சனி, 10 பிப்ரவரி, 2018

பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி!


பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி!மின்னம்பலம்:  பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமே அதிக நிதி வழங்கப்படுவதாகப்
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய அரசின் பட்ஜெட் கடந்த 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது . இதையடுத்து பட்ஜெட் தேர்தல் அறிக்கை போல உள்ளதாகவும், ஓராண்டுக்கான பட்ஜெட்டில் ஐந்தாண்டுத் திட்டங்கள் அறிவிக்க பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. மேலும் தங்களுக்கு அதிக நிதி ஒதுக்கவில்லை என்று கூறி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசின் மீது அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று (பிப்ரவரி 10) செய்தியாளர்களைச் சந்தித்த அம்மாநில முதல்வர் நாராயணசாமி, "பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் மத்திய அரசின் மூலம் கூடுதல் நிதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு நிதி குறைவாக வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடனே பாஜக அணுகுகிறது" என்று குற்றம் சாட்டினார்.

நீட் தேர்வை எதிர்த்து டெல்லியில் போராட்டம்!

மின்னம்பலம்: சமூக நீதிப் பாதுகாப்பிற்கான அனைத்து அமைப்பு
நீட் தேர்வை எதிர்த்து டெல்லியில் போராட்டம்!பேரவை சார்பில், தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக்கோரி டெல்லியில் போராட்டம் நடைபெறுமென, இன்று (பிப்ரவரி 10) அறிவித்தார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. குறைந்தபட்சம் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் வரை இந்த அறப்போராட்டம் தொடருமென்றும், அதன்பிறகு இந்தப்போராட்டம் அகில இந்திய அளவில் நடைபெறுமென்றும் தெரிவித்தார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இன்று (பிப்ரவரி 10) சென்னை வேப்பேரியில் மாணவர் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின், அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவதற்குள்ளாக நீட் தேர்வை எதிர்த்துப் போராட்டம்

எருமை இறைச்சி ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் ....

எருமை இறைச்சி: ஏற்றம் கண்ட ஏற்றுமதி!மின்னம்பலம் :2017ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் எருமை இறைச்சி ஏற்றுமதி 7 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
உலகின் மிகப் பெரிய எருமை இறைச்சி ஏற்றுமதியாளராகத் திகழும் இந்தியா, மேற்கூறிய காலகட்டத்தில் மொத்தம் 1.07 டன் அளவிலான எருமை இறைச்சியை ஏற்றுமதி செய்துள்ளது. வியட்நாம், மலேசியா போன்ற நாடுகளில் எருமை இறைச்சிக்கான தேவை அதிகமாக இருந்ததால் இந்தியாவின் ஏற்றுமதி கணிசமான ஏற்றத்தைச் சந்தித்துள்ளது. பாஸ்மதி அரிசி தவிர்த்து, எருமை இறைச்சி உட்பட இதர வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஏற்றுமதியைப் பொறுத்தவரையில், 2017 ஏப்ரல் - டிசம்பரில் 39.5 சதவிகித உயர்வுடன் மொத்தம் 6.34 மில்லியன் டன் அளவிலான வேளாண் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் பூனைக்கறி விற்பனை செய்யப்படுகிறது ஹோட்டல்கள் பூனை இறைச்சி வாங்குவது அம்பலம்!

tamiloneindia : சென்னையில் மட்டன் பிரியாணி எனக்கூறி பூனைக்கறி பிரியாணி விற்பனை சென்னை ஆட்டுக்கறியுடன் பூனை கறி பிரியாணி விற்பதாக எழுந்துள்ள புகார் அசைவ பிரியர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
 சென்னையில் காக்கா பிரியாணி விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து ஆட்டுக்கறி எனக்கூறி நாய்கறி விற்கப்படுவதாகவும் கூறப்பட்டது. இதனால் அசைவ பிரியர்கள் பலர் சாலையோர கடைகளில் சாப்பிடவும், சிக்கன் மற்றும் மட்டன் இறைச்சிகளை வாங்கவும் பெரும் அச்சமடைந்தனர்.
இந்நிலையில் அசைவ பிரியர்களை மீண்டும் பீதியடைய செய்யும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சென்னையில் பெரும்பாலான ஹோட்டல்களில் மட்டன் பிரியாணி எனக்கூறி பூனைக்கறி பிரியாணி போடப்படுவது தெரியவந்துள்ளது. சென்னையில் கடந்த சில மாதங்களாக பல இடங்களில் பூனைகள் நடமாட்டமே இல்லாமல் போனது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சென்னை மயிலாப்பூர், அண்ணாநகர், கோட்டூர்புரம், ராயப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் சுற்றித்திரிந்த பூனைகள் திடீரென மாயமாகின. இதில் வீட்டில் வளர்க்கப்பட்ட பூனைகளும் மாயமானது சந்தேகத்தை எழுப்பியது.

பரிதி இளம்வழுதியின் எழுச்சியும் வீழ்ச்சியும் . பதில் தெரியாத கேள்விகள் !

