சனி, 9 பிப்ரவரி, 2019

நான் உயர்ந்த சாதின்னு காட்டிகிற பூணூலும் நான் நல்ல பெண் அப்டின்னு காட்டிகிற புர்க்காவும் ஒன்று தான் .

Devi Somasundaram : Burha is not right to choose ..
ரஹ்மான் மகள் மேடையில் தன் முகத்தை மூடி போட்ட உடை தொடர்ந்து பலவிதமான சர்ச்சைகள்...இந்து மதம் என்ற பெரும்பான்மை மதத்தினராலும், பகுத்தறிவுவாதிகளாலும் , ஒடுக்கபட்டவர்கள்னு சொல்லப்படும் தலித்தியவாதிகள் வரை ஏன் சில முற்போக்கு இஸ்லாமியர்களாலும் அனைவராலும் தாக்க படும் இஸ்லாத்தை நாமும் நம் பங்குக்கு அடிக்க வேண்டாமேன்னு அமைதியா இருப்பது பழக்கம்..
யார் ஒடுக்கபடுகிறார்களோ அவர்கள் பக்கம் நிற்கும் நிலை காரணம்...ஆனாலும் சில விஷயத்தை பேசாமல் போவதும் சரி இல்லை என்பதால் இதை எழுத வேண்டி வந்தது . ரஹ்மான் சகோதரி அல்லது மகள் என்ன உடை போடனும் என்பதை நாம் முடிவு செய்ய கூடாது தான்...ஆனால் புர்க்கா அடிமைதனத்தில் அடையாளம் என்பதை சொல்லி தான் ஆகனும்...ரஹ்மான் தன் மகளை புர்க்கா போடுன்னு நிர்பந்திக்கல . புர்க்கா போடாதன்னும் நிர்பந்திக்க இயலாது ..அது விமர்சனத்திற்குரியது இல்லை தான்... ஆனால் கதிஜா புர்க்கா அணிந்ததை அவரின் பகுத்தறிவற்ற தன்மைன்னு பேசாம கடக்க இயலாது ..
எல்லாத்தையும் ரைட் டூ சூஸ்ன்னு எடுக்க இயலாது ...புர்க்கா ரைட் டூ சூஸ்ன்னா பூணூலும் ரைட் டூ சூஸ் தான் .சாதியும் ரைட் டூ சூஸ் தான்.. ஒரு பெண் புர்க்கா அணியும் போது தன் குடும்பம் சார்ந்த ஆணையும் அவமான படுத்துகிறாள்ன்னு தான் அர்த்தம் .

கந்துவட்டி கும்பலின் நிழலுலகம்... - பொதுநலன் கருதி விமர்சனம்

pnkpnk   நக்கீரன் :கந்துவட்டி கொடுமையால் நெல்லையில் ஒரு குடும்பமே கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளித்து எரிந்ததை யாரும் அவ்வுளவு எளிதில் மறந்துவிட முடியாது. அந்த அளவு இந்த கந்து வட்டிக் கொடுமை தமிழகம் முழுவதும் புற்றுநோய் போல் பரவி எளிய மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அப்படி வாட்டி வதைக்கும் கந்துவட்டிக்கும் இந்த படத்திற்கும் என்ன சம்மந்தம்...?
கந்துவட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழில் செய்துவரும் நிழல் உலக தாதாக்கள் யோக் ஜெப்பி மற்றும் பாபு ஜெயனுக்கு இடையே கடுமையான தொழில் போட்டி நடந்து வருகிறது. இதில் யோக் ஜெப்பியின் கைத்தடியாக வரும் நடிகர் சந்தோஷ் பிரதாப் மக்களிடம் ஈவு இரக்கம் இன்றி கறாராகப் பணம் வசூலித்து வருகிறார். ஒரு பக்கம் காணாமல் போன தன் அண்ணனைத் தேடி வருகிறார் நடிகர் கருணாகரன். இன்னொரு பக்கம் நடிகர் அருண் ஆதிக் நடிகை சுபிக்ஷாவை துரத்தித்  துரத்திக் காதலிக்கிறார். மறுபுறம் பாபு ஜெயின் யோக் ஜெப்பியை கொல்லத் துடிக்கிறார். இதையடுத்து இவர்கள் அனைவரும் எப்படி ஒரு புள்ளியில் இணைகின்றனர், கந்துவட்டி கொடுப்பவர்கள் மற்றும் அந்தக் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை என்ன என்பதே 'பொதுநலன் கருதி'.

2009- யானைக்கவுனி' தலையில்லா உடல் .. கொலையாளி. சென்னை நகைக் கடை ஊழியர் ராஜஸ்தான் நேமிசந்த் சவுத்ரி (43)

சென்னை ஐஜி பெரியய்யா, கொலையாளி ராஜஸ்தான் நேமிச்சந்த் சவுத்திரி
THE HINDU TAMIL : சந்தியா கொலை வழக்கு போன்று உடல் பாகங்கள் மட்டுமே கிடைத்த யானைக்கவுனி சுரேஷ் குமாரின் தலையில்லா உடல் கிடைத்த வழக்கில் துப்பு துலங்கிய சுவாரஸ்யமான விவரம்.
வழக்கமாக பரபரப்பாக இயங்கும் சென்னையில் அதிலும் குறிப்பாக யானைக்கவுனி, பெரியமேடு பகுதிகளில் 2009-ம் ஆண்டு ஜூன் 7-ம் தேதி விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை அன்று காலை பணியிலிருந்த போலீஸாருக்கு அந்தத் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. யானைக்கவுனி காவல் நிலையம் அருகே உள்ள வெங்கட்ராயன் தெருவில் கிடந்த அட்டைப் பெட்டியில் 2 கால்கள் இடுப்புடன் துண்டிக்கப்பட்டு கிடப்பதாகத் தகவல் கிடைத்து அங்கு சென்று பார்த்தனர். அட்டைப்பெட்டியில் சாம்பல் நிற பேண்ட் அணிந்த நிலையில் கால்கள் கிடந்தன.

சசிகலா விடுதலை- தினகரனுடன் பாஜக பேரம்!

டிஜிட்டல் திண்ணை: சசிகலா விடுதலை-  தினகரனுடன் பாஜக பேரம்!மின்னம்பலம் :  “ஸ்டிராங்கான கூட்டணி தமிழ்நாட்டில் அமைத்தே தீர வேண்டும் என்பதில் பாஜக ரொம்பவும் தீவிரமாக இருக்கிறது. இதற்காக ஸ்பெஷல் டீம் ஒன்றை அமைத்திருக்கிறது பாஜக தலைமை. இந்த டீமில் நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங், பியூஷ்.கோயல் ஆகிய நான்கு பேர் இருக்கிறார்கள். இவர்கள்தான் தமிழ்நாடு கூட்டணி தொடர்பான விஷயங்களை டீல் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.
இந்த டீம் கையில் எடுத்திருக்கும் விஷயம் இதுதான். ‘பிரிந்து நிற்கும் அதிமுகவை நாம் முதலில் ஒன்று சேர்த்தாக வேண்டும். கொங்கு மண்டலத்தைப் பொறுத்தவரை கவுண்டர் சமுதாயத்து ஓட்டுகள் எல்லாம் எடப்பாடி கையில் இருக்கிறது. முக்குலத்தோர் வாக்குகள் தினகரன் பக்கம் இருக்கிறது. வன்னியர் சமுதாயத்து வாக்குகள் பாமகவிடம் இருக்கிறது. அதிமுக கூட்டணிக்கு பாமக வருவது என்பது கிட்டதட்ட உறுதியாகி இருக்கிறது. எடப்பாடியும், தினகரனும் ஒன்று சேர்ந்து நம் பக்கம் வந்தால் கவுண்டர்கள், முக்குலத்தோர், வன்னியர் என தமிழகத்தில் பிரதானமாக இருக்கும் மூன்று சமுதாயத்தின் வாக்குகள் நமக்கு வந்து விடும். இது இல்லாமல் அதிமுகவுக்கென இருக்கும் வாங்கு வங்கி அப்படியே நமக்கு கிடைக்கும். தேமுதிகவையும் நாம் இழுத்துவிட்டால் போதும். அத்துடன் பாஜக வாக்குகளும் சேர்ந்தால், தமிழ்நாட்டில் குறைந்தது நாம் 25 தொகுதிகள் ஜெயிக்க முடியும். நாம் நினைக்கும் இந்த கூட்டணி தமிழ்நாட்டில் அமைந்தே ஆக வேண்டும்” என்று அந்த டீமில் விவாதிக்கப்பட்டு இருக்கிறது.

அஸ்ஸாமில் GobackModi.. டிரேண்டிங் ...

ஆலஞ்சியார்  : ராஃபேல் விவகாரத்தில் பிரதமர்
மோடி மிக கடுமையான முறையில் சிக்கி
கொண்டதாக இன்று அநேகமான நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக அன்றைய பாதுகாப்பு துறை அமைச்சர்
மனோகர் பாரிக்கர் எழுதிய கடிதத்தில் எந்த டீலிங்காக இருந்தாலும் மோடியிடம் பேசிக் கொள்ளுங்கள் என்பதே மிக முக்கியமானதாக பேசபடுகிறது..
தி இந்து பத்திரிக்கை ஆசிரியர் நிர்மலா மீது எந்த குற்றசாட்டும் இல்லாத போது ஏன் பிரதமரை காப்பாற்ற இவ்வளவு முயற்சிக்கிறாரென கேள்வி எழுப்பியிருக்கிறார் .. மோடிக்கு எதிராக குற்றசாட்டின் கைகள் நீள்வதால் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக பத்திரிக்கைகள் எழுதுகின்றன ..இந்த பிரச்சினையில் இருந்து அவ்வளவு எளிதாக வெளியே வர முடியாது என்பது தான் உண்மையாகும்...ஏனெனில் ஆட்சி மாறும் நிலையில் மோடி விசாரணையை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது .. ..
திரு.ராகுல் நேரடியாக திருடரென குற்றம்சாட்டி பேசிவருகிறார்.. நேற்றுவரை ஊழலுக்கெதிரானவராக இதே ஊடகங்களால் கட்டமைக்கபட்ட பிம்பம் தகர்ந்தெறி தொடங்கியிருக்கிறது வெற்று கூச்சலும் வீராப்பும்,பொய்பித்தலாட்டமும் வாய்சவடாலும் நீண்டநாள் நிலைத்துநிற்காதென்று நீண்டகாலம் தாங்கிபிடிக்கமுடியாதென்று ஊடகங்கள் தூக்கியெறிய தயாராகியிருப்பது ஊடக அறம் இன்னமும் மிச்சமிருப்பதை உணர்த்துகிறது ..
2019 தேர்தல் பாஜகவிற்கு பெரும் சவாலாக இருக்கும் ..

இடஒதுக்கீடு கேட்டு குஜ்ஜார் இனத்தவர் போராட்டம்.. ராஜஸ்தான்


தினமலர்:ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 5 சதவீத இடஒதுக்கீடு கோரி குஜ்ஜார் இன மக்கள் ரயில் தண்டவாளங்களைத் தகர்த்தும், ரயில்களை மறித்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீடு கோரி குஜ்ஜார் இன மக்கள் இன்றும் (பிப்.,09) தங்களின் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். தண்டவாளங்களில் அமர்ந்து நகர மறுத்ததால் டில்லி, மும்பை, ஜெய்ப்பூர் செல்லும் ரயில்கள் பல மணி நேரம் தாமதமாகின. ஒரு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 7 ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. சில ரயில்களின் தூரம் குறைக்கப்பட்டுள்ளது.

சர்வம் தாளமயம் ..ஜான்சன் ஃபர்னான்து வரலாற்றை திருடி ராஜீவ் மேனன் மோசடி


சபாஷ் ஶ்ரீ கணேஷ் அவர்களே. நீங்கள் இந்த நேர்காணலில் பதிவு செய்த யாவும் 100க்கு 100 வரலாற்று மெய். கஞ்சிரா மாமுண்டியா பிள்ளை, புதக்கோட்டை தஷிணாமூர்த்தி பிள்ளை ஆகியோர் பற்றிய தகவல்கள் சுவையானவை.
என்னுடைய அம்மா வழி தாத்தா இத்தகவல்களை பல நாட்கள் என்னோடு பகிர நான் அதை ஒரு டைரியில் எழுதியும் வைத்தேன்.
ஃபர்னான்து பற்றிய மற்றோரு சுவையான பதிவு, உங்கள் அனைவரது அனுமதியுடன். பாலக்காடு மணி ஐயர் ஒரு முறை இவரிடம் "நீ எனக்கு முட்டு செய்து தருவதை காட்டிலும் பழனிவாளுக்கு (சுப்பிரமணியம் பிள்ளை) இன்னம் நன்றாகவே அமைத்து தருவது போல் எனக்கு படுகிறது. அவர் வாசிப்பில் இருக்கும் சுநாதம் என் வாசிப்பில் கூட இல்லை. நீ அப்படி என்னதான் ப்ரத்யேகமாக செய்து தருகிறாயோ அறியேன்" என்றாறே பார்க்கலாம். மணி ஐயர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி ஃபர்னான்தும் சில மாற்றங்கள் செய்தும் மணி ஐயருக்கு திருப்தியில்லை. விளையாட்டாக மீண்டும் ஒரு தடவை தன் வழக்கை நினைவூட்டினார். இந்த முறை ஃபர்னான்து "ஐயர்வாள் தவறாக எடுத்துக்கொள்ளவில்லையெனில் ஒன்றைக்கூறுகிறேன்" என்று சொன்னதும் ஆர்வம் மேலிட மணி ஐயரும் அவரை வினவ, ஃபர்னான்து கூறியதாக அறியப்படுவது "அந்த சுநாதம் பழனி ஐயா கைவிரல் நயமேயன்றி வேறு விசேஷமில்லை". இதை கேட்ட மணி ஐயரும் சிரித்துக்கொண்டே அதை அங்கீகரித்தார் வினயத்துடன். இப்படிப்பட்ட இசை மேதைகளையும், ஜாம்பவான்களையும் பற்றிய சுவாரசியமான தகவல்களும் சரித்திரப்பதிவேடுகளும் இருக்க, அவைகளை வெளிக்கொணர்ந்து மக்கள் அனைவரிடமும் அறிமுகப்படுத்துதலே இசைவாணர் அனைவர்க்கும் தரும் உரிய மரியாதை. சரியான வாதமே, ஒப்புகிறோம் கணேஷ் சார்!..   தகவலுக்கு நன்றி

வெள்ளி, 8 பிப்ரவரி, 2019

ராமலிங்கம் படுகொலைக்கு ஸ்டாலின் கண்டனம்… வன்முறைகளுக்கு முடிவு கட்ட வேண்டுகோள்

Dmk leader stalin has said that the assassination of ramalingam is highly condemnable tamil.oneindia.com - Keerthi: சென்னை:கும்பகோணம் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் மேலதூண்டில் விநாயகம்பேட்டையைச் சேர்ந்தவர் பாமக முன்னாள் நகரச் செயலர் ராமலிங்கம். அவர், கடந்த 5-ம் தேதி தமது வாடகை பாத்திரக் கடையை மூடிவிட்டு, மகன் ஷியாம் சுந்தருடன் ஆட்டோவில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, வாகனத்தை வழிமறித்த ஒரு கும்பல், ராமலிங்கத்தை அரிவாளால் வெட்டியதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து, ஷியாம் சுந்தர் கொடுத்த புகாரின்பேரில் திருவிடைமருதூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் முதல்கட்ட விசாரணையில், கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என திருபுவனம் முஸ்லிம் வடக்கு வீதி யாகூப் மகன் சர்புதீன், முகமது ரிஸ்வான் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

என்.ராம் : ரஃபேல் போர் விமான பேச்சுவார்த்தைகளை வலிமையற்றதாக்கிய பிரதமர் அலுவலகம்: உறுதியான எதிர்ப்பைத் தெரிவித்த பாதுகாப்பு அமைச்சகம்

படம். | ஆர்.வி.மூர்த்தி. tamil.thehindu.com : சர்ச்சைக்குரிய ரூ.7.87 பில்லியன் ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தைகளின் உச்சகட்டத்தில் பிரான்ஸுடன் பாதுகாப்பு அமைச்சகம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே பிரதமர் அலுவலகமும்  “இணைப்பேச்சுவார்த்தைகள்” நடத்தியதற்கு பாதுகாப்பு அமைச்சகம் கடும் எதிர்ப்பை எழுப்பியிருப்பது தெரியவந்துள்ளது. 
இதனையடுத்து, பாதுகாப்புத் துறை பேச்சுவார்த்தைகளினூடே பிரதமர் அலுவலகமும் இணைப்பேச்சுவார்த்தை நடத்தியதால், “பாதுகாப்பு அமைச்சகத்தின் நிலைப்பாடு பலவீனப்பட்டுப் போனதோடு இந்திய பேச்சுவார்த்தை குழுவையும் பலவீனப்படுத்தியது” என்று பாதுகாப்பு அமைச்சகம் தன் எதிர்ப்பை எழுத்து முலம் பதிவு செய்துள்ளது. அதாவது நவம்பர் 24, 2015 தேதியிடப்பட்ட பாதுகாப்புத் துறை குறிப்பு ஒன்று அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

அன்புமணி-சபரீசன் ரகசிய சந்திப்பு!

டிஜிட்டல் திண்ணை 1: அன்புமணி-சபரீசன் ரகசிய சந்திப்பு!மின்னம்பலம் :
“நீங்கள் எப்படி என் செய்திக்குக் காத்திருந்தீர்களோ அதுபோலத்தான் திமுக தலைவர் ஸ்டாலினுடைய மருமகனான சபரீசன் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணிக்காக ஒரு ஹோட்டலில் கடந்த புதன் கிழமை இரவு காத்திருந்தார். இரவு 11 மணிக்கு மேல் சென்னையில் இருக்கும் ஒரு ஹோட்டலில்தான் சபரீசன் காத்திருந்தார். கொஞ்ச நேரத்தில் அன்புமணியும் தன் காரில் வராமல் வேறொரு காரில் அங்கே சென்று சேர்ந்திருக்கிறார். சபரீசன் வழக்கமாக தன் நண்பர்களை சந்திக்கும் நட்சத்திர ஹோட்டல்தான் அது. அங்கே இருவருக்கும் இடையே கொஞ்ச நேரம் பேச்சுவார்த்தை நீடித்திருக்கிறது.

தமிழகத்தின் மொத்த கடன் ரூ.3.97 லட்சம் கோடியாக உயர்வு- பட்ஜெட்டில் அறிவிப்பு


தமிழகத்தின் மொத்த கடன் ரூ.3.97 லட்சம் கோடியாக உயர்வு- பட்ஜெட்டில் அறிவிப்புமாலைமலர் : 2019-20ம் நிதியாண்டில் தமிழக அரசின் மொத்த கடன் ரூ. 3.97 லட்சம் கோடியாக இருக்கும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை: தமிழக சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில்
உள்ள அம்சங்கள் வருமாறு:- அத்திக்கடவு -அவினாசி திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசு-தனியார் பங்களிப்புடன் பொறியியல் பட்டதாரிகளுக்கு உயர்நிலை தொழில்நுட்ப திறன் பயிற்சி வழங்கப்படும். சுற்றுலா தலங்களில் தனியாருடன் இணைந்து கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் தமிழக திறன் மேம்பாட்டு கழகத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உணவு மானியத்திற்காக ரூ.6 ஆயிரம் கோடி ரூபாயும், பொது விநியோக திட்டத்தை கூட்டுறவு சங்கங்கள் செயல்படுத்த 333.81 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ராமலிங்கம் கொலை . 5 பேர் கைது திருபுவனத்தில், 2–வது நாளாக போலீஸ் குவிப்பு

பா.ம.க. பிரமுகர் கொலை வழக்கில் 5 பேர் கைது திருபுவனத்தில், 2–வது நாளாக போலீஸ் குவிப்புதினத்தந்தி :கும்பகோணம் அருகே திருபுவனம் பகுதியில் பா.ம.க. பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து திருபுவனத்தில் நேற்று 2–வது நாளாக போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. திருவிடைமருதூர்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் மேல தூண்டில் விநாயகம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம்(வயது42). திருவிடைமருதூர் நகர பா.ம.க. முன்னாள் செயலாளரான இவர், திருபுவனத்தில் சாமியானா பந்தல் மற்றும் பாத்திரங்களை வாடகைக்கு விடும் கடை நடத்தி வந்தார். மேலும் கேட்டரிங் ஏஜெண்டாகவும் இருந்து வந்தார்.!;

நடப்பது “திராவிடம் இல்லாத தமிழ்நாட்டு”க்கான trailer..

அமெரிக்காவின் உளவுத்துறை இந்திய பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னால் மத மோதல்கள் வெடிக்கும் என சொன்னது உண்மை தான்
LR Jagadheesan : நடப்பது “திராவிடம் இல்லாத தமிழ்நாட்டு”க்கான trailer...
ஒரு காதல் மலர்கிறது. ஜாதி கடந்து. ஆனால் அது “நாடகக்காதல்” என ஜாதிக்கட்சி ஒன்று கூப்பாடு போட்டது. காதலன் காதலியை பலவந்தமாய் பிரிக்கிறது. காதலன் சந்தேகமாய் மரணிக்கிறான்.
தலைநகர் சென்னையில் ஒரு இளம்பெண் துள்ளத்துடிக்க பட்டப்பகலில் கொல்லப்படுகிறாள். அவளை காதலித்த மாற்று மதத்தினனே கொன்றான் என்றது மதவாத கட்சி ஒன்று. ஆனால் தன்னை காதலிக்க மறுத்ததாலே அந்த பெண்ணை இவன் தான் கொன்றான் என காவல்துறை ஒருவனை கைதுசெய்கிறது. அவனும் சிறைக்குள்ளேயே சந்தேகமாய் சாகிறான்.
சின்னஞ்சிறு சிறுமி ஒருத்தி சிரமறுத்து குரூரமாய் கொல்லப்படுகிறாள். கொன்ற கொடூரன் உடனே கைதாகிறான். ஆனாலும் போராளிகளுக்கு அது போதவில்லை. அவன் மனைவியையும் கைது செய். அவளொரு நடத்தை கெட்டவள். ஜாதிவெறி பிடித்தவள் என்று பகிரங்கமாக முழங்கின முற்போக்கு முகமூடியில் திரியும் மூடர் கூடங்கள். மனித உரிமை முகமூடியில் திரியும் ஜாதிச்சங்கி ஒன்று.
மற்றதுக்கெல்லாம் பெண்ணியம் முழங்கும் இந்த கும்பல்களின் ஆதரவு முற்போக்கு பெண்ணீயங்கள் யாரும் இந்த அசிங்கத்துக்கு எதிராய் சின்னதாய் முணுமுணுக்கக்கூட இல்லை. இவர்களின் அளவுகோலின்படி எல்லாப்பெண்களும் ஒன்றல்ல போலும். அதுவும் “ஆதிக்கஜாதிப்பெண்”ணை தங்கள் அரசியல் சகாக்கள் துகிலுரிந்தால் அதுவும் இதுகளுக்கு “ஜாதி ஒழிப்பு அரசியல்” என்பதற்குள் வரும்போல.

2 ஜி வழக்கு: அவகாசம் கேட்ட மனுதாரர்கள் தலா 3 ஆயிரம் மரம் நட வேண்டும் டெல்லி ஐகோர்ட்டு அதிரடி

2 ஜி வழக்கு: அவகாசம் கேட்ட மனுதாரர்கள் தலா 3 ஆயிரம் மரம் நட வேண்டும் டெல்லி ஐகோர்ட்டு அதிரடி
வெப்துனியா : 2 ‘ஜி’ வழக்கில் பதில் மனு தாக்கல் செய்வதற்கு கூடுதல் அவகாசம் கேட்டவர்கள் தலா 3 ஆயிரம் மரம் நட வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது புதுடெல்லி:< மத்தியில் முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தபோது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கு, 2 ‘ஜி’ அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கு.
இதில் ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. ஒரு வழக்கும், சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் ஒரு வழக்கும் தொடுத்தன. அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் தொடுத்த சட்ட விரோத பணபரிமாற்ற தடை வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி, மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மனைவி தயாளு அம்மாள், வினோத் கோயங்கா, ஆசிப் பல்வா, கரீம் மொரானி, பி.அமிர்தம், சரத்குமார் உள்ளிட்ட 19 பேரை விடுதலை செய்து டெல்லி தனிக்கோர்ட்டு 2017-ம் ஆண்டு டிசம்பர் 21-ந்தேதி தீர்ப்பு அளித்தது.

நிர்மலா சீதாராமனுடன் வைகோ திடீர் சந்திப்பு! பாஜக கூட்டணியில் சேருமா மதிமுக?

வெப்துனியா : பாஜகவின் எதிரிக்கட்சிகளில் ஒன்றாக இருந்து வரும் மதிமுக, பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் கருப்புக்கொடியும் காட்டி வருகிறது. அதுமட்டுமின்றி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தினமும் பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று இருதரப்பிலும் கூறப்படுகிறது. இருப்பினும் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் மதிமுக இருப்பதாக வைகோ கூறிக்கொண்டாலும் ஸ்டாலின் தரப்பில் இருந்து மதிமுகவை கூட்டணியில் இணைப்பது குறித்து எந்தவித உறுதிமொழியும் கொடுக்கப்படவில்லை. அப்படியே திமுக கூட்டணியில் மதிமுக இணைந்தாலும் ஒன்று அல்லது இரண்டு தொகுதிக்கு மேல் அந்த கட்சிக்கு ஒதுக்குவது கடினம்தான் என்று கூறப்படுகிறது.

பாஜகவை தேர்தல் நேரத்தில் கழற்றிவிட அதிமுக முடிவு? ..உளவுத்துறை புலனாய்வு

bjp,admk,கூட்டணி,கழற்றிவிட,திட்டமா?,உளவு துறை,பா.ஜ., உஷார்தினமலர் :அ.தி.மு.க.,வுடனான கூட்டணி தொடர்பாக, உளவுத்துறை கொடுத்துள்ள தகவலால் உஷாரடைந்துள்ள, பா.ஜ., மேலிடம், சாமர்த்தியமாக காய் நகர்த்தி வருகிறது. லோக்சபா கூட்டணிக்காக, அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும், திரைமறைவில் நடத்தி வரும் பேச்சு, பல வாரங்களாக நீடிப்பதற்கு, தொகுதி பங்கீட்டை கடந்து, வேறு சில விஷயங்களும் இருப்பது தான் காரணமாக கூறப்படுகிறது. இது குறித்து, டில்லி அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது: குறிப்பிட்டு சொல்லும் படியான தொகுதிகளை, பா.ஜ.,வுக்கு தர, அ.தி.மு.க., தயாராக உள்ளது. ஆனால், போட்டியிட விரும்பும் புதுமுகங்களுக்கு எல்லாம், பா.ஜ., தொகுதிகளை கேட்பதால், 10க்கும் மேற்பட்ட தொகுதிகளை, அந்த கட்சிக்கு விட்டுத்தர வேண்டிய நெருக்கடியில், அ.தி.மு.க., உள்ளது. 'எத்தனை இடங்கள் வெற்றி பெற்றாலும், அதன் பலன் அனைத்துமே, தேர்தலுக்கு பின், பா.ஜ.,வுக்குத் தான் கிடைக்க போகிறது. 'இதனால், 'சிட்டிங்' எம்.பி.,க்கள் பலரது
தொகுதிகள் பறிபோய், கட்சி தொண்டர்களும், தேர்தல் பணிகளில் ஈடுபட தயக்கம் காட்டுவர்' என, அ.தி.மு.க., தரப்பு அச்சப்படுகிறது. கூட்டணி குறித்த பேச்சில், தமிழக, பா.ஜ., தலைவர்கள் யாருமே இடம்பெறவில்லை.

ராமலிங்கம் கொலைகாரர்கள் வகாபிய இயக்கத்தவர்கள்?

Muruganantham Ramasamy : · திருபுவனம் ராமலிங்கம் கொலையில் ஈடுபட்டவர்கள் வகாபிய இயக்கங்களோடு தொடர்புடையவர்கள் என பூர்வாங்க விசாரணையில் தெரிய வருகிறது.. சங்கிகளைப்போலவே வகாபிகள் இந்த தேசத்தின் நல்லிணக்கத்திற்கும் எதிர்காலத்திற்கும் ஆபத்தானவர்களாக உருப்பெற்று வருகிறார்கள்.. மதம் எந்தவொரு தரப்பிற்கும் வாழ்வாதாரம்அல்ல. அதன் பொருட்டு நிகழும் எந்த வன்முறைக்கும் சட்டத்தின் தயவு தாட்சன்யமற்ற இரும்புக்கரமே உகந்தது.. இந்த படுகொலைக்கு காரணமானவர்களும், அதன் பின்னாலிருந்தவர்களும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.. திரு.ராமலிங்கத்தின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்..

மின்னம்பலம் :திருபுவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வரும் 22ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

ரூ 420 கோடிக்கு சரவணா ஸ்டோர்ஸ் நூதன வரி ஏய்ப்பு மோசடி : வருமானவரி துறை


ஸ்பெல்கோ: கடந்த மாதம் 29ம் தேதி சென்னை மற்றும் கோவையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட கடைகளில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் கிடைத்திருக்கும் தகவல் பகீர் ரகம்
இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சென்னை தியாகராயர் நகரில் கிளை பரப்பியிருக்கும் அந்த முக்கியமான கடைகளில் மட்டும் ரூ.420 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு நடத்தப்பட்டிருப்பதாக பெயர் கூற விரும்பாத வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக செய்தி வெளியிட்டுள்ளது.
அதாவது, சென்னை பாடி, குரோம்பேட்டை என பல இடங்களில் கிளை பரப்பியிருக்கும் சரவணா ஸ்டோர் கடந்த 3 மாதங்களில் மட்டும் சுமார் 35 கோடி ரூபாய் அளவுக்கு வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பு செய்துள்ளது.
எனவே, இதேத் தொகையை கடந்த 3 ஆண்டுகளுக்குக் கணக்கிட்டுள்ளோம். அவர்களது ஒரு நாள் வருமானம் ரூ.1.2 கோடி என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
இதில்லாமல், பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரிச்சோதனையில் ரூ.25 கோடி மதிப்புள்ள பணமும், 12 கிலோ தங்கமும், 625 காரட் வைரமும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கமலஹாசனின் மக்கள் நல கூட்டணிதான் மக்கள் நீதி மையம்.. திராவிட கட்சிகள் அழுக்கு பொதிகளா? வீடியோ


Gopal Pillai Shanmugakani : சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்!
கமலஹாசனின் இன்றைய பேட்டி இதைத்தான் நினைவுறுத்துகிறது. திமுகவுடன் கூட்டு சேர காங்கிரஸ் மூலமாக முயற்சித்து அந்தப்பொதியை நாங்கள் சுமக்கமுடியாது என்று திமுக தலைமை மறுத்துவிட்டது. பார்ப்பனீயத்தை, பாஜக - II வை நாங்கள் மீண்டும் வளர உதவமாட்டோம் என்று திமுக ஒதுங்கிய காரணத்தால், தனிமரமாக விடப்பட்ட காரணத்தால், சீச்சீ இப் பழம் புளிக்கும் என்கிறார் மனிதப்பதர் கமலஹாசன். திமுகவை பொதி என்கிறார்.
பொதி என்றால் அழுக்கு என்று புதிய வியாக்கியானம் வேறு கூறுகிறார். திமுக ஊழல் கட்சியாம். ஊழல் என்ற அபாண்டத்தை உடைத்தெறிந்து தெள்ளிய நீர் போன்று இருக்கிறது திமுக. அப்பழுக்கற்ற தலைமையைக் கொண்டது திமுக. உங்களின் மனநிலை வல்லவனைக் கண்டு இயலாதவன் கொள்ளும் பொறாமை, அறிஞனைக் கண்டு மூடன் கொள்ளும் பொறாமை, கலாசர பெருமை, நாகரீக வளமை கொண்ட திராவிடத்தைப் பார்த்து ஆரியம் கொள்ளும் பொறாமை. தனி மனித ஒழுக்கமில்லாத ஒரு மனிதன் பண்பட்ட இயக்கத்தை குற்றம் சொல்வது பிச்சைக்காரன் வசதியானவனைப் பார்த்து அங்கலாய்ப்பதற்குச் சமம். 

ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் முகத்தைக்கூட மூடிக்கொண்டு வந்திருந்தார்.

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஹ்மான் மகள்!மின்னம்பலம் : ஆடை சுதந்திரம் தொடர்பான சர்ச்சைக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் விளக்கமளித்துள்ளார்.
பிப்ரவரி 5 அன்று மும்பையில், ஸ்லம்டாக் மில்லியனர் படம் ஆஸ்கர் விருதுகளைப் பெற்று 10 ஆண்டுகள் நிறைவாகியுள்ளதைக் கொண்டாடும் விழா நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மகள் கதீஜா ரஹ்மானும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு கதீஜா ரஹ்மான் முகத்தைக்கூட மூடிக்கொண்டு முகத்திரை அணிந்து வந்திருந்தார். இதனால், மகளுக்கு ரஹ்மான் ஆடை சுதந்திரம் வழங்கவில்லை எனவும், அவர் பழைமைவாதத்தைக் கடைப்பிடிப்பதாகவும் சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டப்பட்டது.

மலையக அபிவிருத்தி அதிகார சபை இலங்கை அமைச்சர் மங்கள சமரவீர அங்குரார்ப்பணம்

தமிழ் மிரர் ஆர்.மகேஸ்வரி : பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள்  அபிவிருத்தி அதிகார சபையானது பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் தனித்திருக்கும் மலையக மக்களை சமூக நீரோட்டத்தில் கலக்கச் செய்யும் ஒரு வேலைத்திட்டம்.
இவ் அதிகார​சபை இன்று (7) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
அத்துடன் இச்சபையின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர்கள் சபையினர் நியமனம் வழங்குதலும்  இடம்பெற்றது. சபையின் தலைவராக தொழிலதிபர் சந்திர ஷாப்ட்டரும் பணிப்பாளர்கள் சபையினராக அமைச்சின் முன்னாள் ஆலோசகர் எம். வாமதேவன், பேராசிரியர் எஸ். சந்திரபோஸ், பேராசிரியர் பீ. கௌத்தமன் , ரொசான் ராஜதுரை ஆகியோர் நியமனம் பெற்றனர்.
colombopage.com : Socio-economic standards of Sri Lanka's Estate Sector needs to be uplifted - Finance Minister  
Feb 07, Colombo: The socio-economic standards of Sri Lanka's Estate Sector needs to be uplifted, as the estate sector community needs to be guaranteed inclusion in the main stream society, Minister of Finance and Mass Media Mangala Samaraweera said.

நிலத்தடி நீரை எடுப்பவர்கள் ஒரு கனமீட்டருக்கு ரூ.2வரை கட்டணம் செலுத்த வேண்டும் மத்திய அரசு அறிவிப்பு

தண்ணீர்... தண்ணீர்... கே.பி.பெருமாள்
மத்திய நிலத்தடி நீர் ஆணையம் சமீபத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. வீடுகளில் ஒரு அங்குலத்திற்கும் குறையாத விட்டம் கொண்ட குழாயில் தினமும் 20 கனமீட்டர் வரைநிலத்தடி நீரை எடுப்பவர்கள் ஒரு கனமீட்டருக்கு ரூ.2வரை கட்டணம் செலுத்த வேண்டும். மத்திய அரசிடம் வீடுகளுக்கு நிலத்தடி நீரை பயன்படுத்த மறுப்பின்மை சான்றிதழ் பெற வேண்டும் என்று அறிவித்துள்ளது. 2019 ஜுன் மாதம் முதல் நிலத்தடி நீர் எடுத்து பயன்படுத்துவோர் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் காலம் நிர்ணயித்துள்ளது.
வர்த்தகப் பண்டமாக நீர்
உலக வர்த்தக அமைப்பின் காட் ஒப்பந்தம் தண்ணீரைவர்த்தகப் பண்டமாக வரையறுத்துள்ளது. இந்த ஒப்பந்தப்படி ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு வர்த்தக அடிப்படையில் நீர் உள்ளிட்ட இயற்கை வளங்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படுவதை தடைசெய்யக் கூடாது எனக்கூறப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டில்ஐ.நா.சபையில், குடிக்கும் தண்ணீரை மானுடத்தின் அடிப்படை உரிமையாக்கக் கூடாது என்று அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தீர்மானம் கொண்டு வந்தனஎன்பது நினைவுகூரத்தக்கது.
நீருக்கு நிபந்தனைகள்
உலக வங்கியும் உலக வர்த்தக அமைப்பும் தங்களிடம் கடன் பெற வரும் நாடுகளுக்கு கீழ்கண்ட மூன்று அம்சத்தில் ஏதாவது ஒன்றை நிபந்தனையாக விதிக்கின்றன.
1. ஒட்டுமொத்தமாக தண்ணீர் விநியோகம் மற்றும் மேலாண்மையை தனியாரிடம் ஒப்படைத்து விடுவது.
2. நீர் விநியோகம் மற்றும் மேலாண்மையை நீண்ட காலத்திற்கு தனியார்
நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடுவது.

தவிடுபொடி ஆகி இருக்கும் சென்னையின் பூர்வகுடி மக்கள் வீடுகள்... பிரம்மாண்ட கட்டிடங்களுக்கு முன்னால்..

கவிதா சொர்ணவல்லி : சென்னை எப்போதுமே ஆந்திராக்காரர்களின் யின் முக்கியப்பகுதிகள் இன்று "வடஇந்தியர்களின்" முழு வசமாகி விட்டதை யாரெல்லாம் அச்சத்துடன் கவனித்திருக்கிறீர்கள் / றீர்கள்.
கைவசம்தான். கேட்டால், "சென்னப்பநாயக்கர்களின் ஆளுகையில் இருந்த சென்னையை" என்று ஒரு வரலாறு வரும். இருக்கட்டும். ஆனால், சென்னை
எக்மோர், புரசைவாக்கம், அமிஞ்சிக்கரை என்று அந்தப்பகுதி முழுவதுமே, முழுவதுமே வடஇந்தியக்காரர்களின் கைப்பிடிக்குள் சுருங்கிவிட்டது. குறிப்பாக ஜெயின் சமூகத்தினர். சந்துபொந்தில் இண்டு இடுக்கிலிருந்தெல்லாம் அவர்களின், கேட்டட் கம்யூனிட்டி" கட்டிடங்கள், வானுயர எழுந்து நின்று கொண்டிருப்பதை / நிற்பதை/ பார்கிறேன். ஒவ்வொரு வாரமும், ஏதாவது ஒரு வானுயர்ந்த கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்படுவதும், ஆறு மாதங்களில் அது பிரம்மாண்டமாக எழுந்து நிற்பதுமாக,அப்பகுதிகளே அந்நியமாகி வருகிறது. (அந்த gated community-ற்குள் கருப்பான ஆட்கள் நுழைந்தால், அது ஏழாவது அதிசயம்)

கமல் : திமுக ஊழல் கட்சி ..அழுக்குபொதியை சுமக்க மாட்டோம்..கமல்

ஆலஞ்சியார் : திமுகவுடன் கூட்டணி இல்லை திமுக ஊழல் கட்சி ..அழுக்குபொதியை சுமக்க மாட்டோம்..கமல் ..
கமலுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை ஆனால் பொதுவாக நவீன முற்போக்குவாதிகள் புதிதாய் கட்சி தொடங்குபவர்கள் அரசியல் கட்சிகள்
ஆரம்பித்தவுடனேயே திமுகவை தொடர்ந்து ஊழல்கட்சி என்பதைபோல பேசி சித்தரித்துவருவதை மறுக்கவேண்டியதிருக்கிறது..
இதுவரை எந்த வழக்கிலாவது திமுக தலைமையோ அல்லது பிரதான தலைவர்களோ நீதிமன்றத்தால் தண்டிக்கபட்டிருக்கிறார்களா .. திமுக மீது சுமத்தபபட்ட குற்றசாட்டுகளில் இந்த ஐம்பது ஆண்டுகளில் ஏதேனும் ஒருவழக்கில் ஊழல் குற்றசாட்டு நிரூபிக்கபட்டிருக்கிறதா.. கட்சி ஆரம்பிக்கறவனெல்லாம் திமுகவை ஊழல்கட்சி என்று சொல்வதின் சூட்சமம் இதுதான் .. திமுக எதிர்த்தால் தான் அறியபடுவோம் என்கிற அரசியல் அறிவு தெரிந்திருக்கிறது அவ்வளவுதான் ..

உதயநிதி ..அரசியலில் ஒரு அதிமுகவுக்கதான் இருக்க முடியும். இரண்டு அதிமுகக்கள் இருக்கவே முடியாது

உதயநிதியை தேவையில்லாமல் திணித்து திமுக மீதான நல்லெண்ணெத்தை சிதைக்கும் அண்ணியாரிடம் அதை செய்யவேண்டாம் என்று சின்னதாய் ஒரு கோரிக்கை வையுங்கள். உங்களால் முடிந்தால்.
LR Jagadheesan : “வாழ்வா சாவா தேர்தல் வாசலில் வந்து நிற்கும்போது
உதயநிதியை பத்தி பேசுவது தமிழகத்துக்கு துரோகம் செய்வதைப்போன்றது”
அண்ணியாருக்கு சொல்லவேண்டிய அறிவுரையை அரசியல் விமர்சகர்களுக்கு சொல்கிறார் உடன்பிறப்பு. புலிக்கு பயந்தவனெல்லாம் எம்மேல வந்து விழுங்கடான்னு சொல்றமாதிரியான வாதம் இது.திமுகவில் எந்த பொறுப்பிலும் இல்லாத ஒருவர் தமிழ்நாடு முழுக்க அந்த கட்சிநடத்தும் ஊராட்சிமன்ற மக்கள் சந்திப்புகளில் கலந்துகொள்ளச்செய்தது யார்? அவருக்கு பக்கம் பக்கமாக பத்திரிக்கைகளில் விளம்பரம் கொடுத்தது யார்? கட்சியின் சார்பில் மக்களுக்கு வாக்குறுதி கொடுக்கும் அதிகாரத்தை கொடுத்தது யார்? எந்த அடிப்படையில், எந்த நோக்கத்துக்காக உதயநிதிக்கு இவையெல்லாம் செய்யப்படுகிறது? யார் செய்கிறார்கள்? அண்ணியாரா? அரசியல் விமர்சகர்களா?
அரசியல் விமர்சகர்களுக்கு துரோக முத்திரை குத்துவதற்குமுன் அண்ணியாருக்கு அறிவுரை சொல்லலாமே? அறிவுரை கூட வேண்டாம். ஒரு கோரிக்கை மனுவாவது சமர்ப்பிக்கலாமே? எது தடுத்தது?

