சனி, 10 அக்டோபர், 2020

டெலோ போராளி ரத்தியின் உடலை அவித்து எலும்பை எடுத்த ஆசிரியர் ... Anatomy பரிசோதனை கூடத்திற்கு .. புலிகளின் கொடூர வரலாறு ....

Arun Ambalavanar : சிவத்தாரும் சக்கரும் சீரழிந்த யாழ் சிவில்/சனநாயக


விழுமியங்கள் சம்பவம்01.    1986 ஏப்பிரலில் புலிகள் ரெலோ மீது தாக்குதல் மேற்கொண்டு நூற்றுக்கணக்கான ரெலோ தமிழ் போராளிகளை சுட்டும் எரித்தும் கொன்றார்கள். அப்போது கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி அதிபராக இருந்தவர் சிவபாதசுந்தரம்( சிவத்தார்) என்ற பிரபல்யமான உயிரியல் ஆசிரியர். 

அவரது பாடசாலை ஆய்வுகூடத்தில் மனித எலும்புக்கூடு இல்லை. மாணவர்களுக்கு இலகுவாக Anatomy படிப்பிக்க சிவத்தார் ஒரு எலும்புக்கூடு எடுக்க அவாகொண்டு புலிகளிடம் தனக்கு ஒரு மனித எலும்புக்கூடு எடுக்க உதவுமாறு கேட்டுக் கொண்டிருந்தார் ஒரு மனிச சடலத்தை தாருங்கள். மிகுதியை நான் பார்த்துக்கொள்வேன்" என்ற அவரது ஆய்க்கினையால் இறுதியில் புலிகள் அவரிடம் தங்களால் கொல்லப்பட்ட அதே கரவெட்டியைச்சேர்ந்த ரத்தி என்கிற(கோயிற்சந்தை/அரசடி/அந்திரான் பகுதிகள்) ரெலோ போராளியின் சடலத்தை கொணர்ந்து கொடுத்தார்கள். 

அசல் மனித எலும்புக்கூடுகளை மனித பிணத்திலிருந்து சரிக்கட்டுவது மிகச்சிரமமான காரியம். சட்ட மனிதாபிமான பிரச்சனைகளைக்கப்பால் அதுவொரு நாலு கட்ட நீண்ட பயங்கரமான மயான காண்டம். இதனால்தான் மேலைத்தேய நாடுகள் அப்போதே ஆய்வு கூடங்களில் செயற்கையான பிளாஸ்ரிக், மர எலும்புக்கூடுகளை பயன்படுத்த தொடங்கியிருந்தன. அவ்விரவு அதிபர் தன் பாடசாலையில் நிறை தண்ணியில் சில மாணவ உதவியாளர்களோடு ஒரு பெரிய கிடாரத்தில் ரத்தி என்கிற போராளியின் சுட்டுக்கொல்லப்பட்ட உடலை நிர்வாணமாக்கி போட்டு அவித்தார். 

சொத்து விவர அட்டை வழங்கும் திட்டம்: பிரதமா் மோடி நாளை தொடக்கி வைக்கிறாா் ! next highway robbery?


dinamani : சொத்து விவர அட்டை வழங்கும் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி காணொலி வழியாக ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைக்கிறாா். இந்த திட்டம், கிராமப்புற பகுதிகளில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரதமா் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: பிரதமா் பங்கேற்கும் நிகழ்ச்சியில், சுமாா் ஒரு லட்சம் பேருக்கு சொத்து விவர அட்டைகள் வழங்கப்படும். அவா்களின் செல்லிடப்பேசிக்கு குறுந்தகவல் மூலம் இணையதள இணைப்பு அனுப்பப்படும். அதிலிருந்து, சொத்து விவர அட்டையின் நகலை அவா்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதைத் தொடா்ந்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் அவா்களுக்கு சொத்து விவர அட்டையை நேரடியாக அளிக்கும்.

உத்தர பிரதேசத்தில் 346 கிராமங்கள், ஹரியாணாவில் 221 கிராமங்கள், மகாராஷ்டிரத்தில் 100 கிராமங்கள், மத்திய பிரதேசத்தில் 44 கிராமங்கள், உத்தரகண்டில் 50 கிராமங்கள், கா்நாடகத்தில் 2 கிராமங்கள் என மொத்தம் 763 கிராமங்களைச் சோ்ந்த மக்கள் இந்த சொத்து விவர அட்டையைப் பெறவுள்ளனா். இதில், மகாராஷ்டிரத்தை தவிர மற்ற மாநிலங்களைச் சோ்ந்தவரகள் ஓரிரு நாளில் சொதது விவர அட்டையைப் பெறுவா். மகாராஷ்டிரத்தில் சொத்து விவரங்கள் மதிப்பீடு செய்யப்படும் பணி நடைபெற்று வருவதால், அந்த மாநிலத்தைச் சோ்ந்தவா்கள், இந்த அட்டையைப் பெறுவதற்கு ஒரு மாதமாகும். 

திமுக ஏன் தனது சின்னத்தில் போட்டியிடச் சொல்கிறது? திருமாவளவன் விளக்கம்!

minnambalam: தங்களது சின்னத்தில் போட்டியிட அதிமுகவும் திமுகவும் கோருவது ஏன் என திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருந்தாலும் தற்போதே தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்ட நிலையில், அதுதொடர்பாக அக்கூட்டணியில் விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.இது ஒரு புறம் என்றால் மக்களவைத் தேர்தல் போல சட்டமன்றத் தேர்தலிலும் திமுக தரப்பில் கூட்டணி கட்சிகளை தங்களது சின்னங்களில் போட்டியிட வலியுறுத்துவதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால், தங்கள் கட்சி திமுக கூட்டணியில் தனி சின்னத்தில்தான் போட்டியிடும் என வைகோவும் திருமாவளவனும் அறிவித்தனர்.

வைகோ தனி சின்னத்தில் போட்டி பேட்டியின் பின்னணி!

minnambalam.com : சட்டமன்றத் தேர்தலில் தனி சின்னத்தில்தான் மதிமுக போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.  

 தனி சின்னத்தில் போட்டி: வைகோ பேட்டியின் பின்னணி!

சென்னை எழும்பூரில் மதிமுக தலைமையகமான தாயகத்தில் வைகோ தலைமையில் மதிமுகவின் சூளுரை நாள் நிகழ்ச்சி இன்று (அக்டோபர் 10) நடைபெற்றது. இதில், உயிர்த்தியாகம் செய்த 5 பேரின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, வரும் சட்டமன்றத் தேர்தலை திமுக கூட்டணியில் மதிமுக சந்திக்கும் எனத் தெரிவித்தார். தேர்தலில் அதிமுகவுக்கு மரண அடி விழும், திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் எனவும், முதலமைச்சராக ஸ்டாலின் வருவார் என்றும் கூறினார்.

ஊராட்சி தலைவர் அவமதிப்பு- செயலாளர் சிந்துஜா கைது ... பட்டியலின ஊராட்சித் தலைவர் அவமதிக்கப்பட்ட வழக்கில்

maalaiamalar :ஊராட்சி மன்றத் தலைவி ராஜேஸ்வரி.

   தெற்குத்திட்டை பட்டியலின ஊராட்சித் தலைவர் அவமதிக்கப்பட்ட வழக்கில் ஊராட்சி செயலாளர் சிந்துஜா கைது செய்யப்பட்டார். ஊராட்சி தலைவர்
அவமதிப்பு- செயலாளர் சிந்துஜா கைது ஊராட்சி மன்றத் தலைவி ராஜேஸ்வரி. கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்கு திட்டை கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி. இவர், கடந்த ஜூலை 17ம் தேதி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின்போது பட்டியலினத்தை சேர்ந்தவர் எனக்கூறி கீழே அமர வைத்து அவமரியாதை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தின் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ராஜேஸ்வரி புவனகிரி போலீசாரிடம் புகார் அளித்த நிலையில், மோகன்ராஜ் மற்றும் ஊராட்சி செயலாளர் சிந்துஜா மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது. மேலும் சிந்துஜாவை மாவட்ட ஆட்சியர் சஸ்பெண்டு செய்து உத்தரவு பிறப்பித்து உள்ளார். இந்நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சிந்துஜா தற்போது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரிபப்ளிக் டிவி: வீட்டுக்கு மாதம் ரூ.400; `இந்தியா டுடே’ பகை – டி.ஆர்.பி விவகாரத்தில் என்ன நடக்கிறது?

vikatan - வருண்.நா : ரிபப்ளிக் டி.வி ( twitter images/Barc Screenshot ) நீங்கள் நடத்துவது வாழைப்பழ ரிபப்ளிக் டி.வி… பத்திரிகைப் பணியை உங்கள் அளவுக்குத் தாழ்த்திவிடாதீர்கள். இதுதான் நான் உங்களுக்கு வழங்கும் ஒரே அறிவுரை” – ராஜ்தீப் சர்தேசாய், இந்தியா டுடே.
ரிபப்ளிக் டி.வி

இந்தியாவிலுள்ள செய்தி சேனல் நெறியாளர்களில், முக்கிய முகமாக அறியப்படுபவர் அர்னாப் கோஸ்வாமி. 1996 முதல் 2006-ம் ஆண்டு வரை `என்.டி.டி.வி’, `டெலிகிராப்’ உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய ஊடகங்களில் பணிபுரிந்தார். அதன் பின்னர் 2006-ம் ஆண்டு `டைம்ஸ் நவ்’ செய்தி சேனலில், செய்தி வாசிப்பாளராக பணியைத் தொடங்கி அந்த சேனலின் முக்கிய நெறியாளராகவும், பின்னர் செய்திப் பிரிவின் சிறப்பு ஆசிரியராகவும் பணி உயர்வு பெற்றார். 2016, நவம்பர் மாதத்தில் டைம்ஸ் நவ் சேனலிலிருந்து வெளியேறினார் அர்னாப்.

2017 மே மாதத்தில், `ரிபப்ளிக் டி.வி’ தொடங்கப்பட்டது. இந்தத் தொலைக்காட்சி தொடங்குவதற்கான ஒரு பகுதி நிதியுதவியை `ஏசியாநெட்’ ஊடக நிறுவனம் வழங்கியது. அந்த நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பிலிருக்கும் ராஜீவ் சந்திரசேகர், அர்னாப்-உடன் இணைந்து ரிபப்ளிக் தொலைக்காட்சியைத் தொடங்கினார். ராஜீவ் சந்திரசேகர், 2018-ம் ஆண்டு பா.ஜ.க-வில் இணைந்தார். இவர் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துவருகிறார். பா.ஜ.க-வில் இணைந்த பின்னர், ரிபப்ளிக் டி.வி நிறுவனத்திலிருந்து விலகினார் ராஜீவ். 2019-ம் ஆண்டு ஏசியாநெட் நிறுவனத்தின் பங்கை அர்னாப் கோஸ்வாமியே வாங்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

தமிழர்களுக்குப் பிச்சை போடுகிறீர்களா?’ – கொதித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள்… ஏன்?

இரா.செந்தில் கரிகாலன் vikatan : தமிழர்களுக்கு வேலை போராட்டம்

`தமிழ்நாட்டு வேலைகளில் தமிழர்களுக்கு அல்லது தமிழக மக்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்’ என அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் கோரிக்கை வைத்து வரும்நிலையில், உயர் நீதிமன்றமும் இதுகுறித்து கேள்வி எழுப்பியிருக்கிறது. “பிற மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் பணி வழங்கிவரும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் பிற மாநிலத்தவர்கள் அதிக எண்ணிக்கையில் அரசுப் பணிகளில் நியமிக்கப்படுவது ஏன்?” இப்படியொரு கேள்வியை எழுப்பியிருப்பது தமிழர் உரிமை சார்ந்து போராடும் இயக்கங்களோ, மாநில சுயாட்சி பேசும் அரசியல் கட்சிகளோ அல்ல…சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள்தான் இப்படியொரு கேள்வியை தமிழக அரசை நோக்கி எழுப்பியிருக்கிறார்கள் >அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அவருக்குப் பணி வழங்க உத்தரவிட்டார். ஆனால், நீதிபதியின் ஆணையை ரத்துசெய்யக் கோரி ஆயுதத் தொழிற்சாலை சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போதுதான் நீதிபதிகள், இப்படியொரு கேள்வியைத் தமிழக அரசை நோக்கி எழுப்பியிருக்கின்றனர்.