Ravi Raj :    அடங்காத காளை ஒண்ணு அடிமாடா போனதடி ..
ஒரு தலித் இளைஞன் மீது திமுக என்ற கட்சி எவ்வளவு அன்பு வைத்திருந்தது என்பதற்கு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் பரிதி இளம்வழுதியைத்தான் உதாரணம் காட்டி சொல்ல வேண்டும். எழும்பூர் தொகுதியை பரிதி இளம்வழுதிக்கே திமுக தாரை வார்த்துவிட்டது என்று சொல்லும்படிக்கு அந்த தொகுதியிலிருந்து மட்டும் தொடர்ந்து 5 முறை போட்டியிட்டு வென்றார் பரிதி . முதன்முதலில் திமுக இவரை வேட்பாளராக அறிவித்தபோது பரிதிக்கு வெறும் 25வயது தான் . எம்எல்ஏவாக , அமைச்சராக , திமுகவின் துணை பொது செயலாளராக என படிப்படியாக வளர்ந்தார் தான். 2011 தேர்தலில் இவரை எதிர்த்து நின்ற ஜான் பாண்டியனால் , எழும்பூரில் ஓட ஓட விரட்டப்பட்டு தாக்கப்பட்டார் பரிதி . ஜான் பாண்டியனுக்கு ஆதரவாக நின்று , பரிதியை ஜெயா கைது செய்தார் என்பது கூட சோகமான செய்தி அல்ல , அதே ஜெயாவிடம் பின்னாளில் போய் சேர்ந்தார் பரிதி என்பதும் , பரிதி இருந்த அதே அதிமுகவோடு பின்னாளில் ஜான் பாண்டியன் கூட்டணியில் சேர்ந்தார் என்பதும்தான் பெரும் சோகம் .

சிறந்த சுகாதாரம் கேரளம் 1 ஆம், பஞ்சாப் 2 ஆவது, . தமிழகம் 3 இடத்திலும் உள்ளது

சுகாதார குறியீடு,பட்டியல்,TN,Tamilnadu,தமிழகம்,தமிழ்நாடு,3ம் இடம்புதுடில்லி : 'நிடி ஆயோக்' அமைப்பின் சுகாதார குறியீட்டு பட்டியலில், சிறந்த மாநிலங்களில், கேரளாவுக்கு முதலிடமும், தமிழகத்திற்கு மூன்றாமிடமும் கிடைத்துள்ளது மத்திய அரசுக்கு, திட்டங்கள் உருவாக்கலில் ஆலோசனை கூறும் அமைப்பான, நிடி ஆயோக், மாநிலங்களில் உள்ள சுகாதார >துறையின் வளர்ச்சி குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டது. இதில், கேரளா முதலிடத்திலும், பஞ்சாப் இரண்டு, தமிழகம் மூன்று, குஜராத் மாநிலம் நான்காவது இடத்தை பிடித்துள்ளன.< மிகப் பெரிய மாநிலங்கள் வரிசையில் மோசமான சுகாதார சேவைகள் உள்ள மாநில வரிசையில், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், பீஹார் மற்றும் ஒடிசா இடம் பெற்றுள்ளன.

நீதிமன்றமே அழுகிக்கொண்டிருக்கிறது... இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளாலேயே பகிரங்கமாக்

வரம்புக்கு அப்பாற்பட்டதா நீதித்துறையின் அதிகாரம்?
கே.சந்துரு உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு)
சிந்தனைக் களம் சிறப்புக் கட்டுரைகள்

டென்மார்க் நாடே அழுகிப்போய்விட்டது’! -
(1) - இது ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் வரும் வசனம். இதை மேற்கோள் காட்டி மார்க்கண்டேய கட்ஜு உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் அலகாபாத் நீதிமன்றத்தைச் சாடினார். அலகாபாத் நீதிமன்றமே அழுகிக்கொண்டிருக்கிறது என்று சொன்னதோடு, அங்குள்ள நீதிபதிகளில் பலர் ஊழலில் திளைப்பதாகவும், அவர்களது சொந்தங்களும் பந்தங்களும் அவர்களைப் பயன்படுத்தி சொத்துக்கள் குவிப்பதாகவும் குற்றம்சாட்டினார். நீதிபதியின் மகன் வக்கீல் தொழில் ஆரம்பித்த முதல் வருடத்திலேயே கோடிக்கணக்கில் வருமானத்தைக் காட்டுவதையும், இறக்குமதி செய்த அந்நிய நாட்டு கார்களில் பவனிவருவதையும் சுட்டிக்காட்டினார். இதைப் பார்த்துக் கொதித்துப்போன அலகாபாத் நீதிபதிகள் அவரைக் கேட்டபோது, அவர் எல்லாரைப் பற்றியும் தான் சொல்லவில்லை என்று கூறினார்.

தமிழகத்தில் 60 மணல் குவாரிகள் திறக்க அரசு முடிவு .... இறக்குமதி கிடையாது . ஆறுகளை தோண்ட முடிவு !

தமிழகத்தில் 60 மணல் குவாரிகள் திறக்க முடிவு!மின்னம்பலம் :தமிழகத்தில் மணல் தட்டுப்பாட்டை நீக்க இன்னும் இரண்டு வாரங்களில் 60 மணல் குவாரிகளைத் திறக்க அரசு முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகள் அனைத்தையும் 6 மாத காலத்திற்குள் மூட வேண்டும் என்று 2017ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இந்த உத்தரவைத் தொடர்ந்து மேல்முறையீடு செய்யப்பட்ட இந்த வழக்கை மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதைத் தொடர்ந்து, இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத் தாக்கல் செய்தது. வழக்கு விசாரணையில் மணல் குவாரிகளை 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

ரவுடி பினு ஆப்பரேஷன் ! ஆர் கே நகர் தேர்தலில் ரவுடிகள் ... TTV தினகரன் சிக்குவார் !

Mathi -Oneindia Tamil  :சினிமா பாணியில்
கொலை செய்யும் பினு...அதிரவைக்கும் கொடூர தகவல்கள்!-  சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ரவுடிகள் துணையுடன் வெற்றி பெற்ற தினகரனை வீழ்த்தும் வகையில்தான் ரவுடி பினு ஆபரேஷனை வெற்றிகரமாக போலீஸ் நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது. 
;ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் தினகரனை வெற்றி பெற வைத்தாக வேண்டும் என்பதற்காக தீவிரமாக வியூகம் வகுக்கப்பட்டது. தேர்தல் எப்போது வேண்டுமானாலும் நடைபெறலாம் என்பதால் முன்கூட்டியே சில பணிகளை தினகரன் அணி செய்திருந்தது. அதில் முக்கியமானது ரவுடிகளை ஒருங்கிணைத்ததுதான்.
தேர்தலில் போட்டியிட்ட போது அதிகாரியை துப்பாக்கி முனையில் மிரட்டியவர் தலைமையில்தான் இந்த ரவுடிகள் ஒருங்கிணைக்கப்பட்டனர். அந்த பிரமுகரது கண்ணசைவில்தான் வடசென்னை ரவுடிகள் பலரும் செயல்பட்டும் வந்தனர்.
மக்களை மிரட்டிய பாலாஜி இப்படி தினகரனுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களை மிரட்டிய போதுதான் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் தேர்தலின் போது சுற்றி வளைத்து கைது செய்தனர். ஆனாலும் ஒரு கை பார்த்துவிடுவது என்ற முடிவுடன் ரவுடிகள் துணையுடன் ஆர்கே நகரில் தினகரன் தரப்பு வலம் வந்தது.

நீலகிரி மழைநீரை தடுத்து அணைகட்டவேண்டியது ... உடனடி தேவை?

B Selva Raj : நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கம். .நான் உங்களிடம் ி வருகிறேன்.அவ்வாறு என் வேலை பணி காரணமாக நான் சென்ற ஊர்..நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேவாலா மற்றும் பந்தலூர் மற்றும் சேரம்பாடி மற்றும் கூடலூர்.மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்கள். .இந்த ஊர்களை பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். ...இந்த இடங்கள் தமிழ்நாட்டிலேயே மிக மிக அதிகமாக மழை பெய்ய கூடிய இடங்கள் ஆகு‌ம். . ..ஆனால் இது சந்தோசமான செய்தியாக இருந்தாலும். ....வருத்தமான செய்தி என்னவென்றால். .இங்கு பெய்யும் அனைத்து மழை நீரும் கேரளாவுக்கு செல்கின்றன.இதனால் நமக்கு எந்த ஒரு பயனும் இல்லை. ...இங்கு பெய்யும் மழை நீரை சேகரித்து வைத்தாலே நமது தமிழ்நாட்டிற்கு மட்டும் இல்லாமல் அண்டை மாநிலத்திற்கும் தண்ணீர் அளிக்கலாம். .

ஆதார் மூலம் புதிய முறையில் திருட்டு ,,,, இதுவும் நடக்கும்...

நக்கீரன் :ஆதாரை வைத்து இப்படியும் திருடலாம்! - கைதானவரின் திடுக் வாக்குமூலம்!!ஆதார் அட்டையை மத்திய அரசு அறிமுகம் செய்ததில் இருந்து, அதன் பயன்பாடுகள் அதிகரித்ததை விட அதன்மீதான செய்திகள்தான் அதிகரித்திருக்கின்றன. அந்த வகையில், ஆதார் அட்டையில் இறந்த ஒருவரின் பெயரைப் பயன்படுத்தி, ஆன்லைனில் பொருட்கள் வாங்கிக் குவித்த ஒருவர், தான் திருடிய முறை குறித்து அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
;குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள பகுதி கோடா. இங்கு இணையதள வடிமைப்பாளராக பணியாற்றி வருபவர் தருண் சுரேஜா. சமீபத்தில் ஆன்லைன் மோசடி குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட தருண் அளித்த வாக்குமூலம் இதோ..
கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய செல்போன் எண் வாங்கினேன். சூப்பர் மார்க்கெட் சென்றிருந்தபோது, அங்கு ஒரு நிறுவனத்தில் பெயர் மற்றும் செல்போன் எண்ணைப் பதிவு செய்து கிரெடிட் கார்ட் வாங்கலாம் என்ற விளம்பரம் இருந்தது.