தமிழக RSS,BJP, இந்து_முண்ணனி கொலைகளுக்கு கட்டப் பஞ்சாயத்து, கந்து வட்டி, வப்பாட்டி போன்ற சமுக விரோத ... பட்டியல் இதோ!

இதுவரை தமிழத்தில் கொலைசெய்யப்பட்ட
#RSS_BJP_இந்து_முண்ணனியில் இருக்கும் ரவுடிகளின் கொலைகளுக்கு முஸ்லிம்கள் காரணமா அல்லது அவர்கள் செய்யும் கட்டப் பஞ்சாயத்து, கந்து வட்டி, வப்பாட்டி இன்னும் பலபல சமூகவிரோத செயல் காரணமா?
கொஞ்சம் சமீபத்திய வரலாற்றை புரட்டி பார்ப்போமா?
1) நாகப்பட்டிணம்_புகழேந்தி கொலை - 05.07.2012
கொலையாளி: முனீஸ்வரன்
காரணம்: நில அபகரிப்பு,கட்டப்பஞ்சாயத்து
2) பரமக்குடி_முருகன் கொலை - 19.03.2013
கொலையாளிகள்: ராஜபாண்டி & மனோகரன்
காரணம்: நில தகராறு
3) சங்கரன்கோவில் இந்து முன்னணி நகரச் செயலாளர் ஜீவராஜ் கொலை - 05.07.2014
கொலையாளி: அவரின் முதல் மனைவி அய்யம்மாள்
காரணம்: இரட்டை திருமணம்
4) கோயம்பேடு_விட்டல்
கொலை 27.4.2012
கொலையாளிகள்: சுந்தரபாண்டியன், முருகன், கங்காதரன்
காரணம்: கந்து வட்டி கேட்டு தொல்லை, அபாச பேச்சு.
5) ராமேஸ்வரம்_குட்டநம்பு
கொலை 07.07.2013
கொலையாளிகள்: ராமச்சந்திரன் உட்பட ஆறு பேர்
காரணம்: குடிபோதையில் தகராறு செய்ததால் மக்களிடம் கல்லால் அடிபட்டு மரணம்.

எங்கே 794 மருத்துவ இடங்கள் ? மொத்த இடங்கள் : 2,900 ;நிரப்பப்பட்ட இடங்கள் : 2,106 ; வேறுபாடு : -794

Total Seats : 2,900 ; Seats filled : 2,106 ; Difference / Variance : - 794. Where is this 794 Seats?
பழூரான் விக்னேஷ் ஆனந்த் :
தமிழகத்தில் நடந்த நீட் தேர்வு ஊழல் :
படம் ஒன்று :

தமிழ்நாடு அரசு மருத்துவ கல்லூரிகளின் சேர்க்கை பட்டியல் :
மொத்த இடங்கள் : 2900

படம் இரண்டு :
பள்ளிகள் மற்றும் பாடமத்திட்டத்தின் அடிப்படையில் 2018 -2019 தமிழ்நாடு மருந்துவ மாணவர்கள் சேர்க்கை பட்டியல்

1277 ( 2017- 18) கல்வி ஆண்டு பயின்ற மாணவர்கள்
611 (CBSE)
04 (அரசாங்க பள்ளிகள்)
03 (அரசாங்கம் உதவி பெறும் பள்ளிகள் )
20 ( தனியார் பள்ளி மாணவர்கள்)
191 (தமிழ்நாடு இருப்பிட சான்றுதழ் தந்து வேறு மாநிலங்களில் படித்த மாணவர் எண்ணிக்கை )
மொத்தம் = 2106
படம் 1 : தமிழ்நாடு அரசு மருத்துவ கல்லூரிகளின் சேர்க்கை பட்டியல் : 2900
படம் 2 : பள்ளி , பாடதிட்டம் வாயிலாக பெற்ற RTI யின் அடிப்படையில் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த மாணவர் எண்ணிக்கை : 2107
படம் ஒன்றிர்க்கும் இரண்டிர்க்கும் உள்ள வித்தியாசம் - 794.
யார் அந்த 793 மாணவர்கள் எப்படி அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் பெற்றது ???

வியாழன், 7 பிப்ரவரி, 2019

தமிழக அரசு துப்பரவு ..14 பணிக்கு 4,000 பட்டதாரிகள் விண்ணப்பித்தனர் :

NDTV :
  • 14 பணிக்கு 4,000 பட்டதாரிகள் அப்ளை செய்தனர்
  • இந்த செய்தி வருத்தமளிக்கிளது, அரசு தரப்பு கருத்து
  • 'தமிழகத்தில் 20% பட்டதாரிகளுக்குத் தான் பணி செய்யும் திறன் உள்ளது'
  • சென்னை, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வரும் தமிழக அரசின், தலைமைச் செயலகத்தில், 14 துப்பரவுப் பணிகளுக்கான இடங்கள் காலியாக இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. அந்தப் பணிக்குச் சேர எம்.டெக், பி.டெக், எம்.பி.ஏ போன்ற கல்வி பயின்ற 
    பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். மொத்தம் இருக்கும் 14 காலி இடங்களுக்கு,
    மொத்தமாக 4,000-த்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பம் செய்துள்ளனர்.
    விண்ணப்பம் செய்த பொறியியல் பட்டதாரிகளில் ஒருவர்தான் தன்சிங் அருள். 23 வயதாகும் அருள் பல மாதங்கள் தூத்துக்குடியில் தினக் கூலியாக வேலை பார்த்து வந்தார். தற்போது சென்னையின் புறநகர்ப் பகுதியில் தனது நண்பர்களுடன் தங்கியுள்ளார். அரசு கொடுத்த லேப்டாப் மூலம், தான் தகுதி பெறும் அனைத்து வேலைகளுக்கும் தீவிரமாக விண்ணப்பித்து வருகிறார் அருள்.

    வடிவேலுவின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கும் இயக்குனர் சுராஜ்

    மாலைமலர் : இம்சை அரசன் படப் பிரச்சனையால் மற்ற படங்களில் நடிக்க முடியாமல் இருக்கும் வடிவேலு, ஏற்கனவே ஒப்பந்தமாகியிருக்கும்
    படத்திலும் நடிக்க முடியாததால் இயக்குநர் சுராஜ் வடிவேலுவுக்காக காத்திருக்கிறார் ‌ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட படம் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’. படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே, படக்குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வடிவேலு படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை.
     இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தது படக்குழு. இது தொடர்பாக வடிவேலு எந்த விளக்கமும் அளிக்காமல் தாமதப்படுத்தியதால், ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தின் பிரச்சினை முடியும் வரை, வேறு எந்தவொரு படத்திலும் வடிவேலுவை ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தியது தயாரிப்பாளர் சங்கம்.

    கி.வீரமணி கைது.. மனுதர்மசாஸ்திரம் நகல் எரிப்புப் போராட்டம்

    K. VeeramaniK. Veeramaninakkheeran.in - ashokkumar : மனு தர்மசாஸ்திரம் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக கூறி அதனை நகலை எரிக்கும் போராட்டம் திராவிடர் கழகம் சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள மணியம்மை சிலை அருகே நடந்தது.
    மனுதர்ம எரிப்புப் போராட்டத்திற்குத் தலைமையேற்ற திராவிடர் கழகத் தலைவர் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், மனுதர்மம்தான் ஜாதியைப் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றது
    உலகில் எங்கும் இல்லாத கொடுமையான ஜாதிய அமைப்பு, வருணாசிரம தர்மத்தைக் காப்பாற்றுகின்ற இந்து மதம், அதனுடைய மிக முக்கியமாக சாஸ்திரமாக இருக்கக்கூடிய மனுதர்மம்தான் ஜாதியைப் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றது.
    மனுதர்ம அடிப்படையில்தான், இந்து லா சட்டங்கள் இருக்கின்றன. அந்த மனுதர்மத்தைப் பொருத்தவரையில், உயர்ந்த ஜாதி - தாழ்ந்த ஜாதி, தொடக்கூடிய ஜாதி - தொடக்கூடாத ஜாதி, பார்க்கக்கூடாத ஜாதி - பார்க்கக்கூடிய ஜாதி என்று பிரித்திருப்பதோடு மட்டுமல்லாமல், பெண்களை மிகக் கேவலமாக சித்தரித்து, பிறவியில் ஆண்கள் எஜமானர்கள்; பெண்கள் அடிமைகள்; எந்தக் காலத்திலும் பெண்கள் சுதந்திரமாக இருக்கத் தகுதியற்றவர்கள்; கல்வி அறிவு பெறக்கூடாதவர்கள் என்பதை வலியுறுத்துவதோடு, சூத்திரர்கள் என்று மிகப்பெரும்பாலான உழைக்கின்ற மக்களை, காலங்காலமாக, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆக்கி வைத்துள்ளது மனுதர்மமே! அதனுடைய அடிப்படையில்தான் சட்டம் கொண்டு வரவேண்டும் என்று சொல்கிறார்கள்.

