இதுகுறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:
மாநிலம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடை, ரேஷன் கடை மற்றும் அரசு பஸ்களில் வசூலாகும் தொகையில், 100, 50 ரூபாய் நோட்டுகளை சேகரிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அதற்கு மாற்றாக கொடுக்கப்படும், 500,1,000 ரூபாய் நோட்டுகள் சம்பந்தப்பட்ட துறையினர் மூலம், வங்கியில் செலுத்த அறி வுறுத்தப்பட்டது. இதனால், கோடிக் கணக்கில், 100 ரூபாய் நோட்டுகள் கைமாறியது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதும், ஒரு நாளைக்கு, அரசு பஸ்களில், 20 கோடி ரூபாய் வரை வசூலாகும். இந்த தொகையில், 100, 50 ரூபாய் நோட்டுகளை பிரித்து, அ.தி.மு.க., வினரிடம் வழங்கப்பட்டது.
அவர்கள், அதற்கு பதிலாக, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை கொடுத்தனர். நேற்றிரவு வரை, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டதால், இதை வாய்ப்பாக பயன்படுத்தி வாங்கிச் சென்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர். தினமலர்.காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக