத, இனவாதம் பேசும் வன்முறைகூடம். மிக முக்கியமாக அது இஸ்லாமோபோபியாவை கடைபிடிக்கிறது.
நவம்பர் 8ம்தேதி ஐஐடி மெட்ராஸில் முதலாமாண்டு எம்.ஏ மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் மாணவி ஃபாத்திமா லத்தீஃப் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். (நானும் அந்த துறையைச் சார்ந்தவன் தான்). இந்த கல்வி வளாகத்தின் அலட்சியம் குறித்தும் அதன் இயல்பான ஆதிக்க தன்மை குறித்தும் குறிப்பாக இங்குள்ள மாணவர்கள் குறித்தும் நான் பயப்படுகிறேன்.
ஒட்டுமொத்த கல்வி வளாகமும் இந்த பிரச்சினையில் மாணவர்கள் மனநலன், இயலாமை மற்றும் கோபம் குறித்து மட்டுமே விவாதித்துக் கொண்டிருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக அவர்கள் புரிந்துகொள்ள முடியாத புள்ளி ஒன்று இருக்கிறது.( இவை கூட இவர்களின் திட்டமிட்ட பாதுகாப்பான நாடகமாக இருக்குமோ என்று நான் சந்தேகிக்கிறேன்) அந்த புள்ளி என்னவெனில் மாணவர்கள் அடையும் மன வேதனைகளுக்கான காரணம் தனிப்பட்டதல்ல.., மாறாக அவை திட்டமிட்டே கட்டமைக்கப்படுகின்றன.

இந்தோனேசியா நிலநடுக்கம் 7.1 ரிச்டர் அளவில் .. சுனாமி அறிவித்தல்! Magnitude-7.1 earthquake hits Indonesia sea; tsunami risk reported

Strong quake hits Indonesia sea; tsunami risk reported
Magnitude-7.1 earthquake awakens residents causing some to run out of their homes to higher places in panic.
A powerful earthquake has hit off the Indonesian coast in the Molucca Sea, creating the risk of tsunami in nearby areas.
The US Geological Survey reported the magnitude-7.1 earthquake, which struck early on Friday morning, was centred in the sea about 140 kilometres (86 miles) northwest of Ternate in North Maluku province.
Indonesia's Meteorology, Climate and Geophysics Agency issued a tsunami warning, urging people to stay away from the coastline.
The earthquake awakened residents in some cities in North Sulawesi and North Maluku provinces, causing some to run out in panic to higher places, Kompas TV reported.
Rahmat Triyono, a senior official at the agency, which put the earthquake's depth at 73km (45 miles), said the warning was specially issued for the eastern part of North Sulawesi province.
"We issued the tsunami warning with an alert that any tsunami is estimated at only at a height of around 50 centimetres (20 inches)," he said.
Kompas TV also reported that government officials in North Maluku prepared for a possible evacuation of residents. Some patients at a hospital in North Sulawesi's capital of Manado were evacuated from their rooms.
There were no immediate reports of injury or damage, but the Pacific Tsunami Warning Center said hazardous tsunami waves were possible within 300km (186 miles) of the epicentre. It reported no tsunami risk for more distant areas.
SOURCE: AP news agency

வியாழன், 14 நவம்பர், 2019

ஐ ஐ டிக்களில் படிப்பை பாதியில் விட்டு ஓடும் பட்டியல் பழங்குடி இதர பிற்படுத்தபட்டோர்

IIT SC and ST ( NON BRAHMIN CASTE ) students drop out list:
Delhi IIT : 782.
Karakpur ITT :622.
Mumbai ITT :263 .
Kanpur ITT : 190 .

Chennai ITT : 128 .
Devi Somasundaram : ·
ஒரு பாப்பான் கூட இல்லை .கேட்டா நாங்க கடினமான தேர்வையும் கஷ்ட்டப்பட்டு படிக்கிறோம்..  மத்தவா பயந்து ஓடிடறான்னு கதை விடுவானுக ...ஆனா வெளி நாட்ல இத விட கடினமான தேர்வை கொண்ட கல்லூரிகளில் மற்ற மாணவர்கள் படிச்சு பாஸ் செய்துட்டு வராங்க....தேர்வ பாத்து பயந்து ஓடுவது உண்மைன்னா வெளி நாட்லேர்ந்து ஏன் ஓடி வர்ல ....ஐ ஐ டில உள்ள பேராசியர் முழுக்க நீக்கிட்டு இட ஒதுக்கீடு அடிப்படைல சேர்த்தா அப்ப தெரியும்...யார் ஓடறான்னு

BBC இலங்கை குடியரசு தேர்தல்: 'குறைவான வன்முறை....., அதிகமான ஊடக விதிமீறல்'

இலங்கை வரலாற்றில் தேர்தல் வன்முறைகள் குறைவாக பதிவான
தேர்தலாக இந்த குடியரசு  தேர்தல் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 13ஆம் தேதி வரை 'பெப்ரல்' (People's Action For Free and Fair Elections - PAFFREL) அமைப்பினால் நடத்தப்பட்ட கணிப்பின்படி, இந்த தேர்தல் காலப் பகுதியில் தேர்தல் வன்முறைகளுடன் தொடர்புப்பட்டு உயிரிழப்பு ஒன்று கூட பதிவாகவில்லை.
அத்துடன், பெரிய வன்முறைகள் மற்றும் சட்ட மீறல்கள் தொடர்பில் 68 சம்பவங்களே பதிவாகியுள்ளதாக அந்த அமைப்பு கூறுகின்றது.
கடந்த கால குடியரசு தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் தேர்தல் காலப் பகுதியில் இடம்பெற்ற வன்முறைகள் பாரிய அளவில் குறைவடைந்துள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரொஹண ஹெட்டியாராட்ச்சி தெரிவிக்கின்றார்.
இந்த முறை ஜனாதிபதி தேர்தலில் சட்ட மீறல்கள் இடம்பெற்றமை தொடர்பிலும் அவர் கருத்து வெளியிட்டார்.
இதன்படி, இந்த முறை ஜனாதிபதி தேர்தலில் ஊடக நிறுவனங்களே அதிகளவில் தேர்தல் விதிமுறைகள் மற்றும் தேர்தல் சட்ட மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இது மிகவும் கவலைக்குரிய விடயம் என அவர் கூறினார்.
e>அதுமட்டுமன்றி, பௌத்த சமயத் தலைவர்கள் அரசியலில் ஈடுபட்டு, சட்ட விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் ரொஹண ஹெட்டியாராட்ச்சி குறிப்பிட்டார்.

கைதியை சுட்டுக்கொன்ற போலீஸ் காளிதாசுக்கு ஆயுள் தண்டனை ..சையது முகமதுவை சுட்டு கொன்ற ராமநாதபுரம் எஸ் ஐ ....

தினமலர் : ராமநாதபுரம்: ராமநாதபுர மாவட்டம் எஸ்பி., பட்டனத்தில் கைதியை சுட்டு கொன்ற வழக்கில் எஸ்.ஐ.,க்கு ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014 அக்டோபர் 14 ல் சையது முகம்மது என்ற ஒரு நபரை விசாரிப்பதற்காக எஸ்.பி., பட்டனம் போலீசார் அழைத்து சென்றனர். இவரை ஸ்டேஷனில் வைத்து விசாரித்த எஸ்.ஐ., காளிதாஸ், சையதுவை லத்தியால் அடித்து துப்பாக்கியால் சுட்டார். இதில் சையது சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் எஸ்.ஐ., சுட்டது தவறு என கண்டறியப்பட்டது.

மிக்சர் சாப்பிடுகிறதா திமுக ஐ.டி. விங்? கொந்தளிக்கும் உடன் பிறப்புகள்...

dmk it wingநக்கீரன் :மிக்சர் சாப்பிடுகிறதா திமுக ஐ.டி. விங்? கொந்தளிக்கும் உடன் பிறப்புகள்... திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசாவில் கைதானாரா? முரசொலி நிலம் பஞ்சமி நிலத்தில் இருக்கிறதா? என அண்மையில் திடீர் திடீரென சர்ச்சைகள் எழுந்து, பல்வேறு சமூகப் பிரச்சனைகள் இருந்தாலும் தமிழகத்தில் ஸ்டாலினைப் பற்றியும், முரசொலி நிலத்தைப் பற்றியும் சமூக ஊடகங்களில் சர்ச்சையை சிலர் ஏற்படுத்தினர்.
அ.தி.மு.க மந்திரிகள் வரை இதனை பேசும் அளவுக்கு இந்த விஷயங்கள் மாற்றப்பட்டன. இதனால் தமிழகத்தில் இந்த விவகாரம் மிகப்பெரிய விவாதப் பொருளாகவும் மாறியது.
மேலும் இந்த விவகாரத்தை, திமுகவுக்கு எதிராக இருக்கக்கூடிய அதிமுகவின் ஐ.டி. விங், பாஜக ஐ.டி. விங், பாஜகவுக்கு ஆதரவாக இருப்பவர்கள், பாஜகவுக்கு ஆதரவாக உள்ள அமைப்புகளின் ஐ.டி. விங், நாம் தமிழர் உள்ளிட்ட திராவிட இயக்கத்திற்கு எதிராக சமூக ஊடகங்களில் உள்ளவர்கள் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
தீர்க்கப்பட வேண்டிய பல்வேறு மக்கள் பிரச்சனைகள் உள்ள நேரத்தில் ஆளும் கட்சியான அதிமுகவும், மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவும் இந்த விசயத்தில் அதிக கவனம் செலுத்துகிறது. இதற்கு பதிலடி கொடுக்க வேண்டிய இடத்தில் உள்ள திமுக ஐ.டி. விங் மிகவும் தடுமாற்றத்தில் உள்ளது என்று திமுகவினரே குமுறுகின்றனர்.

தேர்தல் ஆணைய செயலாளர் அதிமுகவுக்கு சாதமாக மாற்றம்? ஸ்டாலின் கடும் கண்டனம்

வெப்துனியா :தமிழக மாநில தேர்தல் ஆணைய செயலாளர் எஸ். பழனிசாமியை மாற்றியிருப்பது கண்டனத்திற்குரியது என திமுக தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது : உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய செயலாளர் திரு.பழனிச்சாமி அவர்களை, திடீரென்று மாற்றியிருப்பது கண்டனத்திற்குரியது!
உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தேர்தல் பணிகளைச் செய்து கொண்டிருந்தவரை மாற்றியது ஏன்? மேலும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் "விசுவாசமாகப்" பணியாற்றியதற்காக விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர், மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளாரா?
 இது, உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப்போடவா? அல்லது உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக-வினர் ஒட்டுமொத்தமாகத் தில்லுமுல்லுகளில் ஈடுபடுத்தவா? என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை மேயர் பதவிக்கு உதயநிதி போட்டி?

சென்னை மேயர் பதவிக்கு உதயநிதி போட்டி?மின்னம்பலம் : சென்னை மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் முன்கூட்டியே தங்களது தேர்தல் பணிகளைத் துவங்கிவிட்டன. திமுக சார்பில் உள்ளாட்சிப் பதவிகளுக்கு போட்டியிடுவதற்கான விருப்ப மனு விநியோகம் இன்று (நவம்பர் 14) தொடங்கியது. விண்ணப்பத்தை பலரும் ஆர்வமுடன் பெற்று பூர்த்தி செய்து அளித்து வருகின்றனர். விருப்ப மனுவை சமர்ப்பிக்க வரும் 20ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில், மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் விருப்ப மனு விநியோகத்தை இன்று துவங்கிவைத்தார். அப்போது, உதயநிதி ஸ்டாலின் சென்னை மேயர் பதவிக்கு போட்டியிட வேண்டும் என்று சென்னை மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சிற்றரசு விருப்ப மனு தாக்கல் செய்தார்.

மு.க.அழகிரி : தமிழக அரசியலில் தலைமைக்கான வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார்:

வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார்: மு.க.அழகிரிமின்னம்பலம் : தலைமைக்கான வெற்றிடத்தை நடிகர் ரஜினிகாந்த் நிரப்புவார் என மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
‘தமிழக அரசியலில் சரியான தலைமைக்கான வெற்றிடம் இன்னும் உள்ளது’ என்று நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் பேட்டியளித்தது விவாதத்தை ஏற்படுத்தியது. தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை என அதிமுகவும், வெற்றிடத்தை திமுக தலைவர் ஸ்டாலின் நிரப்பி நீண்ட நாட்களாகிவிட்டதாக திமுகவும் ரஜினிக்கு பதிலளித்தனர்.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று (நவம்பர் 14) செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியிடம், இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “ரஜினி கூறியது போல தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் இருப்பது உண்மைதான். அந்த வெற்றிடத்தை ரஜினி நிரப்பிவிடுவார்” என்று பதிலளித்தார். ரஜினி கட்சி தொடங்கினால் அதில் இணைவீர்களா என்ற கேள்விக்கு, அதுகுறித்து தற்போது கூற முடியாது என மு.க.அழகிரி கூறியுள்ளார்.
2014ஆம் ஆண்டு திமுகவிலிருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி, கலைஞர் மறைவுக்குப் பிறகு திமுகவில் சேர எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.

சபரிமலை வழக்கு ஏழு பேர் கொண்ட விரிவான அமைப்புக்கு மாற்றம் . .. வழக்கறிஞர்களோடு ஆலோசிப்போம் .. பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: சபரிமலை தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து முடிவெடுப்போம் என்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். சபரிமலைக்கு பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு இவ்வழக்கை மாற்றி உள்ளது.
தினமலர் : புதுடில்லி : சபரிமலை அய்யப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கில் இன்று, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதை அடுத்து இவ்வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் கூறுகையில், தனிப்பட்ட உரிமைக்கும், வழிபாட்டு உரிமைக்கும் இடையேயான வழக்கு. தீர்ப்பு இந்து பெண்களுக்கு மட்டுமானது என வரையறுத்து விட முடியாது. பெண்களுக்கான கட்டுப்பாடு சபரிமலையில் மட்டுமல்ல. வேறு கோயில்களிலும், மசூதிகளிலும் உள்ளது. சபரிமலை தொடர்பான வழக்கில் மதம் தொடர்பான நம்பிக்கை பற்றி வாதங்களை கருத்தில் கொண்டோம்.

மகாராஷ்டிரா - 300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு

மகாராஷ்டிரா - 300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு மாலைமலர் : மகாராஷ்டிரா மாநிலத்தில் 300 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவனை தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ளது கல்வான் என்ற கிராமம். இங்கு 300 அடி  ஆழ்துளை கிணற்றில் 6 வயது சிறுவன் இன்று காலை தவறி விழுந்தான். இதுதொடர்பாக, உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் சிறுவனை மீட்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு 300 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

திருச்சிராப்பள்ளி காட்டுக்குள்ளே.. காருக்குள்ளேயே வைத்து.. தீவைத்து எரிக்கப்பட்ட பெண்

Hemavandhana /tamil.oneindia.com : -   திருச்சி: காட்டுக்குள்ளே.. காருக்குள்ளேயே வைத்து... பெண்ணை தீ வைத்து எரித்து விட்டனர்.. அவர் யார் என்ற விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. 
திருச்சி சிறுகனூர் அருகே தச்சங்குறிச்சி என்ற காட்டுப்பகுதி உள்ளது. சுமார் 930 ஹெக்டேர் பரப்பளவில் இந்த காடு உள்ளது. இன்று காலை காட்டுக்குள்ளே இருந்து நெருப்பு புகை வந்து கொண்டிருப்பதையும், கார் ஒன்று எரிந்து கொண்டிருப்பதையும் அந்த வழியாக சென்றவர்கள் கவனித்தனர். இதுகுறித்து உடனடியாக சிறுகனூர் போலீசாருக்கு தகவல் தந்தனர். விரைந்து வந்த போலீசார், அருகில் சென்று பார்த்தபோது, காருக்குள் ஒரு நபரை வைத்து எரித்துள்ளனர். எரித்து கொல்லப்பட்டது ஆணா, பெண்ணா என்று கூட சரியாக தெரியவில்லை. முற்றிலும் கருகி இருந்தது.. அந்த காரின் உரிமையாளர் யார் என்ற விசாரணை நடந்து வருகிறது.
இந்த தகவல் பரபரப்பாக பரவி மக்கள் திரண்டு வர ஆரம்பித்துவிட்டனர். பின்னர், தச்சன்குறிச்சி சாலையை போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் ரெட்டி மாங்குடி கிராம மக்கள் சம்பவம் நடந்த பகுதியினை கடந்து செல்ல முடியாமல் சுமார் 12 கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

5 புதிய மாவட்டங்கள் உதயம் .... தாலுகாக்கள் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு

தினத்தந்தி : சென்னை, தமிழகத்தில் தற்போது 32 மாவட்டங்கள் உள்ளன. நிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி காஞ்சீபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்படும் என்று சட்ட சபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதுபோல நெல்லையை பிரித்து புதிதாக தென்காசி மாவட்டம், விழுப்புரத்தை பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் வேலூரை 3 ஆக பிரித்து புதிதாக திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியானது. புதிதாக உதயமாகும் மாவட்டங்களில் இடம் பெறும் வருவாய் கோட்டங்கள், தாலுகாக்களை எவை என்பதை அரசு நேற்று வெளியிட்டது. புதிய மாவட்டங்களை உருவாக்கி, தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
காஞ்சீபுரம் மாவட்டத்தின் கீழ் காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 2 வருவாய் கோட்டங்கள் இடம் பெறுகிறது. இந்த மாவட்டத்தில் காஞ்சீபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத், குன்றத்தூர் (புதிது) ஆகிய 5 தாலுகாக்கள் வருகின்றன.

உள்ளாட்சி: திமுக கூட்டணியில் காங்கிரசின் 30 வீத இடங்களை கேட்க வேண்டுமாம் ...உரிமைக் குரல்!

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சி: திமுக கூட்டணியில் காங்கிரசின் உரிமைக் குரல்!மின்னம்பலம : மொபைல் டேட்டாவை ஆன் செய்ததும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.
“அதிமுக கூட்டணியில் கிட்டத்தட்ட தேர்தல் பணிகளைத் தொடங்கி பாதி கடந்து விட்டார்கள். திமுக கூட்டணியில் திமுக பொதுக்குழுவுக்கு, மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்குப் பின்னால் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ளன.
நவம்பர் 11 ஆம் தேதி நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ’இடைத்தேர்தல் தோல்விக்காக ரெண்டு கமிட்டி போட்டு அறிக்கை வாங்கி வச்சிருக்கேன். சம்பந்தப்பட்டவங்க எவ்வளவு பெரியவங்களா இருந்தாலும் நடவடிக்கை எடுப்பேன். அதேபோல உள்ளாட்சித் தேர்தலுக்கும் கமிட்டி போட வச்சிடமாட்டீங்கனு நம்பிக்கை இருக்கு. வர்ற உள்ளாட்சித் தேர்தல்ல ஆளுங்கட்சி அத்தனை பலத்தையும் பயன்படுத்தும். அதையெல்லாம் மீறி நாம் 50% இடத்துல ஜெயிச்சாலே பெரிய வெற்றிதான். அதனால அதையே இலக்காக நாம வச்சி வேலை பார்க்கக் கூடாது. கடுமையாக பணியாற்றுங்க’என்று கூறியிருக்கிறார். அப்போது சில மாவட்டச் செயலாளர்கள், கூட்டணிக் கட்சிகளுக்கு என்ன ஒதுக்கீடு என்று கேட்டிருக்கிறார்கள். விரைவில் முடிவு செய்வோம் என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

ரஃபேல்:ஊழல் . சபரிமலை நுழைவு .. உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு இன்று!

சபரிமலை - ரஃபேல்: உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு இன்று!
மின்னம்பலம் : அரசியல் உலகம், ஆன்மிக உலகம், ஆன்மிக அரசியல் உலகம் என மூன்று வட்டாரங்களும் இன்று (நவம்பர் 14) உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.
சபரிமலை, ரஃபேல் விமான விவகாரங்களில் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட மீளாய்வு மனுக்களை விசாரித்து இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க இருப்பதுதான் இந்த எதிர்பார்ப்புக்குக் காரணம்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் எந்த வயதுள்ள பெண்களும் சென்று வழிபடத் தடையில்லை என்று கடந்த 2018 செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது. இதையடுத்து கேரளாவில் பெரும் போராட்டம் வெடித்தது. கேரள அரசு உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவோம் என்று சொல்ல, பல இந்து அமைப்புகள் போராட்டத்தில் இறங்கின.

