செவ்வாய், 8 நவம்பர், 2016

ரூ. 1000, 500 நோட்டுகள் செல்லாது பிரதமர் மோடி அறிவிப்பு

புதுடில்லி: 500, 1000 ரூபாய் நோட்டுகள் இன்று நள்ளிரவு முதல் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இதுதொடர்பாக, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை: 500, 1000 ரூபாய் நோட்டுகள் இன்று நள்ளிரவு முதல் செல்லாது. நாடு முழுவதும் நவ., 9 மற்றும் 10 ம் தேதிகளில் ஏ.டி.எம்., செயல்படாது டிச.,30க்குள் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் ஒப்படைக்கலாம். நவம்பர் 11-ம் தேதிவரை விமான நிலையங்கள், ரயில்நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் பங்க்களில் 500 ,1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்திக்கொள்ளலாம். நவ.,9 ம் தேதி, வங்கிகள், தபால் நிலையங்கள் செயல்படாது புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்படும் டி.டி., காசோலை, டெபிட், கிரெடிட் கார்டு பரிவர்த்தனை முறைகளில் மாற்றம் இல்லை தினமலர்.காம்


கருத்துகள் இல்லை: