நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter

சனி, 30 ஜூலை, 2011

பதவிக்கு அடிபிடி VVT நகரசபைத் தலைவர் நியமனம்சிக்கல்?

வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் நியமனம் தொடர்பில் சிக்கல்?


வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவர் தெரிவில் பிரச்சினை எழுந்துள்ளது. வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவராக ந.அனந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் சுழற்சி முறையில் தலைவர் பதவிக்கு ஆட்கள் நியமிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராஜாவுக்கு தொலைநகல் மூலம் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 28.07.2011 திகதியிட்டு வல்வெட்டித்துறை நகர சபைத் தேர்தல் - 2011 எனத் தலைப்பிட்டு, வல்வெட்டித்துறை நலன்விரும்பிகள் என சிவாஜிலிங்கத்தின் தலைமையில் 11 பேர் ஒப்பமிட்டு, வல்வெட்டித்துறையில் இருந்து தொலைநகல் மூலம் இக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு :

1. முன்னுரிமை வாக்கின் அடிப்படையில் உறுப்பினர்கள் தெரிவு மட்டுமே அன்றி தலைவர் உபதலைவர் தெரிவுக்கு அல்ல என்பதை சுட்டிக்காட்டுகின்றோம்.

2. நியமனப்பத்திரம் தயாரித்த வேளை 26.01.2011 ல் திரு சுமந்திரன் பா.உ முன்னிலையில் தங்கள் திரு.அனந்தராஜாவின் கேள்விக்கு பதிலளிக்கையில் முன்னுரிமை வாக்குகளை மட்டும் கருத்தில் கொள்ளாது வேறு பல அம்சங்களும் சேர்த்தே பரிசீலிக்கப்படும் எனப் பதிலளித்தமையும் சுட்டிக்காட்டுகின்றோம்.

3. இந் நிலையில் திரு.ந. அனந்தராஜ் உள்ளிட்ட எமது உறுப்பினர்கள் மத்தியில் சுழற்சி முறையில் தலைவர், உப தலைவர் பதவிகள் பகிர்ந்து வகிக்கும் திட்டத்தினை அமுல்படுத்த ஒரு மனதாக தீர்மானித்துள்ளோம்.

4.இதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 உறுப்பினர்களும் போட்டியிட்ட வேட்பாளர்களும் மற்றும் வல்வெட்டித்துறை நலன் விரும்பிகளும் ஒருமித்த கருத்துடன் சிவாஜிலிங்கம் முதல் ஒரு ஆண்டும் அனந்தராஜ் அடுத்த இரு ஆண்டுகளும் குலநாயகம் ஒரு ஆண்டும் தலைவர் பதவியை வகிப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

5. உப தலைவார் பதவி சதீஸ் இராமச்சந்திரன் (தெரிவாகதவர்) ஜெயராஜ், மயூரன், ஜெயதீஸ் ஆகியோருக்கிடையில் 4 ஆண்டுகளும் பகிர்ந்து அளிப்பது என தீர்மானிக்கப்பட்டது.

6. 4ம்,5ம் பந்திகளில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் நடைமுறைப்படுத்த ஏதுவாகவும் கட்சி உறுதியான தீர்மானத்தை எடுப்பதற்கு கால அவகாசத்தை கருத்தில் கொண்டு குறைந்த பட்சம் தற்காலிக ஏற்பாடாக தலைவராக க.ஜெயராஜா வையும் உப தலைவராக க.சதீஸ் ஐம் நியமித்து தேர்தல் ஆனையாளருக்கு அறிவிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

7. 6ம் பந்தியில் குறிப்பிட்டுள்ள குறைந்த பட்ச கோரிக்கைகளையும் ஏற்கபடாது விடத்தில் எமது கட்சியின் சார்பில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களில் பெரும்பான்மையோர் நகரசபை நிர்வாகத்துடன் ஒத்துழைக்காது செயற்படுவதன் மூலம் நகரசபை செயற்பாடுகள் முடங்கும் நிலை ஏற்படும் என்பதனையும் தெரிவித்து கொள்கிறோம். என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

நால்வருக்கு கனடாவில் பிணை,ஓசியன் லேடி கப்பலில் கடத்திச் சென்றதாக குற்றம்

72 இலங்கைத் தமிழர்களை ஓசியன் லேடி கப்பலில் கடத்திச் சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த 4 தமிழர்கள் நிபந்தனைகளின் அடிப்படையில் ரொக்கப்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பிரிட்டிஸ் கொலம்பியா நீதிமன்றம் நேற்று இவர்களுக்குப் பிணை வழங்கியது.

39 வயதான கமல்ராஜ் கந்தசாமி, 33 வயதான விக்னராஜா தேவராஜா, ஆகியோர் 5000 டொலர் பிணையிலும், 33 வயதான பிரான்ஸிஸ் அந்தோனிமுத்து அல்போன்சு, 33 வயதான 2000 டொலர் பிணையிலும், 32 வயதான ஜெயசந்திரன் கனகராஜ் 100 டொலர் பிணையிலும் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

அத்துடன், டொரண்டோவில் குறித்த நால்வரும் தற்போது வசிக்கும் முகவரியிலேயே தொடர்ந்தும் தங்கியிருக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ள நீதிமன்றம் கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் சபையின் நியமங்களுக்கு ஏற்ப. கடவுச்சீட்டு, விசா மற்றும் பயண ஆவணங்களை பெற்றுக்கொள்ளக்கூடாது என்ற நிபந்தனைகளையும் விதித்துள்ளது.

அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டம்பர் 14 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

நிரூபமா ராவிற்கு பிரியாவிடை அளிக்கும் வகையில் ஜனாதிபதி

மூன்றுநாள் தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு இந்திய வெளிவிவகார செயலாளர் நிரூபமா ராவ் நேற்றிரவு இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய வெளிவிவகார செயலாளர் நிரூபமா ராவ் தனது வெளிவிவகார செயலர் பதவியிலிருந்து நாளையுடன் விடைபெறுகிறார். பிரியாவிடை அளிக்கும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் அழைப்பின் பேரில் நிரூபமா ராவ் இலங்கை வந்துள்ளார்.
இன்றுகாலை நிரூபமா ராவிற்கு காலை உணவுடன் பிரியாவிடை அளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 1973ம் ஆண்டு தொடக்கம் நிரூபமா ராவ் இலங்கையுடன் இணைந்து பல்வேறு விதத்தில் செயற்பட்டுள்ளார்.
நிரூபமா ராவ் அமெரிக்காவிற்கான இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

போர்ச்சுகல் சிறுமி காஷ்மீரில் மீட்பு 4 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட

போர்ச்சுகல் நாட்டில் 2007ம் ஆண்டில் கடத்தப்பட்ட சிறுமியை, காஷ்மீரின் லே பகுதியில் லண்டன் பெண் அடையாளம் கண்டார். இங்கிலாந்தை சேர்ந்த தம்பதி கேத், ஜெர்ரி மெக்கைன். இவர்கள் 2007ம் ஆண்டு மே மாதத்தில் போர்ச்சுகல் நாட்டின் ப்ரையா டா லஸ் என்ற நகருக்கு தங்களது 4 வயது மகள் மெடலினுடன் சுற்றுலா வந்தனர். அங்கு மெடலினுக்கு பிறந்த நாள் கொண்டாடினர். அதில் போர்ச்சுகலில் வசிக்கும் இங்கிலாந்து நாட்டு நண்பர்கள் பலர் பங்கேற்றனர். கூட்டத்தை பயன்படுத்தி சிறுமி மெடலினை யாரோ கடத்தி சென்றனர்.

இது தொடர்பாக போர்ச்சுகல் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால், மெடலின் கடத்தல் பற்றி எந்த துப்பும் கிடைக்காததால் 2008 ஜூலையில் அந்த வழக்கை கைவிட்டனர். இந்நிலையில், மெடலினின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற லண்டனை சேர்ந்த பெண் ஒருவர், சமீபத்தில் காஷ்மீரின் லே பகுதிக்கு சுற்றுலா வந்திருந்தார். அங்கு மெடலினை அவர் அடையாளம் கண்டதாக கூறப்படுகிறது.

இப்போது 8 வயதாகும் அந்த சிறுமி பற்றி தன்னுடன் வந்திருந்த பயணிகளிடம் தெரிவித்தார். அதற்குள் சிறுமியை அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் அங்கிருந்து அழைத்து செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால், அதைத் தடுத்த ஒரு தம்பதியினர், அவள் தங்கள் குழந்தை என்று கூறி மீட்டனர். இதுபற்றி காஷ்மீர் போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டது. மெடலினின் பெற்றோர் கேத், ஜெர்ரி மெக்கைனுடன் அவர்கள் தொடர்பு கொண்டனர்.

இதையடுத்து, அவர்கள் இருவரும் இந்தியா வர முடிவு செய்துள்ளனர். எனினும், அது மெடலின்தானா, அவளை இதுவரை கவனித்து வந்தவர்கள் யார் என்பது பற்றி காஷ்மீர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கேத் & ஜெர்ரி தம்பதியின் மகள்தான் அவள் என்பதை நிரூபணம் செய்ய மெடலினுக்கு டிஎன்ஏ சோதனை நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

President: இளமையில் வெறுப்பை வளர்த்து விட்டு பின் ஒற்றுமைக்கு முயல்வது வேடிக்கை

சிறுபராயத்தில் வைராக்கியத்தை ஊட்டிவிட்டு பின்னர் ஐக்கியப்படுத்த முயல்வது வேடிக்கை : ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

சிங்கள,தமிழ்,முஸ்லிம் என பாடசாலைகளை வேறுபடுத்தி பிள்ளைகளிடத்தில் சிறுபராயத்திலேயே பிரிவினையை ஏற்படுத்தி அவர்கள் வயதானதன் பின்னர் பிரிவினை இருக்கக்கூடாது என்று கூறுகின்ற சமூக முறைமையானது தவறானதாகும் என்பதுடன் சிறுபராயத்தில் பிரிவினையை ஏற்படுத்தி பின்னர் ஐக்கியப்படுத்த முயல்வது வேடிக்கையானது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பிள்ளைகளின் மனதிற்கு பாதுகாப்பளிக்கவேண்டியது பெற்றோர், வயதுவந்தோர் மற்றும் ஆசிரியர்களின் பொறுப்பாகும். பிள்ளைகள் விடயத்தில் பிரபல்யம் மற்றும் இலாபத்தை விடவும் பிள்ளைகளின் பிள்ளை பருவம் முக்கியமானதாகும் என்றும் அவர் சொன்னார்.கொழும்பு தேஸ்டன் கல்லூரியில் நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்ட உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
நாட்டில் நற்பிரஜையாக இருக்கின்ற நபர்களிடத்தில் அச்சம்,பயம் பொறுமை மற்றும் நற்பழக்கவழக்கங்களை பாடசாலைகளே ஊட்டுகின்றன. எதிர்கால பிரஜைகளிடத்திலும் பாடசாலைகளே இவற்றை ஊட்டுக்கின்றன. எனினும், தற்காலத்தில் வளர்ச்சியடைந்த கணினி மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்கள் ஊடாக ஒருவருக்கு தனியாகவேனும் கற்றுக்கொள்ள முடியும். இவ்வாறான நிலையில் பாடசாலை மாணவர்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்கின்ற கருத்துக்களை அந்த தொழில்நுட்பத்திலிருந்து பெற்றுக்கொள்ள இயலாது மனிதர்களிடத்தில் தொடர்புகளை ஏற்படுத்தும் கலையையும் கற்றுக்கொடுக்கவேண்டும்.
மனிதத்தன்மையின் பெறுமதிக்கு ஆரம்பத்தில் இடம் கிடைப்பது பாடசாலையில் தான் என்பதனை புரிந்துகொள்ளவேண்டும். தனியாக பாடத்தை கற்பித்து பரீட்சையில் சித்தியெய்தினால் வாழ்க்கை நன்மையானது என்று பலரும் நினைக்கின்றார்கள் எனினும் அதன் ஊடாக நாட்டிற்கோ நாட்டு மக்களுக்கோ இன்றேல் குடும்ப உறுப்பினர்களுக்கோ எவ்விதமான பிரயோசனமும் இல்லை.
அவர்கள் தொடர்பில் எவ்விதமான பொறுப்புணர்வும் ஏற்படாது. சிங்கள,தமிழ்,முஸ்லிம் என பாடசாலைகளை வேறுபடுத்தி பிள்ளைகளிடத்தில் சிறுகாலத்திலேயே பிரிவினையை ஏற்படுத்தி அவர்கள் வயதானதன் பின்னர் பிரிவினை இருக்ககூடாது என்று கூறுகின்ற சமுக முறைமையானது தவறானதாகும். சிறுபராயத்திலேயே வைராக்கியத்தை ஊட்டியதன் பின்னர் ஐக்கியப்படுத்த முயல்வது வேடிக்கையான காரியமாகும் அதில் எவ்விதமான பிரயோசனமும் இருக்காது.
இலத்திரனியல் ஊடகங்கள் தங்களுடைய வியாபார நடவடிக்கையில் பிள்ளைகளை சுதந்திரமாக பயன்படுத்துவதுடன் பெற்றோர்கள் அதற்கு உடந்தையாக செயற்படுகின்றனர். ஊடகங்கள் இந்தநாட்டு பிள்ளைகளின் திறமை மற்றும் முயற்சியை கட்டியெழுப்புவதற்கு விசாலமான சேவையை செய்யவேண்டும். பிள்ளைகள் விடயத்தில் பிரபல்யம் மற்றும் இலாபத்தை விடவும் பிள்ளைகளின் பிள்ளை பருவம் முக்கியமானதாகும். பிள்ளைகளின் மனதிற்கு பாதுகாப்பளிக்கவேண்டியது பெற்றோர், வயதுவந்தோர் மற்றும் ஆசிரியர்களின் பொறுப்பாகும் என்றார்.
கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

மோகன்லால் மமூட்டி விவகாரம் முடி மறைக்க முயற்சி?



திருவனந்தபுரம் : பிரபல மலையாள நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் ஆகியோரது
வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தி ஒரு வாரத்துக்கு மேல் ஆன போதும், இதுவரை சோதனை குறித்த எந்த தகவலையும் வருமான வரித்துறை அதிகாரிகள் வெளியிடாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மலையாள முன்னணி நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் ஆகியோரது வீடுகள் மற்றும் அலுவலகங் களில் கடந்த 22ம் தேதி வருமான வரித்துறையினர் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

சென்னை, கொச்சி, பெங்களூர், திருவனந்தபுரத்தில் இந்த சோதனை நடந்தது. 4 நாட்களுக்கு மேல் நீடித்த இந்த சோதனையில் இருவரது வீடுகளில் இருந்தும் கணக்கில் காட்டப்படாத பணம் மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள்  கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சோதனை குறித்து வருமானவரித் துறை அதிகாரிகள் அதிகாரபூர்வமாக எதையும் அறிவிக்க வில்லை. வழக்கமாக முக்கிய பிரமுகர்களின் வீடுகளில் சோதனை நடந்தால் ஒருசில நாட்களிலேயே சோதனையில் கைப்பற்றப்பட்ட பொருட்கள்,

ஆவணங்கள் பற்றிய விவரத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் வெளியிடுவார்கள். ஆனால் ஒரு வாரத்துக்கு பின்னரும் எந்த விவரத்தையும் வருமான வரித்துறையினர் வெளியிடாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
சோதனை நடந்த அன்றே இது குறித்து வருமான வரித்துறையினரிடம் கேட்டபோது, மறுநாளே இது குறித்து செய்தி குறிப்பு வெளியிடுவதாக தெரிவித்தனர். ஆனால் பல நாட்கள் ஆன பிறகும் சோதனை குறித்த விவரங்களை கேட்டால் வாய்திறக்க மறுப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
வழக்கத்திற்கு மாறாக தாமதமானால் எதோ பூசி மெழுகும் வேலை நடப்பதாக எல்லோருக்குமே சந்தேகம் எழத்தான் செய்யும். 

கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

கனடாவில் மனைவியை வெட்டி கொன்ற பஞ்சாபி கணவன்


 

The Crown details the charges against Manmeet Singh, who is accused of killing his wife, Ravinder Kaur Bhangu, with an axe and cleaver at a Surrey newspaper office.

Van coover
கனடா நாட்டில் இந்திய பெண் பத்திரிக்கையாரை கொலை செய்த, அவரது கணவனை போலீசார் கைது செய்தனர்.

கனடா நாட்டின் வான்கூவன் புறநகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவிந்தர் குர் பாங்கு(24). ஆங்கிலம் மற்றும் பஞ்சாபி மொழிகளில் வெளிவரும் வார இதழ் ஒன்றில் நிர்வாக உதவியாளராக பணியாற்றி வந்தார். கனடா வாழ் இந்தியரான இவரது கணவர் சன்னி பாங்கு(26). கறிக்கடையில் வேலை பார்த்து செய்து வந்தார்.

தம்பதியர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில், ரவிந்தர் குர் கணவனைப் பிரிந்து அத்தை மற்றும் நண்பர்களின் வீடுகளில் கடந்த 2-3 மாதங்களாக வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று வாரஇதழ் அலுவலகத்திற்கு சென்ற சன்னி, அங்கு பணியில் இருந்த மனைவியிடம் பேச்சு கொடுத்தார். அப்போது திடீரென சன்னி ஏற்கனவே மறைத்து வைத்திருந்த கறி வெட்டும் கத்தியை எடுத்து, மனைவியை சரமாரியாக வெட்டினார்.

இதில் ரவிந்தர் குர் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் அல்லது பிரிந்து சென்ற கோபத்தில் இந்த கொலை நடந்திருக்கலாம் என தெரிகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சன்னியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

தலைவராக இசையமைப்பாளர் தேவா செயலாளராக நடிகை சச்சு தமிழ்நாடு இயல் இசை மற்றும் நாடக மன்ற

தமிழ்நாடு இயல் இசை மற்றும் நாடக மன்ற தலைவராக இசையமைப்பாளர் தேவா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும்,உறுப்பினர் செயலாளராக நடிகை சச்சு நியமிக்கப்பட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

பாமகவில் விடுதலை சிறுத்தைகள் பொதுக்குழுவில் முடிவு : ராமதாஸ்

பாமகவில் விடுதலை சிறுத்தைகள் சேருவது பற்றி
பொதுக்குழுவில் முடிவு : ராமதாஸ்

திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர்,‘’தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஒரு புதிய அணியை ஏற்படுத்தும் பா.ம.க. அறிவிப்புக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது. சென்னையில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பா.ம.க.வின் இந்த முடிவை வரவேற்றுள்ளார்.

பா.ம.க.வும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஒருமித்த கருத்துள்ள கட்சிகள். இந்த 2 கட்சிகளும் கட்டாய, கட்டணமில்லாத தரமான சமச்சீர் கல்வி மற்றும் தரமான மருத்துவ சிகிச்சையை வலியுறுத்தி வருகின்றன. பா.ம.க. அணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சேருவது குறித்து ஆகஸ்டு 27-ந் தேதி நடைபெறும் பா.ம.க. பொதுக்குழுவில் விவாதிக்கப்படும்.

இது பற்றி திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் ரவிக்குமார் ஆகியோரிடம் 2 முறை பேசியுள்ளேன். பா.ம.க. அணியில் சேர்ப்பதற்காக தமிழகத்தில் உள்ள பல இயக்கத்தினர் மற்றும் தமிழ் ஆர்வலர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி, பா.ம.க. அணியில் சேரும் வாய்ப்புள்ளது. இந்த 2 கட்சிகளும் தொண்டர்கள் அதிகமுள்ளவை. பா.ம.க.வும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஒரே அணியாக உருவானால் உள்ளாட்சி தேர்தலில் 3-வது அணியாக போட்டியிடுவோம்’’ என்று கூறினார்.
கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

நீதிபதி தினகரன்:நீதித்துறை மீது நம்பிக்கையில்லை

டெல்லி: தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் இடம்பெற்ற சிக்கிம் மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியை தினகரன் ராஜினாமா செய்து விட்டார்.

தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட என்னைப் போன்றவர்கள் உயர்ந்த பதவியில் இருப்பதை இந்த சமூகமும் அரசியல் அமைப்பும் ஒருபோதும் அனுமதிப்பதில்லை, விரும்புவதும் இல்லை. காலகாலமாக நடந்துவரும் இந்த அநீதிதான் எனக்கும் நேர்ந்துள்ளது, என தினகரன் தனது ராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தினகரன் மீது ஊழல், அதிகார துஷ்பிரயோகம், நில அபகரிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் உள்ளன. இது தொடர்பாக நீதிபதி வி.எஸ். சிர்புர்கர் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த தினகரன், தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி தமிழகத்தில் ஏராளமான நிலங்களை சட்டவிரோதமாக சொந்தமாக்கிக் கொண்டதாகவும், வருமானத்துக்கு அதிகமாக அவரும், அவர் குடும்பத்தினரும் ஏராளமான சொத்துகளை வாங்கிக் குவித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த அவர், சிக்கிமுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

முன்னதாக இது தொடர்பாக மாநிலங்களவையில் எம்.பி.க்கள் பிரச்னை எழுப்பியதை அடுத்து, விசாரணைக்காக குழு அமைத்து குடியரசு துணைத்தலைவர் ஹமீத் அன்சாரி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்.

'தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த என்னை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறார்கள். இதற்கு மேல் நீதிபதியாக தொடர விரும்பவில்லை. பொய்யான குற்றச்சாட்டுகளின் பேரில் என்னை தொடர்ந்து அவமானப்படுத்துகிறார்கள்,' என்று குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலுக்கு அனுப்பியுள்ள தனது ராஜினாமா கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள்

தனது ராஜினாமா குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நானோ என் குடும்பத்தினரோ எந்த நிலத்தையும் யாரிடமிருந்தும் அபகரிக்கவில்லை. இந்த குற்றச்சாட்டே மோசடியான பொய்யானது. என் பெயரிலோ, உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் பெயரிலோ எந்த நிலமும் இல்லை என இந்திய சர்வே துறையே தெள்ளத் தெளிவாகக் கூறியுள்ளது. இதற்கு மேல் வேறு என்ன ஆதாரம் வேண்டும். ஆனால் வேண்டுமென்றே அந்தக் குற்றச்சாட்டை ஊதிப் பெரிதாக்கி என்னை அசிங்கப்படுத்துகின்றனர். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நான் உயர்ந்த இடத்திலிருப்பதை விரும்பாத சக்திகள் செய்யும் சதி இது.

நான் இப்போது என் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். ஒரு ப்ரீலான்சராக இப்போது பேசுகிறேன். சாதியை ஒரு சாக்காக காட்டி அனுதாபம் தேட நான் முயலவில்லை. நாட்டில் நிலவும் நடைமுறை எதார்த்தத்தைச் சொல்கிறேன். என்னைப் போன்றவர்கள் அதிகார பீடத்தில் இருப்பதை ஆதிக்க சக்திகள் விரும்புவதில்லை.

நீதித்துறை மீது நம்பிக்கையில்லை

என் மீதான விசாரணைக் கமிட்டி மீதோ, நீதி விசாரணையிலோ எனக்கு நம்பிக்கை இல்லை. அடிப்படையே இல்லாமல் புனையப்பட்ட இந்த வழக்குக்கு இத்தனை முக்கியத்துவம் தருவதை நினைத்தால், நீதித் துறை மீதே நம்பிக்கை இன்மை தோன்றுகிறது," என்றார்.
கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

தமிழகம் முழுவதும் போராட்டம் : ராமதாஸ் அறிவிப்பு


திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர்,தமிழகத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மொத்தம் 7 லட்சம் பேர் வேலைக்காக பதிவு செய்து காத்திருக்கிறார்கள்.

இவர்களுக்கு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தி பணியமர்த்துவது என அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை அரசு கைவிட்டு பழைய முறையிலேயே பணியமர்த்த வேண்டும். சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என கடந்த ஜூன் 20-ந் தேதி பா.ம.க.வினர் போராட்டம் நடத்தினர்.

2-வது முறையாக வருகிற 2-ந் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டம், தாலுகா தலைநகரங்களில் போராட்டம் நடைபெற உள்ளது.

அன்று திண்டிவனம் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெறும் போராட்டத்தில் நான் பங்கேற்க உள்ளேன்’’ என்று தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

பதட்டத்தில் சேலம் வீரபாண்டி ஆறுமுகம் கைது எதிரொலி

சேலம்: முன்ஜாமீன் பெற்றிருந்த முன்னாள் அமைச்சர் வீரபண்டி ஆறுமுகம் இன்று திடீரென மீண்டும் கைது செய்யப்பட்டதால் சேலம் மாவட்டம் முழுக்க பெரும் பதட்டம் நிலவுகிறது.

அங்கம்மாள் காலனி வழக்கில் முன் ஜாமீன் பெற்று நீதிமன்ற உத்தரவின் பேரில் காவல் நிலையத்தில் இன்று 3வது நாளாக கையெழுத்து போட வந்த வீரபாண்டி ஆறுமுகம் திடீரென எந்த அறிவிப்புமின்றி மீண்டும் கைது செய்யப்பட்டார். போலீசார் அவரிடம் காரணத்தையும் கூறவில்லை.

வேறொரு நில மோசடி தொடர்பாக அவரைக் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றதாகத் தெரிகிறது.

சேலம் காத்தநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாலமோகன்ராஜ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று பின்னர் போலீஸார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

தனக்குச் சொந்தமான ரூ.6 கோடி மதிப்புள்ள 20 ஆயிரம் ச.அடி நிலத்தை மோசடி செய்ததாக பாலமோகன்ராஜ் புகார் அளித்துள்ளார். வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் அவரது தம்பி மகன் உள்பட மூவர் மீது இந்தப் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுகவினர் போராட்டம்

வீரபாண்டி ஆறுமுகம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காவல் நிலையம் முன் திரண்டிருந்த திமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். போலீஸாருடன் மோதலிலும் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்ட வீரபாண்டி ஆறுமுகம் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோயமுத்தூருக்கு அழைத்துச் செல்லப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சேலத்தில் பதட்டம்

இதனிடையே, வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் சேலம் நகரில் ஆங்காங்கே வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் பொதுமருத்துவமனை மற்றும் பேருந்து நிலையம் எதிரில் சில பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சேலம் நகரில் காலை முதல் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

முக ஸ்டாலின் திடீர் கைது...விடுதலை!

late news
சென்னை: சனிக்கிழமை காலை திடீரென்று கைது செய்யப்பட்ட முன்னாள் துணை முதல்வர் முக ஸ்டாலின், திமுகவினரின் மாநிலம் தழுவிய பெரும் ஆர்ப்பாட்டம காரணமாக விடுவிக்கப்பட்டார்.

திமுக பொருளாளரும் முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின் திருத்துறைப் பூண்டி அருகே மொழிப்போர் தியாகி தொடர்பான கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று இரவு தஞ்சாவூருக்கு வந்திருந்தார்.

பின்னர் இன்று காலை திருவாரூருக்கு காரில் சென்றுகொண்டிருந்தார். திருவாரூர் மாவட்ட எல்லையில், திருத்துறைப்பூண்டி அருகே கோவில்வன்னி என்னும் இடத்தில் அவருக்கு வரவேற்பு கொடுக்க திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன் உள்ளிட்ட தி.மு.க.வினர் காத்திருந்தனர்.

அங்கே மு.க.ஸ்டாலின் வந்ததும், போலீஸார் அவரிடம் ஒரு விசாரணை உள்ளது என்று கூறினர். என்ன என்று கேட்டபோது, சமச்சீர் கல்வியை அமலாக்கக் கோரி திமுகவினர் போராட்டம் நடத்தியபோது பள்ளியில் இருந்து மாணவர்களை வலுக்கட்டாயமாக பஸ்ஸில் திரும்பி அனுப்பினர். அப்போது, கொரடச்சேரி அருகே பஸ் ஒன்று விபத்துக்கு உள்ளானதில், திமுகவினரால் திருப்பி அனுப்பப்பட்ட விஜய் என்ற மாணவர் விபத்தில் பலியானார்.

இதற்கு பூண்டி கலைவாணன்தான் காரணம். எனவே விசாரணை நடத்த வேண்டும் என்றனர். பூண்டி கலைவாணனை ஒப்படைக்க இயலாது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து சாலைமறியல் போராட்டமும் நடந்தது. இதனால் ஸ்டாலினையும் சேர்த்து திமுகவினரை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்டாலினுடன் முன்னாள் அமைச்சர்கள் அழகு திருநாவுக்கரசு, மதிவாணன், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், விஜயன் எம்.பி. உள்பட சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர் திமுகவினர். தேர்தல் தோல்விக்குப் பிறகு சுணங்கிப் போயிருந்த திமுகவினர், ஸ்டாலின் கைது என்றதும் வீறு கொண்டெழுந்தனர்.

சனிக்கிழமை காலை கைது செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின் மதியம் 2 மணி வாக்கில் விடுவிக்கப்பட்டார். ஸ்டாலினுடன் வந்த பழனிமாணிக்கம் உள்ளிட்ட திமுக தலைவர்களும் விடுவிக்கப்பட்டனர்.

முன்னதாக தனது கைது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், "ஆகஸ்ட் 1-ம் தேதி திமுக நடத்தவிருக்கும் பெரும் அறப்போரை நசுக்கவே என்னைக் கைது செய்துள்ளது அதிமுக அரசு," என்று கூறியிருந்தார்.

அவரது கைதைக் கண்டித்து திமுகவினர் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தி வந்த நிலையில், இன்று பிற்பகல் அவரை போலீஸார் விடுவித்துவிட்டனர். இதைத் தொடர்ந்து, கலைவாணனைத் தவிர மற்றவர்கள் அனைவரும் அடைத்து வைக்கப்பட்டிருந்த மண்டபத்தை விட்டு வெளியேறினர்.

ஸ்டாலின் நாடகம்- போலீஸ்

ஸ்டாலின் கைது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருவாரூர் மாவட்ட எஸ்பி, "ஸ்டாலினை நாங்கள் கைது செய்யவில்லை. மாணவர் ஒருவர் விபத்தில் இறப்பதற்குக் காரணமான சம்பவம் தொடர்பாக மாவட்ட திமுக செயலர் பூண்டி கலைவாணனிடம் விசாரணை நடத்த வந்தோம்; அவரை ஒப்படையுங்கள் என்றோம்.

அதற்கு ஸ்டாலின் தரப்பு மறுத்ததுடன் தானாகவே சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். தொடர்ந்து கைதாகினர். அவர்களை பாதுகாப்பாக திருவாரூர் அழைத்து வந்தோம். தற்போது, கலைவாணனை மட்டும் விசாரணைக்கு நிறுத்தி வைத்து, மற்றவர்களை விடுவித்துவிட்டோம்," என்றார் அவர்.
கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

ஸ்டாலின் திடீர் கைது

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கைது செய்யப்பட்டார்.

திமுக பொருளாளரும் முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின் திருத்துறைப் பூண்டி அருகே மொழிப்போர் தியாகி தொடர்பான கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று இரவு தஞ்சாவூருக்கு வந்திருந்தார்.

பின்னர் இன்று காலை திருவாரூருக்கு காரில் சென்றுகொண்டிருந்தார். திருவாரூர் மாவட்ட எல்லையில், திருத்துறைப்பூண்டி அருகே கோவில்வன்னி என்னும் இடத்தில் அவருக்கு வரவேற்பு கொடுக்க திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன் உள்ளிட்ட தி.மு.க.வினர் காத்திருந்தனர்.

அங்கே மு.க.ஸ்டாலின் வந்ததும், போலீஸார் அவரிடம் ஒரு விசாரணை உள்ளது என்று கூறினர். என்ன என்று கேட்டபோது, சமச்சீர் கல்வியை அமலாக்கக் கோரி திமுகவினர் போராட்டம் நடத்தியபோது பள்ளியில் இருந்து மாணவர்களை வலுக்கட்டாயமாக பஸ்ஸில் திரும்பி அனுப்பினர். அப்போது, கொரடச்சேரி அருகே பஸ் ஒன்று விபத்துக்கு உள்ளானதில், திமுகவினரால் திருப்பி அனுப்பப்பட்ட விஜய் என்ற மாணவர் விபத்தில் பலியானார்.

இதற்கு பூண்டி கலைவாணன்தான் காரணம். எனவே விசாரணை நடத்த வேண்டும் என்றனர்.

பூண்டி கலைவாணனை ஒப்படைக்க இயலாது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து சாலைமறியல் போராட்டமும் நடந்தது. இதனால் ஸ்டாலினையும் சேர்த்து திமுகவினரை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்டாலினுடன் முன்னாள் அமைச்சர்கள் அழகு திருநாவுக்கரசு, மதிவாணன், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், விஜயன் எம்.பி. உள்பட சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடைகள் அடைப்பு

ஸ்டாலின் கைதான சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது திமுகவினர் மத்தியில். திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திமுகவினர் தொடர்ந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

கல்வி வெற்றிகரமான வியாபாரம் குழப்பத்தின் உச்சம்!


கல்வி வியாபாரமாகி பல வருடங்களாகி விட்டது. எப்போது அது ஒரு என்றாகியதோ அப்போதே அதில் அரசியலும் புகுந்து விட்டது. ஆமை புகுந்த வீடும் அரசியல்வாதி புகுந்த தொழிலும் உருப்பட்டதாக சரித்திரம், பூகோளம் எதுவுமில்லை. இன்றைய தேதியில் அரசியல்வாதிகள் நேரடியாக புகாத தொழில் ஆன்மீகம் தான்! அதனால் தான் ஆன்மீகவாதிகளை அரசியல்வாதிகளாக்க முயன்று ஒருவாறு வெற்றியும் பெற்று வருகிறார்கள். சமச்சீர் கல்வித்திட்டத்தில் அரசு தவறான முறையைப் பின்பற்றி விட்டது என்று அரசு வழக்கறிஞரே கோர்ட்டில் அந்தர் பல்டி அடித்து அதிர்வலைகளைக் கிளப்பியிருக்கிறார். சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அறிமுகப்படுத்த வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ள போதும், “சரி” என்று அரசிடமிருந்து சாதகமான பதில் இன்னமும் வரவில்லை. இந்நிலையில் இது தான் சாக்கு என்று மக்களால் புறக்கணிக்கப்பட்ட சில அரசியல் சக்திகள் மாணவர்களைத் தூண்டும் வேலைகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளன. ஆங்காங்கே மாணவர்களை போராட்டங்களில் ஈடுபடச் செய்துள்ளார்கள். வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்திருகிறார்கள். இன்றைய தேதியின் இவ்வளவு பிரச்னைக்கும் இந்த தீய சக்திகள் தான் முதல் காரணம். முதலில் இவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் முதல்வர். மாணவர்களிடம் அரசியலைப் புகுத்தக் கூடாது. ஏற்கனவே பலரும் சொல்லியிருந்தபடி இப்போதைக்கு சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்தி விட்டு அடுத்த கல்வியாண்டின் போது பாடங்களை எப்படி தரமானதாக்கலாம் என்று யோசிக்கலாம்.
சில தனியார் பள்ளிகளில் சமச்சீர் கல்வி வந்தாலும் தாங்கள் தனியாக சில புத்தகங்களையும் மாணவர்களுக்கு வழங்கப் போகிறோம் என்று சொல்லி வருகிறார்கள்.
குழப்பத்தின் உச்சம்!
கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

ஆசிரியர் அடித்து மாணவன் கொலை, காட்டுமிராண்டித்தனமாக அடிப்பது

ஆசிரியர் அடித்து மாணவன் கொலை! போராடிய தோழர்கள் கைது!தி.மு.க பிரமுகர் – பினாமியான சாமிக்கண்ணு என்பவருக்கு சொந்தமான ஏழுமலை தொழில் நுட்பக் கல்லூரி விழுப்புரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இக்கல்லூரியில் புதுச்சேரியைச் சேர்ந்த பிரபாகரன் வயது 19, ஆட்டோமொபைல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இவரது வகுப்பாசிரியராக பணியாற்றும் குணசேகரன் தொட்டதுக்கெல்லாம் மாணவர்களை காட்டுமிராண்டித்தனமாக அடிப்பது வழக்கம். அப்படித்தான் 27.7.2011 அன்று கேள்வி கேட்டு பதில் சொல்லவில்லை என்று பிரபாகரனை பளார் என கன்னத்திலும், தலையிலும், கழுத்திலும், வயிற்றிலும் ஆத்திரம் தீர அடித்திருக்கிறார்.
ஆசிரியர் அடித்து மாணவன் கொலை! போராடிய தோழர்கள் கைது!அடிபட்ட வலி தாங்காமல் கண் இருட்டி விழுந்த மாணவனின் மூக்கிலிருந்து இரத்தம் வழிந்தது கண்டு சக மாணவர்கள் அதிர்ச்சியில் சத்தம் போடத் துவங்கினர். பதறிய நிர்வாகம் உடனே மாணவர் பிரபாகரனை சிகிச்சைக்கு கொண்டு செல்வதாக சமதானப்படுத்த முயன்றது. ஆனால் மாணவனைத் தூக்கும்போதே அவன் இறந்து விட்டான் என்பதைத் தெரிந்து கொண்ட மாணவர்கள் முழு கல்லூரியையும் அணிதிரட்டி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்தனர்.
நிர்வாகமோ மாணவன் பிரபாகரன் வலிப்பு வந்து இறந்து விட்டதாகவும் பின்னர் அவன் சாகவில்லை என்று சொல்லியும் கதை கட்டி போராட்டத்தை முடிக்க நினைத்தது. இந்நிலையில் இப்பகுதியில் செயல்பட்டு வரும் பு.மா.இ.மு தோழர்கள் தலையீட்டின் பேரில் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது.
ஆசிரியர் அடித்து மாணவன் கொலை! போராடிய தோழர்கள் கைது!சுமார் 2 மணிநேரம் நடந்த சாலை மறியலால் போக்கு வரத்து முற்றிலும் முடங்கியது. போலீசும் போக்குவரத்தை மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டது. பின்னர் ஏராளமான போலீசாரைக் கொண்டு சாலையில் இருந்த மாணவர்களை தடியடி நடத்தி பலரை காயப்படுத்தி விரட்டினார்கள். போராட்டத்திற்கு தலைமை தாங்கிய பு.மா.இ.மு தோழர்கள் எட்டு பேரை பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்திருக்கிறது.
இந்த கைது வழக்கிற்கு அஞ்சாமல் பு.மா.இ.முவும் மாணவர்களும் நீதி கிடைக்கும் வரை போராடுவதாக உறுதி பூண்டிருக்கிறார்கள். இதற்கு முன்னோட்டமாக ஆசிரியர் குணசேகரன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.


கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

இடம் தேடி அலையும் "செம்மொழி இன்னொரு சமச்சீராக்காமலிருந்தால் சரிதான்.

தி.மு.க., ஆட்சியில் செல்லப்பிள்ளையாக இருந்த, "செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்' இன்று இடம் தேடி அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு 2004, அக்டோபர் 12ம் தேதி, "செம்மொழிகள்' என்ற சிறப்பு பிரிவை துவக்கி, தமிழை "செம்மொழி' என அறிவித்தது. அதன்பின், 2007ம் ஆண்டு, "செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்' சென்னையில் துவக்கப்பட்டது. இதற்காக 11ம் ஐந்தாண்டு திட்டத்தில், 76 கோடியே 32 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
இப்புதிய நிறுவனம் சென்னை பீச் ரோட்டில் உள்ள, பொதுப்பணித் துறைக்கு சொந்தமான, பாலாறு இல்லத்தில் துவக்கப்பட்டது. இதன் இயக்குனராக மோகன், பொறுப்பு அலுவலராக பேராசிரியர் ராமசாமி நியமிக்கப்பட்டனர். தலைவராக அப்போதைய முதல்வர் கருணாநிதி, துணைத் தலைவராக பேராசிரியர் வா.செ.குழந்தைசாமி நியமிக்கப்பட்டனர். ஐம்பெரும் குழு, எண்பேராயம் போன்றவை துவக்கப்பட்டது. நிறுவனம் துவக்கப்பட்டபோதே, இடவசதி போதுமானதாக இல்லை என ஊழியர்கள் தெரிவித்தனர். அதை தொடர்ந்து, கிண்டி அருகே கட்டடம் ஒன்றை வாடகைக்கு பார்த்தனர். அங்கு அலுவலகத்தை கொண்டு செல்ல, மத்திய அரசிடம் அனுமதி பெற்றனர்.
ஆனால், அப்போதைய முதல்வர் கருணாநிதி, புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டுள்ளதால், செயின்ட் ஜார்ஜ் கோட்டையை ஒதுக்கி தருகிறேன். வேறு இடம் பார்க்க வேண்டாம் எனக் கூறியுள்ளார். அதையேற்று, அலுவலகத்திற்கு இடம் பார்க்கும் பணியை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன ஊழியர்கள் நிறுத்தினர்.
கடந்தாண்டு(2010) ஜூலை, ஜார்ஜ் கோட்டையில், சட்டசபை கூட்டம் நடக்கும் அரங்கில், "பாவேந்தர் செம்மொழித் தமிழாய்வு நூலகம்' துவக்கப்பட்டது. இதில் 35 ஆயிரம் நூல்கள், 2,000க்கும் மேற்பட்ட, "சிடி'க்கள் இடம் பெற்றிருந்தன. அங்கு 120 தமிழ் ஆய்வாளர்கள் அமர்ந்து, ஆய்வு பணியில் ஈடுபட்டனர். ஓலைச்சுவடிகள், பழைய நூல்கள், டிஜிட்டல் மயமாக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. தமிழ் அறிஞர்களின் படங்களும் இடம் பெற்றிருந்தன.
புதிய அரசு பொறுப்பேற்றதும், சட்டசபை கோட்டையிலே செயல்படும் என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதை தொடர்ந்து, அங்கு செயல்பட்டு வந்த, "பாவேந்தர் செம்மொழித் தமிழாய்வு நூலகம்' இரவோடு இரவாக அகற்றப்பட்டது. அங்கிருந்த புத்தகங்கள் அனைத்தும், மூன்று அறைகளில் பூட்டி வைக்கப்பட்டுள்ளன. மூன்று ஊழியர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
"செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்' செயல்பட்டு வந்த பாலாறு இல்லத்தின், ஒரு பகுதியில் பொதுப்பணித்துறை அமைச்சர் குடியேறி உள்ளார். இதனால், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு கடும் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது குறித்து, முதல்வரிடம் பேச, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன அதிகாரிகள், தங்கள் அலுவலகத்திற்காக இடம் தேடத் துவங்கியுள்ளனர். தங்கள் அலுவலகத்திற்கு 30 ஆயிரம் சதுரடி கொண்ட கட்டடம் தேவை என, பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்துள்ளனர்.
இது குறித்து, "செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்' அதிகாரிகள் கூறியதாவது:
"செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்' மத்திய அரசின் கீழ் செயல்படுகிறது. இந்நிறுவனத்திற்கு தலைவர், துணைத் தலைவர் போன்ற பதவிகள் தேவை இல்லை. எனினும், அப்போதைய முதல்வர் கருணாநிதியை மகிழ்விப்பதற்காக, அவர் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆட்சி மாறியதும், நடைமுறைப்படி, ஜெயலலிதா தலைவராக அறிவிக்கப்பட்டார். சட்டசபை அரங்கில் செயல்பட்ட, நூலகத்தை அகற்றும் போது, புத்தகங்களை கொண்டு செல்ல வாகனங்கள் ஏற்பாடு செய்வதாகவும், வேறு இடம் ஒதுக்கி தருவதாகவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
விரைவில் சொந்த கட்டடம்:
சென்னை பெரும்பாக்கத்தில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்காக 17 ஏக்கர் நிலம், தமிழக அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில், 2 கோடியே 75 லட்ச ரூபாய் மதிப்பில், சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
கட்டடம் கட்ட மதிப்பீடு தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. இங்கு கட்டடம் கட்டப்பட்டால், இடம் தேடி அலையும் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்.
கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

மாடா? மடிக் கணினியா?

வீட்டுக்குள்ள போகவே வெறுப்பா இருக்குடா...ஏண்டா மச்சீ இப்படி சொல்றே! மச்சீ நமக்குதான் ச-மச்சீ-ர் எல்லாம் இல்லையே அப்புறம் ஏண்டா இப்படி வெறுத்து போய் பேசுறே!எல்லாம் இந்த அரசாங்கம் செஞ்ச வேலைதாண்டாஅப்படிக்கு என்னடா ஆச்சு உனக்கு?வீட்டுக்குள்ள போனா அப்பா ஒரு பக்கம் கத்துறாரு... அம்மா ஒரு பக்கம் கத்துறாங்க... டேய் ஒழுங்க படிச்சி மார்க் வாங்கு... அப்படி மார்க் வாங்கினா ஒனக்கு அரசாங்கம் இலவசமா தர்ற லேப்டாப் கிடைக்கும்... இல்லைன்னா... அரசாங்கம் இலவசமா தர்ற ஆடு மாடுதான்... அதை மேச்சிக்கிட்டு ஊரைச் சுத்துன்னு அப்பா கத்துறாருடா மச்சீ...டேய் மச்சீ... அதே கதைதான் எனக்கும்.. இதுக்கு போய் ஏண்டா அலட்டிக்கிறே! உட்டுத்தள்ளு மச்சீ! உட்டுத் தள்ளு!!
கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

வீரபாண்டி ஆறுமுகம் மீண்டும் கைது; போலீசாருடன் தி.மு.க.வினர் மோதல்

சேலம் மாநகர் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனில், நேற்று 3வது நாளாக  
ஆஜரான முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தைப் போலீசார் மீண்டும் கைது செய்தனர். சுபம் மெட்ரிகுலேஷன் பள்ளிக்குச் சொந்தமான நிலத்தை வாங்கியது தொடர்பான வழக்கில் இவர் தற்போது கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. போலீஸ் நிலையம் முன் கூடியிருந்த தி.மு.க.,வினர் இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். போலீசாருடன் தி.மு.க.,வினர் மோதலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட வீரபாண்டி ஆறுமுகம், உடனடியாக நீதி மன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சேலம், அங்கம்மாள் காலனி நிலம் மற்றும் பிரீமியர் மில் நில அபகரிப்பு வழக்கில், முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திடம், ஐகோர்ட் உத்தரவுப்படி, மாநகர் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனில், 3 நாள் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்குப் பின், சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, "மாநகர் மத்திய குற்றப்பிரிவு போலீஸில், தினமும் காலை 8 மணிக்கு நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்' என, நீதிபதி உத்தரவிட்டார். அந்த உத்தரவில், எத்தனை நாள் ஆஜராகி, கையெழுத்துப் போட வேண்டும் என்பது பற்றி குறிப்பிடப்படவில்லை.

அதன்படி, முதல் நாளான 28ம் தேதி காலை 8 மணிக்கு ஆஜராக வேண்டிய வீரபாண்டி ஆறுமுகம், 10 நிமிடம் காலதாமதமாக, காலை 8.10 மணிக்கு ஆஜரானார். இந்த காலதாமத்துக்கு எழுத்துப்பூர்வமாக விளக்கம் தரும்படி போலீசார் வலியுறுத்தினர். அதனால், வீரபாண்டி ஆறுமுகம் டென்ஷனானார். 2வது நாளான நேற்று, வீரபாண்டி ஆறுமுகம், 10 நிமிடத்துக்கு முன்னதாகவே, காலை 7.50 மணிக்கு, காரில் ஸ்டேஷனுக்கு வந்து இறங்கினார். 100 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஸ்டேஷனுக்குள், 7.51 மணிக்கு நுழைந்த வீரபாண்டி ஆறுமுகம், 9 நிமிடம் நாற்காலியில் அமர்ந்தபடி காத்திருந்தார். சரியாக 8 மணி ஆனதும், வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டு விட்டு, 8.01 மணிக்கு வெளியே வந்தார். திரண்டிருந்த தி.மு.க.,வினர், வீரபாண்டி ஆறுமுகத்தை வாழ்த்தியும், அரசுக்கு எதிராகவும் கோஷமிட்டனர். அப்போது, சிரித்த முகத்தோடு போலீசார், 8.05 மணிக்கு வீரபாண்டி ஆறுமுகத்தை வழியனுப்பி வைத்தனர்.

3வது நாளாக அவர் கையெழுத்திட வந்தபோது அவரை போலீசார் கைது செய்தனர்.
கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

திருமாவளவன் தி.மு.க. கூட்டணியை விட்டு விலகுவது பற்றி ஆலோசனை:

பா.ம.க. தலைவர் ராமதாஸ் அழைப்பு விடுத்தால், தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறி, பா.ம.க. கூட்டணியில் சேர்வது பற்றி கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் பொதுச்செயலாளர் திருமாவளவன் கூறினார்.சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி சேராமல், மாற்று அணியை உருவாக்க வேண்டும் என்பது எங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய யோசனை. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவிடமும் அதுபற்றி பேசியிருக்கிறேன்.
தற்போது என்னுடைய எண்ணத்தின்படி, பா.ம.க. தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. ராமதாசின் இந்த முடிவை வரவேற்கிறேன். ராமதாஸ் அழைப்பு விடுத்தால், எங்கள் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை செய்து, பா.ம.க. அணியில் சேர்வது பற்றி முடிவு செய்யப்படும் என்றார்.

பாமக விடுதலை சிறுத்தைகள் மற்றும் மதிமுகவும் ஒரே அணியில்? ஆஹா நினைத்தாலே இனிக்கும் இனிக்கும் இனிக்கும் என்பது இதுதானோ?
இந்த அணிக்கு புலன் பெயர்களின் காசும் இலவச விளம்பரமும் நிச்சயம் கிடைக்கும் ஆனால் தமிழ் நாட்டு மக்களின் வாக்கு மட்டும் எதிர்பார்க்கும் அளவு கிடைக்காது போகலாம். 
அதனால் என்ன வரும்படிதானே முக்கியம்?
துட்டு இருந்தால் தானே எல்லாம் நடக்கும்.
மூன்று கட்சிகளும் விரைவில் ஒன்று சேர்ந்து ஜெயாவுக்கு பயந்து பயந்து இடை இடையே காதிலே பூசுத்தும் போராட்டகாட்சிகளை அரங்கேற்றட்டும்.
பொழுது போகனும்லே? காகித ஓடம் கடலலை மேலே போவது போலே மூவரும் போவோம்.( பாடல் இடம் பெற்ற படம் மறக்க முடியுமா? இயற்றியவர் கலைஞர்) நன்றி கலைஞர்
கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

மத வன்முறை தடுப்பு சட்டத்துக்கு ஜெயலலிதா கடும் எதிர்ப்பு

சென்னை: மத வன்முறையை தடுக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள 'மத மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு' சட்ட மசோதாவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் மத்திய அரசு மத மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு மசோதாவை தாக்கல் செய்ய உள்ளதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த மசோதாவுக்கு அதிமுக சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மசோதாவின் நோக்கம் மத வன்முறையை தடுப்பது என்று கூறப்பட்டிருந்தாலும் இந்த மசோதாவின் நோக்கமே தெளிவில்லாமல் இருக்கிறது. இந்த மசோதாவை மேலோட்டமாக பார்க்கும்போதே அது உள்நோக்கம் கொண்டது என்பது புரிகிறது. மசோதா அதன் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் அமையவில்லை.

மிகத் தீவிரமாக மத உணர்வுகளை வெளிப்படுத்த அனுமதிக்க முடியாது என்றாலும், இந்தியா போன்ற பல்வேறு மத மற்றும் மொழி பேசும் மக்களை கொண்ட நாட்டில் மத மற்றும் திட்டமிட்ட வன்முறைக்கு இடமில்லை என்பதையும் மதச்சார்பற்றவர்கள் ஒப்புக் கொள்வார்கள். ஆனால், இந்த மசோதாவானது அதன் நோக்கத்தை சிறிதளவு கூட நிறைவேற்ற முடியாததாக உள்ளது.

அது மட்டுமல்லாமல் இந்த மசோதா பல்வேறு பிரிவினரிடையே நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி விமர்சன, எதிர்ப்பு கருத்துக்களை தெரிவிக்கும் பிரிவினர் மீது அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்த வழி செய்யும். சுருக்கமாக சொல்வதானால் மத வன்முறையை தடுக்க முயலும் இந்த மசோதா முன்வைக்கும் தீர்வு, நோயை விட மோசமாக உள்ளது. இந்த மசோதாவின் மூன்றாவது பிரிவில் ஒரு பிரிவினருக்கு எதிரான துவேஷமான சூழ்நிலைக்கான விளக்கம், மற்ற விஷயங்களோடு ஒருவரது அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்த மசோதாவின் ஷரத்துக்களை விரும்பிய வகையில் அர்த்தப்படுத்திக் கொள்ளும் வாய்ப்புள்ளது. எந்த சட்டமும் அதன் நோக்கத்தில் தெளிவானதாக இருக்க வேண்டும். இல்லையென்றால் தவறாக பயன்படுத்தப்படும் வாய்ப்பு இருக்கிறது. இந்த மசோதா மத மற்றும் திட்டமிட்ட வன்முறை தொடர்பான குற்றங்களை பட்டியலிட்டுள்ளது.

8வது பிரிவில் துவேஷ பிரச்சாரத்திற்கான வரையறையில் துவேஷத்தை தூண்டக் கூடிய அல்லது பரப்பக்கூடிய தன்மை கொண்டவை என்று கருதக் கூடிய வகையில் தகவல்களை வெளியிடுபவர்கள் அல்லது விளம்பரம் அல்லது சுவரொட்டிகளை வினியோகிப்பவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வரையறையும் தெளிவில்லாமல் இருக்கிறது. அதிகாரத்தில் உள்ளவர்கள் தவறாக பயன்படுத்தப்படும் வாய்ப்பு கொண்டதாக உள்ளது.

இந்த மசோதாவின் 13வது பிரிவு கடமையை செய்யத் தவறியது பற்றி வரையறுக்கும் போது மத மற்றும் திட்டமிட்ட வன்முறையை தடுக்கும் வகையில் பொது ஒழுங்கை பராமரிக்க வேண்டிய அரசு அதிகாரிகளின் கடமையை விவரிக்கும் 18வது பிரிவை குறிப்பிடுகிறது.

மேலும் மத மற்றும் திட்டமிட்ட வன்முறை நடைபெற வாய்ப்பு இருப்பது பற்றி தகவல் பெற்று மத வன்முறையை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க தவறுவதும், கடமையை நிறைவேற்ற தவறியதாக கருதப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி மூத்த அதிகாரிகள் தங்களுக்கு கீழ் உள்ள அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டலாம் என்பதால் இது மிகவும் ஆபத்தானதாகும்.

மசோதாவின் 14வது பிரிவின்படி கீழே உள்ள அதிகாரிகள் தங்கள் கடமையை நிறைவேற்ற தவறினால் தலைமை அல்லது மேற்பார்வை நிலையில் உள்ள அதிகாரி இந்த சட்டம் அல்லது வேறொரு பொருந்தக் கூடிய சட்டத்தின் கீழ் தனது பொறுப்பை நிறைவேற்ற தவறியதாக கருதப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. உயரதிகாரிகள் தங்கள் பொறுப்புக்களை தட்டிக்கழிக்க முடியாது என்றாலும் மூத்த அதிகாரிகளை குற்றஞ்சாட்டுவது சரியாக இருக்காது.

இந்த மசோதாவின் 20வது பிரிவு மாநிலங்களின் சுயாட்சி மீதான நேரடி தாக்குதலாக அமைந்துள்ளது. இந்த பிரிவானது அரசியல் சாசனம் மற்றும் சர்க்காரியா கமிஷன் உள்ளிட்ட பல்வேறு கமிஷன்களின் பரிந்துரைக்கு எதிராக உள்ளது. இந்த பிரிவானது மத மற்றும் திட்டமிட்ட வன்முறை அரசியல் சாசனத்தின் 355வது பிரிவின்கீழ் குழப்பமாக பொருள் கொள்ளப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது எப்போதுமே மாநில அரசுகளின் தலை மீது தொங்கிக் கொண்டிருக்கும் கத்தி போன்றது. மேலும் இந்தப் பிரிவானது இத்தகைய வன்முறைகளை தடுக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த பிரிவின் கீழ் மத்திய அரசுக்கான அதிகாரமானது மாநில அரசுகளின் சுயாட்சி கொள்கைக்கு எதிரானது. இந்த மசோதாவின் கீழ் மாநில அரசுகளுக்கு இந்த சட்டத்தின் கீழான குற்றங்களில் சிறப்பு அரசு வழக்கறிஞர்களை நியமிப்பதற்கான அதிகாரம் கூட இல்லை.

மசோதாவின் 8வது அத்தியாயம் மத வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் பொறுப்பு மாநில அரசுகளுக்கு உரியது என்று குறிப்பிடுகிறது.

சட்டம்ஒழுங்கை பராமரிப்பதில் இவை மாநில அரசுகளின் வழக்கமான கடமையாகும். இவற்றின் மீது மத்திய அரசு தனது மேற்பார்வை அதிகாரத்தை செலுத்த முயல்கிறது. இந்த மசோதாவானது அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள், மேல் அதிகாரிகளின் உத்தரவை ஏற்று நடக்காமல் இருப்பதை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதனால் குழப்பம் ஏற்பட்டு சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் நிலை உள்ளது. மத வன்முறையை தடுக்க முயற்சி எனும் போர்வையில் இந்த சட்டமானது மாநில அரசுகளை விலக்கி அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசிடம் குவிக்கும் முயற்சியை தவிர வேறொன்றுமில்லை.

அதுமட்டுமல்லாமல் மாநில அரசுகளை எப்போதுமே டிஸ்மிஸ் செய்யப்படும் அபாயத்தில் வைத்திருக்க முயல்கிறது. இவற்றின் காரணமாக இந்த சட்டமானது தேவையில்லாதது. இந்த சட்டத்தின் பல்வேறு நோக்கங்கள் தெளிவாக குறிப்பிடப்படவில்லை.

குறிப்பாக இந்த சட்டத்தின் கீழ் வானளாவிய அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதால் அவை தவறாக பயன்படுத்தப்படும் வாய்ப்பு இருக்கிறது. மத மற்றும் திட்டமிட்ட வன்முறையை கையாள்வதில் மாநிலங்களை முற்றாக விலக்கி அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசிடம் இந்த சட்டம் குவிக்க முயல்கிறது.

நீதிபதி சர்க்கார்யா கமிஷனில் குறிப்பிடப்பட்டுள்ள மத்தியமாநில அரசு உறவுகள் தொடர்பான நெறிமுறைகளுக்கு இது எதிராக அமைந்துள்ளது. அரசியல் சாசன பிரிவு 356யை இஷ்டம் போல பயன்படுத்துவதற்கான இன்னொரு வழியாகவே இந்த சட்டம் அமைந்துள்ளது.

இந்த மசோதா சட்டமானால் மத்தியில் ஆட்சியில் உள்ளவர்கள், எதிர்க்கட்சியால் ஆளப்படும் மாநிலங்களில் குழப்பத்தை ஏற்படுத்த சதி செய்யும் அபாயம் உள்ளது. வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மாநில அரசு விமர்சனத்திற்கு உள்ளாகும். அதே நேரத்தில் வன்முறை வெடித்ததாக கூறி இந்த சட்டத்தின் கீழ் மாநில அரசை கலைக்கும் வாய்ப்பு உள்ளது.

உலக வல்லரசாக உருவாகும் நம் தேசத்தின் நலனுக்கு இத்தகைய நிலை ஏற்றதல்ல. இந்த சட்டமானது ஜனநாயக விரோதமான மற்றும் பாசிச தன்மை கொண்டதாகும். அரசியல் சாசனத்தின் அடிப்படைக்கே எதிரானது. மத்திய அரசு உள்நோக்கத்தோடு இந்த சட்டத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரும் அறிமுக நிலையிலேயே இந்த சட்ட மசோதாவை முழுமூச்சுடன் எதிர்த்து இதனை நிறைவேறாமல் தடுக்க வேண்டும். கட்சி வேறுபாடின்றி அனைத்து கட்சிகளும், தலைவர்கள், அறிஞர்கள் மற்றும் ஊடகங்கள், இந்த சட்ட மசோதாவை முழுமூச்சுடன் எதிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

ஆனந்தசங்கரி: சம்பந்தர் பற்றி விமர்சனங்களைச் செய்ய முற்பட்டால் மக்கள் மிகவும் வேதனையடைவார்கள்

வீ.ஆனந்தசங்கரி

அன்புள்ள சம்பந்தர் ஐயா அவர்கட்கு, ஆனந்தசங்கரி, சித்தார்த்தன் போன்று டக்ளஸ் தேவானந்தாவும் மாறவேண்டுமென தாங்கள் கூறியதாக தலைப்பிட்டு இன்றைய (29.07.2011) தினக்குரலில் கட்டமிடப்பட்ட செய்தியைக் கண்டு

அதிர்ச்சியடைந்தேன். தமிழ் மக்களின் இன்றைய இக்கட்டான நிலையில் தங்களின் இக்கூற்று அவசியமானதுதானா? என்பது எனது முதலாவது கேள்வி. இது என்னைப் பற்றிய ஒரு விசமத் தனமான விமர்சனம் இல்லையா? என்பது எனது இரண்டாவது கேள்வியாகும்.
"உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் உண்மையைப் பேசி தமிழ் இனம் சார்பாகத் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவரான ஆனந்தசங்கரி/சித்தார்த்தன் ஆகியோர் செயற்பட்டார்கள். அதற்காக நான் பாராட்டுகிறேன். டக்ளஸ் தேவானந்தாவும் அவ்வாறு மாற வேண்டும்' எனவும் கூறியுள்ளீர்கள். இது ஓர் விசமத்தனமான விமர்சனம் என்றும் இது எம்மக்களின் நலனைப் பாதிக்கும் விடயமாக, உங்களுக்கும் புரியவில்லையா?
சித்தார்தனும் டக்ளஸும் தங்கள் நிலையை வெளிப்படுத்துவார்கள். என்னைப் பொறுத்தவரை இத்தேர்தலில் மட்டுமல்ல, எந்தத் தேர்தலிலும் உண்மைய மட்டுமே கூறிவந்துள்ளேன். நெஞ்சில் நிறைந்துள்ள சுமையை இறக்கி வைத்துவிட்டேன். எவரின் அழைப்புமின்றி நானும் தம்பி சித்தார்த்தனும் எதுவித பலனையும் எவரது கைகளையும் எதிர்பாராது அரப்பணிப்புடன் செயற்பட்டோம். கடந்த ஆறு மாதங்களாகியும் இதுவரை தங்களின் பாராட்டை எதிர்பார்க்காத நிலையில் தங்களின் கருத்து எமக்கும் கூடுதலாக எமது ஆதரவாளர்களுக்கும் வேதனையளிக்கிறது. 
நான் தங்களைப் பற்றிய விமர்சனங்களைச் செய்ய முற்பட்டால் நீங்களல்ல, எம் மக்கள் தான் மிகவும் வேதனையடைவார்கள். என்னுடைய நிலைப்பாடு அன்றும், இன்றும் ஒன்றுதான். மாறுவதற்கு ஒன்றுமில்லை. இப்பேர்ப்பட்ட விமர்சனங்களால் தான் இன்று எம் இனத்திற்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்தலைவர் இரா.சம்பந்தனுக்கு அனுப்பியுள்ள பகிரங்க கடிதத்தில் தெரிவித்திருக்கிறார். 

கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

Ratna Jeevan Hoole ரதன ஜீவன் ஹூல் போலிஸ் விசாரணையில்

ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு அவதூறு ஏற்படும் வகையில் பேராசிரியர் ரட்ணஜீவன் எச்.ஹல் இணையத்தளமொன்றிற்கு  உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டமை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் அண்மையில் முறைப்பாடு செய்திருந்தார்.
இம் முறைப்பாடு தொடர்பில் உரிய சட்டநடவடிக்கைகளை மேற்கொண்ட பொலிஸார் பேராசிரியரைத் தேடி வந்தனர். பின்னர் அவருடனான தொடர்பு கிடைத்ததையிட்டு மேற்படி முறைப்பாடு தொடர்பில் பேராசிரியரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளதாக தெரியவருகிறது.

கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

கலைஞர்: திமுகவை பழிவாங்குவதற்காக ஜெயலலிதா தவறான ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார்



திமுகவை பழிவாங்குவதற்காக ஜெயலலிதா தவறான ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார் என்று திமுக தலைவர் கலைஞர் கண்டனம் தெரிவித்துள்ளார். நிலஅபகரிப்பு என்ற கற்பனையான காரணத்தை காட்டி எதிர்க்கட்சியினரை மட்டும் குற்றம் சுமத்தும் பாதக செயலை ஜெயலலிதா தொடங்கி இருக்கிறார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

அந்த நாள் முதல் இந்த நாள் வரை என்ற தலைப்பில் திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பொய் வழக்கு போடுவதில் ஜெயலலிதாவை மிஞ்சுவதற்கு யாருமே இல்லை. காஞ்சி சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்ட வழக்கில், தமிழக அரசு தேவையற்ற ஆர்வத்தைக் காட்டுவது மற்றுமின்றி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதில் எந்த அளவிற்கும் செல்லத் தயாராக உள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

எம்ஜிஆர் நினைவக காப்பாளர் முத்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் மருமகன், மதுரை இளம்பெண் செரீனா மீது கஞ்சா வழக்கு ஆகியவற்றை தமிழக மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். 2001ல் ஆட்சிக்கு வந்த ஒரு மாத காலத்திலிலேயே நள்ளிரவில் படுக்கை அறைக்குள் நுழைந்து காவல் துறையினரால் தான் கைது செய்யப்பட்டதையும், அந்த வழக்கில் குற்றப்பத்திரிகையாவது தாக்கல் செய்ய முடிந்ததா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்த வழக்கில் மு.க.ஸ்டாலின், முரசொலி மாறன், டி.ஆர்.பாலு, பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன், மு.க.அழகிரி ஆகியோர் கைது செய்யப்பட்டது பழிவாங்கும் போக்கின் பிரதிபலிப்புகள் என்று கலைஞர் கூறியுள்ளார்.
1995ல் டான்சி ஊழல் வழக்கில், ஜெயலலிதா மீது வழக்கு தொடர அன்றைய ஆளுநர் சென்னா ரெட்டி அனுமதி அளித்தார் என்பதற்காக அவரை பழிவாங்கும் நோக்கில் சென்னா ரெட்டி தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று சட்டப்பேரவையிலேயே குற்றம் சாட்டியது கடைந்து எடுத்த பொய் என்று அனைவரும் உணர்ந்துகொள்ளவில்லையா என்றும் கலைஞர் கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் வி.என்.சுதாகரனுக்கு 100 கோடி ரூபாய் செலவில் திருமணம் செய்துவைத்து, பின்னர் ஹெராயின் வழக்கு போட்ட பழைய கதையை எவரும் மறந்து விடவில்லை.

எதிர்க்கட்சியினர் மீது பொய் வழக்குகள் போட்டு கொடுமைப்படுத்துவது ஜெயலலிதாவிடம் ஆழமாக ஊன்றிவிட்ட பழக்கம். அதன் தொடர்ச்சியாகத்தான் தற்போது மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தபோதும், நிலஅபகரிப்பு என்ற கற்பனையான காரணத்தைக் காட்டி எதிர்க்கட்சியினரை மட்டும் பழிவாங்கி, குற்றம் சுமத்திடும் பாதகச் செயலை தொடங்கியிருக்கிறார்.
இந்த வகையில்தான் அமைச்சர்களாக இருந்த வீரபாண்டி ஆறுமுகம், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, மதுரை மாவட்டச் செயலாளர் தளபதி ஆகியோர் மீது பொய் வழக்கு போட்டு இழத்தடிக்கின்றனர்.

திமுகவை பழிவாங்குவதற்கு தவறான ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார் ஜெயலலிதா என்றும், பழிவாங்குவதற்காக பொய் வழக்குகள் புனைவதிலே ஜெயலலிதா கைதேர்ந்தவர், பொய் வழக்குகளில் பழகிப்போனவர், அதில் ஒருவகை சுகம் காண்பவர் என்று திமுக தலைவர் கலைஞர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

திமு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் அதிகாலையில் கைது

சென்னை: சேப்பாக்கம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் திடீரென கைது‌ செய்யப்பட்டார். கைதான அன்பழகன் தென்சென்னை மாவட்ட தி.மு.க.செயலாளர் ஆவார். இவர் தியாகராயநகரில் உள்ள அவரது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது போலீசார் அவரை (30.07.2011) அதிகாலையில் கைது செய்தனர்.
கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

வடக்கு ஊடகவியலாளர்களுக்கு நாளை பயிற்சிப் பட்டறை

வடமாகாண ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் ஊடகப் பயிற்சிப் பட்டறை நாளை (30) சனிக்கிழமை கொக்காவில் சிறிலங்கா சிக்னல் படைப்பிரிவின் கம்பியூட்டர் பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது.

வவுனியா மன்னார் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள ஊடகவியலாளர்களுக்காக அசி திசி வினிச என்ற பெயரில் தகவல் ஊடகத்துறை அமைச்சினால் நடத்தப்படுகின்றது.

ஊடக மற்றும் தகவல்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் தலைமையில் அமைச்சின் செயலாளர் டபிள்யூ. பி. கணேகல மற்றும் ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் இந்தப் பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்வார்கள்.

மேற்படி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 50 ஊடகவியலாளர்கள் அன்றைய தினம் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும் பயிற்சிப் பட்டறையில் பங்குபற்றுவார்கள்.

சிரேஸ்ட ஊடகவியலாளர்களான மொஹான் சமரநாயக்க (இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத் தலைவர்) எஸ். தில்லைநாதன் (தினகரன் பிரதம ஆசிரியர்) எம். எஸ். எம். ஐயுப் கச்சி முஹம்மது மற்றும் இலங்கை திறந்த பல்கலைக்கழக சட்ட பீடத்தின் தலைவி யசோதரா கதிர்காமத்தம்பி ஆகியோர் இப்பயிற்சிப் பட்டறையில் விரிவுரை வழங்கவுள்ளனர்.

மாகாண ஊடகவியலாளர்கள் தமது கருத்துக்களையும் அனுபவங்களையும் மூத்த ஊடகவியலாளர்கள் ஊடக மற்றும் தகவல் அமைச்சு அதிகாரிகள் ஆகியோருடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை இந்த ஊடகப் பயிற்சிப் பட்டறை ஏற்படுத்திக் கொடுக்கிறது.

தேசிய அபிவிருத்தி செயற்பாடுகளில் ஊடகவியலாளர்களின் பங்கு என்ற விடயம் இப்பயிற்சிப் பட்டறையில் கலந்துரையாடப்படும்.

வடபகுதியில் உள்ள மாகாண ஊடகவியலாளர்களுக்கு ஒலிப்பதிவு கருவிகள் மற்றும் ஊடக உபகரணங்களையும் பயிற்சி நெறிகளைப் பின்பற்றவும் சலுகைக் கடன் வசதிகளை வழங்க அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

அத்துடன் தற்போது வட பகுதியில் இடம்பெற்று வரும் துரித அபிவிருத்தி நடவடிக்கைகள் பற்றிய சரியான மற்றும் உறுதிபடுத்தப்பட்ட தகவல்களை வழங்குவதன் முக்கியத்துவம் பற்றியும் இங்கு கலந்துரையாடப்படும்.

இதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்களுக்கான அடுத்த பயிற்சிப்பட்டறையை விரைவில் நடத்துவதற்கு அமைச்சு திட்டமிட்டு வருகின்றது.
கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார்


uthayan editorயாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் குகநாதன் இன்று கடைமை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளையில் இனந்தெரியாத நபர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். படுகாயமடைந்த குகநாதன் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். வழமைபோல் பணியை முடித்துக்கொண்டு உதயன் பணிமனையிலிருந்து 200 மீற்றர் தூரத்துக்குள் அமைந்துள்ள அவரது வதிவிடம் நோக்கி நடந்து சென்ற வேளையில்,சென்று கொண்டிருந்த குகநாதனை பின்தொடர்ந்து வந்த இருவர் பின் புறத்திலிருந்து கம்பியினால் கடுமையாகத் தாக்கியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

மட்டு. வங்கி கொள்ளை சம்பவம்: வெளிநாடு தப்பிச்செல்ல முயன்ற 6 சூத்திரதாரிகள் மன்னாரில் கைது

மட்டக்களப்பு வங்கிக் கொள்ளையின் பிரதான சூத்திரதாரிகள் இருவர் உட்பட ஆறு சந்தேக நபர்கள் மன்னாரில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாடொன்றுக்குத் தப்பிச் செல்வதற்காக மன்னாருக்குச் சென்று, அங்குள்ள தங்குவிடுதியொன்றில் தங்கியிருந்த போதே இவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்கள் பயணித்த ஜீப் வண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த மாதம் 30 ஆம் திகதி மட்டக்களப்பில் மக்கள் வங்கியை உடைத்து தங்க ஆபரணங்கள், ரொக்கப்பணம் என்பவற்றை கொள்ளையடித்துச் சென்றனர். இவர்கள் தேடப்பட்டு வந்த நிலையிலேயே நேற்று முன்தினம் 28 ஆம் திகதி கடற்படையின் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து சந்தேக நபர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.
கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

அமெரிக்க அரசை விட அதிக பணம் வைத்துள்ள ஆப்பிள்!


நியூயார்க்: அமெரிக்க அரசை விட ஆப்பிள் நிறுவனத்திடம் அதிக பணம் உள்ளதாம். உலகிலேயே சக்திவாய்ந்த அமெரிக்க அரசின் கஜானாவில் 73.76 பில்லியன் டாலர் உள்ளது. ஆனால் உலகின் தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளிடம் 75.87 பில்லியன் டாலர் உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் இரு முக்கிய கட்சிகள் தேசத்தின் கடன் வரம்பை உயர்த்துவது குறித்து சண்டைப் போட்டுக்கொண்டுள்ளன. உலகிலேயே மிகப்பெரிய நிறுவனம் அமெரிக்காவின் எண்ணெய் நிறுவனமான எக்ஸான் மொபில். இரண்டாவது இடத்தில் ஆப்பிள் உள்ளது. கடந்த 2007-ம் ஆண்டில் ஆப்பிள் ஐபோனை அறிமுகப்படுத்தியதில் இருந்தே அதற்கு ஏறுமுகம் தான்.  அடுத்த 3 ஆண்டுகளில் ஆப்பிள் கிடுகிடுவென்று வளர்ந்துவிட்டது. கடந்த ஆண்டு ஐபேடை அறிமுகப்படுத்தியது. அது கோடிக்கணக்கில் விற்று ஏகப்பட்ட லாபம். ஐபோன் மற்றும் ஐபேட் தான் தற்போது சந்தையில் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு ஒன்றின் விலை 400 டாலரைத் தொட்டுள்ளது. ஆப்பிளுக்கு அடுத்தபடியான பணக்கார நிறுவனம் பில் கேட்ஸின் மைக்ரோசாப்ட். அந்த நிறுவனத்திடம் 40 பில்லியன் டாலர் உள்ளது.
கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

வெள்ளி, 29 ஜூலை, 2011

கலைஞர் டிவி சொத்துக்கள் முடக்கம்?

இதுகுறித்து அமலாக்கப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், "ரூ 215 கோடி மதிப்பிலான கலைஞர் டிவி சொத்துக்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இந்த சொத்துக்கள் உள்ளன," என்றார்.

கலைஞர் டிவியில் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு 60 சதவீதப் பங்குகளும், மகள் கனிமொழிக்கு 20 சதவீதப் பங்குகளும் உள்ளன. அதன் நிர்வாக இயக்குநர் சரத்குமாருக்கு 20 சதவீதப் பங்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

2 ஜி விவகாரத்தில் மாட்டிக் கொண்டுள்ள டிபி ரியலிட்டியின் சினியுக் நிறுவனத்திலிருந்து ரூ 214 கோடி கடனாகப் பெற்ற விவகாரத்தில்தான் இப்போது கனிமொழியும் சரத்குமாரும் திகாரில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

10 நிமிடம் தாமதமாக கையெழுத்து, வீரபண்டியரிடம் போலிஸ் கடுமை

: சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசில், நேற்று முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் ஆஜராகி, கையெழுத்து போட்டார். அவர், தாமதமாக வந்தது குறித்து, எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்குமாறு, அதிகாரிகள் கேட்டதால் "டென்ஷன்' ஆனார். சேலம் அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு வழக்கு, ரோலர் மில் வழக்குகளில், முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், மூன்று நாள் விசாரணைக்குப் பின், நேற்று முன்தினம் மாலையில், சேலம் ஐந்தாவது குற்றவியல் நடுவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

பின்னர் நிபந்தனை முன் ஜாமினில் வெளியில் வந்த அவர், நேற்று காலையில் சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி, கையெழுத்து போட்டார். கோர்ட் உத்தரவுப்படி அவர், காலை 8 மணிக்கு கையெழுத்துப் போட வேண்டும். ஆனால், 10 நிமிடம் தாமதமாக, காலை 8.10 மணிக்கு, கையெழுத்துப் போட்டார். இந்த தாமதத்துக்கு எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்கும்படி, உதவி கமிஷனர் பிச்சை உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் முன்னாள் அமைச்சரிடம் கேட்டார். இதனால், டென்ஷன் ஆன வீரபாண்டி ஆறுமுகம், எழுத்துப்பூர்வமான விளக்கத்தை அளிக்காமல், தொண்டர்கள் அதிக அளவில் வாசலில் நின்றதால், தாமதம் ஏற்பட்டதாக, அதிகாரிகளிடம் தெரிவித்து விட்டுக் கிளம்பினார்.

அதைத் தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: மூன்று நாட்கள் போலீசார் என்னிடம் விசாரணை நடத்தி, அவர்களின் கடமையைச் செய்துள்ளனர். நானும் விசாரணையில், முடிந்த அளவுக்கு ஒத்துழைப்பு வழங்கினேன். அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு, தெரிந்த பதில்களைக் கூறினேன்; தெரியாததை தெரியாது என்று கூறினேன். என் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. அதை கோர்ட்டில் சந்திப்பேன். தி.மு.க.,வை யாராலும் அழிக்க முடியாது.
இவ்வாறு ஆறுமுகம் கூறினார்.

அப்போது, நிருபர்கள், "உங்கள் ஆதரவாளர்களால் தான், உங்களுக்கு கெட்ட பெயர் ஏற்படுவதாக, தி.மு.க.,வினரே பேசிக் கொள்கிறார்களே?' என்று கேட்டனர்.
உடனே, "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. யார் சொன்னது? எவன் சொன்னது? எவனாவது ஒருத்தன் பெயரைச் சொல்லு பார்க்கலாம்' என, "டென்ஷன்' ஆகி, போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியேறினார்.

நேற்று காலையில் வீரபாண்டி ஆறுமுகத்துடன், ராஜ்யசபா எம்.பி., ராமலிங்கம், அவரது மகனும் முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான ராஜா, உதவியாளர் சேகர், வழக்கறிஞர் மூர்த்தி ஆகியோர் வந்திருந்தனர்
வீரபண்டியரிடம் போலிஸ் கடுமை 
கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

யாழ் மக்களின் சாபக்கேடுதான் உதயன் .ஈ.பி.டி.பி யின் மீது ஆதாரமற்ற செய்திகளை

புலிப்பினாமிகளின் பரப்புரைகள் :
தமிழ் சி.என்.என் என்ற இணையத்தின் நீண்ட நாள் புழுகுச்செய்திகள் அம்பலத்திற்கு வந்துள்ளன. நடுநிலை இணையம் என்று கூறிக்கொண்டு ஈ.பி.டி.பி கட்சியின் மீது சேறடிக்கும் வகையில் ஆதாரமற்ற செய்திகளை செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ் மக்களை முள்ளிவாய்க்கால் வரை அழிவுப்பாதைக்கு இட்டு செல்லும் கைங்கரியத்தில் ஈடுபட்டு வந்த இணையங்களில் தமிழ் வின் மற்றும் அதனோடு சம்பந்தமான லங்காசிறீ என்பனவும் பிரதானமானவை. தொடர்ந்தும் சோடிப்பு கதைகளை கட்டவிழ்த்து வரும் இவர்கள் ???
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதுகு சொறிவோருக்கு செய்திப்பஞ்சமாக்கும்!…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதுகு சொறியும் இணையங்கள் செய்திப்பஞ்சத்தில் யாழ் உதயன் பத்திரிகையில் வெளியாகும் புனைகதைகளை வெளியிடுவதோடு தமது அரசியல் இலக்கு இத்தோடு முடிந்தது என்று திருப்தியடைந்து வருகின்றன. உதயன் பத்திரிகைக்கு புழுகையும் புனைகதைகளையும் விட்டால் வெறொன்றும் இல்லை என்ற அளவிற்கு தமது அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை கொட்டிக்கொண்டிருக்கின்றது. யாழ் மக்களின் சாபக்கேடுதான் உதயன் என்பது தெரியும்இ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடியாட்களால் நடத்தப்படும் இணையத்தளங்கள் உதயனின் வெளியாகும் செய்திகளை வெளியிட்டுமகிழ்ச்சி கொண்டாடி வருகின்ற போது அதை பார்த்து கால் மேல் கால் போட்டுஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று திருப்தியில் இருக்கிறாராக்கும்.
செய்திப்பஞ்சம் என்றால் வன்னிக்குள் பத்துத்தலை நாகம் என்றாவது எழுதித்தொலைக்க வேண்டியதுதானே. அதை விடுத்து கூட்டுச்சேர வழியும் வக்குமற்று கோமாளிகளுடன் கூட்டுச்செர்ந்துஅருவருப்புகளையும்இ அனாகரீங்களையும் மட்டும் கொட்டித்தீர்க்கும் அளவிற்கு இவர்களது அரசியல் தரம் தாழ்ந்து விட்டது. பண்றி என்ன பழக்கடைக்குள்ளா நுழையும்?… பழம் நாறி நாற்றமெடுக்கும் சாக்கடைக்குள் சங்கமிப்பதுதானே பன்றியின் விரும்பம்!…………
பகை தணி!… நேசத்தை நேசி!… உண்மையை விளம்பு!…விமர்சனம்உட்டென்றால் உன் கருத்தை நேரில் சொல்.. எழுது..இரவல் புடவையில் இதுநல்ல கொய்யகம் என்று காழ்ப்புணர்ச்சியில் யாரோ காறி உமிழும்ஊத்தைகளை நீயும்விழுங்கி துப்பும் அருவருப்பை அரசியலாக கொள்ளாதே… பண்பற்று நடந்து அடுத்தவரை வம்புக்கு இழுத்து விட்டு பண்டிதர் யார் என்றுதேடாதே! இப்படிக்குபண்டிதர்
கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

டக்ளஸ் தேவானந்தா ஆலயங்களில் வழிபடுவதை கொச்சைப்படுத்தி தமிழ் சிஎன்என்

 புலம்பெயர்ந்த நாடுகளில் தற்போது இணையத்தளங்களில் பரப்புரைகளை முடுக்கி விடுவதற்கு முண்டியடித்துக் கொண்டு இருப்பவர்களுக்கு தாம் என்ன செய்கின்றோம் எந்தவகையில் செய்திகளை வெளியிடுகின்றோம் என்ற தாற்பரியங்களே தெரியாமல் ஊடகபரப்புரைக்காக வரிந்து கட்டிக்கொண்டு இணையத்தளங்களை நடத்தி வருகின்றார்கள். இந்த வகையில் தமிழ் சிஎன்என் இணையத்தளமும் உள்ளடங்குகின்றது. முள்ளிவாய்க்காலில் எமது மக்களின் மூச்சுக்களை நிறுத்திய பெருமையும் இவர்களையே சாரும்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்களின் நடவடிக்கைகளை புலிகளின் பார்வையிலேயே விமர்சிப்பதில் கைதேர்ந்தவர்கள் இவர்கள். பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா இந்து ஆலயங்களில் வழிபடுவதை கொச்சைப்படுத்தி தமிழ் சிஎன்என் இணையத்தள செய்திச் சேவை செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளதுவிடுதலைப் புலிகள் இறுதியுத்த வேளையில் தமது இருப்பைக் காத்துக் கொள்ள சரித்திர பிரபலம் வாய்ந்த யாத்திரைத் தலமான மருதமடுத் திருப்பதில் எழுந்தருளியிருந்த மருதமடு அன்னையின் திருச்சொரூபத்தையே நகர்த்தியிருந்தமை பலரது மனதில் இன்றும் மாறாத வடுவாக அமைந்திருக்கின்றது. பிழையான ஒரு நோக்கத்திற்காக மருதமடுஅன்னையின் இருப்பையே மாற்றத் துணிந்ததன் விளைவு விடுதலைப் புலிகளின் முடிவாக இறைவனால் தீர்ப்பு எழுதப்பட்டதாகவும் பேசப்படுகின்றது. தெய்வம் நின்று கொன்றது விடுதலைப் புலிகளின் தலைவரையும் அவர் சார்ந்தவர்களையுமே தான்.
விடுதலைப் புலிகள் 12 தடவைகள் கொல்ல நினைத்த அமைச்சரை தெய்வம் காத்து வைத்துள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை இங்கு சிஎன்என்என் இன் கருத்துப்படி பார்த்தால் கூட அமைச்சர் இந்து ஆலயங்களை நாடி வழிபட்டு அங்குள்ள தெய்வ விக்கிரகங்களை தன் தோளில் சுமந்து தெய்வங்கள் முன்னிலையில் மனிதனாக தன்னைத் தாழ்த்தி நின்றாரே தவிர ஆணவம் கொண்டு வழிபாட்டுத் தலங்களையோ தெய்வ விக்கிரகங்களையோ சீர்குலைக்கவில்லை.
ஒரு மனிதனின் தெய்வவழிபாட்டையே கொச்சைப்படுத்தும் அளவுக்கு புலம்பெயர் புலிப்பரப்புரைகள் விரிந்து செல்லும் பாதைகள் இன்னுமொரு அழிவுக்கே வித்திடும். ஆனால் இனியும் ஒரு அழிவுக்கு அங்குள்ள எமது மக்கள்  தயாரில்லை
கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

ஹிஸ்புல்லாவின் வீடமைப்புத் திட்டம்.ஈரான் உதவியுடன் ஆரையம்பதி

சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின் வேண்டுகோளின் பேரில் ஆரையம்பதி, காங்கேயனோடை கிராமத்தில் ஈரான் இஸ்லாமிய குடியரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட வீடமைப்புத் திட்டம் பிரதமர் டி.எம். ஜயரத்னவினால் நாளை திறந்து வைக்கப்படவுள்ளது.

இத்திட்டத்திற்கு 170 மில்லியனை ஈரான் இஸ்லாமிய குடியரசு வழங்கியுள்ளது. இக்கிராமத்தில் மொத்தமாக 70 வீடுகளும், பள்ளிவாசல், சுகாதார நிலையம், விளையாட்டு மைதானம், சிறுவர் பூங்கா போன்றவைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வீட்டுத்திட்டத்தினுடைய வீதிகளை அமைப்பதற்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ், 230 லட்சம் ரூபாயும், உள்ளக வீதிகளை அமைப்பதற்கு சுமார் 200 லட்சம் ரூபாயும், இதற்கான மின் விநியோகத்திற்கு சுமார் 65 லட்சம் ரூபாயும் வழங்கியுள்ளார்.

இவ்வேலைத்திட்டப் பணிகளை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இன்று நேரில் சென்று பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

சம்பந்தன்: ஆனந்த சங்கரி,சித்தார்த்தன் போன்று டக்ளஸ் தேவானந்தாவும் மாற வேண்டும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் உண்மையைப் பேசி தமிழ் இனம் சார்பாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி,சித்தார்த்தன் ஆகியோர் செயற்பட்டார்கள். அதற்காக அவர்களை நான் பாராட்டுகின்றேன். டக்ளஸ் தேவானந்தாவும் அவ்வாறு மாற வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் திருமலை பட்டினமும் சூழலும் பிரதேசசபை, குச்சவெளி பிரதேசசபை,சேருவில பிரதேசசபை ஆகியவற்றுக்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினர்கள் மத்தியில் பேசும்போது சம்பந்தன் இவ்வாறு குறிப்பிட்டார்.
குச்சவெளிப் பிரதேச சபைக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகப் போட்டியிட்டது. இதனால் அவர்களின் பிரச்சினையும் தீராது, எமது பிரச்சினையும் தீராது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குமிடையே தெளிவான புரிந்துணர்வு உண்டு. எனினும் எம்மிடையே ஒருமைப்பாடு தேவையாக உள்ளது. இதனை உணர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்பட வேண்டும். மக்களின் உரிமைகளைப் பொறுத்தவரை தெளிவான நிலைப்பாடு அவசியம். எமது வாக்குகளைப் பிரித்து பெரும்பான்மையினம் நன்மை பெறுவதற்கு இடமளிக்கக்கூடாது என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

Police: அந்தப் பெண் அழகாக இருந்ததால் கடத்தினேன் : பாலியல் வன்கொடுமை செய்த காவல்துறை


அந்தப் பெண் அழகாக இருந்ததால் கடத்தினேன் :
அதிர்ச்சி வாக்குமூலம் அளித்த காவல்
ஆய்வாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கல்லூரி மாணவியைக் கடத்திப் பாலியல் வன்கொடுமை செய்த காவல்துறை ஆய்வாளருக்குக் காவல்துறை சலுகை காட்டுவதைக் கண்டித்து 28.07.2011 அன்று திருச்சி காதிகிராஃப்ட் தொடர்வண்டிச் சந்திப்பு அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு  மக்கள் உரிமைப் பேரவை, தமிழ்நாடு மற்றும் மகளிர் ஆயம், தமிழ்நாடு ஆகிய அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தன.

கடந்த சூன் மாதம் 24ஆம் தேதி இரவு 11 மணியளவில் தன் சொந்த ஊருக்குச் செல்வதற்காகத் தன் ஆண் நண்பருடன் திருச்சி பேருந்து நிலையத்தில் பேருந்திற்காகக் காத்திருந்த பொறியியல் கல்லூரி மாணவியை, திருச்சி தீண்டாமை ஒழிப்புப் பிரிவு ஆய்வாளர் கண்ணன் மிரட்டி தனது காரில் கடத்திச் சென்றார். நள்ளிரவு 2.00 மணியளவில் புதுக்கோட்டைப் பேருந்து நிலையத்தில் அந்த மாணவியை இறக்கிவிட்டுள்ளார்.

கடத்தல் நடந்த அன்றே கடத்தியது ஆய்வாளர் கண்ணன்தான் என்று தெரிந்த பின்னரும் சூலை 4ஆம் தேதி வரை கண்ணனைக் கைது செய்யாமல் இருந்தது காவல்துறை என்பது குறிப்பிடத்தக்கது.
இக்குற்றச் செயலுக்கு ஆய்வாளர் கண்ணன் மீது வெறும் கடத்தல் வழக்கு மட்டுமே போடப்பட்டுள்ளது. மாவட்ட நீதிபதி கண்ணனின் பிணை மனுவைத் தள்ளுபடி செய்துள்ளார்.
நள்ளிரவில் மாணவியைக் கடத்தி உள்ள கண்ணன் மீது பாலியல் வன்கொடுமை நடந்தது பற்றி விசாரணை செய்யப்படவில்லை. “அந்தப் பெண் அழகாக இருந்ததால் கடத்தினேன்“ என்று காவல்துறையிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளான் கண்ணன்.
கடத்திச் சென்ற மாணவியை கீரனூர் அருகே ஒரு குவாரியில் வைத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறை தனது புலன் விசாரணையில் மௌனம் சாதித்து வருகிறது.

கடத்தப்பட்ட மாணவி மருத்துவப் பரிசோதனைக்கும் உட்படுத்தப்படவில்லை.

கடத்தப்பட்ட மாணவி மற்றும் அவளது நண்பனின் வாக்கு மூலங்கள் காவல்துறையால் முழுமையாகப் பதிவு செய்யப்படவில்லை.
கடத்தல் கண்ணனின் வழக்கை புலன் விசாரணை செய்யும் அவனது பால்ய நண்பர் சிகாமணி பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் கற்பழித்த்தற்கான காயங்கள் இருந்ததை மறைத்திருக்கிறார்.
இந்த வழக்கில் மாணவி கடத்தப்பட்ட நள்ளிரவு 12.00 மணிமுதல் 2.00 மணி வரை  இரண்டு மணி நேரம் அந்த மாணவிக்கு நடந்தது என்ன என்பதை சட்ட ஒழுங்கு காவல்துறை வேண்டுமென்றே தன் சக காவல்துறை நண்பரைக் காப்பாற்றுவதற்காக உண்மைகளை மறைக்கிறது. அந்த இரண்டு மணி நேரத்தில் அந்த மாணவிக்கு நடந்த கொடுமைகள் புலன் விசாரணையில் வெளிக் கொணரப் படவேண்டும்.
மாணவி கடத்தப்பட்ட வழக்கில் சட்டம் ஒழுங்கு காவல்துறை சம்பந்தப்பட்டிருப்பதால் இந்த வழக்கினை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றவேண்டும். உரிய குற்றப் பிரிவுகளில் கண்ணனின் மீது வழக்குப் போடவேண்டும்.

காவல்துறையை தன் கையில் வைத்திருக்கும் பெண் முதல்வர் பாதிக்கப்பட்ட இந்தப் பெண்ணிற்கு ஏற்பட்டுள்ள அவமானத்திற்கும் அநியாயத்திற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றமிழைத்தவர்களும் குற்றத்தை மறைத்தவர்களும் தண்டிக்கப்படவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மக்கள் உரிமைப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் த. பானுமதி தலைமையில் நடைபெற்ற இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மகளிர் ஆயம் தமிழக ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா, மகளிர் ஆயம் தஞ்சை தோழர் காந்திமதி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர்  தோழர் நா. வைகறை, தோழர் குழ.பால்ராசு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சி திருச்சி தோழர் கவித்துவன், தோழர் ராசாரகுநாதன், தோழர் இனியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு ஆய்வாளர் கண்ணனையும், அவனுக்குச் சலுகை காட்டும் காவல்துறையையும் கண்டித்து கண்டனை உரையாற்றினார்கள்.

 சமூகப் பொறுப்புள்ள ஆண்களும் பெண்களும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளாகக் கலந்து கொண்டு காவல்துறைக்கு எதிராகவும் ஆய்வாளர் கண்ணனுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்கள் எழுப்பினார்கள்.

சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு போலிசுக்கு உள்ளது. ஒரு போலிஸ்காரர் எளிதில் யாரையும் கூட்டிச் செல்ல முடியும். ஏனெனில் அவர்களுக்கு அந்த பவர் இருக்கிறது. ஒரு போலிஸ் அழைத்து செல்லும் போது, அவர் குற்றம் செய்யும் வரை அவரை கேள்வி கேட்க முடியாது. போலிஸ் அல்லாத ஒரு நபர் கூட்டிசென்றால் உடனே கேள்வி கேட்க முடியும். இப்படிப்பட்ட சலுகையை, உரிமையை வைத்திருக்கும் போலிஸ், அதிகார துஷ்டபிரயோகம் செய்ததால், அவருக்கு கொடுக்கப் பட வேண்டிய தண்டனை மற்றவர்களை விட கடுமையாகவே இருக்க வேண்டும். அவரை மற்ற பிரஜைபோல பாவிக்க முடியாது. மூன்று மாதங்களுக்கு முன்பு இவ்வாறு செய்த ஒரு மும்பை போலிசுக்கு ( அவர் புணரமுடியாமல், பெண் மீது படுத்து, முத்தம் கொடுத்து, புணர முயற்சித்தார் என்ற காரணத்திற்காக) கற்பழிப்பு குற்றம் சுமத்தி ஏழு ஆண்டு சிறைத்தண்டனையை விதித்தது பாம்பே உயர்நீதி மன்றம்.
கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

திமுகவைக் கண்டித்து நாளை மெட்ரிக் பள்ளிகள் போராட்டம்:



இதற்கிடையே திமுகவின் போராட்ட அறிவிப்புக்கு நர்சரி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் கிறிஸ்துராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமச்சீர் கல்வி திட்டம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இந்தப் போராட்டம் தேவையற்றது, இதில் நாங்கள் பங்கேற்க மாட்டோம். அனைத்துப் பள்ளிகளும் வெள்ளிக்கிழமை திறந்திருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் தமிழக நர்சரி, தொடக்க, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கம் சார்பில் திமுகவின் போராட்டத்தைக் கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

திமுகவின் மாணவர் ஸ்டிரைக் பிசுபிசுத்தது

சென்னை: திமுக அழைப்பு விடுத்த வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் இன்று பிசுபிசுத்தது. பெரிய அளவில் பள்ளிகளில் வகுப்புகள் பாதிக்கப்படவில்லை. பள்ளிக்கூடங்கள் முன்பு போராட்டம் நடத்திய திமுகவினர் ஆயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டனர்.

சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கோரி இன்று வகுப்புகளைப் புறக்கணிக்குமாறு மாணவர்களுக்கு திமுக அழைப்பு விடுத்திருந்தது. 'மாணவச் செல்வங்கள்' வகுப்புகளைப் புறக்கணிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதியும் கோரிக்கை விடுத்தார்.

இந்த போராட்டத்தில் தாங்களும் இணைவதாக சில மாணவர் அமைப்புகள் அறிவித்திருந்தன.

அதன்படி இன்று காலை மாநிலம் முழுவதும் திமுகவினர் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் குழுமி போராட்டத்தில் குதித்தனர். அவர்களை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர். மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். புதுச்சேரியில் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

போராட்டத்தை முறியடிக்கும், திமுகவினர் மாணவர்களை கட்டாயப்படுத்தி, மிரட்டி போராட்டத்தில் கலந்து கொள்ள வைப்பதைத் தடுக்கும் வகையிலும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் பள்ளிகள், கல்லூரிகள் முன்பு பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

மதுரையில் சொதப்பலான திமுக ஆர்ப்பாட்டம்:

மதுரையில் முன்னாள் மாவட்ட செயலாளர் வேலுச்சாமி தலைமையில் 300க்கும் மேற்பட்ட திமுகவினர் தபால் நிலையம் அருகில் திரண்டு சமச்சீர் கல்விக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். 15 நிமிடங்களிலேயே இந்த ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டனர்.

இந்தப போராட்டத்தில் மதுரை மேயர், துணைமேயர், திமுக மாவட்ட செயலாளர்கள் யாரும் பங்கேற்கவில்லை. இது திமுகவினருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நெல்லையில் பூங்கோதை கைது

நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை, நெல்லை டவுன், செங்கோட்டை, சிவகிரி, வாசுதேவநல்லூர் ஆகிய 5 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பாளையங்கோட்டை போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா கலந்து கொண்டார். பள்ளியை நோக்கிப் பேரணியாக செல்ல முயன்ற அவர் உள்ளிட்ட 25 பேரை போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர். கூட்டம் அதிகம் இல்லாததால் பூங்கோதை உள்ளிட்டோர் சாவகாசமாக நடந்து போலீஸார் ஏற்பாடு செய்திருந்த பஸ்சில் ஏறிச் சென்றனர்.

பள்ளிகள் வழக்கம் போல் இயங்கின:

இந்தப் போராட்டத்தால் பள்ளிகளில் வகுப்புகள் எந்த அளவிலும் பாதிக்கப்படவில்லை.

அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கின. மாணவர்களும், ஆசிரியர்களும் வழக்கம்போல் பள்ளிக்கு வருகை தந்தனர்.

சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஒருசில பகுதிகளில் திமுகவினர் சிலர் பள்ளிகளின் முன்பாக நின்று பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகளை தடுத்து ரகளை மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை உடனடியாக போலீஸார் தடுத்து அப்புறப்படுத்தினர்.

போலீஸ் பாதுகாப்புடன் பள்ளி பஸ்கள் ஓடின

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கின. பள்ளி வாகனங்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது. பள்ளிகளுக்கு முன்பாக போலீஸ் காவல் போடப்பட்டிருந்தது.

பள்ளிகளின் முன்பாக சமச்சீர் கல்வியினை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட திமுகவினர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டு மாலையில் வெளியே விடப்பட்டனர்.

முன்னதாக இப்போராட்டம் சமச்சீர்க் கல்வி திட்டம் தொடர்பான பிரச்சினையை திசை திருப்புவதாக உள்ளது என்று தமிழக அரசு கண்டித்திருந்தது. மேலும், இன்று பள்ளிகள் அனைத்தும் திறந்திருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதுகுறித்து தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை மூலம் பிறப்பித்த உத்தரவில்,

தொடக்கப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் அனைத்தும் வெள்ளிக்கிழமை நடைபெற வேண்டும். காலை 11 மணிக்குள் வருகைப் பதிவு நிலவரம் குறித்து முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்குத் தகவல் அனுப்ப வேண்டும். அவர்கள் அந்தத் தகவல்களைச் சென்னைக்குத் தெரிவிக்க வேண்டும்.இதுகுறித்து எல்லா பள்ளிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் பள்ளி வளாகத்திலேயே இருப்பதை உறுதி செய்யுமாறும், மாணவர்கள் வெளியில் இருந்தால் பள்ளிக்கூட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொண்டால் தக்க போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

பள்ளிக்கு வரும் மாணவர்களை எக்காரணம் கொண்டும் இடையில் வெளியில் அனுமதிக்கக் கூடாது. மதிய உணவை காரணம் காட்டி மாணவர்கள் வெளியேற அனுமதிக்கக் கூடாது.

பள்ளிகளுக்கு வராத ஆசிரியர்கள் பட்டியலை அரசு உயர் அதிகாரிகளுக்கு மாவட்ட கல்வி நிர்வாகம் அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

லாட்டரி அதிபர் மார்ட்டின் கோர்ட்டில் சரண் இளைஞன் படதயாரிப்பாளர்


திருப்பூர் மாவட்டம், பல்லடம் பொள்ளாச்சி ரோடு பகுதியை சேர்ந்தவர் கணேஷ்வர்(வயது 42). இவரும் திருப்பூர் மண்ணரையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியும்(41) சேர்ந்து கூட்டாக ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில் செய்து வந்தனர். கிருஷ்ணமூர்த்தியிடம் செய்து வந்த கூட்டு தொழிலில் இருந்து கடந்த சில ஆண்டுக்கு முன் கணேஷ்வர் பிரிந்து சென்று விட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் கணேஷ்வர் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதி புகார் ஒரு மனு கொடுத்தார்.

