சனி, 20 மே, 2017

ஹெச்.ராஜா :தமிழக அரசை பாஜக நேரடியாகவே இயக்கும்... சொல்லவே இல்ல ... எப்படிடா?

தமிழக அரசை பாஜக நேரடியாகவே இயக்கும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் கோவையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் சூழலை பாஜக நிச்சயம் பயன்படுத்தும். புறக்கடை பக்கமாக இருந்து தமிழக அரசை பாஜக இயக்காது. முன்பக்கமாக அதாவது நேரடியாகவே தமிழக அரசை இயக்குவோம். தமிழகத்தில் உள்ள அரசியல் சூழ்நிலையை பாஜக பயன்படுத்துகிறது என்று யாராவது குற்றம்சாட்டுவர்களேயானால் அவர்கள் அரசியல் அரிச்சுவடி தெரியாதவர்கள். ஏனென்றால் ஒரு அரசியல் கட்சி இருப்பதே தங்களுக்கு சாதகமாக சூழல் வரும்போது அதைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வருவதற்குத்தான்'' என்று ஹெச்.ராஜா கூறியுள்ளார்.tamilthehindu.com வானதியும் பொன்னாரும் மாலைகள் .. ரொம்ப பவ்வியமா .. அடச்சீ போங்க நேக்கு கூச்சமா இருக்கோன்னா?

கீழடி : புதைக்கப்படும் பழந்தமிழர் நாகரீகம் ! மதுரை அரங்கக் கூட்டம்

நாள் : 28.05.17 ஞாயிறு, மாலை 5.00 மணி
இடம் : செய்தியாளர் அரங்கம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரில், மதுரை.
  • தலைமை :
    தோழர் கதிரவன், மாநில செயற்குழு உறுப்பினர், ம.க.இ.க.
  • சிறப்புரை :
    முனைவர் சாந்தலிங்கம், தொல்லியல் அறிஞர்
  • தோழர் காளியப்பன், ம.க.இ.க. மாநில இணைச் செயலாளர்
துரைக்கு அருகில் கீழடியில் நடந்துள்ள அகழாய்வு மூலம், சங்க இலக்கியங்கள் சுட்டிக்காட்டும் வகையில் அமைந்த ஒரு நகர அமைப்பு தமிழகத்தில் இருந்திருக்கிறது என்பதை உறுதி செய்யும் வரலாற்றுச் சான்றுகள் தற்போது கிடைத்துள்ளது. மொத்தமுள்ள 10 ஏக்கரில் வெறும் 50 செண்ட் பரப்பளவில் நடந்துள்ள அகழாய்வு மூலம், ஏறக்குறைய கி.மு.1000-ல் வாழ்ந்த பழந்தமிழர்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரம் போன்றவற்றை நிரூபிப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

பள்ளிகூடங்களில் 3 வண்ண சீருடைகள் அறிமுகப்படுத்தப்படும்... கல்வி அமைச்சர் செங்கோட்டையன்


சென்னை: அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளிக்கூடங்களில் 3 வண்ண சீருடைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். திருச்செங்கோட்டில் நடைபெற்ற விழா ஒன்றில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது: 2018-19ம் கல்வியாண்டு முதல், அரசுப் பள்ளிகளில் 3 வண்ணங்களில் சீருடைகள் மாற்றப்படும். அரசுப் பள்ளி மாணவர்கள் நீட், ஜே.இ.இ தேர்வை எதிர்கொள்ள பயிற்சி தரப்படும். ஐ.ஏ.எஸ் பயிற்சி மையங்களை மாவட்டம் தோறும் அமைக்க திட்டமிட்டுள்ளோம்.

ரஜினியின் பிளாக் டிக்கெட் அரசியல் .

stanley.rajan. இந்த சிஸ்டமே கெட்டுபோய் உள்ளது : ரஜினிகாந்த்
ஆமாம் மிஸ்டர் ரஜினி, இந்த நடிகர்கள் எல்லாம் என்ன சம்பளம் வாங்குகின்றார்கள்?, கறுப்பாக எவ்வளவு? வெள்ளையாக எவ்வளவு? என்ன வரி கட்டுகின்றார்கள் என ஒரு மண்ணும் புரியவில்லை
இத்தனை நூறு கோடி சம்பாதிக்கின்றார்கள்? அவர்களை வைத்து ஜாஸ் சினிமா போன்றவையும் சம்பாதிக்கின்றன, அவர்களால் அரசுக்கு என்ன லாபம் எனவும் தெரியவில்லை திமுக ஆட்சிக்கு வந்தால் அந்த மேடையிலும், அதிமுக ஆட்சிக்கு வந்தா பின் வரிசையிலும் நின்றுகொண்டும், இரு கட்சிகளுமே இல்லாத நிலையில் டெல்லிக்கும் அருகில் நின்று கொண்டு வரிகளிலிருந்து தப்பிக்கும் அந்த நடிகர்களை கண்காணிக்க முடியாத அளவிற்கு சிஸ்டம் கெட்டுவிட்டது
பல நூறுகொடி செலவு செய்து, பல்லாயிரம் கோடி வசூலாகும் தமிழ்படங்களுக்கு, தமிழ்பெயர் வைத்தால் வரிவிலக்கு எனும் அளவில் பரிதாபமாக சிஸ்டம் கெட்டு போயிற்று

பிரபாஸ் அனுஷ்கா நிச்சயம் ? ராணா தமன்னாவை தேடுகிறார் ?

 பிரபாஸுக்கு ஓ.கே. சொன்ன அனுஷ்கா! பெண் பார்க்கும் ராணா!தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்காவுக்கு 35 வயது ஆகிறது. இவர் 2002–ம் வருடம் ‘ரெண்டு’ என்ற படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். ‘அருந்ததி’ படம் திருப்புமுனையாக அமைந்தது. வேட்டைக்காரன், வானம், தெய்வத்திருமகள், தாண்டவம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். லிங்கா படத்தில் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்தார்.
தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகி வசூலில் சாதனை நிகழ்த்தி வரும் பாகுபலி–2 படத்திலும் பிரபாஸ் ஜோடியாக நடித்து உள்ளார். தொடர்ந்து பாக்மதி என்ற தெலுங்கு படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

குரல் மாதிரி சோதனைக்கு டி.டி.வி. தினகரன் மறுப்பு!

குரல் மாதிரி சோதனைக்கு டி.டி.வி. தினகரன் மறுப்பு!
குரல் மாதிரி சோதனை செய்வதற்கு குரல் பதிவு செய்ய டிடிவி தினரகன் நீதிமன்றத்தில் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மே 20-ம் தேதி டெல்லியில் தன் குரலை பதிவு செய்ய நீதிமன்றத்தில் டி.டி.வி. தினகரன் மறுப்பு தெரிவித்துள்ளார். முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு மே 20-ம் தேதி விசாரிக்கப்பட்டது. கைப்பற்றிய ஆடியோ பதிவுடன் டி.டி.வி. தினகரன் குரலை ஒப்பிட்டு பார்க்க காவல்துறையினர் முடிவு செய்தனர். ஆனால் இதை மறுத்த தினகரன், “குற்றவியல் சட்டத்தில் குரல் மாதிரியை பதிவு செய்ய விதிகள் எதுவும் இல்லை” என கூறியுள்ளார்.

மின்னணு இயந்திரங்களை சேதப்படுத்த முடியும் என்பதை நிருபிக்க கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு!

புதுடில்லி: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது என தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி கூறியுள்ளார். பல  கட்சிகள் மின்னணு இயந்திரங்கள் சேதப்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டின. இது குறித்து கடந்த12ம் தேதி தேர்தல் ஆணையம் அனைத்து கட்சி கூட்டம் நடத்தியது. தொடர்ந்து இன்று மாதிரி மின்னணு ஓட்டு இயந்திரங்களை காண்பித்து அதில் சேதப்படுத்த முடியும் என்பதை செய்து காட்டும்படி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அங்கீகாரம். பின்னர் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி கூறியதாவது:
மின்னணு இயந்திரங்கள் சேதப்படுத்த முடியும் என்பதற்கு ஆதாரம் தேவை. மின்னணு இயந்திரங்கள் மூலம் வெற்றிகரமாக தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்கள் குறித்து பல சந்தேகம் எழுப்பப்பட்டது. இதனையடுத்து கடந்த 12ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. தேர்தல் நடைமுறையில் வெளிப்படை தன்மையை அதிகரிப்பது அனைவரின் பொறுப்பு. யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை தெரிந்து கொள்ளும் இயந்திரம் வாங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைவரின் சந்தேகங்களும் தீர்க்கப்படும்.திறமையாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடத்த அதிக விதிகளை கடைபிடித்து வருகிறது. நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்திவருகிறது. இதற்காக தேர்தல் ஆணையத்தை சர்வதேச நாடுகள் அங்கீகரித்துள்ளது.

சைதை துரைசாமியின் ஐ.ஏ.எஸ் பயிற்சி அகாடமி மாணவி மர்ம மரணம்

சென்னை: சென்னை சைதை துரைசாமிக்கு சொந்தமான ஐ.ஏ.எஸ் பயிற்சி அகாடமியில் படித்த மாணவி மர்ம மரணம் அடைந்துள்ளார். சேலம் கோம்பை பகுதியை சேர்ந்த மாணவி காயத்திரி மர்மமான முறையில் மரணம் எனப்புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கமாபுரி பட்டிணத்தில் மாணவியின் சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியல் ஈடுபட்டுள்ளனர்.தினகரன்

கேரளாவில் பாலியல் பலாத்காரம் செய்த சாமியாரின் பிறப்புறுப்பைத் துண்டித்த இளம் பெண்

தன்னை 5 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த சாமியாரின் பிறப்புறுப்பை பாதிக்கப்பட்ட பெண் துண்டித்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. 23 வயதான அந்தப் பெண்ணை அவரது தாயாரின் அனுமதியுடனேயே அந்தச் சாமியார் பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீஸ் தரப்பில், "கேரள
மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் கணேஷனந்தா. இவரை இன்று காலை திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சிலர் அனுமதித்தனர். அப்போது அவரது பிறப்புறுப்பு 90% அறுக்கப்பட்டிருந்தது. அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் தேறி வருகிறார். இது தொடர்பாக எங்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், தன்னை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததால் அவரது பிறப்புறுப்பை அறுத்ததாக 23 வயது பெண் ஒருவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

நிர்வாண சித்திரவதை: சிறையிலிருந்து வெளியே வந்த மாணவி பேட்டி


சிறையில் நிர்வாண சித்திரவதை செய்த மனித உரிமை மீறலை தனி நீதிபதி கொண்டு விசாரனை நடத்த வேண்டும் சிறையிலிருந்து வெளியே வந்த மாணவி தெரிவித்துள்ளார். நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவையும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக மாணவர் எழுச்சி இயக்கத்தை சேர்ந்த மாணவி வளர்மதி ரயிலில் சென்ற போதே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கடந்த ஏப்ரல் மாதம் 15ம் தேதி கைது செய்யப்பட்ட அவர் திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை சிறையில் அடைக்கும் முன்னர் ஜெயிலர் ஜெயபாரதி தலைமையில் 3 முறை தொடர்ந்து நிர்வாணப்படுத்தி சோதனையிட்டார்கள். ஆதே போல துணை ஜெயிலர் சோதனை என்ற பெயரில் என்னை நிர்வாணப்படுத்தி சோதனையிட்டார் உணவு சரியில்லை என்று புகார் கூறியதை தொடர்ந்து தனிமை சிறையில் அடைத்து கொடுமைபடுத்தினர்.

Lens பேசும் பிரச்சினை வெறும் பாசாங்கு மட்டுமே



ராஜசங்கீதன் லென்ஸ் படம் பார்த்துவிட்டேன். முக்கியமான பிரச்சனையைத்தான் கையாண்டிருக்கிறது. ஆனால் நல்ல படமா என கேட்டால், ஆமென சொல்வதில் பல தயக்கங்கள் இருக்கின்றன. அவை:பெண்ணே பாதிக்கப்பட்டாலும் ஆண் பாதிக்கப்பட்டதாகத்தான் கதை பின்னப்பட்டிருக்கிறது. பெண்ணுடல் சமாச்சாரமாக மட்டும் இப்பிரச்சினையை சமூகம் அணுகுவதால், பெண்ணின் கோணத்தில் சொல்லப்படுவதே சரியாக இருந்திருக்க முடியும். நடக்கவில்லை.


  • ஏற்க கஷ்டமாக இருந்தாலும் நீலப்படம் பார்த்தல் என்பது இன்றைய யதார்த்தமாக மாறிவிட்டது. இரு பாலினத்தாரும் பார்க்கின்றனர். கலவியை தூக்கி கொண்டு போய் பெட்டிக்குள் வைத்து பூட்டிவிட்ட சமூகத்தில், நீலப்படம் தவறு என்ற வாதத்தை தாண்டி விட்டோம் என்பதே நடைமுறை யதார்த்தம்.
  • அதற்காக பெண்களுக்கு தெரியாமல் நீலப்படம் எடுத்து வாழ்க்கையை நாசமாக்கலாமா என கேட்கலாம். நீலப்படமோ புகைப்படமோ வெளிவந்தாலும் பிரச்சினை ஏதும் கிடையாது என்ற சிந்தனையைத்தான் உருவாக்க வேண்டும்.
  • கூடங்குளம் அணுவுலைக்கு கேரள நீரை கொண்டுவாருங்கள்,.. தாமிரபரணி, பேச்சிப்பாறை , பெருஞ்சாணி ,,,

    Stanley Rajan தென் தொங்கல் மாவட்டத்தில் சில சலசலபுகள்
    ஏற்பட்டிருக்கின்றன‌
    அதாகபட்டது கூடங்குள அணுவுலைக்கு தாமிரபரணி நீரினையோ அல்லது பேச்சிப்பாறை, பெருஞ்சாணி நீரினை கொண்டு செல்லபோகின்றார்கள் என பல சர்ச்சைகள்
    அணுவுலை என்பது பெரும் நல்லநீரினை விழுங்கும் சமாச்சாரம், அந்த நீரை ஆவியாக்கித்தான் மின்சாரம் தயாரிக்க முடியும், அணு என்பது அடுப்பு, நீரே பிராதனம்
    இந்த பிரச்சினை முன்பே எழுந்தது, அப்பொழுது அணுவுலை போராட்டமும் நடந்தது, இரு பிரச்சினைகளை ஒன்றாக சமாளிக்க விரும்பாத மேலிடம், தந்திர திட்டமிட்டது
    முதலில் நதிநீரை எடுக்கபோவதில்லை , கடல்நீரை நன்னீராக்கி பயன்படுத்துவோம் என்றார்கள், பாதி கூட்டம் அடங்கிற்று, அப்பொழுதும் அணுவுலை போராட்டக்காரர்கள் "அப்படியா எங்கே கூடுதலாக கொஞ்சம் கடல்நீரை குடிநீராக்கி தெற்கு பக்கம் கொடுக்கலாமே" என கேட்டதற்கு இன்றுவரை பதிலில்லை
    பின் அணுவுலை போராட்டமும் சாதி, மதம் என அணுவுலை போராட்டமும் முடக்கபட்ட பின் இப்பொழுது மெதுவாக நதிநீருக்கு வருகின்றார்கள்
    பெரும் மூளைகளின் நரித்திட்டம் இப்படித்தான் இருக்கும்
    கூடங்குள அணுவுலை செயல்பட்டதாக சொன்னாலும் உண்மை நிலவரம் சந்தேகமே, அது தமிழக அரசினை போல பெரும் மர்மம்மாயிற்று, என்ன நடக்கின்றது என்றே தெரியவில்லை

    45 கோடி பிடிபட்ட பாஜக பிரமுகர் மீது வருமானவரி துறை நடவடிக்கை இல்லை!

    ரூ.45 கோடி செல்லாத நோட்டு வருமான வரித்துறை ஏற்க மறுப்பு சென்னையில் சிக்கிய, 45 கோடி ரூபாய் செல்லாத நோட்டுகளை ஏற்று விசாரணை நடத்த, வருமான வரித்துறை மறுத்துவிட்டது. சென்னை, கோடம்பாக்கத்தில், தண்டபாணி என்பவர் வீட்டில் இருந்து, 45 கோடி ரூபாய் மதிப்பிலான, செல்லாத ரூபாய் நோட்டுகளை, போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, பைனான்சியர் கிலானி என்பவரிடம் விசாரணை நடந்துவருகிறது. மேலும், வருமான வரித்துறை யினரையும், சென்னை போலீசார் நேற்று சந்தித்து பேசியுள்ளனர். இது தொடர்பாக, வருமான வரித் துறையினர் கூறியதாவது: செல்லாத ரூபாய்நோட்டுகளுக்காக, பிப்ரவரியில், மத்திய அரசு தனி சட்டம் இயற்றியுள்ளது. அதன்படி, செல்லாத ரூபாய் நோட்டு வழக்கில், ரிசர்வ் வங்கி தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது, எங்களை பொறுத்தவரை வெறும் காகிதம்; அதை ஏற்க முடியாது. ரிசர்வ் வங்கியும், சென்னை போலீசாரும் தான், இதுபற்றி விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர் தினமலர்

    எழுச்சியடையும் பெண் இயக்குநர்கள்! அபர்ணா சென், தீபா மேக்தா, பிரியா

    ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள இந்நிலையில், தற்போது உள்ள கல்வி சந்தையில் அதிகம் ஏலம் போகும் பாடமாகக் கடந்த சில ஆண்டுகளாக விஸ்காம் இருந்து வருகிறது. பொறியியல், மருத்துவம், மென்பொருள் என அனைத்துப் பாடங்களையும் பின்னுக்குத்தள்ளித் தற்போது அந்த இடத்தில் விஸ்காம் இடம் பெற்றுள்ளது.
    எப்போதுமே மக்களுக்குத் திரைப்படங்கள் மீது அதீதக் காதல் இருந்து வருகிறது. தற்போது கூடுதலாகக் குறும்படங்களின் தாக்கத்தால் இன்றைய மாணவர்களின் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் இன்னும் கூடுதல் கவனம் பெற்றுள்ளது. இது பால் வேறுபாடுகளின்றி இருபாலரையும் ஈர்த்துள்ளது. தற்போது ஆண்களை விடப் பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டுபவர்களாக இருக்கின்றனர். இன்றுள்ள ஒவ்வொரு திரைப்பட இயக்குநர்களிடமும் பெண் இயக்குநர்கள் உதவி இயக்குநர்களாக பணியாற்றுகின்றனர்.

    GM ஜெனரல் மோட்டர்ஸ் இந்தியாவில் கார் விற்பனை நிறுத்தம் ... ஏற்றுமதி தொடரும்..

    கார் விற்பனையை நிறுத்தும் ஜெனரல் மோட்டார்ஸ்! இந்தாண்டு இறுதியுடன் இந்தியாவில் தனது கார் விற்பனையை நிறுத்துவதாக ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் தயாரிக்கும் கார்களை இங்கிருந்து ஏற்றுமதி மட்டும் செய்யவிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
    அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், இந்தியாவின் குர்கான் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு கார்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. துவக்கம் முதலே இந்நிறுவனக் கார்களுக்கு மாருதி சுசூகி, ஹூண்டாய், டொயோடா போன்ற நிறுவனங்கள் கடும் போட்டியாகத் திகழ்ந்து வருகின்றன. போட்டியைச் சமாளிக்க முடியாததால் கடந்த மாதம் ஹாலோல் தொழிற்சாலையில் கார் உற்பத்தி நிறுத்தப்பட்டது. புனே நகருக்கு அருகிலுள்ள தாலேகான் தொழிற்சாலையில் மட்டுமே கார் உற்பத்தி நடைபெறுகிறது.

    மோடி அரசு கவிழும்: லாலு பிரசாத்

    மத்தியில் இருக்கும் பாஜகவின் ஆட்சி ஐந்து வருடம் முழுமை அடையாமல் கவிழ்ந்து விடும் என லாலு பிரசாத் கூறியுள்ளார்.
    ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் சம்பந்தமான இடங்களில் சில நாட்களுக்கு முன் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனைகள் குறித்து மே 19-ம் தேதி லாலு பிரசாத் பேசுகையில், “பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினை சார்ந்தவர்கள் கவனமாக கேட்டுக்கொள்ள வேண்டும். எந்த நிலையாக இருந்தாலும் சரி, டெல்லியில் உங்கள் பதவிகளில் இருந்து உங்களை லாலு பிரசாத் வெளியேற்றுவார். ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவினர், என் மீது வெறுப்புணர்ச்சியுடன் செயல்பட்டு வருகின்றனர். அதற்கு அவர்கள் விரைவில் பதிலளிக்க வேண்டியிருக்கும்.

    கனிமொழி :ஹிந்தி படிப்பது இல்லை என்ற முடிவுக்கு வந்தேன்.. ஹிந்தி தெரிந்தால்தான் இந்தியன் என்றதால்..


    Kanimozhi Karunanidhi :ஹிந்தி தெரிந்தால் தான் நீ இந்தியன் என்ற சூழலை எதிர் கொண்ட போது இனி என்ன ஆனாலும் உன் மொழியைக் கற்றுக்கொள்வதில்லை என்ற முடிவுக்கே வந்து விட்டேன்.
    மத்திய அரசின் இந்தி திணிப்பு மற்றும் #NEET தேர்விலிருந்து விலக்கு அளிக்காததை எதிர்த்து நேற்று கோவையில் நடந்த கருத்தரங்கத்தில் மாணவர்களுடன் உரையாடினேன்..
    மொழி என்பது வெறும் தொடர்புக்கு மட்டுமல்ல. அது நமது வரலாறு. கலாச்சாரம். பண்பாடு. தமிழை தமிழர்கள் மொழியாக மட்டும் பார்ப்பதில்லை. அது எங்கள் உணர்வோடு உயிரோடு உடலோடு கலந்தது. நாங்கள் ஹிந்தி என்ற மொழியை எதிர்க்கவில்லை. அது எங்கள் மேல் திணிக்கப் படுவதைத் தான் எதிர்க்கிறோம். இதைக் கலைஞர், தளபதி இருவரும் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளனர்.
    நாடாளுமன்றத்துக்குப் போகும் போது நானும் அங்குள்ள சூழலில் ஹிந்தி கற்றுக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையோடு தான் போனேன். ஆனால் ஹிந்தி தெரிந்தால் தான் நீ இந்தியன் என்ற சூழலை எதிர் கொண்ட போது இனி என்ன ஆனாலும் உன் மொழியைக் கற்றுக்கொள்வதில்லை என்ற முடிவுக்கே வந்து விட்டேன். இந்தி நமது தேசிய மொழி அல்ல. 22 ஆட்சி மொழிகளில் ஹிந்தியும் ஒன்று. இதை உச்ச நீதி மன்றம் தெளிவுபடுத்தி விட்டது. நாம் இதை உணரவேண்டும்.
    மைல் கல்லில் ஹிந்தி.
    கடிதம் எழுதினால் ஹிந்தியில் பதில்.
    அறிவிப்புக்கள் ஹிந்தியில்.

    வெள்ளி, 19 மே, 2017

    MGR பல்கலைகழக துணைவேந்தர் கீதாலட்சுமி விதிகளை மீறிய விலை உயர்ந்த மகிழூந்து .. மகிழுங்க மகிழுங்க

    எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி விதிகளை மீறி விலை உயர்ந்த சொகுசு கார் வாங்கியுள்ளது அம்பலமாகியுள்ளது. By: Mayura Akilan சென்னை: அமைச்சர்கள், உயரதிகாரிகள் கூட வாங்காத அளவிற்கு விதிகளை மீறி எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி விலை உயர்ந்த சொசுகு கார் ஒன்றினை வாங்கியுள்ளது வருமான வரித்துறை நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தராக கீதாலட்சுமி பதவியேற்றதில் இருந்தே அவர் நடத்திய அக்கப்போர்கள் பற்றி கதை கதையாக கூறி வருகின்றனர். பணி நியமனத்திற்கு அவர் பெற்ற கப்பங்கள், பணம் கொடுத்து அவர் சாதித்த காரியங்கள் என பலரும் இப்போது புட்டு புட்டு வைக்கின்றனர். அமைச்சர்கள், விவிஐபிக்கள் வாங்காத அளவிற்கு அரசு பணத்தில் அவர் வாங்கிய சொகுசு கார் பற்றிதான் இப்போது ஒரே பேச்சாக உள்ளது.

    ஆஸ்திரியாவில் முஸ்லிம் பெண்கள் முக்காடு அணிய தடை .. பொது இடங்களில் .. அபராதம் ..


    Austria's parliament has approved a burqa ban that will see women wearing full-face veils in public fined €150 (£130) as part of new integration ...
    ஆஸ்­தி­ரி­யா­வா­னது பொது இடத்தில் பெண்கள் இஸ்­லா­மிய முறைப்­படி முக்­காடு அணி­வ­தற்கு தடை விதிக்கும் சட்­ட த்தை நிறை­வேற்றி­யுள்­ளது. மேற்­படி சர்ச்­சைக்­கு­ரிய சட்­ட­மா­னது குடி­யேற்­ற­வா­சிகள் அந்­நாட்டு சமூ­கத்­து டன் ஒருங்­கி­ணைந்து கொள்­வது தொடர்­பான பயிற்சி வகுப்­பு­களில் கலந்து கொள்­ளவும் புக­லி­டக்­கோ­ரிக்­கை­யா­ளர்கள் கட்­ட­ண­மின்றி பொதுச் சேவையில் ஈடு­ப­டவும் நிர்ப்­பந்­திக்­கி­றது. மேற்­படி சட்­டத்தின் பிர­காரம் எதிர்­வரும் ஒக்­டோபர் மாதத்­தி­லி­ருந்து பல்­க­லைக்­க­ழ­கங்கள், நீதி­மன்­றங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து­களில் முக்­காடு மற்றும் முகத்தை மறை க்கும் வகையில் ஆடை அணி­ப­வர்கள் 130 ஸ்ரேலிங் பவுண் பெறு­ம­தி­யான தண்டப் பணத்தை செலுத்த வேண்­டி­யி­ருக்கும் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

    Facebook ! முகநூல் Fake முகங்களுக்கும் உண்மை முகங்களுக்கும் இடையே ஒரு தளம்?

