சனி, 1 அக்டோபர், 2022

சவுக்கு சங்கரின் தாயார் முதல்வருக்கு கடிதம் : என் மகன் சிறையில் உண்ணாவிரதம்.. காப்பாற்றுங்கள்

tamil.oneindia.com  -  Shyamsundar :  சென்னை: சவுக்கு சங்கரின் தாயார் கமலா முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி உள்ளார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தனது மகன் பழிவாங்கப்படுவதாக குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றி வந்த சவுக்கு சங்கர் கடந்த 2008-ம் ஆண்டு அரசு ஆவணங்களை கசியவிட்டதாகவும், போன் உரையாடல்களை கசியவிட்டதாகவும் புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் இவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ஆனால் இவரை மொத்தமாக பணியில் இருந்து நீக்காத நிலையில், அது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் அவருக்கு மாதம் 40 ஆயிரம் ரூபாய்க்கு அரசு ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.

ஓசி டிக்கெட் மூதாட்டி மீது வழக்கில்லை : காவல்துறை விளக்கம்!

மின்னம்பலம் : ஓசி டிக்கெட் வேண்டாம் என்று சண்டையிட்ட மூதாட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்று  கோவை மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
மகளிர் இலவசப் பயணத் திட்டம் தொடர்பாக பேசிய உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி `ஓசி’ என்று கூறிய நிலையில்,
கோவை அரசுப் பேருந்தில் பயணித்த குரும்பாளையத்தைச் சேர்ந்த துளசியம்மாள் என்கிற மூதாட்டி, நடத்துனரிடம் ஓசி டிக்கெட் வேண்டாம் காசு வாங்கிக்கொள் என்று கூறிய வீடியோ வைரலானது.
இது திட்டமிட்டு எடுக்கப்பட்ட வீடியோ, அ.தி.மு.க ஐ.டி விங்கைச் சேர்ந்த பிரித்திவிராஜ் என்பவர் மூதாட்டியை அழைத்துச் சென்று நடத்துனரிடம் பிரச்னை செய்ய வைத்து வீடியோ எடுத்து பதிவிட்டதாக திமுக புகார் அளித்தது.

தமிழ் நடிகர்களின் சம்பளம்-.......

தமிழ் நடிகர்கள் நடித்து வரும் திரைப்படங்களின் பட்டியல்..! - touringtalkies

Kanagasingam Thavalogi NI  :  படித்ததில் பிடித்தது
தமிழ் நடிகர்களின் சம்பளம் ஒரு படத்திற்கு 5 கோடி முதல் 50 கோடி வரை. சராசரியாக 10 கோடி என்று வைத்துக் கொள்வோம்.
 மாதம் 70ஆயிரம் ருபாய் சம்பளம் வாங்கும் ஒரு IT ஊழியர் 10 கோடி சம்பாதிக்க 125 வருடங்கள் பணியாற்ற வேண்டும்.
 மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு தனியார் நிறுவன ஊழியர் 10 கோடி சம்பாதிக்க 250 வருடங்கள் பணியாற்ற வேண்டும்.
 மாதம் 25 ஆயிரம் சம்பளம் வாங்கும் ஒரு அரசு ஊழியர் 10 கோடி சம்பாதிக்க 333 வருடங்கள் பணியாற்ற வேண்டும்.
நம் அனைவருக்கும் உணவளிக்கும் விவசாயி 10 கோடி சம்பாதிக்க 760 வருடம் உழைக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு 300 ரூபாய் வருமானம் பெறும் கூலி தொழிலாளி 10 கோடி சம்பாதிக்க 1000 ஆண்டுகள் உழைக்க வேண்டும்.
 திரைப்பட நடிகர்/ நடிகைகள் பயன்படுத்தும கார்களின் விலை 50 லட்சத்திலிருந்து 5 கோடி வரை.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மல்லிகார்ஜுன கார்கே வேட்புமனு

tamilmurasu.com: புது­டெல்லி: காங்­கி­ரஸ் தலை­வர் தேர்­த­லில் ஜார்­க்கண்ட் மாநில தலைவர் கே என் திரி­பாதி, காங்கி ரஸ் மூத்த தலை­வ­ரும் திருவ­னந்­த­பு­ரம் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னரு­மான சசி தரூர் ஆகி­யோர் வேட்­பு­மனுத் தாக்­கல் செய்­த­னர்.
அக்­கட்­சி­யின் மூத்த தலை­வர் மல்­லி­கார்­ஜுன கார்கே நேற்று வேட்பு­மனுத் தாக்­கல் செய்ததாக
அறி­விக்­கப்­பட்­டது.
அவ­ருக்கு ஆத­ர­வாக தான் போட்­டி­யி­டப்­போ­வ­தில்லை என்று மத்­திய பிர­தேச மாநில முன்­னாள் முதல்வர் திக்­வி­ஜய்­சிங் அறி­வித்­தார். வேட்­பு­ம­னுக்­க­ளைத் திரும்­பப்­ பெற வரும் 8ஆம் தேதி கடைசி நாள் ஆகும். வரும் 17ஆம் தேதி வாக்­குப்­ப­திவு நடக்­கும்.
காங்­கி­ரஸ் கட்­சி­யின் நிர்­வா­கி­கள் 9,000 பேர் வாக்­கு­ரிமை பெற்று  உள்ள­னர்.

ஈரான் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டமும் தமிழக பெண் உரிமை மற்றும் மனித உரிமை போலிகளும்

 

ஸ்டீபான் ஸ்மித்   : ஈரானில் பெண்களுக்கு எதிராக  அரச பயங்கரவாதம் கொடூரமாக தலைவிரித்து ஆடுகிறது
இது பற்றி  தமிழ் மனித உரிமை பேச்சாளர்கள் மற்றும்  பெண் உரிமை பேச்சாளர்கள் கடும் மௌனவிரதம் கடைப்பிடிக்கிறார்கள்.
இந்த விடயத்தில் குரல் கொடுக்க உங்களை  எது தடுக்கிறது?
உங்களின் மௌனம் காவி சங்கிகளின் வளர்ச்சிக்கு உதவும் என்பதை மறவாதீர்கள்.
பச்சை சங்கிகளுக்கு ஸலாம் போடுவதுதான் உங்கள் விருப்பம் என்றால் நீங்கள் இந்த கணமே செல்லாக்காசாகி விட்டீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்
பெரியார் அம்பேத்கர் சேகுவேரா லெனின் என்றெல்லாம் நீட்டி  ஜோக் அடிக்காதீர்கள் .
அவர்களை விட்டுவிடுங்கள்    
ஈரானில் ஒவ்வொரு நாளும் எத்தனை  பெண் உரிமையாளர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பது சரியாக தெரியவில்லை
இந்த  ஹடிஸ் நஜாஃபி என்பவர் சமூக ஊடகங்களில் பிரபலமானவர்
இவர் ஹிஜாப் எதிர்ப்பு நடவடிக்கைகளை பொதுவெளியில் மேற்கொண்டார்   இவரை ஈரானின் கொலைகார காவலர்கள் சுட்டு கொன்றுவிட்டார்கள்

வெள்ளி, 30 செப்டம்பர், 2022

பொன்னியின் செல்வர்கள் - அதிகாரம், சூழ்ச்சி, போர்வெறி, நாடுகளைக் கைப்பற்றல் ஏழைகளின் நிலங்களை பறித்து பார்ப்பனர்களுக்கு ...

 தோழர் புலியூர்  :  பொன்னியின் செல்வன்.
1) இராஜராஜ சோழனின் ஏகாதிபத்திய போர் வெறி.
2) வடக்கிலிருந்து அழைத்து வரப்பட்ட பிராமணர்களுக்கு சதுர்வேதி மங்கலம், பிரம்ம தேயம், மஹாதானபுரம், அகரம், அக்ரஹாரம் என உழுகுடிகளிடமிருந்து பிடுங்கி தானமாக ஆயிரக்கணக்கான வேலி நிலங்களைத் தானமாகக் கொடுத்தது.
3) உழுகுடிகளின் மீது 400க்கும் மேற்பட்ட வரிகளை விதித்து, அவர்களைத் துன்புறுத்தி அவைகளை வசூலித்தது.
4) தானமாகக் கொடுக்கப்பட்ட பிராமணர்களின் நிலங்களுக்கு வரி இல்லை என அறிவித்தது.
5) உழுகுடிகள் வரி கொடுக்கத் தாமதமானால், கலம் உடைத்தல் என அவர்களின் உணவுக் கலயங்கள் உள்ளிட்டவைகளை உடைத்து நொறுக்கத் தனிப் படையணியே உருவாக்கியது.
6) உதிரியாகக் கிடந்த மதத்தை மாபெரும் கோயில் கட்டி அதன் வழியே நிறுவனமாக்கியது.
7) கோயிலின் ஸ்ரீ பண்டாரமே கருவூலம் என உழுகுடிகளின் விளைச்சலில் ஒரு பங்கை வம்படியாகப் பறித்துச் சேர்த்தது.
 ஐந்நூறுக்கும் மேற்பட்ட பிராமணர்களின் கையில் கோயில் பொறுப்பை ஒப்படைத்தது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த இடைக்கால தடை

மாலைமலர் :சென்னை, அ.தி.மு.க.வில் எழுந்த ஒற்றைத் தலைமை பிரச் சினையில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பலத்தை காட்ட களம் இறங்கினார்கள்.
இதில் எடப்பாடி பழனிசாமி கை ஓங்கியது. கடந்த ஜூலை 11-ந் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தி எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செய லாளராக தேர்வு செய்யப் பட்டார்.
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவா ளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்கள்.
அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தை எதிா்த்து முன்னாள் முதல்-அமைச் சர் ஓ.பன்னீா்செல்வம், பொதுக்குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோா் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்.
சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஜெயச் சந்திரன் கடந்த ஜூலை 11-ந் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக் குழு கூட்டம் செல்லாது என்று தீா்ப்பளித்தாா்.
தனி நீதிபதியின் தீா்ப்பை எதிா்த்து எடப்பாடி பழனி சாமி சாா்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. தனி நீதிபதி கொடுத்த தீர்ப்பை ரத்து செய்து டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.

RSS ஊர்வலத்திற்கு தடை விதித்த தமிழ்நாடு அரசின் உத்தரவு சரியானது - உயர்நீதிமன்ற உத்தரவில் சொல்லியிருப்பது என்ன?

கலைஞர் செய்திகள் : அக்டோபர் 2 தேதி ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவுகளை எதிர்த்து அரசு அமைப்பினர் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் நிபந்தனைகளை விதித்தவுடன் அனுமதி வழங்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அனுமதி வழங்கவில்லை என காவல்துறைக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது ஆர்.எஸ்.எஸ். தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் ஆஜராகி, ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கும்படி நிபந்தனைகளை வகுத்து நீதிமன்றம் உத்தரவிட்டும், காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாகவும், இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் எனவும், நீதித்துறையை யாரும் குறைத்து மதிப்பிடக் கூடாது எனவும் வாதிட்டார்.

முடிவை கைவிட்ட திக்விஜய் சிங்... இருமுனை போட்டியில் காங்கிரஸ் தலைவர் தேர்தல்

 நக்கீரன் : அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலுக்கான அறிவிப்பாணையை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் குழு தலைவர் வெளியிட்டிருந்தார். அதன்படி, போட்டி இருக்கும் பட்சத்தில் வரும் அக்டோபர் 17- ஆம் தேதி அன்று காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை காங்கிரஸ் கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
வரும் அக்டோபர் 19- ஆம் தேதி அன்று காலை 10.00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலில் திக்விஜய் சிங் போட்டியிடுவதாகவும் இதற்காக நாளை வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் நேற்று தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் இந்த முடிவை திக்விஜய் சிங் கைவிட்டுள்ளதாகவும், மல்லிகார்ஜூன கார்கேவுக்கு திக்விஜய் சிங் ஆதரவளிக்கும் முடிவை எடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில உச்ச கட்ட குழப்பம் - என்.திரிபாதி வேட்புமனு தாக்கல்

மாலை மலர்  :  காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட முன்னாள் மத்திய மந்திரியும், அக்கட்சியின் எம்.பி.யுமான சசிதரூர் வேட்புமனுவை இன்று காலை தாக்கல் செய்துள்ளார். தொடர்ந்து பிற்பகல் அக்கட்சியின் மூத்த தலைவரும், பாராளுமன்ற மாநிலங்களைவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவும் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சியின் மத்திய தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்திரியிடம் வேட்புமனுவை அவர் வழங்கினார். அசோக் கெலாட் உள்பட காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் அப்போது உடன் இருந்தனர். இந்த நிலையில் திடீர் திருப்பமாக காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட ஜார்க்கண்ட் மாநில முன்னாள் அமைச்சர் கே.என். திரிபாதியும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

அன்றே எம்ஜியார் : தமிழ்நாட்டுக்கு ஆர் எஸ் எஸ் தேவையில்லை

May be an image of 1 person and standing

Ithayakkani S Vijayan  :  "எம்.ஜி.ஆரை" மிரட்டிய ஆர்.எஸ்.எஸ்.
டெல்லியில்  ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தன்னிடம் நடந்து கொண்ட முறை பற்றி 17-2-1983 ல் பத்திரிக்கையாளர் சந்திப்பில் எம்.ஜி.ஆர்.கூறியது இது.
பத்திரிக்கையாளர் கேள்வி.
ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் தடை செய்யப்படுமா?
எம்.ஜி.ஆர் பதில்.
டெல்லியில் நேற்று நான் தமிழ்நாடு மாளிகையில் இருந்து மத்திய மந்திரிகளைப் பார்க்கப் புறப்பட்ட நேரத்தில் முன் அறிவிப்பு இல்லாமல் "இந்து மஞ்ச்" என்ற பெயரில் 45 வயதுக்காரர்கள் என் முன்னால் நின்று கொண்டு,தமிழ் நாட்டில் 5 ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சுடப்பட்டதாகச் சொன்னார்கள்.
எம்.ஜி.ஆர் ஒழிக என்று கோசம் போட்டார்கள்.
அவர்கள் நடந்து கொண்ட முரட்டுத்தனமான செயலைப் பார்க்கும் போது இதுதான் ஆர்.எஸ்.எஸ்.இயக்கமா என்று நினைக்கத் தோன்றியது.
இதுதான் ஆர்.எஸ்.எஸ் என்றால் அது இந்த நாட்டுக்கும்,தமிழ் நாட்டுப் பண்புக்கும் ஒத்துவராது.என்னைத் தடை செய்யும் அளவிற்கு மட்டமாக நடந்து கொண்டார்கள்.இந்து மதத்தை இப்படியெல்லாம் காப்பாற்றிவிடமுடியாது.
தமிழ்நாட்டில் இவ்வளவு கீழ்தரமான அனுபவம் எனக்கு இதுவரை நடந்ததில்லை.இதைப் பார்த்த பிறகு அந்த அமைப்பின் மீது எனக்கு பெரிய ஏமாற்றம் ஏற்பட்டது"என்றார் எம்.ஜி.ஆர்.

