
அஜெய் நூத்தகி கதாநாயகனாக நடித்து இயக்குகிறார். இதன் பாடல் விழாவில் கேயார் பேசியதாவது:– தமிழில் தற்போது நிறைய படங்கள் தயாராகி வருகிறது. பிலிம் இல்லாமல் டிஜிட்டல் படங்கள் எடுக்கலாம் என்ற நிலை வந்த பிறகு குறைந்த முதலீடு செய்து நிறைய பேர் படம் எடுக்க வருகிறார்கள். தயாரிப்பாளர் சங்கத்தின் கணக்குப்படி தற்போது 400 முதல் 450 படங்கள் புதிதாக தயராகி வருகின்றன. பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் படங்கள் தயாரிக்கலாம். ஆனால் அதை ரிலீஸ் செய்வதுதான் கஷ்டமானது. விளம்பரம், விநியோகம் செய்தல், தியேட்டர் என பல நிலைகளை தாண்டிதான் ஒரு படம் ரிலீசாக வேண்டி இருக்கிறது.