சனி, 25 ஜனவரி, 2025

வேங்கைவயல் - மாற்று சமூக பஞ்சாயத்து தலைவரை பழி வாங்க திட்டமிட்டு குற்றத்தை நிகழ்த்தி உள்ளனர்

May be an image of 3 people and text

பா. உதயகுமார்  :  வேங்கை வயல் மர்ம முடிச்சுக்கள் எவ்வாறு விலகியது...
மலம் கலக்குவதற்கு முன்பே, மலம் கலக்க போகிறவர்கள் தண்ணீரை யாரும் அருந்தவேண்டாம் என எச்சரித்து நீர் தொட்டியின் மேல் ஏறி உள்ளனர்.
அங்கே இவர்கள் பொட்டலாமாக எடுத்து சென்ற மலத்தை விடியோ எடுத்து, செல்ஃபி யும் எடுத்துள்ளனர்.அதன்பிறகு மலத்தை தொட்டிக்குள் கலந்துள்ளனர்.
அதன் பிறகு இந்த பிரச்சினை விஸ்வரூபம் ஆனதும் வீடியோவை டெலீட் செய்து விட்டனர்.
முதலில் மாற்று சமூகத்தினர் தான் இந்த செயலை செய்திருப்பார்கள் என்ற கோணத்தில் விசாரணை தொடங்கியது, ஆனால் மாற்று சமூகத்தினர் இந்த பகுதிக்கு யாரும் வந்ததில்லை, வந்து போனதற்கான எந்த முகாந்திரமும் இல்லை.

வேங்கைவயல் மனிதக்கழிவு அதே கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேர் குற்றவாளிகள்! அடையாளம் காட்டியுள்ள சி.பி.சி.ஐ.டி

 தினமலர் :  சென்னை : வேங்கைவயல் விவகாரத்தில், இரண்டு ஆண்டுகளாக நீடித்த மர்மம் விலகியது. ஆதிதிராவிட மக்களுக்கு குடிநீர் வழங்கும் மேல்நிலைத் தொட்டியில், மனிதக்கழிவு கலந்தது தொடர்பான வழக்கில், அதே கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேரை குற்றவாளிகள் என்று அடையாளம் காட்டியுள்ள சி.பி.சி.ஐ.டி., போலீசார், புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில், நான்கு நாட்களுக்கு முன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில், 2022 டிசம்பரில் ஆதிதிராவிட சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில், மனிதக்கழிவு கலக்கப்பட்டது.

சிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல! தமிழர்களும் கலந்ததுதான் சிங்கள சமூகம் - யாழ்ப்பாண பேராசிரியர் ந.ரவீந்திரன்

No photo description available.
No photo description available.

Chandra Mohan  :  சிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல! சீமான்  சொல்வது பொய்! தமிழர்களும் கலந்ததுதான் சிங்கள சமூகம்!
யாழ்ப்பாண பேராசிரியர் ந.ரவீந்திரன்  :  அம்பேத்கர் படிப்பு வட்டம் சார்பாக, இன்று  சேலத்தில் "சாதியும் சமூக மாற்றமும் " எனும் தலைப்பில் இலங்கை யாழ்ப்பாண  பேராசிரியர். ந.ரவீந்திரன் உரை நிகழ்த்தினார்.
சிங்களர்- தமிழர் இன முரண்பாடு, இலங்கையில் சிறுபான்மை தமிழர் மகாசபை, வர்க்கம் எதிர் சாதி, வருணங்கள், பிராமண மதம், தமிழர் நிலப்பரப்பில் தோன்றிய திணை அரசுகள், மார்க்சியம், ரஷ்யப் புரட்சியில்  "ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்றுபடுங்கள்" என்ற அணுகுமுறை எனப் பல்வேறு விசயங்கள் பற்றி விரிவாக பேசினார்.
"சிங்களர்கள் கண்டி நாய்க்கர்கள் என்று சொல்லப்படுவதால், தெலுங்கர்கள்/ வடுகர்கள் என சீமான் சொல்கிறாரே, சரியா ?" என்ற ஒரு கேள்விக்கு, அது  பொய்  த.நா.ல் உள்ள அவர்களது அரசியலுக்காக இப்படி பேசுகிறார்கள் " என்றதுடன், நாம் அறியாத  பல்வேறு செய்திகளை தெரிவித்தார்.
சிங்களர்கள் யார்?

வெள்ளி, 24 ஜனவரி, 2025

அதானி நிறுவனத்துடன் மின் உற்பத்தி ஒப்பந்தம் நீக்கம் இலங்கை: 6% சரிந்த பங்கு விலை

 மாலை மலர் :  அதானியின் கிரீன் எனெர்ஜி நிறுவனத்துடன் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான 440 மில்லியன் டாலர் அளவிலான ஒப்பந்தத்தை இலங்கை அரசு ரத்து செய்துள்ளது.
 இதனால் பங்குச் சந்தையில் அதானியின் கிரீன் எனெர்ஜி பங்கின் விலை 6% சரிவை சந்தித்துள்ளது.
484 மெகாவாட் அதானி காற்றாலை மின் உற்பத்தி ஒப்பந்தம், சந்தை விலையை விட 70 சதவீதம் அதிக விலைக்கு வழங்குவதற்கான ரணில் விக்கிரமசிங்கேயின் அமைச்சரவை எடுத்த முடிவை ஜனாதிபதி அனுர குமார திசா நாயக தலைமையிலான அமைச்சரவையால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பை உருக்கும் தொழில்நுட்பம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

 hindutamil.in : தமிழக தொல்லியல் துறை சார்பில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் ‘இரும்பின் தொன்மை' என்ற நூலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
 தமிழகத்தில் கிடைத்த தொல்லியல் மாதிரிகளை அமெரிக்கா, புனே, அகமதாபாத் ஆய்வகங்களில் பகுப்பாய்வு செய்ததில், 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பை உருக்கும் தொழில்நுட்பம் தமிழ் நிலத்தில் அறிமுகமாகிவிட்டது தெரியவந்துள்ளது. தமிழ் நிலப் பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

டங்ஸ்டன் சுரங்க திட்டம் நிறுத்தம் ஒன்றிய அரசு அறிவிப்பு! தமிழ்நாட்டுக்கு கிடைத்த வெற்றி . முதல்வர் ஸ்டாலின்

 மாலை மலர் ; மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் அமைய இருந்த டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை நிறுத்தி வைக்க மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
நேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாலை மற்றும் ஊர்த்தலைவர்கள் மத்திய அமைச்சரை சந்தித்து திட்டத்தை முழுமையாக ரத்து செய்யக்கோரி வலியுறுத்தினர்.
இதனை ஏற்றுக்கொண்ட மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, திட்டம் ரத்து செய்யப்படும். இதற்கான அறிவிப்பு நாளை (இன்று) அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என உறுதி அளித்திருந்தார்.

வியாழன், 23 ஜனவரி, 2025

கேரள மரண தண்டனையை கொண்டாடும் பெண்களே நீங்கள் அனைவரும் ஆண்களுக்கு கீழானவர்கள்தான்

May be an image of 2 people and text

சுமதி விஜயகுமார் :  சம்பவம் 1 : அந்த பெண்ணிற்கு 30 வயது. உடலில் 38 இடங்களில் காயங்கள். பாதி குடல் உடலில் இருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்.
கேரளா அரசு அவரின் குடும்பத்திற்கு ரூ. 1 லட்சம் நஷ்ட ஈடாக அறிவித்தது.

சம்பவம் 2 : 33 வயதான வெளிநாட்டு பெண். போதைமருந்து அளிக்கப்பட்டு, பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். 3 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்தது கேரளா நீதி மன்றம்.

புதன், 22 ஜனவரி, 2025

கடலரிப்பால் திருச்செந்தூர் கோவில் கடற்கரை பாதிப்பு ஆய்வு

 தினமலர் : திருச்செந்துார் கோவில் கடற்கரையில் ஏற்பட்டுள்ள மண் அரிப்பு குறித்து,
சென்னை தேசிய கடல்சார் ஆராய்ச்சி மையம் விஞ்ஞானிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இவ்வாறு வரும் பக்தர்கள் அனைவரும், கடலில் புனித நீராடுவது வழக்கம். ஆனால் கடந்த சில மாதங்களாக கடற்கரையில் ஏற்பட்டுள்ள மண் அரிப்பு காரணமாக, பக்தர்கள் புனித நீராட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உலகின் முதல் சைவ நகரம் குஜராத்தில் உள்ள பாலிதானா! அசைவ உணவு விற்பதும், உண்பதுற்கும் தடை!

