சனி, 14 ஜனவரி, 2012

தில்லியின் தாழ்வு மனப்பான்மை Google Facebook youtube

கூகிள் - ஃபேஸ்புக் - தில்லி உயர்நீதிமன்றம்

சீனாவில் செய்கிறார்களே  தில்லியின் தாழ்வு மனப்பான்மை 
கூகிள், பேஸ்புக் போன்றவை தத்தம் தளங்களில் உள்ள ‘ஏற்கத்தகாத விஷயங்களை’ (Objectionable materials) நீக்குவதற்கு ஒரு முறையை ஏற்படுத்தாவிட்டால், சீனாவில் நடப்பதைப் போல அவர்களுடைய தளங்கள் தடை செய்யப்படும் என்று தில்லி உயர்நீதிமன்றத்தில் இப்போது நடந்துகொண்டிருக்கும் வழக்கு ஒன்றில் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

நீதிபதிக்கு தொழில்நுட்பம் பற்றிய புரிதல் இல்லை என்று நினைக்கிறேன். கூடவே, கூகிள், ஃபேஸ்புக் இன்னபிற சோஷியல் தளங்கள் பற்றிய புரிதலும் குறைவாக உள்ளது என்றே கருத வாய்ப்புள்ளது. அவர் எதிர்பார்ப்பதைச் செய்வது என்பது தொழில்நுட்ப ரீதியில் மிகக் கடினமானது. சொல்லப்போனால் செய்யவே முடியாத ஒன்று.

இப்படிப் பேச்சு வரும்போதெல்லாம் சீனாவில் செய்கிறார்களே என்ற கேள்வி எழுகிறது. சீனாவில் எம்மாதிரியான தணிக்கை முறை இணையத்தில் நிலவுகிறது என்பதை விக்கிபீடியாவில் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

மனிதனை மனிதன் தூக்குவது பச்சைப் பார்ப்பனக் கொடுமையாகும்!

சிறீரங்கம் அர்ச்சகப் பார்ப்பனர்களை சூத்திரர்கள் தூக்க வேண்டும் என்ற கருத்தினால் சுவரொட்டி ஒட்டுவதா? மாபெரும் கிளர்ச்சி வெடிக்கும் - எச்சரிக்கை!
தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை
சிறீரங்கம் கோவில் அர்ச்சகர்ப் பார்ப்பனர் களைப் பல்லக்கில் தூக்கிச் செல்ல வேண்டும் என்று கோரியும், சட்டப்படி நடந்து கொண்ட அதிகாரியை அச்சுறுத்தியும் சுவரொட்டி ஒட்டிய பார்ப்பனர்களைக் கண்டித்தும், சட்டப்படி நடந்து கொண்ட அதிகாரிமீது நடவடிக்கை எடுத்தால் மாபெரும் கிளர்ச்சி வெடிக்கும் என்று எச்சரித் தும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
சிறீரங்கம் கோவில் திருவிழாவின்போது (கிருத்திகா என்பது அதன் பெயர்) திருக்குறுங்குடி நம் பாடுவான் என்ற கீழ்ஜாதிபக்தன் (பக்தர்களானாலும் ஜாதி முத்திரை மாறுவதில்லை இந்த புண்ணிய பூமியில்) ஆண்டவன் நாராயணன் பற்றிப் பாடுவானாம். துவாதசி 12ஆம் நாள் அன்று பிரம்ம ராட்சசர்கள் (பார்ப்பனர்களாக இருந்து சாபத்திற்கு ஆளானவர்கள் தான் பிரம்ம ராட்சசர்கள் என்று சொல்லப்படுவது கர்ண பரம்பரைக் கதை) இந்த கீழ்ஜாதியானைக் கண்டு பொறாமைப்பட்டு இவனை விழுங்கி விட விரும்பினார்களாம்; அவனோ நான் நாராயணன்மீது பாடி பூஜை முடிக்கும்வரை காத்திருந்து பிறகு என்னை விழுங்குங்கள் என்று வேண்டினானாம்! இந்தப் பக்தியைக் கண்டு அந்த ராட்சசர்களே இரங்கினார்கள் - பிறகு மோட்சத்திற்கு போய் விட்டானாம் அவன்.
மனிதனை மனிதன் தூக்குவது இன்று பொருந்துமா?

டெல்லியில் 8 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!

புதுடெல்லி: ஏர் இந்தியா விமானிகள் 12 பேர் ஒரே சமயத்தில் இன்று விடுப்பு எடுத்தால், இதுவரை 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக டெல்லியில் இருந்து சென்னை பெங்களூரு, நாக்பூர், அஹமதாபாத்துக்கு இயக்கப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் அமிர்தசரஸ், கொல்கொத்தா உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஷங்கர் மீது SRM பாரிவேந்தர் பாய்ச்சல்..பாரி பூரி கக்கூஸ் லாரி என கிண்டல் பண்ணுவதா?


Parivendhar and Shankar
இயக்குநர் ஷங்கர் பாரிவேந்தர் பெயரை வேண்டுமென்றே கிண்டலடித்து அவமானப்படுத்துவதாக இந்திய ஜனநாயக கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
பாரிவேந்தர் என்பவரது உண்மையான பெயர் பச்சைமுத்து. இவர்தான் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் மற்றும் பல தொழில் நிறுவனங்களின் உரி்மையாளர். புதிய தலைமுறை இவரது தொலைக்காட்சிதான்.
தனது பெயரான பச்சை முத்து என்பதை எந்திரன் படத்தில் ஒரு குடிகாரனுக்கு சூட்டிவிட்டார் என ஏற்கெனவே இவர் இயக்குநர் ஷங்கர் மீது குற்றம்சாட்டியிருந்தார் (ஏன், குடிப்பவர்களுக்கு பச்சைமுத்து என்ற பெயர் இருக்கக் கூடாதா என்ன?!!).

புதிய காப்பீட்டுத்திட்டத்தை கலைஞர் வரவேற்கிறார்

  தமிழக அரசின் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை வரவேற்பதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை மூடிவிட்டு, புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடங்கியிருக்கின்றனர். நான் தொடங்கிய திட்டம் மூடப்பட்டு விட்டதில் எனக்கு வருத்தமில்லை. எந்தப் பெயரிலோ, எப்படியோ திட்டம் நடைபெற்று மக்கள் பயன்பெற்றால் போதுமென்று எண்ணுகிறேன்.
திமுக அரசால் தொடங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 642 வகையான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்கப்பட்டதுக்கு மாறாக, இப்போது 1,016 வகையான நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கப் போகின்றனர் என்பதில் எனக்கு மகிழ்ச்சி.

நண்பன் படத்துக்கு முழு வரிவிலக்கு - ஜெ ஆட்சியில் வரிவிலக்கு பெற்ற முதல்படம்!

நண்பன் படத்துக்கு முழு வரிவிலக்கு அளித்துள்ளது அரசு. ஜெயலலிதா ஆட்சியில் வரிவிலக்கு பெற்றுள்ள முதல் படம் நண்பன் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் தலைப்பு வைத்தாலே போதும், வரி விலக்கு உண்டு என்று முன்பு கருணாநிதி ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டது. இதனால் தரமற்ற குப்பைப் படங்களும் தமிழில் தலைப்பு வைத்ததற்காக வரி விலக்கு பெற்றன.ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும், தமிழில் பெயர் வைத்தால் மட்டும் போதாது... அனைவரும் பார்க்கத்தக்க யு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும், தரமான படமாக இருக்க வேண்டும். அப்போதுதான் வரிவிலக்கு என நிபந்தனைகள் விதித்தது.வரிவிலக்கு பெறத் தகுதியான படங்களை தேர்வு செய்ய 22 பேர் கொண்ட குழுவையும் அமைத்தது அரசு.

MGR யாரை காங்கிரஸ் பயன் படுத்தி திமுகவை அழிக்க...untold istory


இந்திரா காந்தியின் எமெர்ஜென்சிக்குப் பின்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. ஜனதா கூட்டணி வெற்றி பெற்றது.
வேர் விடாத குரோட்டன்ஸ் செடியாக தொட்டியில் தூங்கிக் கொண்டிருந்தது. மொரார்ஜி தேசாய் பிரதமரானார். அப்போது தமிழகத்தில் எம்.ஜி.ஆரின் ஆட்சி அருவிநடை போட்டுக்கொண்டிருந்தது.
தஞ்சை நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல்; அ.தி.மு.க. ஆதரவுடன் இந்திரா போட்டியிட விரும்பினார். ஆனால் மொரார்ஜி தேசாய் அக்கினிப் பார்வை பார்த்தார்.

வெள்ளி, 13 ஜனவரி, 2012

TATA டாடா எலக்ட்ரிக் கார் 160 கிமீ தூரம் 4 பேர் அமர்ந்து செல்ல முடியும்

Tata eMo Electric Car
அடுத்த தலைமுறை அம்சங்களுடன் டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் டாடா மோட்டார்ஸ் காட்சிக்கு வைத்திருந்த ஈமோ என்ற புதிய எலக்ட்ரிக் கார் கான்செப்ட் அனைவரின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. ரூ.10 லட்சம் என்ற மிகக்குறைந்த விலை கொண்ட எலக்ட்ரிக் காராக  விற்பனை செய்ய முடியும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜெயேந்திரர் நேரில் ஆஜராக உத்தரவு

சென்னை மந்தவெளியைச் சேர்ந்தவர் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன். இவரை கடந்த 2002-ம் ஆண்டு சிலர் சேர்ந்து தாக்கினர். இதில், ராதாகிருஷ்ணன் படுகாயம் அடைந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக 2005-ம் ஆண்டு பட்டினப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜெயேந்திரர் முதலாவது நபராக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

அவரைத் தொடர்ந்து இந்த வழக்கில் சுந்தரேச அய்யர், ரகு, அப்பு, கதிரவன், சுந்தர், ஆனந்த், கண்ணன், லட்சுமணன், பூமி என்ற பூமிநாதன், குமரன் என்ற சின்ன குமரன், ரவிசுப்பிரமணியன் ஆகியோர் குற்றம்சாட்டப்பட்டனர். ரவிசுப்பிரமணியன் இந்த வழக்கில் அப்ரூவராக மாறினர்.

செல்போன் திருட்டு: சிக்கிக்கொண்ட மருத்துவக்கல்லூரி மாணவர் தற்கொலை

சேலத்தில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருபாவர் கவுதம். காஞ்சிபுரத்தை சேர்ந்த இவர் சேலத்தில் உள்ள கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகிறார்.
வரது அறையில் உடன் தங்கியிருக்கும் ஷெரின் என்பவரின் 32 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய நவீன வசதிகைக்கொண்ட புதிய செல்போன் ஓன்று கடந்த சிலதினங்களுக்கு முன்னர் காணாமல் போய்விட்டது.
ஷெரின் தொலைந்து போன தன்னுடைய செல்போனில் இருக்கும் நம்பருக்கு கூப்பிடும் போதெல்லாம் இந்த என் “சுவிச் ஆப்” செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் மட்டும் வந்தது.
இரண்டு நாட்கள் செல்போனை தேடிய ஷெரின் பிறகு, புதிதாக ஒரு போன் வாங்கிக்கொண்டு தான், முன்பு பயன்படுத்திய “சிம்” கார்டின் நம்பரையே மீண்டும் வாங்கி கொண்டு வந்து விட்டார்.

Kollywood வசூல் மழை என்பதெல்லாம் சும்மாதாங்க...!' - பிலிம்சேம்பர்

சென்னை: விளம்பரத்துக்காக படங்கள் வெளியானதும் 'மகத்தான வெற்றி... வசூல் மழை' என்றெல்லாம் நாங்களே விளம்பரம் செய்கிறோம். அதை நம்பி சேவை வரி கேட்கிறது மத்திய அரசு என்று புலம்பினர் திரையுலகின் முக்கிய சங்க நிர்வாகிகள்.
சினிமாவுக்கான சேவை வரியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இது சினிமாக்காரர்களுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

துக்ளக் விழாவில் அத்வானி- மோடி: நாளை ஜெ.- ரஜினியைச் சந்திக்கிறார்கள்!


Jaya, Modi, Advani and Rajini
சென்னை: நாளை சென்னைக்கு வருகை தரும் பாஜக மூத்த தலைவர் எல்கே அத்வானி மற்றும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆகியோர் தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்திக்கிறார்கள்.
சிங்கப்பூரில் சிகிச்சைக்குப் பிறகு உடல்நலம் பெற்று வந்திருக்கும் ரஜினியிடம் உடல் நலம் விசாரிக்கவே இந்த சந்திப்பு என கூறப்படுகிறது.
சோ நடத்தும் துக்ளக் பத்திரிகையின் 43 வது ஆண்டு விழா நாளை ஜனவரி 14-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாலை 6 மணிக்கு நடக்கிறது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பாரதீய ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

முல்லைப் பெரி​யாறு அணை.. கண்டுபிடித்த முத்து இருளப்பனும்... களம் அமைத்துக் கொடுத்த ராபர்ட்டும்


காவல் கோட்டம்’ நாவலுக்கான தேடுதலில் இருந்தபோது என்னை மலைக்கவைத்த தரவுகளில் முக்கியமானது முல்லைப் பெரி​யாறு அணையின் கட்டுமானப் பணிகளின் தொடக்க காலம்.
இன்று அரசியலுக்காக சிலர் அதை இடிக்கக் கிளம்பி இருக்கிறார்கள். ஆனால், அது எத்தகைய இடையூறுகளுக்கு மத்தியில் கட்டப்பட்டது என்பதை பிரிட்டிஷ் ஆவணங்கள் ரத்தமும் வியர்வையுமாகச் சொல்கின்றன.
முதல் நன்றி முத்து இருளப்ப பிள்ளைக்கு!
அனாதி காலம்தொட்டு மனித நடமாட்டமே இல்லாத அந்த மலையுச்சிக் காட்டுப் பகுதியில், நதியின் குறுக்கே தடுப்பு அணை கட்டு​வதற்கான ஆரம்பப் பணிகள் துவங்கி இருந்தன. காற்று கூட உள்நுழைய முடியாதபடி பசுமையால் மூடி அது தனது வளத்தைக் காத்துக் கிடந்தது. அதற்குள் மனிதர்கள் ஊடுருவிப் போனார்கள். உயர்ந்த மரங்​களையும் செடி கொடிகளையும் வெட்டி அழித்தபடி அவர்கள் உள்ளே நுழைந்தனர். பொறியாளர்களால் குறியிடப்பட்ட அந்த இடத்தில் நதியின் இரண்டு பக்கமும் இருந்த மலைப்பாறைகளை உடைத்து எடுக்கும் பணி துவங்கி இருந்தது. தடுப்பு அணை கட்டப்படுவதற்கு வலதுபுறம் இருந்த ஒரு சிறிய சமவெளிப் பகுதியில் மரங்கள் எல்லாம் அப்புறப்படுத்தப்பட்டன. அங்குதான் கூடாரங்​கள் போடப்பட்டன. கூரைகள் வேயப்பட்ட சிறு குடில்கள் கட்டப்பட்டன.
விலங்குகளுக்கான பட்டியுடன் ஒரு சிறு கிராமம் போல இருந்தது அந்த இடம். சுற்றிலும் அடர்ந்த காடு. தேன் கூட்டுக்குள் குச்சியைச் சொருகி உள்ளே தேன் இருப்பதைக் கண்டறிவதைப் போல அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் நதியின் ரகசியம் ஒன்றைக் கண்டறிந்து சொன்னவர்கள் அங்கு இருந்த வன மைந்தர்களான பளியர்களே. அவர்கள்தான் 200 ஆண்டுகளுக்கு முன்பு ராமநாதபுரம் முத்து இருளப்பப் பிள்ளைக்கு இந்த இடத்தைக் காட்டினார்கள். 'வைகையின் ஊற்று வறண்டுகிடந்த ஒரு கோடைக் காலத்தில் இந்த மலையில் இருந்து தண்ணீர் பெற எதுவும் செய்ய முடியாதா?’ என்று அவர் இறைஞ்சிக் கேட்டபொழுது, வருசநாட்டுப் பளியர்கள்தான் உச்சிமலையில் தண்ணீர் ஓடும் அந்த இடத்தைக் காட்டினார்கள்.

30-story building built in 15 days in china


கூகுள், பேஸ்புக்கிற்கு தடை விதிப்போம்: டில்லி ஐகோர்ட் எச்சரிக்கை

புதுடில்லி: ஆட்சேபனைக்குரிய படங்கள் மற்றும் தகவல்கள் இடம் பெறுவதை தடுக்க, கூகுள் மற்றும் பேஸ்புக் வளைதளம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில், சீனாவில் இவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது போல, இந்தியாவிலும் தடை விதிக்கப்படும் என, டில்லி ஐகோர்ட் எச்சரித்துள்ளது.
சமூக வளைதளங்களில் ஆட்சேபணைக்குரிய படங்கள் மற்றும் தகவல்கள் இடம் பெறுகின்றன. இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உத்தரவிடக்கோரி, டில்லி ஐகோர்ட்டில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று நீதிபதி சுரேஷ்கைத் முன், விசாரணைக்கு வந்த போது, அவர், "சமூக வளைதளமான பேஸ்புக், கூகுள் தேடுபோறி (சர்ச் இன்ஜின்) போன்றவை, தங்கள் வெப்சைட்களில் ஆட்சேபணைக்குரிய படங்கள் மற்றும் தகவல்கள் இடம் பெறுவதை தவிர்க்க ஒரு செயல்பாட்டு முறை ஒன்றை உருவாக்க வேண்டும். அப்படி இல்லையெனில், இதுபோன்ற வெப்சைட்களுக்கு சீனாவில் தடை விதிக்கப்பட்டது போல, இந்தியாவிலும் தடை விதிக்கப்படும்' என்றார்.

Natarajan அதிமுகவில் ஜெயலலிதாவின் அடாவடிக்கு பதிலடி?


அ.தி.மு.க.,வில் நெடுங்காலமாக ஜெயலலிதாவுடன் சேர்ந்து ஆட்சி செய்து   கொண்டு இருந்த சசிகலாவை ஜெயலலிதா பிரிந்த பின்பு , அடுத்து என்ன நடக்கும். சசி மற்றும் நடராஜன் ஆகியோரின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதுதான் பலரது கேள்வி. இதற்கு, தஞ்சாவூரில் பொங்கல் பண்டிகையன்று, புதிய பார்வை ஆசிரியர் நடராஜனால் நடத்தப்படும், "தமிழர் கலை இலக்கியத் திருவிழா' வில் விடை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அ.தி.மு.க., வினரிடையே ஏற்பட்டுள்ளது.
 ஜெயலலிதாவின், முன்னாள் தோழி சசிகலாவின் கணவர், புதிய பார்வை ஆசிரியர் நடராஜன். இவரது தந்தை மருதப்பாவின், நினைவாக, "மருதப்பா அறக்கட்டளை' சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையன்று துவங்கி மூன்று நாள், தமிழர் கலை இலக்கிய திருவிழா நடப்பது வழக்கம். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நடராஜனே முன்னின்று கவனிப்பார்.
அடித்தளமே இங்கு தான்: ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் விழாவை முன்னிட்டு, சட்டசபை தேர்தலோ அல்லது லோக்சபா தேர்தலோ நடக்கும் சூழ்நிலை இருந்தால், அதற்கேற்றார்போல் அ.தி.மு.க.,வுடன் கூட்டணிக்கு தேவையான கட்சிகளின் தலைவர்களை விழாவுக்கு அழைத்து வந்து கூட்டணிக்கான அடித்தளம் அமைப்பார். கடந்த 2006 சட்டசபை தேர்தலின் போது நடந்த விழாவில், அப்போதைய ம.தி.மு.க., அவைத் தலைவர் கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், நடிகர் கார்த்திக் ஆகியோரை ஒரே மேடையில் ஏற்றி, அ.தி.மு.க., கூட்டணிக்கு தூபம் போட்டார். அவராலோ அல்லது எதிர்பாராத விதமாகவோ ம.தி.மு.க.,வும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்தன.

Kerala:புதிய அணை வேண்டுமாம் மின்சாரமும் தண்ணியும் வேண்டுமாம்

திருவனந்தபுரம் : முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டும்போது, தமிழகம் & கேரளாவுக்கு தண்ணீர், மின்சாரத்தை சமமாக பங்கிட அனுமதிக்க வேண்டும் என்று கேரளா கூறியுள்ளது. முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அதிகாரம் அளிக்கப்பட்ட குழுவிடம் கேரள அரசு நேற்று தாக்கல் செய்த 2வது அறிக்கையில் கூறி இருப்பதாவது:

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டும்போது அந்த அணையில் உள்ள தண்ணீரையும், மின்சாரத்தையும் சமமாக பங்கீடு செய்வதற்கு கேரளாவுக்கு உரிமை வேண்டும். தமிழ்நாடு முல்லைப் பெரியாறு அணை தண்ணீரை உபயோகித்து உற்பத்தி செய்யும் மின்சாரத்தில் கேரளாவுக்கும் உரிமை உண்டு. அணை பலவீனமாக இல்லாவிட்டாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக அணையில் இருந்து தண்ணீர் முழுவதையும் வெளியேற்றி அதன் செயல்பாட்டை நிறுத்தி வைக்கவும், புதிய அணையில் மீன் பிடிக்கவும், சுற்றுலாவுக்கு பயன்படுத்தவும் கேரளாவுக்கு உரிமை வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாக்கிஸ்தான் கொடி ஏற்றி கலவரத்திற்கு முயன்ற இந்துமத வெறியர்கள்!


ஸ்ரீ ராம் சேனாவின் முத்தாலிக்
இந்திய நாட்டை உடைக்க வேண்டுமா? மதக் கலவரங்களை தோற்றுவித்து அப்பாவி இஸ்லாமிய மக்களை கொன்று குவிக்க வேண்டுமா?  அவர்களது பொருட்களை சூறையாட வேண்டுமா? இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடி, மதக் கலவர பூமியாக குறிப்பிட்ட ஒரு பகுதியை அரசே அறிவிக்கும்படி செய்ய வேண்டுமா? இதன் வழியாக ஓட்டை பொறுக்கி ஆட்சியாளர்களாக மாறி, நாட்டின் வளங்களை கொள்ளையிட வேண்டுமா?
அப்படியானால், பார்ப்பன, பாசிச, இந்துத்துவா கருத்துகளை உங்கள் சிந்தனையின் ஒவ்வொரு துளியிலும் விதைக்க வேண்டும். அப்போதுதான் பொய் பேச முடியும். ஒரு பொருளை தானே திருடிவிட்டு, அந்தப் பழியை இஸ்லாமியர்கள் மீது சுமத்த முடியும். திட்டமிட்டு மக்கள் குவியும் இடத்தில் தாங்களே குண்டு வைத்து விட்டு, இந்தக் ‘படுபாதக’ செயலை நிகழ்த்தியது இஸ்லாமிய அமைப்புதான் என்று குற்றம்சாட்ட முடியும்.

3 Idiots நண்பன் ஷங்கர்- விஜய் கூட்டணியின் முதல் படம் பிரமாண்ட ரிலீஸ்

ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள முதல் படமான நண்பன், பொங்கல் ஸ்பெஷலாக இரு தினங்களுக்கு முன்பே ரிலீசாகியுள்ளது.
பொதுவாக விஜய் படங்களுக்கு பெரிதாக எதிர்ப்பார்ப்பை ஏற்றிவிடுவது வழக்கம். ஆனால் இந்த முறை அப்படி எதுவுமே நடக்கவில்லை. விஜய் நடிப்பில் நண்பன் என்று ஒரு வெளியாகுதுப்பா என்ற அளவுக்குதான் படம் குறித்த எதிர்ப்பார்ப்பு நிலவியது.சத்யராஜ் தவிர வேறு யாரும் இந்தப் படம் இப்படியாக்கும் அப்படியாக்கும் என தம்பட்டம் அடிக்கவில்லை.

வியாழன், 12 ஜனவரி, 2012

நக்கீரன் to ADMK:Why டி கொலை வெறி

எதை நடத்தவேண்டும் என்று நினைத்ததோ அதை நடத்த ஆரம்பித்துவிட்டது ஜெ.அரசு. கடந்த 7-1-12 சனிக்கிழமையன்று காலையில் வெளியான நக்கீரன் இதழைத் தமிழகத்தின் பல
பகுதிகளிலும், மேலிட உத்தரவுப்படி அ.தி.மு.க.வினர் பறிமுதல் செய்து, தீ வைத்துக் கொளுத்த ஆரம்பித்தனர்.
""ஜெ.''வை பற்றிய தகவலுடன் கவர் ஸ்டோரி வெளியாகியிருந்தது. ஜெயலலிதாவின் படத்துடன் வெளியாகியிருந்த இந்த இதழைத்தான் அ.தி.மு.க.வினர் கொளுத்திக் கொண்டிருந் தனர்.
இந்நிலையில், காலை 10.50 மணியளவில் நக்கீரன் அலுவலகத்தில் ஆசிரியர் குழுவினரின் ஆலோசனைக் கூட்டம் வழக்கம்போல் நடை பெற்றுக் கொண்டிருந்தது. ஆசிரியர், இணையாசிரியர், நக்கீரன் ஆசிரியர் குழுவினர் உள்ளிட்டோர் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர். நக்கீரன் அலுவலகத்தின் மற்ற பிரிவுகளின் ஊழியர்களும் முழுமையான அளவில் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த நேரத்தில், திடீரென ஒரு கும்பல் பெரும் சத்தத்துடனும் அருவருக்கத்தக்க வார்த்தைகளுடனும் கையில் உருட்டுக் கட்டை, பாறாங்கல், சோடாபாட்டில் ஆகியவற்றுடன் நக்கீரன் அலுவலகத்தின் வாசல்கதவைத் தாண்டி உள்ளே நுழைந்தது. அ.தி.மு.க கரைவேட்டி, சட்டைப் பாக்கெட்டில் ஜெயலலிதா படம் வைத்திருந்த அந்த கும்பல் ஆவேசம் காட்டத் தொடங்கியது.

Sasi Jeya சேர்ந்து சந்தித்தாலே வழக்கில் தப்ப முடியாது


திருச்சி வேலுச்சாமி. அதிரடி கருத்துக்குச் சொந்தக்காரர். காமராஜர் காலத்திலிருந்து அரசியல் செய்து வருபவர். தமிழ் இன உணர்வாளர். எம்.நடராஜனுடன் நீண்ட கால நட்பு கொண்டிருப்பவர். போயஸ் கார்டனில் வீசிய புயல் குறித்து பேச சரியானவர் என்பதால் இவரிடம் பேசினோம்.
(மகாமகம் குளத்தில் இரண்டுபேரும் மாறி மாறி தண்ணீர் ஊற்றினீர் களே அதற்கு எந்த பொதுக்குழுவில் தீர்மானம் போட்டீர்கள். 60-வது கல்யாணத்திற்கு திருக்கடையூர் கோயிலில் இரண்டு பேரும் மாலை மாற்றினீர்களே அதற்கு எந்த பொதுக்குழுவில் தீர்மானம் போட்டீர்கள். வளர்ப்பு மகன் என்று தத்து எடுக்கும்போது எந்த பொதுக்குழுவில் தீர்மானம் போட்டீர்கள்.)


நக்கீரன் : நடராஜன் மற்றும் சசிகலா ஆகியோருடன் தங்களுடைய தொடர்பு பற்றி?

Pakistan எந்த நேரத்திலும் ஆட்சி காலி?- ராணுவ ஆலோசனை

ராவல்பிண்டி: பெரும் பரபரப்புக்கு மத்தியில் பாகிஸ்தான் ராணுவ தளபதிகள் இன்று ராவல்பிண்டியில் கூடி ஆலோசனை நடத்தவுள்ளனர். இதில் முப்படைத் தலைமைத் தளபதிகளும் இதில் கலந்து கொள்கின்றனர். இதனால் பாகிஸ்தானில் ஆட்சி கவிழ்ந்து ராணுவப் புரட்சி நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பரபரப்பான சூழலால் பாகிஸ்தான் முழுவதும் மக்கள் பதட்டத்துடன் உள்ளனர்.
பாகிஸ்தானில் மக்கள் ஆட்சியை விட ராணுவ ஆட்சியே அதிகம் நடந்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை நீடிக்கவே விடுவதில்லை ராணுவத்தினர். ஜியா உல் ஹக், முஷாரப் வரை என பல ராணுவ தளபதிகள் அந்த நாட்டைக் கைப்பற்றி ஆட்சி புரிந்துள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு


தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று உத்தரவிட்டது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை கோரியும், மத்திய அரசின் தடையை அமல் படுத்தக்கோரியும் விலங்குகள் நலவாரியம் வழக்கு தொடர்ந்துள்ளது.
இது தொடர்பான மனுவில், 'மாநில கால்நடைத்துறை செயலாளரின் அனுமதியின் பேரில், ஜல்லிக்கட்டு நடத்த திருச்சி மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர்கள் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அருந்ததி ராய்: Anna கவரேஜ் கூட ஸ்பான்ஸர்ஷிப்தான்!

ந.வினோத்குமார்
24 மணி நேரமும் கார்ப்பரேட் ஊடகங்களால் கவரேஜ் கொடுக்கப்பட்டு அந்தப் போராட்டமும் ஊழல்படுத்தப்பட்டது. அந்த கவரேஜ் கூட ஒரு வகையில் ஸ்பான்ஸர்ஷிப்தான். மக்களின் நியாயமான கோபமும் கார்ப்பரேட் படுத்தப்பட்டுவிட்டது. ஒரு இடத்திலும் 'தனியார்மயமாக்கலுக்கு முடிவு கொண்டு வாருங்கள்' என்று கோஷம் எழவில்லை. ஊழலுக்கு எதிரான சட்டம் கொண்டு வருவதன் மூலம் ஊழலை ஒழித்துவிட முடியாது!"அருந்ததி ராய்க்கு அறிமுகம் தேவையில்லை. அதிரடிப் பேச்சுக்காரர். அறிவு ஆளுமைகளில் முக்கியமானவர். உலகமயமாக்கலுக்கு எதிரானவர். அதனாலேயே வளர்ச்சிக்கு எதிரானவர் என்று அடையாளப்படுத்தப்பட்டவர். ஆங்கிலத்தில் 'புரோக்கன் ரிபப்ளிக்' என்ற தலைப்பில் தான் எழுதிய புத்தகம் 'காலச்சுவடு' பதிப்பகத்தால் 'நொறுங்கிய குடியரசு' என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அந்த நூலின் வெளியீட்டு விழாவுக்கு சென்னை வந்திருந்த அருந்ததி ராயைச் சந்தித்தேன். இரு மாநில மக்களிடையே கொந்தளிப்பான சூழல் நிலவுவதால், இப்போதைக்கு 'முல்லைப் பெரியாறு' தவிர்த்து எதுவும் பேசலாம்" என்றபடி பேட்டிக்குத் தயாரானார்.

கலைஞர்: தேவிகுளம், பீர்மேட்டை மீட்கும் கட்டாயத்தை ஏற்படுத்தி விட்டது கேரளா


Karunanidhi
சென்னை: வரலாற்று ரீதியாகவும், பூகோள ரீதியாகவும் தமிழர்களுக்கும், தமிழகத்துக்கும் சொந்தமான தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையினை நாம் வலியுறுத்திக் கூறவேண்டிய கட்டாயத்திற்கு கேரள அரசு நம்மை இட்டுச் சென்றிருக்கின்றது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள தேவிகுளம் மற்றும் பீர்மேடு உள்ளிட்ட பகுதிகள் தமிழர்களுக்குச் சொந்தமானது என்பதை வரலாற்று சான்றுகளுடன் விவரித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இடம், தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகளுக்கு அடிப்படையாக இருந்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணை பீர்மேடு வட்டத்தில் கட்டப்பட்டிருக்கிறது. தேவிகுளம் வட்டத்தில் அணையின் நீர்ப் பிடிப்பு பகுதி அமைந்திருக்கிறது.
மொழிவழி மாநிலப் பிரிவினை நடைமுறைக்கு வந்தபோது தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் கேரள மாநிலத்தோடு அதன் இடுக்கி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன. அப்போதிருந்தே தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை கேரள மாநிலத்தோடு சேர்த்தது தவறு என்றும், அவை தமிழ்நாட்டோடு இருந்திட வேண்டுமென்றும் தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

பசுபதி பாண்டியன் கொலையாளிகளில் இலங்கையைச் சேர்ந்தவர் ஒருவர்


திண்டுக்கல்: தனது வீட்டுக்கு முன்பு நாற்காலியில் பசுபதி பாண்டியன் அமர்ந்திருந்த நிலையிலேயே கொலையானார். அவர் நாற்காலியை விட்டு எழுந்திருக்க முடியாத அளவுக்கு அவரை சரமாரியாக வெட்டித் தள்ளியுள்ளனர் கொலையாளிகள். மிகக் கொடூரமான கொலையாக இதை போலீஸார் வர்ணிக்கின்றனர்.
இந்தக் கொலை தொடர்பாக தற்போது போலீஸ் பிடியில் நான்கு பேர் சிக்கியுள்ளனர். அவர்களில் ஒருவர் இலங்கையைச் சேர்ந்தவர். பசுபதி பாண்டியனின் வீட்டுக்கு அருகில் இவர் தங்கியிருந்தார். இந்த நால்வருக்கும் கொலையில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

ஜெயலலிதா: பிராமண முதல்வர் மாட்டுக்கறி உண்பாரா?

சென்னை: பிராமண சமுதாயத்தில் இருந்து வந்த முதல்வர், மாட்டுக்கறி உண்பாரா? என்ற தவறான எண்ணத்தை மக்கள் மனதில் நக்கீரன் செய்தி உருவாக்கிவிட்டது, என கூறியுள்ளார் ஜெயலலிதா.
நக்கீரன் பத்திரிகையில் வெளியிடப்பட்ட செய்தி தொடர்பாக அந்த பத்திரிகையின் ஆசிரியர் கோபால், இணை ஆசிரியர் காமராஜ் மீது முதல்வர் ஜெயலலிதா, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
சென்னைஉயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா நேற்று தாக்கல் செய்த மனுவில், "என்னைப் பற்றி வெளியிடும் செய்திகள் தவறு என்று தெரிந்தே தொடர்ந்து தவறான மற்றும் அவதூறான தகவல்களை நக்கீரன் கோபாலும், காமராஜும் வெளியிட்டு வருகின்றனர்.

கொண்டாடும் ஊழியர்கள் தியாகராஜ நகர் கடைகள் திறப்பு

ரங்கநாதன் தெரு மற்றும் தியாகராஜ நகர் கடைகள் திறப்புக்கு தற்காலிக அனுமதி கிடைத்தஈ கொண்டாடும்  ஊழியர்கள்

ஹெலிகாப்டரில் 10 நிமிடம் ஜெ. சுற்றிப் பார்த்தது தான் புயல் நிவாரணப் பணியா?

சென்னை: வெறும் அறிவிப்புகள் மட்டும் நிவாரணப் பணியாகிவிடாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தானே புயல் மற்றும் மழை காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு, அரசின் சார்பில் நிவாரணப் பணிகள் சரியாக நடக்கவில்லை என, நாள்தோறும் புகார்கள் வந்தபடி உள்ளன.
புயல் தாக்கி 10 நாட்களாகின்றன. சென்னை முதல் திருவாரூர் வரை காரில் பயணம் செய்து பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்து ஆறுதல் கூறினேன். திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.50 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்து அதையும் வழங்கி விட்டேன்.
முதல்வர் ஜெயலலிதா அம்மையார் ஹெலிகாப்டரில் 10 நிமிடங்கள் சுற்றிப் பார்த்துவிட்டு, அரசின் சார்பில் ரூ.850 கோடி நிவாரணத்துக்காக ஒதுக்கியதாக அறிவித்தார். அதை அனைத்து ஏடுகளும் கொட்டையெழுத்துக்களில் வெளியிட்டுவிட்டன.

நாட்டிலேயே பணக்கார முதல்வர் மாயாவதிதான்..87.27 கோடி ரூபாய்

புதுடில்லி: நாட்டிலேயே பணக்கார முதல்வர் மாயாவதிதான் என, தெரியவந்துள்ளது. இவருக்கு 87.27 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் உள்ளன.

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற அரசு சார்பற்ற அமைப்பு வெளியிட்டுள்ள விபரங்கள் வருமாறு: தமிழக முதல்வர் ஜெயலலிதா தனக்கு 51 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், தன் சொத்துக்களின் மதிப்பு கடந்த ஐந்தாண்டுகளில் அதிகரிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். இதுதவிர ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டிக்கு 8.1 கோடி ரூபாய்க்கும், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு 4.7 கோடிக்கும், அரியானா முதல்வர் பூபிந்தர்சிங் ஹூடாவுக்கு 3.74 கோடிக்கும்,

காங்.,கை கழற்றிவிட தி.மு.க., முடிவு? நேருவின் சூசக பேச்சால் பரபரப்பு

திருச்சி: ""மேற்கு வங்கத்தில் நடப்பது போல் தமிழகத்திலும் வெகுவிரைவில் நடக்கும். அதற்கு நாம் தயாராக வேண்டும்,'' என்று முன்னாள் அமைச்சர் நேரு சூசகமாக பேசினார்.

திருச்சி மாநகர தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில் மாஜி அமைச்சர் நேரு பங்கேற்று பேசியதாவது: தி.மு.க.,வினர்,தைத்திங்கள் முதல்நாளை தமிழ் புத்தாண்டாக சிறப்பாக கொண்டாட வேண்டும். தங்களின் வீடுகளில் கோலமிடும் போது தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று எழுதியும், முடிந்தால் புத்தாடை அணிந்தும், வீடுகளில் கட்சிக் கொடியேற்றியும் தமிழ்ப்புத்தாண்டை கொண்டாட வேண்டும். மேற்கு வங்கத்தில் காங்கிரசை கூட்டணியிலிருந்து வெளியேறச் சொல்லி மம்தா அறிவித்தார்.

ஆசியாவிலேயே மிக மோசமானது இந்திய அதிகார முறைமைதான்: ஆய்வு தகவல்

சிங்கப்பூர்: ஆசியாவிலேயே இந்திய அதிகார முறைமை தான் மிக மோசமானது என புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மொத்தம் 10 இடங்களில், இந்தியாவுக்கு 9.21 வது இடம் கிடைத்துள்ளது. இப்பட்டியலில், வியட்நாம், பிலிப்பைன்ஸ், சீனா ஆகிய நாடுகள் இந்தியாவை விட முன்னேறியுள்ளன.
ஹாங்காங்கைச் சேர்ந்த ஒரு நிறுவனம், ஆசிய நாடுகளில், எந்த நாட்டில் அதிகார முறைமை சிறந்த முறையில் செயல்படுகிறது, எந்த நாட்டில் மிக மோசமாக செயல்படுகிறது என்பதைக் கண்டறிய சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தியது. இதன் படி, மொத்தம் 10 இடங்களில், 2.25 புள்ளிகள் பெற்று சிங்கப்பூர் முன்னணியில் உள்ளது. இதையடுத்து ஹாங்காங், தாய்லாந்து, தைவான், ஜப்பான், தென் கொரியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. மலேசியாவை அடுத்து, சீனா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் உள்ளன. ஆனால் 9.21 புள்ளிகள் பெற்று இந்தியா கடைசியில் உள்ளது.

சோவின் கருத்துக்கள்


புதன், 11 ஜனவரி, 2012

Six "ஸ்டார்' படங்கள் மட்டும் பண்டிகை காலங்களில்

சென்னை, ஜன. 9: பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் மட்டுமே இனி ஸ்டார் படங்களை வெளியிட வேண்டுமென தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது.  இந்த முடிவு வரும் பிப்ரவரி முதல் நடைமுறைக்கு வரும் என தயாரிப்பாளர் சங்க வட்டாரங்கள் தெரிவித்தன.  தமிழகத்தில் மொத்தம் "ஏ' "பி' மற்றும் "சி' உள்ளிட்ட பிரிவுகளில் சுமார் 1,400 தியேட்டர்கள் வரை உள்ளன. இதில் நேரடியாக படத்தை வெளியிடும் திரையரங்குகள் சுமார் 800. கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் இதன் எண்ணிக்கை சுமார் ஆயிரத்தை தாண்டியது குறிப்பிடத்தக்கது.

இந்தோனேசியாவின் அசே பகுதியில் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்-சுனாமி எச்சரிக்கை

ஜகார்த்தா: பூகம்ப நாடான இந்தோனேசியாவின் அசே மாகாணத்தில் புதன்கிழமை அதிகாலையில் 71. ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு ஒரு மணி நேரத்தில் திரும்பப் பெறப்பட்டது.
அசே மாகாணத்தின் மெலுபோ என்ற இடத்திற்கு தென் மேற்கே, பூமிக்குக் கீழே 10 கிலோமீட்டர் ஆழத்தில் பூகம்பம் ஏற்பட்டது.
பந்தா அசே மற்றும் சுற்றுப் பகுதி மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்தனர். அசே பகுதியின் கடலோரப் பகுதி மக்கள் பூகம்பத்தை உணர்ந்தனர். கடுமையான கடல் காற்றையும் அவர்கள் பார்த்துப் பயந்தனர்.
பூகம்பத்தால் ஏற்பட்ட சேத விவரம் தெரியவில்லை. கடலோரப் பகுதிகளில் வசித்து வரும் மக்கள் பூகம்பத்தைத் தொடர்ந்து பாதுகாப்பான இடங்களுக்கு விரைந்தனர். உலீ லியூ என்ற பகுதியில் வசித்து வந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடினர்

அந்தமானில் சுற்றுலா பயணிகளுக்காக பழங்குடியின பெண்களை கட்டாயப்படுத்தி அரை நிர்வாண நடனம்


Andamans Jarawa

டெல்லி:  அந்தமானில் உள்ள ஜராவா பழங்குடியின மக்களுக்கு உணவு கொடுத்து அவர்களை கட்டாயப்படுத்தி அரை நிர்வாண நடனம் ஆட வைத்துள்ளனர் என்று தகவல் கிடைத்துள்ளது. இந்த நடனம் போலீசாரின் மேற்பார்வையில் தான் நடந்துள்ளது.
தெற்கு அந்தமானில் ஜராவா பழங்குடியினத்தைச் சேர்ந்த 403 பேர் வாழ்கின்றனர். அவர்களை சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து காக்க வேண்டிய போலீசாரே அவர்களை கட்டாயப்படுத்தி அரை நிர்வாண நடனம் ஆட வைத்துள்ளனர். இந்த வீடியோவை தி அப்சர்வர் என்ற இங்கிலாந்து நாளிதழ் வெளியிட்டுள்ளது.

