சனி, 17 ஜூன், 2023

செயின் பறித்தே திரைப்படம் தயாரித்த துணை நடிகர்; போலிசாருக்கே நகைப்பூட்டிய படத்தின் தலைப்பு

Supporting actor who produced the movie by Chain snatching Phothe; The title of the film shocked even the police

நக்கீரன்  : தூத்துக்குடியில் நிகழ்ந்த தொடர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட துணை நடிகர் ஒருவர் அதன் மூலம் திரைப்படம் ஒன்றை எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 15 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த முத்துமாரி என்பவர் வீட்டின் வாசலில் அமர்ந்திருந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சடாரென அவரது கழுத்தில் இருந்த 12 பவுன் தங்கச்சங்கலியைப் பறித்துச் சென்றனர்.
இதேபோல் அதே கோவில்பட்டி பகுதியில் உள்ள கோவில் ரோடு பகுதியைச் சேர்ந்த வெள்ளைத்தாய் என்பவர் ஏ.கே.எஸ் தியேட்டர் சாலையில் நடந்து சென்ற பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் 6 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்றனர்.
இப்படி தொடர்ச்சியாக கோவில்பட்டி பகுதியில் நிகழ்ந்த இந்த செயின் பறிப்பு சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து விசாரணையைத் துவக்கினர்.

அமைச்சர் உதயநிதி : ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் என்று விஜய் நல்ல கருத்துதான் சொல்லி இருக்கிறார்-

மாலைமலர் :  ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் என்று நடிகர் விஜய் நல்லது தானே சொல்லி இருக்கிறார். யார் அரசியலுக்கு வர வேண்டும், யார் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. சென்னை: ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது என்று நடிகர் விஜய் இன்று மாணவர்கள் மத்தியில் பேசியிருப்பது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர்.
அதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:- ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் என்று நடிகர் விஜய் நல்லது தானே சொல்லி இருக்கிறார்.
அதில் என்ன பிரச்சினை?
யார் அரசியலுக்கு வர வேண்டும், யார் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

iகனடா - பேருந்து – லாரி விபத்து 15 பேர் உயிரிழப்பு பலர் காயம் 15 dead, 10 hospitalized in horrific Bus crash- Manitoba - Canada

 தினத்தந்தி  : கனடாவின் மொனிடோபா மாகாணத்தில் பெரும்பாலும் வயதானவர்களை ஏற்றிச் சென்ற பஸ் வண்டி ஒன்று ட்ரக் வண்டியில் மோதிய பயங்கர விபத்தில் 15 பேர் பலியாகியுள்ளனர்.
கார்பரியில் உள்ள ட்ரான்ஸ் கனடா அதிவேகப் பாதையில் கடந்த வியாழக்கிழமை (15) இந்த விபத்து நேர்ந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு அவசரப் பிரிவினர் மற்றும் விமான அம்புலன்ஸ்கள் விரைந்தன.
இரு பிரதான பாதைகள் சந்திக்கும் இடத்திலேயே விபத்து நேர்ந்துள்ளது. பஸ்ஸில் இருந்த பயணிகள் கர்பர்ரியில் உள்ள கசினோ ஒன்றுக்கு பயணித்துக் கொண்டிருந்துள்ளனர்.
இரு வண்டிகளினதும் ஓட்டுநர்கள் உட்பட குறைந்தது 10 பேர் மோசமான காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மலையகம் 200 ஆண்டுகள் கவிஞர் எஸ்தர்

Esther Nathaniel :  மாறி மாறி ஆட்சிக்கு வரும் இலங்கை  அரசாங்கம் அய்ந்து வருசத்தில் தாமரைக் கோபுரத்தை கட்டியது
 அதிவேக பாதைகளை கொழும்பைச் சுற்றி அமைத்தது கோத்தா கோ கமவில் புரட்சி மூலம் எரிக்கப்பட்ட பாராளுமன்ற மந்திரிகளின் வீடுகளை சீர் செய்தது
 கொழும்பில் ராணி பாலத்தைக் கட்டி மலர் தூவீயது
 விமானமே வர முடியாத மத்தள விமன நிலையத்தை காசைக் கொட்டி கட்டி வைதத்துள்ளது.
கடந்த 200 வருடங்களாக இந்த மண்ணுக்கு மண்வெட்டியா தேஞ்சி மாடா உழைச்சீ இந்த நாட்டின் பெருந்தோட்டத்துறையில்,
 இன்றுவரை   கூடையை தலையிலும் நாட்டின் கடனை முதுகிலும் சுமந்து நாள்தோறும் தேயிலை காடுகளில் ஏறி இறங்கும் இம்மக்களுக்கு அவர்கள் வாழும் லயங்களை சரி திருத்தி கொடுத்துள்ளதா ??? இல்லை!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : “பா.ஜ.க.வின் சவப்பெட்டியில் அறையப்படும் கடைசி ஆணி

nakkheeran.in : அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் உள்ளார்.
அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு நீதிமன்றத்தின் அனுமதியோடு காவிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிற
இதனிடையே ஜாமீன் வழங்கப்பட வேண்டும் என்ற செந்தில் பாலாஜியின் மனுவும், செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்ற அமலாக்கத்துறையினரின் மனுவும் இன்று விசாரிக்கப்பட்டது. அதில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் செந்தில் பாலாஜியை 8 நாட்கள் அமலாக்கத்துறையினர் காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்று சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் ஆங்கிலமும் தேசிய மொழியாகிறது - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா அறிவிப்பு

\

 தேசம் நெட்  :  முல்லைத்தீவு குருந்தூர் மலை விகாரைக்கும் திருகோணமலை திரியாய் விகாரைக்கும் தொல்பொருள் தேவைகளுக்காக 5000 ஏக்கர் காணி உரிமை கோரப்பட்டுள்ளது. இது தொடர்பில் முறையான  ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு நிபுணர் குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
முல்லைத்தீவு குருந்தூர் மலை விகாரைக்கு 3000 ஏக்கர் நிலமும் திருகோணமலை திரியாய் விகாரைக்கு 2000 ஏக்கர் நிலமும் கோரப்பட்டுள்ளது.

வனவளத் திணைக்களம், காணி திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றுக்குச் சொந்தமான பெருமளவிலான காணியை விஞ்ஞான ரீதியான காணி எனக் கூறுவதன் அடிப்படை என்ன என்பதை உடனடியாகக் கண்டறியுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் எஸ்ஜி சூர்யா கைது..

tamil-nadu-bjp-secretary-sg-suryah-arrested-by-police

tamil.oneindia.com  - Nantha Kumar R  : மதுரை: தமிழ்நாடு பாஜக மாநி செயலாளர் எஸ்ஜி சூர்யாவை மதுரை போலீசார் நேற்று நள்ளிரவில் அதிரடியாக கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு பாஜகவின் மாநில செயலாளராக இருப்பவர் எஸ்ஜி சூர்யா. மாநில தலைவர் அண்ணாமலையுடன் மிகவும் நெருக்கமாக இருப்பவர். இவர் அண்ணாமலையுடன் வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் கூட செய்துள்ளார்.
எஸ்ஜி சூர்யா, சென்னையை சேர்ந்தவர். இந்நிலையில் தான் எஸ்ஜி சூர்யாவை மதுரை மாநகர போலீசார் நேற்று இரவு அதிரடியாக கைது செய்துள்ளனர். நேற்று இரவு 11 மணியளவில் எஸ்ஜி சூர்யாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

செந்தில் பாலாஜிக்கு விசாரணையின் போது எவ்வித அச்சுறுத்தலும் அளிக்கக்கூடாது - முதன்மை அமர்வு நீதிமன்றம்

 மாலை மலர் : சென்னை அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு, காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த மனு நீதிபதி அல்லி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது காணொலி மூலம் ஆஜரான செந்தில் பாலாஜி, இன்னும் 3 நாளில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.
காவல் வழங்கினால் உடல்நிலை மேலும் பாதிக்கப்படும் என்றார்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

வெள்ளி, 16 ஜூன், 2023

மணிப்பூர் கலவரம்: வரலாற்றில் ஒரு இருண்ட காலம்… பிரதமர் வாய் திறக்காதது ஏன்?:

 தினகரன்  மணிப்பூர் கலவரம்: வரலாற்றில் ஒரு இருண்ட காலம்… பிரதமர் வாய் திறக்காதது ஏன்?: வடகிழக்கு இந்தியாவுக்கான பெண்கள் அமைதி குழு கேள்வி
இம்ப்ஹல்: மணிப்பூர் கலவரம் தொடர்பாக ஒன்றரை மாதமாக வாய்திறக்காத பிரதமர் மோடி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வடகிழக்கு இந்தியாவுக்கான பெண்கள் சமாதானக் குழு வலியுறுத்தியுள்ளது. மணிப்பூரில் கடந்த மே 3-ம் தேதி முதல் துப்பாக்கி சத்தம் ஓய்ந்தபாடில்லை. அந்த மாநிலத்தின் பெரும்பான்மை சமூகத்தினர் மைய்தி சாதியினர் தங்களையும் பழங்குடியினத்தவர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கையை பரிசீலிக்குமாறு மணிப்பூர் உயர்நீதிமன்றம் பரிந்துரைத்தது. அதற்கு ஆதரவாக ஆளும் மாநில பாஜக அரசு முயன்றது ஆகியவை வன்முறைக்கு வித்திட்டன. மக்கள் தொகையில் 53% பேர் உள்ள மைய்தி இன பழங்குடியினத்தில் சேர்க்க கூடாது என்று வலியுறுத்தி மே 3-ம் தேதி பழங்குடியின மாணவர்கள் நடத்திய பேரணி பயங்கர வன்முறையில் முடிந்தது. தற்போது வரை 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் மேலும் 11 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஆ.ராசா MP! : ஒரு அமைச்சரை முடக்கினால் தாமரை மலர்ந்துவிடும் என்று நினைக்கிறீர்களா?

 Kalaignar Seithigal - Lenin : ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்து கோவையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
அமலாக்கத்துறையை ஏவி விட்டு அமைச்சர் செந்தில் பாலாஜியை அராஜக முறையில் கைது செய்துள்ள பா.ஜ.க வின் ஜனநாயக விரோத மக்கள் விரோத பழிவாங்கும் எதேச்சதிராக நடவடிக்கைகளைக் கண்டித்து கோவையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

செந்தில் பாலாஜி அமைச்சராகத் தொடர ஆளுநர் மறுப்பு!

 நக்கீரன் : அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் உள்ளார். அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு நீதிமன்றத்தின் அனுமதியோடு காவிரி மருத்துவமனைக்கு நேற்று இரவு மாற்றப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் செந்தில் பாலாஜி பதவி வகித்து வந்த மின்சாரத்துறை தற்பொழுது நிதித்துறை அமைச்சராக இருக்கக்கூடிய தங்கம் தென்னரசுவிற்குக் கூடுதல் துறையாக ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது.

சவுக்கு சங்கருக்கு ரூ.1 லட்சம் அபராதம்- அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்து

மாலை மலர்  :  சென்னை சவுக்கு சங்கர் தன்னைப்பற்றி தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவதாக செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
சவுக்கு சங்கர் இவ்வாறு அவதூறு கருத்து தெரிவிக்க தடை விதிக்கவேண்டும், சவுக்கு சங்கர் மான நஷ்ட ஈடாக ரூ.2 கோடி வழங்க உத்தரவிடவேண்டும் என்றும், செந்தில் பாலாஜி தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான கருத்துக்களை சவுக்கு சங்கர் பதிவு செய்வதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

போட்டி ஆட்சி நடத்துகிறாரா ஆளுநர் ஆர்.என்.ரவி?

  aramonline.in : செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு போட்டி அரசா ஆளுநர் மாளிகை? அல்லது எதிர்கட்சி அரசியல் தலைவராகும் ஆசையா? அல்லது அவ்வப்போது கவனம் கவரும் அதிரடி அரசியல் ஆசையா? சட்டப் பூர்வமான ஆட்சியை சாய்த்து, சனாதன ஆட்சிக்கான வேட்கையா..? என்ன தான் திட்டம் வைத்துள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி?
2014 இல் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல், எதிர்க்கட்சி மாநில அரசுகளை எல்லாம் ஆளுநர்கள் ஆட்டி வைக்கின்றனர். இது ஜனநாயகத்திற்கு முரணானது.
காங்கிரசின் ஆட்சி காலத்தில், எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்த மாநிலங்களில் ஆளுநர்கள் இப்போது நடப்பது போல செயல்படவில்லை. குஜராத்தில் மோடி ஆண்ட போது, அங்கே இருந்த ஆளுநர், இப்பொழுது ஆளுநர்கள் செயல்படுவது போல செயல்படவில்லை.   எப்போதாவது அத்தி பூத்தாற் போல் முதல்வருக்கும் ஆளுநருக்கு பிரச்சனைகள் எழலாம். தமிழ்நாட்டில் மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கும் ஆளுநர் சென்னா ரெட்டி அவர்களுக்கும் இருந்த பிரச்சனையை சுட்டிக் காட்டலாம்.

வானதி சீனிவாசன் ஆபீசில் புகுந்த மர்ம மனிதன் கொலை

டியார்க்கோ கார்சியா தீவில் அகப்பட்டு 20 மாதங்களாக தப்பிக்க முடியாமல் தவிக்கும் இலங்கை தமிழர்கள்


BBC :  கப்பலின் மேல்தளத்தில் நாட்களை கடத்தும் புலம்பெயர் இலங்கை தமிழர்கள்
இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு, புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு நரகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது.
இந்திய பெருங்கடல் பகுதியில் சிக்கிய மீன்பிடிப் படகிலிருந்து மீட்கப்பட்ட டஜன் கணக்கான புலம்பெயர்ந்தோர், அந்தப் பகுதியில் அமைந்துள்ள பிரிட்டனின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு தீவில் மாதக்கணக்கில் சிக்கித் தவித்து வருகின்றனர். இந்த வெப்பமண்டல தீவிலிருந்து அவர்கள் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல விரும்பினாலும், அங்குள்ள அசாதாரண சட்ட நடைமுறைகள் அவர்களை தீவை விட்டு வெளியேற முடியாதபடி செய்துள்ளன.

வியாழன், 15 ஜூன், 2023

அய்யா சின்னக்குத்தூசி - உண்மையான திராவிட இயக்க சிந்தனையாளர் சுயமரியாதைக்காரர்!

May be an image of 1 person and text that says 'சின்னக்குத்தூசி'

LR Jagadheesan :  கொண்ட கொள்கைக்காக தம் ஒட்டுமொத்த வாழ்வையும் ஒப்புக்கொடுத்த தலைமுறை ஒன்று தமிழ்நாட்டில் இருந்தது. இருபதாம் நூற்றாண்டில் அது ஒரு இயக்கமாக,
இல்லையில்லை பேரியக்கமாகவே வளர்ந்து எல்லா துறைகளிலும் விரிந்து படர்ந்து வியாபித்திருந்தது.
அதன் பெயர் திராவிடர் இயக்கம். அதன் எத்தனையோ லட்சகணக்கான கொள்கையாளர்களில் ஒருவராய் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்.
அதற்காக தன் உடல் பொருள் ஆவியென அனைத்தையும் தியாகம் செய்தவர்.
எந்த முன் நிபந்தனையும் விதிக்காமல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல். பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே என்கிற வள்ளலாரின் வரிகளை தன் வாழ்விலும் கடைபிடித்த பகுத்தறிவுவாதி. கொள்கைரீதியில் நின்று மூர்க்கமாய் எதிர்க்கும் ஆட்களுக்கு கூட அவர்களின் நெருக்கடியில் தேவைகளில் ஓடோடிப்போய் உதவிய அருளாளன்.

தமிழ்நாட்டுக்கு ஸ்கெட்ச் .. காட்டிக்கொடுக்கும் நடுநிலை புரோக்கர்கள் தோழர் மருதையன் விளாசல்

செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றலாம்.. நீதிபதிகள் அனுமதி

மாலைமலர் : அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்ததையடுத்து, அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் உடனடியாக சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவரது இதய ரத்தக் குழாய்களில் அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் சர்ஜிரி செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறி உள்ளனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதில் சட்டப்பூர்வ நடைமுறை பின்பற்றப்படவில்லை என திமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சார்பில் ஆட்கொணர்வு மனுவை மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ நேற்று சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார்.

400 வாகனங்கள் அணிவகுப்பு.. 300 கிமீ பயணம்.. காங்கிரஸ் கட்சிக்கு திரும்பிய பா.ஜ.க. தலைவர்

 மாலை மலர் :  போபால் மத்திய பிரதேசத்தில் கடந்த 2020ல் கமல் நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது, கட்சியின் மூத்த தலைவராக விளங்கிய ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் 20க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் முதல்வருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.
இந்த மோதலின் உச்சகட்டமாக தங்கள் பதவிகளை ராஜினாமா செய்த அவர்கள், பாஜகவில் இணைந்தனர். இதனால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து, பாஜக ஆட்சியை கைப்பற்றியது. பாஜகவில் இணைந்த சிந்தியா தற்போது மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரியாக உள்ளார்.
இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு கிளர்ச்சியின்போது ஜோதிராதித்ய சிந்தியாவைப் பின்பற்றி பாஜகவில் இணைந்து பணியாற்றிய தலைவர்களில் ஒருவரான பைஜ்நாத் சிங் மீண்டும் தாய்க்கட்சியான காங்கிரசில் இணைந்துள்ளார்.

வெளிநாடுகளுக்கு புலம்பெயரும் (தப்பி ஓடும்) 6,500 இந்திய மில்லியனர்கள்... இந்திய பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும்?

விகடன்   - இ.நிவேதா  : சாதாரணமாகவே நன்றாகச் சம்பாதிப்பவர்களின் மனநிலை, வெளிநாடுகளுக்குச் சென்று செட்டிலாக வேண்டும் என்பதாகவே இருக்கும். இந்த எண்ணம் மில்லியனர்கள் மத்தியில் சர்வ சாதாரணமாக இருக்கும்.
தங்களால் எந்த இடத்தில் மிகவும் வசதியாக வணிகம் செய்ய முடிகிறதோ, அரசின் கீழ் சிறப்பாகச் செயல்பட முடிகிறதோ அந்த நாட்டை தேடிப் பறப்பது தொழிலபதிர்களிடையே வழக்கம்.
வெகு சிலரே மில்லியனர்களானாலும் தங்களது சொந்த நாட்டிலேயே இருப்பதுண்டு.
அந்த வகையில் 2023-ல் இந்தியாவில் இருந்து அதிக சொத்து மதிப்புள்ள (High Net Worth Individual) 6,500 மில்லியனர்கள் வெளியேற உள்ளதாக ஹென்லி பிரைவேட் வெல்த் மைகிரேஷன் (Henley Private Wealth Migration Report) அறிக்கை தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதிலும் செல்வம் மற்றும் மில்லியனர்களின் இடம்பெயர்வு குறித்து ஆய்வு செய்து வரும் இந்த அமைப்பு 2023-ம் ஆண்டுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் பாதுகாப்பு பொறுப்பை புழல் சிறைத்துறை ஏற்றது

maalaimalar : சென்ன தமிழக மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையை நிறைவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். நெஞ்சு வலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சிபிஐக்கு அனுமதி ரத்து! இது மம்தா, பினராயி, ராவ் ரூட்