 tamil.asianetnews.com - SG Balan : Palitana non-veg ban: இந்த இந்திய நகரம் உலகிலேயே முதல் முறையாக அசைவ உணவை முற்றிலுமாக தடை செய்துள்ளாது. இந்த நகரம் எந்த மாநிலத்தில் உள்ளது? இறைச்சி தடைக்கான காரணம் என்ன என்பதைப் பார்ப்போம்.
இந்த இந்திய நகரத்தில் இறைச்சி விற்பது மட்டுமல்ல, இறைச்சி சாப்பிடுவதும் குற்றமாகும். அதாவது இந்த நகரில் இறைச்சி முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அப்படியானால் உலகில் இறைச்சிக்கு தடை விதித்த முதல் நகரம் எது தெரியுமா?
குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள பாலிதானா என்ற நகரம், இறைச்சியை முழுமையாக தடை செய்த உலகின் முதல் நகரமாகும். இறைச்சிக்காக விலங்குகளை கொல்வது, இறைச்சி விற்பது மற்றும் சாப்பிடுவது குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தியாகராஜர் தெலுங்குப் பாடல் மட்டும் பாடி திருவையாற்றில் உஞ்சவிருத்தி செய்து வாழ்க்கை நடத்தியவர்

May be an image of 1 person and text

Thulakol Soma Natarajan :  தெலுங்குப் பாடல் மட்டும் பாடி திருவையாற்றில் உஞ்சவிருத்தி
செய்து வாழ்க்கை நடத்தியவர்
ஆந்திரத்தைப் பூர்விகமாக கொண்ட தெலுங்கு பிராமணர் தியாராஜன் .
அவர் பாடியவை கொச்சைத் தெலுங்கு என்று தெலுங்கு
மொழி வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அவர் மறைந்தது 6. 1. 1847ல்.
அதன் பிறகு, திதி கொடுபதற்காக அவரின்  உறவினர்கள் புல்லும் புதரும்
மண்டிக் கிடந்த அவரின் சமாதியில் அமர்ந்து அவர்
எழுதிய பாட்டுக்களைப் பாடி வந்தனர்.
தியாகராஜனனின் "ஆராதனை " இப்படித்தான் "ஆரம்பமானது ".
மைசூர் தேவதாசி குடும்பத்தை சேர்ந்த கன்னட நாகரத்தினம்மாள்
தன் சொத்தையெல்லாம் விற்று தியாகராஜனுக்கு கோவில் கட்டினார்.
ஆண்டுதோறும் ஆராதனை விழா நடத்தினார்.
இதில் கொடுமை என்னவென்றால் அந்த நிகழ்ச்சியில் நாகரத்தினம் அம்மாள் உட்படப் பெண்கள் எவரையும் பாட அந்தப்
பார்ப்பனக் கூட்டம் அனுமதிக்கவில்லை.

செவ்வாய், 21 ஜனவரி, 2025

கலைஞரை கொலை செய்ய புலிகள்....ஒரு நேரடி சாட்சியின் வாக்குமூலம்

 ராதா மனோகர்  : அமரர் ராஜீவ் காந்தியின் முயற்சியால் உருவான இலங்கை வடக்கு கிழக்கு மாகாண அரசை புலிகள் பிரேமதாச கூட்டணியிடம்  இருந்து  காப்பாற்ற முடியாமல் போன வரலாறு பற்றி இன்னும் போதிய புரிதல் பொதுவெளிக்கு இல்லை.
அதன் முதலமைச்சர் திரு வரதராஜர் பெருமாள் தரப்பினரும் இதில் குற்றவாளிகள்தான்
அன்று ஜேயார் அரசு வரதராஜ பெருமாளோடு தேர்தல் கூட்டணி வைக்க பெரும்பாடு பட்டார்கள்
அதை உதறி தள்ளியதன் மூலம் வடக்கு கிழக்கு மாகாண சபையை கருவிலேயே கொன்றவர் திரு வரதராஜ பெருமாள்தான்
மறுபுறத்தில் இதன் காரணமாகவே வரதர்ஜா பெருமாள் கோஷ்டிக்கு  கலைஞர் மீது ஒரு ஏமாற்றம் இருப்பதாக கதை அளந்தார்கள்.
அதாவது இதற்கும் கலைஞர்தான் காரணமாம்.

சத்யராஜ் மகள் திவ்வியா திமுகவில் இணைந்தார்

 மாலை மலர் : சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், நடிகர் சத்யராஜின் மகளும் – ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் தி.மு.க.வில் இணைந்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய திவ்யா, "ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தரும் கட்சி என்றால் அது திமுக, அதற்கு உதாரணம் முதல்வரின் காலை உணவு திட்டம். குறிப்பாக பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கட்சி என்றால் திமுக தான்.

வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் சிறுவர்கள் கைது - உசிலம்பட்டி

 தினமலர் : உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் சங்கம்பட்டி கிராமத்தில் நடந்த புரட்டாசி திருவிழாவில், 17 வயது சிறுவன் பிற சிறுவர்களுடன் நடனமாடினார்.
அங்கிருந்தவர்கள் அவரது ஜாதி பெயரை சொல்லி திட்டி, தாக்கியதால் தகராறு ஏற்பட்டது.
சில நாட்களுக்கு பின், அவனை கிஷோர் உள்ளிட்ட ஆறு பேர் கடத்திச் சென்று தாக்கினர். அங்குள்ள கோவிலில் முட்டிபோட வைத்து, ஜாதி பெயரை இழிவாக சொல்லி அடித்து மிரட்டி, 6 வயது சிறுவன் உட்பட அனைவரது கால்களிலும் விழ வைத்ததாக கூறப்படுகிறது.

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை- குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை

BBC News தமிழ் : கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
குற்றவாளி சஞ்சய் ராய் சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், சஞ்சய் ராய்க்கு 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு 'அரிதிலும் அரிதான' ஒன்று என்று நீதிபதி அனிர்பன் தாஸ் கூறினார். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு 17 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்
இந்த வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என சீல்டா நீதிமன்றம் கடந்த 18ஆம் தேதி தீர்ப்பளித்தது.

திங்கள், 20 ஜனவரி, 2025

கொழும்பு விமான ஓடுபாதைக்கு மேலே பறவைக் கூட்டம் - வெடி தவறுதலாக வெடித்து அதிகாரிகள் காயம்

jaffnamuslim.com - டி.கே.ஜி.கபில - ; கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதைக்கு மேலே உயரமாகப் பறந்து கொண்டிருந்த பறவைக் கூட்டத்தின் மீது சுடப்பட்ட ஸ்கை ஸ்டிக் வகை வெடிபொருள் வெடிக்கத் தவறி, அதிகாரிகள் பயணித்த வாகனத்தின் மீது விழுந்ததால், திங்கட்கிழமை (20) மதியம் விமான நிலையத்தில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.
பறவை ஆபத்து கட்டுப்பாட்டு பிரிவைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் காயமடைந்து நீர்கொழும்பு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதை கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொறுப்பதிகாரி உறுதிப்படுத்தினார்.

காதலனை விஷம் கொடுத்து கொன்ற பெண்ணுக்கு மரண தண்டனை- கேரளா

 தினத்தந்தி : காதலனை விஷம் கொடுத்து கொன்ற கேரள பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து கேரளாவின் நெய்யான்றின்கரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் கரீஸ்மா கொலை குற்றவாளி என கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அவருக்கான தண்டனை விவரம் இன்று (20) அறிவிக்கப்பட்டது.
கன்னியாகுமரியில் வசித்த இளம் பெண் கரீஸ்மா. இவர் கடந்த 2021ஆம் ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பு படித்தபோது, இளநிலை 3ஆம் ஆண்டு படித்த ஷரோன் ராஜ் என்ற மாணவருடன் நட்பு ஏற்பட்டது.

யாழ்ப்பாணதில் பிரமாண்ட திருவள்ளுவர் கலாசார மையம்

 ராதா மனோகர் : திருக்குறள் -  இல்லறவியலில்  42 ஆவது குறள்.
"துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை'
இக்குறளில் இறந்தார்க்கும் என்பதை பலரும் இறந்த உறவினர்கள் அன்பர்கள் போன்றோர்க்கு இல்வாழ்வான் துணையாக இருத்தல் வேண்டும் என்பதாக பொழிப்புரை எழுதியுள்ளார்கள்.
மேலும் சிலர் இறந்தவர்களுக்கு செய்யவேண்டிய ஆண்டு திதி போன்றவற்றை தவறாமல் செய்யவேண்டும்.
இறந்தவர்களின் நினைவாக தானங்கள் கொடுக்க வேண்டும் என்பது போலவும் கூறுகிறார்கள்
ஆனால் இது பற்றி எனக்கு வேறொரு கோணத்தில் ஒரு கருத்து தோன்றுகிறது.
உதாரணமாக தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா கலைஞர் போன்றவர்கள் புகழுடம்பு எய்திய நிலையில் அவர்களுக்கு நாம் எப்படி துணையாக இருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறதல்லவா?
பெரியார் அண்ணா கலைஞர் போன்றவர்கள் யார்?
இவர்கள் வெறுமனே உடலும் மனமும் கொண்டவர்கள் என்று மட்டுப்படுத்த முடியுமா?

