Krishna Kumar L : இனிய பொன் நிலா கூட இளையராஜாவுக்கு சொந்தமில்லை
தான் இசையமைத்த பாடல்களை தன்னிடம் அனுமதி பெறாமல் பயன்படுத்தி இருப்பதாக குற்றம் சாட்டி,
‘குட் பேட் அக்லி’ படக்குழுவினரிடம் 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ் அனுப்ப இருப்பதாக சமீபத்தில் ஊடகங்களில் செய்திகள் வந்தன.
இளையராஜா இசையமைத்த பாடல்களுக்கு முழுமையான உரிமை அவரிடம் இல்லை என்று சொன்னால், இசைக்கடவுளின் பக்தர்கள் கோபித்துக் கொள்கிறார்கள்.
தமிழ்நாட்டில் அவ்வளவாக ஊடகங்கள் கண்டுக் கொள்ளாத சமீபத்திய தகவல் ஒன்று உண்டு. அதாவது இசைஞானியே தன் பாடலை பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தும், அவருக்கு அந்த உரிமை இல்லை என்று டெல்லி உயர்நீதி மன்றத்தில் இரண்டரை மாதங்களுக்கு முன்பு தீர்ப்பு வந்திருக்கிறது.
தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சமீபத்தில் ‘அகத்தியா’ என்றொரு திரைப்படத்தை வெளியிட்டிருந்தது. இளையராஜாவின் இளைய மகனான யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
சனி, 19 ஏப்ரல், 2025
இனிய பொன் நிலா இளையராஜாவுக்கு சொந்தமில்லை! HMV யோடு அவர் செய் ஒப்பந்தம் நீதிமன்றத்தில் அவரை தோற்கடித்திருக்கிறது
சட்டத்தை விட யாரும் பெரியவர்கள் அல்ல” : ஜக்தீப் தன்கர் கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
Kalaignar Seithigal - Lenin : ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.
இதில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒருமாதத்திற்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக குடியரசு தலைவர் 3 மாதத்திற்குள் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவால் இனி எந்த மசோதாக்களையும் ஆளுநர்களும், குடியரசு தலைவரும் கிடப்பில் வைத்திருக்க முடியாது. ஆளுநர்களின் அடாவடித்தனத்திற்கு உச்சநீதிமன்றம் முற்றுப்புள்ளிவைத்துள்ளது.
அமைச்சர் பொன்முடி மீது ஏனிந்த வெறுப்பு பிரசாரம்?
அமைச்சர் திரு பொன்முடியின் பேச்சை ஏன் இவ்வளவுது தூரம் வல்கரைஸ் பண்ணுகிறார்கள்?
அவர் பேசியது தவறுதான் . ஆனால் அது ஒரு பெரிய கிரிமினல் குற்றம் அல்லவே?
அவாள் பேசாத பேச்சுக்களா?
சங்கிகள் பேசாத பேச்சுக்களா?
ஏராளமான உதாரணங்களை கூறலாம்.
பல அரசியல்வாதிகள் இதை விட தரமற்ற பேச்சுக்களை பேசிய வரலாறுகள் எல்லாம் உண்டே?
பொட்டலம் பேசிய ர ராவுக்கு அதற்கு பரிசாக அமைச்சர் பதிவு கூட வழங்கப்பட்டதே?
அதைவிடவா சைவம் வைணவம் தீடடாயிடுத்து?
மெரினாவில் அஞ்சு ரூபாக்கு இது பத்து ரூபாக்கு இதுவென்றாலம் அப்துல்லாக்கள் பேசினார்களே?
அதைவிடவா இது தவறான பேச்சு?
நாடார்களின் வணிக சாம்ராஜ்யத்தை சீர்குலைத்த பாஜக
![]() |
Ragupathy R : நாடார்களின் வணிக சாம்ராஜ்யத்தையே சீர்குலைத்த பாஜக. இந்தி இசை இனிமே உங்க ஊர் பக்கம் வந்தா செருப்பால அடிச்சு விரட்டுங்க
தூத்துக்குடியில் சமையல் எண்ணெய் விற்பனையில் கொடி கட்டி கோலோச்சிய பிராண்டு நிறுவனம் கோல்டு வின்னர் நிறுவனம்!
காளீஸ்வரி (நாடார்) குடும்பத்தினருக்குரியது, என்பது உலகறிந்த உண்மை. 1993 களில் மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்த வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி என்கிற நிலைக்கு உயர்ந்தது.