மணல் இறக்குமதியை தடுக்கும் மணல் மாபியா / அரசாணை! இறக்குமதியை தடுப்பது அரசமைப்புக்கு விரோதம் ! உயர்நீதிமன்றத்தில் வாதம்

நக்கீரன் :தமிழகத்தில் இறக்குமதி செய்யப்படும் மணலை பொதுப்பணித்துறைக்கு  மட்டுமே விற்கவேண்டும் என்ற தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கை  சென்னை உயர் நீதிமன்றம் பிப்ரவரி 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
;வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மணலை பொதுப்பணித்துறை தான் விற்பனை செய்யும் எனவும், சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்த கூடாது என கட்டுப்பாடுகள் விதித்து கடந்த டிசம்பர் 8ம் தேதி பொதுப்பணித்துறை அரசாணை பிறப்பித்தது.
;மணல் விற்பனையாளர்கள், பயன்பாட்டாளர் உரிமையை பறிக்கும் வகையில் தமிழக அரசு எடுத்துள்ள முடிவு அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானதாக இருக்கிறது என்ற நோக்கில் பொதுநல வழக்காக சென்னையை சேர்ந்த ஆதிமூலம்  பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.;

திருவாரூரில் மருத்துவ மாணவர் தற்கொலையா .. கொலையா ? பெற்றோர் சந்தேகம்!

திருவாரூரில் மருத்துவ மாணவர் தற்கொலை!மின்னம்பலம் :திருவாரூரில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதியில் மாணவர் ஒருவர் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த மாணவர் சுந்தரவேல், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டாமாண்டு எம்பிபிஎஸ் படித்துவந்தார். இவர் 2 வருடங்களாகக் கல்லூரியின் விடுதியில் தங்கிப் படிப்பைத் தொடர்ந்துவந்தார்.
இந்நிலையில், இன்று (பிப்ரவரி 9) காலை, கல்லூரி விடுதியில் தங்கியிருந்த அனைத்து மாணவர்களும் வகுப்புக்குச் சென்றுவிட்ட நிலையில், சுந்தரவேல் மட்டும் வகுப்புக்குச் செல்லாமல் விடுதி அறையில் தனியாக இருந்துள்ளார். பிறகு, சுந்தரவேல் அந்த அறையில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்

திருச்சி மாணவர் ரஞ்சித் ராக்கிங் படு கொலை ... 4 மாணவர்கள் கைது

ராக்கிங்: நான்கு மாணவர்கள் கைது!மின்னம்பலம்: திருச்சி மாவட்டத்தில் ராக்கிங் தொடர்பாக நான்கு மாணவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவுசெய்து கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள நெருஞ்சலக்குடி ஊராட்சியில் ராமதாஸ் என்பவர் வசித்துவருகிறார். யானைப்பாகனான இவரின் மகன் ரஞ்சித் திருச்சியிலுள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவந்தார். நேற்று (பிப்ரவரி 8) பள்ளியில் இருந்து வீடு திரும்பிய ரஞ்சித், தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, மாணவனின் பெற்றோர் லால்குடி போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். லால்குடி போலீஸ் டி.எஸ்.பி. ரமேஷ் பாபு, இன்ஸ்பெக்டர் தினேஷ் குமார், சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் போலீசார் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ரஜினி முதலில் கர்நாடகா சிஸ்டத்தை சரிசெய்யட்டும் ... ஜெயகுமார் ஆலோசனை!

கர்நாடகத்தில் சிஸ்டத்தை சரிசெய்யுங்கள்!மின்னம்பலம்: சிஸ்டம் சரியில்லை என்று கூறும்  ரஜினிகாந்த், முதலில் கர்நாடகத்தின் சிஸ்டத்தைச் சரிசெய்து தமிழகத்திற்குத் தண்ணீர் கொண்டுவர வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் குத்தலாகக் குறிப்பிட்டுள்ளார்.
புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், அதற்கான பணிகளை வேகமாக மேற்கொண்டுவருகிறார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ரஜினியிடம், தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லையா, இந்தியாவில் சிஸ்டம் சரியில்லையா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. தமிழகத்தில்தான் சிஸ்டம் சரியில்லை, முதலில் இங்குதான் சரி செய்ய வேண்டும் என்று ரஜினி பதிலளித்திருந்தார்.

