சனி, 13 மே, 2023

கர்நாடகத்தில் காங்கிரஸ்.. முதல் அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேறும் 5 முக்கிய வாக்குறுதிகள் (மகளிர் இலவச பேருந்து பயணம் உட்பட )

கலைஞர் செய்திகள் - Lenin : கர்நாடக சட்டப்பேரவையின் 224 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு மே 10ம் தேதி நடைபெற்றது. இதில் ஆளும் பா.ஜ.க, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்பட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியிலிருந்து எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 137 இடங்களிலும், பா.ஜ.க 62 இடங்களிலும், ஜனதா தளம் 21 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. ஆட்சி அமைக்க 113 இடங்கள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி 137 இடங்களில் முன்னிலையில் உள்ளதால் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கிறது.
கர்நாடகத்தில் ஆட்சியை பிடித்த காங்கிரஸ்.. முதல் அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேறும் 5 முக்கிய வாக்குறுதிகள்

கர்நாடகாவில் காங்கிரஸ் பிரமாண்ட வெற்றி

மின்னம்பலம்  - christopher  :; கர்நாடகாவில் ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ்
கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் பகல் 1 மணி நிலவரப்படி பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில் 130 இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (மே 13) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
ஆரம்பம் முதலே பெரும்பான்மையான தொகுதிகளில் வாக்குகளை தன் பக்கம் கவர்ந்த காங்கிரஸ் பகல் 1 மணி நேர நிலவரப்படி 38 தொகுதிகளில் வெற்றியுடன் 130 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
இதன்மூலம் கர்நாடகவில் தனி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என்பது உறுதியாகியுள்ளது.
அதே வேளையில் பாஜக 16 தொகுதிகளில் வெற்றியுடன் 66 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

மதச்சார்பற்ற ஜனதா தளம் 4 இடங்களில் வெற்றியுடன் 22 இடங்களிலும், பிற கட்சிகள் 6 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன.

வெள்ளி, 12 மே, 2023

கலிபோர்னியாவில் சாதி பாகுபாட்டை தடை செய்யும் மசோதா நிறைவேற்றம்

மாலை மலர் : கலிபோர்னியா அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சாதி அடிப்படையில் பாகுபாடு பார்ப்பதை தடை செய்வதற்கான புதிய சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது.
மாநிலத்தின் செனட் சபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதத்திற்கு பிறகு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில், 34 வாக்குகள் மசோதாவுக்கு ஆதரவாகவும், ஒரு வாக்கு எதிராகவும் பதிவானது. இதனால் மசோதா நிறைவேறியது.
இதையடுத்து மாநில பிரதிநிதிகள் சபையில் மசோதா அறிமுகம் செய்யப்படும். அங்கு நிறைவேற்றப்பட்டதும் கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.
அமெரிக்காவில் இதுபோன்ற சட்ட மசோதாவை நிறைவேற்றும் முதல் மாநிலம் கலிபோர்னியா என்பது குறிப்பிடத்தக்கது.

உதயசந்திரன் இடத்தில் முருகானந்தம்? அமைச்சரவையைத் தொடர்ந்து அதிகாரிகள் மாற்றம்!

மின்னம்பலம் - Aara :  தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்ட அதிர்வுகள் அடங்குவதற்குள் உயர் அதிகாரிகளும் மாற்றம் செய்யப்படலாம் என்ற பேச்சு, கோட்டை வட்டாரத்திலிருந்து கசியத் தொடங்கியுள்ளது.
அதிலும்  முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். மாற்றம் செய்யப்பட இருக்கிறார் என்ற தகவல் தான் கோட்டை வட்டாரத்தை ஹாட் ஆக்கியிருக்கிறது.  ஈரோடு கலெக்டர், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் போன்ற பதவிகளில் இருந்தபோது தனது துடிப்பான பணிகளால் தமிழ்நாடு முழுதும் பேசப்பட்டவர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்.

