சனி, 8 செப்டம்பர், 2012

மன்னாரு. மன்னிக்கக் கூடியதாக ரசிக்க முடிகிறது

மன்னாரு, ஒரு மலைக் கிராமம் சார்ந்த எளிமையான காதல் கதை. நல்ல பாடல்கள், இனிமையான இசை, கண்களை நிறைக்கும் பசுமை சூழல் போன்றவை படத்தைப் பார்க்க வைக்கின்றன. சின்னச் சின்ன குறைகளை மறக்கடிக்கின்றன.
அப்புக்குட்டிதான் மன்னாரு. 'நாய் கூட மதிக்காத' அவருக்கும் முறைப்பெண் மல்லிகாவுக்கும் அப்படி ஒரு காதல். இத்தனைக்கும் மன்னாரு படித்தது 3-ம் வகுப்பு. லாரிக்கு மணல் நிரப்பும் வேலை. ஒரு நாள் ஷகிலா படம் பார்க்கப் போக, படம் முடிந்து நண்பன் அறையில் தங்க நேர்கிறது. அந்த நண்பனின் காதல் திருமணத்துக்கு சாட்சிக் கையெழுத்துப் போடுகிறான் மன்னாரு. அந்தக் கையெழுத்து அவன் வாழ்க்கையில் பல தொல்லைகளை இழுத்துவிடுகிறது.

அமெரிக்க அரசியல் 2012 ரிபப்ளிகன்கள் மீண்டும் தலை தூக்கினால்?

  அமெரிக்க அரசியல் ஆடுகளம் சூடுபிடித்து விட்டது. 
  கடந்த சில பல வருடங்களில் என்னவெல்லாம் நடந்து முடிந்துவிட்டது!
  முட்டாள்தனமாக, ஈகோவால் மட்டுமே செலுத்தப்பட்ட ஆஃப்கானிஸ்தான், ஈராக் போர்களினால் பெரும் செலவுக் கணக்கும் உயிர்ச்சேதமும் கணக்கு வழக்கே இல்லாமல் உயர்ந்துகொண்டே போனது. தற்போதைய (செப். ’12) கணக்குகளின்படி இன்னமும் 70,000 அமெரிக்க வீரர்கள், எண்ணற்ற தளவாடங்கள் போர்முனைகளில் இருக்கிறார்கள். சற்றேறக்குறைய 6500 அமெரிக்கப் படைவீரர்கள் உயிர் பலியாகி இருக்கிறார்கள்.
 
மார்ட்கேஜ் கம்பெனிகளும், பேங்குகளும் அடிப்படையான எந்தவிதமான கண்ட்ரோலும் இல்லாமல் பில்லியன் கணக்கில் தொடர்ந்து ஃப்ராடு பண்ண அரசு அனுமதி லைசென்ஸே வழங்கப்பட்டு நாட்டை அவர்கள் சுரண்டி எடுத்தது அதற்குள்ளாகவா நமக்கு மறந்துபோய்விடும்? ‘Mortgage backed securities scam', 'Subprime mortgage crisis' இவற்றால் வீடு, டெபாசிட்கள், ஸ்டாக் மதிப்பு, வங்கி அக்கவுண்ட்களின் கையிருப்பு கணிசமாகக் குறைந்து டவுசர் கழட்டப்படாதவர்களே அமெரிக்காவில் கிடையாது என்ற அளவுக்கு ஒரு பயங்கர விளைவு எல்லோரையுமே அழவைத்து விட்டது.
 
எப்பாடுபட்டாவது அமெரிக்கப் பொருளாதாரத்தில் மேல் மட்ட 1% ல் இருக்கும் மகா பில்லியனர்களுக்கு மட்டும் அதீத வரிச்சலுகைகள் தொடரவேண்டும், நாட்டின் அடிப்படைக் கட்டுமான ஊழியர்களும், நடுத்தர மக்களும், ஏழை எளியவர்கள், வறியவர்கள், மாணவர்கள், முதியவர்கள் எக்கேடும் கெட்டுப் போகட்டும், நாடுதழுவிய அடிப்படை வசதிகள் எப்படிப் போனாலென்ன என்று சதா சர்வகாலமும் அதிரடி ஜனசேவை புரிந்தவர்கள் அல்லவா ரிபப்ளிகன்ஸ் ஜார்ஜ் புஷ்ஷும் அவருடைய அமைச்சர் குழாமும்?!

மனிதக் கழிவுகளை மனிதர்களைக் கொண்டே அள்ளி அகற்றுவதை

 http://gnani.net/
இந்தியாவில் ஒரு மனிதன் தன் சக மனிதனை இழிவுபடுத்தப் பயன்படுத்தும் உச்சமான கருவி அவனுடைய மலம்தான். தன் மலத்தை அகற்றச் சொல்வது முதல் வாயில் திணிப்பது வரை மனிதக் கழிவு ஓர் ஒடுக்கும் கருவியாக இழிவுச் செயலாகப் பயன்படுத்தப்படுகிறது. வாயில் திணிப்பது சட்ட விரோதம். ஆனால் மலம் அள்ளுவது இன்று வரை சட்டப்படி சரியான செயலாகவே இருந்துவருகிறது.
நாடு முழுவதும் மனிதக் கழிவுகளை மனிதர்களைக் கொண்டே அள்ளி அகற்றுவதை நிறுத்தக் கோரி சமூக ஆர்வலர்கள் பல காலமாகப் போராடி வருகிறார்கள். நிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டன என்று வாஜ்பாயி பிரதமராக இருந்த காலத்திலிருந்து சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஆனால் எதுவும் நடக்கவில்லை.
இந்த சூழ்நிலையில்தான் சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ‘பாடம்’ நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இன்னும் இரு மாதங்களுக்குள் மனிதக் கழிவை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவதை நிறுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், மத்திய அரசின் மிக உயர் பதவிகளில் இருப்பவர்களை நேரில் கோர்ட்டில் ஆஜராகும்படி சம்மன் அனுப்ப வேண்டி வரும் என்று எச்சரித்தது. இந்த உத்தரவை பின்பற்றுவதற்கு பதில் மத்திய அரசு என்ன செய்தது தெரியுமா ? அதை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் முறையிட்டது !

கூடங்குளம் போராட்டத்தில் இறந்தால் ரூ.5 லட்சம்

 கூடங்குளம் போராட்டக்குழு கடலோர கிராமங்களில் தண்டோரா 
நெல்லை: நாளை கூடங்குளம் அணு மின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும்போது அசம்பாவிதம் ஏற்பட்டு யாராவது இறந்தால் அவர்கள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நஷ்ட ஈடு வழங்கப்படும் என்று போராட்டக் குழுவினர் கடலோர கிராமங்களில் தண்டோரா போட்டுள்ளனர். உயிரின் விலை வெறும் ஐந்து லட்சம் என்று தீர்மானித்தது யார்? பிரேதங்களை வைத்து அரசியல் பண்ணலாம் என்று எங்கிருந்து கற்றீர்கள்?    இந்த தொகை  போராட்டக்குழுவினருக்கு எப்படி கிடைக்கிறது? பின்னணியில் எந்த நாடு?

துண்டிக்கப்பட்ட அண்ணா வளைவை சுமந்து நிற்கும் கிரேன் வாடகை ரூ. 4 லட்சம்

அண்ணாநகர் : துண்டிக்கப்பட்ட அண்ணா வளைவை ஒட்ட வைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருவதால், அதை சுமந்து நிற்கும் ராட்சத கிரேன் மூலம் தினமும் மக்கள் பணம் நான்கு லட்சம் ரூபாய் வீணாகிறது.
ஈ.வெ.ரா., நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, அச்சாலையில் நெல்சன் மாணிக்கம் சாலை மற்றும் அண்ணாநகர் 3வது நிழற்சாலை சந்திப்புகளை இணைத்து, நடைபெற்று வரும் 117 கோடி ரூபாய் மதிப்பில் இரு மேம்பாலங்கள் மற்றும் கீழ்பாலம் அமைக்கும் பணிக்காக, துவங்கிய அண்ணா பவள விழா நினைவு வளைவுகளை அகற்றும் பணியில், முறையான திட்டமிடல் இல்லாததால், ஏகப்பட்ட சிக்கல்கள் ஏற்பட்டன. இதையடுத்து, அண்ணா வளைவை அகற்றாமல் மேம்பால பணியை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ள நிலையில், துண்டிக்கப்பட்ட ஒரு அண்ணா வளைவை ஒட்ட வைப்பதற்கான ஆய்வு மற்றும் ஆலோசனையில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த ஆய்வுகள் எப்போது முடிவுக்கு வந்து, ஒட்டும் பணிகள் துவங்கி, முடியும் என்பது புரியாத புதிராக உள்ளது. இதனால், தினமும் மக்கள் பணம், நான்கு லட்சம் ரூபாய் வீணாகிறது என்று தெரிவிக்கிறார் அதிகாரி ஒருவர்.

நிஜ ஓனர் அ.தி.மு.க. மெகா வி.ஐ.பி.!! சிவகாசி பட்டாசு ஆலை:மர்மங்கள்

Viruvirupu

சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலையில் நடந்த விபத்து ஏற்படுத்திய சோகம் ஒருபுறம் கவிந்திருக்க, காவல்துறைக்குள் கடகடவென சில காரியங்கள் நடப்பதாக விஷயம் அறிந்த வட்டாரங்களில் சொல்கிறார்கள். விபத்து நடந்த ஓம்சக்தி பட்டாசு ஆலை தொடர்பாக ஒரு பெரிய ரகசியமே உள்ளதாகவும் ஒரு பேச்சு ஓடுகிறது.
உளவுத்துறை வட்டாரத்தில் உள்ள எமது தொடர்பாளர் ஒருவர், பின்னணியில் அவசர அவசரமாக சில காரியங்கள் நடப்பதாக சொன்னார். காவல்துறைக்கும் சென்னையில் இருந்து சில உத்தரவுகள் சென்றிருப்பதாகவும் கூறினார்.
கிடைத்த தகவல்களில் இருந்து, ‘ஓம்சக்தி பட்டாசு ஆலை உரிமையாளர்’ என்று ஒருவரை தேடுகிறார்கள் அல்லவா? அந்த நபர் நிஜமாகவே இந்த பட்டாசு ஆலைக்கு உரிமையாளர் கிடையாதாம். வேண்டுமானால், முன்னாள் உரிமையாளர் என்று சொல்லலாம்.

அண்ணா வளைவு இடிந்து, ஜெயலலிதா தலையில் வீழ்ந்தது!

Viruvirupu
சென்னை அண்ணா நகரிலே உள்ள அண்ணா வளைவிளை அகற்ற உத்தரவிட்டு, அகற்ற முயற்சித்து, அதில் தோல்வியடைந்து, அதன்பின் அகற்றத் தேவையில்லை என்று கூறியிருக்கிறது தமிழக அரசு. “அகற்ற முயன்றோம். முடியவில்லை” என்று காரணம் சொல்லியிருந்தால், கௌவரவமாக போயிருக்கும்.
ஆனால், யாருக்கும் எதுவும் தெரியாது என்ற கதையாக, “அண்ணா வளைவு, நகரிலே உள்ள நீண்ட கால நினைவுச் சின்னம் என்பதால், அதை அகற்ற வேண்டாம் என்று முதல்வர் ஆணை பிறப்பித்திருக்கிறார்” என்று தமாஷ் பண்ணலாம் என அந்த அதிகாரி ஐடியா கொடுத்தாரோ, அல்லது முதல்வருக்கே தோன்றிய பிரகாச ஐடியாவோ தெரியவில்லை. தற்போது சொல்லப்பட்டுள்ள காரணம் அதுதான்!
இந்த ‘தமாஷ் காரணம்’, தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு வாய்ப்பாக போயிருக்கிறது.
“வளைவை அகற்ற வேண்டாம் என்று முதல்வர் ஆணை பிறப்பித்திருக்கிறார் என்பது இருக்கட்டும். நீண்டகால நினைவுச் சின்னமான, அண்ணா பெயரால் அமைந்துள்ள அந்த வளைவினை அகற்ற முதலிலே உத்தரவு பிறப்பித்தது யார்?” என்று கேட்டிருக்கிறார் அவர்.

.வீரமணி:திரு’வுக்குப் பதில் ‘ஸ்ரீ’ வந்தது எப்படி?

 K Veeramani Questions On Avoiding Tamil Hc சென்னை உயர் நீதி மன்ற விழா அழைப்பிதழில் ‘திரு’வுக்குப் பதில் ‘ஸ்ரீ’ வந்தது எப்படி?- கி.வீரமணி கேள்வி



சென்னை : 150 ஆண்டு காணும் சென்னை உயர் நீதி மன்ற விழா அழைப்பிதழில் ‘திரு'வுக்குப் பதில் ‘ஸ்ரீ' வந்தது எப்படி ? என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை உயர் நீதி மன்றத்திற்கு 150 ம் ஆண்டு விழா இன்று தலைநகர் சென்னையில் மிகவும் சிறப்புடன் நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு நமது நல்வாழ்த்துக்கள்.
100 ஆண்டுகளுக்கு முன்பு அதிகம் காணப்படாமல் இருந்த சமூக நீதிக் கொடி
இன்று தான் பட்டொளி வீசிப் பறக்கின்றது. தந்தை பெரியாரும், திராவிடர் இயக்கமும் அதன் கருத்துச் செறிந்த தன்னலமற்ற போராட்டங்களும் தான் அந்த சமூக நீதிக் கொடி ஏற்றப்பட்டதற்கும், அது தலை தாழாமல் பறப்பதற்கும் காரணம் என்பதை, பலனை அனுபவிக்கும் ஒடுக்கப்பட்ட சமுதாய வழக்குரைஞர்கள், நீதிபதிகள் எத்தனைப் பேர் நினைவில் கொண்டுள்ளனர் என்பது கேள்விக் குறியே என்ற போதிலும், "எம் கடன் பணி செய்து கிடப்பதே" என்ற மூதுரைக்கேற்ப, நன்றி என்பது பயன் பெற்றோர் காட்டவேண்டிய பண்பு.

தமன்னா - .கோஹ்லியுடன் விளம்பரமொன்றில்


கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லியுடன் நடிக்க உள்ளார் தமன்னா. இவர்கள் இருவரை பற்றிய கிசுகிசு கோலிவுட்டில் பரவியுள்ளது. 
 நட்சத்திர கிரிக்கெட் வீரர்களுடன் தங்களை இணைத்து பேசுவதை ஹீரோயின்கள் பெருமையாக கருதுகின்றனர். இதற்குமுன் டோனியுடன் லட்சுமிராய் மற்றும் பல்வேறு பாலிவுட் நடிகைகளும் இணைத்து கிசுகிசுக்கப்பட்டனர். தற்போது விராட் கோஹ்லியுடன் இணைத்து கிசுகிசுக்கப்படுகிறார் தமன்னா. நிறுவனம் ஒன்றின் விளம்பர தூதராக கோஹ்லி நியமிக்கப்பட்டிருக்கிறார். அதே நிறுவனத்துக்கு ஆந்திராவில் தூதராக தமன்னா உள்ளார்.

பட்டாசு முதலாளிகளின் கொத்தடிமைகள் சிவகாசி படுகொலை

சிவகாசியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் மீண்டும் பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு முறையும் தொழிலாளர்கள் மன்னிக்கவும் கொத்தடிமைகள் கொல்லப்படுவது; நீண்டநாள் நோய்வாய்பட்டவர்களின் மரணம்போல் எதிர்பார்த்த ஒன்றாகத்தான் புரிந்து கொள்ளப்படுகிறது.
பலமுறை பட்டாசு பலிவாங்கிய உயிர்களில் ஒரு உயிர்கூட பட்டாசு அதிபர்களின் உயிரில்லை என்பதே இது விபத்தல்ல, கொலைதான் என்பதற்கு சாட்சி.
பச்சைத் தமிழர்களால் நடத்தப்படுகிற இந்த உள்ளுர் அணுஉலையான பட்டாசு, தீப்பெட்டி கம்பெனிகள், விருதுநகர் மாவட்டதையே சூறையாடி வருகிறது.
விருதுநகர் மாவட்டத்து மக்களின் விவசாயம், கல்வி, அடிப்படையான வாழ்வாதாரம் எல்லாம் பறிக்கப்பட்டிருக்கிறது.

ஜெயலலிதாவின் ஆசீர்வாதத்துடன் இலங்கை தமிழர்களை ஆபத்துக்குள்ளாக்கும் தமிழக அரசியல்

சினேகபூர்வமான போட்டிகளுக்காக இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்குச் சென்றிருந்த இரண்டு கால்பந்து அணிகளுக்கு உடனடியாக மாநிலத்திலிருந்து வெளியேறுமாறு மாநில முதலமைச்சர ஜெயலலிதா ஜெயராம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கட்டளையிட்டு இருந்தார்.
இதனை விமர்சித்து இந்தியாவில் வெளிவரும் 'த ஹிந்து' பத்திரிகை வெளியிட்டு இருந்த ஆசிரியத் தலையங்கத்தில் 'இன்று நாம் பாடசாலை கால்பந்து விளையாட்டு வீரர்களை வெளியேற்றுகிறோம், கிரிக்கெட் ஆட்டக்காரர்கள், உல்லாசப் பிரயாணிகள் மற்றும் யாத்திரிகள் ஆகியோரையும் வெளியேற்ற வேண்டும் என்று நாளை கூச்சல் எழும்' என குறிப்பிடப்பட்டு இருந்தது.

நகை, பணம் புதைக்கப்பட்டதாக தகவல் பிஆர்பி நிறுவனத்தில் புல்டோசர் மூலம் தோண்ட உத்தரவு

மதுரை தெற்குத்தெருவில் உள்ள பிஆர்பி எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் நகை, பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்ததையொட்டி, புல்டோசர்கள் வைத்து தோண்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். 
மதுரை மாவட்டத்தில் கிரானைட் முறைகேடு தொடர்பாக பிஆர்பி நிறுவனங்களில் அதிகாரிகள் கடந்த 35 நாட்களாக தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். ஆளில்லாத சிறிய ஹெலிகாப்டர் பயன்படுத்தியும் ஆய்வு நடந்து வருகிறது. மதுரை அருகே இடையப்பட்டியில் உள்ள ஸ்டாக்யார்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கற்களை அளவிடும் பணியில் 100க்கும் அதிகமான ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். துணை தாசில்தார் லைனல் ராஜசேகரன் கற்களை ஆய்வு செய்தார். அப்போது கற்களை அடுக்கி ரகசிய அறை உருவாக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அறைக்குள் ஒருவர் மட்டுமே செல்லும் வகையில் சிறிய பாதை அமைக்கப்பட்டிருந்தது.

போதிதர்மர்: நீங்கள் என்பது உங்கள் அனுபவமே

போதிதர்மர் என்னும் துறவி தமிழகத்திலிருந்து கிளம்பி பௌத்த தொண்டாற்ற சீனா வருவதாகவும், அவர் பல்லவ நாட்டின் தலைசிறந்த பிக்கு என்றும், ஏற்கெனவே போதிநிலையை அடைந்தவர் என்றும், அவர் பல்லவ இளவரசராகப் பிறந்து பௌதத்தை ஏற்று துறவி ஆனவர் என்றும், தீர்க்கதரிசி என்றும், எங்கள் உடன்பிறந்தவர் என்றும் தமிழகத்திலிருந்து பல்லவர்கள் புறாக்கள் மூலமாக சீனா முழுவதும் உள்ள நாடுகளுக்கு செய்தி அனுப்பினர்.
எனவே, சீன அரசர்களும் போதிதர்மருக்கு உலகமே போற்றும் விதம் வரவேற்பு அளிக்கவேண்டும் என்று முடிவு கட்டிக் காத்திருந்தனர். போதிதர்மர் தென்சீனம் சென்று சேர்ந்தபோது மாபெரும் மக்கள் கூட்டம் அவரை வரவேற்கக் காத்திருந்தது.
குய் நாட்டின் Zhu Jiang ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் Ghuang Cho எனும் நகருக்கு போதிதர்மரின் கப்பல் வருகிறது என்று தகவலறிந்து, அவரை வரவேற்க குய் நாட்டு அரசனும், க்ஷியாங் ஆங் (Xiang Ang) நாட்டு மன்னனும் காவலர்கள், சுமைதூக்கிகள், புத்த பிக்குகள் அடங்கிய பெரிய குழுவுடன் அத்துறைமுகம் நோக்கிச் சென்றனர்.
போதிதர்மர் தனது சீடர்கள் புடைசூழ, பௌத்த புனித நூல்கள் நிரம்பிய பெரும் பைகளைச் சுமக்கும் அடிமைகளுடன் மிகப்பெரிய குழுவாக இந்தியாவில் இருந்து பெரிய கப்பலில் வருவார் என எதிர்பார்த்துத்தான் இப்பேற்பட்ட படையை ஏற்பாடு செய்திருந்தனர் மன்னர்கள். ஏனென்றால் அதற்கு முன் சீனா வரும் பிக்குகள் அனைவரும் அப்படித்தான் வந்திறங்கியிருந்தனர்.

ஸ்டாலின், உதயநிதிக்கு கோர்ட்டு நோட்டீஸ்! “லேசில விடமாட்டமில்ல!”

Viruvirupu
 பெங்களூருவில் நடக்கும் சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராக வேண்டும் என்று எத்தனையோ தடவைகள் நீதிபதி உத்தரவிட்டும், ஆஜராகாத ஒருவரின் தலைமையில் உள்ள அரசு, இரு தரப்பும் ஒத்துக்கொண்டு உயர்நீதிமன்றம் முடித்து வைத்த ஒரு வழக்கை தூசு தட்டுவது தமாஷாக இல்லையா?
உயிரை விட்டு விட்டது என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் துணை முதல்வரும், தி.மு.க பொருளாளருமான ஸ்டாலின், அவரது மகனும் சினிமா தயாரிப்பாளர் கம் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே குளோஸ் பண்ணியிருந்தது.

155 சுரங்க குத்தகை உரிமங்கள் ரத்து விதிமுறைகளை மீறிய

புதுடில்லி:"விதிமுறைகளை மீறி செயல்பட்ட நிறுவனங்களின், 155 சுரங்க குத்தகை உரிமங்கள், ரத்து செய்யப்பட்டுள்ளன' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ராஜ்யசபாவில், சுரங்கத் துறை அமைச்சர் தீன்ஷா படேல் கூறியதாவது:சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ள சில நிறுவனங்கள், விதிமுறைகளை மீறியதாக புகார் வந்ததை அடுத்து, கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா, ஜார்க்கண்ட், குஜராத் உள்ளிட்ட இடங்களில் உள்ள, 454 சுரங்கங்களில், சிறப்பு படையினர், அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர்.இதில், சில நிறுவனங்கள், விதிமுறைகளை மீறி செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட, 155 சுரங்க குத்தகை உரிமங்கள், ரத்து செய்யப்பட்டன.சட்ட விரோத சுரங்க நடவடிக்கைகளை தடுப்பதற்கு, அரசு சார்பில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன், மத்திய அரசு, தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது.

அழகிரி மகன் துரை தயாநிதி எங்கே? மதுரை காவல்துறைக்கு எந்த நாட்டில் பயிற்சி தேவை?

Viruviruppu.com
மதுரை கிரானைட் முறைகேடு விவகாரத்தில், போலீஸிடம் சிக்கிக் கொண்ட பி.ஆர். பழனிச்சாமியிடம் இருந்து வெளியாகும் தகவல்களைவிட அதிக மர்மம் இருப்பது, அழகிரி மகன் துரை தயாநிதி விவகாரத்தில்தான்! இவர் எங்கே? நிஜமாகவே தேடப்படுகிறாரா? அல்லது ‘கவனிக்க வேண்டிய’ இடத்தின் கவனித்து விட்டார்களா? இவைதான் மர்மங்கள்.
ஒரு விஷயம் உண்மை. மதுரை ஆட்டத்தில் பி.ஆர்.பி. நிறுவனம்தான் பெரிய கை. துரை தயாநிதியின் ஒலிம்பஸ் நிறுவனம் அந்த அளவுக்கு பெரிய ஆட்டக்காரர்கள் கிடையாது. இதனால், துரை தயாநிதியை கைது செய்ய வேண்டியது மிக அவசர விஷயம் அல்ல.
ஆனால், துரை தயாநிதியை தேடுகிறோம், பாஸ்போர்ட்டை முடக்கி விட்டோம் என்றெல்லாம் போலீஸ் கூறுவதால்தான், இவரது விவகாரம் முக்கியமாகிறது.

கிரானைட் கற்களுக்கு இடையில் ரகசிய அறை: 3 பெட்டகங்கள் பதுக்கல்

மேலூர்: கிரானைட் கற்களை அடுக்கி வைத்துள்ள "ஸ்டாக் யார்டு' பகுதியில் மிக குறுகலான ரகசிய அறை அமைத்து, மூன்று கன்டெயினர் அளவிலான பெட்டகங்கள் அடுக்கப்பட்டிருந்தது. சிறிது தொலைவில் கற்களுக்கு இடையில் இருந்த சிறிய இரும்பு பெட்டியில் காமராஜ் பல்கலை தேர்வு தாள்கள் மற்றும் ஆவணங்கள் சிக்கியது.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதி கிரானைட் குவாரிகளில் தினசரி, புதிது புதிதாக ஏதாவது சிக்கிய நிலையில் உள்ளது. நேற்று இடையபட்டியில் உள்ள பி.ஆர்.பி., நிறுவனத்திற்கு சொந்தமான "ஸ்டாக் யார்டில்' மதுரை வடக்கு துணை தாசில்தார் நைனல் ராஜ்குமார் தலைமையில் கற்கள் அளவிடும் பணி நடைபெற்று வந்தது. ஒரு பகுதியில் அளந்து முடித்தவர்கள், மற்றொரு பகுதியில், ஒவ்வொரு கற்களுக்கும் இடையில் நுழைந்து அளந்து கொண்டிருந்தனர். ஒரு இடத்தில் மட்டும் ஒரு நபர் தொடர்ந்து நுழைந்து செல்லும் வகையில் சிறு, சிறு சந்து விட்டு பாதை அமைக்கப்பட்டிருந்தது.

வைகோ-சீமானுக்கு அருவா தூக்க, தேடி வந்துள்ள அரிய, பெரிய வாய்ப்பு!

Viruvirupu
இலங்கை அரசு வெளியிட்ட தமிழகத்துக்கான பயண எச்சரிக்கையை நீக்குமாறு, தமிழக வர்த்தக சங்கம் வேண்டுகோள் விடுத்து அனுப்பியுள்ள கடிதம் கிடைத்திருப்பதாக இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வர்த்தக சங்கத்தின் கடிதத்தில், “இலங்கை அரசு வெளியிட்ட பயண எச்சரிக்கையின் காரணமாக, கணிசமான அளவில் வர்த்தக வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகளை சார்ந்துள்ள பல்வேறு துறைகளில் 40 சதவீத பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழகம் மீதான பயண எச்சரிக்கையை விலக்கிக் கொள்ள வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்திருப்பதாக இலங்கை வெளியுறவுத் துறையினன் செய்திக்குறிப்பு சொல்கிறது.

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

அடடா சூர்யா விளம்பரங்களில் நடிப்பது சமூக சேவையாமே?!

இதுநாள் வரையில் ‘மலபார் கோல்ட்’ விளம்பரத்தில் நடித்து வந்த இளையராஜாவின் ஒப்பந்தம் முடிந்து விட்டது. எனவே புதிதாக சூர்யாவை வைத்து அந்த விளம்பரத்தை எடுத்திருக்கிறார்கள். இந்த விளம்பரத்தை தனது பத்திரிகையின் பின் அல்லது உள் அட்டையில் பிரசுரித்து லட்சம் லட்சமாக பணத்தை சுருட்ட இந்தப் பேட்டியின் வழியாக குமுதம் துண்டு போட்டிருக்கிறது. 

அநேகமாக அந்த இதழின் விளம்பர மேலாளர், சூர்யாவின் பேட்டியை காண்பித்தபடி விளம்பர ஏஜென்சியிடம் இந்நேரம் பேசிக் கொண்டிருப்பார்.
சூர்யா பேட்டி வந்த குமுதம் பக்கங்களுக்கிடையிலேயே லலிதா ஜூவல்லரி, டானிஷ்க் நகை விளம்பரங்கள் வந்திருக்கின்றன. இதற்கு பொருத்தமாய் பேட்டியின் தலைப்பிலேயே நகை வந்துவிட்டது. இதற்கென அந்நிறுவனங்களிடம் அதிக தொகையோ, இல்லை கவர் ஸ்டோரி பேக்கேஜ் என்ற பெயரிலோ நடந்திருப்பது அப்பட்டமான வியாபாரம். 
குமுதத்தின் நோக்கம் இப்படி விளம்பரத்தை வாங்குவதாக இருக்கிறது என்றால், சூர்யாவின் குறிக்கோள் தனது சுயநல சுரண்டலை நியாயப்படுத்துவதாக இருக்கிறது. குறிக்கோளும், அதை அடைவதற்கான செய்கைகளை நியாயப்படுத்துவதும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் அல்லவா? அதனால்தான் குமுதமும் சூர்யாவும் கைகோர்த்திருக்கிறார்கள்.

இலங்கை தமிழர்கள் ஆர்ப்பாட்டம் Vaiko Gang அதிர்ச்சி



இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு ஆன்மீக சுற்றுலா வந்த 184 இலங்கை பயணிகள், தமிழ்நாட்டில் உள்ள சில இயக்கங்களின் எதிர்ப்பு காரணமாக திருப்பி அனுப்பப்பட்டனர். மேலும்,  திருச்சி விமான நிலையத்தில் இலங்கை பக்தர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டது.

இந்நிலையில் இலங்கை பக்தர்கள் மீது தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, இலங்கை தலைநகர் கொழும்பில், தமிழர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200 தமிழ் வியாபாரிகள் கலந்துகொண்டு, இந்தியா வரும் இலங்கை மக்களின் பாதுகாப்பை இந்திய அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டுமென கோஷமிட்டனர்.

Nira Radia 5,800 தொலைபேசி உரையாடல்களையும் தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவு

 Submit Radia Transcripts Two Months Says Sc
டெல்லி: அரசியல் நீரா ராடியா விவகாரத்தில் பதிவு செய்யப்பட்ட 5,800 தொலைபேசி உரையாடல்களின் நகல்களைத் தொகுத்து 2 மாதங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று வருமான வரித்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ், டாடா நிறுவனம் உள்ளிட்டவை தொடர்பாக நீரா ராடியா பேசிய டேப் வெளியானது தொடர்பாக மத்திய அரசு உரிய விசாரணை நடத்தவில்லை என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கண்டனம் தெரிவித்திருந்தது.
தங்கள் நிறுவனம் தொடர்பாக வெளியான நீரா ராடியா டேப் குறி்த்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று டாடா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம்: காவிரியில் எவ்வளவு தண்ணீர் திறந்துவிட்டீர்கள்?

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு எவ்வளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 "காவிரி நடுவர் மன்ற தீர்ப்புப்படி தமிழகத்திற்கு தண்ணீர் தரமறுக்கும் கர்நாடக அரசை எதித்து தமிழக அரசு ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து பல ஆண்டுகளாக நடத்தாமல் இருக்கும் காவிர் நதிநீர் ஆணையக் கூட்டத்தை நடத்தக் கோரி மேலும் ஒரு மனுவை தமிழக அரசு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
அதையடுத்து காவிரி நதிநீர் ஆணையக் கூட்டம் வரும் 19ம் தேதி மாலை பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடக்கிறது. இதற்கிடையே கர்நாடகத்தில் நல்ல மழை பெய்தும், கபினி அணை நிறைந்தும் அம்மாநில அரசு மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்துவிடவில்லை.

அமலா பால் அலப்பறைகள் செய்யாமல் ஆர்வத்துடன்


சில படங்களிலேயே வளரும் நடிகை, பெரிய நடிகையாக வருவார் என புகழப்பட்ட நடிகை அமலா பால், படங்கள் சரிவர கைகொடுக்காததால் படிப்பை தொடரப்போனார் 
படிப்பையாவது முடித்துவிட்டு வருவோம் என ”தேர்வு எழுத வேண்டும் அதனால் படங்களில் நடிக்கவில்லை” எனக் கூறிவிட்டு சென்றார். தேர்வு முடிந்து வந்ததும் சரியான நேரம் கனியும் என காத்திருந்த அமலா பாலுக்கு கைகொடுத்தது இயக்குனர் சமுத்திரக்கனி தான். 3 வருடங்களாக ஆதிபகவன் படத்தில் நடித்துக்கொண்டிருந்த ஜெயம் ரவி நடிப்பில் சமுத்திரக்கனி இயக்கும் நிமிர்ந்து நில் படத்தில் தான் அமலா பால் கதாநாயகிமுன்பு மாதிரி அலப்பறைகள் ஏதும் செய்யாமல், அமைதியாக ஆர்வத்துடன் எல்லாவற்றையும் கேட்டு கேட்டு நடிக்கிறாராம். ஜெயம் ரவியும் சமுத்திரக்கனிக்கு தன் வீட்டில் ஒரு பார்ட்டி கொடுக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறாராம். சமுத்திரக்கனி இருவரது ஒத்துழைப்பாலும் கனிந்து கிடக்கிறாராம்.

மதுரை கிரானைட்டு.. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, சசிகலா, அழகிரி பி,ஆர்.பழினிச்சாமி


கற்காலம் முதல் இன்றைய இணையப்புரட்சி காலம் வரை. இருப்பினும் கி.மு. 2600இல்தான் மனிதகுலம் கிரானைட்டின் சிறப்பை உணர்ந்தது. காலத்தால் அழிக்க முடியாத பல கட்டுமானங்களை உருவாக்கியிருக்கிறது.”
இந்தத் தொகையறாவெல்லாம் எதற்காக என்று கேட்கிறீர்களா?
கிரானைட் திருட்டு கேசில் கைது செய்யப்பட்டு, வெள்ளையும் சொள்ளையுமாக,  போலீசார் புடை சூழ மெல்ல மிதந்து வரும், பி.ஆர்.பழனிச்சாமியின் சாதனைகளை விதந்து, இந்து ஆங்கில நாளேட்டில் வெளியிடப்பட்டுள்ள, செய்தி போல தோற்றம் தரும் விளம்பர வாசகங்கள். இன்றல்ல, டிசம்பர் 10, 2010 அன்று.
இஸ்தான்புல் விமானநிலையம், தோஹா மசூதி, துபாய் ரேஸ் கோர்ஸ், தமிழ்நாடு புதிய சட்டமன்றக் கட்டிடம், இன்னும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, ரசியா, தென்கிழக்காசியா என எல்லா இடங்களிலும் உள்ள மாபெரும் கட்டிடங்களை அலங்கரிப்பவை, மதுரை மாவட்டத்தையே கண்டதுண்டமாக வெட்டித் துண்டு போட்டு சாமியால் விற்பனை செய்யப்பட்ட கிரானைட்டுகள்தான் என்று பெருமை பொங்க கூறுகிறது அந்த செய்தி.

மதவெறியின் பிடியிலிருந்து குமரியை மீட்பது எப்போது?

நித்திரவிளை-படுகொலை1

குமரி மாவட்டம் நித்திரவிளையில் கிறிஸ்தவ இளைஞரை ஆ.எஸ்.எஸ்– பா.ஜ.க கும்பல் அடித்துக் கொன்ற செய்தி வெளியானது  நினைவிருக்கலாம். வழக்கமாக, வடமாநிலங்களில் நடக்கும் ஒவ்வொரு வன்முறை வெறியாட்டமும் பா.ஜ.கவுக்கு சிறந்த அறுவடையை வழங்கி வந்துள்ளது. நித்திரவிளை சம்பவமும் அப்படியொரு வாய்ப்பை வழங்காதா? என்ற ஏக்கத்தில் உள்ளது பா.ஜ.க.
தனிப்பெரும் கட்சியாக பா.ஜ.க, குமரியில் உள்ள போதும் ஒரே ஒரு முறை தவிர்த்து ஒரு எம்.பியையோ, எம்.எல்.ஏவையோ பெற முடியாத நிலையில் இருக்கிறது.  மேலும் சிறுபான்மை மக்களை நிரந்தர அச்சத்தில் உழல வைக்கும் ஆர்.எஸ்.எஸின் பாசிச செயல்திட்டத்திற்கும் குமரியின் தனிச்சிறப்பான நிலைமைகளும், பண்பாட்டு காரணங்களும் இடமளிக்கவில்லை. இந்த விரக்தியே எட்வின் ராஜ் கொலையில் வெளிப்பட்டிருக்கிறது. ஆனால்,  கொலை போன்றதொரு வெறியாட்டத்திற்கு அங்குள்ள இந்து நாடார்களிடம் ஆதரவை பெறுவது ஆர்.எஸ்.எஸுக்ககு சற்று சிரமமாக இருக்கிறது.

ஆசிரியைகளின் சேலையை மிதித்து தகாத முறையில் மாணவர்கள்




நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் அருகேயுள்ள திருமலாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. அதைச்சுற்றியுள்ள 10 பட்டி கிராமத்தின் மாணவ மாணவியர் 909 பேர்கள் இந்தப் பள்ளியில் பயினறு வருகின்றனர்.தலைமை ஆசிரியை மகேஸ்வரி அவரோடு 21 ஆசிரியைகள் 7 ஆசிரியர்கள் என 28 பேர் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே இந்தப்பள்ளியில் உள்ள மாணவர்களின் நடவடிக்கைகள் ஆசிரிய ஆசிரியைகளை மன உளைச்சலுக்குள்ளாக்கி இருக்கிறது.சில நாட்களுக்கு முன்பு ஆசிரியர் ஒருவரை 9ம் வகுப்பு மாணவன் தாக்கியதால் டி.சி.கொடுத்து அனுப்பப்பட்டான். அதே போல் +1, +2 வலாற்று பிரிவு மாணவர்கள் சிலர் வகுப்பறையில் ஆசிரியைகளை கேலி செய்வது செல்போனில் அவர்களைப் படமெடுப்பது சேலைத் தலைப்பை காலால் மிதித்து அவர்களை உறவு முறை சொல்லி நக்கலடிப்பது போன்ற  தகாத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.

ராமதாஸ்: ஜெயலலிதா மக்களை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிக்கிறார்

ஆட்சி அதிகாரத்தை வைத்துக் கொண்டு மக்களை அடக்கும் முயற்சியில் ஈடுபட்டால், தேர்தலின் போது வாக்குச்சீட்டு என்ற அதிகாரத்தை பயன்படுத்தி மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்பதை முதல்வர் உணரவேண்டும். 
கூடங்குளம் மக்கள் மீது அடக்குமுறை செய்யாமல், அவர்களுடன் தமிழக முதல்வர் நேரில் பேச வேவண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அனுப்பியுள்ள அறிக்கையில்,
 கூடங்குளம் பகுதி மக்களின் உயிருக்கும், வாழ்வாதாரத்துக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அணுமின்நிலையத்தை திறக்கக்கூடாது என்று வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கடந்த ஓராண்டிற்கும் மேலாக அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆனால், மத்திய, மாநில அரசுகள் மக்களின் உணர்வுகளை காலில் போட்டு மிதித்துவிட்டு அணு உலையை திறப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.

அமைச்சர் ஜெகத்ரட்சகன் பதவியும் கோவிந்தா ????

தி.மு.க.-வின் அதி பணக்கார அமைச்சர் நிலக்கரி முறைகேடு விவகாரத்தில்! தி.மு.க. திடுக்!!தி.மு.க. ஏற்கனவே ஒரு ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் மாட்டிக்கொண்டு படாத பாடு பட்டது.
  அதுவே இன்னமும் முடியவில்லை. இப்போது, நாட்டை உலுக்கி வருமம் நிலக்கரி சுரங்க விவகாரத்தில் தி.மு.க.வை சேர்ந்த மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் பதவியும் கோவிந்தா ஆகிவிடும் போலுள்ளது.
தி.மு.க. ஏற்கனவே இரு மத்திய அமைச்சு பதவிகளை (ஆ.ராசா, தயாநிதி மாறன்) பறிகொடுத்துள்ளது. மற்றொரு எம்.பி.-யை (கனிமொழி) ஜெயிலுக்கு அனுப்பி, பெயிலில் எடுத்து வெளியே உலாவ விட்டிருக்கிறது. இந்த நிலையில் ஜெகத்ரட்சகனின் பதவியும் பறிக்கப்பட்டால், தி.மு.க. தலையில் கை வைத்து உட்கார்ந்து விடும்.

கலாநிதி மாறனிடம் அமலாக்க பிரிவு விரைவில் விசாரணை

 2g Case Ed Question Kalanidhi Maran Soon
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஏர்செல்-மேக்ஸிஸ் நிறுவன பங்குகள் விற்பனை தொடர்பாகவும், சன் டைரக்ட் நிறுவனத்துக்கு ரூ. 550 கோடி கைமாறிய விவகாரம் தொடர்பாகவும் சன் டிவி அதிபர் கலாநிதி மாறனிடம் அமலாக்கப் பிரிவு விரைவில் விசாரணை நடத்தவுள்ளது.
சிவசங்கரனுக்குச் சொந்தமாக இருந்த ஏர்செல் செல்போன் நிறுவனத்துக்கு 2ஜி லைசென்ஸை ஒதுக்க அப்போது மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் தாமதம் செய்ததாகவும், பின்னர் அவரது நெருக்குதலால் அந்த நிறுவன பங்குகள் மலேசியாவைச் சேர்ந்த அனந்தகிருஷ்ணனின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு கைமாறியதாகும், பங்குகள் கைமாறிய பிறகே 2004-05ம் ஆண்டில் 2ஜி லைசென்ஸ் ஏர்செல்லுக்கு வழங்கப்பட்டதாகவும் புகார் உள்ளது.

Subramaniam Swamy: தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்

 President S Rule Should Be Imposed In Tamil Nadu டெல்லி: இலங்கையுடனான மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கைகளில் தமிழக அரசு தலையிடக் கூடாது என ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி கூறியுள்ளார். தமிழகம் வரும் சிங்களவர்களுக்கு பாதுகாப்பு தருவதில் முதல்வருக்கு தோல்வி ஏற்படுமானால் தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தவும் மத்திய அரசு தயங்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் தமிழ்நாட்டிற்கு வந்த சிங்கள யாத்ரீகர்கள் அடித்து திருப்பி அனுப்பப்பட்டனர். இது குறித்து
வியாழக்கிழமையன்று சுப்ரமணியசாமி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியதாவது :
தமிழகம் வரும் சிங்களர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும். இலங்கை அரசுடனான இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கைகளில் தமிழக அரசு தலையிடுவதை நிறுத்த வேண்டும்;
முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு இதை பின்பற்றுவதில் தோல்வி ஏற்படும் பட்சத்தில் தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தவும் மத்திய அரசு தயங்கக் கூடாது என்றும் சாமி கூறியுள்ளார்.
இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச மத்தியப் பிரதேச மாநிலம் வருவதற்கு மதிமுக தலைவர் வைகோ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் ராஜபட்ச வருகையின்போது ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் கூறியுள்ளார். இது குறித்து கருத்த கூறியுள்ள சாமி, மத்தியப் பிரதேசத்தில் வைகோ ஆர்ப்பாட்டம் நடத்தினால் அவரை மாநில அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

கமலஹாசன் :கற்பிப்பது ஒரு தியாகம்.


செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினத்தைப் பற்றி நடிகர் கமலஹாசன் அளித்த பேட்டியில்” கற்பிப்பது ஒரு தியாகம். அது கற்றவர்களுக்கெல்லாம் இருக்காது. ஒரு சிலருக்கே அது இருக்கும். எனக்கு அந்த தியாக மனப்பான்மை மிகவும் குறைவு. கற்பதில் ஆர்வம் அதிகமாய் இருப்பதனால் நான் கற்றுக்கொடுக்கும் தியாகத்தை செய்யத் தயங்குவேன். 
அதனால் கற்றுக்கொடுப்பவர்கள் மேல் மிகுந்த அன்பும், பாசமும், மரியாதையும் உண்டு. மற்றபடி கற்பிக்கும்போது சற்று தங்கி இருக்க வேண்டிவரும்.

இந்தியாவிற்குள்ளேயே பாஸ்போர்ட், விசா! தாக்கரேக்களின் இனவெறி!

உத்தவ் தாக்கரே
காராஷ்டிர மாநிலத்திற்குள் நுழையும் பீகாரிகள் இனிமேல் அனுமதிச்சீட்டு பெற்றுதான் வர வேண்டும் என்கிறார் சிவசேனாவின் செயல்தலைவர் உத்தவ் தாக்கரே. தனது பங்காளி மகாராஷ்டிர நவநிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ்தாக்கரேயுடன் சேர்ந்து இனவெறியைக் கக்கும் வேலையை உத்தவ் துவங்கியுள்ளார்.
“மராட்டியத்தில் வந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டுவிட்டு பீகாருக்கு போய் பதுங்கி விடும் குற்றவாளிகளை எங்களது போலீசு கைதுசெய்ய வந்தால் நிதிஷ்குமாரின் அரசு ஒத்துழைப்பு தர வேண்டும். அப்படி தவறினால் அடுத்த தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அவரை ஆதரிக்க மாட்டோம்” என்று மிரட்டுகிறார் உத்தவ். முதலில் வங்க தேசத்திலிருந்து ஊடுருவும் முசுலீம்களால்தான் பிரச்சினை என்ற இக்கும்பல் தற்போது மும்பைக்கு பிழைப்பு தேடி வரும் பிற மாநில உழைக்கும் மக்கள்தான் பிரச்சினை என்கிறது.

When women were kings ஜெயமோகனின் மலையாளப்படம் ஒழிமுறி

என் முதல் மலையாளப்படம் ஒழிமுறி. நாளை [7-9-2012] வெளியாகிறது. படம் வெளியாவது ஒரு விசித்திரமான அவஸ்தை. பெரும்பாலும் முதல்நாளில் சரியான சித்திரமே வராது. முதலில் படம்பார்க்கச்செல்பவர்கள் குழப்பமான, முடிவெடுக்கமுடியாத ஒரு பெரும்கூட்டம். கூடவே அது ‘ஸ்டார்’ படம் அல்ல என்றால் தொடர்ச்சியாக அங்கே கூட்டமில்லை, இங்கே கூட்டமே இல்லை என்றவகைக் கருத்துக்களும் வரும். நல்லவேளை நான் ஊரில் இல்லை
மணிரத்னம் சொன்னார். ‘ஆமாம் , எத்தனை சூப்பர்ஹிட் பார்த்தாலும் அந்த ஒருவாரமும் அவஸ்தைதான். ஆனால் அதுதான் சினிமாவில் இருப்பதில் கிடைக்கும் உச்சகட்ட ஆனந்தமும்கூட. ஒரு படத்தின் அலைகள் முடிந்ததும் அடுத்த பதற்றத்துக்காக மனம் ஏங்க ஆரம்பித்துவிடும்’


When bilingual writer B Jeyamohan found fragments of palm-leaf records in an old government storeroom in Nagercoil, Tamil Nadu, his curiosity was piqued. A close study revealed that they were actually ozhimuris (small records) of divorce among Nair couples.
Intrigued, Jeyamohan began taking a closer look at the matrilineal system that once prevailed in the Nair community in the erstwhile southern Travancore. The result was Uravidangal, a book in Malayalam, that delves into a time when succession to property was traced through the women in the family. Soon after it was published, two years ago, Malayalam director Madhupal evinced an interest in turning the book into a film.
The film, Ozhimuri, will release in July. Produced by PN Venugopal, it stars Lal, Swetha Menon and Asif Ali. "The idea is to highlight an age when women enjoyed maximum freedom within the family and to trace the factors that led to its collapse, " says the Nagercoil-based writer, who has also written the script.
The film's shooting is underway in and around Kanyakumari. It took Jeyamohan and the director two years to work out the complex plot into a script. "If you trace the matrilineal system, you will find that it existed even during the late Chera period. The ancestral property was enjoyed by the children of the women in the family which provided women with a sense of security and safety, " says Jeyamohan, who writes in both Malayalam and Tamil and has penned the script for Tamil hits like Naan Kadavul and Angadi Theru.
The Nair families of Travancore, particularly the southern part of the region, were known for their strict adherence to the matrilineal system. (As per this system, the mother in the family became stronger than the father. The right to the property was also traced through the women in the family. ) However, with the introduction of the Nair Act of 1925 in Travancore and the Nair Regulation Act in Cochin in 1938, the matrilineal system was abolished. "When the system ended in the 1940s, women lost all power, " says Jeyamohan.

பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்

பதவி உயர்விலும் இடஒதுக்கீடு எஸ்.சி., எஸ்.டி.களுக்கு அளிப்பதும் வரவேற்கத்தக்கது பிற்படுத்தப்பட்டவருக்கும் அளிப்பது ஏற்புடையதே! கழகத் தலைவர் வீரமணி அறிக்கையைச் சுட்டிக்காட்டி தி.மு.க. தலைவர் கலைஞர் அறிக்கை

 தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள் மற்றும் பிற்படுத் தப்பட்டவருக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்றார் தி.மு.க. தலைவர் கலைஞர்.
கலைஞர் அவர்கள் நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
தாழ்த்தப்பட்டோருக்கும்,  பழங்குடியினருக்கும்  தற்போது வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு  அளிக் கப்படுகிறது.  பதவி உயர்விலும்  இட ஒதுக்கீடு  அளிக்க அலகாபாத் உயர்நீதி மன்றமும், அதைத் தொடர்ந்து உச்ச நீதி மன்றமும் தடை விதித்த காரணத்தால்,  நாடாளு மன்றத்தில்  அதற்காக சட்டம் இயற்ற மத்திய அரசு தீர்மானித்தது.  ஆனா லும் கடந்த சில நாட்களாக நாடாளு மன்றம் அன்றாடம் முடக்கப்படும் நிலையில்,  பதவி உயர்வில் இட ஒதுக் கீடு அளிக்க வகை செய்யும் மசோதா வினை இந்தத் தொடரில் நிறைவேற்ற இயலுமா என்பது கேள்விக்குறியாக இருந்தது.   பதவி உயர்விலும் அரசுப் பணிகளில்  எஸ்.சி., எஸ்.டி., பிரிவின ருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும்  சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
இந்தச் சட்டத் திருத்தத்தை நமது அமைச்சர் நாராயணசாமி அவர்கள் தாக்கல் செய்வார் என்றும் அறிவிக்கப் பட்டிருந்தது.  அவர் அளித்த பேட்டி யிலே கூட  இந்த மசோதா ஒருமனதாக நிறைவேற  காங்கிரஸ், கூட்டணி கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.   இன்றைக்கும் நாடாளுமன்றத்தில்  அமளி நிலவிய போதிலும், அதற்கு மத்தியில்  அரசுப் பணிகளில், பதவி உயர்வில்  எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு  இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா  மாநிலங்களவை யில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்தச் சட்டத் திருத்தத்தை சமாஜ்வாடி கட்சியும், அதன் தலைவர் முலாயம் சிங் அவர்களும் எதிர்த்திருக்கிறார் கள்.  அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக் கும், மலைவாழ் மக்களுக்கும்  பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கூடாது  என்று சொல்லவில்லை,  அவர் ளோடு  பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் சேர்த்து அந்தச் சட்டத் திருத்தத்தை கொண்டு வர வில்லையே என்று தான் கேட்டிருக்கிறார்.  இது நமக்கும் ஏற்புடைய கொள்கைதான்.  

வியாழன், 6 செப்டம்பர், 2012

7,000 கோடி கடன், வங்கிகளை மல்லையா படுத்தும் பாடு!


 Kingfisher Airlines Lenders Demand Mallya Presence
மும்பை: கிங்பிஷர் நிறுவனத்துக்கு ரூ. 7,000 கோடி வரை கடன் கொடுத்துள்ள நிறுவனங்கள் அதைத் திரும்ப வசூலிப்பது குறித்து நடத்தவுள்ள பேச்சுவார்த்தையில் கிங்பிஷர் அதிபர் விஜய் மல்லையாவும் கலந்து கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளன.
அவருக்குக் கடன் கொடுத்துள்ள பொதுத்துறை, தனியார் துறை வங்கிகள் இணைந்து ஒரு கூட்டமைப்பு போல அமைத்து, கடனை திரும்ப வசூலிப்பது குறித்து பேச்சு நடத்தி வருகின்றன. இதில் விஜய் மல்லையா அதிகமாக கலந்து கொள்வது இல்லை. அவரது நிறுவன அதிகாரிகளும் சார்ட்டர்ட் அக்கெளண்டன்டுகளும் மட்டுமே கலந்து கொள்கின்றனர்.
இவர்களால் முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்க முடிவதுமில்லை. இதனால் பேச்சுவார்த்தைகள் நடந்தாலும் இதுவரை எந்த பலனும் வங்கிகளுக்கு இல்லை. நாட்கள் தான் கடந்து வருகின்றன. (இந் நிலையில் வங்கிகளின் இன்றைய கூட்டத்துக்கும் மல்லையா வரவில்லை. அவர் வெளிநாட்டில் பயணத்தில் இருப்பதாகக் கூறப்பட்டது. இத்தனைக்கும் இந்தக் கூட்டம் முன்பே திட்டமிடப்பட்ட ஒன்றாகும்)
மல்லையாவின் இந்த ஐடியாவை ரொம்ப லேட்டாக புரிந்து கொண்டுவிட்ட வங்கிகள், இப்போது அவரும் பேச்சுவார்த்தைக்கு கட்டாயம் வர வேண்டும் என்று கூறியுள்ளன.

கல்லூரி ராகிங் Sub Inspector மகன் கேங் லீடர் டிஸ்மிஸ்-

 சென்னை மேடவாக்கம் அருகே உள்ள பொன்மாரில் பிரின்ஸ் டாக்டர் வாசுதேவன் என்ஜினீயரிங் தொழில் நுட்ப கல்லூரியில் ராகிங்கில் ஈடுபட்ட 3-ம் ஆண்டு மாணவன் விஜித் டிஸ்மிஸ் செய்யப்பட்டான். அவனது கூட்டாளிகள் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
விஜித் தலைமையில் அசாருதீன், பார்த்தசாரதி, வாசுதேவன், முத்துக்கிஷ்ணன், அசிம்முகமது அபீஸ் ஆகிய மாணவர்கள் கும்பலாக சேர்ந்து கல்லூரியில் ராக்கிங் செய்து வந்தனர். கடந்த வாரம் முதலாமாண்டு மாணவன் அஸ்வின் ராஜை ராக்கிங் செய்திருக்கின்றனர். ஆனால் அஸ்வின்ராஜ் உடன்படாததால் விஜி தலைமையிலான கும்பல் கடுமையாகத் தாக்கியிருக்கிறது. இதைப் பார்த்த பேராசிரியர்கள் அஸ்வின்ராஜை காப்பாற்றினர்.
இது தொடர்பாக கல்லூரியின் ராக்கிங் தடுப்புக் குழு விசாரணை நடத்தியது. ராகிங் கோஸ்டிக்கு தலைமை வகித்த விஜி, தேனாம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் வில்சனின் மகன். இதைத் தொடர்ந்து வில்சனை கல்லூரி நிர்வாகம் அழைத்தது. ஆனால் தனது மகன் அப்படி செய்யவில்லை என்று கூறியிருக்கிறார்.

ஒரு மணல் லாரி ஓனரிடம் 14 நிலக்கரி சுரங்கங்கள்!

Posted by:

 Ujjal Upadhyay The Man Who Controls 14 Coal Blocks மும்பை: நாட்டையே உலுக்கி எடுத்து வருகிறது நிலக்கரி சுரங்க ஊழல். பெருத்த மெளனம் சாதித்து வருகிறார் பிரதமர் மன்மோகன் சிங். பாஜக உள்ளிட்ட கட்சிகள் நாடாளுமன்றத்தை ரணகளப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் ஒரே ஒரு தனி நபரிடம் மட்டும் 14 நிலக்கரி சுரங்கங்கள் இருக்கின்றன என்ற ஆச்சரியத் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த நபரின் பெயர் உஜ்ஜால் உபாத்யாய். இவர் ஆரம்பத்தில் படு சாதாரணமான மனிதராக இருந்தவர். அதாவது மணல் லாரி உரிமையாளராக மட்டுமே இருந்தவர். இந்திய நிலக்கரிக் கழகத்திற்கு மணல் லோடு அனுப்பி வரும் சாதாரண சப்ளையர் மட்டுமே. ஆனால் இன்று இவருடைய நிறுவனமான இஎம்டிஏ (Eastern Mineral and Trading Agency) இன்று இந்தியாவிலேயே 3வது மிகப் பெரிய நிலக்கரி சுரங்க நிறுவனமாக திகழ்கிறது என்பது ஆச்சரியத்திலும் பெரும் ஆச்சரியமாகும்.
1981ம் ஆண்டு தனது தந்தை நிறுவிய மணல் சப்ளை நிறுவனத்தை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டார் உஜ்ஜால். இந்திய நிலக்கரி கழகத்திற்கு தொடர்ந்து மணல் சப்ளை செய்து வந்தார். இன்று இவரிடம் மொத்தம் 14 நிலக்கரி சுரங்கங்கள் இருக்கிறதாம். இங்கு 1.7 பில்லியன் டன் நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது.

300 கோடிக்கு காத்திருக்கும் தமிழ் சினிமா

தமிழ்-சினிமா
 அடுத்த 16 வாரங்கள் முடிவதற்குள் எப்படியும் ரூபாய் 300 கோடி வரை தமிழர்களிடமிருந்து வசூலித்து  விட வேண்டும் என்று தமிழ்ச் சினிமா பணப்பயிராக படையெடுப்பதற்கு தயாராகிறது.
மின்வெட்டோடு மின் கட்டணமும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. விலைவாசி உயர்வு விண்ணை முட்டுகிறது. ஒரு வேளை வயிறார உண்ணுவதற்கே கடுமையாக உழைக்க வேண்டுமென்ற நிலையில் அரசுப் பேருந்தில் பயணம் செய்வது கூட ஆடம்பரமான செயலாகி விட்டது. யானையைக் கூட கட்டி மேய்க்கலாம் போலிருக்கிறது. ஆனால், பிள்ளைகளை ஆரம்பப் பள்ளிக்கு கூட அனுப்ப முடியவில்லை. இவைதான் பெரும்பாலான தமிழக மக்களின் இன்றைய நிலை.
இத்தகைய வறண்ட தமிழகத்தில்தான் இந்த ஆண்டு முடிவதற்குள் எப்படியும் ரூபாய் 300 கோடி வரை வசூலித்து விட வேண்டும் என்று தமிழ்ச் சினிமா பணப்பயிராக படையெடுப்பதற்கு தயாராகிறது.
வரும் வெள்ளிக்கிழமையை (07.09.12) தவிர்த்து விட்டால், இந்த ஆண்டு முடிய இன்னும் 16 வாரங்கள் இருக்கின்றன. இந்த மூன்றரை மாதங்களுக்குள்தான் விக்ரம் நடித்த ‘தாண்டவம்’, கமலின் ‘விஸ்வரூபம்’, விஜய்யின் ‘துப்பாக்கி’, சூர்யாவின் ‘மாற்றான்’, கார்த்தியின் ‘அலெக்ஸ் பாண்டியன்’, விஷாலின் ‘சமர்’, முன்னணி இயக்குநர்கள் என ‘சொல்லப்படும்’ பாலாவின் ‘பரதேசி’, மணிரத்னத்தின் ‘கடல்’, கவுதம் வாசுதேவ் மேனனின் ‘நீதானே எந்தன் பொன்வசந்தம்’ ஆகிய படங்கள் வெளியாக இருக்கின்றன.

ஜெயலலிதா ஆட்சியில் நெடுமாறன் கூட்டம் ஊமையாவது ஏன்?

தமிழகத்தில் தினமும் எத்தனையோ ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. இலங்கையில் இருந்து தமிழ் எம்.பி-க்கள் வந்து போகிறார்கள். ஆனால், கலைஞர் நடத்திய மாநாட்டுக்கு மட்டும் இவர்களைப் போகக்கூடாது என்று ராஜபக்ச அரசாங்கம் தடுக்குமானால், அதற்கு என்ன காரணம்?
கலைஞர் நடத்தும் மாநாடு உலக அளவில் கவனம் பெறும், இந்தியாவை ஆளும் அரசாங்கத்தின் மனதையும் மாற்றம் செய்ய வைக்கும் என்பது அங்கே இருக்கிற ராஜபக்சவுக்குத் தெரிந்துள்ளது. இங்கே உள்ள நெடுமாறனுக்கு எப்படித் தெரியாமல் போனது?
'டெசோ’ மாநாடு நடந்ததுமே கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தின் முன்னால் தலைவர் கலைஞரின் கொடும்பாவியை சிங்கள வெறியர்கள் எரிக்கிறார்கள்.
'விடுதலைப்புலிகள் வைத்திருந்த கோரிக்கையை முன்னெடுக்கும் மாநாடு தமிழகத்தில் நடக்கிறது’ என்று ராஜபக்ச, தான் பங்கேற்ற கூட்டத்தில் பேசி இருக்கிறார்.
இத்தகைய பீதியை இலங்கையில் உருவாக்கிய கலைஞரை, நெடுமாறன் போன்றவர்கள் பாராட்ட வேண்டாம். பழி தூற்றாமலாவது இருக்கலாமே!
'சகோதரச் சண்டையைத் தொடங்கி வைத்தவரே கலைஞர்தான்’ என்று வரலாற்றைத் திரிக்கும் காரியங்களைச் செய்ய வேண்டுமா?

ஜெ. தரப்பு அதிர்ச்சி. நானே தொ டர்ந்து விசாரிப் பேன்,புது நீதிபதி சோமராஜூ

புது நீதிபதி சோமராஜூ, குற்றம்சாட் டப்பட்டவர்களுக்கு சட்டப்படி தண்டனை  

சிறப்பு வழக்கறிஞரும் ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டார். நீதிபதியும் ஓய்வு பெற்று விட்டார். ஜெ-சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் கதி என்ன என்ற கேள்வி தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் இந்த வழக்கின் முக்கியத்துவத்தை அறிந்தவர்களிடமும் உள்ளது.
அதற்கான விடையைத் தேடி பெங்களூருவுக்குப் பயணமானோம்.
ஆகஸ்ட் 31-ல் ஓய்வு பெற்ற நீதிபதி மல்லிகார் ஜூனய்யாவுக்கு பிரிவு உபசார விழா நடத்திய சிறப்பு நீதிமன்ற ஊழியர்களை சந்தித்தோம். அவர்கள் தமிழரான கோர்ட் அதிகாரி பிச்சமுத்துவைக் கை காட்டினார்கள். ""மல்லிகார் ஜூனய்யா போல எங்க நலனில் அக்கறை வைத்து செயல்பட்ட நீதிபதியை இதுவரை பார்த்ததில்லீங்க.

Kerala: தமிழர்களுக்கு நிலம் கொடுக்கக் கூடாது."மூணாறு,தேவிகுளம்

தமிழர்கள் அடர்த்தியாய் வாழும் கேரள பகுதிகளிலிருந்து தமிழர்களை விரட்டியடிக்க மலையாள அரசு (கேரள அரசு) முடிவு செய்திருக்கிறது. அதற்கான செயல் திட்டத்தில் குதித்திருக்கிறார்கள் மலையாள அதிகாரிகள்.
இதற்கிடையே, "செந்நீர்' எனும் தலைப்பில் சமூக சிந்தனையாளரும் எழுத்தாளருமான அன்வர் பாலசிங்கம் எழுதி "கொற்றவை' பதிப்பகம் அண்மையில் வெளியிட்ட "செந்நீர்' (மூணாறு மலைச்சரிவுகளின் கொடுங்கதை) என்ற நூல், கேரள அரசை தூங்கவிடாமல் செய்துகொண்டிருக்கிறது.
காரணம், தனது நூலின் முன்னுரையில், ""தேவி குளமும் பீர்மேடும் மூணாறும் முல்லைப்பெரியாறும் வழிவழியாய் தமிழ்க்குடியின் அசையாச் சொத்துக்கள். விட்டுக்கொடுத்து விட்டோம். விட்டுத்தான் கொடுத் திருக்கிறோம். யாருக்கும் எழுதிக் கொடுத்துவிட வில்லை. பல்கிப் பெருகியிருக்கும் எங்கள் சந்ததி களுக்கு தங்கள் முன்னோர்களின் சொந்த பூமியிலே பந்தம் இருக்கிறது. அதனால்தான் முல்லைப் பெரியாறை மீட்டெடுக்க லட்சம் பேர் திரண்டார்கள், திரளுவார்கள்... திரண்டே தீருவார்கள். இது அவர்களின் உரிமை. அதுவும் பூர்வீக உரிமை. மூணாறு என்பது சுற்றுலாத்தலமல்ல. அது எம் முன்னோர்களின் நினைவிடம். தேவிகுள மும் பீர்மேடும் முல்லைப் பெரியாறும் அவ்வாறே தான்''

இந்திய பணயக் கைதிகளை மீட்ட நைஜீரிய கடற்படை

Viruvirupu
டல் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட, 23 இந்திய மாலுமிகள் பேர் பணிபுரிந்த ஆயில் டேங்கர் கப்பல், நைஜீரியா கடற்படையால் மீட்கப்பட்டது.
நைஜீரியாவின் தென்மேற்கு மாநிலமான லாகோஸ் துறைமுகம் அருகே வைத்து, இந்த டேங்கர் கப்பல் கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்டது. சிங்கப்பூர் கப்பல் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான இந்த டேங்கர் கப்பலை துபாய் நிறுவனம் ஒன்று எண்ணை கொண்டு செல்வதற்காக நீண்ட நாள் வாடகைக்கு அமர்த்தியிருந்தது.
நேற்று பின் மாலைப் பொழுதில் நைஜீரிய கடற்படைக்கு சொந்தமான மூன்று FAC (Fast Attack Craft) ரக படகுகள் ஆயில் டேங்கரை நோக்கி வேகமாக சென்றபடி, வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தின.

தமிழ் நடிகைகளின் உணவு பழக்கங்கள் ம்ம் ரொம்ப முக்கியம்

 ரீமாசென் - என்ன தான் வயதானாலும், இன்னும் கட்டுடல் சற்றும் களையாமல், இளமையோடு காட்சியளிப்பவர் தான் ரீமாசென். இவர் தன் உணவாக காலையில் வெஜிடேபிள் சான்விட்ச் + ஆம்லெட், மதியத்தில் சாதம் + பாதியாக வேக வைத்த காய்கறிகளும், இரவில் பிட்சா + தந்தூரி சிக்கனை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அனுஷ்கா - சரியான எடை மற்றும் உயரத்தைக் கொண்ட அனுஷ்கா, உண்மையில் ஒரு யோகா டீச்சர். இவரது எடை முதலில் 108 கிலோவாக இருந்தது. பின்னர் அவர் பல உடற்பயிற்சி, யோகா, உணவில் கட்டுப்பாடு என்பனவற்றை செய்து, பின்னர் ஒரு அழகான கனவுக் கன்னியாக அனைவரது மனதில் இடம் பிடித்தார். இவரது இந்த எடை குறைவிற்கு காரணமான ஃபுட் சார்ட் என்ன தெரியுமா? அவர் தினமும் காலையில் இட்லியும், மதிய வேளையில் சிக்கன் மற்றும் மீனும், இரவில் சப்பாத்தி மற்றும் சிக்கனும் தான் சாப்பிடுவாராம்.
த்ரிஷா - மிகவும் பிரபலமான நடிகை த்ரிஷா முதலில் மாடலிங்கில் இருந்து,

ஸ்ரீவத்சாவை குறுக்கு விசாரணை செய்கிறார் ஆ.ராசா 2G வரும் 10- ந் தேதி முதல்


 2g Raja Cross Examine Witness Srivastava From Sept 10
டெல்லி: 2G ஸ்பெக்ட்ரம் வழக்கில் வரும் 10-ந் தேதி முதல் சாட்சியான ஸ்ரீவத்சாவை முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா குறுக்கு விசாரணை செய்ய டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
தொலைத்தொடர்புத் துறையில் துணை இயக்குநராகவும் ராசாவின் செயலராகவும் பணியாற்றியவர் ஏ.கே.ஸ்ரீவத்சவா. இவரிடம் ஸ்வான் டெலிகாமின் ஷாகித் பல்வா தரப்பு குறுக்கு விசாரணை செய்தது முடிவடைந்த நிலையில் தம்மை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்கக் கோரி ஆ.ராசா நேற்று மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இம்மனு மீது இன்று விசாரணைக்கு வந்த போது ஆ. ராசா, ஸ்ரீவத்சாவை குறுக்கை விசாரணை செய்ய அவகாசம் தேவை என்றும் தமது வழக்கறிஞர் சுஷில்குமார் இந்த வாரம் நீதிமன்றத்துக்கு வர இயலாத நிலை இருப்பதாகவும் கூறினார்.

ஜெயா வைகோ சீமான் போன்றோரால் தமிழகத்து பெரும் இழப்பு ஏற்படும்

 இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை விட ஐந்து மடங்கு இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது தமிழக துறைமுகங்களில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் வாகனங்கள் தான் அதிகளவில் ஓடிக் கொண்டிருக்கின்றன. அசோக் லேலண்ட் லாரிகள், பஸ்கள் மற்றும் ஹூண்டய், மாருதி கார்கள், டி.வி.எஸ்., உள்ளிட்ட நிறுவனங்களின் வாகனங்கள் அதிகளவில் அங்கு பயன்படுத்தப்படுகின்றன.
தமிழகத்துக்கு, இலங்கையில் இருந்து வருபவர்கள் மீது, தமிழ் அமைப்புகள் தாக்குதல் நடத்தி வருவதால், இலங்கையிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. இலங்கையில் இருந்து சிங்களர்கள் மட்டுமல்லாமல், தமிழர்களும் ஏராளமானோர் சுற்றுலா வருகின்றனர். அவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலால், தமிழர்களும் பாதிக்கப்படுகின் றனர்; தமிழகத்துக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
 இலங்கையிலிருந்து, அதிபர் மற்றும் அமைச்சர்கள் தமிழகம் வருவதற்கு, சில அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. சுற்றுலா வருபவர்களையும், விளையாட்டு வீரர்களையும் கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை. கடந்த வாரம், திருச்சி, கலை காவேரி நுண்கலைக் கல்லூரிக்கு, கலாசார விழாவுக்கு வந்த இலங்கை மாணவர்களை, திருப்பி அனுப்பும்படி, நாம் தமிழர் கட்சி யினர் போராட்டம் நடத்தினர். சில நாட்களுக்கு முன், சென்னை வந்த இலங்கை கால் பந்தாட்ட வீரர்களை, திருப்பியனுப்புமாறு உத்தரவிட்ட தமிழக முதல்வர், நேரு விளையாட்டு மைதான பொறுப்பாளர் தாமசை, "சஸ்பெண்ட்' செய்தார்.

மனைவியின் கையில் சூடம் ஏற்றி கற்பை சோதித்த கணவன்

திருக்கோவிலூர்: மனைவியின் கையில் சூடம் ஏற்றி, கற்பை சோதித்த கணவனை போலீசார் கைது செய்தனர்; மாமியார், கொழுந்தன் உட்பட, ஐந்து பேர் மீது, வழக்குப் பதிந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த, பிரம்மகுண்டம் கிராமத்தைச் சேர்ந்தவர், சடையன்,30; மனைவி அலமேலு,27. இவர்களுக்கு திருமணமாகி, எட்டு ஆண்டுகள் ஆகின்றன; ஆறு வயதில், பெண் குழந்தை உள்ளது. சடையன் வெளிநாடு சென்று, சமீபத்தில் ஊர் திரும்பினார். மனைவி மீது சந்தேகமடைந்து, அடித்துக் கொடுமைப்படுத்தி வந்தார். இரண்டு நாட்களுக்கு முன், மனைவியின் கையில் கற்பூரத்தை ஏற்றி வைத்து, அவரது கற்பை சோதித்துள்ளார். இதனால் வேதனையடைந்த அலமேலு, திருக்கோவிலூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். அலமேலுவின் கணவர் சடையன், மாமியார் பெரியாயி, கொழுந்தனார் மணிகண்டன்,28, உறவினர்கள் ராமர், திருமலை, சக்கரை ஆகியோர் மீது, இன்ஸ்பெக்டர் வழக்குப் பதிந்து, சடையனை கைது செய்தார்.

சிவகாசி வெடி விபத்து: 54 பேர் சாவு, 60 பேர் படுகாயம்

 சிவகாசி அருகே உள்ள முதலிப்பட்டியில் உள்ள ஓம் சக்தி பயர் ஒர்க்ஸ் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 54 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
விருதநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள முதலிப்பட்டியில் உள்ளது ஓம் சக்தி பயர் ஒர்க்ஸ் நிறுவனம். அந்த நிறுவனத்தில் 40 அறைகளில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளும், பட்டாசுகளுக்கான வெடி பொருட்களும் வைக்கப்பட்டிருந்தன.

தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக இனவெறியை ஜெயலலிதா கிளப்புகிறார்

ஜெயலலிதா முதலில் இலங்கையிலிருந்து கால்பந்து விளையாடுவதற்காக வந்த மாணவர்களை திருப்பி அனுப்பியதாலும், அவர்களை விளையாட அனுமதித்த தமிழக அரசு அதிகாரி ஒருவரை தற்காலிக பணி நீக்கம் செய்ததாலும், அதைப் பார்த்துவிட்டு, இலங்கையில் இருந்து வந்த பக்தர்களையும் அடித்து விரட்டியுள்ளனர்” 
ஈழத் தமிழரை தவிர்த்து, இலங்கையில் வசிக்கும்  இந்திய வம்சாவளி தமிழர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று தெரியுமா?
16 லட்சம் பேர்!
இவர்கள், ஈழத் தமிழர் அதிகம் வசிக்கும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இல்லை. சிங்கள மக்களுடன் மத்திய மாகாணத்தில் வசிக்கிறார்கள்!
இலங்கையில் இவர்கள் பொதுவாக இந்தியர்களாகவே கருதப்படுகிறார்கள்! இவர்களில் பெரும்பாலானவர்கள், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து இலங்கை சென்றவர்கள்!
தமிழகத்தில் 180 சிங்களவரை தாக்கி இலங்கைக்கு அனுப்பினால்,  சிங்கள மக்கள் மத்தியில் வாழும் 16 லட்சம் இந்தியத் தமிழர்களுக்கு ஏதும் ஆகாது என்று சீமானும், வைகோவும் நம்புவார்களானால்…
….சிங்கள மக்களின் மனிதாபிமானம்  பற்றிய மிக உயர்ந்த அபிப்பிராயம் சீமானுக்கும், வைகோவுக்கும் உள்ளது என்று அர்த்தம்!  
தாக்கப்படவர்களில் ஈழத்தமிழர்களும் அடங்குவர் இது ஜெயலலிதாவின் திட்டமிட்ட சதி 
தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக  ஜெயலலிதா இனவெறியை  கிளப்புகிறார் 

புதன், 5 செப்டம்பர், 2012

மதுரை புத்தகக் கண்காட்சி சிறப்பாக அமைத்திருந்தது


மதுரைக்காரர்களுக்கு தமுக்கம் என்றாலே கண்காட்சிதான் நினைவுக்கு வரும். சித்திரைக் கண்காட்சி, தொழில் வர்த்தகக் கண்காட்சி என ஆண்டு முழுவதும் ஏதாவது கண்காட்சி நடந்து கொண்டே இருக்கும். பி.ஆர்.பி, அழகிரி போன்ற மதுரையின் பெரிய பெரிய தலைகளின் இல்ல விழாக்கள் இங்கு தான் ஊர் வியக்க நடைபெறும். ராணி மங்கம்மாள் தன் அரண்மனையில் (அதுதான், இன்றைய காந்தி மியூஸியம்) இருந்து யானைகள், குதிரைகள், வீரர்களின் சாகசங்களையும் சண்டைகளையும் வேடிக்கை பார்க்கப் பயன்படுத்திய திடல்தான் தமுக்கம்.

