திங்கள், 7 நவம்பர், 2016

கன்னட படப்பிடிப்பில் இரு துணை நடிகர்கள் நீரில் மூழ்கி இறப்பு ... விடியோ காட்சி....


திரைப்படக் காட்சியின்போது ஹெலிகாப்டரில் இருந்து ஏரியில் குதித்த
இரண்டு நடிகர்கள் நீரில் மூழ்கி உயிரிந்தனர். கர்நாடக மாநிலம், பெங்களுருவில் உள்ள ராம் நகரில் மஸ்தி குடி என்ற கன்னடத் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இன்று நடந்தது. இதில் படத்தின் நாயகன் துனியா விஜய்யும், வில்லன் நடிகர்கள் உதய் மற்றும் அனில் ஆகியோர் ஏரியில் குதித்து சண்டைபோடும் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அப்போது 3 பேரும் ஏரியில் குதித்தனர். எதிர்பார்த்ததைவிட ஏரியில் அதிக அளவு தண்ணீர் இருந்ததால், 3 பேரும் நீச்சல் அடிக்க முடியாமல் தத்தளித்தனர். இதையடுத்து அவர்களை காப்பாற்ற படக்குழுவினர் தீவிர முயற்சி எடுத்தனர். இந்த நிலையில் படத்தின் நாயகன் துனியா விஜய் மட்டும் நீச்சல் அடித்து கரை சேர்ந்தார். வில்லன் நடிகர்கள் உதய் மற்றும் அனில் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பேரிடர் மீட்புக் குழுவினர் அவர்களின் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை: