சனி, 20 நவம்பர், 2010

ருஹுணு பல்கலை மாணவி நதீகா சுபாஷினி மறைவு : 9 மாதங்களுக்குப் பின் சடலம் மீட்பு!

சுமார் ஒன்பது மாதங்களுக்கு முன் மர்மமான முறையில் உயிரிழந்த ருஹுணு பல்கலைக்கழக வெளிவாரிப் பிரிவு மாணவி நதீகா சுபாஷினியின் சடலம் மாத்தறை மாவட்டத்தின் அக்குறஸ்ஸ பகுதியில் உள்ள மலைப்பாங்கான இடம் ஒன்றிலிருந்து நேற்றுக் காலை மீட்கப்பட்டுள்ளது.

மாத்தளை நீதவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் சமத் மதநாயக்க, சட்ட வைத்திய அதிகாரி எச்.டி.கே. விஜயவீர ஆகியோர் சடலம் புதைக்கப்பட்டிருந்த இடத்தைக் கயிற்றின் உதவியுடன் சென்றடைந்தனர்.மாணவியின் உடல் பாகங்கள் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டன. விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

அருமையான வடமாநில அரசியல் கலாசாரம்

கடந்த திங்களன்று அமெரிக்க அதிபர் ஒபாமா பார்லிமென்டில் உரையாற்றினார். அவருடைய பேச்சு முடிந்ததும் சோனியாவும், ராகுலும் கிளம்பினர். வாசலுக்கு வந்தால் அங்கே காரை காணோம். என்ன ஆயிற்று என்று செக்யூரிட்டியை கேட்க, அவர்களுக்கும் விஷயம் தெரியவில்லை. நடந்தது இது தான். பார்லிமென்ட்டிலிருந்து, வாசலிலிருந்த காரில் உட்கார போன ஒபாமா, வண்டியில் அமராமல், தன்னை வழியனுப்ப வந்த சபாநாயகர் மீராகுமாரிடம் பேச ஆரம்பித்தார். பார்லிமென்ட் தன்னை கவர்ந்துவிட்டதாகவும், இங்கு ஏதாவது சரித்திரப் புகழ் பெற்று வரலாற்று சின்னங்கள் ஏதாவது உள்ளதா என்று கேட்டுவிட்டு, காரில் போய் உட்கார்ந்தார். இதனால், ஒபாமா கார் பார்லிமென்டை விட்டு வெளியேறுவது தாமதமாகியது. அவர் வெளியே போகும் வரை பார்லிமென்டின் கேட்கள் மூடப்பட்டிருந்தன. இதனால், சோனியாவின் கார் வரவில்லை. சோனியாவும், ராகுலும் நின்றிருந்ததை பார்த்த பா.ஜ., தலைவர் அத்வானி, "ஒபாமாவிற்காக கேட் மூடப்பட்டிருக்கலாம். எதற்கு இங்கு நிற்க வேண்டும். என் அறை பக்கத்தில் தான் உள்ளது. வாருங்கள்... அங்கு அமர்ந்து டீ குடிக்கலாம்' என்று அழைப்பு விடுத்தார். உடனே சோனியாவும், ராகுலும் அவருடன் சென்றனர். அங்கு அத்வானியின் மகள் அமர்ந்திருந்தார். சோனியாவையும், ராகுலையும் வரவேற்ற அவர், "இன்று அப்பாவிற்கு பிறந்தநாள்' என்றார். மகிழ்ச்சியடைந்த சோனியாவும், ராகுலும் உடனே அத்வானிக்கு வாழ்ந்து தெரிவித்தனர். "பிறந்த நாளுக்கு என்ன புரோகிராம்' என்று, அத்வானியிடம் சோனியா கேட்டார். "ஒபாமாவினால் செக்யூரிட்டி பிரச்னை, எனவே நாளைக்கு தான் கொண்டாடப் போகிறோம். நீங்களும் வர வேண்டும்' என்று, இருவருக்கும் அழைப்பு விடுத்தார். சோனியாவும், ராகுலும் டீ அருந்திவிட்டு சென்றனர். "வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது' என்று ஒரு காலத்தில் நமது கழகங்கள் தொண்ட வறள கூப்பாடு போட்டன. ஆனால், வடமாநில அரசியலில் உள்ள இந்த பண்பாடு எப்போதும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது என்பது கழகங்களுக்கு தெரியவில்லை.

சோனியாவின் ஜிமிக்கி: டில்லி வந்திருந்த அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு, ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் விருந்தளித்தார். இவ்விருந்திற்கு முக்கிய பிரமுகர்கள் அனைவரும் அழைக்கப்பட்டிருந்தனர். ஒபாமா டின்னர் என்பதால், பிரமுகர்கள் குறிப்பாக பெண் வி.ஐ.பி.,க்கள் படு அமர்க்களமாக ஆடைகளில் ஆஜராகியிருந்தனர். காங்கிரஸ் தலைவர் சோனியாவும் இந்த விருந்தில் கலந்து கொண்டார். புடவையில் தோன்றிய சோனியா காதில் ஜிமிக்கி அணிந்திருந்தார். ஒபாமாவை அனைவருக்கும் ஜனாதிபதி பிரதிபா அறிமுகப்படுத்தினார். சோனியாவிடம் வந்த ஒபாமாவின் மனைவி மிச்சேல், ஜிமிக்கியை பார்த்து பாராட்டினார். சோனியா சிம்பிளாக உடை அணிந்திருந்தாலும், பார்ப்பதற்கு அழகாக இருந்ததாக, விருந்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர். சோனியாவின் ஆடைகளை ஒரு பிரபல டிசைனர் தான் வடிவமைத்தார் என்று
Dindigul S K M Siddique - AbuDhabi,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-20 09:22:48 IST
About North India Culture (Sonia, Ragul and Advani meets at Parliment House Gate), our neibur state (kerala) in any issue with Central, all the MPs and MLAs will join together for the state intrest. We can not expect this with Tamil Nadu Politics. There is a Ego problem is here (Tamil Nadu), After JJ took AIADMK the culture has been changed. once JJ out from Tamil Nadu, we may expect this nice culter....
மணி வி - சென்னை,இந்தியா
2010-11-20 08:40:40 IST
நம் ஊரில்தான் சட்டசபைக்கே புடைவை, வேட்டியோடு போக முடியவில்லையே! அப்படியே போனாலும் வெட்கமில்லாமல் 'பாவாடை நாடா' வசனம் பேசி கூனி குறுக வைக்கும் 'தலை'கள் உள்ளனரே! கழகக் கலாசாரம் அழியும்வரை 'முன்தோன்றிய மூத்தகுடி'த் தமிழனுக்கு மரியாதை இல்லை!...
sundar - chennai,இந்தியா
2010-11-20 08:35:31 IST
தமிழ்நாட்டு அரசியலில் இதுமாதிரி நிகழ்வுகள் நினைத்துகூட பார்க்கமுடியாது தனிபாட்ட முறையில் ஜெயலலிதாவை தாக்கியும், அடித்தால் ஏனென்று கேட்க நாதி இல்லாதவர்கள் என்று தமிழக பிஜேபி மற்றும் கம்யூனிஸ்ட் காரர்களை மிரட்டியும் 6 கொலைசெய்தவர்களை சிறைசாலையில் சுழல் விளக்கு வாகனத்தில் சென்று பார்க்கும் மந்திரிகளும் நினைப்பு வரும்போதெல்லாம் நான் தமிழன் என்பதில் வெட்கபடுகிறேன்......
vettrivel - Melbourne,இந்தியா
2010-11-20 05:11:44 IST
as long as jayalalitha there, it is not possible to have a good gesture in tamilnadu politics. she is the most corrupted lady. she knows only to loot the money. at least DMK steals and gives. i am not saying DMK is perfect. DMK does something better for people. look at the history ADMK was in power almost 20 years, what is the achievement they done....
நன் மாறன் - கலிபோர்னியா,யூ.எஸ்.ஏ
2010-11-20 02:03:28 IST
குமாரவேல், Tell me when Karuna and MGR had good relations after ADMK? Karuna used to say 'komali', 'Malayali, and lot of bad words. Now he is comfortably saying, I learnt from 'periyar, I lerant from MGR etc. It is all because, people have little memory about Karunaniddhi. He is no 1 manipulator of truth and full of falsehood and haterd, Dont blame Jaya for this....
Ramanujam - delhi,இந்தியா
2010-11-20 00:32:47 IST
தி.மு.க., வெளியே போனால், அதனால் குறையும் 18 எம்.பி.,க்களை எப்படி சமாளிப்பது, அ.தி.மு.க.,விடம் ஒன்பது எம்.பி.,க்கள் தான் உள்ளனர். மற்ற எம்.பி.,க்களை கொண்டு வருகிறோம்' என்று, ஜெயலலிதா சொன்னாலும், அதை காங்கிரஸ் நம்ப தயாராக இல்லை. "ஜெயலலிதாவிடம் மாட்டிக் கொண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பட்ட அவஸ்தை போதாதா?' என்கின்றனர் சில காங்கிரஸ் தலைவர்கள். தற்போது டில்லி அரசியலில் ஒரே குழப்ப நிலை, உபயம் நமது தமிழக அரசியல் தான். Please send this clip to Mr Cho...
செல்லபாண்டியன் - mumbai,இந்தியா
2010-11-20 00:22:44 IST
எம் ஜி ஆர் வந்த பின்புதான் ஹீரோ வில்லன் கலாச்சாரம் அரசியலில் புகுந்தது. எள்ளளவும் கருணாதியை மனித உருவில் மதிக்கவே இல்லை. ஆங்கங்கே சில பூசிமொழுகு வேலைகள் தான் நடந்தது .தமிழக மக்களும் இன்னமும் தலைப்பை தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்...
தியாகராஜன் - Chennai,இந்தியா
2010-11-19 11:36:00 IST
இதான் டெல்லி உச்சச்ச்சா ! தி.மு.காவுக்கு ஜால்ரா போட்டு ராஜா மேட்டரை முழுவதுமே மறைக்கிரிரே?...
vivek - lakeside,சிங்கப்பூர்
2010-11-19 07:03:22 IST
இதுதான் ஜனநாயகம் ,,,,,....
Michael - Muscat,இந்தியா
2010-11-19 06:53:17 IST
ஜெயலலிதா அரசியலில் இருக்கும் வரை இது தொடரும் ....
sakthivelu - Geoje,தென் கொரியா
2010-11-19 05:43:45 IST
Well said and Very nicely quoted Mr. Kumaravel. Me too learnt about the relationship between Rajaji and Periyaar. One incident shows, how much they respect each other. After a meeting in Rajaji's house he offered viboodhi to Preiyaar, though he is non- believer of God, he took and put on his forehead to respect the nature of Rajaji, that " he wishes good for his opponent too." Now a days its becoming like " street fights ". One to One instead of principle to principle....
raju - bangalore,இந்தியா
2010-11-19 02:05:04 IST
பாமிலி பொலிடிக்ஸ் நடக்கிறது தமிழ் நாடு ல.அன்புள்ள தமிழ் மக்கள விளித்தெளுங்கள்...
நிசமுடீன் mohammed - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-19 01:13:17 IST
தமிழகத்தில் அதுவும் திமுகாவும் அதிமுகாவும் தான் எந்த நேரமும் எதிரிகளாக இருக்கிறார்கள். அல்லது பக்கத்தில் இருக்கும் கேரளாவிலோ, அல்லது ஆந்திராவிலோ சட்டசபையிலும், பொது மேடைகளிளும்தான் எதிரும் புதிருமாக இருப்பார்கள். மற்றபடி அவர்கள் கண்ணியத்துடனும், பண்பாடுனடும் நடத்து கொல்கிறார்கள். இந்த பண்பாடு தமிழகத்தில் என்று வருமோ?...
kumaravel - mysore,இந்தியா
2010-11-17 07:41:14 IST
Even in tamilnadu politcal culture was there up to 1987.Peryar and Rajaji were opposite polls .but both had very good relations.Anna and Karunanidhi always respected Kamaraj.MGR and Karunanidhi also had good relations But only after Jayalalitha entered in politics deterioration of political culture started. Now also other than DMK and ADMK all other party leaders shows respect to others. Only DMK and ADMK are mainly to blame for deteriotion of moral standard ,political culture in taminadu...

ஏழை, எளியவர்களுக்கான மருத்துவசிகிச்சைகள் அளிப்பதில் தமிழகம் தலைசிறந்து விளங்குகிறது:மு.க.ஸ்டாலின்


ஏழை, எளியவர்களுக்கான மருத்துவசிகிச்சைகள் அளிப்பதில் தமிழகம் தலைசிறந்து விளங்குகிறது என்று துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மியாட் மருத்துவமனையில்  இரையகக் குடலியல் மற்றும் கல்லீரல் நோய்களுக்கான நவீன மையத்தை துவக்கிவைத்து துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
 அவர்,  ‘’  ரூபாய்  10 கோடி செலவில் இன்று உங்களின் அன்பான வாழ்த்துக்களோடு துவக்கப்படும், மியாட் மருத்துவமனையின்  இரையகக் குடலியல் மற்றும் கல்லீரல் நோய்களுக்கான நவீன மையத்தை துவக்கிவைப்பதில் உங்களோடு சேர்ந்து நானும்  மகிழ்ச்சி அடைகிறேன். 
 இந்த பிரிவை தொடங்கியுள்ள இம்மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர்  மோகன்தாஸ் மற்றும் இம்மருத்துவமனையின் தலைவராக பணியாற்றும் மல்லிகா மோகன்தாஸ் ஆகியோரை உங்களின் அனைவரின் சார்பாக வாழ்த்துகிறேன்;போற்றுகிறேன், பாராட்டுகிறேன்.
சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்து,  இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் எலும்பு மருத்துவ சிகிச்சையில் இரு முதுகலைப் பட்டங்களைப் பெற்றவர் டாக்டர் மோகன்தாஸ்.

இவருக்கு   எம்.ஜி.ஆர்.  மருத்துவ பல்கலைக்கழகம்  கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல்,  கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் எலும்பு மருத்துவத்தில் பேராசிரியராக அரும்பணியாற்றிதை  கருத்தில் கொண்டு, மைய அரசு இவருக்கு “பத்மஸ்ரீ”  பட்டம் வழங்கி பெருமை சேர்த்துள்ளது.

மூட்டு மாற்று அறுவை சிகிச்சையினை வெற்றிகரமாக செய்து சாதனை படைத்ததால் “இந்திய நவீன எலும்பு மருத்துவத்தின் தந்தை”   எனவும் இவர் பெருமையுடன் மருத்துவ உலகில்  அழைக்கப்படுவது  நமக்கெல்லாம் பெருமை மட்டும் அல்ல தமிழகத்திற்கே பெருமை. இவரது  வெற்றிக்குப் பின்னால் இவரது துணைவியார்  மல்லிகா மோகன்தாஸ்  இருந்து வருகிறார் என்று சொன்னால் மிகையாகாது.

பின்னால் என்று சொல்வதைவிட, முன்னாள் நின்று பணியாற்றுகிறார். அதுபோல் தான் இன்றைய மகளிரின் நிலைமை சிறப்பிற்குரியதாக உள்ளது. மியாட் மருத்துவமனையின் தலைவர் பொறுப்பினை ஏற்று திறம்படி நிர்வகித்து வருகிறார்கள்.

இருதய அறுவை சிகிச்சை,   குழந்தைகள்  இருதய அறுவை சிகிச்சை, சீறுநீரகவியல், புற்றுநோய் சிகிச்சை என பல்வேறு தரப்பு சிகிச்சைக்கான  துறைகளில் இந்த மியாட் மருத்துவமனை  சிறப்புடன்   மருத்துவ சேவையாற்றி மருத்துவத்துறையில் சிறப்பான இடத்தினை பிடித்துள்ளது.

உயர் சிகிச்சைகளுக்காக, மேலை நாடுகளுக்கு சென்றுவந்த நிலைமாறி,  இந்தியாவில்  குறிப்பாக தமிழகத்திலேயே,  முதன்மையான  மருத்துவ வசதிகளை உருவாக்குவதில், தலைவர் கலைஞர் தலைமையிலான தமிழக அரசும்,  தனியார் மருத்துவமனைகளும், குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் மியாட் மருத்துவமனையை போன்ற பல தலைசிறந்த மருத்துவமனைகளும் செயல்பட்டு வருகின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது.

பெண்கள் முன்னேற்றத்திற்கு சாய்பாபா சேவை அபரிமிதம்: ஜனாதிபதி

புட்டபர்த்தி : சாய்பாபாவின் 85வது பிறந்தநாள் விழாவையொட்டி, புட்டபர்த்தியில் நேற்று நடந்த பெண்கள் தின விழாவில், ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கலந்து கொண்டார்.

ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பேசுகையில், "மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளன்று பெண்கள் தினத்துக்கு இங்கு ஏற்பாடு செய்திருப்பது மகிழ்ச்சிஅளிக்கிறது. பெண்களின் முன்னேற்றத்துக்காக சாய்பாபா ஆற்றி வரும் சேவை பாராட்டுக்குரியது. இந்த சேவை, பெண்கள் சுயஅறிவும், சுயநம்பிக்கையும் பெறுவதற்கு உதவும்' என்றார். ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பிரசாந்தி நிலைய நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். சாய்பாபா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 29வது பட்டமளிப்பு விழாவில், பிரதமர் மன்மோகன்சிங் 22ம் தேதி கலந்து கொள்கிறார். பிரசாந்தி நிலைய நிகழ்ச்சிகளிலும் பிரதமர் கலந்து கொள்கிறார். சாய்பாபாவின் பிறந்த தினத்தைக் கொண்டாடும் விதமாக அவரது, பக்தர்கள் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், நாடுகளிலிருந்தும் புட்டபர்த்தியில் குவியத் தொடங்கிவிட்டனர். ஏராளமானோருக்கு இலவச திருமணத்துக்கும் ஏற்பாடாகியுள்ளது.
Suseela - Chennai,இந்தியா
2010-11-20 10:24:09 IST
ஓம் ஸ்ரீ சாய்ராம் ஓம் ஜெய் சாய்ராம். பிறந்தநாள் வாழ்த்துக்கள். தங்களின் ஆசிர்வாதம் வேண்டும்....
Sivaraam - Bangalore,இந்தியா
2010-11-20 10:15:43 IST
பல ஆயிரக்கணக்கான மக்களை நல்ல நெறியில் கொண்டு செல்லும் பாபா அவர்களை நன்றியுடன் வனுங்குகிறோம். ஜெய் சாய் ராம்...
பிரகாஷ் - karur,இந்தியா
2010-11-20 10:04:37 IST
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாமி ........
மதனகோபால் - ராஜபாளையம்,இந்தியா
2010-11-20 09:44:58 IST
சாய்ராம்......
ப.ர.selvaganesh - குல்லுHimachalpradesh,இந்தியா
2010-11-20 09:05:11 IST
ஒரு சிறிய விளக்கம் அளிக்க விருப்பம். இந்திரா அம்மையாரின் பிறந்தநாளை ஒட்டி பர்த்தியில், மகளிர் தினம் கொண்டாடபட்டது போன்று உரை அமைதுள்ளது. உலகெங்கும் உள்ள சாயி பக்தர்கள் இத்தினத்தை எல்லா வருடமும் மகளிர் தினமாக கொண்டாடுகிறார்கள். இதை யாரும் அரசியல் நோக்கில் காணக்கூடாது என்பது என் வேண்டுகோள்....
விஸ்வேஸ் பாபு - மதுரை,இந்தியா
2010-11-20 06:39:20 IST
நடமாடும் அன்பிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு........
சத்யா சரவணன் - சென்னை,இந்தியா
2010-11-20 01:23:15 IST

அந்த லஞ்சப் பணத்தை எப்படி வசூலிப்பார்கள்?

2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் நாட்டையே உலுக்கி வருகிறது. இந்தியா இதுவரை காணாத பெரும் தொகை இழக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்களைத் திருப்திப்படுத்த தேசத்துக்கு நஷ்டம் விளைவிக்கும் அளவுக்கு துணிந்திருக்கிறார்கள் அதிகாரத்திலுள்ளோர். 'வெள்ளையர் காலத்திலும் நடந்திராத கொள்ளையாக அல்லவா இருக்கிறது' என நடுநிலையாளர்கள் மனம் கொதித்துப் புலம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், 2 ஜி விவகாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தைச் சரிகட்டும் வகையில், குறைவான தொகைக்கு உரிமம் பெற்ற அத்தனை நிறுவனங்களிடமும், இன்றைய மார்க்கெட் ரேட்டை வசூலிக்க அரசு அதிரடியாக முடிவு செய்துள்ளது.

ஒரு வேளை இது நடந்தால், பலரும் கவனிக்காமல் விட்ட ஒரு கேள்வி விசுவரூபம் எடுக்கும்.

அது... இந்த 2 ஜி உரிமத்தை அடிமாட்டு விலைக்கு வாங்க தனியார் நிறுவனங்கள் கொடுத்த பல ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம்!

அரசுக்கு ரூ 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்படுவதற்காகக் கொடுக்கப்பட்ட பல ஆயிரம் கோடி லஞ்சப் பணம்!!

இந்தப் பணத்தை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் எப்படி திருப்பி வசூலிக்கப் போகின்றன? துறைக்குப் பொறுப்பானவர்கள், ஒதுக்கீடு செய்தவர்களின் சட்டையைப் பிடித்து திரும்ப எடுத்து வையுங்கள் அந்தப் பணத்தை என்று கூற முடியுமா...

இதனை எப்படி வெளிக் கொண்டுவர முடியும்? என்ற கேள்வி எழலாம். அரசு மனது வைத்து நேர்மையான விசாரணையை மேற்கொண்டால், வெளிக்கொணர முடியும். ஒரு வகையில் இந்தப் பணம் மொத்தமும் கணக்கில் வராத கறுப்புப் பணம். நியாயமாக அரசுக்கு சேர வேண்டிய பணம். அதை எப்போது அரசு கையகப்படுத்தப் போகிறது?

விசாரணை என்ற கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றி, இந்த லஞ்சப் பண விவகாரத்தை அப்படியே கண்டுகொள்ளாமல் விடும் பட்சத்தில், இந்தத் தனியார் நிறுவனங்கள் திருடனுக்கு தேள்கொட்டிய மாதிரி வாய் மூடி மவுனம் சாதித்து, பொருத்தமான தருணத்தில் மீண்டும் காரியம் சாதித்துக் கொள்ளப் போகும் அபாயமும் இதில் உள்ளது!

எனவே இந்த ஊழல் முன்னிலும் பல மடங்கு அதிகமாக நடக்க வாய்ப்பு ஏற்பட்டுவிடும். எனவே தவறு செய்தவர்கள் யார் என்று கண்டுபிடிப்பதோடு, இந்த தவறைச் செய்ய கைமாறிய பெரும் தொகையைக் கண்டுபிடித்து வெளிக் கொணர்வதும் அவசியம்.

கட்சி சார்பற்ற பார்வை கொண்டவர்களுக்கு இன்னமும் கூட சின்ன நம்பிக்கையைத் தந்துவரும் டாக்டர் மன்மோகன் சிங் அரசு, செய்யுமா இதை?

பதிவு செய்தவர்: கலாநிதி மாறன்
பதிவு செய்தது: 20 Nov 2010 7:32 pm
கலாநிதி மாறன் இப்போ Spice Jet விமான நிறுவனத்தின் தலைவர்? அவரது மனைவி இன்னொரு இயக்குனர்? எங்கே இருந்து வந்தது இந்தப் பணமா? தயாநிதி மாறன் இந்த ஊழலுக்கு அச்சாரம் போட்ட கடிதம் CNN தொலைகாட்சியில் காட்டப் பட்டதை பாருங்க, ஊழல் ராஜாங்கம்?

பதிவு செய்தவர்: கூஜா
பதிவு செய்தது: 20 Nov 2010 7:23 pm
கூஜா-குனிமொழியின் சொத்த வித்தா கெடைக்கும்..பணம்..அப்புறம் கூகுல் பூந்தி..

பதிவு செய்தவர்: Ilamselvan
பதிவு செய்தது: 20 Nov 2010 7:22 pm
If Government agrees for JPC the truth will come out. Every one found guilty should be prosecuted

பதிவு செய்தவர்: பொறுப்பானவர்கள்
பதிவு செய்தது: 20 Nov 2010 7:19 pm
அதென்னா ஒரு இடத்தளையும் ராசா பேரை போடவே இல்லை? வாங்குன காசுக்கு விசுவாசமா? இல்லை கோடிக்கக்கான பணத்தை ராசாவின் அமைச்சக பியூன் தான் வாங்கிக் கொண்டு அனுமதி கொடுத்தான்னு செய்தி போடப் போறீங்களா? ராசாவை உள்ளே போட்டு நாலு தட்டு தட்டுனா எல்லாப் பணமும் வெளியே வரும், தமிழில் பல தொலைகாட்சிகள் மூட வேண்டியிருக்கும்

பதிவு செய்தவர்: அப்பாவி நாடோடி
பதிவு செய்தது: 20 Nov 2010 7:14 pm
இதை நான் பதிவு செய்வதற்கு முன் பலமுறை யோசனை செய்து விட்டேன், மிகவும் மன வருத்ததுடன் இதை நான் பதிவு செய்கிறேன், தவறு இருந்தால் மன்னிக்கவும் , நடப்பவைகள் எல்லாவற்றையும் பார்க்கும் பொழுது நகசல்கள் வழி தான் சிறந்தது என்று தோன்றுகிறது, ஜனநாயகத்தின் மேல் உள்ள நம்பிக்கை போய்விடும் போல் தெரிகிறது, கண்ணீருடன் அப்பாவி நாடோடி

பதிவு செய்தவர்: ஒழிக
பதிவு செய்தது: 20 Nov 2010 7:12 pm
தேச துரோகி கருணா நிதி ஒழிக . அவன் குடும்பம் ஒழிக .

பதிவு செய்தவர்: பணம்
பதிவு செய்தது: 20 Nov 2010 7:08 pm
பணம் எங்கயும் போகவில்லை எல்லாம் தமில்ழ்நாட்டில் உள்ளது . என்னும் பாத்து எலேச்டின் ல உஸ் பண்ணுவாங்க

பதிவு செய்தவர்: நான்
பதிவு செய்தது: 20 Nov 2010 6:36 pm
அந்த தோப்பா தலையன் உண்மை வெளியே வர விட மாட்டான்.

பதிவு செய்தவர்: மக்கள்
பதிவு செய்தது: 20 Nov 2010 6:25 pm
விசாரணை என்ற கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றி, இந்த லஞ்சப் பண விவகாரத்தை அப்படியே கண்டுகொள்ளாமல் விடும் பட்சத்தில், இந்தத் தனியார் நிறுவனங்கள் திருடனுக்கு தேள்கொட்டிய மாதிரி வாய் மூடி மவுனம் சாதித்து, பொருத்தமான தருணத்தில் மீண்டும் காரியம் சாதித்துக் கொள்ளப் போகும் அபாயமும் இதில் உள்ளது! வசூல் பன்னம்மாடங்கே அப்புடி செஞ்சா ஆட்சிய கவுதுருவங்கே

பதிவு செய்தவர்: நிலவன்
பதிவு செய்தது: 20 Nov 2010 6:02 pm
தட்ஸ்தமிழில் கருத்துக்கள் இடம்பெற வேண்டுமாயின் அவர்களுக்கும் லஞ்சத்தை எதிபார்க்கிறார்கல்போல் தெரிகிறது.அல்லது ஏற்க்கனவே வாங்கியதன் அடிப்படையில் சிலரது கருத்துக்களைப் போடாமல் விடுகிறார்கள்போல் தெரிகிறது.

பிரபுதேவா மனைவி ரம்லத் தற்கொலை முயற்சி? தூக்க மாத்திரை

பிரபுதேவா மனைவி ரம்லத் அண்ணா நகரில் உள்ள வீட்டில் குழந்தைகளுடன் வசிக்கிறார். அங்கு நேற்று அதிக தூக்க மாத்திரை சாப்பிட்டு திடீரென மயங்கி விழுந்தார். இதுபற்றி உறவினர்களுக்கு தகவல் தெரிந்ததும் விரைந்து சென்று ஆஸ்பத்திரிக்கு தூக்கி போய் காப்பாற்றியுள்ளனர்.
பிரபுதேவா, நயன்தாரா மீது குடும்ப நல கோர்ட்டில் ரம்லத் வழக்கு தொடர்ந்துள்ளார். கணவனை தன்னோடு சேர்த்து வைக்க வேண்டும் என்றும் நயன்தாரா அவரை வரவிடாமல் தடுத்து வைத்துள்ளார் என்றும் வழக்கில் குறிப்பிட்டு உள்ளார். இருவரையும் வருகிற 23-ந்தேதி நேரில் ஆஜராக சொல்லி கோர்ட்டு சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த நிலையில் ரம்லத் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வாரமாகவே ரம்லத் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக நெருக்கமானவர்கள் கூறினர்.
பிரபுதேவா இரு மாதங்களாக ரம்லத்தையும், குழந்தைகளையும் பார்க்க வீட்டுக்கு வரவில்லை. கோர்ட்டுக்கு போனதில் இருந்து வீட்டு செலவுக்கு பணம் அனுப்புவதையும் நிறுத்தி விட்டார். குழந்தையின் பிறந்த நாள் சமீபத்தில் நடந்த போது வருவார் என எதிர்பார்த்தார். ஆனால் பிரபுதேவா போனில் கூட பேசவில்லையாம்.
கடந்த ஒரு வாரமாக பிரபு தேவா சென்னையில்தான் இருந்தார். ஜெயம்ரவியை வைத்து அவர் இயக்கும் “எங்கேயும் காதல்” படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு ஏ.வி.எம். ஸ்டூடியோவில் நடந்தது. இதற்காக அங்கு முகாமிட்டு இருந்தார்.    இதுபற்றிய தகவல் ரம்லத்துக்கு தெரிய வந்தது. தன்னுடன் பேசுவார் சமரச முயற்சியில் ஈடுபடுவார் என கருதினார்.   ஆனால் அவர் தரப்பில் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. இதுவும் அவரை நோகடித்தது.
இரு தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் நயன்தாரா தனது பிறந்தநாளை “கேக்” வெட்டி கொண்டாடினார். இதில் பங்கேற்பதற்காக பிரபுதேவா படப்பிடிப்பை நிறுத்தி விட்டு சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றார். இனி தன்னோடு சேர மாட்டார் என்று ரம்லத்துக்கு உறுதியாக தெரிய வந்துள்ளது.
நயன்தாராவை திருமணம் செய்வதிலும் பிடிவாதமாக இருக்கிறார். திருமணத்துக்கு பின் துபாயில் குடியேற திட்டமிட்டுள்ளனர். அங்கு நடனப் பள்ளி ஆரம்பிக்கவும் முடிவு செய்து இருக்கிறார்கள். இதற்காக புரோக்கர்கள் வைத்து வீடு பார்த்து வருகிறார்கள்.
ரம்லத் சட்டப்பூர்வ மனைவி அல்ல என்று வக்கீல் மூலம் கோர்ட்டில் வாதாடவும் பிரபுதேவா முடிவு செய்துள்ளாராம். திருமணம் பதிவு செய்யப்படவில்லை என்று பிரபு தேவா தரப்பினர் கூறி வருகின்றனர்.   பிரபுதேவாவின் இத்தகைய நடவடிக்கைகள் ரம்லத்தை தற்கொலைக்கு தூண்டியதாக இணைய தளங்களில் பரவியுள்ளது.
ஆனால் இச்செய்தியை ரம்லத் வக்கீல் ஆனந்தன் மறுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, ரம்லத் தற்கொலைக்கு முயன்றதாக இணைய தளங்களில் வெளியான செய்திகளில் உண்மை இல்லை. அப்படி எதுவும் நடக்கவில்லை என்றார்.

புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் தமது வாழ்வைத் தக்கவைத்துக்கொள்ள இன்று எதனையும் கூறமுடியாத

புலிகளின் எலும்புக்கூடுகளின் கரும் நிழல்கள் சர்வதேசத்திடம் வேறு கதைகளைக் கூறுகின்றன
யுத்தம் முடிவடைந்துள்ளபோதும் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சில ஊடகங்களின் ஆதரவுடன் மோதல்கள் வேறுவடிவத்தைப் பெற்றுள்ளதென ஐ.நா.வின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வா நல்லிணக்க ஆணைக்குழு முன் தெரிவித்துள்ளார்.கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் இரண்டாவது தடவையாக நேற்று முன்தினம் வியாழக்கிழமை சாட்சியமளிக்கையிலேயே 58 ஆவது படையணியின் முன்னாள் தலைமையதிகாரியும் ஐ.நா.வுக்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதியுமான சவேந்திர சில்வா இவ்வாறு தெரிவித்தார்.

அவர் நேற்று முன்தினம் மாலை கதிர்காமர் நிலையத்தில் நடைபெற்ற அமர்வில் சாட்சியமளித்தார்.இராணுவச் சீருடையுடனும் பதக்கங்கள் முத்திரைகளுடன் நல்லிணக்க ஆணைக்குழு முன் முதற்தடவையாகச் சாட்சியமளித்த நான் இன்று ஐ.நா.தலைமையகத்தில் எமது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இராஜதந்திரியாக இரண்டாவது தடவையாக இந்த ஆணைக்குழு முன் சாட்சியமளிக்கின்றேன் என தனது சாட்சியத்தை ஆரம்பித்த சவேந்திர சில்வா தொடர்ந்து தெரிவிக்கையில்;

நான் களத் தளபதியாகப் போரிட்ட மண்ணில் அன்று துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களே கேட்டன. ஆனால், இன்று அவற்றைக் கேட்கமுடியவில்லை. மாறாக உழவு இயந்திரங்களினதும் ஏனைய விவசாய கனரக வாகனங்களினது சத்தத்தையே கேட்க முடிகின்றது. சீருடையுடன் மனிதர்கள் அங்கு உள்ளனர். ஆனால், அவர்களின் கையில் ஆயுதம் இல்லை. அங்குள்ள மக்கள் நிலத்தைத் தோண்டுகின்றனர். பதப்படுத்துகின்றனர்.

அவை பதுங்கு குழிகளையோ மண் அணைகளையோ உருவாக்குவதற்காக இல்லை விவசாயத்தை மேற்கொள்வதற்காக.இன்று நான் நாட்டைவிட்டு வெளியேறி பணிபுரிந்தாலும் மனிதன் என்ற ரீதியில் சிறந்த பணியைச் செய்து நிறைவேற்றியுள்ளேன்.

ஆனால், விடுதலைப் புலிகளின் எலும்புக் கூடுகளின் கரும் நிழல்கள் சர்வதேசத்தின் முன்னால் வேறுபட்ட கதைகளைக் கூறுவதை என்னால் காணமுடிகின்றது.

புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் தமது வாழ்வைத் தக்கவைத்துக்கொள்ள இன்று எதனையும் கூறமுடியாத நிலையில் உள்ளனர்.

இலங்கையின் பிரதிமையை அழிப்பதற்கு பல விடயங்களை இலக்குவைத்து சளைத்துப்போன பின்னர் தற்பொழுது சர்வதேசத்தின் கவனங்களை திசைதிருப்பும் தன்மையுடைய சிவிலியன்கள் விடயத்தினை புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் தமது இலக்காகக் கொண்டு முயற்சிக்கின்றனர்.

சாதாரண சிப்பாய்களைக் கொண்டுள்ள இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளை ஒருபோதும் வெல்ல முடியாதென்றே உலகின் மூன்றில் இரண்டு பங்கினர் தெரிவித்தனர்.

இந்நிலையிலும் எமது இராணுவம் போதிய ஆயுத வளங்களைக் கொண்டிருந்தாலும் பின்னர் பாதுகாப்புச் செயலாளரினால் மிகவும் அதிநவீன இலத்திரனியல் சாதனங்கள், ஆயுதங்கள் பெற்றுத்தரப்பட்டது.

விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டிலிருந்த பகுதியை தனிநாடாகவே நிர்வகித்து வந்தனர். தனிப்பட்ட ஆட்சி நிர்வாகம், காவல்துறை, தரைப்படை, வான்படை, கடற்படை ஆகியவற்றுடன் வங்கியையும் நிர்வகித்து வந்தனர்.

பாடசாலைகள் கெரில்லா கூடங்களாகவும் தேவாலயங்கள் ஆட்லறி தளங்கள் பதுங்கு குழிகளாகவும் மருத்துவமனைகள் ஆட்லறித் தளங்களாகவும் பயன்படுத்தப்பட்டது.

வடக்குக் கிழக்கில் அப்பாவித் தமிழ் மக்களுக்கு எதிராக விடுதலைப் புலிகள் செய்தவற்றை எவரும் இலகுவில் மறந்துவிட முடியாது.

இதுபோன்ற காரணங்களினாலேயே விடுதலைப் புலிகள் தமது ஆட்பலத்தை இழந்தனர்.

சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருசில சர்வதேச ஊடகங்களின் ஆதரவுடன் மோதல்கள் தற்பொழுது வேறுவடிவத்தைப் பெற்றுள்ளது.

விடுதலைப் புலிகளினால் தமது சொந்த மண்ணில் நடத்தப்பட்ட படுகொலைகளுக்கும் பதில்சொல்ல வேண்டிய கடப்பாடுடையவர்களாக நாம் உள்ளோம்.

விலை மதிப்பற்ற இந்நாட்டின் சுதந்திரத்திற்கு எதிராக விடுதலைப் புலிகளின் கைப்பொம்மைகள் தொடர்ந்தும் செயற்பட்டுக் கொண்டே இருக்கின்றனர்.

ஆலயங்கள், தேவாலயங்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் விடுதலைப் புலிகள் பதுங்கியிருந்தமையை நாம் அறிந்திருந்தோம். குறித்த இடங்களுக்கு எம்மால் தாக்குதல் நடத்தியிருக்க முடியும்.

பொதுச் சொத்துகளுக்கும் பொதுமக்களுக்கும் பூச்சிய பாதிப்பு என்ற கொள்கையைப் பாதுகாப்புச் செயலரின் உத்தரவிற்கு அமைவாக நாம் பேணினோம்.

ஆனால், விடுதலைப் புலிகள் பொதுமக்களைச் சுட்டுக்கொன்றனர். மோதலின் இறுதிக் கட்டத்தில் காயமடைந்ததாகக் காட்டப்பட்ட பொதுமக்கள் தற்பொழுது எங்கே.

விடுதலைப் புலிகளின் சிறைச்சாலைகளை நாம் பார்வையிட்டோம். அச்சுவர்களில் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டவர்கள் இரத்தத்தினால் எழுதியுள்ளனர்.

விஸ்வமடு, தர்மபுரம், முல்லைத்தீவு காடுகளில் இருந்த விடுதலைப் புலிகளின் சிறைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் இரும்புச் சங்கிலிகளால் கட்டப்பட்டிருந்தனர்.

இவ்விடயங்கள் குறித்து ஊடகங்கள் ஏன் வெளிப்படுத்தவில்லை. இவ்வாறு கைதிகளாக இருந்தவர்கள் தற்பொழுது எங்கே?

கடல்கோளின்போது இறந்தவர்களின் புகைப்படங்கள் விடுதலைப்புலிகளினால் வெளியிடப்படவில்லை. ஆனால், அப்படங்கள் மோதலில் இறந்தவர்களாகக் காட்டி தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் மக்கள் படை போராளி படையென்ற விடயங்கள் குறித்து பரவலாகப் பேசப்படுகின்றது. இவர்கள் இராணுவத்திற்கு எதிரான போருக்காகப் பயிற்றப்பட்ட சிவிலியன்கள் ஆவர்.

அத்துடன், விடுதலைப்புலிகள் சிவில் உடையிலேயே போரிட்டனர். குறிப்பாக மோதலின் இறுதிக்கட்டத்திலும் சிவில் உடையிலேயே அவர்கள் இருந்தனர்.

சிவில் உடையில் மீட்கப்பட்ட சடலங்களின் கழுத்திலும் கையிலும் இலக்கமும் இரத்த வகையும் குறிக்கப்பட்டிருந்தன.

இவ்வாறு இறந்தவர்களை பொதுமக்களாகக் காட்ட சில ஊடகங்கள் முயற்சிக்கின்றனவ.

ஆனால், இறந்தவர்கள் பொதுமக்கள் அல்ல என்பது ஐ.சி.ஆர்.சி. ஊடாக விடுதலைப்புலிகளிடம் சடலங்களை ஒப்படைத்தபோது உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த உடல்களைப் பொறுப்பேற்க விடுதலைப்புலிகள் மறுக்கவில்லை. ஏனெனில் அவை விடுதலைப்புலிகளின் உடல்கள்.

எமது இலக்கை பூரணமாக நிறைவேற்றுவதற்கு உத்தரவுகளுக்கமைவாக எமக்குப் படையினர்க்கு பூரண சுதந்திரம் வழங்கப்பட்டதுடன் இராணுவம் முழு அளவில் ஆயுத வளத்தையும் பெற்றிருந்தது.

விடுதலைப்புலிகளின் வரிசேகரிப்பு பிரிவின் தலைவரான எழிலனைத் தேடித்தருமாறு அவரது மனைவி ஆணைக்குழு முன் கோரியுள்ளார். எழிலன் தான் கட்டாய ஆட்

சேர்ப்புக்கும் பொறுப்பாக இருந்தவர். அவரின் மனைவியின் இன்றைய நிலையை நோக்குங்கள். தனது கணவருக்காக ஏங்குகின்றார்.

