சனி, 25 மார்ச், 2023

அன்று ராகுல் கிழித்த அவசரச் சட்டம், இன்று அவரையே... பத்து வருட ஃப்ளாஷ் பேக்!

 மின்னம்பலம் - Aara : அன்று ராகுல் கிழித்த அவசரச் சட்டம், இன்று அவரையே… பத்து வருட ஃப்ளாஷ் பேக்!
பத்து வருடங்களுக்கு முன் 2013 ஆம் ஆண்டு ராகுல்காந்தி டெல்லியில் அப்போது நடைபெற்ற தனது காங்கிரஸ் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கொண்டுவந்த அவசர சட்டத்தை கிழித்து எறிந்தார்.
அதன் ஒரு விளைவாகவே இப்போது 2023 மார்ச் 23 ஆம் தேதி ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார் என்ற விவாதங்கள் தேசிய அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன.
கிரிமினல் அவதூறு வழக்கில் தண்டிக்கப்பட்டதை அடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி லோக்சபாவில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால் இப்படி ஒரு நிலை ராகுல் காந்திக்கு அல்ல வேறு எந்த மக்கள் பிரதிநிதிக்கும் வரக் கூடாது என்பதற்காக… 2013 இல் ஒரு அவசரச் சட்டத்தைக் கொண்டுவந்தது  காங்கிரஸ் கூட்டணி அரசு.

வன்முறையை துண்டியதாக சீமான் மீது திருச்சி காவல்துறை வழக்கு

மாலைமலர் : திருச்சி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ராஜீவ் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டவர்களை திருச்சி சிறப்பு முகாமில் இருந்து விடுதலை செய்யக் கோரி திருச்சியில் நேற்று முன்தினம் நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை.
இதையடுத்து பொதுக்கூட்டம் போன்று மேடை அமைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் சீமான் பேசும்போது, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன், முருகன் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

பெண் கொலை வழக்கில் கிளி சாட்சியத்தால் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

maalaimalar :  பெண் கொலை வழக்கில் கிளி சாட்சியத்தால் 2 பேருக்கு ஆயுள் தண்டனை
•விஜய் ஷர்மா வீட்டில் வளர்த்து வந்த அவரது செல்ல கிளி நீலம் ஷர்மாவின் கொலைக்கு பிறகு சாப்பிடாமல் அமைதியாக இருந்தது.
•விஜய் ஷர்மா கொலையை கிளி நேரில் பார்த்திருக்கலாம் என சந்தேகப்பட்டார்.
லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த விஜய் ஷர்மா என்பவரது மனைவி நீலம் ஷர்மா கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 20-ந்தேதி வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
விஜய் ஷர்மா தனது மகன், மகளுடன் வெளியே சென்றிருந்த போது வீட்டில் தனியாக இருந்த நீலம் ஷர்மாவை மர்மநபர்கள் கூர்மையான ஆயுதத்தால் கொலை செய்தது தெரியவந்தது.
மேலும் வீட்டில் இருந்த பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் கொலையாளிகள் பற்றி எந்த தடயமும் கிடைக்கவில்லை.

ஶ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி மகராஜ். பிராம்மணர்களைப் பற்றி “சத்தியார்த்தப்பிரகாசம்” எனும் நூலில்..

May be a cartoon of text that says 'புரோகிதர்களின் ஆதிக்கம் உருவான கதை! "பிராம்மணர்கள் தங்கள் ஜீவனத்திற்கு ஏதாவது ஒரு வழிதேட வேண்டுமென்று யோசித்து நிச்சயஞ் செய்து கொண்டு ஷத்திரியர் முதலானவர்களுக்கு "நாங்கள் தான் உங்களுடைய பூஜ்ய தேவதைகள். எங்களை வணங்காமல் உங்களுக்கு முக்தி கிடையாது. எங்களைப் பூஜை செய்யாமல் போனால் கஷ்டமான நரகத்தில் விழுவீர்கள்" என்று உபதேசஞ் செய்தார்கள்" -ஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் "சத்தியார்த்தப்பிரகாசம்" எனும் நூலில் (1928)'

Dhinakaran Chelliah  :   பிராம்மணீயம்
பிராம்மணர்களைப் பற்றி ஶ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகள்
சத்தியார்த்தப்பிரகாசம் ” எனும் நூலில் எழுதுகிறார்;
பிராம்மணர்களே வித்தை யற்றவர்களாகும் பொழுது ஷத்திரியர்கள் வைசியர்கள் சூத்திரர்கள் அறிவற்றுப்போவதைப் பற்றிக்கேழ்ப்பானேன். தலை
முறை தலைமுறையாய அர்த்தத்துடன் வேதம் முதலான சாஸ்திரங்களை ஓதி
வந்ததும் மறைந்து விட்டது. கேவலம் ஜீவனோபாயத்திற்கு மாத்திரம்
பிராம்மணர்கள் பாடஞ் செய்து வந்தார்கள். அதைக்கூட அவர்கள் சத்திரியர்
களுக்கும் பிறர்களுக்கும் சொல்லிக் கொடுக்கவில்லை. அவித்வான்கள் ஜனங்களின் போதகர்களாகவே வஞ்சனை, கபடம், புரட்டு, அதர்மம் முதலானவைகள் விருத்தியாயிற்று. பிராம்மணர்கள் தங்கள் ஜீவனத்திற்கு ஏதாவது ஒரு வழிதேட வேண்டுமென்று யோசித்து நிச்சயஞ் செய்து கொண்டு ஷத்திரியர் முதலானவர்களுக்கு “நாங்கள் தான் உங்களுடைய பூஜ்ய தேவதைகள்.எங்களை வணங்காமல் உங்களுக்கு முக்தி கிடையாது. எங்களைப் பூஜை செய்யாமல் போனால் கஷ்டமான நரகத்தில் விழுவீர்கள்" என்று உபதேசஞ் செய்தார்கள்.

பாடகி பாம்பே ஜெயஸ்ரீ இங்கிலாந்து மருத்துவமனையில் அனுமதி.. தலையில் பலத்த அடி!

 hirunews.lk :  பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாம்பே ஜெயஸ்ரீ இங்கிலாந்திற்கு இசைக் கச்சேரி நிகழ்ச்சிக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இசைகச்சேரியின் போது, திடீரென அவர் மயங்கி கீழே விழுந்ததாகவும், இதனையடுத்து அவர் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரபல பாடகியான பாம்பே ஜெயஸ்ரீ தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் பல பாடல்களை பாடியுள்ளார்.
தமிழில் இவர் பாடிய 'வசீகரா', 'ஒன்றா ரெண்டா ஆசைகள்' உள்ளிட்ட பல பாடல்களை ரசிகர்கள் இன்றும் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ராகுல் காந்தியின் இன்றைய நிலைக்கு ராகுல் காந்தியே காரணம்

 ராகுல் காந்தியை இன்று காப்பாற்ற கூடிய சட்ட திருத்தத்தை ராகுல் காந்தியே அன்று மூர்க்கத்தனமாக எதிர்த்தார்   . லாலு பிரசாத் யாதவை காப்பாற்றுவதற்காக மன்மோகன் சிங் அரசால் அந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டது  .. லாலு என்றால் ஊழல் செய்திருப்பார் என்ற மேட்டுக்குடி பொதுப்புத்தியில் ராகுல் அன்று காட்டிய மேட்டிமைத்தனம்
இந்த காணொளியில் அன்றய ராகுலின் உடல் மொழி முகபாவம் போன்றவற்றை பார்த்தால் பல விடயங்கள் தெளிவாகும்   
LR Jagadheesan :   Please watch this video; .
And Read this news item:
https://www.barandbench.com/.../2013-ordinance-rahul...
As a scion of the Nehru dynasty, Rahul Gandhi intoxicated with his privileged position and the power that comes from his family background,  publicly tore down an ordinance that was enacted by a coalition government, headed by his own Congress party.
That too when the Indian Prime Minister (who is from his own Congress party) who enacted the ordinance was abroad, he did this. That was the greatest humiliation any Indian Prime Minister faced when he/she was abroad. So, please watch the video again; particularly look at his body language that oozes outrageous arrogance, and utter contempt towards the entire Indian political class in general and his own party and its government in particular. Hear the words. Witness how he sneers.

வெள்ளி, 24 மார்ச், 2023

டி.எம். சௌந்தரராஜன் நூற்றாண்டு விழா: 10,000 பாடல்கள் பாடிய டி.எம்.எஸ் வரலாறு

 bbc.com  : டி.எம். சௌந்தரராஜன் நூற்றாண்டு விழா: அரை நூற்றாண்டில் 10,000 பாடல்கள் பாடிய டி.எம்.எஸ் எப்படி சினிமாவுக்குள் வந்தார் தெரியுமா? - BBC News தமிழ்
தமிழ் சினிமா வரலாற்றில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தனது வசீகர குரலால் ரசிகர்களை கட்டிப்போட்டிருந்த பழம்பெரும் பாடகர் டி.எம்.சௌந்தரராஜனின் நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 11 மொழிகளில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பாடல்களை அவர் தனது வாழ்நாளில் பாடியிருக்கிறார்.
டிஎம்எஸ் என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் இவருடைய நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னையில் அவர் வாழ்ந்த வீடு அமைந்திருக்கும் மந்தவெளி வெளிவட்ட சாலை பகுதிக்கு `டி.எம்.சௌந்தரராஜன் சாலை` எனப் பெயர் சூட்டுகிறார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இது குறித்த அரசாணை ஏற்கெனவே வெளியிடப்பட்டிருக்கிறது.

ராகுல் காந்தியின் எம்பி பதவி தகுதி நீக்கம்

 மாலை மலர்  :  மோடி பெயர் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
 இது தொடர்பாக குஜராத் மாநிலம் சூரத் கோர்ட்டில் ராகுலுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
சூரத் கோர்ட்டு விசாரணை நடத்தி நேற்று இந்த வழக்கில் தீர்ப்பை வெளியிட்டது. ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி அறிவித்தார்.

டிரம்ப்பை தெருவில் இழுத்துச்சென்ற போலிஸார்.. இணையத்தில் பரவும் புகைப்படம்.. உண்மை நிலை என்ன ?

 கலைஞர் செய்திகள் - Praveen  : : கடந்த இரண்டு நாட்களாக டிரம்ப்பை போலிஸார் கைது செய்து தெருவில் இழுத்துச்செல்வதைப் போல புகைப்படம் வெளியாகி பரவி வருகிறது
கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக களமிறங்கிய டொனால்ட் டிரம்ப் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றார்.
தான் அதிபராக இருந்த 4 ஆண்டு காலத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய டிரம்ப் 2020-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலிலும் குடியரசுக் கட்சி வேட்பாளராக இரண்டாவது முறையாக போட்டியிட்டார். ஆனால் அவர் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடனிடம் தோல்வியைத் தழுவினார்.
அதன்பின்னர் அரசு ஆவணங்களை எடுத்துக்கொண்டதாக டிரம்ப் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ராகுல் காந்தியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். சூரத் நீதிமன்றத்தில் 2ஆண்டு சிறைத்தண்டனை விதித்து பிணையில் விடுக்கப்பட்ட நிலையில் முதல்வர் பேசினார்.

லண்டன் காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீண்டும் போராட்டம்.. இந்திய தூதரக போலீசார் மீது முட்டை- மை வீச்சு

 மாலைமலர் : லண்டன்:இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு கடந்த 19-ந்தேதி காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்தியாவின் பஞ்சாப்பில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித் பால்சிங்குக்கு எதிரான போலீஸ் நடவடிக்கையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தூதரகத்தில் இருந்த இந்திய தேசிய கொடியை அகற்றினர்.
இந்நிலையில் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு ஏராளமானோர் திரண்டு கோஷம் எழுப்பினர். இதையடுத்து தூதரகத்தில் இருந்து பல அடி தூரத்துக்கு தடுப்பு அமைக்கப்பட்டு நிறுத்தப்பட்டனர். அப்பகுதியில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வியாழன், 23 மார்ச், 2023

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க : கடந்த ஜூலை தீப்பிடித்த நாட்டை மீட்டவன் நான்.” –

 தேசம் நெட் -  அருண்மொழி :  சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கைக்கு கிடைத்துள்ள விரிவான நிதி வசதி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார்.
பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய விசேட உரையில்,
“கடந்த ஜூலை 9 ஆம் திகதி நான் தீப்பிடித்த நாட்டையே பொறுப்பேற்றேன். குழப்பத்தில் இருந்த ஒரு நாடு. நாளைய தினம் பற்றிய நம்பிக்கை ஒரு துளி கூட இல்லாத நாடு. அதிகாரப்பூர்வமாக திவாலான நாடு என அறிவிக்கப்பட்ட நாடு. பணவீக்கம் 73% வரை உயர்ந்ததாக அறிவிக்கப்பட்ட நாடு.
நாட்டில் எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசையில் பல நாட்களாக தவித்த மக்கள் வாழ்ந்த நாடு. பாடசாலைகள் மூடப்பட்ட நாடு. ஒரு நாளைக்கு 10 – 12 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நாடு. விவசாயிகளுக்கு உரம் இல்லாத நாடு.

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றம் - டெல்லி சென்ற ஆளுநர் RN.ரவி!

 Kalaignar Seithigal  - Prem Kumar  :  தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டுகளினால் பலரும் பணத்தை இழந்து தற்கொலை செய்து வருகின்றனர்.
எனவே, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்கான அவசரச் சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்றி, அதற்கு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்று, ஆளுநரின் ஒப்புதலையும் பெறுவதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1-ந் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த அவசரச் சட்டத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி அன்றைய தினமே பரிசீலித்து உடனடியாக ஒப்புதல் அளித்து அரசுக்கு அனுப்பிவைத்தார்.

ராகுல்காந்திக்கு 2 வருட சிறைத்தண்டனை ..குஜராத் நீதிமன்றம் .. மோடி மீது அவதூறு பேச்சாம்

 மாலை மலர்  :  சூரத் 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின் போது கர்நாடக மாநிலம் கோலாரில் நடந்த பொதுக் கூட்டத்தில் அப்போதைய காங்கிரஸ் தலைவரான ராகுல்காந்தி பேசினார்.
அப்போது அவர் "எல்லா திருடர்களும் மோடி என்ற ஒரே குடும்ப பெயரை ஏன் வைத்து உள்ளனர்?" என்று பேசியதாக கூறப்படுகிறது.
தொழில் அதிபர்களான நீரவ் மோடி, லலித் மோடி ஆகியோர் மோசடி செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விட்டதை சுட்டிக்காட்டும் வகையில் அவர் இதை பேசினார். பிரதமர் மோடியை மறைமுகமாக அவதூறு செய்துவிட்டதாக பா.ஜனதா குற்றம் சாட்டியிருந்தது.
இதை தொடர்ந்து காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி மீது குஜராத் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

பாராட்ட வார்த்தைகளே இல்லை.. தொடரட்டும் உழவர் புரட்சி; திராவிட மாடல் ஆட்சி”: ஆசிரியர் கி.வீரமணி பாராட்டு!

 Kalaignar Seithigal - Prem Kumar ;  மூன்றாவது முறையாக வேளாண் துறைக்காக தனி நிதிநிலை அறிக்கை என்பது எங்குமில்லாத முன்னுதாரணம். விவசாயம் என்பது ‘பாவ தொழில்’ என்ற மனுதர்மத்திற்கு எதிராக விவசாய நலனில், விவசாயிகளின் நலனில் அக்கறை காட்டுவதுதான் ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
 “கடந்த சுமார் 22 மாதங்களாக நடைபெற்றுவரும் ‘திராவிட மாடல்’ ஆட்சியில், தமிழ்நாடு பல துறைகளில் ஓர் ‘அமைதிப் புரட்சியை’ சந்தித்து மகிழ்ந்து வருகிறது. வாழும் வயிற்றிற்கெல்லாம் சோறிடும் மிக இன்றியமையாத துறைதான் வேளாண்மைத் துறை; அதுமட்டுமல்ல, மனித நாகரிகத்தின் திருப்பமும் வேளாண்மையே ஆகும்.
வேளாண் என்பது மனிதகுலத்தின் வளர்ச்சிக்கு அடையாளம்!

காஞ்சிபுரம் பட்டாசு ஆலையில் பயங்கர தீ, 9 பேர் பலி – 13 பேருக்கு சிகிச்சை

மாலைமலர் : காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை பகுதியில் இயங்கி வரும் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்ப்பட்ட வெடி விபத்தில் ஏற்கெனவே 8 பேர் உயிரிழந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அந்த மருத்துவமனையில் கஜேந்திரன் (50) 90 சதவீதமும், சசிகலா (45) 100 சதவீதமும், ஜெகதீசன் (35) 95சதவீதமும், ரவி (40) 90 சதவீதமும், உண்ணாமலை (48) 40 சதவீதம் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், உண்ணாமலை என்ற பெண் தவிர 3 ஆண்களும் 1 பெண்ணும் அபாய கட்டத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த வெடி விபத்தில் தற்போது சசிகலா (வயது 45 ) என்ற பெண்மணி இறந்துவிட்டார். இவருடன் சேர்த்து மொத்தம் ஒன்பது பேர் இறந்து விட்டனர்.

புதன், 22 மார்ச், 2023

பருத்தித்துறையில் 10 படகுகள் தீக்கிரை.. உள்ளூர் கோஷ்டி மோதல்?

%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+10+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%21

hirunews.lk  : பருத்தித்துறையில் 10 படகுகள் தீக்கிரையாகின!
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை காவல்துறை பிரிவில் நாகர்கோவில் மேற்கு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 படகுகள் க்கிரையாக்கப்பட்டுள்ளன.
கடலட்டை தொழிலில் ஈடுபட்டு வந்தவர்களின் இந்த படகுகள் தற்போது தொழிலில் ஈடுபடாமல் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. புத்தளம், தில்லையடி, அல்ஜித்தா எனும் முகவரியில் வசிக்கும் ஒருவருக்கு சொந்தமான படகுகளே இவ்வாறு சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மந்தைவெளி வெளிவட்ட சாலைக்கு டி.எம் சவுந்தர ராஜன் பெயர்.. அரசாணை வெளியீடு

 மாலை மலர் :  பிரபல பாடகரான டி.எம்.சவுந்தர ராஜன் கடந்த 2013-ஆம் ஆண்டு காலமானார்.
இவரது நூற்றாண்டு விழா வரும் 24-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
பிரபல பாடகரான டி.எம்.சவுந்தர ராஜன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினிகணேசன், நாகேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.
இவர் திரைப்பட நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் பொறுத்தமான தனித்தனி குரலில் பாடி அவர்களின் முகத்தை ரசிகர்களின் கண்முன் நிறுத்தும் திறமை கொண்டவர். டி.எம்.சவுந்தர ராஜன்
இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் படங்களுக்கும் பாடல்கள் பாடியுள்ளார்.
பத்ம ஸ்ரீ விருது பெற்ற இவர் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும் 2500-க்கு மேற்பட்ட பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார்.

