சனி, 3 ஆகஸ்ட், 2013

IAS துர்காவுக்கு சோனியாகாந்தி ஆதரவு !

மன்மோகன் சிங்கிற்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கடிதம் எழுதி உள்ளார். ஐ.ஏ.எஸ்.அதிகாரி துர்கா நாக்பால் சஸ்பெண்ட் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி கடிதம் எழுதி உள்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெண் ஐ.ஏ.எஸ்.அதிகாரி துர்கா விவகாரம் நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. சுயநலன் கருதி பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கருத்து நிலவுவதாகவும், அதிகாரிகள் விஷயத்தில் நடுநிலையுடன் கூடிய செயல்பாடு அவசியம் என காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தெரிவித்துள்ளார்.

14 மாஸ்டர் டிகிரி , 64 சாப்ட்வேர்கள் மதுரை விஜயலட்சுமி too good to be true

வழிகாட்டும் மதுரை பெண்!
14 மாஸ்டர் டிகிரி பெற்று, 64 சாப்ட்வேர்களை தயாரித்த, மதுரையின் முதல் பெண் கணினி மென்பொருள் ஏற்றுமதியாளரான, விஜயலட்சுமி: சொந்த ஊர் கோவை. இன்ஜினியரிங் படிக்கும் போது, வீட்டை எதிர்த்து, காதல் திருமணம் செய்து கொண்டேன். திடீர் விபத்தில், கணவன் இறந்த போது, என் வயது, 25. காதல் கணவன் இல்லாத வெறுமை, தற்கொலைக்குத் தூண்டியது. குழந்தைகளின் முகம் மனதில் நிழலாடியதால், குழந்தைகளுக்காக வாழ வேண்டும் என்ற, மன உறுதி பிறந்தது. வங்கியில், ஐந்து லட்சம் ரூபாய் கடன் பெற்று, சிறிய சாப்ட்வேர் நிறுவனத்தை, 12 ஊழியர்களுடன், கணவர் வீட்டிலேயே ஆரம்பித்தேன். கடின உழைப்பால் இன்று, 400 ஊழியர்களுடன், மதுரை, டில்லி, பெங்களூரு, ஐதராபாத் என, நான்கு கிளைகளாக வளர்ந்துள்ளது. கிராமத்து இன்ஜினியரிங் மாணவர்கள், கணினி தொடர்பாக படிக்கின்றனரே தவிர, தொழில் ரீதியான திறனை வளர்க்காததால், படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை. எனவே, நான் சாப்ட்வேர் துறையில் பெற்ற நன்மைகளுக்கு பிரதிபலனாக, "வெப் டெவலப்பிங்' பயிற்சியை இலவசமாக தந்து, "மைக்ரோசாப்ட்' துணையுடன், "ஆன்-லைன்' தேர்வு நடத்துகிறேன்.

இயக்குனர் சேரன்: என் மகளுக்கு கணவராக வருபவர் நல்லவராக இருக்கவேண்டும்

சென்னை: எனது மகளுக்கு கணவனாக வருபவர் நல்லவராக இருக்க வேண்டும் என்று ஒரு தந்தையாக எதிர்பார்ப்பதில் தவறில்லையே என இயக்குனர் சேரன் கேட்டுள்ளார் அதேசமயம் நான் காதலுக்கு எதிரானவன் அல்ல...என்றும் அவர் உருக்கமாக கூறியுள்ளார். பிரபல இயக்குனரும், நடிகருமான சேரனின் 2வது மகள் தாமினி (20). தனது தந்தைக்கு எதிராக நேற்று சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தன்னை வீட்டுச்சிறையில் தந்தை சேரன் அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாக தாமினி தெரிவித்தார். இது தமிழ் திரையுலக வட்டாரத்திலும், ரசிகர்களிடையேயும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சேரன் இன்று சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் சந்துரு மீது புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் சந்துரு செல்போன் மற்றும் மின்னஞ்சல் மூலமாக தனது மகளுக்கு மிரட்டல் விடுத்ததாகவும், பணம் கேட்டு அச்சுறுத்தியதாகவும், பின்னர் தனது மகளை மூளைச் சலவை செய்து தனக்கு எதிராக புகார் கொடுக்க வைத்ததாகவும் கூறியுள்ளார்.

ரோட்டில் விரட்டி விரட்டி அடித்தார் சேரன், மகளின் காதலர் சந்துரு

சென்னை: சேரனும் அவருடன் வந்தவர்களும் என்னை சாலையில் ஓட விட்டு விரட்டி விட்டி அடித்தார்கள் என்று பரபரப்புப் புகார் தெரிவித்துள்ளார் இயக்குநர் சேரனின் மகளின் காதலர் சந்துரு. இன்று காலை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்திதற்கு வந்த சேரனின் மகள் தாமினியின் காதலர் சந்துரு அங்கு வாக்குமூலம் அளித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், சேரன் மகள் தாமினியும் நானும் இரண்டு வருடங்களாக காதலிக்கிறோம். சேரனுக்கு தெரிந்ததும் என்னை மிரட்டினார். மகளுடன் பேச் கூடாது என்றார். நாங்கள் காதலில் உறுதியாக இருந்தோம். அதன் பிறகு சேரனிடம் மன மாற்றம் ஏற்பட்டது. இரண்டு வருடம் கழித்து உங்களுக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என்றார். சந்தோஷப்பட்டோம். இந்த நிலையில் தாமினிக்கு உடல் நிலை சரி இல்லை என்று தயாரிப்பாளர் ஒருவர் என்னை அழைத்து போனார். கோடம்பாக்கம் பெட்ரோல் பங்கில் வைத்து சேரன் பெரிய டைரக்டர் அவர் மகளை மறந்து விடு இல்லாவிட்டால் காரை ஏற்றி கொன்று விட்டு விபத்து என்று சொல்லிவிடுவோம். நீ சினிமாவில் இருக்கிறாய் உன்னை வளர விட மாட்டோம் என்று அச்சுறுத்தினர். அப்போது சேரனும் ஆட்களுடன் அங்கு வந்தார். இவனிடம் என்ன பேச்சு என்று சொல்லி சேரனும் அவருடன் வந்தவர்களும் என்னை அடித்தனர் நான் அங்கிருந்து ஓடினேன். ரோட்டில் என்னை ஓட ஓட விரட்டி அடித்தார்கள்.

சந்திரசேகர ராவ் மிரட்டல்: ஆந்திரா, ராயலசீமா அரசு ஊழியர்கள் வெளியேற வேண்டும் !

திருப்பதி: தெலங்கானா பகுதியில் இருந்து கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதிகளை சேர்ந்த அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் திடீரென மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு ஊழியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதற்கிடையே, தெலங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 4வது நாளாக பந்த் நடப்பதால் ஆந்திராவில் பதற்றம் நீடிக்கிறது. ஆந்திராவில் இருந்து தெலங்கானா பகுதியை பிரித்து தனி மாநிலமாக  அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளில் கடந்த 31ம் தேதி முதல் தொடர் பந்த் நடந்து வருகிறது.

ஆந்திர போராட்டக்காரர்களுக்கு அடங்க மறுத்த தமன்னா! இன்னொரு குஷ்பூ ?

  ஐக்கிய ஆந்திராவுக்கு ஜே' என்று ஒரு முறை மட்டும் சொல்லுங்கள், போகவிடுகிறோம் என்று பேரம் பேசிப் பார்த்தார்கள் போராட்டக்காரர்கள். ஆனால் தமன்னா கடைசி வரை அப்படி சொல்ல மாட்டேன் என உறுதியாக நின்றார். ஹைதராபாத்: ஒன்றுபட்ட ஆந்திராதான் வேண்டும் என போராட்டக்காரர்கள் கோஷம் போடச் சொன்னதை ஏற்காமல், அது சினிமாக்காரர்கள் வேலையல்ல என்று தைரியமாக மறுத்துப் பேசியுள்ளார் நடிகை தமன்னா. தெலுங்கில் முதல் நிலை நடிகையாக உள்ளார் தமன்னா. இப்போது ஆந்திரா இரண்டு மாநிலங்களாகப் பிரிக்கப்படுகிறது. முன்பு தெலுங்கானா வேண்டும் என்று கோரி பெரும் போராட்டம் நடந்தது. இப்போது தெலுங்கானா வேண்டாம் என்று அதைவிட பெரிய போராட்டம் நடக்கிறது. தெலுங்கானா விவகாரம்: ஆந்திர போராட்டக்காரர்களுக்கு அடங்க மறுத்த தமன்னா! தமன்னா நேற்று விசாகப்பட்டினம் விமான நிலையம் செல்லும் வழியிலும் ஒரு கும்பல் ஆர்ப்பாட்டம் நடத்திக்கொண்டிருந்தனர்.

தெலுங்கானா கோரிக்கையில் நியாயம் இருக்கிறதா ?

ஹைதராபாத் இந்தியாவின் 29வது மாநிலம் தெலுங்கானா என்பது தெரியும். ஆனால் தெலுங்கானாவைப் பற்றிய பல முக்கியமான விஷயங்கள் நிறையப் பேருக்குத் தெரிந்திருக்காது. ஒட்டுமொத்த ஆந்திராவையும் எடுத்துக் கொண்டால், தெலுங்கானா பிராந்தியத்தால்தான் அது வளமானதாக காணப்படுகிறது என்பதே உண்மை.ஆனால் ஆட்சி அதிகாரத்திலும், வேலைவாய்ப்பு, கல்வியிலும் தெலுங்கானா பிராந்திய மக்கள் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர். இதனால்தான் அவர்கள் தனி மாநில கோரிக்கையையே கையில் எடுக்க நேரிட்டது. தெலுங்கானா குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்.
நீர்வளம் நிரம்பிய தெலுங்கானா தெலுங்கானா பிராந்தியத்தில் கிருஷ்ணா மற்றும் கோதாவரி ஆகிய இரு ஆறுகளும் வளம் கொழிக்க வைக்கின்றன. இதில் கிருஷ்ணாவின் பங்கு 68 சதவீதமாகும். 69 சதவீத அளவுக்கு கோதாவரி ஆறு இப்பகுதியில் ஓடுகிறது. பாதி வனப்பகுதி இங்குதான் ஆந்திர மாநிலத்தின் ஒட்டுமொத்த வனப்பகுதியில், 45 சதவீதம் தெலுங்கானாவிலத்தான் அமைந்துள்ளது.

திரையரங்குகள்: பிரசவ காட்சியுடன் இருந்தால் சுவேதா படம் திரையிட மாட்டோம்

சென்னை: சுவேதா மேனன் படத்துக்கு திரையரங்கு அதிபர்கள் சங்கம் எதிர்ப்பு
தெரிவித்துள்ளது. அரவான் உள்ளிட்ட படங்களில் நடித்த சுவேதா மேனன், மலையாளத்தில் நடித்திருக்கும் படம் களிமண்ணு. இதில் குழந்தை பிறக்கும் காட்சியில் தத்ரூபமாக நடித்தார். பிரசவம் நடப்பதை இயக்குனர் பிளஸ்சி படமாக்கினார். இதற்கு பெண்கள் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். படத்தில் பிரசவ காட்சி இடம் பெற்றால் எதிர்த்து போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்தனர்.இந்நிலையில், இப்படம் தணிக்கை குழுவினருக்கு திரையிடப்பட்டது. படத்துக்கு அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் வழங்கினர். இதுபற்றி இயக்குனர் பிளஸ்சி கூறுகையில், ‘பிரசவ காட்சி என்பது இப்படத்துக்கு முக்கியமான தேவை. எனவேதான் சுவேதா மேனன் மற்றும் அவரது கணவரிடம் அனுமதி பெற்று நிஜ பிரசவ காட்சியை படமாக்கினேன். எந்த காட்சியையும் துண்டிக்காமல் தணிக்கை குழுவினர் சான்றிதழ் தந்திருக்கின்றனர்Õ என்றார்.

கரும்பு காட்டில் யானைகள் விடிய விடிய அட்டகாசம்

கள்ளக்குறிச்சி: அரூர் வனப்பகுதியில் இருந்து வந்த 6 யானைகள் சேலம்
 வனத்துறையினர் யானைகளை விரட்டியபோது தகரை கிராமத்தைச்சேர்ந்த அத்தியப்பன் மகன் மூர்த்தி என்பவருக்கு சொந்தமான கரும்புத்தோட்டத்திற்குள் இரவு 11.30 மணிஅளவில் புகுந்தன. வாணவெடிகளை வெடித்தபோதும் யானைகள் கூட்டம் அங்கிருந்து செல்லாமல் கரும்புக்காட்டுக்குள்ளேயே சுற்றி வந்தன. இரவு கரும்புத்தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் வெளியேறின. 6 மணிநேரம் அதே கரும்புக்காட்டிலேயே முகாமிட்ட யானைகள் பயிர்களை நாசம் செய்தன. ஏராளமான கரும்புகளையும் தின்று தீர்த்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இன்று காலை வெளியேறிய யானைகள் தற்போது  கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள கல்லாநத்தம் அடிப்பெருமாள் அருகில் உள்ள வனப்பகுதியில் 6 யானைகளும் முகாமிட்டுள்ளன. இதனால் கிராமத்திற்குள் நுழைந்து விடுமோ என்று பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

பழம்பெரும் இசை அமைப்பாளர் தட்சிணாமூர்த்தி காலமானார்

பழம்பெரும் இசை அமைப்பாளர் தட்சிணாமூர்த்தி நேற்று சென்னையில்
மரணம் அடைந்தார். அவருக்கு வயது 94.நல்லதங்காள், நந்தா என் நிலா, ஒரு கோவில் இரு தீபங்கள், ஜீவநாடி, ஜெகத்குரு ஆதி சங்கரர் போன்ற தமிழ்படங்களுக்கு இசை அமைத்தவர் தட்சிணா மூர்த்தி.இவர் இளையராஜா, பி.சுசீலா, ஜேசுதாஸ் ஆகியோரின் குரு ஆவார். இவர் மலையாளப்பட உலகில் 3 தலைமுறை படங்களுக்கு இசை அமைத்து வந்தார்.இன்று மாலை 6–30 மணிக்கு தட்சிணா மூர்த்தி சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் மரணம் அடைந்தார். அவர் மலையாளப்பட உலகில் ‘சாமி’ என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர்.இவர் தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் 125 படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.தட்சிணா மூர்த்தியின் இறுதிச்சடங்கு இன்று(சனிக்கிழமை) நடக்கிறது

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

இந்திய சாலைகளின் ராஜா! Ambassador !

யானையின் கம்பீரம். புலியின் பாய்ச்சல். இந்த இரண்டின் பெருமையான கலவைதான் அம்பாஸடர் கார். வெளிநாடுகளில் இந்தியா என்றாலே அம்பாஸடரும் நினைவுக்கு வரும் வகையில் நம் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் வாகனம். இந்தியாவில் அதிகாரத்தை அடையாளப்படுத்தும் சிகப்பு விளக்கு, மற்ற எந்த வாகனத்தையும் விட அம்பாஸடரின் தலைக்குதான் பொருத்தமாக அமைகிறது.அம்பாஸிடர் என்றால் அப்படியொரு நம்பிக்கை. பாதுகாப்பான கார் என்பதால் மட்டுமல்ல, அம்பாஸடரில் வருபவர்கள் நாணயமானவர்கள் என்று அனைவரும் நம்புமளவுக்கும் கூட (எனவேதான் டிசம்பர் 2001ல் பாராளுமன்றத்தை தாக்கிய தீவிரவாதிகள் அம்பாஸடர் காரை பயன்படுத்தினார்கள். சிகப்பு விளக்கு பொருத்தப்பட்ட அம்பாஸடரை இந்தியாவில் எந்த காவலருமே மறித்து சோதிக்கமாட்டார்கள் என்று தீவிரவாதிகளுக்கு தெரியும்). ambassador

ஜெயலலிதாவின் மூன்று லட்சம் டாலர் பரிசுப்பொருள் வழக்கில் 4 வார கால அவகாசம்

பரிசுபொருள் வாங்கியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் முதல்வர் ‌ஜெயலலிதாவிற்கு சுப்ரீம் கோர்ட் கால அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவிற்கு அமெரிக்காவில் இருந்து 1992-ல் பரிசு பொருள் வந்தது குறித்து சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு 2011-ல் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து சி.பி.ஐ. சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. இன்று நடந்த விசாரணையில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு 4 வார கால அவகாசம் அளித்து விளக்கம் அளிக்க உத்தரவிட்டது

மகள் போலீசில் புகார்: டைரக்டர் சேரன் காதலனை கொல்ல முயல்கிறார் ! இதுதாண்டா சினிமாக்காரன்

சென்னை: தன்னை தன் காதலனிடம் இருந்து பிரிக்கவும், காதலனை கொலை செய்யவும் தனது தந்தை முயற்சி செய்வதாக இயக்குனர் சேரனின் மகள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். குடும்பப் பாங்கான படங்கள் எடுப்பதில் வல்லவர் சேரன். அவரது மனைவி செல்வராணி. அவர்களுக்கு நிவேதா மற்றும் தாமினி(20) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். சேரன் சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சேரனின் 2வது மகள் சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் மீடியா 3-ம் ஆண்டு படித்து வருகிறார். அவர் இன்று காலை 11 மணிக்கு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். தனது தந்தை தன்னையும், தனது காதலன் சந்துருவையும் பிரிக்க முயற்சிப்பதாக புகார் அளித்தார்.
அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சூளைமேட்டைச் சேர்ந்த சந்துரு என்பவரை நான் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வருகிறேன். அவர் சினிமாவில் உதவி இயக்குனராகவும், டான்சராகவும் உள்ளார். சினிமா விழா ஒன்றுக்கு என் தந்தையுடன் சென்றபோது தான் சந்துரு அறிமுகமானார். பிறகு நாங்கள் காதலிக்க ஆரம்பித்தோம். எங்கள் காதல் பற்றி என் தந்தைக்கு தெரிய வந்தது. முதலில் அவர் எங்கள் காதலை எதிர்க்கவில்லை. படிப்பு முடிந்த பிறகு நீ சந்துருவையே திருமணம் செய்து கொள்ளலாம் என்றார். ஆனால் கடந்த 2 மாதங்களாக எங்கள் வீட்டில் என் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். என் தந்தையும், அவருக்கு நெருக்கமான திரைத்துறையினரும் சேர்ந்து சந்துருவை மறந்துவிடும்படி என்னை மிரட்டி வருகின்றனர்.

60 செக்கனில் இணைய உலகம்! நிமிடமொன்றில் 1. 216,000 படங்கள்

இணைய உலகம் என்றும் பரபரப்பானது. சுறுசுறுப்பாக இயங்கும் இணைய உலகத்திற்கு 24 மணித்தியாலங்கள் நிச்சயம் போதாது. அங்கு 60 செக்கனுக்குள் பல்லாயிரக் கணக்கான செயற்பாடுகள் நடைபெறுகின்றன. அதேபோல் கோடிக்கணக்கான பாவனையாளர்கள் தங்கள் நேரத்தை அதில் செலவழிக்கின்றனர். பேஸ்புக் லைக்கள், டுவிட்கள், ஸ்கைப் அழைப்புகள், பிலிக்கர்கள் படங்கள், யுடியுப் காணொளிகள் என்பன இதில் அடங்கும். இதனை தெளிவாகக் காட்டும் பொருட்டு ‘கிவ்மீ’ என்ற நிறுவனம் ‘இன்போகிராப்’ ஒன்றை வெளியிட்டுள்ளது.
பிசி மெக், பிஸ்னஸ் இன்சைடர், டெய்லிமெய்ல், போமட் போன்ற பிரபல இணையத்தளங்கள் சிலவற்றில் இருந்து பெறப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டே இதனை ‘கிவ்மீ’ வெளியிட்டுள்ளது.
இதன் அடிப்படையில் நிமிடமொன்றில்
1. 216,000 படங்கள் இன்ஸ்ரகிராமில் பரிமாற்றப்படுகின்றன.
2. அமேசன் இணையத்தளத்தில் 83,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான விற்பனை நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
3. பேஸ்புக்கில் 1.8 மில்லியன் ‘லைக்ஸ்’ போடப்படுகின்றது.

தெலங்கானா, சீமாந்திரா இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி?

சித்தூர் :  தெலங்கானா சீமாந்திரா  மாநிலங்களில் எந்த கட்சி அடுத்து ஆட்சி அமைப்பது மற்றும் யார் முதல்வர் ஆவது என கட்சி தலைமையை தலைவர்கள் முற்றுகையிட தொடங்கி உள்ளனர். ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டதை தொடர்ந்து தெலங்கானா மற்றும் சீமாந்திர ஆகிய இரு மாநிலங்களில் இனி நடைபெற உள்ள சட்ட ரீதியான நடவடிக்கைகள் குறித்து தற்போது மாநிலம் முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறது.ஆந்திராவில் தெலங்கானா உட்பட 295 எம்எல்ஏ.க்கள் உள்ளனர். இதில் தற்போது ராஜினாமா செய்தவர்கள், மரணமடைந்தவர்கள் என 16 தொகுதிகள் இடைதேர்தலுக்கு தயாராக உள்ளது. இவர்களை தவிர்த்து 279 எம்எல்ஏ.க்கள் உள்ளனர். இவர்களில் 2 பேருக்கு வாக்குரிமை இல்லை. மீதமுள்ள 277 எம்எல்ஏ.க்களுடன் 2 மாநிலங்களை உருவாக்க வேண்டும். அந்தந்த மாநில எம்எல்ஏ.க்கள் மாநில வாரியாக பிரிக்கப்படுவார்கள். தெலங்கானா மாநிலத்தில் 119 தொகுதிகளும், சீமாந்திரா மாநிலத்தில் 175 தொகுதிகளும் உள்ளன.

China :100 வெப்சைட்களை சீன அரசு முடக்கியுள்ளது

பீஜிங் : செய்திகளை தரும் 100 வெப்சைட்களை சீன அரசு முடக்கியுள்ளது. அரசுக்கு எதிரான குரல் கொடுக்கும் மக்கள் பத்திரிக்கையாளர்களின் கருத்து சுதந்திரத்தை அரசு பறிக்கிறது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சீனாவில் வெப்சைட் மூலம் கருத்துக்களை சொல்வது அதிகரித்து வருகிறது. அதிலும் சமீப காலமாக செய்திகளை தரும் வகையில் 100க்கும் மேற்பட்ட வெப்சைட்கள் தலைதூக்கின. இதில், அரசு மற்றும் அரசியல் நடவடிக்கைள் குறித்த செய்திகளும் இந்த வெப்சைட்களில் இடம்பெற்றன. மாகாண அளவில் நிலவும் அரசியல் விவகாரங்கள் தான் அதிகம் இடம் பெற்றன.

தகவல் அறியும் சட்டத்தில் இருந்து கட்சிகளுக்கு விதி விலக்கு! அரசியல்வாதிகள் கொள்ளை தொடரும்

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட்
உட்பட ஆறு தேசிய கட்சிகள் தங் களுக்கு கிடைக்கும் நிதி வரும் வழி, வேட்பாளார்களை தேர்ந்தெடுக்கும் முறை ஆகியவற்றை ஆர்டிஐ என்னும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கட்சிகளிடம் கேட்டுப்பெறலாம் என சில மாதங்களுக்கு முன் தகவல் ஆணையம் அறிவித்தது.இதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், டெல்லியில் இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில், இந்த பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில், தகவல் அறிவும் உரிமைச்சட்டத்தை திருத்தவும், தகவல் அறியும் உரிமைச் சட்டத் திலிருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்க சட்டதிருத்தம் கொண்டுவரவும் முடிவு செய்யப் பட்டுள்ளது. மேலும், சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீடு தொடர்பான விதிகளை தளர்த்த ஒப்புதல் அளித்து ள்ளது. பல பொருள் சில்லறை வணிகத்திலும் எப்டிஐ விதிகளை தளர்த்த மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

ரத்தத்தையே நாங்கள் பதிலாக தருவோம் ! அத்வானி முன்னிலையில் குமரி ஆனந்தனின் மகள் தமிழிசை சவுந்தரராஜன் அடாவடி பேச்சு

Tamilisai Soundarrajan is a Gynecologist and a National Secretary of the Bharatiya Janata Party. She is the daughter of Kumari Anandan.
 ஆடிட்டர் ரமேஷ் படுகொலையை ஒட்டி அத்வானி கலந்துகொண்ட அஞ்சலி கூட்டத்தில் மிக காட்டமாக பேசி பா.ஜ.க தொண்டர்களிடம் கைதட்டலை பெற்றார் தமிழிசை சவுந்தரராஜன்.சேலம் ஜவஹர் மில் மைதானத்தில் நடந்த கூட்டத்தில் பேசியவர், “ஆடிட்டர் ரமேஷ் மிகவும் அன்பானவர். யாருக்கும் எந்த தீங்கும் இளைக்காதவர். இந்து மத மேம்பாட்டிற்காக உழைத்தவர். அந்த உத்தமரை தான் அப்படி சிதைத்துள்ளனர். சிதைத்தது கூலிபடையோ,தீவிரவாத படையாகவோ இருக்கலாம்.ஆனால் உங்களை எங்கள் காவிப்படை விட்டுவிடாது. அது உங்களை துரத்தி அடிக்கும். அத்வானிஜி கோவை வந்தபோது குண்டு வெடிப்பு,மதுரை வந்தபோது பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.   இங்கு சேலத்திலும் வெடிகுண்டு பீதி. இவைகளை தாண்டி அவர் தைரியமாக வர காரணம் நம் மீது வைத்திருக்கும் பாசம்.எங்கள் கட்சி ரத்தத்தை வேரில் விட்டிருக்கிறது. நாங்கள்தான் உண்மையான மதசார்பற்ற கட்சி.  பெங்களூரில் கட்சி அலுவலகம் முன் குண்டு வைக்கப்பட்டு இருக்கு. குற்றவாளி தமிழகத்தில் கைது செய்யபடுகிறான். குண்டு வைக்கும் பழக்கம் எங்களுக்கு இல்லை.

மணல்மாபியாவிடம் விலைபோன அகிலேஷ் யாதவ் IAS அதிகாரியை நீக்கியது சரிதானாம்

லக்னோ : மத நல்லிணக்கத்திற்கு பாதிப்புவரக்கூடாது என்பதற்காகவே பெண்
உ.பி.,யில், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது. இங்கு, கவுதம புத்தா நகர் பகுதியில், துர்கா சக்தி நக்பால், 28, என்ற பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி, 10 மாதங்களுக்கு முன், உதவி கலெக்டராக நியமிக்கப்பட்டார். பதவியேற்றதுமே, கவுதம புத்தா நகர் பகுதியில், நீண்ட காலமாக அராஜகத்தில் ஈடுபட்ட, மணல் மாபியாக்கள் மீது, அதிரடி நடவடிக்கை எடுத்தார். மணல் மாபியாக்களை, கைது செய்து உள்ளே தள்ளினார். இதனால், துர்காவுக்கு, பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன், உ.பி., மாநில அரசு, துர்காவை அதிரடியாக சஸ்பெண்ட் செய்தது.

பொதுசொத்து சேத வழக்கில் இருந்து ராமதாசை விடுவிக்க வேண்டுமாம் ? ஜாதி அதிகாரிகள் ஆலோசனை !

சென்னை: பொது சொத்து சேதத்திற்கு, இழப்பீடு கோரும் வழக்குகளில்
இருந்து, பா.ம.க., நிறுவனர் ராமதாசை விடுவிக்கக் கோரி, மனு தாக்கல் செய்துள்ள நிலையில், அவரை விடுவிப்பது சாத்தியமா என்பது குறித்து, அதிகாரிகள் மட்டத்தில், ஆலோசனை நடந்து வருகிறது.சென்னையை அடுத்த, மாமல்லபுரத்தில் நடந்த, வன்னியர் இளைஞர் பெருவிழா, மரக்காணம் மோதல், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், கைதைத் தொடர்ந்து, வட மாநிலங்களில் வன்முறை நடந்தது. இதையடுத்து, "தமிழ்நாடு சொத்துக்கள் (சேதம் மற்றும் இழப்பு தடுப்பு) சட்டம் - 1992'ன்படி, இழப்பீட்டுத் தொகையை, பா.ம.க.,வினரிடமிருந்து பெற, அரசு நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டு, வருவாய் துறை நிர்வாக ஆணையர் ஸ்ரீதர், சிவில் நீதிபதியாக இருந்து, வழக்குகளை விசாரித்து வருகிறார். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், மாநிலத் தலைவர் மணி, வன்னிய சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மீது தான், அதிக வழக்குகள் உள்ளன.

ஆந்திரா: 13அமைச்சர்கள் 20 MLA க்கள் ராஜினாமா கடிதம்

ஐதராபாத்: ஆந்திராவை இரண்டாகப் பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்குவது என்ற, ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் காங்கிரஸ் செயற்குழுவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆந்திர அமைச்சர்கள், 13 பேரும், எம்.எல்.ஏ.,க்கள், 20 பேரும், எம்.எல்.சி.,க்கள், ஒன்பது பேரும், நேற்று தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர். "மாநிலத்தைப் பிரிக்கும் முடிவை, காங்கிரஸ் செயற்குழு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லையெனில், பொதுமக்களுடன் இணைந்து போராடுவோம்' என்றும் எச்சரித்துள்ளனர்.
ஆந்திராவை பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கக் கூடாது என, எதிர்ப்பு தெரிவித்து, தெலுங்கானா தவிர்த்து பிற பகுதிகளில், ஒருங்கிணைந்த ஆந்திரா ஆதரவாளர்கள், இரண்டாவது நாளாக நேற்றும் போராட்டம் நடத்தினர். இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. கிருஷ்ணா, கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம், கடப்பா மற்றும் அனந்தப்பூர் மாவட்டங்களில், போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரா பல்கலைக்கழக மாணவர்கள், மூன்றாவது நாளாக, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வியாழன், 1 ஆகஸ்ட், 2013

அனுஷ்கா சிக்ஸ் பக்ஸ் பயிற்சி எடுக்கிறாராம் ! யாரோ சதி பண்றாங்க அம்மணி அழகை காப்பாத்துங்க

கோலிவுட்டில் இப்படி ஒரு வெற்றியையும், இரண்டாம் உலகம் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் கொடுத்த அனுஷ்கா தற்போது சிக்ஸ் பேக்ஸ் வைப்பதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.ஹீரோவுக்கு தான் சிக்ஸ் பேக்ஸ் வேண்டும் ஹீரோயினுக்கு எதுக்கு சிக்ஸ் பேக்ஸ் என்று சிந்திப்பவர்களுக்கு தெலுங்கில் அனுஷ்கா நடித்துக்கொண்டிருக்கும் ருத்ரமாதேவி, பஹு பலி ஆகிய படங்களைப் பற்றி சொல்லியே தீரவேண்டும். தெலுங்கில் உருவாகி, தமிழில் டப்பிங் செய்யப்படவிருக்கும் இவ்விரு திரைப்படங்களுக்கும் ஹீரோயின் தான் எல்லாமேவாம்அனுஷ்கா நடித்த அருந்ததி திரைப்படத்தைப் போல ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இத்திரைப்படங்களில் அனுஷ்கா அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்கிறாராம். சமீபத்தில் நடைபெற்ற ருத்ரமாதேவி படப்பிடிப்பில் கூட ஓடும் குதிரையிலிருந்து, யானை மீது தாவி சாக்சம் செய்தார் அனுஷ்கா.அதேபோல் பல ஆக்‌ஷன் காட்சிகள் அடுத்தகட்ட படப்பிடிப்பில் எடுக்கவிருப்பதால் உடலமைப்பை கச்ச்சிதமாக வைத்துக்கொள்ள அனுஷ்கா ஒரு பிசியோதெரபி பஇற்சியாளரி நியமித்து பயிற்சி எடுத்துவருகிறாராம். சிங்கம் டான்ஸ் பார்த்த ரசிகர்களுக்கு சிங்கத்தின் அதிரடியையே காட்டவிருக்கிறார் அனுஷ்கா அடுத்த படத்தில்

காங்கிரஸ் அன்பரசு: தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் ! வந்திட்டாயிங்க வந்திட்டாயிங்க,, விளங்கிடும்

காங்கிரஸ் எம்.பி. இரா.அன்பரசு செய்தியாளர்களிடம் அவர்
பேசியபோது,நிர்வாக வசதிக்காக தமிழகத்தை இரண்டு மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என்று  கூறியுள்ளார்.அவர் மேலும் இது குறித்து,  ’’ஆந்திரா மாநிலத்தை பிரித்து தெலுங்கானா தனிமாநிலம் அமைக்க வேண்டு மென்று அம்மாநில மக்கள் பல்லாண்டு காலமாக போராடி வந்தனர். அதற்கு தீர்வு காணும் வகையில் "தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை வரவேற்கிறேன்.இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு 6 பெரிய மாநிலங்களும் 6 சிறிய மாநிலங்களும்தான் இருந்தன சுதந்திரம் அடைந்த பிறகு ஜவஹர்லால் நேரு தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் இந்தியா வளர்ச்சி காண வேண்டுமானால் நிர்வாக வசதிக்காக மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என்று முடிவெடுத்து பெரிய மாநிலங்கள் இரண்டு மூன்றாகப் பிரிக்கப்பட்டன. அதன்பிறகு மொழிவாரியாக மாநிலம் பிரிக்கப்பட்டது அந்த அடிப்படையில்தான் சென்னை மாகாணம் கர்நாடக, கேரளா, ஆந்திரம், தமிழ்நாடு என்று நான்கு மாநிலங்களாக உருவானது.

யாருக்கு வேண்டும் பிரித்தானிய அரச பைத்தியங்கள் ? ஏற்றத்தாழ்வை மறைக்க காதில் பூ சுற்றுகிறார்கள் ?

வில்லியம், கேத்தரீன்அரச குடும்பம் பெரும்பாலும் மக்களிடம் செல்வாக்கை இழந்து விட்ட நிலையில், இங்கிலாந்து ஊடகங்களோ, அவர்களை புனிதப் படுத்துவதையும், அவர்களை பற்றிய கிசுகிசுக்களை தலைப்பு செய்திகளாக்குவதையும் தொடர்ந்து செய்தபடி தான் உள்ளன.கடந்த திங்கட்கிழமை ஜூலை 22-ம் தேதி இங்கிலாந்து நேரப்படி மாலை 04:24 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 09:54 மணி) இங்கிலாந்து அரச குடும்பத்திற்கு புது வாரிசு பிறந்தது. இனி இந்த நேரத்தை வைத்து இந்தியாவின் பிரபல ஜோதிட ஏமாற்றுக்காரர்கள் ஜாதகம் எழுதி அனுப்பி வைத்து அக்னாலட்ஜ்மெண்ட் வந்தால் அதை பிரேம் செய்து மாட்டி வைப்பது உறுதி. அதையும் அடுத்த ஆண்டில் ராஜ் டிவியிலோ, விஜய் டிவியிலோ பார்க்கலாம்.

20 சதவீதம் முதல் 40 சதவீத மக்கள் இந்த அரச குடும்பம் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என கருதுகிறார்கள்
எடின்பர்க் இளவரசர் ஃபிலிப் மற்றும் இப்போதைய இங்கிலாந்து ராணி எலிசெபத்தின் கொள்ளு பேரன், இளவரசர் சார்லஸ், டயனா தம்பதிக்கு பேரன், இளவரசர் வில்லியமின் முதல் மகன். அடுத்த பட்டம் சூடும் வரிசையில் நேரடியாக மூன்றாவதாக இருக்கும் இளவரசர். இப்படி ஏகப்பட்ட அடையாளங்கள். இதைப் பார்த்தால் அடையாளங்களின் மொத்த விற்பனையாளர்களான பின் நவீனத்துவவாதிகளே தற்கொலை செய்து கொள்வார்கள்.

இன்றுவரை ஹையராக்கியால் காப்பாற்றப்படும் nira radia ! 2ஜி ஸ்பெக்ட்ரம் மர்மங்கள்

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடு வழக்கில் நீராராடியா பேசிய
தொலைபேசி உரையாடல்கள் பதிவு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது வருமான வரித்துறைக்கும் சி.பி.ஐ.க்கும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
நீரா ராடியா தொலை பேசி உரையாடல்கள் அடிப்படையில் கிடைத்த ஆதாரங்களைக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்கள். பிறகு நீரா ராடியா தொலைபேசி உரையாடலின் உண்மையான அசல் பதிவை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என்று வருமான வரித்துறைக்கு நீதிபதிகள் உத்தர விட்டனர்maalaimalar.com

சிரஞ்சீவி முதல்வராகிறார் ? ஆந்திரா பிரிவினை: அதிர்ச்சியில் 7 பேர் மரணம்:10 பேர் தற்கொலை முயற்சி

ஹைதராபாத்: ஆந்திராவை இரண்டாக பிரித்த அதிர்ச்சியில் 7 பேர்
மரணமடைந்துள்ளனர், முதல்வர் கிரண் குமார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார் என்று தெரிகிறது , அவரது இடத்திற்கு சிரஞ்சீவி நியமிக்கபாடலாம் என தெரிகிறது , மாநில பிரிவினையை தாங்க முடியாத பலரும் சோகத்தில் மூழ்கி உள்ளனர் .10 பேர் தற்கொலை முயற்சி செய்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவை பிரிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர். இந்த நிலையில் விஜயவாடா, அஜீத் சிங் நகரில் ஒரு மாணவியின் உருக்கமான பேச்சை கேட்டு குருசாமி என்பவர் அதிர்ச்சியில் உயிர் இழந்தார். அனந்தபூர் சாதிபத்ரி என்ற ஊரில் சுப்பிரமணியம் என்பவரும் கிருஷ்ணா மாவட்டம் மல்லவள்ளி என்ற ஊரில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பத்மநாபன் என்பவரும் டி.வி. செய்தியை பார்த்து அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தனர்.

மாமூல் தராமையால் அடித்து காவலில் அடைத்த மதுரவாயில் POLICE! மாமுலை மூன்றுவேளை சாப்பாடாக தரசொல்லி அடி!

14-cartoonசென்னை-மதுரவாயல் பகுதியிலுள்ள ஈ.வெ.ரா.பெரியார் சாலையில் கே.தர்மராஜ், சேதுராமன் உள்ளிட்ட ஐந்து பேர் கூட்டாகச் சேர்ந்து ஒரு சிறிய உணவகத்தை நடத்தி வருகின்றனர். மதுரவாயல் போலீசார் இவர்களிடம் மாமூல் வசூலிப்பதை எவ்விதத் தடங்கலுமின்றி நடத்திவந்த வேளையில், ஆறாண்டுகளுக்கு முன்பு அப்போலீசு நிலையத்தில் ஆய்வாளராகப் பதவியேற்ற எஸ். சீதாராமன் இவர்களிடம் மாமூல் வசூலிப்பதில் ஒரு கேவலமான மாற்றத்தைக் கொண்டுவந்தார். “மாமூலைப் பணமாகத் தருவதற்குப் பதிலாக, போலீசு நிலையத்தைச் சேர்ந்த நான்கு போலீசாருக்கும் மூன்று வேளை சாப்பாடை மாமூலாகத் தர வேண்டும்” என அந்த அதிகாரியிடமிருந்து உத்தரவு பறந்தது. இதன்படி நடந்துவந்த அவர்கள், சில மாதங்களுக்குப் பின் சாப்பாடு கொடுப்பதை நிறுத்திவிட்டனர்.

தாலிக்கு தங்கம் வேண்டாம்! தாலியை பறிக்காமல் இருந்தால்போதும்! அரசை கண்டிக்கும் பெண்கள்!

குமரி மாவட்டம் குளச்சல் அருகே புதியதாக அரசு மதுக்கடை
திறக்க எதிர்ப்பு தெரிவித்து, சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில் பொதுமக்கள் திரண்டு கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டத்தைத் தொடர்ந்து, அந்த மதுக்கடைகள் குடியிருப்பு பகுதிகளுக்கு மாற்றப்பட்டு வருகிறது. குளச்சல் அருகே இரும்புலி என்ற இடத்தில் ஏற்கனவே ஒரு மதுக்கடை உள்ள நிலையில், இதன் அருகிலேயே மேலும் ஒரு மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது.
அங்கன்வாடி மையம், வழிப்பாட்டுத்தலம் அருகே உள்ள இந்த மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ஜான்ஜேக்கப் ஆகியோர் தலைமையில் அப்பகுதி மக்கள் ஒன்றுதிரண்டு கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

ஆற்றங்கரையில் கண்டெடுத்த இரட்டை குழந்தைகள் ! தஞ்சையில் அக்கிரமம்

அதிராம்பட்டினம்: தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அடுத்த கருங்குளம்
கிராமத்தை சேர்ந்தவர் ராஜலிங்கம். இன்று காலை 6 மணிக்கு நசுவினி ஆற்றங்கரைக்கு சென்றார். ஆற்றின் மேற்கு கரையில் ஒரு பாலிதீன் பை கிடந்தது. அந்த பை சற்று பெரிதாக இருந்ததால் சந்தேகமடைந்த ராஜலிங்கம் அந்த பையை எடுத்து பார்த்தார்.பைக்குள் ஒரு போர்வையில் சுற்றிய நிலையில் இரட்டை  குழந்தைகள் உயிரோடு இருந்தன. அதில் ஒன்று ஆண், இன்னொன்று பெண்.  குழந்தைகள் வெளியே எடுக்கப்பட்டதும் அழத்தொடங்கியது. குழந்தைகளின் தொப்புள் கொடி கூட அகற்றப்படாமல் இன்று அதிகாலை அங்கு கொண்டு வந்து வீசப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

மணல் மாபியாவுக்கு எதிரான பெண் IAS பதவி இடைநீக்கம் ! உபி அரசின் சுயரூபம்

லக்னோ : உ.பி.,யில், மணல் மாபியாக்களுக்கு எதிராக, அதிரடி நடவடிக்கை
உ.பி.,யில், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது. இங்கு, கவுதம புத்தா நகர் பகுதியில், துர்கா சக்தி நக்பால், 28, என்ற பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி, 10 மாதங்களுக்கு முன், உதவி கலெக்டராக நியமிக்கப்பட்டார். பதவியேற்றதுமே, கவுதம புத்தா நகர் பகுதியில், நீண்ட காலமாக அராஜகத்தில் ஈடுபடும், மணல் மாபியாக்கள் மீது, அதிரடி நடவடிக்கை எடுத்தார். மணல் மாபியாக்களை, கைது செய்து, உள்ளே தள்ளினார். இதனால், துர்காவுக்கு, பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்தினம், உ.பி., மாநில அரசு, துர்காவை அதிரடியாக சஸ்பெண்ட் செய்தது. மணல் கொள்ளை எல்லாம் இங்கே யாரும் கண்டு கொள்வதில்லை.. எல்லாம் கூட்டுக் கொள்ளை அமோகமாக நடக்கிறது.. ரொம்ப நல்லவரு அகிலேஷ்.. அந்தம்மாவை அங்கே வெறும் சஸ்பெண்டு தான் செய்திருக்கிறார்கள்... இங்கேன்னா, அந்த கலெக்டர் மேலே என்னைக்கோ மணல் லாரியை ஏத்தியிருப்பாங்க...

விக்கிலீக்ஸ்க்கு அமெரிக்க ரகசியம் Leak செய்த பிராட்லி மேன்னிங்கிற்கு 136 ஆண்டுகள் சிறை

வாஷிங்டன் : அமெரிக்க ராணுவத்தின் ரகசியத்தை விக்கிலீக்ஸ்
இணையதளத்திற்கு தெரிவித்தது உள்பட பல வழக்குகளில் முன்னாள் ராணுவ அதிகாரிக்கு 136 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின் உளவு நிறுவனமான என்எஸ்ஏ, உலகம் முழுவதும் உள்ள இணையதளங்களில் ரகசியமாக ஊடுருவி தகவல்களை திரட்டியதாக அதன் முன்னாள் அதிகாரி ஸ்நோடென் தெரிவித்தார். இதனால் அவரை அமெரிக்கா கைது செய்ய நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து, அவர் மாஸ்கோவில் தஞ்சம் அடைந்தார். ஏற்கனவே விக்கிலீக்ஸ் இணைய தளம் அமெரிக்கா உள்பட உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் பல்வேறு ரகசியங்களை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவரை கைது செய்ய அமெரிக்கா மறைமுக முயற்சிகளை மேற்கொண்டதை அடுத்து விக்கிலீக்ஸ் அதிபர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார். இந்நிலையில் விக்கிலீக்ஸ் இணையதளத்திற்கு அமெரிக்க ராணுவ ரகசியங்களை தெரிவித்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டின்பேரில் ராணுவ அதிகாரி பிராட்லி மேன்னிங் என்பவரை அமெரிக்க போலீசார் கைது செய்தனர்.

புதன், 31 ஜூலை, 2013

எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் சோயா பீன்ஸ்

எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் தன்மை சோயா பீன்ஸில் உள்ள ஒரு சேர்மத்திடம் உள்ளதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. எய்ட்ஸ்’ நோயை கட்டுப் படுத்த பலவிதமான மருந்துகளும், மருத்துவ முறைகளும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சோயா பீன்சும் எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் தன்மை உடையது என நிபுணர்கள் கண்டு பிடித்துள்ளனர்.ஜார்ஜ் மேசன் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் சோயா பீன்ஸ் உள்ளிட்ட தாவரங்களில் ஆராய்ச்சி செய்தனர்.

புதிதாக 15 தனிமாநில கோரிக்கைகள் எழும் சாத்தியம் வலுக்கிறது !

நாக்பூர்:தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படுவதற்கான வாய்ப்புகள்
அதிகரித்துள்ள நிலையில், அது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, நீண்ட காலமாக போராடி வரும், பல மாநில குழுக்கள், தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளன. அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமானால், இந்தியா, இன்னும், 15 மாநிலங்களாக பிரிக்கப்பட வேண்டியிருக்கும். தெலுங்கானா உதயம்:ஆந்திராவை பிரித்து, தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. நீண்ட காலமாக போராடி வரும் அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, தெலுங்கானா மாநில அறிவிப்பு, @நற்று வெளியாகியுள்ளது.இந்நிலையில், தனி மாநில கோரிக்கைகளை வலியுறுத்தி, மேற்கு வங்கத்தில், கூர்க்கா இன மக்கள்; அசாமில் போடா பழங்குடியின மக்கள்; மகாராஷ்டிராவில் விதர்பா பகுதி மக்கள்; பல ஆண்டுகளாக போராடி வரும் நிலையில், போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.

காணாமல் போன பிள்ளை Facebook மூலம் குடும்பத்தோடு இணைந்துள்ளார்



PuneIt seems to be a script straight from a Bollywood movie.
Beaten up by his mother for not studying, 12-year-old Ankush Domale had run away from home in February 2002. Now, exactly 12 years later, he has been reunited with his family, thanks to Facebook.
Upset with his mother, Ankush had run away to Nanded, over 400 kilometres away from his Pune home. There he started serving the devotees at a Gurudwara. Impressed by his dedication and hard work, the guru there took him to Ludhiana where Ankush started living at the Reru Saheb Gurudwara. He donned a turban and was given the name Gurban Singh.புனே,  பெற்றோர் அடித்து கண்டித்த காரணத்தால் 12 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு ஓடிப்போன இளைஞர் ஒருவர் தற்போது பேஸ்புக் உதவியால் தனது குடும்பத்தினருடன் இணைந்துள்ளார். புனோவில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார் அங்குஷ் டோமலே. அவருக்கு 12 வயதாக இருந்த போது அதாவது 2002 ம் ஆண்டு அவரது தயார் நன்றாக படிக்கவில்லை என்று அடித்து உதைத்துள்ளார். இதனால் மனமுடைந்த அங்குஷ் வீட்டை விட்டு 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் உள்ள குருத்துவாராவில் போய் தஞ்சமடைந்தார்.
அங்கு போய் தன்னுடைய பெயரை குர்பான் சிங் என்று மாற்றிக் கொண்டதோடு சீக்கியராக வாழத் தொடங்கி விட்டார். 10 ஆண்டுகளாக அவருடைய குடும்பத்தை தொடர்பு கொள்ளவே முடியவில்லை.

ஆதிக்க ஜாதிவெறி ராமதாசை காப்பாற்றவே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் கோரிக்கையை வீரமணி ஸ்டார்ட் ?

மதுரைதலித் மக்களுக்கெதிரான ஆதிக்க சாதிவெறியை ராமதாசு தூண்டி வருகின்ற சூழலில், பிற்படுத்தப்பட்ட சாதியினரின் ஆதிக்கவெறியை எதிர்த்துப் போராடாமல் திசைதிருப்புவதற்காக இந்த பார்ப்பன எதிர்ப்பா? ன்பார்ந்த உழைக்கும் மக்களே,
“அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து ஆகஸ்டு 1-ம் தேதியன்று தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. இதில் திமுக தொண்டர்களும் கலந்து கொள்வார்களென கருணாநிதி அறிவித்திருக்கிறார். திராவிடர் கழகத்துக்கு இந்த கோரிக்கையின் மீது தோன்றியிருக்கும் திடீர் அக்கறை எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
மதுரையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் பேசும் அர்ச்சகர் மாணவர் (கோப்புப் படம்).
1970-ல் பெரியார் கருவறை நுழைவுப் போராட்டத்தை அறிவித்ததைத் தொடர்ந்து, அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தைக் கொண்டு வந்தது அன்றைய திமுக அரசு. அதற்கெதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பார்ப்பனர்கள், ஆகம விதிப்படி தாங்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும் என்றும், பிற சாதியினர் சாமியைத் தொட்டால் சிலை தீட்டாகிவிடும் என்றும் வாதிட்டனர்.
“அர்ச்சகர்கள் தங்கள் வேலைக்கு வாரிசுரிமை கோர முடியாது” என்று உச்ச நீதிமன்றம் கூறிய போதிலும், “மத சம்பிரதாயப்படி தகுதியான நபர்களை மட்டுமே அரசாங்கம் அர்ச்சகராக நியமிக்க முடியும்” என்றும் கூறியது. சாதி, தீண்டாமையை இந்து மத உரிமையாக அரசியல் சட்டத்தின் 25, 26-வது பிரிவுகள் அங்கீகரிப்பதை இத்தீர்ப்பு எடுத்துக் காட்டியது. இந்நிலையை மாற்றும்பொருட்டு அரசியல் சட்டத்தை திருத்துவதற்கு திமுக முயற்சிக்கவில்லை. மாறாக, “அர்ச்சகர் பணி வாரிசுரிமையல்ல” என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்ட பின்னரும், 1972-க்குப் பின் இன்று வரை திமுக, அதிமுக அரசுகளால் நியமிக்கப்பட்டுள்ள அர்ச்சகர்களில் பெரும்பான்மையினர் வாரிசுரிமை மற்றும் சிபாரிசின் அடிப்படையில்தான் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இதனை எதிர்த்து வீரமணி போராடியதில்லை. விமரிசித்ததும் இல்லை.

உத்தரப்பிரதேசத்தை 4 மாநிலங்களாக பிரிக்க வேண்டும் ! மாயாவதி பழைய பல்லவியை மீண்டும் இசைக்கிறார்

லக்னோ: ஆந்திராவை பிரித்தது போல உத்தரப்பிரதேச மாநிலத்தை 4 சிறு மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அதிரடி கோரிக்கை விடுத்துள்ளார். தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மாயாவதி, சிறிய மாநிலங்கள் உருவாக்குவதற்கு நாங்கள் எப்போதும் ஆதரவு தெரிவித்து வந்துள்ளோம். தற்போதைய நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தை 4 சிறிய மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும். பூர்வாஞ்சல், புந்தெல்காண்ட், ஆவத் பிரதேசம், பஸ்சிம் பிரதேசம் என 4 சிறிய மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும். அப்போதுதான் வளர்ச்சி அதிகரிக்கும். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் இந்த 4 மாநிலங்கள் உருவாக்குவதற்காக மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்றார்
tamil.oneindia.in

கேரளா திடீர் ஒப்புதல்! முல்லைப் பெரியாறு அணை தமிழகத்துக்கு சொந்தமானதுதான்..

டெல்லி: முல்லைப் பெரியாறு அணை தமிழகத்துக்கு சொந்தமானதுதான்.. எங்களுக்கு கவலை எல்லாம் பாதுகாப்பு பற்றிதான் என்று உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு திடீரென தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்பது தமிழக அரசு தொடர்ந்த வழக்கு. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது. முல்லைப் பெரியாறு அணை தமிழகத்துக்கு சொந்தமானதே- கேரளா திடீர் ஒப்புதல்! இந்த இறுதி விசாரணையில் தமிழக அரசு தரப்பு வாதம் முடிவடைந்த நிலையில் கேரள அரசு தரப்பு வாதம் நேற்று தொடங்கியது. கேரள அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரீஸ் சால்வே, முல்லைப் பெரியாறு அணை தமிழகத்திற்கு சொந்தமனதுதான் என்று திடீரென ஒப்புக் கொண்டார்.

Delhi Gang rape பாலியல் கொடுமை: சிறார் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க சுப்ரீம் கோர்ட் தடை

டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சிறுவனுக்கு சிறார் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த டிசம்பரில், டெல்லியில், ஓடும் பேருந்தில், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட சிறுவன் மீதான வழக்கில் தீர்ப்பு ஆகஸ்ட் 5-ம் தேதி வழங்கப்படும் என்று டெல்லி சிறார் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதனிடையே சிறார் குற்றவாளிகளுக்கான வயது வரம்பு குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும் நேரத்தில் சிறார் குற்றவாளிக்கு எப்படி தீர்ப்பளிக்க முடியும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனு தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், சிறார் குற்றவாளிகளுக்கான வயது வரம்பு தொடர்பான வழக்கு விசாரணை முடியும் வரை வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சிறுவனுக்கு சிறார் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கக் கூடாது என உத்தரவிட்டனர். உச்சநீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவை சிறார் நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று மனுதாரர் சுப்பிரமணியசாமிக்கு நீதிபதிகள் ஆணையிட்டனர். பின்னர் மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 14-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
tamil.oneindia.in

அந்த தேவதாஸ் ஏன் அப்பாவே அல்ல ! என்னை பற்றி கட்டு கதை பரப்புவது அவர்தான் ! எல்லாம் என்னிடமுள்ள சொத்துக்காக


mayyam.com/talk/showthread.php?7759-Poet-Laureate-Kannadasan/page28

கனகா: ரசிகர்கள் இன்னும் என்னை நினைவில் வச்சிருக்காங்களே! மறுபடியும் நடிப்பேன்.

வீட்டை பூட்டு போட்டு பூட்டிய கனகா, யாரையும் வீட்டுக்குள்
அனுமதிக்கவில்லை. வெளியே பொதுமக்கள் கூடியதால், போலீசார் அங்கு வந்தனர். அவர்களாலும் கனகாவின் வீட்டுக்குள் செல்ல முடியவில்லை. இதையடுத்து பத்திரிகையாளர்களும், போட்டோகிராபர்களும் கனகாவின் வீட்டு காம்பவுண்டு சுவர் மீது ஏறி வீட்டுக்குள் குதித்தனர். கனகா வெளியே வந்து, உயிருடன் இருக்கும் விஷயத்தை சொல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். அரை மணி நேர போராட்டத்துக்குப் பிறகு கனகா பேட்டி கொடுக்க சம்மதித்தார். பிறகு வீட்டு வாசலில் நின்ற அவர், சிரித்தபடி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.நீங்க செத்துட்டதா செய்தி வந்துச்சே?  (சிறிது நேரம் விடாமல் சிரிக்கிறார்) நான் செத்துப் போனதா வந்த செய்தியை நானே பாத்தேன். அதைப் பாத்து சிரிச்சேன். உண்மைய சொல்லணும்னா மகிழ்ச்சியா இருந்துச்சு. ஏன்னா, ரசிகர்கள் இன்னும் என்னை நினைவில் வச்சிருக்காங்களே அதனாலதான்.
இறந்து போனதா வந்த வதந்தி

செவ்வாய், 30 ஜூலை, 2013

தனி தெலுங்கான உதயம் ! ஹைதராபாத் பொது தலைநகரமாக தொடர்ந்து இருக்கும்

டெல்லி: நாட்டின் புதிய மாநிலமாக தெலுங்கானா உதயமாகிறது. தெலுங்கானா வட்டார மக்களின் 60 ஆண்டுக் கோரிக்கை நிறைவேறியது. 1953&ம் ஆண்டு மொழிவாரி மாநிலம் அமைக்கபட்ட போது தனித்தெலுங்கானா கோரிக்கை எழுந்தது. 1956&ம் ஆண்டு ஆந்திர மாநிலம் அமைக்கப்பட்டபோது தெலுங்கானா பகுதியும் இனைக்கப்பட்டது. தெலுங்கானா மக்களின் கோரிக்கையை ஏற்று தனி மாநிலம் அமைப்பதற்கு காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இன்று ஒருமனதாக ஒப்புதல் தெரிவித்துள்ளன. ஆந்திராவைப் பிரித்து 10 மாவட்டங்களை உள்ளடக்கி தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்ற நீண்ட கால போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

முதலமைச்சர் ஜெயலலிதாவை அடுத்தடுத்து குட்டியானை முட்டியதால் நிலைகுலைந்தார்

முதலமைச்சரை முட்டியது குட்டியானை :
அடுத்தடுத்து இரண்டு முறை முட்டியதால்
நிலை குலைந்தார் ஜெயலலிதா

 முதல்வர் ஜெயலலிதா தற்போது கொடநாட்டில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார்.  இந்நிலையில் இன்று அவர் முதுமலையில் யானைகள் காப்பகத்திற்கு சென்றார். அங்கே அவருக்கு 24 யானைகளை வைத்து வரவேற்பு கொடுக்கப்பட்டது.வரவேற்பு கொடுத்த யானைகளுக்கு பழங்கள் கொடுத்து மகிழ்ந்தார் முதல்வர் ஜெயலலிதா.காவேரி என்ற 2 வயது யானைக்கு பழம் கொடுத்து கொஞ்சிக்கொண்டிருந்தார் முதல்வர்.  அப்போது காவேரி யானை தும்பிக்கையால் முதல்வரை முட்டியது. மீண்டும் ஒரு முறை இவ்வாறு செய்தது காவேரி.  இத னால் நிலை குலைந்துபோனார் முதல்வர்.  உடன் இருந்த அதிகாரிகள் முதல்வருக்கு எதுவும் ஆகாமல் பார்த்துக்  கொண்டனர்.
படங்கள் : அருள்குமார்

பாகிஸ்தானின் புதிய அதிபராக மம்னூன் உசைன் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்

இந்தியாவில் பிறந்த மம்னூன் உசைன் பாகிஸ்தானின் 12-வது அதிபராக தேர்வு பாகிஸ்தானின் தற்போதைய அதிபர் சர்தாரியின் பதவிக்காலம் செப்டம்பர் மாதம் நிறைவடைகிறது. எனவே புதிய அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி சார்பில் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் நெருங்கிய ஆதரவாளரான மம்னூன் உசைனும், இம்ரான் கானின் பாகிஸ்தான் தெரிக்-இ-இன்சாப் கட்சி சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி வஜிஹுதீன் அகமது ஆகியோர் களத்தில் இருந்தனர். அதிபர் சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் ரசா ரப்பானி போட்டியில் இருந்தார். ஆனால், வாக்குப்பதிவு தேதி மாற்றம் செய்யப்பட்டதால், பாகிஸ்தான் மக்கள் கட்சி தனது வேட்பாளரை வாபஸ் பெற்றது. எனவே, மம்னூன் உசைனுக்கும், வஜிஹூதீன் அகமதுக்கும் இடையே நேரடி போட்டி இருந்தது. பலத்த பாதுகாப்புடன் இன்று காலை முதல் பிற்பகல் 3 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. பாராளுமன்றத்தின் இரு சபைகள் மற்றும் 4 மாகாண சபைகளின் உறுப்பினர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாக்களித்தனர். அதிக வாக்குகள் பெற்ற மம்னூன் உசைன் வெற்றி பெற்றுள்ளார். அவர் பாகிஸ்தானின் 12-வது அதிபராக செப்டம்பர் மாதம் பதவியேற்க உள்ளார்.

கனகா பேட்டி : என் தந்தை என்று கூறிக்கொண்டு திரியும் தேவதாஸ் தான் வதந்தியை பரப்பியிருப்பார்

நடிகை கனகா புற்றுயோயால் அவதிப்படுவதாகவும் கேரளாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச் சை பெற்றுவருவதாகவும் முதலில் செய்திகள் வந்தன.  இன்று அவர் சிகிச்சைபலனின்றி மரணம் அடைந்து விட்டதாக செய்திகள் வெளிவந்தன.  இந்நிலையுல் நடிகை கனகாவே தான் நலமுடன் இருப்பதாக செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.அவர்,  ‘’நான் கேரளாவில் சிகிச்சை பெறவில்லை.  சென்னையில் உள்ள எனது வீட்டில் தான் இருக்கிறேன்.  எனக்கு புற்றுநோய் என்று செய்தி பரவி இருக்கிறது. நல்ல வேளை எய்ட்ஸ் என்று செய்தி பரவாமல் இருந்ததே; அதுவே போதும்.&இந்த வதந்திகளை என் தந்தை எனக்கூறிக்கொண்டு திரியும் தேவதாஸ்தான் பரப்பி விடுகிறார்.  இதையே சாக்காக வைத்து என்னை சந்தித்து பேசி, மறுபடியும் என் சொத்துக்களை அபகரிக்கப்பார்க்கிறார்.>இல்லையென்றால் ஆலப்புழாவில் நான் சிகிச்சை பெற்று வருகிறேன் என்று செய்தி வெளியாகியுள்ள  நிலையில் என்னைத்தேடி சரியாக சென்னையில் நான் இருப்பதை எப்படி அவரால் அறிந்து கொள்ள  முடிகிறது.என்னைத்தேடி ஆலப்புழாவுக்கு போகாமல் மிகச்சரியாக சென்னையில் உள்ள என் வீட்டிற்கு எப்படி வருகி றார்.  அவரை என் வீட்டிற்குள் வர நான் அனுமதிக்க மாட்டேன்.  என் அம்மாவுக்கு அவர் ஒருநாளும் அவர் நல்ல கணவராக நடந்துகொண்டதே இல்லை.எனக்கு ஒரு நல்ல தந்தையாக எந்நாளும் நடந்துகொண்டதில்லை.  அவர் ஒரு பணப்பேய். 

நடிகை கனகா நலமாக உள்ளார் ! அவருக்கு ஆயுசு நூறு !

There were reports in Tamil media that yesteryear actress Kanaka passed away in Kerala, today, (July 30). It was reported that she was suffering from cancer from past seven months and she was under palliative care in Alappuzha, Kerala. Now, it has been confirmed by our source that she is alive. It was reported that the hospital sources said that Kanaka was not showing any interest and denied meeting anyone. Kanaka was diagnosed with cancer in early January this year. However, the latest news about her health status has brought a huge relief to her fans.
 சென்னை: எனக்குப் புற்றுநோய் இல்லை. நான் நல்லாதான் இருக்கேன், எந்தப் பிரச்சினையும் இல்லை, என்று நடிகை கனகா நேரில் தெரிவித்தார். நடிகை கனகா பற்றி கடந்த சில தினங்களாக பல செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் ஆதரவற்றோருக்கான கேரளா மருத்துவமனையில் உருக்குலைந்த நிலையில் சிகிச்சைப்பெற்று வருவதாக அனைத்து ஊடகங்களிலும் செய்தி பரவியது. இந்த நிலையில் அவர் சிகிச்சைப் பலனின்றி இறந்துவிட்டதாக இன்று சில செய்தி ஏஜென்சிகள், ஆங்கிலப் பத்திரிகைகளின் இணையதளங்கள், தொலைக்காட்சிகள் என அனைத்திலும் செய்தி வெளியாகி பரபரப்பேற்படுத்தியது. இப்படி செய்தி வெளியான சில நிமிடங்களில் கனகா நன்றாக இருப்பதாக அவரது உறவினர்கள் தகவல் வெளியிட்டனர். சென்னை காளியப்பா மருத்துவமனையில் கனகா சிகிச்சைப் பெற்று வருவதாகக் கூறப்பட்டது. ஆனால் இதுவும் தவறான செய்தி என்பதை உறுதிப்படுத்தும் வகையில் கனகா பிரஸ் மீட் தகவல் கிடைத்தது. அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனது வீட்டில் கனகா செய்தியாளர்களைச் சந்தித்தார். கண்ணாடி அணிந்திருந்த கனகா, முன்பு ஆவி அமுதா வழக்கில் நீதிமன்றத்தில் பார்த்ததை விட தெளிவாகவும் ஆரோக்கியத்துடனும் காணப்பட்டார். செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "என்னைப் பற்றி யாரோ தவறாக சொன்ன தகவல்களை வைத்து இப்படி செய்தி வெளியானது வேதனையைத் தருகிறது. யாரோ சொன்னதை வைத்து ஏன் செய்தி போடறீங்க.. நான் ஆலப்புழா போனது ப்ரெண்டைப் பார்க்கக்கூட இருக்கலாம்ல. நான் நல்லாதான் இருக்கேன். எனக்கு கேன்சரெல்லாம் கிடையாது. எங்கும் சிகிச்சையும் பெறவில்லை!," என்றார்.
tamil.oneindia.in

அமெரிக்க இஸ்லாமிய பெண்ணியவாதி Amina Wadud யின் நிகழ்ச்சியை ரத்து செய்ய வைத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு


அமீனா வதூத். இவர் ஒரு இஸ்லாமிய மத அறிஞர். அமெரிக்காவில் பிறந்த கருப்பின பெண். இவரை இஸ்லாமிய பெண்ணியவாதி என்றும் இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐஈடி கல்லூரியில் அமீனா வதூத் திங்கள் மாலை ஒரு சொற்பொழிவு ஆற்றுவதா இருந்துச்சு. இந்த நிகழ்ச்சியையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு தன் தொண்டர்களை வைச்சு, போன் மூலமா கல்லூரி நிர்வாகத்துக்கும், சென்னை பல்கலைக்கழகத்துக்கும் மிரட்டல் விடுத்துருக்காங்க.இதுக்கு பாதுகாப்பு குடுக்க வேண்டிய காவல்துறை, இந்த மிரட்டலுக்கு பயந்து, நிகழ்ச்சியை ரத்து பண்ண வச்சுட்டாங்க.. ஜனநாயகத்தின் குரல்வளையை இது போன்ற மத அடிப்படைவாதிகள் நெறிக்கறதை ஏன் ஜெயலலிதா அனுமதிக்கிறாங்கன்னு தெரியலை. விஸ்வரூபம் விவகாரத்துல ஜெயலலிதா எடுத்த தவறான முடிவு, இந்த அடிப்படைவாதிகளோட வளர்ச்சிக்கு பெரிய உறுதுணையா இருந்துக்கிட்டு இருக்கு.
அழைக்கலாம். இஸ்லாமியப் பெண்ணாக இருந்து, தொழுகைகளை வழிநடத்தியதால், இமாம்களின் வெறுப்புக்கு ஆளானவர். பெண்கள் ஏன் இமாம் ஆகக்கூடாது என்ற கேள்வி எழுப்பியவர்.அமீனா வதூத் 2005ம் ஆண்டு அமெரிக்காவில், 60 பெண்களையும், 40 ஆண்களையும் ஒன்றாக அமரவைத்து தொழுகை நடத்தியவர். அதிலிருந்து இவர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் பல்வேறு மிரட்டல்களை மத அடிப்படை வாதிகள் விடுத்து வந்தனர்.

குடிநீரில் சாக்கடை கலப்பு: சென்னையில் சாலை மறியல்

சென்னை மாநகராட்சி 74வது வட்டத்தில் குடிநீரில் கழிவுநீர் கலந்த வருவதை கண்டித்து அயன்புத்தில் மாதர்-வாலிபர் சங்கங்கள் இணைந்து 30.07.2013 செவ்வாய்க்கிழமை ஓட்டேரி குன்னுர் சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் சுரேஷ், அமாவாசை (சிபிஎம்), மாரியம்மா, குமாரி, பானுமதி (மாதர்சங்கம்), ஏழுமலை, சதீஷ் (வாலிபர்சங்கம்) உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சென்னை அயன்புரம் நம்மாள்வார்பேட்டை, எஸ்.எஸ் புரத்தில் கடந்த சில வாரங்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனை குடிக்கும் மக்கள் வயிற்றுப்போக்கு, மர்ம காய்ச்சலுக்கு ஆளாகிவருகின்றனர். சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் மூலம் விநியோகம் செய்யப்படும் குழாய்களில் துர்நாற்றத்துடன் கரிய நிறத்தில் குடிநீர் வருவதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். < மெட்ரோ நிர்வாகத்திடம்  பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் செவ்வாயன்று மெட்ரோ அலுவலகத்தை வடசென்னை துணைத்தலைவரும் முன்னாள் நகரமன்ற உறுப்பினருமான பா.தேவி தலைமையில்  மறியல் நடைபெற்றது.

பாஜக வியூகம்: தேமுதிக, மதிமுக, பாமகவை இணைத்து கூட்டணி !

சென்னை: அடுத்தடுத்து வெளிவரும் கருத்துக் கணிப்புகள் பாரதிய ஜனதா கட்சியை உற்சாகப்படுத்தியிருக்கிறது. இதனால் தமிழகத்தில் ஒருவலுவான கூட்டணிக்கான வியூகம் வகுப்பதிலும் பாஜக மும்முரம் காட்டுவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக அரசியலில் அதிமுக அணியில் 2 கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம்பெறுவது உறுதியாகி உள்ளது. திமுக அணியில் தற்போதைய நிலையில் காங்கிரஸ் இணைவதற்கான வாய்ப்பு உள்ளது. கருத்து கணிப்பு எதிரொலி- தேமுதிக, மதிமுக, பாமகவை இணைத்து கூட்டணி- பாஜக வியூகம்!! தேமுதிகவோ அதிமுக அணியில் இணையவே வாய்ப்பில்லை. திமுக அணியில் இணைவதற்கான வாய்ப்பு ராஜ்யசபா தேர்தலில் போது இருந்தது. ஆனால் அதை தேமுதிக புறக்கணித்துவிட்டதால் இப்பொழுது அதிமுக- திமுக இரண்டையும் நாட முடியாத நிலையில் இருக்கிறது. மதிமுகவைப் பொறுத்தவரையில் பெரும்பாலும் அதிமுக அணி பக்கம் போக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இருப்பினும் உறுதியாக சொல்லிவிட முடியாது. அதே நேரத்தில் நிச்சயம் திமுக அணியில் மதிமுக இணைவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே சொல்ல முடியும். பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரையில் திமுக- அதிமுக இரண்டு அணியிலும் இணைய முடியாது என்று பகிரங்கமாக அறிவித்துவிட்டது.ப்ளீஸ் சீக்கிரம் கூட்டணி கட்டுங்க சைடு எபெக்ட் ரொம்ப நல்லது

லட்சுமிராய்:மீடியாக்காரர்கள் என்னையே ஏன் குறிவைக்கிறார்கள்?

எனது 15 வயதில் நடிக்க வந்துவிட்டேன். ஆரம்ப காலத்தில் கேமரா முன்
நிற்பதற்கு பயப்படுவேன். பிறகு என்னை தயார் படுத்திக்கொண்டேன். என்னைப் பற்றி அடிக்கடி வதந்திகள் வருகிறது. மீடியாக்காரர்கள் என்னையே ஏன் குறிவைக்கிறார்கள் என்று தெரியவில்லை. அதற்கு காரணம் எனது நடிப்பு தொழில்தான் என்று ஆறுதல் அடைவேன். எனது 2வது படம் ‘குண்டக்க மண்டக்க படத்தில் கிளாமர் வேடத்தில் நடித்தேன். இப்படி நடிப்பது தவறா? சரியா? என்று என்னால் கணிக்க முடியவில்லை.  எனக்கு காட்பாதர் யாரும் இல்லாமல் எல்லாவற்றையும் கடந்து வந்தேன். இப்போது எதை தேர்வு செய்யவேண்டும், எதை தவிர்க்க வேண்டும் என்பதை புரிந்துகொண்டேன். மங்காத்தா படத்தில் அஜீத்துடன் நடிப்பதை பெருமையாக உணர்ந்தேன். அவர் எளிமையானவர் மட்டுமல்ல ஈடுபாடுடன் நடிப்பவர். என்னுடைய சொந்த அனுபவங்களையும், வாழ்க்கை விஷயங்களையும் அவரிடம் பகிர்ந்து கொள்வேன். திரையிலும், திரைக்கு பின்னாலும் அவருடன் நட்பாக பழகுவேன். சினிமாவையும், வாழ்க்கையையும் பிரித்து வைத்து நடந்துகொள்ளும் ஒரு சில நடிகர்களில் அஜீத்தும் ஒருவர். குடும்பத்தினருக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துகொள்பவர்.இவ்வாறு லட்சுமிராய் கூறினார்.

ஆந்திராவில் துணை ராணுவம் குவிப்பு ! இன்று தனி மாநில அறிவிப்பு ?

டெல்லி/ஹைதராபாத்: ஆந்திராவை பிரித்து தனித் தெலுங்கானா மாநிலம்
அமைப்பதற்கான அறிவிப்பு இன்று இரவு வெளியாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வரும் கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதிகளில் ஆயிரக்கணக்கான துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஆந்திராவைப் பிரித்து 10 மாவட்டங்களை உள்ளடக்கி தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்ற நீண்ட கால போராட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

போப் பிரான்சிஸ்: பெண் மதபோதகர்களை உருவாக்க தேவாலயங்கள் தவறிவிட்டன ! ஓரின சேர்க்கையாளரை ஒதுக்க கூடாது

பிரேசிலியா : ஓரினச் சேர்க்கையாளர்களை சமூகத்தில் முழுவதுமாக ஏற்றுக் நாம் சகோதரத்துவத்துடன் இருக்க வேண்டும்.
கொள்ள வேண்டும் என போப் பிரான்சிஸ் கூறியுள்ளார். பிரேசில் பயணத்தை முடித்துக் கொண்டு விமானத்தில் திரும்பிய போப் பிரான்சிஸ், வாடிகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பெண் மதபோதகர்களை உருவாக்க தேவாலயங்கள் மறுத்துவிட்டன. ஆனால், தேவாலயங்கள் மற்றும் அறக்கட்டளைகளில் பெண்களின் பங்கை கட்டுப்டுத்தக்கூடாது. அதிகளவில் இருக்க வேண்டும். ஓரினச் சேர்க்கையாளர்கள் சமூகத்தில் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். ஒருவர், ஓரினச் சேர்க்கையாளராக இருந்து, அவர் கடவுள் பக்தி உடையவராகவும், நல்ல எண்ணம் உடையவராகவும் இருந்தால், அவர்களை தீர்மானிக்க நான் யார்?

கேரள மாணவர்கள் கோவையில் மோதல்! துப்பாக்கியை காட்டி மிரட்டி கொலை வெறி தாக்குதல்

கோவை அருகே, துப்பாக்கியை காட்டி, கல்லூரி மாணவர்களை மிரட்டி
கோவை, சின்னவேடம்பட்டியில் உள்ள, சி.எம்.எஸ்., கல்லூரியில், தமிழக, கேரள மாணவர்கள், அதிக அளவில் தங்கி, படித்து வருகின்றனர். பி.எஸ்.சி.,மைக்ரோ பயாலஜி முதலாமாண்டு படிக்கும், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மாணவியிடம், எம்.ஐ.பி., முதலாம் ஆண்டு படிக்கும், நிகில், 21, என்பவர், பேச்சுக் கொடுத்தார். இதை, பி.பி.எம்., (சி.ஏ.,) படிக்கும், சுகையில், 19, தட்டிக் கேட்டார். இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, கல்லூரி வளாகத்துக்குள்ளேயே, மோதல் நடந்தது; கல்லூரி மாணவர்கள், சமாதானம் செய்து அனுப்பினர்.
நேற்று அதிகாலை, 6:30 மணி அளவில், சுகையில் மற்றும் மாணவர்கள் தங்கியிருந்த அறைக்கு, கேரளாவில் இருந்து ரவுடிக் கும்பலுடன் வந்த நிகில், கத்தி, அரிவாள், கோடரி போன்ற பயங்கர ஆயுதங்களால், மாணவர்களை தாக்கினர்; ஜன்னலை உடைத்து நொறுக்கினர்.

பிரம்படி, ஆபாச வசைமாரி: கோவை தனியார் பள்ளி மாணவியர் கண்ணீர்!

கோவை:கோவையிலுள்ள பிரபல தனியார் பள்ளியில், நீச்சல் உடை கொண்டு வராததற்காக, பத்தாம் வகுப்பு மாணவியரை பள்ளி தாளாளரே நேரடியாக அடித்து, ஆபாசமாகப் பேசிய விவகாரம், வெளியில் வந்துள்ளது.கோவை நகரில், மாநகராட்சிப்பகுதியை ஒட்டியுள்ள ஊரகப் பகுதியில், பிரபல தனியார் பள்ளி ஒன்று உள்ளது. சி.பி.எஸ்.இ., கல்வி முறைப்படி, பாடம் கற்பிக்கும் இந்தப் பள்ளியில்தான் கோவையிலுள்ள பெரும்பாலான வி.ஐ.பி.,க்களின் குழந்தைகள் படிக்கின்றனர். இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, பள்ளி வளாகத்திலுள்ள நீச்சல் குளத்திலேயே வாரமிரு நாட்கள் நீச்சல் கற்றுத்தரப்படுகிறது. இதற்கான நீச்சல் உடையை, இதற்கான பயிற்சி வகுப்பு இருக்கும் நாட்களில் மாணவ, மாணவியர் கொண்டு வர வேண்டியது அவசியம்.பத்தாம் வகுப்பு மாணவியருக்கான நீச்சல் பயிற்சி வகுப்பு நேற்று நடந்துள்ளது. உடை மாற்றுவதற்காக அவர்கள் வந்தபோது, 10க்கும் மேற்பட்ட மாணவியர், நீச்சல் உடை எடுத்து வராதது தெரியவந்துள்ளது. இது குறித்து, பள்ளி தாளாளருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த பெண் தாளாளர், நீச்சல் குளத்தில் குப்பைகளை அகற்றுவதற்காக வைத்திருந்த குச்சியில், நீச்சல் உடை கொண்டு வராத மாணவியரை வரிசையாக நிற்க வைத்து, அவர்களின் கால்களில் அடித்துள்ளார்.
அது மட்டுமின்றி, "உங்களை உடையை அவிழ்க்க வைத்து, நிர்வாணமாக நீச்சல் குளத்தில் பயிற்சியாளர் முன் குளிக்கச் சொன்னால்தான், அடுத்த முறை மறக்காமல் நீச்சல் உடையை எடுத்து வருவீர்கள்' என்று ஆங்கிலத்தில் ஆவேசமாக எச்சரித்துள்ளார்.

சத்யராஜ்: நடிகனாகப் போகும் சந்தோஷத்தில் தூக்கமே வரவில்லை.’

நாடகத்தில் நடித்துக்கொண்டே  சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு தேடினார் சத்யராஜ். ஆனால் கிடைத்ததோ தயாரிப்புத் துறையில் நிர்வாகம் பார்க்கும் வாய்ப்பு!
இதுபற்றி சத்யராஜ் கூறியதாவது:-
‘கோமல் சுவாமிநாதன் இயக்கிய ‘ஆட்சி மாற்றம்’, ‘சுல்தான் ஏகாதசி’, ‘கோடுகள் இல்லாத கோலங்கள்’ என்ற மூன்று நாடகங்களிலும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த மூன்று நாடகத்திலும் நடித்ததற்காக எனக்கு நாடகம் ஒன்றுக்கு பத்து ரூபாய் வீதம் 30 ரூபாய் தந்தார்கள்.
இந்த 30 ரூபாயில் 10 ரூபாய்க்கு சுவீட் வாங்கினேன். என்னை நாடகத்தில் சேர்த்துவிட்ட நடிகர் சிவகுமார் அண்ணன் வீட்டுக்கு போனேன். நடிப்புக்கு கிடைத்த என் முதல் சம்பளத்தில் அவர் வீட்டுக்கு சுவீட் வாங்கிப்போக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இப்படிச் செய்தேன்.
நான் எம்.ஜி.ஆர். ரசிகன் அல்லவா! எம்.ஜி.ஆர். கொடுத்து கொடுத்து சிவந்த கரம் கொண்டவர். அதனால் 5 ரூபாயை, தர்மத்துக்கு கொடுத்தேன். மீதி பணத்தில் நண்பர்களுடன் சினிமாவுக்கு போனேன்.