மோதலில் கிட்டத்தட்ட 20 ஆயிரம் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், காயமடைந்த புலி உறுப்பினர்களைக் காணவில்லை. அவர்கள் எங்கே? காயமடைந்த புலிகளை புலிகளே சுட்டுக்கொன்று விடுவார்கள்.

அத்துடன், விடுதலைப்புலிகள் மக்களைச் சுட்டுக்கொன்றுள்ளனர். ஆனால் , புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையை எம்மால் கூற முடியாது.

மோதலின்போது இராணுவத்தினர் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை.

மோதலின் இறுதிக் கட்டத்தில் புலிகளை நாம் செய்மதி மூலம் அடையாளம் கண்ட பின்னரும் கூட நாம் கனரக ஆயுதங்களால் தாக்கவில்லை. ஏனெனில் நாம் மோதலில் வெற்றியடையப்போகின்றோம் என எமக்குத் தெரியும்.

மோதலின் இறுதிக் கட்டத்தில் ரி 56 ரகத் துப்பாக்கிகளையே நாம் பயன்படுத்தினோம்.

விடுதலைப்புலிகளை இறுதிக் கட்டத்தில் வெற்றிகொள்ள அதிகாலை 1 மணி முதல் 2 மணிவரையான நேரத்தையே நாம் பயன்படுத்தினோம்.

இறுதி நேரத்தில் அனைவரையும் நாம் சுற்றி வளைத்த பின்னர் பொட்டு அம்மான், தமது சகாக்களிடம் தாம் இராணுவத்திடம் தோற்றுவிட்டதாகக் கூறியதை எம்மால் கேட்க முடிந்தது.

2009 மே மாதத்தின் பின்னர் இராணுவத்தினர் பொதுமக்கள் எவரையும் கைதுசெய்யவில்லை. அவ்வேளை, முன்னர் எவராவது கைது செய்யப்பட்டால் அங்கு சரணடைந்தால் அவர்களைப் பதிவு செய்து உரிய தரப்பிடம் ஒப்படைத்துவிடுவோம்.
2009 மே 17,18 ஆகிய திகதிகளில் மக்களோ, புலிகளோ சரணடையும்போது அரசசார்பற்ற நிறுவனங்கள் பிரசன்னமாகியிருக்கவில்லை எனத் தெரிவித்தார்
- தினக்குரல் -

முறிகண்டி சென்ற நல்லூர் தம்பதியினர் வாகனத்துடன் மோதி ஸ்தலத்தில் பலி

கிளிநொச்சி, முறிகண்டி பிள்ளையார் ஆலயத்தில் நேர்த்திக் கடன் செலுத்த மோட்டார் சைக்கிளில்  பயணித்த நல்லூரைச் சேர்ந்த தம்பதியர் ் வாகனத்துடன் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக மரணமானார்கள்.
மாங்குளத்தில் இருந்து வந்த ் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவத்திலேயே தம்பதியினர் கொல்லப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
நேற்றுக்காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் நல்லூர் செட்டித்தெருவைச் சேர்ந்த பவுண்ராஜா செல்வராஜா (வயது 52), அவரது மனைவியான செல்வராசா நகுலேஸ்வரி (வயது 48) ஆகியோரே உயிரிழந்தவர்கள் ஆவர்.
இச்சம்பவத்தில் 8 படையினர் காயமடைந்தனர். ் வாகனத்தைச் செலுத்தி வந்தவர் படுகாயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்துத் தெரிய வருவதாவது:
வெளிநாட்டில் இருந்து வந்த தமது பிள்ளைகளின் நேர்த்தியைப் பூர்த்தி செய்வதற்காக நல்லூரில் இருந்து எம்.டி.90 மோட்டார் சைக்கிளிலில் உயிரிழந்த தம்பதியினர் முறிகண்டிப் பிள்ளையார் ஆலயம் நோக்கிச் சென்றனர்.
முறிகண்டி, இந்துபுரம் பகுதியில் இவர்கள் சென்றுகொண்டிருந்தபோதே இந்த அனர்த்தம் நிகழ்ந்தது. தம்பதியர் அந்த வாகனத்துக்குள் சிக்கிப் படுகாயமடைந்த நிலையில் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
சடலங்கள் கிளிநொச்சி ஆஸ்பத்திரிக்கு எடுத்து வரப்பட்டு, அங்கு வெளிநோயாளர் பிரிவில் வைக்கப்பட்டிருந்தன.
எதிர்பாராத விதமாக அங்கு சிகிச்சைபெற வந்திருந்த பெண்மணி ஒருவர் சடலங்களை அடையாளம் காட்டினார். அந்தப் பெண் உயிரிழந்தவர்களின் உறவினர் ஆவார். அதைத் தொடர்ந்து விபத்தில் பலியானவர்களின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
முல்லைத்தீவு பதில் நீதிவான் தங்கராசா பரஞ்சோதி வைத்தியசாலைக்கு நேற்று நண்பகல் வந்து விசாரணைகளை நடத்தினார்.
விசாரணைகளின் பின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறும் இராணுவ வாகனத்தின் சாரதியை எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறும் பொலீஸாருக்கு நீதிவான் உத்தரவிட்டார். 

Dr.Shanmugaraja: புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து வெளியேற முயன்ற மக்களை புலிகள் சுட்டதாகவும் அவர்

Dr.-Shanmugarajahஇறுதிக்கட்ட யுத்தத்தின்போது காயமடைந்த பொதுமக்கள் புலிகள் அமைப்பின் போராளிகள் அனைவருக்கும் நாம் சிகிச்சையளித்தோம். பொதுமக்கள், புலிகள் என பிரித்துப் பார்க்கவில்லை இறுதி யுத்தம் இம முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் வைத்திய அத்தியட்சகர் வி. சண்முகராஜா நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் தெரிவித்தார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றபோது சாட்சியமளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அதேவேளை இறுதிக்கட்ட யுத்தத்தின்போது; இறந்த மற்றும் காயடைந்த பொதுமக்களின் எண்ணிக்கையை மிகைப்படுத்திக் கூறுமாறு தமிழீழ விடுதலைப் புலிகளால் தாம் நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இறுதிக்கட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து வெளியேற முயன்ற மக்களை புலிகள் சுட்டதாகவும் அவர் கூறினார்.
நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் டாக்டர் சண்முகராஜா மேலும் சாட்சியமளிக்கையில்,'2006 செப்டெம்பர் முதல் 2009 மே 15 வரை முல்லைத்தீவு மாவட்ட வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றினேன்.
அந்த நேரத்தில் முல்லைத்தீவு வைத்தியசாலைதான் அப்பகுதியில் பிரதான வைத்தியசாலையாக இருந்தது.
வைத்தியசாலையில் ஆளணி பற்றாக்குறை இருந்தாலும் அங்கிருந்த வைத்தியர்கள், தொண்டர்கள் உதவியுடன் சேவைகளை மேற்கொண்டோம்.
இரவு நேரங்களில் நோயாளிகளை வவுனியாவுக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்ப முடியாமல் இருந்தது.
2006 இல் போர் தொடங்கியபின் ஓர் அனர்த்தத்தை எதிர்கொள்ளக்கூடிய அளவுக்கு மருந்துகள், பண்டேஜ் போன்ற பொருட்கள் எமக்கு வழங்கப்பட்டிருந்தன. சிறார்களுக்கான தடுப்பு மருந்துகளையும் பெற்றிருந்தோம்.
கட்டுப்பாடுகள் இருந்தாலும் பாதுகாப்பு அமைச்சு அனுமதியுடன் நாம் மருந்துகளை பெற்றுக்கொண்டோம்.
யுத்தம் தீவிரமடைந்து பொதுமக்கள் வேறு இடங்களுக்கு சென்றபோது நாமும் மக்கள் செல்லும் இடம் நோக்கி வைத்தியசாலைகளை இடம்மாற்ற வேண்டியிருந்தது.
நாம் முதலில் வல்லிபுரத்திலுள்ள பாடசாலையொன்றை வைத்தியசாலையாக மாற்றினோம். பின்னர் கிளிநொச்சியிலுள்ள மக்களும் முல்லைத்தீவுக்கு வந்தார்கள். கிளிநொச்சி, முல்லைத்தீவு வைத்தியர்கள் சேர்ந்த 2-3 இடங்களில் வைத்தியசாலைகளை நடத்தினேர்.
வைத்தியசாலைகளை மாற்றும்போது மருந்துகளை பாதுகாப்பது சிரமமாக இருந்தது. 2009 பெப்ரவரியில் முள்ளிவாய்க்காலில் வைத்தியசாலைகளை அமைத்தோம்.மாத்தளன், முள்ளிவாய்க்காலில் மக்கள் நெருக்கமாக தங்கியிருந்தார்கள். அங்கு காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளித்தோம். கர்ப்பினி, வயோதிபர்கள், காயமடைந்தவர்களை, ஐ.சி.ஆர்.சி. உதவியுடன் கப்பல் மூலம் திருமலைக்கு அனுப்பினோம்.
இறுதிக்கட்டத்தில் எல்லா மக்களும் ஏதாவது வழியில் அங்கிருந்து முயற்சித்தார்கள். தப்பிச்செல்ல முற்பட்ட மக்கள் இரு தரப்பிற்கும் இடையிலான மோதலில் சிக்கியும் எல்.ரி.ரி,ஈ.யினரால் சுடப்பட்டும் பாதிக்கப்பபட்டனர்.
மே 13 ஆம் திகதி வெள்ளமுள்ளிவாய்க்காலுக்கு வைத்தியசாலையை மாற்றியபின் அங்கிருந்து வேறிடத்திற்கு மாற்ற முடியாமல் இருந்தது. இது குறித்து அரச அதிபர், சுகாதார அமைச்சு, ஐ.சி.ஆர்.சிக்கு அறிவித்தோம்.
15 ஆம் திகதி இராணுவம் வந்து எம்மை அழைத்தது. காயமடைந்தவர்கள், நோயாளிகள் ரெட்டைவாய்க்காலுக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது
இந்த யுத்தம் ஏன் எப்படி ஆரம்பித்தது என எனக்குத் தெரியாது. ஆனால் நான் அங்குள்ள மக்களுடன் நெருங்கிப் பழகினேன்.
2002 ஆம் ஆண்டு யுத்தம் முடிந்து சமாதான காலம் ஆரம்பித்தபோது மக்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். பின்னர் 2006 ஆம் ஆண்டு யுத்தம் தொடங்கியபின் மக்கள் மிகவும் அச்சமடைந்திருந்தார்கள்.
இப்போது மீள்குடியேற்றம் ஆரம்பமாகி ஒரு வருடத்தின் பின்னரும் பல கட்டமைப்புகளை செய்யவேண்டியுள்ளது. வைத்தியசாலைகள் புனரமைப்புப் பணிகள் 75 சதவீதம் முடிந்துவிட்டன.
மாங்குளம் - முல்லைத்தீவுக்கு இன்னும் தார்வீதி இல்லை. இப்போது அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன.  அங்குள்ள வைத்தியசாலைகளில் ஊழியர் வெற்றிடங்கள் நிரப்பப்படவில்லை. அங்கு பணியாற்றம் தொண்டர்கள் தமக்கு நிரந்தர நியமனம் கிடைக்கும் என நம்பி காத்திருக்கிறார்கள்' என்றார்.
  • ஆணைக்குழு அங்கத்தவர்கள் கேள்வி: தமிழீழ விடுதலைப் புலிகள் எப்போதாவது வைத்தியசாலைக்கு நிதியுதவி வழங்கியுள்ளர்களா?
நிதி வழங்கவில்லை. புலிகளின் மருத்துவர்கள், தாதிகள் பணியாற்றியுள்ளனர்.
  • சிகிச்சை பெற வந்தவர்களில்  பொதுமக்கள் யார்? எல்.ரி.ரி.ஈயினர் யார்? எனத் தெரியுமா?
நாம் இவர்களை பிரித்துப் பார்க்கவில்லை. காயமடைந்து வந்த அனைவருக்கும் சிகிச்சையளித்தோம்.
  • எமக்கு எண்ணிக்கை விபரங்களை பின்னர் தர முடியுமா?
இல்லை விபரங்களை நாம் அங்கிருந்து வரும்போது எந்த பதிவு விபரங்களையும் கொண்டுவரவில்லை.
  • இறந்தவர் காயமடைந்தவர் எண்ணிக்கையை ஏன் அதிகரித்துச் சொன்னீர்கள்?
அப்படியான சூழ்நிலை இருந்தது. 75 பேர் என்றால் 275 பேர் என சொல்ல நிர்ப்பந்திக்கப்பட்டோம். யுத்தம் தீவிரமடைந்து செல்ல செல்ல இந்த எண்ணிக்கை அதிகரித்தது. சிலவேளை 575 என்றும் சொல்ல நேர்ந்தது.
  • யாரால்?
அதற்கு ஆட்கள் இருந்தார்கள்- எல்.ரி.ரி.ஈ.யினர்.
  • எல்.ரி.ரி.ஈ.யினர் மிகைப்படுத்தி கூறச் சொன்னதால் அப்படி கூறினீர்களா?
ஆம்.
  • சம்பவங்களின்போது எண்ணிக்கையை அதிகரித்து கூறுமாறு எப்படி உங்களை எல்.ரி.ரி.ஈ.யினர் அணுகுவார்கள்?
 காயமடைந்தவர்கள் வந்தால் எல்.ரி.ரிஈ.யினரும் வருவார்கள். அவர்களின் வீடியோ குழுவினர் வருவர்.
  • எல்.ரி.ரி.ஈயின் அழுத்தம் காரணமாக எண்ணிக்கையை அதிகரித்து சொன்னீர்களா?
 ஆம்.
இதன்பின் ஆணைக்குழுவினர் டாக்டர் சண்முகராஜாவிடம் இரகசியமாக கேள்விகளை கேட்கவிரும்புவதாக அறிவித்தனர்.
இதேவேளை, இறுதிக்கட்ட யுத்தத்தின்போது கிளிநொச்சி மாவட்ட பதில் வைத்திய அத்தியட்சகராக பணியாற்றியவரும் தற்போது வவுனியா பொது வைத்தியசாலை மருத்துவ அத்தியட்சகராக பணியாற்றுபவருமான  டாக்டர் ரி. சத்தியமூர்த்தியும் நேற்று சாட்சியமளித்தார்.
2009 ஜனவரி பிற்பகுதியில் காயமடைந்தவர்களுக்கு, இருந்தத வசதிகளைக் கொண்டு சிகிச்சையளித்தாக டாக்டர் ரி. சத்தியமூர்த்தி  கூறினார். காயமடைந்த வயதான பெண்ணொருவருக்கு சிகிச்சையளித்துக்கொண்டிருந்த தாதி உத்தியோகஸ்தர் ஒருவர் இறந்தமை தனக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறினார்.

ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்தவர்கள் ஐக்கிய தேசியக்கட்சியினரே'

ஐக்கிய தேசியக்கட்சியினரின் 17 வருட ஆட்சியில் நாட்டில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டது.1977,1983 இனக்கலவரங்களில் அப்பாவித்தமிழ் மக்களைக் கொன்றார்கள்.தமிழ் மக்களின் சொத்துகளை அழித்தார்கள்.இனப்பிரச்சினையை ஏற்படுத்தினார்கள்.  ஆனால்,இன்று ஜனநாயகம் அழிந்துவிட்டதாக பிரசாரம் செய்துவருவது வேடிக்கையாக உள்ளது.ஐக்கிய தேசியக்கட்சியின் பொய்ப்பிரசாரங்களுக்கு மக்கள் செவிசாய்க்க மாட்டார்களென பிரதியமைச்சர் எச்.ஆர்.மித்திரபால பல்லபாக தொடவத்த மற்றும் பஸ்னாகல பகுதிகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மறுசீரமைப்புக்கூட்டத்தில் உரையாற்றும்போது கூறினார். அங்கு தொடர்ந்து பேசிய பிரதியமைச்சர்;ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ஜே.ஆர்.ஜயவர்தன சகல அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஏற்படுத்தினார்.ஐக்கிய தேசியக்கட்சியே தொடர்ந்தும் பதவிக்கு வரும் வகையில் அரசியலமைப்பையும் மாற்றினார்.மூன்றில் இரண்டு பலம் இனிமேல் எவருக்குமே கிடைக்காது என்று நினைத்தார்.ஆனால்,அவரின் கனவு இன்று மாறிவிட்டது.இன்று ஐக்கிய தேசியக்கட்சியினர் ஆட்சிக்கு வரமுடியாதவாறு அரசியல் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை என்று கூறுகின்றனர்.1981 யாழ்.மாவட்ட அபிவிருத்திச் சபைத்தேர்தலில் வாக்குப்பெட்டிகளை கள்ளவாக்குகளால் நிரம்பியவர்களும் இருவர்களே. தமிழ் இளைஞர்கள் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபடவும் காரணமானவர்கள் ஐக்கிய தேசியக்கட்சியினரே.யுத்தத்தை முடிக்கமுடியாமல் தொடர்ந்தனர். ஆனால், எமது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பதவி ஏற்க முன்னரே யுத்தத்தை முடிப்பதாக கூறினார். அதனைச் செய்தும் காட்டிவிட்டார்.இன்று நாட்டில் சகல மக்களும் நிம்மதியாக வாழ்வதற்கு வழி வகுத்தவர்.எனவே,இந்த நாட்டை ஜனநாயக முறையில் சிறப்பாக ஆட்சி செய்யக்கூடியது சுதந்திரக்கட்சியே.சுதந்திரக்கட்சியுடன் மக்கள் இன்று இணைகின்றனர் என்றார். இக்கூட்டத்தில் தெரணியகலை பிரதேச சபைத்தலைவர் அனில் சம்பிக விஜேசிங்க உட்பட பலர் உரையாற்றினார்கள்.

அடுத்த மகாராணி காமில்லா - ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இளவரசர் சார்லஸ்

முதன்முறையாக அடுத்த மகாராணி காமில்லா என்பதை பகிரங்கமாக அமெரிக்கா ஊடகமொன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார் வேல்ஸ் இளவரசர் சார்லஸ். முன்பும் சார்லஸ் தன்னுடைய இந்தக் கருத்த்தை நெருங்கிய நட்பு வட்டாரத்திற்குள் மட்டும் தெரிவித்து வந்தார் என்ற போதிலும் கூட வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
அமெரிக்கத் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று சமீபத்தில் இளவரசர் சார்லஸை பேட்டி கண்டுள்ளது. அந்தப் பேட்டியில் அடுத்த மன்னர் யார் என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.
தான் மன்னராவது என்பது தன் தாயின் மரணத்தைக் குறிக்கும் விடயம் என்பதால் அது குறித்த சிந்தனையே தனக்கு இதுவரை வந்ததில்லை என இளவரசர் சார்லஸ் பேட்டியில் தெரிவித்துள்ளதுடன் மன்னராக வேண்டிய நிலை வரும் போது கமில்லா மகாராணியாக முடிசூட்டப்படுவார் என்பதையும் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
இளவரசர் சார்லஸ் கூறியுள்ள இந்த வார்த்தைகள் பக்கிங்காம் அரண்மனைக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணியாகவே கருதப்படுகிறது. 2005 இல் இளவரசர் சார்லஸ் கமில்லாவை திருமணம் கொண்ட பின்னரும் கூட பிரிட்டன் மக்களை மத்தியில் டயானாவுக்கு இருந்த மதிப்பு கமில்லாவுக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

போராளிகளை பிளவுபடுத்தியதே கருணாநிதிதான்! பொங்குகிறார் பழ.நெடுமாறன்

பழ. நெடுமாறனுக்கு உதயராசாவின் பதில்
பழம்பெரும் அரசியல்வாதியான நெடுமாறன் அவர்கள் 24 ஒக்டோபர் 2010 இல் இணையங்களுக்கு கொடுத்த செவ்வி, பல பத்திரிகைகளில் குறிப்பாக இலங்கை தமிழ் பத்திரிகைகளில் பிரசுரிக்கப் பட்டிருந்தது. அதில் தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களுக்கு மத்தியில் ( கலைஞர் மற்றும் எம்.ஜி.ஆர்) அன்று ஏற்பட்ட மோதல்கள், தமிழ் அமைப்புக்களின் மத்தியில் விரிசல்களுக்கு காரணமாக அமைந்து விட்டன என்ற தொனியில், கலைஞரை குற்றம் சாட்டியிருந்தார். அதற்கு வலு சேர்க்க, சொற்சுவை பொருட்சுவையாக, டெலோ அமைப்பையும், அதன் பெரும் மதிப்புக்குரிய மறைந்த தலைவர் சிறி சபாரத்தினத்தையும் சினிமா பாணியில் வரும் வில்லன்கள் கணக்காக விபரித்திருந்தார். அவருடைய இந்த செயலுக்கு எமது ஆழ்ந்த மன வருத்தத்தினை நாம் தெரிவிக்கிறோம். எதை தவறு என்று செவ்வியில் கூறியிருந்தாரோ, அதே தவறினை இன்று அவர் அதே அரசியல் காரணங்களிற்காகச் செய்திருப்பது வேடிக்கையானது.
 இலங்கையில் சகோதர யுத்தம் நடக்காமல் இருந்திருந்தால், வரலாறு வேறு வடிவம் பெற்றிருக்கும் என முதல்வர் ஆதங்கப்படுவதில் மிக ஆழ்ந்த உண்மை இருக்கிறது. இக்கேள்வியை சரியாக புரிந்து கொள்ளாமல், நெடுமாறன் புலிகளிற்காக வக்காலத்து வாங்கியிருப்பதும்,  அதற்கு உண்மைக்கு புறம்பான செய்திகளையும், வரலாற்றினை திரிபு படுத்தியும் டெலோ அமைப்பை கேவலப் படுத்தி இருப்பது எமக்கு மிகுந்த மன வேதனை அளிக்கிறது.
புலிகள், 2009 மே மாதம் முள்ளிவாய்க்காலில் சந்தித்த ஈழப் போராட்டத்தின் முடிவிற்கு, 1986 மே மாதம் நடந்த டெலோ- புலி சகோதர யுத்தமே ஆரம்பமாக அமைந்தது என்பதில், ஈழத் தமிழர் எவருக்குமே இருவேறு கருத்துக் கிடையாது. அது அரசியல் வாதிகள், புத்தி ஜீவிகள், மற்றைய இயக்கத்தினர், அவதானிகள், ஆராய்ச்சியாளர், மற்றும் பொது மக்கள் எவராயினும் இருவேறு கருத்துக்கள் இருப்பதற்கு சாத்தியம் இல்லை. புலிகள் இயக்கத்தின் மூத்த உறுப்பினர்கள் பலர், அன்று இந்த சகோதர யுத்தத்தினை எதிர்த்ததோடு, பின்னர் பிரிந்தும் சென்றனர். டெலோ மட்டும் அல்லாது, ஈ.பி.அர்.எல்.எஃப், ஈரோஸ் மற்றும் புளட் இயக்கங்களின் உறுப்பினர்களும் புலிகளால் கொல்லப் பட்டமை கூட சகோதர யுத்தமே.
“டெலொவிற்கு எதிராக புலிகள் ஆயுதம் தூக்கியதன் மூலம், ஈழ்க் கோரிக்கை தமிழ் மக்களின் கனவாகவே போய் விட்டது….”- வரதராஜப் பெருமாள்- (ஈ.பி.அர்.எல்.எஃப்) முன்னாள் வடக்கு-கிழக்கு மாகாண முதலைமைச்சர்- இலங்கை.
முதல்வர் கலைஞர் அவர்கள், தீர்க்கதரிசனம் மிக்க, சாணக்கியம் மிகுந்த, சூட்சுமமான ஈடு இணையற்ற ஒரு தனிப் பெரும் தலைவர். ஈழ விடுதலை இயக்கங்கள் பல இருந்தமையும், அவர்கள் ஆயுதம் தரித்திருந்தமையும், அவற்றின் தலைவர்கள் பலர் மிகவும் இளைஞர்களாக இருந்த காரணத்தினாலும் அவர்களுக்கிடையில் ஏதாவதொரு காரணத்தினால் மோதல் நிலை ஏற்பட்டால், அதை கட்டுப்படுத்துவது முடியாத காரியமாகி விடும். அப்படியானால், ஈழப் போராட்டம் திசை மாறிவிடும். பிசுபிசுத்துவிடும். எல்லா முயற்சியும் வீணாகிவிடும் என்பதை அப்போதே நன்கு அறிந்திருந்தார். அதனால் தான் அவர் இந்த அமைப்புகளை அடிக்கடி சந்தித்து ஒற்றுமையின் அவசியத்தை வலியுறித்தினார். அரசியல் லாபம் தேடுவதற்கல்ல. டெலோ-புலி யுத்தம் ஆரம்பமான நேரத்திலிருந்தே அதைத் தடுப்பதற்கு பல முயற்சிகளை முன்னெடுத்தார். எல்லாமே புறக் குடத்தில் வார்த்த நீர் போலாயிற்று. கடைசியில் அந்தப் பெருமகனார் பயந்த மாதிரியே, புலிகள் ஈழப் போராட்டத்தை கடைசிவரைக்கும் திசை திருப்பி, எக்காலத்திலும் ஈடு செய்ய முடியாத அழிவுப் பாதையில் இட்டுச் சென்றதோடு, மக்களையும் நிற்கதியாக்கி மற்றைய தமிழ் அரசியல் தலைமைகளையும் அழித்து விட்டார்கள். எஞ்சி இருப்பவர்களுக்கு துரோகிப் பட்டம் சூட்டி, மக்களை குழப்பிவிட்டார்கள். இந்தக் குழப்பத்தில் நெடுமாறன் மாட்டிக்கொண்டது தான் வியப்பை அளிக்கிறது.
ஈழப் போராட்டத்தினை ஆதரித்ததால் தனது ஆட்சியையும் ஒருமுறை இழந்தவர், மாண்பு மிகு முதல்வர் கலைஞர் அவர்கள் என்பதை, தமிழ் கூறும் நல்லுலகம் என்றும் மறக்காது நன்றியோடு நினைவு கூரும்.
லிங்கம்மான் கொலைதான் டெலோ-புலி மோதலுக்கு காரணம் என பலரையும் நம்ப வைத்துள்ளனர் புலிகள். எப்பொழுதும் வெற்றி பெற்றவரே வரலாறு எழுதுபவர். உண்மை என்ன என்பதை இத்தருணத்தில் விளக்க விரும்புகிறோம். திம்புவிற்குப் பின்னர் 1986ல் களமிறங்கி நின்ற ஒரே தலைவர், சிறி சபாரத்தினம் தான். டெலொவை மீழக் கட்டியெழுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது மற்றைய அமைப்பு தளபதிகளுடன் ஒற்றுமையின் அவசியம், உறுப்பினர்கள் மத்தியில் புரிந்துணர்வு,  கள நிலவரங்கள், மற்றும் அரசியல் சூழல் பற்றி பேசி ஒருமித்த நிலைப்பாட்டை உருவாக்கும் முயற்சிகளில் சிறி அண்ணா இறங்கியிருந்தார். டெலோ மிகவும் வலிமையாகவும், பலராலும் ஏற்றுக் கொள்ளப் பட்ட அரசியல் அமைப்பாகவும் மாற்றம் பெற்றிருந்தது. இது புலித் தலமைக்கு பெரும் சிக்கலைக் கொடுத்தது. அந்த நேரத்தில் தான் புலிகள் சார்பில், களத்தில் மாத்தயா, கிட்டு போன்ற தளபதிகள் இருந்தும், லிங்கம்மான் டெலொவோடு பேசுவதற்கு அனுப்பி வைக்கப் பட்டார். ஆயுதம் இல்லாமல் வரவேண்டும் என்பது கட்டாயமான நிபந்தனை. இது சிறி அண்ணாவின் பாதுகாப்பையொட்டி ஏற்படுத்தப் பட்டிருந்த நிலைப்பாடு. ஆனால், புலிகள் எப்போதும் ஒரு ஆயுதத்தை வைத்திருப்பார்கள். பின்னாளில் மகத்தான தலைவர் அமிர்தலிங்கத்தைச் சந்திக்கும் பொழுதும், இதைப் புலிகள் கடைப்பிடித்தனர். இந்திய ராணுவத்தைச் சந்திக்கும் பொழுது “ஜொனி” என்ற புலித் தளபதி இதே தவறினால் உயிரிழக்க நேரிட்டது.
லிங்கம்மானும் நான்கு பேரும் வந்திறங்கி, டெலொவின் முகாமிற்குள் வரவும்,  அவர் இடுப்பில் இருந்த பிஸ்டல் வெளித்தெரிய, சிறி அண்ணாவின் மெய்ப்பாது காவலர், வேறு வழியின்றி, லிங்கம் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள வேண்டிய, ஒரு துர்பாக்கிய சூழல் உருவாகியது. இது பின்னர் புலிகளாலும் ஏற்றுக் கொள்ளப் பட்டது. மற்றைய புலிகள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப் பட்டனர். இச்சம்பவத்திற்கும் டெலோ- புலி மோதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நீண்ட நாட்களுக்குப் பின்னர் மோதலை புலிகளே தொடக்கினர்.
ஆக தமிழ் ஈழ விடுதலை இயக்கத் தலைவர் சிறி சபாரத்தினம் புலிகள் இயக்கத்தை சேர்ந்த ஒருவரை கைது செய்து அவரின் கண்களைத் தோண்டினார், என ஈழ வரலாற்றில், தனது கைச்சரக்கையும் சேர்த்து கதை அளந்துள்ளார் நெடுமாறன். இப்படியான அளப்புகளும் ஈழப் போராட்டத்தினை தவறான பாதைக்கு இட்டுச் சென்ற சாதனையை படைத்ததோடு, தவறான கண்ணோட்டத்தினையும் உலக அரங்கிலே உருவாக்கியுள்ளது.
ஈழ அரசியல், காலத்துக்கு காலம் தமிழக அரசியலால் தொட்டுக்கொள்ளப்படுவது ஒரு புதிய நடைமுறை இல்லை என்பதையும் நாம் நன்கறிவோம். இருந்தும் பழ நெடுமாறனின் கலப்படமில்லாத கட்டுக் கதைக்கு இனி ஆயுள் இல்லை என்பதையே இங்கு இடித்துரைக்க விரும்புகிறோம்.
ப. உதயராசா
செயலாளர் நாயகம்
சிறி ரெலோ.
மூலம்/ஆக்கம் : TELOnews