உக்கிரேனில் ஜப்பான் பிரதமர் .. சீன அதிபரின் ரஷிய வருகைக்கு பதிலடியாகவா ?

 மின்னம்பலம் : Kavi : மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புதினை சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்தித்து பேசிய நிலையில், ஜப்பான் பிரதமர் உக்ரைன் சென்றுள்ளார். இதனால் சீனா கடும் அதிருப்தியில் உள்ளது.
போர் நடைபெற்று வரும் உக்ரைனுக்கு பிரிட்டன் மற்றும் அமெரிக்க தலைவர்கள் திடீர் பயணம் மேற்கொண்டு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி இருந்தனர். அந்த வரிசையில், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா நேற்று திடீரென உக்ரைனுக்குச் சென்றுள்ளார்.
இந்தியாவில் இருந்து விமானம் மூலம் போலந்து சென்ற ஜப்பான் பிரதமர், அங்கிருந்து உக்ரைன் சென்றுள்ளார். அவர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச உள்ளார்.
போர் தீவிரமடைந்துள்ள இக்கட்டான சூழலில் உக்ரைனுக்கு தங்களின் ஆதரவை வெளிப்படுத்தும் விதமாக ஜப்பான் பிரதமரின் பயணம் அமைந்துள்ளது.

பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல் - தூத்துக்குடியில் பரபரப்பு

 மாலை மலர்  :  தூத்துக்குடியில் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர்கள் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. அத்துடன் அங்கிருந்த பொருள்களையும் சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
 தூத்துக்குடி மாவட்டம் கீழநம்பியார்புரத்தில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் சுமார் 100 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்தப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நேற்று மாலை ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்றது.
அப்போது அதே பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கும் மாணவன் பிரகதீஸ்வரனை பள்ளி தலைமை ஆசிரியர் தாக்கியதாக மாணவனின் தாத்தா முனியசாமி ஆசிரியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து முனியசாமியும், அவரது உறவினர்களும் தலைமை ஆசிரியரையும், சக ஆசிரியர்களையும் தாக்கியுள்ளனர்.

செவ்வாய், 21 மார்ச், 2023

பட்ஜெட்டில் பலா - கறிவேப்பிலை- முருங்கை: அறிவிப்புகள்!

 மின்னம்பலம் -Kavi  :  பலா, கறிவேப்பிலை, முருங்கை ஆகியவற்றுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
“அதன்படி, ஐந்து ஆண்டுகள் தொடர் திட்டமாக பலா இயக்கம் செயல்படுத்தப்பட்டு 2500 எக்டர் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளப்படும்.
இத்திட்டம் அரியலூர், திண்டுக்கல், கடலூர், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, சேலம், தென்காசி, தேனி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.
பலா தொடர்பான ஆராய்ச்சிகளை வலுப்படுத்தி, புதிய ரகங்கள், உயர் மகசூல் தொழில்நுட்பங்கள், மதிப்பு கூட்டல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையம் ஏற்படுத்தப்படும்.

இலங்கைக்கு ரூ.24 ஆயிரம் கோடி கடனுதவி- IMF நிதியம் ஒப்புதல்

 Maalaimalar  :  சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசு பேச்சு வார்த்தை நடத்தி வந்தது.
முதல் தவணையாக 333 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படுகிறது.
கொழும்பு: இலங்கையில் கடந்த ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து, தட்டுப்பாடும் நிலவியது.
அன்றைய செலாவணி இருப்பு குறைந்ததால் அரசு திணறியது.
மக்கள் போராட்டத்தால் ஆட்சி அதிகாரத்தில் இருந்து ராஜபக்சே குடும்பத்தினர் ராஜினாமா செய்த பிறகு புதிய அதிபராக பதவியேற்ற ரணில் விக்ரம சிங்கே பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தார்.

மகளிர் உரிமைத்தொகை: விண்ணப்பிப்பது எப்படி... யாருக்கு கிடையாது... எப்படி கிடைக்கும்? - முழு விவரம்

 zeenews.india.com  - Sudharsan G  :  Thousand Rupees For Women: தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று (மார்ச் 20) சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
நீண்ட நாளாக எதிர்பார்க்கப்பட்டு வந்த குடும்ப தலைவிக்களுக்கான மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை திட்டம் குறித்த அறிவிப்பும் இன்று வெளியாகியுள்ளது.
நிதியமைச்சரின் அறிவிப்பு
இதுகுறித்து பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்,"தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1,000 ரூபாய் உரிமைத்தொகையாக வழங்கப்பட இருக்கிறது.

