சனி, 6 பிப்ரவரி, 2021

உலக தொலைக்காட்சிகளில் பஞ்சாப் விவசாயிகளின் போராட்டம்

 

பஞ்சாப் விவசாயிகளின் போராட்டம் உலகம் முழுவதும் கவனத்தையும் பெரும் ஆதரவையும் பெற்று கொண்டு வருகிறது .இதன் தாக்கம் வரும் காலங்களில் இந்தியாவுக்கு பெரும் நெருக்கடியை உலக அரங்கில் கொண்டுவரும் என்பதில் சந்தேகமில்லை .பல உதவிகள் மற்றும் பொருளாதார சலுகைகள் குறைக்கப்படும் அல்லது நிறுத்தப்படும் சாத்தியம் உள்ளது  . ஏற்கனவே பாஜகவின் இந்துத்வா கொள்கையால் உலக அரங்கில் இந்திய பெரிதும் தனிமைப்பட்டு உள்ளது . 

சர்வதேச  ஊடகங்கள் விவசாயிகள் போராட்டத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் சாதாரணமானது  அல்ல .    இதை எளிதில்  கடந்து போவது புத்திசாலித்தனம் அல்ல  . 

விவசாயிகளின் 'சக்கா ஜாம்' போராட்டமும் நல்லெண்ண நடவடிக்கையும்!

nammatamizhagam.com : மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நாடு தழுவிய அளவில் இன்று மதியம் சாலை மறியலில் ஈடுபட்டனர். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் இரு மாதங்களுக்கு மேலாகப் போராடி வருகின்றனர். விவசாயிகளுக்குச் சர்வதேச அளவில் ஆதரவு பெருகி வருகிறது. இந்நிலையில் 'சக்கா ஜாம்' என்ற பெயரில் இன்று ( பிப்ரவரி 6) நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட பாரதிய கிசான் யூனியன் என்ற அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.அதன்படி இன்று பிற்பகல் 12 மணியிலிருந்து 3 மணிவரை பல்வேறு மாநில நெடுஞ்சாலைகளிலும் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி டெல்லி மற்றும் தலைநகர் பகுதியில் காவல்துறையினர், துணை ராணுவ படையினர் என மொத்தம் 50 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் களமிறக்கப்பட்டனர். டெல்லியில் 12 மெட்ரோ ரயில் நிலையங்கள் சாலை மறியல் போராட்டத்தை முன்னிட்டு இன்று மூடப்பட்டன.

ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்றுங்கள்... அ.தி.மு.க.வினருக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவுறுத்தல்

ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்றுங்கள்... அ.தி.மு.க.வினருக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவுறுத்தல்
maalaimalar : சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைக்காலம் முடிந்து விடுதலை செய்யப்பட்ட சசிகலா, பெங்களூருவில் ஒரு வாரகால ஓய்வுக்கு பிறகு நாளை மறுநாள் சென்னை திரும்ப உள்ளார். அவர் தனது காரில் அதிமுக கொடியை பொருத்தியது, அதிமுகவை கைப்பற்றுவோம் எனறு டிடிவி தினகரன் கூறியது, அதிமுகவில் சசிகலாவுக்கு ஆதரவு குரல் போன்ற நிகழ்வுகள் அதிமுகவில் சலசலப்பை உருவாக்கி உள்ளது. இந்த சூழ்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகளுடன், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்துவது குறித்து அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

சசிகலாவை வரவேற்க காவல்துறை அனுமதி!' - டி.டி.வி.தினகரன் தகவல்!

sasikala arrive tamilnadu ttv dhinakaran tweet

nakkeeran : சசிகலாவை வரவேற்க காவல்துறை அனுமதி அளித்துள்ளதாக டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருந்து விடுதலையாகியுள்ள சசிகலா பெங்களூருவில் உள்ள தனியார் விடுதியில் ஓய்வெடுத்து வருகிறார். 

இந்த நிலையில், அவர் பிப்ரவரி 8- ஆம் தேதி (திங்கள்கிழமை) அன்று காலை 09.00 மணியளவில் கர்நாடகாவில் இருந்து புறப்பட்டு தமிழகம் வருகிறார் என்று டி.டி.வி. தினகரன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், தமிழகம் வரும் சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க, அதற்கான ஏற்பாடுகளை அ.ம.மு.க.வினர் தீவிரமாகச் செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,         'சென்னை உள்ளிட்ட இடங்களில் சசிகலாவை வரவேற்க காவல்துறை அனுமதி அளித்துள்ளது. காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி சசிகலாவை வரவேற்க வேண்டும். போக்குவரத்திற்கோ, பொதுமக்களுக்கோ இடையூறு இல்லாத வகையில் சசிகலாவிற்கு வரவேற்பு அளிக்க வேண்டும்.                    சசிகலாவை அ.ம.மு.க.வினர் வரவேற்பதைத் தடுக்க சிலர் சதித்திட்டம் தீட்டுவதாக சந்தேகம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி நாடு முழுவதும் விவசாயிகள் 3 மணி நேரம் சாலை மறியல்

 maalaimalar : புதுடெல்லி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று 73-வது நாளாக விவசாயிகளின் போராட்டம் தொடருகிறது. குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டது. இது விவசாயிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. அதன் பிறகு 10 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடர்ந்து அமைதியாக போராடி வருகிறார்கள்.

அமைதியான முறையிலேயே போராட்டம் நடத்துகிறோம் என்பதை பொதுமக்களின் கவனத்துக்கு கொண்டு செல்லவும், அரசின் கவனத்தை ஈர்க்கவும், வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரியும் அடுத்த கட்ட நடவடிக்கையாக நாடுமுழுவதும் இன்று ‘சக்கா ஜாம்’ எனப்படும் நெடுஞ்சாலை மறியல் போராட்டத்தை நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவித்தனர்.

காங்கிரஸ் 20 மதிமுக 10 மார்க்சிஸ்ட் 8 இந்திய கம்யூனிஸ்டு 8 விடுதலை சிறுத்தைகள் 6 முஸ்லிம் லீக் 2 மமக 2

Minnambalam : திமுக கூட்டணி இன்றைய நிலவரம்  

திமுக எத்தனை? கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை?

திமுக சார்பில் கடந்த சில வாரங்களாகவே கூட்டணிக் கட்சித் தலைவர்களை ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள் சந்தித்திருக்கிறார்கள்.   ”உங்களுக்கு இத்தனை சீட்டுதான், தலைவர் சொல்லச் சொன்னார்” என்று அந்த நபர் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் முன்னே நின்று சொல்லும்போதே அந்தத் தலைவர்களுக்கு அதிர்ச்சி ஆகிவிட்டது. காரணம் அவர் சொன்ன சீட்டுகளின் எண்ணிக்கை அவ்வளவு குறைவாக இருந்தது.

உதாரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சந்தித்த ஸ்டாலினுக்கு நெருக்கமான பிரமுகர், “உங்களுக்கு வரும் தேர்தலில் இரு சீட்டுகள்தான்” என்று சொன்னதையும் அதைக் கேட்டு திருமா அதிர்ந்ததையும் நாம் ஏற்கனவே மின்னம்பலத்தில் குறிப்பிட்டிருந்தோம்.

தேர்தலுக்கு முன்...அமமுக கலைப்பு: அதிமுகவுடன் இணைப்பு! ஒதுங்கிக்கொண்டு ஒன்றாக்க முயற்சிக்கிறாரா சசிகலா?

தேர்தலுக்கு முன்...அமமுக கலைப்பு: அதிமுகவுடன் இணைப்பு!   ஒதுங்கிக்கொண்டு ஒன்றாக்க முயற்சிக்கிறாரா சசிகலா?

minnambalam ":  நேற்றுப்போல் இன்று இல்லை; இன்று போல் நாளையில்லை...காதலுக்கு மட்டுமில்லை; கலிகால அரசியலுக்கும் இது அப்படியே பொருந்தும் பாட்டுதான். இன்னும் தெளிவாய்ச் சொல்வதானால் தேர்தல் கால அரசியலுக்கு இது செமையான சிச்சுவேஷன் சாங்...   சசிகலாவின் ரீஎன்ட்ரி குறித்தும் இப்படித்தான் நாளுக்குநாள், மணிக்கொரு தரமாக கதைகள் கிளம்பிக் கொண்டே இருக்கின்றன. ஆனால் சசிகலா தற்போது இருக்கும் கோடாகுருக்கி பண்ணை வீட்டிலிருந்து அத்தனை எளிதில் ‘பிரேக்கிங் நியூஸ்’ வருமென்று தோன்றவில்லை. நமக்குத் தெரிந்து, ஜனவரி 27 ஆம் தேதியிலிருந்து நடந்த நிகழ்வுகளிலும் அரிதான சந்திப்புகள், அதிரடி அறிவிப்புகள் எதுவும் அங்கே நிகழ்வதற்கு வாய்ப்புகளில்லை.    பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் நான்காண்டு சிறைத்தண்டனை முடிவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு, உடல்நிலை சரியில்லாமல் போனதால் ஜனவரி 20ஆம் தேதி, சிவாஜி நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார் சசிகலா. பிறகு விக்டோரியா தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்றுவந்தார். கடந்த 27 ஆம் தேதியன்று, அங்கே வைத்தே அவருக்கு விடுதலை அளித்தது, பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகம்.

தமிழ்நாட்டின் மீது ஒரு போர் நடக்கிறது.. சத்தம் போடாமல்... இன்னும் கண்விழிக்காவிடின்..?

.... 

 நீங்கள் எந்த சமுதாயத்தை சேர்ந்தவராக இருக்கலாம் நீங்க இஸ்லாமியராக இருக்கலாம் அகமுடையர்களாக இருக்கலாம் நாவிதர் சமுதாயமாக இருக்கலாம் முத்தரையராக இருக்கலாம் வன்னியராக இருக்கலாம் வண்ணார் சமுதாயத்தை சேர்ந்தவராக இருக்கலாம் பிரான்மலை கள்ளராக இருக்கலாம் யாராக வேண்டும் என்றாலும் இருகலாம் .இந்த வீடியோ உங்களுக்கு முக்கியமானது.

உங்கள் குடும்பத்தில உள்ள ஒருவரின் வாழ்க்கைக்கு நேரடியாக தொடர்புடையது  உங்கள் வருங்காலத்தையே தீர்மானிக்க கூடியது . இந்த இட ஒதுக்கீடு  எம் டேக் நீங்கள் படிக்க முடியாமல் போகிறது , எம்எஸ் சி படிக்கமுடியாமல் போகிறது ..  பையோ டெக்னோலஜி படிக்க முடியாமல் போகிறது . கெமிக்கல் பயோலொஜி படிக்க முடியாமல் போகிறது.இந்த படிப்புக்களை எல்லாம் பலருக்கும் தெரியாது முதல் தலைமுறை பெற்றோர்களுக்கு இதெல்லாம் தெரியாது . இதன் முக்கியத்துவம் எல்லாம் தெரியாது ... இந்த  காணொளி முழுவதும் கண்டிப்பாக பாருங்கள் 

எவ்வளவு பெரிய அக்கிரமம் கண்முன்னே நடக்கிறது . தயவு செய்து .இதை அதிக அளவில் பகிரங்க அன்பர்களே.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை வடக்கு கிழக்கு .. போராட்டம் வவுனியாவை வந்தடைந்தது

athiradi: பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை வடக்கு கிழக்கு சிவில் அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் நீதிக்கான கவனயீர்ப்பு பேரணியின் 3ஆம் நாளான இன்று வவுனியாவில் நிறைவு பெற்றுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கில் நடைபெறும் பௌத்த மயமாக்கல் நிலங்கள் அபகரிப்பு, கொரோனாவினால் மரணமடையும் முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்வதற்கு எதிர்ப்பு, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், மலையக மக்களின் ஆயிரம் ரூபாய் சம்பளப் பிரச்சினை அடங்கலாக அரச அடக்குமுறைகள் போன்ற விடயங்களை முன்னிறுத்தி அவற்றை கண்டித்தும் நீதி கோரியும் தீர்வு கேட்டும் இந்த போராட்டம் திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகின்றது

இன்று காலை 09.00 மணிக்கு திருகோணமலையில் ஆரம்பித்த பேரணி தென்னமரவடி கொக்கிளாய் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்தினை அடைந்திருந்தது. அங்கிருந்து புதுக்குடியிருப்புநோக்கி சென்று ஒட்டுசுட்டான் சந்தியை அடைந்து இரவு7 மணியளவில் நெடுங்கேணியை ௮டைந்து அங்கிருந்து புளியங்குளம் ஊடாக வவுனியாமாவட்டத்தை அடைந்து புதிய பேருந்துநிலையத்தில் வைத்து போராட்டம் நிறுத்திக்கொள்ளப்பட்டது.

வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

சீமான் இயங்குபவரல்ல. பார்ப்பனிய ஆதிக்க சக்திகளால் இயக்கப்படுபவர்... Surya Xavier

May be an image of 1 person and text that says 'சூர்யா சேவியர்'
Surya Xavier : சீமான் கருத்தியலை முற்றாக நிராகரிக்கிறேன். ஏன்?
சீமான் பாஜகவையும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பையும் விமர்சித்து தானே பேசுகிறார். பிறகு எப்படி பாஜக B டீம் என்கிறீர்கள் என்று கேள்வி எழுப்புவோர்கள் உண்டு. அரசியல் கட்சிகளை விமர்சிப்பதற்கும், அரசியலை விமர்சிப்பதற்குமான வேறுபாடுகள் உண்டு. இந்தக் கட்டுரையைப் படியுங்கள். நுட்பம் விளங்கும்.
முதலாளித்துவம் எப்பொழுதெல்லாம் சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை முற்றாக சூறையாடி, அவர்களை வாழ்வா சாவா என்ற நெருக்கடிக்குத் தள்ளுகின்றதோ, அப்பொழுதெல்லாம் முதலாளி வர்க்கம் தன்னை காப்பாற்றிக் கொள்ள தேசிய வெறியையும், இனவெறியையும் கைக்கொள்ளும் என்பதுதான் உலக வரலாறு.
எந்த ஒரு பாசிச சித்தாந்தமும் அதற்கான சமூகத் தேவை இல்லை என்றால், அது வெகுமக்களிடம் எடுபடாது என்பது பொதுவான கருத்தாக இருந்தாலும், அது துளிர்விட்டு முளைக்கும் போதே அதை சித்தாந்த ரீதியாக எதிர்கொள்ளத் தயாராக இல்லாமல் பலவீனமாக இருந்தோம் என்றால், பாசிசம் மெல்ல மெல்ல அதிருப்தியின் மீது படர்வதை நம்மால் தடுக்க முடியாமல் போய்விடும். இன்று அப்படியான ஒரு போக்குதான் தமிழகத்தில் சீமானின் வடிவில் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றது.

கேபி_பார்க் குடியிருப்பில் 864 வீடுகளை பயனாளிகளுக்கு ஒப்படைக்கும் பணிகள் தொடங்கியது.

G Selva :   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி..
கேபி_பார்க் குடியிருப்பில்  864 வீடுகளை சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு ஒப்படைக்கும் பணிகள் அதிகாரப் பூர்வமாக தொடங்கியது.
குடிசை மாற்று வாரிய அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர், மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எழும்பூர் பகுதி செயலாளர் கே முருகன் முன்னிலையில் குடிசை மாற்று வாரிய அடுக்கு மாடி வீடுகளில் யாருக்கு எந்த வீடு என்பதை முடிவெடுக்கும் குலுக்கல் இன்று (05-02-2021) தொடங்கியது.
தகரக் கொட்டகைகளிலும் சுடுகாட்டின் ஓரங்களிலும் வாழ வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்ட மக்களுக்காக, தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடி வந்தது.
மனு கொடுப்பது, தெருமுனை கூட்டம், உயர் நீதிமன்றத்தில் வழக்கு, அதிகாரிகள் சந்திப்பு, முற்றுகை போராட்டம், குடியேறும் விழா என இடைவிடாது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய இயக்கம் இன்று வெற்றியடைந்துளளது.

நடிகை காஞ்சனா 30 கோடி .. சென்னை இடத்தை திருப்பதி கோயிலுக்கு வழங்கினார் .ஏற்கனவே 80 கோடி வழங்கி உள்ளார்

Image result for நடிகை காஞ்சனா

nammatamizhagam.com : திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பத்மாவதி தாயாருக்குக் கோயில் கட்ட சென்னை ஜி.என்.செட்டி ரோட்டில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 30 கோடி ரூபாய் பெறுமானமான நடிகை காஞ்சனாவுக்கு சொந்தமான அந்த இடத்தை நன்கொடையாக அவர் வழங்கியுள்ளார்.

சென்னை தி.நகரில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ளது. இதேபோல திருப்பதி தேவஸ்தானம் பத்மாவதி தாயார் கோயிலையும் கட்டுவதற்கு முடிவு செய்தது. இதற்கான இடத்தைத் தேர்வு செய்யும் பணி நடந்து வந்தது.  தற்போது ஜி.என்.செட்டி ரோட்டில் கோயிலுக்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடம் நடிகை காஞ்சனாவுக்கு சொந்தமானதாகும். அதை அவர் நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்த நிலத்தின் மதிப்பு ரூ.30 கோடி ஆகும். மொத்தம் 14,880 சதுர அடியில் ரூ.6 கோடியே 85 லட்சம் செலவில் கோயில் கட்டப்பட உள்ளது. கட்டுமானங்கள் எப்படி அமைய வேண்டும் என்று ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டு இருந்தது. ராஜகோபுரம், பிராகாரம், முகாம் மண்டபம் என கோயிலை கட்ட இருக்கிறார்கள்.

எடப்பாடி- ஓ.பன்னீர்: என்ன சொல்கிறார் சசிகலா?

எடப்பாடி- ஓ.பன்னீர்: என்ன சொல்கிறார் சசிகலா?
minnnambalam :  ஏழரைக்குப் பின்புதான் எட்டு வரும்; ஆனால் எட்டுக்குப் பின்தான், தமிழகத்தில் ஏழரை ஆரம்பிக்கப் போகிறது. நான்காண்டு சிறைவாசம், பத்து நாள்கள் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை, ஏழு நாள்கள் தனிமைக்குப் பின்பு வரும் எட்டாம் தேதியன்று தமிழகத்துக்கு வரவிருக்கிறார் சசிகலா. அன்றைக்கு கர்நாடகா எல்லையிலிருந்து சென்னை வரையிலும் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்படவிருப்பதாக டிடிவி தினகரன் சொல்லியிருக்கிறார். சசிகலாவுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் சுவரொட்டிகள் தெறிக்கின்றன.அவர் வந்த காரில் அதிமுக கொடி இருந்தது தொடர்பாக, தமிழக காவல்துறை தலைவரிடமே அமைச்சர்களே நேரில் சென்று புகார் கொடுத்திருக்கின்றனர். தமிழக எல்லைக்குள் அதிமுக கொடி கட்டிய காரில் வந்தால், சசிகலா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று வன்முகம் காட்டியிருக்கிறார் தமிழகத்தின் சட்டத்துறை அமைச்சர் சண்முகம். கொடியை மட்டுமல்ல; கரைவேட்டி கட்டி வருகிறோம்; முடிந்தால் அவிழ்த்துப் பாருங்கள் என்று கர்நாடகா செய்தித் தொலைக்காட்சிகளில் சீறுகிறார்கள் சின்னம்மா பேரவையினர்.

தேர்தல் என்றதும், திடீர் ஞானோதயம் வந்து நான் சொன்னதைச் செய்த முதல்வர் பழனிசாமிக்கு நன்றி”: மு.க.ஸ்டாலின்

kalaignarseithigal.com : தனது அறிவிப்பைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்ட எடப்பாடி பழனிசாமியின் கடைசிநேர நாடகங்களை நம்பி மக்கள் ஏமாற மாட்டார்கள் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. “விவசாயிகளின் வாழ்வு செழித்திடும் வகையில், தலைவர் கலைஞர் வழிநின்று, விவசாயிகள் கடனை ரத்து செய்வதற்கான உத்தரவை திராவிட முன்னேற்றக் கழக அரசு வெளியிடும்” என்று உறுதிபடத் தெரிவித்து வருகிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

“தேர்தல் என்றதும், திடீர் ஞானோதயம் வந்து நான் சொன்னதைச் செய்த முதல்வர் பழனிசாமிக்கு நன்றி”: மு.க.ஸ்டாலின்
தி.மு.க தலைவரின் இந்த அறிவிப்புக்கு விவசாயப் பெருங்குடி மக்களிடையே எழுந்துள்ள பேராதரவால் அச்சமடைந்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர அவசரமாக இந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கடன் ரத்து குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

இந்நிலையில், தனது அறிவிப்பைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்ட எடப்பாடி பழனிசாமியின் கடைசிநேர நாடகங்களை நம்பி மக்கள் ஏமாற மாட்டார்கள் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தும், அதை எதிர்த்து, “கூட்டுறவுக் கடன்களைத் தள்ளுபடி செய்ய முடியாது" என்று உச்சநீதிமன்றத்தில் வாதிட்டு - தடை உத்தரவு பெற்ற முதலமைச்சர் பழனிசாமி, தேர்தல் என்றதும், பதவி பறிபோகப் போகிறதே என்ற பயத்திலும் பதற்றத்திலும், திடீர் ஞானோதயம் பிறந்து, விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்திருக்கிறார்.

சீனாவில் தயாரித்த ரெயில்களை இயக்க மாட்டோம் - இலங்கை ரெயில் டிரைவர்கள் முடிவு

NEW DELHI: In a major setback for China’s infrastructure footprints in Sri Lanka, local engine drivers have decided to boycott operating trains with railway carriages made in China. The Sri Lankan Locomotive Engine Operators' Union (LEOU) Secretary Indika Dodangoda recently said that railway carriages made in China pose a threat to the safety of the passengers. economictimes.indiatimes.com malaimalar :கொழும்பு: இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் சீனா வலுவாக காலூன்றுவதில் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக பல்வேறு உள்கட்டமைப்பு பணிகளை செய்து வருகிறது. சீனாவின் இந்த முயற்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், இலங்கை ரெயில் டிரைவர்களின் முடிவு அமைந்துள்ளது. இலங்கையின் ரெயில் என்ஜின் டிரைவர்கள் சங்க செயலாளர் இந்திகா தொடங்கொட சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சீனாவில் தயாரிக்கப்பட்ட ரெயில் வண்டிகள், பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. சீன ரெயில் பெட்டிகளில் பிரேக்குகள் கோளாறாக உள்ளன. பிரேக்குகளை அழுத்தும்போது, நிறுத்தவேண்டிய இடத்தை விட கூடுதல் தூரம் செல்கின்றன. சீனாவில் தயாரிக்கப்பட்ட ரெயில் வண்டிகள் உள்ளூர் தரத்தை பூர்த்தி செய்வதை உறுதி செய்ய முறையாக பராமரிக்கப்படவேண்டும். 

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு
maalaimalar : கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,410 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை:முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்பதாவது:- ; விவசாயிகளுக்கு துயர் ஏற்படும்போதெல்லாம், அம்மா அரசு உதவிக்கரம் நீட்டி, அவர்களைக் காப்பதில் முன்னிலையில் இருந்து வருகின்றது. அதனால்தான், 2016 ஆம் ஆண்டு அம்மா மீண்டும் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற உடன், 31.3.2016 வரை நிலுவையில் இருந்த 5,318.73 கோடி ரூபாய் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தார். இதனால் 12.02 லட்சம் சிறு, குறு விவசாயிகள் பயன்பெற்றனர்.

நடுரோட்டில் நட்டு வைத்த ஆணிகளை.. ஒவ்வொன்றாக "பிடுங்கும்" டெல்லி போலீஸ்!

சர்ச்சை

tamil.oneindia.com : சென்னை: வடிவேலு ஒரு படத்தில் சொல்வாரே, "நீ புடுங்கிறது பூரா தேவையில்லாத ஆணிதான்"..ன்னு.. அதுதான் நினைவுக்கு வருகிறது
டெல்லி போலீசாரின் தற்போதைய செயலை பார்த்தால்.. காசிப்பூரில் நடுரோட்டில் நட்டு வைத்த ஆணிகளை இப்போது ஒவ்வொன்றாக பிடுங்கி கொண்டிருக்கிறார்களாம்..!
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது...
விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.. அதேபோல, வேளாண் சட்டங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், குடியரசுத் தலைவரின் உரையையும் புறக்கணித்தன.
அளவுக்கு அதிகமான குளிர், கொட்டி தீர்க்கும் உறைபனியில் விவசாயிகள் போராட்டத்தை உறுதியுடன் மேற்கொண்டு வருகின்றனர்.. அதிலும் பெரும்பாலும் வயசான தாத்தாக்கள்தான் இரும்பு மனசுடன் டெல்லி நுழைவாயிலில் மிரட்டலாக போராட்டத்தில் உட்கார்ந்துள்ளனர்.
போராட்டம் இந்த 3 மாசமாகவே சரியான வழியில், சாத்வீகமான முறையில் சென்று கொண்டிருந்த போராட்டம், குடியரசு தினத்தன்று வன்முறை சம்பவத்தால் திசை திருப்பப்பட்டுவிட்டது.. எனினும் தங்கள் போராட்டத்தை கைவிட விரும்பாத விவசாயிகள், டெல்லியின் காசிப்பூர், திக்ரி, சிங்கு உள்ளிட்ட எல்லைகளில் குவிந்துள்ளனர்.

கோயம்பேடு பாஷ்யம் மெட்ரோ நிலையம்: திடீர் பெயர் சூட்டல்- எதிர்ப்பு!

கோயம்பேடு  பாஷ்யம் மெட்ரோ நிலையம்: திடீர் பெயர் சூட்டல்- எதிர்ப்பு!
minnambalam : சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்துக்கு, ‘பாஷ்யம் மெட்ரோ’என்று திடீரென பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆவேசமாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.
சென்னை மாநகர மெட்ரோவின் தலைமை அலுவலகம், கோயம்பேட்டில் அமைந்து இருக்கின்றது. அங்கே இருக்கின்ற பாலத்திற்கு, கடந்த சில நாள்களாக பெயிண்ட் அடித்தார்கள்.
திடீரென நேற்று, ‘பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ’ என, புதிய பெயரைச் சூட்டி எழுதி இருக்கின்றார்கள். இதுகுறித்து, எந்தவிதமான முன்அறிவிப்பையும், மெட்ரோ நிர்வாகம் வெளியிடவில்லை.
இந்தப் பெயர் மாற்றத்தை, வன்மையாகக் கண்டிக்கின்றேன்  என்று குறிப்பிட்டுள்ள வைகோ, “யார் அந்த பாஷ்யம்? கோயம்பேடு மெட்ரோ நிலையத்தை விலைக்கு வாங்கி இருக்கின்றாரா? அது நிறுவனமா? அல்லது தனி ஒருவரா? அல்லது பராமரிப்புப் பணிகளுக்கான ஒப்பந்தம் பெற்று இருக்கின்றாரா?

ரஜினிக்கு பதிலாக தினகரன் மீது சவாரி செய்ய பாஜக மும்மரம்

Ka Deena : · ரஜினி வர மறுக்கிறார் என்று தெரிந்தவுடன் யாரை முதலமைச்சர் ஆகவிடாமல் கைது செய்து சிறையல் அடைத்தார்களோ அவர்களின் உதவியையே நாடியுள்ளது மத்திய பாஜக. தினகரன் டில்லிக்கு தனி விமானத்தில் வரவைக்கப்பட்டு வழங்கப்பட்ட உத்தரவுகளை நிறைவேற்ற ஆரம்பித்திருக்கிறார். டில்லி எஜமானர்களிடம் அடிமை சாசனத்தில் கையெழுத்திட்டு வந்திருப்பார் தினகரன்.. அந்த நம்பிக்கையை காக்க திமுக-வை வீழ்த்துவதே நோக்கம் என்ற புள்ளியில் இணைய தன்னுடைய மூத்த இரு அடிமைகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்..
சந்திப்புகள் நிகழும். ஒன்றினைவார்கள். ஏனென்றால் அடிமைகளின் சுபாவம் ஒன்று தான். சுயலாபத்திற்காக சுயமரியாதை இழந்து மண்டிபோடுவது.. அது இவர்களுக்கு ஆரம்பம் முதலே கைதேர்ந்த கலை.
உடனே அந்த பக்கமிருந்து மாலன்களும், சுமந்த்களும் கூடவே முருகன்களும் இணைப்புக்கு பின்னர் அதிமுக வீழ்த்த முடியாத கட்சியாக உருவெடுத்துள்ளது என்று வாசிப்பார்கள். பத்திரிக்கை துறையினரும் நடுநிலையாளர்களும் அதிமுகவின் இணைப்பு ராஜதந்திரம் என்றெல்லாம் பேசி தேர்தலில் திமுகவின் வெற்றி கடினமானது என்ற தோற்றத்தை ஊதுகுழலாகி விவாதம் நடத்துவார்கள்.
இதெல்லாம் சாத்தியமில்லை.!! திமுகவின் வெற்றி என்பது உறுதிசெய்யப்பட்ட ஒன்று.!! அதிமுக மீதமிருப்பவர்களையும் வேண்டுமானால் கூட்டிக்கொண்டு வரட்டும்.!!

விவசாயிகளுக்கு துணை நிற்போம்! விவசாயிகளை காப்போம்!!

May be an image of text
ஆலஞ்சியார் : · எங்கள் கலாச்சாரம் உயர்ந்தது, பண்பாடு செழுமையானது என்றெல்லாம் கூக்குரல் எழுப்புகிற யாருக்கும் நான் சொல்கிற பதில் இதுதான் நீதியோடும், சக உயிர்களின் மீது மதிப்போடும் வாழ்கிறவனே இந்த உலகின் உயர் பண்பாட்டைக் கொண்டவன், அவனே நாகரீக உலகின் சிற்பி.. 2013 ல் சர்வதேச விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றபோது சச்சின் எழுதியது . இன்று பன்னாட்டு சமூகம் விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்துக்களை சொல்லும் போது இந்திய இறையாண்மைக்குள் தலையிட கூடாதென்கிறார் .. 

 90 வருட காத்திருப்பிற்கு பின் பார்பனிய பனியா கூட்டம் (ஆர்எஸ்எஸ்)அதிகாரத்திற்கு வந்த பிறகு தங்கள் சுயரூபத்தை வெளிபடுத்துகிறார்கள்.. கிரிக்கெட் கூட தன் புகழுக்காக விளையாடியவர் தான் 50ம் 100ம் எடுக்க வேண்டுமென்பதற்காக நிறைய இழப்பை தந்து நாடு (அணி)தோல்வியடைந்தாலும் பரவாயில்லை என்ற மனபான்மை கொண்டவர்தான் ..இவருக்கு வழங்கபட்ட வாய்ப்புகள் பிறருக்கு வழங்கபட்டிருந்தால் நிறைய வெற்றிகளை பெற்றிருக்கலாம் .. எப்போதும் தனக்காகவே சிந்தித்தவர் நாடுபற்றியெல்லாம் கவலை கொள்ளாதவர் இப்போது குரல் கொடுக்கிறார்

வியாழன், 4 பிப்ரவரி, 2021

காங். 15; இடதுசாரிகள் 9; மதிமுக- 2; விசிக- 2; மு.லீக்-2.. கறாராகவே சொன்ன திமுக.. கலகம் பிறக்குமோ?

Mathivanan Maran - tamil.oneindia.com : சென்னை: சட்டசபை தேர்தலில் வலிமையான கூட்டணியாக இருந்து வரும் திமுக அணியில் தொகுதி பங்கீடு விவகாரம்தான் மிக பெரிய தலைவலியாக உருவெடுத்திருக்கிறது.             சட்டசபை தேர்தலில் எப்படியும் வெற்றி உறுதி என்கிற பெரியண்ணன் மனோபாவத்தில் திமுக இருக்கிறது. மக்கள் கிராமசபை கூட்டங்களை நடத்தி வந்த திமுக தலைவர் ஸ்டாலின், இப்போது முதல்வர் என்கிற தோரணையிலேயே பேசிவருகிறார். இந்த ஓவர் கான்பிடன்ஸ் அணுகுமுறையை அப்படியே கூட்டணி கட்சிகளிடம் திமுக காட்டி வருகிறது.              திமுக ஆட்சியில் அமையும்; நமது கட்சியிலும் சில பல எம்.எல்.ஏக்கள் உருவாக வாய்ப்பு கிடைத்துவிட்டது என நினைத்து கொண்டிருந்த அத்தனை கூட்டணி கட்சிகளின் கனவிலும் லாரி லாரியாக மண்ணை அள்ளி போட்டு வருகிறது திமுக...... 

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் தொடக்கம் முதலே தொகுதி பங்கீடு விவகாரத்தில் ஒருவித கமுக்கத்துடன் இருந்து வருகிறது. இருந்தபோதும் குறைந்தபட்சம் 25 தொகுதிகளாவது கிடைக்க வாய்ப்பிருக்கிறது என நம்பிக் கொண்டிருக்கிறது. இருப்பினும் திமுக தரப்பு மிக அதிகபட்சமாக 15 தொகுதிகள்தான் தர முடியும் என கூறிவிட்டது. ..... 

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலையை ஆளுநர் நிராகரித்தார்

. Vishnupriya R - /tamil.oneindia.com : சென்னை: பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க வேண்டும் என தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நிராகரித்துள்ளார். ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக அரசியலமைப்பு சட்டம் 161 இன்படி தமிழக சட்டசபையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..

இந்த தீர்மானம் மீது ஆளுநர் எந்தவித முடிவையும் எடுக்காமல் இருந்தார். இந்த நிலையில் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நிராகரித்துள்ளார். மேலும் இந்த விடுதலை தொடர்பான முடிவை எடுக்க குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் இருப்பதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் தமிழக எம்பிக்கள் தடுத்து நிறுத்தம் விவசாயிகளை சந்திக்க அனுமதி மறுப்பு BBC

டெல்லியில் இருந்து உத்தர பிரதேசம் செல்லும் நெடுஞ்சாலையை இணைக்கும் காஸிபூர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை சந்திக்க வியாழக்கிழமை சென்ற தமிழக எம்.பி.க்கள் உள்ளிட்ட எதிர்கட்சி எம்.பிக்களை டெல்லி காவல்துறையினர் தடுத்து நிறுத்தினார்கள். இதனால், காவல்துறையினருடன் எம்.பி.க்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உத்தர பிரதேசத்தில் இருந்து டெல்லிக்குள் நுழைய நகர காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளதால், டெல்லி எல்லை பகுதியான காஸிபூரில் உள்ள நெடுஞ்சாலையின் ஒரு பாதையை வழிமறித்துள்ள விவசாயிகள், அங்கு தங்களுடைய டிராக்டர்களை நிறுத்தியும் கூடாரங்களை போட்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து வரும் அவர்கள், அங்கிருந்தவாறு ஊடகங்களை சந்தித்து தங்களுடைய குரல்களை ஒலித்து வருகிறார்கள்.

வழக்கு தொடர்ந்தாலும் விவசாயிகள் போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவு: கிரேட்டா தன்பெர்க்

வழக்கு தொடர்ந்தாலும் விவசாயிகள் போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவு: கிரேட்டா தன்பெர்க்

May be an image of outdoors
ரோட்ல ஆணியாடா அடிக்கிறீங்க ஆணி..!!!???

Greta Thunberg @GretaThunberg I still #StandWithFarmers and support their peaceful protest. No amount of hate, threats or violations of human rights will ever change that. #FarmersProtest 5:59 AM · Feb 4, 2021        maalaimalar : சுவீடனின் சுற்றுக்சூழல் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், தொடர்ந்து ஆதரவு தெரிவிப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.இந்திய அரசு அமல்படுத்தியுள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதுமுள்ள விவாசயிகள் ஒன்றாக இணைந்து தலைநகர் டெல்லியின் எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டெல்லிக்குள் விவசாயிகள் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக பல்வேறு அடுக்கு தடைகளை டெல்லி போலீசார் ஏற்படுத்ததியுள்ளனர். பேரிகார்கடுகளை வரிசையான வைத்து சாலைகளில் ஆணிகளை புதைத்து வைத்துள்ளனர். மேலும், இணையதள சேவையை முடக்கியுள்ளனர். மின்சாரம் மற்றும் கழிப்பிட வசதிகளையும் துண்டித்துள்ளனர்.

“அண்ணே.. ப்ளீஸ் அடிக்காதீங்க” : இளைஞரைக் கட்டி வைத்துத் தாக்கிய கும்பல்!

minnambalam.com : தஞ்சையில் கூலித் தொழிலாளியை மரத்தில் கட்டிவைத்து பிரம்பால் கடுமையாகத் தாக்கி துன்புறுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி கண்டனங்களைப் பெற்று வருகிறது.   தஞ்சாவூர் அருகே பூண்டி கிராமம், மேலத்தெருவில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். இவரது மகன் ராகுல். 22 வயதான ராகுல் கூலி வேலைக்குச் செல்வதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பணத்தைத் திருடி விட்டதாக ராகுலை 5 பேர் கொண்ட கும்பல் கண்களைக் கட்டி கடுமையாகத் தாக்கும் வீடியோ இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

முதலில் முட்டி போட வைத்து அவரது கண்ணைத் துண்டால் இறுக்கிக் கட்டி அங்கிருந்த மரத்தின் அருகே அந்த கும்பல் அழைத்துச் செல்கிறது. அங்கு இரண்டு பேர் தனித்தனியாக ராகுலின் கைகளை இழுத்து பிடித்துக் கொள்கின்றனர். பின்னர் ராகுலின் நெஞ்சு பகுதியினை மரத்தில் வைத்து அழுத்துகின்றனர்.

பெண்கள் பிள்ளை வரம் வேண்டி கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு வாயால் மண் சோறு.. திருவண்ணாமலை

May be an image of one or more people
Dr K Subashini : திருவண்ணாமலை அருகே உள்ள பரதேசி ஆறுமுகசாமி கோவிலில் இந்தப் பூசை நடந்திருக்கின்றது. பிள்ளை இல்லாத பெண்கள் பிள்ளை வரம் வேண்டி கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு வாயால் மண் சோறு சாப்பிடும் பூசை.
இந்தக் காலத்தில் இப்படி ஒரு மடமையா என யோசிக்க வைக்கின்றது.
அவர்கள் இந்த அளவிற்கு தம்மை தாழ்த்திக் கொண்டு ஒரு பொது இடத்தில் விலங்கு போல தம்மை பாவித்து இப்படி செய்வது வழிபாடா?
மண் சோறு சாப்பிட்டால் பிள்ளை பிறக்குமா? கொஞ்சம் தனக்கிருக்கும் மூளையைப் பயன்படுத்தி யோசிக்க வேண்டாமா?
இதற்குப் பின்னனியில் இருப்பது குடும்ப சூழல் தரும் ஒரு அழுத்தம் என்பது மறுக்க முடியாத உண்மை. ஒரு பெண் குழந்தை பெறவில்லை என்றால் மலடி என்பதும்..   ஏதோ பெண் எனும் பிறப்பிற்கு குழந்தை பெற்றால் தான் பெண் என்ற அங்கீகாரமே கிடைக்கும் என்ற வகையில் சூழ்நிலையைக் கெட்டிக்காரத்தனமாக உருவாக்கி வைத்திருக்கும் சூழலில், பெண்கள் இயல்பாக எப்படியும் தம்மை தாழ்மைப் படுத்திக் கொண்டு இப்படி பொது இடத்தில் மண்டி போட்டு கைகளை, ஏதோ தவறு செய்து விட்டவர்களுக்கு தண்டனை கொடுப்பது போல கட்டிக் கொண்டு வாயால் மண் சோறு சாப்பிடுவது..
எவ்வளவு பேர் நடந்திருப்பார்கள். .

திமுக மாநாட்டுக்கு நிலம் கொடுத்த அதிமுக விவசாயி! திமுக மாநாட்டுக்கு நிலம் கொடுத்த அதிமுக விவசாயி!

minnambalam : வரும் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி திமுக நடத்தும் பிரம்மாண்ட மாநாடு பிப்ரவரி மாதம் மூன்றாவது வாரத்தில் திருச்சி அருகே சிறுகனூரில் நடக்க இருக்கிறது.இதற்காக திமுகவின் முதன்மைச் செயலாளரும் திருச்சி மாவட்டத்தின் மூத்த திமுக தலைவருமான கே.என். நேரு தீவிரமான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார். திருச்சிக்கும் பெரம்பலூருக்கும் இடையே உள்ள சிறுகனூரில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி மாநாடு ஏற்பாடு செய்யப்படுவதால் தினந்தோறும் சென்று மாநாட்டுப் பணிகளைப் பார்வையிடுகிறார் நேரு. ஒவ்வொரு நாளும் மாநாட்டுப் பணிகள் பற்றி திமுக தலைவர் ஸ்டாலினிடமும் பகிர்ந்துகொள்கிறார்.

கார் உரிமையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த வாகன அழிப்பு திட்டம்.. உண்மையில் யாருக்கு, என்ன பாதிப்பு..?

பழைய வாகனங்களுக்கு மூடவிழா
Prasanna Venkatesh - tamil.goodreturns.in :2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில், அதிகளவிலான வர்த்தகப் பாதிப்புகளை எதிர்கொண்ட ஆட்டொமொபைல் துறைக்கு நேரடியாக எவ்விதமான தளர்வுகளையும் மற்றும் சலுகைகளையும் மத்திய நிதியமைச்சகம் அறிவிக்கவில்லை என்றாலும், Vehicle scrappage policy மற்றும் இதர அறிவிப்புகள் மூலம் மறைமுகமாக ஆட்டோமொபைல் துறைக்குச் சாதகமான சலுகைகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு. பட்ஜெட் அறிக்கையில் பெரும்பாலான மக்களின் கவனத்தை ஈர்த்த புதிய Vehicle scrappage policy மூலம் பல லட்ச கார் உரிமையாளர்களை நேரடியாகப் பாதிப்பது மட்டும் அல்லாமல் புதிய கார்களின் விலையில் அதிகளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தன்னார்வ வாகன அழிப்புத் திட்டம் ..... இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் பழைய வாகனங்களைப் புழக்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு தன்னார்வ வாகன அழிப்புத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இது இந்தியா ஆட்டோமொபைல் துறைக்கு மறைமுகமாகப் பல சாதகமான வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கித்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மியான்மரில் பேஸ்புக் சேவைகளுக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவு

.dailythanthi.com : யாங்கூன், தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கட்சி மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த நாட்டு ராணுவம் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டியதோடு, தேர்தல் முடிவுகளை ஏற்கவும் மறுத்தது. ஆனால் ராணுவத்தின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றவை என கூறி தேர்தல் ஆணையம் அதை நிராகரித்தது. இந்த விவகாரத்தில் மியான்மர் அரசுக்கும் அந்த நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் ராணுவம் அதிரடியாக ஆட்சியை கைப்பற்றியது. நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை ராணுவம் கைது செய்து சிறை வைத்துள்ளது.

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த அமெரிக்க பாப் பாடகி ரிஹானா:

tamil.indianexpress.com : வெளிநாட்டினர் சிலர் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக வெளியிட்டுள்ள கருத்துக்களுக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் தனது கண்டனத்தைப் பதிவு செய்தது. இதுதொடர்பாக வெளிவிவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் ” முழு  கலந்துரையாடலுக்குப் பிறகு புதிய வேளாண் சீர்திருத்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டங்கள் விளைபொருட்களுக்கு உரிய விலையை நிர்ணயம் செய்வதுடன், சுற்றுச்சூழல் ரீதியாக  நிலையான வளர்ச்சியை  உறுதி செய்கிறது” என்று தெரிவித்தது.

மிகச் சிறிய எண்ணிக்கையிலான விவசாயிகள் மட்டுமே  வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், போராடும் விவசாயிகளின் உணர்வுகளை மதித்து மத்திய அரசு தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் முன்னெடுத்துள்ளது. மத்திய அமைச்சர்களை உள்ளடக்கி  விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. பதினொரு சுற்று பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளன என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

கொலைகார ஓம்சக்தியும் கொலை கலாச்சார ஊடகங்களும் ! மதுரை வஞ்சிமலர் கொலை!

May be an image of 1 person and text that says 'தாயின் தகாத உறவால் நேர்ந்த கொடூரம்..! அம்மிக்கல்லை போட்டு கொன்ற மகன்..! Polimer NDI NEWS LINE DD MURDER'

மதுரையில் தனது தாயின் தலைமீது அம்மிக்கல்லை போட்டு கொன்ற மாணவன் பெயர் ஓம் சக்தி! இவனது தாய் தந்தை பிரிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. தாய் கூலி வேலை செய்து மகனை ( பிஎஸ்சி தகவல் தொழில் நுட்பம்) படிப்பிக்கிறார். இது மகன் ஓம்சக்திக்கு பிடிக்கவில்லையாம் அடிக்கடி இந்த உறவை விட்டு விடும் படி தகராறு பண்ணியிருக்கிறான்.
இறுதியில் ஒருநாள் இரவு நித்திரையில் இருந்த தாயின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்றுவிட்டான்.
அசல் தாலிபான் கலாச்சாரம் . அசல் சீரியல் கில்லர்களுக்கே உரிய கொடூரம்.
தாய் காதலிக்க கூடாது என்று இவனுக்கு யார் கற்று கொடுத்தது?
வாழ்நாள் முழுவதும் கூலி வேலை செய்து இவனுக்காகவே அவர் தனது வாழ்நாளை தண்டனையாக கழிக்கவேண்டும் என்று இவன் எப்படி கருதலாம்
இவனை விட மோசமான மனோநிலையில் உள்ளன சில ஊடகங்கள் .
இந்த செய்தியை கூறும் சில தரம் கெட்ட ஊடகங்கள் , தாயை கொன்ற மகன் என்பதற்கு பதிலாக , தகாத உறவில் இருந்த தாயை கொன்ற மாணவன் என்று செய்தியை வெளியிட்டு உள்ளன .
எவ்வளவு மோசமான தாலிபான் யுகத்தில் நாம் நுழைந்து கொண்டிருக்கிறோம்?
இந்துத்வா மட்டுமல்ல இந்த விடயத்தில் தமிழ் தேசிய கலாச்சார காவலர்களும் இப்படிப்பட்ட தாலிபான்களாகதான் தற்போது உருமாறி கொண்டு வருகிறார்கள்
இந்த மனித நாகரிக சீரழிவுக்கு பல திரைப்படங்கள் காரணமாக இருந்திருக்கின்றன..
இப்போதும் இது போன்ற சீரழிவுகளைதான் தமிழ் திரைப்படங்கள் பெரிதும் வளர்க்கின்றன
G Shanmugakani : பெண்ணின் கற்பை அவள் யோனியில் வைத்த கயவர்களைத்தான் காரி உமிழவேண்டும். அப்பெண்மணி கணவன் இறந்த பின்புதான் ஒரு ஆடவனைக் காதலித்திருக்கிறார். அதில் தவறென்ன இருக்கிறது? பெண் இறந்து ஆண் வேறு பெண்ணிடம் தொடர்பு வைத்துக்கொண்டால் அதை இச்சமூகம் அங்கீகரிக்கிறது. இந்நிலை எப்போது மாறும்?

புதன், 3 பிப்ரவரி, 2021

தோழர் டொமினிக் ஜீவா!.. ஜாதியால் ஐந்தாம் வகுப்போடு நிறுத்திக்கொண்டவர் . காதலையும் துறந்தவர்

Tholar - Opslag | Facebook
Sugan Paris : டொமினிக் ஜீவா குறித்து எழுதும்போது அவரோடு அவரது சாதியைப் குறித்துப் பேசுவதாக இரண்டு முகநூல் நண்பர்கள் விசனம் தெரிவிக்கிறார்கள்.
அவர்கள் நல்லெண்ணம் நல்லது.
குறிப்பாக இருவரும் ஆதிக்க சாதிப் பின்னணியில் இருந்து வந்தவர்கள். சாதி அவமானத்தை சந்தித்திருக்க அவர்களுக்கு வாய்ப்பில்லை.
அவர்கள் சாதியால் கிடைத்த அனுகூலங்களை அவர்கள் ஒன்றும் மறுத்து வாழ்ந்துவிடவில்லை.
ஜீவா சாதி அவமான நெடுக்கடிகளாலேயே ஐந்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்திக்கொண்டவர்.
சாதியின் காரணமாக தன் காதல் வாழ்வை துறந்தவர். தன் காதலியுடன் சேர்ந்து வாழ்க்கை தொடங்கப்போகும் அந்த நாளில் தன் காதலிக்காகக் காத்திருக்க காதலியின் தாயார் தாங்கள் தூக்கில் தொங்கவேண்டிவரும் என்ற இறைஞ்சலைக் கேட்டு தன் காதலை தீய்த்தவர்.
ஒரு சாதிய சமூகத்தில் இது மிக மிக இயல்பானது. மீறி ஒருசில விதிவிலக்குகள் உண்டு.    கௌரவக் கொலை, சாதி வஞ்சக்கொலை வரை இவை இயல்பானவை. இத்தகு நெருக்கடிகளை அவர்கள் உணர்ந்தறிய வாய்ப்பில்லை.

தனிமைபட்ட ராமதாஸ்! பள்ளத்தில் வீழ்ந்த பாமக!

தனிமைபட்ட ராமதாஸ்! தள்ளாடும் பாமக!
சாவித்திரி கண்ணன் : ஜெயிக்கிற கட்சியாகப் பார்த்து தேர்தல் நேரத்தில் கூட்டணி வைத்து வந்த ராமதாசால் இந்த முறை திமுக கூட்டணிக்குள் நுழைய முடியவில்லை! பாமகவை உறுதியாக சேர்க்கமாட்டோம் என திமுக திட்டவட்டமாக முடிவெடுத்துவிட்டது! பேச்சுவார்த்தைக்கு கூட தயாராக இல்லை என பாமகவிற்கு உணர்த்தப்பட்டுவிட்டது! இது எந்த தேர்தல் காலத்திலும் பாமக பார்த்திராத அதிர்ச்சியாகும்! ராமதாஸ் நம் கூட்டணிக்கு வருவதால் பலன் கிடையாது என்பது மட்டுமல்ல, பாதகங்களும் அதிகம் என திமுக கணித்துள்ளதாம்! கடந்த பத்தாண்டுகளாக பாமக எந்தக் கூட்டணியில் இருந்தாலும் அந்தக் கூட்டணி தோற்பது என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது! அந்த அளவுக்கு சொந்த சாதியிலும் அவருக்கு எதிர்ப்பு தீயாக வளர்ந்துள்ளது! மற்ற சமூகங்களிலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது!
ராமதாஸ் என்ற பிம்பம் இன்றைய தினம் சந்தர்ப்பவாத – பிழைப்புவாத - அரசியலின் அடையாளமாகிவிட்டது!

மதுரை.. தாயின் தலையில் அம்மிக்கல்லை போட்டுக்கொன்ற மகன் .. (பெயர் ஓம்சக்தி)

Madurai college student arrested in his mothers case

nakkheerannewseditor">நக்கீரன் செய்திப்பிரிவு : மதுரை மாவட்டம், செல்லூர் அருகே அமைந்துள்ள மீனாம்பாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி வஞ்சிமலர் (வயது 49). இவர்களுக்கு ஓம்சக்தி (19) என்ற மகன் உள்ளார்.
  இவர் மதுரை அழகர் கோவில் ரோட்டில் உள்ள கல்லூரியில் பி.எஸ்சி. (தகவல் தொழில்நுட்பம்) படித்து வருகிறார்.
  ஓம்சக்திக்கு 3 வயது இருக்கும்போது கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் வஞ்சிமலருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து ஆகியுள்ளது. அதன்பின் அவர் தனி ஆளாகக் கூலி வேலைக்குச் சென்று மகனை வளர்த்து, கல்லூரியில் படிக்க வைத்துவந்தார்.இந்த நிலையில், வஞ்சிமலருக்கு சமையல்காரர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனை ஓம்சக்தி கண்டித்துள்ளார். ஆனாலும் வஞ்சிமலர் கேட்கவில்லை.

தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள் இன்று!

அண்ணா அரியணை ஏறினார்! செக்ரட்டரியேட் 'தலைமைச் செயலகம்' ஆனது. சட்டசபை 'சட்டமன்றம்' ஆனது. பார்லிமென்ட் 'நாடாளுமன்றம்' ஆனது. கோர்ட் 'நீதிமன்றம்' ஆனது. 'மன்றம்' என்ற சொல்லையே மீட்டெடுத்தவர் அண்ணா! அரசு ஏடுகளில், ஸ்ரீ - ஸ்ரீமதி - குமாரி மறைந்து 'திரு - திருமதி - செல்வி' வந்தனர். மெட்ராஸ் ஸ்டேட் 'தமிழ்நாடு' ஆனது ! தமிழ் தலைநிமிர்ந்தது !! CNA is our DNA  

Anna Mahizhnan : தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய பேரறிஞர்



அண்ணாவின் நினைவு நாள் இன்று! தமிழ் மொழியின் வளப்பத்தையும் சிறப்பையும், தமிழர்களின் வரலாற்றையும் பண்பாட்டையும், தமிழறிஞர்களின் புத்தகங்களைப் படித்து அறிந்து கொண்டவர்களை விட, பேரறிஞர் அண்ணாவின் சீரிய எழுத்துக்களாலும், ஆற்றொழுக்கான சொற்பொழிவுகளாலும் அறிந்து கொண்ட சாமானியத் தமிழர்கள் பல லட்சம் பேர். அறிஞர் என்றும் பேரறிஞர் என்றும் அண்ணாவை அழைத்ததற்குக் காரணம் அவரது அறிவாற்றல் மட்டுமல்ல, எதையும் எளிதில் உள்வாங்கிக் கொள்ளும் அவருடைய பேராற்றலும் ஆகும். அண்ணா அவர்கள் படிக்கும் பொழுது, அது தமிழாக இருந்தாலும், ஆங்கிலமாக இருந்தாலும் பத்தி, பத்தியாகப் படிப்பார் என்பார்கள். விவேகாநந்தர் பக்கம் பக்கமாகப் படிப்பார் என்பார்கள். அந்த அளவிற்குக் கூரிய அறிவுத்திறன் வாய்க்கப் பெற்றவர் பேரறிஞர் அண்ணா.
அண்ணா அவர்கள் உலகத்தமிழ் மாநாட்டில் பேசியதைக் கேட்டிருக்கின்றேன். ஆனால், அன்று அண்ணா என்ன பேசினார் என்பதை உள்வாங்கிக் கொள்ளும் அறிவோ, வயதோ எனக்கு அப்பொழுது இல்லை. பின்னாளில், அண்ணாவின் எழுத்துக்களையும், பேச்சுக்களயும் படித்ததற்குப் பிறகும், அவரைப் பற்றி மற்ற அறிஞர்கள் சொல்லக் கேட்டும்தான் அண்ணா அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது.

BBC :கொழும்பு துறைமுகம்: இந்தியாவுக்கு திடீர் அதிர்ச்சி கொடுத்த இலங்கை - என்ன நடந்தது?

இலங்கையின் பிரதான துறைமுகமாக விளங்கும் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் பகுதியை மேம்படுத்த இந்தியாவுடன் எட்டியிருந்த ஒப்பந்தத்தை மீறி அதை தனது துறைமுகங்கள் ஆணையமே மேம்படுத்தும் என்ற திடீர் முடிவை இலங்கை எடுத்திருக்கிறது. 

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வெளிநாட்டிற்கு விற்கவோ அல்லது குத்தகைக்கு வழங்கவோ கூடாது என கடந்த சில தினங்களாக எழுந்த கடும் எதிர்ப்பை அடுத்து, அரசாங்கம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் கொண்டு வருமாறு கோரி, கடந்த காலங்களில் தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, துறைமுக தொழிற்சங்கங்கள் சட்டப்படி வேலை போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.    இந்த முனையத்தின் முழுமையான பொறுப்பை, இலங்கை துறைமுக அதிகார சபைக்கு வழங்க வேண்டும் என்ற எழுத்துமூல கோரிக்கையை வலியுறுத்தியே இவர்கள் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

நடு ரோட்டில் எழுந்த சுவர்கள்.. கூர்மையான ஆணிகள்.. இதுவரை நாடு காணாத கெடுபிடி!

சிமெண்ட் சுவர்கள்

Veerakumar - tamil.oneindia.co : டெல்லி: சுதந்திர போராட்ட காலத்தில் கூட நிகழாத ஒரு கெடுபிடி, டெல்லியை சுற்றிலும் தற்போது அரங்கேறிக் கொண்டு இருக்கிறது என்று கொந்தளிக்கிறார்கள் விவசாயிகள். 

ஆணியும்       மோடியும்


மத்திய அரசு கொண்டு வந்த, சர்ச்சைக்குரிய, 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக, டெல்லி-ஹரியானா டெல்லி-உத்தர பிரதேசம் உள்ளிட்ட 3 முக்கிய எல்லைகளில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் போராட்டம் அமைதியாகத்தான் நடந்து வந்தது.                                ஆனால் குடியரசு தினத்தில் நடைபெற்ற பேரணியின்போது, சிலர் வன்முறையில் ஈடுபட்டதால் மொத்த பழியையும் தற்போது விவசாயிகள் சுமந்து கொண்டிருக்கிறார்கள். இதுவரை இல்லாத நிலவரம்.... குடியரசு தின நாளில், சில விவசாயிகள் டெல்லியின் மையப்பகுதி வரை வந்து காவல்துறையினருடன் மோதியதாக கூறப்படுகிறது.                       
       இது தொடர்பாக பலர் மீது வழக்குகள் பாய்ந்துள்ளன. மீண்டும் இதே போன்ற ஒரு சம்பவம் நடைபெறாமல் இருக்க டெல்லி காவல்துறையை வித்தியாசமான முயற்சிகளை கையில் எடுத்துள்ளது. இந்தியாவில் இதுவரை கேள்விப்பட்டிராத வகையிலான முன்முயற்சிகளாக இருக்கின்றன இவை.

ஒளிப்பதிவாளர் இயக்குனர் பி.எஸ். நிவாஸ் காலமானார் .

Ajayan Bala Baskaran : ஒளிப்பதிவாளர் நிவாஸ் மறைந்தார் என்ற செய்தி வருத்தம் அளித்தது.
அவரை சந்தித்து ஒரு பேட்டி எடுத்து காணொளியில் போட வேண்டும் என்று விருப்பம் வைத்திருந்தேன்.
அது நிறைவேறாமல் போய் விட்ட கனவுகளில் ஒன்றாகிப் போனது.
16 வயதினிலே படத்தில் அவர் போட்ட நீண்ட ட்ராலி ஷாட் இப்போதும் பிரமிக்க வைப்பது.
ஜூம் லென்சை தனது படங்களில் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர்.
அத்தகைய ஷாட்டுகளில் தனி முத்திரை பதித்தவர்.
உதாரணமாக ஒரு முகத்திற்கு ஜூம் போகும்போது மிகத்தெளிவாக நேர்கோட்டில் பயணிப்பார்.அது முகத்திற்கு நேராக இல்லாமல் சற்று விலகி மையம் கொண்டாலும் கேமராவை வெகு அழகாக நகர்த்தி அந்த முகத்தை பிரேமின் நடுவில் இடம்பெறச் செய்து அழகு படுத்துவார்.
உதாரணமாக ஜூம் போகும் போது முகத்தை விட்டு சற்று விலகி ஃப்ரேமில் காது மட்டும் இடம்பெறும் என்றாலும் கவலைப்பட மாட்டார்.
காதிலிருந்து அந்த முகம் முழுமையாக தெரியுமாறு ஜூம் முடிந்தபிறகு கேமராவை கவிதையாக நகர்த்தி முழுமையாக பிரேமிற்குள் கொண்டு வந்துவிடுவார்.

செவ்வாய், 2 பிப்ரவரி, 2021

செல்போனில் 4 மணி நேரம் ஆன்லைன் கேம் விளையாடிய பிளஸ்-2 மாணவன் மரணம்

malaimalar : புதுவை வில்லியனூர் அருகே செல்போனில் 4 மணி நேரம் ஆன்லைன் கேம் விளையாடிய பிளஸ்-2 மாணவன் மயங்கி விழுந்து இறந்து போனார். 
மாணவன் தர்‌ஷன்.
புதுச்சேரி: புதுவை வில்லியனூர் வி.மணவெளி அன்னைதெரேசா நகர் தண்டுகரை வீதியை சேர்ந்தவர் பச்சையப்பன். இவர் கறவை மாடு வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரது இளைய மகன் தர்‌ஷன் (வயது16). இவர் சுல்தான்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
நேற்று மாலை பள்ளி முடிந்து 3 மணிக்கு தர்‌ஷன் வீட்டுக்கு வந்தார். அதுமுதல் வீட்டின் தனி அறையில் கட்டிலில் படுத்துக்கொண்டே தர்‌ஷன் காதில் ஹெட்போன் வைத்துக்கொண்டு செல்போனில் ஆன்லைனில் (பையர்வால்) விளையாடிக் கொண்டிருந்தார்.

இளவரசி தண்டனை காலம் முடியாததால் மீண்டும் சிறைக்கு சென்ற இளவரசி..

dhinakaran :  பெங்களூரு: கொரோனா தொற்றுக்காக பெங்களூரு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளவரசி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று பேரும் 4 ஆண்டுகள் முன்பு அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் ஜனவரி மாதம் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்து விடுதலை செய்யப்பட இருந்த சசிகலாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து சசிகலா பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிறையில் சசிகலாவுடன் இருந்த இளவரசிக்கு கொரோனா பரிசோதனை எடுக்க மருத்துவர்கள் அறியுறுத்தி இருந்தனர். அதனால் இளவரசிக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை அவருக்கு கொரோனா தொற்று இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

திமுக வெளிநடப்பு.. கவர்னர் உரைக்கு எதிர்ப்பு ! சட்ட மன்ற கூட்டத்தொரை புறக்கணித்து...

maalaimalar :கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக வெளிநடப்பு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்ற விடாமல் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.              கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக வெளிநடப்பு திமுக தலைவர் முக ஸ்டாலின் சென்னை: 2021-ம் ஆண்டின் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. கொரோனா சூழல் காரணமாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் கடந்த கூட்டம் நடைபெற்ற சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் கூட்டம் நடைபெற்று வருகிறது.                    ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் உரை உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. அவை கூடியதும் ஆளுநரை உரையாற்ற விடாமல் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். அனைத்து விவகாரங்கள் குறித்தும் பேசலாம் எதிர்க்கட்சிகள் கூட்டத்தொடருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, கவர்னர் உரையாற்றி வருகிறார். கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டசபை கூட்டத்தில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது.

போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக சானிடைசர் .. 3 மும்பை ஊழியர்கள்

dinakaran : மும்பை: மராட்டியத்தில் யவத்மால் மாவட்டம் காப்சிகோப்ரி கிராமத்தில் 12 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்கு பதில் சானிடைசர் கொடுக்கப்பட்ட அலட்சியம் நடந்துள்ளது. ஊழியர்கள் போலியோ சொட்டு மருந்துக்கு பதில் கைகழுவும் சானிடைசரை 12 குழந்தைகளுக்கு கொடுத்துள்ளனர். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட 12 குழந்தைகளும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படடனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக 3 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

ஈழத்துக்கும் இவரே கலைஞர்! - ஷோபாசக்தி

கலைஞர் என்பதும் நான்கெழுத்து, ஸ்டாலின் என்பதும் நான்கெழுத்து!”- சிலை  திறப்பு விழாவில் எழுச்சியுரை | M.k.stalin's Speech In Kalaignar Karunanidhi  Idol Opening Function ...
ஷோபாசக்தி maatram.org : மூன்று ஆண்டுகளிற்கு முன்பு வெளியான எனது ‘கண்டிவீரன்’ சிறுகதைத் தொகுப்பை நான் கலைஞர் மு.கருணாநிதிக்கு சமர்ப்பித்திருந்தேன். அந்தச் சமர்ப்பணக் குறிப்பில் அவரை திரைப்பட வசனங்கள் ஊடாக எனக்குத் தமிழைக் கற்றுக்கொடுத்த ஆசான் எனப் பதிவு செய்திருந்தேன். தமிழக அரசியலிலும் தமிழ் சினிமாவிலும் கலைஞரின் வீறுகொண்ட எழுச்சி 1940-களின் இறுதியில் ஆரம்பிக்கிறது. அதேவேளையிலேயே தி.மு.கவின் தாக்கமும் கலைஞரின் திரைப்படங்களும் அவரது எழுத்துகளும் கடல் கடந்து இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இலங்கைத் தமிழர்களின் வீடுகளிலே அறிஞர் அண்ணாத்துரையின் படமும் கலைஞரின் படமும் தொங்கத் தொடங்கின.

இலங்கையில் தமிழ்த் தேசியமும் தமிழருக்கு சுயாட்சிக் கோரிக்கையும் தனிநாட்டுக் கோரிக்கையும் முளைவிடத் தொடங்கிய காலமும் இதுதான். இலங்கைத் தமிழ்த் தேசிய அரசியல் கட்சித் தலைவர்களும் அவர்களின் உணர்வுமிக்க தீவிரத் தொண்டர்களும் தி.மு.கவைப் பின்பற்றியே தங்களது அரசியலை வடிவமைத்துக்கொண்டார்கள்.

