![]() |
ந. சரவணன்: காலச்சுவடு இதழிலில் எழுத்தாளர் தொ.பத்திநாதன் அவர்களது கட்டுரை காலச்சூழலுக்கு ஏற்ற ஒன்றாகவே காண முடிகிறது.
Pathi Nathan : தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள், அவர்களின் நிலை, அவர்களுக்கு உள்ள வாய்ப்புகள், மாநில அரசு அனுகும் விதம்,
ஏற்கனவே இருந்த பார்வையில் இருந்து அகதிகளை தற்போது அனுகும் விதம். என்பது பற்றியும்,
அடுத்து மத்திய மாநில அரசுகள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் தெளிவான ஒரு பார்வையினை முன் வைத்துள்ளார்.
குறிப்பாக தமிழக முகாம்களில் இருக்கும் மக்கள் வெவ்வேறு பின்புலங்களை கொண்டவர்களாக இருக்கிறார்கள்,
அதாவது இந்திய வம்சாவழி தமிழர்கள் மற்றும் இலங்கை தமிழர்கள் என இருக்கின்றனர். இருவேறு பின்புலங்களை கொண்ட மக்களுக்கான வாய்ப்புகளை வெவ்வேறு வகையான அனுகுமுறையிலேயே அனுக இயலும். அதற்குத்தான் தற்போதைக்கு வாய்ப்பிருக்கிறது.