குறைந்தபட்சம் இருப்பு ரூ.500 இல்லாத கணக்குகளில் அபராதம் ..பராமரிப்புக் கட்டணமாக ரூ.100 பிடித்தம் ,, வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

hindutamil.in : குறைந்தபட்சம் இருப்பு இல்லாத கணக்குகளில் அபராதம்: அஞ்சல்துறை அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சிவங்கிகளைத் தொடர்ந்து அஞ்சலகங்களிலும் குறைந்தபட்சம் இருப்பு இல்லாத கணக்குகளில் அபராதம் விதிக்கப்படும் என அஞ்சல்துறை அறிவித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

தேசிய வங்கிகளின் சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு வாடிக்கையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், தற்போது அஞ்சலக சேமிப்புக் கணக்குகளிலும் குறைந்தபட்ச இருப்புத்தொகையாக ரூ.500 வைத்திருக்க வேண்டுமென, அஞ்சல்துறை அறிவித்துள்ளது.>மேலும், குறைந்தபட்சத் தொகை இல்லாவிட்டால் வருடாந்திர பராமரிப்புக் கட்டணமாக ரூ.100 பிடித்தம் செய்யப்படும். தொடர்ந்து பணம் பிடித்தம் செய்யப்படும்போது கணக்கில் பணம் இல்லாவிட்டால், அந்தக் கணக்கு தானாகவே முடக்கப்படும். இதையடுத்து டிச.11-ம் தேதிக்குள் தங்களது சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்சத் தொகை ரூ.500 வைத்துகொள்ள வேண்டுமென, அஞ்சல்துறை தெரிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Appolo கல்லீரல் தானம் வழங்கிய முதியவருக்கு நடந்த இருதய அறுவை சிகிச்சை வெற்றி பெற்றுள்ளது

thinathanthi :ஆசியாவிலேயே முதன்முறையாக கல்லீரல் தானம் வழங்கிய முதியவருக்கு நடந்த இருதய அறுவை சிகிச்சை வெற்றி பெற்றுள்ளது. ஐதராபாத்,மராட்டியத்தில் வசித்து வரும் முதியவர் சையது இஷாக் (வயது 71).  கடந்த 1998ம் ஆண்டு தனது சகோதரருக்கு தனது கல்லீரலின் இடது பக்கத்தில் இருந்து ஒரு பகுதியை தானம் வழங்கியுள்ளார்.  இதனால் ஆசியாவிலேயே முதன்முறையாக கல்லீரல் தானம் வழங்கியவர் என்ற பெருமையை பெற்றார்.இதன்பின்னர் வழக்கம்போல் இயல்பு வாழ்க்கையை தொடர்ந்துள்ளார்.  சையது இஷாக் கல்லீரல் தானம் வழங்கிய பின்னர், அவருக்கு கொலஸ்டிரால் அளவு அதிகரித்து உள்ளது.  பின்பு இருதய பாதிப்புக்காக கடந்த 2000ம் ஆண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு ஸ்டென்ட்கள் பொருத்தப்பட்டன.இதுபோன்று அடுத்தடுத்து 2005 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளிலும் ஸ்டென்ட்கள் பொருத்தப்பட்டன.  இதனால் அவரது உடலில் மொத்தம் 6 ஸ்டென்ட்கள் உள்ளன.  பின்னர் அவர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார்.

பாரிஸ் தமிழர் .. 4 சிறுவர்களும் தாயாரும் கணவரால் கொலை .. 5 உறவினர்கள் மருத்துவ மனையில் .. கொலையாளி மனநோயாளி?

பிரான்ஸ் தமிழர் தகவல் மையம் : · 18 மாத கைக்குழந்தை மூச்சுத் திணற வைத்து கொலை, ஐவரை கொலைசெய்தவர் மனநிலை வைத்தியசாலைக்கு மாற்றம்! 

பிரான்ஸில் Noisy-le-Sec, (Seine-Saint-Denis) நகரின் rue Emmanuel Arago வீதியில் உள்ள வீட்டில் கடந்த மூன்றாம் திகதி இடம்பெற்ற பயங்கரமான கொலைச் சம்பவத்தின் சந்தேக நபர் மனநல வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, மனநல பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரே இவர் மனநலம் குன்றியவர்கள் சிகிச்சை பெறும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அங்கு அவர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அத்துடன் குறித்த கொலைச் சந்தேகநபர், கொலை இடம்பெற்ற தினத்தில் சுயநினைவுடனேயே இருந்துள்ளார் என்றும் இவருக்குக் கொரோனாத் தொற்று இருந்ததாகவும் முன்னுக்குப் பின் முரண்பாடான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதை, மது தொடர்பான பரிசோதனைகள் இந் நபருக்கு மேற்கொள்ளப்பட்ட வேளையில் அவ்வாறான பழக்கங்களுக்கு அவர் அடிமையாகவில்லை என பரிசோதனை அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

செயில் வீரன்! ~ 91 வயதான செயவீரனுக்கு வீரவணக்கம் ... 1927. சென்னையில் நீலன் சிலை அகற்றும் போராட்டம்...

Karikalan R : · செயில் வீரன்! ~ நேற்றுமுன்தினம் 91 வயதான செயவீரன்

தமிழ்நாடு, இந்தியா, 24×7 செய்தி ஊடகங்கள் இவற்றின் கவனத்தை ஈர்க்காமல் 'பொசுக்' கென்று செத்துபோய்விட்டார். இதில் என்ன பெரிய அதிசம்? எனத் தோன்றலாம். ஒரு flashback! 1927. சென்னையில் நீலன் சிலை அகற்றும் போராட்டம். இந்த நீலனின் முழுப் பெயர் ஜேம்ஸ் ஜார்ஜ் ஸ்மித் நீல். ஏன் இவன் சிலையை அகற்ற வேண்டும்? முதல் சுதந்திரப்போர் என்று அழைக்கப்பட்ட சிப்பாய்க்கலகத்தை ஒடுக்க நீலன் தலையையில், சென்னையிலிருந்து ஒரு படை கொல்கொத்தாவை அடைந்தது. அங்கு கிளர்ச்சியில் ஈடுபட்டவர்கள் மட்டுமின்றி அப்பாவி சிவிலியன்களையும் கூட்டம் கூட்டமாக கொன்றான் நீலன். மக்களை தனித்தனியாக தூக்கில் ஏற்றுவது சிரமம் என்பதால், கூட்டமாக நிறுத்தி, ஒரே கயிற்றால் அவர்கள் கழுத்தை முடிச்சிட்டு , அதை மரங்களில் மாட்டி யானைகளால் இழுக்கச் செய்து சாகடித்தான்.
அதுவும் நேரமாகிறது என்று, கூட்டமாக மனிதர்களை நிறுத்தி உயிரோடு தீயிட்டு கொளுத்தியவன்.
இந்த நீலன் சிலையைதான் சென்னையில் ஸ்பென்சர் அருகே, ஆங்கில அரசு நிறுவியது.

மனம் வலிக்கும் போது சிரி, சிரிக்க வை’ சாப்ளினின் வாழ்க்கை நமக்குச் சொல்லும் பாடம்!

பாண்டியன் சுந்தரம் : நிலைக் கண்ணாடி போன்ற நல்ல நண்பன் எனக்கு


வேறு யாரும் கிடையாது. ஏனென்றால் நான் அழும்போது அதற்குச் சிரிக்கத் தெரியாது’ - சார்லி சாப்ளின் கஷ்டத்திலும் சிரிக்கவைத்த கலைஞன்!அரை அங்குல மீசை... இதை மட்டுமே அடையாளமாகக் கொண்ட இருவரில், ஒருவர் உலகை ஆட்டிப்படைத்த சர்வாதிகாரி ஹிட்லர். மற்றொருவர் நகைச்சுவை உலகின் பிதாமகன் சார்லி சாப்ளின்.>ஹிட்லர் பத்தாண்டுகளில் மண்ணோடு மண்ணாக காணாமல் போய்விட்டதும் வரலாற்றில் களங்கமாய் வேறு மாதிரி நீங்காமல் பதிவானதையும் அறிவோம். சார்லி சாப்ளின் மட்டும் காலங்களைக்கடந்து இன்றும் நம் எல்லோரின் புன்னகையிலும் வாழ்கிறார்!‘திரைப்படத்தின் மூலம் உங்களை சிரிப்பலைகளில் மிதக்க வைக்க, எனக்கு ஒரு பூங்கா, ஒரு போலீஸ்க்காரர், மற்றும் அழகிய ஒரு பெண் இருந்தால் போதும்’ என்பது தான் சாப்ளினின் கொள்கை. எப்படிப்பட்ட உம்மணாஞ்சிகளையும் சிரிக்க வைத்து விடும் சாப்ளினின் நடிப்பு. காலம் கடந்து இப்போதும் உலகம் முழுவதும் சாப்ளினுக்கும், அவரது படங்களுக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். 

வெள்ளி, 9 அக்டோபர், 2020

ஸ்டேன் ஸ்வாமி மாவோயிஸ்டா? என்ஐஏ குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகள்

  RAVI PRAKASH / BBC : ஸ்டேன் ஸ்வாமி தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்தவரும் ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினர் மற்றும் ஆதிவாசிகளின் நலன்களுக்காக பிரசாரம் செய்து வருபவருமான 83 வயது ஸ்டேன் ஸ்வாமி உள்பட எட்டு பேரின் பெயரை, மகாராஷ்டிராவின் பீமா கோரேகான் வன்முறை வழக்கின் துணை குற்றப்பத்திரிகையில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சேர்த்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் வசிக்கும் பாதிரியார் ஸ்டேன் ஸ்வாமி, மும்பையைச் சேர்ந்த பேராசிரியர் ஆனந்த் டெல்டும்ப்டே (70), டெல்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஹனி பாபு (54), டெல்லியைச் சேர்ந்த கெளதம் நவ்லாகா (67), கபீர் காலா மஞ்ச் என்ற அமைப்பின் சாகர் கோர்கே (32), ரமேஷ் கோய்ச்சூர் (38), ஜோதி ஜக்தாப் (32), மிலிந்த் டெல்டும்ப்டே ஆகியோர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 10 ஆயிரம் பக்க துணை குற்றப்பத்திரிகை...

10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட துணை குற்றப்பத்திரிகையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை என்ஐஏ விவரித்துள்ளது.

திருமாவளவன் பெரியாரை கொச்சை படுத்தி பேசினார்?

 Kanimozhi MV : திராவிடர் இயக்கத்தில் பிறந்தது முதல் அறிமுகமான எனக்கு தனிப்பட்ட தாக்குதல் உணர்வு என எதைச் சொல்கிறீர்கள்?
ஆசிரியர் திருமா : இல்லாத திராவிடம்..

ஒரு கருத்து படிக்க கிடைக்கிறது அதை என் முகநூலில் பதிய எனக்கு அனைத்து உரிமையும் உள்ளது
நான் பொய்யை பதியவில்லையே?
முரசொலியில் அய்யாவை எதிர்த்து எழுதியதை எல்லாம் பதியலாமா? என்கிறீர்கள்,
தாரளமாக பதியலாம்!  வரலாறு எதையும் மறைத்து வைப்பது இல்லையே
ஆதிக்க ஜாதிகளுக்கு மட்டுமா அவர் பெரியார் என்ற நூலில் அனைத்து செய்திகளும் உள்ளதே?   எதை நாம் மறைத்து வைத்தோம் ?
பெரியாரை இரண்டாம் நிலையில் வைத்து போகிறபோக்கில் பேசிவிட்டு போகிறார்கள் என்றால் அதைத் தட்டிக்கேட்க நமக்கு கூச்சமாக இருக்கிறது என்றால் அது எவ்வளவு பெரிய இழுக்கு?!
என் தனிப்பட்ட உணர்வு என்ன என்பதை நீங்கள் விளக்கியே தீர வேண்டும் !
ஏற்றுக் கொண்ட கொள்கைக்கு உண்மையாக இருக்க கேடுகெட்ட உறவுகளிடமிருந்து கூட எட்டி நிற்கிறவள் நான் , என் தனிப்பட்ட உணர்வு என்பது என் கொள்கை மட்டுமேபெரியார் மட்டுமே
அதற்கு திராவிடர் இயக்கத்தில் இருப்பவர்களே களங்கம் கற்பிப்பீர்கள் என்றால் விளக்க வேண்டிய தேவை உங்களுக்கு உள்ளது
என்ன என் தனிப்பட்ட உணர்வு ?!

‘இரண்டாம் குத்து’ இயக்குநரை கைது செய்ய வேண்டும்.. போலீசில் புகார்! இவ்ளோ ஆபாசமாவா படம் எடுப்ப?

tamil.filmibeat.com சென்னை: இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் இரண்டாம் பாகமான இரண்டாம் குத்து படத்தின் டீசர் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி உள்ளது. பெண்களை படு செக்ஸியாக காட்டியது மட்டுமல்லாமல், 'ஆண் குறி' காட்சியையும் காட்டியது தான் அந்த படத்திற்கு எல்லா தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிய காரணமாகி உள்ளது

இந்நிலையில், தற்போது அந்த படத்தின் இயக்குநரை கைது செய்ய வேண்டும் என கட்சி ஒன்றின் சார்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டு இருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது.    சர்ச்சையை கிளப்பிய போஸ்டர் ஆளுயர வாழைப் பழத்தை அந்த இடத்தில் பிடித்துக் கொண்டு, ஆபாசமாக இயக்குநர் சந்தோஷ் மற்றும் பிக் பாஸ் டேனி கொடுத்த போஸ் உடன் உருவான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் கெளதம் கார்த்திக் வெளியிட்டு இருந்தார். போஸ்டர் வெளியான அடுத்த சில நொடிகளிலேயே ஏகப்பட்ட பேர் அந்த போஸ்டரை பார்த்து கண்டபடி திட்டி விளாசித் தள்ளினர். ஆர்யா வெளியிட்ட ஆபாச டீசர் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் பண்ணதுக்கே கெளதம் கார்த்திக்கை தமிழ் சினிமா ரசிகர்கள் திட்டித் தீர்ந்த நிலையில், ஹாட்டஸ்ட் டீசர் என்ற பெயரில் நடிகர் ஆர்யா இரண்டாம் குத்து படத்தின் அந்த படு ஆபாசமான டீசரை வெளியிட்டு பெயரை கெடுத்துக் கொண்டார். 

காங்கிரஸுக்கு இவ்வளவுதான்: திமுகவின் புதுக் கணக்கு! 15 ( + Rajya Saba or) to 20 ?

minnambalam.com :ஏற்கனவே திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூட்டணிக் கட்சியினரை அவன் இவன் என ஏக வசனத்தில் அழைத்தது காங்கிரஸ் கட்சிக்குள் கோபத்தை உண்டாக்கி இருக்கும் நிலையில்... திமுக தலைமையில் தற்போது நடைபெற்று வரும் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு பற்றிய ஆலோசனைகள் காங்கிரஸுக்குள் மேலும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன. கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை இடங்கள் என்பது பற்றிய ஆலோசனைகள் திமுக தலைமையில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி திமுக பொதுக்குழு முடிந்த நிலையில், அதற்கு அடுத்த நாள் தலைமை கழக நிர்வாகிகளை அழைத்து கட்சித் தலைவர் ஸ்டாலின் தன் வீட்டில் ஒரு ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிகப்பட்சம் 200 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும் மீதி உள்ள இடங்களில் தனி சின்னத்தில் போட்டியிடும் கூட்டணி கட்சிகள் போட்டியிடலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டது. இதுபற்றி 200 தொகுதிகளில் உதயசூரியன்! முதல் நிர்வாகிகள் கூட்டத்தில் முக்கிய முடிவு! என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இதன் பிறகு தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சென்னை வந்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து அதன் பிறகு திமுக தலைவர் ஸ்டாலினையும் சந்தித்துப் பேசி விட்டுச் சென்றிருக்கிறார்.

ரூ. 2,650 கோடி டெண்டர்கள் ரத்து : ஊராட்சி மன்ற அதிகாரத்தை பறிக்கும் அ.தி.மு.க அரசுக்கு உயர்நீதிமன்றம்...

kalaignarseithigal - ராம்ஜி :தமிழகம் முழுவதும் ரூ.2650 கோடி மதிப்பிளான ஊராட்சி மன்றங்களின் சாலை மேம்பாட்டு டெண்டர்களை ஊராட்சி மன்றங்களின் அனுமதி இல்லாமல் அதிகாரியிட்ட அறிவிப்பாணையை ஐகோர்ட் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. : மத்திய அரசின் 14-வது நிதிக் குழுவின் பரிந்துரையின் பேரில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்த நிதி ஒவ்வொரு ஊராட்சிக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது.

ஊராட்சி மன்றத்தின் மூலமாக ஊராட்சி வசிக்கும் மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற ஊராட்சிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஊராட்சி மன்ற தீர்மானங்கள் இல்லாமலேயே தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் மூலமாக தன்னிச்சையாக திட்டங்களை தேர்ந்தெடுக்கின்றனர்.    ஊராட்சி மன்ற ஒப்புதல் இல்லாமலும் கிராம சபையின் ஒப்புதல் இல்லாமலும் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக தமிழக அரசு அதிகாரிகள் மூலமாகவே திட்டங்களை தேர்ந்தெடுத்து செயல்பட உள்ளதாகவும், இதனை ரத்து செய்ய வேண்டும் என்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஜோதிமணி குமரேசன் உள்ளிட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

2020ம் ஆண்டில் தியேட்டர் பணிநிறுத்தம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தமிழ் படங்களின் பட்டியல்

/tamil.filmibeat.com : 2020ம் ஆண்டில் தியேட்டர் பணிநிறுத்தம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தமிழ் திரைப்படங்களின் பட்டியல் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் தமிழ் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களான மாஸ்டர், சூரரைப்போற்று, பூமி, காடன் போன்ற தமிழ் முன்னணி நடிகர் படங்கள் மற்றும் அறிமுக நடிகர்களின் சிறு பட்ஜெட் படங்கள் என அணைத்து படங்களும் வெளியிட்டு தேதி மாற்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இங்கு 2020ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் வெளியாகவிருந்த படங்கள் தமிழ் திரையரங்குகள் பணிநிறுத்தம் காரணமாக வெளியிட்டு தேதி மாற்றி தள்ளிச் சென்ற படங்களின் பட்டியல் இங்கு உள்ளன.
  1. சைலென்ஸ் விமர்சகர்கள் கருத்து வகை வெளியீட்டு தேதி நடிகர்கள் அனுஷ்கா செட்டி,ஆர் மாதவன்  திரில்லர் மற்றும் திகில் படமாக உருவாகி மக்களின் கவனத்தை பெற்றுள்ள திரைப்படம். இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பல ரசிகர்களை மிரளவைத்துள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகவுள்ள நிலையில் சமீபத்தில் இப்படம் சில காரணங்களால் தள்ளிச் சென்றுள்ளது.

மத்திய தொல்லியல் படிப்புக்கான கல்விதகுதியில் மீண்டும் தமிழ்மொழி சேர்ப்பு - மத்திய அரசு அறிவிப்பு

thinathanthi :டெல்லி, உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் மத்திய அரசின் தொல்லியல்துறை சார்பில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் கல்லூரி இயங்கி வருகிறது. அங்கு தொல்லியல் துறை சார்ந்த 2 ஆண்டு முதுகலை பட்டயப் படிப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு இந்திய வரலாறு, மானுடவியல் மற்றும் சமஸ்கிருதம், பாலி, அரபு ஆகிய மொழிகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து தமிழ் மொழி ஆர்வலர்கள், தமிழக அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழ் மொழி மீது திட்டமிட்டு கலாச்சார படையெடுப்பு நடத்தப்படுவதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விமர்சித்தார். மத்திய அரசு தொடர்ந்து தமிழ் மொழி மீது பாரபட்சம் காட்டி வருவதாக பலர் குற்றம் சாட்டினர்.

காந்தி ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பிரதிநிதித்துவத்தை கடுமையாக எதிர்த்தார்.

சுமதி விஜயகுமார் : முகமத் அலி ஜின்னாவின் பரிந்துரையால் மூன்று வட்ட மேசை மாநாடுகள் நடைபெற்றது. அதன் முக்கிய நோக்கம் இந்திய அரசியல் அமைப்பை சீர்திருத்தம் செய்வது. முதல் வட்ட மேசை மாநாடு நவம்பர் 12 1930 முதல் 19 ஜனவரி 1931 வரை லண்டனில் நடைபெற்றது. அதில் இந்தியாவை சேர்ந்த 74 பேர் கலந்து கொண்டார்கள். அதிர்ஷ்டவசமாக காங்கிரஸ் தலைமையில் இருந்து ஒருவரும் கலந்து கொள்ளவில்லை. 


1930ல் காந்தியடிகள் துவங்கிய ஒத்துழையாமை இயக்கத்தில் பல காங்கிரஸ் தலைவர்களும் கைதாகி சிறையில் இருந்தார்கள். இந்திய பிரிட்டிஷ் அரசில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என்று துவங்கப்பட்டது தான் காங்கிரஸ் என்பதும் , பின்னர் காந்தியடிகளின் வருகைக்கு பின்னே மக்கள் இயக்கமாய் மாறி விடுதலைக்கு போராடியதையும் இங்கே நினைவில் கொள்ள வேண்டும். அப்படி இந்திய அரசியலில் பங்கு கொள்வதற்காக துவங்கப்பட்ட காங்கிரஸ் , இந்திய அரசியல் சீர்திருத்த மாநாட்டை, காந்தியின் தலைமை புறக்கணித்தது.ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக அண்ணல் அம்பேத்கரும், தாத்தா ரெட்டைமலை சீனிவாசனும் கலந்து கொள்ள, ஜின்னாவோ ஏனைய சிறுபான்மையினர் சார்பாக கலந்து கொண்டார்.

ராம் விலாஸ் பாஸ்வான்.. 9 முறை எம்.பி, 1989 முதல் மத்திய அமைச்சர்

BBC : இந்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு விநிகோயகத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் (74), டெல்லியில் அக்டோபர் 8ஆம் தேதி காலமானார். இந்திய அரசியலில் 50 ஆண்டுகளுக்கும் மேலான அவரது அரசியல் பயணம் இறக்கங்களை விட பல ஏற்றங்கள் கொண்டதாகவே இருந்தது. ஆனால், அதற்கு அவர் எதிர்கொண்ட சவால்கள் கடினமானவை.1946ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி, பிஹார் மாநிலம், ககாரியா மாவட்டத்தில் உள்ள ஷாஹாபன்னி என்ற இடத்தில் ராம் விலாஸ் பாஸ்வான் பிறந்தார். சட்டத்துறையில் இளங்கலையும் கலைத்துறையில் முதுகலையும் படித்த அவர், 1969ஆம் ஆண்டில் பிஹார் மாநில காவல்துறையில் துணை கண்காணிப்பாளர் பதவிக்கு தேர்வானார். 

அதன் பிறகு தனது வாழ்வில் தாம் தேர்வு செய்த பாதையை   2016ஆம் ஆண்டில் ராம் விலாஸ் பாஸ்வான் விவரித்தார்.

அதில் அவர், “1969இல் நான் டிஎஸ்பி பதவிக்கும் எம்எல்ஏ பதவிக்கும் தேர்வானேன். அப்போது எனது நண்பர் ஒருவர் என்னிடம் நீ அரசாங்கம் ஆக ஆசைப்படுகிறாயா, அரசு சேவகராக இருக்க ஆசைப்படுகிறாயா என கேட்டார். அப்படித்தான் நான் அரசியலுக்குள் நுழைந்தேன்” என்று ராம் விலாஸ் பாஸ்வான் கூறியிருந்தார். 

அதே ஆண்டில் பிஹார் மாநில சட்டமன்ற தேர்தலில் சம்யுக்தா சோஷலிஸ கட்சி சார்பில் போட்டியிட்டு அவர் எம்எல்ஏ ஆனார். தலித் இயக்க தலைவர்களான ராஜ் நாராயண், ஜெயபிரகாஷ் நாராயண் ஆகியோரின் தீவிர பற்றாளராக தன்னை அடையளப்படுத்திக் கொண்ட ராம் விலாஸ் பாஸ்வான், லோக் தளம் கட்சியில் சேர்ந்ததும் அதன் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

வியாழன், 8 அக்டோபர், 2020

சென்னையில் பாஜக கும்பல் பட்டப்பகலில் சூப்பர் மார்க்கெட்டை சூறை! 50 பேர் குண்டுக்கட்டாக கைது!

சிசிடிவி காட்சிகள் போலிஸாருக்கு சிக்கிவிடக் கூடாது என்பதற்காக டிவிஆருக்கு பதில் கணினி சிபியூவை எடுத்துச் சென்றது வேடிக்கையாக அமைந்துள்ளது. Janani - kalaignarseithigal : சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் பட்டப்பகலில் பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்து பாஜக தென்சென்னை மாவட்டத் துணைத் தலைவர் உட்பட 60 க்கும் மேற்பட்டவர்கள் பொருட்களை சூறையாடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆயிரம் விளக்கு காதர் நவாஸ்கான் சாலையில் ஷாநவாஸ் என்பவர் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இந்த சூப்பர் மார்க்கெட் ரஃபீகா என்பவருக்கு சொந்தமான கட்டடத்தில் இயங்கி வருகிறது. இருவருக்கும் இடையே வாடகை தகராறு ஏற்பட்டு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் கடையை காலி செய்யக்கூறி ரஃபீகா அடிக்கடி கடைக்கு வந்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஒப்பந்தப்படி கடையை காலி செய்ய 2 வருடங்கள் கால அவகாசம் இருப்பதாக ஷாநவாஸ் தரப்பு தெரிவித்து வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதை சுட்டிக்காட்டி கடையை காலி செய்ய மறுத்துள்ளனர்.

ஜாதி – உலகப் பெருந்தொற்று : கிருபா முனுசாமியின் புதிய தொடர்

aransei.com  :ஜாதி – உலகப் பெருந்தொற்று : கிருபா முனுசாமியின் புதிய தொடர் ஜாதி:

உலகப் பெருந்தொற்று – அறிமுகம் “இந்துக்கள் உலகின் பிற பகுதிகளுக்கு குடிபெயர்ந்தால், இந்தியாவின் ஜாதி ஒரு உலகப் பிரச்சினையாக மாறும்” – பி.ஆர். அம்பேட்கர். 9 மே 1916-ஆம் ஆண்டு அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் “இந்தியாவில் ஜாதிகள்: அவற்றின் இயங்கியல், தோற்றம் மற்றும் வளர்ச்சி” என்ற தன்னுடைய மானுடவியல் ஆய்வில் புரட்சியாளர் பி.ஆர். அம்பேட்கர் அவர்கள் கூறியது இன்று உண்மையாக மாறியிருக்கிறது.

தங்களுடைய தாய் நாட்டிலிருந்து உலகின் பிற பகுதிகளுக்கு குடிபெயர்ந்த இந்தியர்கள், அவர்களோடு சேர்த்து அவர்களின் பண்பாட்டையும் எடுத்துச் சென்றனர். ஆனால், அந்த பண்பாடானது ஜாதிய, சமூக, பாலின ஏற்றத்தாழ்வுகளோடு உள்ளிணைக்கப்பட்டிருக்கும் பொழுது, அவர்கள் கொண்டு சென்றது வெறும் பண்பாட்டை மட்டுமல்ல, அந்த ஏற்றத்தாழ்வுகளையும் தான். இது மத வழிபாடு, திருமணம், குடியிருப்பு போன்ற தனிநபர் உரிமைகளோடு மட்டும் நிற்காமல் வேலை வாய்ப்புகளிலும், சமூக உறவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பிட்ட ஒரு இனக்குழுவிற்கு இடையேயான பிரச்சனையாக இருந்து அவர்கள் குடிப்பெயர்ந்த சமூகத்தின் நவீனத்தன்மையையும், உலகளாவிய மனித உரிமைகள் வழியாக வளர்த்தெடுத்த சமத்துவ கட்டமைப்பையும் சீர்குலைக்கும் போது அந்நாட்டின் தேசிய பிரச்சனையாகவும் மாறுகிறது.

மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் காலமானார்.. Minister Ram Vilas Paswan, Days After Heart Surgery, Dies

 மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் காலமானார் . இவருக்கு வயது 74 .


இவர் கொரோனா தொற்று சிகிச்சை மற்றும் இருதய சிகிச்சையும் பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனளிக்காதநிலையில் காலமானார் என்று அவரது மகன் டிவீட்டறில் தெரிவித்து உள்ளார் 

New Delhi: Union minister Ram Vilas Paswan, who recently underwent a heart surgery, died today at a Delhi hospital where he was recuperating. The 74-year-old was undergoing treatment at the hospital, and had to undergo surgery "due to the situation that had suddenly emerged," his son Chirag Paswan had tweeted on Saturday. "Papa… Now you are not in this world but I know you are always with me wherever you are. Miss you Papa," Chirag Paswan tweeted this evening. He shared an old photo of him and his father along with the tweet.

கொல்கத்தா பாஜக பேரணி.. போலீஸ் மீது வெடிகுண்டு வீச்சு.. கலவர பூமியான கொல்கத்தா

Veerakumar  tamil.oneindia.com :கொல்கத்தா: கொல்கத்தா மற்றும் அதனை ஒட்டிய ஹவுரா மாவட்டத்தில் காவல்துறையினர் மீது பாஜக தொண்டர்கள் வெடிகுண்டுகள் மற்றும் செங்கற்களை வீசியதால், போலீசார் தடியடி நடத்தினர். 

ஆளும் திரிணாமுல் காங்கிரசாரால், பாஜக தொண்டர்கள் கொல்லப்படுவதாக அக்கட்சியின் நிர்வாகிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். இதையடுத்து, மாநில அரசைக் கண்டித்து பாஜக சார்பில் ஹவுராவில் உள்ள தலைமைச் செயலகம் நோக்கி ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. 

அதன்படி இன்று பாஜகவினர் கொல்கத்தா மற்றும் ஹவுராவில் இருந்து பேரணியாக புறப்பட்டனர். இதனால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு பேரணிக்கு திட்டமிடப்பட்ட சாலைகள், தெருக்கள் அடைக்கப்பட்டன. தடை செய்யப்பட்ட பகுதிகளில் போலீசார் தடுப்புகளை அமைத்திருந்தனர்.   

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த மூன்று காவலர்கள் திடீர் இடமாற்றம்!

Police cop pays homage to periyar statuenakkeeran : கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி, பெரியார் பிறந்த நாள் அன்று, கடலூர் அண்ணா பாலம் அருகில் இருக்கும் பெரியார் சிலைக்கு, புதுநகர் காவல்நிலைய காவலர்கள் ரங்கராஜ், ரஞ்சித், அசோக் ஆகிய 3 பேர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி அந்தப் புகைப்படங்களை சமுக வலைதலங்களில் பதிவேற்றினர்.இந்நிலையில், அவர்கள் மூவரும் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காவலர்கள் இடமாற்றமாகியிருப்பது கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரியார் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் அல்ல, அவர் ஒரு சமுதாய தலைவர். மக்களின் உரிமைகளுக்காகப் பாடுபட்டவர். அவரின் போராட்டங்களால் கல்வியறிவு பெற்றவர்கள், வேலை வாய்ப்பு பெற்றவர்கள், வாழ்வாதாரம் பெற்றவர்கள் அவரை நினைவு கூறும் வகையில் அவருக்கு மரியாதை செலுத்துவது தவறான காரியம் அல்ல.

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ காதல் திருமணம்.. பெண்ணும், தந்தையும் நேரில் ஆஜராக உத்தரவு

tamil.oneindia.com : சென்னை: கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரவு தன் மகளை ஆஜர்படுத்த கோரிய ஆட்கொணர்வு மீதான விசாரணை நாளை நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதையடுத்து, சம்பந்தப்பட்ட பெண்ணும் அவரது தந்தையும் நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் சென்னை ஹைகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அதிமுகவின் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பிரபு... இவர் சவுந்தர்யா என்ற கல்லூரி மாணவியை காதலித்து வந்தார்.. 2 நாளைக்கு முன்பு அவரை சாதி மறுப்பு திருமணமும் செய்து கொண்டார் பிரபு.. தியாகதுருகத்தில் உள்ள அவரது வீட்டில் எம்எல்ஏவின் பெற்றோர்கள் தலைமையில் எளிமையான முறையில் இந்த கல்யாணம் நடந்து முடிந்தது.

 இந்த கல்யாணத்துக்கு சவுந்தர்யா குடும்பத்தில் இருந்து எதிர்ப்பு கிளம்பி உள்ளது.. குறிப்பாக அவரது அப்பா சுவாமிநாதன் தீக்குளிக்கவே முயற்சி செய்தார்.. இதற்கு பிறகு சுவாமிநாதன் நம்முடைய "ஒன் இந்தியா தமிழுக்கு" அளித்த பிரத்யேக பேட்டியில் சொன்னதாவது: "13 வருஷமா பிரபுவை தெரியும்.. என் வீட்டுக்கும் வருவார்.. என் பொண்ணுக்கு இப்போதான் 19 வயசு ஆகுது.. பிரபுக்கு 39 வயசாகுது. 10 வருஷமா என் பொண்ணை லவ் பண்றதாக சொல்றார்.. அப்படின்னா 9 வயசுலேயே என் பொண்ணை லவ் பண்ணாரா? 20 வயசு வித்தியாசத்தை எப்படி ஏத்துக்கறது? நான் சாதி பார்க்கிறவன் இல்லை.. மதம் பார்க்கிறவன் இல்லை.. காதலுக்கும் நான் எதிரி கிடையாது... ஆனால், 20 வயசு அதிகமான நபருக்கு எப்படி என் பொண்ணை தர்றது? 4 மாசம்தான் காதல் பண்றேன்னு சொல்றாரே.. 

தேவேந்திர குல வேளாளர் அரசாணை? விரைவில் தென் மாவட்ட அரசியலில் திருப்பம்?

minnambalam :வரும் சட்டமன்றத் தேர்தலில் தென் தமிழ்நாட்டின் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தப் போகும் ஓர் அரசாணை இன்னும் சில தினங்களில் மத்திய அரசால் வெளியிடப்பட இருக்கிறது என்ற தகவல் அதிகார வட்டாரங்களிலும், அரசியல் வட்டாரங்களிலும் பேசப்பட்டு வருகிறது.

குடும்பர், பண்ணாடி, காலாடி, கடையர், தேவேந்திர குலத்தார், பள்ளர், வாதிரியார் ஆகிய பெயர்களில் அழைக்கப்படும் ஏழு உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்கப்பட வேண்டும் என்பதும், பின் தங்களை பட்டியல் சமூகத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பதும் அச்சமூகத்தினரின் நெடு வருடக் கோரிக்கை. இது தொடர்பாக பிரதமர் வரை அவர்கள் சந்தித்துள்ளனர். மதுரையில் பாஜக தலைவர் அமித் ஷா இது தொடர்பாக தேவேந்திரர் கூட்டமைப்பு நடத்திய மாநாட்டுக்கு வருகை தந்து இதற்காக உறுதியளித்துச் சென்றார்.

கடந்த வருடம் நடைபெற்ற நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலின் போது இந்த கோரிக்கையை முன் வைத்து தேவேந்திர குல வேளாளர்கள் அத்தொகுதி முழுதும் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தினார்கள்.  

முன்னாள் சிபிஐ தலைமை இயக்குனர் அஸ்வனி குமார் தற்கொலை!

minnambalam : மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் முன்னாள் இயக்குனரும், முன்னாள் நாகாலாந்து ஆளுநருமான அஸ்வனி குமார் நேற்று (அக்டோபர்7) புதன் கிழமை சிம்லாவில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். இது அதிகார மற்றும் அரசியல் வட்டாரங்களில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. சிம்லா போலீஸ் கண்காணிப்பாளர் மோஹித் சாவ்லா முன்னாள் ஆளுநரான அஸ்வனிகுமார் தூக்கில் தொங்கியிருப்பதை உறுதிப்படுத்தினார், ஆனால் மேலதிக விபரங்களை வெளியிட மறுத்துவிட்டார். இந்த விவகாரம் விசாரணையில் உள்ளது என்றார் இமாச்சல பிரதேச காவல்துறை வட்டாரங்களின்படி, அவர் தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். சம்பவ இடத்திலிருந்து தற்கொலைக் குறிப்பும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. .அஸ்வினி குமார் நேற்று மாலை வாக்கிங் சென்றுவிட்டு வந்து திரும்பி வந்ததும் தன் அறைக்கு சென்று தூக்கு மாட்டிக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள் போலீஸார்.

ஜார்கண்ட் .. தமிழ்நாட்டுக்கு கடத்த முயன்ற 31 பெண்கள் மீட்பு

thinathanthi : ஜார்கண்ட்  மாநிலத்தில் தமிழ்நாட்டுக்கு கடத்த முயன்ற 31 பெண்களை போலீசார் மீட்டுள்ளனர்.

 ராஞ்சி, தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஆடை தொழிற்சாலைகளில் வட மாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களில் பெண்களும், சிறுமிகளும் அடங்குவர். இடைத்தரகர்கள் பலர் தொழிற்சாலைகளின் உரிமையாளர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு வடமாநில தொழிலாளர்களை கொத்தடிமைகளாக விட்டு செல்வதாக புகார்கள் உள்ளன. 

இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து 30-க்கும் மேற்பட்ட பெண்களை தமிழகத்துக்கு வேலைக்கு அழைத்துவர அந்த மாநிலத்தை சேர்ந்த இடைத்தரகர் ஒருவர் ஏற்பாடுகளை செய்தார். அதன்படி அங்கு உள்ள லதேஹர் மாவட்டத்தில் இருந்து 9 சிறுமிகள் உட்பட 31 பெண்களை ஒரு பஸ்சில் ஏற்றி கொண்டு அவர் தமிழகத்தை நோக்கி புறப்பட்டார். வழியில் லதேஹர் மாவட்டத்தின் தாதா கிராமத்தில் போலீசார் அந்த பஸ்சை வழிமறித்து சோதனையிட்டனர். அப்போது அந்த இடைத்தரகரிடம் பெண்களை வேலைக்கு அழைத்து செல்வதற்கான எந்த ஒரு ஆவணங்களும் இல்லை என்பது தெரியவந்தது.

இங்கே சுட்டு வீழ்த்தப்பட்டு கிடப்பது யார் தெரியுமா? இவர் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி பேராசிரியர் டாக்டர் ராஜினி திரணகம ராஜசுந்தரம்!...

இந்த படம்..... யாழ்ப்பாணத்து தெருவில்..... இங்கே சுட்டு வீழ்த்தப்பட்டு

Dr.  Rajini Thiranagama.Rajasundaram 

கிடப்பது யார் தெரியுமா? இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி பேராசிரியர் டாக்டர் ராஜினி திரணகம ராஜசுந்தரம் ! . இவர் லண்டனில் பார்த்த வேலையை உதறி தள்ளிவிட்டு யாழ்ப்பாண மருத்துவ பீடத்தை செயல்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் நாடு திரும்பியவராகும் . இவர் குண்டடி பட்டு இறந்து வீதியில் கிடக்கிறார். . அந்த வீதி வழியே செல்பவர்கள் ஏதும் அறியாதவர்களாக போகிறார்கள் வருகிறார்கள் ஏன் தெரியுமா? பயம் பயம் பயம் .. புலிகளுக்கு பயம் . ஜெர்மன் நாசிகளை விட நாசகாரிகளான பிரபாகரன் குண்டர்களின் அடுத்த சூடு எவருக்கு என்றே தெரியாத காலம் அது . தங்களோடு தங்கள் ஊரில் பிறந்து வளர்ந்து தங்கள் யாழ்மண்ணுக்கே சேவையாற்ற திரும்பி வந்த ஒரு தமிழ் பெண் டாக்டர் இவர் என்பதை கூட சிந்திக்க அனுமதி மறுக்கப்படடவர்கள் அந்த மக்கள்.

வீழ்ந்து கிடைக்கும் பேராசிரியை மீது ஒரு சின்னஞ்சிறு அனுதாப பார்வை செலுத்தி விட்டாலே புலிகளின் சந்தேக குறிக்கு இலக்காக வேண்டிவரும் என்ற மயான பயம் எங்கும் நிலவிய அந்த கொடூர காலங்கள்

ilankainet.com : மரணத்தினுள் வாழ்ந்தோம்! "One day some gun will silence me and it will not be held by an outsider but by the son born in the womb of this very society, from a woman with whom my history is shared" Rajini Thiranagama.

ம.க.இ.க, மக்களதிகாரம் துணை அமைப்புகளிலிருந்து பலர் விலகி.. விலக்கப்பட்டும்... இருக்கிறார்கள்.

Raj Dev ; ம.க.இ.க, மக்களதிகாரம் மற்றும் அவற்றின் துணை அமைப்புகளிலிருந்து பல முன்னணியாளர்கள் விலகிக் கொண்டும், விலக்கப்பட்டுக் கொண்டும் இருக்கிறார்கள். 

இது எங்கு, எப்போது, எப்படி முடியும் என்று தெரியவில்லை. இதன் விளைவுகள் ஏற்படுத்தப் போகும் தாக்கம் பற்றி பொது சமூகத்தில் எந்த அக்கறையான விவாதமும் எழவில்லை. இந்த அமைப்புகள் நீண்ட காலமாக தமிழ் மண்ணில் உணர்வுப் பூர்வமான போராட்டங்களை நடத்தி வந்துள்ளன. கடந்த தேர்தலில் வீழ்த்தவே முடியாது என்று இறுமாந்திருந்த ஜெயலலிதாவுக்கு கோவனின் பாடல்கள் உருவாக்கிய எழுச்சி கண்ணில் விரலை விட்டு ஆட்டியது. மயிரிழையில் மட்டுமே அவர் ஆட்சியை பிடிக்க முடிந்ததற்கு மக்களதிகார அமைப்பின் செயல்பாடுகள் ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. 

அதே போன்று முந்தைய திமுக ஆட்சியில் சிதம்பரம் நடராஜர் கோயில் அரசுடமையாக்கப்பட்டதற்கு பின்பும் ம.க.இ.க உருவாக்கிய கருத்துருவாக்கமும், களப் போராட்டங்களும் கலைஞர் அந்த தீர்மானத்தில் உறுதியாக இருக்க உதவியது. ம.க.இ.க.வின் பொதுச் செயலாளராக தோழர் மருதையன் இருந்த காலத்தில் மது ஒழிப்புக்கு கோவன் முதலானோர் கருணாநிதியை சந்திப்பது எப்படி தகும்? என்ற கேள்விக்கு அவர் சொன்ன பதில் முக்கியமானது. கலைஞரின்   வாக்குறுதி எந்த நிலையில் தரப்படுகிறது என்ற சூழ்நிலை முக்கியத்துவத்தை குறிப்பிட்டு சில வாக்குறுதிகளிலிருந்து நழுவ முடியாத தன்மையை எடுத்துக் கூறினார். போராட்டத்தில் தீவிரத்தை கடைப்பிடித்த அதே நேரம் உடனடி முக்கியத்துவம் வாய்ந்த மிக அத்தியாவசிய நடவடிக்கைக்கு வேண்டிய நெளிவு சுளிவையும் கூட அவ்வப்போது இந்த புரட்சிகர இயக்கங்கள் தமிழ் - தமிழர் நலன் சார்ந்து எடுத்துள்ளன.

புதன், 7 அக்டோபர், 2020

தமிழ்ப்படங்களில் முட்டாள் தனமான மருத்துவ காட்சிகள் .. வர்மா நான்சென்ஸ்

Anbu Mani : · திரைப்படங்கள் மருத்துவ உலகம் பற்றி உருவாக்கி வைத்துள்ள தவறான பொதுப் புத்தியினால் மருத்துவர்கள் எதிர் கொள்ளும் சிக்கல்கள்

ஏராளம். தற்போது வர்மா என்ற பெயரில் ஒரு திரைப்படம். பாலா இயக்கத்தில். பிரசவ அறை. குழந்தையின் தலைக்கு பதிலாக கால் முதலில் வருகிறது. இதை footling presentation என்று சொல்கிறார்கள் மருத்துவர்கள். நாயகன் டாக்டர். புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர். யோசிக்கிறார்.
பையில் இருந்து ஒரு சிகரெட் லைட்டர் எடுத்து 🔥 தீச்சுவாலையால் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் குழந்தையின் பாதத்தில் சுடுகிறார்.
உடனே குழந்தை ரிஃப்ளெக்சிவாக காலை உள்ளே இழுத்துக் கொள்கிறது. இழுத்துக் கொண்டது மட்டும் அல்லாமல் அதே வேகத்தில் ஒரு குட்டிக் கரணம் அடித்து தலை கீழாக வந்து பிறப்பது போல கிராபிக்ஸ்சில் காட்டுகிறார்கள்.
முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.
படத்தில் காட்டப்பட்டுள்ளது போல செய்ய முடியாது.
இந்த நிலை இருந்தால் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலமாக குழந்தையையும் தாயையும் காப்பாற்ற முடியும். 

'டேய் நான் சிவாஜிடா... என்ன காட்சி , எதுக்கு நடக்கணும் .... என்ன சிச்சுவேஷன்னு கூட சொல்லாம நடன்னா என்னடா அர்த்தம்'

Sabitha Joseph : "திரைக்கு பின்னால்" முதல் மரியாதை" "எப்படியும் இந்தப் படம் ஓடாது. அவர் மறுபடியும் கஷ்டப்படுவார். திரும்பி வந்து எங்கிட்டதான் பணம் கேட்பார். அதனால் பணத்தை அவரையே வைச்சுக்கச் சொல்லு..." வாங்க மறுத்தாா் இளையராஜா !
முதல் மரியாதை 1985 ஆம்
ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும் .இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ராதா, வடிவுக்கரசி மற்றும் பலர் நடித்திருந்தனர்.! இந்தப் படம் வெளியாகி சிறந்த பிராந்திய மொழிப் படத்துக்கான தேசிய விருதையும் , பாடலாசிரியருக்காக கவிஞர் வைரமுத்துக்கு தேசிய விருதையும் பெற்றுத்தந்தது .ஃபிலிம்ஃபேர் நடிகர் திலகம் சிவாஜியையும் ராதாவையும் சிறந்த நடிகர் , நடிகையாகத் தேர்வு செய்தது .கல்யாணமான ஒரு நடுத்தர வயது ஆள் , இளம்பெண்ணோடு காதல் கொள்கிறார் என்பது அப்போதைய காலகட்டத்தில் எவருமே எதிர்பார்க்காத ஒரு முயற்சி !அந்த வயது ஆட்கள் ஒரே நாளில் அடுத்தடுத்த காட்சிகளுக்குப் போய் கண்ணீர் சிந்திய கதையெல்லாம் உண்டு .திருப்பிய பக்கமெல்லாம்சிவாஜியின் நடையும் , ராதாவின் சிரிப்பும் பற்றித்தான் பேச்சு ! அந்தச் சிரிப்புக்குச் சொந்தக்காரர் பின்னணி குரல் கொடுத்த நடிகை ராதிகா என்பது அப்போது எவருக்கும் தெரியாது .காதல் தோல்வியடைந்த இளசுகள் மைக் செட் போடும் அண்ணன்களிடம் போய் கெஞ்சிக் கூத்தாடி முதல் மரியாதை பாடல்கள் மறுபடியும் போடச்சொல்லிக் கெஞ்சுவார்கள் .

எடப்பாடி பழனிசாமி பெயரை மகிழ்ச்சியோடு அறிவித்துள்ளேன்- ஓ.பன்னீர்செல்வம்

 maalaimalar :  சென்னை: 2021 சட்டசபை தேர்தல் அ.தி.மு.க. முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி பெயரை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இதைத்தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:- கேள்வி:- முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்தது குறித்து உங்கள் கருத்து என்ன? பதில்:- எடப்பாடி பழனிசாமி பெயரை நான் மகிழ்ச்சியோடு அறிவித்து உள்ளேன். கேள்வி:- உங்கள் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? பதில்:- எங்கள் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக இருக்கிறது. கேள்வி:- அ.தி.மு.க.வில் அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல் குழுவுக்கு என்ன அதிகாரங்கள் உள்ளன? பதில்:- என்ன அதிகாரம் என்பது அ.தி.மு.க. சட்ட விதிகளில் சேர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

சசிகலா சொத்துக்கள் முடக்கம்! ரூ.2,000 கோடி மதிப்பு

minnambalam :சசிகலா உள்ளிட்டோரின் ரூ.2,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வருமான வரித் துறை முடக்கியுள்ளது.   சசிகலா, அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சோதனை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக சொத்துக்களை முடக்கும் பணிகளில் வருமான வரித் துறை ஈடுபட்டு வருகிறது. பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் போது, பினாமி பெயரில் சேர்த்ததற்காக, 1,600 கோடி ரூபாய் மதிப்பிலான சசிகலாவின் சொத்துகளை வருமான வரித்துறை ஏற்கனவே முடக்கியது.     கடந்த மாதம் பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ், சசிகலாவின் 65 சொத்துகள் கண்டறியப்பட்டு முடக்கப்பட்டன. 300 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த சொத்துகளில் போயஸ் கார்டனில் சசிகலா கட்டி வரும் புதிய பங்களாவிலும் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

 ரூ.2,000 கோடி மதிப்பு: சசிகலா சொத்துக்கள் முடக்கம்!

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அதே நேரத்தில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான சொத்துக்கள் பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளன. சுதாகரன் மற்றும் இளவரசிக்கு சொந்தமான சிறுதாவூர் பங்களா மற்றும் கொடநாடு எஸ்டேட் ஆகியவை இந்த சொத்துப் பட்டியலில் அடக்கம். இந்த இடங்களில் வருமான வரித் துறையின் பினாமி தடுப்புப் பிரிவினர் முடக்கத்திற்கான நோட்டீஸை இன்று (அக்டோபர் 7) ஒட்டிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி - அதிமுக அறிவிப்பு

Jeyalakshmi C  tamil.oneindia.com : சென்னை: அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக

எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையின் கீழ் 2021 சட்டசபை தேர்தலை சந்திக்க அதிமுக முடிவு செய்துள்ளது. இதனை துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். முதல்வர் வேட்பாளர் பற்றிய அறிவிப்பு வெளியான நிலையில் அதிமுக கட்சி தலைமை அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை பகுதியில் அதிமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் புலிவேஷம் கட்டி ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சைக்கு கடந்த 10 நாட்களாக எந்த முடிவும் எட்டப்படாமல் இருந்து வந்தது. எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் மாறி மாறி அமைச்சர்கள் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். நேற்று காலை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தங்களது இல்லங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்கள். 