tamil.oneindia.com  - Noorul Ahamed Jahaber Aliசென்னை: மத்திய புலனாய்வுத் துறை (CBI)க்கு அளிக்கப்பட்டு இருந்த அனுமதியை திரும்பப் பெற்று இருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்து இருக்கிறது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ள அறிவிப்பில், "மத்திய புலனாய்வுத் துறை எந்த ஒரு மாநிலத்தில் விசாரணை மேற்கொள்வதாக இருந்தாலும்,
அந்தந்த மாநில அரசின் முன் அனுமதியைப் பெறவேண்டும் என டெல்லி சிறப்புக் காவல் அமைப்புச் சட்டம் 1946, (Delhi Special Police Establishment Act. 1946 (Central Act XXV of 1946)}-ன் பிரிவு 6-ன்படி வகுக்கப்பட்டுள்ளது.  கடந்த 1989 மற்றும் 1992ஆம் ஆண்டுகளில், மேற்படி சட்டத்தின் கீழ், சிலவகை வழக்குகளுக்கென வழங்கப்பட்டு இருந்த பொதுவான முன் அனுமதியை, இன்று தமிழ்நாடு அரசு திரும்பப்பெற்று ஆணையிட்டு உள்ளது. இதன்படி, மத்திய புலனாய்வுத் துறை, தமிழ்நாட்டில் இனி விசாரணை மேற்கொள்வதற்கு முன்பாக. தமிழ்நாடு அரசின் முன்அனுமதியை பெற்று, விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.

புதன், 14 ஜூன், 2023

சட்ட விரோத கஸ்டடி ! பாதியில் ஓடிய நீதிபதி ! பயத்தில் பாஜக !

அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம்.? புதிய அமைச்சர் யார்.?

 tamil.asianetnews.com  - Ajmal Khan  : அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம்.? புதிய அமைச்சர் யார்.? வெளியான பரபரப்பு தகவல்
அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி நள்ளிரவில் கைது செய்யப்பட்ட நிலையில், அமைச்சர் பொறுப்பில் இருந்து அவரை நீக்கி புதிய அமைச்சர் நியமிக்கப்படவுள்ளார். எனவே யார் அந்த புதிய அமைச்சர் என்ற கேள்வி எழுந்துள்ளது
செந்தில் பாலாஜி கைது
அ.தி.மு.க ஆட்சியில் கடந்த  2011 முதல் 2015ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி.  அச்சமயத்தில் போக்குவரத்துதுறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக, சென்னை, அம்பத்துாரைச் சேர்ந்த கணேஷ்குமார், தேவசகாயம் உள்ளிட்டோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர்.

செந்தில் பாலாஜிக்கு 28-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்! சித்ரவதை ! அமித்ஷாவின் கோரிக்கைகள்?

 
bbc.com  :  அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது ஓட்டுநர் உள்ளிட்ட பதவிகளுக்கு பணம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டுகளை திமுக ஆட்சியில் அமைச்சராக உள்ளபோது செந்தில் பாலாஜி எதிர்கொண்டு வருகிறார்.
தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்குகளை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. இந்த வழக்கின் பின்னணியை இங்கே பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.
2014ஆம் ஆண்டில் போக்குவரத்து துறையில் ஓட்டுநர், நடத்துநர், இளநிலை உதவியாளர், இளநிலை பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆள் சேர்க்கை நடப்பதற்கான அறிவிப்பு வெளியானது. அதன் அடிப்படையில் ஆள்சேர்ப்பு நடைபெற்றது.

கிரேக்க கடலில் படகு கவிழ்ந்து 59 அகதிகள் பலி

20230614060624-648995582c5e85ac8e1f5666jpeg

மாலைமலர் :கிரேக்க கடற்கரையில் அகதிகளை ஏற்றிக் கொண்டு சென்ற பெலோபொன்னீஸில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
படகு கவிழ்ந்த தகவலை அடுத்து, கடற்படைக் கப்பல்களுடன் ராணுவ விமானம் மற்றும் ஹெலிகாப்டர், 6 படகுகளும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.
இந்த விபத்தில் சிக்கி 59 அகதிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 104 பேர் மீட்கப்பட்டுள்ளனர். சர்வதேச கடல் பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்து பலத்த காற்றினால் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.link - stcatharinesstandar
இதுகுறித்து கடலோர காவல் படையினர் கூறுகையில், " அகதிகளை ஏற்றிச் சென்ற மீன்பிடி படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 59 பேர் உயிரிழந்துள்ளனர்.

செந்தில் பாலாஜியால் கோபப்பட்ட அமித் ஷா! கோட்டையில் ரெய்டு நடத்த 3 காரணங்கள்! ஸ்டாலினே எதிர்பார்க்கல!

 tamil.oneindia.com  - Shyamsundar  : சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான ரெய்டில் தமிழ்நாட்டின் தலைமை செயலகத்திலேயே ரெய்டு நடத்துவதற்கு பின் 3 முக்கியமான காரணங்கள் உள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு அரசியலையே குலுக்கிய சம்பவம் ஒன்று இன்று தமிழ்நாடு தலைமை செயலகத்தில் நடந்து உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
முன்பு வருமானவரித்துறை சோதனையின் போது செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை செய்யப்படவில்லை. அவரின் தம்பி வீடு, உறவினர்கள் வீட்டில்தான் சோதனை செய்யப்பட்டது. ஆனால் இந்த முறை சென்னையில் அமைச்சர் இல்லத்திலேயே சோதனை நடக்கிறது.
வீட்டோடு சேர்த்து தற்போது தலைமை செயலகத்தில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகின்றனர்.

செந்தில் பாலாஜிக்கு என்னாச்சு?" - ஆர்.எஸ்.பாரதி கேள்வி!

மின்னம்பலம் - Selvam  : மனித உரிமையை மீறக்கூடிய வகையில் செந்தில் பாலாஜி இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்தது தொடர்பாக அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் வீடுகளில் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் சோதனை நடைபெற்று வரும் செந்தில் பாலாஜி இல்லத்திற்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் உள்ளிட்டோர் சென்றனர்.
அவர்களை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் செந்தில் பாலாஜி இல்லத்திற்கு வெளியே அவர்கள் காத்திருந்தனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது

மாலை மலர்  :  சென்னை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். கரூர் மற்றும் சென்னை வீடுகளில் நடந்த சோதனை நிறைவடைந்தது.
இன்று அதிகாலை சென்னை பசுமைவழிச்சாலை வீட்டிலிருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக அழைத்துச் செல்வதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவைத் தொடர்ந்து ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உறவினர்கள், நண்பர்கள் யாரிடமும் அதிகாரிகள் எதுவும் சொல்லவில்லை.
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டாரா அல்லது கைது செய்யப்பட்டாரா என்பது குறித்து உறுதியாக அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

செவ்வாய், 13 ஜூன், 2023

அக்ரஹாரம் எப்படி உருவானது? , தனி வீடு அல்ல என்பதைக் குறிப்பதற்கும் அ + கிரகம் (தனி வீடு அல்ல)

No photo description available.

Siva Ilango  · :  அக்ரகாரம் என்பதற்கான விளக்கத்தை ஒரு நண்பர் கோரியிருந்தார்.
அக்ரகாரம் விளக்கம்:
ஐந்தாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் பல்லவர்கள் ஆட்சி ஏற்படுத்தப் பட்டது.
அப்போது சமண, பௌத்த, ஆசீவகம் ஆகிய சமயங்களே மக்களால் பெருமளவில் கடைப்பிடிக்கப் பட்டு வந்தன.
ஆனால் பல்லவர்கள் காலத்தில் வைதீக மதம் அரச மதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
தொடர்ந்து சமணப் பள்ளிகளும், பௌத்த விகாரைகளும், ஆசீவக மடங்களும் மெல்ல மெல்ல வைதிகக் கோயில்களாக மாற்றப்பட்டன.

வைதீகக் கடவுள்களைக் கற்பித்தவர்களே வைதீகக் கடவுள்களுக்கு அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர். அதற்காக வடநாட்டிலிருந்து பிராமணர்கள் குடும்பம் குடும்பமாக வரவழைக்கப்பட்டுத் தமிழ்நாட்டில் வந்து குடியேறினர்.

புறவாசல் வழியாக அச்சுறுத்தப்பார்க்கிறது பாஜக- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

 மாலை மலர்  :  சென்னை தமிழக மின்சாரத்துறை மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையில் அமலாக்கத்துறையினரின் சோதனை நடைபெற்றது.
இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்களை, புறவாசல் வழியாக அச்சுறுத்தப் பார்க்கும் பா.ஜ.க.வின் அரசியல் செல்லுபடியாகாது. அதனை அவர்களே உணரும் காலம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது."

இறையன்பு ஐ.ஏ.எஸ் நேர்மைக்கும் மக்கள் பணிக்கும் பட்டை தீட்டியிருக்கிறார்.

May be an image of 1 person and smiling

 Kandasamy Kandasamy  :  ஓய்வுக்கு பிறகு எந்த பதவியும் வேண்டாம்’ அரசு தர முனைந்த பொறுப்பை துறந்தார் இறையன்பு ஐ.ஏ.எஸ்..!
தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ்
எழுத்தாளர், நேர்மையாளர், சிறந்த நிர்வாகி, பேச்சாளர் என்ற பன்முகதன்மை கொண்ட  மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான இறையன்பு, அவரது ஓய்வுக்கு பிறகு அரசு தர முன் வந்த தமிழ்நாட்டின் மிக முக்கிய பதவியை துச்சமென நினைத்து தூக்கியெறிந்திருக்கிறார்.
இறையன்பு ஐ.ஏ.எஸ்
இறையன்பு ஐ.ஏ.எஸ்
மு.க.ஸ்டாலின் சாய்ஸ் - தலைமைச் செயலாளர் ஆன இறையன்பு
திமுக ஆட்சி அமைந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் யாரை தலைமைச் செயலாளராக நியமிக்கப்போகிறார் என்ற மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு எழுந்த நிலையில், அவரது சாய்ஸ்சாக  அதிமுக ஆட்சியில் ஓரங்கட்டு வைக்கப்பட்டிருந்த இறையன்பு இருந்தார். 

