![]() |
கலைஞர் செய்திகள் : முரசொலி தலையங்கம் : பச்சை வர்ணாசிரம- சனாதன அரசியலைத்தான் அர்ச்சகர் நியமனத்திலும் செய்து வருகிறார்கள்.
முரசொலி நாளேட்டின் இன்றைய (செப்.03, 2022) தலையங்கம் வருமாறு:
கருவாட்டுக்கடையை பூனை சுற்றிவருவதைப் போல கோவிலையே சுற்றிக்கொண்டு இருக்கிறது பா.ஜ.க. இதற்கும் பக்திக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவர்களுக்கு இருப்பது அரசியல் பகல் வேஷம்தான்.
‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்பது மாபெரும் சமூகநீதித் தத்துவம் ஆகும். சாதியின் பெயரால் கோவில் அர்ச்சகர் நியமனங்கள் கூடாது என்பதுதான் அதன் உள்ளடக்கம் ஆகும். அதனை அனுமதிக்க மறுப்பதன் மூலமாக, சாதியைக் காப்பாற்ற நினைக்கிறது பா.ஜ.க. அதன் மூலம், பெரும்பான்மை மக்களுக்கு எதிராக இருக்கிறது பா.ஜ.க.