ஆந்திர
இளம்பெண் கடத்தி வரப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் திடீர்
திருப்பம் ஏற்பட்டுள்ளது. திருச்சியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர்தான்,
சேலத்தில் இருந்து கடத்தி வந்தது விசாரணையில் தற்போது தெரியவந்துள்ளது.
ஆந்திர
மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் அமீர்பேட் பகுதியில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட்
நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஷாலினி (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது)
என்பவரை, சேலத்தை சேர்ந்த ஆஷா என்பவர் சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி,
கடந்த 28ம் தேதி சேலத்திற்கு வரவழைத்துள்ளார்.பின்னர் அங்கு
அவர் 3 பேரை அறிமுகப்படுத்தி, அவர்கள் சினிமாவில் நடிக்க வாய்ப்பு
தருவார்கள் என்று கூறி, அவர்களிடம் ஒப்படைத்துள்ளார். அந்த 3 பேரும்
ஷாலினியை காரில் திருச்சிக்கு அழைத்து வந்து, கருமண்டபம் நியூ செல்வநகரில்
உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்துள்ளனர். அங்கு ஏற்கனவே
ஒரு பெண் இருந்துள்ளார்.அவர்களிடமிருந்து
ஷாலினி தப்பி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். போலீசார் அந்த பகுதி
முழுவதும் தேடியும், ஷாலினியால் அந்த வீட்டை அடையாளம் காட்ட முடியவில்லை.
இதையடுத்து ஆஷாவின் செல்போன் நம்பரை வைத்து, தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில்
போலீசார் மடக்கி பிடித்தனர். அவரது உதவியுடன் நியூ செல்வா நகரில் உள்ள
வீட்டையும் போலீசார் கண்டுபிடித்தனர்.மேலும் அங்கிருந்த சேலம்
மாவட்டம் வாழப்பாடி, பெருமாள்புரத்தை சேர்ந்த கவிதா (20), திருப்பூர்,
அங்கேரி பாளையம், கோகுல தெரு பிரபு (31), சேலம், வலையப்பட்டி, பெரு மாள்
பாளையம் சக்திவேல் (34), மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த முகம்மதுசபீதுல் (30)
ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த
நிலையில் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில்
திருச்சியைச் சேர்ந்த அதிமுக சேர்மன் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது
தெரியவந்துள்ளது. திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியைச் சேர்ந்த ஆளுங்கட்சி
சேர்மன் ஒருவருக்கும் இந்த பலாத்கார சம்பவத்தில் தொடர்பு இருப்பது
தெரியவந்துள்ளது. நக்கீரன்.com ஜே.டி.ஆர்.
சனி, 1 ஜூன், 2013
சீனிவாசன் BCCI பதவி விலக கடும் நிபந்தனைகள் விதிக்கிறார் ! யாருக்குதான் மனம் வரும் ?

tamil.oneindia.in
சுகாஷ் ஏமாற்றிவிட்டான்! நடிகை லீனா அப்பாவியாம் ? Rolls Roys ரொம்ப இஷ்டமாம்

ஜெகன்மோகனின் 34 கோடி வங்கி டெபாசிட் முடக்கம் ! .300 கோடிக்கும் அதிகமான ஜெகன் சொத்துக்கள் முடக்கம்
தாயாளு அம்மையாரை நீதிமன்றத்திற்கு நேரில் ஆஜாராக வேண்டும் என்று ஏன் அழைக்கிறார்கள்?

கலைஞரிடம், அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் தயாளு அம்மாள் சாட்சியம் அளிக்க நேரில் வரவேண்டும் என சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், பொதுவாக நீதிமன்ற உத்தரவுகளைப் பற்றி நான் எப்போதும் கருத்து தெரிவிப்பதில்லை. இந்த வழக்கைப் பொறுத்தவரை எனது துணைவியார் தயாளு அம்மாளுக்கு உடல்நிலை சரியில்லை என்பது தமிழகம் முழுவதும் அறிந்த செய்தி. அவர் சிகிச்சை பெற்று வருவதற்கான மருத்துவ சான்றிதழ்கள் அனைத்தும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நீதிபதிக்கு முன்னால் இந்த விவரங்கள் நேரில் எடுத்துரைக்கப்பட்டபோதே மத்திய அரசுக்கு சொந்தமான ஜிப்மர் மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் வந்து பரிசோதனை செய்து அறிக்கை அளிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. சிபிஐ தரப்பு இதற்கு ஒப்புதல் அளித்த நிலையில், சிபிஐ நீதிபதி தற்போது நேரில் வரவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க என்ன காரணம் என்று தெரியவில்லை. இந்த உத்தரவே இறுதியானதல்ல என்பதால், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து வழக்கறிஞர்களுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும். இதற்கு மேலும் தயாளு அம்மாள் நேரில் வந்து சாட்சியம் அளிக்க வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டு, அதனால் அவருடைய தற்போதைய உடல்நிலைக்கு மேலும் ஏதாவது பாதிப்பு ஏற்படுமேயானால், அதற்கு யார் பொறுப்பேற்றுக்கொள்வது. இவ்வாறு கூறியுள்ளார்
தமிழ்நாட்டில் ஒரே மாதத்தில் 51 கொலைகள்
இந்த
மே மாதத்தில் மட்டும் தமிழ்நாட்டில் நடைபெற்ற கொலைகள், அதுவும் ஏடுகளில்
வெளிவந்த கொலைகள் மாத்திரம் எத்தனை தெரியுமா?. குடியாத்தத்தில் நகைக்கடை
ஊழியர் கொலை – ஒன்றரை லட்சம் ரூபாய் கொள்ளை. பனப்பாக்கத்தில் தந்தையை
அடித்துக் கொன்ற மகன். கூடுவாஞ்சேரி அருகே வாலிபர் சுபாஷ் ஓட ஓட விரட்டி
வெட்டிக் கொலை. கொடுங்கையூரில் ஆட்டோ டிரைவர் சரவணன் வெட்டிக் கொலை. சென்னை
புதுப்பேட்டையில் வேன் டிரைவர் ரமேஷ் கொலை. சோழவரம் அருகே தலை துண்டித்து
வாலிபர் கொலை. திருப்பெரும்புதூர் அருகே புரட்சி பாரதம் கட்சிப் பிரமுகர்
ராமு கழுத்தை அறுத்துக் கொலை. தாராபுரத்தில் காதல் மனைவியைக் கொன்ற வாலிபர்
ரமேஷ்.
வாலிபர் எரித்து கொலை ஜெயங்கொண்டம்
அருகே மகளின் கள்ளக்காதலன் பழனிச்சாமி கொலை. திருப்பூரில் மின்சாரம்
பாய்ச்சி மனைவி செல்வி கொலை. செங்குன்றம் அருகே வாலிபர் எரித்துக் கொலை.
கூடுவாஞ்சேரி அருகே கட்டிடத் தொழிலாளி சம்பத் அடித்துக் கொலை. பூந்தமல்லி
அருகே கழுத்தை இறுக்கி வாலிபர் கொலை. கோடம்பாக்கத்தில் லட்சுமி என்ற பெண்
கொலை. சென்னை ஆதம்பாக்கத்தில் டிராவல்ஸ் நடத்திய பெண் உஷாராணி கொலை. புது
வண்ணாரப்பேட்டையில் ரவுடி சுரேஷ் வெட்டிக்கொலை. மாதவரம் போதை மறுவாழ்வு
மையத்தில் சிகிச்சை பெற்ற வியாபாரி கோபால் அடித்துக் கொலை. கடையநல்லூர்
அருகே மாணவர் மதன் வகுப்பறையில் கொலை.
கோடிகள் புரளும் கிரிக்கெட் வாரியம்: சீனிவாச மர்ம புராணம்
ஏ சி முத்தையா
சீனிவாசன் கிரிக்கெட் சங்கத்தில் நுழைவதை 146 உறுப்பினர்களில் 118 பேர் எதிர்த்ததாகவும் முத்தையா அவருக்கு உறுதியாக உதவியதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு உள்ளே நுழைந்த சீனிவாசன் தனது செல்வாக்கை வளர்த்துக் கொண்டு ஒரு கட்டத்தில் முத்தையாவை வீழ்த்தி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தை கைப்பற்றியதன் மூலம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்குள் காலடி எடுத்து வைத்தார். இவையெல்லாம் தெருவோர கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள் போடும் சண்டை அல்ல. அமுத சுரபி போல அள்ளித்தரும் கிரிக்கெட் எனும் மாபெரும் வர்த்தகத்தை கைப்பற்றும் சாம்ராஜ்ஜியப் போர்!
ஜக்மோகன் டால்மியா (இப்போதைய முதமைச்சர் மம்தா பானர்ஜியுடன்)
இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சி. 10 ஆண்டுகளில் காணாத

ஆடிப் போய்க் கிடக்கிறது இந்தியப் பொருளாதாரம். கடந்த ஜனவரி - மார்ச் காலாண்டில் வெறும் 4.8 சத வளர்ச்சியை மட்டுமே கண்டுள்ளது. இதன் மூலம் கடந்த பத்தாண்டுகளில் 2012- 2013 ல் மட்டும்தான் 5 சதவீத வளர்ச்சியைக் கூட எட்டாமல் போயுள்ளது இந்தியா.அசாதாரண பணவீக்கம், நிலையற்ற வர்த்தகம், நம்பிக்கையற்ற வர்த்தக சூழல், முதலீட்டில் சரிவு, ஏற்றுமதி வீழ்ச்சி, மேற்கத்திய நாடுகள் அளிக்கும் வாய்ப்புகள் முடங்கியது போன்றவையே இதற்கு காரணமாக அமைந்துள்ளன. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில் இந்த வீழ்ச்சி பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இத்தனைக்கும் கடந்த ஆண்டு இந்தியப் பொருளாதாரத்தை மேலும் சந்தைமயப்படுத்தும் வகையில் புதிய சீர்த்திருத்தங்களை மன்மோகன் சிங் அரசு அறிவித்திருந்தது. கடந்த மாதம்தான் ஸ்டான்டார்ட் அன்ட் பூர் நிறுவனம், இந்தியாவின் கடன் திறன் ரேட்டிங் மைனஸுக்குப் போய்விட்டதையும், மீண்டும் சரியான ட்ராக்குக்கு வர மூன்றில் ஒரு பகுதி வாய்ப்பே இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம். ஒரு காலத்தில் ஆசியாவின் வலிமை வாய்ந்த பொருளாதார சக்தி என்று வர்ணிக்கப்பட்ட இந்தியா இப்படி வீழ்ச்சி கண்டிருப்பது சர்வதேச அளவில் உற்று நோக்கப்படுகிறது
tamil.oneindia.in
சாந்தி MLA: தே.மு.தி.க.-வில் விஜயகாந்துக்கே நடித்து காட்ட கூடிய இருவர் உள்ளார்கள்

தமது கட்சிக்காரர்கள் பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்து விடுவதாக மர்மநபர்கள் போன் மூலம் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர் என்கிறார். அத்துடன், தாம் முதல்வரை சந்தித்ததை அடுத்து கட்சிப் பிரமுகர்கள், சென்னையில் பிரியாணி விருந்து வைத்து கொண்டாடி உள்ளனர் என்றும் கூறியுள்ளார். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ. சாந்தி, கடந்த 29-ம் தேதி முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார். அதன்பிறகு, தற்போது அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அவர் என்ன சொல்கிறார்? “கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்சியில் நான் சந்திக்காத அவமானங்கள் இல்லை. நாமக்கல் மாவட்டத்தில், எந்த விழாவிற்கும் கட்சியினர் என்னை அழைக்கவில்லை. இதற்கு நாமக்கல் மாவட்டச் செயலரும் திருச்செங்கோடு எம்.எல்.ஏ.வாகவுமான சம்பத்குமார், மாநிலப் பொருளாளர் இளங்கோவன் ஆகியோர்தான் காரணம். ஜாதி அடிப்படையில் என்னை ஓரங்கட்ட பார்த்தனர். இது குறித்து கட்சி தலைவர் விஜயகாந்திடம் புகார் தெரிவிக்க முயன்ற போது, மாநில நிர்வாகி சந்திரகுமார் அனுமதி கொடுக்கவில்லை. “விரைவில், பிரச்னையை தீர்த்து வைக்கிறேன்” என்று சமாளிப்பதிலேயே குறியாக இருந்தார். விஜயகாந்த் மனைவி பிரேமலதாவிடம் புகார் தெரிவித்தேன். “யாரும் வராவிட்டாலும், மகளிர் அணி ஆர்ப்பாட்டத்தில், நீங்கள் தனியாக சென்று கலந்து கொள்ளுங்கள்” என அவர் கூறினார்.
வெள்ளி, 31 மே, 2013
நடிகை லீனா மரியாபால் கார்களை திருடி விற்பது தெரியவந்துள்ளது...12 சொகுசு கார்கள்

ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதி வரும் வெள்ளிக் கிழமைக்குள் அவரை சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டார். சென்னை போலீசார் லீனாவை கைது செய்த போது அவரது வீட்டில் 12க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த கார்கள் எப்படி வாங்கப்பட்டது என்று போலீசார் லீனாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த கார்கள் அனைத்தும் திருடப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து லீனாவிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்
பத்தாம் வகுப்பு தேர்வில் வரலாறு காணாத தேர்ச்சி

வகுப்பு தேர்வில் அதிக அளவில் மாணவ, மாணவிகள் முதல் 3 இடங்களை பிடித்து சாதனை படைத்துள்ளனர். முதலிடத்தில் 9 பேரும், இரண்டாம் இடத்தை 52 பேரும், 3ம் இடத்தை 137 பேரும் பெற்றுள்ளனர். தமிழகத்தில் 1978-ம் ஆண்டு எஸ்எஸ்எல்சி என்ற முறை மாற்றப்பட்டு பத்தாம் வகுப்புக்கு பொதுத் தேர்வு முறை அறிமுகம் செய்யப்பட்டது. பத்தாம் வகுப்புதான் பள்ளி இறுதித் தேர்வாக உள்ளது. தமிழகத்தில் பள்ளிக் கல்வியை பொருத்தவரை மாநில பாட திட்டம், மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓஎஸ்எல்சி என்று 4 கல்வி வாரியங்கள் செயல்பட்டு வந்தன. மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே தமிழை முதன்மை பாடமாக கொண்டு படித்தனர். அவர்கள் எல்லாருமே அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படித்துவந்தனர்.
பிரபலமான எழுத்தாளன் எல்லாம் பெரிய எழுத்தாளன் அல்ல , மதிமாறன்
எழுத்தாளனை மதிக்காத சமூகம் உருப்படாது என்று எழுத்தாளர்கள் ஜெயமோகனும், மனுஷ்யபுத்திரனும் வெறுப்பாக எழுதி வருகிறார்களே?
-தமிழன்வேலு.
வாசகர்கள் எழுத்தாளர்களின் தகுதிக்கு
மீறிதான் அவர்களை கொண்டாடுகிறார்கள். ‘செவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல
மாட்டான்’ என்பதுபோல், ‘பிரபலமானவர்கள்தான் அறிவாளிகள்’ என்கிற
மூடத்தனத்தின் தொடர்ச்சியாக, பிரபலமானவர்களையே எழுத்தளார்களாக மதிக்கிற
மனோபாவமும் சமூகத்தில் நிரம்பி இருக்கிறது. அதனாலேயே எழுதுபவர்கள்
எப்படியாவது பிரபலமாகிவிடவேண்டும் என்ற நோக்கத்திற்காகவே எழுதுகிறார்கள்.
அதுபற்றியெல்லாம் ‘பிரபல’ எழுத்தாளர்கள் பேச மாட்டார்கள். பிரபலமாக இருப்பதினாலேயே எழுத்தாளர்களாக இருப்பவர்களாயிற்றே.
உண்மையில் எழுத்தாளனை எழுத்தாளன்தான் மதிப்பதில்லை.
ஒரு எழுத்தாளன் இன்னொரு எழுத்தாளனை
பார்த்து ‘கால்கள் சூம்பிப்போன நொண்டி நாய்’ என்று எழுதினான். தாலியறுத்து
பிழைக்கிற பொறுக்கிக் கூட மாற்றுத் திறனாளியை இப்படி இழிவாக சொல்லமாட்டான்.
ஆனால் இப்படி எழுதியவர், பெரிய எழுத்தாளனாக கொண்டாடப்படுபவர்.
நடிகை லீனா மரியாபால் கைது - வாக்குமூலம்
சென்னை
வங்கியில் ரூ.19 கோடி மோசடியில் போலீஸ் தேடும் சுகாஷ் சந்திரசேகரின்
காதலியும் நடிகையுமான லீனா மரியாபால் டெல்லியில் கைது செய்யப்பட்டு இன்று
காலை ரெயிலில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். கமிஷனர் அலுவலகத்தில்
அவருக்கு காலையில் இட்லி சாம்பார் வழங்கப்பட்டது. அதன்பிறகு காலை 9 மணிக்கு
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். லீனாவுக்கு ஆங்கிலம், மலையாளம் மட்டுமே தெரியும். அவர் சுகாசுடன் எப்படி நட்பு ஏற்பட்டது என்பது பற்றி, ’’கேரளாவில்
பிறந்த எனக்கு சினிமா நடிகையாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. 5 மலையாளப்
படங்களில் நடித்தேன். சுகாஷ் கேரளாவில் தங்கி இருந்தபோது நான் நடித்த
மலையாளப் படங்களை பார்த்துவிட்டு என்னை போனில் தொடர்பு கொண்டார். தான் ஒரு
சினிமா டைரக்டர் என்று சொல்லி அடிக்கடி என்னிடம் பேசினார்.தமிழ்,
இந்தியில் சினிமா முன்னணி பிரமுகர்களை தனக்கு தெரியும் என்று கூறினார்.
அவர்களிடம் எனக்கு சான்ஸ் வாங்கித் தருவதாக கூறினார். அதன்படி சென்னையில்
முன்னணி டான்ஸ் மாஸ்டர் ஒருவரை சந்தித்தோம்.
தயாளு அம்மாள் சிபிஐ நீதிமன்றத்தில் ஆசாரக உத்தரவிட்டுள்ளது.
டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் நேரில் ஆஜராகி சாட்சியமளிக்க விலக்கு
அளிக்கக் கோரி திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் தாக்கல்
செய்த மனுவை சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. ஜூலை 8-ந்
தேதிக்குள் தயாளு ஆஜராகவும் சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கியதற்கு கைமாறாக கலைஞர் டிவிக்கு பணம் கொடுக்கபட்டது என்பது சிபிஐ வழக்கு. இந்த வழக்கில் கலைஞர் டிவியின் கனிமொழி, ஷரத்குமார் ஆகியோர் சிறைக்கு சென்று ஜாமினில் வெளியே வந்துள்ளனர். இதே வழக்கில் கலைஞர் டிவியின் இயக்குநர்களில் ஒருவரான தயாளு அம்மாளை சிபிஐ அரசு தரப்பு சாட்சியமாக்கியுள்ளது.
ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கியதற்கு கைமாறாக கலைஞர் டிவிக்கு பணம் கொடுக்கபட்டது என்பது சிபிஐ வழக்கு. இந்த வழக்கில் கலைஞர் டிவியின் கனிமொழி, ஷரத்குமார் ஆகியோர் சிறைக்கு சென்று ஜாமினில் வெளியே வந்துள்ளனர். இதே வழக்கில் கலைஞர் டிவியின் இயக்குநர்களில் ஒருவரான தயாளு அம்மாளை சிபிஐ அரசு தரப்பு சாட்சியமாக்கியுள்ளது.
Last words of legendary actress Savitri
Do you know the last words of legendary actress Savitri? It was in
Mysore when she learnt that she was betrayed by the wife of a Kannada
actor. It seems that Savitri in her hay days gave a box of jewelry to
that lady and asked her to put in safe with her.
With the venom spilled by time, Savitri lost all the glory, property
and health and got ready to act in any small role offered to her. That
was only for her maintenance. She got addicted to boozing out of
depression. Then she went to Mysore for a shooting. She was given a room
in a lodge. She recalled about the jewelry given to that lady and
called her. When she came to her, she asked for the box. The lady
replied, "When did you give to me?" Then Savitri asked, "Didn't I give
you?". That's all. Those are her last words. She was collapsed and later
she was taken to a general hospital as private hospital people denied
to admit her.
Knowing that actress Lakshmi went to that hospital and reprimanded
the hospital people for keeping Savitri on the floor for not finding any
bed. Finally she was given a bed. She didn't talk at all. But she
didn't die as well. She was in coma for 1 and half years and then passed
away. That's the story of a legendary actress' final moments.
சின்னத்திரை கண்ணழகி நீபாவுக்கு இன்று திருமணம்

tamil.oneindia.in
போங்கடி நீங்களும் உங்க காதலும்

நீங்களும் உங்க காதலும்‘. இதுபற்றி இயக்குனரும், ஹீரோவுமான ராமகிருஷ்ணன் கூறியதாவது: கம்ப்யூட்டர் யுகத்தில் உலகம் சுருங்கிவிட்டது. எந்த நாட்டிலோ இருக்கும் பெண் வேறு எந்த நாட்டிலோ இருக்கும் வாலிபனை காதலிக்கிறார். எது காதல், எது நட்பு, அதற்கான எல்லை என்ன என்பதை கணிக்க முடியாத அளவுக்கு குழப்பம் மேலோங்கி இருக்கிறது. காதல் என்ற பெயரில் எத்தனையோ பெண்கள் ஆண்களை ஏமாற்றுகிறார்கள். அதுபோல் எவ்வளவோ பெண்களை வாலிபர்கள் ஏமாற்றுகிறார்கள். இருவரின் துரோகம் பற்றிய கதையாக இப்படத்தின் ஸ்கிரிப்ட் அமைந்துள்ளது. ஹீரோவாக நான் நடிக்கிறேன். ‘மனம் கொத்தி பறவை‘ படத்தில் நடித்த ஆத்மியா மற்றும் காருண்யா ஹீரோயின். ஜெயபிரகாஷ், இமான் அண்ணாச்சி, சாமிநாதன், சென்ராயன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். எம்.வி.பன்னீர் செல்வம் ஒளிப்பதிவு. கண்ணன் இசை. தயாரிப்பு கே.ஆர்.கண்ணன்.
Radisson hotel vikram agarwal எங்கே? சி.பி.சி.ஐ.டி.,யில் ஆஜராகவில்லை! போலீஸ் தயார்

