ஏசு கிறிஸ்துலகமே ஓய்வெடுக்கும் நள்ளிரவு முழுக்க ஓய்வில்லாமல் எனது ஆலை இயந்திரத்தை இயக்கிவிட்டு, வெளி உலகம் எந்திரமாய் இயங்கிக்கொண்டிருக்கும் காலைப் பொழுதில் நானோ தூங்கி கொண்டிருந்தேன்.
“உங்களின் சகல துன்பங்களையும் கர்த்தராகிய யேசு போக்குவார்”
ஆமென்… உங்களை கர்த்தர் ஆசிர்வதிப்பாராக. உங்களின் சகல துன்பங்களையும் கர்த்தராகிய யேசு போக்குவார். நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். கர்த்தரை நேசியுங்கள். உங்கள் பாவங்களை உடனடியாக மன்னிப்பார். இறுதியாக உங்களுக்கு ஏதேனும் கடன் தொல்லை, குடும்ப பிரச்சனை, நிம்மதியின்மை, எதுவாக இருந்தாலும் எங்களிடம் வந்து சொல்லுங்கள். உங்களுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம். உங்கள் வாழ்வில் கஷ்டம் நீங்கி ஒளி பிறக்கும்” என
பிரசங்கம் செய்து கொண்டிருந்த சத்தம் கேட்டு, எழுந்து வெளியே சென்று பார்த்த போது எனது வீட்டின் முன் பெரிய வண்டி நின்று கொண்டிருந்தது. அதில் மைக் செட் கட்டப்பட்டிருந்தது. சுமார் 10 பேர் கையில் பிரசுரம், புத்தகம், சாக்லேட், என அனைவருக்கும் வீடு வீடாக சென்று கொடுத்துக் கொண்டிருந்தனர்.