நவீன் பட்நாயக் : எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி இல்லை.. பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி- நவீன் பட்நாயக்

 மாலை மலர்  :  புதுடெல்லி  பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதற்காக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் பல்வேறு தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் முயற்சிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் அடுத்தடுத்த சந்திப்புகள் நடக்கின்றன.
அதேசமயம், மூன்றாவது அணிக்கான முயற்சிகளில் பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ் குமார் ஈடுபட்டுள்ளார். அவர் கடந்த சில தினங்களுக்கு முன் ஒடிசா சென்று, அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது மூன்றாவது அணி தொடர்பாக பேசியிருக்கலாம் என தகவல் வெளியானது.

அமைச்சர் திரு பழனிவேல் தியாகராஜன் தன்னிலை விளக்க அறிக்கை

The audio released of what I spoke.." - Explanation given by Minister  Palanivel Thiagarajan..! | "நான் பேசியதாக வெளியான ஆடியோ.." - அமைச்சர்  பழனிவேல் தியாகராஜன் கொடுத்த விளக்கம்..!

Palanivel Thiaga Rajan  : கடந்த இரண்டு ஆண்டுகள் என் வாழ்விலேயே மிகவும் நிறைவான ஆண்டுகளாகும் . மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையின் கீழ் பெருந்தொற்றுக் காலத்தில் ஒரு திருத்தப்பட்ட பட்ஜெட்டையும் ('21 - '22), பெருந்தொற்றுக்குப் பிறகு இரண்டு ஆண்டு பட்ஜெட்டுகளையும் ('22 - '23, '23 - '24) சமர்ப்பித்துள்ளேன்.
முந்தைய ஆட்சியின் விளைவாக உட்சபட்ச பற்றாக்குறை மற்றும் கடன் விகிதங்களைப் பெற்றிருந்த போதிலும்,
 நாங்கள் வரலாறு காணாத வகையில் சமூக நலத் திட்டங்களிலும், மூலதனச் செலவினங்களிலும் முதலீடு செய்துள்ளோம்.
இதனை என் பொது வாழ்விலும், என் வாழ்க்கையிலும் மிகச் சிறப்பான பகுதியாகக் கருதுகிறேன்.

வியாழன், 11 மே, 2023

அன்றே சொன்னார் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன்! இன்றைய அரசியல் பற்றி முன்னாள் நிதி அமைச்சர்

 பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன்   :  என்ன ஒரு மாற்றம் செய்தாலும் பயங்கரமாக எதிர்ப்பு வருகிறது!
அந்த எதிர்ப்பை எல்லாம் தாண்டி எதையாவது சாதிக்கணும்னா முதலமைச்சருடைய முழு ஆதரவு இல்லாமல் நம்பிக்கை இல்லாமல் கையையும் காலையும் லெப்ட் றைட்ன்னு நகர்த்த முடியாது.
இதுதான் இன்னைக்கு இருக்கிற அரசியல் உண்மை!
ஒரு நடுநிலையான பேரவை தலைவராக இருந்தார் பி டி ராஜன்
அப்பா சொல்வார் அதுமாதிரி இருந்திருந்தார்ன்னா அதுக்கு முழு காரணம் கலைஞர் அவர்கள்
ஏன்னா எனக்கு அந்த அளவுக்கு சுதந்திரத்தோடு செயல்பட விட்டார்
அதே மாதிரி நான் இந்த இடத்தில் உட்கார்ந்த போது அன்றைக்கு இருந்த நிதி செயலர் எனக்கு கோர்ட் புக் கொடுத்தார்
இந்த இருக்கையோட சக்தி .. தனிப்பட்ட பலம் என்னானு படிச்சு பாருங்கன்னார் ..
என்ன சொல்லுது?
ஏற்கனவே முடிவெடுக்கப்பட்ட எல்லா இடத்தையும் தாண்டி வந்த ஒரு கோப்பு நீதித்துறைக்கு வந்து பின்பு,

பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனிடமிருந்து நிதித்துறை பறிப்பு - பின்னணி என்ன? - BBC News தமிழ்

 bbc.com  :; பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனிடமிருந்து நிதித்துறை பறிப்பு - பின்னணி என்ன?
தமிழக அமைச்சரவை சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக அமைச்சர் பதவியிலிருந்து ஒருவர் நீக்கப்பட்டிருக்கிறார். நிதித் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், அந்தப் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டுள்ளார்.
அமைச்சரவை மாற்றம் தொடர்பான பட்டியல் வெளியானதும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், "கடந்த இரண்டு ஆண்டுகள் நிதித்துறை பொறுப்பு வழங்கியதற்காகவும், தற்பொழுது எழுச்சிமிக்க புதிய பொறுப்பை வழங்கி மக்களுக்காகப் பணியாற்றும் வாய்ப்பை அளித்துள்ள என் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

அரசு பேருந்தில் பறை இசைக்கருவி: மாணவியை இறக்கிவிட்ட நடத்துனர் சஸ்பெண்ட்!

 minnambalam.co-  christopher : பறை இசை கருவிகள் எடுத்து வந்த கல்லூரி மாணவியை பாதி வழியிலேயே கீழே இறக்கிவிட்ட அரசு பேருந்து நடத்துனர் இன்று (மே 11) சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த மாணவி ரஞ்சிதா. இவர் திருநெல்வேலியிலுள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ படித்து வருகிறார். கல்லூரி ஆண்டு விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது சொந்த ஊரில் இருந்து பறை இசைக்கருவிகளை கொண்டு வந்துள்ளார்.
இதையடுத்து நிகழ்ச்சி முடிந்த பின்னர் அந்த இசைக்கருவிகளை பேருந்தில் எடுத்து செல்வதற்காக திருநெல்வேலி புதிய நிலையத்தில் மதுரை செல்லும் அரசு பேருந்தில் அவர் ஏறியுள்ளார்.

பழனிவேல் தியாகராஜன் உள்பட 4 பேர் இலாகா மாற்றம்- புதிய நிதி மந்திரி தங்கம் தென்னரசு

 மாலை மலர் :  சென்னை  - புதிய அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா பதவி ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து அவருக்கான இலாகா ஒதுக்கீட்டு விவரத்தை கவர்னரின் முதன்மை செயலாளர் அறிவிக்கை ஒன்றின் மூலம் வெளியிட்டார்.
அதன்படி புதிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர் தொழில்துறை மந்திரி என்று அழைக்கப்படுவார்.
இதுவரை தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு அந்த துறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பழனிவேல் தியாகராஜன் வகித்து வந்த நிதி இலாகா வழங்கப்பட்டுள்ளது.
மேலும் திட்டம், மனிதவள மேம்பாடு, பென்ஷன், புள்ளியியல் மற்றும் தொல்லியல் துறைகளையும் தங்கம் தென்னரசு கவனிப்பார். அவர் நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.

அமைச்சர் சேகர் பாபு மகள் கணவர் திடீர் கைது

segar BABu

\கர்நாடக கருத்து கணிப்பு தேர்தலுக்கு பிந்திய கருத்து கணிப்பு

May be an image of 4 people, television and text that says 'PROJECTED SEAT 0330 SHARE axis KARNATAKA ΥΠΗDΙΑ Nn INDIA TODAY 8:03PM CONG 122 140 BJP 62-80 JDS 20-25 JDS 0-3 REAKING NE NEWS CONG'

tamil.indianexpress.com : :  Karnataka Exit Polls 2023 : 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் இன்று நடந்து முடிந்தது.
இந்தத் தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 66 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த நிலையில், தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன.
அதன்படி நியூஸ் நேஷன் நடத்திய கருத்துக் கணப்பில் பா.ஜ.க.வுக்கு 114 தொகுதிகளும், காங்கிரஸிற்கு 86 தொகுதிகளும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, குமாரசாமி கட்சிக்கு 21 கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சின் உயரிய விருதை பெற்ற தமிழ் பிரெஞ்சு படைப்பாளி திருமதி மதன கல்யாணி CHEVALIER MADANAKALYANI அவர்கள் காலமானார்

Puducherry Mathana Kalyani got Chevalier honor well before Kamal Hassan
tamil.oneindia.com y Veera Kuma : பிரெஞ்சு அரசின் உயரிய 'செவாலியர்' விருதை சிவாஜி, கமல் ஆகிய இரு தமிழர்கள்தான் பெற்றுள்ளதாக பெரும்பாலானோர் நினைத்துக் கொண்டுள்ளார்கள்.
ஆனால் கமலுக்கு முன்பே தமிழ் பேராசிரியர் ஒருவருக்கு பிரெஞ்சு அரசு இந்த விருதை வழங்கியது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
ஆனால், கமலுக்கு பல வருடங்கள், முன்பே தமிழ் பெண்மணி ஒருவர் இந்த விருதை பெற்றார் என்பதை அனைத்து தரப்புமே கவனிக்க தவறிவிட்டது. அந்த பெண்மணி பெயர் மதன கல்யாணி.
1995ம் ஆண்டு, நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு, பிரான்ஸ் அரசு, செவாலியர் விருது அறிவித்தபோதுதான், அதன் கவுரவம் குறித்து தமிழர்கள் பலருக்கும் அறிமுகம் ஏற்பட்டது.

புதன், 10 மே, 2023

5 அமைச்சர்கள் இலாகாக்கள் மாற்றம்- நிதி அமைச்சில் மாற்றமில்லை !

Maalaimalar  :  சென்னை:தமிழக அமைச்சரவையில் இருந்து ஆவடி நாசர் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜா புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் நாளை பதவியேற்க உள்ள நிலையில் மேலும் 5 அமைச்சர்கள் இலாகாக்கள் மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது.
2021-ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றபோது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 34 அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், சிவசங்கர் ஆகியோரின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டது. மேலும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்ற போது 10 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டது. அமைச்சரவை எண்ணிக்கையும் 34-ல் இருந்து 35-ஆக உயர்ந்தது.

உதவி இயக்குனர் மீது கிரிமினல் வழக்கு; கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட பா.ரஞ்சித்


 tamil.newsbytesapp.com : இயக்குனர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணிபுரியும் விடுதலை சிகப்பி என்பவரின் மீது கிரிமினல் வழக்கு பாய்ந்ததையடுத்து,
கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார் ரஞ்சித். அவர் இது குறித்து ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்த இலக்கிய நிகழ்வில் 'மலக்குழி மரணம்' எனும் தலைப்பில் கவிஞர் விடுதலை சிகப்பி எனும் விக்னேஸ்வரன் கவிதை ஒன்றை வாசித்திருந்தார்.
அக்கவிதை, நாடு முழுக்கத் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கும் மலக்குழி மரணங்கள் குறித்த அக்கறையை வெளிப்படுத்துவதாகும்"

Balasubramania Adityan T : ஜெயலலிதாவை கொன்றதன் காரணம் என்ன❓

 Vengat Joy  : ;டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசியை தமிழ்நாட்டுக்குள் விடாமல் கசாயத்தின் மூலமாகவே குணப்படுத்தியது மருந்து மாஃபியாக்களுக்கு தலைவலியாக இருந்தது

நட்டாத்தி முருகேஷ் நாடார்
சொல்வதை  செய்,
அல்லது செத்துமடி.
இதுதான் பார்முலா ஐயா.

Surulivel Theni  : ஜெ கொலையை
மழுப்பவே ஜல்லிக்கட்டு போராட்டம்
கிளப்பி விடப்பட்டது. அரசின் அனுமதி இன்றி அப்போராட்டம் வாய்ப்பில்லை

Rasheed Abdul  :; முதல்வர் பதவி ஆசை காட்டி ஏமாத்திட்டானுவ.
பல காரணங்கள் இருக்கு லிஸ்ட்டு பெரிசா போகுமே.
பெரியவா, கமல் ,பெண்கள் மத்தியில் செல்வாக்கு உயர்ந்தது,கடைசி தருணத்தில்
இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பேசியது, பிஜெபி சகவாசம் தவறுன்னு பகிரங்கமாக பேசியது,
அவாள் துணையில்லாமல் செயல் பட முடியும் என்ற நிலைக்கு உயர்ந்ததும்.இப்படி நிறைய இருக்கு.
கூட்டி கழித்து பார்த்தால் அவாளுக்கு இழப்புகள் அதிகம்.

Chinnaraj Palanisamy  :  சங்கரராமன் கொலை வழக்கு, ஜெயேந்திரன் கைது. கம்மனாட்டியின் அதிகார மையத்தின் மேல் கை வைத்ததுன்னு நினைக்கரேங்க ஐயா

செவ்வாய், 9 மே, 2023

“தயங்கவே மாட்டேன்”.. சீனியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் மறைமுக வார்னிங்!?

tamil.oneindia.com  -  Vignesh Selvaraj  :  அப்போ மகன்.. இப்போ அப்பா.. “தயங்கவே மாட்டேன்”.. சீனியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் மறைமுக வார்னிங்!?
சென்னை : திமுக இளைஞரணியில் ஆரம்பகாலம் முதல் தனக்கு உறுதுணையாகச் செயல்பட்ட ஆவடி நாசரையே அமைச்சர் பதவியில் இருந்து தூக்கி அடித்திருப்பதன் மூலம் சீனியர்களுக்கு மறைமுக 'வார்னிங்' கொடுத்திருக்கிறாராம் முதலமைச்சர் ஸ்டாலின்.
சில திமுக அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது வரம்பு மீறிப் பேசி கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றனர்.   அது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி எதிர்கட்சியினரின் கடும் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டது.
Is this a indirect warning of CM Stalin to dmk seniors

தூங்கவிடாமல் செய்த அமைச்சர்கள் : அடிக்கடி இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துவந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் கடுமையாக அப்செட் ஆனாலும், சீனியர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறினார். கடந்த ஆண்டு நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் கூட இதுதொடர்பாக தனது ஆதங்கத்தைப் பதிவு செய்தார் முதல்வர் ஸ்டாலின்.

டி ஆர் பி ராஜா பால்வளத்துறை அமைச்சராகினார் .. அமைச்சரவையில் இருந்து நாசர் நீக்கம்

 மாலை மலர் :  அமைச்சர் துரைமுருகன், கவர்னரை சந்தித்து பேசப் போவதாக தகவல் வெளியானது. அமைச்சராக டிஆர்பி ராஜா 11ம் தேதி பதவியேற்க உள்ளார்.
சென்னை: தமிழக அமைச்சரவையில் அதிரடியாக மாற்றங்களை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக கடந்த சில நாட்களாகவே பரபரப்பான தகவல்கள் வெளியாகி வந்தன.
எனினும் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.
இன்று மதியம் மூத்த அமைச்சரான துரைமுருகன், கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து இதுபற்றி பேசப்போவதாக தகவல் வெளியானது.

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 41 இலங்கையர்கள்

hirunews.lk  : அவுஸ்திரேலிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட, சட்டவிரோதமாக இலங்கையிலிருந்து குடிபெயர்ந்த 41 பேர் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அவர்கள் பல நாள் மீன்பிடி இழுவை படகுகளில் கடல் வழியாக பயணம் செய்து அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முயற்சித்த போது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அவர்கள் நாடு கடத்தப்படாமல் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டனர்.
இவர்களில் பெரும்பாலானோர் யாழ்ப்பாணம் மற்றும் வாழைச்சேனை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இம்ரான் கான் கைது! நாடு முழுவதும் அதிகரிக்கும் பதற்றம்!.. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்

zeenews.india.com  - Vidya Gopalakrishnan  :  பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்திற்கு வெளியே கைது செய்யப்பட்டுள்ளதாக டான் நாளிதழ் தெரிவித்துள்ளது.
தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் வழக்கறிஞர் பைசல் சவுத்ரி இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
பிடிஐ தலைவர் ஃபவாத் சவுத்ரி ஒரு ட்வீட்டில், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் ரேஞ்சர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர்
மற்றும் வழக்கறிஞர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்று கூறினார்.
அல்காதிர் அறக்கட்டளை வழக்கில் ஆஜரான பிறகு, PTI தலைவர் இம்ரான் கான் பாகிஸ்தான் ரேஞ்சர்களால் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் பிரதமர் கைது செய்யப்பட்டதை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொண்டதாகவும்,

அமைச்சரவை மாற்றமா?- அமைச்சர் துரைமுருகன் : யாமறியோம் பராபரமே!

 மாலைமலர் :  சென்னை: தமிழக அமைச்சரவையில் அதிரடியாக மாற்றங்களை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக கடந்த சில நாட்களாகவே பரபரப்பான தகவல்கள் வெளியாகி வந்தன.
இதையடுத்து இன்று மதியம் தி.மு.க. மூத்த அமைச்சரான துரைமுருகன், சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசுகிறார் என்று தகவல் வெளியானது. இந்நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்திக்க உள்ளதாக வெளியான தகவலை மறுத்த அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு 'யாமறியேன் பராபரமே' என்று கூறிய அமைச்சர் துரைமுருகன், அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா என்றே எனக்கு தெரியாது. அமைச்சர்களை மாற்றுவது முதலமைச்சரின் விருப்பம்; அதை அவரே முடிவெடுப்பார்.

ஜப்பான் நிறுவனத்துடன் (Mistsubishi Electric ) புரிந்துணர்வு ஒப்பந்தம்.. 2,004 பேருக்கு வேலைவாய்ப்பு !

ஜப்பான் நிறுவனத்துடன் முதல்வர் முன்னிலையில் நாளை புரிந்துணர்வு ஒப்பந்தம்.. 2,004 பேருக்கு வேலைவாய்ப்பு !
கலைஞர் செய்திகள் - Praveen : முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் நாளை கையெழுத்தாகவுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் தமிழ்நாட்டில் 2,004 பேருக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட உள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழ்நாட்டின் தொழிற்துறையை முன்னேற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளில் நடந்த தொழிற்துறை கூட்டங்களில் கலந்துகொண்டு தமிழ்நாட்டில் தொழில்களை தொடங்க அழைப்பு விடுத்தார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை குறிவைக்கும் இந்திய 'டாடா' நிறுவனம்!

TATA a potential investor for SriLankan Airlines?

hirunew  :  ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை குறிவைக்கும் இந்திய 'டாடா' நிறுவனம்!
ஸ்ரீலங்கன் விமான சேவையை இந்தியாவின் ‘டாடா குழுமத்துக்கு கையளிப்பது தொடர்பில், அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடல்கள் ஆரம்பமாகவுள்ளதாக துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தியாவின் மிகப் பெரிய வணிகக் குழுமமான 'டாடா நிறுவனம்' ஏர் இந்தியா, விஸ்தாரா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர் ஏசியா ஆகிய விமான நிறுவனங்களை தன்வசம் கொண்டுள்ளது.

திங்கள், 8 மே, 2023

ஓபிஎஸ்-டிடிவி தினகரன் இணைந்து செயல்படுவதாக அறிவிப்பு.. சசிகலாவையும் சந்திக்க முடிவு

 tamil.oneindia.com - Mani Singh S  பெரிய ட்விஸ்ட்.. இணைந்து செயல்படுவதாக ஓபிஎஸ்-டிடிவி தினகரன் அறிவிப்பு.. சசிகலாவையும் சந்திக்க முடிவு
சென்னை: அதிமுகவை காப்பாற்ற இணைந்து செயல்பட முடிவு செய்து இருப்பதாக ஓ பன்னீர் செல்வமும் டிடிவி தினகரனும் கூட்டாக தெரிவித்தனர்.
அதிமுகவில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ள ஓ பன்னீர் செல்வம் இன்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்து பேசினார்.
சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்கு டிடிவி தினகரனும் ஓ பன்னீர் செல்வமும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது டிடிவி தினகரன் கூறியதாவது:- சிபிஐ, சிபிஎம் கட்சிகள் போல நானும் ஓபிஎஸ்சும் இணைந்து செயல்படுவோம். எனக்கும் அவருக்கும் சுயநலம் கிடையது.

பி.டி.ஆர் இலாகா பறிப்பு: நிதியமைச்சர் ஆகிறாரா தங்கம் தென்னரசு?

மின்னம்பலம்  - christopher : தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது.
2021ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நிலையில் இதுவரை ஒரு இடைக்கால பட்ஜெட் மற்றும் இரண்டு முழு நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டுகளை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்துள்ளார்.
தமிழ்நாடு பொருளாதார நிதி முன்னேற்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசி வந்த பிடிஆர் தேசிய அளவிலும் கவனிக்கப்படும் ஆளுமையாக உருவெடுத்தார். இந்நிலையில் அமைச்சர் உதயநிதியும், முதல்வர் மருமகன் சபரீசனும் 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்துவிட்டதாக பிடிஆர் பேசியது போல் ஒரு ஆடியோ க்ளிப் வெளியாகி திமுகவுக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பழனிவேல் தியாகராஜனுக்கு பதில் புதிய அமைச்சரை நியமிக்க வாய்ப்பு - தமிழக அமைச்சரவை புதன்கிழமை மாற்றம்?

maalaimalar :  சென்னை:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பதவி ஏற்று நேற்றுடன் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
ஆட்சியின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கி தமிழ்நாடு முழுவதும் நேற்று முதல் நாளை வரை தி.மு.க. பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
தி.மு.க. பொதுக்கூட்டங்களில் பேசுவோர் பட்டியலில் அனைத்து அமைச்சர்களின் பெயர்களும் முதலில் இடம் பெற்றிருந்தன. ஆனால் மதுரை சிம்மக்கல் பொதுக்கூட்டத்தில் பேசுவதாக இருந்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் பெயர் திடீரென பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விட்டது. இதனால் அவர் நேற்று பொதுக்கூட்டத்தில் பேச செல்லவில்லை.

நுவரெலியா மருத்துவமனையில் கண்பார்வை இழப்பிற்கு இந்திய மருந்துகளே காரணம்! இலங்கை - மலையகம்

May be an image of 3 people, hospital and text that says 'மலையகம் NEWS UPDATE நுவரெலியா வைத்தியசாலையில் 10 பேரின் பார்வை இழப்பிற்கு விஷமான இந்திய மருந்துகளே காரணம்! Malayagam.lk www.malayagam.lk'

மலையகம் - Thana - : நுவரெலியா வைத்தியசாலையில் 10 பேரின் பார்வை இழப்பிற்கு விஷமான இந்திய மருந்துகளே காரணம்!
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் கிருமிகள் காணப்படுவதால் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பத்து பேரின் பார்வை பலவீனமடைந்துள்ளதாக நுவரெலியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் மகேந்திர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலை செய்திகள் ஊடாக பரவும் தகவல்கள் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் போதே வைத்தியசாலையின் பணிப்பாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கேரளாவில் சொகுசு படகு கவிழ்ந்து 22 பேர் உயிரிழப்பு-

 மாலை மலர்  : கேரளாவில் சொகுசு படகு கவிழ்ந்து 22 பேர் உயிரிழப்பு.
கப்பலில் 40 பேர் பயணம் செய்த நிலையில், இதுவரை 22 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர்- பரப்பனங்காடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் சென்ற சொகுசு படகு எதிர்பாராதவிதமாக கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்தக் கப்பலில் 40க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த நிலையில், இதுவரை 22 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன. மேலும், கடலில் 30க்கும் மேற்பட்டோர் மூழ்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கையின் முதலாவது தலித் பத்திரிகை : மலையகத்தின் "ஆதி திராவிடன்" - என்.சரவணன்

நமது மலையகம்  :  இலங்கையின் முதலாவது தலித் பத்திரிகை : மலையகத்தின் "ஆதி திராவிடன்" - என்.சரவணன்
நூறாண்டுகளுக்கு முன்னர் அதாவது 1919ஆம் ஆண்டு கொழும்பில் இருந்து வெளியான ஆதிதிராவிடன் (Audi Diraviden) இலங்கையின் முதலாவது தலித் பத்திரிகை : மலையகத்தின் "ஆதி திராவிடன்" -   இலங்கையின் இலங்கையின் முதலாவது தலித் பத்திரிகை : மலையகத்தின் "ஆதி திராவிடன்" -  சமூகத்தினரால் தாழ்த்தப்பட்டவர்களுக்காக நடத்தப்பட்ட பத்திரிகையாகும்.
இலங்கையில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் முதலாவது பத்திரிகையாகும்.
இந்திய வம்சாவளியினரில் ஒடுக்கப்பட்ட சமூகத்துக்காக வெளியானது.
ஆதி திராவிடர் என்போர் யார். ஆதிதிராவிடன் பத்திரிகையை வெளியிட்டவர்கள் யார்?
எந்த சங்கத்தால் வெளியிடப்பட்டது? அப்பத்திரிகையின் உள்ளடக்கம் என்ன?
இலங்கையில் திராவிட இயக்கங்களில் வருகை?
திராவிட சித்தாந்தத்தின் இலங்கை வடிவம் எப்படி இருந்தது? என்பது பற்றிய தேடலை இக்கட்டுரை ஆற்றுகிறது.  namathumalayagam

ஞாயிறு, 7 மே, 2023

பீகாரில் கால்வாயில் கட்டு கட்டாக பணம்- மக்கள் போட்டி போட்டு அள்ளி சென்றனர்

 மாலைமலர் : பீகார் மாநிலம் ரோக்தாஸ் மாவட்டத்தில் உள்ள மொராதாபாத் கிராமத்தில் கழிவுநீர் கால்வாயில் பெரிய மூட்டை கிடந்தது.
மேலும் சில ரூபாய் நோட்டுகள் தண்ணீரில் மிதந்தன.
இதை பார்த்த சிலர் கால்வாய்க்குள் இறங்கி அந்த மூட்டையை பிரித்தனர். அதில் கட்டு கட்டாக பணம் இருந்தது. இந்த தகவல் கிராமம் முழுவதும் பரவியது.
உடனே கிராம மக்கள் அங்கு திரண்டு வந்து கால்வாய்க்குள் இறங்கினர்.
அவர்கள் போட்டி போட்டு கொண்டு கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகளை அள்ளி சென்றனர்.
கழிவுநீரையும் பொருட்படுத்தாமல் அதில் மிதந்த 2000, 500, 100 மற்றும் 10 ரூபாய் நோட்டுகளை எடுத்து சென்றனர்.

புதுக்கோட்டை சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து நண்பர்களுக்கும் விருந்தாக்கிய காதலன்

  file  மாலைமலர் : மணப்பாறை  புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி.
இவர் திருச்சி மாவட்டம், மணப்பாறையில் இயங்கி வரும் தனியார் ஊதுபத்தி தயாரிக்கும் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இதற்கிடையே கடந்த 1-ந்தேதி வழக்கம்போல் வேலைக்கு செல்வதாக தனது பெற்றோரிடம் கூறி விட்டுச்சென்ற சிறுமி இரவு நீண்ட ஆகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவர் வேலை பார்த்து வந்த நிறுவனம், தோழிகள், உறவினர்கள் வீடு என பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதனால் சிறுமியின் தாய் மணப்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்தியாவில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ நடனம் ..கோவாவில் பரவும் வீடியோ!

மின்னம்பலம்  : பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டின் தொடக்க விழாவில் நடனமாடுவதாக வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 2001 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் ரஷ்யா, சீனா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
ஈரான், ஆப்கானிஸ்தான், பெலாரஸ், மங்கோலியா ஆகிய நாடுகள் பார்வையாளர்களாக உள்ளன.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் 2 நாள் மாநாடு நேற்று (மே 4) கோவாவில் தொடங்கியது.
இந்த மாநாட்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அலுவல் மொழியாக ரஷ்ய மொழியும், சீனாவின் மாண்டரின் மொழியும் உள்ளன.

ஓபிஎஸ்ஸிடம் சபரீசன் என்ன கேட்டார்? உள் அறையில் நடந்த மீட்டிங்.. “மதில் மேல் பூனை” திமுக பக்கம் டைவ்?

May be an image of 2 people and text that says '06-05-2023 ஜனியர் NJ 0000 ஓபிஎஸ் சபரீசன் சந்திப்பு! என்ன பேசியிருப்பார்கள்? foc /juniorvikatan www.vikatan.com vikatan'

   tamil.oneindia.com - Vignesh Selvaraj : உள் அறையில் நடந்த மீட்டிங்.. “மதில் மேல் பூனை” திமுக பக்கம் டைவ்? ஓபிஎஸ்ஸிடம் சபரீசன் என்ன கேட்டார்?
சென்னை : திமுகவில் அதிகாரமிக்க புள்ளியாக விளங்கும் முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சந்தித்துப் பேசியிருப்பது அதிமுக வட்டாரத்தில் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.
பாஜக தன்னைக் கைவிட்டு விட்டதால் திமுக பக்கம் ஓபிஎஸ் சாய்கிறார் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூறி வருகின்றனர்.