அந்த மனுவில், `கிருஷ்ணமூர்த்தி தனது உறவினர்களான நாமக்கல் திருச்செங்கோட்டை சேர்ந்த பழனிசாமி, அவருடைய மனைவி சவுந்தரம் மற்றும் சரவணன் ஆகியோருடன் சேர்ந்து ரூ.31/2 கோடி மதிப்பிலான தனது சொத்துக்களை மோசடி செய்து விட்டதாக' கூறியிருந்தார்.
மேலும் ரூ.3 கோடிக்கான வரைவோலை கொடுத்து தன்னிடம் மோசடியில் ஈடுபட்டதாக கிருஷ்ணமூர்த்தி மீதும், அதற்கு உடந்தையாக இருந்ததாக பிரபல லாட்டரி அதிபரான கோவையை சேர்ந்த மார்ட்டின் மீதும் கணேஷ்வர் புகார் கூறியிருந்தார்.

அதன் பேரில் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கிருஷ்ணமூர்த்தி, பழனிசாமி, சவுந்தரம், சரவணன், மார்ட்டின் ஆகிய 5 பேர் மீது மோசடி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள். இதில் கிருஷ்ணமூர்த்தி, பழனிசாமி, சவுந்தரம், சரவணன் ஆகிய 4 பேரும் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றனர்.

அதைத்தொடர்ந்து, மார்ட்டினும் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, திருப்பூர் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-1 கோர்ட்டில் சரண் அடைந்து ஜாமீன் பெறுமாறு மார்ட்டினுக்கு உத்தரவிட்டார்.

சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி திருப்பூர் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-1 கோர்ட்டில் நேற்று காலை 11 மணிக்கு மாஜிஸ்திரேட்டு கிருஷ்ணன் முன் மார்ட்டின் சரண் அடைந்தார்.மாலையில் மார்ட்டினுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் நாளை(இன்று) முதல் 20 நாட்களுக்கு தினமும் காலை 10 மணிக்கு நேரில் ஆஜராகி மார்ட்டின் கையெழுத்து போட வேண்டும் என்று மாஜிஸ்திரேட்டு கிருஷ்ணன் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து மார்ட்டின் கோர்ட்டில் இருந்து புறப்பட்டு சென்றார்.
கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

Jaffna கோஷ்டி மோதல் வானை நோக்கிச் சுட்டுக் கட்டுப்படுத்தியது இராணுவம்

யாழ். நகருக்கு அண்மையில் புகையிரதநிலையத்திற்கு முன்பாக நேற்று இரவு 8.00 மணியளவில் இரு குழுக்களுக்கிடையே மோதல் இடம்பெற்றது. சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்ற இம்மோதலை, சம்பவ இடத்திற்கு விரைந்த இராணுவத்தினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மோதலைக் கட்டுப்படுத்தினர். சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

நேற்று இரவு 8.00 மணியளவில் ஆஸ்பத்திரி வீதி முலைவைச் சந்தியில் நின்ற ஒரு குழுவிற்கும் புகையிரதநிலைய வீதியில் நின்ற மற்றொரு குழுவிற்கும் இடையே மோதல் வெடித்தது. இரு தரப்பினரும் போத்தல்கள் மற்றும் கற்களால் மாறிமாறி தாக்கத் தொடங்கினர். இதனையடுத்து அப்பகுதி பெரும் களேபரப் பூமியாகக் காட்சியளித்தது.

அப்பகுதியூடான போக்குவரத்துகள் அனைத்தும் தடைப்பட்டன. வீதியில் போத்தல் சிதறல்கள் குவிந்து காணப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக கேள்வியுற்ற இராணுவத்தினர் விரைந்துசென்று வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மோதலை கட்டுப்படுத்தியதுடன் பொலிஸாருக்கும் தகவல்வழங்கினர். சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ்.பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான குழுவினர், சம்பவத்துடன் தொடர்புடைய 10 பேரைக் கைதுசெய்ததுடன் மோதல் குறித்த விசாரணைகளையும் மேற்கொண்டனர்.

இதேவேளை நேற்று இரவு முழுவதும் அப்பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தாக பிரதேச தகவல்கள் தெரிவித்தன.
கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

யாழில் மக்களை மிரட்டும் மினிவான்கள்,தம்பி மிச்சக்காசைத் தா"


பஸ் பிரயாணம் என்பது இன்று அனைவருக்கும் தொல்லைப் பிரயாணமாகிவிட்டது. பொதுவாக பஸ்ஸில் பிரயாணம் செய்யும் பெண்களின் பாடு எப்பொழுதுமே பெரும் திண்டாட்டம்தான். அதுவும் மினிவான்களில் பயணம் செய்வதென்றால் சொல்லவே தேவையில்லை.
அன்று சனிக்கிழமை. மறுநாள் எனது அண்ணாவின் திருமணமாகையால் சனிக்கிழமையே நான் செல்ல ஆயத்தமானேன். மாலை 5 மணியிருக்கும். சாவகச்சேரியில் வைத்து ஒரு தனியார் மினிவானில் நானும் அக்காவும் ஏறினோம். தப்பித் தவறி அந்த மினிவானுக்;குள் ஒரு ஈ எதேச்சையாக மாட்டிக் கொண்டால் அவ்வளவுதான். உயிர் போய்விடும். அவ்வளவு நெருக்கம்.

சாதாரணமான சனக்கூட்டம் இருந்தாலே பெண்கள் பாடு திண்டாட்டம்தான். அதிலும் நெரிசல் என்றால் கேட்கவா வேண்டும். விசயம் என்னவென்றால் 3 இளசுகள் அந்த மினிவானுக்குள் ஏறி இறங்கும் அத்தனைப் பெண்களையும் பார்த்து நக்கல் அடித்துக்கொண்டிருந்தார்கள். ஏதோ அவர்களது தாத்தா வீட்டு வான்; போல. நாக்கைப் பிடிங்கிக்கொண்டு நாலு வார்த்தை கேட்கவேண்டும் என்று வார்த்தைகள் தொண்டை வரை வந்தன. வானுக்குள்; உள்ள பெரிசுகளும் சரி நடத்துனரும் சரி.
தாம் உண்டு தம் வேலையுண்டு என்று இருக்கும்போது என்னால் என்ன செய்ய முடியும். என் அக்கா வேறு என் கையை சுரண்டி வாயை வைத்துக்கொண்டு இருடி என்றாள்.

அங்கும் ஒரு தனியார் வான் வரவே ஏறி இருக்கை கிடைக்கவே அமர்ந்துகொண்டோம். ஒரு வயது போன அம்மா 'தங்கச்சி நிக்க ஏலாம இருக்கு. எனக்கும் கொஞ்சம் இடம் தா என்று கேட்க நானும் கொடுத்துவிட்டு எழுந்து நின்றேன்.

பின் கைக்குழந்தையுடன் ஒரு தாய் ஏற நடத்துனர் யாரையாவது சீற் கொடுக்கும்படி கத்தினார். வேண்டா வெறுப்பாக ஒரு இளம் பெண் முறைத்துக்கொண்டு இருக்கையை விட்டு எழுந்து நின்றாள். நடத்துனரோ காசு வாங்குவதற்கு சனத்தைப் படுத்திய பாடு இருக்கின்றதே ஆடு மாடுகளை விரட்டுவதைப் போல சனத்தை கூச்சலிட்டு விரட்டிக்கொண்டிருந்தார்.

அதற்கு கொழும்பில் உள்ள நடத்துனர்கள் பரவாயில்லை என்று எனக்குத் தோன்றியது. தனியார் மினிவான்காரர்கள் இன்னொரு அநியாயம் செய்கிறார்கள். வானினுள் இரண்டு அல்லது நான்கு சீற்களை கழற்றி எடுத்து விடுகிறார்கள். அப்படி கழற்றப்பட்ட சீற் இடைவெளிகளில் குறைந்தது பத்துப் பேரையாவது எப்படியும் அடைத்து ஏற்றிவிடுவார்கள். எப்படி பிஸ்னஸ் டெக்னிக்.
எங்கே சனங்கள் பொங்கியெழுந்து விடுவார்களோ என்பதற்காக புதிய திரைஇசைப் பாடல்களையும். காமரசம் கொட்டும் பாடல்களையும் ஊச்சஸ்தாயியில் போட்டு விடுவார்கள். பிறகென்ன இளசுகளுக்கு வலு கொண்டாட்டம் தான்.
இடையில் ஒரு வயது முதிர்ந்த தாய் மினிவானை நிறுத்துவதற்கு சைகை காட்டினார். கையில் ஒரு சிறிய கட்டு வைத்திருந்தார். மினிவானும் நிறுத்தப்பட்டது. 'அது என்ன" என்று நடத்துனர் கேட்டார். அந்த அம்மா 'கருவாடு" என்று கூறிக்கொண்டே கட்டை உள்ளே வைத்தார். 'கருவாடா? நாறும் இறங்கு இறங்கு" என்று அந்த அம்மாவை தள்ளிவிட்டு கருவாட்டு கட்டையும் தூக்கி கீழே வீசினார் எனக்கு அந்த நடத்துனரை பளார் பளார் என்று நாலு அறை அறையவேண்டும் போல் கிடந்தது.
இப்படியாக நடந்துகொள்வது. சுயநலமான நடத்துனரின் செயற்பாடுகளை நினைத்து வெட்கித் தலைகுனிந்தேன். வானின் பின்பக்க டிக்கியில் கருவாட்டை ஏற்றியிருக்கலாம் தானே. அல்லது மேலேயுள்ள கரியரில் அதைக் கட்டலாம்தானே. பாவம் அந்த வயதான கிழவி அடுத்த பஸ்ஸ_க்காக எவ்வளவு நேரம் காத்திருந்தாரோ தெரியவில்லை.
ஒருவாறு ஆவரங்கால் வந்தடைந்த பின்னர் எனக்குரிய காசைக் கொடுத்துவிட்டு இறங்க எத்தனித்தபோது என்னிடம் சீற் கேட்டு அமர்ந்த அந்த அம்மாவும் இறங்குவதற்கு ஆயத்தமாகி நடத்துனரிடம் 'தம்பி மிச்சக்காசைத் தா" என்று பணிவோடு கேட்டார். அதற்கு அந்த நடத்துனர் 'இவ்வளவு நேரமும் சீற்றிலதானே இருந்தனீ அதுக்குத்தான் மிச்சக்காசு.." என்று சிறிதும் மனிதாபிமானமற்று கூறினார். அந்த அம்மாவும் பாவம் பேசாமல் இறங்கிவிட்டார்.
எங்கேயாவது இருக்கைக்கும் சேர்த்து காசு வாங்கிய சங்கதி உண்டா? இறங்கிய அவரிடம் நான் 'என்னம்மா நீங்கள் காசு வாங்காமலே பேசாமல் வந்துவிட்டீர்களே" என்றேன்.
'என்ன பிள்ளை செய்வது எல்லோரும் இப்படித்தான் கொஞ்சம் பேசினால் கூட சண்டைக்கு வருவாங்கள் அதுதான் பேசாமல் வாரன். இப்படிக் கொள்ளை அடிச்சு என்ன செய்யப் போறாங்களோ தெரியயேல" என வேதனையுடன் சென்றுவிட்டார்.
எமது சனத்துக்கு நாங்களே இப்படி அக்கிரமம் அநியாயம் செய்தால் மற்றவர்கள்? உண்மையில் யாழ்ப்பாணம் நல்லாத்தான் மாறிப் போய்க் கிடக்கு. பஸ்ஸில் கருவாட்டைக் கொண்டு சென்றால் நாறுமாம். இங்கு கருவாட்டைவிட மோசமாகவல்லவா மனித மனங்கள் நாறிப்போய்க் கிடக்கின்றன? யாழ்ப்பாணம் எப்பொழுது திருந்தும்?
இம்முறைகேடுகள் தொடர்பாக யாழ் மாவட்ட மினி வான் சங்கச் செயலாளர் மயில்வாகனம் நில்சன் அவர்களிடம் கேட்டபோது
'ஓடுவதற்கு சரியான பஸ் இருக்கு. ஆனால் நேரமில்லை. அரச பஸ்கள் நிறைய ஓடுவதனால் எல்லா மினி வான்களையும் ஓட விட முடியல. சனங்கள் அள்ளி அடைவது சில டைமில மட்டும்தான். அதுவும் பின்னேரங்களில் 4 மணி 5 மணி அப்படித்தான் அந்த நிலைமை. நிறய பஸ்கள் வந்திருக்கு. சீற்றுகள் கழற்றுவது பற்றி முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

எல்லா சீற்றையும் பூட்டித்தான் ஓடவேண்டும் என்று நாங்கள் மினிவான் நடத்துனர்களுக்கு அறிவித்திருக்கின்றோம்.
நடுவலில் உள்ள பேபி சீற் மட்டும் கழற்றலாம். மற்றவை ஒன்றும் கழற்றக்கூடாது என்று அறிவித்திருக்கின்றோம். மிச்சக்காசுகளை பயணிகளிடம் கொடுக்கச் சொல்லி எல்லா நடத்துனர், சாரதிகளிடமும் சொல்லியிருக்கிறம். அப்படிக் குடுக்காட்டி அதுக்குப் பிரயாணிகள் எங்களிடம் அறிவித்தால் நாங்கள் அதுக்கு தகுந்த நடவடிக்கை எடுப்பம். இவர்கள் தங்களுடைய பெயரையும் போட்டு வான் இலக்கத்தையும் தந்தால் நாங்கள் அதற்குறிய முறைப்பாட்டைச் செய்வோம்" என்றா
கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

திமுகவுக்குக் கண்டனம்.வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம்- பள்ளிகள் இயங்கும்

சென்னை: திமுக அழைப்பு விடுத்துள்ள வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் இன்று நடைபெறுகிறது. ஆனால் இநதப் போராட்டத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு நர்சரி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் சங்கம் இன்று வழக்கம் போல பள்ளிக்கூடங்கள் இயங்கும் என அறிவித்துள்ளது.

தமிழக அரசும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடக் கூடாது என எச்சரித்துள்ளது.

சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கோரி இன்று வகுப்புகளைப் புறக்கணிக்குமாறு மாணவர்களுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. மாணவச் செல்வங்கள் வகுப்புகளைப் புறக்கணிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதியும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த போராட்டத்தில் தாங்களும் இணைவதாக சில மாணவர் அமைப்புகள் அறிவித்துள்ளன. ஆனால் இப்போராட்டம் சமச்சீர்க் கல்வி திட்டம் தொடர்பான பிரச்சினையை திசை திருப்புவதாக உள்ளது என்று தமிழக அரசு கண்டித்துள்ளது. எனவே இன்று பள்ளிகள் அனைத்தும் திறந்திருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு எச்சரித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை மூலம் பிறப்பித்துள்ள உத்தரவில்,

தொடக்கப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் அனைத்தும் வெள்ளிக்கிழமை நடைபெற வேண்டும். காலை 11 மணிக்குள் வருகைப் பதிவு நிலவரம் குறித்து முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்குத் தகவல் அனுப்ப வேண்டும். அவர்கள் அந்தத் தகவல்களைச் சென்னைக்குத் தெரிவிக்க வேண்டும்.இதுகுறித்து எல்லா பள்ளிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் பள்ளி வளாகத்திலேயே இருப்பதை உறுதி செய்யுமாறும், மாணவர்கள் வெளியில் இருந்தால் பள்ளிக்கூட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொண்டால் தக்க போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

பள்ளிக்கு வரும் மாணவர்களை எக்காரணம் கொண்டும் இடையில் வெளியில் அனுமதிக்கக் கூடாது. மதிய உணவை காரணம் காட்டி மாணவர்கள் வெளியேற அனுமதிக்கக் கூடாது.

பள்ளிகளுக்கு வராத ஆசிரியர்கள் பட்டியலை அரசு உயர் அதிகாரிகளுக்கு மாவட்ட கல்வி நிர்வாகம் அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

திமுகவுக்குக் கண்டனம்

இதற்கிடையே திமுகவின் போராட்ட அறிவிப்புக்கு நர்சரி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் கிறிஸ்துராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். சமச்சீர் கல்வி திட்டம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இந்தப் போராட்டம் தேவையற்றது, இதில் நாங்கள் பங்கேற்க மாட்டோம். அனைத்துப் பள்ளிகளும் வெள்ளிக்கிழமை திறந்திருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

London speech எம்.ஏ. சுமந்திரன் Sumanthiran

கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

ஜொள் ஹிந்த்! 34 வயதானா ஹீனா ரப்பானி பாகிஸ்தானின் முதல் பெண் வெளியுறவு அமைச்சர்,


எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் ஹீனா
ஹீனா ரப்பானி கார் - எஸ்.எம்.கிருஷ்ணா
ரவிவர்மாவின் அந்தக்கால அல்ட்ரா மாடர்ன் பட்டுடை உடுத்திய காளிதேவி போன்ற ஷேப்பில் இருக்கும் பாரதமாதாவை பார்த்திருக்கிறீர்களா? இல்லையென்றால் ஆர்.எஸ்.எஸ் அம்பிகளின் வீடுகளுக்குச் சென்றால் தவறாமல் தரிசிக்கலாம். கோவில் சிலைகளில் அம்மணத்தை ஆடையாகக் கொண்டு ஆடிய பழங்குடியான காளி, பாரதமாதாவான கதை தனிக்கதை! ஆனால் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பாரதமாதாவை, பர்தா போட்டு வந்த ஒரு பாகிஸ்தான் தேவதை வென்றுவிட்டாள்! பாரத் மாதா கி நகி! பாக் அழகி கி ஜெய்!
34 வயதானா ஹீனா ரப்பானி கார் எனும் பாகிஸ்தானின் முதல் பெண் வெளியுறவு அமைச்சர், டெல்லி விமானப்படை தளத்தில் (சரி, இந்திய விமானப்படைத் தளத்தில் பாக் விமானம் இறங்கினால் எல்லா இரகசியங்களையும் செல்போனில் சுட்டுவிடுவார்களே என்று யாரும் ஏன் கேட்கவில்லை) இறங்கி வந்து ஒரு பேஷன் ஷோ மங்கை போல கைப்பையை தூக்கிக் கொண்டு நடந்து வந்தாரா…… அவ்வளவுதான் முழு இந்தியாவும் அதன் மனசாட்சியுமான இந்திய ஊடகங்களும் அவுட்! மூன்றாவது அம்பையர், டி.ஆர்.எஸ் இதிலெல்லாம் சோசோதித்தறிய தேவையில்லாத கிளீன் போல்டு! தேசபக்தியை வீழ்த்திக் காட்டிய அழகு!
தமிழ்ப் பதிவுலகம் நன்கறிந்த ஜொள்ளர்களெல்லாம் சினிமா நடிகைகளை ஜொள்ளுவதையெல்லாம் கிண்டலடித்து வந்த ”ஹை கிளாஸ்” அம்பிகளெல்லாம் ஹீனா ஜன்னி பிடித்து சமூக வலைத்தளங்களை பிராண்டுகிறார்கள். டிவிட்டரில் இரண்டு நாட்களாக ஹீனாதான் பேரரசியாக கோலேச்சுகிறார். கசாப்பை தூக்கில் போடு, அப்சல் குருவை சுட்டுப்போடு என்று டெம்பிளேட் தேசபக்தி முழக்கங்களை காப்பி அடித்துப் போடும் இந்திய டவிட்டர்கள் இன்று ஹீனாவை மாய்ந்து மாய்ந்து உருகுகிறார்கள்.

“இந்தியா – பாக் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் பேச்சுவார்த்தையில் எந்தப் பிரச்சினையையும் பேசித் தீர்க்க முடியாது, ஏனெனில் ஹீனா என்றொரு அழகான பிரச்சினை இருக்கும் போது வேறு எதைப்பற்றி பேசுவது?” இது ஒரு டிவிட். எனில் மற்ற ஜொள் (டிவிட்டு) களைப் பற்றி விளக்கத் தேவையில்லை.
  • “பாகிஸ்தான் தனது அழகான முகத்தை இறக்கியிருக்கிறது” – இது டைம்ஸ் ஆப் இந்தியா.
  • “மாடல் நடிகையைப் போன்ற அமைச்சரால் இந்தியாவே வேர்த்துக் கிடக்கிறது” – இது இந்தி நாளிதழான நவபாரத் டைம்ஸ்.
  • “அனைவரது விழிகளும் அந்த கவர்ச்சியான பாக் அமைச்சர் மேல், அழகும்-சிந்தனையும் கச்சிதமாக கலந்தவள்தான் அந்தப் பெண் என்பது மட்டும் நிச்சயம்” இது ரீடிப் இணையத்தளம்.
  • “காலநிலைக்கு பொருத்தமான நீலநிற உடையில் அந்த 34 வயது அமைச்சர் டெல்லி விமான நிலையத்தை அடைந்தபோதே, ஆடை அலங்காரப் பிரிவில் முழு மதிப்பெண்களையும் பெற்றுவிட்டார் என்றே சொல்ல வேண்டும்” – இது மெயில் டுடே.
  • புதன்கிழமை காலையில் டெல்லியில் பெய்த மழையைப் போன்று ஹீனாவுக்கான கவரேஜூம் இருந்தது என்று கூறுகிறார், பத்திரிகையாளரும் எழுத்தாளருமான சீமா கோஸ்வாமி.
  • “ரசிக்கத்தக்க உபகரணங்கள், ரோபெர்ட்டோ கவாலி சன்கிளாஸ், பெரிய எர்மெஸ் பிர்கின் பை, பாரம்பரிய முத்து மாலை – எல்லாம் சேர்ந்து அவளது கவர்ச்சிக்கு மெருகூட்டுகிறது” – இது ஒரு பத்திரிகை செய்தி.
என்னதான் கசாபின் மண்ணிலிருந்து வந்தவரென்றாலும் இந்த அழகு தேவதையை ஆராதிக்கவில்லை என்றால் யூத் உலகோடு இடைவெளி வந்துவிடும் என்பதாலோ என்னமோ பா.ஜ.க தலைவர் அத்வானியும் அழகான ஒரு பொக்கேயை கொடுத்து போட்டோ எடுத்துக் கொண்டார். இந்தியா – பாக் நாடுகளின் சண்டை வரலாற்றை கிண்டல் செய்யும் வண்ணம், ” இந்தியாவில் இறங்கிய பாக் குண்டு” என்று குறிப்பிட்டது, மும்பையின் மிரர் பத்திரிகை.
79 வயது வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தனது விலையுயர்ந்த டிசைனர் கோட்டு சூட்டுடன் பெருமையாக உலா வந்தாலும், ஹீனாவுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்கப்பட்ட போதெல்லாம் அவரால் மற்றவர் கவனத்தை கவர்ந்திழுக்க முடியவில்லையாம்.
இப்படியாக ஹீனா ரப்பானி காரின் சௌந்தரிய புராண விளக்கத்தை இந்திய ஊடகங்கள் விதவிதமாக வருணித்து அதையும் தலைப்பு செய்தியாக வெளியிட்டிருக்கின்றன. பாக்கிற்கு எதிரான இந்திய வெத்துவேட்டு தேசபக்திக் கூச்சலை ஒரு இயக்கமாக பரப்புகின்ற டைம்ஸ் ஆப் இந்தியாதான் இந்த அலங்கார வருணணைகளை தொகுத்து அளித்திருக்கிறது! தேசபக்தி நாணயத்தின் மறுபக்கம் அள்ள அள்ளக் குறையாத ஜொள்ளு! இது நகை முரணல்ல, இயல்பான உள்ளத்தைக் காட்டும் கண்ணாடி!
இரு குழந்தைகளுக்குத் தாயான ஹீனா ஒரு உலக அழகி போல ரசிக்கப்படுவார் என்று தெரிந்துதான் பாக் அரசு அனுப்பியிருக்கிறதோ என்னமோ! பெனாசீர் பூட்டோ போல பாக்கின் பஞ்சாப் மாநிலத்தின் செல்வாக்கு மிக்க நிலவுடமை குடும்பத்தைச் சேர்ந்தவர் ஹீனா. இந்தியாவைப் போல பாக்கிலும் இத்தகைய பாரம்பரிய பணக்காரக் குடும்பங்களே அரசியலிலும், தொழிற்துறையிலும் கோலேச்சுகின்றன.
அந்த வகையில் ஹீனாவின் வருகை ஒன்றும் அதிசயமல்ல. ஆனால் அவர் அமைச்சராக்கப்பட்ட நேரம்தான் முக்கியமானது. பின்லேடன் மரண நாடகத்திற்குப் பிறகு பொதுவெளியில் அமெரிக்க – பாக் உறவு எள்ளும் கொள்ளும் வெடிப்பதான பாவனையில் இருக்கும்போது உலக மகா ஜொள்ளர்களான அமெரிக்கர்களை குஷப்படுத்துவதற்கும், அப்படியே உள்ளூர் ஜொள்ளர்களான இந்தியர்களின் பேச்சை மாற்றுவதற்கும் கூட ஹீனா பயன்படவேண்டுமென்று பாக் ஆளும் வர்க்கம் நினைத்திருக்கலாம்.
இருந்தாலும் ஒரு உண்மையை ஒத்துக் கொள்ளவேண்டும். பாக்கிலிருந்து யார் வந்தாலும் அது முஷராப்போ, ஜர்தாரியோ, நவாஸ் ஷெரிப் என்று யாராக இருந்தாலும் அவர்களது ஆளுமை, பேச்சு, வாதம் எல்லாம் இந்திய அம்பிகளை விட மேம்பட்டே இருக்கிறது. டைம்ஸ் நௌவின் அம்பி ஆர்னாப் கோஸ்வாமி உள்ளூர் அரசியல்வாதிகளையெல்லாம் டி.டி.எஸ் அலறில் கடித்துக் குதறுவார். அப்படிப்பட்ட அம்பியே பின்லேடன் மரணம் தொடர்பாக முஷராப்புடன் பேசும் போது அடிபட்ட பாம்பு போல அடங்கிக் கிடந்தார். எதிர்த்துக் கேட்க ஆளில்லாத மேடையில் மட்டும்தான் இந்திய திறமை பளிச்சிடும் என்பதை ஜனநாயகம் வளராத பாக்கின் தலைவர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.
சரி பாக், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அப்படி என்ன பேசி சாதிக்கப் போகிறார்கள்? வந்த செய்திகளைப் பார்க்கும் போது “இதுவரை பேச்சு வார்த்தை திருப்தி அளிக்கிறது, இனி தொடர்ந்து பேசுவதற்கு ஊக்கமூட்டுகிறது” இதுதான் அந்த சாதனையின் சிகரம். பேசுனோம், பேசிகிட்டு இருக்கோம், பேசுவோம் என்பதுதான் சாதனை என்றால் அர்த்தமில்லாமல் வளவளவென்று பேசும் எப்.எம் ரேடியோ ஜாக்கிகளையே அமைச்சராக்கலாமே?
தீவிரவாதத்தை எதிர்க்க இருநாடுகளும் இணைந்து பணிபுரிய பேசுவார்களாம். பணிபுரிவது இருக்கட்டும், மும்பை 26/11 தாக்குதலுக்காக பாக்கில் உள்ள குற்றவாளிகளை ஒப்படைக்க வேண்டுமென்று இந்தியா கேட்டால், சம்ஜூத்தா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பிற்கான இந்திய குற்றவாளிகளை பாக் கேட்கிறது. மும்பையில் கொல்லப்ப்பட்டது இந்தியக் குடிமகன்களென்றால், சம்ஜூத்தாவில் கொல்லப்பட்டது பாக் குடிமகன்கள். அடுத்து காஷமீர் பிரச்சினை குறித்து இந்தியா ஏதாவது வாயைத் திறந்தால் மாட்டிக் கொள்ளும். முழு காஷ்மீரத்து மக்களும் ஏகோபித்த நிலையில் இந்திய ஆக்கிரமிப்பை எதிர்க்கும் போது அங்கும் பாக்கின் கையே ஓங்கி நிற்கிறது. தற்போது காஷ்மீர் மக்கள் இயக்க பிரதிநிதிகளை ஹீனா சந்தித்ததை இந்திய அரசு கண்டித்திருப்பதாக செய்தி வந்திருக்கிறது. காஷ்மீர் மக்கள் பிரதிநிதிகளை பிரிவினைவாதிகள் என்று சொல்லும் இந்திய ஊடகங்கள் இதனாலொன்றும் ஹீனாவை அவ்வளவாக கண்டித்து விடவில்லை. மேலும் இந்தியா வந்து காஷ்மீர் போராட்டக்காரர்களை சந்திப்பதற்கு ஒரு தில் வேண்டுமே?
ஆக இறுதியில் என்னதான் பேசினார்கள்? இரண்டு காஷ்மீர்களிலிருந்தும் மக்கள் வணிக, பக்தி சுற்றுலாவிற்கு வந்து போகலாம், பஸ் விடலாம், வர்த்தகத்தை அதிகப்படுத்தலாம் என்பதைத்தான் பேசியிருக்கிறார்கள். இவையெல்லாம் நல்ல விடயங்கள்தான். ஆனால் மக்கள் வந்து போகும் இந்த விசயத்தைக் கூட செய்ய முடியாதபடி இந்திய தேசபக்தி வெறி அவ்வப்போது சாமியாடுகிறதே? அதைத் தீர்ப்பது எப்படி? பாக்கும் கூட காஷ்மீரின் தோழன் என்று தனது உள்நாட்டு பிரச்சினைகளை திசை திருப்புவதற்கு பயன்படுத்துகிறது, அதை யார் கேட்பது? மதச்சார்பற்ற முறையில் போராடிய காஷ்மீர் மக்களை மதம் சார்ந்து திணித்த பாவத்தை இருநாடுகளும் குறைவில்லாமல் செய்திருக்கின்றன.
ஒன்று மட்டும் உண்மை. இந்திய பாக் கவுரவப் பிரச்சினைகள் இருநாட்டு ஆளும் வர்க்கங்களுக்கும் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம். அதை வைத்து மக்களை திசைதிருப்புவதற்கு அவர்களுக்கு கிடைத்திருக்கும் அழியாத சாக்கு. அதனால்தான் நேற்று வரை பாக் காஷ்மீரில் குண்டு போட்டு அழிக்க வேண்டும் என்று சாமியாடிய இந்திய ஊடகங்கள் இன்று பாக்கிலிருந்து வந்திருக்கும் தேவதையை ஆராதிக்கின்றன. அந்த வகையில் இந்த பேச்சு வார்த்தையில் முழு வெற்றி அடைந்திருப்பது பாகிஸ்தான்தான்.
இந்திர பதவிக்கு ஆப்பு வைத்த மாமுனிவர்களின் தவத்தை கலைத்த ரம்பா, ஊர்வசி, மேனகை என உலகின் முதல் ஜெள்ளாயுத்தை தயாரித்த இந்த புண்ணிய பூமிக்கு இது  வெட்கக்கேடல்லவா? அவர்களில் ஒருவர் யாராவது வெளியுறவு அமைச்சராக இருந்தால் இந்தியாவும் பேச்சு வார்த்தையில் வெற்றி வாகை சூடலாமே? அப்படி ஒன்றும்  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பணி என்பது கஷ்டமானதில்லையே? ஐ.நா சபையில் பக்கத்து சீட்டில் இருந்து வேறு ஒரு நாட்டு பிரதிநிதியின் உரையை எடுத்து படித்தவர்தானே நம்ம எஸ்.எம். கிருஷ்ணா? இந்த ஈயடிச்சான் காப்பி வேலையை பாலிவுட், கோலிவுட், டோலிவுட் முதலிய இந்திய வுட்களின் நடிகைகள் யாராவது செய்ய முடியாதா என்ன?
கமான் இந்தியா, கமான்… ஒரு அழகு தேவதையை தேர்ந்தெடு, உலக அழகி போட்டிகளிலெல்லாம் வென்று காட்டிய உன் நாட்டில் அழகிகளுக்கா பஞ்சம்? அழகியை அமைச்சராக்கு, பாக்கை வென்று காட்டு! ஜொள் ஹிந்த்!
கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

Self respect - Social Justice - Free thinking

Self respect - Social Justice - Free thinking
சுயமரியாதை அற்ற மனிதர்கள் மொழியின் பெயராலும் ஜாதி மதங்களின் பெயராலும் வர்க்கத்தின் பெயராலும் ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்வார்கள்
  • zeenews.india
  • thenewsminuite
  • tamil.oneindia.com/
  • BBC தமிழ்
  • வினவு.காம்
  • விகடன் செய்திகள்
  • வாழ்வியல் ..
  • ராமானுஜ தாத்தாச்சாரியா
  • மின்னம்பலம்
  • மாலைமலர்
  • நூலகம் ஆவணக்கப்பாகம்
  • நியுஸ் 18 தமிழ்
  • நமது மலையகம்
  • நக்கீரன்
  • தொகுப்பு செய்திகள்
  • தீக்கதிர்
  • தினமலர்
  • தினத்தந்தி
  • தமிழி எழுத்துக்கள் உருமாற்றம்
  • தமிழ் திஇந்து
  • கூகுள் செய்திகள்
  • உதயமுகம்
  • ஆய்வரங்கம் free thinkers
  • அறம் - சாவித்திரி கண்ணன்
  • ஆரிய மாயை
  • சுயமரியாதை சமூகநீதி சுயசிந்தனை
  • info மலையகம்

