சனி, 2 டிசம்பர், 2023

அமீர் பணத்தை சிவகுமார் குடும்பம் ஏமாற்றியுள்ளது- கஞ்சா கருப்பு ஆவேசம்

அமீர் பணத்தை சிவகுமார் குடும்பம் ஏமாற்றியுள்ளது- கஞ்சா கருப்பு ஆவேசம்

மாலை மலர் :  கடந்த 2007-ஆம் ஆண்டு இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'பருத்தி வீரன்'. இந்த படத்தின் மூலம் கார்த்தி கதாநாயகனாக அறிமுகமானார்.
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற 'பருத்தி வீரன்' திரைப்படம் கார்த்திக்கு மிகப்பெரிய அறிமுகமாக அமைந்தது.
இப்படம் தேசிய விருது, மாநில விருது என பல விருதுகளை குவித்தது. 'பருத்தி வீரன்' படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களுக்கும் இப்படம் மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது.

மணல் குவாரி, ஹவாலா, பி.எம். ஆபீஸ்... -கைதான ED அதிகாரி பற்றி FIR இல் புதிய தகவல்கள்!

minnambalam.com :  -Manjula : லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தற்போது திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இதனிடையே போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் அவர் குறித்த மேலும் பல புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் சுரேஷ் பாபுவை மிரட்டி ரூபாய் 40 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில், அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் நேற்று (டிசம்பர் 1) கைது செய்யப்பட்டு திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை FIR-ல் அங்கித் திவாரி குறித்த புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இலங்கை வடபகுதி குற்ற சம்பவங்கள் ஒரு வரலாற்று பார்வை


 ராதா மனோகர்
: இலங்கை வடபகுதியில் அன்றாடம் நடைபெறும் குற்றவியல் சம்பவங்களின் தொடர் செய்திகளை பார்க்கும் போது  சற்று ஆழமாக சிந்திக்க வேண்டி இருக்கிறது.
அதாவது தமிழர்களால் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறை மோசடி குற்றங்கள் இவை.
இவற்றிற்கு யார் மீதும் பழிபோட்டு தப்பி விடமுடியாது என்றெண்ணுகிறேன்.
தவறு எங்கே இருக்கிறது?
எப்போதும் எல்லா தவறுகளுக்கும் பிறர் மீது பழி போட்டு நாங்கள் நல்லவர்கள் நாங்கள் அப்பாவிகள்
நாங்கள்  உண்மையில் விக்டிம்கள் அதாவது பாதிக்கப்பட்டவர்கள் என்ற கூற்று பெரியதாக உதவாது என்பதைதான் சுமார் நூற்றாண்டுக்கு முன்பு வெளியான ஈழகேசரி பத்திரிகை சுட்டி காட்டுகிறது என்று கருதுகிறேன்.
உண்மை கொஞ்சம் வலிக்கத்தான் செய்யும்.
மக்களின் சமூக உளவியலில் எங்கே ஒரு நோய் இருக்கிறது?
அந்த நோயின் ஊற்று எது?
போர்களை புகழப்படும் புராணங்களை போற்றி அவற்றையே ஒரு ரோல் மாடல் மாதிரி கொள்ளவேண்டும் என்று சதா போதிக்கும் மதவாதிகளா?

20 லட்சம் லஞ்சம் வாங்கி சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி.. கிண்டல் செய்து பறக்கும் மீம்ஸ்கள்

tamil.oneindia.com - Mani Singh S : சென்னை: திண்டுக்கல்லில் அரசு மருத்துவரை  மிரட்டி லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ள நிலையில், Corrupted_ED என்ற டேக் இணையத்தில் டிரெண்ட் ஆகிறது. திமுக ஆதரவாளர்கள் அமலாக்கத்துறையை கலாய்த்து மீம்களை தெறிக்கவிடுகிறார்கள்.
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் டாக்டர் சுரேஷ் பாபு மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் இருந்து டாக்டர் சுரேஷ் பாபுவை விடுதலை செய்ய ரூ3 கோடி லஞ்சம் வேண்டும் என்று அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கேட்டுள்ளார். இதில் முதல் கட்டமாக ரூ20 லட்சம் தர டாக்டர் சுரேஷ் பாபு ஒப்புக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

வவுனியாவில் அதிகரிக்கும் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை!

 தேசம் நெட்  : வவுனியா மாவட்டத்தில் 21 எச்.ஐ.வி தொற்றாளர்கள் உள்ளனர் எனவும் இவ்வருடம் 2 புதிய தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் வவுனியா பொதுய் வைத்தியசாலையின் பாலியல் நோய் தடுப்புப் பிரிவின் வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி திருமதி அருள்மொழி பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச எய்ட்ஸ் தினமான இன்று (01.) வவுனியா பொது வைத்தியசாலையில் பாலியல் நோய் தடுப்பு பிரிவில் இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
”சமூகத்தை வலுப்படுத்துவோம்- எய்ட்ஸ் தடுப்போம்” எனும் தொனிப்பொருளில் 35 ஆவது எய்ட்ஸ் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
இலங்கை எச்.ஐ.வி நோய் பரவல் குறைந்த நாடாகவே கருதப்படுகின்றது.

அடுத்த குறி சென்னை அமலாக்கத்துறை; அதிரடியாக இறங்கிய தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை

Next stop is Chennai Enforcement Directorate; Tamil Nadu anti-bribery department

nakkeeran : திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவரிடம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் கையும் களவுமாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணை கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தவர் சுரேஷ் பாபு. கடந்த 2018 ஆம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சுரேஷ் பாபு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு மதுரை அமலாக்கத்துறைக்கு சென்றது. மதுரை அமலாக்கத்துறைக்கு பதவி உயர்வு பெற்று வந்த அங்கித் திவாரி என்ற அதிகாரி, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மருத்துவர் சுரேஷ்பாபுவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வருமானத்திற்கு அதிகமாக நீங்கள் சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கின் விசாரணையிலிருந்து தப்பிக்க வைக்க வேண்டுமானால், மூன்று கோடி ரூபாய்  லஞ்சம் தர வேண்டும் என கேட்டுள்ளார்.

அதிமுக என்கின்ற எம் எல் எம் ( MLM ) கம்பனி! ... ஆதாரங்களோடு ஒரு அலசல்


ராதா மனோகர்
: திமுகவில் இருந்துதான் அ தி மு க என்ற கட்சி உருவானாலும் இரு கட்சிகளும் உண்மையில் நேரெதிர் திசையில் உள்ளவை..
அதிமுக என்ற அமைப்பு உண்மையில் ஒரு அரசியல் கட்சிக்கு உரிய எந்த இலக்கணத்தையும் கொண்டிருக்கவில்லை .
ஆனால்  அதில்  எம்ஜியார் உட்பட பல பிரமுகர்கள் .இருந்தமையால் அதுவும்  இன்னொரு திமுக போன்ற ஒரு திராவிட கட்சியே என்ற தோற்றத்தை கொடுத்தது.
அதிமுகவின் தோற்றம் என்பது எம்ஜியார் என்ற நடிகரின் ரசிகர்களின் சங்கம் என்ற அளவிலேயே பெரிதும் இருந்தது..
எப்போது எம்ஜியார் தனது  ரசிகர் மன்றங்களை ஒரு வலுவான நிறுவனமாக கட்டமைக்க தொடங்கினாரோ அன்றே எம்ஜியாரின் அமைப்பு  தொடங்க பட்டுவிட்டது .
இந்த ரசிகர் அமைப்புக்களின் தலைமை பொறுப்புக்களில் இருந்தவர்கள் எல்லாம்   ஒரு அசல் கம்பனி இயக்குனர்கள் போல செயல்பட்டனர்.
அந்த நிறுவனத்தின் தலைமை இயக்குனர் அல்ல சி இ ஒ போன்று    ஆர் எம் வீரப்பனோ  அல்லது முசிரிபுத்தனோ இருந்தார்கள்.
பலரும் எம்ஜியாரின் ரசிகர்கள்தான். அவர்களில் பலருக்கும்  செலவு மட்டும்தான் இருக்கும் . வேறு ஒரு இலாபமும் இருக்காது .
ஆனால்   ரசிகர் மன்றங்களின் பொறுப்புக்களின் இருப்பவர்களுக்கு அது  பல சமயங்களிலும் அது ஒரு வருவாய் தரும் தொழிலாக இருந்திருக்கிறது.

வெள்ளி, 1 டிசம்பர், 2023

மஹுவா மொய்த்ரா எம்.பி பதவி பறிக்கப்படுமா? இன்னும் 2 நாளில்?

tamil.samayam.com  -  மகேஷ் பாபு  நாடாளுமன்ற நடவடிக்கைகளை தொடர்ச்சியாக கண்காணித்து வரும் அனைவருக்கும் நன்கு அறிமுகமான பெயர் மஹுவா மொய்த்ரா. திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பியான இவர், மக்களவையில் பேசும் போது அனல் பறக்கும். புள்ளி விவரங்களை அடுக்கி மத்திய பாஜக அரசு மற்றும் அதானி முறைகேடுகள் குறித்து தெறிக்க விட்டு விடுவார்.
இவரது கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் எம்.பிக்கள் திணறிய சம்பவங்களும் அரங்கேறியிருக்கின்றன.
கேள்வி கேட்க பணம்
இந்நிலையில் மக்களவையில் கேள்விகள் கேட்க துபாயை சேர்ந்த தொழிலதிபர் தர்ஷன் ஹிரானந்தானியிடம் பணம் வாங்கி கொண்டதாக பாஜக தரப்பு பெரிய குண்டை தூக்கி போட்டது.
மேலும் நாடாளுமன்ற லாகின் விவரங்களை தர்ஷினிடம் பகிர்ந்து கொண்டதாகவும், துபாயில் இருந்தபடி அவரே கேள்விகளை பதிவிட்டதாகவும் குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டன.

லஞ்சத்துடன் சிக்கிய ED அமலாக்கத்துறை அதிகாரி- மோடி ED லட்சணம் பாரீர்.. சிபிஎம் பாலகிருஷ்ணன்!

tamil.oneindia.com - Mathivanan Maran  :  சென்னை: திண்டுக்கல்லில் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி ரூ31 லட்சம் லஞ்சப் பணத்துடன் சிக்கிய சம்பவத்தை முன்வைத்து மத்திய பாஜக அரசை சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம் எச் ஜவாஹிருல்லா ஆகியோர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை: குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் பணியாற்றிய அங்கிட் திவாரி என்ற அமலாக்கத்துறை அதிகாரி திண்டுக்கல்லில் தனி நபரிடம் ரூபாய் 20 லட்சம் லஞ்சம்வாங்கிய போது கையும் களவுமாகத் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையினரால் பிடிபட்டிருக்கிறார்.

வவுனியாவில் வயோதிபத் தம்பதி கொடூரமாக வெட்டிப் படுகொலை!

ceylonmirror.net - Jegan : வவுனியாவில் வயோதிபத் தம்பதி கொடூரமாக வெட்டிப் படுகொலை!
வவுனியா, செட்டிகுளம் நகரப் பகுதியில் இன்று கணவனும் மனைவியும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்தச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது என்று செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.
செட்டிகுளம் பிரதான வீதியில் இந்தத் தம்பதியினரின் மகன் வியாபார நிலையம் ஒன்றை நடத்தி வரும் நிலையில் அதற்குப் பின்னால் உள்ள தங்கும் இடத்தில் மேற்படி தம்பதியினர் வசித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு வழமைபோல் அவர்களது மகன் வியாபார நிலையத்தை மூடிவிட்டு அண்மையில் உள்ள தனது வீட்டுக்குச் சென்ற போது தம்பதியினர் வியாபார நிலையத்துக்குப் பின்பாகவுள்ள தங்கும் இடத்தில் உறங்கச் சென்றனர்.

யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டி மாபியாக்கள் – தகவல் தர கோரும் பொலிஸ்

ilakkiyainfo.com  : யாழ்ப்பாணத்தில்  மீற்றர் வட்டி மாபியாக்கள் – தகவல் தர கோரும் பொலிஸ்
வட்டிக்கு பணம் வழங்கி , சொத்துக்களை பறிமுதல் செய்யும் மாபியாக்கள் யாழில் அதிகரித்து உள்ளதாகவும் ,
அவர்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர்களோ , அவர்களால் பாதிக்கப்பட்டவர்களோ தன்னிடம் நேரடியாக முறைப்பாடு செய்ய முடியும் என யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
அதீத வட்டி , மீற்றர் வட்டி என்பவற்றுக்கு பெருந்தொகை பணங்களை வழங்கி , அந்த பணத்தினை வாங்கியவர்கள் மீள செலுத்த முடியாத போது , அவர்களிடம் இருந்து சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை பறிமுதல் செய்யும் சம்பவங்கள் தொடர்பில் எமக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

மத்திய பிரதேசம் - ராஜஸ்தானை கைப்பற்றுகிறது? பா.ஜ., : தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளில் தகவல்

Dinamalar : புதுடில்லி, ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில், பெரிய மாநிலங்களான மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானை பா.ஜ., கைப்பற்றுகிறது. சத்தீஸ்கரில் ஆட்சியை தக்க வைப்பதுடன், காங்கிரசுக்கு போனசாக தெலுங்கானா கிடைக்கும் என, தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகளில் தெரியவந்துள்ளது. வடகிழக்கு மாநிலமான மிசோரமில், கடும் இழுபறி நிலவும் எனவும் தெரியவந்துள்ளது.
லோக்சபாவுக்கு, அடுத்தாண்டு ஏப்., - மே மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது. இதில், மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் பா.ஜ., உள்ளது.
அதே நேரத்தில், 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சி அந்தஸ்துகூட கிடைக்காமல் துவண்டிருந்த காங்கிரஸ், கடும் போட்டியைக் கொடுக்க தயாராகி வருகிறது.

சத்தீஸ்கர் எக்சிட் போல் முடிவுகள் : அடித்து ஆடும் காங்கிரஸ்... ஆட்சிக் கட்டிலில் அமரப் போவது யார்?

tamil.samayam.com- எழிலரசன்.டி ;  ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் நிறைவுபெற்ற நிலையில், சத்தீஸ்கரில் யார் ஆட்சியைப் பிடிப்பது என்பது தொடர்பாக தேர்தலுக்கு பிந்தனைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதுபற்றி செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட புள்ளி விவரங்களை அலசுவோம்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சி நடத்தி வருகிறது. அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 7ஆம் தேதி மற்றும் நவம்பர் 17ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது.

வியாழன், 30 நவம்பர், 2023

விஜயகாந்துக்கு என்னாச்சு? ஸ்டாலினுக்கு சென்ற இரகசிய அறிக்கை?


 மின்னம்பலம் - Aara  : டிஜிட்டல் திண்ணை: விஜயகாந்துக்கு என்னாச்சு? ஸ்டாலினுக்கு சென்ற சீக்ரெட் ரிப்போர்ட்!
வைஃபை ஆன் செய்ததும், விஜயகாந்த் உடல் நிலை தொடர்பாக சென்னை மியாட் மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பு இன்பாக்சில் வந்துவிழுந்தது.
அதைப் பார்த்துவிட்டு தேமுதிகவின் சில நிர்வாகிகளுக்கு வாட்ஸ் அப் கால் போனது.
அந்த உரையாடலுக்குப் பிறகு வாட்ஸ் அப் மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“நடிகரும் தேமுதிக நிறுவனரும், பொதுச் செயலாளருமான கேப்டன் விஜயகாந்த் உடல் நலம் குறித்து சென்னை மியாட் மருத்துவமனை வெளியிட்ட தகவல் அரசியல், சினிமா உலகத்தினர் தொடங்கி கடைகோடி விஜயகாந்த் ரசிகர்கள், தேமுதிக தொண்டர்கள் வரை கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
’அதாவது விஜயகாந்தின் உடல் நிலை கடந்த 24 மணி நேரத்தில் சீரற்றதாக உள்ளது’ என்பதுதான் மருத்துவமனை வெளியிட்ட அப்டேட்.

திமுக அமைச்சர்களுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்

மின்னம்பலம் -  christopher  :  திமுக அமைச்சர்களுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்
திமுக அமைச்சர்களுக்கு எதிராக அதிமுக ஆட்சி காலத்தில் தொடரப்பட்ட சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை ரத்து செய்து உச்சநீதிமன்றம் இன்று (நவம்பர் 29) உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1996-2001 ஆண்டுகளில் திமுக ஆட்சியின்போது அமைச்சர்களாக இருந்த கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, கோ.சி.மணி, மற்றும் மதுரை திமுக மேயராக இருந்த குழந்தைவேலு ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துகுவித்ததாக அடுத்து வந்த அதிமுக அரசு வழக்கு தொடர்ந்தது.
91 -96 அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த ரகுபதி அதன் பின் திமுகவிற்கு மாறினார். அவர் மீதும் 2001 -06 அதிமுக ஆட்சியில் சொத்து குவிப்பு வழக்கு போடப்பட்டது.
இந்த வழக்குகள் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மற்றும் சென்னை உயர் நீதிமன்றங்களில் நடந்த விசாரணை முடிவில் அனைவரையும் விடுதலை செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்தியர் மீது குற்றம் சுமத்திய அமெரிக்கா - சீக்கியரை கொலை செய்ய திட்டமிட்டதாக .

அமெரிக்கா, இந்தியா, சீக்கியப் பிரிவினைவாதம்

 BBC News தமிழ் :    சீக்கியப் பிரிவினைவாதியைக் கொலை செய்யத் திட்டமிட்டதாக இந்தியர்மீது குற்றம் சுமத்திய அமெரிக்கா - என்ன நடந்தது?
சீக்கியப் பிரிவினைவாதத்தை ஆதரித்த ஒரு அமெரிக்க குடிமகனைக் கொலை செய்ய நடந்ததாகக் கூறப்படும் சதித்திட்டத்தை முறியடித்திருப்பதாக அமெரிக்கா கூறியிருக்கிறது.
இந்தச் சதித்திட்டம் நியூயார்க்கில் நடத்ததாகக் கூறப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக, நிகில் குப்தா என்ற இந்தியர் மீது புதன்கிழமை (நவம்பர் 29) குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. அவரை இந்திய அரசாங்க ஊழியர் ஒருவர் இயக்கியதாகக் குற்றப்பத்திரிகை கூறுகிறது.
இந்த விஷயத்தில், அவர்மீது கூலிக்குக் கொலை செய்ய முயன்றக்தாக குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. இது இந்தியாவில் இருந்து திட்டமிடப்பட்டதாக வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.
ஆனால், யாரைக் கொலை செய்ய இந்தத் திட்டம் தீட்டப்பட்டது என்று நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடவில்லை.

புதன், 29 நவம்பர், 2023

சீனாவில் சுவாச தொற்று எதிரொலி- இந்தியாவில் 6 மாநிலங்களுக்கு எச்சரிக்கை

மாலை மலர் : சீனாவில் சில வாரங்களாக குழந்தைகள் இடையே சுவாச பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியால் மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த ஞாயிற்று கிழமை அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியது.
அதில், இந்தியாவில் நிலைமை ஆபத்து ஏற்படும் வகையில் இல்லை என்றும் நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் மத்திய அரசு தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், இந்தியாவிலும் பல்வேறு காரணங்களால் சுவாச கோளாறுகள் அதிகரித்து வருவதால், ராஜஸ்தான், கர்நாடகா, குஜராத், உத்தரகாண்ட், அரியானா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநில அரசுகள், சுவாசக் கோளாறு பாதிப்பால் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சுகாதாரத் துறை தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Arnold Dix உத்தரகான்ட் சுரங்க தொழிலாளர்கள் மீட்பில் முன்னின்று உழைத்த ஆர்னோல்ட் டிக்ஸ் Tunnelling Expert

 Kana Praba : உத்தரகாசி சுரங்கத்தில் 17 நாட்கள் சிக்கித் தவித்த 41 தொழிலாளர்கள் மீட்கப்பட மகிழ்ச்சியான தருணத்தில் இன்னொரு பூரிப்பான செய்தியையும் அதைத் தொட்டு பேச வேண்டும்.
இந்த மீட்புப் பணிக்கு உறுதுணையாக இருந்தவர் Australia  நாட்டின் சுரங்க நிர்மாண நிபுணரான (Tunnelling Expert) Arnold Dix.
Arnold Dix இன் தகமைகளைப் பார்க்கும் போதே ஒரு சுரங்கப்பாதையின் குழப்பம் போல நீளும்.
ஆம், இவர் ஒரு சட்டவாளர், விஞ்ஞானி மற்றும் பொறியியல் கற்கைப் பேராசிரியர்.
சுவிற்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவில் மையம் கொண்டிருக்கும் International Tunnelling and Underground Space Association அமைப்பின் தலைவராகவும் இயங்கி வருகிறார்,

குஷ்புவுக்கு எதிரான போராட்டம்.. கைது செய்யப்பட்ட 140 பேர் மீது வழக்கு

மாலை மலர்  : நடிகர் மன்சூர் அலிகான் நடிகை திரிஷா பற்றி வெளியிட்ட சர்ச்சை கருத்துக்கு நடிகை குஷ்பு கண்டனம் தெரிவித்து இருந்தார்.
இது தொடர்பான சமூக வலைதள பதிவில், நடிகை குஷ்பு "சேரி" என்ற வார்த்தை பயன்படுத்தியது பேசுபொருளாக மாறியது. இவரின் வார்த்தை உபயோகத்திற்கு பலதரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் சேரி வார்த்தை தொடர்பாக நடிகை குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.
அந்த வகையில், நடிகை குஷ்புவுக்கு காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. துறை சார்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மேலும் அவர் இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. மன்னிப்பு கோராவிட்டால், நடிகை குஷ்பு வீட்டின் முன்பு போராட்டம் நடத்துவதாகவும் அறிவித்து இருந்தது.

சுரங்க தொழிலாளர்கள் மீட்பில் முக்கிய பங்காற்றிய "Rat-Hole Miners": யார் இவர்கள்?

மாலை மலர் :  உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதையில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீடக அதிநவீன கருவிகள் வரவழைக்கப்பட்டன.
கிடைமட்டமாக சுமார் 57 மீட்டர் தூரம் துளையிட்டு இடிபாடுகளை வெளியேற்ற வேண்டியிருந்தது. நவீன கருவிகளால் சுமார் 46 மீட்டர் தூரம் வரைதான் துளையிட முடிந்தது. அதன்பின், 12 மீட்டர் தூரம் வரை துளையிட வேண்டிய நிலையில் சிக்கல் ஏற்பட்டது.
அப்போதுதான் எலி வளை சுரங்க தொழிலாளரக்ள் (Rat-Hole Miners) வரவழைக்கப்பட்டனர். இவர்கள் ஒரு நாளைக்கு சுமார் 3 மீட்டர் தூரம் வரை தோண்டுவார்கள். இதனால் மூன்று நாட்களுக்கு மேல் ஆகலாம் என நினைத்திருந்தனர்.

