சனி, 12 ஆகஸ்ட், 2017

பிலிப்பைன்சில் நிலநடுக்கம் 6.2 ரிச்டர் அளவு ..

பிலிப்பைன்ஸ் நாட்டின் வடபகுதியில் உள்ள லூஸான் தீவில் இன்று 6.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று 6.6 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டின் வடபகுதியில் தலைநகர் மணிலாவின் அருகே அழகிய கடற்கரைகள், மலைகள் மற்றும் பவளப்பாறைகள் உள்ளிட்ட இயற்கை வளங்களை கொண்ட லூஸான் தீவு அமைந்துள்ளது. இந்நிலையில், லூஸான் தீவின் வடகிழக்கே மணிலாவில் இருந்து சுமார் 73 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புட்டோல் பகுதியில் இன்று பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமியின் அடியில் சுமார் 168 மிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இன்றைய நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 6.6 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் தலைநகர் மணிலாவிலும் உணரப்பட்டது. அதிபரின் மாளிகை, வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகம் மற்றும் அந்நாட்டின் உச்சநீதி மன்றத்தில் பணியாற்றும் அனைவரும் அவசரமாக வெளியேற நேர்ந்தது. அதிர்ச்சியடைந்த மக்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியேறி வீதிகளின் நடுப்பகுதியில் தஞ்சம் அடைந்தனர்.

ஜெயலலிதா போர்ஜரி கைரேகை வழக்கு: ராஜேஷ் லக்கானி ஆஜராக உத்தரவு!

ஜெயலலிதா கைரேகை வழக்கு: ராஜேஷ் லக்கானி ஆஜராக உத்தரவு!
திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. போஸ் வெற்றிபெற்றதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, ஜெயலலிதா கைரேகை வைத்தது தொடர்பான ஆவணத்துடன் வரும் 24ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2016 மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிகளவில் பணப்பட்டுவாடா நடைபெற்றதாகக் கூறி தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் சீனிவேல் வெற்றிபெற்றபோதும் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்பதற்கு முன்னதாகவே உடல்நலக் குறைவால் மரணமடைந்தார்.
இந்த நிலையில் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயத்தில் 2016 நவம்பர் மாதம் மேற்குறிப்பிட்ட தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்தது தேர்தல் ஆணையம்.

ஆக்ஸிஜன் பற்றாக்குறை : 63 குழந்தைகள் பலி!

ஆக்ஸிஜன் பற்றாக்குறை : 63 குழந்தைகள் பலி!மின்னம்பலம் : உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரிலுள்ள அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 63 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பசுவை வைத்து நம் நாட்டில் பெரிய அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. பசுவுக்குக் கொடுக்கப்படும் பாதுகாப்பும் முக்கியத்துவமும் சக மனிதர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. பசுக்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் வகையில் சமீபத்தில் நாடு முழுவதும் மாட்டிறைச்சிக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதனால், மத்திய அரசுக்கு எதிராக மாட்டுக்கறி உண்ணும் போராட்டங்கள் அதிகமாக நடைபெற்றன. கடந்த மே மாதம் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பசுக்களைக் காக்கும் நோக்கில் 24 மணி நேர ஆம்புலன்ஸ் சேவையை அம்மாநிலத்தின் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுர்யா தொடங்கி வைத்தார். ஆனால், அம்மாநிலத்தில் போதிய ஆம்புலன்ஸ் வசதி இல்லாமல், பலர் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி:மீண்டும் கைவிடப்படுகிறது ....

புதுடில்லி:கடந்த 2010ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்புவரை, மாணவர்கள் தோல்வி அடையாமல், கட்டாய தேர்ச்சி அளிக்கப்பட்டு மேல் வகுப்புக்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள்.இந்தமுறை காரணமாக, மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாகவும், அதனால் இதை கைவிட வேண்டும் என்றும் 24 மாநில அரசுகள் சமீபத்தில் கேட்டுக்கொண்டன.
இதை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, கட்டாய தேர்ச்சி முறையை கைவிட கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவுக்கு கடந்த 3ந் தேதி ஒப்புதல் அளித்தது.இந்நிலையில், இந்த திருத்த மசோதாவை, நேற்று பாராளுமன்றத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் உபேந்திர குஷ்வாகா தாக்கல் செய்தார்.
இதன்படி, 5 மற்றும் 8ம் வகுப்புகளின் ஆண்டு இறுதித்தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களை மாநில அரசுகள் 'பெயில்' ஆக்கலாம். அதற்கு முன்பு, மறுதேர்வு எழுத அம்மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கலாம் என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது தினமலர்

சின்னம்மா நியமனம் செல்லாது ஓபிஎஸ்க்கு ஆதாரத்தை கொடுத்த எடப்பாடி

அதிமுகவின் பொதுச்செயலாளர் யார் என்ற வழக்கு தேர்தல் ஆணையத்தின் முன்னிலையில் உள்ளது. இதில் சசிகலாவுக்கு ஆதரவாக எடப்பாடி அணியும், எதிராக ஓபிஎஸ் அணியும் லட்சக்கணக்கில் ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் சசிகலாவுக்கு எதிரான ஒரு ஆதாரத்தை எடப்பாடி அணியே உருவாக்கி ஓபிஎஸ் அணிக்கு அளித்துள்ளது. இதனை ஓபிஎஸ் அணியினர் தங்களுக்கு சாதகமாக்கி தேர்தல் ஆணையத்தில் நேற்று தாக்கல் செய்துள்ளனர்.  கூழைக்கும்பிடு என்றால் என்னவென்று இந்த மொள்ளைமாரிகளிடம் இருந்துதான் கற்கவேண்டும்

நேர்மையின் விலை.குட்கா வியாபாரியை டிஜிபியாக நியமித்த புளிமூட்டையிடம் வேறு என்ன எதிர்ப்பார்க்க முடியும் ?

udhayachandran
ஜெயலிதாவின் மறைவுக்கு பிறகு, பன்னீர் செல்வமும், அதன் பின் புளிமூட்டையும் பதவியேற்ற பிறகு, ஒரு கோமாளி அரசாங்கம்தான் தமிழகத்தில் நமக்கு வாய்க்கப் பெற்றுள்ளது என்பதை தினம் தினம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இந்தக் கோமாளிகள் போட்டி போட்டுக் கொண்டு விடுக்கும் அறிக்கைகளும், நடத்தும் நாடகங்களும் நமக்கு சிரிப்போடு சேர்த்து வேதனையையும் ஏற்படுத்துகிறது.
ஆனால் இத்தனை வேதனைக்கு இடையிலும் தமிழக மக்களில் பெரும்பான்மையானோர் மற்றும் எதிர்க்கட்சிகள் பாராட்டிய ஒரே விவகாரம் என்னவென்றால், தமிழக பள்ளிக் கல்வித் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்கள்.    2011 ஜெயலலிதா ஆட்சி காலம் முழுக்க பள்ளிக் கல்வித் துறை செயலாளராக இருந்தவர் சபீதா ஐஏஎஸ். ஜெயலலிதா உத்தரவின்படி, பாடப்புத்தகங்களில் இருந்து கருணாநிதி படத்தை அகற்றுவது, சமச்சீர் கல்வித் திட்டம் மோசமானது என்று நீதிமன்றத்தில் அறிக்கை அளிப்பது உள்ளிட்ட புரட்சிகராமான திட்டங்களையே அவர் 2011 முதல் செய்து வந்தார்.  ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுக அடிமைகளுக்கு முளைத்த புதிய துணிச்சலால், ஐஏஎஸ் அதிகாரிகளை அவர்களாக மாற்றத் தொடங்கினார்கள். 

பச்சமுத்துவை காப்பாற்றி, நிர்வாணமான அமலாக்கத் துறை.

1012214_142281995976094_1379204759_n
IMG_20170805_173102அமலாக்கத் துறை என்றாலே நம் அனைவருக்கும் ஒரு பிரமிப்பான பார்வை இருக்கும்.  பெரிய இடங்களில் உள்ளவர்களிடம் சோதனை நடத்துவார்கள். கைது செய்வார்கள்.  பல பெரிய இடத்துப் பிரமுகர்களின் தூக்கத்தை கெடுப்பார்கள்  என்று நம் அனைவருக்குமே இது போன்ற அமைப்புகள் மீது பெரும் மரியாதை இருக்கும்.  இதற்கு ஏற்றார்ப்போலவே, அவ்வப்போது, அமலாக்கத் துறை, சோதனை, கைது, சொத்துக்கள் பறிமுதல் என்று பரபரப்பாக செய்திகள் வந்து கொண்டிருக்கும்.

