![]() |
மின்னம்பலம் : கடலூர் மக்களவைத் தொகுதியில் திமுக எம்பியான ரமேஷ் தனது முந்திரி தொழிற்சாலையில் பணியாற்றிய கோவிந்தராஜ் என்ற தொழிலாளியை அடித்துக் கொன்றதாக கொலை வழக்கில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
இதையடுத்து அவர் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்து திமுக தலைமைக்கு கடிதம் அனுப்பிவிட்டார்.
இந்த விவகாரத்தில் மின்னம்பலம் ஊடகம் மட்டுமே ஆரம்பம் முதல் தொடர்ந்து உண்மைகளை புலனாய்வு செய்து வாசகர்களுக்கு தெரிவித்து வந்திருக்கிறது.
கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி இரவு நடந்த சம்பவத்தின் அடிப்படையில் 20 ஆம் தேதி காலை கோவிந்தராஜின் மகன் செந்தில்வேல் கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் காவல் நிலையத்தில், “எனது தந்தை கோவிந்தராஜை திருட்டு பட்டம் சுமத்தி முந்திரி ஆலை உரிமையாளர் ரமேஷ் எம்.பி. உள்ளிட்டோர் தாக்கியதில் அவர் கொல்லப்பட்டிருக்கிறார். எனவே எம்பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புகார் கொடுத்தார்.