வெள்ளி, 26 மார்ச், 2010


மட்டகளப்பு வவுணத்தீவு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட இருட்டுச்சேலை மடு வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 112 மாணவர்கள் அருந்திய ஆகாரத்தில் நஞ்சுத்தன்மை கலக்கப்பட்டதால் அவசர வைத்திய சிகிச்சை பிரிவுக்கு உட்படுத்தப்பட்டனர். இருட்டுச்சேலை மடு விஷ்னு வித்தியாலயத்தை சேர்ந்த இம் மாணவர்கள் பாடசாலையில் வழங்கப்பட்ட சத்துணவினை அருந்திய பின்னர் வயிற்றிழைவு மற்றும் வாந்தி எடுத்து நோய்க்கு உட்பட்ட பின்னர் மட்டகளப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாக இவ் வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தம் தெரிவித்தார்.
இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் 06 வயதிற்கும் 12 வயதிற்கும் உட்பட்டவர்கள் எனவும் தற்போதைய நிலையில் ஆபத்தான நிலையில் இருந்து அவசர சிகிச்சை நிலைக்கு உட்படுத்தியுள்ளதாகவும் பணிப்பாளர் முருகானந்தன் தெரிவித்துள்ளார்.மேலும் இச் சம்பவம் தொடர்பில் மட்டகளப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : 

வியாழன், 25 மார்ச், 2010

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி


சென்னை: கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள வள்ளலார் கோவிலில் உருவ வழிபாடு நடத்துவதற்குத் தமிழக அரசு விதித்த தடை செல்லும் என்று சென்னை [^] உயர்நீதிமன்றம் [^] தீர்ப்பளித்துள்ளது.

வடலூரில் வள்ளலார் ராமலிங்க அடிகள், சத்திய ஞானசபை என்ற அமைப்பை உருவாக்கினார். இந்த சபைக்கு வருகிறவர்கள் மேற்கொள்ள வேண்டிய வழிபாடுகள் பற்றிய விதிமுறைகள் அனைத்தும் 18.7.1872 அன்று உருவாக்கப்பட்டன.

வள்ளலார் வகுத்த கொள்கைகளின்படி ஜோதி மட்டுமே வணங்க வேண்டும். அதன் அடிப்படையில், சத்திய ஞானசபையில் வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்தன.

இந்த நிலையில், சத்திய ஞானசபையின் பரம்பரை அர்ச்சகராக பணியாற்றும் சபா நாதா ஒளி சிவாச்சாரியார் அங்கு சிவலிங்கத்தை ஏற்படுத்தி அங்கு வரும் பக்தர்களுக்கு லிங்க பூஜை செய்ததாக புகார் [^]கள் வந்தன.

உருவ வழிபாடு கூடாது என்று கூறிய வள்ளலார் அமைத்துள்ள சபையில் சிவலிங்கத்தை உருவமாக வைத்து வணங்கினால் அது வள்ளலாரின் கொள்கைகளை புறக்கணிப்பதாக அமையும் என்று குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

இதுகுறித்து அரசு விசாரணை நடத்தியது. இறுதியில், வள்ளலாரின் கொள்கைகளின்படி அங்குள்ள கருவறையில் ஜோதி மட்டுமே ஏற்ற வேண்டும். வேறு உருவ வழிபாடு அங்கு இருக்கக்கூடாது என்று 18.9.2006 அன்று விழுப்புரம் இந்து அறநிலையத்துறை இணை கமிஷனர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை உறுதி செய்து 30.4.2007 அன்று இந்து அறநிலையத்துறையின் கமிஷனர் மற்றொரு உத்தரவை பிறப்பித்தார்.

இந்த உத்தரவுகளை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சபா நாதா ஒளி சிவாச்சாரியார் 2 மனுக்களை தாக்கல் செய்தார்.

இந்த மனுக்களை நீதிபதி கே.சந்துரு விசாரித்து தீர்ப்பு அளித்தார். அவர் அளித்த தீர்ப்பில்,

தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை சரியாக ஆராய்ந்து பார்த்தால் வள்ளலாரின் கொள்கைகள் புலப்படும். உருவ வழிபாடு கூடாது, அதை புறக்கணிக்க வேண்டும் என்பதையும், தீயை ஜோதி வழியில் வழிபடலாம் என்பதையும் அரசு உத்தரவுகள் வெளிப்படுத்துகின்றன.

வள்ளலார் தொடங்கிய சபையில் மதங்களுக்கு இடம் கிடையாது. ஆனால் மனிதாபிமானத்துக்குத்தான் அங்கு மிகப்பெரிய இடம் அளிக்க வேண்டும். அங்கு சாதி, மத வேற்றுமைகள் கிடையாது. ஜீவகாருண்யம் என்ற மனிதர்கள் மீது காட்டப்படும் அன்பு மட்டும்தான் அங்கு மேலோங்கி நிற்க வேண்டும். அங்கு வன்முறைக்கு இடம் இல்லை. ஆனால், ஏழைகளுக்கும், ஊனமுற்றோர்களுக்கும் பாசமும், பற்றும் காட்டப்படும்.

எனவே, இதன் அடிப்படையில் பார்க்கும்போது அரசு அதிகாரிகள், வள்ளலாரின் கொள்கைகளை சரியாக புரிந்துகொண்டு உத்தரவு பிறப்பித்துள்ளனர். வள்ளலார் உருவாக்கிய பாரம்பரியங்களிலிருந்து அரசு அதிகாரிகள் விலகி செல்லவில்லை. எனவே, அரசு அதிகாரிகள் முரணாக செயல்பட்டார்கள் என்று மனுதாரர் கூறமுடியாது. எனவே, மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று தெரிவித்தார்.

புதன், 24 மார்ச், 2010

கல்யாணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்வது குற்றமல்ல உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி


கல்யாணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்வது குற்றமல்ல, இணைந்து வாழ்வதும் குற்றமல்ல என்று நேற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் தெரிவித்த கருத்துக்களை கிட்டத்தட்ட 5 மணி நேரம் முன்வரிசையில் உட்கார்ந்து மகிழ்ச்சி பொங்க கேட்டாராம் நடிகை குஷ்பு.

தன் மீது தமிழக கோர்ட்களில் தொடரப்பட்ட 22 கிரிமினல் வழக்குகளைத் தள்ளுபடி செய்யக் கோரி குஷ்பு தொடர்ந்த சிறப்பு விடுப்பு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான உச்சநீதிமன்ற பெஞ்ச் பரபரப்பு கருத்துக்களை வெளியிட்டது.

இந்த விசாரணையையும், வக்கீல் விவாதத்தையும் நேரில் காண குஷ்பு கோர்ட்டுக்கு வந்து இருந்தார். சல்வார் கமீஸ், துப்பட்டா அணிந்து சிம்பிளாக வந்திருந்தார்.

கோர்ட்டில் முன் இருக்கையில் உட்காருவதற்கு அவருக்கு இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. வழக்கமாக இங்கு மனுதாரர்கள் அமர வைக்கப்பட மாட்டார்கள். பாதுகாப்பு காரணமாக இங்கு யாரையும் அமர வைக்க மாட்டார்கள். ஆனால் குஷ்புவுக்கு மட்டும் சிறப்பு அனுமதி தரப்பட்டிருந்தது.

அங்கு கிட்டத்தட்ட 5 மணி நேரம் உட்கார்ந்து விவாதத்தை கேட்டார். அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு கருத்து தெரிவித்தபோது அவரது முகத்தில் மகிழ்ச்சி பூத்ததாம்.

நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்களை மிகவும் கவனத்துடன் கேட்டுக் கொண்டிருந்தாராம் குஷ்பு.

அழகிரி: இதுவரை எந்த அமைச்சரும் செய்யாத உர மானியத்தை விவசாயிகளிடமே நேரடியாகக்

கடைசி வரை எனது தலைவர் கலைஞர் மட்டுமே. அவருக்குப் பிறகு யாரையும் தலைவராக ஏற்க மாட்டேன் என்று அறிவித்துள்ளார் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி.

இது குறித்து சமீபத்தில் ஜூனியர் விகடனுக்கு அவர் அளித்துள்ள சிறப்புப் பேட்டி:

கேள்வி: பென்னாகரம் இடைத்தேர்தல் களம் எப்படியிருக்கு?

அழகிரி: தலைவர் கலைஞரின் நல்லாட்சியைப் பற்றி எங்களை நாங்களே எடை போட்டுக்கொள்ள இந்த இடைத் தேர்தல்கள் உதவுது. எங்கள் ஆட்சி குறித்த மக்களின் விமர்சனங்களும், சந்தோஷங்களும், கவலைகளும்தான் எங்களை வழிநடத்திக்கிட்டு இருக்கு. நேற்றைக்கு எம்.எல்.ஏவாக இருக்கறவங்க இன்றைக்கு எதுவும் செய்யாமல், நாளைக்கு தொகுதிக்குள் போக முடியாதுங்கறதுதான் இன்றைய ஜனநாயகத்தின் நிலைமை. அந்தப் பயமும், கவனமும் எப்பவுமே எங்ககிட்ட இருக்கு.

எல்லா இடைத் தேர்தல்களிலுமே மக்களோட ஆரவாரமான வரவேற்பைப் பார்க்கும்போது, 'அப்பாடா, நம்ம தலைவர் செஞ்சிருக்கற நல்ல விஷயங்கள் மக்களைப் போய்ச் சேர்ந்திருக்கு'ன்னு நிம்மதி பெருமூச்சுவிட முடியுது. ஒரே ஒரு விஷயத்தை செஞ்சுட்டு, அதையே அஞ்சு வருஷமும் சாதனையா சொல்லிப் பெருமைப்பட்டுக்கிற ஆட்சியாளர்களுக்கு மத்தியில், தலைவர் தன்னோட சாதனைகளை சில மாதங்களுக்கு மேல் பேச விடறதில்லை. ஏன்னா, அதுக்குள்ள அடுத்த சாதனையை செஞ்சு அதைப் பத்தி பேச வச்சிடுறார்! தலைவரோட சாதனைகளால் பென்னாகரத்தில் கழகத்தோட வெற்றியைத் தடுக்க யாராலும் முடியாது!.

கேள்வி: இடைத் தேர்தல் நேரத்தில் ஆஸ்திரேலியாவுக்குக் கிளம்புகிறீர்களே?

அழகிரி: தேர்தல் களத்துக்குச் சென்றால்தான் அங்கு எனது செயல்பாடுகள் இருக்கும் என்று அர்த்தமில்லை. நான் அங்கு செல்லாமலேயே அமைச்சர்கள் பலரும் பம்பரமாய் தேர்தல் பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். அமெரிக்காவில் இருந்து கொண்டு வீடியோ கான்ஃபரன்ஸ் உதவியோடு சென்னையில் ஆபரேஷன் செய்வதில்லையா? அதேபோன்று ஆஸ்திரேலியாவில் இருந்து கொண்டும் பென்னாகரம் தேர்தல் களத்தை என்னால் கவனிக்க முடியும்.

கேள்வி: பாமக கடும் நெருக்கடி கொடுப்பதால்தான் முதல்வர் கருணாநிதியே நேரடியாகப் பிரசாரத்துக்குச் செல்கிறாராமே?

அழகிரி: யாருக்கு யார் நெருக்கடி கொடுப்பது? இந்தமுறை திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எத்தனையோ இடைத் தேர்தல்களை சந்தித்து விட்டோம். இதில் ஒன்றிலாவது பாமகவினால் குறிப்பிடத்தக்க சாதனையை செய்ய முடிந்ததா? கடைசியாக நடந்த வந்தவாசி இடைத் தேர்தலில்கூட '49-ஓ பிரிவில் வாக்களித்து எங்கள் பலத்தை நிரூபிப்போம்' என சவால் விட்டார் ராமதாஸ். 49-ஓ பிரிவில் மொத்தமே 49 பேர்கூட வாக்களிக்கவில்லை.

'வன்னியர் சமுதாய மக்களுக்காக கட்சி நடத்துகிறோம்...' என்ற ஏமாற்று வார்த்தையை சொல்லி, இனிமேலும் அந்த சமுதாய மக்களை ராமதாஸால் ஏமாற்ற முடியாது. எத்தனையோ வன்னியர் சமுதாய மக்களின் தியாகத்தில் உருவான அந்தக் கட்சியின் மூலமாக சுகபோகம் அனுபவிப்பதென்னவோ ராமதாஸ் குடும்பம் மட்டும்தான். இதனால் பென்னாகரத்தில் பாமகவுக்குத்தான் நெருக்கடி!

மற்றபடி, தலைவர் பிரசாரத்துக்கு போவதென்பது, சாதாரணமான நிகழ்வுதான். தென் மாவட்டங்களில் இடைத்தேர்தல் நடக்கும்போதெல்லாம்கூட தலைவர் பிரசாரத்துக்கு வருவதாகத்தான் சொல்வார். நாங்கள்தான் அவரை வரவேண்டாம் என மறுத்து விடுவோம்.

கேள்வி: அதிமுக எப்படியிருக்கிறது?

அழகிரி: எப்படியிருக்குன்னு கேட்காதீங்க... எங்கே இருக்குன்னு கேளுங்க? ஜெயலலிதா எப்ப கட்சிக்கு லீவு விடுவாங்க, எப்ப கட்சி நடத்துவாங்க என்பதெல்லாம் யாருக்குமே தெரியாது. அந்தக் கட்சியோட தொண்டர்கள் பாவம்...

கேள்வி: தமிழகம் முழுவதும் திமுகவுக்கு எதிராக, தொடர்ச்சியான போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறாரே வைகோ?

அழகிரி: முல்லைப் பெரியாறு பிரச்னைக்காக கேரளாவுக்குச் செல்லும் வாகனங்களை மறிக்கும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தார் வைகோ. அவர் போராட்டம் அறிவித்த தினத்தன்று கேரளாவிலேயே பந்த் அறிவிக்கப்பட... ஒரு சைக்கிளைக்கூட மறிக்க முடியாமல் திண்டாடிப் போனார் வைகோ!.

ஏதாவது ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடத்தியாவது மாற்றுக் கட்சிகளுக்குத் தாவும் தன் கட்சியினரைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைக்கிறார். ஆனாலும், அவரது கட்டுப்பாட்டில் அவரது கட்சியினர் இல்லை. கடந்த முறை உறுதியாக ஜெயிக்க முடியாது என தெரிந்து, பெரிய மனதோடு ஒரு ராஜ்யசபா எம்.பி சீட்டை வைகோவுக்கு ஜெயலலிதா வழங்க... அதை மீண்டும் அதிமுகவிடமே ஒப்படைத்தார் வைகோ. இந்த முறை மீண்டும் அதிமுகவிடம் ராஜ்ய சபா ஸீட் கேட்கும் ஆசையோடு ஜெயலலிதை சந்திப்பதற்காக மாதக் கணக்கில் காத்துக்கிடக்கிறார்...!.

கேள்வி: டெல்லியில் கடந்த முறை நடந்த கேபினட் கூட்டத்தில் பாதியிலேயே நீங்கள் வெளிநடப்பு செய்ததாக செய்திகள் வெளியானதே?

அழகிரி: இப்படியொரு கதை பரவியிருக்கறது எனக்குத் தெரியாதே..!. உண்மையில் அந்த கேபினெட் கூட்டம் பல்வேறு துறைகளிலும் சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்காகக் கூட்டப்பட்டது. அதில், எனது உரத் துறை சார்பாகவும் உர இறக்குமதி, உர மானியம் மற்றும் உர விலை உயர்வு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. உர விலையை உடனடியாக உயர்த்தவேண்டும் என்ற விவாதங்கள் கிளம்பியபோது, நான் குறுக்கிட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஏற்கெனவே, பருவ மழை பொய்த்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் நொந்து போயிருக்கும்போது, உர விலையை உயர்த்துவது என்பது விவசாயிகளை மேலும் துயரத்துக்கு உள்ளாக்கும். அதனால், உர விலையை உயர்த்தக் கூடாது என தலைவரின் சார்பாக ஒரு கோரிக்கையை வைத்தேன்.

அதன் பின்னரும் உர விலையை உயர்த்துவது குறித்து வாதங்கள் தொடர்ந்தபோது, விலையை உயர்த்தக் கூடாது என உறுதியாக எனது கோரிக்கையை எடுத்து வைத்தேன். உண்மையில் நடந்தது இதுதான்.

கேள்வி: ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனிக்கு கடந்த முறை அரசு முறைப் பயணமாகப் போக முடிவெடுத்தபோது, உங்களுடன் பயணம் செய்யவிருந்த குறிப்பிட்ட சிலரின் பின்னணியைப் பார்த்து பிரதமரே அந்தப் பயணத்துக்குத் தடை போட்டதாக செய்திகள் வெளியானதே?

அழகிரி: இப்படி வேற கிளம்பியிருக்காங்களா..? கடந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு அரசு முறைப் பயணம் கிளம்ப முடிவெடுத்த சமயம், நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கவிருந்தது. அமைச்சர் என்ற முறையில் அந்த சமயத்தில் நான் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டியிருந்ததால், அந்தப் பயணத்தை சற்று தள்ளிப் போடும்படி பிரதமர் அலுவலகத்தில் இருந்து கேட்டுக் கொண்டனர். அப்போது தள்ளிப் போடப்பட்ட பயணத்தை இதோ இப்போது செயல்படுத்துகிறேன். இதுதான் உண்மை!.

கேள்வி: டெல்லியிலிருந்து தமிழக அரசியலுக்கு வரும் உங்களின் ஆசை என்னவாயிற்று?

அழகிரி: இப்பவும் நான் தமிழகத்தில்தானே இருக்கேன்! தமிழகத்திலிருந்துதானே டெல்லிக்கு போனேன்! பத்திரிகைகளில்தான் எதையாவது எழுதிக்கிட்டிருக்காங்க. அழகிரியை பொறுத்தவரைக்கும் உள்ளன்று வைத்துப் புறமொன்று பேசுபவன் அல்ல. டெல்லியைவிட்டு வர நான் ஆசைப்பட்டிருந்தால், நானே வெளிப்படையாகச் சொல்லியிருப்பேன்.

என்னைப் பொறுத்த வரைக்கும் மதுரை எம்பியாக மகிழ்ச்சியாக, திருப்தியாக இருக்கிறேன். அதேநேரத்தில் டெல்லியைவிட்டு தமிழக அரசியல் களத்துக்கு வர விரும்பினால், அதனை சந்தோஷமாக வரவேற்பது தலைவர் கலைஞராகத்தான் இருக்க முடியும்..!

கேள்வி: நாடாளுமன்றத்தில் உரத் துறை தொடர்பான விவாதங்களின்போது நீங்கள் மாயமாகி விடுவதாக எதிர்க்கட்சிகள் புகார்கிளப்புகின்றனவே?

அழகிரி: இதுவரை எந்த அமைச்சரும் செய்யாத உர மானியத்தை விவசாயிகளிடமே நேரடியாகக் கொண்டு சேர்க்கும் மாபெரும் திட்டத்துக்கான ஆரம்ப வேலைகளைத் தொடங்கியிருக்கிறேன். இந்தியா முழுவதும் நலிவடைந்து மூடிக்கிடக்கும் எண்ணற்ற உரத் தொழிற்சாலைகளை மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறேன்.

வெளிநாடுகளில் இருந்து உர இறக்குமதியை அதிகப்படுத்தி, உரத் தட்டுப்பாடுகளை முற்றிலும் தவிர்த்திருக்கிறேன். ஏழை-எளிய மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைப்பதற்காக மருந்து கம்பெனிகளுடனும், மருத்துவ ரசாயன கம்பெனிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறேன். இத்தகைய சாதனைகளை மறந்து விட்டு, 'அழகிரி பதில் சொல்லவில்லை' என்பது நியாயமா?

தேள்வி: திடுதிப்பென்று உங்கள் மகன் துரைதயாநிதிக்கு திருமண நிச்சயதார்த்தத்தை முடித்து விட்டீர்களே?

அழகிரி: என்னதான் கட்சி, பதவி என சுத்திக்கிட்டிருந்தாலும் நானும் ஒரு தகப்பன்தானே... எனக்கும் சில கடமைகள் உண்டு. துரையை விரல்பிடித்து நடக்கவைத்த முதல் கடமையில் தொடங்கி, துரை விரும்பிய படிப்பைப் படிக்க வைத்தது, விரும்பிய தொழிலை செய்ய அனுமதித்தது வரைக்குமான எனது கடமைகளை சரியாகவே செய்திருக்கிறேன்.

ஒரு மகனுக்கு தந்தை செய்யும் முக்கிய கடமை, திருமணம் செய்து வைப்பதுதான். அந்தவகையில் நானும் எனது மனைவி காந்தியும் சேர்ந்து ஒரு நல்ல பெண்ணை துரைக்காகத் தேர்ந்தெடுத்தோம். துரையிடம் கேட்டு அவருக்குப் பிடித்து, அதன் பின்பு தற்போது நிச்சயதார்த்தமும் முடிந்துவிட்டது. எனது கடமைகளைத் திருப்தியாக நிறைவேற்றிய மகிழ்ச்சியில் இருக்கிறேன்.

கேள்வி: ஒரு அண்ணனாக கனிமொழியின் எதிர்காலத்துக்கு எந்தவகையில் உதவியாக இருக்கப் போகிறீர்கள்?''

அழகிரி: (பலமாகச் சிரிக்கிறார்) இந்த அழகிரியைப் பொறுத்தவரைக்கும் என்னுடைய எதிர்காலத்தையே நான் முடிவு செய்வதில்லை. காலம் விட்ட வழியில் போய்க் கொண்டிருக்கிறேன். இதில் மற்றவர்களின் எதிர்காலத்தை முடிவு செய்யும் உரிமையும், அதிகாரமும் என் கையில் இல்லை. அவரவர் எதிர்காலத்தை அவரவர்தான் முடிவு செய்ய வேண்டும். அதேநேரத்தில் தனிப்பட்ட முறையில் ஓர் அண்ணனாக கனிமொழிக்கு எனது அன்பும், ஆதரவும் என்றைக்கும் இருக்கும்.

கேள்வி: கலைஞருக்குப் பிறகு திமுகவில் யாரைத் தலைவராக ஏற்றுக் கொள்வீர்கள்?

அழகிரி: எனக்கு 10 வயதிருக்கும்... அப்போதுதான் திராவிட கலாசாரத்தைப் பற்றியும் பெரியாரைப் பற்றியும் தலைவர் என்னிடம் விளக்கினார். அப்போது, பெரியார்தான் எனக்குத் தலைவராகத் தெரிந்தார். அதன் பிறகு அறிஞர் அண்ணாவின் பேச்சும், எழுத்தும் என்னைக் கவர, அண்ணாவைத் தலைவராக ஏற்றுக் கொண்டேன். அண்ணாவுக்குப் பிறகு அப்போதும் இப்போதும் எப்போதும் தலைவர் கலைஞர் மட்டுமே எனக்குத் தலைவர்!.

தலைவர் கலைஞர் இருக்கும்போது, மற்றவர்களைப் பற்றி யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை. இருந்தாலும், தலைவர் கலைஞருக்குப் பிறகு திமுகவில் யாரையுமே நான் தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டேன். தலைவர் கலைஞரின் இடத்தை நிரப்பும் தகுதியும் திறமையும் யாருக்கும் இருப்பதாக நான் நினைக்கவில்லை..!
  Read:  In English 
இவ்வாறு பேட்டியளித்துள்ளார் அழகிரி.

செவ்வாய், 23 மார்ச், 2010

கல்யாணவீட்டு ல் நடந்த சண்டையோ மிகவும் எம்மவர்களை அதிர்ச்சியடைய வைத்தது. இப்படியொரு சண்டைக் காட்சியை சுவிஸ் பொலிஸ்காரர்களே

நம்மட நாட்டில சண்டை இப்பொழுது ஓய்ந்துவிட்டது.      ஆனால் வெளிநாட்டில் வாழும் புலம்பெயர் தமிழர்களிடையே நடக்கின்ற சண்டைகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை.    
குடும்ப சண்டையிலிருந்து,  பிரதேசம்,       குழு,  ஊர், வட்டாரம், சாதி, என ஒருவருக்கொருவர் பகைமை காட்டி, பழைய கோபதாபங்கள்,  நானா?, நீயா? பெரியவர், சின்னவர் என பழைய பஞ்சாங்க கதைகள்பேசி, கங்கணம் கட்டிக்கொண்டு  புலம்பெயர்ந்த நாடுகளில் இன்னும் சண்டை பிடித்துக்கொண்டிருக்கிறார்கள் என நினைக்கும்போது வெட்கப்படவேண்டிய விடயம். ஆனால் இந்த சண்டைகள் இந்த சந்ததிவரை தொடரும்..
நேற்று (21.03.10) சுவிஸ் நாட்டில் 'அறோ' கன்ரோன் என்ற இடத்தில் புங்குடுதீவு மக்களின் கல்யாணவீட்டு   நிகழ்சியொன்றில்  நடந்த சண்டையோ மிகவும் எம்மவர்களை அதிர்ச்சியடைய வைத்தது. இப்படியொரு சண்டைக் காட்சியை சுவிஸ் பொலிஸ்காரர்களே சரித்திரத்தில் சந்தித்திருக்கமாட்டார்கள்.  கிட்டதட்ட 60மேற்பட்ட பொலிசாரும்,   3அம்புலன்சு வண்டிகளும்,   சுவிஸ் பத்திரிகை நிருபர்களும்  அங்கு நடந்த சண்டையில் பிரசன்னமாகியிருந்தார்கள் என்றால் நீங்களோ கற்பணை பண்ணி பாருங்கள் இந்த சண்டையானது எப்படி நடந்திருக்கும் என்று...
புங்குடுதீவை சேர்ந்த,    அதுவும் ஒரேசொந்தக்காரக் குடும்பத்தை சேர்ந்த இரு வீட்டாரின் கல்யாணவீட்டு நிகழ்சியில்தான் இந்த கைகலப்பு நடந்திருக்கிறது.

முன்பு 83, 85களில் புங்குடுதீவார், யாழ்பாணத்தார் என்று சண்டை பிடித்தார்கள். பின்பு படிப்படியாக கல்யாணம் கட்டி பிள்ளை, குட்டி என்று வந்தவுடன் எல்லோரும் ஒதுங்கிகொண்டார்கள். அது மட்டும் காரணமல்ல அன்றைய நேரத்தில் சுவிஸ் பொலிசாரின் கட்டுப்பாடுகள் மிகவும் சாந்தமாக இருந்தது ஆனால் இன்றோ    அயல் நாட்டவரின் மீது சுவிஸ் பொலிசாரின் சட்டதிட்டங்கள் கடுமையாகப்பட்டுள்ளதால் நம்மவர்கள் இப்பொழுது அடக்கி வாசிக்கிறார்கள்.
இப்ப நமது நாட்டில சண்டை முடிந்துபோனதால அதன் தொடர்ச்சியாக இங்கே தொடங்கிவிட்டார்கள் போல்தான் தென்படுகிறது. நேற்றைய தினம் நடந்த சண்டையானது சிங்களவனுக்கோ தமிழனுக்கோ அல்லது யூகோகாரர்களிற்கும் இடையில் நடந்த சண்டையல்ல. ஒரே ஊர்காரர்களிற்கிடையில் (புங்குடுதீவு) ஒரே வட்டாரத்தை சேர்ந்தவர்கள் அதுவும் ஒரே குடும்பத்தை சேர்ந்த சொந்தகாரர்களின் கல்யாண வீட்டில் கலந்துகொள்ள வந்தவர்களிற்கிடையில் நடந்த சண்டையாகும்.
நோர்மலாக கல்யாண வீடு, சாமத்திய வீடு, பிறந்தநாள் வீடு போன்ற நிகழ்சிகளில் ஆம்பிளைகள் நல்லா குடித்து போட்டு அவர்களின் வீரத்தை காட்டுவார்கள் அது வழமையானதுதான். இப்பொழுதெல்லாம் கல்யாணவீடு போன்ற நிகழ்சிகளிற்கு குடிப்பதற்கு யூஸ் போத்தில், தண்ணி போத்தில்  வாங்குவதைவிட விஸ்கி போத்தில்கள்தான் கூடுதலாக வாங்குகிறார்கள். பியர் இருக்கு குடிக்கிறீங்களா என்று கேட்டால் என்ன பகிடியா விடுகிறீங்க என்று கேட்கிற காலம் வந்துவிட்டது ஒன்லி விஸ்கிதான் இப்ப எல்லாரும் குடிப்பாங்களாம்.  தொடக்க காலங்களில்  5 போத்தில் அல்லது 10போத்தில் வாங்கினவர்கள். இப்ப சொல்லுறாங்கள் அண்ணை 50 போத்தில் காலியாகிவிட்டது என்று. அதுவும் பிறந்த நாள் விழா என்றால் சொல்ல தேவையில்லை.
நேற்று நடைபெற்ற சண்டையோ "மது" போதையால் வந்த சண்டையல்ல மாறாக "மாதுக்களால்" வந்த சண்டையாகும்.
இந்த சண்டையோ மிகவும் சுவாரிசமான சண்டையாகும். ஏன்எனில் அங்கு நின்ற ஆம்பிளைகளும் ஆம்பிளைகளும் எதிர்த்து சண்டை பிடித்தார்களாம்,   பொம்பிளைகளும் பொம்பிளைகளும் எதிர்த்து சண்டை பிடித்தார்களாம். இதில் என்ன விசேசமான விடயம் என்றால் நீங்கள் நினைப்பதுபோல் பொம்பிளைகளும் பொம்பிளைகளுக்கும் இடையில் நடந்த சண்டை வெறும் வாய் சண்டையல்ல.
பொம்பிளைகள் முதலில் கடும் சுத்தமான (தூசணம்) நல்ல தமிழில் வாய் சண்டையை தொடங்கினாளவையாம் தீடீரென கைகலப்புக்கு மாறி, கட்டியிருந்த சாறிகளையும் ஆளுக்கு ஆள் பிடித்து இழுத்து நின்று அடிபட்டவளவையாம். அங்கு நின்றிருந்த அமைதியான பெண்கள் (நூற்றுக்கு மேற்பட்ட), இங்கு பிறந்து வளர்ந்த பிள்ளைகளும் மிகவும் பயந்து போய் யாபேரும் ஒன்றாக  ஐயோ, ஐயோ எனக் குளறிக் கூக்கிரலிட்டு ஓரே நேரத்தில் பொலிசுக்கு ரெலிபோன் செய்தார்களாம்.
கல்யாணவீட்டு மண்டபத்துக்கு பக்கத்திலிருந்த சிறிய பொலிஸ் நிலையத்தார் ஓரேநேரத்தில் இவ்வளவுபேர் அழுதுகுளறி ரெலிபோன் செய்ததால் அவர்களும் சரியாக பயந்துபோய் அந்த மாநிலம் முழுவதும் தகவல் அனுப்பி கிட்டதட்ட 10-20 கார்களில் கல்யாண மண்டபம் நோக்கி விரைந்து வந்துதானாம் கலவரத்தை அடக்கியவர்கள்.
பொம்பிளைகள் போட்ட சண்டையை (அந்த கண்கொள்ளா காட்சியை) கலகம் அடக்க வந்த பொலிஸ்காரர்களோ கண்டு அதிசயத்து போனாங்களாம். பொலிசார் வந்த பிறகும் பெண்டுகள் சண்டையை நிறுத்தவில்லையாம். நாலைந்து பொம்பிளையளை பொலிஸ்காரர் அவர்களின் கைகளை பின்னால் பிடித்து கைவிலங்குபோட்டு ஒரு மூலையில் கொண்டுபோய் கடுமையாக எச்சரிகை செய்து இருத்திய பிறகுதானாம் பொம்பிளைகளின் சண்டை அடங்கியது. சுவிஸில் முதல்முறையாக தமிழ் பெண்களுக்கு பொலிசார் கைவிலங்கு போட்டதை இந்த நிகழ்ச்சியில்தானாம் பார்தவர்களாம் என அங்கு போனவர்கள் சொல்லுகிறார்கள். அதோடல்லாது நிறைய ஆம்பிளைகளையும் கைவிலங்கு போட்டு பொலிசார் கொண்டுபோனவங்களாம்.
மாப்பிளையும், பொம்பிளையும் போட்டிருந்த மாலைகளையும் கழட்டி எறிந்துவிட்டு தாங்கள் தப்பினால் காணும் என்ற ரீதியில் காரில் ஏறி 'எஸ்கேப்' ஆகிவிட்டாங்களாம். நல்ல காலம் இந்த சண்டை கல்யாணவீட்டு நிகழச்சி இடையில் நடக்கும்போது தொடங்கியிருக்கிறது. அல்லாவிட்டால் மொய் கொடுக்கிற கட்டத்தில் நடந்திருந்தால் யாராவது மொய்பெட்டியை அடித்துகொண்டு போயிருப்பாங்கள். இந்த சண்டையில் சில பெண்கள் தாங்கள் போட்டிருந்த தாலிக்கொடியிலிருந்து பல நகைகளையும் இழந்து தவித்ததாக அங்கு போனவர்கள் சொல்லுகிறார்கள்.
அந்த நிகழ்சியில் கலந்துகொண்ட சில ஊர்க்காரர்களை நாம் விசாரித்தபோது தெரிந்துகொண்டவைகள்....
புங்குடுதீவு மக்கள் சுவிஸில் நிறையபேர் வாழ்கிறார்கள். 30வருடத்தில் எத்தனையோ ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகளை எங்கள் ஊர்காரர்கள் நடத்தியிருக்கிறார்கள். இப்பொழுதும்,  ஒவ்வொரு சனி, ஞாயிற்று கிழமைகளிலும் தவறாமல் புங்குடுதீவு மக்கள் எதாவது ஒரு நிகழ்ச்சியை நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் இன்றுதான் முதல்முதலாக இப்படியொரு சண்டையை பார்தோம் என்கிறார்கள். ஆண்கள் யாராவது சண்டை பிடித்திருந்தால் அவர்களை நாங்கள் மண்டபத்துக்கு வெளியில் கொண்டுபோய் விட்டிருப்போம். இந்த நாகரிக வளர்ச்சியடையாத, படிப்பறிவில்லாத சிலபெண்கள் சண்டை பிடித்ததால்தான் இவ்வளவுதூரம் பிரச்சனை வந்தது.
சண்டையில் கலந்துகொண்ட இந்த வட்டாரத்து பெண்களும் சரி, ஆண்களும் சரி ஊரிலேயே இப்படிதான் ரவுடிகளாக இருப்பார்கள் எனவும்,(அவர்கள் குறித்த வட்டார இலக்கத்தை தவிர்த்துள்ளோம்) இங்கு வெளிநாட்டுக்கு வந்தபிறகும் இவங்கள் திருந்தவில்லை என அங்கு நின்ற மற்றைய வட்டாரத்தினர்கள் ஆதங்கப்பட்டு சொன்னார்கள். இப்படியான பிரச்சனைகள் வராமல் இருக்கவேண்டும் என்றால் ஊருக்குள்ளும், சொந்தங்களுக்குள்ளும் கல்யாணம் பண்ணகூடாது.
பாருங்கள்! எவ்வளவோ காசுசெலவழித்து, அழைப்பிதல் அடித்து, ஊருக்கு எல்லாம் 'காட்' கொடுத்து, எவ்வளவோ ஒழுங்குகள் செய்து கல்யாணம் செய்வது என்பது வாழ்வில் ஒருமுறைதான்.  இந்த சுவிஸ் நாட்டில் இருந்து இப்படியொரு சம்பவம் நடந்திருக்கிறது. இதை எங்களால் நம்பவே முடியவில்லை. இந்த சம்பவத்தால் முழு புங்குடுதீவு மக்களுக்கும் அவமானம் என அங்கு நின்ற  பலர் பேசிகொண்டிருந்தார்கள்.
தகவல் தந்தவர்
கி.சத்தியா-சுவிஸ்
மும்பையில் கடந்த 2 வருடங்களாக அண்டை வீட்டாராலும், சகோதரனாலும் கற்பழிக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாகி வந்த 12 வயது சிறுமி மீட்கப்பட்டுள்ளார்.

அந்த சிறுமி குஜராத்தைச் சேர்ந்தவர் ஆவார். 9 மாத வயதாக இருந்தபோதே மும்பையில் உள்ள தனது சித்தி ஜோத்சனா பபட் வீட்டில் விடப்பட்டார். இவரது தாயும், தந்தையும் விவாகரத்து செய்து விட்டு மறு கல்யாணம் செய்து கொண்டு பிரிந்து விட்டனர். இதனால் இந்தச் சிறுமி ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டார்.

இந்த நிலையில்தான் சித்தியின் மகன் (சிறுமியின் அண்ணன்) தவல் பபட் மற்றும் அண்டை வீடுகளில் வசிக்கும் சில காமுக ஆண்களால் இந்த சிறுமி கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் கற்பழிப்பு கொடுமைக்குள்ளாக்கப்பட்டார்.

2008 ஆகஸ்ட் மாதம் முதன் முதலில் தவல் பபட் சிறுமியைக் கற்பழித்தான். இதுகுறித்து தகவல் வெளியில் ரகசியமாகப் பரவியுள்ளது. இதையடுத்து 71 வயதுக் கிழவன் ஒருவன், சிறுமியை மிரட்டி கற்பழித்துள்ளான்.

இதேபோல மேலும் பலரும் சிறுமியை சூறையாடியுள்ளனர். இந்த அக்கிரமங்களை எல்லாம் தவல் பபட் செல்போனில் படமாக்கி வைத்துள்ளானாம். அதைக் காட்டி மிரட்டி சிறுமியை பேச விடாமல் செய்து வந்துள்ளான்.

இந்த நிலையில்தான் ஜோத்சனா வீட்டினருக்கு இந்த அக்கிரமச் செயல் தெரிய வந்து அதிர்ந்து போயுள்ளனர். இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்தனர். தற்போது அந்த சிறுமி மீட்கப்பட்டுள்ளார். அவரைக் கெடுத்ததாக 71 வயது கிழவனார் உள்பட நான்கு பேரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

தவல் பபட் உள்ளிட்ட ஐந்து பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சிறுமியை, தவல் முதல் முறையாக கற்பழித்தபோது கத்தியைக் காட்டி மிரட்டிக் கற்பழித்துள்ளான். அதன் பின்னர் தனது பெற்றோர் வீட்டில் இல்லாத நேரம் எல்லாம் அக்கிரமமாக நடந்து கொண்டுள்ளான் தவல்.

ஒருமுறை தவலும், அவனது நண்பன் ராஜு சர்மா என்பவனும், சிறுமியை குர்லாவில் உள்ள ஒரு லாட்ஜுக்குக் கூட்டிக் கொண்டு போய் கற்பழித்துள்ளனர். அப்போதுதான் அதை செல்போனில் படமாக்கியுள்ளான் தவல்.

அதன் பின்னர் மற்ற 7 பேரும் (அனைவரும் அண்டை வீடுகளில் வசிப்பவர்கள்) சிறுமியை சீரழித்துள்ளனர்.

senguntha hindu college student died

ey;Y}u; nrq;Fe;jh ,e;Jf; fy;Y}up ikjhdj;jpy; ,lk;ngw;w iffyg;gpy; gLfhakile;j khztd; ,uz;L ehl;fspd; gpd; capupoe;Js;shu;. fle;j rdpf;fpoik khiy nrq;Fe;jh ,e;Jf; fy;Y}up ikjhdj;jpy; ,isQu;fs; fpupf;nfl; tpisahbf; nfhz;bUe;j Ntis> mq;F te;j rpyu; fpupf;nfl; tpisahbf; nfhz;bUe;j fpwp];Njhgu; vDk; khztiuj; jhf;fpdu;. ,jpy; gyj;j fhakile;j fpwp];Njhgu; gpNwkd; aho;g;ghzk; itj;jparhiyapy; mDkjpf;fg;gl;l gpd; rpfpr;ir gydpd;wp New;W Kd;jpdk; khiyapy; capupoe;jhu;. ey;Y}u; itkd; tPjpiar; Nru;e;j 20 tajhd fpwp];Njhgu; jiyapy; gykhd mbgl;ljpdhy; ,uj;jk; fz;ba epiyapNyNa capupoe;jjhf itj;jparhiyapy; njuptpf;fg;gl;lJ. ,r;rk;gtj;ijaLj;J Nfhg;gha; nghyp]hu; re;Njfj;jpd; Ngupy; Itiuf; ifJ nra;J ePjpkd;wj;jpy; New;W M[u; nra;jdu;. ,tu;fspy; %tiu vjpu;tUk; 24 Mk; jpfjp tiu tpsf;fkwpaypy; itf;FkhW ePjpgjp cj;jutpl;lhu;. ,J njhlu;ghd Nkyjpf tprhuizfis Nfhg;gha; nghyp]hu; jw;NghJ Nkw;nfhz;L tUfpd;wdu;. 

திங்கள், 22 மார்ச், 2010

Thankar bachan to Radhamohan

jq;fu;gr;rhd; Kjy; uhjhNkhfd; tiu
(Xtpah)
tsu;e;J tUk; jkpo; ,af;Fdu;fspy; Fwpg;gplj;jf;ftu; jq;fu;gr;rhd;. jkpou; rhu;e;j murpaiyj; J}f;fpg; gpbg;gjw;F gjpyhf jkpo; rhu;e;j murpaiyj; J}f;fpg; gpbf;Fk; NghJ Neuf;$ba rpf;fy;fs; ,tUf;F khngUk; jilf;fw;fshfp tpLfpd;wd. njd;wy; Nghd;w glq;fspy; ntspg;gLfpd;w ,tu;fsJ Kfk;> ngz; vg;gb ,Uf;f Ntz;Lk; vd;W ,tu;fs; Mirg;gLfpwhu;fs; vd;gijj; njupag;gLj;JfpwJ. ,tu;fs; xd;iwj; njupe;J nfhs;s Ntz;Lk;. epr;rakhf ,dp ngz; mg;gbnay;yhk; ,Uf;fg; Nghtjpy;iy. ,tu;fs; nkhopapy; vjhu;j;jk; vd;gJ fpuhkj;J igadpd; fpope;j lTrUk; rpWkpapd; ,ul;ilr; rilAk; kl;Lk;jhdh? khwptUk; r%f kjpg;gPLfs; ,y;iyah? jkpou; eyd; cupik Fwpj;j rpe;jidfisj; jkpo;j; jpiuAyfpy; NgRtjw;F Ml;fspy;yhj fhyj;jpy; jq;fu;gr;rhd; kpfTk; Kf;fpakhdtu;jhd;. Mdhy; ngz; jkpo;f;fyhr;rhuk; gw;wpa mtuJ ghu;itfis kWkjpg;gPL nra;J nfhz;lhy;> mtuhy; ey;y ngz; rpj;jpuq;fis cUthf;f KbAk;. cjhuzkhf mofp glj;jpy; tUk; Njtahdpapd; Fzr;rpj;jpuk; me;j tifapy; ey;ynjhU gilg;Ng. mtUila rpjk;guj;jpy; Xu; mg;ghrhkpAk; ngz;fs; ghu;itapy; ey;ynjhU glkhFk;. ,d;iwa eLj;juf; FLk;gq;fspy; mNeff; FLk;gq;fspy; cs;s ngz;fspd; epiyiar; nrhd;dJ me;jg; glk;.
,af;Feu; [dehjd; nghJTilikr; rpj;jhe; jg; gs;spapypUe;J te;jpUg;gtu;. mtuJ ,aw;if jpiug;glk; fhjy; gw;wpa Xu; mofhd rpj;jpuj;ij je;jpUe;jJ. mijtpl fhjypy; ngz;Zf;Fupa cupikiaAk; kupahijiaAk; kpf mOj;jkhfg; gjpT nra;jpUe;jJ me;jg; glk;. mj;jpiug; glj;jpd; trdq;fs; ngz;zpa Neak; nfhz;litahf mike;jpUe;jd. fij tpthjf; FOtpy; ,lk; ngw;w ,sNtdpy;> ghnty;> rq;fu;> v];. fz;zd; MfpNahu; ghuhl;Lf;Fupatu;fshtu;.
tp. NrfuJ jpiug;glq;fs; FLk;g rl;lfj;ij kPwpaitay;y vd;w NghjpYk;> mf;FLk;g mikg;gpy; Mz;> ngz;Zf;fhd rdehaf cupikfisg; gw;wp kpf vspikahf tpthjpf;fpw glq;fs;. ,tuJ fijapy; tUk; ngz; ghj;jpug; gilg;Gfs; rpf;fypy;yhj vspa ghj;jpug; gilg;Gfshf ,Ue;j NghjpYk;> ntFkf;fs; kj;jpapy; ,d;W Njitg;gLfpd;w ngz;fSf;fhd cupik gw;wp mbg;gilg; ghu;itiaj; jUfpd;wd vd;gijf; Fwpg;gpl Ntz;Lk;.
,d;W gy ntw;wpg; glq;fspd; ,af;Feuhf tyk; tUgtu; Nrud;. ngupa mstpy; ntw;wp ngw;w glk; Ml;Nlhfpuhg;. mtUila jpiug;glf; fU vd;gJ eLj;ju tu;f;ff; FLk;gq;fisr; Rw;wpr; Roy;fpwJ. nghUshjhuKk; twl;Lf; fTutKk; jhd; mtu;fsJ jiyaha gpur;ridfs; vd;gij vLj;Jf; fhl;LtNj mtuJ ,yf;fhf ,Uf;fpwJ. kw;wgb mbg;gilr; rl;lfq;fs; rupahfNt ,Uf;fpd;wd vd;w ek;gpf;ifia mtu; glq;fs; jUtjhy; ,tuJ ngz; fjhghj;jpuq;fs; r%f thu;g;GfshfNt mike;J Nghfpd;wd.
uhjh Nkhfdpd; nkhop jpiug; glj;jpy; tUk; fjhehafp> ve;j thu;j;ijfSNk ,y;yhky; xU jd;dk;gpf;if epiwe;j ngz; rpj;jpuj;ij cUthf;FtJ cz;ikjhd;. kidtpia mbf;Fk; xU fztid NfhghNtrj;Jld; jpUg;gp mbf;Fk; kpul;ly; mbAld; mwpKfkhfpw fjhehafp> filrpapy; Mz;fs; vy;NyhUNk nfl;ltu;fs; ,y;iy vd;w GupjYld; jd; fhjydpd; md;ig Vw;Wf; nfhs;tNj fij. Neu;ghu;itapy; ,J kpfTk; ,urpf;fj;jf;f xU fijjhd;. NkYk; ,q;F Mz; fjhehafd; GJ mwpKfk; vd;gjhYk; N[hjpfh Vw;fdNt jd;id ep&gpj;Jf; nfhz;bUf;fpw rpwe;j ebif vd;gjhYk; ngz;zpd; MSik J}f;fp epw;gJ kWf;fg;glhj cz;ikNa. MapDk; fij mbg;gilapy; etPdg; ngz;> ,r;r%fj;jpd; kPJ nfhs;fpd;w Xu; cs;shu;e;j epahakhd Nfhgj;ij Mzhjpf;f rl;lfq;fis rw;Nw jsu;j;jpf; nfhz;L rkhjhdg;gLj;Jfpd;w Ntiyiaj;jhd; nra;fpwJ. nkhop jpiug;glj;ij kdjhug; ghuhl;ba gpd;Dk; ehk; filrpahf vOj Ntz;ba thu;j;ijfshf ,Ug;git Ntwhf ,Uf;fpd;wd. ,d;iwa cz;ikahd Njit ngz;fSf;F Miz epuhfupf;fpd;w typikiaj; jUfpd;w glq;fs;jhNd jtpu> mtid VjhtnjhU fhuzk; nfhz;L kPz;Lk; gw;wpf; nfhs;s itf;Fk; glq;fsy;y.
nghJthf ,ilf;fhyj;Jld; xg;gpLk;NghJ ngz;zpd; ghj;jpug; gilg;Gfspy; vy;yhg; glq;fspYNk eilKiwastpy; jw;rhu;G gilj;jtshf ,d;iwa ngz; fjhghj;jpuq;fs; khwpj;jhdpf;fpwhu;fs;. Mdhy; ,k;khw;wk; ngUk;ghYk; mtu;fsJ eil> cil> ghtid kw;Wk; ciuahly; njhlu;ghdjhf ,Uf;fpwNjay;yhky; ngupa mstpy; ,ay;G khw;wkhf ,y;iy vd;gJld;> ,ilf;fhyj;jpy; te;j jpiug; glq;fs; NkYk; gpd;Df;F nrd;W kPz;Lk; fjhehaf gpk;gq;fSf;Fs; tpOe;Jtpl;lJ Nghy;jhd; Njhd;WfpwJ.
rup> Fiwe;jgl;rk; ,e;j epoy;fs;> ep[j;ij Kw;Nghf;fhfg; gilf;fhtpl;lhYk; $l guthapy;iy. ,Uf;Fk; ep[j;ijahtJ gpujpg ypj;jpUf;fpwhu;fsh? vd;w Nfs;tpia vOg;gpg; ghu;j;jhy; fpilf;fpd;w gjpy; vjpu;kiwahfj;jhd; ,Uf;fpwJ. ngz;fs; Ntiyf;Fg; Nghfj; Jtq;fp ,uz;L %d;W jiy Kiwfs; Mdgpd;Dk; $l ,tu;fspd; fjhehafpfs; Vd; ,d;Dk; ntl;bj;jdkhf ^al; kl;LNk ghbf; nfhz;bUf;fpwhu;fs;?
Ntiyf;Fg; Nghfpd;w ,lj;jpy; Mk;gpis> nghk;gpis Nriyiag; gpbj;J ,Oj;jhd; vd;gijf; jhz;b vt;tsT J}uk; ,tu;fshy; tuKbe;jpUf;fpwJ? Vd; xU ,uhkhkpu;jk; mk;ikahiuAk;> rj;jpathzp Kj;JitAk;> Kj;J yl;Rkp mk;ikahiuAk;> ehfk;ik ahiuAk;> kzpak;ikahiuAk; ,e;jj; jpiug;glq;fshy; gjpT nra;a Kbatpy;iy? ,g;ngz; kzpfisnay;yhk; fjhghj;jpukhf gilf;ff;$ba nkhopNa ekJ jpiuj;Jiwapy; tsu;r;rpailatpy;iy vd;Nw Njhd;WfpwJ.
(Xtpah)

உசுப்பேற்றி உணர்ச்சி பூர்வமான பேச்சுக்களின்

தனித் தமிழீழம் என்று பிளிறிக் கொண்டிருந்த யானை தன் தலையில் மண்ணை வாரிப்போட்டு வருடம் ஒன்றாகப் போகிறது. “எங்கட பொடியள் எங்களுக்கெண்டு ஒரு நாடெல்லே எடுத்துத் தரப் போறாங்கள் " என்று பார்த்துப் பார்த்துப் பூத்துப் போன விழிகளுடன் புதைந்து போன மக்கள் ஆயிரம்இ ஆயிரம். சர்வதேச அரசியலைக் கணக்கெடுக்க வல்லமை அற்றவர்கள் உசுப்பேற்றி உணர்ச்சி பூர்வமான பேச்சுக்களின் மூலம் உக்கிரமான போரில் தம்மிடமிருந்த மீதமான தமிழ் நிலத்தையும் பறிகொடுத்து விட்டு மாயமாகிப் போன நிலை. மக்களின் விடுதலை என்பதன் வரைவிலக்கணத்தை அறியாமல் பயாஸ்கோப்புப் போராட்டம் நடத்தி விட்டுஇ சரி இனிப் படம் முடிந்து விட்டது வீட்டுக்குப் போங்கள் என்று கூறுவதைப் போல அனைத்தையும் தொப்பென்று போட்டு விட்டுத் தலைதெறிக்க ஓடி விட்ட நிலை.


தம்மைத் தாமே சுயவிமர்சனம் செய்து கொள்ளும் உரிமை மறுக்கப்பட்டவர்களின் தலைமையில் உங்களின் உரிமைகளை வென்றெடுப்போம் என்னும் கனவில் கண்களைக் கட்டித் தமிழ்மக்களை அழைத்துச் சென்று பாதாளத்தில் தள்ளி விட்ட நிலை.



இவை நடந்து முடிந்தவை..

ஈழத்துத் தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர்களது அரசியல் நிலை தெரிந்தோ தெரியாமலோ பிரபாகரனின் மறைவுக்கு முன்இ மறைவுக்குப் பின் என்று இரண்டு வெவ்வேறு காலக் கண்ணாடிகளினூடாக பார்க்கப்பட வேண்டிய துரதிருஷ்ட நிலை.

பிரபாகரன் இறந்து விட்டாரா? இல்லையா? என்ற ஆரய்ச்சிக்குரிய வேளையல்ல இது. எமது இனம் விடுதலை என்னும் இலக்கை நோக்கி அழைத்துச் செல்லப்பட்ட பாதையின் சுவடுகளை அவதானமாக ஆராய வேண்டிய நிலை.

எமது இன்றைய நிலைக்கு பிரபாகரன் என்னும் தனி மனிதன் அன்றித் தமிழீழ விடுதலைப் புலிகள் என்னும் தனிப்பட்ட இயக்கம் மட்டும் தான் காரணமா?

பிரபாகரனும் ஒர் தமிழன்னை ஈன்றெடுத்த பிள்ளை தான்இ கண்ணை மூடிக்கொண்டு மூளைச்சலவைகளினா;;ல் பிரபாகரனின் பின்னே அணிவகுத்துச் சென்று தம் அன்னை நாட்டுக்காக தமதுயிரை அர்ப்பணித்த இளம் தளிர்களும் எம் சகோதரர்கள் தான்.

பிரபாகரன் தன்னுடைய வசதியான வாழ்க்கைக்காக ஈழப் போராட்டம் என்னும் பாதையைத் தேர்ந்தெடுக்கவில்லை. ஏனெனில் அப்போதைய காலகட்டத்தில் அவரையொத்த பல 17 வயது இளைஞர்கள் தமது வசதியான வாழ்க்கைக்குத் தேவையான வகையில் நாட்டை விட்டு வெளியேறி மிகவும் மகிழ்வாக வாழ்ந்திருக்கிறார்கள்.

ஓர் தூயஎண்ணத்துடன் தனது பயணத்தை ஆரம்பித்த பிரபாகரன் என்னும் 17 வயது இளைஞன் தன் தலையில் தானே மண்னை அள்ளிப் போட்டுக்கொள்லக்கூடிய ஓர் நிலைக்கு மாற்றம் அடைந்ததன் காரணம் என்ன?

நாமேதான் . . . .

இதை என்று நாம் உளமார ஏற்றுக்கொள்ளுகிறோமோ அன்றுதான் நாம் உண்மையான பாதையில் எமது பயணத்தை ஆரம்பிக்க முடியும்.

விடுதலைப் புலிகள் மட்டுமல்ல ஈழப்போராட்டத்தில் குதித்திருந்த அனைத்து இயக்கங்களுமே சுயவிமர்சனத்தை ஏற்றுக்கொள்ளத் தயங்கினார்கள் என்பதும்இ சுயவிமர்சனம் செய்தவர்கள் அவர்களின் உயிர்களை உட்கொலைகள் மூலம் இழந்தார்கள் என்பதுவும் மறுக்கப்படமுடியாத சரித்திர உண்மைகள்.



ஒரு விடுதலைப் போராட்டத்தில் அரசியல் அங்கம்இ அதன் துப்பாக்கி ஏந்தும் ஆயுத அங்கத்தை விட பலம் வாய்ந்ததாக அமையவேண்டும் என்பதைப் புலிகள் உணரவில்லை என்பதுவே உண்மை.

பிரபாகனுக்கு இருந்த சர்வதேச அரசியல் அறியாமையையும்இ தூய விடுதலை வேட்கையையும் அவரைச் சுற்றியிருந்த அரசியல் அறிவுமிக்க சுயநலவாதிகள் தவறாக வழிநடத்தி விட்டார்கள் என்பதுவே உண்மை.

ஒரு உதாரணத்திற்குஇ கடவுள் மீது கண்மூடித்தனமான நம்பிக்கை வைத்துள்ள ஒருவன் ஒரு விரதம் பூண்டு தனது கண்களை கட்டிக் கொண்டே இருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனைச் சுற்றியிருப்பவர்களிலேயே இரவையும்இ பகலையும்இ கால நிலையையும் அறிய வேண்டிய நிலையிலிருப்பவனுக்கு எப்போதும் பகல் என்றே சொல்லிக் கொண்டிருந்தல் எப்படி இருக்குமோ அப்படித்தான் பிரபாகரனினதும்இ அவரைச் சுற்றியிருந்தோரின் நிலையுமிருந்தது.

சரி பிரபாகரன் இப்போது ஈழம் என்னும் நாடகமேடையில் இருந்து மறையவில்லை விரட்டப்பட்டுவிட்டார் என்றே வைத்துக் கொள்வோம். இலங்கை ஜனாதிபதியாக மீண்டும் ராஜபக்சே தெரிவாகி விட்டார்.

அடுத்து இப்போ பாராளுமன்றத் தேர்தல் தலைதூக்குகிறது . தமிழ் ஊர்களிலெல்லாம் பிரச்சார மேடைகளில் " கேட்டதெல்லாம் நான் தருவேன் " என்னும் பிரச்சாரம் ஒலிப்பெருக்கிகளிலெல்லாம் ஓங்காரமாய் ஒலிக்கிறது.

அவசரம்இ அவசரமாகப் புலம் பெயர் தமிழ்ச் சகோதர சகோதரிகள் தமது ஊருக்குச் செல்லும் படலம் ஆரம்பமாகியுள்ளது.

போய் வந்தவர்களின் கருத்துக்கள் இருவகையானவை 1) ஜய்யய்யோ தமிழீழம் என்னும் பேச்சையே இனி எடுக்க வேண்டாம் நாம் பட்டதெல்லாம் போதும் பட்டினத்தாரே என்று ஓலமிடுகிறார்கள் தமிழ் மக்கள் என்பது ஒருவகை 2) தமிழ் நிலங்களிலெல்லாம் சிங்களக் குடியேற்றம்இ தமிழ்ப் பாடசாலைகளில் பிக்குமார் சிங்களம் கற்பிக்கிறார்கள் போச்சுடா ! நம் நிலம் பறி போச்சுடா ! என்ற ஓலத்துடன் வரும் மக்கள் மறுவகை..

சிங்கள மக்கள் எமது நிலங்களில் அத்துமீறிக் குடியேறுகிறார்கள் என்று ஓலமிடும் அதே புலம்பெயர் மக்கள் அவசரம் அவசரமாக தமக்குச் சொந்தமான வடபகுதி நிலங்களை யார் அதிக விலை தருகிறார்களோ அவர்களுக்குத் தாரை வார்த்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

வெறும் வாய்ப் பேச்சுக்காகவோ என்னவோ இ மஹிந்தாவும்இ அவர் சார்ந்த அமைச்சர்களும் " புலம் பெயர் தமிழ் மக்களே ! வாருங்கள் வந்து உங்கள் வடஇகிழக்குப் பகுதிகளை எம்முடன் சேர்த்து மீளக்கட்டியெழுப்பும் பணியில் இணையுங்கள் " என்று அறைகூவல் விடுத்தனர்.

இத்தனை காலமும் "போர்இ போர்இ . . . புலிகளே பொருதுங்கள் எமது மண்ணை சிவந்த மண் ஆக்குங்கள் " என்று கத்திக் களைத்து விட்ட நாம் இப்போது உண்மையானஇ நேர்மையான உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுப்பவர்களாயிருந்தால் என்ன செய்யவேண்டும் ?



மகிந்தாவின் அழைப்பு போலியா ? அல்லது உண்மையா ? என்பதை பரீட்ச்சித்துப் பார்க்கும் மனவலிமை கொள்ள வேண்டும். எமது போர்ப்பசிக்குத் தம்மை இரையாக்கிய எமது இன்னுயிர் தொப்புள் உறவுகளின் சுபீட்சமே தற்போது எம்முன்னால் காத்திருக்கும் பணி என்பதை ஏற்று எமது பகுதிகளை மீளக் கட்டியமைப்பும் பணிகளில் ஈடுபட வேண்டும்.



ஆனால் இன்றும் புலம்பெயர் நாடுகளில் என்ன செய்து கொண்டிருக்கிறோம் ? கைகளில் விஸ்கிக் கிண்ணத்துடன் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா ? இல்லையா ? அவர் எப்போது நம்முன்னே காட்சியளிக்கப் போகிறார் என்னும் வீண் விவாதங்களில் ஈடுப்பட்டுக் கொண்டுஇ நாடு கடந்த தமிழீழ அரசு என்னும் மற்றொரு வேதாளத்தை முருங்கை மரத்திலிருந்து இறக்கிக் கொண்டிருக்கிறோம்.

பல்வேறு அரசியல் கட்சிகளாக பிரிந்து நின்று இன்னமும் எமது எஞ்சியுள்ள புலி விசுவாசத்துக்காய் எமது மக்களை பலியாக்க எத்தனிக்கிறோம்.

சமீபத்தில் இலங்கை வந்த நிருபமா ராவ் என்ன கூறினார் " அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஓரே கோரிக்கையை முன்வைப்பதுவே இந்திய அரசாங்கம் தீர்வை வலியுறுத்த நீங்கள் செய்யக்கூடிய முக்கியமான செய்கை " என்பதுவே.



அது மட்டுமா ?



சமீபத்தில் பத்திரிகை ஒன்றிற்குப் பேட்டியளிக்கையில் மகிந்த என்ன கூறியிருக்கிறார் ? தமிழர்கள் பல அணிகளாக நின்று கொண்டிருக்கிறார்கள்இ வடக்கு-கிழக்கு இணைப்பு என்னும் பேச்சுக்கே இடமில்லை. சமஸ்டி அமைப்பு என்பதை மொழிவது எனது அரசியல் தற்கொலைக்குச் சமானம் என்று கூறியிருக்கிறார்.



இதிலிருந்து எமக்கு என்ன தெரிகிறது ? அனவரும் ஈழத்தமிழர்களுடைய எமது சுயநலப் போக்கை நன்கு அறிந்திருக்கிறார்கள். பிரபாகரனையும்இ விடுதலைப் புலிகளையும் அழிக்க எனக்கு உதவுங்கள் நான் உங்களுக்கு கேட்டதெல்லாம் தருவேன் என்ற மகிந்த இன்று ஓர் கடினமான நிலைப்பாட்டை எடுக்க என்ன காரணம் ?



ஈழத்தமிழர் என்றுமே ஒற்றுமையாக கோரிக்கையை முன்வைக்கமாட்டார்கள் என்பதை அவர் நிச்சயமாக அறிந்ததனாலேயே .

சுதந்திரம்இ சுபீட்சம்இ தனிமனித சுதந்திரம் இவையெல்லாம் முதலில் எம்மால் எமக்கு கொடுக்கப்படவேண்டும். தேர்தலில் பலர் குதித்திருப்பது இச்சுதந்திரத்தின் முதல் கட்டம்இ அதன் இரண்டாவது கட்டமாக வேறுபாடுகளைக் களைந்து எமது மக்களின் அமைதியானஇ கெளரவமான வாழ்க்கை என்னும் அடிப்படை கோரிக்கையில் அனைத்து தமிழ்ப்பிரிவினரும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும்..

இதுவே இன்று எம் அனைவரின் முன்னால் உள்ள தலையாய கடமை. சுதந்திரமாக வாழத்துடிக்கும் எம் மக்களுக்கு அந்நிலை வரும் போது பிரபாகரன் தான் அவர்களுக்குத் தலைமை வகிக்க வேண்டும் என்னும் எணத்தைக் கைவிடுங்கள்.

பிரபாகரன் இன்னும் உயிருடன் இருப்பதாகவே வைத்துக் கொள்வோம். அவர் எங்கிருந்தாலும் அங்கு அமைதியாகவும் சந்தோஷமாகவும் வாழட்டும்.

அதற்காக எமது மக்களின் வாழ்வில் மீண்டும் சூறாவளியை உருவாக்கும் முயற்சியில் மீண்டும் இறங்காதீர்கள். அமைதியையும்இ சந்தோஷத்தையும் இழந்து தமது இளம் சிறார்கள் பலரை கொடிய போருக்கு விலையாகக் கொடுத்த அவர்கள் நிம்மதியாக மூச்சு விட அவகாசம் கொடுங்கள்...!!!

--ஊர்க்குருவி

ஞாயிறு, 21 மார்ச், 2010

மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் லைன் வரிசை வீட்டுமுறையை இல்லாதொழித்து

மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் லைன் வரிசை வீட்டுமுறையை இல்லாதொழித்து ஒவ்வொரு குடும்பங்களுக்கும் 7பேர்ச் காணியில் சகல வசதிகளையும் கொண்ட தனிவீடுகளை அமைத்துக் கொடுக்க தேசநிர்மாண, தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. தேசிய அபிவிருத்தியில் மலையகத் தோட்டப்புறங்கள் உள்வாங்கப்பட்டதன் பின்னர் முதலில் வீடமைப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாகவும் அவ்வாறு கடந்த நான்கு ஆண்டுகளில் 12,231 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள் ளதாகவும் தேசநிர்மாண அமைச்சின் தோட்ட உட்கட்டமைப்பு விடயங்களுக்கான மேலதிகச் செயலாளர் திருமதி சந்திரா விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கு 900 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், மலையகத்தில் பாரிய அபிவிருத்திப் பணிகளை அரசாங்கம் முன்னெடுப்பதாகவும் ஆனால், ஊடகங்களில் பெரிதாகத் தகவல் கள் வெளிவருவதில்லை எனத் தெரிவித்துள்ளார். குடிநீர், சுகாதாரம், மலசலகூட வசதி உள்ளிட்ட உட்கட்டமைப்பு வளங்களைப் பெற்றுக்கொடுத்து வருவதாகக் கூறிய திருமதி விக்கிரமசிங்க, நீண்டகாலமாக எந்தத் திட்டமும் இல்லாதிருந்தநிலை இனியும் நீடிக்க அரசாங்கம் இடமளிக்காது என்று மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் பிரதிநிதித்துவம் பறிபோகப்போகிறது

தமிழ் பிரதிநிதித்துவம் பறிபோகப்போகிறது,பறிபோகப்போகிறது தமிழ் வாக்காளர்களே விழிப்பாக இருங்குள் என்று கூப்பாடு போட்டு தமிழ் மக்களின் பரந்த சிந்தனையை கட்டிப்போடும் வேலையை சில ஊடகவியலாளர்கள் செயு;து வருவதுதான் கவலையான விடயமாகும். ஒரு ஊடகவியலாளன் என்பவன் அரசிலுக்கு அப்பாற் பட்டவன் அப்படி அவன் அரசியல் சாயத்துடன் எழுத முற்பட்டானானால் ஒரு ஊடகவியளாளனாக இருக்க முடியாது.அவனிடம் மனிதநேயம் இருக்க வேண்டும், அநியாயம் எவன் செய்தாலும் தங்களது பேனாவை செய்பவனுக்கு எதிரான  ஆயுதமாக  அதனை பாவிக்கவேண்டும். .

ஒரு அரசியல் கட்சியில் உள்ளவர் போல் அவர்கள் தொடர்ந்தும் எழுதுவதன் மூலம் அவர் இன்ன கட்சியின் ஊடகவியலாளர், அவர் எழுதினால் அப்படித்தான் எழுதுவார், பேசினால் அப்படித்தான் பேசுவார்.அவரை ஒரு நியாயமான, நடுநிலையான ஊடகவியரலளர் என எடுத்துக் கொள்ள மனம் இடம் கொடுக்கப் போவதில்லை

இலங்கையில் இனவாதம் உள்ளது, தமிழர்கள் காலம் காலமாக இரண்டாம் தர பிரiஐகளாக நடத்தப்படுகிறார்கள், அதனால் அகிம்சை ஆயுதமாக மாறி இப்போ மீண்டும் அகிம்சை வழிதான,; வேறு வழி இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஏன் இலங்கையில் ஒற்றுமையும் நியாhயத்தன்மையும் இல்லை என்பதே ஆகும்.

ஒரு நாட்டில் ஐனநாயகம் nஐhலிகக் வேண்டும் அதற்கு பல கட்சி அரசியல் என்பது இருக்க வேண்டும் ஒரு கட்சிதான் என்ற நிலை இருந்தால் அந்நாட்டில் ஐனநாயகம் வளர வாய்ப்புகள் குறைவாக இருக்கும். தற்போது நடைபெற இருக்கும் பொதுத்தேர்தலில் பலகட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் என்பன போட்டியிடுகின்றன இது ஐனநாயகம் வளர ஒரு வடிகாலாக அமையலாம்.

தமிழர்கள்  ஏதாவது ஒரு தமிழ் கட்சிக்கு போடவேண்டும் ஊடகவியலாளர்கள் அப்படி எழுதினாலும் அவர்களது விருப்பம் தமிழ் தேசிய கூட்டமைப்பாகத்தான் இருக்கிறது.(அது தான் தமிழர்களின் விடுதலைக்கு பாடுபடுகிறதாம்) அதற்கு போட்டாலே தமிழர்கள் பிரதிநிதித்தவம் காக்கப்படும், சிங்களவர் பெரும்மைபான்மையாக உள்ள சிங்கள கட்சிக்கோ, முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள முஸ்லீம் கட்சிக்கோ வாக்களிக்கக் கூடாது,  என்றும் ஊடகவியலாளர்கள் சிலர் எழுதிவருவதில் எந்தளவு நியாயங்கள் இருக்க முடியும். அவர்கள் (ஒரு ஊடகவியலாளன்) அப்படி எழுதலாமா? இதன் மூலம் இனங்களுக்கிடையே ஒற்றுமை வளருமா, ஒற்றுமையில் குரோதத்தை ஏற்படுத்தாமல் சகஐநிலமையை ஏற்படுத்துவதும் ஒரு ஊடகவியலாளனின் தலையாய கடமை அல்லவா? இலங்கையில் இன முரன்பாடு என்பது வளர்ந்து இருக்கிற நிலையில் அதை தணிக்க நாம் பாடுபட வேண்டும். தமிழர்களின் கட்சி, முஸ்லீம்களின் கட்சி, சிங்களவர்கள் கட்சி என்று பாhப்பதே ஒரு தப்பான விடயமாகும்.

இலங்கையில் பிரதான கட்சிகளான ஐக்கியதேசியகட்சியில், சிறிலங்கா சுதந்திரகட்சியில் காலம் காலமான தமிழர்கள் இருந்திருக்கிறார்கள். தமிழரசுகட்சி தூண், ஐக்கியதேசிய கட்;சி தூண், சிறிலங்கா சுதந்திரக்ட்சி தூண் என்று ஊர்களில் இருந்தவர்கள் அந்த நாட்களில் சொல்லும் வார்த்தை நினைவுக்கு வருகிறது. 1983க்கு முன்னர் தேர்தல் வந்தால் தமிழர்கள் வீடுகளில் தங்களுக்கு விருப்பமான கட்சிகளின் வண்ணங்களை தங்களது வீடுகளின் ஐன்னல், கதவு என்பவற்றில் துணிகளாக போடுவதும், தமிழ் அரசு கட்சி தொண்டன் பச்சை, மஞ்சல் சிவப்பு கலரில் சட்டை அணிவதும (எங்கள் ஊரில் ஒருவர் தைத்து போட்டது ஞாபகத்துக்கு வந்தது அவர் ஒரு கூட்டணி தூண்) இயல்பானது அது அவர்களின் ஆர்வம் சம்பந்தமானது அதில் ஒருவர் இன்னொருவர் மீது களங்கத்தை ஏற்படுத்தக் கூடாது.

இலங்கை, இனிவரும் நாட்களில் பிரதேச கட்சிகளும்,  தேசிய கட்சிகளினதும் சங்கமாகவே இருக்கும். தேசிய கட்சியில் இருப்பவன் காட்டிக்கொடுப்பவனுமல்ல, பிரதேச கட்சியில் இருப்பவன் தேசத்துரோகியுமல்ல  அது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.
தமிழ் பிரதிநிதி;துவம் பறி போகிறது, பறி போகிறது எனச் சொல்லும்,எழுதும் ஊடகவியலாளர்களின் கருத்துகளைப் பார்த்தால் தமிழ் மக்கள் எல்லோரும் தமிழ் தேசிய கூடு;ட்டமைப்பின் பின்னால் நிற்கவேண்டும் என்றே கூறுகிறார்கள் போல, அப்போதான் தமிழர்களுக்கு கூட்டமைப்பினர் சுயநிர்ணய உரிமைக்காக போராடுவார்கள்,  அவர்களது போராட்டம் உலகம் அறிந்ததே

இம்முறை சுயேட்சைக் குழுக்கள் அதிகமாக களத்தில் இறங்கியுள்ளது. இது நல்லதொரு ஆரம்பம் என்றுதான் பார்க்க வேண்டியுள்ளது. இதைத்தான் மேலே குறிப்பிட்ட ஐனநாயகம் வளர நல்லதொரு வடிகால் என குறிப்பிட்டேன்.
 


டக்ளஸ் தேவானந்தா வழங்கிய சிறப்பு செவ்வி.

 வீரகேசரி க்கு வழங்கிய  செவ்வி.
21.03.10
அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் வருமாறு:

கேள்வி:
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் உங்களது கட்சி தனித்தே போட்டியிட வேண்டுமென்று உங்களது கட்சியின் முக்கியஸ்தர்கள்,   ஆதரவாளர்கள், புத்திஜீவிகள், பல்கலைக்கழக சமூகத்தினர் போன்றோர் ஆலோசனை தெரிவித்திருந்த நிலையிலும்        நீங்கள் ஆளும் தரப்பான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடனேயே போட்டியிடுகின்றீர்கள்.      இவ்வாறானதொரு நிலை ஏற்பட அரசுதரப்பின் அழுத்தமே காரணமெனக் கூறப்படுகிறது.

விசேடமாக,  நீங்கள் உங்கள் கட்சி ஊடாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றால் உங்களுக்கு அமைச்சுப் பொறுப்பு வழங்கப்படமாட்டாதென அரசு தரப்பில் கூறப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறதே? இது தொடர்பில் நீங்கள் என்ன கூறவிரும்புகிறீர்கள்?
பதில்:    எம் மீது எவரும் அழுத்தங்களை பிரயோகித்தார்கள் என்று சொல்ல முடியாது.
அவ்வாறு அழுத்தங்கள் வருமானால் அது குறித்து நாம் எந்த முடிவையும் எடுப்பதற்கு எமக்கு உரிமையும் உண்டு! ஆனால் எடுக்கின்ற முடிவுகள் எமது மக்களின் அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கி விடக்கூடாது என்பதில் நாம் தெளிவாக இருக்கின்றோம்.             எம்டைய நோக்கம் அரசாங்கத்துடன் பகமையை உருவாக்கிவிடக் கூடாது என்பதுதான் காரணம், கடந்த கால அனுபவங்கள் எமக்கு கற்றுத் தந்த பாடங்கள் அர்த்தமுள்ளவை.

எதிர்ப்பு அரசியலால் எதையும் சாதித்த வரலாறு இல்லை.     ஆகவே இணக்க அரசியலின் மூலமே நாம் எதையும் பெற்றுவிட முடியும் என்பது எமது அனுபவம். எமது மக்களின் பிரச்சினைகளை அரசாங்கத்துடன் பேசித்தீர்ப்பதற்கான அனைத்து வழிகளையும் ஏனைய தமிழ் தலைமைகள் பலவும் அடைத்து மூடிவிட்டன.  இன்றுவரை அரசாங்கத்துடன் பேசுவதற்கான கதவுகளை திறந்து வைத்திருப்பவர்கள் நாம்.   இதை நாம் பாதுகாக்கவே விரும்புகின்றோம்.  

இந்தத் தீர்மானம் என்பது ஈ.பி.டி.பியின் கட்சி நலன் சார்ந்த முடிவு அல்ல. எமது மக்களின் நலன் சார்ந்த விடயம்.    அதற்காக அரசாங்கம் தவறுகள் விட்டால் நாம் எமது மக்களின் நலன் சார்ந்து அதை எதிர்க்க கூடாது என்று அர்த்தமல்ல.       ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வடமாகாணம் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவெடுத்துவிட்டது.   நாம் எமது வீணைச் சின்னத்தில் போட்டியிட்டு அரசாங்கத்தோடு முரண்பட்டு அரசாங்கத்தை விட்டு தூரவிலகிவிட முடியாது.
இது தவிர, எதிர்வரும் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கப் போகின்ற நிலையில் தமிழ் பேசும் மக்கள் இல்லை.         இதை கடந்த ஜனாதிபதி தேர்தல் மூலம் நாம் புரிந்திருக்கின்றோம். நாடாளுமன்றத்தில் எவருடைய ஆதரவும் இன்றி தனித்து ஆட்சி அமைக்கும் பலத்தோடு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெல்லப்போகின்றது என்பது உறுதியாகி விட்டது.     ஆகவே, வெளியில் நின்று பேரம் பேசி கூட்டாட்சி அமைக்கும் முயற்சிகள் வெற்றியடையப் போவதில்லை. 

ஆனால் கடந்த காலங்களில் இந்த நிலைமை இருந்தது. குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றிருந்த 22 ஆசனங்களும் அரசாங்கத்துடன் பேரம் பேசி கூட்டாட்சி அமைப்பதற்கான பலத்தை கொண்டிருந்தது. ஆனால், கூட்டமைப்பு அதை பயன் படுத்தியிருக்கவில்லை. அவ்வாறு செய்திருந்தால் நடந்து முடிந்த அழிவு யுத்தம் தொடங்கியிருக்காது.       ஆகவே, நாம் வெளியில் நின்று பேரம் பேசாமல் உள்ளே இருந்து கொண்டே முடிந்தளவு பேரம் பேசி     கூட்டாட்சி அமைப்பதையே விரும்புகின்றோம். இதுவே சாத்தியமானதும்.

கடந்த மாநகரசபை தேர்தலில் நாம் வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியடைந்ததால் எமது யாழ். மாநகர சபை நிர்வாகத்தை மிகவும் இலகுவாக கொண்டு நடத்த முடிகின்றது.     இதில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்போ, அன்றி ஜனாதிபதியோ தேவையற்ற குறுக்கீடுகளில் ஈடுபடுவதில்லை. மாறாக மாநகரசபை நிர்வாகத்தை ஊக்குவிக்கின்றார்கள்.
ஆகவே யாழ் மாவட்டத்தில் வெற்றிலைச் சின்னத்தில் நாம் போட்டியிட வேண்டிய தீர்மானம் என்பது எமது கட்சியின் விருப்பங்களுக்கு அப்பால் சமகால சூழ்நிலையும், நடை முறை யதார்த்தங்களும் உருவாக்கியிருக்கின்ற ஒரு தீர்மானமே ஆகும். நாம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்போடு பேச்சு வார்த்தை நடத்தியிருக்கின்றோம். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது எம்மால் முன் வைக்கப்பட்ட பத்து அம்ச கோரிக்கைகளை மேலும் செழுமைப்படுத்தி மேலும் அதிகமான எமது மக்களின் நியாயமான தேவைகளை, கோரிக்கைகளாக முன்வைத்திருக்கின்றோம். இதன் அடிப்படையில்தான் நாம் யாழில் மட்டும் வெற்றிலையில் போட்டியிட தீர்மானித்தோம்.

வன்னியில் எமது கட்சி வீணைச் சின்னத்தில் போட்டியிடுகின்றது.   வரலாறு ஒருபோதும் நேரிய பாதையில் செல்வதில்லை.   வளைந்து நெளிந்து சென்றுதான் வெற்றிகளை குவித்திருக்கின்றது.     இதைப்புரிந்து கொள்ளாமால் நின்றவர்கள் தம்மையும் அழித்து மக்களையும் அழித்த வரலாறுகள்தான் எங்கும் உண்டு. ஈ.பி.டி.பியும் வளைந்து நெளிந்து செல்வது உரிய இலக்கை அடைவதற்காகவே. வன்னியில் எமது கட்சி வீணைச்சின்னத்தில் போட்டியிடுகின்றது.

கேள்வி: நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் வடக்கு,  கிழக்கு தமிழ் கட்சிகளை ஒன்றிணைத்துப் போட்டியிடுவதற்காக புளொட் இயக்கத் தலைவர் சித்தார்த்தன் பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்தார்.    விசேடமாக உங்களுடன் இது தொடர்பில் அவர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இருப்பினும் சித்தார்த்தனின் இந்த முயற்சி கைகூடவில்லை. உங்களது கட்சி அவரின் வேண்டுகோளை ஏற்காமைக்கு என்ன காரணம்?
பதில்.. சித்தார்த்தன் அவ்வாறன முயற்சியில் ஈடுபட்டிருந்தால் அது வரவேற்கத்தக்கது. அவரோடு எமக்கு உறவுகள் உண்டு.  ஐக்கியம் உண்டு.

ஆனாலும் நாங்கள் ஒரு கூட்டுக்குள் இருக்க முடியவில்லை என்ற ஆதங்கம் எனக்கும் உண்டு. ஆனாலும், நாம் ஐக்கியத்திற்காக எப்போதுமே கதவுகளைத் திறந்து வைத்திருப்பவர்கள். ஐக்கியத்தின் மீது எமக்கு நம்பிக்கை உண்டு. ஆனால் ஐக்கியப்படுங்கள் என்று கூறுகின்ற பலர் மீது எமக்கு நம்பிக்கை இல்லை.   ஆனாலும் நாம் நம்பிக்கைக்கு உரியவர்களாகவே எப்போதும் இருப்போம். ஐக்கியம் என்பது தேர்தலுக்காக மட்டும் இருந்துவிடக்கூடாது. அல்லது தமது கட்சி நலன் சார்ந்ததாக மட்டும் இருந்து விடக்கூடாது. மக்கள் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும். அந்த சிந்தனை எமது தமிழ் சமூகத்தில் அரசியலில் துளியளவும் இல்லை.

கடந்த காலங்களில் பல ஐக்கியங்களும் கூட்டுக்களும் இருந்தன.  என்ன நடந்தது?... 1977 இல் ஐக்கியப்பட்டு தமிழர் விடுதலை கூட்டணி அமைத்தார்கள். 18 ஆசனங்களை கைப்பற்றி என்ன செய்தார்கள்? தமிழீழ ஆணை கேட்டு நாடாளுமன்றம் போனவர்கள் எமது மக்களை உணர்ச்சி பொங்க பேசி உசுப்பிவிட்டு. இளைஞர் யுவதிகளை பலிக்களத்திற்கு அனுப்பிவிட்டு தமிழ் நாட்டில் தனி வீடு எடுத்து குடி புகுந்து கொண்டார்கள். அண்ணர் அமிர்தலிங்கம் அவர்களோடு நான் பழகிய நாட்களில் இது குறித்து நான் அவரோடு நேரடியாகவே கதைத்திருக்கின்றேன். ஆனாலும் அவர் மீது எனக்கு மரியாதை உண்டு.   அவர் இன்று இருந்திருந்தால் மாற்று வழிகளில் சிந்தித்திருப்பார்.
அதன் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமைத்து 22 ஆசனங்களை தவறான வழியிலாவது பெற்றிருந்தார்கள். எதை சாதித்தார்கள்?... மறுபடியும் உணர்ச்சி பொங்க பேசி, உணர்ச்சி ஏற்றிவிட்டு. அழிவு யுத்தத்திற்கு நியாயம் சொல்லி விட்டு வெளிநாடுகளுக்கு ஓடிப்போய் விட்டார்கள். அவர்கள் பெற்றிருந்த பாராளுமன்ற பலத்தை சரிவரப்பயன் படுத்தியிருக்கவில்லை.   இன்று அந்த ஐக்கியம் உடைந்து மூன்று குழுக்களாக குழுச்சண்டையில் ஈடுபட்டு வருகின்றார்கள். தாம் ஐக்கியப்பட்டு ஒரு கூட்டுக்குள் போட்டியிட்டால் மட்டுமே தேர்தலில் வெல்ல முடியும் என்று சிலர் சிந்திக்கிறார்கள். எங்க ளுக்கு அந்த சிந்தனை இல்லை. அந்த தேவையும் இல்லை.

நாம் வன்னி மாவட்டத்தில் புளொட், மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சிகளோடு இணைந்து போட்டியிட அழைப்பு விடுத்திருந்தோம். ஆனாலும் அவர்கள் அதை ஏற்க வில்லை. இது அவர்களது விருப்பம். ஆனாலும் நாம் இறுக்கமான உறவுகளை சில கட்சிகளோடு பேணி பாதுகாத்து வருகின்றோம். அவர்களோடு எதிர்காலத்தில் ஐக்கியப்படுவதற்கு சாத்தியங்கள் உண்டு.
தேசியம்,  தன்னாட்சி,     சுயநிர்ணய உரிமை இவைகளே எமக்கு தீர்வு என்று நடை முறைக்கு சாத்தியமற்ற வழியில் சிந்திப்பவர்களோடு ஐக்கியப்பட்டு என்ன பயன்?... நாம் இவைகளுக்காக இரத்தம் சிந்தியவர்கள். கதிர்காமத்திற்கு யாத்திரை போவதென்றால் இடையில் பல இடங்களில் தங்கி இளைப்பாறித்தான் செல்ல முடியும். 13 ஆவது திருத்தச் சட்டத்தில் இருந்து தொடங்குவதை யார் ஆதரிக்கிறார்களோ நாம் அவர்களோடு ஐக்கியத்திற்கு தயார்.   

அல்லது இதை விடவும் நல்ல தீர்வாகவும்,   அதே வேளை நடைமுறைக்கு சாத்தியமானதாகவும் யாராவது தீர்வு வைத்திருந்தால் நாம் 13 ஆவது திருத்தச்சட்டத்தில் இருந்து தொடங்குவதை கைவிட்டு அவர்களோடு ஐக்கியப்படவும் நாம் தயார். ஐக்கியம் என்பது பல்வேறு தரப்பினரதும் பன்முகச்சிந்தனைகளை விழுங்கிவிடுவதாக இருந்து விடக்கூடாது.
கேள்வி: கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கும் வகையில் சில கோரிக்கைகளை நீங்கள் முன்வைத்திருந்தீர்கள். அவற்றில் ஏதேனும் தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கின்றதா?
பதில் ஆம்!... நாம் முன்வைத்த சில கோரிக்கைகள் உடனடியாகவும், சில கட்டம் கட்டமாகவும், சில அதற்குரிய சூழல் உருவாகும் போதும் நிறைவேற்ற முடிந்தவை. குறிப்பாக ஏ ஒன்பது வீதி முழுமையாக திறக்கப்பட்டுவிட்டது. மீள் குடியேற்றம் தொடர்ந்தபடி இருக்கின்றது. கைதிகள் விடுதலை குறித்து ஒரு பகுதியினர் மட்டும் விடுவிக்கப்பட்டனர்,  ஏனையவர்களை விடுவிப்பதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

யுத்தம் நடந்த பிரதேசங்களில் அபிவிருத்திக்கு முன்னிடம் என்ற வகையில் ஐனாதிபதி நிதியில் இருந்து வடக்கு மாகாணத்தில்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு அபிவிருத்தி ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.         குறிப்பாக 13 வது திருத்தச்சட்டத்தை ஆரம்பிப்பது என்ற அடிப்படையில் அடுத்து நடக்கப்போவது வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் என்பதையும் சிந்திக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் முடிந்த கையோடு இவைகள் அனைத்தும் துரிதமாக்கப்படுவதற்கான முயற்சியில் நாம் ஈடுபடுவோம். எனக்கு இதில் நம்பிக்கை இருக்கின்றது.
கேள்வி: வடக்கின் வசந்தம் என்ற திட்டத்தின் கீழ் அரசு வடமாகாணத்தில் முன்னெடுத்து வரும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் நீங்கள் திருப்திப்படுகிறீர்களா?   அந்தப் பணிகள் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் மந்த நிலையில் காணப்படுவதாகக் கூறப்படுகிறதே இதனை ஏற்றுக்கொள்கிறீர்களா?
பதில்.. நான் பொதுவாகவே எதிலும் திருப்தி அடைவதில்லை. ஆனாலும் எது நடக்கவேண்டுமோ அது நான்றாகவே நடந்து கொண்டிருக்கின்றது.   எதிர்வரும் தேர்தலில் அதிகமான ஆசனங்களை நாம் யாழில் கைப்பற்றுவோம். வன்னியிலும் வெற்றிபெறுவோம். அதிலிருந்து இன்னும் இவைகள் துரிதமடைவதற்கான அரசியல் பலம் எமக்கு கிடைக்கும்.   அதை எமது மக்கள் வழங்குவார்கள்.

வடக்கின் மாகாணசபை நிர்வாகம் உருவாக்கப்பட்ட பின்னர் வடக்கின் வசந்தம் வேலைத் திட்டம் இலகுவாகவும்,   துரிதமாகவும் நடைபெறும்.
கேள்வி: யுத்தம் முடிந்து விட்டது. புலிகளின் அச்சுறுத்தலும் இல்லை. ஆனால் வடபகுதியில் இன்னும் பாதுகாப்பு உயர் வலயங்கள் உள்ளனவே?     இவற்றினை அகற்றுவது குறித்து நீங்கள் சம்பந்தப்பட்டோருடன் கலந்துரையாடியுள்ளீர்களா? இவற்றினை அகற்றிவதில் ஏதாவது தரப்பினர் தயக்கம் காட்டுகின்றனரா?
பதில்: பாதுகாப்பு வலயங்களை நோக்கி நானே கால்நடையாக நடந்து மக்களை அழைத்து சென்றிருக்கின்றேன். எந்த பகுதிகளில் நீங்கள் இனி குடியேறலாம் என்று நான் குறிப்பிட்டு மக்கள் அதை மகிழ்ச்சியோடு வரவேற்றிருக்கின்றார்கள். உயர் பாதுகாப்பு வலயங்களில் இருந்து பல பகுதிகள் நீக்கப்பட்டு விட்டன.       ஆனாலும் நாம் தொடர்ந்தும் இது குறித்து பேசி வருகின்றோம்.
கேள்வி: தற்போது தென்னிலங்கையிலிருந்து வடபகுதிக்கு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வருகின்றனர். இது வடக்கின் கலாசார சீரழிவை ஏற்படுத்தலாமெனக் கூறப்படுகிறது.    இது குறித்த உங்கள் கருத்து என்ன?
பதில்: இது தவறான தமிழ் தேசியம் பேசும் குழுக்கள் உச்சரிக்கும் தேர்தல்கால பிரச்சாரம்.

இவ்வாறு கூறுபவர்கள் கொழும்பில் குறிப்பாக தென்னிலங்கையிலும், வெளிநாடுகளிலும்தான் தங்களது அதிகமான வாழ் நாட்களை கழிக்கின்றார்கள். இன்று தவறான தமிழ் தேசியம் பேசும் குழுக்களில் இருப்பவர்கள் புலிகளால் விரட்டப்பட்டு கூட்டம் கூட்டமாக கொழும்பில் சென்று குடியேறினார்கள்.   கொழும்பில் உள்ள கபித்தாவத்தை கோவிலில் படுத்து உறங்கினார்கள். அப்போது எந்தவொரு சிங்கள குடிமகனும் தென்னிலங்கை கலாசாரம் சீரழிகின்றது என்று சொன்னார்களா?...

90 ஆம் ஆண்டு வடக்கில் இருந்து தப்பித்து ஓடி வந்த தமிழ் குடும்பங்களை இளைஞர் யுவதிகளை ஈ.பி.டி.பி யினராகிய நாம் 4 முகாம்கள் அமைத்து பாராமரித்து வந்தோம். அப்போது கொழும்பு கலாசாரம் சீரழிகின்றது என்று யாராவது சொன்னார்களா?...

கொழும்பில் எத்தனை இந்து ஆலயங்கள் அமைத்து எமது தமிழர்கள் செயற்பட்டு வருகிறார்கள். அதை எந்த ஒரு சிங்கள குடிமகனும் கொச்சைப்படுத்தவில்லை.  சாதாரண அப்பாவி சிங்கள மக்கள் யாழுக்கு வந்து போவது அவர்களது விருப்பம் என்றால் இதை நாம் கலாச்சார சீரழிவு என்று எப்படி கூற முடியம்?...

பொருளாதாரம், மனிதநேயம் மக்களை இணைக்கிறது. அரசியல் மக்களை பிரிக்கின்றது. அப்பாவி சிங்கள மக்கள் யுத்தத்தால் சிதைந்து போன எங்கள் வாழ்விடங்களை வந்து பார்க்கட்டும். எமது மக்களோடு கை குலுக்கட்டும். அப்போதுதான் தமிழர்கள் தங்களது வரலாற்று வாழ்விடங்களில் அபிவிருத்தியும் அரசியலுமையும் பெற்றவர்களாக வாழும் சூழல் உருவாகும்.
கேள்வி: அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமாராவைச் சந்தித்து பல விடயங்கள் தொடர்பில் நீங்கள் கலந்துரையாடியிருந்தீர்கள். அத்துடன் சில விடயங்கள் தொடர்பில் இந்திய அரசின் உதவியையும் நீங்கள் கேட்டிருந்தீர்கள். எங்களது மக்களது பிரச்சினை தொடர்பில் இந்தியாவிடம் கேட்டுத்தான் எதனையும் பெறவேண்டுமா?
பதில்: தங்களிடம் கேட்டுத்தான் எதையும் செய்ய வேண்டும் என்று இந்தியா எவருக்கும் சொல்லவில்லை. ஆனாலும் நான் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைமைப் பொறுப்பில் உள்ள சோனியா காந்தி, மற்றும் இந்திய அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் அனைவருடனும்        தமிழ் மக்களின் அரசியலுமை குறித்து பல தடைவ பேசியிருக்கினறேன்.  13ஆவது திருத்தச்சட்டம் இந்தியாவுடனும் சந்பந்தப்பட்டது. அதை நடைறைப்படுத்த வேண்டும் என்றே அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்.
அந்த அக்கறை இந்தியாவிற்கு உண்டு.   ஈ.பி.டி.பி.யினராகிய நாம் முன்னெடுக்கும் இந்த தீர்வையே இந்தியாவும் ஏற்றிருக்கின்றது. ஐனாதிபதி மஹிந்த ராஐபக்ஷவும் அதையே தெரிவித்திருக்கிறார். ஆகவே இது குறித்து அவர்களோடு பேசுவதில் என்ன தவறு?