ராதா மனோகர் : Mrs .chitra subramaniam duella சித்ரா சுப்பிரமணியம் ஒரு இந்திய பத்திரிகையாளர்.
 |
Dhanya Rajendran
|
ஆர் எஸ் எஸ் இன் எடுபிடியாக செயல்பட்ட இந்த பெண்மணியை பற்றி பொதுவெளியில் அதிகம் பேசப்படுவதில்லை.
இவர் சுவிஸ்லாந்தை சேர்ந்த டாக்டர் கியான்கார்லோ டூல்லா என்பவரை வாழ்க்கை துணையாக்கி கொண்டார்.
இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் இருக்கிறார்கள் . இவர்கள் சுவிஸ்லாந்தில்தான் வசிக்கிறார்கள்
இவர் முன்பு இந்தியா டு டேயில் ( india today) வெளிநாட்டு செய்தியாளராக பணியாற்றினார்.
2017 ஆம் ஆண்டில் அர்னாப் கோஸ்வாமி தொடங்கிய ரிபப்ளிக் செய்தி சேனலில் அவரோடு சேர்ந்து கடும் பணியாற்றி வருகிறார்.
இன்றும் இதே பாணியில் ஆர் எஸ் எஸ் நோக்கங்களை நிறைவேற்றி கொண்டே இருக்கிறார்.
திரு ராஜீவ் காந்தியை ஒரு ஊழல் பேர்வழி என்று பொதுமக்களை நம்பவைத்ததில் இவரின் நச்சு எழுத்துக்கு பெரும் பங்கிருக்கிறது
இவரின் ஒவ்வொரு எழுத்தையும் பெரிய பிரசார ஆயுதமாக தலைமேல் சுமந்தவர் திரு வை கோபாலசாமியாகும்.
 |
chitra subramaniam duella
|
இவர் 1958 ஆம் ஆண்டில் ஜார்கண்ட் மாநிலத்தில் பிறந்தார்.
தில்லி லேடி ஸ்ரீராம் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டமும், இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தில் இதழியலில் முதுகலை டிப்ளோமாவும், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் இதழியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
1989 ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் தேர்தல் தோல்விக்கு இவர் எழுதிய போபோர்ஸ் கதைதான் பெரிய அளவில் பயன்பட்டது என்று கூறப்படுகிறது.
திரு ராஜீவ் காந்தி காலத்தில் நடந்த போபர்ஸ்- ஹோவிட்சர் bofors howitzer பீரங்கி ஒப்பந்தம் பற்றி ஒரு நாள் சுவீடன் வானொலியில் ஒரு செய்தி வெளியானது