திங்கள், 12 ஜூன், 2023

உக்கிரேன் ரஷியா போரில் வடகொரியா ரஷ்யாவுக்கு முழு ஆதரவு - கிம் ஜங் உன் அறிவிப்பு

 மாலை மலர்  :  ரஷிய அதிபர் விளாடிமிர் புடினுடன், 'கரம்கோர்ப்பதாகவும்', நாட்டை சக்திவாய்ந்ததாக்கும் இலக்கிற்காக, திட்டமிட்ட செயலாக்கத்திற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதாகவும்,
 வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் உறுதியளித்துள்ளதாக, அந்நாட்டு அரசு ஊடகமான கே.சி.என்.ஏ. செய்தி வெளியிட்டுள்ளது.
ரஷியாவின் தேசிய தினத்தையொட்டி ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு கிம் வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார்.
அந்த செய்தியில், உக்ரைன் மீது படையெடுப்பதற்கான புதினின் முடிவிற்கு வட கொரியா துணை நிற்பதாகவும், ரஷியாவிற்கு முழு ஆதரவு மற்றும் ஒத்துழைப்பை அளிப்பதாகவும் கிம் உறுதியளித்துள்ளார்.
"நீதி வெற்றி பெறுவது உறுதி என்றும், வெற்றி வரலாற்றிற்கு ரஷிய மக்கள் தொடர்ந்து பெருமை சேர்ப்பார்கள்", என்றும் கிம் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் ஜனாதிபதித் தேர்தலில் தர்மன் சண்முகரத்தினம் (இலங்கை) போட்டியிட்டே தெரிவாக விரும்புவதாக தெரிவிப்பு

BBC Tamil  : சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் பிரபல பொருளாதார நிபுணரும் முன்னாள் துணைப் பிரதமரும், சிரேஷ்ட அமைச்சருமான தர்மன் சண்முகரத்தினம் போட்டியிடவுள்ளார்.
இவர் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்.
சிங்கப்பூரின் சிரேஷ்ட அமைச்சர் மற்றும் சமூக கொள்கைகள் அமைச்சரர் மற்றும் மத்திய வங்கித் தலைவர் உட்பட பல பதவி விகித்து வந்த தர்மன் சண்முகரத்தினம்,
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இப்பதவிகளிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.  பிரதமர் லீ சியென் லூங்க்கு தர்மன் சண்முகரத்தினம் எழுதியுள்ள கடிதத்தில், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பத்தை வெளியிட்டுள்ளதுடன், அரசியலிலிருந்து  தான் ஓய்வு பெறுவதாகவும், அரசாங்கத்தில் தான் விகிக்கும் சகல பதவிகளிலிருந்தும் ஆளும் மக்கள் செயற்பாட்டுக் கட்சியின் (பிஏபி) அங்கத்துவத்திலிருந்தும் ஜூன் 7 ஆம் திகதியுடன் விலகுவதாகவும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் சுயமரியாதை நடைப்பயணம் .. LGBTQIA+ சமூகத்துக்கு எதிரான பாகுபாடுகளை எதிர்த்து

 தேசம் நெட்  அருண் மொழியான : யாழ்ப்பாணத்தில் LGBTQIA+ சமூகத்துக்கு எதிரான பாகுபாடுகளை எதிர்த்து சுயமரியாதை நடைபயணம்
சகல விதமான ஒடுக்குமுறைகள் மற்றும் LGBTQIA+ சமூகத்துக்கு எதிரான பாகுபாடுகளை எதிர்த்து சுயமரியாதை நடைபயணமொன்று யாழ்ப்பாணத்தில் நேற்று சனிக்கிழமை (10) இடம்பெற்றது.
சுயமரியாதை மாதத்தை முன்னிட்டு ‘யாழ். சுயமரியாதை வானவில் பெருமிதம் – 2023’ நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமாக ‘இச்சமூகத்தில் வாழும் அனைவருமே சமூக பொறுப்புடையவர்கள்’ என்பதை வலியுறுத்தும் முகமாகவும், LGBTIQA+ சமூகத்தினரையும் சக மனிதர்களாக கருதுவதுடன் அவர்கள் தமது வாழ்வை வாழ்வதற்கான உரிமைகளை மதிப்பதுடன் ஒடுக்குமுறைகளுக்கு உட்படுத்தாத வாழ்தலை நோக்கிய பயணத்தின் முக்கிய நிகழ்வாக இந்த நடைபவனி அமைந்தது.