    Shalin Maria Lawrence fakeகள் சூழ் உலகு
    'All the world's a stage and we are mere players ' . அப்படினு ஷேக்ஸ்பியர் சொல்லுவாரு , அதாவது இந்த உலகமே ஒரு நாடக மேடை அதில் எல்லோரும் நடிகர்களே . உண்மைதான் இல்லையா ?
    எல்லோரும் ஒரு முகமூடி அணிந்து கொண்டு ஏதோ ஒரு கதாபாத்திரமாக வாழுகிறோம் .
    இந்த முகநூலில் அதே போன்ற பல கதாபாத்திரங்கள் வெவ்வேறு முகமூடிகளோடு . சொந்த முகங்களை அணிந்த சில போலி மனிதர்கள் , போலி முகம் அணிந்த சில உண்மை மனிதர்கள் .
    முகநூல் அப்படிங்கிற இந்த டிஜிட்டல் உலகத்த சுவாரஸ்யமா வச்சிக்கறதுல இந்த fake idsக்கு பெரும் பங்கு இருக்குறத நம்மளால மறுக்க முடியாது .
    பார்வதி மேனன் படம் போட்ட fake ids இரவும் பகலும் ,காதலிக்கிறார்கள் முகநூலில் இந்த கோடையிலும் கூட மழையை வருவிக்கிறார்கள் .
    பறவை ,நீர்த்துளி ,caricature ,pencil ஸ்கெட்ச்,ஹாலிவுட் இயக்குனர்களின் படங்கள் வைத்த fake idகள் கவிதை வடிக்கிறார்கள் , தற்போது இலக்கிய உலகில் உள்ள கவிஞர்களின் எழுத்தை எல்லாம் தூக்கி சாப்பிடும் தரத்துடன் படைப்புகளை பதிகிறார்கள் .
    சமூகநீதி பதிவுகள் நியாயத்தை யாருக்கும் அஞ்சாமல் கமெண்டில் பதிய ரகுவரன் ,பெரியார் படங்கள் போட்ட fake id கள் .
    ஆண்களை ஏமாற்றும் ஆண் பிரியாக்கள் ,ஆண் சிந்துக்கள் .
    சுவாரஸ்யமாக தான் இருக்கிறது .

    தமிழ் ஸ்டுடியோவின் பாலுமகேந்திரா விருது விழாவில் கலந்துக்கொள்ளுங்கள்... சனிக்கிழமை .

    ArunThamizhstudio? இன்று பாலுமகேந்திரா பிறந்தநாள்
    என்னுடைய திரையுலக வாழ்வில் நான் சமரசமின்றி எடுத்தத் திரைப்படங்கள் இரண்டு. ஒன்று வீடு. இன்னொன்று சந்தியா ராகம் என்று பாலுமகேந்திரா அடிக்கடி சொல்வார். இத்தகைய உண்மையை, வெளிப்படையாக தமிழ் சினிமாவில் என்பதுகளில் உருவான வேறு எந்த இயக்குனராவது சொல்ல முடியுமா? அது பாலுமகேந்திராவால் மட்டுமே முடியும். தமிழ் சினிமாவின் எதேச்சிகாரத்தை, அதன் வணிக சமரசங்களை தன்னுடைய வாழ்நாள் முழுக்க கண்டித்து பேசிய இயக்குனர்களில் முதன்மையானவர் பாலுமகேந்திரா. ஒரு படைப்பாளி தான் சார்ந்த துறை அல்லது தொழில்நுட்பத்தில் மட்டுமே கவனம் செலுத்திவந்தால் போதுமா? நிச்சயம் போதாது. இதை தெளிவாக உணர்ந்தவர் பாலுமகேந்திரா. திரைப்படங்கள் இயக்குவது தவிர்த்து, அதனை அடுத்த தலைமுறை மாணவர்களுக்கு கடத்துவதை மிக முக்கிய பணியாக செய்து வந்தவர்.
    எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ்நாட்டில் நல்ல சினிமா சார்ந்து இயங்கி வந்த எல்லா திரைப்பட அமைப்புகளுக்கும், இயக்கங்களுக்கும் பெரும் உறுதுணையாக இருந்தவர். தமிழ்நாட்டில் மாற்றுத் திரைப்பட இயக்கங்களுக்கு தொடர்ச்சியாக ஆதரவு குரல் எழுப்பியவர் பாலுமகேந்திரா.ஓவியம் Ravi Palette

    ரஜினி விரும்பும் சரியான சிஸ்டம் .. விபரங்கள் பட்டியல் ...

    Venkat Ramanujam: ஜனநாயகம் கெட்டுப்போய் இருக்கிறதே. மக்களின் சிந்தனையில் மாற்றம் கொண்டுவர வேண்டும். அப்போதுதான் நாடு உருப்படும்... Rajnikanth #Superstar
    🔷 #ஐஸ்வர்யா இந்திய பிரதிநிதியாக United nationas
    பாரத நாட்டியம் ஆடவாய்ப்பு கொடுக்கும் மத்தியிலும் மாநிலத்திலும் #பிஜேபி ஆட்சி .. அதை பாராட்டா சீராட்ட central minister #naidu
    🔷 #லதா ரஜினிகாந்த் சம்பளம் கொடுக்காமல் நடத்தும் #Ashram பள்ளி பற்றி புகார் கொடுத்தாலும் கேக்காத காவல் நிலையம் ..
    🔷 #தனுஷ் #DNA டெஸ்ட் வேணாம் சொன்ன உடனே ஓகே dude என்று சொல்ல ஒரு உயர்நீதி மன்றம் ..
    🔷 #சௌந்தர்யா கடன் வாங்கி கொடுத்த 3 crores செக் பவுன்ஸ் ஆகி பஞ்சர் ஆகி போன நிதி நிறுவனங்கள் ..
    🔷 #Swathi மரணத்தில் போலீஸ் விசாரணை முன்னே முஸ்லீம் பேரை சொல்லி ஸ்கோர் பண்ணும் brother in law ராஜதந்திர Y.G.Mahendra
    🔷 #பிஜேபி உயர்மட்ட நிர்வாகியா இருக்கும் Y.G.Mahendra பொண்ணு மதுமிதா .
    🔷 #மாமியார் நடத்தும் Padma Sesthari , KK Nagar பள்ளியில் மர்மமான முறையில் சிறுவன் இறந்தும் #FIR போடாத காவல் துறை ..
    🔷 வட்டா வட்டம் #பீப் பிட்டு ரிலீஸ் பண்ணி அது நான் இல்ல சொல்ல ஒரு விளையாட்டு பையன் லதா தம்பி பையன் greatest non copist music director அனிருத்த

    தமிழகத்தில் ஈழ விவகாரத்திற்கு உயிர் கொடுத்தது கலைஞர் ... பின்பு எம்ஜியார் குதித்தார் .. பிரபாகரனை மட்டும் சேர்த்தார் எல்லாவற்றையும் கெடுத்தார் .

    Stanley Rajan: ஈழவிவகாரத்தை இந்திரா கையில் எடுத்ததும் முதலில் வரவேற்றது கலைஞர், அமிர்தலிங்கம் சென்னை வந்தபொழுது முதலில் வரவேற்க சென்றதும் அவரே
    அதுவரை தமிழகத்தில் ஈழ அபிமானம் ஏதுமில்லை, 1964ல் மலையக மக்கள் திருப்பி அனுப்பபடும்பொழுது சிறிய சலசலப்பு மட்டும்தான் இருந்தது
    கலைஞர்தான் ஈழவிவகாரங்களுக்கு தமிழகத்தில் உயிர்கொடுத்தார், விடுவாரா ராமசந்திரன்? அவர் உள்ளே குதித்ததுதான் பிரச்சி
    னையின் மூலம்
    கலைஞர் ஆழ்ந்து சிந்திப்பவர். தமிழகம் என்றுமே டெல்லிக்கு ஆகாது, மாநில கட்சி அதுவும் முன்பு பிரிவினை பேசிய கட்சி இன்னொரு நாட்டு பிரிவினையினை பேசுவது பெரும் ஆபத்தில் முடியும் என கணித்தார்
    அது மகா உண்மையும் கூட பின்னாளில் வைகோ அனாதை ஆனது அப்படித்தான், 2009ல் புலிகள் அடிபட்டு சாக இந்தியா அமைதியாக இருந்ததும் அப்படித்தான்
    அதனால் அகில இந்திய அளவில் ஈழபிரச்சினை எதிரொலிக்காமல் தீர்வில்லை என்றுதான் அன்று டெசோ அமைப்பினை வாஜ்பாய், பரூக் அப்துல்லா, பட்நாயக் என அகில இந்திய தலைவர்களை வைத்து அசத்தினார்
    "இலங்கை தமிழரை தொட்டால், இந்தியா முழுக்க அதிரும்" என அவர் ராஜதந்திரமாக மிரட்டி நின்றார்

    ரஜினிகாந்த் : சிஸ்டம் சரியில்ல .. இப்ப வீட்டுக்கு போங்க .. போர் வரும்போது வாங்க...

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா இல்லையா? என்ற பேச்சு ஊர்முழுக்க பேசப்படுகிறது. 9 வருடத்திற்கு பின்னர் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வரும் ரஜினிகாந்த் அரசியல் குறித்து பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார். முதல் நாள் பேசிய ரஜினிகாந்த் நான் அரசியலுக்கு வரமாட்டேன் என நினைத்தால் நீங்கள் ஏமாந்து போவீர்கள் என தனது அரசியல் நிலைப்பாட்டை கூறினார். அந்த பேச்சு குறித்த அலசல்கள் இன்னமும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் இன்று மீண்டும் பேசிய ரஜினிகாந்த் மிகவும் உற்சாகமாக பேசினார். நான் ஒரு பச்சை தமிழன் என பேசிய ரஜினிகாந்த், போர் வரும் போது பார்த்துக்கொள்ளலாம் என கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். தனக்கு இருக்கும் எதிர்ப்பை பற்றி கூறிய ரஜினி எதிர்ப்பு இருந்தால் தான் வளர முடியும், அதுவும் அரசியலில் எதிர்ப்பு தான் மூலதனம். மேலும் அரசில் சிஸ்டம் சரியில்லை எனவும் குற்றம்சாட்டினார். வெப்துனியா

    கோவாவில் பாலம் உடைந்து விபத்து: 50 பேர் நீரில் மூழ்கி மாயமானதால் பரபரப்பு

    கோவா மாநிலம் சர்சோரெம் பகுதியில் நடைபாதை ஆற்றுப்பாலம் உடைந்து விபத்துக்குள்ளானதில், 50 பேர் நீரில் சிக்கி கொண்டனர். தற்கொலைக்கு முயன்ற வாலிபரை காப்பாற்றும் காட்சியை வேடிக்கை பார்த்த போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. தற்கொலைக்கு முயன்ற வாலிபரை காப்பாற்றும் காட்சியை வேடிக்கை பார்த்த 50 பேர் ஆற்றில் விழுந்தனர் பனாஜி: கோவா மாநிலம் தெற்கு பகுதியில் சர்சோரெம் பகுதியில் நடைபாதை ஆற்றுப் பாலம் ஒன்று திடீரென விபத்துக்குள்ளானது. அப்போது பாலத்தில் இருந்த 50-க்கும் அதிகமானோர் ஆற்றில் விழுந்தனர். இந்த சம்பவம் இன்று மாலை 6.30 மணியளவில் நடைபெற்றது. விபத்துக்குள்ளான பாலம் போர்த்துகீசியர் காலத்தில் கட்டப்பட்டதாகும். இந்த பாலம் சன்வோர்தெம் ஆற்றின் குறுக்கே உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஒரு வாலிபர் ஆற்றில் குறித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை காப்பாற்ற மீட்புப் படை குழுவினர் முயன்று வந்தனர்.

    10-ம் வகுப்பு.. 481-க்கும் மேல் 38,613 பேர் பெற்றனர்

    எஸ்எஸ்எல்சி (10-ம் வகுப்பு) பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டன. பிளஸ் 2 தேர்வு போல, இதற்கும் ரேங்க் பட்டியல் எதுவும் வெளியிடப்படவில்லை. மொத்த தேர்ச்சி விகிதம் 94.4% ஆகும். இது கடந்த ஆண்டைவிட 0.8% அதிகம்.
    பிளஸ் 2 தேர்வைப் போலவே பத்தாம் வகுப்பு தேர்விலும் விருதுநகர் மாவட்டமே அதிக தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது. விரிவான செய்திக்கு | 10-ம் வகுப்பு தேர்விலும் விருதுநகர் மாவட்டம் முதலிடம் |
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500-க்கு 481 மதிப்பெண்ணுக்கு மேல் 38,613 பேர் பெற்றனர். 451-ல் இருந்து 480 வரைக்கும் 1,22,77 பேர் பெற்றுள்ளனர். விரிவான செய்திக்கு | 10-ம் வகுப்பு தேர்வில் 481-க்கும் மேல் 38,613 பேர் பெற்றனர் |
    எஸ்எஸ்எல்சி (10-ம் வகுப்பு) பொதுத்தேர்வு கடந்த மார்ச் 8-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி நிறைவடைந்தது. தமிழகம், புதுச்சேரியில் 9 லட்சத்து 94 ஆயிரத்து 167 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். மேலும், தனித்தேர்வர்கள் 39 ஆயிரத்து 741 பேர், சிறைக் கைதிகள் 224 பேரும் தேர்வில் கலந்துகொண்டனர்.
    தேர்வு முடிவுகள் மே 19-ம் தேதி வெளியிடப்படும் என்று, தேர்வு தொடங்குவதற்கு முன்பே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, எஸ்எஸ்எஸ்சி தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டது. சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள அரசு தேர்வுத்துறை தலைமை அலுவலகத்தில் தேர்வு முடிவுகள், பள்ளிகளின் தேர்ச்சி நிலை விவரங்களை அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி காலை 10 மணிக்கு வெளியிட்டார்.

    ‘பறை அடிப்பவர்களுக்குப் படிப்பு எதற்கு?’ விகடன் ; ஒரு வரி... ஒரு நெறி! - 12

    சுகிர்தராணி :இந்தச் சமூகம் மிகவும் விசித்திரமானது. அநீதிக்குத் தண்ணீர் நிரப்பப் பட்ட சொகுசுப் படுக்கையையும், நீதிக்கு கற்கள் அடைக்கப்பட்ட கொடூரப் படுக்கையையும் அளித்துக் கொண்டிருக்கிறது. நீதியும், நேர்மையும், சமத்துவமும் கரடுமுரடான பாதையில்தான் பயணித்துக் கொண்டிருக் கின்றன. மானுட விடுதலையை, மனித மாண்பை அடைய விரும்பும் தலைவர்கள் எல்லாம் கற்களைக் கடக்காமல் சென்றிருக்க முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகத் தன் முகத்தைக் காட்டிக்கொண்டிருக்கிறது இந்தச் சமூகம். இது எல்லோரிடம் ஒரே மாதிரியாக நடந்து கொள்ளும் நாள் வரும் என்ற எதிர்பார்ப்பில்தான் முற்போக்குவாதிகளின் பயணம் தொடர்கிறது. அப்படியான மனிதர்களில் நானும் ஒருத்தி. சாதி வேறுபாடுகளற்ற, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளற்ற, மேம்பட்ட ஒரு சமூகத்தை அடைய விரும்பி நம்பிக்கையோடு செயல்பட்டுக் கொண்டிருப்பவள். நான் ஒரு ஆசிரியை. நான் நன்றாகப் படித்து இந்த உயரத்தை எட்டியதற்கும், எழுத வந்ததற்கும் ஒரே ஒரு வரிதான் காரணம். அது, ‘பறை அடிப்பவர்களுக்குப் படிப்பு எதற்கு?’ என்ற ஏளன வரி.

    சிதம்பரம் ரெயிட் ! பாஜக Preemtive Attack பலமான எதிர்கட்சிகள் கூட்டணி ... மோப்பம் பிடித்த மோடி அரசு?

    முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் அதிரடி வியூகத்தை பார்த்து அலறிப் போய்தான் சிபிஐ சோதனை நடத்தப்பட்டதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளார்; ரஜினிகாந்த் கட்சியும் காங்கிரஸும் இணைந்து போட்டியிடும் திட்டம் இருக்கிறது; ப. சிதம்பரம்தான் முதல்வர் வேட்பாளர் என கராத்தே தியாகராஜன் கொளுத்திப் போட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
    .. தலைவர்கள் சங்கமம் இது தொடர்பாக நாம் விசாரித்த போது ப.சிதம்பரத்தைப் பார்த்து பாஜக அலறுவதற்கு சொல்லப்படும் காரணங்கள் அடடே ரகங்களாகத்தான் இருக்கின்றன.
    திமுக தலைவர் கருணாநிதி வைரவிழாவுக்கு மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக், லாலு பிரசாத் யாதவ் என அகில இந்திய தலைவர்கள் அழைப்பதன் பின்னணியில் இருப்பதே சிதம்பரம்தானாம்.
    மெகா கூட்டணி இவர்கள் அனைவரையும் தமிழகத்துக்கு வரவழைப்பதன் மூலம் மோடிக்கு எதிராக மிகப் பெரும் அணியைக் கட்டமைக்க முடியும் என்பது சிதம்பரத்தின் நம்பிக்கை.

    1121 பொருட்களுக்கு வரி நிர்ணயம் செத்து ஜி எஸ் டி ஆணையம்

    புதுடெல்லி: உணவு தானியங்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. உணவு தானியங்கள், டூத்பேஸ்ட், ஹேர் ஆயில், சோப் விலை குறையும்.  நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்புக்கு வகை செய்யும் ஜிஎஸ்டி வரி ஜூலை 1ம் தேதியில் இருந்து நாடு முழுவதும் அமல்படுத்தப்பட இருக்கிறது. இவற்றில் வரி விதிப்பு 4 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன்படி  5, 12, 18, 28 சதவீதம் என நான்கு பிரிவாக வரி விதிப்பு இருக்கும். இதில் எந்த சதவீதத்துக்குள் எந்த பொருள் அல்லது சேவையை கொண்டுவருவது என, இதற்காக அமைக்கப்பட்ட ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனை நடத்தி வந்தது. மாநில பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த ஆலோசனைகள் நடந்தன. மேலும் தொழில்துறைகள் சார்பில் தங்கள் துறைக்கு வரியை குறைக்க வேண்டும் அல்லது வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

    வியாழன், 18 மே, 2017

    ராமேஸ்வரம் கோவிலில் 164 நகைகள் ,162 ஐம்பொன் சிலைகளை கானவில்லை .. தகவல் அறியும் சட்டம் மூலம் தெரியவருகிறது..

    1972ம் ஆண்டு ராமேஸ்வரம்கோயிலில் 325 நகைகள் இருந்து இருக்கிறது. ஆனால் 1995ம் ஆண்டு தணிக்கையின்படி நகைகளின் எண்ணிக்கை 164 என அறிக்கை கூறுகிறது. இந்த இடைப்பட்ட 25 வருடத்தில் எப்படி 161 நகைகள் மாயமானது. அதுபோல 1972ம் ஆண்டு ஐம்பொன் சிலைகளின் எண்ணிக்கை 552 என்று அறிக்கை கூறுகிறது. ஆனால் 1995ம் ஆண்டு அறிக்கையின் படி 390 ஐம்பொன் சிலைகள் இருப்பதாக தகவல்கள் கூறுகிறது. 
    அப்படி என்றால் 162 ஐம்பொன் சிலைகள் எங்கே மாயமானது. மன்னர்கள், மற்றும் பல கொடை வள்ளல்கள் பல ராமேஸ்வர கோவிலுக்கு  ச பல வகையான நகைகள், சிலைகள் செய்து கொடுத்து வந்தனர். அப்படி பழமையும், சிறப்பும் வாய்ந்த  நகைகள், சிலைகள் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து மாயமாகி இருப்பது சிவ பக்தர்கள் இடையே அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.; ராமேஸ்வரத்தை சேர்ந்தவர் பட்சிராஜன் இவர். பல்வேறு போராட்டங்களுக்கு இடையே தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ஒரு பெரிய உண்மையை வெளியே கொண்டு வந்துள்ளார். இதனால் இந்து சமய அறநிலையத்துறை விழிபிதுங்கி உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் அறிக்கையின் படி 161 நகைகள், 162 ஐம்பொன் சிலைகள், மாயமாகி உள்ளதாக தெரிகிறது. பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த இந்த நகைகள், சிலைகள் எப்படி மாயமாகும். இந்து சமய அறநிலையத்துறையின் அறிக்கையின் படி 1972ம் ஆண்டு ராமேஸ்வரம்கோயிலில் 325 நகைகள் இருந்து இருக்கிறது. ஆனால் 1995ம் ஆண்டு தணிக்கையின்படி நகைகளின் எண்ணிக்கை 164 என அறிக்கை கூறுகிறது.

    மக்கள் கூட்டம் கூட்டமாக சென்னை மெட்ரோ ரயிலை பார்க்க ...


    சென்னையில் புதிதாக தொடங்கப்பட்ட நேரு பூங்கா - திருமங்கலம் சுரங்க வழித்தடம் ரெயில் சேவையில் பயணம் செய்ய பொதுமக்களிடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது. சென்னை: சென்னை பெருநகரின் மற்றொரு அடையாளமாக மெட்ரோ ரெயில் சேவை நடக்கிறது. 2 வழித்தடங்களில் இத்திட்டம் 45 கிலோ மீட்டர் தூரத்திற்கு படிப்படியாக நிறைவேற்றப்படுகிறது. உயர்மட்ட பாதையில் 2015-ம் ஆண்டு முதல் சேவை தொடங்கப்பட்டாலும் சுரங்கப்பாதையில் எப்போது சேவை தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது. சென்னை மக்களின் நீண்ட நாள் கனவு திட்டமான மெட்ரோ ரெயில் சுரங்க பாதையில் கடந்த 14-ந்தேதி சேவையை தொடங்கியது. சேவை தொடங்கிய 2 நாளில் 80 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். சுரங்கப்பாதையில் பயணம் செய்ய பொது மக்களிடம் ஆர்வம் அதிகரித்து வருகிறது. தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால் குழந்தைகளுடன் பெற்றோர்களும் பயணம் செய்கிறார்கள்.

    BBC: குல்புஷன் ஜாதவை தூக்கிலிடுவதற்கு சர்வ தேச நீதிமன்றம் தடை

    உளவு பார்த்ததாக குற்றம் சுமத்தப்பட்ட ஓய்வு பெற்ற இந்திய கடற்படை அதிகாரி குல்புஷன் ஜாதவை இறுதி முடிவெடுக்கும் வரை தூக்கிலிடக்கூடாது என்று சர்வதேச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. >குல்புஷன் ஜாதவை பாகிஸ்தான் தூக்கிலிடுவதைத் தடுக்க வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா மனு செய்திருந்த வேளையில், இவ்வழக்கு தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரோனி ஆபிரஹாம் இன்று வழங்கிய தீர்ப்பில், ''இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு தரப்பும் வியன்னா ஒப்பந்தத்தை மதிக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.   இனி இந்தியாவுக்கு எதிரான வழக்குகளை பாகிஸ்தான் வங்காளதேசம் நேபாளம் இலங்கை போன்ற நாடுகளும் சர்வ தேச நீதிமன்றத்துக்கு எடுத்து செல்லக்கூடும் . மோடி அரசின் தவறான முன்னெடுப்பு . இந்தியாவின் உள்நாட்டு நீதித்துறையில் சர்வதேசம் தலையிட ஒரு வாய்ப்பு உள்ளது .. உதாரணம் யாகுப் மேனன் போன்றவர்களின் வழக்குகள் .......???

    சுப.உதயகுமாரன் : ரஜினி கறுப்பு பணம் வாங்கியது இல்லை என்று உறுதி மொழி கொடுப்பாரா?

    திரு. ரஜினிகாந்த் ஆண்டவனிடம் தொலைபேசி வழியாகவோ. மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது வேறு வழிகளிலோ பேசிவிட்டு கட்சித் துவங்கட்டும். ஆனால் பொதுவாழ்வுக்கு வருவதற்கு முன்னர் கீழ்க்காணும் விடயங்களை அவர் கட்டாயம் செய்தாக வேண்டும்:
    [1] தனது உண்மையான, முழுமையான சொத்துக் கணக்கைக் காட்ட வேண்டும்.
    [2] கடந்த ஐந்தாண்டுகளில் கட்டிய வருமானவரிக் கணக்கு விபரங்களை, தணிக்கை அறிக்கைகளை தமிழ் மக்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும்.
    [3] இதுவரை தனது சம்பளத்தில் ஒரு சிறு பகுதியைக்கூட கருப்புப் பணமாகப் பெற்றதில்லை என்று எழுத்துபூர்வமாக அறிவிக்க வேண்டும்.
    [4] எந்தெந்த ஜோதிடர்கள், பூசாரிகள், சாமியார்கள் இவருக்கு அறிவுரைக்கிறார்கள், அல்லது முடிவுகள் எடுக்க உதவுகிறார்கள் என்கிற முழு விபரத்தை அறியத்தர வேண்டும். [5] நதிநீர் இணைப்புக்கு நன்கொடை தருவதாக அறிவித்த ஒரு கோடி ரூபாயை யாரிடம் கொடுத்தார். அந்தப் பணம் எப்படி செலவு செய்யப்பட்டது என்கிற விபரத்தைத் தர வேண்டும்.
    [6] தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினைகள் குறித்த அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து, தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் விதத்தில் பொதுமேடை ஒன்றை அமைத்து மக்களை சந்திக்க வேண்டும்.
    >சுப. உதயகுமாரன், பச்சைத் தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்.thetimestamil.com

    கோடம்பாக்கத்தில் 45 கோடி ரூபாய் பழைய நோட்டுக்கள் ... தி.நகர் நகைக்கடை உட்பட பலரின் பணம் ..

    45 கோடி ரூபாயைப் பதுக்கிவைத்த தண்டபாணி யார்?' - நகைக்கடை முதல் நடிகை வரை வெளிவராத பரபர பின்னணி
    எஸ்.மகேஷ்
    எஸ்.மகேஷ்சென்னை கோடம்பாக்கத்தில், 45 கோடி மதிப்பிலான பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளைப் பதுக்கிவைத்த தண்டபாணி குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
    சென்னை கோடம்பாக்கம் என்றாலே, கோலிவுட் பிரபலங்களின் கூடாரமாக ஒருகாலத்தில் இருந்தது. ஆனால் தற்போது, நிலைமை அப்படியல்ல. கோலிவுட் பிரபலங்கள் அங்கிருந்து குடிபெயர்ந்துவிட்டனர். சாதாரண குடிமக்கள் மட்டுமே குடியிருக்கும் இடமாக கோடம்பாக்கம் மாறியிருக்கிறது. சென்னை கோடம்பாக்கம், ஜக்கரியா காலனி 2-வது தெரு, நேற்றிரவு திடீரென பரபரப்பாகக் காணப்பட்டது. காக்கிகள் ஒரு வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். இந்தத் தகவல் எதுவும் தெரியாமல், கோடம்பாக்கம் உறங்கிக்கொண்டிருந்தது.

    மத்திய அமைச்சர் அணில்தவே மரணம் ... சுற்று சூழல் துறை அமைச்சர் .. ஆர் எஸ் எஸ் கடும்போக்காளர்!

    ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் முக்கிய பணியாற்றி பின்னர் சுற்றுச்சூழல்துறை அமைச்சராக பதவியேற்றவர் அனில்மாதவ் தவே இன்று உடல்நலக்குறைவினால் மரணமடைந்துள்ளார். By: Mayura Akilan டெல்லி: ஆஸ்பெஸ்டாஸ் கூரை இல்லாத நகரங்களை உருவாக்குவதே தனது லட்சியம் என்று கூறி வந்தவர் அனில் மாதவ் தவே. 2009ஆம் ஆண்டு முதல் ராஜ்யசபா உறுப்பினராக இருக்கும் அனில் மாதவ் தவே கடந்த ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் தேதி மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக மோடி அமைச்சரவையில் இடம் பெற்றார். மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அனில் மாதவ் தவே, ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் பெரும்பங்காற்றியவர். உடல்நலக்குறைவினால் சிகிக்சை பெற்று வந்த போதும், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்று ஆர்வமுடன் செயல்பட்டவர் அமைச்சர் தவே என்ற தகவல் வெளியாகியுள்ளது. ..