எல்லா கட்சிகளின் தொலைபேசிகளும் ஒட்டு கேட்கப்படுகிறது ... எடப்பாடி உட்பட

மின்னம்பலம் :நம் செய்திக்குள் செல்வதற்கு முன்னோட்டமாக ஒரு டெல்லி செய்தி. ‘நாடு முழுதும் அச்சம் நிரம்பிய சூழலே நிலவுகிறது. எதிர்க்கட்சித் தலைவர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன. மத்திய பாஜக அரசு அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, தேசியப் புலனாய்வு முகமை ஆகிய அமைப்புகளை வைத்துக்கொண்டு எதிர்க்கட்சிகளைப் பிளவுபடுத்திட முயற்சித்துக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர்களை ஏதோ தீவிரவாதிகள் போல கண்காணிக்கிறீர்கள். தொழிலதிபர்கள் பலர் எங்களிடம் போனில் பேசுவதற்குக்கூட அச்சப்படுகிறார்கள். எங்கள் போன்கள் டேப் செய்யப்படுவதால் எங்களுடன் பேசுவதன் மூலம் தங்களுக்கும் பிரச்சினைகள் வந்துவிடக்கூடும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.
நான் ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வராக இருந்தபோது நாட்டுக்கு எதிரான தீவிரவாதிகளைக் கண்காணிக்க என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்றினோமோ அதையே இப்போது இந்த அரசு எங்களைக் கண்காணிக்கப் பயன்படுத்துகிறது. எதிர்க்கட்சித் தலைவர்கள் என்ன தீவிரவாதிகளா? ஜனநாயக அமைப்பில் இதுபோன்ற அச்ச உணர்வுகள் நல்லதுக்கு இல்லை.

மீண்டும் ஒரே நாளில் உண்ணாவிரதத்தை கைவிட்டஜீயர் ... தான் பட்டினி இருந்தால் உலகத்துக்கு கேடாம் ! ஏற்கனவே கொலஸ்ட்ரோல் சுகர் ஜாஸ்தி?

tamilthehindu :கவிஞர் வைரமுத்து ஆண்டாள்
சன்னதியில் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நேற்று உண்ணாவிரதத்தை தொடங்கிய ஸ்ரீவில்லிபுத்து ஜீயர் சடகோப ராமானுஜர் இந்த முறையும் ஒரே நாளில் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டுள்ளார்.
கடந்த மாதம், ராஜபாளையத்தில் நடந்த விழா ஒன்றில், கவிஞர் வைரமுத்து ஆண்டாளை அவதூறாக பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. வைரமுத்துவுக்கு பல்வேறு இந்து அமைப்புகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இவ்விவகாரத்தில், வைரமுத்து ஆண்டாள் சன்னதியில் நேரில் வந்து மன்னிப்பு கேட்கவேண்டுமென, ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோபராமானுஜர் உண்ணாவிரதம்  மேற்கொண்டார்.

113 தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு உத்தரவு

மாலைமலர் :எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 113 தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு இலங்கை அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. இலங்கை சிறையில் இருந்து 113 தமிழக மீனவர்களை விடுவிக்க அரசு உத்தரவு கொழும்பு: தங்கள் நாட்டு கடல் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடிப்பதாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். மேலும், மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியும், அவர்களின் வலைகளை நாசப்படுத்தியும் அட்டூழியத்தில் ஈடுபடுகின்றனர்.
கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள் தலைமன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள சிறைகளில் பல மாதங்களாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சொந்தமான மீன்பிடி படகுகளும் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை பாராளுமன்றத்தில் சமீபத்தில் ஒரு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்...- மினி தொடர் -2

மின்னம்பலம் : தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் மீது சபாநாயகர் மேற்கொண்ட தகுதி நீக்க நடவடிக்கையில் இருந்து எப்போது வேண்டுமானாலும் விடுவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பில் நேற்று (பிப்ரவரி 8) தினகரனின் வீட்டில் கூடி ஆலோசித்திருக்கிறார்கள்.
சட்டக் கூறுகளின் படி தங்களைத் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்றால், அதே சட்டக் கூறுகளின்படி ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டியதும் கட்டாயம் ஆகும் என்று அப்போது அந்த ஆலோனையில் பேசப்பட்டிருக்கிறது. அதாவது வரப்போகும் இந்தத் தீர்ப்பு ஒன்று நேரடியாக முதலமைச்சர் எடப்பாடி அரசாங்கத்தை பாதிக்கும், அல்லது மறைமுகமாக பாதிக்கும். பாதிப்பு என்பதை சட்டக் காரணிகளைப் பொறுத்து சர்வ நிச்சயம் என்பதுதான் அரசியல் வட்டாரத்திலும் சட்ட வட்டாரத்திலும் ஏற்பட்டிருக்கும் எதிர்பார்ப்பு. இதனை அறுவடை செய்யக் காத்துக் கிடக்கிறது தினகரன் தரப்பு.
இந்த வழக்கின் தோற்றுவாயே மிக சுவாரஸ்யமானது, சூடானது.
அதுபற்றி ஒரு மீள் பார்வை பார்க்கலாம்...

ஸ்டாலின் : நிலக்கரி ஊழல் 2012ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டுக்குள் 3,025 கோடி ரூபாய் ஊழல்..

