வெள்ளி, 11 நவம்பர், 2016

ரூ.500, ரூ.1000 செல்லாது என்பதை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல் லாது என மத்திய நிதி அமைச்ச கம்
வெளியிட்டுள்ள அறிவிப் பாணையை ரத்து செய்யக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்தியன் நேஷனல் லீக் மாநில பொதுச் செயலர் எம்.சீனிஅகமது உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் வாதிடும்போது, “முன்னேற்பாடு நடவடிக்கைகள் இல்லாமல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் பொதுமக்கள் சிரமத் துக்கு ஆளாகியுள்ளனர். புதிதாக 2000 ரூபாய் நோட்டு வெளியிட்டி ருப்பது இந்திய ரிசர்வ் வங்கி சட்டத் துக்கு விரோதமானது” என்றார். 

அப்போது குறுக்கிட்ட நீதிபதி கள், “5, 10, 50, 100, 1000 என ரூபாய் நோட்டுகளை அச்சிடலாம். புதிதாக ரூ.2000 நோட்டு வெளியிடுவதில் தவறில்லை. 1946, 1978 ஆண்டு களில் இதுபோல் ரூபாய் நோட்டு கள் செல்லாது என அறிவிக்கப் பட்டுள்ளது” என்றனர்.
மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வாதிடும் போது, “ரூபாய் நோட்டுகளை செல்லாது என்பதும், புதிய ரூபாய் நோட்டுகளை வெளியிடுவதும் மத்திய அரசின் கொள்கை முடிவு. இதில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது” என்றார்.
கள்ள நோட்டுகள்
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் அறிவிப்பு வெளியிட்டபோது, இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், கறுப்பு பணத்தை ஒழிக்கவும், கள்ள நோட்டுகள் அச்சிடுவதைத் தடுக்கவும், ஊழலை ஒழிக்கும் நோக்கத்திலும், பயங்கரவாதத்துக்கு கள்ள நோட்டுகளை பயன்படுத்துவதை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார். இந்த நோக்கத்தில் கொண்டுவரப் பட்டுள்ள இத்திட்டம் வரவேற்கத் தக்கது.
இந்தியாவில் அதிக அளவு கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாகவும், போதைப் பொருள் கடத்தலுக்கும், பயங்கரவாத செயல்களுக்கும் கள்ள நோட்டுகள் பயன்படுத்தப்படு வதாகவும், இதனால் 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி இயக்குநர் குழு பரிந்துரை செய்தது.
இந்த பரிந்துரையை ஏற்று மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்துள்ளது. இவ்வாறு அறிவிப்பு வெளியிட்டதில் அரசிய லமைப்பு சட்டம் உட்பட எந்த சட்டத்தையும் மத்திய அரசு மீறவில்லை. இதனால், மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டியதில்லை. சிரமங்கள் தற்காலிகமானது. இதை பொதுமக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும்.
மேலும், அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலை யிட முடியாது என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை முழுமையாக ஏற்காவிட்டா லும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்பான கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடு வது நல்லதல்ல. எனவே இந்த மனு விசாரணைக்கு உகந்த தகுதியுடன் இல்லை. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.  tamilthehindu.com

கருத்துகள் இல்லை: