சனி, 22 ஜூன், 2019

தண்ணீரை போல .. குழந்தைகளுக்கு காற்றும் ஆடம்பர பொருளாய் மாறி இருக்கும்

சுமதி விஜயகுமார் : 'கொஞ்சமா மூச்சு இழுத்து விடுங்க. பெருமூச்செல்லாம் விட்டு காத்த waste பண்ணாதீங்க' என்று யாரவது சொன்னால் பலமாக
சிரித்துவிட்டு 'காத்து என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா?' என்று கேட்போம். இதே போல் ஒரு 30, 40 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த நம் தாத்தாக்களிடம் 'தண்ணிய ரொம்ப செலவு செய்யாதீங்க, சிக்கனமா இருங்க' என்று சொல்லி இருந்தால் நம்மை மேலும் கீழும் பார்த்திருப்பார்கள். அன்று மட்டுமில்லை இன்றும் தண்ணீர் யாருக்கும் சொந்தமில்லை.
15 வருடங்களுக்கு முன்பு bisleri தண்ணீரை உபயோகப்படுத்துவது மேட்டுக்குடி மக்கள் தான். பின்பு அது அந்தஸ்து விஷயமாகி அதுவே அத்தியாவசியமாக மாறியதில் இருக்கிறது முதலாளித்துவம். இன்று நம்மிடம் தண்ணீரை சிக்கனமாக செலவழியுங்கள் என்று சொல்லும் எந்த அரசாங்கமும் பேர்நிறுவனங்களை நோக்கி, தண்ணீர் தட்டுப்பாடு இருப்பதால் உற்பத்தியை குறைத்து கொள்ளுங்கள் என்று ஒரு போதும் சொல்லாது. நாமும் தண்ணீரை சிக்கனமாக செலவு செய்யவேண்டும் என்று வீட்டில் இருப்பவர்களுக்கு அறிவுறுத்துவோமே தவிர, அடிப்படை தேவையான தண்ணீரை நான் ஏன் காசு கொடுத்து வாங்க வேண்டும் என்று அரசை நோக்கி கேட்கவே மாட்டோம். நாம் சிக்கனமாக செலவழித்து சேமிக்கும் தண்ணீர் யாருக்காக பயன்பட போகிறது? நிச்சயம் நமக்காக இல்லை.

அதிமுகவை முழுவதுமாக விழுங்க பாஜக தயார் .. ஓபிஎஸ் தலைமையில் உள்ளாட்சி தேர்தலுக்கு

tamiloneindia : ஓபிஎஸ் தலைமையில் உள்ளாட்சி தேர்தல்... பலப்பரீட்சைக்கு பாஜக ரெடி.. எடப்பாடி அணிக்கு செம டோஸ்!*
சென்னை: அதிமுகவை ஆட்டுவிக்கும் பாஜக தலைமையின் 'கோலாட்ட'ங்கள் தொடருகின்றன. அதிமுகவை ஓபிஎஸ் வசம் கொடுத்துவிட்டு உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள பாஜக வியூகம் வகுத்துக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கியை வைத்திருக்கும் அதிமுகவை அவ்வளவு எளிதாக கை கழுவ பாஜக தயாராக இல்லை. ஜெயலலிதா இல்லாத அதிமுகவை இப்போது முழுமையாக பாஜக தன் வசமாக்கிக் கொண்டது.
தற்போதைய இரட்டைத் தலைமையை முன்வைத்து லோக்சபா தேர்தலை எதிர்கொண்டது. இந்த தேர்தலில் பாஜக எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இதனால் தோல்வி ஏன் என ஆராயத் தொடங்கியது.
ஆய்வு அறிக்கைகள்
அதுபோதாது என தங்களது விசுவாசத்துக்குரிய ஓபிஎஸ்-ன் கருத்துகளையும் கேட்டது பாஜக. உளவுத்துறையும் விரிவான அறிக்கையை கொடுத்தது. தமிழக பாஜகவும் தம் பங்குக்கு போட்டுக் கொடுத்தது.
*எடப்பாடி அணி மீது கோபம்*
அத்தனை கைகளுமே 'எடப்பாடி அணியின் உள்ளடி' வேலையைத் தவிர வேறு எதுவுமே இல்லை ஒரே போடாக கை நீட்டிவிட்டன. இதனால் எடப்பாடி தரப்பு மீது மிக உச்சகட்ட கோபத்தில் இருக்கிறது பாஜக தலைமை.
*அமைச்சர்களின் டெல்லி பயணம்*

ஈரான் வான்வெளிக்குள் இந்திய விமானங்கள் போகாது .. பதற்றம் அதிகரிப்பு.. சுட்டுத் தள்ள வாய்ப்பு.


tamil.oneindia.com - veerakumaran : டெல்லி: அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் இடையில் அதிகரித்து வரும் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில், இந்திய விமான போக்குவரத்து ஒழுங்குமுறை தலைமை அமைப்பான சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (டி.ஜி.சி.ஏ), இந்திய விமான நிறுவனங்கள் "ஈரானிய வான்வெளியில் பாதிக்கப்பட்ட பகுதியை" தவிர்க்கவும், தங்கள் விமானத்தை "பொருத்தமான" பகுதி வழியாக இயக்கவும் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை, ஈரான் தனது வான்வெளியில், அமெரிக்க ராணுவ ட்ரோனை சுட்டு வீழ்த்தியது. அதைத் தொடர்ந்து ஈரானிய வான்வெளியில் பறக்கும் வர்த்தக விமானங்களும், தவறாக குறிவைக்கப்பட்டு வீழ்த்தப்படும் வாய்ப்பு இருப்பதாக, அமெரிக்க விமான ஒழுங்குமுறை, அமைப்பான, ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (எஃப்ஏஏ) எச்சரித்தது. இதையடுத்து, அமெரிக்காவில் பதிவுசெய்யப்பட்ட விமானங்கள் தெஹ்ரான் விமான தகவல் பிராந்தியத்தில், இயங்குவதை தடைசெய்து நேற்று நோட்டீஸ் வெளியிட்டது.

மோடியின் மாபெரும் வெற்றி இந்தியாவின் உயிருக்குக் கெடுதல் ... தி கார்டியன் UK

modi and amit shah after election resultkeetru.com :இங்கிலாந்தில் வெளிவரும் தி கார்டியன் என்ற ஆங்கில நாளிதழில் வெளிவந்த நரேந்திர மோடியின் பாரதிய சனதாக் கட்சியின் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி பற்றிய தலையங்கத்தின் தமிழாக்கம்.தமிழாக்கம் : வழக்குரைஞர் கோ.ரா.சுந்தரகாந்தம்
தலையங்கம் : பொய்ச் செய்திகளை வணிகம் செய்து கொண்டு வணிகம் ஆதரவான செயல்திட்டங்களைப் பின்பற்றுகின்ற, சிறுபான்மையினரை இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்துகின்ற மேலும் ஒரு மக்களை ஈர்க்கும் தலைவர் இவ்வுலகிற்குத் தேவையில்லை.
வியாழன், 23, மே 2019: அண்மையில் வரலாற்றின் மிகப்பெரிய தேர்தலை நரேந்திர மோடி என்ற ஒரு தனிநபர் வென்றார். 1971 ஆம் ஆண்டிற்குப் பிறகு, அடுத்தடுத்து இரண்டு முறை ஒற்றைக் கட்சிப் பெரும்பான்மையுடன் வென்ற முதலா வது பிரதமர் நரேந்திர மோடி. 2014ஆம் ஆண்டில் காங்கிரசுக் கட்சியின் புகழ் ஊழல் புகைமூட்டத்தில் மறைந்தபோது நாடாளுமன்றத்தின் கீழவையில் பாரதிய சனதா கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது. அய்ந்தாண்டுகளுக்குப் பிறகு, சிதறுண்ட பொருளாதார நிலைமையும் மீறி திரு.மோடி நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை அதிகப்படுத்தி யுள்ளார். இது இந்தியாவிற்கும் உலகத்திற்கும் கெட்ட செய்தியாகும்.

சென்னைக்கு தண்ணீர் தரமாட்டேன் என்று சொல்லவில்லை - துரைமுருகன் மறுப்பு

சென்னைக்கு தண்ணீர் தரமாட்டேன் என்று சொல்லவில்லை - துரைமுருகன் மறுப்பு
மாலைமலர் : குடிநீர் பற்றாக்குறையால் தவிக்கும் சென்னைக்கு ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு போனால் பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் என எச்சரித்ததாக வெளியான செய்திக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை: சென்னைக்கு தண்ணீர் வழங்கும் ஏரிகள் வறண்டதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குடிநீர் பற்றாக்குறையை போக்க ஜோலார்பேட்டையிலிருந்து ரெயில் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு வர ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிச்சாமி நேற்று அறிவித்திருந்தார். இதற்கிடையே, ஜோலார்பேட்டையில் இருந்து ரெயிலில் சென்னைக்கு நீர் கொண்டு போனால் பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும்  என திமுக பொருளாளர் துரைமுருகன், அரசுக்கு எச்சரிக்கை விடுத்ததாக செய்திகள் வெளியாகின. இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், தமிழகத்தில் இருந்து கொண்டு தண்ணீர் தர மறுத்தால், கர்நாடகம் எப்படி தண்ணீர் தரும்? என திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பினார்.

தெலுங்கு தேசம் எம்பிக்கள் பாஜகவில் சேர்ந்தது சந்திரபாபு நாய்டுவின் திட்டம்?

chandrababu naiduநக்கீரன் : தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலங்களவை எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்ததற்கு பின்னணியில் சந்திரபாபு நாயுடுவின் பக்கா ப்ளானிங் உள்ளதாம். நடைபெற்று முடிந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சி படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.க்ள் சிலர் தங்களது ராஜினாமா கடிதத்தை மாநிலங்களவை தலைவர் வெங்கைய நாயுடுவிடம் கொடுத்துவிட்டு பாஜகவில் இணைந்தனர்.
ஆனால் இதர்கு பின்னர் சந்திரபாபு நாயுடுவின் மாஸ்டர் மைண்ட் உள்ளதாக அக்கட தேசத்து பத்திரிக்கைகள் தெரிவிக்கின்றன.

சசிகலாவின் விசுவாசியா எடப்பாடி? பாஜக சந்தேகம்!

admkநக்கீரன் : நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி படுதோல்வி அடைந்தது. தமிழகத்தில் பாஜக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கு அதிமுக தான் காரணம் என்று பாஜக தலைமை கூறியதாக சொல்லப்படுகிறது. வருகிற உள்ளாட்சி தேர்தலின் பொறுப்பை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கவனிப்பார் என்றும், ஆட்சியை எடப்பாடி பழனிச்சாமி கவனிப்பார் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர்.
இதற்கு பாஜகவிடம் வந்த ரகசிய உத்தரவே காரணம் என்று சொல்லப்படுகிறது. 

கேரளாவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு சென்ற 243 பேர் கதி என்னவானது?

  தினமலர் :புதுடில்லி: கேரளாவிலிருந்து ஐந்து மாதங்களுக்கு முன் புறப்பட்ட கப்பல், மாயமான தகவல் வெளியாகியுள்ளது. இந்த கப்பலில் இருந்த, 243 பேர் கதி என்னவானது என, தெரியவில்லை.
கேரள மாநிலம், எர்ணாகுளம் துறைமுகத்திலிருந்து, தேவமாதா என்ற கப்பல், ஜனவரியில், பசிபிக் பிராந்திய நாடுகளுக்கு புறப்பட்டுச் சென்றது. இந்த கப்பலில், 243 பேர் இருந்தனர். கப்பல் புறப்பட்டு ஐந்து மாதத்துக்கு மேலாகியும், சம்பந்தபட்ட இடத்துக்கு, சென்று சேரவில்லை என, தகவல் வெளியாகியுள்ளது. அந்த கப்பலில் இருந்து, எந்த தகவலும் இல்லை. கப்பல் கேப்டன், ஊழியர்கள், அதில் பயணித்தவர்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.< இது குறித்து, வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர், ரவீஸ் குமார் கூறுகையில், ''கப்பல் மாயமானது குறித்து, பசிபிக் பிராந்திய நாடுகளுக்கு தகவல் கொடுத்துள்ளோம். ஆனால், எந்த நாடுகளிடமிருந்தும், இதுவரை தகவல் வரவில்லை,'' என்றார்.

கே.என்.நேரு :உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் வேண்டாம், தனித்தே நிற்போம்!

மின்னம்பலம் : உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட வேண்டும் என்று அக்கட்சியின் திருச்சி மாவட்டச் செயலாளர் கே.என்.நேரு வலியுறுத்தியுள்ளார்.
காங்கிரஸ் வேண்டாம், தனித்தே நிற்போம்: கே.என்.நேருதமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க அதிமுக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் திமுக சார்பில் இன்று (ஜூன் 22) ஆர்பாட்டம் நடைபெற்றுவருகிறது. திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே திமுக மாவட்டச் செயலாளர் கே.என்.நேரு தலைமையில் நடந்த ஆர்பாட்டத்தில், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய நேரு, கூட்டணி குறித்தும் காரசாரமாக கருத்து தெரிவித்தார். “உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட வேண்டும். இது கட்சியின் கருத்தல்ல. என்னுடைய தனிப்பட்ட கருத்து. தற்போது கூட்டணி இணைந்து அனைவரும் வெற்றிபெற்றுவிட்டனர்.

திமுகவுக்கும் காங்கிரசுக்கும் இருந்த உறவை கெடுத்த செல்லகுமார் .. நேருவின் flashback பேச்சு

நேருவுக்கு செல்லக்குமார் பதில்!மின்னம்பலம் :  திருச்சி திமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு தன் பெயரைக் குறிப்பிட்டு பேசியதற்கு காங்கிரஸ் அகில இந்திய பொதுச் செயலாளரும், கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி.யுமான டாக்டர் செல்லக்குமார் மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியிடம், பதிலளித்துள்ளார்.
தமிழகத்தில் நிலவும் குடிநீர் பஞ்சத்தை தீர்க்கத் தவறிய அதிமுக அரசைக் கண்டித்து மாவட்டம் தோறும் திமுக இன்று (ஜூன் 22) ஆர்பாட்டம் நடத்தியது. திருச்சியில் நடந்த ஆர்பாட்டத்தில் பேசிய நேரு, “உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் போட்டியிடனும்னு ஒருத்தர் கேட்டிருக்காரு. ஏற்கனவே கூட்டணியில் இருந்தபோது காங்கிரஸைச் சேர்ந்த யுவராஜ், மயூரா ஜெயக்குமார் ஆகியோர் திமுக ஆட்சியைத் தொடர்ந்து விமர்சனம் செய்துவந்தார்கள். காங்கிரஸுக்கும் திமுகவுக்கும் இருந்த உறவைக் கெடுத்ததே அவர்கள் இருவர்தான். சட்டமன்றத்தில் செல்லக்குமார் தலைவர் எதிரிலேயே பேசினார். ஆனால் கூட்டணி தர்மத்திற்காக அதே செல்லக்குமாருக்கு கிருஷ்ணகிரி தொகுதியில் வேலைசெய்து வெற்றிபெற வைத்தோம்” என்று குறிப்பிட்டார்.

மன்மோகன் சிங் ராஜ்யசபா கோரிக்கை... திமுக மறுப்பு !

மின்னம்பலம் : டிஜிட்டல் திண்ணை: சோனியா கோரிக்கை... ஸ்டாலின் நிராகரிப்பு!“குடிதண்ணீர் பிரச்சினை பற்றிய விவாதத்தை உருவாக்க வேண்டிய திமுகவின் ஆர்ப்பாட்டம் கூட்டணி பற்றிய விவாதத்தை உருவாக்கி விட்டதே...”
-மொபைல் டேட்டாவை ஆன் செய்ததுமே, வாட்ஸ் அப்பில் வந்து விழுந்த கமெண்ட் இது. சில போட்டோக்களை அனுப்பி வைத்த கையோடு விரிவான மெசேஜை அனுப்பியது வாட்ஸ் அப்.
“உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட வேண்டும் என்று திருச்சி ஆர்ப்பாட்டத்தில் கே.என். நேரு சொன்னதன் மூலம் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டிருப்பதாக சிலர் சொல்கிறார்கள். ஆனால் இதற்கு முன்பே , விரைவில் வர இருக்கிற ராஜ்யசபா தேர்தலை ஒட்டியே காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் இடையே சிறு மனஸ்தாபம் ஏற்பட்டுவிட்டது.
ஸ்டாலின் சிங்கப்பூர் செல்வதற்கு முன் அவரை அறிவாலயத்தில் மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது, ‘டெல்லியில் இருந்தபோது காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் என்னை சந்திச்சாங்க. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அஸ்ஸாம்லேர்ந்து ராஜ்யசபா சீட் இந்த முறை கிடைக்கலை. அங்க காங்கிரஸுக்கு மெஜாரிட்டி இல்ல. அங்கமட்டுமில்ல, இப்போதைக்கு ராஜ்யசபாவுக்கு அனுப்புற அளவுக்கு காங்கிரஸுக்கு எந்த மாநிலத்துலயும் பலம் இல்ல.