பயங்கரவாத விசாரணை பிரிவினர் எனக் கூறி தமிழ் வர்த்தகர்களை அச்சுறுத்தி கப்பம் பெற்று வந்த குழு கைது

பயங்கரவாத விசாரணை பிரிவினர் எனக் கூறி தமிழ் வர்த்தகர்களை அச்சுறுத்தி கடந்த காலத்தில் கோடிக்கணக்கில் கப்பம் பெற்று வந்த குழுவொன்றை சேர்ந்த தலைவர் உள்ளிட்ட 7 பேர் கடந்த 18 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக  கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.இவர்களிடம் இருந்து இரண்டு கைதுப்பாக்கிகள், ஒரு கிளைமோர், இராணுவத்தினரின் இலச்சினையுடன் கூடிய கார் மற்றும் மோட்டார் சைக்களில் என்பவற்றை காவற்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இந்த குழுவை வழிநடத்தி வந்த யாக்கா சம்பத், சமிந்த சம்பத் ஆகியோர் சூரியவௌ மற்றும் பத்தரமுல்லை பிரதேசங்களில் கைதுசெய்யப்பட்டதாகவும்  இவர்கள்  இராணுவ கமாண்டோ படையில் சில காலம் பணியாற்றி விட்டு, விலகியவர்கள் எனவும்  பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டுள்ள மூவர் சூரியவௌ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் மற்றும் இருவர் கிரிபத்தொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இந்த குழுவைச் சேர்ந்த சிலர் ஏற்கனவே கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் தாம் பயங்கரவாத விசாரணை பிரிவு மற்றும் ஏனைய பாதுகாப்பு தரப்பை சேர்ந்தவர்கள் எனக் கூறி, கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள தமிழ் செல்வந்த வர்த்தகர்களை அச்சுறுத்தி கோடிக்கணக்கில் கப்பம் பெற்றுள்ளனர். இந்த குழுவைச் சேர்ந்த மேலும் சிலரை கைதுசெய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாக பயங்கரவாத விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது.

நம்பியார், அசோகன், மனோகர் என்ற மும்மூர்த்திகள் இல்லாத எம்.ஜி.ஆர். படமேது

மனோகர் என்றொரு மனிதர்
அத்தியாயம் 8
மனோகர்
தமிழ் சினிமா உலகில் எம்.ஜி.ஆருக்கு அமைந்ததைப்போல ஒரு வில்லன் கூட்டணி வேறு யாருக்கும் அமைந்ததில்லை. நம்பியார், அசோகன், ஆர்.எஸ்.மனோகர் என்ற மும்மூர்த்திகள் இல்லாத எம்.ஜி.ஆர். படமேது? இவர்களில் ஆர்.எஸ். மனோகரது கதை கொஞ்சம் மாறுபட்டது.
சினிமா உலகில் வில்லனாக அறிமுகமாகி, அதன் பிறகு கதாநாயக அந்தஸ்துக்கு உயர்ந்தவர்கள் பலர் உண்டு. ஆனால் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி பத்துப் பதினைந்து படங்களுக்குப் பிறகு வில்லன் பாத்திரங்கள் ஏற்று நடித்தவர் ஆர்.எஸ். மனோகர். அவர் சினிமாவில் வில்லன் என்றாலும் கூட அவரது நேஷனல் தியேட்டர்ஸ் மேடை நாடகங்களில் அவர்தான் ஹீரோ. புராணங்களில் தேடித்துருவி, எதிர்மறையான கதாபாத்திரங்களுக்கும் புதுப்பரிமாணம் கொடுத்து ஹீரோவாக்கி அந்தப் பாத்திரங்களில் பிரகாசித்தவர் அவர். எனது பத்திரிகையுலக வாழ்க்கையின் ஆரம்பக் கட்டம் முதல் அவரது மறைவுக்கு சில மாதங்கள் முன்பு வரை அவரைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்து பேட்டி கண்டிருக்கிறேன்.
மனோகரது இயற்பெயர் லட்சுமி நாராயணன். அவருடைய அப்பாவுக்கு தபால் இலாகாவில் உத்தியோகம். பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தபோது அவரது அப்பாவுக்கு ஒரு வருட காலம் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரிக்கு மாற்றலானது. அங்கே இருந்தபோது நிறைய கன்னட, தெலுங்கு நாடகங்கள் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. பெல்லாரியில் இருந்த ராகவாச்சாரி ஷேக்ஸ்பியரது நாடகங்களை மேடையேற்றுவார். அவரது நடிப்பும், வசன உச்சரிப்பும்தான் மனோகருக்கு இன்ஸ்பிரேஷன்.
பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, மனோகர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ.சமஸ்கிருதம் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் ‘மிருச்சிகடிகா’ என்ற சமஸ்கிருத நாடகத்தில் கதாநாயகனாக நடிக்க சற்றும் எதிர்பாராத வகையில் வாய்ப்புக் கிடைத்தது. எப்படி? ஹீரோவாக நடிக்க வேண்டிய மாணவனுக்கு திடீரென்று அம்மை போட்டுவிட, அவனால் நடிக்கமுடியாது போனது. நிலைமையை எப்படி சமாளிப்பது என்று சமஸ்கிருத பேராசிரியர் கையைப் பிசைந்து கொண்டு நின்றபோது மனோகர் “சார்! எனக்குக் கூட நடிக்க ஆர்வம் உண்டு. அந்த ரோலில் நானே நடிக்கிறேன்” என்று சொல்லி நடிக்க, எல்லோரும் மனோகரது நடிப்பைப் பாராட்டினார்கள். அதன் பிறகு சுகுண விலாச சபாவில் தோட்டக்காரன் நாடகத்தில் நடித்தபோது, அவரது நடிப்பைப் பார்த்து பாராட்டியவர் நாடகத் தந்தையான பம்மல் சம்மந்த முதலியார்.
படிப்பை முடித்துவிட்டு அப்பாவைப் போலவே தபால் இலாகாவில் வேலைக்குச் சேர்ந்தார் லட்சுமி நாராயணன். கானல் நீர் என்ற படத்தில், கோட்டு, சூட்டு அணிந்துகொண்டு ஒரு படித்த கதாநாயகன் ரோலில் நடிக்க பர்சனாலிடியான, உண்மையிலேயே பட்டதாரியான ஒரு இளைஞரைத் தேடிக்கொண்டிருந்தார்கள். அவர்களது சாய்ஸ் லட்சுமி நாராயணன். அவரிடம் சினிமாவுக்காக உங்கள் பெயரை மாற்ற வேண்டும் என்றபோது, தான் கல்லூரியில் மிருச்சிகடிகா சமஸ்கிருத நாடகத்தில் ஏற்று நடித்த கேரக்டர் பெயரையே வைத்துக் கொள்ள முடிவு செய்தார். அன்று முதல் லட்சுமி நாராயணன் ” மனோகர்” ஆனார். மத்திய அரசாங்க வேலையில் இருக்கும்போது, சினிமாவில் நடித்தததற்காக பணம் வாங்கிக்கொண்டால் பிரச்னை ஏதாவது வருமோ என்று மனோகர் பயப்பட, தயாரிப்பாளரை அன்பளிப்பாக ஒரு கார் வாங்கிக் கொடுத்துவிட்டார். அடுத்து தாய் உள்ளம் படத்திலும் ஹீரோ ரோல். அடுத்தடுத்து ஒரு டஜன் படங்களில் ஹீரோவாக நடித்தாலும், அடுத்து வந்ததெல்லாம் வில்லன் ரோல்கள்தான்.
“நான் சொந்தமாக நாடக்குழு ஆரம்பிக்கக் காரணம் டி.கே.எஸ். சகோதரர்கள்தான்” என்பார் மனோகர். அவர்களது நாடகங்களைப் பார்க்கும் மக்கள் நேரடியாக கைதட்டி ரசிப்பதைப் பார்த்து, சினிமா பணமும், புகழும் கொடுத்தாலும், நாடகத்தில் நடித்தால்தான் மக்களின் நேரடியான பாராட்டுக் கிடைக்கும் என்பதுதான் மனோகரை 1954ஆம் ஆண்டு குழந்தைகள் தினத்தன்று ‘நேஷனல் தியேட்டர்’ என்ற தன் நாடகக் குழுவை துவக்கத் தூண்டியது. ஏராளமான வரலாற்று, புராண கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளித்து அவர் நாடகங்கள் போட்டு, பெரும் புகழ் பெற்றாலும், அவர் மேடையேற்றிய முதல் இரண்டு நாடகங்கள் சமூக நாடகங்கள்தான்.(இன்ப நாள், உலகம் சிரிக்கிறது) மூன்றாவதுதான் இலங்கேஸ்வரன்.
2005ல், கல்கி தீபாவளி மலருக்காக சதாபிஷேகம் (80 வயது) முடிந்த மனோகரை பேட்டி கண்டேன். “மனோகரது நாடகம் என்றல் குறிப்பிட்ட நேரத்தில் மணியடித்து, நாடகத்தை ஆரம்பித்துவிடுவார்” என்று பெயர் வாங்கி இருக்கிறீர்களே! அது எப்படி சாத்தியமாயிற்று?” என்று கேட்டபோது, “இதற்கு அடிப்படையான காரணம் நான் படித்த சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளிக்கூடம்தான்” என்றார். “அங்கே எனக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட பக்தி,ஒழுக்கம், கட்டுப்பாடு, நேரம் தவறாமை, பெரியவர்களை மதித்து நடத்தல் போன்ற நற்பண்புகள் என் வாழ்க்கையில் வளம் சேர்க்கக் காரணமாக இருந்தன. நாடகத்தைப்பொறுத்தவரை நேரம் தவறாமைக்கு நான் அதிக முக்கியத்துவம் கொடுப்பேன். நாடகத்தை ஆரம்பிப்பதில் மட்டுமில்லாமல், நடிகர், நடிகையர் அரங்கத்துக்கு குறித்த நேரத்துக்கு வருதல், மேக் அப் போட்டுக் கொண்டு தயாராதல் போன்றவற்றில் கூட கால தாமதம் ஆகிவிடக்கூடாது என்பதிலும் தீவிரமாக இருப்பேன். அது மட்டுமில்லாமல், என் நாடகங்களில் கண்ணிமைக்கும் நேரத்தில் பல தந்திரக் காட்சிகள் அரங்கேறும். எனவே, ஒரு வினாடி தாமதம் ஏற்பட்டாலும், ஆ! என ஆச்சரியத்தில் வாய் பிளப்பதற்கு பதிலாக ஆடியன்ஸ் ‘ஹா ஹா’ என்று சிரித்துவிடுவார்கள். எனவே, டை, டைமிங் விஷயத்தில் நான் என்றைக்குமே மிகவும் எச்சரிக்கையாக இருப்பேன்” என்றார்.
‘நம் கலாசாரம் ராமனை ஹீரோவாகவும், ராவணனை வில்லனாகவும் பார்த்துப் பழகியதாயிற்றே!.  அப்படி இருக்கும்போது, ராவணனுக்கு ஹீரோவாக முகம் கொடுத்து நாடகம் போட எப்படித் துணிந்தீர்கள்? அதை மக்கள் சுலபமாக ஏற்றுக் கொண்டார்களா?” என்று கேட்டபோது, “ராமாயணத்தில் அசுரனாக சித்தரிக்கப்பட்ட ராவணனை நல்லவனாகக் காட்டியதையும், சீதை ராவணனது மகள் என்று சொன்னதையும் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். இத்தனைக்கும், வால்மீகி ராமாயணம், துளசி ராமாயணம், ஆனந்த ராமாயணம், பௌத்த ராமாயணம் என்று இந்தியாவின் பல்பேறு பகுதிகளிலும் இருக்கும் ராமாயணங்களை எல்லாம் ஆராய்ச்சி செய்துதான் இலங்கேஸ்வரன் நாடகத்தின் ஸ்கிரிப்ட் எழுதப்பட்டது. மக்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றதும், பல சபாக்களில், நாடகத்துக்குக் கொடுத்திருந்த தேதிகளை கேன்சல் செய்துவிட்டார்கள். “என்னடா! பெரும் முதலீடு செய்து தயாரித்த புராண நாடகம் நஷ்டத்தில் கொண்டுபோய் விட்டுவிடும் போல இருக்கிறதே!” என்று மிகவும் கவலைப் பட்டேன். அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் குழம்பிப்போனேன்” என்றார்.
குழம்பிய மனோகர், காஞ்சீபுரம் சென்று பரமாச்சாரியாரை தரிசித்து, விஷயத்தைச் சொன்னபோது, அவர் ரொம்ப கூலாக, “நீ தப்பா ஒண்ணும் சொல்லிடலையே! கவலைப்படாதே!” என்று சொல்லி ஆசிர்வதித்தார். சீக்கிரமே அவரது கவலை தீர வழி பிறந்தது. ஸ்ரீலங்காவிலிருந்து கொழும்பு நகரில் ஒரே அரங்கத்தில் 21 நாட்கள் இலங்கேஸ்வரன் நாடகத்தை நடத்த அழைப்பு வந்தது. நாடகம் பார்த்துவிட்டு, ஸ்ரீலங்கா மக்கள் மனோகரைப் பாராட்டினது மட்டுமில்லாமல், அவருக்கு ‘இலங்கேஸ்வரன்’என்ற பட்டத்தையும் கொடுத்து கௌரவித்தார்கள். மனோகரது நாடகங்களிலேயே மிக அதிக தடவைகள் மேடையேறிய பெருமையும் இலங்கேஸ்வரனுக்குத்தான் உண்டு. ஆயிரத்து எண்ணூறு தடவைகளுக்கு மேல் அந்த நாடகத்தைப் மேடையேற்றி இருக்கிறார் மனோகர். ம.பொ.சி., சி.சுப்ரமணியன், ஆர், வெங்கடராமன் போன்றவர்கள் மட்டுமின்றி தந்தை பெரியார் கூட அந்த நாடகத்தைப் பார்த்து, ரசித்து மனோகரைப் பாராட்டி இருக்கிறார்.
இலங்கேஸ்வரனில் சீதை ராவணனின் மகள் என்று சொல்லி பரபரப்பு ஏற்படுத்தினாற்போல, துரோணர் நாடகத்தில் ஒரு விஷயத்தைப் புகுத்தினார் மனோகர். துரோணர், ஏகலைவனிடம் அவனுடைய கட்டை விரலை குருதட்சிணையாகக் கேட்பதாகக் காட்டாமல், “உனக்கு மிகவும் பிடித்ததை நீ குருதட்சிணையாக எனக்குக் கொடு” என்று கேட்க, ஏகலைவன் தனது வில் வித்தை குருவுக்கு தானாக முன்வந்து தன் கட்டை விரலை காணிக்கையாக்குவதாகக் காட்டினார். அவர், சாணக்கியனாக நடித்த ‘சணக்கிய சபதம் 725 தடவைகள் மேடையேறிய வெற்றி நாடகம். சுக்ராச்சாரியார் முதல் பாகம், இரண்டாம் பாகம் இரண்டுமே சக்கைப் போடு போட்டன.
மனோகர் புத்தபிட்சுவாக நடித்த உப குப்தன் என்ற நாடகம் வெற்றி பெறவில்லை. “இலங்கேஸ்வரனாக பள பளா காஸ்டியூமில், ராமாயணக் கதை சொல்லிவிட்டு, அடுத்து காவி உடையில் புத்த பிட்சுவாக நான் வந்தபோது, மக்கள் அதை ரசிக்கவில்லை” என்றார். ஆனால் அவரது சூரபத்மன், சிசுபாலன், விஸ்வமித்திரர், துரியோதனன், நரகாசூரன், பரசுராமர், துர்வாசர், திருநாவுக்கரசர், மாவீரன் கம்சன், இந்திரஜித், மாலிகாபூர் என்று எல்லா நாடகங்களும் பிரம்மாண்டமான தயாரிப்புகள்; இவற்றில் இடம்பெற்ற தந்திரக் காட்சிகள் மக்களை ஆச்சரியப்படுத்தின. “மேடையில் நொடிப்பொழுதில் நிகழ்ந்தாலும், தந்திரக் காட்சிகள் நாடகம் பார்க்கிற மக்கள் மனதில் ஏற்படுத்தும் ஆச்சரியம் பல காலம் தங்கி இருக்கும்” என்பது அவரது லாஜிக்.
மனோகர் ஒரு பர்ஃபக்ஷனிஸ்ட். மேடையில் எல்லாம் துல்லியமாக நடக்க வேண்டும் என்பதற்காக செம்மையாகத் திட்டமிட்டு, கடுமையாக உழைப்பார். அவரது ஒவ்வொரு நாடகத்துக்கும் முப்பது நாட்கள் ரிகர்சல் நடக்கும். இதில் கடைசி பதினைந்து நாட்களில் தினம் மூன்று முறை மேக் அப், சீன், செட்டுடன் ரிகர்சல் நடக்கும். அரங்கேற்றத்துக்கு முன்பாக இப்படிச் செய்வதால்தான் துளியும் பிசகில்லாமல் அவரால் நாடகத்தை நடத்த முடிந்தது.
கோவையில் ஒரு திறந்த வெளி அரங்கில் மனோகரது காடக முத்தரையன் நாடகம் நடந்துகொண்டிருந்தபோது, பாதி நாடகத்தில் திடீரென கடும் மழை. மக்கள் கலைந்து ஆங்காங்கே மழைக்கு ஒதுங்கிக்கொண்டார்கள். ஒரு மணி நேரம் கழித்து மழை நின்ற பிறகு, திரண்டு வந்து நாடகத்தைத் தொடரும்படிக் கேட்டுக்கொள்ள, மனோகரும் நாடகத்தைத் தொடர்ந்தார்.
சினிமா உலகில் பிசியாக இருந்தாலும், நாடகம் நடத்துவதில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் மனோகர். ஒரு சமயம், சேலத்தில் ஏழு நாட்கள் தொடர்ந்து நாடகம். அதே நேரம் சென்னையில் எம்.ஜி.ஆர்.பட ஷூட்டிங். மனோகர் எப்படி சமாளித்தார் தெரியுமா? தினமும் காலை ஏழு மணிக்குத் தொடங்கி பகல் 12 மணி வரை சென்னையில் ஷூட்டிங்கில் இருப்பார். அப்புறம் காரில் சேலத்துக்குப் புறப்படுவார். மாலை சேலம் போய்ச் சேர்ந்து, நாடகத்தில் நடித்துவிட்டு, இரவே சேலத்திலிருந்து மறுபடி புறப்பட்டு காலையில் சென்னை!
கல்கி தீபாவளி மலர் பேட்டி முடிந்தவுடன், அவரது வாழ்க்கை அனுபவங்களைத் தொகுத்து புத்தகமாக எழுதும் என் விருப்பத்தை மனோகரிடம் சொன்னேன். “புது வருஷம் பிறக்கட்டும். உட்கார்ந்து பேசலாம். அதற்குள் நானும் பழைய புகைப்படங்கள், நியூஸ் பேப்பர் கட்டிங்குகள், டைரி, எல்லாவற்றையும் ரெடி பண்ணிவிடுகிறேன்” என்றார். புது வருஷம் வந்தபோது நிமோனியா வந்து ஆஸ்பத்திரியில் இருந்தார். அதன் பின் நான் சந்திக்க வாய்ப்பில்லாமேலேயே மறைந்தார். (10 ஜனவரி 2006)
-தொடரும்

அம்மணத் துறவிகள் கூடிடக் கண்டேன் .மன்மதன்அம்பு கமல் எழுதிய முழுப் பாடல்


         நாளை மன்மதன் அம்பு படத்தின் இசை வெளியீட்டு விழா சிங்கப்பூரில் பிரமாண்டமாக நடக்க இருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் தயாரிக்க கமலுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஐந்தாவது முறையாக இணைந்திருக்கிறார். படத்தின் கதை, திரைக்கதை வசனங்களை எழுதியிருக்கும் கமலஹாசன் இரண்டு பாடல்களையும் பாடியிருக்கிறார். ஒரு பாடலை அவரே எழுதியும் இருக்கிறார்.



படத்தின் இசை தேவி ஸ்ரீ பிரசாத். இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கமலும், தேவி ஸ்ரீ பிரசாத்தும் இணைந்து மேடையில் ஒரு பாடலுக்கு நடனமாடிக் கலக்க இருக்கிறார்கள். படம் முழுக்க முழுக்க வெளி நாடுகளில் படமாகப் பட்டிருகிறது. கமலுடன் சேர்ந்து திரிஷா, மாதவன், சங்கீதா என நகைச்சுவையில் கலக்க இருக்கும் மன்மதன் அம்பு இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வர இருக்கிறது. 

இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சி பத்திரிகையாளர்களுக்கு சென்னையில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது. நிகழ்ச்சி முடிந்ததும் பத்திரிகையாளர்கள் சென்னையில் இருந்து கேட்கும் கேள்விகளுக்கு கமலஹாசன் சிங்கப்பூரில் இருந்து பதில் அளிக்கிறார். 

படத்தில் கமல் எழுதியப் பாடல் இதோ உங்களுக்காக... 

திரிஷாவின் பெயர் நிஷா. நிஷா ஒரு சினிமா நடிகை. நிஷா தன் வாழ்வில் அனுபவத்தை விஷயங்களை விரக்தியோடு இந்த பாடலை பாடுவதாக அமைகிறது.

Asin.இந்தியில் கவர்ச்சி காட்டினால்தான் நிலைக்க முடியும்

Asin and Vijayசல்மான் கானுடன் படுக்கையறைக் காட்சியில் தான் நடித்துள்ளதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை என்றும், ரெடி படத்தில் அப்படிப்பட்ட காட்சிகள் இடம் பெறாது என்றும் நடிகை அசின் தெரிவித்தார்.

தென்னிந்திய மொழிப் படங்களில் நடிகை அசின் குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்தார். ஆனால் இந்தியில் கவர்ச்சி காட்டினால்தான் நிலைக்க முடியும் என்பதால் லண்டன் ட்ரீம்ஸ் படத்தில் ஓரளவு கவர்ச்சியாக நடித்தார்.

ஆனால் அதற்கு அடுத்த படமான ரெடியில் அசினின் கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாகவே உள்ளது என்கிறார்கள்.

முத்தக் காட்சி, படுக்கையறைக் காட்சிகளில் அசின் நடித்துள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்தச் செய்திகள் பரவியதும், அவற்றை மறுத்து பேட்டியளித்தார் அசின்.

அவர் கூறுகையில், "கவர்ச்சிக்கும் கிளாமருக்கும் வித்தியாசதம் இருக்கிறது. நான் சற்று கிளாமராக ரெடியில் நடித்துள்ளேன். ஆனால் படுக்கையறைக் காட்சிகளிலெல்லாம் நடிக்கவில்லை. காவலன் படத்தில் கூட கிளாமராக வந்துள்ளேன் பாடல் காட்சிகளில். அதற்காக அதை ஆபாசம் என்று சொல்ல முடியுமா?" என்று கேட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் அமளி,ஸ்பெக்ட்ரம்-எதியூரப்பா ஊழல்

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து 6வது நாளாக இன்றும் பெரும் அமளி நிலவியது. இதையடுத்து வரும் திங்கள்கிழமை வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுவிட்டது.

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 9ம் தேதி தொடங்கியது. ஆனால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தைக் கிளப்பி பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவைகளை நடத்த முடியவில்லை.

இந் நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த விவகாரம் தொடர்பாக ராசா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் நாடாளுமன்றக் கூட்டம் சுமூகமாக நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் புதிய நிபந்தனையை விதித்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதை மத்திய அரசு ஏற்க மறுப்பதால் நாடாளுமன்றம் முடங்கி வருகிறது.

இன்றும் இரு அவைகளிலும் 6வது நாளாக அமளி தொடர்ந்தது. மக்களவை இன்று காலை கூடியதும் பாஜக சமாஜ்வாடி கட்சி எம்.பிக்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று கூட்டு விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.

இதையடுத்து காங்கிரஸ் எம்.பி.க்கள் பதிலடியாக நில ஊழலில் ஈடுபட்ட கர்நாடக பாஜக முதல்வரை நீ்க்க வேண்டும் என்று கோரினர். எதியூரப்பாவின் போஸ்டர்களை உயர்த்தியபடி கோஷமிட்டனர்.

அவர்களுடன் முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் நிறுவனருமான தேவே கெளடாவும் சேர்ந்து கொண்டார். அவரும் எதியூரப்பாவின் போஸ்டரை பிடித்தப்படி நின்று கோஷமிட்டார்.

இதனால் பெரும் அமளி நிலவியது. சபாநாயகர் மீராகுமார் காங்கிரஸ் எம்.பிக்களையும், பாஜக எம்.பிக்களையும் அமைதியாக இருக்குமாறு கோரினார். ஆனால் எம்.பிக்கள் தொடர்ந்து கோஷமிட்டப்படி இருந்தனர். இதனால் அவையை பகல் 12 மணி வரை ஒத்தி வைப்பதாக மீராகுமார் அறிவித்தார்.

12 மணிக்கு சபை கூடியதும், மீண்டும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அமளி ஏற்பட்டது. பாஜக, காங்கிரஸ் எம்பிக்கள் பரஸ்பரம் ஸ்பெக்ட்ரம் ஊழல், எதியூரப்பா அரசின் நில மோசடி குறித்து குரல் எழுப்பியதால் அவையை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து அவையை திங்கள்கிழமை வரை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

அதே போல ராஜ்யசபாவிலும் பாஜக, அதிமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி எம்பிக்களிடையே போட்டி கோஷத்தால் பெரும் அமளி நிலவியது.

பாஜக, அதிமுக எம்.பிக்கள் அவையின் மையப் பகுதிக்கு சென்று கூட்டக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்று கோஷமிட்டதால் அவையை துணை ஜனாதிபதியும் சபாநாயகருமான ஹமீத் அன்சாரி பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார்.

ஆனால், அவை மீண்டும் கூடியதும் பாஜக, அதிமுக எம்.பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை திங்கள்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டது.
பதிவு செய்தது: 20 Nov 2010 6:49 am
எவண்டா இந்த மால்மதி ? டேய் மரியாதைய இதோட நிறுத்திக்க இல்ல மவனே உனக்கு ...... காங்கிரஸ் ஆட்சி அது இதுன்னு ஒரே காமெடி தான் பண்ணுற போ , நீ எந்த ஊரு தம்பி கீழ் பாக்கமா ?

பதிவு செய்தவர்: bsnl
பதிவு செய்தது: 20 Nov 2010 4:46 am
BSNL cellகஸ்டமர் கேர் தொடர்பு கொண்டு பேசி விட்டாலோ,தகவல் தெரிந்து கொண்டு விட்டாலோ, ,தங்களது குறைகளை சரிசெய்து விட்டாலோ,GPRSBALANCEதெரிந்துகொண்டு விட்டாலோ1000000000000000000000000பரிசு
பதிவு செய்தவர்: மால்மதி
பதிவு செய்தது: 20 Nov 2010 1:22 am
தட்ஸ்தமிழ் வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள் ,எப்படியாவது தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை கொண்டுவருவதுதான் என் லட்சியம்.இது பொறுக்காத எலிகள் என் பெயரை பலவாறு திரித்து எழுதுகிறார்கள்,ஆகவே என் கருத்துக்களை மட்டுமே ஏற்றுக் கொள்ளுங்கள்
பதிவு செய்தவர்: மால்மதி
பதிவு செய்தது: 20 Nov 2010 3:05 am
(முன்னாள் அரிச்சந்திரன்): தட்ஸ் தமிழ் தயவு செய்து என்னுடைய பெயரை நன் மட்டுமே பயன்படுத்தும் வகையில் செய்ய முடியாதா? மேலே உள்ள கருத்து என்னுடையதே அல்ல .. என்னுடைய பெயர் களங்கப் படுகிறதே !!!
பதிவு செய்தவர்: தம்பி
பதிவு செய்தது: 20 Nov 2010 6:46 am
சும்மா காமடி பண்ணாத ராசா

பதிவு செய்தவர்: நிர்மல் 1
பதிவு செய்தது: 19 Nov 2010 11:19 pm
மக்களுக்கு விளக்கவும் ஒரு வீட்டை விற்கிறோம்.2001 ரூபாய் 10 லட்சம். .அத்த இடம் சென்னை திநகர் போல நல்ல வளர்ச்சி அடையும் இடம். சந்தை மதிப்பு 2001 ரூபாய் 10 லட்சம் வாங்கியது இன்று ரூபாய் நான்கு கோடி .நீ அதை எப்படி விற்பாய் .எல்லா தரகர் இடம் கூறி விளம்பரம் கொடுத்து .நாலு கோடி மேல மிக அதிகம் யாரு கேட்கிறார்களோ அவர்களுக்கு நீ விற்ப அப்படி தானே நீ புத்தி சாலிதானே பள்ளி கூடம் படிகவிட்டாலும்
பதிவு செய்தவர்: நிர்மல் 2
பதிவு செய்தது: 19 Nov 2010 11:20 pm
ஆனா சோனியா கருணாந்தி அந்த வீட்ட எப்படி வீற்று உள்ளனர் என்றால் ரூபாய் 10 லட்சம் விற்று உள்ளனர் .ராஜா என்ற பொம்மை மூலம். அப்படி விற்பனை செய்ததனால் சோனியா கருணாந்தி என்ன லாபம் .மிக குறைத்த விலை கொடுத்து வாங்கியவன் ரூபாய் 2 கோடி சோனியா கருணாநதி கொடுத்து உள்ளான் ஆமா நாலு கோடி சொத்து அவனுக்கு 10 லட்சம் கிடைத்து இருக்குல.
பதிவு செய்தவர்: நிறமல் 3
பதிவு செய்தது: 19 Nov 2010 11:21 pm
அதாவது...
பதிவு செய்தவர்: பிரமல் 3
பதிவு செய்தது: 19 Nov 2010 11:22 pm
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின் சந்தை விலையாக ஜூன்2001-ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட விலையை நிர்ணயம் செய்வதோடு, முதலில் வருபவருக்கே முன்னுரிமை அளிப்பது என்ற நடைமுறையை பின்பற்ற முடிவு செய்தது. 2001-ம் ஆண்டில் 40 லட்சம் மொபைல்போன் சந்தாதாரர்கள் இருந்தனர். ஆனால் 2007 முதல் 2008-ம் ஆண்டு வரையிலான காலத்தில், மொபைல் போன் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 35 கோடியாக உயர்ந்திருந்தது. இதனால் 2001-ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட விலையை வசூலித்ததால், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தனியார் நிறுவனங்கள் லாபம் அரசு நஷ்டம்

பதிவு செய்தவர்: நிஷாந்தன்
பதிவு செய்தது: 19 Nov 2010 10:50 pm
கிட்டதட்ட இரண்டு லட்சம் கோடி காணாமல் போயுள்ளதாம் ,இந்த தொகை நாட்டின் ஒருவருட வருமானத்தின் நான்கில் ஒரு பங்கு,உண்மையில் ஊழல் நடந்திருந்தால் தொலைபேசி கட்டணம் உயர்ந்திருக்க வேண்டும்,நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்க வேண்டும் ,இந்த ஊழல் விஷயம் சுப்பிரமணிய சுவாமிக்கு தெரியும் போது கட்டாயம் அமரிக்காவுக்கு தெரிந்து இருக்க வேண்டும்.
பதிவு செய்தவர்: நிஷாந்தன்
பதிவு செய்தது: 19 Nov 2010 10:50 pm
அமரிக்காவுக்கு தெரிந்து இருந்தால் என்ன மண்ணாங்கட்டிக்கு ஒபாமா இந்தியாவுக்கு வந்து அமரிக்காவில் வேலை வாய்ப்பை உருவாக்கப் பாடுபடுகிறார் ? ஆக எதிர்கட்சிகள் கூவுவதைப்போல எந்த ஊழலும் நடக்கவில்லை ,அல்லது நடந்த ஊழல் மிகச் சிறியது ,அதுவும் இல்லை என்றால் இந்தப் பெரிய ஊழலில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் எதோ ஒருவகையில் சாமானிய மக்களுக்கு போய் சேர்ந்துள்ளது ,
பதிவு செய்தவர்: பிரவீனா
பதிவு செய்தது: 19 Nov 2010 10:51 pm
அதாவது நாட்டில் பொருளாதாரம் நன்றாக இருந்தால் தொலைபேசிக் கட்டணம் உயராமல் இருந்தால் ஊழல் நடந்திருக்காது என்று அறிவு மிக்க பொருளாதரா மேதை நிஷாந்தன் அடித்து சொல்கிறார். Friends try to understand. நானும் நிஷாந்தனும் கலைஞர் மற்றும் ராஜாவின் மலத்தை விரும்பி உண்கிறோம். அதனால் எங்களுக்கு அறிவு வளர்ந்து ஒபாமா இந்தியா வந்ததால் இந்தியாவில் ஊழலே இல்லை என்ற உண்மை தெரிகிறது. நீங்களும் சற்று ராஜாவின் மலத்தை ருசித்தீர்கள் என்றால் உங்களுக்கும் இந்த எளிமையான விளக்கம் விளங்கும்.
பதிவு செய்தவர்: RAS
பதிவு செய்தது: 19 Nov 2010 11:05 pm
நிசாந்தன் ஆர் யு இந்தியன் ????????

பதிவு செய்தவர்: அரி சந்திரன்
பதிவு செய்தது: 19 Nov 2010 10:08 pm
நான் எப்போதும் அரி சந்திரன் தான். மால் மதி என்பவன் போலி. அவனை சைலேந்திர பாபுவிடம் சொல்லி என்கவுண்டர் பண்ணனும். பிறருக்கு பயந்து நான் என்பேரை மாத்த நான் எலி அல்ல. அரி சந்திரன் எப்போதும் அரி சந்திரன் தான். டாய் மால் மதி கைல மாட்டுன கிமா தான்.
பதிவு செய்தவர்: கல்லாப்பெட்டி சிங்காரம்
பதிவு செய்தது: 19 Nov 2010 11:18 pm
டேய் அரி சந்திரன்,மால் மதி அப்பிடிங்கிற பேர தஞ்சாவூர் கல்வெட்டுல செதுக்கி வைச்சுட்டு நீ செத்து போய்டு ..அப்பத்தான் வருங்கால சந்ததியினர் அதை படிச்சு தெரிஞ்சுக்குவாங்க..பரதேசி ஏதோ பேர்ல கமெண்ட் எழுதுனமா இல்ல படிச்சோமான்னு மூடிட்டு போவானா? அதை விட்டு ஸ்கூல் பையன் மாதிரி கம்ப்ளைன்ட் பண்ணுற...
பதிவு செய்தவர்: மால்மதி
பதிவு செய்தது: 20 Nov 2010 3:05 am
(முன்னாள் அரிச்சந்திரன்): தட்ஸ் தமிழ் தயவு செய்து என்னுடைய பெயரை நன் மட்டுமே பயன்படுத்தும் வகையில் செய்ய முடியாதா? மேலே உள்ள கருத்து என்னுடையதே அல்ல .. என்னுடைய பெயர் களங்கப் படுகிறதே !!!

பதிவு செய்தவர்: bsnl
பதிவு செய்தது: 19 Nov 2010 8:32 pm
BSNL cellகஸ்டமர் கேர் தொடர்பு கொண்டு பேசி விட்டாலோ,தகவல் தெரிந்து கொண்டு விட்டாலோ, ,தங்களது குறைகளை சரிசெய்து விட்டாலோ,GPRSBALANCEதெரிந்துகொண்டு விட்டாலோ1000000000000000000000000பரிசு

பதிவு செய்தவர்: nachikutti
பதிவு செய்தது: 19 Nov 2010 8:26 pm
ஏண்டி அனுசுயா உன்னை தூக்கிப்போட்டு மிதிசிப்புடுவேன்.

பதிவு செய்தவர்: வண்டு murugan
பதிவு செய்தது: 19 Nov 2010 7:51 pm
PM's Secretary: "அய்யா..சிங்கு அய்யா, என்னங்கய்யா ஒங்களயும் ஸ்பெக்ட்ரம் ஊழல் சம்பந்தமா விசாரிக்க சிபிஐ-லருந்து ஆளுங்க வந்திருக்காய்ங்க?.." ... பிரதமர்: "அட.. அத ஏன்யா கேக்குற?.. இந்த பதவி போன மந்திரி ராசாகிட்ட நீதிபதி கேட்டாரு."ஸ்பெகட்ரம ஊழல்ல சம்பாரிச்ச பணத்தை எங்க வெச்சிருக்கீக?"ன்னு கேட்டாரு.. (தொடரும் )
பதிவு செய்தவர்: வண்டு murugan
பதிவு செய்தது: 19 Nov 2010 7:53 pm
அட.. அதுக்கு இந்தாளு ராசா என்ன சொன்னாரு, தெரியுமா?.. அய்யா.. நீதிபதி அவர்களே!.. நான் சம்பாரிச்ச அம்புட்டுப் பணத்தையும் இந்த சிங்கு அய்யாகிட்டதான் கொடுத்து வெச்சிருக்கேன்" அப்புடின்னு சொல்லிட்டாரு.. (தொடரும் )
பதிவு செய்தவர்: வண்டு murugan
பதிவு செய்தது: 19 Nov 2010 7:56 pm
அட.. நாங்க அரசியலுக்காவ எத்தனையோ பொய்களைச் சொல்லிருக்கோம்.. ஆனா இந்தாளு ராசா, ஒரே ஒரு வார்த்தையால என்னையும் இப்ப கோர்டுக்கு இழுத்துட்டாரய்யா.. கோர்ட்டுக்கு இழுத்துட்டாரு.. (தொடரும் )
பதிவு செய்தவர்: வண்டு murugan
பதிவு செய்தது: 19 Nov 2010 7:57 pm
இப்ப நீதிபதி என்ன சொல்லிட்டாரு தெரியுமா?.. "அட.. நீங்க எல்லாருமே ச்சேர்ந்துதான் கொள்ளையடிச்சிருக்கீகளா.. அப்ப உங்க எல்லாரையுமே சிபிஐ விசாரிக்கோணும்-ன்னு ஜட்சமெண்ட் எழுதிட்டாருய்யா.. ஜட்ஜ்மெண்ட் எழுதிட்டாரு"..

பதிவு செய்தவர்: Anushuya
பதிவு செய்தது: 19 Nov 2010 6:00 pm
Mummy will return last mummy return killed Maran, this time all the MK family. Come May and take MK family to deep hell fire.