கேரளா தேவி குளம் தமிழ் எம் எல் ஏ ராஜாவின் வெற்றி செல்லாது . .உயர்நீதிமன்றம் தீர்ப்பு .. போலி சான்றிதழ்

 Kalaignar Seithigal - Praveen :  கேரள மாநிலத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.
இங்கு 2021இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேவிக்குளம் தொகுதியில் ராஜா என்பவர் போட்டியிட்டார்.
இவர் தன்னை எதிர்த்து காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்ட டி. குமார் என்பவரை 7,848 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்று சட்டமன்றத்துக்குள் நுழைந்தார்.
சட்டமன்றத்தில் இவர் தமிழில் பதவி பிரமாணம் எடுத்தது தமிழ்நாட்டில் கவனத்தை பெற்றது.

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா

minnambalam.com - Kavi :  ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டியிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்றார்.
தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து டெல்லி சென்று வந்த அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் கடந்த 15ஆம் தேதி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

திங்கள், 20 மார்ச், 2023

ஆம்புலன்சில் புலிகளுக்காக வெடிபொருள்:கடத்திய சதீஸ்குமாருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுமன்னிப்பு 15 ஆண்டுகளின் பின் விடுதலை! பேட்டி

Image result for ranil wickramasinghe
President Ranil Wickremasingha
இலங்கை, பிரபாகரன்
பி பி சி தமிழ் : : இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 14 ஆண்டுகள் கடக்கவுள்ள நிலையில், யுத்தத்தின் பாதிப்புகள் இன்றும் காணப்படுகின்றன.
அவ்வாறான பாதிப்புகளை எதிர்நோக்கியவர்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளும் அடங்குவார்கள்.
 புலிகளுக்கு ஆதரவு வழங்கியவர்கள் மற்றும் அந்த அமைப்புடன் இணைந்து செயல்பட்டவர்கள் என்ற குற்றச்சாட்டுகளின் கீழ் இன்றும் பலர் சிறைவாசம் அனுபவித்து வருகின்றார்கள்.  இந்த நிலையில், விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவு வழங்கியதாகக் கூறப்பட்டு, 15 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்த ஒருவர் அண்மையில், ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டார்.

]குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை- செப்.15ம் தேதி முதல் வழங்கப்படுகிறது

 மாலை மலர்வ ;  தமிழக சட்டசபையில் 2023- 2024ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
தமிழக அரசின் பட்ஜெட்டில் உள்ள முக்கிய அறிவிப்புகள்:-
 கோவையில் ரூ.172 கோடி மதிப்பில் உலகத்தரம் வாய்ந்த செம்மொழிப்பூங்கா 2 கட்டங்களாக அமைக்கப்படும்.
முதற்கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும்.
ஒகேனக்கல் 2-வது கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்த ரூ.7,149 கோடி நிதி ஒதுக்கீடு.
தமிழகத்தில் 10,000 குளங்கள், ஊரணிகளை புதுப்பிக்க ரூ.800 கோடி நிதி ஒதுக்கீடு.
 முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு.
தமிழ்நாடு நெய்தல் திட்டம் அமைக்க ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு.
கோவை, மதுரை நகரங்களை மேம்படுத்த எழில்மிகு கோவை, மாமதுரை என்ற வளர்ச்சித்திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
அடையாறு ஆற்றில் 44 கி.மீ தூரத்திற்கு தூய்மைப்படுத்தும் திட்டம், கரைகளில் பூங்கா மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும்.

திருமாவளவன் : போலி (சீமான்) தமிழ் தேசியவாதிகளிடம் இருந்து நாட்டை காப்பாற்றியாகவேண்டும்

 tamil.samayam.com :  ‘சீமானிடம் ஜாக்கிரதையாக இருங்கள்..’ - சூசகமாக சீண்டிய திருமாவளவன்.!
திரிபுவாத அரசியலை பேசிவரும் போலி தமிழ் தேசியவாதிகளிடம் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்றியாக வேண்டும் என திருமாவளவன் பேசியுள்ளார்.
 இதன் மூலம் சீமானை அவர் மறைமுகமாக சாடியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ் தேசிய அரசியலை பேசி வருகிறார்.
ஆனால் அவர் பேசுவது இனத்தூய்மை வாதம் எனவும், திராவிட சித்தாந்தத்தை எதிர்ப்பதாக கூறிகொண்டு சனாதனம் பேசுகிற பாஜகவிற்கு துணை போவதாக திமுக ஆதரவாளர்கள், திராவிட சித்தாந்தவாதிகளும் கூறிவருகின்றனர்.

