
அந்தக் கடிதத்தை பார்த்து அவன் அதிர்ச்சி அடைந்ததில் ஆச்சர்யமே இல்லை. யார்தான் அதிர்ச்சி அடைய மாட்டார்கள் ?
மத்திய நிதி அமைச்சர் சிங்காரவேலுவின் கடிதம் அது. தனக்கு முன்னால் இருந்த மேனேஜர் பாலகிருஷ்ணனுக்கு எழுதப்பட்ட கடிதம் அது.
டியர்
மிஸ்டர் பாலகிருஷ்ணன் என்று தொடங்கியது அந்தக் கடிதம்.
ஆர்.கே.என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் கேட்டிருக்கும் தொழில் கடனை, சிறப்பு
நிகழ்வாகக் கருதி, தாமதமில்லாமல் உடனடியாகத் தரும்படி அக்கடிதத்தில்
எழுதப்பட்டிருந்தது. அதன் கீழே மத்திய நிதி அமைச்சர் சிங்காரவேலு
கையெழுத்திட்டிருந்தார்.
அந்த சிங்காரவேலு அப்போதும் நிதி
அமைச்சராகத்தான் இருந்தார். எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பு இல்லாமல்
சிதறிக் கிடந்ததால், அவரது கட்சி தொடர்ந்து ஆட்சி நடத்திக்
கொண்டிருந்தது. சிங்காரவேலுவைப் பற்றி தொடர்ந்து ஊழல் புகார்கள் வந்த
வண்ணம் இருந்தாலும், எந்த ஆதாரமும் வெளிவரவில்லை என்பதால், அவரை யாராலும்
எதுவும் செய்ய முடியவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் மத்திய
அரசில் அவரது செல்வாக்கு கொடிகட்டிப் பறந்தது. தமிழ்நாட்டில் அந்த
தேசியக்கட்சிக்கு இருக்கும் கோஷ்டிகளிலேயே இவரது கோஷ்டி சக்தி வாய்ந்தது.
இவர் மட்டும் இல்லாமல், இவரது மகனும் அந்தக்கட்சியில் பொறுப்பில்
இருந்தான்.