Jayakumar :
கோவையில்
ஆதிக்கம் பெற்றுள்ள வட இந்தியர்கள் யாரென்றால் மார்வாடிகள், மால்வாரிகள்,
குஜராத்திகள், சிந்தியர்கள் , சீக்கியர்கள். பெரும்பாலானோர் மூன்று
தலைமுறைக்கு முன் இங்கே வந்தவர்கள். இதில் ஆராவல்லி மலைத்தொடருக்கு மேற்கே,
ராட்கிளிப் எல்லைக்கு கிழக்கே உள்ள பிகானீர், ஜோத்பூர், ஜெய்சல்மீர்
பகுதியில் இருந்து பிரிவினையின் போது வந்த மார்வாடிகளே அதிகம்.
புலம்பெயர்ந்த மார்வாடிகளில் 80% பேர் ஜெயின்கள். அதிலும் ஆதிக்கம் பெற்ற
சாதியினர் பாப்னா,மேத்தா மற்றும் டிப்பிரிவால். இவர்கள் தொழில் செய்யவே
விரும்பியவர்கள், பொறியியல் படிப்புகள் பிடிக்காது. கைவசம் ஒரு தொழில்
வைத்துக்கொண்டே அங்கிருந்து தைரியமாக வந்தவர்கள். இவர்கள் கோயம்புத்தூர்
ஆர்.எஸ்.புரத்தில் 'ராஜஸ்தானி சங்' என்ற பெயரில் ஒரு சங்கத்தை 1972 ல்
ஆரம்பிக்கபித்தனர்,
இவர்களுக்கும் குஜாராத்திகளுக்கும் அப்போது
என்ன லடாயோ தெரியவில்லை, போட்டி போட்டு கெத்து காமிக்க ஆரம்பித்தனர்.
1951ல் குஜராத்திகளால் புரூக் பாண்ட் ரோட் அருகில் ஆரம்பிக்கப்பட்ட
கிக்கானி பள்ளி இவர்கள் கண்ணை உறுத்த உடனே கடுமையாக நிதி திரட்டி 1964ல்
Coimbatore welfare association கட்டுப்பாட்டில் இயங்கும் Shri Nehru
Vidyalaya பள்ளியை ஆரம்பித்தனர். பூமார்கெட் பகுதியில் இயங்கிய இப்பள்ளி
1973ல் ஆர்.எஸ்.புரத்தில் ஐந்து ஏக்கர் நிலத்தில் இடமாற்றம் செய்யப்பட்டது,
நான் LKG முதல் +2 வரை இங்கு தான் படித்தேன்.அந்தப்பள்ளி இயங்கும்
விதம்லாம் ஒரு காமெடியான தனிக்கதை. நிர்வாகத்தில் இருந்த பார்ப்பன
வில்லிக்கும் எனக்கும் சண்டை வந்ததில் கெமிஸ்டிரி லேப் துவம்சம் பண்ணி ஒரு
மாதம் சஸ்பெண்டு ஆகி 5000 ரூபாய் பைன் கட்டியது தான் மிச்சம்,
கதைக்கு வருவோம்.. பின்னர் குஜராத்திகளே வாயடைத்து போகும் விதத்தில் 1989
Shri Nehru Maha Vidyalaya கலை அறிவியல் கல்லூரி மிகப்பிரம்மாண்டமாக
பொள்ளாச்சி, கொச்சின் தேசிய நெடுஞ்சாலைகள் சந்திக்கும் இடத்தில்
மலுமிச்சம்பட்டிக்கு அருகே ஆரம்பித்தனர். இவர்களுக்கு மதப்பிடிப்பு மிக மிக
அதிகம்.எந்தளவிற்கு என்றால் தமிழக சங்கிகள் எல்லாம் சுண்டக்காய் தான்
என்று நாமே ஏளனம் செய்யும் அளவு. ஒரு உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள். ஜெயின்
மதத்தில் பர்யூசன் பர்வ் என்ற 8 நாள் பண்டிகை உண்டு. அக்காலத்தில் அவர்கள்
கடுமையான விரதத்தை கடைப்பிடிப்பார்கள்.பின் ஏழாம் நாளில் அனைத்து ஜெயின்
கோயில்களில் ஒரு ஏலம் நடக்கும்.யார் ஏலம் எடுப்பார்களோ அவர்கள் வீட்டிற்கு
சாமி சிலை கொண்டு வரப்பட்டு இரவு முழுவதும் பூஜை நடக்கும்,