: திரு சௌமியமூர்த்தி தொண்டைமானும் திரு ஜி ஜி பொன்னம்பலமும்
குட்டாப்பிடி என்ற தோட்ட கிராமத்தில் நடந்த ஒரு கொலை வழக்கு பற்றிய செய்தி இது
அங்குள்ள தோட்டத்தில் நடந்த கலவரத்தில் தோட்டத்தை சேர்ந்த ஒருவர் கொலைசெய்யப்பட்டார்
அந்த கொலையில் சந்தேகத்தின் அடிப்படையில் எட்டு மலையக தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
எட்டு தொழிலாளர்களும் கூட்டம் கூடி திடடமிட்டு இந்த கொலையை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது
தொழிலாளர்கள் பதறிப்போய்விட்டார்கள்

எட்டு பேர்களும் அங்கம் வகிக்கும் தொழிற்சங்கத்தின் தலைவரிடம் போய் உதவி கேட்டு மன்றாடினார் குடும்பத்தினர்
அந்த தொழிற்சங்க தலைவர் ஒரு சிங்கள வழக்கறிஞரை அணுகி இது பற்றி பேசினார் . அவர் இந்த வழக்கை கையிலெடுப்பதற்கு 5000 ரூபாய் கேட்டார் . இந்த தொகைக்கு தொழிலாளரக்ள் எங்கு போவார்கள்?
அந்த தொழிற்சங்க தலைவரும் கையை விரித்து விட்டார்
பின்பு இந்த இவர்கள் கொழும்புக்கு போய் திரு தொண்டைமானை சந்தித்து நிலமையை எடுத்து சொன்னார்கள்
கவனமாக கேட்ட தொண்டைமானுக்கு இந்த எட்டு பேர்களும் குற்றவாளிகள் அல்ல என்று தோன்றியது