
‘‘எப்படிச் சொல்கிறீர்கள்?” எனக் கேட்டோம்.
‘‘சசிகலா முதல்வர் ஆக வசதியாக ஓ.பன்னீர்செல்வத்தைப் பதவிவிலக முதலில் சொன்னதே விஜயபாஸ்கர் தான். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, திவாகரன் உத்தரவுப்படி ஆரம்பத்தில் இருந்தே சசிகலாவை முன்னிலைப்படுத்தப் பேசி வந்தவர் அவர்தான். ஒரு காலத்தில் பன்னீர்செல்வத்தின் சிஷ்யர் அவர். பன்னீரின் மகன் ரவீந்திரநாத்தின் நண்பர். ஆனாலும், சசிகலா குடும்பம் விரும்பிய விஷயங்களைச் சரியாகச் செய்துகொடுத்தவர் விஜயபாஸ்கர்.