ஓடும் ரெயிலில் மாணவி மீது பாலியல் வன்கொடுமை ... காஷ்மீர் எல்லை பாதுகாப்பு வீரர் கேரளாவில் கைது

nn

நக்கீரன்  கல்லூரி மாணவிக்கு ரயில் பயணத்தின் போது மதுபானம் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த எல்லை பாதுகாப்பு வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதி சேர்ந்தவர் பிரதீஷ்குமார்.
இவர் ஜம்மு காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படை பிரிவில் பணியாற்றி வருகிறார்.
 இந்நிலையில் விடுமுறைக்காக ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலில் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.
அந்த ரயிலில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி ஒருவரும் பயணித்து வந்துள்ளார். இருவரும் ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பேசிக் கொண்டு வந்துள்ளனர்.
அப்பொழுது மாணவிக்கு வலுக்கட்டாயமாக மதுபானத்தை கொடுத்த பிரதீஷ்குமார்
மாணவி மயக்கமடைந்த பிறகு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
மாணவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் பிரதீஷ்குமாரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

லண்டன் இந்திய தூதரகம் மீது காலிஸ்தான் தீவிரவாதிகள் கல்வீச்சு

மாலைமலர் : லண்டன் இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் கற்கள் வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். ஒரு சிலர் தேசியக் கொடியை கீழே இறக்கி அவமதிப்பு செய்துள்ளனர்.
இதையடுத்து, இங்கிலாந்து அதிகாரிகள் தூதரக வளாகத்தில் புதிய தேசியக் கொடியை பறக்கவிட்டனர்.
இந்நிலையில், இங்கிலாந்தில் நடைபெற்ற இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் மத்திய அரசு தலைநகர் புதுடெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரக அதிகாரிகளை அழைத்து தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

ஞாயிறு, 19 மார்ச், 2023

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை மார்ச் 22 வரை வெளியிட வேண்டாம். உயர்நீதிமன்றம் அதிரடி பன்னீர் கூட்டம் கொண்டாட்டம்

மாலை மலர் :  சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பி.எஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அவசர வழக்காக இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு, பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை மார்ச் 22 வரை வெளியிட வேண்டாம். தேர்தல் நடைமுறைகள் தொடரலாம் என கூறினார்.
இதையடுத்து நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பி.எஸ். தரப்பை சேர்ந்த மனோஜ் பாண்டியன், உயர்நீதிமன்ற உத்தரவு எங்களுக்கு கிடைத்த வெற்றி. நீதி வெல்லும் வரை சட்டப்போராட்டம் தொடரும் என கூறினார்.
உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

இலங்கையின் டொலர் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது - இலங்கை அரசு அறிவிப்பு

 hirunews.lk:   இலங்கையில் டொலர் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி உயர்வை அடுத்தே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நிலையில் தேவையான விடயங்களுக்கு போதுமான டொலர்கள் கையிருப்பில்இருப்பதாக அவர் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
நாளை 20ஆம் திகதியன்று இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம், 2.9 பில்லியன் டொலர்களுக்கான ஒப்புதலை வழங்கும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள அவர், இதனையடுத்து நாளை மறுநாள் நாட்டுக்கு முதல் கட்டமாக 390 மில்லியன் டொலர்கள் விடுவிக்கப்படும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

agrivoltaics சோலார் பேனல்கள்களுக்கு அடியில் பயிர்கள் ஒரே கல்லில் இரண்டு மங்காய்

Image result for solar panels and agriculture

Sriram Govind : சோலார் பேனல் மின்சாரத்தில் சிக்கல் என்னவெனில் அதை சுத்தம் செய்ய தண்ணீர் தேவைப்படுவதுதான்.
பாலைவனம், வெட்டவெளியில் பேனல்களை நிறுவுகையில் அதன் மேல் தூசி படியும், தூசி படிந்தால் மின்சாரம் உற்பத்தி ஆகும் அளவு குறையும்.
அதனால் பேனல்கள் மேல் நீரை விட்டு அடித்து சுத்தம் செய்யவேண்டும். இதற்கு தண்ணீர் வீணாகும். அத்துடன் ஏக்கர்கணக்கில் பேனல்களை நிறுவுகையில் இடமும் வீணாகும்.
இதனால் இப்போது அக்ரிவோல்டைக்ஸ் (agrivoltaics)  எனும் உத்தியை பயன்படுத்துகிறார்கள்.
சீனாவில் 1 ஜிகாவாட்ஸ் அளவுள்ள மின்சாரத்தை உற்பத்தி செய்ய கோபி பாலைவனத்தில் ஒரு மிகப்பெரிய சோலார் பார்க் அமைக்கபட்டது.

திமுகவின் ஆணிவேர்களை அசைக்கும் சூழ்ச்சியில் திமுக தலமை வீழ்ந்துவிட்டதா? சமூகவலையில் கருத்து மோதல்கள்

 Elengovan K Dev  : திமுகவின் ஆணிவேர்களை அறுக்கும் சூழ்ச்சியில் திமுக தலமை வீழ்ந்துவிட்டதாகவே நினைக்கிறேன்..
நீங்க நம்பாட்டாலும் இதுதான் உண்மை.
Kandasamy Mariyappan  : எப்படி இந்த முடிவுக்கு வந்தீங்க.!
Mpn Ramesh Narayanasamy  : 30 - வருடம் 40 - வருடம்...
ஒருவனுக்கு ஒரே மாதிரி இருக்காது .
தேவைகள் ஒருவனை நெட்டித் தள்ளும் .
அவன்களுக்கும் குடும்பம் குழந்தைகள் இருக்குமே ...
அதிமுகவில் இருந்த பல லட்சம் பேர் மூன்று தலைமுறைகளுக்கு செட்டிலாகி விட்டனர் .
ஆனால்..
இங்கே இன்னமும் டீக்கடையில் கொள்கை முழங்கிக் கொண்டு இன்னொரு டீ எவன் வாங்கித் தருவானென்று காத்திருக்கும் திமுக தொண்டர்கள் (கட்சி மாறாத ) .
இவர்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட எதுவும் செய்ய வேண்டாமா ?
அவன் அப்படியே செத்து சுண்ணாம்பாக போய்விட வேண்டியதுதானா ?

Kandasamy Mariyappan  : Mpn Ramesh Narayanasamy அதிமுக தொடர்ந்து ஆட்சி செய்ய மக்கள் வழி செய்கின்றனர்.!
அதிமுக ஆட்சி செய்ய திமுக தவிர அனைத்து கட்சிகளும், இயக்கங்களும் உதவி புரிகின்றன.!

வட இந்தியாவில் உருவானது திராவிட மாணவர்கள் கூட்டமைப்பு !..

“இனி ஒருத்தன் கை வைக்க முடியாது..” : வட இந்தியாவில் உருவானது திராவிட மாணவர்கள் கூட்டமைப்பு !
“இனி ஒருத்தன் கை வைக்க முடியாது..” : வட இந்தியாவில் உருவானது திராவிட மாணவர்கள் கூட்டமைப்பு !

  Kalaignar Seithigal -  Prem Kumar ; டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் பயிலும் மாணவர்களுக்காக திராவிட மாணவர்கள் கூட்டமைப்பு தொடங்கிவைக்கப்பட்டது.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திராவிடர் மாணவர் கூட்டமைப்பை தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் தொடங்கிவைத்தார். .

இம்ரான் கானை தரதரவென இழுத்துச் சென்ற பரபரப்பு காட்சி. வெடித்த மோதல்... கலவர பூமியான பாகிஸ்தான்

vikatanvikatan.com  - VM மன்சூர் கைரி  : பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், 2018 முதல் 2022 பிரதமராக இருந்தபோது, வெளிநாட்டுப் பிரமுகர்கள் வழங்கிய பரிசுகளை சட்டவிரோதமாக விற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த நிலையில், குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்க இம்ரான் கான், மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த வழக்கில் இம்ரான் கான் ஆஜராகாமல் இருந்து வந்ததால், அவருக்கு எதிராக ஜாமீனில் வெளியில் வர முடியாத கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்க இஸ்லாமாபாத் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவர் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும்போது, இம்ரான் கான் வீட்டை சுற்றி அவரின் கட்சித் தொண்டர்கள் இருந்தனர்.

இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்களுக்கு ஒரு நிமிடம்கூட அனுமதி இல்லை - மந்திரி டக்ளஸ் தேவானந்தா

 மாலைமலர் :     இந்திய ஊடகவியலாளர்கள் இங்கே நேரடியாக வந்து செய்திகளை சேகரிக்க வேண்டும் என கூறினார்.
கொழும்பு: இலங்கை மீன்வளத்துறை மந்திரி டக்ளஸ், வடமராட்சி வடக்கு மற்றும் கிழக்கு மீனவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். அப்போது மீனவர்களின் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்தார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;
இலங்கை கடற்பரப்பில் ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க அனுமதி கிடையாது. பாஸ் நடைமுறையும் இல்லை.
தமிழக மீனவர்களின் அத்துமீறல்கள் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் தமிழக பா.ஜ.க. தலைவரிடம் அரசாங்க ரீதியாகவும், நட்பு ரீதியாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் இந்திய ஊடகவியலாளர்கள் இங்கே நேரடியாக வந்து செய்திகளை சேகரித்து நிலமைகளைப் பார்த்துவிட்டு செல்லட்டும். அப்போதுதான் இந்தியாவில் உள்ள மக்களுக்கு இலங்கை நிலவரம் புரியும் என தெரிவித்தார்.