மத்திய புலனாய்வுத் துறையான சிபிஐயைப் பற்றி வெளியுலகுக்கு தெரிந்த அளவுக்கு கூட அமலாக்கத் துறை பற்றி தெரிவதில்லை.  நாமும் அது குறித்து தெரிந்து கொள்ள பெரிய அளவில் மெனக்கிடுவதில்லை.    இந்த அமலாக்கத் துறை செயல்படும் லட்சணம் என்ன என்பது, சமீபத்தில், சென்னை உயர்நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பில் முழுமையாக அம்பலப்பட்டுள்ளது.
அமலாக்கத் துறை குறித்து பார்ப்பதற்கு முன்பாக, அந்த துறைக்கு அதிகாரத்தை வழங்கும், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டம் குறித்து பார்ப்போம். இந்தியாவில் குற்றவியல் நடைமுறையின் அடிப்படையே, குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மீதான குற்றங்களை, குற்றம் சாட்டும் அரசுத் தரப்பு சந்தேகத்திற்கு இடமற நிரூபிக்க வேண்டும்.   அவர் மீதான குற்றச் சாட்டுகளை நிரூபிக்கும் கடமை அரசுத் தரப்புடையது.   ஆனால், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தில் மட்டும் இது தலைகீழ்.  அமலாக்கத் துறை உங்களை கைது செய்து, உங்கள் மீது ஒரு குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்து விட்டால் போதும்.  அது பொய் என்று நிரூபிக்க வேண்டியது உங்களது கடமை.  அவர்களுக்கு எந்த பொறுப்பும் கிடையாது.   

துணிந்துவிட்டார் தினகரன் .. மூக்குபொடி சாமியார் பச்சை சிக்னல் காட்டிவிட்டாராம்!

 தினகரனை கிண்டல் செய்கிறீர்களே! அவர் வைதீக பார்ப்பனர்களை நாடாமல், தமிழ் சித்த மரபை போற்றும்விதமாக மூக்குப்பொடி சித்தரிடம்தானே அடைக்கலம் சென்றார் என்பாரோ நாசா?
அதிமுக நலன் கருதி எதையும் துணிச்சலாக மேற்கொள்வே என டி.டி.வி தினகரன் கூறியுள்ளார். 
இது குறித்து இன்று தஞ்சாவூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, பல நூற்றாண்டுகள் அ.தி.மு.க சிறப்பாக செயல்படும். அ.தி.மு.க என்பது மாபெரும் இயக்கம். 100 ஆண்டுகள் ஆனாலும் தலைசிறந்த இயக்கமாக அ.தி.மு.க இருக்கும் என ஜெயலலிதா சென்னார். ஜெயலலிதா விருப்பபடி அ.தி.மு.க செயல்படும். கட்சியில் உள்ள பல்வேறு பொறுப்பாளர்கள் பல்வேறு தொண்டர்களுடன் இணைந்து, இலக்கை நோக்கி கொண்டு செல்ல வேண்டும் என சசி எனக்கு இட்ட உத்தரவு. இதில் மாறாமல் கட்சி சிறப்பாக வளர்வதற்கு என்னால் ஆன முயற்சி செய்வேன். எதிரிகளின் செயலால் சில காலம் கட்சியில் இல்லாமல் இருந்தேன். சுயநலம் மற்றும் பயத்தின் காரணமாக பழனிசாமி அணியினர் பேசுகின்றனர். சில நண்பர்கள் சுயநலம், பயம் காரணமாக சசிகலா குடும்பத்தை வெளியேற்ற வேண்டும் எனச் சொல்வார்கள். அ.தி.மு.க. நன்மைக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறேன். அ.தி.மு.க-வின் நலன் கருதி எதையும் துணிச்சலாக மேற்கொள்வேன்.

கலைஞரை சந்தித்த வைரமுத்து : அவர் பிரசாரத்துக்கேகூட வருவார் என்று நினைக்கிறேன்....

கலைஞர் - வைரமுத்து சந்திப்பு
" கலைஞரைச் சமீபத்தில் சந்தித்தீர்களா? எப்படி இருக்கிறார்?"
"நேற்று (20/07/2017) முன்னிரவில் 7,30 மணி முதல் 8.45 வரையில் அவரைச் சந்தித்து பேசிக்கொண்டிருந்தேன்.8.20 க்கு ராஜாத்தி அம்மாள் வந்தார்.அதுவரை நானும் கலைஞரும் மட்டுமே அமர்ந்திருந்தோம்.அவர் வாயிலிருந்து ஒலி மட்டும் தான் வரவில்லையே தவிர,மொழி வந்தது.பார்த்தவுடன் கையைப் பிடித்துக்கொண்டார்.நான் நின்று கொண்டேயிருந்தேன்.அவரது சக்கர நாற்காலியில் அவர் அமர்ந்திருந்தார்."உட்காருங்க,,," என்று சொன்னார்.உதடுகள் அசைகின்றன...ஆனால் ஒலி வராமல் காற்று வருகிறது. " உட்காருங்க..."ஒலியைக் காற்று வடிவமைத்தது.நான் புரிந்துக் கொண்டேன்.தெளிவாக இருக்கிறார் கலைஞர்.
நான்தான் அவரிடம் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தேன்....அவர் கேட்டுக் கொண்டேயிருந்தார்.இடையில் பேசுவதற்கு முயற்சி செய்கிறார்.அந்த சொற்களை என்னால் அனுமானிக்க முடியவில்லை.அந்தச் சோகத்திலிருந்து இன்னும் நான் மீளவில்லை.குழாய் வழியான சுவாசிப்பு இடையூறு செய்கிறது.குழாய் நீக்கப்பட்டால் நீங்கள் பழைய கலைஞரையே திரும்பப் பார்க்கலாம்.நினைவாற்றல் இருக்கிறது.ஒலி மட்டும் வந்துவிட்டால் ,அவர் பிரசாரத்துக்கேகூட வருவார் என்று நினைக்கிறேன்.அவரை வாராவாரம் சென்று பார்த்துக்கொண்டிருக்கிறேன்  ( குழாய் அகற்றப்பட்டுவிட்டது தற்போது பேச்சு  திரபி கொடுக்கபடுகிறது .. நிறைய வேலை இருக்கிறது சீக்கிரம் வெளியே வாங்க கலைஞரே )

BBC :உத்தரப்பிரதேச மருத்துவமனையில் 30 குழந்தைகள் மரணம் ... ஆக்சிஜன் தட்டுப்பாடு

உத்தரபிரதேச மாநிலத்தில் கோரக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 2 நாட்களில் ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக 25 குழந்தைகள் உட்பட 30 பேர் உயிரிழந்துள்ளனர்.  உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்திலுள்ள பிஆர்டி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சுமார் 20 குழந்தைகள் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் முறையான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. கடந்த மூன்று நாட்களாக குறிப்பிட்ட மருத்துவமனையில் மட்டும் 30 குழந்தைகள் இறந்துள்ளதாக கோரக்பூர் மாவட்ட மஜிஸ்ரேட் ராஜ்வ் ரௌடாலே தெரிவித்திருக்கிறார். ஆனால், கோராக்பூர் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ரவீந்திர குமார் எறக்குறைய 20 குழந்தைகள் இறந்துள்ளதாகவும், இந்த இறப்பு ஆக்ஸிஜன் விநியோக தடையால் ஏற்படவில்லை என்றும் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

நடிகை கௌதமி மத்திய தணிக்கை குழு உறுப்பினராக நியமனம்

மத்திய திரைப்பட தணிக்கை வாரிய தலைவர் பதவியில் இருந்து பஹ்லாஜ் நிஹலானி நீக்கப்பட்டுள்ளார். நடிகை கவுதமி உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 புதுடெல்லி: மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத் தலைவராக 2015ம் ஆண்டு பஹ்லாஜ் நிஹலானி நியமிக்கப்பட்டார். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகப் பணி செய்து வந்த பஹ்லாஜ் நிஹலானி மீது இந்தித் திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் கொடுக்கக் கெடுபிடி செய்ததாகப் புகார் எழுந்தது. இந்நிலையில், மத்திய திரைப்பட தணிக்கை வாரிய தலைவர் பதவியில் இருந்து பஹ்லாஜ் நிஹலானி இன்று நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக பிரபல பாடலாசிரியர் பரசூன் ஜோஷி தலைவராக நியமிக்கப்பட உள்ளார்.  இதுக்குத்தான் இத்தனை எடுப்பா ....  ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் ...  இத்தியாதி இத்தியாதி ...  கொன்னவங்க கிட்டேயே போயி ... ?  பேசிக்கிறாய்ங்க

மருத்துவ படிப்பில் 85% உள் ஒதுக்கீடு: தமிழக அரசின் அப்பீல் தள்ளுபடி

Mayura Akilan": Oneindia Tamil : டெல்லி: மருத்துவ படிப்பில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85% உள் இட ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடரும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்களில், 38 சதவிகித மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். முதல் 25 இடங்களைக் கூட பிடிக்காத நிலையில் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு 85 சதவிகிதமும், சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு 15 சதவிகித இடமும் ஒதுக்கப்படும் என்ற அரசாணையைக் கடந்த ஜூன்22 ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்டது. தமிழக அரசின் அரசாணையின் படி சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஏறக்குறைய 300 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்படுகிறது.

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

பிக்பாஸ் ரசிக்கப்படுவது ஏன் ? வெறுமை சூழ்ந்த இந்திய மனதிற்கு ஒரு தற்காலிக போதை ?..

விளம்பரங்களின் நீட்சியாகவே திரைப்படமெடுக்கும் ராஜீவ் மேனனின் கதை ஒரு “மல்டி வாட்டர் கலர்” செட்டில் நடந்தால் அதுதான் பிக்பாஸ்.
பிக்பாஸ் ஆரம்பித்து ஒன்றரை மாதமாகி விட்டது. நமது மக்கள் பல்வேறு கோணங்களில் சில பல ஆய்வுகளையே நடத்தி விட்டனர். யூ டியூப் சானல்கள் பல பிக்பாஸின் அன்றாட நடவடிக்கைகளை திடுக்கிடும் தலைப்புக்களால் போட்டு கம்பெனியை அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓட்டுகின்றனர். ஃபேஸ்புக்கிலோ முற்போக்கு, பிற்போக்கு, சமூகவியல், பெண்ணியம், உளவியல் என்று எல்லா பிரிவுகளிலும் ஆய்வுகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
வாட்ஸ் அப்பில் ஓவியா படை போர் முரசு கொட்டுகிறது. வார நாட்களில் டிவிட்டரிலும், வார இறுதியில் விஜய் டிவியிலும் கமலஹாசன் பேசும் தத்துவங்கள் பல சமூகவலைத்தளங்கள் மட்டுமல்ல, ஊடகங்களாலும் ஆராயப்படுகின்றன. அசைவ உணவு உண்பவர்களை முரடர்களாக கருதுகிறார், சேரி பிகேவியர் வார்த்தைகளை அனுமதிக்கிறார், மனநலம் பாதிக்கப்பட்டோர் கேலி செய்யப்படுவதை ஏற்கிறார் என்றெல்லாம் தொலைக்காட்சி விவாதங்கள் தொடர்கின்றன. அனைத்தையும் கணக்கில் கொண்டு அடுத்த வாரம் பதிலளிக்கிறார் கமல். அந்தக் குற்றங்களுக்குத் தான் காரணமில்லை என்கிறார்.

19 தினகரன் MLA க்கள் பதவி ராஜினாமா ? எடப்பாடி ஆட்சி கவிழும்? தினமலர் ..

தினகரன் அணியை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள், 19 பேர், தங்களது பதவியை, ஓரிரு நாட்களில், ராஜி னாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதல்வர் பழனிசாமி அணியினர், தினகரனுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளதால், எந்த வகையில் ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்பது குறித்து, தினகரன் ஆதரவாளர்கள் ஆலோசித்து வருகின்றனர். அதில் முக்கியமாக, தினகரனால் பதவி பெற்ற, 19 எம்.எல்.ஏ.,க்கள், தங்களுடைய பதவியை ராஜினாமா செய்வது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. ராஜினாமா முடிவு எடுக்கும்பட்சத்தில், பழனிசாமி அரசு கவிழும் என, தினகரன் ஆதரவு வட்டாரம் தெரிவித்தது. - நமது நிருபர் - தினமாலர்

தேர்தல் ஆணையம் சசிகலாவை பொதுசெயலாளராக அங்கீகரிக்கவில்லை

அதிமுக பொதுச் செயலாளர் விவகாரத்தில் சசிகலாவின் நியமனத்தை இதுவரை அங்கீகரிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அதிமுக-வின் பொதுச்செயலாளராகப் பொதுக்குழு முடிவின்படி சசிகலா நியமிக்கப்பட்டார். அதன் பிறகு, சசிகலா தலைமையை எதிர்த்து ஓ.பி.எஸ். தனியாக பிரிந்ததையடுத்து சசிகலா அணி என்றும் ஓ.பி.எஸ். அணி என்றும் அதிமுக இரண்டாகப் பிரிந்தது. இந்த நிலையில் அதிமுக-வின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர். அதற்கு எதிராக சசிகலா தரப்பும் புகார் செய்த நிலையில், இரட்டை இலை சின்னத்தையும், கட்சியின் பெயரையும் தேர்தல் ஆணையம் முடக்கியது. அதையடுத்து இரு அணிகளும், கட்சியின் பெயரையும், சின்னத்தையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

மோடி முன்னிலையில் இணைப்பு முகூர்த்தம்: அதிமுக-வில் அதிரடி ஆபரேஷன் என்கின்ற விபசாரம்!


‘எல்லா சாலைகளும் ரோம் நோக்கி’ என்பதுபோல... இப்போது அதிமுக-வின் எல்லா சாலைகளும் டெல்லி நோக்கித் திரும்பியுள்ளன.
சசிகலா அணி, ஓ.பி.எஸ். அணி என்ற நிலைமாறி கடந்த சில மாதங்களாகவே எடப்பாடி அணி, தினகரன் அணி, ஓ.பி.எஸ். அணி என்று மூன்று அணிகளாய் மாறிய அதிமுக-வில், இன்று தினகரனைத் தவிர்த்து மற்ற இரு அணிகள் இணையும் புள்ளியை நெருங்கியிருக்கின்றன.
இன்று ஆகஸ்ட் 11ஆம் தேதி துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பதவி ஏற்பு விழாவுக்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் மட்டுமே டெல்லியில் இருந்து அழைப்பு வந்தது. இருவரும் தத்தமது அணி முக்கியஸ்தர்களோடு நேற்று டெல்லி சென்றனர்.
குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் ஆகிய இரு தேர்தல்களிலும் தினகரன் பாஜக-வுக்கு ஆதரவு அளித்தபோதும் அவருக்குப் பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்பு இல்லை எனும்போதே தெரிந்துகொள்ளலாம் பாஜக-வின் திட்டத்தை.

சோனியா தலைமையில் எதிர்கட்சிகள் கூட்டம் ...

எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம்!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று ஆகஸ்டு 11 காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டுகிறார்.
நாடாளுமன்றத்தில் உள்ள நூலக வளாகத்தில் இன்று பிற்பகல் இந்த கூட்டம் சோனியா காந்தி தலைமையில் நடக்கிறது.
நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடியும் நிலையில்... இனி வரும் காலங்களில் மத்திய பாஜக அரசை எதிர்த்து மக்கள் மன்றத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டாக செயல்பட்டு போராட்டங்கள் நடத்துவது பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வர்கள் மாயாவதி, அகிலேஷ் யாதவ், ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ், மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருக்கிறது. அண்மையில் ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ், தன் கட்சியை சேர்ந்த நிதீஷ்குமார் பாஜக ஆதரவுடன் பீகாரில் ஆட்சி அமைத்ததை எதிர்த்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

பாலியல் வன்கொடுமை: குழந்தை பெற்ற சிறுமி தற்கொலை!

மின்னம்பலம் :மதுரை அருகே பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி குழந்தை பெற்ற சிறுமி நேற்று (ஆகஸ்ட் 10) இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அருகே உள்ள ராஜாக்கூர் பெரியார் நகரைச் சேர்ந்தவர் நாகம்மாள். கடந்த ஓராண்டுக்கு முன்பு, இவரது 16 வயது இளையமகள் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, நாகம்மாளின் மூத்த மகளின் கணவர் லட்சுமணன் (28) அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை சிறுமி தன்னுடைய பெற்றொருக்கு உடனடியாக தெரிவிக்கவில்லை. பாலியல் வன்கொடுமைக்குள்ளான சிறுமி கர்ப்பமடைந்த பிறகு இந்த விஷயம் வெளியே தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த லட்சுமணன் மீது புகார் அளிக்கப்பட்டு அவர் போஸ்கோ சட்டத்தின்படி கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, கர்ப்பமாக இருந்த அந்த சிறுமி சில மாதங்களுக்கு முன்பு குழந்தை பெற்றுள்ளார். இதனால், அவர் மனம் மற்றும் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டு மனமுடந்த சிறுமி நேற்று (ஆகஸ்ட் 10) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

உதயச்சந்திரனை பணியிடமாற்றம் செய்ய தடை!

உதயச்சந்திரனை பணியிடமாற்றம் செய்ய தடை!
மின்னம்பலம் : பள்ளிக்கல்வித் துறை செயலர் உதயச்சந்திரனை தமிழக அரசு பணியிடமாற்றம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தனியார் பள்ளிகள் ஆதிக்கம் நிறைந்த ஒரு சூழலில், கடந்த மார்ச் மாதம் பள்ளிக்கல்வித் துறை செயலாளராக உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டார். பள்ளிக்கல்வித் துறை செயலாளராக பொறுப்பேற்றதிலிருந்து, அவர் அந்த துறையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய முடிவுகளை எடுத்து செயல்படுத்திவருகிறார்.
கடந்த ஆண்டு வரை பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவர்களை வெறும் மதிப்பெண் எடுக்கும் இயந்திரமாக்கி விரட்டிக்கொண்டிருந்தனர். இதை பயன்படுத்திக்கொண்ட தனியார் கல்வி நிறுவனங்கள் கல்வியை ஒரு வெற்றிகரமான வணிகமாகவே நிறுவிட்டனர்.

கீழ்வெண்மணி தீர்ப்பைப் போல அதிர்ச்சி அளிக்கிறது: கும்பகோணம் பள்ளி தீவிபத்து தீர்ப்பு குறித்து இரா.முத்தரசன் கருத்து

thetimestamil :கும்பகோணம் பள்ளி தீவிபத்து உயர்நீதி மன்ற தீர்ப்பு அதிர்ச்சியளிக்கின்றது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“கடந்த 2004 ஆம் ஆண்டு, தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பள்ளியில் நடந்த கோர தீ விபத்தில் 94 பச்சிளம் குழந்தைகள் கொடூர தீயிக்கு பலியானது. 18 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். இக்கோர சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இவ்விபத்து குறித்து உச்சநீதி மன்றம், தலையீடு செய்திட வேண்டிய நிலையும் ஏற்பட்டு விரைவாக விசாரணையை முடிக்க வேண்டும் என கூறியது. தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றம்வழக்கை விசாரித்து கடந்த ஆண்டு ஜூலையில் வழங்கிய தீர்ப்பில் குற்றவாளிகளில் 11 பேரை விடுவித்தும், 10 பேருக்கு தண்டனையும் வழங்கி தீர்பளித்தது. 11 பேரை விடுவித்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசும், தண்டனை பெற்றவர்களும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

ஸ்டாலின் நம்பிக்கை இல்லா தீர்மானம்.... அவசியம் என்றால்! .. வெல்வோம் என்று எடப்பாடி நம்பிக்கை!

சட்டமன்றத்தில் அரசுக்கு எதிராக ஸ்டாலின் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
 ஸ்டாலின் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் வெற்றி பெறுவோம்: எடப்பாடி பழனிச்சாமி உறுதி புதுடெல்லி: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது குறித்தும், விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்கள் குறித்தும் பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமியிடம், தேவைப்பட்டால் தமிழக அரசு மீது தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதாக கூறியது பற்றி கேள்வி எழுப்பினர்.

ஒரு நுங்கம்பாக்கம் ஸ்டேஷன் flashback; கதையாக உருவாகிய கலைந்த கனவு காட்சி!


Devi Somasundaram: " முதல்ல இந்த ரிஸர்வேஷன் சனியன ஒழிக்கனும்..தகுதி இல்லாதவன்லாம் படிச்சுட்டு பதவிக்கு வந்துடறான்ங்க ராஸ்கல்ஸ்.. கல்வி,பதவிலாம் திறமை அடிப்படைல தகுதி உள்ளவனுக்கு மட்டும் தான் கிடைக்கனும்... இந்த சாதில பொறந்தான்றதுகாக வேலை வாய்ப்பு தர முடியுமா? .வெட்கமா இல்லியா அவனுகளுக்கு. ..இடியட்ஸ்.."
வீட்டுக்கு வெளியில் தன் கட்சிகாரர்களுடன் பேசி விட்டு உள்ளே வந்த அப்பாவை பார்த்து சிரித்தாள் மகள்..
" என்ன சிரிப்பு, அப்டி என்ன நடந்துடுச்சு "
" ஏம்ப்பா ,வெளில தகுதிக்கு வேலை கிடைக்கனும்னு சொன்னியே ,நிஜமா நமக்கு. தகுதில தான் வேலை கிடைக்கிதா? உன் பெரிய மாமா தன் அதிகாரத்தை பயன்படுத்தி தான உனக்கு வேலை வாங்கி தந்தார், அண்ணாவுக்கு ரயில்வேல உன் சித்தப்பா பையன் வச்சு ரெகமெண்டேஷன்ல தான வேலை வாங்கின....இதெல்லாம் தகுதிலயா கிடைச்சுது "
." வாய மூடு ,ஓவரா பேசாத"
" அதென்னப்பா. , வேலை தர முடியுமான்னு கேக்ற..நீ யார் தருவதுக்கு..உன் சாதி தான் இந்த நாட்டை ஆளுதுன்ற நினைப்புல தான தர முடியுமான்னு சொன்ன..யார் வேலையை யார் தருவது "
" ஷட் அப் ,போ உள்ள "
" தகுதிக்குதான் வேலை கிடைக்கனும். சாதிக்கு கிடைக்க கூடாதுன்னு சொன்னியே..எனக்கு மாப்பிள்ளை மட்டும் ஏம்பா தகுதி பார்க்காம ,சாதில பாக்குற.."

இந்தியாவில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு அற்ற சூழ்நிலை ... முன்னாள் துணை குடியரசு தலைவர் அன்சாரி அதிரடி குற்றச்சாட்டு!

Mayura Akilan Oneindia Tamil டெல்லி: இந்திய முஸ்லிம்களுக்கு பாதுகாப்பற்ற தன்மை உள்ளது என்று கூறிய முன்னாள் குடியரசு துணை தலைவர் ஹமீது அன்சாரிக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. அரசியல் புகலிடம் தேடுவதற்காக கூறிய கருத்து என அந்தக் கட்சி கூறியது. துணை ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வுபெறும் நிலையில் டெல்லி ராஜ்யசபா டி.வி.க்கு ஹமீது அன்சாரி சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர், இந்தியாவில் இஸ்லாமியர்கள் ஒருவித அச்சத்துடன் தான் வாழ்ந்து வருகிறார்கள். பாதுகாப்பு உணர்வின்மை இஸ்லாமியர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது. அதுமட்டுமில்லாமல் சமூக மதிப்பீடுகள், தார்மீக உணர்வு அனைத்து இடங்களிலும் வீழ்ந்து வருகிறது.

நமது தேசபக்தி என்பது அனைத்து நேரத்திலும் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும் என்ற அவசியமில்லை. இந்தியாவில் பெருகிவரும் சகிப்புத்தன்மையின்மை குறித்து பிரதமர் மோடியிடம் கேட்டேன். ஆனால் அவர் கூறிய பதிலை வெளிப்படையாக கூறுவது ஜனநாயக மரபுக்கு எதிரானது.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த இந்த மூன்றாண்டுகளில் நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது வெளிப்படையான ஒன்று என்று கூறினார்.  மறைந்த வீணை வித்துவான் அப்துல் கலாம்  அய்யா போன்று  சங்க்பரிவார்களுக்கு   துதி பாடாமல்  உண்மையை  இடித்துரைத்த  ஹமீது  அன்சாரி  அய்யா புகழ் ஓங்குக!

கலைஞர் ... கடிதம் எழுதும் அளவு தேறிவிட்டார் ... அதிகாரபூர்வ செய்தி!

 கலைஞர் ‘’'முரசொலி பவள விழாவைக் கண்டு விழிகள் மட்டும் விரிந்திடவில்லை. சுவாசப் பைகளும் விரிந்திடுகின்றன. தமக்கு அன்பெனும் அமுதம் ஊட்டி ஆதரவு கரம் நீட்டிய தமிழ் பெருமக்களுக்கு நன்றி. என் கடன் பணி செய்து கிடப்பதே. அரசியலுக்கு அப்பாற்பட்டு முரசொலி பவளவிழாவிற்கு வாழ்த்து தெரிவித்த தலைவர்களுக்கு நன்றி"
முரசொலி பவளவிழா வாழ்த்தரங்கம் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைப்பெற்றது. இவ்விழாவில், இந்து என்.ராம், நக்கீரன் ஆசிரியர் நக்கீரகோபால், நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து, விகடன் பா.சீனிவாசன், தினமலர் ரமேஷ், தினமணி வைத்தியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தினர்.