அமெரிக்க மாகாணத்தை நிலைகுலைய வைத்தது, ‘இயான்’ புயல் – 22 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின

.dailythanthi.com/  : அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை இயான் புயல் நிலைகுலைய வைத்துள்ளது.
22 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின. வாஷிங்டன், அமெரிக்க வரலாற்றின் மிக மோசமான புயல்களில் ஒன்றாகக்கருதப்படுகிற ‘இயான்’ புயல், அந்த நாட்டின் புளோரிடா மாகாணத்தை தாக்கியது.
நேற்று முன்தினம் பிற்பகலில் இந்தப் புயல், 4-ம் வகை புயலாக கேயோ கோஸ்டா அருகே பெரும் மழையைக் கொண்டு வந்தது.
பல நகரங்களில் எங்கு பார்த்தாலும் ஒரே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
மணிக்கு 150 மைல் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசியது. இது தீவிரத்தின் உயர்ந்த நிலை என்று சொல்லப்படுகிறது.
இது புளோரிடா மாகாணத்தைத் தாக்கிய பின்னர் மெதுவாக வலுவிழந்து 2-வது வகை புயலாக தரமிறக்கப்பட்டதாக தேசிய புயல் மையம் தெரிவித்தது.

காங்கிரஸ்: அடுத்த தலைவர் திக் விஜய் சிங்? கெலாட் ஒதுங்கிய பின்னணி!

 minnambalam.com - Selvam  :  காங்கிரஸ்: அடுத்த தலைவர் திக் விஜய் சிங்? கெலாட் ஒதுங்கிய பின்னணி!
காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக, மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சி மூத்த நிர்வாகியுமான திக்விஜய்சிங் இன்று (செப்டம்பர் 29)காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் வேட்புமனு  படிவங்களைப்   பெற்றுச் சென்றுள்ளார்.
காந்தி குடும்பம் அல்லாத ஒருவரை காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கும் நோக்கில், காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி நடைபெற உள்ளது.

அண்ணாவின் வேலைக்காரி தந்த விழிப்புணர்வை மடைமாற்ற கல்கி புனைந்த பொன்னியின் செல்வன்

Ovia Rajamoni : பொன்னியின் செல்வன்…..
ஒரு மாதமாக எழுத நினைத்து ஒரு வழியாக நாளை படம் வெளிவருகின்ற நிலையில் இன்றாவது எழுதி விடுவோம் என்று இந்த பதிவை எழுதுகிறேன். 
பொன்னியின் செல்வன் நாவலை முழுமையாக நமக்கு எதிரணியில் நிறுத்தும் அணியினர் ஒரு புறம்.  கல்கியின் கற்பனை வரலாறாகுமா என்கின்ற கேள்வி ஒரு புறம்.  

கல்கியின் “பொன்னியின் செல்வன்” குறித்து …… | வி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்
இது பற்றி அலட்டிக் கொள்ளாமல் கல்கியின் கதாபாத்திரத்துக்கான நடிக நடிகையர் தேர்வு பற்றிய அலசல் ஒருபுறம் அப்புறம் இசை ….
அந்த இசைக் கலைஞர்கள் சார்ந்த அரசியல் என்று கடந்த ஒரு மாதமாக சமூக ஊடகங்கள் நிரம்பி வழிகின்றன.  
அறிஞர் அண்ணா அவர்களின் வேலைக்காரி நாடகம் மாபெரும் வெற்றியடைந்து திராவிட இயக்க செல்வாக்கு பெருகிய வேளையில் மக்களை திசை திருப்ப கல்கியின் நாவல்கள் பங்காற்றின என்கிறார் மருத்துவர் காந்தராஜ்.

வியாழன், 29 செப்டம்பர், 2022

நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்த தமிழ்நாடு அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் - உச்சநீதிமன்றம்!

puthiyathalaimurai.com  -karthick :  தேவையில்லாத வழக்குகளை தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததாக கூறி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் சிலருக்கு ஓய்வூதியம் (Pension) வழங்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆத்.ஷா, கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

பாரம்பரிய திமுக ஆதரவாளர்களின் அதிருப்தி? சமூக வலையில் விவாதப்பொருளாகிறது?

 Somasundaram  :  திராவிட முன்னேற்றக் கழகத்தில் 33 ஆண்டுகளுக்கு முன் இணைந்தவர்களில் பலர் எந்த ஒரு பதவியிலும் இல்லாமல், ஏன் பலர் அண்ணா அறிவாலயத்தை நேரில் பார்க்காத என்னற்ற தொண்டர்களை பெற்றிருக்கும் இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம்..
ஆனால்
இன்று யாரெல்லாம் வருகிறார்கள். நாங்கள் அப்படியே இருக்கிறோம் என்று சென்னை மயிலாப்பூர் பகுதி கழக முன்னாள் செயலாளர் பேசியது என் கண்களில் இருந்து சில கண்ணீர் துளிகள் என்னையும் அறியாமல் என் கால் விரல்களில் விழுந்தது. அவர் பேசியதை கழகம், மற்றும் தமிழ்நாட்டின் நலன் கருதி எதிர்கால திமுகவினரின் நன்மைகளையும் கருத்தில்கொண்டு முகநூலில் அவரது பேசியதை பதிவு செய்யவில்லை.
தலைவர் மற்றும் முதலமைச்சர் அவர்களே!!
கழகத்தின் கடைக்கோடி தொண்டர்களின் அத்தியவாசிய தேவைகள் என்ன என்பதை தெரிந்து அதை நிறைவேற்றுங்கள் என்பதை மட்டும் இங்கே பதிவு செய்கிறேன்...
அப்படி செய்தால் மட்டுமே, அதிலிருந்துதான் உண்மையான திராவிட மாடல் ஆட்சி உருவாகும், இல்லையெனில் அது வெறும் பேசும் பொருளாக மட்டுமே இருக்கும் என்பதை சுட்டிக்காட்டுகிறேன்...

முதல்வர் ஸ்டாலின் ஒரு அப்பாவி.. சீமான், திருமாவளவனிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.. ஹெச்.ராஜா!

tamil.oneindia.com -  Yogeshwaran Moorthi  : சிவகங்கை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு அப்பாவி என்றும், அவருக்கு சீமான் மற்றும் திருமாவளவன் ஆகியோர் தான் கொம்பி சீவிவிடுவதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தனது 65 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள கற்பகவிநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
அதன் பிறகு, தனியார் திருமண மண்டபத்தில் பாஜக நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்த பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு கேக் வெட்டினார். அவருக்கு பாஜக நிர்வாகிகள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழக காவல் துறை அனுமதி மறுப்பு விவகாரம்... தமிழக காவல்துறை மறுசீராய்வு மனு

நக்கீரன்  :ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழக காவல் துறை அனுமதி மறுப்பு  விவகாரம்... தமிழக காவல்துறை மறுசீராய்வு மனு
வரும் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்தில் 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் பேரணி நடத்த நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்து அனுமதி அளித்திருந்தது. காவல்துறையிடம் முறையாக அனுமதி வாங்கி பேரணி நடத்த நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இதனை தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில் தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நடிகை வாணிஸ்ரீ செய்தியாளர் சந்திப்பு 20 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைகளை வழங்கினார்

மாலைமலர் : சென்னை: மோசடியாகப் பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை ரத்து செய்ய பதிவுச்சட்டம், 1908-ல் பதிவு செய்த அலுவலருக்கோ அல்லது வேறு எந்த உயர் அலுவலருக்கோ இதுவரை அதிகாரம் அளிக்கப்படவில்லை. எனவே, அந்த ஆவணப் பதிவுகளை ரத்து செய்திட பாதிக்கப்பட்டோர் நீதிமன்றங்களை அணுகிட வேண்டிய நிலையே இருந்து வந்தது.
இதுதொடர்பாக சட்டத்திருத்தம் கொண்டு வர அரசு முடிவு செய்து, போலி, ஆள்மாறாட்டம் போன்ற காரணங்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை பதிவுத்துறையே ரத்து செய்ய அதிகாரம் அளிக்க சட்டப்பேரவையில், 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் 6.8.2022 அன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
திருத்தப்பட்ட இந்தப் பதிவுச் சட்டத்தில், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பிரிவு 22-பி ஆனது போலி ஆவணங்கள் மற்றும் சட்டத்தால் தடை செய்யப்பட்ட ஆவணங்களின் பதிவினை மறுக்க பதிவு அலுவலர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.

நாடார் வகுப்பு மக்களும் பாஜகவும்

  Sugumaran Ramasamy   : பாஜகவை தூக்கி சுமக்கும் வகுப்பினருள் நாடார் வகுப்பு மிகப்பெரிய பங்களிப்பை அளிக்கிறது.  
ஆனால் சனாதனத்தை தூக்கி பிடிக்கும் பாஜக எப்போதுமே அய்யர் மற்றும் அய்யங்கார் வகுப்புக்கு மட்டும் முன்னுரிமை முக்கியத்துவம் தருவதை நாம் அனைவரும் அறிந்ததே.
நாடார்கள்   தங்கள் வீட்டு நல்ல கெட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏன் மந்திரம் ஓதிட  பார்ப்பனர்களை அழைப்பதில்லை தெரியுமா?
வீட்டுப் பெரியவர்கள் அல்லது சமூகத்தில் மதிப்புமிக்க மனிதர்கள் தான் தாலி எடுத்து கொடுப்பார்கள். இன்று ஆங்காங்கே பார்ப்பனர்கள் மூலம் திருமணம் நடந்தாலும் வெகுவாக வைதீக முறைப்படி நடப்பதில்லை.
ஏன்? அந்த காலத்தில்!!
நாடார்களின் ஆலய நுழைவுப் போராட்ட நிகழ்ச்சிகள் வைத்தியநாத அய்யருக்குத் துணைபோகும் தமிழர்களைத் தோலுரித்துக் காட்டுவதாக அமையும்.
திருச்செந்தூர் கோவிலில் நாடார்கள் உள்ளே நுழைய முடியாது. வெளியில் இருந்துதான் தேங்காய் உடைத்து சாமி கும்பிட வேண்டும். 1872இல் இதை மீறி ஏழு நாடார்கள் உள்ளே நுழைந்தனர். கோவில் நிர்வாகம் இவர்கள் மீது வழக்குத் தொடுத்தது. டோபி, பார்பர் போன்ற இதர கீழ்ஜாதியினர் கொடிமரம் வரை செல்ல அனுமதியிருக்கும்போது நாடார்கள் உள்ளே நுழைந்ததால் கோவில் புனிதம் கெட்டுவிடாது எனக்கூறி விடுதலை செய்தது. இதனால் நாடார்கள் கொடிமரம் வரை செல்ல முடிந்தது.

திமுக துணை பொதுச்செயலாளர் திருமதி .சுப்புலக்ஷ்மி ஜெகதீசன் விலகல் .. அமைச்சர் முத்துசாமி மீது கேள்விக்கணை

VikatanTv  :  2021 சட்டமன்றத் தேர்தலில் சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்கள் வெறும் 281 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றபோதே, தலைமை அவரிடம் என்னவென்று விசாரித்திருக்க வேண்டும்.

புதன், 28 செப்டம்பர், 2022

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் இன்று ஒரு நாள் தமிழகம் கூடலூர் வருகை

 ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் இன்று ஒரு  நாள் தமிழகம் கூடலூர் வருகை
சென்னை: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின்  ஒரு பகுதியாக செப்டம்பர் 29 ஆம் தேதி தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு வருகிறார்.
கூடலூர் ஆமைகுளம் அருகே ராகுல் காந்தி 6 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்வார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். பின்னர் மாலை கூடலூர் பேருந்து நிலையம் அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார்.

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை கோரிய திருமா! உச்ச நீதிமன்றத்திற்கு போகச்சொன்ன உயர்நீதிமன்றம்

தினமலர் : ஆர்எஸ்எஸ், திருமாவளவன், சென்னை உயர்நீதிமன்றம், சென்னை ஐகோர்ட், உயர்நீதிமன்றம்,
சென்னை: ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கு தாக்கல் செய்ய முடியாது. உச்சநீதிமன்றத்தில் தான் மேல்முறையீடு செய்ய முடியும் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
தமிழகம் முழுதும், 50 இடங்களில், அக்., 2ம் தேதி, ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க, போலீசாருக்கு உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், பல்வேறு நிபந்தனைகளை விதித்து, செப்டம்பர் 28க்குள் அனுமதி வழங்கும்படி, போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார்.

பிஎப்ஐ மீதான தடையை வரவேற்கிறேன்.. அஜ்மீர் தர்கா தலைவர் கருத்து.. 2 ஆண்டுக்கு முன்பே சொன்னேன்.

tamil.oneindia.com  - Nantha Kumar R  :  திருவனந்தபுரம்: பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மற்றும் அதன் துணை அமைப்புகளை மத்திய அரசு தடை செய்துள்ளது. 2 ஆண்டுக்கு முன்பே தடை செய்ய கூறினேன். இப்போது தடை செய்துள்ளனர் எனக்கூறி பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா தடை பற்றி அஜ்மீர் தர்ஹாவின் தலைவர் ஜெயினுல் அபிதீன் அலி கான் வரவேற்று கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 22ம் தேதி திடீரென்று என்ஐஏ, அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்பட மொத்தம் 15 மாநிலங்களில் 90க்கும் அதிகமான இடங்களில் சோதனை நடந்தது.
இந்த சோதனையானது பிஎப்ஐ எனும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு, எஸ்டிபிஐ கட்சியின் அலுவலகம், நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.

உலகம் முழுவதும் சட்டவிரோத காவல் நிலையங்களை திறந்த சீனா...China Private Army Around the World?

மாலை மலர்  :  உலகம் முழுவதும் சட்டவிரோத காவல் நிலையங்களை திறந்த சீனா... தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக தகவல்
உலக வல்லரசாக உருவெடுக்கும் முயற்சியாக, கனடா, அயர்லாந்து போன்ற வளர்ந்த நாடுகள் உட்பட உலகெங்கிலும் ஏராளமான சட்டவிரோத காவல் நிலையங்களை சீனா திறந்துள்ளது. இது மனித உரிமை ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக உள்ளூர் ஊடக தகவல்களை மேற்கோள் காட்டி, புலனாய்வு இதழான ரிபோர்டிகா செய்தி வெளியிட்டுள்ளது. அதில், கனடா முழுவதும் பொது பாதுகாப்பு அமைப்புடன் இணைந்து முறையற்ற காவல் சேவை நிலையங்களை சீனா திறந்திருப்பதாகவும், இதில் 3 போலீஸ் நிலையங்கள் கிரேட்டர் டொரோன்டோவில் மட்டும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இத்தாலியில் முசோலினிக்கு பின்பு முதல் அதி தீவிர வலது சாரி கட்சி வெற்றி ! இத்தாலியின் முதல் பெண் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி .

 BBC பால் கிர்பி மூலம் -  பிபிசி செய்தி, : இத்தாலியில் நடந்து முடிந்த தேர்தலில் தீவிர வலதுசாரி தலைவர் ஜியோர்ஜியா மெலோனி இத்தாலியின் தேர்தலில் வெற்றி பெற்று, நாட்டின் முதல் பெண் பிரதமராக பதவியேற்க உள்ளார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின் இத்தாலியின் வலதுசாரி அரசாங்கத்தை திருமதி மெலோனி அமைக்கிறார்
ஐரோப்பிய ஒன்றியத்தின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இத்தாலி இருப்பதால் இது ஐரோப்பாவின் பெரும்பகுதியை கொஞ்சம் அச்சுறுத்தும்.
வாக்கெடுப்புக்குப் பிறகு பேசிய திருமதி மெலோனி, தனது பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி கட்சி "அனைவருக்கும் ஆட்சி செய்யும்" என்றும் மக்களின் நம்பிக்கையை ஏமாற்றாது என்றும் கூறினார்.

கொழும்பில் பயங்கர தீ விபத்து 80 வீடுகள் சேதம் - உடன் நிவாரணம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு

hirunews.lk : இலங்கை கொழும்பில் பயங்கர தீ விபத்து  80 வீடுகள்  சேதம் - உடன் நிவாரணம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு
கிராண்ட்பாஸ் - கஜிமாவத்தை பகுதியில் குடியிருப்பு தொகுதியொன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 80 தற்காலிக குடிசை வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்றிரவு 8 மணியளவில் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர தீயணைப்பு திணைக்களம் மற்றும் கடற்படையின் 10 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த தீ விபத்தினால், உயிர்ச்சேதமோ எவருக்கும் காயமோ ஏற்படவில்லை என்பதுடன் 80 குடும்பங்களைச் சேர்ந்த 220 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை.. சட்டவிரோதமாக அறிவித்த ஒன்றிய அரசு

tamil.oneindia.com -  Noorul Ahamed Jahaber Ali : டெல்லி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சட்டவிரோத அமைப்புகளாக அறிவித்து இருக்கும் மத்திய அரசு அதற்கு 5 ஆண்டுகள் தடை விதித்து உத்தரவிட்டு இருக்கிறது.
பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு நாடு முழுவதும் கிளைகளை பரப்பி செயல்பட்டு வருகிறது. இஸ்லாமியர்களுக்கு எதிரான அடக்குமுறைகள், சட்டங்களுக்கு எதிராகவும், மத்திய அரசு, பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறது.
அதே நேரம் பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு கலவரங்களை தூண்டி வருவதாக குற்றம்சாட்டி அவற்றை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்தன.

ஒரே நாளில் பங்குச்சந்தையில் ரூ.7 லட்சம் கோடி இழப்பு.. மோடி அரசின் பொருளாதார வீழ்ச்சி!

 kalaignarseithigal.com  -  Praveen  :  இந்தியா  ஒரே நாளில் பங்குச்சந்தையில் ரூ.7 லட்சம் கோடி இழப்பு.. மோடி அரசின் நடவடிக்கையால் வீழ்ச்சியில் பொருளாதாரம்!
நேற்று ஒரே நாளில் மட்டும் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு ரூ.7 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பா.ஜ.க அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் நாட்டில் வர்த்தம், தொழில் வளர்ச்சி, முதலீடுகள், வேலைவாய்ப்புகள் என அனைத்துத் துறைகளும் முற்றிலும் சிதைந்து போயுள்ளன.
இதன் பின்னர் வந்த கொரோனா பெரும்தொற்று, உக்ரைன் போர் ஆகியவற்றின் காரணமாக சரிந்து வரும் இந்திய பொருளாதாரம் மேலும் சரிவை சந்தித்தது. அதனை மீட்டெடுக்க ஒன்றிய அரசு செய்த முயற்சிகள் பொருளதார சரிவை மேலும் கடுமையாக்கியது.
குறிப்பாக மோடியின் நண்பர்களான கார்பொரேட் முதலாளிகளுக்காக கார்பொரேட் வரி உயர்த்தப்பட்டது.

செவ்வாய், 27 செப்டம்பர், 2022

ஈரான் ஹிஜாப் எதிர்ப்பு பேரணி .. கனடா உட்பட பல நாடுகளில் ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள்

 Michelle Allan · CBC : கனடா தலைநகரான ஒட்டாவில் ஈரானில் ஹிஜாப் அணியவில்லை என்று மஹ்சா அமினி என்ற இளம் பெண் கொலையை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி நடந்தது
ஈரானிய இளம் பெண் ஒருவர் பொலிஸ் காவலில் உயிரிழந்ததை அடுத்து, உலகெங்கிலும் ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன  
நேற்று  நூற்றுக்கணக்கான மக்கள் ஒட்டா நகர வ வீதிகளில் ஈரானிய அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
22 வயதான பெண் ஈரானின் இஸ்லாமிய மத  பொலிசாரின் காவலில் இருந்தபோது  இறந்தார். முறையற்ற முறையில் ஹிஜாப் அணிந்ததாகக் கூறி மஹ்சா அமினி கைது செய்யப்பட்டார்,
மேலும் அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாகவும், தவறாக நடத்தப்படவில்லை என்றும் பொலிசார் கூறினாலும், அவரது குடும்பத்தினர் அந்தக் கணக்கில் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

இலங்கையில் கொலை கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த இரண்டு குற்றவாளிகள் (சந்திரகுமார் , கிருபாகரன்) தமிழகத்தில் கைது

இந்தியா டுடே  : இலங்கையில் கொலை கொள்ளை வழக்குகளில்  தேடப்பட்டு வந்த இரண்டு குற்றவாளிகள் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் ஆகிய பிரிவுகளில் இவர்கள் தேடப்பட்டு வந்தனர்.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் 22ம் தேதி முதல் தீவு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தனுஷ்கோடி வழியாக அகதிகளாக தமிழகம் வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் இரு ரவுடிகளிடம் விசாரணை!

நக்கீரன்  : அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ராமஜெயம் கொலை இருவரிடம் சிறப்பு புலனாய்வு தனிப்படையினர், விசாரணை நடத்தியுள்ளனர்.
கடந்த 2012- ஆம் ஆண்டு நடைபயிற்சிக்கு சென்ற கே.என்.ராமஜெயம் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு, கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். கடந்த 10 ஆண்டுகளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையிலும், குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல், காவல்துறை திணறி வருகிறது.
இந்த நிலையில், கடந்த 2001- ஆம் ஆண்டு தி.மு.க. தலைமை செயற்குழுவின் உறுப்பினராக இருந்த எம்.கே.பாலனும், நடைபயிற்சியின் போது கடத்தப்பட்டார். இரு கடத்தலும் ஒத்துப்போவதாக கருதப்படுவதால் எம்.கே.பாலன் வழக்கில் தொடர்புடைய திண்டுக்கல்லைச் சேர்ந்த கணேசன், புதுக்கோட்டையைச் சேர்ந்த செந்தில் குமார் ஆகியோரிடம் திருவெறும்பூரில் சிறப்பு புலனாய்வு தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர்.

குமரி அனந்தனுக்கு (தமிழிசை சவுந்தரராஜனின் தந்தை) அரசு வீடு ஒதுக்கீடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசாணை வழங்கினார்

மாலைமலர் : சென்னை:  குமரி அனந்தன், கன்னியா குமரி மாவட்டம், குமரி மங்கலம் என்ற அகத்தீஸ்வரத்தில், சுதந்திரப் போராட்டத் தியாகி அரி கிருட்டிணன்-தங்கம்மாள் தம்பதிக்கு முதல் மகனாக 1933 மார்ச் 19-ஆம் நாளன்று பிறந்தவர்.
பெருந்தலைவர் காமராசரின் அருமந்த சீடர்-காங்கிரசுப் பேரியக்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர், ஓய்வறியாத உயரியத் தொண்டர்,
மக்கள் நலனுக்காகப் பதினேழு முறை தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டதோடு, இலக்கியச் செல்வராகவும், மேடை மன்னராகவும், இலக்கியக் கடலாகவும், எவரோடும் பகை கொள்ளாத பண்பாட்டுச் செம்மலாகவும் மிளிர்பவர்
அன்பில் சிறந்த குமரி அனந்தன் அவர்கள். நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை பாராளுமன்ற உறுப்பினராகவும், தமிழ்நாடு பனைத் தொழிலாளர் நல வாரியத் தலைவராகவும் அரும் பணியாற்றியவர்.

தமிழிசை சவுந்தரராஜன் : ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்துவதில் என்ன தவறு?- தெலுங்கானா கவர்னர் தமிழிசை ....

மாலைமலர் : சென்னை:  தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணைநிலை ஆளுனருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் மோடி சுய சார்பு கொள்கையை பற்றி இப்போது வலியுறுத்தி வருகிறார். இதை அந்த காலத்திலேயே செய்து காட்டியவர் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார். பேனா தயாரிப்பது எப்படி? மை தயாரிப்பது எப்படி? மெழுகு தயாரிப்பது எப்படி என்று தொழில் வளர்ச்சி பற்றிய புத்தகத்தையே எழுதி இருப்பது பெருமையாக உள்ளது.
பத்திரிகை செய்தியை தந்தி போல் விரைவாகவும் கொடுக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டியவர். நீதிமன்றம், சட்டமன்றம் என்று எல்லா துறைகளிலும் அவர் வகிக்காத பதவிகள் இல்லை.
பெட்ரோல் குண்டு வீசுவது தமிழர்கள் கலாசாரம் கிடையாது. எந்த மாநிலத்திலும் இந்த மாதிரி சம்பவங்கள் நடக்கக்கூடாது. சமய சார்பற்ற யார் மீதும் பாரபட்சம் காட்டாத அமைதியான வாழ்க்கை தொடர வேண்டும்.

அஷோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் தேர்தல்: போட்டியில் இருந்து வெளியேறுகிறார்?

hindutamil.in  :  காங்கிரஸ் தலைவர் தேர்தல்: போட்டியில் இருந்து வெளியேறுகிறாரா அஷோக் கெலாட்?
புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட் வெளியேறுவார் என தகவல் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. வரும் 30-ம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைய இருக்கிறது.
போட்டி இருக்கும்பட்சத்தில் அடுத்த மாதம் 17-ம் தேதி வாக்குப்பதிவு இருக்கும் என்றும், அக்டோபர் 19-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட்டும், திருவனந்தபுரம் எம்.பி. சசி தரூரும் விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்.

ஆ.ராசா, பொன்முடி சர்ச்சை பேச்சு - மௌனம் கலைத்த மு.க. ஸ்டாலின்

zeenews.india.com -  க. விக்ரம்  :  திமுக எம்.பி ஆ. ராசாவும், அமைச்சர் பொன்முடியும் சமீபத்தி பேசிய பேச்சு சர்ச்சைக்குள்ளானது. குறிப்பாக பொன்முடியின் பேச்சு பலரால் ரசிக்கப்படவில்லை.
மேலும், அனைத்து தரப்பினருக்குமான ஆட்சி என்று கூறிவிட்டு, பேருந்தில் ஓசியில் செல்கிறீர்கள் என பொதுவெளியில் பொன்முடி பேசிய வீடியோ சமுக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை சந்தித்தது.
இந்தச் சூழலில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு- இந்தக் கொள்கைகளின் வழியே சமத்துவ சமுதாயத்தை அடைய வேண்டும் என்ற உயர்ந்த இலட்சிய நோக்கத்துடன்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தை பேரறிஞர் அண்ணா அவர்கள் தொடங்கினார்.

அமைச்சர் சேகர் பாபுவின் சகோதரர் தேவராஜ் தூக்கிட்டு தற்கொலை!

tamil.oneindia.com  - Rajkumar R  ; சென்னை : தமிழக இந்து சமய அறநிலையதுறை அமைச்சர் சேகர்பாபுவின் உடன் பிறந்த அண்ணன் தேவராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2001 மற்றும் 2006 சட்டமன்றத் தேர்தலில் ஆர்கேநகர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சேகர்பாபு 2011 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார்.
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் துறைமுகம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் தற்போது தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருக்கிறார்.

பெட்ரோல் குண்டு வீச்சு - தமிழகம் முழுவதும் 14 பேர் கைது

tamil.asianetnews.com   -  Ajmal Khan  :  பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் தமிழகத்தில் நடைபெற்ற 11 வழக்குகளில் 14 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
 தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து குற்றவாளிகளை கைது செய்ய காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டது. இந்தநிலையில் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில நாட்களில் மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில்களை வீடுகள், வாகனங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் வீசிய சம்பவங்கள் தொடர்பாக கோவை, ஈரோடு, மதுரை, சேலம், திண்டுக்கல், தூத்துக்குடி கன்னியாகுமரி, மாவட்டங்களில் 19 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

Hon . K.W. Devanayakam இலங்கை கிழக்கு மாகாணத்தின் விடிவெள்ளி . முன்னாள் அமைச்சர் அமரர் கே டபிள்யு தேவநாயகம்

May be an image of 1 person and standing

  M R Stalin Gnanam : நீயும் துரோகி நானும் துரோகி
அது 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு பின்னரான காலம். ஆயுதமேந்தி அடைய எண்ணிய தமிழீழம் எனும் அற்புதக் கனவு கலைந்து போன நேரம். எங்கள் எதிர்கால நம்பிக்கைகள் அனைத்தும் கண்முன்னே கருகி நின்றன.
ஆயுதம் ஏந்தி நின்ற தோழர்களிடத்தில் அடுத்து என்ன செய்வது? என்கின்ற கேள்விகள் மலையாய் எழுந்து நின்றன.
அவரவர் தகுதிகளுக்கு ஏற்ப அதாவது அவரவர் குடும்பங்கள் சார்ந்த  பண வசதிகளுக்கு ஏற்ப முடிவுகள்  இருந்தன.
"கை" கனமாக இருந்த பலர் வெளிநாடு சென்றனர். கனம் குறைந்த சிலர் இந்தியாவுக்கு அகதியாக சென்றனர்.
கையில் ஏதுமற்றோர்   மண்ணோடு மண்ணாகி போயினர்.
பண வசதி இருந்தும் நாட்டை விட்டு ஓடக்கூடாது என்கின்ற ஓன்மம் இன்னும் ஒரு சிலருக்கு. அவர்கள் நாட்டிற்குள்ளேயே சொந்த வாழ்க்கையை நோக்கி நகர்வது அல்லது ஏதாவது ஜனநாயக அரசியல் ஈடுபாடுகளில் என்று  வெவ்வேறு விதமாக சிந்தித்துக் கொண்டிருந்தனர்.

திங்கள், 26 செப்டம்பர், 2022

8 வயது மகளை கொலைசெய்து வாளிக்குள் புதைத்து வைத்த தந்தை . தன் முகசாயலில் இல்லையாம் .. மதுரை

murder News, murder News in tamil, murder தமிழில் செய்திகள், murder Tamil  News – HT Tamil

tamil.hindustantimes.com ; தமிழ்நாடு, மதுரையில் 8 வயது சிறுமியை கொலை செய்து துணியில் சுற்றி வாளிக்குள் அடைத்து, சடலத்தை வீட்டு பரணில் வைத்து விட்டு தலைமறைவான தந்தையை பொலிசார் தேடி வருகின்றனர்.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் அடுத்த சோலை அழகுபுரத்தை சேர்ந்தவர் டெயிலர் காளிமுத்து. இவரது மனைவி பிரியதர்ஷினி இவர்களுக்கு எட்டு வயதில் தன்ஷிகா என்ற மகள் இருந்தாள்.
பிரியதர்ஷினி பாத்திரக்கடை ஒன்றில் வேலைப்பார்த்து வந்த நிலையில் கடந்த 13 ஆம் திகதி காளிமுத்து தனது மகள் தன்ஷிகாவுடன் சிவகங்கையில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறிச்சென்றார். பிரியதர்ஷினி வேலைக்கு சென்று விட்டு திரும்பி வந்த பின்னரும் கணவரும் மகளும் வீட்டிற்கு திரும்பவில்லை. கணவரின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

நச்சு அரசியலுக்கு இடமளிக்க வேண்டாம்” - தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

நக்கீரன் : "மானமுள்ள ஆயிரம் பேருடன் நாம் போராட முடியும். மானம் இல்லாத ஒருவருடன் போராட முடியாது" என்று தந்தை பெரியார் சொல்வார். \
அதுபோல இங்கே இருக்கக்கூடிய சில நச்சு அரசியல் சக்திகளுக்கு அரசியல் அறம், மானம்,  நேர்மை என்பது துளியும் இல்லாத நிலையில் அவர்களுடன் நாம் தொடர்ந்து மல்லுக்கட்டி போராடிவர வேண்டிய அவல நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
“சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு - இந்தக் கொள்கைகளின் வழியே சமத்துவ சமுதாயத்தை அடைய வேண்டும் என்ற உயர்ந்த இலட்சிய நோக்கத்துடன்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தை பேரறிஞர் அண்ணா  தொடங்கினார். \

ஆன்லைன் ரம்மி சூதாட்டம் தடை! அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

மாலைமலர் : சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் அனைத்துத் துறையைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சட்டசபை கூட்டம் விரைவில் நடைபெற இருப்பதையொட்டி சில முக்கிய முடிவுகள் எடுப்பது சம்பந்தமாக இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
மேலும், ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு மசோதா கொண்டுவருவது குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.

செந்தில்பாலாஜி செலக்ட் செய்த மாசெக்களின் பின்னணி!

மின்னம்பலம் : கோவை மாவட்டத்தில் ஏற்கனவே இருந்த ஐந்து மாவட்டங்களை மூன்றாகக் குறைத்தார் அம்மாவட்ட பொறுப்பு அமைச்சரான செந்தில்பாலாஜி. ஏற்கனவே இருந்த ஐந்து மாவட்டச் செயலாளர்களில் மாநகர் மாவட்டத்தின் கார்த்திக் முன்னாள் எம்.எல்.ஏ.வை தவிர மற்ற நான்கு பேர்களையும் பதவியில் இருந்து நீக்கிவிட்டார் செந்தில்பாலாஜி.
அவர்களுக்கு பதிலாக கோவை தெற்கு மாவட்டத்துக்கு தளபதி முருகேசன், கோவை வடக்கு மாவட்டத்துக்கு தொ.அ.ரவி ஆகியோரையும் கோவை மாநகர் மாவட்டத்துக்கு கார்த்திக்கையும் தேர்வு செய்திருக்கிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி.  23 ஆம் தேதி அறிவாலயத்தில் இவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும் தினத்தன்று காலை தன் வீட்டுக்கு அழைத்து பேசி நிர்வாகிகள் மத்தியில் புதிய மாவட்டச் செயலாளர்களை அறிமுகப்படுத்தினார். அதன் பிறகுதான் அவர்கள் அறிவாலயத்துக்கே சென்று தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்கள்.

அசோக் கெலாட்டுக்கு 2 பதவியும் வேணுமா? கொதிக்கும் சோனியா.. கடும் அப்செட்டில் ராகுல்.. மோதல்

தியாகம்

  tamil.oneindia.com   - Shyamsundar :   சண்டிகர்: ராஜஸ்தானில் நிலவும் அரசியல் குழப்பம் காரணமாக காங்கிரஸ் கட்சியின் உயர் மட்ட தலைவர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை தேர்வு செய்வதற்கான தேர்தல் விரைவில் நடக்க உள்ளது.
இந்த தேர்தலில் சோனியா, ராகுல் காந்திக்கு நெருக்கமான ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் ராகுல் காந்தி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. \அதாவது காங்கிரஸ் தலைவர் பதவியிலும் தனது ஆதரவாளர் இருப்பார். இன்னொரு பக்கம் ராஜஸ்தான் முதல்வர் பதவிக்கும் சச்சின் பைலட்டை கொண்டு வந்து.. அங்கு நிலவி வந்த பிரச்சனையையும் தீர்க்க முடியும் என்று நம்பினார். ஆனால் இப்போது ராஜஸ்தான் அரசியலில் புதிய குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

வெல்கிறார் விஜய பாஸ்கர்? ... கலைஞரின் ஜி.ஓ.354ஐ சிதைக்காமல் தர வேண்டியது திமுக ஆட்சியின் தலையாய கடமை

 Kandasamy Kandasamy : வெல்கிறார் விஜய பாஸ்கர்...
துரோகிகளே வெற்றி பெறட்டும்..
துரோகத்தின் அரசாணை எண்:  293
இந்த துரோகத்தனமான... மருத்துவர்களை பிரித்தாளும் யுத்தியான ஜி.ஓ.293 முன்னாள் அஇஅதிமுக அமைச்சர்... டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களை ' தள்ளுவண்டி ' என்று எள்ளி நகையாடிய விஜய பாஸ்கர் அவர்களின் வியர்வை நாற்றத்தோடு அவரது ஆடைக்குள் கசங்கிக் கிடந்த ஜி.ஓ.
எங்கள் முதல் கேள்வியே..
முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் அவர்களே வெளியிடத் தயங்கி ஒளித்து வைத்திருந்த அந்த ஜி.ஓ. 293 எப்படி கழக ஆட்சியில் வெளியிடப்பட்டது?
துரோகிகள் போட்ட தூபத்தில் கிரங்கிப் போயிருந்த கழக அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் அவர்கள்... உண்மை நிலை புரியாமல் ஜி.ஓ.293 க்கு தலை அசைத்து விட்டார் என்பதே உண்மை.  அதனால் தான் எல்லோருடைய தலையீட்டிற்குப் பிறகு வாய் மொழி உத்திரவாக... அந்த ஜி.ஓவை அமுலாக்காமல் நிறுத்தி வைத்திருந்தார்...

எஸ்.சி.சி அந்தோனிப்பிள்ளை ( யாழ்ப்பாணம்) சென்னை சூளை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் - வட சென்னை மக்களவை உறுப்பினர்

 ராதா மனோகர்  : ஈழநாடு - யாழ்ப்பாணம் . 22 02 -1962
திரு . எஸ்.சி.சி அந்தோனிப்பிள்ளை (யாழ்ப்பாணம்) சென்னை  சூளை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் - 1952–1957.
வட சென்னை  மக்களவை உறுப்பினர் 1957–1962
இவரின் முழுப்பெயர் செபஸ்தியான் சிரில் கான்ஸ்டன்டைன் அந்தோனிப்பிள்ளை (Sebastian Cyril Constantine Anthony Pillai, ஏப்ரல் 27, 1914 – ஆகஸ்ட் 16, 2000)
இலங்கை இடது சாரித்தலைவராகவும் பின்பு இந்திய இடதுசாரி தலைவராகவும் இருந்த ஒரு சுவாரசியமான அரசியல் வரலாறை கொண்டிருப்பவர்
யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர் யாழ் சென்ட் பற்றிக்ஸ் கல்லூரியில் கற்றார்.பின்பு  இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் சேர்ந்து வரலாற்றில் பட்டம் பெற்றார். பின்னர் இலண்டன் கிங்ஸ்  கல்லூரியில்  படித்தார்.

இவரை பற்றி ஒரு முக்கிய கோணத்தில் ஆய்வு செய்யவேண்டிய தேவை இருக்கிறது .
மறைந்த இலங்கை ஜனாதிபதி திரு ஜே ஆர் ஜெயவர்த்தனா அவர்கள் இவரை பற்றியும் அந்த காலத்து இலங்கை இடது சாரிகள் பற்றியும் சில முக்கிய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்
இலங்கை இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமை பறிப்பிற்கு இந்த இடது சாரி அரசியல்வாதிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது..
அந்த விடயத்தை நோக்குவதற்கு ஒரு முன்னோடியாக திரு எஸ் சி சி அந்தோனிப்பிள்ளையின் வரலாறு ஒரு உசா  துணையாக இருக்கும் என்று கருதுகிறேன்  

ஞாயிறு, 25 செப்டம்பர், 2022

பரபரப்பு.. கோவை பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த இருவர் கைது

tamil.oneindia.com -vigneshkumar   :  கோவை: கோவையில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் நடைபெற்ற நிலையில், இது தொடர்பாகக் கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்,
கடந்த வியாழக்கிழமை இரவு கோவை மாவட்டம் சித்தாபுதூர் பகுதியில் மாநகர பாஜக அலுவலகம் மீது அடையாளம் தெரியாத சில நபர்கள் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை வீசினர்.
அதைத்தொடர்ந்து கோவை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறின. இதனால் கோவையில் பதற்றம் ஏற்பட்டது.
கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள துணிக் கடை, பொள்ளாச்சியில் எனப் பல இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தன. இந்தச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்ய வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தினர்,

சீன அதிபர் கைதா .? ஜாலிக்காக வீடியோ வெளியிட்ட அமெரிக்க பெண்ணால் பரபரப்பான உலகம் ! நடந்தது என்ன ?

kalaignarseithigal.com  - Praveen  :  சீன அதிபர் குறித்து ஜாலிக்காக பெண் வெளியிட்ட வீடியோ ஒன்று சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சீனாவில் ஊழல் வழக்கில் 2 மூத்த அமைச்சர்களுக்கு மரண தண்டனையும், 4 அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இவர்கள் சீன அதிபருக்கு எதிராக அரசியல் பிளவை ஏற்படுத்தியதாகக் தகவல் வெளியானது.
இதனைத் தொடர்ந்து நேற்றில் இருந்து சீன அதிபர் ஜி ஜின்பிங் அதிபர் பதிவியில் இருந்து நீக்கப்பட்டு விட்டார் என்றும், சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத் தலைவர் பதவியில் இருந்து விலகிவிட்டார் என்றும் தகவல் பரவியது. அதுமட்டுமின்றி ராணுவம் ஜி ஜின்பிங்கை கைது செய்து வீட்டு சிறையில் அடைந்ததாகவும் முன்னணி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனை கண்டித்து தேனியில் குறவர் இன மக்கள் போராட்டம்

 மாலைமலர் : தேனி அல்லிநகரம் வள்ளிநகர் பகுதியில் வசிக்கும் மக்கள் அப்பகுதியில் உள்ள திட்ட சாலையில் பந்தல் அமைத்து தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், நரிக்குறவர் நல வாரியத்தில் குறவர் என்பதை நீக்க வேண்டும். குறவர் என்ற எங்கள் இனத்தின் பெயரை பிற சமூகத்தினரின் பெயரோடு இணைத்து பயன்படுத்தக்கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம்.

பாஜக அண்ணாமலை உதவியாளர் கைது...சங்கிலி தொடர் அண்ணாமலை வரை பாயும்?

May be a Twitter screenshot of 2 people and text that says '22:40 Von) 20% ksay the philosophy of my party is Justice to all. Appeasement to none. ur secularism." Follow Krishna Kumar Murugan @ikkmurugan Social, Political & Economics Observer Believe in Dharma and Karma Modi Views Personal Media & News Company Joined September 2020 625 Following 41.3K Followers Followed by Dr.Senthilkumar. and KhushbuSundar Tweets Tweets & replies Media Like Krishna Kumar Murugan Retweeted K.Annamalai @annamal... 3d Today @BJP4TamilNadu Coimbatore District president Thiru @balaji_utham was arrested; his only'
May be an image of 3 people and people standing

Venkat Ramanujam :   பாஜக தலைவர் உதவியாளர் கைது சொல்லும் செய்தி என்ன
சிறை செல்ல பாஜகவினர் அஞ்ச மாட்டார்கள் என தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை திடீரென ஏன் கூற வேண்டும்..
பிரபல ஊடகம் அட்டைப்படம் போன்று வடிவமைத்து, அதில் அந்த ஊடகம் சொல்லாத செய்தி ஒன்றை சொல்லி போஸ்டராக தமிழ்நாடு முதல்வரை பற்றி அவதூறாக தெருவெங்கும் ஒட்டி இருக்கிறார்கள்.
தமிழ்நாடு போலீஸர் இதன் காரணமாக வழக்கு பதிந்து  அச்சகத்தை விசாரிக்கிறார்கள்.  

தாய், தந்தை, சகோதரனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற அதிமுக பிரமுகர் கோவர்த்தன் மரண தண்டனை ரத்து

கலைஞர் செய்திகள் - ராம்ஜி  : திண்டிவனம், காவேரிப்பாக்கம் சுப்பாராயன் தெருவை சேர்ந்த ராஜு - கலைச்செல்வி தம்பதிக்கு கோவர்த்தனன், கவுதமன் என இரு மகன்கள் உள்ளனர். திண்டிவனம் நகர அ.தி.மு.க மாணவரணி தலைவர் மற்றும் நகர ஐ.டி. பிரிவு செயலாளராக இருந்த கோவர்த்தன், புதிய தொழில் தொடங்க பணம் கேட்டு நச்சரித்தும், பணம் கொடுக்காததால் பெற்றோர் மற்றும் சகோதரன் மீது கோபத்தில் இருந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 2019 மே 15ம் தேதி அதிகாலை 3 மணியளவில் ராஜுவின் வீட்டில் நெருப்பும் புகையும் வந்ததால் அக்கம் பக்கத்தினர் வாசல் கதவை உடைத்து திறந்து சென்று பார்த்த போது ராஜு, கலைச்செல்வி, கவுதமன் ஆகியோர் எரிந்த நிலையில் இறந்து கிடந்தனர்.

அரசர் சார்லஸ் மருமகள் மேகனை விருந்துக்கு அழைக்க மறுப்பு! மகன் ஹாரி விருந்தை புறக்கணித்தார் ராஜ குடும்ப விருந்தில் நடந்தது என்ன?

tamil.oneindia.com- Shyamsundar :  லண்டன்: ராணி எலிசபெத் II மரணத்தை தொடர்ந்து ராஜ குடும்பம் சார்பாக அரண்மனையில் கொடுக்கப்பட்ட விருந்தில் ராஜா சார்லசின் இரண்டாவது மருமகள் மேகன் அனுமதிக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதன் காரணமாக மேகன் கணவர் ஹாரியும் இந்த விருந்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டன் ராஜ குடும்பத்தையே புரட்டிப்போட்ட காதல் சம்பவம்தான் மேகன் – ஹாரி இடையிலான காதல்.
சார்லஸ் – டயானா தம்பதிக்கு பிறந்த இரண்டாவது குழந்தைதான் ஹாரி. இவர் சார்லசின் தம்பி.
ராஜ குடும்பத்தை சேர்ந்த ஹாரி, கடந்த 2016ம் ஆண்டு அமெரிக்காவில் மேகன் மார்கலை சந்தித்தார்.
மேகன் மார்க்கெல் அமெரிக்காவை சேர்ந்த ஹாலிவுட் நடிகை, பெண்ணியவாதி, சமூக சேவகி.

மஹ்ஸா அமீனியின் கொலை - ஈரானிய அரசு வெளியிட்ட போலி வீடியோ

 Rishvin Ismath  :  இலங்கை இந்தியா போன்ற ஜனாநாயக நாடுகளில் சுதந்திரமாக வாழ்ந்து கொண்டு ஈரானின் அராஜக இஸ்லாமிய ஆட்சிக்கு சொம்படிக்கும் அரைகுறைகளும், கூலிக்கு மாரடிக்கும் கோமாளிகளும் ஹிஜாப் அணியாததால் அடித்துக் கொல்லப்பட்ட மஹ்ஸா அமீனி குறித்து பொய்களையும், அவதூறுகளையும், வதந்திகளையும் பரப்பி வருகின்றனர்.
மஹ்ஸா அமீனி இருதயக் கோளாறினால் பயங்கி விழுந்து இறந்து போனதாக ஈரானின் அரசு பொய்யான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது,
அதிகம் எடிட் செய்யப்பட்ட அந்த வீடியோவில் இருப்பது மஹ்ஸா அமீனி என்பதற்கு எவ்வித சான்றுகளும் இல்லை.
குறித்த வீடியோவை BBC மட்டுமின்றி, மஹ்ஸா அமீனியின் குடும்பத்தினர் உட்பட ஈரானிய மக்களே நிராரகரித்து விட்டனர்,