nakkheerannewseditor">நக்கீரன் செய்திப்பிரிவு ;அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள்
தலைவரும், வயநாடு மக்களவை தொகுதியின் உறுப்பினருமான ராகுல்காந்தி
தலைமையில்,
எம்.பி.க்கள் அடங்கிய காங்கிரஸ் குழுவினர் உத்தரப்பிரதேச
மாநிலம், ஹத்ராஸுக்கு புறப்பட்டனர்.
ஹத்ராஸில் கொல்லப்பட்ட இளம்பெண் குடும்பத்துக்கு ஆறுதல் கூற ராகுல்காந்தி
தலைமையில் காங்கிரஸ் குழு சென்றது. ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி
காரிலும், ஜோதிமணி உள்ளிட்ட காங்கிரஸ் குழுவினர்
பேருந்திலும் சென்ற நிலையில் 5 பேர் மட்டுமே ஹத்ராஸுக்கு செல்ல
அனுமதிக்கப்படுவர் என உத்தரபிரதேச போலீசார் அவரிடம் தெரிவித்தனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் 94,200 பேருக்கு கோவிட் பரிசோதனைகள் நடந்துள்ளன. இதுவரை பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 68,88,043 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று புதிதாக 1280 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் இன்றைய நாளில் 10656 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் இதுவரை 1,63,423 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