ஞாயிறு, 19 ஜனவரி, 2025

மனிதர்கள் குடிப்பதற்கு கோமியம் பாதுகாப்பானது அல்ல: இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை

 தினகரன் :  சென்னை: மனிதர்கள் குடிப்பதற்கு கோமியம் பாதுகாப்பானது அல்ல. கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மனிதர்கள் குடிப்பதற்கு கோமியம் பாதுகாப்பானது அல்ல; மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பாக்டீரியா கோமியத்தில் உள்ளது.
பசுக்கள், எருமைகளின் சிறுநீர் மாதிரிகளை இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தியது.
இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வில் தீங்கு விளைவிக்கக் கூடிய 14 வகையான பாக்டீரியாக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீமான் பிரபாகரனுடன் இருக்கும் போட்டோவை 'எடிட்'செஞ்சு கொடுத்ததே நான் தான்! இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார்

 Balasubramania Adityan T :  பிரபாகரனை இடிப்பது போல் தன்னோடு மார்பிங் செய்து அசத்திய பலே சீமான்...
உற்று பாருங்கள் பயபுள்ள சேட்டை நன்றாக புரியும்🤣
சீமான் பிரபாகரனுடன் இருக்கும் போட்டோவை 'எடிட்'செஞ்சு கொடுத்ததே நான் தான் என்று சினிமா இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார்  தகவல் !
வெங்காயம், பயாஸ்கோப் ஆகிய திரைப்படங்களின் இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார். கிராமப்புற கதைக்களத்துடன் உருவான இந்த இரண்டு படங்களும், கலை ரீதியாக விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்றவை.
இந்நிலையில், இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார், செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்து உள்ளார்.
அதில், சீமான் பிரபாகரனுடன் இருக்கும் புகைப்படத்தை தான் தான் எடிட் செய்த உண்மையை கூறி உள்ளார்

தமிழ் திரைப்படங்களில் பொன்மணி திரைப்படம் மிக உயர்ந்த இடத்தில இருக்கிறது

May be an image of 1 person, smiling and eyeglasses

ராதா மனோகர்:  இலங்கை தமிழ் திரைப்படங்களில் பொன்மணி திரைப்படம் மிக உயர்ந்த இடத்தில இருக்கிறது
காவலூர் ராசதுரையின் கதையை திரு தர்மசேனா ச பத்திராஜா அவர்கள் படமாக்கி இருக்கிறார்.அண்மையில் மறைந்த திரு குழந்தை சண்முகலிங்கம் அவர்கள் கதாநாயகனை நடித்திருக்கிறார்
டாக்டர் நந்தி . சிவஞானசுந்தரம் சித்திரலேகா மௌனகுரு பவானி சிவனங்கசுந்தரம், சர்வமங்கலம் கைலாசபதி இன்னும் பலர் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்
இது ஒரு சமூகத்தின் கதை என்ற ரீதியில் நகர்த்தப்பட்டதால் எந்த ஒரு கதாபாத்திரமும் சிறியதும் அல்ல பெரியதும் அல்ல.



சமூகத்தின் வாழ்வியல்தான் கதாநயான் என்றுதான் கூறவேண்டும்
ஜாதியும் மதமும்தான் வில்லன் என்று கூறவேண்டும்.

வேலையில்லாத பட்டதாரி வேலையில்லாத பட்டதாரின்னு சொன்னா ஏன் அந்த வேலையில்லாத பட்டத்தை படிக்கிறீங்க?

No photo description available.

Esther Vijithnandakumar :  வேலையில்லாத பட்டதாரி வேலையில்லாத பட்டதாரின்னு சொன்னா
ஏன்டாம்ப்பா அந்த வேலையில்லாத பட்டத்தை  படிக்கிறீங்க?
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று இலங்கையில் எல்லா திணைக்களத்திலும் வேலை செய்கிறார்கள் ஆனால் அவர்கள் எந்த விதத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளார்கள் ?
பதிமூன்று வருடங்கள் கடந்தும் இன்னும் அந்த தொழிலில் நிரந்தர நியமனம் பெறாது அவர்களை இன்னும் நிரந்தரமாக்காமலும் அரசாங்கம் வைத்திருக்கிறது
அவர்கள் தரம் ஒன்றைத்தவிர வேறு எந்த முன்னேற்றமோ Job promotion அடைய முடியாத ஒரே தொழில் இலங்கையில் பியோன் வேலையும்  அபிவிருத்தி உத்தியோததத்தரின் வேலையும்தான்