நிலக்கரி ஊழல்: திமிங்கலமே வெளியே வந்துள்ளது!மின்னம்பலம் :‘நிலக்கரி ஊழலில் பூனைக்குட்டி அல்ல; ஊழல் திமிங்கலமே வெளியே வந்துள்ளது’ என குறிப்பிட்டுள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ‘இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.
நிலக்கரி இறக்குமதியில் ஊழல் நடைபெற்றிருப்பதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்களை வைத்து அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியிருந்தது. இந்த ஊழல் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளார். இதற்கிடையே, தாங்கள் திரட்டிய ஆதாரங்களை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினிடம் வழங்கிய அறப்போர் இயக்கத்தினர் ஊழல் குறித்து விளக்கியிருந்தனர். இந்த நிலையில்தான் நிலக்கரி இறக்குமதி ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தவம் செய்ய விரும்பு ..... கயவன் பன்னீர்செல்வம்

சவுக்கு : அந்த தேசிய கட்சி கோஷ்டிகளிலேயே இவரது கோஷ்டி சக்தி வாய்ந்தது.

அந்தக் கடிதத்தை பார்த்து அவன் அதிர்ச்சி அடைந்ததில் ஆச்சர்யமே இல்லை.   யார்தான் அதிர்ச்சி அடைய மாட்டார்கள் ?
மத்திய நிதி அமைச்சர் சிங்காரவேலுவின் கடிதம் அது.   தனக்கு முன்னால் இருந்த மேனேஜர் பாலகிருஷ்ணனுக்கு எழுதப்பட்ட கடிதம் அது.
டியர் மிஸ்டர் பாலகிருஷ்ணன்  என்று தொடங்கியது அந்தக் கடிதம்.  ஆர்.கே.என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் கேட்டிருக்கும் தொழில் கடனை, சிறப்பு நிகழ்வாகக் கருதி, தாமதமில்லாமல் உடனடியாகத் தரும்படி அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.  அதன் கீழே மத்திய நிதி அமைச்சர் சிங்காரவேலு கையெழுத்திட்டிருந்தார்.
அந்த சிங்காரவேலு அப்போதும் நிதி அமைச்சராகத்தான் இருந்தார்.  எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பு இல்லாமல் சிதறிக் கிடந்ததால், அவரது கட்சி தொடர்ந்து ஆட்சி நடத்திக் கொண்டிருந்தது.   சிங்காரவேலுவைப் பற்றி தொடர்ந்து ஊழல் புகார்கள் வந்த வண்ணம் இருந்தாலும், எந்த ஆதாரமும் வெளிவரவில்லை என்பதால், அவரை யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் மத்திய அரசில் அவரது செல்வாக்கு கொடிகட்டிப் பறந்தது.   தமிழ்நாட்டில் அந்த தேசியக்கட்சிக்கு இருக்கும் கோஷ்டிகளிலேயே இவரது கோஷ்டி சக்தி வாய்ந்தது.  இவர் மட்டும் இல்லாமல், இவரது மகனும் அந்தக்கட்சியில் பொறுப்பில் இருந்தான்.

சத்துவாச்சாரியில் 2 தேர்கள் எரிந்து சேதம்... வேலூரில் RSS அக்கிரமம்?

வேலூரில் உள்ள சத்துவாச்சேரி பொன்னியம்மன்
கோவிலில் இருந்த 2 தேர்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள கடைகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் கோவில் வளாகத்தில் இருந்த 50க்கும் மேற்பட்ட கடைகள் சேதமடைந்தன. இந்தத் தீவிபத்தில் அங்கிருந்த பசுபதீஸ்வரர் சந்நிதி மேற்கூரை இடிந்து விழுந்தது.
தொடர்ந்து, சிவபெருமானின் பஞ்ச சபைகளில் ஒன்றான திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில், தல மரம் தீப்பிடித்து எரிந்தது. இந்தச் சம்பவங்களால் பக்தர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில், நேற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மின் கசிவு ஏற்பட்டு, மின்சாதன அறையில் தீவிபத்து ஏற்பட்டது.

Sex Chat லீக் ... பாகிஸ்தானுக்கு உளவுத்துறை இரகசியங்களை லீக் செய்த இந்திய விமானப்படை அதிகாரி

Siva  -
Oneindia Tamil டெல்லி: பாகிஸ்தான் உளவுத்துறைக்கு ரகசிய ஆவணங்களை அளித்த இந்திய விமானப்படை அதிகாரி அருண் மார்வஹா கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய விமானப்படை அதிகாரியாக உள்ளார் அருண் மார்வஹா(51). பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐஎஸ்ஐ ஆட்கள் சிலர் கடந்த டிசம்பர் மாதம் ஃபேஸ்புக்கில் 2 கணக்குகள் துவங்கி மாடல் அழகிகள் என்ற போர்வையில் அருணிடம் சாட் செய்துள்ளனர். IAF officer arrested in Delhi ஐஎஸ்ஐ ஆட்கள் 2 வாரமாக அருணிடம் ஃபேஸ்புக் மூலம் செக்ஸ் தொடர்பான சாட் செய்துள்ளனர். அவர்களை மாடல் அழகிகள் என்று நம்பி அருணும் கசமுசா சாட்டில் ஈடுபட்டுள்ளார். அதன் பிறகு அவர்கள் இந்திய விமானப்படையின் ரகசிய ஆவணங்களை அருணிடம் கேட்டுள்ளனர்.

ஜெயா மரணம் உண்மைகள் மூடப்படுகிறது ... மோடிக்கு தெரியாமல் எதுவும் நடக்கவில்லை!

விகடன் :ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் நேர்மையை கேள்விக்குள்ளாக்குகிறார்கள் சாட்சியமளித்தவர்கள். மீண்டும் சாட்சியமளிப்பதில் எங்களுக்குத் தயக்கமாக இருக்கிறது என்கிற ஆதங்கக் குரலும் சாட்சிகளிடம் எதிரொலிக்கின்றன.&ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தை அமைத்தது எடப்பாடி அரசு. கடந்த 4 மாதங்களாக விசாரணை நடத்தி வந்த ஆணையம், தற்போது விசாரணையை 15 நாட்களுக்கு ஒத்தி வைத்துள்ளது. அரசு அதிகாரிகள், டாக்டர்கள், போயஸ்கார்டனில் இருந்த சசிகலா உறவினர்கள் என பலருக்கும் சம்மன் அனுப்பி வரவழைத்து அவர்களிடம் விசாரணை நடத்தியிருக்கிறார் ஆறுமுகசாமி.;

அன்புசெழியன் சொத்துக்களை ஆய்வு செய்ய உயர்நீதி மன்றம் அனுமதி

மாலைமலர் :சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வருமானத்தை மதிப்பீடு செய்ய வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் வருமானத்தை மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகளை தொடரலாம் என வருமான வரித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. சினிமா பைனான்சியர் அன்புச் செழியனுக்கு சொந்தமாக சென்னை மற்றும் மதுரையில் உள்ள வீடு, அலுவலகங்களில் 2015ம் ஆண்டு செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1ம் தேதிகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில், 67 லட்சம் ரூபாய் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த ஆவணங்களின் மூலம், 2010 - 11 முதல் 2015 - 16ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 375 கோடி ரூபாய் பண பரிவர்த்தனையை, 175 கோடி எனக் குறைத்து காட்டியுள்ளார். இந்த கூடுதல் வருமானத்திற்கான வரியை செலுத்தி விடுவதாகக் கூறி, அன்புச் செழியன் தரப்பில் வருமான வரித்துறை தீர்வு ஆணையத்தில் அளிக்கப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டது.

ஜீயர் உண்ணாவிரதம் ஒருவரும் கூட இருக்க தயார் இல்லை ... கோவிந்தா கோவிந்தா ...

வெப்துனியா : ஆண்டாளை அவமதித்ததாக கூறி கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிற கோரிக்கையோடு ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் சடகோப ராமனுஜம் இருந்து வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பெரிதாக யாரும் கலந்து கொள்ளவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளது.ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாக கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக பல இந்து அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்தன. அதற்காக, வைரமுத்து வருத்தம் தெரிவித்த பின்னரும், அவர் ஆண்டாள் சன்னதியில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். ஆனால், அந்த போராட்டம் ஒரே நாளில் முடிவிற்கு வந்தது.
அந்நிலையில், வைரமுத்து பிப்ரவரி 3-ஆம் தேதிக்குள் ஆண்டாள் சன்னதிக்கு வந்து மன்னிப்பு கேட்காவிட்டால் தான் மீண்டும் உண்ணாவிரதத்தை ஆரம்பிப்பேன் என ஜீயர் மீண்டும் அறிவித்தார். ஆனால் வைரமுத்து மன்னிப்பு கேட்கவில்லை. எனவே, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் சடகோப ராமனுஜம் வைரமுத்துவை கண்டித்து இன்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கினார்.

வியாழன், 8 பிப்ரவரி, 2018

உ.பி.யில் 46 பேருக்கு எய்ட்ஸ் பரப்பிய 10 ரூபாய் போலி டாக்டர்: எப்படி நடந்தது?- ஒரு விரிவான அலசல்

tamilthehindu :ராஜேஷ் யாதவ் | படம்: ராஜீவ் பாட் ஓமர் ரசீத் உத்தரப் பிரதேசம் உன்னவ் மாவட்டத்தில் ஊசியை மாற்றாமல் ஒரே ஊசியை பலருக்கு பயன்படுத்திய போலி டாக்டரால் 46 பேர் எச்ஐவி கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின் 10 ரூபாய் போலி டாக்டர் ராஜேஷ் யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார். அரசு மருத்துவமனை இருந்தும் ஏன் இத்தனை பேர் பாதிக்கப்பட்டார்கள்?, எப்படி மக்கள் கூட்டம் கூட்டமாக இந்த போலி மருத்துவரிடம் சென்றார்கள்? என்பதை விரிவாகப் பார்க்கலாம். உத்தரப் பிரதேச மாநிலம், உன்னவ் மாவட்டம், பங்கர்மு தாலுகா, பிரேம்கஞ்ச் பகுதியில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து பலர் எச்ஐவி நோயால் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வந்தனர். முதலில் 13 பேருக்கு எச்ஐவி இருந்த நிலையில், நவம்பர் மாதத்தில் 23 ஆக அதிகரித்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாநில சுகாதாரத் துறையினர் 2 மருத்துவர்கள் அடங்கிய குழு அமைத்து பங்கர்மு தாலுகா, பிரேம்கஞ்ச் பகுதியில் ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிட்டனர்.

ராகுல் : சொற்பொழிவு வேண்டாம் 3 கேள்விக்கு மட்டும் பதில் கூறுங்கள் ,,

மாலைமலர் :அடிப்படையான கேள்விகளுக்கு பதிலளிப்பதில் ஆர்வம் காட்டாமல் நீண்ட உரையாற்றுவதாக பிரதமர் மோடி மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சுமத்தியுள்ளார். ‘சொற்பொழிவு வேண்டாம், 3 கேள்விக்கு மட்டும் பதில் கூறுங்கள் பிரதமரே’: ராகுல் காந்தி புதுடெல்லி: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் மீது நேற்று பாராளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, அதிக நேரம் காங்கிரஸ் கட்சியை விமர்சிப்பதற்கே எடுத்துக்கொண்டார். இதற்கு காங்கிரஸ் தரப்பிலும் தக்க பதிலடி அளிக்கப்பட்டது. நாட்டில் முக்கிய பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடி பேச மறுப்பது ஏன்? என எதிர்க்கட்சிகள் கூறின.
 இதற்கிடையே, ரபேல் விமான ஒப்பந்தம் குறித்த தகவல்களை வெளியிடுவது நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து என பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தது தொடர்பாக ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். “ரபேல் விமானத்தின் விலை உள்பட அனைத்து விவகாரங்களும் வெளிப்படையானது என பாதுகாப்பு மந்திரி முன்னர் கூறியிருந்தார்.

திருவாலங்காடு கோயிலில் தீ! மதுரையைத் தொடர்ந்து கோவில் தீவிபத்துக்கள் .. இந்துத்வா சதி ? குஜராத் பாணி கலவரத்துக்கு பிளான்?

Annamalai Arulmozhi : பொதுவாக கலவரம் செய்வதற்கு குண்டுவைப்பதுதானே வழக்கம்.. அதென்ன தமிழ்நாட்டில் புதிதாக கோயில் கோயிலாக நெருப்பு அதுவும்... நடப்பது கவனக்குறைவால் !!! திட்டுவது அரசாங்கத்தை! கோரிக்கை.. கோயில்களை மீண்டும் பார்ப்பனப் பண்ணையம் ஆக்குவது.. இது எச்.ராஜா வகையறாவின் 2018 மாடலா ??
மதுரையைத் தொடர்ந்து மற்றொரு கோயிலில் தீ!மின்னம்பலம்: திருவாலங்காட்டில் உள்ள புகழ்பெற்ற வடாராண்யேஸ்வரர் கோயிலின் ஸ்தல விருட்சம் நேற்றிரவு (பிப்ரவரி 7) பற்றி எரிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் புகழ்பெற்ற வடாராண்யேஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயில் திருத்தணி முருகன் கோயிலின் உபகோயிலாகும். நடராஜப் பெருமானின் ஐந்து சபைகளில் இது ரத்தின சபையாகத் திகழ்கிறது. வடாராண்யேஸ்வரர் கோயில் கிபி 11ஆம் நூற்றாண்டில் முதலாம் ராஜேந்திர சோழனால் திருப்பணி செய்யப்பட்டது. வட ஆரண்யம் என்றால் ஆலமரக்காடு. பண்டைய காலத்தில் ஆலமரங்கள் நிறைந்திருந்ததால் திருவாலங்காடு என்னும் பெயர் பெற்றது. இக்கோயிலில் காரைக்கால் அம்மையார் முக்தியடைந்தார். இந்த கோயிலின் ஸ்தல விருட்சமாக 100 ஆண்டுகள் பழமையான ஆலமரம் உள்ளது.

மோடியை பார்த்து ரேணுகா சௌத்திரி அடக்க முடியாமல் சிரித்தார் ... ...

கேலிச் சிரிப்பு:பெண் எம்பியை விமர்சித்த மோடிமின்னம்பலம் :நாடாளுமன்றத்தில்,  பெண் எம்பியின் கேலிச் சிரிப்பை விமர்சித்துப் பிரதமர் மோடி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக பிரதமர் மோடி நேற்று(பிப்ரவரி 7) உரையாற்றினார். அப்போது, “கடந்த 1998ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சராக இருந்த எல்.கே. அத்வானி, நாட்டு மக்கள் அனைவருக்கும் தனித்துவமிக்க தேசிய அடையாள அட்டையை (ஆதார்) வழக்க வேண்டும் என்ற யோசனையை முதலில் முன்வைத்தார். ஆனால், முந்தைய காங்கிரஸ் அரசு தாங்கள்தான் ஆதார் அட்டைத் திட்டத்தை உருவாக்கியதாகப் பெருமை தேடிக் கொள்கிறது” என்று குறிப்பிட்டார்.
அவரது இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் எம்பியான ரேணுகா சௌத்ரி மிகச் சத்தமாகச் சிரித்தார்.