தமிழகத்தில் இருந்துகொண்டு தண்ணீர் தரமறுத்தால் கர்நாடகம் எப்படி தண்ணீர் தரும்? - அமைச்சர் சி.வி.சண்முகம்

மாலைமலர் :விழுப்புரம்: ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்தார்.
 இந்நிலையில், தமிழகத்தில் இருந்து கொண்டு தண்ணீர் தர மறுத்தால், கர்நாடகம் எப்படி தண்ணீர் தரும்? என துரைமுருகனுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
 விழுப்புரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள், ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு திமுக பொருளாளர் துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், தமிழகத்தில் இருந்து கொண்டு, மற்றொரு ஊருக்கு தண்ணீர் தர மாட்டேன் என்று கூறுபவர்களுக்கு, சமுதாயம் மீது என்ன அக்கறை உள்ளது? இவர்களே இப்படி கூறினால், கர்நாடகத்தில் இருந்து மட்டும் எப்படி தண்ணீர் தருவார்கள். தமிழகத்திற்கு உள்ளேயே தண்ணீர் பிரச்சனையை தி.மு.க. எழுப்புவது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.

வேலூரிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு வரப்பட்டால் போராட்டம் வெடிக்கும்: துரைமுருகன்

tamil.indianexpress.com :  தண்ணீர் பிரச்சினையை தீர்க்க முடியாது வேலூரிலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டு சென்றால் ஒரு போராட்டம் வெடிக்கும் என துரைமுருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்சனை அரசுக்கு பெருத்த நெருக்கடியாக உருவாகியுள்ளது. இதனை சரி செய்ய நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று அதற்கான திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மேலும் அதிமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் மழை வேண்டி யாகம் நடத்த வேண்டுமென்று அதிமுக தலைமை அறிவித்ததையடுத்து இன்று பல்வேறு மாவட்டங்களில் அதிமுக சார்பில் யாக பூஜை நடைபெற்றது.
இந்நிலையில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குடிநீரை முழுமையாக வினியோகிக்க , குடிநீர் திட்டப் பணிகளுக்காக 200 கோடியை கூடுதலாக ஒதுக்கி நேற்று உத்தரவிட்டார். மேலும் அந்தக் கூட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலமாக தினமும் 10 மில்லியன் குடிநீரை சென்னைக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

பிரேமலதா .. பித்தலாட்டத்தில் புதிய உச்சம் தொட்ட தேமுதிகவின் அரசியல் தந்திரங்கள்


சாவித்திரி கண்ணன்" : பிரமிக்க வைக்கிறார் பிரேமலதா!
அரசியல் என்றாலே அது பித்தலாட்டமானது, மொள்ளமாரித்தனமானது தான் என்ற புரிதலில், தன் ஒவ்வொரு நகர்வையும் கொண்டிருக்கிற கட்சியாக தே மு தி க வை மாற்றிவிட்டார் பிரேமலதா!
ஐந்து கோடி சொச்சத்து கடனை கட்ட முடியவில்லை என்பதற்கும்,கட்ட மனமில்லை என்பதற்கும் பெரிய வித்தியாசமிருக்கிறது.
விஜயகாந்திற்கும்,அவரது குடும்பஉறுப்பினர்களுக்கும் தமிழகத்திலும், தமிழகத்திற்கு வெளியிலும் இருக்கும் சொத்துகளின் மதிப்பு குறைதபட்சம் என்று எடுத்துக் கொண்டாலே ஆயிரம் கோடிக்கும் அதிகம் என்பது அந்த கட்சியின் அடிமட்ட தொண்டனுக்கு கூட தெரிந்த உண்மையாகும்!
ஏதேனும் ஒரு சொத்தை விற்றலே கூட பல கோடி தேறும்!
இது போக, ஒவ்வொரு தேர்தலிலும் - எந்தவித கொள்கை அரசியல் பார்வையும் கிஞ்சித்தும் இல்லாத கட்சி என்ற வகையில் - வெற்றி வாய்ப்புக்கு சாத்தியமுள்ள கூட்டணி எது? என்ற அளவு கோளை விடவும் , யாரிடம் அதிக பணம் கிடைக்கும்..என்று கூட்டணி கண்ட கட்சி தான் தே மு தி க!
அந்த வகையில், சமீபத்திய தேர்தலில் தே மு தி க வாங்கிய பெரும் தொகையின் கணிசமான பகுதி செலவழிக்கப்படாமல்- தங்கள் கட்சி வேட்பாளரின் வெற்றியில் கூட அக்கரை காட்டாமல் - அமுக்கி கொள்ளப்பட்டதையும் அக் கட்சியின் அனைத்து நிலையில் உள்ளவர்களும் அறிவார்கள்!

சஞ்சீவ் பட் .... ஜனநாயகத்தை குழியில் தள்ளி பிஜேபிக்கு வாக்களித்த மக்களுக்கு வாழ்த்துகள்


சுமதி விஜயகுமார் : நேற்று முன்தினம் உச்சநீதி மன்றம் Sanjiv Bhatt என்ற
காவல்துறை அதிகாரிக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. எதற்காக இவருக்கு தண்டனை வழங்கப்பட்டது என்பதை அறிய இரண்டு முக்கிய நிகழ்வுகளையும் அதில் இவரின் பங்கையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அந்த இரண்டு நிகழ்வுகளிலும் பிஜேபியின் பங்கு என்ன என்பதை தெரிந்து கொள்வது அதைவிட முக்கியம்.
1990 அத்வானியின் ரத யாத்திரை நாம் அனைவரும் அறிந்ததே. அந்த யாத்திரை சென்ற இடமெல்லாம் கலவரங்களை நிகழ்த்தி கொண்டு சென்றதும், அதனை தடுத்து நிறுத்த
அன்றைய பிரதமர் VP Singh பீகார் மாநில முதலமைச்சர் லாலு பிரசாத் மூலம் அந்த யாத்திரையை தடுத்து நிறுத்தி அத்வானியை கைது செய்ததும் வரலாறு.
அப்படி அந்த யாத்திரை பயணத்தின் போது குஜராத்தில் கலவரம் செய்தவர்கள் என நூறுக்கும் மேற்பட்டவர்களை கைது செய்தது. அதில் ஒருவர் Prabhudas Vaishnani. கைது செய்து 9 நாட்களில் பிணையில் வந்தவர் அடுத்த 10 நாட்களில் உயிரிழந்தார். இதனை அடுத்து காவல்துறை அவரை துன்புறுத்தி கொன்றுவிட்டது என்று வழக்கு தொடரப்பட்டு நீதி மன்றம் 1995ல் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அதனை தொடர்ந்து 25 ஆண்டுகள் கழித்து இந்த தீர்ப்பு.

மழை வேண்டி அதிமுக அரசு யாகம் .. ...

.nakkheeran.in - kalaimohan" அதிமுக தலைமை  மழைவேண்டி   தமிழகத்திலுள்ள
முக்கிய கோவில்களில் சிறப்பு யாகம் நடத்த உத்தரவிட்டுள்ளது. அந்த
உத்தரவின் பேரில் அமைச்சர்கள் தலைமையில் கோவிகளில் சிறப்பு
யாகங்கள் நடந்து வருகிறது. ஈரோடு பச்சைமலையில் உள்ள சுப்ரமணியசாமி கோவிலில்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் யாகம் நடைபெற்றது. திருச்சி, ஸ்ரீரங்கம், உறையூரில் நடைபெற்றுவரும் யாகத்தில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன்,வளர்மதி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
கடலூரில் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலில் அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் யாகம் நடைபெற்றுவருகிறது. அதேபோல் மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோவிலில் நடக்கும் யாகத்தில் ராஜன் செல்லப்பா பங்கேற்றுள்ளார்.

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக தமிழக காங்கிரஸ் தீர்மானம்!

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக காங்கிரஸ் தீர்மானம்!
  மின்னம்பலம் : தேர்தல் ஆணையம் நம்பகத்தன்மையை இழந்துவிட்டதாக கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தீர்மானம் இயற்றியுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஜூன் 21) சென்னை சத்தியமூர்த்தி பவனில் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்றது. அதில் காங்கிரஸ் தேசிய செயலாளர்கள் சஞ்ஜய் தத், சிரிவல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர். ராமசாமி மற்றும் மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின்போது காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி தொடர வேண்டும், புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு, குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்வதில் அதிமுக அரசு தோல்வியடைந்துவிட்டதால் அதற்கு பொறுப்பேற்று உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி ராஜினாமா செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கள்ளக்குறிச்சி கரும்பு தோட்டத்தில் பாலியல் வன்முறை .100க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள்.. பரபரப்பு


கரும்பு தோட்டம் மிரட்டி வீடியோ
பாலியல் தொந்தரவு tamil.oneindia.com - hemavandhana.: கரும்பு தோட்டத்தில் நாசமாக்கப்பட்ட பெண்கள், ஆபாச வீடியோக்கள் சிக்கின கள்ளக்குறிச்சி: கரும்பு தோட்டத்தில் பெண்களை மிரட்டி நாசம் செய்திருக்கிறார்கள் கேடுகெட்ட பாவிகள்.. இதில் 100-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
பொள்ளாச்சி சம்பவத்துல நூற்றுக்கணக்கான ஆபாச வீடியோக்கள் சிக்கியதாக கூறப்பட்டது. ஆனால் அவையெல்லாம் எங்கே போயின, யாரிடம் சிக்கி உள்ளது, என்பதெல்லாம் வெளி உலகுக்கு தெரியாமலேயே போய்விட்டது.
இந்த விஷயத்துல கறார் தன்மையை உடனுக்குடனேயே வெளிப்படுத்தி இருந்தால் இன்னைக்கு இன்னொரு அக்கிரமம் நடந்திருக்காது. இந்த சம்பவம் கள்ளக்குறிச்சியில் நடந்துள்ளது. பாலியல் தொந்தரவு< அரசு கல்லூரியில் பிஎஸ்சி 2ம் ஆண்டு படிக்கும் மாணவிக்கு இந்த கும்பலில் உள்ள 2 பேர் வலை விரித்துள்ளனர். அவர்கள் பெயர் பைனான்சியர் ராஜா, அவரது நண்பர் வேலுமணி. செல்போனில் ஆபாசமாக படம் எடுத்து வைத்துக் கொண்டு, இந்த பெண் பின்னாடியே போவதும், அசிங்கமாக பேசுவது என தொந்தரவு மேல் தொந்தரவு செய்து வந்திருக்கிறார்கள். ஒருகட்டத்தில் பயந்துபோன மாணவி வீட்டில் விஷயத்தை சொல்ல, அந்த பெண்ணின் பெற்றோர் கள்ளக்குறிச்சி போலீசில் புகார் சொன்னார். போலீசாரும், சம்பந்தப்பட்ட ராஜா, வேலுமணியை கைது செய்துவிட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் போதுதான் பல திடுக் தகவல்கள் தெரியவந்துள்ளன.

ஆடை இல்லாமல் 20 நாட்கள் படப்பிடிப்பு: அதிரவைத்த அமலாபால் – அதிர்ச்சி வீடியோ

  தினத்தந்தி :  ஆடை   படத்தில் அமலாபால் அறைகுறை ஆடையில் இருக்கும் முதல் தோற்றம் ஏற்கனவே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் தற்போது வெளியான படத்தின் டிரெய்லரில் அமலாபால் நிர்வாணமாக தோன்றி ரசிகர்களை மேலும் அதிர வைத்துள்ளார். அமலாபாலை காணவில்லை என்று அவரது அம்மா போலீசில் புகார் அளிப்பதுபோல் டிரெய்லர் தொடங்குகிறது.
பிறகு போலீஸ் வாகனங்கள் தேடுதல் வேட்டையில் பரபரக்கின்றன. எல்லோரும் உயரமான கட்டிடத்தை பார்த்தபடி நிற்கின்றனர். அப்போது அமலாபால் உடம்பில் ஒட்டு துணிகூட இல்லாமல் உட்கார்ந்து இருக்கிறார். தமிழ் பட வரலாற்றில் இதுபோன்ற காட்சியில் எந்த நடிகையும் நடித்தது இல்லை என்கின்றனர்.
நிர்வாண காட்சியை 20 நாட்கள் படமாக்கியதாகவும் அத்தனை நாளும் ஆடை இல்லாமலேயே நடித்ததாகவும் கூறப்படுகிறது.

கொலை செய்தது போலீசுதான் – மதுரை படுகொலையில் முதல் திருப்பம் !

வினவு : கடந்த 15.06.2019 அன்று மதுரையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த “டெல்டா போர்ஸ்” எனும் சட்ட விரோத போலீசு தாக்கியதில் விவேகானந்தகுமார் என்பவர் மரணமடைந்தார். மரணடைந்த விவேகனந்தகுமாரின் சாவுக்கு நீதி கேட்டு அவருடைய உறவினர்கள் மற்றும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“முறையான போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் வந்த பிறகே சம்பந்தபட்டவர்களின் மீது நடவடிக்கை எடுக்க முடியும்” என்று கொலை செய்த போலீசைக் காப்பற்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டனர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகார வர்க்கத்தினர். அதே போல அப்பகுதியில் பதிவான சிசிடிவி (கண்கானிப்பு) கேமரா பதிவுகளையும் வெளியிடாது முடக்கி வைத்துள்ளது போலீசு
கடந்த திங்கள் முதல் இன்று வரை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் உறவினர்கள், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்களின் துணையோடு தொடர்ந்து போராடி வந்தனர். மேலும் போஸ்ட்மார்ட்டம் செய்யும்போது தங்கள் சார்பாக ஒரு மருத்துவரை நியமிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஒரு மருத்துவர் உடற்கூறாய்வுக் குழுவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

நடிகர் சங்க தேர்தலை திட்டமிட்டபடி நாளை நடத்த வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு .. பதிவாளர் நடவடிக்கைக்கு இடைக்கால தடை

தினத்தந்தி : தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை திட்டமிட்டபடி 23-ந் தேதி (நாளை) நடத்த வேண்டும் என்றும், இந்த தேர்தலை நிறுத்தி வைத்து சங்க பதிவாளர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தும் சென்னை ஐகோர்ட்டு பரபரப்பு உத்தரவை பிறப்பித்தது.
சென்னை, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்தலில் நடிகர் நாசர் தலைமையில் பாண்டவர் அணியினரும், நடிகரும், இயக்குனருமான கே.பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியினரும் மோதுகின்றனர். இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, நாளை நடைபெற இருந்த நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைத்து மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது விஷால் சார்பில் மூத்த வக்கீல் ஓம்பிரகாஷ் ஆஜராகி வாதாடுகையில் கூறியதாவது:-
தொழில்முறை ஆயுட்கால உறுப்பினர்கள், தொழில்முறை ஆண்டு சந்தா உறுப்பினர்கள் ஆகியோருக்கு மட்டுமே வாக்குரிமை உள்ளது. தொழில்முறை அல்லாத ஆயுட்கால உறுப்பினர்கள், தொழில்முறை அல்லாத ஆண்டு சந்தா உறுப்பினர்களுக்கு வாக்குரிமை கிடையாது.

ஈழத்து சே குவேரா.. பத்மநாபாவின் நினைவுநாள்.. ஜூன் 19ம் .. ஈழமக்கள் இழந்த ஒப்பற்ற தலைவர்

இலங்கைநெற் -: ஸ்ரான்லி ராஜன் : பிரபாகரனுக்காகவும் புலிகளுக்காகவும்
செத்தவர்களை மாவீரர்கள் என சொல்லி ஒப்பாரி வைக்கும் கூட்டம் உண்டு, ஆனால் புலிகளால் கொல்லபட்ட தமிழ் போராளிகளுக்கு தியாகிகள் தினம் என அனுசரிக்கபடும் இந்நாளும் உண்டு
அப்படியும் ஒரு நாள் அனுசரிக்கபடும், தமிழகத்தில் இதெல்லாம் தெரிவதில்லை, நாம் அனுசரிப்போம்
ஜூன் 19ம் நாள் ஒப்பற்ற ஈழபோராளி பத்மநாபாவின் நினைவுநாள், சிந்தனை செல்வம் அழிக்கபட்டுவிட்டது, இனி ஈழதமிழருக்கு மிஞ்சுவது கண்ணீரும், ரத்த ஆறும் என்பது அன்றே குறிக்கபட்டது.
பத்மநாபாவின் மரணம் தமிழகத்தை பெரும் சுடுகாடாக்கும் திட்டத்தின் முதல்புள்ளி, இனி என்னவெல்லாம் நடக்குமோ என மனிதநேயம் கொண்டோர்கள் எல்லாம் அஞ்சி புலம்ப அதற்கு விடை மறுவருடம் மே 21 1991ல் கிடைத்தது. மிகசிறிய வயதிலே பெரும் பக்குவமான பெரும்பணியினை செய்து அழியாபுகழ்பெற்றவர் பத்மநாபா.
ஈழம் என்றால் புலிகள், தமிழர் என்றால் புலிகள், புலிகளை ஆதரிக்காவிட்டால் தமிழரில்லை என்பதெல்லாம் அவரவர் விருப்பம். ஆனால் அழிவுகளை குறைத்து சர்வதேச நகர்வுக்கு ஏற்பபோராடி ஈழமக்களை வாழவைக்கமுடியும் என்ற யதார்த்த உண்மையையில் போராடிய “தமிழர்”தான் பத்மநாபா.

கோடம்பாக்கத்தில் அவர் 1990ல் மரித்தபொழுதே ஈழம் இனி மலராது என அடித்து சொன்ன அனுபவஸ்தவர்கள் உண்டு, தமிழர்களின் பெரும்

ADMK அமைச்சர்களின் வீடுகளுக்கு தடையற்ற தண்ணீர் லாரி .. தமிழ் ஊடகங்கள் மறைப்பு .. ஆங்கில ஊடகம் .. வீடியோ


Kokkarakko Sowmian : நேற்று டைம்ஸ் நவ் தேசிய ஆங்கில ஊடகத்தில்... ஒரு ஸ்டிங் ஆபரேஷன் நடத்தி...
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் மக்கள் ஒரே ஒரு குடம் குடிநீருக்கே பிச்சை எடுக்காத குறையாக அலைந்து கொண்டிருக்கும் நிலையில்... குடிநீர் இல்லாமையால்.... ஒட்டுமொத்த மாநிலமே, நிலை தடுமாறி நிற்கின்ற நிலையில்....
முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அதிமுக முக்கிய பிரமுகர்கள் வீடுகளுக்கு 9000 லிட்டர் கார்ப்பரேஷன் தண்ணீர் தினமும் மூன்று வேளை சப்ளை செய்வதை அப்பட்டமாக படம் பிடித்து காட்டி விட்டனர்..!
அவர்கள் அத்தோடு விடாமல் அதிமுகவின் ஒரே ஒரு எம்பியான ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாரை தொலபேசியில் அழைத்து... அதற்கான விளக்கம் கேட்க...
அதற்கு அவரோ நான் டெல்லியில் இருக்கின்றேன்... அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று தெனாவெட்டாக பதில் அளிக்க...
மக்கள் தவிக்கும் போது உங்கள் வீட்டுக்கு அதுவும் மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய கார்ப்பரேஷன் தண்ணியை பயன்படுத்துவது... அதிலும் தேவைக்கு அதிகமாக பயன்படுத்துவது நியாயமா என்று கேட்க...
அந்த கல்வெட்டு எம்பி மீண்டும்... நான் குடியரசு தலைவர் மீட்டிங்கில் இருந்தேன்... அதனால் அது பற்றி எனக்குத் தெரியாது என்று பந்தா காட்ட...
குடியரசு தலைவரோடு வெறும் ஐந்து நிமிடம் தான் உங்கள் சந்திப்பு எல்லாம்... அதுவும் நேற்றே முடிந்து விட்டது... என்று நெறியாளர் அசால்ட் காட்ட...
நம்ம கல்வெட்டு புகழ்... சேர சோழ பாண்டிய மன்னர் வகை புகழ் எம்பியோ ஃபோன் இணைப்பை துண்டித்து ஓடி விட்டார்..!

வெள்ளி, 21 ஜூன், 2019

சென்னை ராட்டினம் அறுந்து விழுந்து விபத்து - பூங்காவை மூட காவல்துறை உத்தரவு வீடியோ


மாலைமலர் :சென்னையில் உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இதன் விளைவாக அந்த பூங்காவை மூட காவல்துறை உத்தரவிட்டுள்ளது. பூந்தமல்லி: பூந்தமல்லியை அடுத்த பழஞ்சூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு பூங்கா உள்ளது.
இங்கு ‘ப்ரீ பால் டவர்’ எனப்படும் ஒரு ராட்டினம் உள்ளது. மிக உயரமான ராட்சத இரும்பு தூணின் இருபுறமும் இரும்பு தொட்டில்போல் அமைக்கப்பட்டு இருக்கும். அதில் பொதுமக்கள் அமர்ந்ததும், ஒன்றன்பின் ஒன்றாக மேலே செல்லும் இரும்பு தொட்டில்கள், அங்கிருந்து வேகமாக கீழே இறங்கும்.
இந்த ராட்டினத்தில் ஏராளமான பொதுமக்கள் ஏறி உற்சாகமாக விளையாடி கொண்டிருந்தனர்.
அந்த ராட்டினத்தின் ஒரு பகுதியில் உள்ள இரும்பு தொட்டில் ‘ரோப்’ திடீரென அறுந்ததால் அந்த தொட்டில் கீழே விழுந்தது.
நல்லவேளையாக இரும்பு தொட்டில் கீழே இறங்கி வந்தபோது குறைந்த உயரத்தில் இருந்து ‘ரோப்’ அறுந்து விழுந்ததால் அதில் பயணம் செய்தவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

தெலுங்கான பாஜக எம்பி தன்தலையில் தானே கற்களால் அடித்துவிட்டு .. நாடகம் விடியோவில் அம்பலம்


ராஜா சிங்vikatan.com - சத்யா கோபாலன் :
தெலங்கானா சட்டமன்றத்தில், ராஜா சிங் மட்டுமே ஒரே ஒரு பா.ஜ.க எம்.எல்.ஏ-வாக உள்ளார். இவர், தன் செயலால் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். அதன் வரிசையில் தற்போது, மீண்டும் ஒரு பெரிய பிரச்னையில் சிக்கியுள்ளார்.<
நேற்று முன்தினம், அதாவது புதன்கிழமை நள்ளிரவு 2 மணியளவில், ராஜா சிங் தன் ஆதரவாளர்களுடன் ஹைதராபாத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட வீராங்கனையான ராணி அவந்தி பாய் சிலை அருகில் வந்து, அங்குள்ள பழைய சிலை எடுத்துவிட்டு புதுச் சிலையை நிறுவப்போவதாகத் தெரிவித்துள்ளார். இந்தத் தகவல் அறிந்ததும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து, ‘ புதிய சிலை நிறுவ உங்களிடம் அனுமதி உள்ளதா’ எனக் கேட்டுள்ளனர். அதற்குள் போலீஸாருக்கும் ராஜா சிங் ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தங்கத்தமிழ் செல்வன் அதிமுகவில் இணைகிறார் .. ராஜ்யசபா எம்பியாகிறார் ....

ammk
நக்கீரன் : நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டவர் தங்க தமிழ்ச்செல்வன். இவர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.களில் ஒருவர் ஆவார். நேற்று தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் பேசிய அவர், தினகரனின் அமமுக கட்சியை மக்கள் ஏற்கவில்லை என்று கூறினார். இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காகவே கட்சி ஆரம்பித்தோம். ஆனால் மக்கள் நாங்கள் தனி சின்னம் பெற்று போட்டியிட்டதை ஏற்கவில்லை என்றும் கூறினார்.

கண்டமங்கலம் அருகே காதலன் கண் முன்பு காதலி பாலியல் பலாத்காரம்

மாலைமலர் : கண்டமங்கலம்: விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியை சேர்ந்த 18 வயது பெண் ஒருவரும், சூரமங்கலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரும் நல்லூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். அப்போது அவர்கள் 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது. அவர்கள் 2 பேரும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் அவர்கள் 2 பேரும் பள்ளி நேலியனூர் ரெயில்வே கேட் அருகே உள்ள பள்ளிச்சேரி வயல் வெளியில் இரவு அமர்ந்து பேசி கொண்டிருந்தனர்.
அப்போது அந்த பகுதியில் பள்ளிச்சேரி கிராமத்தை சேர்ந்த 4 வாலிபர்கள் மதுக்குடித்து கொண்டிருந்தனர். காதல் ஜோடி தனியாக அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதை அவர்கள் பார்த்தனர்.
பின்னர் அவர்கள் 4 பேரும் காதல் ஜோடியின் அருகில் சென்றனர். அவர்களை பார்த்து காதல் ஜோடி அதிர்ச்சியடைந்தது. உடனே அங்கிருந்து செல்ல முயன்றனர். ஆனால் அந்த வாலிபர்கள் காதல் ஜோடியை அங்கிருந்து செல்ல விடாமல் சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்கள் அந்த பெண்ணின் காதலனை சரமாரியாக தாக்கினர்.
இதையடுத்து காதலனின் கண் முன்பே அந்த பெண்ணை வாலிபர்கள் 4 பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.

தினகரனுடன் வாக்குவாதம்: எடப்பாடியை சந்திக்கிறார் தங்கம்

மின்னம்பலம் : டிஜிட்டல் திண்ணை:    தினகரனுடன்  வாக்குவாதம்:  எடப்பாடியை சந்திக்கிறார் தங்கம்மொபைல் டேட்டாவை ஆன் செய்தபோது, வாட்ஸ் அப்பில் நிறைய மெசேஜ்கள் வந்து விழுந்தன. ‘மிக முக்கியச் செய்தி’ என்று அழுத்தமாய் குறிப்பிட்டு வந்தது
“அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், அக்கட்சியில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் சேர்வது உறுதியாகிவிட்டது. ஏற்கனவே சில மாதங்களாக தங்க தமிழ்ச்செல்வனுக்கும் தினகரனுக்கும் இடையிலான நெருக்கம் குறைந்துகொண்டே வந்த நிலையில், கடந்த சில தினங்களில் நடந்த சம்பவங்கள் தங்க தமிழ்ச்செல்வனின் விலகலை உறுதிப்படுத்துகின்றன.
ஜுன் 18 ஆம் தேதி தேனி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆர் ஆர் விடுதியில் தங்க தமிழ்ச்செல்வன் தேனி மாவட்ட அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டினார். தேர்தல் தோல்வி பற்றிய ஆலோசனை செய்வதற்காக இந்த கூட்டத்தை நடத்தினார் தங்க தமிழ்ச்செல்வன். 22 ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் இருந்து ஆய்வுக் கூட்டங்களை தினகரன் தொடங்கும் நிலையில், தேனியில் தங்கம் நடத்தும் இந்த திடீர் கூட்டம் பற்றி தினகரனுக்குத் தெரியவந்திருக்கிறது. தேனியில் இருக்கும் தனது உறுதியான ஆதரவாளர்கள் சிலரிடம் கூட்டம் பற்றி விசாரித்திருக்கிறார் தினகரன்.

5 கோடி ரூபாய் கடனுக்காக ரூ.100 கோடி சொத்துகள் ஏலம்!' - விஜயகாந்தை முன்வைத்து நடக்கிறதா 5 நாடகங்கள்?

விஜயகாந்த் சொத்துகள் ஏலம்` 5 கோடி ரூபாய் கடனுக்காக ரூ.100 கோடி சொத்துகள் ஏலம்!'  - விஜயகாந்தை முன்வைத்து நடக்கிறதா 5 நாடகங்கள்?ஆ.விஜயானந்த் விகடன் : ஐ.ஓ.பி வங்கியில் விஜயகாந்த் குடும்பத்துக்குப் பத்துக்கும் மேற்பட்ட கணக்குகள் உள்ளன. கட்சி, மண்டபம், கேப்டன் ஃபார்ம்ஸ், கல்லூரி என அனைத்துக்குமான கணக்கு வழக்குகளை ஐ.ஓ.பி வங்கிதான் கவனித்து வருகிறது. நீண்டகாலமாக இந்த வங்கி நிர்வாகத்துடன் விஜயகாந்த் குடும்பத்துக்கு நட்பு இருக்கிறது.
` தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்தின் 100 கோடி மதிப்பிலான சொத்துகள் ஏலம்' - இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இன்று வெளியிட்டுள்ள ஏல அறிவிப்பு தே.மு.தி.க தொண்டர்களிடம் மட்டுமல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ` இப்படியொரு நல்ல மனிதரின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் எப்படியெல்லாம் அவதூறுகளை அள்ளித் தெளித்தனர்' என்ற உணர்வையும் பரவலாகக் காண முடிகிறது.
சென்னை, அண்ணா சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ` கீழே குறிப்பிட்டுள்ள கடன்தாரர்/ஜாமீன்தாரர்கள் ஆகியோரிடமிருந்து பெற வேண்டிய கடன்பாக்கித் தொகையான ரூ.5,52,73,825 மற்றும் வட்டி, இதர செலவுகளை வசூலிப்பதற்காக கீழ்க்கண்ட அசையாச் சொத்துகளை `உள்ள இடத்தில் உள்ளவாறு', `உள்ளது உள்ளவாறு' மற்றும் `எந்த நிலையில் உள்ளதோ அந்த நிலையிலேயே' என்ற அடிப்படையில் 26.7.2019 அன்று விற்பனை செய்யப்படும் என இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது' எனக் குறிப்பிட்டு, விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் அறக்கட்டளையின் சொத்து விவரம், சாலிகிராமம் காவேரி தெரு மற்றும் வேதவள்ளி தெருவில் உள்ள விஜயகாந்தின் வீடு மற்றும் வணிக வளாகம் ஆகிய ஏலம் வரக் கூடிய சொத்துகளைப் பற்றி விவரித்துள்ளது வங்கி நிர்வாகம். இதற்கான குறைந்தபட்சக் கேட்புத் தொகையும் வெளியிடப்பட்டுள்ளது. 

menstrual cup.. பெரும்பாண்மை பெண் சமூகத்திற்கு பிரயோஜனப்படாதது?


Dr.Parthi Ravichandran : கேரள மாநிலம், ஆலப்புழ நகராட்சி சார்பில் பெண்களுக்கு 5000 menstrual cupகள் வழங்கியிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தேன்!
ஏற்கனவே நான் ஒருமுறை பதிவிட்டிருந்ததைப் போல, இது எந்த வகையிலும் பெரும்பாண்மை பெண் சமூகத்திற்கு பிரயோஜனப்படாதது. மட்டுமல்ல இதன் மூலம் ஏற்படும் சமூக-சுகாதார விளைவுகள் அச்சமூட்டுபவை.
1. இந்த கப்கள் வெகுநிச்சயமாக மணமாகாத (உடல்உறவில் ஈடுபடாத) பெண்களுக்கு ஏற்றதல்ல. *
2. 4 முதல் ஆறுமணி நேரத்திற்கு ஒருமுறை, அல்லது அதிக உதிரப்போக்கு இருக்கும் 2/3ம் நாட்களில் இதை அதிக முறை re insert செய்யவேண்டியதும், ஒவ்வொரு முறையும் 20ml க்கு குறையாத frank menstrual bloodக்கு expose ஆவதும். அதை சுகாதார முறையில் கழிவறைகளில் dispose செய்வதற்கு நம்முடைய public sanitation infrastructure எந்த வகையிலும் உதவவே உதவாது.
3. Introducing cups to vagina cavity என்பது அத்தனை சுலபமில்லை. மிகச்சாதாரண பெண்களுக்கு இதை கொண்டுபோய் சேர்ப்பது சாத்தியமில்லை. Cupகளை கொடுத்துவிட்டு, user manualம் கூடவே சேர்த்து கொடுத்துவிட்டால் முடிந்துவிடும் காரியம் இல்லை இது. It need live demonstrations.

இந்தியாவைப் பாதிக்கும் அமெரிக்க விசா கட்டுப்பாடு!

இந்தியாவைப் பாதிக்கும் விசா கட்டுப்பாடு!  மின்னம்பலம் : அமெரிக்காவில் வழங்கப்படும் ஹெச்1பி விசா விதிமுறைகளைக் கடுமையாக்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ள நிலையில், இதனால் இந்திய ஐடி துறையினர் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்று தொழில்துறைக் கூட்டமைப்பான நாஸ்காம் எச்சரித்துள்ளது.
இந்தியா, சீனா உள்ளிட்ட உலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் தங்கிப் பணிபுரிவதற்கு அமெரிக்க அரசால் ‘ஹெச்1பி’ விசா வழங்கப்படுகிறது. இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறை (ஐடி) நிறுவனங்கள் மற்றும் ஐடி பணியாளர்களுக்கு இந்த விசாக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. இந்த விசா வைத்திருப்பவர்கள் மூன்று ஆண்டுகள் அமெரிக்காவில் தங்கிப் பணிபுரியலாம். அவர்களது பணி சிறப்பாக அமையும்பட்சத்தில் மேலும் மூன்று ஆண்டுக் காலம் இந்த விசாவை நீட்டித்துக்கொள்ளலாம். இந்த நிலையில் அமெரிக்க அரசு தனது விசா கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க முடிவு செய்துள்ளதால் இந்திய ஐடி பணியாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

விடுதலை சிறுத்தை பிரமுகர் குடோனில் தடை செய்யப்பட்ட 4 டன் போதை பாக்குகள்

vvnakkheeran.in - raja : வேலூர் மாநகரம் சைதாப்பேட்டை பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளராக உள்ளார் முகமது இப்ராகிம். இவருக்கு சொந்தமாக அந்த பகுதியில் குடோன் ஒன்று உள்ளது. அந்த குடோனில் ஜீன் 20ந்தேதி குற்ற நுண்ணரிவு பிரிவு போலிஸார் திடீரென ஆய்வு செய்தனர். 
ஆய்வில் அந்த குடோனில் இருந்து 4 டன் அளவுள்ள தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட போதை பாக்குகள் விற்பனைக்கு இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதை விற்பனை செய்தது யார், இந்த குடோனில் இருந்து எங்கெங்கு விற்பனைக்கு செல்கிறது போன்ற விபரங்களை குற்ற நுண்ணரிவு பிரிவு போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோடியை விமர்சித்த..குஜராத் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு ஆயுள் தண்டனை ..


சஞ்சீவ்vikatan.com - பழனியப்பன் பிரதமர் நரேந்திர மோடியை சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சித்துவந்த முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு, லாக்அப் மரணம் தொடர்பான ஒரு வழக்கில் ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான சஞ்சீவ் பட், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். 1990-ம் ஆண்டு இவர், ஜாம்நகரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்தபோது நிகழ்ந்த ஒரு காவல்நிலைய மரணம் தொடர்பான வழக்கில், தற்போது இவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பி.ஜே.பி தலைவர் எல்.கே.அத்வானி தலைமையில் நடைபெற்ற ரத யாத்திரையையொட்டி, 1990-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி பொது வேலைநிறுத்தம் நடைபெற்றுள்ளது.
அப்போது, ஜம்ஜோத்பூர் என்ற கிராமத்தில் கலவரம் ஏற்படுகிற சூழல் ஏற்பட்டதால், சஞ்சீவ் பட் தலைமையிலான போலீஸ் படை அங்கு அனுப்பிவைக்கப்பட்டது.

வியாழன், 20 ஜூன், 2019

2020ல் சென்னையில் நிலத்தடி நீர் இருக்காது,, நிதி அயோக் ஆய்வு

தினமலர் :புதுடில்லி : 2020 ம் ஆண்டில் டில்லி,
சென்னை உள்ளிட்ட 21 நகரங்களில் நிலத்தடி நீர் முற்றிலும் இல்லாமல் போகும் என நிடி ஆயோக் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரித்துள்ளது.
நிலத்தடி நீர்மட்டம் குறித்த ஆய்வு அறிக்கையை நிடி ஆயோக் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் படி, 2020ல் டில்லி, சென்னை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட 21 இந்திய நகரங்களில் நிலத்தடி நீர் முற்றிலும் இல்லாமல் வறண்டு போகும் நிலை ஏற்படும்.
இதனால் 100 மில்லியன் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். 2030 ல் ஏறக்குறைய இந்தியாவின் 40 சதவீதம் மக்களுக்கு குடிநீரே இல்லாமல் போகும் நிலை ஏற்படலாம். இந்த அபாய நிலையை எச்சரிப்பதற்கான சூழல் 2020 ம் ஆண்டிலேயே துவங்கும். சென்னையில் உள்ள 3 நதிகள், 4 நீர் ஆதாரங்கள், 5 நீர்நிலைகள், 6 வனப்பகுதிகள் முற்றிலும் வறண்டு போகும்.
இருப்பினும் மற்ற மெட்ரோ நகரங்களில் நீர்நிலையில் போதிய அளவிலும், மழையும் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தேசிய நீர்வள கழக முன்னாள் இயக்குனர் மனோகரன் குஷலானி கூறுகையில், கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தை கொண்டு வர தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் இதற்கு அதிக செலாகும். அத்துடன், புவியில் குறிப்பிட்ட அளவே நீர் உள்ளது.

சொந்த கார்களின் மீது அரசு ஸ்டிக்கர்களை ஒட்டியே ஏமாற்றி 18 கோடிகளை சுருட்டிய.. ..

Gov Office Driver was arrested who defrauded 18 people in Karur
Gov Office Driver was arrested who defrauded 18 people in Karur tamil.oneindia.com - hemavandhana : மக்களை ஏமாற்றி கோடிகளில் சம்பாதித்த ஓட்டுநர்-
Gov Office Driver was arrested who defrauded 18 people in Karur கரூர்: சும்மா பேருக்குதான் இவர் டிரைவர் வேலை பார்க்கிறார். ஆனா இப்படி கோக்குமாக்கு வேலை பண்ணி, அந்த பணத்தில் சொசுகு கார்களை வாங்கி வைத்து உல்லாசத்தில் வாழ்வார் என்று யாராலும் நினைச்சுகூட பார்க்க முடியாது!
இப்படி பித்தலாட்டம் செய்தவருக்கு வயசு 39, பெயர் என்ன தெரியுமா.. "டிவன் காந்த்"... இந்த பெயரை அவராகவே வெச்சிக்கிட்டாரா, அல்லது இவரை நம்பி ஏமாந்த மக்கள் வழங்கிய பட்டமா என தெரியவில்லை. இவர் கரூர் வணிகவரித்துறை ஆபீசில் ஒரு சாதாரண டிரைவர். ஆனால் ஊருக்குள்ள கலர் கலர் ரீலாக அவிழ்த்து விட்டிருப்பார் போல இருக்கு. அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 18-க்கும் மேற்பட்ட நபர்களிடம் பல கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்துள்ளார். அதிலேயே ஒரு பெரிய பங்களா கட்டிவிட்டார். வீட்டு முன்னாடி நிறைய சொகுசு கார்களையும் வாங்கி நிறுத்திவிட்டார். ஆனால் இன்னும் ஒருத்தருக்கும் வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் தரவில்லை.

மஞ்சுநாதனிடம் இருக்கும் வீடியோ; போட்டோக்களை அழியுங்கள்!' - கமிஷனரிடம் நடிகை நிலானி

vikatan.com - எஸ்.மகேஷ் - கே.ஜெரோம் : `என் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் போட்டோக்கள் மஞ்சுநாதனிடம் உள்ளன. அவற்றைக் கைப்பற்றி அழித்துவிடுங்கள்' என்று நடிகை நிலானி, போலீஸ் உயரதிகாரிகளிடம் கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார்.
சென்னை போரூரைச் சேர்ந்தவர் நடிகை நிலானி. இவர், இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, ``கடந்த 9 மாதங்களுக்கு முன் சில நிகழ்வுகளால் என்னைக் குறித்த செய்திகள் வெளியாகின. அதைப்பார்த்த சிலர் எனக்கு உதவி செய்வதாகக் கூறினார்கள். அதில் ஒருவர் மஞ்சுநாதன். அவர் என்னிடம் வெளிநாட்டில் இருப்பதாகவும் இந்தியா வரும்போது உதவி செய்வதாகவும் கூறினார். என்னுடன் நண்பர்போல பழகினார். நேரில் என்னைச் சந்தித்தபோது மஞ்சுநாதன், தனக்கு திருமணமாகவில்லை. இதனால் என்னைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவதாகக் கூறினார். நானும் என்னுடைய குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு மஞ்சுநாதனிடம் உங்களுடைய பெற்றோர் சம்மதித்தால் திருமணத்துக்குச் சம்மதம் என்று கூறினேன். இந்தச் சமயத்தில் எனக்கு செல்போன் வாங்கித் தந்தார். ரகசியமாகத் திருமணம் செய்ய என்னை வற்புறுத்தினார்.

மழை . சென்னை தரமணி, சோழிங்கநல்லூர், ஆலந்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக....

சென்னையில் தரமணி, சோழிங்கநல்லூர், ஆலந்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழைதினத்தந்தி : சென்னையில் தரமணி, சோழிங்கநல்லூர், ஆலந்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை சென்னையின் பல இடங்களில் ஆறு மாதங்களுக்கு பிறகு பரவலாக மழை பெய்து வருகிறது. வெயில் வாட்டி வதைத்த நிலையில் மழையால் வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோவிலம்பாக்கம், குன்றத்தூர், பெருங்குடி, மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. திருப்போரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, பூந்தமல்லி, நசரத்பேட்டை, தரமணி, சோழிங்கநல்லூர், ஆலந்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.;

நாங்குநேரி தொகுதியை திமுகவிற்கு விட்டு கொடுக்க... காங்கிரஸ் மேலிடம் தயார்?

dmk
நக்கீரன் : முடிந்த தேர்தலில் தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணி ஒரு இடத்திலும், திமுக, காங்கிரஸ்  கூட்டணி 37 இடங்களிலும் வெற்றி பெற்றது. தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஜூன் 18ஆம் தேதி பதவி ஏற்று கொண்டனர். அனைவரும் தமிழில் பதவி ஏற்று கொண்டது தமிழக மக்களால் வரவேற்கப்பட்டது. தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவி காலம் முடிய போகும் நிலையில், மீண்டும் ராஜ்ய சபா உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க திமுக, அதிமுக கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் திமுக சார்பாக 3 ராஜ்யசபா எம்.பி.களையும், அதிமுக சார்பாக 3 ராஜ்யசபா எம்.பி.களையும் தேர்ந்தெடுக்க முடியும்.

தெலுங்கு தேசம் கட்சியின் 4 ராஜ்யசபா எம்பிக்கள் பாஜகவில் ஐக்கியம்

தெலுங்கு தேசம் கட்சியின் 4 மாநிலங்களவை எம்.பி.க்கள் பா.ஜ.வில் இணைந்தனர்
மாலைமலர் : தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.க்கள் 4 பேர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் இன்று அக்கட்சியில் இணைந்தனர்.
புதுடெல்லி: பாராளுமன்றத் தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற்றது. சட்டசபைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் தோல்வியை தழுவியது.
பாராளுமன்றத் தேர்தலில் 3 தொகுதிகளில் மட்டுமே தெலுங்கு தேசம் வென்றது. மாநிலத்தில் ஆட்சியை இழந்ததுடன் பாராளுமன்ற எம்.பி.க்களின் எண்ணிக்கையும் குறைந்தது. இந்நிலையில், ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.க்கள் 4 பேர், பா.ஜ.க. செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் டெல்லியில் இன்று அக்கட்சியில் இணைந்தனர்.

மயிலாப்பூர் 40 வயது பெண்ணோடு 24 வயது இளைஞன் தொடர்பு .. கூலிப்படை வைத்து கணவன்

m.dailyhunt.in : சென்னை மயிலாப்பூரில் வாலிபர் ஒருவர் நடு ரோட்டில் ஒட விரட்டி விரட்டி மர்ம கும்பல் வெட்டிய சம்பவம் காண்போரை அதிர்ச்சி யில் உறைய செய்வதாக இருந்தது.
சென்னை, மயிலாப்பூர் பல்லக்குமாநகரைச் சேர்தவர் தினேஷ்குமார் இவர் எதர்ச்சியாக ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த ஆட்டோவில் இருந்து சில மர்ம நபர்கள் கூர்மையான அரிவாளைக்கொண்டு தினேஷை தாக்க முயற்சி செய்தனர்.
சுதாரித்து கொண்டு ஓடத் துவங்கிய தினேஷை அந்த மர்ம நபர்கள் விடாமல் துரத்தி சென்று விரட்டி சரமாரியாக தாக்க நேரில் பார்த்த பொது மக்கள் செய்வது அறியாமல் திகைத்து போனார்கள். இது குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார் இரத்த வெள்ளத்தில்க் கிடந்த தினேஷ்குமாரை மீட்டு அருகில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்ப, மிக மோசமான உடல் நிலையில் இருந்த தினேஷ் அங்கிருந்து உடனடியாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

BBC : எம்.ஹெச் 17 மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பாக நால்வர் மீது வழக்கு

கிழக்கு உக்ரைனில் 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் விழுந்து நொறுங்கிய
மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக நான்கு பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இகோர் கிர்கின், செர்கெய் டுபின்ஸ்கி மற்றும் ஒலெக் புல்டோவ் ஆகிய மூன்று ரஷ்யர்களும் லியோனிட் கார்சென்கோ என்னும் ஓர் உக்ரைன் நாட்டவரும் விமானத்தை எரி கணைகளை கொன்று சுட்டு வீழ்த்தி, பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 298 பேரை கொலை செய்ததாக நெதர்லாந்து விசாரணையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பான நீதிமன்ற வழக்கு நெதர்லாந்தில் 2020 மார்ச்சில் தொடங்கவுள்ளது.
ஜூலை 17 ஆண்டு ஆம்ஸ்டார்டாமில் உள்ள ஷிபோல் விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய எம்.ஹெச் 17 விமானம் அடுத்த நாள் மலேசிய தலைநகர் கோலாலம்பூரை அடைய இருந்தது.
புறப்பட்ட சில மணி நேரங்களில் ரஷ்ய - உக்ரைன் எல்லையில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வான்வெளியில் பறந்துகொண்டிருந்தபோது தொடர்பை இழந்தது.

குடிநீர் பிரச்சினையை அரசியலாக்கக் கூடாது.. அமைச்சர் ஜெயக்குமார் ..

D.Jayakumar says that Water problem should not be politicised
/tamil.oneindia.com - lakshmi-priya.: சென்னை: குடிநீர்
பிரச்சினையை அரசியலாக்கக் கூடாது என அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறுகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது பற்றி முழுவதும் விவாதிக்கப்பட வேண்டியதுள்ளது. சட்டசபை தேர்தல் வெவ்வேறு தேதிகளில் நடத்தப்படுகிறது. ஆனால் மக்களவை  தேர்தல் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடத்தப்படுகிறது.
 இதனால் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அதற்கெல்லாம் விடைகள் காணப்பட வேண்டும். இந்த விஷயத்தில் அரசின் சார்பிலும் கட்சியின் சார்பில் கருத்து தெரிவிப்போம். நீர் மேலாண்மையை பொருத்தமட்டில் தமிழக அரசு எவ்வளவு செய்ய முடியுமோ அநத அளவுக்கு பணிகளைச் செய்துள்ளது.
குடிமராமத்து பணிகள் போன்ற பல்வேறு பணிகள் போன்ற பல்வேறு பணிகள் நடந்த வருகின்றன. நிகழ் நிதியாண்டில் கூட குடிமராமத்து திட்டப் பணிக்கு ரூ 499 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தண்ணீர் ..: ஜூன் 22 முதல் திமுக சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!!

தாகத்தில் தமிழகம்: ஜூன் 22 முதல் DMK சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!!zeenews.india.com:  தண்ணீர் பிரச்னைக்காக மாவட்டந்தோறும் ஜூன் 22 முதல் திமுக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!! தண்ணீர் பிரச்னைக்காக மாவட்டந்தோறும் ஜூன் 22 முதல் திமுக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!!
கோடை ஆரம்பித்ததில் இருந்தே தண்ணீர் பஞ்சம் காரணமாக மக்கள் பகல் இரவு பாராமல் தண்ணீருக்காக குடங்களை தூக்கிக் கொண்டு அலையும்  காட்சி ஆங்காங்கே அரங்கேறி வருகிறது. தண்ணீர் வழங்கக் கோரி, தமிழகத்தின் பல்வேறு பகுதியில் காலிக்குடங்களை சாலையில் வைத்து போராட்டமும் நடைபெற்று வருகிறது. சராசரி மழையை விட குறைவாக மழைப் பெய்ததே இந்த தண்ணீர் பஞ்சத்திற்கு காரணம் என அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
மேலும், சென்னையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், நகரவாசிகள் தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். சென்னை நகரம் கிட்டத்தட்ட 200 நாட்கள் வானம் பார்த்த பூமியாக இருப்பதாலும், வெயில் சுட்டெரிப்பதாலும் நீர் நிலைகள் வறண்டுவிட்டன.