இதே நேரத்தில் அதானியின் வில்மர் நிறுவனம் ஃபார்ச்சூன் என்ற பெயரில் சமையல் எண்ணெய் விற்பனையைத் துவங்கியது.
சரி இதற்கும் தூத்துக்குடி காளீஸ்வரி நாடார் குடும்பத்தினருக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் நினைக்கலாம்.
அதானியின் ஃபார்ச்சூன் சமையல் எண்ணெய் விற்பனைக்கு போட்டியாளராக இருந்த பெரு நிறுவனமாகத் திகழ்ந்தது நம்ம காளீஸ்வரி அண்ணாச்சி குடும்ப பிராண்ட்டான கோல்ட் வின்னர் நிறுவனம் தான்.
DMK கட்சி நிர்வாகிகளுக்கு சமூக வலைதள பயிற்சி: உதயநிதி அழைப்பு
hindutamil.in : சென்னை: சமூக வலைதள கருத்தியல் உரையாடல்களுக்காக நிர்வாகிகளுக்கு பயிற்சியளிக்க, மாவட்டத்துக்கு ஒரு துணை அமைப்பாளரை தேர்வு செய்ய விண்ணப்பிக்கும்படி இளைஞரணியினருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: கருத்தியல் உரையாடல், ஆக்கப்பூர்வமான விவாதம், அவதூறுகளை முறியடித்தல் என்று அரசியல் செயற்பாடுகள் நிகழும் களமாக சமூக வலைத்தளங்கள் இன்று உருவெடுத்துள்ளன.
கனிமொழி ஜப்பான் பயணம்.
minnambalam.com - Aara : திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி ஜப்பான் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
நேற்று (ஏப்ரல் 17) ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜப்பானுக்கான இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்த டின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.
இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக தளத்தில் பதிவேற்றியிருந்தார். Kanimozhi Japan visit why
அந்த நிகழ்வில் கனிமொழியோடு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, முன்னாள் மத்திய அமைச்சரும் நடிகருமான நெப்போலியன் உளிட்டோர் கலந்துகொண்டனர்.
வெள்ளி, 18 ஏப்ரல், 2025
"3 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழில் மருத்துவ பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது"- அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
Kalaignar Seithigal - Praveen : சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள A4 மருத்துவமனையை மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா,சுப்பிரமணியன் திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
அதன் விவரம் :
தமிழ் மொழியில் மருத்துவ பாடபுத்தங்கள் மொழிபெயர்ப்பு பட வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, "கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாகவே மருத்துவ துறை சார்ந்த புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கும் பணிகள் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சார்பாக இந்த பணிகள் நிறைவு பெற்றுள்ளது. முதலமைச்சர் மூலமாக அந்த புத்தகங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
வியாழன், 17 ஏப்ரல், 2025
தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் 14,000 மாற்றுத்திறனாளிகள் கவுன்சிலராக நியமனம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
dinakaran.com - Neethimaan : சென்னை: தமிழக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம உள்ளாட்சி அமைப்புகளில் 14 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் நேரடியாக உறுப்பினர்களாக நியமனம் செய்யப்படுவதற்கான இரண்டு சட்டமுன்வடிவுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்தார்.
தற்போது நகர்ப்புற உள்ளாட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் 35 பேர் மட்டுமே மாற்றுத்திறனாளிகள் ஆவார்கள்.
ஆனால், இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, சுமார் 650 மாற்றுத் திறனாளிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளிலும்,
12,913 மாற்றுத்திறனாளிகள் கிராம பஞ்சாயத்துக்களிலும்,
388 மாற்றுத்திறனாளிகள் ஊராட்சி ஒன்றியங்களிலும், மாவட்ட ஊராட்சிகளில்
பதவியை பறித்த திமுக தலைமை : கடும் அப்செட்டில் பொன்முடி.. சட்டசபையில் ஆப்சென்ட்!
tamil.samayam.com - எழிலரசன்.டி : திமுகவின் சீனியர் அமைச்சர்களில் ஒருவராக இருப்பவர் பொன்முடி. விழுப்புரம் திமுகவில் கோலோச்சி வந்த இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு முக்கியம் வாய்ந்த துணை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
திமுக ஆட்சி அமைந்ததும் ஏற்கனவே அவர் வகித்த உயர்கல்வித் துறையே மீண்டும் வழங்கப்பட்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் பதவி இழந்தாலும் கூட,
உச்ச நீதிமன்றம் சென்று தடையாணை பெற்ற பிறகு உடனே அமைச்சர் பதவி வழங்கினார் ஸ்டாலின்.
