ஞாயிறு, 5 ஏப்ரல், 2026

கூட்டணி தொகுதி பகிர்வு பேச்சு வார்த்தையின் போது திருமாவளவன் தில்லாலங்கடி

 கூட்டணி தொகுதி பகிர்வு பேச்சு வார்த்தையின் போது திருமாவளவன் எப்படி எப்படி எல்லாம் குளறுபடி செய்தார் என்பதை நடுநிலைமையோடு இவர் கூறுகிறார் 
ஏற்கனவே உள்ள எம் எல் ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க கூடாது என்ற உள்நோக்கத்தில் திமுக அந்த தொகுதியை தரவில்லை இந்த தொகுதியை தரவில்லை என்று செய்த அழிச்சாட்டியம் கொஞ்ச நஞ்சமில்லை 
மேலும் 28 தொகுதிகளை ஏற்கனவே பெற்றுவிட்ட காங்கிரசுகு மேலும் அடிஷனல் தொகுதியாக விசிகாவுக்கு ஒதுக்கப்பட்ட காட்டுமன்னார் கோயில் தொகுதியை தன்னிச்சயாக தாரை வார்த்தார் 
இவரது கட்சியில் இவர் நினைத்தபடி எல்லாம் நடக்க முடியும் என்றால் இவரது கட்சிக்கென்று ஜனநாயக அமைப்புக்கள் கிடையாதா? 

கலைஞர் இறந்த அன்று நடந்தவைகள் - பத்திரிகையாளர் உமா மகேஸ்வரன் பார்வையில்

May be an image of temple and text

 Uma Pa Se  :  கலைஞர் இறந்த அன்று நான் பணியாற்றிய தொலைக்காட்சியில் அன்று முழுவதும் கலைஞர் கலைஞர் கலைஞர்.
அங்கு மட்டுமல்ல எங்கெங்கும் கலைஞரே நிறைந்திருந்தார்.
ராஜாஜி ஹாலில் கலைஞருக்கு சட்டப்போராட்டம் வெற்றியடைந்த செய்தி வந்த நொடி அங்கிருந்தேன்.
அந்த தருணத்தை அனுபவித்தவனுக்கு தான் ஒரு மகத்தான தலைவனுக்கு எப்படிப்பட்ட தொண்டர்கள் கிடைத்தார்கள் என்று தெரியும். 
பொதுவாய் கலைஞரை adore செய்து காலம் முழுவதும் வளர்ந்ததால் எனக்கு ஸ்டாலின் அதுகாறும் அவ்வளவாய் பிடிக்காது. சொல்லப்போனால் கலைஞரின் பெருமையில் கால்வாசி இல்லை. இவரை எல்லாம் ஏன் ஏற்க வேண்டும் என்று ஒரு எரிச்சல். (அது பற்றி பின்னர் வேறு பதிவில் )

விளவங்கோட்டில் பச்சை துரோகம்! அன்றைய சமஸ்தான காங்கிரஸ்தான் இன்றைய கேரள காங்கிரஸ்

May be an image of text that says "മുന്നണി ഐക്യ ജനാതിപത്യ പ്രവീണിനെ സ്ഥാനാർഥി വിളവൻകോട് വിജയിപ്പിക്കുക"

 குமரிக் கிழவனார் :  காங்கிரஸ் பேரியக்கம் மாபெரும் வரலாற்று பிழையை விளவங்கோட்டில் நிகழ்த்தியிருக்கிறது.......
 வயனாட்டு மலைவாழ் பூர்வகுடிகளுக்கும் இஸ்லாமிய மதமேற்றவர்களுக்கும் சொந்தமான தொகுதியில் ராகுலை கொண்டு வந்து நிறுத்தி இஸ்லாமியர்களுக்கும் பூர்வகுடிகளுக்குமான பிரிதிநித்துவத்தை புடுங்கி பின்னர் அதில் பிரியங்காவை நிறுத்தி தொடர்ந்த இஸ்லாமியர் நீக்க அரசியலை செய்து கொண்டிருப்பது போல் இதோ தமிழ்நாட்டில் தமிழர் நீக்க அரசியலை செய்து கொண்டிருக்கிறது........
விளவங்கோட்டில் கை சின்னம் தொடர்ந்து வெற்றி பெற காரணம் தமிழர் மலையாள மொழி ஆதிக்கத்திர்க்கும் மலையாளிகளின் நில அதிகார ஆதிக்கத்திற்கும் எதிராக கிளர்ந்து எழுந்து தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் போராட்ட களத்தை கண்டு அதை வென்றெடுத்ததுதான். குமரி தமிழர்கள் அன்று போராடியது திருவாங்கூர் சமஸ்தானம் மற்றும் திருகொச்சி மாநில ஆரசுக்கு எதிராக என்றாலும் அன்று அவர்கள் களத்திவ் நேரடியாத எதிர்த்தது சம்ஸ்த்தான காங்கிரஸைதான்.

கேரள சட்டமன்ற தேர்தலில் "மும்முனைப்" போட்டி: வெற்றியைத் தீர்மானிக்கும் காரணிகள் என்ன?

  bbc.com - சேவியர் செல்வக்குமார் : காலம் காலமாக இரு முனைப் போட்டியை மட்டுமே எதிர்கொண்டு வந்த கேரள மாநிலம், இந்த சட்டசபைத் தேர்தலில் முதல் முறையாக வலுவான "மும்முனைப் போட்டியைச் சந்திக்கக் கூடும்" என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
கேரளத்தை கடந்த 10 ஆண்டுகளாக ஆண்டுவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (LDF), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகிய இரு அணிகளைத் தவிர்த்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் இந்தத் தேர்தலில் தீவிரமாக களமாடி வருகிறது.