.வைகோ சீமான் நெடுமாறன் சுய இன்ப வீரம்

ரசியல் ரீதியான கோரிக்கைகளைக் கூட இனவாத உணர்ச்சி பரபரப்பு அரசியலில் மூழ்கடித்து விடுவது திராவிட இயக்க கட்சிகளின் மரபு. இவர்கள் தமிழ் என்றோ இல்லை ஈழத்தமிழர்களை தொப்புள் கொடி என்றோ எந்த அளவுக்கு உருகி பேசுகிறார்களோ அந்த அளவுக்கு தமிழுக்கும், ஈழத்திற்கும் சமாதி கட்டப்படும்.
கருணாநிதி அஞ்சி அஞ்சி நடத்திய டெசோ மாநாட்டினால் ஏதும் செல்வாக்கு உயர்ந்து விட்டதோ என்றெண்ணிய ஜெயலலிதா போட்டியாக இராணுவப் பயிற்சியை விரட்டும் வேலையை எடுத்தார்.

சீமான் வைகோ படையுடன் நைஜீரியா பயணம் 23 இந்திய மாலுமிகள் அங்கு பணயக் கைதிகள்!

Viruvirupu
இந்திய மாலுமிகள் 23 பேர் பணிபுரிந்த ஆயில் டேங்கர் கப்பல் ஒன்று நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்டது என்ற தகவல், இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய மாலுமிகள் 23 பேரும் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர்.
நைஜீரியாவின் தென்மேற்கு மாநிலமான லாகோஸ் துறைமுகம் அருகே வைத்து, டேங்கர் கப்பல் கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்டுள்ளது. சிங்கப்பூர் கப்பல் நிறுவனம் (Pioneer Ship Management Services LLC) ஒன்றுக்கு சொந்தமான டேங்கர் இது. சிங்கப்பூர் நிறுவனம், தமது கப்பல் கைப்பற்றப்பட்ட தகவலை இன்று ஸின்ஹூவா செய்திச் சேவையிடம் உறுதி செய்துள்ளது.
சர்வதேச கப்பல் சங்கம் IMB விடுத்துள்ள செய்திக் குறிப்பின்படி, ஆயுதம் ஏந்திய கொள்ளையர்கள் இந்த டேங்கர் கப்பலுக்குள் ஏறி, மாலுமிகளை தாக்கியபின், கப்பலை கைப்பற்றியுள்ளார்கள். தாக்குதலுக்கு உள்ளான மாலுமிகளில், இந்திய மாலுமிகளும் உள்ளனரா என்ற விபரம் தெரியவில்லை.
ஆனால், பணயக் கைதிகளில் 23 இந்திய மாலுமிகள் உள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Kareena kapoorரை கலங்க வைத்துள்ள Saif Khan மகள் சாரா

Why Does Kareena Look Worried மும்பை: தனது காதலர் சைப் அலி கானின் மகள் சாரா நடிக்க வந்துவிடுவாரோ என்ற கலக்கத்தில் உள்ளாராம் கரீனா கபூர்.
பாலிவுட் நடிகர் சைப் அலி கானும், நடிகை கரீனா கபூரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருக்கின்றனர். அவர்கள் பல ஆண்டுகளாக காதலர்களாக இருந்துவிட்டு தான் தற்போது தம்பதிகளாகவிருக்கின்றனர். சைப் அலி கான் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர். அவருக்கு முதல் மனைவி மூலம் சாரா, இப்ராகிம் என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
கரீனா சைபை காதலிக்க ஆரம்பித்தபோது சிறுமியாக இருந்த சாரா தற்போது குமரியாகிவிட்டார். அந்த அழகிய குமரி அண்மையில் நடந்த பேஷன்ஷோ ஒன்றில் பங்கேற்றார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகின. அந்த புகைப்படங்களில் சாரா அழகு தேவதையாக காட்சியளிக்கிறார்.

இலங்கையர் தாக்குதலுக்கு ஜெயலலிதா தான் காரணம்:

சென்னை: தமிழகம் வரும் இலங்கை பயணிகள் மீது நடந்த தாக்குதலுக்கு  ஜெயலலிதா தான் காரணம் என்று திமுக தலைவர் கலைஞர்  குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்திலே ஆளுகின்ற அதிமுக அரசு, இலங்கையிலிருந்து விளையாடுவதற்காக வந்த கால்பந்து வீரர்களையெல்லாம் திருப்பி அனுப்பியதாலும், அவர்களை விளையாடுவதற்காக அனுமதித்த தமிழக அரசு அதிகாரி ஒருவரை தற்காலிக பணி நீக்கம் செய்ததாலும், அதன் தொடர்ச்சியாக தமிழகத்திற்கு வேளாங்கண்ணி, பூண்டி மாதா கோயில்களுக்கு வந்த சிங்கள சுற்றுலா பயணிகள் மீது பரவலாகத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

கலைஞர்: விளைவுகள் கடுமையாகக்கூடாது ஈழத்தமிழர்களின் பாதுகாப்பு


இது ஈழத்தில் வாழ்கின்ற தமிழர்களின் பாதுகாப்புக்காகவும் நலனுக்காகவும் விடுக்கின்ற வேண்டுகோள்: கலைஞர்
தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டு அறிக்கையில்கூறியிருப்பதாவது:-


தமிழகத்திலே ஆளுகின்ற அ.தி.மு.க. அரசு, இலங்கையிலிருந்து விளையாடுவதற்காக வந்த கால்பந்து வீரர்களையெல்லாம் திருப்பி அனுப்பியதாலும், அவர்களை விளையாடுவதற்காக அனுமதித்த தமிழக அரசு அதிகாரி ஒருவரை தற்காலிக பணி நீக்கம் செய்ததாலும், அதன் தொடர்ச்சியாக தமிழகத்திற்கு வேளாங்கன்னி பூண்டி மாதா கோயில்களுக்கு வந்த சிங்கள சுற்றுலா பயணிகள் மீது பரவலாகத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

கனிமொழி ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து???

Viruvirupu,
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தம்மை சேர்த்தது தவறு. அதனால் இந்த வழக்கில் இருந்து தம்மை விடுவிக்கக் கோரி தி.மு.க. எம்.பி. கனிமொழி தாக்கல் செய்த மனு, டில்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
“மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு கொள்கை வகுப்பதில், எந்த பதவியிலும் இல்லாத நான் எப்படி தொடர்பு பட முடியும்? கலைஞர் டிவி தொடர்பான ஆவணங்கள் எதிலும் நான் கையெழுத்திடவில்லை” என்று, தமது மனுவில் கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு, நீதிபதி ஏ.கே.பதக் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது. கனிமொழி சார்பில் பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜராகிறார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து விடுவிக்க கோரி கலைஞர் டிவியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சரத்குமார் தாக்கல் செய்த மனுவும், கனிமொழியின் மனுவுடன் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிகிறது. இதே கோரிக்கையை முன்வைத்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தாக்கல் செய்த மனுவை டில்லி உயர் நீதிமன்றம் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.

முட்டாள் தமிழக அரசியல்வாதிகளே! வாங்க மலை உச்சிக்கு” -இலங்கை அமைச்சர்!

Viruvirupu
நம்ம அரசியல்வாதிகள் பொங்கி எழ, இதோ அற்புதமான ஒரு விவகாரம். இதற்குமுன் இலங்கையின் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா இப்படியொரு கூற்றை கூறப்போக, தி.மு.க. முதல் எமது அனைத்து அவரியல்வாதிகளும் அவரை பிலுபிலுவென்று பிடித்துக் கொண்டார்கள்.
இம்முறை இந்தக் கூற்று, இலங்கை அமைச்சரிடம் இருந்து வந்திருக்கிறது.
“தமிழகத்தின் முட்டாள் அரசியல்வாதிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்” என்று கூறியுள்ள இலங்கை வீடமைப்பு துறை அமைச்சர் விமல் வீரவன்ச, “இவர்களது முட்டாள்தனத்துக்கு சாதாரண இடத்தில் வைத்து பயிற்சி கொடுத்தால் போதாது. இலங்கையின் அதியுயர் மலை உச்சியான பிதுருதலாகல மலை உச்சிக்கு அழைத்து வந்து, பயிற்சி அளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
அடாடா.. என்னாச்சு? என்ன காரணம்?

கயவர்கள்! மாணவர்கள், பெண்கள் குழந்தைகளை விரட்டிய

Viruvirupuமாணவர்களை  விரட்டும்  பணிகள், முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரிலும், தமிழகத்தின்  கட்சிக்காரர்களாலும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

“இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு கால்பந்து விளையாட வந்த மாணவர்களை தமிழக அரசு திருப்பி அனுப்பி உள்ளது. திருவாரூரில் உள்ள சர்ச்சுக்கு வந்த பக்தர்களும் அடித்து விரட்டப்பட்டுள்ளனர். இந்த இரு சம்பவங்களுக்கும் நாம் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம்” இவ்வாறு தெரிவித்துள்ளது,

நெடுமாறன் சொல்வது பொய்! பாலசிங்கமே சொன்னரே! தி.மு.க. விடுவதாக இல்லை!

 எம்.ஜி.ஆர். அவர்களைப் பகைத்துக் கொள்வது நல்லதல்ல’ என, அன்று புலிகள் அமைப்பு முடிவெடுத்தது
Viruvirupu
“1983-ம் ஆண்டுகளில் ஈழ போராளி இயக்கங்களுக்குள் பிரச்சினைகளையும், கருத்து மோதல்களையும் உருவாக்கியவரே கருணாநிதிதான்” பழ. நெடுமாறன் கூறியதில், உண்மை எத்தனை சதவீதம் உள்ளது என்பது, இந்த விவகாரங்களுடன் பரிச்சயமானவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
ஆனால், எதுவும் சொல்வதில்லை. “ஏதோ, ஐயா சொல்கிறார். சொல்லிவிட்டு போகட்டும். இதனால் டேமேஜ் ஏதும் ஆகப் போவதில்லை” என்று இருந்து விடுவார்கள்.