அந்த அளவுக்கு தலைமையுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார்.
ஆனால், பொன்முடியின் பேச்சு பல சமயங்களில் சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது.
இலங்கை சுயமரியாதை இயக்கம் 1932ம் ஆண்டு கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது
ராதா மனோகர் : இலங்கை சுயமரியாதை இயக்கம் 1932ம் ஆண்டு கொழும்பில் (கொள்ளுபிட்டியில்) ஆரம்பிக்கப்பட்டது
இலங்கையில் சுயமரியாதை இயக்கம் ஆரம்பிக்கப் பட்ட வருடத்திலேயே,
தந்தை பெரியார் மாஸ்கோ பயணத்தின் வழியில் இலங்கைக்கும் வருகை தந்திருந்தார் .
பெரியாரின் வருகையை அறிந்த சுயமரியாதை அமைப்பாளர்கள் பெரியாருடனான கலந்துரையாடல் ஒன்றினை ஒழுங்கு செய்திருந்தனர்.
1932ம் ஆண்டு அக்டோபர் 17ம் திகதி இரவு 9.00 மணிக்கு கொள்ளுபிட்டி கீரின் பாத் பாதையிலுள்ள மகளிர் நட்புறவு மண்டபத் தில் இக் கலந்துரையாடல் ஒழுங் கு செய் யப் பட்டிருந்தது. இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட பெரியார் சாதியத்திற்கும் மூடநம்பிக்கைகளுக்கும் எதிரான நீண்ட சொற்பொழிவொன்றினை நிகழ்த்தினார்
இச்செய்திகள் எல்லாம் வரலாற்றில் மறக்கப்பட்ட அல்ல அல்ல மறைக்கப்பட்ட செய்திகளாகும்
இலங்கை திராவிடர் கழகம் 11.07.1948 இல் கொழும்பில் தொடங்கப்பட்டது
செவ்வாய், 15 ஏப்ரல், 2025
மாநில சுயாட்சி களத்தை முதல்வர் ஸ்டாலின் கவனமாக அதேசமயம் மிக துணிவோடு திறந்து விட்டுள்ளார்!
ராதா மனோகர் : தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாநில சுயாட்சி தீர்மானத்தை முன்மொழிந்த முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்
ஆற்றிய உரை ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருப்பு முனையாகத்தான் எனக்கு தோன்றுகிறது!
வெறும் தேர்தல் அரசியலை தாண்டி உபகண்ட மாநிலங்களின் ஒட்டு மொத்த நலனையும் கருத்தில் கொண்டு அளந்து அளந்து எடுத்து வைக்கப்பட்ட வாதங்கள் மிக பெறுமதி வாய்ந்தவை
எவராலும் இலகுவில் கடந்து போக முடியாத காத்திரம் நிரம்பிய மாநில சுயாட்சி களத்தை இதன் மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து விட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலினின் இந்த உரையை இந்திய ஒன்றிய மக்கள் மட்டுமல்லாது
முழு உலகிலும் உள்ள பல ராஜதந்திர மட்டங்கள் கவனமாக செவி மடுத்திருக்கும் என்பதில் எனக்கு துளி கூட சந்தேகம் கிடையாது!
12 ஆம் நூற்றாண்டு சிங்கள கற்பாறை! பௌத்தத்தை காப்பாற்றிய திராவிட மொழி என்ற பெருமை சிங்கள மொழிக்கு உண்டு
ராதா மனோகர் சிங்கள மொழியின் ஒரு ஆதார கல்வெட்டாக 12 ஆம் நூற்றாண்டு கற்பாறை!
இலங்கை பொலநறுவை என்ற இடத்தில்,
ஒரு நீண்ட கற்பாறை மீது சிங்கள மொழியில் பல செய்திகளை செதுக்கி வைத்திருக்கிறார்கள்
சிங்கள மொழியை கற்க விரும்பும் எவருக்கும் சரியான வழி காட்டியாக இந்த கல் புத்தகம் பேருதவியாக இருக்கும் என்று இந்த காணொளியில் சிங்கள மொழியில் கூறப்படுகிறது
இது மன்னர் நிசங்க மல்லாவின் (1187-1196) புகழ்பெற்ற படைப்புகளில் ஒன்றாகும், இதில் நிசங்க மன்னரின் ஆட்சி பற்றிய விபரங்களும்
அவர் இலங்கையின் அரசராக இருப்பதற்கான தகுதியை விவரிக்கிறது.
26'10 "அடி (8.2 மீட்டர்) நீளமும், 4'7" அடி (1.4 மீட்டர்) நீளமும் கொண்ட இந்த பாரிய கற்பாறை
மஹியங்கனா பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டது.
இப்பாறையில் 3 நெடுவரிசைகளில் எழுதப்பட்டுள்ளது
மொத்தமாக 7200 வரிகளில் 4300 க்கும் மேற்பட்ட சொற்களை கொண்டுள்ளது.
. இந்திய இலங்கை அரசமைப்பு சட்டங்கள்
![]() |
![]() |
Kulitalai Mano: அரசியலமைப்பு சாசன குழு என்பது 22குழுக்கள்
அதில் ஒன்றான வரைவுக் குழுவில்,
அல்லாடி கோபால்சாமி
மிட்டர் முன்ஷி ராவ்
பீமாராவ் அம்பேத்கார்
சதாயுல்லா கேதான்
என சடடம் தெரிந்த மேதைகள் பலர் இருந்தனர்.
ஆனாலும் இந்த மேதைகள் எழுதிய அரசியல் சட்டம் அல்ல இது!
1935ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஆங்கிலேய அரசின் அரசியல் சாசனத்தை காப்பி அடித்தும்
உலக நாடுகள் பலவற்றின் சிறந்த சட்டங்களை சேர்த்தும்
இன்று இருக்கும் அரசியல் சட்டம் எழுதப்பட்டது
இந்த ஒட்டு போட்ட சட்டையை இத்தனை தையலர்கள் தைத்தும் கடைசியில் அணிந்த போதுதான் பாரதமாதாவிற்கு கோட் சூட் தைத்திருக்கிறார்கள் என்பதே தெரிந்தது
டாக்டர் பெஞ்சமின் ( மலையகம்) கந்தன் கருனையில் படுகொலை செய்யப்பட்டு 27 வருடங்கள் ....(13.04.1987
![]() |
மீராபாரதி வ.க.செ : டாக்டர் பெஞ்சமின் ( மலையகம்) அவர்கள் கந்தன் கருனையில் படுகொலை செய்யப்பட்டு 27 வருடங்கள் முடிந்து விட்டன....(13.04.1987) அதன் நினைவாக... தற்செயலாக திகதியைக் கண்டபோது....
இவர் அட்டன் ஹைலன்ஸ் கல்லுரியின் எனக்கு சிரேஸ்ட மாணவராக 80களில் கல்வி கற்றவர்.
பின் அப்பா ஈபிஆர்எல்எவ் உடன் வேலை செய்தபோது மீண்டும் அறிமுகமானார். ஆனால் விரைவில் அவரை இழந்தோம்.....
குறிப்புக்கு நன்றி இளங்கோ.
மீராபாரதி வ.க.செ : தமிழ்ப் பெண்புலியும், என்/எங்கள் அனுபவங்களும்...
http://tinyurl.com/aztn99p
"நிரோமியின் தாயார் இந்திய வம்சாவளியினராய் இருந்தததால் நிரோமியின் தாயை, தகப்பனின் உயர்சாதி சமூகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாதே இருக்கின்றது.
மாநில சுயாட்சி என்பது மாநில நலன் மட்டுமல்ல. இந்திய நலனும் சார்ந்ததும் தான். Surya Xavier!
![]() |
Surya Xavier : *மாநில சுயாட்சி! -ஒரு சிறு வரலாற்றுக் குறிப்பு!.
* இந்தியா என்பது தேசமல்ல. பல தேசங்களின் ஒன்றியம் தான்!.
* இந்தியா என்றால் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை என்பார்கள்.
1947 ஆகஸ்ட்-15 இந்தியா விடுதலையடையும் போது காஷ்மீரும், கன்னியாகுமரியும் இந்தியாவோடு இல்லை என்பதே வரலாறு.
* கன்னியாகுமரி திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டிலும், காஷ்மீர் ஹரிசிங் மன்னனால் அங்குள்ள சமஸ்தானத்திலும் இருந்தது.
* வெள்ளையர்கள் வருகைக்கு முன்பு இந்தியா என்ற இன்றைய நிலப்பரப்பு முழுமையும் எவராலும் ஆளப்படவில்லை.
* கி.மு.5- 6 நூற்றாண்டுகளில் ஆட்சி செய்த மகதப் பேரரசு தொடங்கி,
மௌரியப் பேரரசு
தமிழ்நாடு மாநில சுயாட்சி தீர்மானம் சட்டமன்றத்திற்கு இன்று வருகிறது
tamil.news18.com = l akshmanan G : 5 நாட்களுக்கு பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடுகிறது. சட்டப்பேரவையில் மாநில சுயாட்சி தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொண்டு வருகிறார்.
தமிழ்நாட்டுக்கான நிதிஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்துவருவதாக திமுக கூட்டணிக் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும், அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
சட்டப்பேரவையில் கடந்த 25-ஆம் தேதி பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில சுயாட்சியை உறுதிசெய்து மாநில உரிமைகளை நிலைநாட்டக் கூடிய வகையில், விரைவில் புதிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தெரிவித்திருந்தார்.
ஆங்கில பாடபுத்தகங்களுக்கு இந்தியில் பெயர்கள் - வடநாட்டு இந்தி வியாதி - NCERT naming English textbooks in Hindi
![]() |
மாலை மலர் : மத்திய அரசின் பள்ளிக் கல்வியில் இந்தி திணிப்பை மேற்கொண்டு வருவதாக விமர்சனங்கள் எழுந்து வரும் சூழலில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) புதிய சர்சையில் சிக்கி உள்ளது. NCERT பாடமுறையின் கீழ் தமிழநாடு உட்பட நாடு முழுவதும் பல்வேறு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் புதிய NCERT பதிப்பு புத்தகங்களில், ஆங்கில வழி பாடப் புத்தகங்களுக்கும் இந்தி தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
முந்தைய ஆண்டுகளில் ஹனிசக்கிள் மற்றும் ஹனி கோம்ப் என்று பெயரிடப்பட்ட ஆறு மற்றும் ஏழாம் வகுப்புகளுக்கான புத்தகங்கள் இந்த முறை பூர்வி என்று பெயரிடப்பட்டுள்ளன. பூர்வி என்ற இந்தி வார்த்தைக்கு கிழக்கு என்று பொருள்.
திங்கள், 14 ஏப்ரல், 2025
ரூ.13,500 கோடி மோசடி: வைர வியாபாரி மெஹுல் சோக்ஸி பெல்ஜியத்தில் கைது
BBC tamil : இந்தியாவை விட்டு தப்பியோடிய வைர வியாபாரி மெஹுல் சோக்ஸி, பெல்ஜியம் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சிபிஐ வேண்டுகோளின் பேரில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அகில இந்திய வானொலி தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை தொழிலதிபர் மெஹுல் சோக்ஸி மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகளை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி நிறுவனம் இன்று வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,500 கோடி ரூபாய் மோசடி செய்ததாக நீரவ் மோதி மற்றும் அவரது உறவினர் மெஹுல் சோக்ஸி மீது குற்றம் சாட்டப்பட்டது.
ஞாயிறு, 13 ஏப்ரல், 2025
ஆளுநர் நிறுத்தி வைத்த 10 மசோதாக்களும் சட்டமானது.. தமிழ்நாடு அரசிதழில் வெளியீடு
tamil.oneindia.com - Mani Singh S : சென்னை: தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களை கிடப்பில் போட்டு, குடியரசுத்தலைவருக்கு ஆளுநர் ஆர் என் ரவி அனுப்பியது தவறானது என்று கூறிய உச்ச நீதிமன்றம், கிடப்பில் இருந்த 10 மசோதாக்களையும் நிறைவேற்றி உத்தரவிட்டது.
இந்த நிலையில், ஆளுநர் ஆர் என் ரவி நிறுத்தி வைத்த 10 மசோதாக்களும் சட்டமானதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
10 மசோதாக்களும் சட்டமானதால் துணைவேந்தர் நியமன அதிகாரம் மாநில அரசின் வசமானது.