அதிமுக முதல்வர் வேட்பாளர் இன்று காலை 9.45 மணிக்கு அறிவிப்பு

dailythanthi.com : அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? என்பதை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் இன்று காலை 9.45 மணிக்கு வெளியிட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

சென்னை,அதிமுகவில் வரும் சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளாராக யார் முன்னிறுத்தப்படுவார்? என்பது தொடர்பாக கடந்த சில தினங்களாக அக்கட்சி தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. செயற்குழு கூட்டத்திற்கு பிறகு பேட்டி அளித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி அக்டோபர் 7  இன்று  அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கபடுவார் என்று கூறினார்.இதனால், கடந்த சில தினங்களாகவே  முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தனது ஆதரவு நிர்வாகிகள், மூத்த அமைச்சர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தினர்.  குறிப்பாக நேற்று காலை முதல் அதிகாலை வரை மூத்த அமைச்சர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் இருவரையும்  மாறி மாறி சந்தித்து தீவிர ஆலோசனை நடத்தினர். இதனால்,ஆளும் அதிமுகவில் உச்ச கட்ட பரபரப்பு நிலவுகிறது. அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பதும், வழிகாட்டுதல் குழு குறித்தும் இன்று காலை அறிவிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இதனால், அதிமுக தொண்டர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். 

இந்தியில் தேர்ச்சி பெறாத வடமாநிலத்தவர் தமிழில் (மோசடி) தேர்ச்சி.. .தமிழக மின்வாரியத்தில் வடமாநிலத்தவர் படையெடுப்பு?

 இந்தியில் தேர்ச்சி பெறாத வடமாநிலத்தவர் தமிழில் தேர்ச்சியா?

மின்னம்பலம் : வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழ் மொழியில் அதிகமாகத் தேர்ச்சி பெறுவது எப்படி என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஒட்டப்பிடாரத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர், நீலகிரி ஆயுதத் தொழிற்சாலையில் பணிக்காக விண்ணப்பித்திருக்கிறார். சரவணன் 40 மதிப்பெண் பெற்ற நிலையில், அவரைவிடக் குறைவான மதிப்பெண் பெற்ற ஆறு பேருக்குப் பணி வழங்கப்பட்டது. ஆனால், அவருக்குப் பணி ஆணை வழங்கப்படவில்லை.இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் நிர்வாக நீதிபதி கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று (அக்டோபர் 6) விசாரணைக்கு வந்தது. அப்போது, உள்ளூர் மக்களுடன் தகவல் தொடர்பு கொள்ளும் வகையில் அதிகாரிகள் தமிழ் மொழியை அறிந்திருக்க வேண்டும். இது இயலாத நிலையில் எப்படி அவர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், “இந்தியாவிற்குள் வசிப்பவர்களுக்கு மத்திய அரசுப் பணிகளுக்குத் தேர்வு எழுதி எங்கு வேண்டுமானாலும் பணியில் சேரட்டும். ஆனால், தேர்வு முறையில் நேர்மையும் வெளிப்படைத்தன்மையும் தேவை.

 தமிழக மின்வாரியத்தில் மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இதற்குத் தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்” என்று குறிப்பிட்டனர்  

விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

 விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

minnambalm : தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சில ஆண்டுகளாக வீட்டில் இருந்தபடி ஓய்வெடுத்து வரும் விஜயகாந்த், கொரோனா காலத்தில் எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவில்லை. ஆகஸ்ட் மாதம் நடந்த தேமுதிக தொடக்க நாள் நிகழ்வில் கலந்துகொண்டு கட்சிக் கொடியை மட்டும் ஏற்றிவைத்தார்.

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அடுத்த சில நாட்களில் பிரேமலதா விஜயகாந்துக்கும் தொற்று உறுதியானது. சிகிச்சையில் உடல்நலம் தேறியதையடுத்து கடந்த 2ஆம் தேதி இருவரும் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குச் சென்றனர். அங்கு கொரோனாவுக்கு பிந்தைய தனிமைப்படுத்துதலில் இருந்து வந்தனர்.

நான் டிராக்டரில் அமர்ந்ததை விமர்சிப்பதா; பிரதமரின் சொகுசு விமானத்தை கண்டுகொள்ளாதது ஏன்? - ராகுல்காந்தி கேள்வி

தினத்தந்தி : நான் டிராக்டரில் சோபாவில் அமர்ந்ததை விமர்சிப்பதா என்றும் பிரதமரின் சொகுசு விமானத்தை கண்டுகொள்ளாதது ஏன் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார

புதுடெல்லி, பஞ்சாப் மாநிலத்தில் டிராக்டர் பேரணியில் கலந்து கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, டிராக்டரில் சோபாவை போட்டு அமர்ந்து சென்றார். இதை மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் கிண்டல் செய்திருந்தனர். இந்நிலையில், இதற்கு பதில் அளிக்கும் வகையில், ராகுல்காந்தி நேற்று கூறியதாவது:என் நலம் விரும்பிகளில் யாரோ ஒருவர், டிராக்டரில் சோபாவை போட்டுள்ளார். ஆனால், பிரதமர் மோடியின் பயன்பாட்டுக்காக மக்கள் வரிப்பணம் ரூ.8 ஆயிரம் கோடிக்கு புதிய ஏர் இந்தியா ஒன் விமானம் வாங்கப்பட்டுள்ளது. அதில், சோபா மட்டுமின்றி, பிரதமரின் வசதிக்காக சொகுசு படுக்கைகளே உள்ளன. அதையெல்லாம் ஏன் யாரும் பார்ப்பதும் இல்லை, கேள்வி கேட்பதும் இல்லை. தன்னுடைய நண்பர் டிரம்ப், அதேபோன்ற விமானத்தை வைத்திருப்பதால், மோடியும் கோடிக்கணக்கான ரூபாயை வீணடித்து இந்த விமானத்தை வாங்கி உள்ளார்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</

மதுபாலா காதலர் தினமான பிப்ரவரி 14–ந் தேதி பிறந்தவர் ..

 Kulashekar T - World Movies Museum : · மதுபாலா முதலில் ஒன்று சொல்லியாக

வேண்டும். இதை இப்படி ஆரம்பிப்பது தான் சரியாக இருக்கும். மதுபாலா என்றால் காதலின் தினம். ஆம். காதலர் தினமான பிப்ரவரி 14–ந் தேதி பிறந்தவர் தான் இந்த மதுபாலா. தீரா இளமை கொண்டவர். இவர் பூத்ததும் உதிர்ந்த பூ. ஆனாலும், இப்போதும் வாசம் மட்டும் குறையவில்லை. இப்போது மட்டுமல்ல.. எப்போதும் குறையாத மலர்.. அதன் பெயர் மதுபாலா.
மதுபாலா என்றால் மயக்கம் தருகிற அமுது என்று அர்த்தம் கொள்ளலாம். அவரின் கண்களில் ஒரு நிரந்தர வசியம் இருக்கும். எப்போதும் அந்த பார்வை சொக்கிப்போய் பார்க்கும். பார்க்கிறவர்களை நொடிப்பதற்குள் சொக்க வைத்து விடும் அந்த கிரக்கப் பார்வையில் ஒரு கம்பீரமும், குழந்தைத்தனமும் எப்போதும் துள்ளி விளையாடும். அவரின் தனித்துவம் அது.
அதை எவராலும் ஈடுசெய்ய முடியவில்லை என்பதை 1990 – ல் நடத்திய ஒரு வாக்கெடுப்பு நிரூபணப்படுத்தியது. அந்த பிரபலமான திரைப்பட இதழானது, இந்திய அளவில் ஆல் டைம் ஃபேவரைட் ஸ்டார் யார் என்று நடத்திய சர்வேயில் அமோக ஆதரவோடு முதலிடம் பிடித்தவர் தான் இந்த மதுபாலா.
இவரது பார்வையில் இவரின் இதயத்தில் தவித்திருக்கும் காதலின் நிரந்தர ஏக்கத்தை தரிசிக்கலாம். அது இந்திய மனதின் ஒருமித்த படிமமாக இருப்பதாலோ என்னவோ, இவரை திரையுலகம் தலையில் வைத்து கொண்டாடியது.

ஏழு உலகங்களின் அதிசயங்கள். சர் டேவிட் அட்டன்பரோவின் அழகான விரிவுரை

kondalaathi.blogspot.com : ஏழு உலகங்களின் அதிசயங்கள். >கடந்த ஞாயிற்றுக்கிழமை பிபிசி எர்த் தமிழ் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பான ஆப்பிரிக்கா என்ற நிகழ்ச்சி இரண்டு மணிநேரத்தை முழுதாக கட்டிப்போட்டது. பிபிசியின் செல்லப்பிள்ளை மற்றும் இயற்கை ஆய்வாளரான சர் டேவிட் அட்டன்பரோவின் அழகான விரிவுரையால் (அவருக்கு வயது 93. தழுதழுத்தாலும் அற்புதமான குரலுக்கு சொந்தக்காரர். அதேபோல் தமிழில் அவருக்கு யார் மாற்றுக் குரல் கொடுக்கிறார்? எனத் தெரியவில்லை. அவ்வளவு பொருத்தமான தேர்வு. அந்த இரண்டு குரல்களின் ரசிகன் நான்) தொகுக்கப்பட்ட இந்நிகழ்ச்சி மறுஒளிபரப்பு செய்யப்பட்டதுதான் என்றாலும் நிகழ்ச்சியின் நடுவில் விரைவில் என விளம்பரப்படுத்தப்பட்ட செவன் வேர்ல்ட்ஸ் ஒன் பிளானட் என்ற நிகழ்ச்சியைப் பற்றிய நான்கு நிமிட முன்னோட்டம் கவர்ந்திழுத்தது. ஹான்ஸ் சிம்மர் என்பவரின் இசையில் பிரபல பாடகி ஷியாவின் குரலில் ஒரு பாடலுடன் அந்த முன்னோட்டம் அழகாக அமைக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பப்படும் என்ற ஆர்வத்தையும் தூண்டியது.

ரஜினி 2021ல் கட்சி தொடங்குவாராம்

Hemavandhana tamil.oneindia.com  :   சென்னை: எப்படியும் இந்த நவம்பரில் ரஜினி கட்சியை ஆரம்பித்துவிடுவார்கள் என்றார்கள்.. ஆனால், 2021


பிப்ரவரியில்தான் கட்சி ஆரம்பிக்க வாய்ப்பு உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. 

அரசியல் வருகை குறித்த கால் நூற்றாண்டு எதிர்பார்ப்பு இருந்தாலும், சலித்து ஓய்ந்த ரஜினி ரசிகர்களுக்கு ஓரளவு நம்பிக்கை மிச்சம் மீதி ஒட்டிக் கொண்டிருப்பதை மறுக்க முடியாது.. அந்த நம்பிக்கையில்தான் "இப்போது இல்லை என்றால், எப்போதுமே இல்லை" என்று வெளிப்படையாகவே அதிருப்தியை வெளிப்படுத்தி போஸ்டர்களை தமிழகம் முழுவதும் அடித்து ஒட்டினர். R ஆனால், இந்த போஸ்டர்களை பார்த்து டென்ஷன் ஆகிவிட்ட ரஜினி தரப்பு, ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம், இனி இப்படியெல்லாம் போஸ்டர் அடித்து ஒட்டக்கூடாது, தலைமை சொல்லும்வரை அமைதி காக்கவும் என்று தெரிவித்தது.. ஆனால், ரஜினி ரசிகர்கள், இதையும் போஸ்டர் அடித்து ஒட்டி, இனிமேல் அடிக்க மாட்டோம் என்றனர். 

லண்டன் தமிழ்.. கணவர் மனைவியையும் மூன்றே வயதான மகனையும் கொலை செய்து விட்டு தானும் தற்கொலை

Thambirajah Jeyabalan : · தமிழ் மக்கள் மத்தியில் தொடரும் கொலைகளும்

தற்கொலைகளும்!! லண்டனில் மனைவியயையும் மகனையும் கொலை செய்தவர் தானும் தற்கொலை!!! இன்று அதிகாலை ஒரு மணியளவில் தனது மனைவியயையும் மகனையும் கொலை செய்தவர் தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். லண்டன் பிரன்பேர்ட்டில் உள்ள க்ளேபொன்ட் லேன் இல் இக்கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாரிஸில் ஐவர் படுகொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவம் இடம்பெற்று 72 மணி நேரத்தில் லண்டனில் இத்துயரம் நிகழ்ந்துள்ளது. கோவிட்-19 ற்குப் பிறகு லண்டனில் தமிழ் மக்கள் மத்தியில் இடம்பெற்ற இரண்டாவது சம்பவம் இதுவாகும். (மலேசியா குடும்பம்? )
இரவு பொலிசார் பலாத்காரமாக சம்பவம் இடம்பெற்ற குடும்பத்தினரின் வீட்டு கதவை உடைத்து உள்ளே நுழைந்த போது நடுத்தர வயது மிக்க பெண்ணும் நடுத்தர வயதான ஆணும் மூன்று வயதேயான கைக் குழந்தையும் இரத்த வெள்ளத்தில் கிடந்தனர். மருத்துவப் பிரிவினர் அவர்களைக் காப்பாற்ற பல முயற்சிகளை எடுத்தனர். மருத்துவவண்டிகள் ஸ்தலத்துக்கு விரைந்து அனுப்பப்பட்டது. வான்வெளி மருத்துவ வாகனமும் தருவிக்கப்பட்டது.