    ராமலிங்கம் கொலை .. தவறான பரப்புரை செய்யாதீர்: ..காதர் மொய்தீன் கோரிக்கை

    தவறான  பரப்புரை  செய்யாதீர்: திருபுவனம் கொலை குறித்து காதர் மொய்தீன்மின்னம்பலம் : திருபுவனம் ராமலிங்கம் கொலை குறித்து காவல் துறை உடனடியாக அறிக்கை வெளியிடவேண்டும் என்றும், தவறான பரப்புரையை யாரும் வெளியிடவேண்டாம் எனவும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் வலியுறுத்தியுள்ளார்.
    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருபுவனத்தில் மேலத்தூண்டி விநாயகம் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் நகரச் செயலாளரான இவர், திருபுவனம் பகுதியில் நிகழ்த்தப்பட்டு வந்த மதமாற்றத்தை எதிர்த்து வந்தார். நேற்று முன் தினம் இரவு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் வழியில் அவரை வழிமறித்த சிலர், ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த ராமலிங்கம் தஞ்சை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ், பாஜக தமிழக தலைவர் தமிழிசை, ஹெச்.ராஜா ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
    ராமலிங்கம் கொலைக்கு காரணம் மதமாற்றத்தை அவர் எதிர்த்ததுதான் என்று குற்றம் சாட்டப்படுகிறது.
    இச்சம்பவம் தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் இன்று (பிப்ரவரி 7) வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று (07-02-2019) ஆங்கில மற்றும் தமிழ் நாளிதழ்களில் வெளிவந்துள்ள செய்தி மிகவும் வேதனை அளிப்பதாக உள்ளது.

    சின்னத்தம்பியின் நடமாட்டத்தை பற்றிய அறிக்கை .. சென்னை உயர்நீதிமன்றம

    சின்னத்தம்பி நடமாட்டம்: ஐகோர்ட் உத்தரவு
தினமலர் : சென்னை: விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் , காட்டு யானை சின்னதம்பியின் நடமாட்டம் குறித்து, வரும் 12க்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என வனத்துறைக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இடம்பெயர்ந்தது .
    கோவை சின்னதடாகம் பகுதியில் சுற்றி வந்த காட்டு யானை, சின்னதம்பியை வனத்துறையினர், மயக்க ஊசி செலுத்தி பிடித்து, டாப்சிலிப் வனப்பகுதியில் விட்டனர்.அங்கு இருக்காமல், நுாறு கி.மீ., துாரம் பயணம் செய்து, உடுமலை பகுதிகளில், கடந்த ஆறு நாட்களாக உலா வருகிறது. அமராவதி சர்க்கரை ஆலை, கரும்பு பண்ணையில், ஐந்து நாளாக முகாமிட்டிருந்தது.
    இந்த யானை, தற்போது செம்பழனிபுதூர் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. சாலை மறியல் காட்டு யானை சின்னதம்பி கடந்த 3 நாட்களாக உடுமலையை சுற்றி உள்ள பகுதிகளில் சுற்றி திரிகிறது. விளைநிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் சின்னதம்பி யானை சுற்றி திரிவதால் விளைநிலங்கள் சேதமடைந்துள்ளதால், சின்னதம்பி யானையை அப்புறப்படுத்த வலியுறுத்தி அப்பகுதி மக்கள் பழனி சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது<

    கொலையான சந்தியாவுக்கு 34.. சைக்கோ இயக்குனர் பாலகிருஷ்ணனுக்கு 51.. இவன் இயக்கிய காதல் இலவசம் விடியோ

    வயது வித்தியாசம் பேரிழப்பு tamil.oneindia.com - lakshmi-priya.: பெருங்குடி கொலையில் திடீர் திருப்பம்! பரபர பின்னணி!- வீடியோ சென்னை: தூத்துக்குடி சந்தியாவுக்கும், பாலகிருஷ்ணனுக்கும் இடையே வயது வித்தியாசம் அதிகமாக இருந்ததே அவர் கொலையுண்டதற்கு காரணமாக கூறப்படுகிறது.
    சென்னை பெருங்குடி குப்பைமேட்டில் இருந்து கடந்த 21-ஆம் தேதி கண்டெடுக்கப்பட்ட கை, கால்கள் தூத்துக்குடியை சேர்ந்த சந்தியாவினுடையது என தெரியவந்தது. இதையடுத்து பள்ளிக்கரணை போலீஸார் இரு வாரங்களாக விசாரணை நடத்தி தற்போது கொலை செய்த அவரது கணவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
    சந்தியாவுக்கு அவரது 16-ஆவது வயதில் திருமணம் நடந்ததாம். அவர் மீது ஆரம்பத்திலிருந்தே சந்தேகப்படுவதுதான் பாலகிருஷ்ணனின் வேலை என கூறப்படுகிறது. அவரது எந்த ஆண்களுடன் பேசக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்துள்ளார்.

    சர்வதேசத் தொண்டு நிறுவனங்கள்.. இந்திய அரசு மீதான புகார்கள்

    மோடி முடக்கிய 15 ஆயிரம் தொண்டு நிறுவனங்கள்:  தேர்தலில் எதிரொலிக்குமா?    மின்னம்பலம் : மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், இந்தியாவில் சர்வதேசத் தொண்டு நிறுவனங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக முடக்கப்பட்டிருக்கின்றன என்று முக்கிய தொண்டு நிறுவனங்கள் புகார் தெரிவித்திருக்கின்றன.
    இதுபற்றி அல் ஜசீரா ஊடகம் நேற்று வெளியிட்டிருக்கும் செய்தியில் கிரீன் பீஸ், ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் போன்ற சர்வதேசத் தொண்டு நிறுவனங்கள் தரப்பிலான இந்திய அரசு மீதான புகார்கள் விரிவாக குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
    நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இந்தியாவில் செயல்பட்டு வரும் வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்கள் மீதான பிடி இறுகத் தொடங்கியது. ‘கிறிஸ்துவ மெஷினரிகளின் இந்தத் தொண்டு நிறுவனங்கள் இந்தியாவில் சேவை என்ற பெயரில் மத மாற்றத்தையும், ஆங்காங்கே ஸ்பான்சர்டு போராட்டங்களையும் ஏற்படுத்தி வருகின்றன. வெளிநாட்டு நிதி விவகாரத்தில் தொண்டு நிறுவனங்கள் பல முறைகேடுகளில் ஈடுபடுகின்றன. இவற்றை முறைப்படுத்த வேண்டும்’ என்பது பாஜகவின் நீண்ட காக குற்றச்சாட்டு மற்றும் கோரிக்கை. இதை மோடி பிரதமரானவுடன் தீவிரமாக செயல்படுத்தி வந்திருக்கின்றனர். இதுதான் இப்போது அரசுக்கே ஒரு முக்கியப் பிரச்சினையாக சர்வதேச அரங்கில் எழுந்திருக்கிறது.

    தமிழறிஞர் தேவநேயப் பாவாணர் பிறந்தநாள்...

    Image may contain: 1 personKarur Tamil Rajendiran : தந்தை பெரியாரால்
    திராவிட மொழியியல் ஞாயிறு என புகழ்ப் பட்டம் சூட்டப்பட்ட
    தந்தை மறவர், தாய் பள்ளர் ஆன சாதிமறுப்பு குடும்ப, கிறித்தவ,
    தமிழறிஞர்
    தேவநேயப் பாவாணர் பிறந்தநாள்...
    உலகின் முதன்மொழி ஆராய்சியாளர்
    தேவநேயப் பாவாணர் ( Devaneya Pavanar ) (பெப்ரவரி 7, 1902- சனவரி 15, 1981) மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் இருந்து சிறப்பாக உழைத்தார். இவருடைய ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் கருதி, சிறப்பாக பெருஞ்சித்திரனாரால் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் என்று அழைக்கப்பட்டார்.
    மொழி ஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர்
    பிறப்பு
    பெப்ரவரி 7, 1902
    இந்தியாவின் கொடி சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூர் - இராயகிரி செல்லும் வழியில் உள்ள கோமதிமுத்துபுரம் என்ற கிராமம்,திருநெல்வேலி, தமிழ்நாடு

    ராமலிங்கம் கொலை .. மிகப்பெரிய ஜாதி மத கலவரத்திற்கு திட்டமிட்டு பிரசாரம் .. மக்களே ஏமாந்து விடாதீர்கள்

    Karuna Kumuthan : தஞ்சை பகுதிக்கு உட்பட்ட திருபுவனத்தில் ஒரு முஸ்லீம் மதபோதகருடன், ஒரு இந்து இயக்க நபர் வாய் தகராறில் ஈடுபடுகிறார். அது பாஜக மற்றும் அமமுக, அதிமுக whatsapp குழுக்களில் வேகமாக பரப்பப்படுகிறது.
    இன்று அந்த இந்து இயக்க நபர் வெட்டிக்கொலை செய்யப்படுகிறார். இதனால் தஞ்சை பகுதியில் பதற்றம்.
    முகநூலிலும் வாட்சப்பிலும் இச்செய்தி பாஜக, அமமுக, பாமக, அதிமுக நபர்களால் தீவிரமாக பகிரப்பட்டு, இதனை #திமுக விற்கு எதிராக, திசைதிருப்பும் வேலையில் இறங்குவதற்கு பார்ப்பனீய அடிமைகள் முயற்சிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
    சாதி ரீதியாக நாம் இணைய வேண்டும்
    மத ரீதியாக நாம் இணைய வேண்டும் என்றும் ஆரம்பித்திருக்கிறார்கள்.
    இந்த தொடர்ச்சிகளை பார்க்கையில், தேர்தலை ஒட்டியோ, அல்லது அதற்கு முன்னரோ தமிழகத்தில் மிகப்பெரிய ஜாதி அல்லது மத கலவரங்களை ஏற்படுத்த இவர்கள் திட்டமிட்டு செயல்படுகின்றனரோ என்று சந்தேகம் ஏற்படுகிறது.
    கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக தர்மபுரியில், திவ்யா என்பவரின் தந்தை மர்ம மரணம், தொடர்ந்த சாதி கலவரங்கள், அதைத் தொடர்ந்து இளவரசன் மர்ம மரணம் போன்ற நிகழ்வுகளை நினைவுபடுத்தி பார்க்கவும்.
    அக்கலவரத்தின் வாயிலாக தர்மபுரியில் வெற்றிபெற்று மக்களவை சென்ற அன்புமணி தான் தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் மிக மோசமான உறுப்பினர் என்ற பட்டத்தை பெற்றவர் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
    தமிழகத்திற்கு சாதி கலவரம் புதிதல்ல என்றாலும் பெரியளவிலான மதக்கலவரங்கள் நடந்தயேில்லை. குமரியின் மண்டைக்காடு கலவரம் கூட நாடாரல்லாத கிருஷ்ணவக சமூகத்தினரால் செயற்கையாக உருவாக்கப்பட்டது தான் என்று சமீபத்தில் மிகப் பரபரப்பாக பேசப்பட்டது நினைவிருக்கும்.

    ராமலிங்கம் கொலை ... தொழில் போட்டி ... இஸ்லாமியர் மீது பழி போட திட்டமிட்டு .. சங்கிகள்?. திருபுவனத்தில் கடையடைப்பு


    பாமக முன்னாள் நகர செயலாளர் ராமலிங்கம் கொலை செய்யப்பட்டதை கண்டித்து திருபுவனத்தில் கடையடைப்பு
    திருபுவனம்: திருபுவனத்தில் பாமக முன்னாள் நகர செயலாளர் ராமலிங்கத்தை கொன்றவரை கண்டுபிடிக்கக்கோரி மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. ராமலிங்கம் கொலை செய்யப்பட்டத்தை கண்டித்து திருபுவனத்தில் கடை அடைப்பு நடந்து வருகிறது. பொதுமக்கள் அஞ்சலிக்காக ராமலிங்கத்தின் உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. திருபுவனத்தில் பதற்றம் நிலவுவதால் ராமலிங்கம் வீட்டை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

    Divan Ismail  : எங்கு இந்து துவ தீவிரவாதிகளும், RSS பயங்கர வாதிகளும் கொல்லப்பட்டாலும் அதற்கு முஸ்லீம்கள் காரணமல்ல என்று இஸ்லாமிய இயங்கங்கள் பொறுப்பல்ல என்று நிரூபிக்க கடும் முயற்சி எடுக்க வேண்டியுள்ளது.

    இந்து முண்ணனியில் இருக்கும் ரவுடிகளின் கொலைகளுக்கு முஸ்
    லிம்கள் காரணமா அல்லது அவர்கள் செய்யும் கட்டப் பஞ்சாயத்து, கந்து வட்டி, வப்பாட்டி இன்னும் பலபல சமூகவிரோத செயல் காரணமா?
    கொஞ்சம் சமீபத்திய வரலாற்றை புரட்டி பார்ப்போமா?

    1) நாகப்பட்டிணம் புகழேந்தி கொலை - 05.07.2012
    கொலையாளி: முனீஸ்வரன்
    காரணம்: நில அபகரிப்பு,கட்டப்பஞ்சாயத்து

    புதன், 6 பிப்ரவரி, 2019

    தமிழக மக்களின் மனநிலை.. விகடன் கருத்துகணிப்பு

    விகடன் : பா ஜ க வுடன் அ தி மு க கூட்டணி அமைத்து போட்டியிட்டால்
    நாங்கள் நிச்சயமாக நாங்கள் அ தி மு க விற்கு வாக்களிக்க மாட்டோம் என்பதே தமிழ் நாட்டில் பெரும்பாலானோர் கருத்தாக உள்ளது...
    அதி மு க தனித்து போட்டியிட்டால் வாக்களிப்பீர்களா ?..என்ற கேள்விக்கு நிச்சயமாக நாங்கள் அ தி மு க விற்கும் வாக்களிக்க மாட்டோம். ஏனெனில் வெற்றி பெற்று பின்னர் மீண்டும் அவர்கள் பா ஜ க விற்குதான் ஆதரவு தெரிவிப்பார்கள் என்று தமிழ் நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் தங்களின் கருத்தை தெரிவித்ததாக விகடன் கருத்துகணிப்பு சொல்கிறது . ..
    மிகையில்லை

    சந்தியாவின் உடலை பேப்பர் கட்டிங் மெஷினை வைத்து வெட்டினேன்: கணவர் பகீர் வாக்குமூலம்

    வெப்துனியா :தூத்துக்குடியை சேர்ந்த தனது மனைவி சந்தியாவை கொலை செய்தது எப்படி என்பது குறித்து அவரது கணவர் பாலகிருஷ்ணன் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
    சென்னை ஜாபர்கான்பேட்டையில் எஸ் ஆர் பாலகிருஷ்ணன் மனைவி சந்தியா மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில். இவருக்கு சந்தியாவின் நடந்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த 20-ஆம் தேதி சந்தியாவை கொன்று உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி பல்வேறு இடங்களில் வீசியுள்ளார்.
    பெருகுடி குப்பை மேட்டில் கிடைத்த கைகளில் பச்சை குத்தப்பட்டிருந்ததை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி பால கிருஷ்ணனனை கைது செய்தனர். விசாரணையில் பாலகிருஷ்ணன் கூறுகையில் சந்தியாவை மரம் அறுக்கும் ரம்பத்தை வைத்து உடலை அறுத்தால் ரத்தம் கொட்டும் என்பதால் பேப்பர் கட்டிங் மெஷினை பயன்படுத்தி உடலை வெட்டினேன்.
    மொத்தம் சந்தியாவை 7 துண்டுகளாக வெட்டினேன். அந்த உடல் பாகங்களை 4 கவர்களில் போட்டு தான் மட்டுமே பல்வேறு இடங்களில் வீசினேன் என பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். உடல் பாகம் எங்கே என கேட்டதற்கு கூவம் ஆற்றுக்கே வந்து அடையாளம் காட்டிய பாலகிருஷ்ணனோ தலை பாகம் எங்கே என்பதை மட்டும் கூற மறுக்கிறார்.

    சீரியல் நடிகை ஜான்சி தற்கொலை!


    சீரியல் நடிகை ஜான்சி தற்கொலை!
    மின்னம்பலம் :தெலுங்கு சீரியல் நடிகை நாகா ஜான்சி நேற்று (பிப்ரவரி 5) ஹைதராபாத் ஸ்ரீநகர் காலனியில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

    நேற்று (பிப்ரவரி 5) இரவு 9 மணியளவில் அவர் சீலிங் பேனில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது உடல் செகந்திராபாத்திலுள்ள காந்தி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. காவல்துறையினர் தற்கொலை கடிதம் ஒன்றையும் மொபைல் போன் ஒன்றையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காதல் தோல்வி ஜான்சியின் தற்கொலைக்குக் காரணமாக இருக்குமா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றுவருகிறது. சூர்யா என்பவரோடு ஆறு மாதங்களுக்கு மேலாக ஜான்சி பழகிவந்துள்ளார். அவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அவரது காதலர் சூர்யா தற்போது தலைமறைவாகியுள்ளார்.