பாகிஸ்தானில் கடத்தப்பட்ட இந்து சிறுமி மதம் மாற்றி திருமணம் - தனிப்படை போலீசார் மீட்டனர்

தினத்தந்தி  :சிறுமியை கடத்திச் சென்ற குடும்பத்தினர், சிறுமி தனது சொந்த விருப்பத்தில் மதம் மாறி திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தனர்.
கராச்சி,
பாகிஸ்தானில் தெற்கு சிந்து மாகாணம் டன்டோ அல்லாஹ்யார் பகுதியை சேர்ந்தவள் ரவீணா மேக்வால் என்ற இந்து சிறுமி. இந்த சிறுமி சில நாட்களுக்கு முன்பு, அப்பகுதியில் இருந்து கடத்தப்பட்டாள்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், போலீசில் புகார் செய்தனர். பாகிஸ்தானில் சிறுபான்மையினர் உரிமைகளுக்காக போராடும் 'பாகிஸ்தான் தாராவர் இத்தேஹத்' அமைப்பும் புகார் செய்தது.
அதையடுத்து, கராச்சிக்கு தனிப்படை போலீசார் அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஞாயிறு, 11 ஜூன், 2023

பாஜக மோடியின் 9 ஆண்டு ஆட்சியில் 100 லட்சம் கோடி கடன் பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

nakkheeran.in  : ‘100 லட்சம் கோடி’ - காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேத் பகீர் குற்றச்சாட்ட
பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியில் 100 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளதாக பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேத் இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் கடன் மும்மடங்காக அதிகரித்துள்ளது.  2014 ஆம் ஆண்டுக்கு முன் 14 பிரதமர்களின் 67 ஆண்டு கால ஆட்சியில் நாட்டின் கடன் 55 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
ஆனால் மோடி பிரதமராக பொறுப்பேற்ற பின் அவரது 9 ஆண்டு கால ஆட்சியில் 100 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் ஒட்டுமொத்த கடன் 155 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

10 மாநிலங்களுக்கு விரைவில் காங்கிரஸ் பொறுப்பாளர்கள் நியமனம் ( தமிழ்நாடு கார்த்தி சிதம்பரம்?)

Maalaimalar .டெல்லி மற்றும் அரியானா மாநிலத்துக்கு தற்காலிகமாக தீபக் பபாரியா பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
உத்தரகாண்ட் மாநில பொறுப்பாளர் தேவேந்திர யாதவ் மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன.
புதுடெல்லி: மத்தியபிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இதன் தொடர்ச்சியாக அடுத்த ஆண்டு (2024) பாராளுமன்றமும் தேர்தலை சந்திக்க இருக்கிறது.
இந்த தேர்தல்களில் வெற்றி பெற காங்கிரஸ் அதிரடி நடவடிக்கைளை மேற்கொள்ள உள்ளது.
இதன் முதல் கட்டமாக தமிழ்நாடு உள்பட 10 மாநிலங்களில் காங்கிரஸ் பொறுப்பாளர்களை நியமனம் செய்வதற்காக ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
தமிழ்நாடு மற்றும் கோவா மாநில பொறுப்பாளராக இருந்த தினேஷ் குண்டுவாவ் மற்றும் மகாராஷ்டிர மாநில பொறுப்பாளராக இருந்த எச்.கே.பாட்டீல் ஆகியோர் சமீபத்தில் கர்நாடகத்தில் புதிதாக அமைந்த காங்கிரஸ் அரசு மந்திரி சபையில் இடம் பெற்று உள்ளனர்.
இதையடுத்து அவர்களுக்கு பதிலாக தமிழ்நாடு, கோவா மற்றும் மகாராஷ்டிர மாநிலத்துக்கு புதிதாக காங்கிரஸ் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

பார்ப்பனியத்தின் சிம்மசொப்பனம் மாவீரன் லாலு பிரசாத் அவர்களின் பிறந்தநாள் இன்று..

(juin 11 - 2022)   நீண்ட காலங்களாக  நஷ்டத்தில் இயங்கிய இந்தியன் ரெயில்வேயை இலாபத்தில் இயங்கவைத்த மேதை லாலு பிரசாத் யாதவ்   
உலக கார்ப்பரேட் வல்லுநர்களை திகைக்க வைத்த உண்மையான அறிவாளி.
லாலுவை படிக்காதவர் என்று எள்ளி நகையாடுவோர்களின் கூட்டம் லாலுவின் ரெயில்வே சாதனையை பற்றி பி ஹெச் டி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்
பாட்னா நகருக்குள் நுழைவதற்கே தயங்கிய மக்களுக்கு பாட்னா நகரின் மத்தியிலேயே குடியிருப்புக்களை அமைத்து கொடுத்தவர் .
மதவாத சேற்றில் சிக்கிய பிகார் மக்கள் சமூகநீதி தலைவரை தோற்கடித்த பலனை இன்று அனுபவிக்கிறார்கள்

வைரமுத்துவால் 17 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.. பாடகி புவனா சேஷன் குற்றச்சாட்டு

 மாலை மலர் :  தமிழ் திரையுலகின் பிரபல பாடகியான சின்மயி, சில வருடங்களுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது 'மீ டு'பாலியல் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
வைரமுத்து அனுப்பிய மெயில் போன்றவற்றையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு அவர்மீது குற்றம் சாட்டினார்.
மேலும் கவிஞர் வைரமுத்துவால் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். சின்மயி மட்டுமல்லாமல் பலர் வைரமுத்து மீது குற்றம்சாட்டினர். அதன் பிறகு சினிமா துறையில் நடக்கும் பாலியல் அத்துமீறல் தொடர்பான பல விஷயங்கள் வெளியே வந்தது.