பசுபதி பாண்டியன் கொலைக்கான காரணம்?-பரபரப்பு தகவல்கள்

தூத்துக்குடி: பசுபதி பாண்டியன் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
பசுபதி பாண்டியனுக்கும் மூலக்கரை பண்ணையார் குடும்பத்தினருக்கும் பழிக்கு பழியாக நடந்த மோதல்களில் பலர் உயிர் இழந்துள்ளனர். அந்த முன்விரோதமே இப்போது பசுபதி பண்டியனின் மரணத்திற்கும் காரணமாகியுள்ளதாக கூறப்படுகிறு.
கொலை வழக்கில் பிரபலம்

பொங்கல்: 2 நாட்கள் நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து கனிமொழிக்கு விலக்கு

டெல்லி: பொங்கல் பண்டிகையையொட்டி 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணைகளில் பங்கேற்பதிலிருந்து, திமுக எம்பி கனிமொழிக்கு இரண்டு நாட்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஜாமீனில் விடுதலையான அவர், தினமும் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சிபிஐ நீதிமன்றத்தில் நடக்கும் இந்த வழக்கு விசாரணைகளில் ஆஜராகி வருகிறார். இதனால், அவர் டெல்லியிலேயே தங்கியிருக்கிறார். தனது பிறந்தநாளன்று கூட அவர் நீதிமன்றத்திலேயே இருந்தார்.

ஓப்பன் சோர்ஸ் – ஓர் எளிய அறிமுகம்


தொலைக்காட்சி போல, கம்ப்யூட்டரும் எல்லோருடைய வீட்டிலும் இடம்பெற ஆரம்பித்துவிட்டது. குழந்தைகளின் படிப்புக்காக, வெளிநாடுகளில் இருப்பவர்களைத் தொடர்பு கொண்டு பேசுவதற்காக, வீட்டிலிருந்தபடியே பகுதி நேரப் பணிகள் செய்ய, பொழுதுபோக்குக்காக – இப்படி ஏதாவது ஒரு விதத்தில் கம்ப்யூட்டரும் ஒரு அத்தியாவசியத் தேவையாக மாறிவிட்டது. சரி, சில யதார்த்தமான கேள்விகள்.
@ நம் வீடுகளில் இருக்கும் கம்ப்யூட்டர்களில் உள்ள ஆபரேட்டிங் சிஸ்டம் என்னவாக இருக்கும்?
# இதென்ன கேள்வி, விண்டோஸ்தான்.
@ அதை வாங்க எவ்வளவு காசு கொடுத்தீர்கள்?
# அதற்கெல்லாம் காசு கொடுக்க முடியுமா என்ன. எல்லாம் பைரேடெட்தான்.
@ அப்படியென்றால், முறையான லைசென்ஸ் இல்லாமல்தான் விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தை உபயோகித்து வருகிறீர்களா?

செவ்வாய், 10 ஜனவரி, 2012

நக்கீரன் – மாட்டுக்கறி ! மயிலாப்பூர் மாமி V/S கிசுகிசு மாமா !!

மாட்டுக்கறி சாப்பிடும்- மாமி- நான்
பாசிச ஜெயாவின் காட்டு தர்பாரை அம்பலப்படுத்தி மக்களது பிரச்சினைகளை எழுதுவதற்கு பதிலாக நக்கீரனும் ஜூனியர் விகடன் பாணியில் இப்படி கிசுகிசு செய்திகளை எழுதி கல்லா கட்டுகின்றன
கிசு கிசுவே அரசியலாக....
“போயஸ் தோட்டத்தில் ஞாயிறு நள்ளிரவில் ஒரு வயலெட் நிற பி.எம்.டபிள்யூ கார் வந்தது. அதில் சிறிய சூட்கேசுடன் இறங்கிய மர்ம மனிதர் ஒரு மணிநேரம் இருந்து விட்டு திடீரென்று மறைந்தார்.” இப்படி துணுக்கு மூட்டையில் குடிகொண்டிருந்த சினிமா கிசு கிசு வடிவத்தை அரசியலுக்கும் கொண்டு வந்து அதில் ஒரு புது பாணியையே உருவாக்கியது ஜூனியர் விகடன். சினிமா கவர்ச்சியில் நீந்திக் கொண்டிருக்கும் தமிழகத்திடம் அரசியல் செய்திகளையும் இப்படி கிசுகிசு பாணியில் கொண்டு போனால் கல்லா கட்டலாம் என்று ஜூவி வெற்றியடைந்த பிறகு பல புலனாய்வு பத்திரிகைகள் புற்றீசல் போல தோன்றின.
அதில் வெற்றியடைந்த பத்திரிகை நக்கீரன். ஆரம்பத்தில் ஜெயா ஆட்சியில் நக்கீரன் தண்டிக்கப்பட்டதும், அதை எதிர்த்து போராடியதும் உண்மை என்றாலும் அப்போதே அந்த பத்திரிகை கிசு கிசு இதழியலில் கொடி கட்டிப் பறந்தது. இந்த வடிவத்திற்கு பொருத்தமாக இருந்த படியால் வீரப்பன் கதையும், கடைசியாக வந்த நித்தியானந்தா கதையும் அதற்கு கிடைத்த அட்சய பாத்திரங்களாக இருந்தன. இது போக பாலியல் ரீதியில் வாசகனை தூண்டி விடக்கூடிய கதைகள், தொடர்கள், செய்திகள் ஏராளமாய் வரும். இதற்கும் ஜூ.விதான் முன்னோடி.

Rohini மிஸ் இந்தியா சவுத் அழகியாக சென்னை மாணவி ரோகிணி தேர்வு!

மிஸ் இந்தியா 2011 அழகியாக சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ரோகிணி சுப்பையா தேர்வு செய்யப்பட்டார்.
இரண்டாம் இடத்தைப் பெற்றார் கர்நாடக மாநிலம் ஷிமோகாவைச் சேர்ந்த அஸ்வினி சந்திரசேகர்.
விவெல் மிஸ் இந்தியா சவுத் 2011 போட்டிகள் சென்னை நந்தம்பாக்கம் உள்விளையாட்டரங்கில் நடந்தன. விவெல் நிறுவனத்துடன், மாயா ஈவன்ட்ஸ் மற்றும் இ3 இன்னொவேஷன்ஸ் நிறுவனங்களும் இணைந்து நடத்திய இந்தப் போட்டியில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

AIDS நிதியை தவறாகப் பயன்படுத்திய பிரான்ஸ் அதிபரின் மனைவி

Carla Bruni Sarkosi

லண்டன்: எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உதவ வழங்கப்பட்ட நிதியை பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சார்கோஸியின் மனைவி கார்லா புரூனி தனது நெருங்கிய தோழிக்கு கொடுத்துள்ளார். மேலும் தான் நடத்தும் அறக்கட்டளைக்கும் அந்த பணத்தை பயன்படுத்தியுள்ளார் என்று கூறப்படுகின்றது.
தாய்மார்களிடம் இருந்து குழந்தைகளுக்கு ஹெச்ஐவி பரவுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பார்ன் ஹெச்ஐவி ஃப்ரீ என்னும் திட்டத்திற்காக ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரைச் சேர்ந்த குளோபல் பன்ட்ஸ் என்னும் நிறுவனம் நிதி கொடுத்துள்ளது. இந்த நிதியத்துக்கான தூதர் பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சார்கோஸியின் மனைவி கார்லா புரூனி.

ஒரு தேசிய அவமானம்!!

Hunger
டெல்லி: உலகில் ஊட்டச் சத்து குறைபாடு உள்ள 3 குழந்தைகளில் ஒரு குழந்தை இந்தியாவைச் சேர்ந்தது. நாட்டில் ஐந்து வயதுக்குள்ளான 42 சதவீத குழந்தைகள் எடை குறைவாக உள்ளன. இது ஒரு தேசிய அவமானமாகும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
நாடு முழுவதும் பொருளாதாரரீதியில் மிகவும் கீழ் நிலையில் உள்ள 9 மாநிலங்களின் 112 மாவட்டங்களில் 73,000 வீடுகளில் ஆய்வு நடத்தி தனது அறிக்கையைத் தயாரித்துள்ளது HUNGaMA (Hunger and Malnutrition) என்ற அமைப்பு. இந்த அறிக்கையை வெளியிட்டுப் பேசிய பிரதமர் கூறுகையில்,
நமது நாடு மிக வேகமான பொருளாதார வளர்ச்சியை எட்டி வந்தாலும், குழந்தைகளிடையே ஊட்டச் சத்து குறைபாடு ஏற்க முடியாத அளவுக்கு உள்ளது.

மதிமுக, பாமக, விடுதலை சிறுத்தைகளை தடை செய்ய வேண்டும்

தஞ்சாவூர்: தமிழர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் மதிமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகளை தடை செய்ய முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் யுவராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
தஞ்சாவூரில் இளைஞர் காங்கிரஸ் மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்ட யுவராஜா பேசியதாவது,
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பும், நிபுணர் குழுவின் அறிவிப்பும் தமிழகத்துக்கு சாதகமாக உள்ளது. இப்பிரச்னையில் தமிழகத்துக்கு தான் இறுதி வெற்றி கிடைக்கும். எனவே, தமிழர்கள் அமைதி காக்க வேண்டும்.

புத்தகக் கண்காட்சியில் மலையாள மனோரமா- கண்டித்து மே 17 ஆர்ப்பாட்டம்

சென்னை புத்தகக் கண்காட்சியில் மலையாள மனோரமா பத்திரிக்கையின் ஸ்டால்இடம் பெற்றிருப்பதைக் கண்டித்து மே 17 இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து அந்த ஸ்டாலை ஸ்கிரீனைப் போட்டு மூடினர்.
சென்னையில் புத்தகக் கண்காட்சி நடந்து வருகிறது. இதில் பல்வறு பதிப்பகங்கள் தங்களது படைப்புகளை வைத்துள்ளன. முல்லைப் பெரியாறு பிரச்சினையை முதல் முறையாக பெரிதாக்கி வெடிக்க வைத்த பெருமையைக் கொண்ட மலையாள மனோரமா நாளிதழும் தனது ஸ்டாலை இங்கு போட்டுள்ளது.
இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்த மே 17 இயக்க அமைப்பினர் நேற்று அங்கு வந்து ஸ்டால் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

The Hindu பத்திரிக்கை ஆசிரியர் என்.ராம் விலகல்

சென்னை: இந்து ஆங்கில நாளிதழின் தலைமை ஆசியரியரான என்.ராம் அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார். மேலும் இந்து பதிப்பாளர், அந்தக் குழுமத்தின் பிற பத்திரிக்கைகளான பிஸினஸ் லைன், பிரண்ட் லைன், ஸ்போர்ட்ஸ்டார் ஆகியவற்றின் ஆசிரியர் பொறுப்புகளில் இருந்தும் அவர் விலகியுள்ளார்.
இந்து குழுமத்தை நடத்தி வரும் கஸ்தூரி அண்ட் சன்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட குடும்ப மோதல் காரணமாக அவர் பதவி விலகியுள்ளார்.
இந்து நாளிதழின் புதிய ஆசிரியராக சித்தார்த் வரதராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கஸ்தூரி அண்ட் குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல. இவர் அடுத்த வாரம் வியாழக்கிழமை இந்தப் பதவியில் அமர்வார்.
அதே நேரத்தில் இந்த நிறுவனத்தின் இயக்குனராக என்.ராம் நீடிப்பார்.
நிறுவனத்தின் புதிய செயல் இயக்குனராக அருண் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன் யுடிவி நியூஸ் மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையை நடத்தி வரும் பென்னட், கோஸ்மேன் அண்ட் கோ நிறுவனத்தில் பணியாற்றியவர் ஆவார்.
கஸ்தூரி ரங்க அய்யங்கார் குடும்பத்தைச் சேர்ந்த 12 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் (board members) மற்றும் 50 பங்குதாரர்களிடம் தான் கஸ்தூரி அண்ட் சன்ஸ் நிறுவனத்தின் முழுக் கட்டுப்பாடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பீகாரில் 2 மணிநேரத்தில் 61 பெண்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு ஆபரேஷன்: 3 பேர் கைது

அராரியா: பீகார் மாநிலத்தில் வெறும் இரண்டே மணிநேரத்தில் 61 பெண்களுக்கு மயக்க மருந்து கூட கொடுக்காமல் மிகக்கொடூரமாக குடும்பக்கட்டுப்பாடு ஆபரேஷன் செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பீகார் மாநிலத்தின் அராரியா மாவட்டதில் உள்ளது கபார்போரா கிராமம். அங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானோர் படிப்பறிவில்லாத ஏழை மக்கள் ஆவர்.
கடந்த சனிக்கிழமை அந்த கிராமத்திற்கு 3 இளைஞர்கள் வந்தனர். தாங்கள் ஒரு என்ஜிஓவைச் சேர்ந்தவர்கள் என்றும் அங்கு குடும்பக் கட்டுப்பாட்டு முகாம் நடத்த வந்துள்ளதாகவும் தெரிவி்ததனர்.

அன்வர் இப்ராகிம், ஹோமோசெக்ஸ் வழக்கில் இருந்து நேற்று விடுதலையானார்

கோலாலம்பூர் : மலேசிய எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராகிம், ஹோமோசெக்ஸ் வழக்கில் இருந்து நேற்று விடுதலையானார். அடுத்த ஒரு மணி நேரத்தில் 3 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதனால், மலேசியாவில் பதற்றம் நிலவுகிறது. மலேசிய பிரதமராக 1981 முதல் 2003 வரை இருந்தவர் மகாதிர் முகமது. அரசியலில் 40 ஆண்டு அனுபவம் வாய்ந்தவர்.
அவரது ஆட்சியில் 1993 முதல் 1998 வரை துணை பிரதமராக இருந்தவர் அன்வர் இப்ராகிம் (64). மகாதிரிடம் மிக நெருக்கமாக, நம்பிக்கை பெற்றவராக இருந்தார். மக்கள் கூட்டணி கட்சியில் தொடர்ந்து நற்பெயர் பெற்று வந்த நிலையில், மகாதிருக்கு மாற்றாக அன்வர் இப்ராகிம் மாபெரும் தலைவராக உருவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

கே.பாக்யராஜ். இவரது சாதனையை எவரும் நெருங்கவில்லை

இந்திய சினிமாவின் 'திரைக்கதை ஜித்தன்' கே.பாக்யராஜ். பாக்ஸ் ஆபீஸ் வசூல், ரசிகர்களின் விசில் இரண்டும் சம்பாதிக்கும் திரைக்கதைகள் புனையும் கலைஞன். 'மிடாஸ் டச்' இயக்குநரின் வாழ்க்கையில் இருந்து...
* ஈரோட்டில் கோஷா ஆஸ்பத்திரியில் பிறந்த தேதி-ஜனவரி 7. இரண்டு அண்ணன்களுக்குப் பிறகு பிறந்த கடைசித் தம்பி!
* முதல் வகுப்பையே அவரது தாத்தா கட்டாயத்தின் பேரில் இரண்டு தடவை படித்தார். பி.யூ.சி ஃபெயில் ஆன பிறகு, சென்னைக்குப் புறப்பட்டு வந்துவிட்டார்!
* இதுவரை இயக்குநராகவும், நடிகராகவும், கதாசிரியராகவும் 60-க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றி இருக்கிறார். 'மௌன கீதங்கள்', 'தூறல் நின்னு போச்சு', 'முந்தானை முடிச்சு', 'அந்த 7 நாட்கள்' போன்ற படங்களின் திரைக்கதைகள் அபாரமானவை!

திங்கள், 9 ஜனவரி, 2012

கரிகாலன் படத்துக்கு தடைகோரி வழக்கு: விக்ரமுக்கு நோட்டீசு


 ஜி.எஸ்.ஆர். விண்மீன் கிரியேன்ஸ் பட நிறுவன உரிமையாளர் ராஜசேகர் சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:- நான் காதல் கல்யாணம் படத்துக்கு இசை அமைத்துள்ளேன். இசை ஆல்பங்களும் வெளியிட்டு உன்ளேன். கரிகால சோழ மன்னன் மீது எனக்கு பற்று உண்டு. அவரது வரலாற்றை படமாக எடுக்க விரும்பி கரிகலான் என்ற பெயரை பிலிம்சேம்பரில் 1994-ம் ஆண்டில் பதிவு செய்தேன். இதன் கதையை கே.டி.குஞ்சுமோன், ரஜினி உதவியாளர் சத்தியநாராயணா, லட்சுமி மூவி மேக்கர்ஸ், ராமு வசந்தன் போன்றவர்களிடம் சொன்னேன்.

தமிழர்களின் துயரமும் விஜயகாந்தின் குல்லாவும்

vijayakanth

விஜயகாந்த் தொப்பிக்கு மேல் காவி. நல்ல குறியீடு. எதிர்காலத்தில் பா.ஜ.கவின் தமிழ்நாட்டு தலைமைக்கான  ‘காவித் தலை’ . சபாஷ் சரியான அறிகுறி.
***
டிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் – தமிழக மீனவர்களை, ஈழத் தமிழர்களை சுட்டுக்கொல்கிற, இலங்கை ராணுவத்தை கண்டித்து, அதன் மேல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, டெல்லியில் ‘ஒரேஒரு வேளை’ உண்ணாவிரதம் இருந்தார்.

பார்ப்பன சிவச்சாரியர்களுக்கு ஆப்பு வைத்த போராட்டம்!

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருதகிரீஸ்வரர் கோவிலில் கடந்த 5 வருடங்களாக ஆருத்ரா தரிசனம் உள்ளிட்ட விழாக்காலத்தின் போதும், தினசரி இரவு 8.30 மணி அர்த்த ஜாம பூஜையின் போதும் பழம்பெரும் இசைக்கருவிகளான உடன், கொம்பு, சங்கு, நெடுந்தாரை, எக்காலம், உடுக்கை  போன்ற கைலாய இசைக்கருவிகளை வாசித்து சிறுவர்கள் இளைஞர்கள் ஆன சிவனடியார்கள் இறைவனை வழிபட்டு வந்தனர்.
இந்த இசையின் காரணமாக இரவில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. சாதாரண உழைக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. இது அர்ச்சகர்களான  கோயில் சிவாச்சாரியார்கள் கண்ணை உறுத்தியது. ஊர் பெரிய மனிதர்கள் சிலரின்  மூலம் கோயில் நிர்வாக அதிகாரியிடம்  அதிக சத்தமாக இருப்பதால் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கிறது என்று கொடுத்த  புகாரின் மூலம் மேற்படி சிவனடியார்கள் இசைக்கருவிகளை வாசிக்க கூடாது என 13.07.2011 தடை விதிக்க பட்டது.

பெரியாரையே விமர்சிக்கிறாங்க… அப்பா…. பயங்கரமான ஆளா இருப்பாய்ங்க போல’

பெரியாரையும் சேர்த்து திராவிட இயக்கம் தமிழர்களுக்கு தூரோகம் செய்துவிட்டது என்று சொல்கிறார்களே உண்மையா?
-தமிழ்ப்பித்தன், திட்டக்குடி.
புதுசா இப்ப நிறையப் பேர் அப்படி கிளம்பி இருக்காங்க. தமிழகத்தில் ஜாதி ஆதிக்கத்திற்கு எதிராக புரட்சிகரமாக போராடிய திராவிட இயக்கத்தையும் பெரியாரையும் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.
‘பெரியாரையே விமர்சிக்கிறாங்க… அப்பா…. பயங்கரமான ஆளா இருப்பாய்ங்க போல’ என்று நாம் வாய பொளக்குறதுக்குள்ளேயே திராவிட இயக்கத்தின் கழிசைடையான ஜெயலலிதாவை ஆதரித்து தங்களை யார் என்று அடையாளம் காட்டுகிறார்கள்.
கலைஞரை கடுமையாக விமரிசிக்கிறார்கள்.
கருப்பையா மூப்பனாரை மாபெரும் தியாகி என்கிறார்கள்.
திமுகவை ‘ஜாதியை வளர்க்கும் கட்சி’ என்று விமர்சிக்கிறவர்கள்; தமிழக்கதில் குலக்கல்வி திட்டத்தை கொண்டுவந்து ஜாதி ஆதிக்கத்தை நிலைநாட்டிய தீவிர ஜாதிவெறியர், ஊழல் மன்னன் ராஜாஜியின் ஆட்சியை நேர்மையான ஆட்சி என்று பாராட்டுகிறார்கள்.
பல கோல்மால் பேர்வழிகள் இப்படி பெரியார் இயக்கத்தை, திராவிட இயக்கத்தை கடுமையான விமசிக்கிறார்கள்.
உண்மையில் இவர்களுக்கு பெரியாரை அல்ல, விஜயகாந்தை விமர்சிப்பதற்குக்கூட யோக்கியதை இல்லை.

நாடாளுமன்றத் தேர்தல் குறித்து விவாதிக்க திமுக பொதுக்குழு கூடுகிறது!


Karunanidhi
சென்னை: திமுக பொதுக்குழு கூட்டம் பிப்ரவரி 3ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
உள்கட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், 2ஜி விவகாரத்தில் தணிக்கைக் குழு அறிக்கை தொடர்பாக பொதுக்குழுவில் விவாதிக்கப்பட உள்ளது.திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இக் கூட்டம் கூடும்.
2ஜி வழக்கில் கனிமொழி விடுதலைக்குப் பின் நடக்கும் முதல் திமுக பொதுக் குழுக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

சிலைகள் வைக்க 2500 கோடியைக் கொட்டிய மாயாவதி!

லக்னோ: தனக்கும், தனது கட்சி சின்னமான யானைக்கும், சட்ட மேதை அம்பேத்கருக்கும், பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கான்ஷிராமுக்கும் சிலைகள் வைக்க ரூ. 2500 கோடிக்கும் மக்கள் பணத்தைக் கொட்டி விரயமாக்கியுள்ளார் மாயாவதி. தற்போது இந்த சிலைகளை மூடும் பணிக்கும் மக்கள் பணமே பயன்படுத்துவது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
உ.பி. முதல்வராக மாயாவதி வந்தது முதல் ஏகப்பட்ட பேருக்கு சிலைகள் அமைத்துள்ளார். புத்தமதத்தைச் சேர்ந்த மற்றும் தலித் தலைவர்கள் பலருக்கும் அவர் சிலை வைத்துள்ளார். சிலையை வைத்து அரசியல் செய்த ஒரே தலைவி இவராகத்தான் இருக்க முடியும். அந்த அளவுக்கு ஏகப்பட்ட பேருக்கு சிலைகள் வைத்துள்ளார் மாயாவதி.

தியாகராயநகரில் சீல் வைக்கப்பட்டுள்ள கடைகளை திறக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

சென்னை தியாகராயநகரில் விதிமுறை மீறி கட்டப்பட்டதாக சீல் வைக்கப்பட்டுள்ள கடைகளை தற்காலிக வியாபாரத்திற்காக 6 வாரங்களுக்குத் திறக்கலாம் என சுப்ரீம் கோர்ட் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை தியாகராயநகரில் பல வியாபார நிறுவனங்களின் கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு இருப்பதாகவும், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து இதுபற்றி நடவடிக்கை எடுக்க சென்னை சிஎம்டிஏவுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
தி.நகர் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள 28 வியாபார நிறுவனங்களின் கட்டிடங்கள் விதிகளை மீறி கட்டப்பட்டு இருப்பதாக சென்னை சிஎம்டிஏவும் அறிவித்தது. விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ள 26 வணிக வளாகங்களுக்கு கடந்த அக்டோபர் 30ஆம் தேதி சிஎம்டிஏவும், மாநகராட்சியும் சீல் வைத்தது.

நக்கீரன் இதழுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா பாராட்டு!

Print E-mail

தமிழ் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் மோகன் நாராயணன் நக்கீரனின் தீவிர வாசகர்களில் ஒருவர். இவரது மகன் ஸ்ரீராம்  அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். நக்கீரனில் வெளியாகும்  முக்கிய செய்திகளை ஸ்கேன் செய்து தனது மகன் ஸ்ரீராமுவுக்கு இமெயிலில் அனுப்புவது மோகன் நாராயணனின் வழக்கம்.
அதுபோல, ஜனவரி 7 நக்கீரன் இதழில்  ’ஹெலன் கோர்டன்ஸ் கிறிஸ்துமஸ்’   என்ற தலைப்பில் வெளியான கட்டுரையை மோகன் நாராயணன் , ஸ்ரீராமுக்கு மெயில் அனுப்பி வைத்திருக்கிறார். அத்துடன் இந்த ஆண்டு நக்கீரனுக்கு வெள்ளி விழா ஆண்டு என்பதையும் தெரியப்படுத்தி இருக்கிறார்.

நாசா இன்ஜினியர்களின் வீடுகளுக்கு திடீர் விசிட் அடிப்பது அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வழக்கமாம்.

ராமதாஸ் மாமியார் பெயரில் 550 ஏக்கர், தங்கச்சி பெயரில் 40 கோடியில் மாளிகை, அக்கா பெயரில் சொத்துக்கள்-


Ramadoss
விழுப்புரம்: தமிழ், தமிழர் என்று பேசிக் கொண்டு எங்கு தனது தோட்டம், அலுவலகம், மக்கள் டிவி ஆகியவற்றில் மலையாளிகளுக்கும், தெலுங்கர்களுக்கும்தான் வேலை கொடுத்து வாழ வைத்துக் கொண்டிருக்கிறார் டாக்டர் ராமதாஸ். ஏற்காட்டில் மாமியார் பெயரில் 550 ஏக்கர் தோட்டம், 40 கோடியில் தங்கை பெயரில் மாளிகை, சென்னையில் அக்கா பெயரில் சொத்துகள் என்று வாங்கிக் குவித்துள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளார் பண்ருட்டி வேல்முருகன்.
விழுப்புரத்தில் நடந்த இளம்புயல் பாசறை கூட்டத்தில் கலந்து கொண்டு வேல்முருகன் பேசுகையில் டாக்டர் ராமதாஸை கடுமையாக சாடிப் பேசினார். தமிழ், தமிழர் என்று வசனம் பேசிக் கொண்டு மலையாளிகளையும், தெலுங்கர்களையும்தான் ராமதாஸ் மற்றும் அவரது குடும்பம் ஆதரித்து, வாழ வைத்துக் கொண்டிருப்பதாக அப்போது குற்றம் சாட்டினார் வேல்முருகன்.