சனி, 29 ஜூன், 2024

சுப்புலட்சுமி ஜெகதீசன்! சங்கிகளின் கங்காணி சீமான் தமிழ்நாட்டுக்கு செய்த துரோகம்

தமிழ்க்கவி  :   சீமான்டியனின் போலி ஈழப் பாசம்!!!
2021 சட்டமன்ற தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் திமுகவின் துணை பொதுச் செயலளார் அம்மா சுப்புலட்சுமி ஜெகதீசன் போட்டியிடுகிறார்.
தேர்தலில் வென்று தமிழ்நாட்டின் முதல் பெண் சபாநாயகராக பதவியேற்பார் என்ற நிலையில் அதிமுக கூட்டணியின் பாஜக வேட்பாளரிடம் 281 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழக்கிறார்.
அம்மா சுப்புலட்சுமி ஜெகதீசன் ஈழ விடுதலைக்காக, போராளிகளுக்காக ஆதரவளித்ததற்காக ஜெயலலிதாவின் அதிமுக அரசால் தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு கொடூர அடக்குமுறைக்கு ஆளானவர் என்பது வரலாறு.
தன் பயணத்தை அதிமுகவில் ஆரம்பித்தாலும் எம்ஜிஆரை தீவிரமாக எதிர்த்து, திமுகவுடன் தொடர்ந்து சமரசமின்றி பயணம் செய்த ஒரு சமூகநீதி போராளி அம்மா சுப்புலட்சுமி.

பட்டாசு ஆலை வெடி விபத்து.. சாத்தூர் ... உயிரிழந்த 4 பேருக்கு தலா ரூ.3 லட்சம்!

 மின்னம்பலம் - Kavi :  சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
சாத்தூர் அருகே அச்சங்குளத்தை சேர்ந்த சகாதேவன் என்பவருக்கு சொந்தமாக பட்டாசு ஆலை ஒன்று பந்துவார்பட்டியில் செயல்பட்டு வருகிறது.
இங்குள்ள 6 அறைகளில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. வழக்கம் போல் இன்று ஊழியர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர். மருந்து கலவை செய்து கொண்டிருக்கும் போது ஒரு அறையில் உராய்வு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டுள்ளது.

கொடநாடு வழக்கில் இன்டர்போல்... சட்டமன்றத்தில் CM.ஸ்டாலின் அறிவிப்பு!

 மின்னம்பலம் - Selvam  :  கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை இன்டர்போல் உதவியுடன் விசாரித்து வருகிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 29) சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
சட்டமன்றத்தில் காவல்துறை மானியக்கோரிக்கை மீது முதல்வர் ஸ்டாலின் இன்று பதிலளித்து பேசினார். தொடர்ந்து மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், “மிக முக்கியமான வழக்கான கொடநாடு வழக்கு குறித்து இந்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை இந்த அவைக்கு தெரிவிப்பதை எனது கடமையாக கருதுகிறேன்.
கொடநாடு வழக்கில் இதுவரை 268 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு எதிரிகள் பயன்படுத்திய 8 செல்போன்கள், 4 சிம் கார்டுகள் கைப்பற்றப்பட்டு கோவை வட்டார தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இலங்கை கடற்படை வீரரை அடித்து கொன்ற தமிழக மீனவர்கள்? 10 மீனவர்கள் மீது இலங்கையில் வழக்கு

 தினத்தந்தி :  இலங்கையில் கைதான இந்திய மீனவர்கள் 10 பேர் மீது வழக்கு
கடற்படை மாலுமி உயிரிழந்த விவகாரத்தில் இலங்கையில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பு,
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கடந்த 24-ந்தேதி இந்திய மீனவர்கள் 10 பேரை கைது செய்து, அவர்களின் படகை பறிமுதல் செய்தனர். இந்த கைது நடவடிக்கையின்போது இந்திய மீனவர்கள் தப்ப முயன்றதாகவும், அப்போது இலங்கை கடற்படை மாலுமி ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, பின்னர் அவர் மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி விமான நிலைய மேற்கூரை வீழ்ந்து 3 பேர் பலி. கனமழை பாதிப்பு

thinakaran.LK :  தலைநகர் டெல்லியில் கனமழை பொழிந்து வருகிறது. இதன் காரணமாக டெல்லி விமான நிலைய மேற்கூரை விழுந்து மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் காயமடைந்துள்ளனர். நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
விமான நிலைய மேற்கூரை சரிந்தது மட்டுமின்றி அதனை தாங்கியிருந்த பீமும் விழுந்ததில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் சேதமடைந்தன. இந்த சம்பவம் டெல்லி விமான நிலைய டெர்மினல் 1 பகுதியில் நடந்துள்ளது. மழை காரணமாக விமான சேவையும் தாமதம் அடைந்துள்ளதாக தகவல்.

வெள்ளி, 28 ஜூன், 2024

சுனிதா வில்லியம்ஸ்- பூமிக்கு திரும்பி வருவதில் சிக்கல்.. விண்வெளியில் சிக்கிய...

மாலை மலர்  :  நாசா இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ். அமெரிக்க கடற்படை அகாடமியில் படித்த இவர், 1998-ம் ஆண்டு நாசா விண்வெளி பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து 2006 மற்றம் 2012-ம் ஆண்டுகளில் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
இதன்மூலம் அதிகநேரம், அதாவது 50 மணி நேரம் 40 நிமிடங்கள் விண்வெளியில் நடந்த இரண்டாவது பெண் என்ற பெருமையை பெற்றார்.
இந்நிலையில் கடந்த 5-ந்தேதி சுனிதா வில்லியம்ஸ் மீண்டும் விண்வெளி பயணம் மேற்கொண்டார்.

வியாழன், 27 ஜூன், 2024

குழந்தைகளை கடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்த கும்பல்;சிக்கியது - கர்நாடகாவில்

 தினமணி  : கர்நாடகத்தில் குழந்தைகள் விற்கும் கும்பலை தனிப்படை காவல் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் துமகுரு மாவட்டத்தில் குழுந்தை விற்பனை செய்யும் கும்பலைச் சேர்ந்த செவிலியர் கல்லூரியின் நிர்வாக இயக்குநர், செவிலியர், டாட்டூ கலைஞர், ஆட்டோரிக்‌ஷா ஓட்டுநர் உள்ளிட்ட 7 பேரை கர்நாடக காவல் துறையினர் சமீபத்தில் கைது செய்துள்ளனர்.
இந்த கும்பல் புதிதாகப் பிறந்த குழந்தைகளை சுமார் ரூ. 2 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை பெற்று விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. மேலும், விற்கப்பட்ட 9 குழந்தைகளில் 5 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

கடலூரில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை கடித்து கொன்ற தெரு நாய்!

தேவதாசி முறை ஒழியப் புரட்சி செய்த மூவலூர் இராமாமிர்தம் நினைவு நாள் ஜூன் 27. (1962)

 சு.குமாரதேவன் :  தேவதாசி முறை ஒழியப் புரட்சி செய்த மூதாட்டி
மூவலூர் இராமாமிர்தம் நினைவு நாள் ஜூன் 27. (1962)
* பெண்களுக்கு எதிரான சமயச் சடங்குகளில் மிகக் கொடூரமானது ஒரு குறிப்பிட்ட சமூகப் பெண்களை பொட்டுக்கட்டி தேவதாசி ஆக்குவது.
அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடியாது.
கோவிலில் நடனம் ஆட வேண்டும்.
உயர்சாதியாருக்கு உடன்பட வேண்டும்.
அந்த சமூகத்தில் பிறந்த ஆண்கள், நாயனம், மேளம் வாசிப்பதிலும், நட்டுவனார்களாகவும் வாழ்க்கையை நடத்தினர்.
* இக்கொடுமையை மயிலாடுதுறை அருகே உள்ள மூவலூரில், கிருஷ்ணசாமி என்பவர் எதிர்த்தார். இதனால் கடும் எதிர்ப்பு மற்றும் கொலை மிரட்டல் போன்றவற்றால் ஊரைவிட்டே சென்னைக்கு ஓடிவந்துவிட்டார்.
அவருக்கும் சின்னம்மாள் என்பவருக்கும் 1883-ம் ஆண்டு இராமாமிர்தம் பிறந்தார்.

2 மாதத்தில் $2 பில்லியன்.. தமிழ்நாட்டின் வளர்ச்சி !

2 மாதத்தில் $2 பில்லியன்..தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பார்த்து வாயை பிளக்கும் கர்நாடகா,மகாராஷ்டிரா..!

tamil.goodreturns.in - Prasanna Venkatesh  :  சென்னை: இந்தியாவின் ஏற்றுமதி சந்தையில் டெக்ஸ்டைல், பெட்ரோலியம் பொருட்கள், இன்ஜினியரிங் பொருட்கள், ஐடி சேவை ஆகியவற்றைத் தாண்டி தற்போது வேகமாக வளரும் துறையாக எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதி உள்ளது.
5 வருடத்திற்கு முன்பு சிறிய அளவிலான ஏற்றுமதி மட்டுமே கொண்டிருந்த இத்துறை தற்போது வருடம் 10 பில்லியன் டாலர் அதாவது 80000 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.

புதன், 26 ஜூன், 2024

கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் குஷ்பு ஆய்வு!

நக்கீரன் : கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 6 பெண்கள் உட்பட 61 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது.
சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஜாதி வாரி கணக்கெடுப்பை “உடனே ஆரம்பிங்க”.. பிரதமர் மோடிக்கு அவசர கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

 tamil.oneindia.com  -  Vignesh Selvaraj  :சென்னை: பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாகத் தொடங்க வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாகத் தொடங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், இன்று தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள திர்மானத்தைச் சுட்டிக்காட்டியும் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.

கனடா, ஆஸ்திரேலியாவில் மாணவர் விசா விதிகள் கடுமை – இந்திய மாணவர்கள் அதிர்ச்சி

  பிபிசி தமிழ் : வெளிநாடு சென்று கல்வி கற்க வேண்டும் என விரும்பும் இந்திய மாணவர்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுப்பது கனடா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளை தான். குறிப்பாக கனடாவில் கல்வி கற்க இந்திய மாணவர்கள் அதிகளவில் விண்ணப்பிப்பது வழக்கம். ஆனால் கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் சமீப காலமாக, மாணவர் விசாக்களைப் பெறுவதற்கான சட்டங்களையும் விதிமுறைகளையும் கடுமையாக்கி வருகின்றன.
தமிழ்நாட்டிலிருந்து இந்த நாடுகளுக்கு சென்று படிக்க விரும்பும் மாணவர்கள் மத்தியில் இந்த புதிய விசா விதிமுறைகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதைப் பார்க்கலாம்.

ராகுல் காந்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு!

 tamil.asianetnews.com  -   Balan :  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணித் தலைவர்களின் கூட்டத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 18வது மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

விஷ சாராயம்: குஷ்பூ தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு!

 தினத்தந்தி  :  கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து இதுவரை 59 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 5 பெண்கள் அடங்குவர். மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சிகிச்சையில் உள்ள 156 பேரில் 96 பேரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுவரை 8 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கள்ளச்சாராய வழக்கில் 20-க்கும் மேற்பட்டோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

சபாநாயகர் தேர்தல் - BJP ஓம்பிர்லா VS Congress கொடிக்குன்னில் சுரேஷ்! ‛இந்தியா’ கூட்டணி வெல்ல வாய்ப்பு?

 tamil.oneindia.com - Nantha Kumar R :  டெல்லி: இந்தியா சுதந்திர அடைந்ததில் இருந்து இதுவரை லோக்சபா சபாநாயகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு வந்தார்.
ஆனால் முதல் முறையாக தற்போது பாஜக கூட்டணி மற்றும் ‛இந்தியா' கூட்டணி சார்பில் தனித்தனியாக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் தேர்தல் மூலம் சபாநாயகர் தேர்வு செய்யப்பட உள்ளார்.
இந்நிலையில் தான் லோக்சபா சபாநாயகர் தேர்தல் எப்படி நடக்கும்?,
பாஜக கூட்டணியை வீழ்த்தி ‛இந்தியா' கூட்டணி வேட்பாளர்களால் வெல்ல முடியுமா? என்பது பற்றி இங்கு பார்ப்போம்.
லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்தன. மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. அதன்பிறகு ஜுன் 4ல் ஓட்டு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

செவ்வாய், 25 ஜூன், 2024

விக்கிலீக்ஸ் - ஜூலியன் அசாஞ்ச் விடுதலை

  BBC News தமிழ் -, பெர்ண்ட் டெபுஸ்மேன் : நீண்ட கால சட்டப் போராட்டத்திற்கு பின்னர், விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை அமெரிக்க அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டு, அதுதொடர்பாக ஒப்பந்தம் செய்துகொண்டதையடுத்து, அவர் விடுதலையாகி பிரிட்டனிலிருந்து வெளியேறியதாக, விக்கிலீக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க தேசிய ஆவணங்களை பெற்று, அதனை வெளியிட சதி செய்ததாக 52 வயதான அசாஞ்சே மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற போர்கள் தொடர்பாக, விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்கள் மூலம் பலரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதாக பல ஆண்டுகளாக அமெரிக்கா வாதாடியது.

ஹஜ் - 1300-ஐ கடந்த உயிரிழப்புகள்.. திணறும் சவுதி அரேபியா

 வீரகேசரி : ஹஜ் புனித பயணத்தில் சோகம்.. 1300-ஐ கடந்த உயிரிழப்புகள்.. திணறும் சவுதி அரேபியா
“ரியாத்:சவுதி அரேபியாவில் உள்ள புனித மெக்காவுக்கு புனித பயணம் செல்வதை முஸ்லிம் மக்கள் தங்களின் வாழ்வியல் கடமைகளில் முக்கியமானதாக கருதுகின்றனர்.
இதனால் உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஆண்டுதோறும் மெக்கா, மதீனாவுக்கு ‘ஹஜ்’ புனித பயணம் செல்கின்றனர்.
அதன்படி இந்தாண்டு ஹஜ் பயணமாக மெக்காவில் சுமார் 18 லட்சம் முஸ்லிம்கள் குவிந்தனர்.
இதனிடையே இந்த மாத தொடக்கத்தில் இருந்தே சவுதி அரேபியாவில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. குறிப்பாக மெக்காவில் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது.
இதனால் ஹஜ் பயணம் சென்ற பலர் வெயில் தாக்கத்தை தாங்க முடியாமல் சுருண்டு விழுந்து உயிரிழந்தனர்.

வேல்முருகன் : சபாநாயகர் அப்பாவு மீது பகிரங்க குற்றச்சாட்டு.. சட்டமன்றத்தை அலறவிட்ட

 tamil.samayam.com - ஜே. ஜாக்சன் சிங் :  சென்னை: சபாநாயகர் அப்பாவு சட்டமன்றத்தில் தான் பேசுவதை தடுப்பதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டினார். திமுக கூட்டணியில் இருந்து கொண்டு, சட்டமன்ற சபாநாயகருக்கு எதிராக வேல்முருகன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் கடந்த 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் தொடர்பாக சட்டமன்றத்தில் தங்களை பேசவிடுவதில்லை என்று அதிமுக எம்எல்ஏக்கள், பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்து வருகின்றனர்.

நவீன் பட்நாயக் அதிரடி : No more Support to BJP - இனி பாஜகவுக்கு ஆதரவு இல்லை !

Hindu tamil :

 hindutamil.in  : நாடாளுமன்றத்தில் இனி பாஜகவுக்கு ஆதரவு கிடையாது: பிஜு ஜனதா தளம் அறிவிப்பு
புவனேஸ்வர்: "நாடாளுமன்றத்தில் இனி பாஜகவுக்கு எங்களின் ஆதரவு இல்லை. என்டிஏவுக்கு ஆதரவு என்ற கேள்விக்கே இடமில்லை. இனி நாங்கள் எதிர்க்கட்சி மட்டுமே" என நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் அறிவித்துள்ளது.
ஒடிசா மாநிலத்தில் நடந்து முடிந்த, சட்டப்பேரவைத் தேர்தலில் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து, கடந்த 24 ஆண்டுகளாக ஒடிசாவின் முதல்வராக இருந்துவந்த நவீன் பட்நாயக், தன் பதவியை ராஜினாமா செய்தார்.
அதேபோல் மக்களவை தேர்தலிலும் பிஜேடி படுதோல்வியை சந்தித்தது. மொத்தம் உள்ள 21 தொகுதிகளில் பாஜக 20 தொகுதிகளையும், காங்கிரஸ் ஒரு தொகுதியையும் வெல்ல, ஆளும் கட்சியாக இருந்த பிஜேடி ஒரு தொகுதியை கூட வெல்ல முடியவில்லை.

மதுவால் தமிழகத்தில் விதவைகள் அதிகரித்துள்ளது! .. ஆய்வில் வெளிவந்த தகவல்!

tamil.oneindia.com  -   Vignesh Selvaraj  :  மதுரை: தமிழ்நாட்டில் விதவைகள் அதிகரிக்க காரணம் மதுபானமே என்றும், தமிழகத்தில் உள்ள கைம்பெண்களில் 38 சதவிகிதம் பேரின் கணவர்கள் மதுவால் உயிரிழந்துள்ளனர் என்றும் ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மது போதை காரணமாக கணவர்கள் இறப்பால் விதவைகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நலச்சங்கம் தெரிவித்துள்ளது. பெண்கள் கைம்பெண்களாக மாறுவதற்கு என்ன காரணம், அவர்களின் பாதுகாப்பு, பொருளாதார நிலை உள்ளிட்டவை குறித்து ஆதரவற்ற பெண்கள் நலச் சங்கத்தினர் ஆய்வு நடத்தினர்.

சீமான் : குடும்பத் தலைவிக்கு 1000 ரூபாதான்.. குடிச்சி செத்தவனுக்கு 10 லட்சமா?

 மாலை மலர்  : கள்ளக்குறிச்சி கருணாபுரம் மற்றும் மாதவச்சேரியை சுற்றியுள்ள பகுதியில் கடந்த 18-ந் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு 10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் கள்ளச்சாராய மரணங்கள் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

தமிழ்நாட்டில் விடுதலை புலிகளின் உள் கட்சி போராட்டமும் கொலைகளும்

வெற்றிசெல்வன்  :  தமிழ்நாட்டில் விடுதலை புலிகளின் உள் கட்சி போராட்டமும் கொலைகளும்
ரூபன் படுகொலை இறுதிப் பகுதி
மனித நேயம் இன்றி அரசியல் பக்குவம் இன்றி தமது புரட்சிகர கடமை பற்றிய புரிந்துணர்வு இன்றி வெறுமனே ஆயுதம் தாங்கி தலைமையின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து குறிபார்த்து சுடும் போராளிக்கும் சிங்கள ராணுவ வீரனுக்கும் கூலிப்படையின் எனக்கும் என்ன வேறுபாடு இத்தகையவர்கள் மனித மேம்பாடு உடைய புதிய சமுதாயத்தை உருவாக்க தகுதியுடையவர்கள் தானா?
       எல்லாவற்றுக்கும் மேலாக போராளிகளுக்காக தம்மையும் ஒறுத்து ஆதரவும் தந்து அவர்களை நம்பி வாழும் தமிழ் மக்களிடமிருந்து இயக்கத்தின் உண்மை நிலைமை எவ்வளவு காலம் மறைத்து வைப்பீர்கள் . நீங்கள் மௌனம் சாதிப்பது ஊழல் நிறைந்த உங்கள்தலைமையுடன்சமரசம் செய்து அதன் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு அனுசரணையாக இருப்பதற்கு சமமாகும்
இயக்கத்தில் இருக்கும் பல உண்மை போராளிகளை போலவே தமிழ் மக்களும் பல தியாகங்களை செய்து உள்ளார்கள் பலர் பலியாகி விட்டார்கள்

யாழ்ப்பாணத்தில் சாதி பாகுபாடு எந்த அளவு உள்ளது? BBC Report

திங்கள், 24 ஜூன், 2024

சென்னையில் தாய், தம்பியைக் கொலை செய்த 20 வயது இளைஞர்

இந்து  : சென்னையின் திருவொற்றியூரில், தனது தாயையும் சகோதரனையும் கொலை செய்ததற்காக 20 வயது இளைஞர் ஒருவரை சனிக்கிழமையன்று (ஜூன் 22) காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த வாரம் புதன்கிழமையன்று நடந்த இந்த சம்பவம் இரண்டு நாட்கள் கழித்து தான் வெளிச்சத்திற்கு வந்ததாகவும், கைது செய்யப்பட்ட இளைஞரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறை அறிக்கை கூறுகிறது.
‘தி இந்து’ நாளிதழின் செய்தியின் படி, கல்லூரி மாணவரான அந்த இளைஞர் சரிவர படிக்காததால் பல பாடங்களில் தோல்வியடைந்திருந்தார்.

இது குறித்து இளைஞருக்கும், தாய்க்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் குடும்ப பொருளாதாரம் தொடர்பான அழுத்தம் மற்றும் வேறு சில குடும்ப பிரச்னைகள் காரணமாக அவர் இந்தக் கொலைகளில் ஈடுபட்டுள்ளார் என காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணத்திற்கு பின்னால் RSS சதி?

 Neyveli Ashok :  கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணத்திற்கு பின்னால் RSS சதி இருக்குமா ?
RSS ரகசிய அறிக்கை 411/RO 30311/RSS CO3 (விடுதலை 26-3-95,  இந்துஸ்தான் டைம்ஸ் தொகுப்பு 1 - 1998 ஆகியவற்றில் இதனை காணலாம்)  இன் படி தான் இன்று நடக்கும் சம்பவங்கள் எல்லாம் இருக்கிறது போல தெரிகிறது. எப்படி ? முழுமையாக படியுங்கள்.....
பல ஆண்டுகளாக இருக்கும் குடிநீர் தொட்டியில் மலம் கலப்பது,
கள்ளக்குறிச்சி மாணவி மரணம்,
 - அதை தொடர்ந்து நடந்த கலவரம்,
அதுபோலவே ஓசூர் பகுதியில் நடந்த கலவரம், இப்போது கூட சேலம் பகுதியில் கோவில் உள்ளே விட மாட்டோம் என்ற பிரச்சனை, சென்ற ஆண்டும் இந்தாண்டு போலவே விஷ சாராயம் மரணம் என்று சம்பவங்கள் நடக்கிறது....
மேற்சொன்ன அந்த அறிக்கையில், 34 கட்டளைகள் RSS தனது கணவன்களுக்கு கொடுத்துள்ளது. அதில் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் என்றென்றும் ஒன்று சேரக்கூடாத வகையில் எவ்வாறெல்லாம் வேலை செய்யலாம் என்று திட்டங்கள் உள்ளது.

கல்வராயன் மலையில் கள்ளச்சாராய வேட்டைக்கு சென்ற 7 போலீசார் திடீர் மாயம்! தேடும் பணி தீவிரம்!

 tamil.oneindia.com  -  Vignesh Selvaraj  :  கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கல்வராயன் மலையில் கள்ளச்சாராய வேட்டைக்கு சென்ற திருச்சி பட்டாலியன் போலீசார் 7 பேர் மாயமானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததால் 59 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நூற்றுக்கும் அதிகமானோர் தற்போது சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் கள்ளச்சாராயத்தை தடுக்கத் தவறிய ஆளும் திமுக அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
kallakurichi illicit liquor tamil nadu Kalvarayan hill Police

நாடார்.. கவுண்டர்.. பிராமணர்.. பாஜகவில் சாதி பார்த்து நீக்கம் : திருச்சி சூர்யா குற்றச்சாட்டு!

 மின்னம்பலம் -  christopher :  ”எல்லோரும் இந்து என்று மேடையில் ஒப்புக்கு சொல்லிவிட்டு, சாதி லாபிகளுக்கு அடிபணிந்து சாதி படிநிலை அடிப்படையில்தான் நடவடிக்கை பாயுமா?” என்று திருச்சி சூர்யா கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை கமலாலயத்தில் கடந்த 19ஆம் தேதி  நடந்த தமிழக பாஜக மையக் குழு கூட்டத்தில் கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச்செயலாளராக இருந்த அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான திருச்சி சூர்யா பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டார்.
அதேபோல் பாஜகவின் சிந்தனையாளர் பிரிவின் மாநில பார்வையாளர் கல்யாணராமன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

நீட் மறுதேர்வில் 750 மாணவர்கள் ஆப்சென்ட்: தேசிய தேர்வு முகமை!

 மாலை மலர்  :   புதுடெல்லி நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை நாடுமுழுவதும் சுமார் 25 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். நீட் தேர்வு முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியானது.
இதற்கியே, நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக, பீகார் தலைநகர் பாட்னாவில் சில தேர்வு மையங்களில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் நீட் தேர்வில் 1,563 மாணவ, மாணவிகளுக்கு கூடுதலாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.
6 தேர்வு மையத்தில் தேர்வுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தைவிட குறைவான நேரம் ஒதுக்கப்பட்டதாக கூறி 1,563 மாணவ, மாணவிகளுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஞாயிறு, 23 ஜூன், 2024

Dasvidaniya பார்க்க வாய்ப்பு கிடைப்பவர்கள் பாக்கியசாலிகள்.

ராதா மனோகர் :  சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான "தஸ்விதானியா"  என்ற பல் மொழி திரைப்படம் ஞாபகத்திற்கு வருகிறது. அத்திரைப்படம் பற்றி முன்பு ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்  அது பின்வருமாறு:  
Dasvidaniya  ஓடிக்கொண்டே இருந்தவன் திடீரென்று  ஓட்டத்தை
நிறுத்தவேண்டிய நிலைக்கு ஆளானான். அப்பொழுதுதான் அவனுக்கு உறைத்தது அடடே  இவ்வளவு  காலமாக அவன்  ஓடிகொண்டே  இருந்திருக்கிறான், வேறு என்னதான் செய்தான்? எல்லாமே செய்தான் ஆனால் அவனுக்காக அவன் எதுவுமே செய்யவில்லை.
இந்த வாழ்வு முடியப்போகிறதே என்று அவன் கவலைப்படுவது ஒரு பெரிய ஜோக்.
May be an image of 2 people and people smiling


ஏனென்றால் அவன் இதுவரை வாழவே இல்லை, வெறுமனே ஓடிகொண்டல்லவா இருந்திருக்கிறான்?
வாழ்ந்துகொண்டு இருக்கும் ஒருவன் தன்வாழ்வு முடியப்போகிறதே என்று கவலை கொண்டால் அதில் நியாயம் இருக்கும்.ஆனால் இவன்தான் வாழவே இல்லையே இல்லாத வாழ்க்கை இனி இருந்தென்ன போயென்ன?

ஹிந்துஜா மகன் தீமூட்டி தற்கொலை .. காதல் ஜோடியை வேட்டை ஆடிய ஹிந்துஜா குடும்பம் . காட்டி கொடுத்த பிரதமர் நரசிம்மராவ்


 ராதா மனோகர்
: இன்று சிக்கலில் மாட்டியிருக்கும் ஹிந்துஜா குடும்பத்தின் செல்ல மகன் தனது மனைவியோடு தீமூட்டி தற்கொலை செய்து கொண்ட வரலாறு
இதில் மனைவி தப்பி விட்டார் . ஆனால் மகன் தரம் ஹிந்துஜா உயிரிழந்தார்
இவர்களின் திருமணத்தை ஏற்றுக்கொள்ளாத ஹிந்துஜா குடும்பம் இந்த காதல் ஜோடிக்கு பெரும் தொல்லை கொடுத்தது
இவர்களின் கழுகு பார்வையில் இருந்து தப்புவதற்கு மொரிசியஸ் ஹோட்டல் ஒன்றில் இரகசியமாக தங்கி இருந்தார்கள்

ஹிந்துஜா குடும்ப நண்பரான பிரதமர் நரசிம்ம ராவ் சி பி ஐ மூலம் இதை கண்டிறிந்து ஹிந்துஜாக்களிடம் காட்டி கொடுத்தார்
போலீஸ் அவர்கள் தங்கி இருந்த ஹோட்டலை சுற்றி வளைத்து
அதை கண்ட ஹிந்துஜா ஜோடி தீமூட்டி தற்கொலைக்கு முயன்றது
இதில் தரம் ஹிந்துஜா இறந்தார் மனைவி நிநோய்ச்கா தப்பி விட்டார்
உகாண்டாவில் இருந்து இடி அமினால் துரத்தப்பட்டு இங்கிலாந்தில் வசித்து வந்த இவர்கள் மிகப்பெரிய பணக்காரர்கள்
இவர்களின் சொத்து மதிப்பு 47 பில்லியன் டாலர்களாகும்.
அந்த பழைய செய்தியை வாசியுங்கள்.
indiatoday.in  :  Hinduja heir Dharam fails to cope with family pressures against his wife, ends life
M. RahmanAmit RoyISSUE DATE: Jun 15, 1992 | UPDATED: Aug 26, 2013 17:05 IST
The housemaster at Westminster School in London called him a 'delightful boy'. A former classmate at the school described him as 'quiet and gentle'.

ஹிந்துஜா குடும்பத்திற்கு (சொத்து 47 பில்லியன் டாலர்) சுவிட்சர்லாந்தில் 4 ஆண்டு சிறை தண்டனை - பணியாளர்களை கொடுமை படுத்தினார்கள்

ஹிந்துஜா குடும்பம் உகாண்டாவில் இருந்து இடி அமினால் ஏன் துரத்தப்பட்டார்கள் என்பது இப்போது புரிகிறது அல்லவா?

 BBC News தமிழ  -  இமோஜென் ஃபாக்ஸ் :  வீட்டுப் பணியாளர்களை கொடுமைபடுத்திய குற்றத்திற்காக பிரிட்டனில் வசித்து வரும் பணக்கார 'ஹிந்துஜா’ குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
'ஹிந்துஜா’ குடும்பத்தினர் ஜெனிவாவில் உள்ள தங்களுடைய வீட்டில் பணிபுரிய சில பணியாளர்களை இந்தியாவில் இருந்து அழைத்து வந்துள்ளனர்.
பிரகாஷ் ஹிந்துஜா, கமல் ஹிந்துஜா, மற்றும் அவர்களது மகன் அஜய் மற்றும் மருமகள் நம்ரதா ஆகியோர் சட்டவிரோதமாகப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியது மற்றும் சுரண்டலில் ஈடுபட்டதாக நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

"பால் கேன்களுக்கு 12% ஜிஎஸ்டி" - நிர்மலா சீதாராமன் கொடுத்த முதல் பரிசு!

 மின்னம்பலம் - Selvam :  அனைத்து வகையான பால் கேன்களுக்கும் 12 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூன் 22) தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் மீண்டும் நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றிருக்கிறார்.
2024 – 25 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், அனைத்து மாநில நிதியமைச்சர்களிடமும் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூன் 22) ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து 53-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமும் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார்.