Shankar A :
சிவில்
சர்வீஸ் தேர்வுகள் எழுதுபவர்களுக்குத் தெரியும். நேர்முகத்
 |
Click to see bigger |
தேர்வுக்கு
சிறந்த பயிற்சி நிலையம் டெல்லியில் வாஜிராம் என்று சொல்லுவார்கள்.
சில மாதங்கள் முன்பு வரை, க்ரூப் 1 நேர்முகத் தேர்வுக்கு சிறந்த நிலையம்,
அப்போல்லோ மையம் என்பது தேர்வாளர்கள் அனைவருக்கும் தெரியும். அந்த
நிலையம், சைதை துரைசாமியின் பினாமி நிறுவனம்.
தற்போது, தமிழகத்தில்
இருந்து வெளி மாநிலங்களுக்கு சென்று, நீட் தேர்வு எழுதும் மாணவர்களின்
எண்ணிக்கை 39 மட்டுமே. இவர்கள் அனைவரும், அரசு மற்றும் அரசு உதவி பெ
றும் பள்ளி மாணவர்கள்.
தனியார் பள்ளி மாணவர்களின் கதையே வேறு. அவர்களில் ஒருவர்
பாக்கியில்லாமல், அத்தனை பேரும் தனியார் நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி
பெற்றவர்களே.
நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்படும் வரை,
நாமக்கல்லில், கோழிப் பண்ணைகள் போல பள்ளி நடத்தி வந்தவர்கள், ப்ளஸ் ஒன்
பாடத்தையே கற்றுக் கொடுக்காமல், இரண்டு வருடங்கள், ப்ளஸ் டூ பாடத்தை
விடாமல் நடத்தி, மாணவர்களை 1150க்கு மேல் மதிப்பெண் பெற வைத்து, அரசு
மருத்துவக் கல்லூரிகளின் அத்தனை இடங்களையும் ஆக்ரமிப்பார்கள்.
நீட் தேர்வு இந்தக் கோழிப் பண்ணைகளுக்கு பெரிய ஆப்பு வைத்தது.
கோடிக்கணக்கான ரூபாய்களை சம்பாதித்து வந்தவர்கள், இழந்த தங்கள் வருமானத்தை
அத்தனை எளிதில் தியாகம் செய்து விடுவார்களா என்ன ?
இவர்களுக்கு
வாராது வந்த மாமணிதான், நீட் பயிற்சி மையங்கள். இந்த தனியார் கோழிப்
பண்ணைகள், அத்தனையும், ஒரு நீட் பயிற்சி மையத்தோடு கூட்டணி அமைத்தார்கள்.
இதிலும் சில கில்லாடி கோழிப் பண்ணை உரிமையாளர்கள், தாங்களே நீட் பயிற்சி
மையத்தை தொடங்கினார்கள்.