தற்காப்பைவிட தன்மானம்தான் முக்கியம்.. யாரை பார்த்து கமல் இதைச் சொன்னார்?

Veera Kumar: தற்காப்பு முக்கியமில்லை, தன்மானம்தான் முக்கியம் என்று முரசொலி பவளவிழா மேடையில் வைத்து நடிகர் கமல்ஹாசன் பேசியது பெரும் விவாதங்களை கிளப்பிவிட்டுள்ளது. பவள விழாவில் நிறைவுரையாற்றினார் கமல். அப்போது, தான் கருணாநிதியின் நீண்ட கால ரசிகன் என்று அவர் குறிப்பிட்டார். விழாவிற்கு ரஜினி வருவாரா என கேட்டேன். ரஜினி வருவார், ஆனால் விழா மேடையின் கீழேதான் அமர்வதாக கூறியுள்ளார் என்று கூறினார்கள் என்று நினைவுகூர்ந்தார் கமல். கமல் மேலும் பேசியதாவது: ரஜினி கீழேதான் அமர உள்ளதாக கூறியதும், நானும் கீழேயே அமர்ந்துகொள்கிறேன் என்றுதான் கூறினேன். மேடையில் அமர்ந்தால் எதையாவது பேசி சிக்கலில் மாட்ட வேண்டியிருக்கும் என்ற எச்சரிக்கை உணர்வு காரணமாக இருந்திருக்கும். ஆனால் பிறகு கண்ணாடி முன்னால் நின்று என்னை நானே பார்த்து கேட்டுக்கொண்டேன். "டேய் முட்டாள், தற்காப்பு முக்கியம் அல்ல. தன்மானம் தான் முக்கியம்.
முரசொலி மேடையில் அமரவில்லை எனில் முட்டாள் ஆகியிருவ" என சொல்லிக்கொண்டேன். இதன்பிறகு விழா மேடையில் அமர கிடைத்த மாபெரும் வாய்ப்பை நழுவ கூடாது என வந்தேன் என்றார் கமல்.

டோக்ளாம் நெருக்கடி ! சீனாவிற்கு பூடான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது


இந்தியாவின் சிக்கிம் மாநிலம் அருகே இந்திய, சீன எல்லைப் பகுதியில் உள்ள டோக்லாம் தங்களுக்குச் சொந்தமானது என்று சீனா கூறிக்கொள்வதற்கு பூடான் கண்டனம் விடுத்துள்ளது.
இந்தியா, சீனா, பூடான் ஆகிய மூன்று நாடுகள் சந்திக்கும் இடத்தில் டோக்லாம் பகுதி உள்ளது. அங்குள்ள இந்திய ராணுவத்தின் பதுங்கு குழிகளைச் சீன ராணுவத்தினர் கடந்த மாதம் தாக்கி அழித்தது மட்டுமன்றி அந்தப் பகுதியில் தங்கள் ராணுவ வாகனங்கள் சென்று வரும் வகையில் சாலைகளையும் அத்துமீறி அமைத்துவருகிறது.
இதனால், அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டு இந்திய ராணுவம் தனது படைகளைக் குவித்தது. சீனா அதற்குக் கடும் கண்டனம் தெரிவித்தது. இந்தியத் தரப்பில் ராணுவப் படைகளை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று ராணுவ அதிகாரிகள், வெளியுறவு செயலக அதிகாரிகள், மற்றும் சீன அதிபர் உள்படச் சீனாவின் ஊடகங்கள் அனைத்தும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

கமலஹாசன் : திராவிடம் என்பது மக்கள் சக்தி. திராவிடத்தை யாராலேயும் அழிக்க முடியாது

kamal rajini in murasoliபிரேம் குமார் எஸ்.கே.
முரசொலி பத்திரிகையின் 75 வது ஆண்டு பவளவிழா, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பார்வையாளராகக் கலந்துகொண்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தனராகப் பங்கேற்றுள்ளார். இவர்கள் தவிர, கவிஞர் வைரமுத்து, நடிகர் பிரபு மற்றும் பல அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டுள்ளனர். பவள விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய நடிகர் கமல்ஹாசன், “நான் ரசித்த முதல் தமிழ் சிவாஜியுடையது. அதன் பின்னர், அந்தத் தமிழுக்குச் சொந்தக்காரர் கலைஞர் என்று தெரிந்தது முதல் நான் அவரின் ரசிகன். இந்த விழாவில் என்னை அழைத்தபோது, ரஜினி இந்த விழாவுக்கு வருகிறார பேசுகிறாரா? என்று கேட்டேன். அவர் பேசவில்லை என்றதும், நானும் பார்வையாளராக கலந்துகொள்ளலாம் என்று நினைத்தேன். இப்போது தற்காப்பு முக்கியமில்லை, தன்மானமே முக்கியம். இந்த விழாவில் கலந்து கொள்கிறேன் என்றதுமே, நீங்க கழகத்தில் சேரப் போகிறீர்களா? என்று கேட்கிறார்கள். சேருவது என்றால் 1989-ல் கலைஞர் அழைத்தபோதே சேர்ந்திருப்பேன். அரசியல் பேசுவதற்கான மேடை இது இல்லை.

திருமண பத்திரிகை அடிக்கும் வயதில் முரசொலி பத்திரிகை அடித்தவர் கலைஞர்”

பிரேம் குமார் எஸ்.கே.
முரசொலி பத்திரிகையின் 75 வது ஆண்டு பவளவிழா, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றுவருகிறது.

முரசொலி’ பத்திரிகையின் காட்சி அரங்கத்தை, இன்று காலை, இந்து என்.ராம் தொடங்கிவைத்தார்.

இரண்டு நாள்கள் நடைபெறவுள்ள இந்த விழாவில் பத்திரிகையாளர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். தி.மு.க தலைவர் கருணாநிதியால் முரசொலி நாளிதழ் தொடங்கப்பட்டு இன்றுடன் 75 ஆண்டுகள் நிறைவுபெறுகின்றன. அதை முன்னிட்டு, தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பவள விழாவுக்கு ஏற்பாடுசெய்துள்ளார்.

முரசொலி - பவள விழா ....உதயநிதி : ஒரு சின்ன விளக்கம்

Sivasankaran.Saravanan: கலைஞரின் மூத்த பிள்ளையான முரசொலிக்கு இன்னொரு பிள்ளையின் மகன் என்ற ஒரே தகுதியை வைத்துக்கொண்டு உதயநிதி நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்றதில் எனக்கு உவப்பு ஏதுமில்லை என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.
முக்கியமான செய்தி : முரசொலி பத்திரிகை கலைஞரின் தனிப்பட்ட சொத்து. திருவாரூர் முத்துவேலர் கருணாநிதி தான் திமுக என்று சொல்லுமளவிற்கு கலைஞர் வேறு திமுக வேறு இல்லை என்கிற அளவுக்கு கலைஞர் தான் திமுக என்று இருப்பதால் அது திமுகவின் பத்திரிகையாக அறியப்படுகிறதே தவிர சட்டப்படி கலைஞரின் உழைப்பால் உருவான அவரது தனிப்பட்ட சொத்து .
கலைஞர் தனது வீட்டை மருத்துவமனையாக மாற்ற எழுதித்தந்தார். அண்ணா அறிவாலயத்தையும் அவர் தான் கட்டினார். ஆனால் அண்ணா அறிவாலயம் அவரது சொத்தல்ல . அது திமுகவின் சொத்து. அதை அவரால் தனிப்பட்ட முறையில் ஏதும் செய்யவியலாது.

வியாழன், 10 ஆகஸ்ட், 2017

தொழிலதிபர் விஜய் சிங்கானியா தெருவுக்கு துரப்பட்டார் .. ரேமண்ட்ஸ் நிறுவனர்.. ஆயிரம் கோடியை மகனுக்கு கொடுத்த

மிகப் பெரும் கோடீஸ்வராக இருந்த ரேமண்ட்ஸ் நிறுவனர் மகனால் துரத்தப்பட்டதால், பண வசதியின்றி வறுமையில் தவித்து வருகிறார். வீதிக்கு துரத்திய மகன்: கோடீஸ்வரானாக வாழ்ந்த ரேமண்ட்ஸ் நிறுவனர் வறுமையில் வாடும் அவலம் இந்தியாவின் மிகப் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவராக விளங்கியவர் ரேமண்ட்ஸ் நிறுவனர் விஜய் சிங்கானியா, இவர் முதுமை மற்றும் ஓய்வை கருத்தில் கொண்டு தனது வணிகப் பொறுப்புகளை மகன் கவுதமிடம் கொடுத்திருந்தார். இந்நிலையில் விஜய் சிங்கானியா மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஊழல் குற்றசாட்டு... பதவி நீக்கம்...

Devarajan Oneindia Tamil கொழும்பு: இலங்கை மத்திய ரிசர்வ் வங்கியின் கடன் பத்திர வெளியீட்டில் ஊழல் நடந்துள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ரவி கருணநாயகே மீது புகார் எழுந்தது. அதனையடுத்து ரவி கருணநாயகே தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இலங்கையின் மத்திய ரிசர்வ் வங்கி நடத்திய கடன்பத்திர வெளியீட்டில், மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்தது. இதன்பேரில் ரவி கருணநாயகே உள்பட பல முக்கிய பிரமுகர்கள் சந்தேக வளையத்தில் சிக்கியுள்ளனர்.

புராண புரட்டுகளை எதிர்த்து அறிவியல் பேரணி ! வினவு ..

சென்னை, பெங்களூரு, பூனே, அகமதாபாத், போபால், திருவனந்தபுரம், சண்டிகர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் அறிவியலுக்கான பேரணி நடைபெற்றது.

கொல்கத்தாவில் மாணவர்கள் ஊர்வலம்
ந்தியாவின் முன்னணி ஆய்வு நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகளின் விஞ்ஞானிகள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகஸ்ட் 09, 2017 அன்று நாடு முழுவதும் 26 நகரங்களில் அறிவியலுக்கான பேரணி (March for Science) ஒன்றை நடத்தினர். திருப்புமுனை அறிவியல் சங்கம் (BBS-Breakthrough Science Society) என்ற அறிவியலாளர்களின் கூட்டமைப்பு இதை ஒருங்கிணைக்கிறது.
அறிவியல் துறையில் நிகழ்த்தப்பட்ட ஹிக்ஸ் போசான் மற்றும் ஈர்ப்பு அலைகள் உள்ளிட்ட பாய்ச்சல், திருப்புமுனை கண்டுபிடிப்புகளில் இந்திய விஞ்ஞானிகள் முக்கிய பங்காற்றியுள்ளனர். மங்கல்யானின் மூலம் கோள்களுக்கிடையான திட்டங்களுக்கும் விண்வெளி மற்றும் அதன் தொழில்நுட்பங்களில் வெளிநாட்டு சார்பை குறைப்பதிலும் பங்காற்றியுள்ளனர். ஆனால், மறுபுறம், இந்திய அறிவியல் துறையானது பெருகிவரும் அறிவியலற்ற நம்பிக்கைகள் மற்றும் மத அடிப்படைவாதம் ஆகியவற்றாலும், குறைக்கப்பட்டுவரும் அரசின் நிதி ஒதுகீடுகளாலும் தாக்குதலை எதிர்கொண்டுள்ளது.

கோவை .. பாஜக,இந்து முன்னணி,,இந்து மக்கள் கட்சி,,அனுமன் சேனா,பாரத் சேனா என பல பெயர்களில் இயங்கும் ரவுடி கும்பல்கள்

தோழர். Basheer Ahamed அவர்களின் பதிவு.: காவல்துறை அறிவிப்பு :---
வாட்ஸாப்பில் வந்த தகவல் :
*கோவை மக்கள்,வியாபாரிகளுக்கு ஒர் நர்செற்தி*
*ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் இயங்கும் பாஜக,இந்து முன்னணி,இந்து மக்கள் கட்சி,அனுமன் சேனா,பாரத் சேனா என பல பெயர்களில் இயங்கும் ரவுடி கும்பல்கள் விநாயகர் சதுர்த்தி வசூல் என்ற பெயரில் பொது மக்கள் மட்டும் கடை வியாபாரிகளை மிரட்டி கட்டாய பண பறிப்பு வேளையில் வருடா வருடம் போல இந்த ஆண்டும் துவங்கியுள்ளது..*
கணபதி பகுதியில் ஒரு சிறு வியாபாரியை மிரட்டி 10000 ரூபாய் பணத்தை பிடிங்கி சென்றுள்ளனர் இந்த ரவுடி கும்பல்..
இதனை தொடர்ந்து அவர் கொடுத்த புகாரினை அடுத்து,,கோவை காவல் ஆணையர்,இவ்வாறு கட்டாய பண வசூலில் இந்து இயக்கம் என்ற பெயரில் ஈடுபட்டால்,,
*வியாபாரிகளும்,பொது மக்களும் உடனடியாக காவல்துறையினரிடம் புகார் கொடுக்க கேட்டுக் கொண்டுள்ளார்..*
இதனை அடுத்து கோவையில் உள்ள அனைத்து காவல்நிலைய எண்களை காவல் ஆணையர் பகிர்ந்துள்ளார்..
*ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம்-0422 230 9600*
*B-12 உக்கடம் காவல் நிலையம்- 0422 230 7838*
*சிங்காநல்லூர் காவல் நிலையம் - 0422 258 0354*
*E3 சரவணம்பட்டி காவல் நிலையம்- 0422 266 6445*
*B2 RS புரம் காவல் நிலையம்- 098498101142*

இரோம் ஷர்மிளா : என் திருமணத்தை தடுப்பது ஏன் ?

இரோம் ஷர்மிளாவின் திருமணம் வரும் 16 ஆம் தேதி கொடைக்கானலில் நடைபெறவுள்ளதாக நேற்று (ஆகஸ்ட், 9) அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கையுடன் கடந்த 2௦௦௦ ஆம்ஆண்டு முதல் 2௦16 ஆம் ஆண்டு வரை உண்ணாவிரதம் போராட்டம் நடத்தியவர் இரோம் ஷர்மிளா. சில மாதங்களுக்கு முன்பு தனது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார். அதைத் தொடர்ந்து, மணிப்பூர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனால், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் கொடைக்கானலுக்கு ஓய்வெடுப்பதற்காக சென்றார். அங்கு தங்கிய அவர் தமக்கு மக்கள் வாய்ப்பு அளிக்கவில்லை. அதனால் அரசியலுக்கு மீண்டும் வரும் எண்ணம் இல்லை. தான் காதலித்த டெஸ்மேண்ட் கவுடின்கோவை மணக்க உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், திருமணத்துக்குப் பிறகு கொடைக்கானலில் தங்கி அங்குள்ள பழங்குடியின மக்களுக்கு ஆதரவாக போராடப் போவதாகக் கூறி இருந்தார். இதனால் இவர்கள் திருமணத்துக்கு அனுமதிக்கக் கூடாது என்று கொடைக்கானல் பேத்துப்பாறையைச் சேர்ந்த மகேந்திரன் எதிர்ப்பு தெரிவித்து சார்பதிவாளர் ராஜேசிடம் மனு அளித்தார்.

டெல்லியில் விவசாயிகள் சாகும்வரை உண்ணாவிரதம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளில் 5 பேர் நியாயத்தை நிலைநாட்ட சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.
கடந்த மார்ச் - ஏப்ரல் மாதத்தில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்னு தலைமையில் தமிழக விவசாயிகள் டெல்லி சென்று ஜந்தர்மந்தர் பகுதியில் 41 நாட்கள் பல்வேறு நூதன போராட்ட வடிவங்களில் தொடர் போராட்டம் நடத்தினர். அப்போது, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்ததன் பேரில் போராட்டத்தைக் கைவிட்டனர். ஆனால், அதன் பிறகு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலுவான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாததால், மீண்டும் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் 100 பேர் டெல்லி சென்று கடந்த ஜூலை 16ஆம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர்.

அதிமுகவில் இருந்து சசிகலா ,தினகரன் நீக்கம் ... கூவத்தூர் குதிரைகள் எல்லாம் நரிகள் ஆயின!

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்  நடந்த கூட்டத்தில், தினகரனுக்கு எதிராக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஜெயலலிதா மறைவுக்குப் பின் பிளவுபட்ட அ.தி.மு.க., பழனிசாமி அணியும், பன்னீர் அணியும் இணைய வேண்டும் என பேச்சு நடத்த, இரு தரப்பிலும் குழு அமைக்கப்பட்டது. மத்தியஅரசு அழுத்தம் காரணமாக, இரு அணி சார்பிலும்  பேச்சு நடந்தது. அப்போது, 'சசிகலா குடும்பத்தினரை, கட்சியில் இருந்து முழுமையாக விலக்குவதாக, பழனிசாமி அணியினர் அறிவிக்க வேண்டும்' என, பன்னீர் அணியினர் நிபந்தனை விதித்தனர். இதை, பா.ஜ., மேலிடமும் ஏற்றது. அதன்படி, அறிவிப்பை வெளியிடுமாறு, பழனிசாமி தரப்பிற்கு அழுத்தமும் கொடுத்துள்ளது. அ.தி.மு.க., தலைமை அலு வலகத்தில், இன்று முதல்வர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவுகளை நிறைவேற்ற வேண்டிய சூழலில் உள்ளோம்.

தினகரன் : எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியை இழக்க நேரிடும்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் அதிமுக அணிகள் இணைப்பு, டிடிவி தினகரனின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தினார். கட்சி இணைய ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வைத்துள்ள நிபந்தனைகள் குறித்தும் கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசிக்கப்பட்டது. அதில் கழக சட்டதிட்ட விதிகளின் படி துணைப்பொதுச்செயலாளர் பொறுப்புகள் செல்லக்கூடியவையல்ல என்றும் தினகரன் அறிவிப்புகள் செல்லாது என்றும் கூறப்பட்டது. இதையடுத்து இன்று தஞ்சாவூரில் டி.டி.வி.தினகரன் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது, அனைத்திந்திய அண்ணா திராவிட முற்போக்கு கழகம் என்ற பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் யாரும் பயன்படுத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறும் வகையில் தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வெளியிட்டுள்ளார்கள். அதில் அதிமுக என்ற பெயரை பயண்படுத்தியுள்ளனர். இது தேர்தல் ஆணையத்தை மீறுகிற செயல். தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தால் முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமி இழக்க நேரிடும். கட்சி சட்டவிதிகளின்படி புதிய பொறுப்பாளர்களை நியமிக்க எனக்கு அதிகாரம் உள்ளது.

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்த வழக்கு, அனைவரும் விடுதலை!

மதுரை: கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில், சமையல்காரரைத் தவிர குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். கடந்த 2004-ஆம் ஆண்டு, ஜூலை 16-ஆம் தேதி கும்பகோணத்தில் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். இதில் 16 குழந்தைகள் தீக்காயங்களுடன் உயிர் தப்பினர். பள்ளியின் சமையலறையில் பற்றிய தீயே விபத்துக்குக் காரணம் என்று கூறப்பட்டது. இந்த சம்பவத்தில் பள்ளி தாளாளர், கல்வித் துறை அதிகாரிகள், ஆசிரியைகள் உட்பட 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவர்களில் பள்ளி தாளாளர் பழனிசாமிக்கு ஆயுள் தண்டனையும், மனைவி சரஸ்வதி சமையல் செய்த வசந்தி உள்ளிட்ட 10 பேருக்கு சிறைத்தண்டனை விதித்தது. 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில், 11 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தண்டனையை ரத்து செய்யக் கோரி தண்டனை பெற்றவர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, தண்டனையை ரத்து செய்யக் கோரிய வழக்கில், சமையல்காரர் வசந்தியின் தண்டனையை உறுதி செய்தும், மற்ற 9 பேரை விடுவித்தும் தீர்ப்பளித்துள்ளது.தினமணி

தரமணி . ஆண் - பெண் பற்றிய பேசு பொருளில் உள்ள ஒரு விஷயம்

சிறப்புப் பேட்டி: தமிழ் சினிமாவின் மறுபக்கம்! (பகுதி 1)மின்னம்பலம் :சிறப்புப் பேட்டி: தமிழ் சினிமாவின் மறுபக்கம்! (பகுதி 1)
‘தரமணி’ திரைப்படம் நாளை (ஆகஸ்ட் 11) ரிலீஸாகிறது. படம் எப்படிப்பட்டதென்பதைப் பற்றிப் படமே பேசும் என்பதால், இத்தனை சர்ச்சைகளைத் திரையுலகில் ஏற்படுத்தியிருக்கும் படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர் சதீஷ்குமாரைச் சந்தித்தோம். வழக்கமான கேள்விகளைத் தவிர்த்து, ‘சினிமா எந்த நிலையில் இருக்கிறது? அதன் எதிர்காலம் என்ன?’ என்ற மறுபக்கத்தைப் பற்றி அவரிடம் விசாரித்தோம்.
தமிழ் சினிமாவில் படம் எடுக்க இரண்டு வழிகள் இருக்கு. ஒன்று, வெற்றி பெறும் குதிரையின்மீது பந்தயம் கட்டுறது. இல்லைன்னா, ஒரு குதிரையை வளர்த்து அதை வெற்றிபெறச் செய்வது. இதில் தரமணி எந்த வகையான படம்?
நீங்க சொன்னதுல இரண்டாவது ஆப்ஷன்தான் ‘தரமணி’ படம். வளர்த்து வெற்றிபெற வைக்கலாம்னு நம்பிக்கையோட செய்த ஒரு படம். அதனுடைய சக்சஸ் ரேட் ஒவ்வொரு ஸ்டேஜ்லயும் தெரிஞ்சுக்கிட்டே இருந்தது. இது ஆண் - பெண் பற்றிய கரன்ட் டிரென்ட்ல உள்ள ஒரு விஷயம். இது ஐ.டி. ஃபீல்டுல வேலை செய்பவர்களைப் பற்றிய படமான்னு கேட்டா, முழுமையா அதுதான்னு சொல்ல முடியாது. அப்ப இது ஒரு லவ் ஸ்டோரியான்னு கேட்டீங்கன்னா, அதுக்குள்ளவும் இந்தப் படம் அடங்காது. இப்படி எந்த வரையறைக்குள்ளவும் தன்னை நிறுத்திக்காம, ஆண்கள் எப்படி வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க. பெண்கள் எப்படி எப்படி வாழ்ந்துக்கிட்டிருக்காங்க அப்படிங்குற சமூகத்தைப் பற்றிய கதைதான் இது.

திமுக + திருமா நெருக்கம்,,,, தேசிய அளவு கூட்டணிக்கு ஒரு முன்னெடுப்பு?

நாடாளுமன்றத் தேர்தல் வர இன்னும் ஒன்றரை முதல் இரண்டு வருடங்கள்தான் இருக்கின்றன. அதற்குள் தமிழகத்துக்குச் சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் வரலாம் என்று எதிர்க்கட்சிகள் சொல்லிக்கொண்டே இருக்கின்றன.
இந்த நிலையில் தமிழ்நாட்டு அரசியல்களத்தில் நடைபெறும் போராட்டங்கள், கட்சிகளின் முக்கிய நிகழ்ச்சிகள் ஆகியவை மெல்ல மெல்ல ஒரு மெகா கூட்டணிக்கான ரசவாதத்தை ஏற்படுத்தி வருகின்றன.
அதிமுக தன்னளவிலேயே மூன்றாக, நான்காக உடைந்து கிடக்கும் நிலையில்... முதலில் அந்த அணிகளுக்கு இடையேயான கூட்டணியே இன்னும் முடிவாகவில்லை. எனவே... வரப்போவது நாடாளுமன்றத் தேர்தலோ, சட்டமன்றத் தேர்தலோ, உள்ளாட்சித் தேர்தலோ எந்தத் தேர்தலாக இருந்தாலும் மெகா கூட்டணியாக சந்திப்பது என்ற திட்டத்தில் உற்சாகமாக காய் நகர்த்தி வருகிறது திமுக. அந்த வகையில் முரசொலி பவள விழா கூட்டத்தில் பெரும்பாலான எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்திருக்கிறார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.

ஆசியாவின் மிகப்பெரிய இரும்புத் தாதுப்படிவு இலங்கையில் கண்டுபிடிப்பு!

ஆசியாவின் மிகப்பெரிய இரும்புத் தாதுப்படிவு இலங்கையின் மொனராகலை மாவட்டத்தின் புத்தல பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக புவியியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த கனிமப்படிவு சுமார் 64 சதுர கிலோ மீற்றர்கள் வரை வியாபித்திருப்பதாகவும், அதிலிருந்து கிட்டத்தட்ட ஒன்பது மில்லியன் தொன் இரும்புக் கனிமத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் இந்த ஆராய்ச்சிக்கு பொறுப்பாகவுள்ள புவியியல் பேராசிரியர் அத்துல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த கனிமத்தை பிரித்தெடுக்க சரியான வழிகள் பின்பற்றப்பட்டால் இலங்கை வருடாந்தம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் சுமார் 60 ஆயிரம் மெட்ரிக் தொன் இரும்புக்கான பாரிய செலவை மிச்சப்படுத்தலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

80 நாடுகளுக்கு இலவச விசா ; கட்டார் அரசாங்கம் அதிரடி அறிவிப்பு



வீரகேசரி : இலங்கை தவிர 80 நாடுகளின் குடிமக்களுக்கு விசா இல்லாத நுழைவுகளை கட்டார் அரசாங்கம் அங்கீகரித்துள்ளது.: குறிப்பிட்ட பட்டியலில் இலங்கை, சவுதி, குவைட், அமீரகம், யெமென் போன்ற பல நாடுகள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.>இந்த நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, அவுஸ்ரேலியா, நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளது. கட்டாருக்கு வரவிரும்பும் இந்த 80 நாடுகளை சேர்ந்த பிரஜைகள் விசாவிற்கு விண்ணப்பிக்கவோ, பணம் கட்டவோ தேவையில்லை. கட்டாருக்கு விஜயம் செய்ய இந்த சலுகையைபெற வரையறை கிடையாது, பல முறை பயணம் மேற்கொள்ளவும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினகரன் சசிகலா மோடியின் ஹிட்லிஸ்டில்? எடப்பாடி பன்னீர் மோடி அணியில் ...

Special Correspondent FB Wing: கட்சி அலுவலகம் வர பயப்படும் தினகரன் சுருங்கிகிறதா சசிகலா கோஷ்டி.

18 அமைப்புச் செயலாளர்களை நியமித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி. தினகரன் கட்சி அலுவலகம் வருவேன் என்று சொல்லி வராத காரணம் இப்பொது வெளியே வந்து உள்ளது
தினகரன் அறிவிப்புக்கு பண்ருட்டி எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ பழனி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய பண்ருட்டி எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் தினகரன் அறிவித்த பதவியை ஏற்க முடியாது என அதிரடியாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டள்ள அறிக்கையில் எனக்கு தெரியாமல், தன்னிச்சையாக, தேர்தல் கமிஷனால் ஏற்றுக்கொள்ளப்படாத டிடிவி தினகரன் எனக்கு கட்சியின் மகளிர் அணி இணை செயலாளராக பொறுப்பு அறிவித்துள்ளதாக அறிகிறேன்.

.அது அழகானது ,அதில் இருந்து தான் நீ வருகிறாய்.... ஷாலின்

Shalin Maria Lawrence :   ரசிகன் .. சிவாஜி ரசிகர்கள் இருந்தார்கள், எம்.ஜி.ஆர் ரசிகர்கள் இருந்தார்கள். இன்னும் சொல்ல போனால் அவர்களின் பக்தர்களாக இருந்தார்கள். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் விவாதத்தில் மோதுவார்கள். வாய் வழி மோதல் தான். ஆனால் கருத்தியல் ரீதியாக மட்டும் இருக்கும். ஒருவரை ஒருவர் இழிவுபடுத்த மாட்டார்கள் .
கமல் ரசிகர்கள் இருந்தார்கள். ரஜினி ரசிகர்கள் இருந்தார்கள். இன்னும் சொல்ல போனால் அவர்களின் வெறியர்களாக இருந்தார்கள். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வாய் மோதலில் துவங்கி அடிதடி வெட்டுக்குத்தில் முடியும் .
விஜய் அஜித் ரசிகர்கள் இருக்கிறார்கள் .
"ஏன் இருக்கிறார்கள்?" என்று கேள்வி கேட்க்கும்படி இருக்கிறார்கள்.
யாராவது ஒருவர் விஜய் பற்றியோ இல்லை அஜித் பற்றியோ ஏதாவது எழுதி விட்டாலோ அல்லது சொல்லி விட்டாலோ, மெசப்பொட்டேமியா காலத்திலிருந்து இந்த காலம் வரையிலுள்ள பெண்களை மட்டும் கொச்சை படுத்தும் வார்த்தைகளை வைத்து அவ்வளவு கீழ்த்தரமான பேச்சுக்கள் செய்கைகள்.

புதன், 9 ஆகஸ்ட், 2017

ஐ ஏ எஸ் .உதயச்சந்திரன் அமைச்சர் செங்கோட்டையன் மோதலுக்கு காரணம் .....


செங்கோட்டையன் - உதயசந்திரனிடையே ஏற்பட்ட பிணக்குக்கு காரணம் அவரது பேச்சா? பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கும், பள்ளிகல்வித்துறை செயலர் உதயசந்திரனுக்குமிடையே பிணக்கு ஏற்பட்டுள்ளதற்கு உதயசந்திரனின் பேச்சு தான் காரணமா? என கேள்வி எழுந்துள்ளது.நக்கீரன்

குஜராத்தில் பாஜகவுக்கு விழுந்த அடி, மிக நல்லது நாட்டுக்கு...

இதுவே தொடக்கமாக இருக்கட்டும்...
குஜராத் ராஜ்யசபா தேர்தலில் சாம, தான, பேத, தண்ட வழிமுறைகள் அத்தனையையும் பின்பற்றி வெற்றி மட்டுமே நோக்கம் என்று செயல்பட்டது மோடி-அமித்ஷாவின் பா.ஜ.க.
ஏன் மோடி-அமித்ஷா பா.ஜ.க என்றால், மற்ற இந்திய மாநிலங்கள் எப்படியோ, குஜராத்தில் இவர்கள் தான் பா.ஜ.க. இவர்கள் இன்றி ஓரணுவும் அசையாது. ஆட்சிச் சக்கரம் சுழலாது.
எதை எல்லாம் குஜராத்தில் நடைமுறைப் படுத்தி பார்த்தார்களோ, அதை எல்லாம் இந்தியா முழுதும் செயல்படுத்தி வெற்றி கண்டார்கள். குஜராத் அவர்களது சோதனை களம் ஆனது.
மூன்று முறை குஜராத் முதல்வராக கட்சியில் கையாண்ட முறையை தான், பிரதம வேட்பாளராக மோடி அறிவிக்கப்படும் போதும் கையாண்டார்கள். பிரதமர் வேட்பாளர் ஆனார் மோடி.

குஜராத் .. 14 எம் எல் ஏக்கள் கட்சியை விட்டு நீக்கிய காங்கிரஸ் ... ராஜ்யசபா தேர்தலில் பாஜகவுக்கு விலை போனார்கள்..

ராஜ்யசபா தேர்தலில் மாற்றி ஓட்டு போட்ட 14 குஜராத் எம்எல்ஏக்கள்.. அதிரடியாக சஸ்பெண்ட் செய்த காங். Veera Kumar Oneindia Tamil டெல்லி: குஜராத்தில் நடந்து முடிந்த ராஜ்யசபா தேர்தலில் கட்சி மாறி ஓட்டு போட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 14 பேர் 6 வருடங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தில் 3 ராஜ்யசபா காலியிடங்களுக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில், சார்பில் அமித்ஷா, ஸ்மிருதி இரானி வெற்றிபெற்றனர். காங்கிரசின் அகமது படேல் வெற்றி பெற்றார்.  அதேநேரம், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இரண்டுபேர் மாற்றி ஓட்டு போட்ட விவரத்தை வெளிப்படையாக கூறினர். இதையடுத்து காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்ததால் அவ்விருவர் வாக்குகளும் செல்லாது என அறிவிக்கப்பட்டது.

ஏரியைப் பார்வையிட ஸ்டாலினுக்கு அனுமதி!

சேலம் கச்சராயன் ஏரியைப் பார்வையிடுவதற்கு ஸ்டாலினுக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் உள்ள கச்சராயன் ஏரியைத் திமுக-வினர் தூர்வாரினர். அந்த ஏரியை ஸ்டாலின் பார்வையிட வருவதற்கு அதிமுக-வினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து, சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் உள்ள கச்சராயன் ஏரியைப் பார்வையிட்டு பின்னர் சேலத்தில் நடக்கவிருந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் பங்கேற்க கடந்த வாரம் ஸ்டாலின் திட்டமிட்டிருந்தார். ஆனால், ஏரியைப் பார்வையிடுவதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. அதையடுத்து, ஏரியை ஸ்டாலின் பார்வையிட போலீஸ் தடுப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டாலின் சார்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி துரைசாமி ஸ்டாலினுக்கு அனுமதி வழங்கினார்.