யோகி ஆதித்யநாத் யார், எப்படிப்பட்டவர்? நரகத்திற்கு இணையாக நிர்வகிக்கப்படும் உத்தரப்பிரதேச மாநில CM

Balasubramaniyan S : யோகி ஆதித்யநாத் யார், எப்படிப்பட்டவர்? உத்தரப்பிரதேச

முதல்வர் யோகி ஆதித்யநாத் எப்படிப்பட்டவர் என்பது குறித்து அக்டோபர் மூன்றாம் தேதியன்று தி டெலகிராப் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. முதுகுத் தண்டை சில்லிடவைக்கும் அந்தக் கட்டுரையிலிருந்து சில பகுதிகள்: 1. யோகி ஆதித்யநாத்தின் சொந்தப் பெயர் அஜய் மோகன் பிஸ்ட். கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டு முறை இந்தியாவின் சிறந்த முதல்வராக சில கருத்துக் கணிப்புகளில் தேர்வுசெய்யப்பட்டவர்.
2. நரகத்திற்கு இணையாக நிர்வகிக்கப்படும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்பாக 19 வயதுப் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கடுமையாகத் தாக்கப்பட்டார். ஆனால், மாநில அரசு அதிகாரிகள் அது பொய்ச் செய்தி என்றார்கள். ஆனால், இரண்டு வாரங்கள் வெவ்வேறு மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற அந்தப் பெண் முடிவில் தில்லியில் உயிரிழந்தார்.
3. அந்தப் பெண்ணின் உடல், அவரது சொந்த ஊரான ஹாத்ரஸ் என்ற இடத்திற்குக் கொண்டுவரப்பட்டு மரக்குவியல் மீது போடப்பட்டு எரிக்கப்பட்டது. குடும்பத்தினர் இறுதிச் சடங்குகளைச் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

செவ்வாய், 6 அக்டோபர், 2020

திமுக குறைந்தது 180 இடங்களில் போட்டியிட வேண்டும்.. கூட்டணியை வலுவாக அமைத்தால் 234 தொகுதிகளிலும் வெற்றி சாத்தியம்

Chozha Rajan : திமுக  தலைவர் தளபதி பார்வைக்கு.. திமுக தலைவர்

ஸ்டாலினை சந்திப்பதற்கு முன் தங்களைச் சந்திக்க வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்களுக்கும்... கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் உதயநிதி மற்றும் அன்பில் பொய்யாமொழி தரப்பில் நிர்பந்தம் இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு பரவுகிறது... இது நல்லதல்ல. இதில் உண்மை இருக்காது என்று நம்புகிறேன்... பொருளாளராக எ.வ.வேலு வரப்போகிறார்... என்றும் அவருக்கு துர்கா ஸ்டாலின் ஆதரவு இருப்பதாகவும் ஒரு வதந்தி இப்படித்தான் பரவியது... துர்கா சொல்வதையும், சபரீசன் சொல்வதையும் ஸ்டாலின் கேட்கிறார் என்று பரவிய வதந்தி பொய் என்றாகியது.

இப்போது உதயநிதி கூட்டணி விஷயத்தில் அதிகமாக மூக்கை நுழைப்பதாக கூறுகிறார்கள்... அதீதமான நம்பிக்கை பள்ளத்தில் தள்ளிவிடும் அபாயம் இருக்கிறது...     1996 தேர்தலில் ரஜினி இல்லாவிட்டாலும், மூப்பனார் இல்லாவிட்டாலும் ஜெயலலிதாவுக்கு எதிரான அலை திமுகவுக்கு வெற்றியைக் கொடுத்திருக்கும். ஆனால், கலைஞர் கூட்டணியை அமைத்தார்... சிறிய விஷயங்களைக்கூட நாம் தவறவிடக்கூடாது...  அதேசமயம் எதார்த்த நிலையை அனுசரித்து திமுக குறைந்தது 180 இடங்களில் போட்டியிட கூட்டணிக் கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கூட்டணியை வலுவாக அமைக்கும்பட்சத்தில் 234 தொகுதிகளிலும் வெற்றி என்பது சாத்தியமாகும். ஒற்றுமை முக்கியம். அதுவும் பாஜகவுக்கு எதிரானவர்களை இணைத்து செயல்படுவதில் மிகவும் கவனம் தேவை... 2006 முதல் 2011 வரை பாமக கொடுத்த குடைச்சல் கொஞ்சநஞ்சமல்ல என்பதை நினைவுபடுத்துகிறேன்... கம்யூனிஸ்ட்டுகளும் முஸ்லிம்களும் ரொம்பவும் முக்கியம்..

JusticeForKalaivani திண்டுக்கல் 12 வயது சிறுமிக்கு கரண்ட் கொடுத்து பாலியல் கொலை செய்த +2 மாணவன் விடுதலை

Maveeran Manikandan : JusticeForKalaivani திண்டுக்கல்லில் 12 வயது சிறுமிக்கு கரண்ட் கொடுத்து பாலியல் கொலை செய்த +2 மாணவன் வழக்கு* 


 திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்துள்ள குரும்பபட்டியை சேர்ந்தவர் வெங்கடாசலம். முடி திருத்தும் தொழில் செய்துவருகிறார். இவரது மனைவி லட்சுமி . இவர்களுக்கு 12 வயது நிரம்பிய மகள் இருந்தார் . இந்நிலையில் சென்ற ஆண்டு ஏப்ரல் 15 அன்று கணவன் மனைவி இரண்டு பேரும் வேலைக்கு சென்று விட்ட நிலையில் வீட்டில் தனியாக இருந்த 12 வயது சிறுமியை எதிர் வீட்டில் உள்ள கிருபானந்தன் ( 19 ) பாலியல் பலாத்காரம் செய்து மின்சாரம் பாய்ச்சி படுகொலை செய்தார் . இதுதொடர்பாக வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருபானந்தனை கைது செய்தனர் இவ்வழக்கு திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது . இக்கொலை தொடர்பாக 35 சாட்சிகளிடம் விசாரணை செய்யப்பட்டது இவ்வழக்கை விசாரித்த நீதிபதி புருவேஷாத்தமன் நேற்று தீர்ப்பு வழங்கினார் . 

விசிகவின் ‘ஆதிதிராவிடராய்... சமூகவலையில் நுட்பமான விவாதங்கள்

Kathiravan Mayavan : · ■ ஆதி திராவிடராய் இணைவோம், ■ அருந்ததியராய் ஒன்றிணைவோம், ■ பள்ளராக ஒன்றிணைவோம். ■ உடையராய் ஒன்றிணைவோம் ■ நாடாராய் ஒன்றிணைவோம். ■ வன்னிய குல சத்திரியர்களாக இணைவோம், ■முக்குலோத்தோராக இணைவோம், ■ யாதவராய் இணைவோம் . .... இன்னும் எப்படியெல்லாம் தனி தனியாக ஜாதியாக ஒன்றிணைவது என்பதை (தலித் கட்சி)களிடம் இருந்து தமிழகம் பாடம் கற்று கொள்ள வேண்டும். 

Mani Mathivannan : விசிக பொதுச் செயலாளர் துவக்கிய ஆதி திராவிடராய் ஒருங்கிணைவோம் குறித்து பல்வேறு மட்டங்களிலும் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. 
அவர்களது கட்சிக்கு ஒரு நிலை எடுக்க உரிமை இருக்கிறது. அந்நிலை அவர்களைத் தவிர மற்றவர்களையும் பாதிக்குமெனில் நாம் அந்நிலைபாடு குறித்த நமது பார்வையை முன்வைக்க வேண்டியதாகி விடுகிறது. ரவிக்குமாரின் ஆதரவாளர்களால் ஆதி திராவிடர்களாய்த் தானே ஒன்றிணையச் சொன்னார் அதில் என்ன பிழை இருக்கிறது என ஒரு வாதம் முன் வைக்கப் படுகிறது. 
ஆதி திராவிடர் என்பது ஒரு குறிப்பிட்ட சாதியையோ அதன் சார்பான சாதிகளையோ குறிப்பிடும் பெயரல்ல. அரசாணை பிறப்பிக்கப் படும் போதே சென்னை மாகாணத்திலுள்ள தமிழ்ப் பேசும் பகுதிகளில் அன்றைய பட்டியல் சாதிகள் அனைத்தையும் குறிப்பிடும் பெயராகவே அது குறிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே இன்றும் பட்டியல் சாதியினர் நலன்களைப் பேணும் துறைக்கு ஆதிதிராவிடர் நலத்துறை என்ற பெயர் வழங்கப் படுகிறது. அதை ஒட்டியே சென்னையைச் சுற்றியுள்ள வட மாவட்டங்களில் தொன்னூறு சதவீதத்துக்கும் மேற்பட்ட தலித் மக்கள் ஆதி திராவிடர் எனற பெயரில் கணக்கு எடுக்கப் பட்டுள்ளனர். 

சென்னை மகளிர் பேரணி.. உபி சம்பவம் எவ்வகையில் வேறு பட்டது?

Rajendran Srirangam : · மானமிகு கனிமொழி மனிஷாவிற்கு நீதி கேட்டு நடத்திய
மகளிர் பேரணியில்.... ஒரு மாதக் குழந்தையுடன் தாய் தந்தை..!! இது சாதாரண  நிகழ்வு இல்லை ..கண்ணீ்ர் .    இது வெறும் புகைப்படம் இல்லை கதறல் அய்யோ.....பெண் குழந்தைகளை எப்படி பாதுகாப்பேன் என்று நாளும் தவிக்கும்... தாய்மார்களின் குமுறல்.....கோபம்..... கொந்தளிப்பு..    நேற்றைய மகளிர் பேரணி வட இந்தியாவில் பெண்களுக்கு எதிராக... அரங்கேறிய அட்டூழியங்கள்  அனைத்தும்  தமிழகத்திற்குள் வந்து விட்டது.. 

காரணம் தமிழகம் டில்லியின் கையில்..!   அய்யோ.அடிக்காதீங்கண்ணா வலிக்குது.. ட்ரெஸ் கழட்டிடுறேன்என ஓலமிட்டபெண் இருநூறுக்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்க்கையை நாசமாக்கிய பொள்ளாட்சி வழக்கு என்ன ஆனது? நீதி எங்கே??    பெரிய மனிதர்கள் கிட்ட நெருக்கமா இருந்தா வேகமாக முன்னேறலாம்...   கல்லூரியில் படிக்கின்ற பெண்களை படுக்கைக்கு அழைத்த பேராசிரியை....!!!   இதை விட ஒரு கொடுமை உண்டா??? மதுரை வழக்கு என்னஆனது?    நீதிஎங்கே?    இந்த இலட்சணத்தில் தான் பெண்களின் பாதுகாப்பு உள்ளது.இந்தக் கொடுமையை கண்டு குமுறி எழுந்தக் கூட்டம் தான்... ..

இனியும் இழப்பதற்கு ஏதேனும் பாக்கியிருக்கிறதா தமிழர்களே?


 LR Jagadheesan
: இனியும் இழப்பதற்கு ஏதேனும் பாக்கியிருக்கிறதா தமிழர்களே? தமிழுக்கு இந்திய அரசின் செம்மொழி அங்கீகாரத்தை பெற்றுக்கொடுத்தவரைப்பார்த்து “திராவிட வந்தேறி” என்று வாய்கூசாமல் வசைபாடிய தமிழ்தேசிய தறுதலைகளில் ஒரே ஒருவன் கூட இந்தப்பெரிய அநியாயத்துக்கு எதிராக இதுவரை பொங்கவில்லையே ஏன்? ஜெயலலிதாவின் உடனுறை தோழி சசிகலா நடராஜன் வீசிய கூலிக்கு குரைத்தே பழகிய தமிழ்தேசிய குக்கல்களுக்கு கூலி வாங்காமல் ஒருநாளும் கூவத்தெரியாது. தங்கள் பிள்ளைகளின் வாழ்வுரிமையான தமிழக அரசுவேலை முதல் மருத்துவப்படிப்பு வரை அத்தனையையும் பறித்து அடுத்தவனுக்கு தாரைவார்க்கும் ஒரு தரங்கெட்ட அடிமை அரசை தட்டிக்கேட்க துப்புகெட்ட தமிழ்தேசியம் ஈழத்தில் என்றோ விழுந்த இழவுக்கு இந்தியாவில் இன்னும் நியாயம் கேட்டு நொட்டுவார்கள். தூத்தெறி. நீங்களும் உங்கள் கூலிக்கு மாரடிக்கும் கேவலமான அரசியலும்.

