கிருஷ்ணசாமி தியாகராஜன்
: இராமலிங்க அடிகள், திருவருட்பிரகாச வள்ளலார். சிதம்பரம் இராமலிங்க அடிகள். பிறப்பு அக்டோபர் 5, 1823
மருதூர், சிதம்பரம் அருகில் உள்ள கிராமம்,
வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் (அக்டோபர் 5, 1823 –
சனவரி 30, 1873) ஓர் ஆன்மிகவாதி. இவர் சத்திய ஞான சபையை நிறுவியவர். "வாடிய
பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடியவர்.
சாதி சமய
வேறுபாட்டுக்கு எதிரான தமது நிலைப்பாடு காரணமாக, சமுதாயத்தின் பழைமைப்
பற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டவர். வள்ளலாருக்கு எதிராக வழக்குமன்றத்தில்
வழக்கு தொடர்ந்தவர் ஆறுமுக நாவலர்.
பிறப்பு
இவர் கடலூர்
மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில்
05.10.1823இல் பிறந்தவர். பெற்றோர் இராமையாபிள்ளை, சின்னம்மையார். இவரோடு
சபாபதி, பரசுராமன், உண்ணாமுலை, சுந்தராம்பாள் ஆகிய நால்வரும்
உடன்பிறந்தவர்கள். இராமலிங்கர் பிறந்த ஆறாம் மாதத்திலேயே தந்தையை இழந்தார்.
தாயார் குழந்தைகளோடு பொன்னேரி சென்று வாழ்ந்தார். பின்னர் சென்னையில்
ஏழுகிணறு பகுதி 39, வீராசாமி பிள்ளை தெருவில் உள்ள வீட்டில் குடியேறினார்.
அண்ணன் சபாபதி சமயச் சொற்பொழிவு செய்து வந்தார்.
பசியாற்றல் . அரிசி மூட்டைகள் இருக்கும் இராமலிங்க அடிகளால் உருவாக்கப்பட்ட தருமசாலை