உலகின் முதல் இசைக் கல்வெட்டு - தமிழ்க் கல்வெட்டு- அறச்சலூர் இசைக்கல்வெட்டு!

No photo description available.
Kuganathan VE : · உலகின் முதல் இசைக் கல்வெட்டு - தமிழ்க் கல்வெட்டு- அறச்சலூர் இசைக்கல்வெட்டு:::: உலகின் முதல் இசைக் கல்வெட்டு எது என்று தெரியுமா? வரலாற்றில் ஆர்வமுடையோர்கள் சுமேரியக் களிமண்ணில் செய்யப்பட்ட `Lipit-Ishtar` தொடர்பான, 4000 ஆண்டுகளிற்கு முற்பட்ட சான்றினைக் கூறலாம் (Tunings for a hymn honoring the ruler Lipit-Ishtar). இரு காரணங்களிற்காக இதனை முழு இசைக் கல்வெட்டாக ஏற்கமுடியவில்லை. 1. இது ஒரு Tune (ஒத்திசைவி) ஆகக் கொள்ளப்படுகின்றதே தவிர Music (இசை) ஆகவல்ல. ஒத்திசைவி என்பது இசையின் ஒரு குறுகிய வடிவமே (A "tune" to be a short section of music, usually containing harmony and possibly multiple melodies)
No photo description available.
2. சுமேரிய மொழி இன்னமும் முழுமையாகப் படித்தறிய முடியாத மொழி. மேலும் இன்று வழக்கிலில்லாத மொழி.
அடுத்தாதகச் சொல்லப்படும் “ Hurrian Hymn No. 6” என்பதும் ஒரு மெட்டு வடிவமே (Melody) , முழு இசையல்ல.
முழு இசை வடிவத்திலான சான்றாக (First ever music composition) கிரேக்கத்தினைச் சேர்ந்த “Seikilos Epitaph” என்பது குறிப்பிடப்படுகின்றது. இதன் காலம் (CE 2nd cent) பொது ஆண்டு 2ம் நூற்றாண்டாகும். இதே காலப்பகுதியைச் (CE 2nd cent ) சேர்ந்த இசைக் கல்வெட்டு தமிழிலுமுண்டு. அதுதான் அறச்சலூர்_இசைக்கல்வெட்டு.
அறச்சலூர் இசைக்கல்வெட்டு என்பது , ஈரோடு மாவட்டம் அறச்சலூர் என்னும் ஊரில் உள்ள நாகமலைக் குன்றில் பொது ஆண்டு இரண்டாம் நூற்றாண்டில் (CE 2nd cent) எழுதப்பட்ட இசைக்குறிப்புக் கல்வெட்டைக் குறிப்பிடுகின்றது. இக் கல்வெட்டில் பின்வரும் இசைக்கருவிகள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

திங்கள், 1 பிப்ரவரி, 2021

அடப்பாவிககளா எங்களை ஏமாற்றி நாட்டையே வித்துட்டீங்களேடா!!!

Image may contain: text that says 'புதிய தலைமுறை உணாம் மத்திய பட்ஜெட் 2021-22 மத்திய அரசு பங்குகளை விற்கவுள்ள நிறுவனங்கள் பாரத் பெட்ரோலியம் >ஏர்இந்தியா துறைமுக கழகம் >ஐ.டி.பி.ஐ வங்கி பவன் ஹன்ஸ் (ஹெலிகாப்டர் கார்ப்பரேஷன் Bharat IDBI BANK இவற்றுடன் மேலும் 2 பொதுத்துறை வங்கிகளையும், ஒரு காப்பீடு நிறுவனத்தின் பங்குகளை விற்று .75 லட்சம் கோடி திரட்ட முடிவு'

Kandasamy Mariyappan : · காமாலை கண்ணுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சள் என்பது போன்று... 90களுக்கு பிறகு வந்த சினிமாக்களை பார்க்கும் போது எல்லாமே சந்தேகத்தோடவே பாக்க சொல்லுது!! நம்மை எவ்வளவு முட்டாளாக்கியிருக்கின்றனர்!!!  ஆதித்யா TV பாத்தா... சுஜாதா கதை எழுத, சங்கர் டைரக்ட... ஹீரோ Love Letter எழுதி பெண்ணின் அம்மாவிடம் கொடுப்பார்!!! அவ்வளவு நல்லவராம்...  ஏன்னா, அவர் அம்பியாம்!!!!! Channelஐ மாத்துனா... ரமணா பட சீன்.......  ரேசன் கடைகளில் அதிக லஞ்சம் வாங்கியவர்களை கடத்தப் போறார் அப்படீன்னதும்.... . நான்தான் அதிகம் லஞ்சம் வாங்கினேன் என்று ஒட்டு மொத்த ஊழியர்களும் பாதுகாப்பு கேட்பார்கள்!  இவர்கள் கெட்டவர்களாம்...!!! 

ஒருவர், நான் 85 லட்சம் லஞ்சம் வாங்கியிருக்கேன், என்னை காப்பாற்றுங்கள் என்பார்!!!! ரேசன் கடையில் 85 லட்சம் லஞ்சம் எப்படி!!!??? அதாவது ரேசன் கடையிலும் லஞ்சம் வாங்குறார்கள் என்று அடிதட்டு மக்களிடமும் விஷத்தை விதைப்பது! அடப்பாவிககளா இப்படி சுஜாதாக்கள் மூலமாக எங்களை ஏமாற்றி, நாட்டையே வித்துட்டீங்களேடா!!!

Muralidharan Pb : · அந்தம்மாவுக்கு பொருளாதாரமும் தெரியாது, மக்கள் படும் அவஸ்த்தையும்  தெரியாது அதனால அவங்க போடற பட்ஜெட்டை விதியேனு கூட ஏத்துக்கலாம்யா, சாய்ங்காலமா எல்லா டிவிலேயும் கோட்டும், சூட்டும் போட்டுகிட்டு வருவாங்க பாருங்க எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள், அவங்களைக் காணும் போது கடுப்பாகிப் போகும். சூப்பர், எக்ஸலண்ட், பிரில்லியண்ட்,  வொண்டர்ஃபுல் னு சொல்லி நம்ம உசிரை வாங்குவாங்களே? 

தேமுதிக குனியமுத்தூர் சோதிடர் தேதி குறித்து குரு சக்திபாபாஜி சாட்சியாக தொடக்கப்பட்டதாம்

Image may contain: 3 people
சாவித்திரி கண்ணன் : · ’மூட நம்பிக்கைகளின் முழு வடிவம்,குடும்ப ஆதிக்கம்,குழப்பம், கோமாளித்தனம். .ஆகியவற்றின் மொத்தக் கலவையாக இந்தக் கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது’ என 2005 ஆம் ஆண்டு தேமுதிக தொடங்கப்பட்ட போது நான் எழுதினேன்! ஏனென்றால், குனியமுத்தூர் சோதிடர் பாலசுப்பிரமணியம்  தேதி குறித்துக் கொடுக்க, தன்னுடைய ஆன்மீக குரு சக்திபாபாஜியை சாட்சியாக வைத்துக் கொண்டு தான் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தார்! அவர் ராசி எண் ஐந்து என்பதால் கட்சி ஆரம்பித்த நேரம்,கட்சிக் கொடியின் உயரம்,அப்போது பறக்கவிட்ட பறவைகளின் எண்ணிக்கை..என அனைத்தும் ஐந்தாக இருக்கும்படி பார்த்துக் கொண்டார்! ஒன்றுக்கொன்று முரண்பாடான தேசியம்,திராவிடம் இரண்டையுமே கட்சிப் பெயராக்கிய கோமாளித்தனம் போதாது என்று அதில் முற்போக்கு என்று தனக்கும் முற்றிலும் பொருந்தாத வார்த்தையையும் கட்சிப் பெயரில் இணைத்தார்! அவர் கட்சி தொடங்கிய போது அவருக்கு வாழ்த்து சொன்ன ஒரே கட்சி பாஜக தான்!
’’பரவாயில்லையே பாஜக விஜயகாந்தை சரியாக மோப்பம் பிடித்துவிட்டதே…!’’ என்றும் தோன்றியது!

பாஜக பிரமுகர் கல்யாண் கைது: சிறையில் அடைப்பு

tamil.indianexpress.com :இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற ஒரு பிரசாரக் கூட்டத்தில் நபிகள் நாயகம் குறித்து இவர் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த சிலர் அங்கேயே திரண்டு அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை போலீஸ் அப்புறப்படுத்தியது.

பின்னர் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை திரும்பும் வழியில் கட்சிப் பிரமுகர் ஒருவர் இல்லத்தில் கல்யாண் உணவு சாப்பிட்டார். அப்போது அங்கு வந்த போலீஸார் அவரை கைது செய்தனர். அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து அவினாசி கிளைச் சிறையில் போலீஸார் அடைத்தனர்.   கல்யாண் கைதுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வந்தபடி இருக்கின்றன

தோடு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட போதும் அவரை வரவேற்க எதிர்பார்த்த கூட்டம் வரவில்ல.. அத்தோடு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட போதும் அவரை வரவேற்க எதிர்பார்த்த கூட்டம் ...

ஆசைக்கு இணங்க மறுத்த பெண்: அவரது 3 மாத குழந்தையை தீயில் தூக்கி வீசிய கொடூரன்.. பீகாரில்

.tribuneindia.com :Muzaffarpur, January 31 A man allegedly threw a three-month-old baby girl into a fire in Bihar’s Muzaffarpur district on Sunday after her mother protested against his sexual advances, police said. The baby received severe burn injuries in her legs and she is being treated at the Sadar Hospital, they said. The incident took place in the Bochahan police station area when the woman was sitting outside her home near a bonfire, police said. 

maalaimalar.com : பீகாரில் ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணின் 3 மாத குழந்தையை தீயில் தூக்கி விசிய கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் முசாபர்புர் மாவட்டத்தில் போச்சஹான் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், பெண் ஒருவர் தனது 3 மாத பெண் குழந்தையுடன் வீட்டிற்கு வெளியில் இருந்துள்ளார். குளிர் காலம் என்பதால் தீ மூட்டி அதன் அருகில் இருந்ததாக தெரிகிறது. அப்போது அந்த பெண்ணின் அருகில் ஒருவர் அமர்ந்துள்ளார். அந்த பெண்ணை பாலியல் தொந்தரவு செய்யும் வகையில் தொட்டுள்ளார். தொடர்ந்து அவ்வாறு செய்ய அந்த பெண் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதனால் கோபம் அடைந்த அந்த நபர், பெண்ணின் 3 மாத குழந்தையை பறித்து தீயில் தூக்கி வீசியுள்ளார். அதில் அந்த பெண் குழந்தையின் இரண்டு கால்கள் அதிகமாக பாதிக்கப்பட்டது. அக்குழந்தை சர்தார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பெண் ஒருவர் ஆசைக்கு இணங்க மறுத்ததால், அவரது குழந்தையை தீயில் தூக்கி வீசிய சம்பவம் கேட்போரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

தமிழகத்தில் 3 சீட்டுகள், புதுச்சேரியில் ஒரு சீட்டு.. மொத்தம் நான்கு சீட்டுகள்? விடுதலை சிறுத்தைகள்

minnambalam :திமுக கூட்டணியில் இருக்கும் ஒவ்வொரு கட்சியின் தலைவரையும் திமுகவின் தலைவர் ஸ்டாலின் சார்பாக பிரதிநிதி ஒருவர் சந்தித்து, வரும் சட்டமன்றத் தேர்தலில் உங்கள் கட்சிக்கு இத்தனை சீட்டுகள்தான் ஒரு கணக்கை சொல்லியிருக்கிறார். இதுதான் இப்போது திமுக கூட்டணிக்குள் மௌனமாக ஒரு புயலை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனைச் சந்தித்த ஸ்டாலினின் பிரதிநிதி, ‘வரும் தேர்தலில் சிறுத்தைகளுக்கு இரு தொகுதிகள்தான் ஒதுக்க முடியும்’ என்று சொல்லக் கேட்டு திருமா அதிர்ந்துவிட்டார். இது தொடர்பாக உடனடியாக ஸ்டாலினிடம் பேச முயற்சித்த திருமாவளவனை ஸ்டாலினின் மாப்பிள்ளை சபரீசன் சந்தித்துள்ளார். அவரும் அந்த இரு சீட் என்ற தகவலை திருமாவிடம் உறுதியாகச் சொல்லியுள்ளதாக தெரிகிறது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமிழகம் தாண்டியும் கிளை விரித்திருக்கிற நிலையில், இரு தொகுதிகள்தான் என்ற நிபந்தனை தலைமையை மிகவும் வருத்தமும் கோபமும் அடைய வைத்திருக்கின்றன. தொடர்ந்து இதுகுறித்து சிறுத்தைகள் அழுத்தம் கொடுத்த நிலையில், தமிழகத்தில் 3 சீட்டுகள், புதுச்சேரியில் ஒரு சீட்டு ஆக மொத்தம் நான்கு சீட்டுகள் என்று திமுக நிற்பதாகத் தகவல்.

இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான பட்ஜெட் தாக்கல் – ப.சிதம்பரம் விமர்சனம்

maalaimalar : இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான பட்ஜெட் தாக்கலாக இது அமைந்துள்ளது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். 

இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான பட்ஜெட் தாக்கல் – ப.சிதம்பரம் விமர்சனம் ப.சிதம்பரம் 2021-22 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், இந்த பட்ஜெட் தாக்கல் எந்த வகையிலும் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை. இது மக்களைப் பற்றி கவலைப்படாத நிதிநிலை அறிக்கை. நிதிநிலை அறிக்கை உரையைக் கேட்பவர்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏமாற்றியுள்ளார்.                        இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான பட்ஜெட் தாக்கலாக இது அமைந்துள்ளது. எதிர்பார்த்ததைப்போல் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்கும் முடிவு மக்களை பாதிக்கும். ஜிஎஸ்டி வரி விதிப்பில் எந்தக் குறைப்பும் இடம் பெறவில்லை. அந்த அறிவிப்புகள் ஒதுக்கீடாகவே உள்ளன. நடைமுறைக்கு வர நீண்ட காலம் எடுக்கும் என்று விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

ராகுலை உடனே தலைவராக நியமிக்க காங்., கூட்டத்தில் தீர்மானம்

புதுடில்லி: 'காங்கிரஸ் கட்சியின் தலைவராக, ராகுலை உடனடியாக நியமிக்க வேண்டும்' என, டில்லி காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.        கடந்த லோக்சபா தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் பதவியை, ராகுல், ராஜினாமா செய்தார். தற்காலிக தலைவராக, சோனியா செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், டில்லி மாநில காங்., நிர்வாகிகள் கூட்டம், நேற்று நடந்தது. கூட்டத்துக்குப் பின், டில்லி மாநில காங்கிரஸ் தலைவர் அனில்குமார் கூறியதாவது:நாட்டில் மிகவும் ஆபத்தான அரசியல் சூழல் நிலவுகிறது. நரேந்திர மோடி தலைமையிலான அரசு, அடுத்தடுத்து தவறான முடிவுகளை எடுத்து வருகிறது. 

இதை எதிர்த்து, ராகுல் தொடர்ந்து போராடி வருகிறார். ஜனநாயக விரோத சக்திகளை விரட்டவும், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில், ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தவும், ராகுலை உடனடியாக, காங்., தலைவராக அறிவிப்பதே சிறந்த வழி. இதற்கான தீர்மானம், காங்., நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.இவ்வாறு, அவர் கூறினார்.

BBC மியான்மரில் ராணுவ ஆட்சி அமல்: ஆங் சான் சூச்சி உள்ளிட்ட தலைவர்கள் கைது.. Myanmar's military stage a coup?

மியான்மர் நாட்டில் ஆங் சான் சூச்சி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த நாட்டில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மியான்மரில் சமீபத்தில் நடந்த தேர்தலை அடுத்து அரசாங்கத்திற்கும் ராணுவத்திற்கும் இடையில் நிலவி வந்த பதட்டத்தை தொடர்ந்து இந்த தகவல் வெளிவந்துள்ளது. நாட்டின் முக்கிய தலைவர்கள் கைதுசெய்யப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, மியான்மரில் ஓராண்டுக்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக தொலைக்காட்சியின் மூலம் அந்த நாட்டின் ராணுவம் அறிவித்துள்ளது. பர்மா என்றும் அழைக்கப்படும் மியான்மர் 2011இல் ஜனநாயக சீர்திருத்தங்கள் தொடங்கும் வரை ராணுவத்தால் ஆளப்பட்டது.

முன்னதாக, மியான்மர் நாட்டின் என்.எல்.டி. கட்சியின் தலைவர் ஆங் சான் சூச்சி கைது செய்யப்பட்டதாக அந்த கட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.

தூத்துக்குடி அருகே காவல் உதவி ஆய்வாளர் வாகனம் ஏற்றிக் கொலை

thinathanthi : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரக்கு வாகனம் ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே வாழவல்லான் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரக்கு வாகனம் ஏற்றிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உதவி ஆய்வாளர் பாலு, கொற்கையில் ரோந்து பணியில் இருந்த போது போதையில் தகராறில் ஈடுபட்ட முருகவேல் என்ற நபரை கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த முருக வேல் சரக்கு வாகனத்தை எடுத்து வந்து எஸ்.ஐ பாலுவை கொலை செய்து விட்டு தப்பியுள்ளார். வாகனம் ஏற்றி உதவி ஆய்வாளரை கொன்ற முருகவேலை கைது செய்ய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன

தமிழ் பௌத்தமும் ஈழ தேசமும்!

கந்தரோடை
கந்தரோடை தமிழ் பௌத்த அடையாளம்
சிங்கள வரலாற்று ஆய்வாளர் லயனல் சரத் : “அண்டை நாட்டுக தமிழ் பௌத்தர்கள் இலங்கைக்கு வந்துஇருக்கா விட்டால் சிங்கள பௌத்தம் என்னும் மதத்தை இன்று காணும் வாய்ப்பே கிடைத்து இருக்காது
சோழர் கால புத்தர் சிலை
சோழர் கால புத்தர் சிலை

thuruvi.com: தமிழ் பௌத்தமும் ஈழ தேசமும்.. சரி இந்த பதிவுக்கு செல்ல முன் இலங்கையில் அரசியல் நகர்வை பார்த்து விடுவோம். பௌத்தர்கள் உலகில் சிறுபான்மையினர் இல்லை.ஆனால் சிங்களவர்கள் ? உலகின் சனத்தொகையை பொறுத்த வரை சிங்கவர்கள் மிக சிறுபாண்மையினர். மெல்ல மெல்ல நிலங்களையும் பிரித்தானியர் ஒப்படைக்கும் போது அதிகாரங்களையும் கைப்பற்றி சிங்கள மக்களுக்கு தம் அதிகாரத்தை தக்க வைக்க ஒரு பிடிமானம் தேவைப்பட்டது. அதே வேளை தம் சிறு பான்மையை இல்லாமல் செய்ய ஒரு வழி தேவைபட்டது.

பௌத்தம் என்பது வெறுமனே சிங்களவர்களுக்கு உரித்தான ஒன்று அல்ல.இன்று சிங்களவர்களை தாண்டி பல நாடுகளில் பல மொழி பேசுபவர்களாலும் அனுசரிக்கப்படும் ஒரு மார்க்கம்.
அதையும் தாண்டி அன்றைய தமிழர்களால் பௌத்தம் பின்பற்றப்பட்ட ஒன்று.அதன் எச்சங்களே இன்றும் தமிழர் பகுதிகளில் எஞ்சி நிற்கும் சான்றுகள்.இவற்றை சிங்கள பௌத்தத்தின் தொடக்கமாக எடுத்துக்கொள்ள முடியாது என்பது இம்மொழியை சேர்ந்த வரலாற்று ஆய்வாளனுக்கும் புரியும். ஆனால் அதை மக்களுக்கு தெரிவிப்பது திரிப்பது திணிப்பது என்பது அவனின் மனநிலையை பொறுத்து.

ஏன் அக்ரகாரங்கள் காணாமல் போனது?

Image may contain: house, sky, outdoor and nature
Prabhakar Annamalai : · ஏன் அக்ரகாரங்கள் காணாமல் போச்சின்னு மத்யமர்ல ஒரு கேள்வி. அதற்குண்டான (ஒப்புதல் வாக்குமூல) பின்னூட்டங்களை நிதானமாகப் படிச்சா மிக அழகா நமக்கு கிடைப்பது பண்டைய தமிழ்நாட்டை யாரு சுரண்டி எப்படி கொழுத்திருங்கான்னு புரிஞ்சிக்க முடியும். அண்டர்லைன் நிறைய மீள் வாசிப்பு செய்யாமலேயே! அங்கே பல பேர் வயிரு எரிந்து நினைவு கூர்வது- நில உச்ச வரம்பு சட்டம், இடஒதுக்கீடு, கோவில்களை அரசு எடுத்துக் கொண்டதுப் பற்றி பேசி திட்டி இருக்காங்க. பொறுமையா அனைத்தையும் படிச்சிட்டு என்னோட கருத்தா இப்படிச் சொல்லிட்டு நடையக் கட்டி இருக்கேன் ஆண்டான் அடிமைத்தனம் ஒழிந்தாலே, பொருளாதாரமும், கல்வியும் பரவலாக்கப்பட்டு அந்தத் தெய்வத்தின் ஆசைப்படி அனைவரும் சுபிட்சமாக வாழ முடியும். சமூகத்தை பண்மைப்படுத்துவது என்பது நிலத்தை திருத்தி பயிரிடுவதற்கு ஒப்பானதாகும்.
பழம் பெருமைக்கு ஆசைப்படுவதில் பல பேருடைய மரண ஓலம் உள்ளடங்கி இருக்கிறது என்று உணர்ந்தால் இருப்பதைக் கொண்டு சுகமாக வாழலாம்...
இப்போ,