BBC : துருக்கியை புறக்கணிக்க சௌதி அரசுக்கு குவியும் நெருக்கடி - இழப்பு யாருக்கு?

முகமது ஷாஹித் - ிபிசி செய்தியாளர்
சல்மான்

அ.தி.மு.க. யார் வசம்? டெல்லியில் நடந்த ரகசிய ஆலோசனை!

 ops

nakkeeran :ஜெயலலிதா, சசிகலா இல்லாமல் கடந்த நான்கு வருடமாக அ.தி.மு.க. இயங்கியது. சசிகலா மீண்டும் அரசியல் அரங்கத்திற்கு வருகிறார். மீண்டும் பழைய அ.தி.மு.க.வாக சசிகலாவுடன் இணைந்து பயணிக்குமா? அல்லது ஒரு புதிய ஓபிஎஸ் தலைமையை அ.தி.மு.க. ஏற்குமா? என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது. திங்கட்கிழமை செயற்குழு தொடர்பாக சனிக்கிழமையே விவாதங்கள் தொடங்கிவிட்டன.அ.தி.மு.க.வின் தலைமைக் கழகத்திற்கு சேர்ந்து வந்த ஓ.பி.எஸ்.சும், இ.பி.எஸ்.சும் செயற்குழுவில் எதைப்பற்றி விவாதிக்கலாம் என அமர்ந்து பேசினார்கள். செயற்குழுவில் இருவருக்கும் ஒத்தகருத்துள்ள தீர்மானங்களை நிறைவேற்றுவது எப்படி என அந்த தீர்மானங்களை எழுதும் பொறுப்பில் உள்ள ரவி பெர்னார்ட்டுடன் விவாதித்தார்கள். ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்த விவாதத்திற்கு பிறகு இருவரும் கலைந்து சென்றார்கள்.

சின்டெக்ஸ் தொட்டி ஃபிராடு ! மறைக்கும் ஊடகங்கள்! இன்று 6000 கோடி கடனுடன் fraud

RS Prabhu  :எத்தனையோ பிம்பங்கள் மிகக் கவனமாக கட்டமைக்கப்பட்டு புழக்கத்தில் விடப்படுகின்றன. அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள்,

"மாற்று" நிபுணர்கள், நேர்மையான ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் என பலரது campaign-கள் கவனமாக வடிவமைக்கப்பட்டு யாருக்கும் ஐயமே ஏற்படாத அளவுக்கு தூக்கி நிறுத்துப்படுகின்றன. அத்தகைய பிரச்சார உத்தியில், MBA போன்ற மேலாண்மைப் படிப்புகளும் மிக முக்கியமான ஒன்றாகக் கட்டமைக்கப்பட்டன. எம்பிஏ படித்தவர்களை வேலைக்கு எடுக்காவிட்டால் சந்தையில் போட்டி போட முடியாமல் அந்த நிறுவனம் இரத்தம் கக்கிச் சாகும் என்று சொல்லாததுதான் பாக்கி.
எங்கெங்கு திரும்பினும் மேலாண்மைக் கல்லூரிகள் வந்தன. எம்பிஏ-க்கள் நிறுவனங்களின் முக்கிய இடங்களைப் பிடித்துக்கொள்ள ஆரம்பித்தனர். பொருட்களின் தரம், விலை, சந்தையில் உள்ள வியாபாரிகளும் பொருளை வாங்கும் வாடிக்கையாளர்களும் சிந்திக்கக்கூடிய மனிதர்கள் என்பதை மறந்துவிட்டு உத்திகள் வகுக்கத் தொடங்கினர். பொருட்கள் தயாரிப்பில் கவனம் செலுத்துவதைவிட பவர்பாய்ன்ட் வில்லைகளில் பல்வேறு வார்த்தைகளைப் போட்டு உருட்டும் கலை மட்டுமே வளர்ந்தது. sintex-industries fraud link

ஆறுமுக நாவலரும் ராமலிங்க வள்ளலாரும் ... பேராசிரியர் சுப வீரபாண்டியன்

சுப வீ  : வள்ளலார் குறித்து நாம் பேசும்போது, யாழ்ப்பாணத்தின் ஆறுமுக நாவலர் குறித்தும் சேர்த்தே பேசுவதுதான் சரியானதாக இருக்கும். இரண்டு பேரும் ஒத்த வயதுள்ளவர்கள். ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள். 

1822இல் நாவலரும், 1823இல் வள்ளலாரும் பிறந்தனர். நாவலருக்கு ஓராண்டு பின்னே பிறந்து, அவருக்கு 5 ஆண்டுகள் முன்னே மறைந்தார் வள்ளலார். இருவரும் தமிழ் மொழி மீதும், தமிழ்ச் சமூகத்தின் மீதும் மாறாத பற்றுடையவர்கள் என்பதில் எவர் ஒருவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. 

இருவரும் சைவ மதத்தில் ஆழக் கால் ஊன்றி நின்றனர் என்பது இன்னொரு ஒப்புமை. ஆனால், வள்ளலாரின் இறுதிக் காலத்தில் அவரிடம் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. அதனை அவரே குறிப்பிட்டுள்ளார். 

 "சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும் வேதாந்தம், சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். அவற்றில் தெய்வத்தைப் பற்றி குழுக் குறியாக குறிக்கின்றதே அன்றி, புறங்கவியச் சொல்லவில்லை. அவ்வாறு பயிலுவோமேயானால் நமக்கு காலம் இல்லை. ஆதலால் அவற்றில் லக்ஷியம் வைக்க வேண்டாம். ஏனெனில் அவைகளில் - அவ்வச் சமய, மதங்களிலும் - அற்ப பிரயோஜனம் பெற்றுக்கொள்ளக் கூடுமேயல்லாது ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கையுண்மை என்னும் ஆன்மானுபவத்தை பெற்றுக் கொள்கிறதற்கு முடியாது. 

தி.மு.க. எம்.பி. கனிமொழி கைதாகி விடுவிப்பு

  dhinamalar : r : கவர்னர் மாளிகை, பேரணி, தி.மு.க. எம்.பி., கனிமொழி, கைதாகி, விடுதலை சென்னை: ஹத்ராஸ் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கனிமொழி தலைமையில் திமுக மகளிர் அணியினர் கவர்னர் மாளிகை நோக்கி . அவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் 19 வயது பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து அரசியலாக்கி வருகின்றனர். பல மாநிலங்களில் போராட்டம் நடக்கிறது. 

 இந்நிலையில் இன்று ஹத்ராஸ் சம்பவத்தை கண்டித்து தி.மு.க. எம்.பி.யும்,. மகளிர் அணியைச் சேர்ந்தவருமான கனிமொழி தலைமையில் கவர்னர் மாளிகை நோக்கி மெழுகு வர்த்தி ஏந்தி பேரணி சென்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் கனிமொழி கைது செய்யப்பட்டார்.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் வாகனத்தை செல்ல விடாமல் சாலையில் உட்கார்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து கனிமொழி விடுவிக்கப்பட்டார்.

8 மணி நேரம் 12 மணிநேரமாக்க முயற்சி! சுக்கு நூறாக்கப்படும் தொழிலாளர் நலச்சட்டங்கள்

பீட்டர் துரைராஜ் - aramonline.in: மத்திய பாஜக அரசு இருக்கிற தொழிலாளர்
நலச் சட்டங்களை தூக்கி குப்பையில் எறிந்துவிட்டு, புதிய தொழிலார் சட்ட மசோதாவை விவாதமின்றி, அவசர,அவசரமாக கொண்டு வந்து பாராளுமன்றத்தில் விவாதத்திற்கே வைக்காமல் நிறைவேற்றியுள்ளது.இதனால் இது நாள் வரை தொழிலாளர்கள் பெற்று வந்த உரிமைகளும்,பாதுகாப்பும் இல்லாமல் போகும் நிலை உருவாகியுள்ளது.

1880 களில் அமெரிக்கா தொடங்கி ஒவ்வொரு நாட்டிலும் நாளொன்றுக்கு 12 மணி நேரம், அல்லது 10 மணி நேரம் பணியாற்ற முடியாது என்று ரத்தம் சிந்தி, பல உயிர்களை இழந்து,போராடிப் பெற்றதே எட்டு மணி நேர வேலை என்பதாகும்! இதே போல நாளொன்றுக்கு எட்டு மணி நேர வேலை வேண்டும் என்று புதுச்சேரியில் இருந்த டெக்ஸ்டைல் மில் தொழிலாளர்கள் 1936-ல் போராடினார்கள். அப்போது இருந்த பிரஞ்சு அரசாங்கம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் பனிரெண்டு  தொழிலாளர்கள் மரித்தார்கள். முடிவில் ஆசியாக் கண்டத்திலேயே புதுச்சேரியில்தான் முதலில் எட்டு மணிநேர வேலை அமலானது.

திங்கள், 5 அக்டோபர், 2020

தி.மு.க திட்டமிட்டு நிறைவேற்றிய காடம்பாறை நீர் மின் உற்பத்தித் திட்டம்" .. தி.மு.க-வினருக்கே இது புதிதாகத் தோன்றலாம்.

தேவன் பலராமன்.  : வால்பாறை உச்சியில் உள்ள "நீரார் அணை"

கட்டப்பட்டது காமராஜரால். ஆனால் இதனால் தமிழகத்திற்கு யாதொரு பிரயோஜனமும் இல்லை. ஏனெனில் அணை மதகுகள் திறக்கப்பட்டதும் தண்ணீர் கேரள எல்லையைத் தொட்டுவிடும். இந்தத் தண்ணீர் தான் அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சிக்கான major source.
அதன்பின் ஆட்சிக்கு வந்த தி.மு.க-வின் பொதுப்பணித் துறை அமைச்சராக பதவியேற்ற கலைஞர் அவர்கள் அந்த அணைக்கு எதிர்ப்புறம் மலையைக் குடைந்து அந்த தண்ணீரை சோலையாறு அணைக்கு கொண்டு செல்ல திட்டம் தீட்டி அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடர்ந்தார். 20-அடிக்கு 20-அடி என்ற அளவில் "D" போன்ற அமைப்பில் 8.5 கி.மீட்டர் தூரத்துக்கு ஒரே நேர்கோட்டில் வெட்டப்பட்ட குகைக் கால்வாய் இது. பராமரிப்பு
பணிகளுக்காக இந்த குகைக்குள் முழு 8.5 கி.மீட்டருக்கும் இன்றும் டிராக்டரில் பயணிக்கிறார்கள்.
அடுத்து பேரறிஞர் மறைய முதல்வராக கலைஞர் பதவியேற்க, சாதிக்பாட்சா அவர்கள் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்து இத்திட்டத்தை முடித்து வைத்தார். கலைஞர் திறந்து வைத்தார். இந்த காலகட்டம் 1968 முதல் 1972 வரை ஆகும்.

வள்ளலார் புத்தகத்தை பதிப்பித்து வெளியிட்ட பெரியார் ! அக்டோபர் 5 - வள்ளலாரின் பிறந்த தினம் .

John Durai Asir Chelliah : · பெரியாரை சுற்றியிருந்த அனைவருக்கும் பெரும்
ஆச்சரியம் . ஏனெனில் முதன்முதலாக ஒரு
ஆன்மீகவாதியின் தத்துவங்களை முழுமனதோடு ஏற்றுக் கொண்டு அதை தன் செலவில் தனி புத்தகமாகவும் வெளியிட்டார் பெரியார். அவர் அருகில் இருந்த அத்தனை பேரும் அசந்து போனார்கள் பெரியாரிடம் ஏற்பட்ட இந்த மாற்றத்தை கண்டு. பெரியாரை இப்படி கவர்ந்த அந்த ஆன்மீகவாதி வள்ளலார். சாதி, வர்ணாசிரம முறைகளை கடுமையாக சாடி எழுதியிருந்தார் வள்ளலார்.
சமயத்தின் பேரால் பலி கொடுப்பதை கண்டித்தார்.
போலி சமயவாதிகளை தீவிரமாக எதிர்த்தார் .
இதையெல்லாம் படித்து பார்த்தவுடன் பெரியாரின் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக வள்ளலாரை நோக்கித் திரும்பியது
இன்னும் சிறிது அருகில் நெருங்கி சென்று வள்ளலார் கூறியவற்றை எல்லாம் கூர்ந்து கவனித்தார் பெரியார்.