அகர்வாலின், முன்ஜாமின் மனு, தள்ளுபடியான நிலையில், நேற்று இரவு வரை, சி.பி.சி.ஐ,டி., அலுவலகத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சி.பி.சி.ஐ.டி., தெரிவித்துள்ளது.ஐ.பி.எல்., சூதாட்ட விவகாரத்தில் தினம் ஒரு திருப்பம் நிகழ்ந்து வருகிறது. சென்னை, சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் கைது செய்யப்பட்ட,சூதாட்ட புரோக்கர்கள், 10 பேரில், கிட்டி(எ) உத்தம் ஜெயின் மற்றும், ராஜா ஆகியோர், காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டனர்.இதில், அயனாவரத்தில் உள்ள கிட்டி வீட்டில் சோதனையிட்ட போலீசார், பல ஆவணங்களை கைப்பற்றினர். தொடர்ந்து, விசாரணை நடத்தப்பட்ட நிலையில், கிட்டி மற்றும் ராஜா, இருவரும், நேற்று, போலீஸ் காவல் முடிந்து, சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் கோரிக்கையை ஏற்று, கிட்டியின் போலீஸ் காவல் மட்டும், வரும், மூன்றாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. ராஜா, மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து, கிட்டியை, சி.பி.சி.ஐ.டி., அலுவலகத் திற்கு மீண்டும் போலீசார் அழைத்து வந்தனர்.
அன்புமணி அப்செட் அவசரமாக டெல்லி உதவியை நாடுகிறார்
A Dalit woman shows her damaged belongings at Kattayantheru area in
Marakkanam, where six houses belonging to Dalits were set ablaze after a
violent clash on April 25, 2013. Photo: T. Singaravelou
பா.ம.க., மீது, தமிழக அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளை தடுக்க, மத்திய அரசின் உதவியை, அக்கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி நாடியுள்ளார்.ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்திக்க, டில்லி சென்றுள்ள அன்புமணி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை, நேற்று முன்தினம் சந்தித்தார். 30 நிமிடங்கள் நீடித்த இச்சந்திப்பின் போது, பா.ம.க., மீது வீண் பழி சுமத்தி, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக, ஜனாதிபதியிடம் அவர் தெரிவித்ததோடு, மனு ஒன்றையும் அளித்துள்ளார்.
மனுவில், மரக்காணம் சம்பவம் தொடர்பாக, பா.ம.க.,வின் நிலை, விவரிக்கப்பட்டு உள்ளதாக, அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. பா.ம.க., மீது வீண் பழி சுமத்த வேண்டும் என்ற நோக்கில், பொது சொத்துகளின் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். டெல்லி என்ன வாஷிங்டன் சென்றாலும் செய்தது முழு அடாவடி. பெட்ரோல் குண்டு எரிவது, பேருந்துகளுக்கு தீ வைப்பது போன்றவை தீவிரவாதிகள் செய்யும் செயல். அம்மா மட்டும் அல்ல எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும் இவர்களை பல்லை பிடுங்கவே நடவடிக்கை எடுக்கும்
Selam: Honor Killing அருந்ததிய பெண் திருமணம் முடித்த அடுத்த நாள் கௌரவ கொலை
சேலம்: சேலத்தில் வேறு, வேறு சாதியைச் சேர்ந்தவர்கள்
காதலித்து திருமணம் செய்து கொண்டதால், திருமணம் நடந்த மறுநாளே மணப்பெண்
கொலை செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம், மல்லூரை அடுத்த வாணியம்பாடி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர்
20 வயது பிரியங்கா. வாணியம்பாடியை அடுத்த குலாளர் தெருவை சேர்ந்தவர்
மூர்த்தி (30). பிரியங்கா சேலம் சக்தி கைலாஷ் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம்
2ஆம் ஆண்டு படித்து வந்தார். மூர்த்தி கட்டிட மேஸ்திரியாக வேலை
பார்க்கிறார். இருவருக்குமிடையே காதல் மலர்ந்து கடந்த சில ஆண்டுகளாக ஒருவரை
ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.
இருவர் வீட்டிலும் திருமணத்திற்கு எதிர்ப்பு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று காலை கஞ்சமலை சித்தர் கோவிலில் இருவரும்
பெற்றோர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணம் முடிந்த
பின் இருவரும் ஜோடியாக மூர்த்தியின் வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள்.
தன்னை எதிர்த்து மகன் காதல் திருமணம் செய்து கொண்டு வந்திருப்பதை
ஏற்றுக்கொள்ள முடியாத மூர்த்தியின் தந்தை, அதேப் பகுதியை சேர்ந்த ரவுடிகள்
தர்மலிங்கம் மற்றும் மோகன்குமாரிடம் 50 ஆயிரம் பணத்தை கொடுத்து இருவரையும்
பிரிக்க சொல்லி இருக்கிறார்.
இதைத் தொடர்ந்து ரவுடிகள் இருவரும்
நேற்று இரவே பிரியங்காவை வீட்டில் இருந்து கடத்தி வந்து வாணியம்பாடி
ஏரியின் அருகே இருந்த கிணற்றில் கொலை செய்து போட்டுவிட்டு
சென்றிருக்கிறார்கள். இன்று காலை கிணற்றில் தண்ணீர் எடுக்க வந்தவர்கள்
அதில் உடல் மிதப்பதை பார்த்துவிட்டு போலீசில் புகார் தெரிவித்தனர்.
சம்பவ
இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிரியங்காவின் உடலை கைப்பற்றி பிரேத
பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
Plus 2 வில் 1,129 மதிப்பெண் பெற்றவர் நூறுநாள் கூலி வேலைக்கு செல்கிறார்

பெற்றோர்களால் முடியாது' என்பதை உணர்ந்து, தன் தாயோடு 100 நாள் திட்டத்தின்கீழ் கூலி வேலைக்கு போய்க்கொண்டிருகிறார். அந்த மாணவியின் பெயர் காயத்ரி. அவர், நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் - ஆனங்கூர் அருகே உள்ள சின்னமருதூர் கிராமம் அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர். ப்ளஸ் டூ தேர்வில் பெற்ற மதிப்பெண்கள்: தமிழ் 179, ஆங்கிலம் 164, கணிதம் 197, வேதியல் 198, இயற்பியல் 192, உயிரியல் 199 மொத்த மதிப்பெண் 1,129. இவரைச் சந்திக்க அந்தக் கிராமத்துக்குச் சென்றேன்.
வியாழன், 30 மே, 2013
குடித்துவிட்டு காரோட்டிய EMPEE distilleries கொலைகார முதலாளி
குடித்துக் கொண்டு கார் ஓட்டி 3 குழந்தைகள் உட்பட 5 பேரை படுகாயப்படுத்திய EMPEE குழு முதலாளி எம் பி புருஷோத்தமனின் மகன் ஷாஜி புருஷோத்தமனின் முன் பிணை மனுவை எதிர்த்து மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சென்னை செயலாளர் மில்ட்டன் எதிர் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த விபத்தில் காயமடைந்த முனிராஜ் என்ற 13 வயது சிறுவன் மருத்துவமனையில் உயிரிழந்தான். சம்பவ இடத்திலிருந்து ஷாஜி நண்பர்களுடன் தப்பி ஓடி விட்டிருக்கிறார். பின்னர் புருஷோத்தமன் குடும்பத்திற்கு சொந்தமான நெல்லூரில் உள்ள நாய்டுபேட்டையில் வளர்க்கப்படும் குதிரைகளை பராமரிக்கும் குமார் என்பவரை கார் ஓட்டியதாக போலீசில் சரணடைய செய்துள்ளனர் என்று இது தொடர்பாக இந்து நாளிதழ் நடத்திய புலனாய்வில் தெரிய வந்துள்ளது.
புதன் கிழமை அன்று ஷாஜியின் முன் பிணை மனு, உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சென்னை செயலாளர் மில்ட்டனை எதிர்மனுதாரராக இணைக்க மனு தாக்கல் அனுமதி கோரப்பட்டது. அதன் பேரில் வழக்கு வியாழக் கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
முன் பிணை மனுவினை தள்ளுபடி செய்யக் கோரியும், எதிர் மனுதாரராக இணைக்கக் கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கு இன்று விசாரணைக்கு வருகின்றது.
தகவல்
மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு,
சென்னை கிளை
டப்பிங் சீரியல்களால் தமிழ் கலாசாரம் பாதிக்க படுகிறதாம் ! ராதிகா சித்தி ரொம்பவும் கவலை படுகிறார்

ராதிகாவின் தொழிலாளி மற்றும் தமிழ் கலாச்சாரக் கவலை தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம் என்று அழைக்கப்படும் பெப்சியில் அங்கம் வகிக்கும் ஓட்டுநர்கள் சங்கம் இரு பிரிவாக செயல்பட்டு வந்தது. இவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் போட்டி சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பெப்சி நிர்வாகிகள் சிலரைத் தாக்கியதைக் கண்டித்து பெப்சியின் வேலை நிறுத்தம் நடைபெற்றது. இதனால் சினிமா மற்றும் டிவி தொடர்களின் படப்படிப்பு நின்று போனது. தற்போது வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டிருக்கிறது. வேலை நிறுத்தத்தின் போது 40-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்கள் மற்றும் 35-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டதாம். ஒரு தொழிற்சங்கம் தனது பாதுகாப்பு கருதி செய்யும் வேலை நிறுத்தம் மற்ற துறைகளில் நடந்தால் அது முதலாளிகளுக்கு பாதிப்பு என்று கருதப்படுவது போலவே இங்கும் கருதுகிறார்கள்.
Actress ராணி லீனா நீதிமன்றத்தில் கதறல்! 19 கோடியை முழுங்கிய காதலர்கள்

சூதாட்ட தரகர்களின் ரகசிய வார்த்தைகள்:ஹெலிகாப்டர் ,ராவன்,மக்கி ,மாடல் ,ரோட்று இன்னும் பல

போட்டியிலும் இல்லாத வகையில் ஐ.பி.எல். போட்டியில் மிகப்பெரிய அளவில் பெட்டிங் (பந்தயம்) நடைபெற்றுள்ளது. சூதாட்ட தரகர்கள் மூலம் நிழல் உலக தாதாக்கள் கிரிக்கெட் பெட்டிங்கில் கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதித்து உள்ளனர். இதில் வீரர்களை சிக்க வைத்து அதற்கு ஏற்ற வழியில் நடந்தால் சூதாட்டத்தில் லாபம் மிகப்பெரிய அளவில் கிடைக்கும். சூதாட்ட தரகர்கள் பெட்டிங் விவகாரத்தை பேசும்போது, ரகசிய வார்த்தைகளைத் தான் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. டெலிபோன் உரையாடல் பதிவு மூலம் ரகசிய வார்த்தைகள் தெரியவந்தது. மேலும் சூதாட்ட தரகர்களிடம் இருந்து கைப்பற்றிப்பட்ட ஐபேடு, டைரி மூலம் பல்வேறு ரகசிய வார்த்தைகள் இருந்தது. இந்திய அணி கேப்டன் டோனியை சூதாட்ட தரகர்கள் ஹெலிகாப்டர் என்ற ரகசிய வார்த்தைகள் மூலம் பரிமாறிக்கொண்டது தெரியவந்தது. கிறிஸ்கெய்லை ராவண் என்றும், மலிங்காவை மக்கி என்றும், யுவராஜ்சிங்கை மாடல் என்றும் ஸ்ரீசாந்தை ரோட்ரு என்றும் சூதாட்ட தரகர்கள் ரகசிய வார்த்தைகளால் குறிப்பிட்டு உள்ளனர்.
FEFSI பெப்சி உடைந்தது ராதிகா தலைமையில் சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் உதயம்

வாழ்வு சிதைந்து போன புலி உறுப்பினர்களுக்கு வாழ்வு கொடுத்த அரசாங்கம் ! ஒரு உண்மை கதை

இரண்டு முன்னாள் விடுதலை புலிப் போராளிகளின்
உண்மைக் கதை ஜெயவர்தினி, நாகநாதன் மற்றும் அவர்களின் மூன்று பிள்ளைகள்மூன்று தசாப்தங்களுக்கு மேலாக யுத்தத்தினால் ஒடுக்கப்பட்ட நாட்டில் பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்தவர்களை - விடுதலை புலி களை (எல்.ரீ.ரீ.ஈ) - தமது உதாரண புருஷர்களாக கொண்டு அநேகமான தமிழ் இளம் பெண்களும் மற்றும் பையன்களும் வளர்ந்து வந்தார்கள். இளம் ஜெயவர்தினியும் அதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை, மற்றும் அவளது மனதுக்கு வெறுப்பான பிரச்சாரங்களால் நஞ்சூட்டப்பட்டிருந்தது, அவள் செஞ்சோலை அனாதை இல்லத்தை சேர்ந்த ஒரு அனாதையாக இருந்தபடியால் அதைச் செய்வது எல்.ரீ.ரீ.ஈ யினருக்கு வெகு எளிதாக இருந்தது. ஜெயவர்தினி ஒரு போதும் ஒரு அன்பான அன்னையின்
அரவணைப்பையோ இன் கனிவையோ உணர்ந்ததில்லை. ஒரு குடும்பத்தின் உண்மையான அன்பு எப்படியிருக்கும் என்று எண்ணற்ற தடவைகள் அவள் கனவுகள் கண்டதுண்டு, தான் தனது பெற்றோர்களை இழந்திருக்காவிட்டால் தனக்கும் அந்த அன்பு கிடைத்திருக்கும் என்று அவளால் அதிசயப்பட மட்டுமே முடிந்தது. அவள் விரும்பியதெல்லாம் தன்னைப்பற்றி அக்கறை காட்டும் நபர்களுடனான ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கே. சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதற்கே அவள் எப்போதும் ஆசைப்பட்டாள். ஆனால் வாழ்க்கை அவளை ஒருபோதும் நியாயமான முறையில் நடத்தாததையே காணக்கூடியதாக இருந்தது. ஜெயவர்தினிக்கு தெரிந்த ஒரே குடும்பம் செஞ்சோலை அனாதை இல்லத்தை சேர்ந்த ஏனைய அனாதைகள், மற்றும் எல்.ரீ.ரீ.ஈ ஆகியோரை மட்டுமே. விஷமாக்கப்பட்ட மனது
மடிசார் மாமியிடம் பிராமணர் சங்கம் போர்க்கொடி
ஏற்பட்டாலும் யார் மனதும் புண்பட்டு சமூக அமைதி குலைந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் நீதிமன்றத்தில் தீர விசாரிக்கப்பட்டே திரைப்படங்கள் நிபந்தனைகளுடன் ரிலீஸ் செய்யப்படுகின்றன.
பாலியல் குற்றங்கள் பற்றிய போதிய கவனம் தேவை
அரசாங்கத்திற்கு பொருத்தமானதொன்று. ஒரு மருத்துவக் கல்லூரி மாணவி டில்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனைத் தொடர்ந்து அரசாங்கம்
பெண்களுக்கெதிரான மற்றும் பாலியல் தொடர்பான குற்றங்களில்

பொது மக்கள், மகளிர் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், சட்ட வல்லுனர்கள், நீதித்துறையை சார்ந்தவர்கள் என பல தரபட்டவர்களையும் விசாரித்து, கலந்தாலோசித்து தனக்கு கொடுக்கப்பட்ட கெடுவுக்கள் வர்மா குழு தன்னுடைய பரிந்துரையை அரசாங்கத்திற்கு வழங்கியது.
நீதிபதி வர்மா குழு வழங்கிய பரிந்துரைகளை மத்திய அரசாங்கம் ஏற்றுக்கொண்டு ஒரு அவசர சட்டத்தைக் கொண்டுவந்தது. பின்னர் அரசாங்கம் பாலியல் குற்றங்களுக்கு எதிரான ஒரு புதிய சட்ட மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து, அந்த சட்ட மசோதா பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுக்குப் பிறகு ஏப்ரல் 3 ஆம் தேதி, 2013 வருடம் The Criminal Law (Amendment) Act, 2013 என்ற சட்ட வடிவத்தை பெற்றது.
FEFSI இருந்து சின்னத்திரை டெக்னீஷியன்கள் விலகல் : டிவி தயாரிப்பாளர் சங்கம் முடிவு

சம்மேளனம் அமைக்கப்படும் என தமிழ்நாடு சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. சினிமா வாகன ஓட்டுநர்கள் சங்க உறுப்பினர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னை நேற்று விஸ்வரூபம் எடுத்ததால் சினிமா, சின்னத்திரை தொடர்களுக்கான படப்பிடிப்புகளை அவர்கள் புறக்கணித்தனர். இதையடுத்து படப்பிடிப்புகள் ரத்து ஆனது. இந்நிலையில் சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர பொதுக்குழு கூட்டம் இன்று காலை சென்னையில் நடந்தது.கூட்டத்துக்கு பிறகு சங்கத்தின் தலைவர் ராதிகா நிருபர்களிடம் கூறியது: தொழிலாளர்கள் தங்களுக்கு இடையே ஏற்படும் பிரச்னை காரணமாக டிவி படப்பிடிப்புகளை நிறுத்திவிடுகிறார்கள். இதனால் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எபிசோடுகளை குறித்த நேரத்தில் டிவி சேனல்களுக்கு தர முடிவதில்லை. எனவே பெப்சியிலிருந்து விலகி, கேரளா மற்றும் ஆந்திராவில் இருப்பதுபோல் சின்னத்திரை தொழிலாளர்களுக்காக தனி சம்மேளனம் தொடங்கப்படும். மொழி மாற்ற தொடர்களை சமீபகாலமாக டிவியில் ஒளிபரப்பி வருகிறார்கள். இதனால் தமிழ் கலைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே மொழி மாற்ற தொடர்களை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றினோம். இவ்வாறு ராதிகா கூறினார்.
புதன், 29 மே, 2013
ஜெயமோகன் Keyboard ! ஜெயலலிதா கட் அவுட் ! வினவுதம்பியின் கருத்து
சீமைச்சாராயத்திற்கும், அரவிந்த ‘சாமியின்’ ஆரோவில்
ஆன்மீக மணத்திற்கும் புகழ் பெற்ற பாண்டிச்சேரியில் இருந்து நமது
விசாரணையைத் துவங்க வேண்டியிருக்கிறது.
மலையாள சினிமா வேலையின் பொருட்டு பலநாட்களாக கேரளத்தில் இருக்கும் ஜெயமோகன் திருவனந்தபுரத்தில் விமானம் பிடித்து சென்னை வந்து, காரில் புதுச்சேரி செல்கிறார். அங்கே அவரது ‘வாசகர்’ சுனில் கிருஷ்ணனது திருமணம். அதில் பங்கேற்க எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், தேவதேவன் மற்றும் ஜெயமோகனது அபிமானிகள் ஒரு 25 பேரும் வருகின்றனர். ஜமா களை கட்டுகிறது.
முதலில் ஒன்றைச் சொல்லிவிடுவோம். ஜெயமோகனது ஊட்டி குருகுல கோடைக்கால முகாமிற்கு வருவதற்கே ஏகப்பட்ட கண்டிஷன்கள் உண்டு. அந்த நிபந்தனைகளை ஏற்றுச் செல்ல விரும்பும் அப்பிராணிகளின் நிலை குறித்து வினவிலும் விரிவாக எழுதியிருக்கிறோம். அது போல ஜெயமோகனது உள்வட்டத்தில் பங்கேற்றால்தான், நான்ஸ்டாப்பாக அவர் பேசும் (எல்லாம் ஏற்கனவே எழுதியவைதான்) கீறோபதேசத்தை (கீறோபதேசம் – கீறல் விழுந்த ரிக்கார்டு பிளேயர்) கேட்கும் பாக்கியம் உண்டு. சரி அண்ணனது உள்வட்டத்தில் பங்கேற்க என்ன தகுதி வேண்டும்?
ஒன்று அவர் எழுதிய ஏதாவதொன்றை படித்திருக்க வேண்டும். பிறகு அப்படி படித்ததை உள்ளொளி, தரிசனம், ஏகப்பட்ட திறப்பிற்கு காரணம் என்று எழுதியோ, பேசியோ அண்ணனது காதடியிலோ இல்லை கண்ணடியிலோ சமர்ப்பிக்க வேண்டும். அப்புறம் அண்ணன் அவற்றை இழுத்து இன்னும் கொஞ்சம் பேசி தீட்சை அளிப்பார். பிறகென்ன, அவரது வீட்டு நாயை கொஞ்சும் பாக்கியத்திலிருந்து அருகர் பாதையை அளந்து போகும் மகா பாக்கியம் வரை கண்டிப்பாக கிடைக்கும். ஆனாலும் கண்டிஷன்ஸ் அப்ளை உண்டு. அது, அன்னாரது கிச்சன் கேபினட்டில் நீடிக்க வேண்டுமென்றால் சாகும் வரை காதுகளையும், மூளையின் பதிவு நரம்புகளையும் பட்டா போட்டு எழுதிக்கொடுத்து விடவேண்டும்.
மலையாள சினிமா வேலையின் பொருட்டு பலநாட்களாக கேரளத்தில் இருக்கும் ஜெயமோகன் திருவனந்தபுரத்தில் விமானம் பிடித்து சென்னை வந்து, காரில் புதுச்சேரி செல்கிறார். அங்கே அவரது ‘வாசகர்’ சுனில் கிருஷ்ணனது திருமணம். அதில் பங்கேற்க எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், தேவதேவன் மற்றும் ஜெயமோகனது அபிமானிகள் ஒரு 25 பேரும் வருகின்றனர். ஜமா களை கட்டுகிறது.
முதலில் ஒன்றைச் சொல்லிவிடுவோம். ஜெயமோகனது ஊட்டி குருகுல கோடைக்கால முகாமிற்கு வருவதற்கே ஏகப்பட்ட கண்டிஷன்கள் உண்டு. அந்த நிபந்தனைகளை ஏற்றுச் செல்ல விரும்பும் அப்பிராணிகளின் நிலை குறித்து வினவிலும் விரிவாக எழுதியிருக்கிறோம். அது போல ஜெயமோகனது உள்வட்டத்தில் பங்கேற்றால்தான், நான்ஸ்டாப்பாக அவர் பேசும் (எல்லாம் ஏற்கனவே எழுதியவைதான்) கீறோபதேசத்தை (கீறோபதேசம் – கீறல் விழுந்த ரிக்கார்டு பிளேயர்) கேட்கும் பாக்கியம் உண்டு. சரி அண்ணனது உள்வட்டத்தில் பங்கேற்க என்ன தகுதி வேண்டும்?
ஒன்று அவர் எழுதிய ஏதாவதொன்றை படித்திருக்க வேண்டும். பிறகு அப்படி படித்ததை உள்ளொளி, தரிசனம், ஏகப்பட்ட திறப்பிற்கு காரணம் என்று எழுதியோ, பேசியோ அண்ணனது காதடியிலோ இல்லை கண்ணடியிலோ சமர்ப்பிக்க வேண்டும். அப்புறம் அண்ணன் அவற்றை இழுத்து இன்னும் கொஞ்சம் பேசி தீட்சை அளிப்பார். பிறகென்ன, அவரது வீட்டு நாயை கொஞ்சும் பாக்கியத்திலிருந்து அருகர் பாதையை அளந்து போகும் மகா பாக்கியம் வரை கண்டிப்பாக கிடைக்கும். ஆனாலும் கண்டிஷன்ஸ் அப்ளை உண்டு. அது, அன்னாரது கிச்சன் கேபினட்டில் நீடிக்க வேண்டுமென்றால் சாகும் வரை காதுகளையும், மூளையின் பதிவு நரம்புகளையும் பட்டா போட்டு எழுதிக்கொடுத்து விடவேண்டும்.
தேமுதிகாவின் MLA சாந்தி ராஜமாணிக்கம் ஜெயலலிதாவை சந்தித்தார் !

எம்.எல்.ஏ. சுந்தர்ராஜன், பேராவூரணி எம்.எல்.ஏ. அருண்பாண்டியன், திட்டக்குடி எம்.எல்.ஏ. தமிழழகன், ராதாபுரம் எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன், செங்கம் தொகுதி எம்.எல்.ஏ. சுரேஷ்குமார் ஆகிய 5 பேர் கடந்த 5 மாதத்திற்கு முன்பு கோட்டைக்கு சென்று முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு தெரிவித்ததுடன் தொகுதி பிரச்சினையை தீர்த்து வைக்குமாறு மனு கொடுத்தனர்.
இந்நிலையில்
சேர்ந்தமங்கலம் தொகுதி பெண் எம்.எல்.ஏ. சாந்தி ராஜமாணிக்கம் 29.05.2013
புதன்கிழமை ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். சுமார் 10 நிமிடம் தொகுதி
பிரச்சினை குறித்து பேசி விட்டு வந்தார்.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
முதல் - அமைச்சர் ஜெயலலிதாவை 29-ந்தேதி தலைமைச் செயலகத்தில் தே.மு.தி.க.வைச் சேர்ந்த நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சாந்தி சந்தித்து தொகுதி சார்ந்த பணிகள் தொடர்பாக மனு ஒன்றினை சமர்ப்பித்தார். இந்த சந்திப்பின்போது முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு சிறப்பாக மக்கள் பணியாற்றி இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்தமைக்காக தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
9 கோடி மோசடி: நடிகை லீனா மரியா பண்ணை வீட்டில் கைது!


ஈடுபட்டதாகக் கூறி பிரபல நடிகை லீனா மரியா பால் மற்றும் அவரது காதலனை டெல்லி மற்றும் சென்னை போலீசார் நேற்று கைது செய்தனர். டெல்லி பண்ணை வீட்டில் பதுங்கியிருந்த அவர்களிடமிருந்து ஆயுதங்கள், சொகுசு கார்கள் மற்றும் 81 விலையுயர்ந்த கடிகாரங்களை பறிமுதல் செய்தனர். தேசிய விருது பெற்ற ரெட் சில்லிஸ் மலையாளப் படத்தில் மோகன்லாலுடன் நடித்தவர் லீனா மரியா பால். மெட்ராஸ் கேப், ஹஸ்பன்ட்ஸ் இன் கோவா, கோப்ரா போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இவரது காதலன் பெயர் பாலாஜி. பல்வேறு மோசடிப் புகார்களில் இவர் ஈடுபட்டதாக வழக்குகள் உள்ளன. இவருடன் சேர்ந்து லீனாவும் மோசடியில் ஈடுபட்டதாக பிரிவு 420, 120பி, 406 ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக போலீசார் இருவரையும் தேடி வந்தனர். அப்போதுதான் இருவரும் டெல்லி அருகே பண்ணை வீட்டில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. 6 பேர் கொண்ட போலீஸ் குழு டெல்லி பண்ணை வீட்டை முற்றுகையிட்டு, லீனா - பாலாஜியை கைது செய்தது. அப்போது அவர்களிடம் 4 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. 9 சொகுசு கார்கள் மற்றும் 81 விலையுயர்ந்த கைகடிகாரங்களை கைப்பற்றினர். சென்னையில் ரூ 19 கோடியை மோசடி செய்ததாக பாலாஜி - லீனா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ 76 லட்சம் மோசடி செய்ததாக மற்றொரு வழக்கும் இவர்கள் இருவர் மீதும் உள்ளது.
tamil.oneindia.i
இங்கிலாந்தில் திருமணம் செய்த பாகிஸ்தானிய Lesbian Couples

இங்கிலாந்தில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். மேலும் அங்கேயே தங்குவதற்கு தங்களுக்கு அனுமதி தர வேண்டும் என்று கோரி புகலிடமும் கோரியுள்ளனர். அந்தப் பெண்களில் ஒருவரது பெயர் ரெஹானா கெளசர். 34 வயதாகிறது. இவர் இங்கிலாந்தில் செட்டிலாகி வசித்து வருபவர். இன்னொருவரின் பெயர் சோபியா கமர். 29 வயதாகிறது. இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர். இப்போது திருமணமும் செய்து கொண்டுள்ளனர். இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். 3 வருடத்திற்கு முன்புதான் இருவரும் பிர்மிங்காம் நகரில் வைத்து சந்தித்துக் கொண்டனர். இருவரும் அங்கு பிசினஸ் மேனேஜ்மென்ட் படித்துக் கொண்டிருந்தபோது சந்திப்பும், கூடவே காதலும் மலர்ந்தது. இருவரும் பின்னர் ஒரு வருட காலம் சேர்ந்தும் வாழ்ந்துள்ளனர். அதாவது கணவன் மனைவி போல வாழ்ந்துள்ளனர்.
கோவை போலீஸ் ஸ்டேஷனில் ஆட்டோ டிரைவர் மர்மச் சாவு

அழைத்து வரப்பட்ட ஆட்டோ டிரைவர் திடீரென இறந்தார். இதுதொடர்பாக மனைவி, உறவினர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளிடம் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினார். கோவை போத்தனூர் ரயில்வே காலனி கருப்பண்ண கவுன்டர் தோட்டத்தை சேர்ந்தவர் மார்ட்டின்(31). இவரது மனைவி ஜெபசாந்தி மெர்லின். இருவரும் 2 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். குழந்தை இல்லை. மார்ட்டின் சரக்கு ஆட்டோ ஓட்டிவந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்து மார்ட்டின் ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, போத்தனூர் பஸ் நிறுத்தத்தில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அங்கு வந்த மார்ட்டின் ஆட்டோவையும் சோதனை செய்ததில், அவர் மது குடித்து இருந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் சிக்கிய மேலும் சிலருடன் மார்ட்டினை யும், போத்தனூர் காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். இதுபற்றி காவல் நிலையத்தில் இருந்த மார்ட்டின் போன் மூலம் தனது உறவினர் சுதாகர் மற்றும் நண்பர்களுக்கு தெரிவித்துள்ளார். இந்நிலையில், காவல் நிலையத்தில் அமர்ந்திருந்த மார்ட்டின் திடீரென மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக, அவரை அவரது ஆட்டோவில் வைத்து, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்தியர்களிடம்/உலகளவிலும் கடவுள், மத நம்பிக்கை குறைந்தது
அப்போது இந்தியா முழுவதும் சுமார் 87 சதவிகிதம் பேர் கடவுள் நம்பிக்கையுடன் இருப்ப தாக தெரியவந்தது.
குறைந்தது
8 ஆண்டுகளுக்குப் பிறகு கடவுள் நம் பிக்கை
பற்றி சமீபத்தில் உலகம் முழுவதும் மீண் டும் ஒரு கருத்துக் கணிப்பு
நடத்தப்பட் டது. 51 ஆயிரத்து 927 பேரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன. லண்
டனில் நேற்று இந்த கருத்துக் கணிப்பு முடி வுகள் வெளியிடப்பட்டன.
இதில் இந்தியர்களில் 81 சதவிகிதம்
பேருக்கு கடவுள் நம்பிக்கை இருப்பது தெரியவந்தது. இதன் மூலம் இந்தியர்
களிடம் கடவுள் நம் பிக்கை குறைந்து விட் டது உறுதியாகி உள் ளது. 2005-ஆம்
ஆண்டு கருத்துக்கணிப்புடன் ஒப்பிடுகையில் தற் போது 6 சதவிகித இந் தியர்கள்
கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர் கள் பட்டியலில் சேர்ந் துள்ளனர்.
மெக்கானிக்கலுக்கு ஏன் டிமாண்ட்? IT Sector ஆட்டம் காணுகிறதா?


கல்லூரிகள் எப்படி டிமாண்டை நிர்ணயம் செய்கின்றன?
எல்லாம் நம் மக்களின் கைங்கரியம்தான். ரிசல்ட் வந்தும் வராமலும் ‘சார்
மெக்கானிக்கலுக்கு எவ்வளவு டொனேஷன்?’ என்று கேட்டு விசாரிக்க
ஆரம்பித்துவிடுகிறார்கள். எந்த பாடத்தை அதிகம் பேர் கேட்கிறார்களோ
அந்தப்பாடத்திற்கான ‘ரேட்’டை அதிகமாக்கிவிடுகிறார்கள். மற்றபடி இந்த ‘ரேட்
பிக்ஷிங்’கில் எந்தவிதமான உண்மையும் இல்லை. இதை வைத்து ஒரு பாடத்திட்டம்
சூப்பராக இருக்கிறது என்றும் இன்னொரு பாடத்திட்டம் பல்டியடித்துவிட்டது
என்றும் முடிவு செய்ய வேண்டியதில்லை. nisaptham.com
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ‘திடீர் குலுக்கல்’! 12 பேர் காயம்!!
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் வானில் பறந்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட
திடீர் குலுக்கல் (turbulence) காரணமாக 11 பயணிகளும், ஒரு விமான
சிப்பந்தியும் காயமடைந்தனர். ஏர்பஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ‘சூப்பர்
டூப்பர்’ விமானம் என விளம்பரப் படுத்தப்படும் மிகப்பெரிய A-380
விமானத்திலேயே இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
“சிங்கப்பூரில் இருந்து லண்டன் சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தடம் இலக்கம் SQ 308 விமானம் ‘சராசரிக்கு அதிகமானதில் இருந்து ஆபத்தான’ அளவிலான திடீர் குலுக்கலை சந்தித்தது. அந்த நேரத்தில், விமானத்தில் ‘சீட் பெல்ட்களை அணியவும்’ என்ற அறிவிப்பு கொடுக்கப்பட்டு இருந்தது” என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
லண்டனில் மீடியாக்களுக்கு பயணிகள் கூறியதன்படி, பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென உயரத்தை இழந்து (sudden loss of altitude) வானிலேயே கீழே விழுந்தது என்று தெரிகிறது.
“சிங்கப்பூரில் இருந்து லண்டன் சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தடம் இலக்கம் SQ 308 விமானம் ‘சராசரிக்கு அதிகமானதில் இருந்து ஆபத்தான’ அளவிலான திடீர் குலுக்கலை சந்தித்தது. அந்த நேரத்தில், விமானத்தில் ‘சீட் பெல்ட்களை அணியவும்’ என்ற அறிவிப்பு கொடுக்கப்பட்டு இருந்தது” என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
லண்டனில் மீடியாக்களுக்கு பயணிகள் கூறியதன்படி, பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென உயரத்தை இழந்து (sudden loss of altitude) வானிலேயே கீழே விழுந்தது என்று தெரிகிறது.
மோசடி புகார்: மருத்துவ கல்லூரி நிறுவனர் மீது 56 வழக்குகள்


டி.டி.நாயுடு, சாதாரண விவசாயி. 1991க்குப் பின், திருத்தணியில், நெல் வியாபாரம் செய்து வந்தார். 1993ம் ஆண்டு, திருத்தணி சன்னிதி தெருவில்,
தொடர்ந்து, 2007ம் ஆண்டு, பொறியியல் கல்லூரியை, மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையமாக மாற்றினார். இந்திய மருத்துவ கழகம் அனுமதி பெறாமலே, மாணவர்களை, கல்லூரியில் சேர்த்தார். இதனால், 2011ம் ஆண்டு, மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி மறுக்கப் பட்டது. மேலும், கல்லூரி மாணவர்களிடம் பல லட்சங்கள் பெற்று, ரசீது கொடுக்கவில்லை. அனுமதியில்லாத கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள், பின் கல்லூரியை விட்டு விலக, சான்றிதழ்கள் மற்றும் பணம் தராமல் ஏமாற்றினார். மருத்துவ கல்லூரிக்கு தேவையான பொருட்கள் மற்றும் கருவிகள் வாங்கியதற்கும், பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். மேலும், கட்டடப்பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்களுக்கு பல லட்சம் ரூபாயை கொடுக்காமல் ஏமாற்றி வந்தார்.இப்படி, இவர் மீது, கனகம்மாசத்திரம் காவல் நிலையம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவிலும், 42 வழக்குகள் நிலுவையில் உள்ளன. சென்னையில், 14 வழக்குகளும் இவர் மீது உள்ளன. வங்கி மோசடி செய்தது தொடர்பாக, இன்ஸ்பெக்டர், தட்கல் தலைமையிலான தனிப்படை இவரை தேடி வந்தது.கடந்த, 2012 டிச., மாதம் சென்னையைச் சேர்ந்த அகர்வால் மகன், நவன் கிஷோர் என்பவர், டி.டி.நாயுடு கல்லூரியில், மருத்துவ படிப்பில் சேர, 15 லட்சம் ரூபாய் கொடுத்தார். ஆனால், பணம் கொடுத்தும், மருத்துவ கல்லூரியில் இடம் தரவில்லை.
கிரெடிட் கார்டு மோசடி 5 பேர் விமான நிலையத்தில் கைது !

5 பேர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். இலங்கையை சேர்ந்த அவர்களிடம், கியூ பிரிவு போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் 2 நாட்களுக்கு முன்பு, போலி கிரெடிட் கார்டு மோசடி தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. வெளிநாட்டில் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ஷாப்பிங் செய்யும் போது, ஷாப்பிங் சென்டரிலேயே அதற்கென உள்ள நவீன கருவி மூலம் பாஸ்வேர்ட் உள்பட கார்டுகளின் தகவல்களை, வாடிக்கையாளர்களுக்கே தெரியாமல் பதிவு செய்வது தெரிய வந்தது.
அந்த தகவல்களை திருடும் கும்பல், இந்தியாவில் உள்ள கூட்டாளிகளுக்கு அனுப்புகின்றனர். பல நேரங்களில் வெளிநாடுகளிலேயே போலி கிரெடிட் கார்டுகளையும் தயாரித்து இந்தியாவுக்கு அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. போலி கிரெடிட் கார்டு மூலம் இந்தியாவில் லட்சக்கணக்கில் பணம் எடுப்பதும், ஷாப்பிங் செய்தும் தொடர்ந்து இந்த கும்பல் மோசடி செய்து வந்தது தெரிய வந்தது. குறிப்பாக இந்த மோசடியில் இலங்கையை சேர்ந்தவர்கள் ஈடுபடுவது தெரிந்தது. இதையடுத்து, இலங்கை தமிழர்கள் சிலரை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)