செவ்வாய், 28 நவம்பர், 2023

சோழர்கள் ஆட்சியில் விற்பனை செய்யப்பட்ட அடிமைகளின் வரலாறு

May be an image of 2 people

இம்சை அரசி தென்றல்  : தமிழ்நாட்டில் சோழர்கள் ஆட்சியில் விற்பனை செய்யப்பட்ட அடிமைகளின் வரலாறு
இந்த நூலை எழுதியவர் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கல்வெட்டு - தொல்லியல் துறையின் முன்னாள் தலைவரும் ஆய்வாளருமான புலவர் செ. ராசு. அவர் சமீபத்தில்தான் உயிரிழந்த நிலையில், இந்தப் புத்தகம் வெளியாகிருக்கிறது.  ·
ஆ. சிவசுப்பிரமணியனின் புத்தகத்தில் 29 ஆவணங்கள் பதிவாகியிருந்த நிலையில், இந்த நூலில் 50 ஆவணங்களைப் பதிவு செய்து இங்கிருந்த அடிமை முறை குறித்துக் கூறுகிறார் செ. ராசு.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக தமிழ்நாட்டில் பெரிய அளவில் அடிமை முறை இருந்ததாக விவரிக்கிறது சமீபத்தில் வெளியான புத்தகம் ஒன்று. தங்களைத் தாங்களே விற்றுக் கொள்ளும் அளவுக்கு அப்போது இருந்த நிலைமை என்ன? புத்தகத்திலிருந்து விரிவான தகவல்கள்.

உங்களுக்கு அடையாளம் தந்தவர்' அமீருக்கு இயக்குநர் பாரதிராஜா ஆதரவு!

minnambalam.com: 'உங்களுக்கு அடையாளம் தந்தவர்' அமீருக்கு இயக்குநர் பாரதிராஜா ஆதரவு!
மின்னம்பலம் - Manjula : ‘உங்களுக்கு அடையாளம் தந்தவர்’ அமீருக்கு இயக்குநர் பாரதிராஜா ஆதரவு!
பருத்திவீரன் பிரச்சினையை சுமூகமாக பேசி தீர்த்து கொள்ளுங்கள் என, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு இயக்குநர் பாரதிராஜா அறிவுரை கூறியிருக்கிறார்.
கார்த்தியை வைத்து அமீர் இயக்கிய பருத்திவீரன் படம் வெளியாகி 16 ஆண்டுகள் கடந்து விட்டாலும் கூட, அந்த படம் படப்பிடிப்பின்போது நடந்த பிரச்சினைகள் இன்னும் தீராமல் கன்னித்தீவு போல நீண்டு கொண்டே செல்கின்றன. குறிப்பாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா-இயக்குநர் அமீர் இடையிலான பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

புலி சின்னம் பொறித்த ஆடையை அணிந்திருந்தவர் கைது

ilakkiyainfo.com :  புலி சின்னம் பொறித்த ஆடையை அணிந்திருந்தவர் கைது
புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும்  புலிகள் அமைப்பின் தலைவரின் உருவப்படம் பொறித்த ஆடை அணிந்து மாவீரர் நாள் நினைவேந்தலில் பங்கேற்ற இளைஞரொருவர் யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டார்.
கொடிகாமம் ஐயனார் கோவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞரே, செவ்வாய்க்கிழமை (28) கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் திங்கட்கிழமை மாவீரர் நினைவேந்தல் இடம் பெற்றது.

செல்வகணபதிக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனை ரத்து! (முன்னாள் அமைச்சர்)

நக்கீரன் : முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து!
கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் 1995 முதல் 1996 ஆம் ஆண்டு ஆண்டு வரையில் உள்ளாட்சித்துறை அமைச்சராக டி.எம்.செல்வகணபதி பதவி வகித்து வந்தார். அப்போது தமிழகம் முழுவதும் சுடுகாடுகளுக்கு கூரை அமைக்கும் திட்டத்தில் 23 லட்சம் ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் டி.எம்.செல்வகணபதி, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான ஜே.பி.ஆச்சார்யலு, எஸ்.சத்தியமூர்த்தி உள்ளிட்ட 5 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த 2014 ஆண்டு தீர்ப்பளித்தது. அதே சமயம் கூட்டுச் சதி என்ற குற்றச்சாட்டில் இருந்து இவர்களை நீதிமன்றம் விடுதலை செய்தது. கூட்டுச் சதி குற்றச்சாட்டில் இருந்து விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சிபிஐ தரப்பும், சிறை தண்டனையை எதிர்த்து செல்வகணபதி உள்ளிட்டோர் தரப்பும் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு மேல்முறையீடு செய்தனர்.

41 சுரங்க தொழிலிலாளர்களுக்கும் மீட்பு உத்தரகாண்ட் சுரங்கத்தில் இருந்து

 மாலை மலர் :  உத்தரகாசி உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா மலைப்பகுதியில் 4.50 கிலோமீட்டர் தூரத்துக்கு மலைக்கு கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்துவந்தது.
கடந்த 12-ம் தேதி நடந்த சுரங்கப்பாதை விபத்தில் தொழிலாளர்கள் 41 பேர் சிக்கிக் கொண்டனர். தொடர்ந்து இன்று 17-வது நாளாக மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, தொழிலாளர்களை மீட்க துளையிடும் பணி நிறைவடைந்துள்ளது. தொழிலாளர்களை மீட்க தயார் நிலையில், ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவ குழுவினர் உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொழிலாளர்களின் உறவினர்கள் சுரங்கத்தில் குவிந்துள்ளனர்.
சுரங்கத்திற்குள் சென்ற தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தொழிலாளர்களை வெளியே கொண்டுவர ஸ்ட்ரெட்ச்சர்களுடன் உள்ளே சென்றனர். அங்கு தற்காலிக மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

உத்தரகான்ட் சுரங்க விபத்து மோடி அரசின் இன்னொரு இமாலய குற்றம்!

 இம்சை அரசி தென்றல்   :  உத்ராகன்ட் சுரங்கபாதை விபத்துக்கு காரணம் யாருன்னு‌ தெரியுமா?
ஒரு பனவ்த்தி இருக்கே‌ அதே பீடைதான்.
சார்தம் யாத்ரானு இருக்கு.
அதாவது‌ நான்கு முனைகளில்‌ இருக்கும் புண்ணியஸ்தனங்களுக்கு‌ செல்லும் யாத்திரை.
வடக்கே பத்ரிநாத், தெற்கே ராமேஸ்வரம், மேற்கே துவாரகா மற்றும் கிழக்கே ஜகத்நாத்‌. இதற்கு ஒரு ஷார்ட் கட் உத்ராகன்ட்டுக்குள்ளேயே இருக்கு.
அது யம்னோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் என்ற நான்கு இடங்களுக்கும்‌ போனால்‌ அது‌வும்‌ ஒரு சார்தம் யாத்ராதான்.
சார்தம்முக்கு போகும் பக்தர்களின் பயணதூரத்தை 26 கிமீ கள் குறைக்கத்தான் இப்போது 41 தொழிலாளர்கள் மாட்டிக்கொண்ட சுரங்கப்பாதை போடப்படுகிறது.

உதயநிதிக்கு ப்ரமோஷன்- முந்திக் கொண்ட துரைமுருகன்

மின்னம்பலம்  - Aara  : நவம்பர் 26 ஆம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இளைஞரணி மாநில மாநாடு குறித்து விவாதிக்கப்பட்டது. திமுக வரலாற்றிலேயே முதல் முறையாக மாசெக்கள் கூட்டத்தில் அணிச் செயலாளரும், (உதயநிதி) அந்த அணியின் மாநில துணைச் செயலாளர்களும் கலந்துகொண்டனர். இதுபற்றி விரிவாக மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணை பகுதியில் செய்தி வெளியானது. Promotion to Udayanidhi
இந்த நிலையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பொதுச் செயலாளர் துரைமுருகனின் பேச்சு அமைச்சர் உதயநிதியை அடுத்த கட்டத்துக்கு இட்டுச் செல்வதற்கான அச்சாரமாக அமைந்திருப்பதாக சொல்கிறார்கள் திமுக வட்டாரங்களில்.
அப்படி என்ன பேசினார் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன்?

திங்கள், 27 நவம்பர், 2023

கலைஞர் மீது வீண் பழி சுமத்திய தமிழச்சி (சுமதி) தங்கபாண்டியன் ஆமைக்கறி சாப்பிட ஆசையாம் சீமானுக்கு போட்டி?


 மாலை மலர் : கடந்த 2009ல், இலங்கை ராணுவத்திற்கும் விடுதலை புலிகள் (LTTE) அமைப்பினருக்கும் இடையே நடைபெற்ற ஈழப்போரின் கடைசி கட்டத்தில், இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.
எல்.டி.டி.ஈ. அமைப்பினருக்கு எதிராக இந்திய அரசாங்கம் மறைமுகமாக இலங்கை அரசுக்கு ராணுவ உதவிகளை செய்து வந்ததாக அப்போது விமர்சனங்கள் எழுப்பப்பட்டன.
இந்தியாவில் அப்போது காங்கிரஸ் தலைமையில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) ஆட்சியில் தமிழ்நாட்டின் முக்கிய கட்சியான தி.மு.க.வும் அங்கம் வகித்தது. இது மட்டுமின்றி தமிழகத்திலும் தி.மு.க. ஆட்சியே அப்போது நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் ராணுவ உதவி அப்போதைய தி.மு.க. அரசாங்கத்திற்கு தெரிந்தே நடந்ததாகவும், அன்றைய முதல்வர் கருணாநிதி இதனை அறிந்திருந்தும் தடுக்க தவறியதால்தான் முள்ளிவாய்க்கால் படுகொலை நடைபெற்று அதில் அப்பாவி இலங்கை தமிழர்கள் உயிரிழந்ததாக தமிழகத்தின் மற்றொரு முக்கிய கட்சியான அ.தி.மு.க. குற்றஞ்சாட்டியது. தற்போது தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ள பல கட்சிகளும் அப்போது தி.மு.க.வை இதே காரணத்திற்காக குற்றஞ்சாட்டி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் தாக்கப்பட்டார்

tamil.oneindia.com - Vishnupriya R :  யூடியூபர்கள் வன்முறையை தூண்டுகிறார்கள்! இதுக்கெல்லாமா தாக்குவாங்க? வனிதாவுக்கு குரல் கொடுத்த காயத்ரி
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் தாக்கப்பட்ட சம்பவத்தில் போலீஸார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை காயத்ரி ரகுராம் கேட்டுக் கொண்டுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் அசைக்க முடியாத போட்டியாளராக இருந்தவர் பிரதீப் ஆண்டனி. இவர் நிறைய கெட்ட வார்த்தைகளை பேசினாலும் அவருக்கு ரசிகர்கள் ஏராளம். ஏனென்றால் அவர் நியாயமாக நடந்து கொண்டார் என்பது ரசிகர்களின் கருத்தாக இருந்தது.

இந்தியா - மது போதையில் பணிக்கு வந்த 1000 ரயில் ஓட்டுநர்கள்..இதுதான் 'சரக்கு' ரயிலோ.

tamil.samayam.com - ஜே. ஜாக்சன் சிங்  :  டெல்லி: இந்தியாவில் மது அருந்திவிட்டு பணிக்கு வந்ததாக சுமார் 1000 ரயில் ஓட்டுநர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
ஆர்டிஐ மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது. லட்சக்கணக்கான பயணிகளை அழைத்து செல்லும் ரயில் ஓட்டுநர்கள் இவ்வளவு அலட்சியமாக செயல்பட்டிருப்பது திகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகிலேயே அதிக ரயில் விபத்துகள் நிகழும் நாடுகளில் ஒன்றாக இந்தியா ஏன் இருக்காது என்ற கேள்வியும் நமக்கு எழுகிறது.
இந்தியாவிலேயே மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக விளங்குவது ரயில்வே தான்.

ஞாயிறு, 26 நவம்பர், 2023

முதல்வர் ஸ்டாலின் : பொதுமக்களிடம் நல்ல பெயர் எடுப்பவர்களுக்கே தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும்

மாலைமலர் : சென்னை  தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு சேலத்தில் அடுத்த மாதம் 17-ந்தேதி (டிசம்பர்) நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டை மிகப் பிரமாண்டமாக நடத்த தி.மு.க. முடிவு செய்துள்ளது.
இதற்காக சேலத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மாநாட்டில் 5 லட்சம் பேரை திரட்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து இருந்து எவ்வளவு பேர் வருவார்கள், எத்தனை கார், பஸ், வேன்கள் வரும் என்ற விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.
மாநாட்டுக்கு வருபவர்கள் ஒருநாள் முன்னதாகவே வந்து தங்கி கொள்ள திருமண மண்டபங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த மாநாட்டை வெற்றி மாநாடாக நடத்தி காண்பிக்க தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தி.மு.க. மாவட்டக் கழக செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம்' - தமிழ்நாடு கள் இயக்கம் அறிவிப்பு

'Struggle to unload and market s' - Tamil Nadu s movement announcement

நக்கீரன் : தமிழகத்தில் கள் இறக்கி சந்தைப்படுத்தும் உரிமை மீட்பு போராட்டம் வருகிற ஜன.21-ம் தேதி தமிழகம் முழுவதும் நடத்தப்படும் என சிதம்பரத்தில் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும் அவர் தமிழ்நாடு அரசிடம் கள்ளுக்கு அனுமதி கேட்பதும், கள்ளுக்கடைகளை திறக்க கோருவதும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானவை.
1950 ஜனவரி 26-ம் தேதி அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது.
அந்த சட்டத்தின்படிதான் கள் இறக்குவதும், பருகுவதுமாகும். கலப்படத்தை காரணம் காட்டி தமிழ்நாடு அரசு அந்த உரிமையை பறித்துள்ளது.
புதுச்சேரி, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில், உலகளவில் கள்ளுக்கு தடை கிடையாது.  
ஒரு மரத்து கள்ளை 48 நாட்கள் ஒரு மண்டலம் தொடர்ந்து பருகி வந்தால் பல நோய்கள் குணமாகும். இது மருத்துவம். கள் ஒரு அருமருந்து. சித்தவைத்தியத்தில் முக்கியமான மூலப்பொருள் கள்ளு. இயற்கை வைத்தியத்திற்கு பஞ்சகவ்யம் தயாரிக்க முக்கியமானது.