திருமாவளவனின் தேர்தல் அரசியலை பகுஜன் சமாஜ் தொடர்ந்து எதிர்ப்பது ஏன்?

Satva T : கேள்வி: ஏன் அண்ணன் தொல் திருமாவின் தேர்தல் அரசியல் நிலைப்பாடுகளை பகுஜன் சமாஜ் தொண்டர்கள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர்?
பதில்: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் கூட்டணி குறித்து இன்றளவும் பகுஜன் சமாஜ் தொண்டர்கள் கடுமையான மொழியில் விமர்சனங்கள் செய்துவருகின்றனர். குறிப்பாக கடந்த நாடாளமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் விசிக இடம் பெற்றது குறித்து மிகவும் கோபத்தோடு அவர்கள் வசைபாடலை தொடர்ந்து வருகின்றனர். ஓரிரண்டு சீட்டுகளுக்காக சிறுத்தைகள் திராவிட கட்சிகளிடம் சரணடைந்து விட்டதாக எழுதுகின்றனர்.
பொதுவாகவே மூன்றாம் தர மொழியில் எழுதுவதை வழக்கமாக வைத்து இருக்கும் அவர்கள் கர்ர், தூ, சொம்பு, முட்டு மாதிரி சொற்களை பயன்படுத்துவதன் மூலம் மேற்கொண்டு விவாதத்தை தொடர இயலாத வகையில் ஒரு வழிபாதையாக வாதம் செய்து வருகின்றனர்.
இது ஏன்? என்று ஆராய்வோமேயானால் கடந்த இரண்டு நாடாளமன்ற தேர்தல்களில் உத்திரபிரதேசத்தில் என்ன நடந்தது என்பதை அறிய வேண்டியுள்ளது. அங்கு 2014 தேர்தலில் 72/80 இடங்களிலும், 2019 ல் 63/80 இடங்களிலும் பி.ஜே.பி அபார வெற்றி பெற்றது. உத்திர பிரதேசம் எனும் ஒற்றை மாநிலத்தில் இவ்வாறு கணிசமான இடங்களை தக்க வைத்தது அவர்களுக்கு தனிப்பெரும்பாண்மை கிடைக்க வழிகோலியது. இவ்வாறு அதீத வெற்றி அவர்களுக்கு அங்கு கிடைக்க காரணம் அந்த மாநிலத்தில் 2014 ல் நான்கு முனை போட்டியும், 2019 ல் மூன்று முனை போட்டியும் நிலவியது. காங்கிரஸ், பி.ஜே.பி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி என்றபவை அவை.

சென்னை ஐ ஐ டி மாணவியின் இறப்புக்கு மூன்று பேராசிரியர்கள் காரணம் .. வலுவான ஆதாரங்கள்


தினமலர் : சென்னை: சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப், தற்கொலைக்கு உதவி பேராசிரியர்களே காரணம் என தன் மொபைல் போனில் பதிவு செய்து வைத்துள்ளதால் விசாரணை
தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி, சென்னை ஐஐடியில் முதலாமாண்டு முதுகலை படிப்பு படித்து வந்தார். கடந்த 9ம் தேதி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் தற்கொலை செய்துள்ளதாக போலீசார் காரணம் கூறினாலும், மாணவியின் பெற்றோர் இதனை மறுத்து வந்தனர். இந்நிலையில், மாணவியின் மொபைல் போனை ஆய்வு செய்த போலீசாருக்கு முக்கியமான தகவல் சிக்கியது. அதில், தனது தற்கொலைக்கு உதவி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் மற்றும் இரு பேராசிரியர்களே காரணம் என்றும், அவர்கள் தன்னை துன்புறுத்தியதாகவும், 8ம் தேதி பதிவு செய்து வைத்துள்ளார். இந்த ஆதாரத்தை கொண்டு  
மாணவியின் தற்கொலைக்கு குறைந்த மதிப்பெண் காரணமல்ல, பேராசிரியர்கள் தான் என போலீசார் முடிவுக்கு வந்தனர்.