இவ்வார செய்திகள்

  • ►  2023 (452)
    • ►  03/19 - 03/26 (23)
    • ►  03/12 - 03/19 (30)
    • ►  03/05 - 03/12 (28)
    • ►  02/26 - 03/05 (41)
    • ►  02/19 - 02/26 (41)
    • ►  02/12 - 02/19 (44)
    • ►  02/05 - 02/12 (43)
    • ►  01/29 - 02/05 (33)
    • ►  01/22 - 01/29 (45)
    • ►  01/15 - 01/22 (39)
    • ►  01/08 - 01/15 (37)
    • ►  01/01 - 01/08 (48)
  • ►  2022 (2427)
    • ►  12/25 - 01/01 (52)
    • ►  12/18 - 12/25 (48)
    • ►  12/11 - 12/18 (49)
    • ►  12/04 - 12/11 (40)
    • ►  11/27 - 12/04 (45)
    • ►  11/20 - 11/27 (40)
    • ►  11/13 - 11/20 (60)
    • ►  11/06 - 11/13 (45)
    • ►  10/30 - 11/06 (55)
    • ►  10/23 - 10/30 (46)
    • ►  10/16 - 10/23 (47)
    • ►  10/09 - 10/16 (52)
    • ►  10/02 - 10/09 (52)
    • ►  09/25 - 10/02 (53)
    • ►  09/18 - 09/25 (53)
    • ►  09/11 - 09/18 (47)
    • ►  09/04 - 09/11 (45)
    • ►  08/28 - 09/04 (50)
    • ►  08/21 - 08/28 (47)
    • ►  08/14 - 08/21 (51)
    • ►  08/07 - 08/14 (38)
    • ►  07/31 - 08/07 (42)
    • ►  07/24 - 07/31 (29)
    • ►  07/17 - 07/24 (44)
    • ►  07/10 - 07/17 (38)
    • ►  07/03 - 07/10 (41)
    • ►  06/26 - 07/03 (37)
    • ►  06/19 - 06/26 (41)
    • ►  06/12 - 06/19 (47)
    • ►  06/05 - 06/12 (42)
    • ►  05/29 - 06/05 (43)
    • ►  05/22 - 05/29 (39)
    • ►  05/15 - 05/22 (38)
    • ►  05/08 - 05/15 (41)
    • ►  05/01 - 05/08 (39)
    • ►  04/24 - 05/01 (36)
    • ►  04/17 - 04/24 (43)
    • ►  04/10 - 04/17 (40)
    • ►  04/03 - 04/10 (35)
    • ►  03/27 - 04/03 (51)
    • ►  03/20 - 03/27 (44)
    • ►  03/13 - 03/20 (49)
    • ►  03/06 - 03/13 (53)
    • ►  02/27 - 03/06 (43)
    • ►  02/20 - 02/27 (54)
    • ►  02/13 - 02/20 (53)
    • ►  02/06 - 02/13 (47)
    • ►  01/30 - 02/06 (63)
    • ►  01/23 - 01/30 (55)
    • ►  01/16 - 01/23 (64)
    • ►  01/09 - 01/16 (64)
    • ►  01/02 - 01/09 (57)
  • ►  2021 (3484)
    • ►  12/26 - 01/02 (64)
    • ►  12/19 - 12/26 (63)
    • ►  12/12 - 12/19 (49)
    • ►  12/05 - 12/12 (51)
    • ►  11/28 - 12/05 (49)
    • ►  11/21 - 11/28 (50)
    • ►  11/14 - 11/21 (51)
    • ►  11/07 - 11/14 (46)
    • ►  10/31 - 11/07 (52)
    • ►  10/24 - 10/31 (49)
    • ►  10/17 - 10/24 (49)
    • ►  10/10 - 10/17 (48)
    • ►  10/03 - 10/10 (56)
    • ►  09/26 - 10/03 (43)
    • ►  09/19 - 09/26 (49)
    • ►  09/12 - 09/19 (50)
    • ►  09/05 - 09/12 (63)
    • ►  08/29 - 09/05 (60)
    • ►  08/22 - 08/29 (68)
    • ►  08/15 - 08/22 (73)
    • ►  08/08 - 08/15 (53)
    • ►  08/01 - 08/08 (47)
    • ►  07/25 - 08/01 (53)
    • ►  07/18 - 07/25 (73)
    • ►  07/11 - 07/18 (66)
    • ►  07/04 - 07/11 (78)
    • ►  06/27 - 07/04 (64)
    • ►  06/20 - 06/27 (73)
    • ►  06/13 - 06/20 (71)
    • ►  06/06 - 06/13 (79)
    • ►  05/30 - 06/06 (58)
    • ►  05/23 - 05/30 (74)
    • ►  05/16 - 05/23 (66)
    • ►  05/09 - 05/16 (104)
    • ►  05/02 - 05/09 (106)
    • ►  04/25 - 05/02 (76)
    • ►  04/18 - 04/25 (77)
    • ►  04/11 - 04/18 (83)
    • ►  04/04 - 04/11 (64)
    • ►  03/28 - 04/04 (78)
    • ►  03/21 - 03/28 (78)
    • ►  03/14 - 03/21 (84)
    • ►  03/07 - 03/14 (109)
    • ►  02/28 - 03/07 (102)
    • ►  02/21 - 02/28 (78)
    • ►  02/14 - 02/21 (69)
    • ►  02/07 - 02/14 (65)
    • ►  01/31 - 02/07 (66)
    • ►  01/24 - 01/31 (69)
    • ►  01/17 - 01/24 (80)
    • ►  01/10 - 01/17 (71)
    • ►  01/03 - 01/10 (87)
  • ►  2020 (4249)
    • ►  12/27 - 01/03 (94)
    • ►  12/20 - 12/27 (77)
    • ►  12/13 - 12/20 (71)
    • ►  12/06 - 12/13 (87)
    • ►  11/29 - 12/06 (73)
    • ►  11/22 - 11/29 (98)
    • ►  11/15 - 11/22 (86)
    • ►  11/08 - 11/15 (75)
    • ►  11/01 - 11/08 (80)
    • ►  10/25 - 11/01 (65)
    • ►  10/18 - 10/25 (77)
    • ►  10/11 - 10/18 (79)
    • ►  10/04 - 10/11 (76)
    • ►  09/27 - 10/04 (75)
    • ►  09/20 - 09/27 (89)
    • ►  09/13 - 09/20 (89)
    • ►  09/06 - 09/13 (77)
    • ►  08/30 - 09/06 (98)
    • ►  08/23 - 08/30 (84)
    • ►  08/16 - 08/23 (75)
    • ►  08/09 - 08/16 (67)
    • ►  08/02 - 08/09 (71)
    • ►  07/26 - 08/02 (93)
    • ►  07/19 - 07/26 (87)
    • ►  07/12 - 07/19 (78)
    • ►  07/05 - 07/12 (73)
    • ►  06/28 - 07/05 (94)
    • ►  06/21 - 06/28 (80)
    • ►  06/14 - 06/21 (84)
    • ►  06/07 - 06/14 (87)
    • ►  05/31 - 06/07 (70)
    • ►  05/24 - 05/31 (82)
    • ►  05/17 - 05/24 (88)
    • ►  05/10 - 05/17 (72)
    • ►  05/03 - 05/10 (68)
    • ►  04/26 - 05/03 (65)
    • ►  04/19 - 04/26 (73)
    • ►  04/12 - 04/19 (92)
    • ►  04/05 - 04/12 (100)
    • ►  03/29 - 04/05 (74)
    • ►  03/22 - 03/29 (100)
    • ►  03/15 - 03/22 (88)
    • ►  03/08 - 03/15 (87)
    • ►  03/01 - 03/08 (98)
    • ►  02/23 - 03/01 (89)
    • ►  02/16 - 02/23 (93)
    • ►  02/09 - 02/16 (94)
    • ►  02/02 - 02/09 (91)
    • ►  01/26 - 02/02 (78)
    • ►  01/19 - 01/26 (59)
    • ►  01/12 - 01/19 (72)
    • ►  01/05 - 01/12 (77)
  • ►  2019 (5191)
    • ►  12/29 - 01/05 (84)
    • ►  12/22 - 12/29 (96)
    • ►  12/15 - 12/22 (113)
    • ►  12/08 - 12/15 (97)
    • ►  12/01 - 12/08 (81)
    • ►  11/24 - 12/01 (81)
    • ►  11/17 - 11/24 (85)
    • ►  11/10 - 11/17 (95)
    • ►  11/03 - 11/10 (92)
    • ►  10/27 - 11/03 (95)
    • ►  10/20 - 10/27 (105)
    • ►  10/13 - 10/20 (89)
    • ►  10/06 - 10/13 (94)
    • ►  09/29 - 10/06 (101)
    • ►  09/22 - 09/29 (101)
    • ►  09/15 - 09/22 (110)
    • ►  09/08 - 09/15 (89)
    • ►  09/01 - 09/08 (101)
    • ►  08/25 - 09/01 (126)
    • ►  08/18 - 08/25 (113)
    • ►  08/11 - 08/18 (99)
    • ►  08/04 - 08/11 (106)
    • ►  07/28 - 08/04 (114)
    • ►  07/21 - 07/28 (94)
    • ►  07/14 - 07/21 (98)
    • ►  07/07 - 07/14 (98)
    • ►  06/30 - 07/07 (101)
    • ►  06/23 - 06/30 (105)
    • ►  06/16 - 06/23 (111)
    • ►  06/09 - 06/16 (114)
    • ►  06/02 - 06/09 (105)
    • ►  05/26 - 06/02 (103)
    • ►  05/19 - 05/26 (90)
    • ►  05/12 - 05/19 (97)
    • ►  05/05 - 05/12 (88)
    • ►  04/28 - 05/05 (100)
    • ►  04/21 - 04/28 (106)
    • ►  04/14 - 04/21 (112)
    • ►  04/07 - 04/14 (104)
    • ►  03/31 - 04/07 (114)
    • ►  03/24 - 03/31 (108)
    • ►  03/17 - 03/24 (95)
    • ►  03/10 - 03/17 (119)
    • ►  03/03 - 03/10 (101)
    • ►  02/24 - 03/03 (105)
    • ►  02/17 - 02/24 (93)
    • ►  02/10 - 02/17 (96)
    • ►  02/03 - 02/10 (85)
    • ►  01/27 - 02/03 (91)
    • ►  01/20 - 01/27 (90)
    • ►  01/13 - 01/20 (110)
    • ►  01/06 - 01/13 (91)
  • ►  2018 (5207)
    • ►  12/30 - 01/06 (98)
    • ►  12/23 - 12/30 (107)
    • ►  12/16 - 12/23 (107)
    • ►  12/09 - 12/16 (115)
    • ►  12/02 - 12/09 (94)
    • ►  11/25 - 12/02 (113)
    • ►  11/18 - 11/25 (113)
    • ►  11/11 - 11/18 (106)
    • ►  11/04 - 11/11 (100)
    • ►  10/28 - 11/04 (112)
    • ►  10/21 - 10/28 (116)
    • ►  10/14 - 10/21 (113)
    • ►  10/07 - 10/14 (96)
    • ►  09/30 - 10/07 (99)
    • ►  09/23 - 09/30 (95)
    • ►  09/16 - 09/23 (95)
    • ►  09/09 - 09/16 (94)
    • ►  09/02 - 09/09 (88)
    • ►  08/26 - 09/02 (86)
    • ►  08/19 - 08/26 (89)
    • ►  08/12 - 08/19 (82)
    • ►  08/05 - 08/12 (92)
    • ►  07/29 - 08/05 (96)
    • ►  07/22 - 07/29 (100)
    • ►  07/15 - 07/22 (88)
    • ►  07/08 - 07/15 (86)
    • ►  07/01 - 07/08 (81)
    • ►  06/24 - 07/01 (79)
    • ►  06/17 - 06/24 (84)
    • ►  06/10 - 06/17 (79)
    • ►  06/03 - 06/10 (105)
    • ►  05/27 - 06/03 (100)
    • ►  05/20 - 05/27 (106)
    • ►  05/13 - 05/20 (116)
    • ►  05/06 - 05/13 (108)
    • ►  04/29 - 05/06 (100)
    • ►  04/22 - 04/29 (110)
    • ►  04/15 - 04/22 (98)
    • ►  04/08 - 04/15 (110)
    • ►  04/01 - 04/08 (115)
    • ►  03/25 - 04/01 (110)
    • ►  03/18 - 03/25 (111)
    • ►  03/11 - 03/18 (84)
    • ►  03/04 - 03/11 (113)
    • ►  02/25 - 03/04 (93)
    • ►  02/18 - 02/25 (82)
    • ►  02/11 - 02/18 (94)
    • ►  02/04 - 02/11 (93)
    • ►  01/28 - 02/04 (114)
    • ►  01/21 - 01/28 (110)
    • ►  01/14 - 01/21 (111)
    • ►  01/07 - 01/14 (121)
  • ►  2017 (6096)
    • ►  12/31 - 01/07 (109)
    • ►  12/24 - 12/31 (91)
    • ►  12/17 - 12/24 (99)
    • ►  12/10 - 12/17 (113)
    • ►  12/03 - 12/10 (126)
    • ►  11/26 - 12/03 (119)
    • ►  11/19 - 11/26 (109)
    • ►  11/12 - 11/19 (106)
    • ►  11/05 - 11/12 (135)
    • ►  10/29 - 11/05 (117)
    • ►  10/22 - 10/29 (125)
    • ►  10/15 - 10/22 (119)
    • ►  10/08 - 10/15 (112)
    • ►  10/01 - 10/08 (123)
    • ►  09/24 - 10/01 (127)
    • ►  09/17 - 09/24 (119)
    • ►  09/10 - 09/17 (129)
    • ►  09/03 - 09/10 (167)
    • ►  08/27 - 09/03 (133)
    • ►  08/20 - 08/27 (108)
    • ►  08/13 - 08/20 (75)
    • ►  08/06 - 08/13 (120)
    • ►  07/30 - 08/06 (121)
    • ►  07/23 - 07/30 (102)
    • ►  07/16 - 07/23 (111)
    • ►  07/09 - 07/16 (110)
    • ►  07/02 - 07/09 (93)
    • ►  06/25 - 07/02 (123)
    • ►  06/18 - 06/25 (149)
    • ►  06/11 - 06/18 (123)
    • ►  06/04 - 06/11 (113)
    • ►  05/28 - 06/04 (136)
    • ►  05/21 - 05/28 (130)
    • ►  05/14 - 05/21 (110)
    • ►  05/07 - 05/14 (114)
    • ►  04/30 - 05/07 (118)
    • ►  04/23 - 04/30 (116)
    • ►  04/16 - 04/23 (98)
    • ►  04/09 - 04/16 (115)
    • ►  04/02 - 04/09 (98)
    • ►  03/26 - 04/02 (58)
    • ►  03/19 - 03/26 (21)
    • ►  03/12 - 03/19 (2)
    • ►  02/26 - 03/05 (87)
    • ►  02/19 - 02/26 (146)
    • ►  02/12 - 02/19 (218)
    • ►  02/05 - 02/12 (192)
    • ►  01/29 - 02/05 (139)
    • ►  01/22 - 01/29 (185)
    • ►  01/15 - 01/22 (138)
    • ►  01/08 - 01/15 (119)
    • ►  01/01 - 01/08 (130)
  • ►  2016 (5066)
    • ►  12/25 - 01/01 (131)
    • ►  12/18 - 12/25 (151)
    • ►  12/11 - 12/18 (125)
    • ►  12/04 - 12/11 (149)
    • ►  11/27 - 12/04 (132)
    • ►  11/20 - 11/27 (106)
    • ►  11/13 - 11/20 (108)
    • ►  11/06 - 11/13 (153)
    • ►  10/30 - 11/06 (93)
    • ►  10/23 - 10/30 (99)
    • ►  10/16 - 10/23 (115)
    • ►  10/09 - 10/16 (117)
    • ►  10/02 - 10/09 (110)
    • ►  09/25 - 10/02 (111)
    • ►  09/18 - 09/25 (92)
    • ►  09/11 - 09/18 (117)
    • ►  09/04 - 09/11 (95)
    • ►  08/28 - 09/04 (82)
    • ►  08/21 - 08/28 (110)
    • ►  08/14 - 08/21 (88)
    • ►  08/07 - 08/14 (96)
    • ►  07/31 - 08/07 (99)
    • ►  07/24 - 07/31 (80)
    • ►  07/17 - 07/24 (80)
    • ►  07/10 - 07/17 (62)
    • ►  07/03 - 07/10 (29)
    • ►  06/26 - 07/03 (36)
    • ►  06/19 - 06/26 (46)
    • ►  06/12 - 06/19 (79)
    • ►  06/05 - 06/12 (102)
    • ►  05/29 - 06/05 (91)
    • ►  05/22 - 05/29 (92)
    • ►  05/15 - 05/22 (96)
    • ►  05/08 - 05/15 (99)
    • ►  05/01 - 05/08 (120)
    • ►  04/24 - 05/01 (96)
    • ►  04/17 - 04/24 (125)
    • ►  04/10 - 04/17 (122)
    • ►  04/03 - 04/10 (118)
    • ►  03/27 - 04/03 (115)
    • ►  03/20 - 03/27 (104)
    • ►  03/13 - 03/20 (108)
    • ►  03/06 - 03/13 (97)
    • ►  02/28 - 03/06 (89)
    • ►  02/21 - 02/28 (83)
    • ►  02/14 - 02/21 (86)
    • ►  02/07 - 02/14 (84)
    • ►  01/31 - 02/07 (64)
    • ►  01/24 - 01/31 (66)
    • ►  01/17 - 01/24 (78)
    • ►  01/10 - 01/17 (67)
    • ►  01/03 - 01/10 (73)
  • ►  2015 (2346)
    • ►  12/27 - 01/03 (56)
    • ►  12/20 - 12/27 (64)
    • ►  12/13 - 12/20 (55)
    • ►  12/06 - 12/13 (65)
    • ►  11/29 - 12/06 (68)
    • ►  11/22 - 11/29 (58)
    • ►  11/15 - 11/22 (54)
    • ►  11/08 - 11/15 (58)
    • ►  11/01 - 11/08 (52)
    • ►  10/25 - 11/01 (60)
    • ►  10/18 - 10/25 (59)
    • ►  10/11 - 10/18 (47)
    • ►  10/04 - 10/11 (45)
    • ►  09/27 - 10/04 (51)
    • ►  09/20 - 09/27 (49)
    • ►  09/13 - 09/20 (41)
    • ►  08/30 - 09/06 (6)
    • ►  08/23 - 08/30 (46)
    • ►  08/16 - 08/23 (51)
    • ►  08/09 - 08/16 (47)
    • ►  08/02 - 08/09 (53)
    • ►  07/26 - 08/02 (48)
    • ►  07/19 - 07/26 (44)
    • ►  07/12 - 07/19 (39)
    • ►  07/05 - 07/12 (41)
    • ►  06/28 - 07/05 (35)
    • ►  06/21 - 06/28 (36)
    • ►  05/10 - 05/17 (33)
    • ►  05/03 - 05/10 (54)
    • ►  04/26 - 05/03 (61)
    • ►  04/19 - 04/26 (50)
    • ►  04/12 - 04/19 (60)
    • ►  04/05 - 04/12 (68)
    • ►  03/29 - 04/05 (52)
    • ►  03/22 - 03/29 (55)
    • ►  03/15 - 03/22 (59)
    • ►  03/08 - 03/15 (65)
    • ►  03/01 - 03/08 (52)
    • ►  02/22 - 03/01 (35)
    • ►  02/15 - 02/22 (63)
    • ►  02/08 - 02/15 (58)
    • ►  02/01 - 02/08 (50)
    • ►  01/25 - 02/01 (54)
    • ►  01/18 - 01/25 (53)
    • ►  01/11 - 01/18 (39)
    • ►  01/04 - 01/11 (57)
  • ►  2014 (3801)
    • ►  12/28 - 01/04 (69)
    • ►  12/21 - 12/28 (70)
    • ►  12/14 - 12/21 (85)
    • ►  12/07 - 12/14 (63)
    • ►  11/30 - 12/07 (69)
    • ►  11/23 - 11/30 (73)
    • ►  11/16 - 11/23 (86)
    • ►  11/09 - 11/16 (90)
    • ►  11/02 - 11/09 (89)
    • ►  10/26 - 11/02 (90)
    • ►  10/19 - 10/26 (81)
    • ►  10/12 - 10/19 (86)
    • ►  10/05 - 10/12 (87)
    • ►  09/28 - 10/05 (87)
    • ►  09/21 - 09/28 (61)
    • ►  09/14 - 09/21 (65)
    • ►  09/07 - 09/14 (42)
    • ►  08/31 - 09/07 (28)
    • ►  08/24 - 08/31 (32)
    • ►  08/17 - 08/24 (79)
    • ►  08/10 - 08/17 (62)
    • ►  08/03 - 08/10 (65)
    • ►  07/27 - 08/03 (63)
    • ►  07/20 - 07/27 (61)
    • ►  07/13 - 07/20 (65)
    • ►  07/06 - 07/13 (61)
    • ►  06/29 - 07/06 (61)
    • ►  06/22 - 06/29 (72)
    • ►  06/15 - 06/22 (77)
    • ►  06/08 - 06/15 (66)
    • ►  06/01 - 06/08 (75)
    • ►  05/25 - 06/01 (84)
    • ►  05/18 - 05/25 (70)
    • ►  05/11 - 05/18 (75)
    • ►  05/04 - 05/11 (75)
    • ►  04/27 - 05/04 (73)
    • ►  04/20 - 04/27 (75)
    • ►  04/13 - 04/20 (84)
    • ►  04/06 - 04/13 (75)
    • ►  03/30 - 04/06 (74)
    • ►  03/23 - 03/30 (71)
    • ►  03/16 - 03/23 (84)
    • ►  03/09 - 03/16 (94)
    • ►  03/02 - 03/09 (90)
    • ►  02/23 - 03/02 (78)
    • ►  02/16 - 02/23 (79)
    • ►  02/09 - 02/16 (81)
    • ►  02/02 - 02/09 (68)
    • ►  01/26 - 02/02 (69)
    • ►  01/19 - 01/26 (82)
    • ►  01/12 - 01/19 (63)
    • ►  01/05 - 01/12 (97)
  • ►  2013 (3395)
    • ►  12/29 - 01/05 (78)
    • ►  12/22 - 12/29 (87)
    • ►  12/15 - 12/22 (35)
    • ►  12/08 - 12/15 (85)
    • ►  12/01 - 12/08 (88)
    • ►  11/24 - 12/01 (74)
    • ►  11/17 - 11/24 (56)
    • ►  11/10 - 11/17 (71)
    • ►  11/03 - 11/10 (64)
    • ►  10/27 - 11/03 (72)
    • ►  10/20 - 10/27 (81)
    • ►  10/13 - 10/20 (64)
    • ►  10/06 - 10/13 (69)
    • ►  09/29 - 10/06 (72)
    • ►  09/22 - 09/29 (53)
    • ►  09/15 - 09/22 (35)
    • ►  09/08 - 09/15 (7)
    • ►  09/01 - 09/08 (86)
    • ►  08/25 - 09/01 (86)
    • ►  08/18 - 08/25 (85)
    • ►  08/11 - 08/18 (79)
    • ►  08/04 - 08/11 (76)
    • ►  07/28 - 08/04 (79)
    • ►  07/21 - 07/28 (81)
    • ►  07/14 - 07/21 (67)
    • ►  07/07 - 07/14 (80)
    • ►  06/30 - 07/07 (97)
    • ►  06/23 - 06/30 (75)
    • ►  06/16 - 06/23 (81)
    • ►  06/09 - 06/16 (75)
    • ►  06/02 - 06/09 (70)
    • ►  05/26 - 06/02 (65)
    • ►  05/19 - 05/26 (57)
    • ►  05/12 - 05/19 (47)
    • ►  05/05 - 05/12 (57)
    • ►  04/28 - 05/05 (49)
    • ►  04/21 - 04/28 (58)
    • ►  04/14 - 04/21 (51)
    • ►  04/07 - 04/14 (63)
    • ►  03/31 - 04/07 (76)
    • ►  03/24 - 03/31 (67)
    • ►  03/17 - 03/24 (63)
    • ►  03/10 - 03/17 (54)
    • ►  03/03 - 03/10 (49)
    • ►  02/24 - 03/03 (44)
    • ►  02/17 - 02/24 (41)
    • ►  02/10 - 02/17 (62)
    • ►  02/03 - 02/10 (63)
    • ►  01/27 - 02/03 (70)
    • ►  01/20 - 01/27 (64)
    • ►  01/13 - 01/20 (33)
    • ►  01/06 - 01/13 (54)
  • ►  2012 (4397)
    • ►  12/30 - 01/06 (42)
    • ►  12/23 - 12/30 (63)
    • ►  12/16 - 12/23 (75)
    • ►  12/09 - 12/16 (79)
    • ►  12/02 - 12/09 (92)
    • ►  11/25 - 12/02 (80)
    • ►  11/18 - 11/25 (46)
    • ►  11/11 - 11/18 (78)
    • ►  11/04 - 11/11 (105)
    • ►  10/28 - 11/04 (97)
    • ►  10/21 - 10/28 (102)
    • ►  10/14 - 10/21 (90)
    • ►  10/07 - 10/14 (95)
    • ►  09/30 - 10/07 (115)
    • ►  09/23 - 09/30 (116)
    • ►  09/16 - 09/23 (103)
    • ►  09/09 - 09/16 (101)
    • ►  09/02 - 09/09 (94)
    • ►  08/26 - 09/02 (97)
    • ►  08/19 - 08/26 (83)
    • ►  08/12 - 08/19 (93)
    • ►  08/05 - 08/12 (88)
    • ►  07/29 - 08/05 (94)
    • ►  07/22 - 07/29 (85)
    • ►  07/15 - 07/22 (74)
    • ►  07/08 - 07/15 (98)
    • ►  07/01 - 07/08 (101)
    • ►  06/24 - 07/01 (93)
    • ►  06/17 - 06/24 (100)
    • ►  06/10 - 06/17 (105)
    • ►  06/03 - 06/10 (74)
    • ►  05/27 - 06/03 (101)
    • ►  05/20 - 05/27 (80)
    • ►  05/13 - 05/20 (81)
    • ►  05/06 - 05/13 (75)
    • ►  04/29 - 05/06 (58)
    • ►  04/22 - 04/29 (68)
    • ►  04/15 - 04/22 (80)
    • ►  04/08 - 04/15 (87)
    • ►  04/01 - 04/08 (77)
    • ►  03/25 - 04/01 (98)
    • ►  03/18 - 03/25 (62)
    • ►  03/11 - 03/18 (74)
    • ►  03/04 - 03/11 (78)
    • ►  02/26 - 03/04 (53)
    • ►  02/19 - 02/26 (58)
    • ►  02/12 - 02/19 (76)
    • ►  02/05 - 02/12 (71)
    • ►  01/29 - 02/05 (67)
    • ►  01/22 - 01/29 (68)
    • ►  01/15 - 01/22 (61)
    • ►  01/08 - 01/15 (76)
    • ►  01/01 - 01/08 (90)
  • ▼  2011 (4610)
    • ►  12/25 - 01/01 (93)
    • ►  12/18 - 12/25 (81)
    • ►  12/11 - 12/18 (68)
    • ►  12/04 - 12/11 (84)
    • ►  11/27 - 12/04 (31)
    • ►  11/20 - 11/27 (98)
    • ►  11/13 - 11/20 (89)
    • ►  11/06 - 11/13 (101)
    • ►  10/30 - 11/06 (118)
    • ►  10/23 - 10/30 (104)
    • ►  10/16 - 10/23 (151)
    • ►  10/09 - 10/16 (165)
    • ►  10/02 - 10/09 (163)
    • ►  09/25 - 10/02 (190)
    • ►  09/18 - 09/25 (178)
    • ►  09/11 - 09/18 (194)
    • ►  09/04 - 09/11 (178)
    • ►  08/28 - 09/04 (137)
    • ►  08/21 - 08/28 (150)
    • ►  08/14 - 08/21 (145)
    • ►  08/07 - 08/14 (155)
    • ►  07/31 - 08/07 (168)
    • ▼  07/24 - 07/31 (191)
      • பதவிக்கு அடிபிடி VVT நகரசபைத் தலைவர் நியமனம்சிக்...
      • நால்வருக்கு கனடாவில் பிணை,ஓசியன் லேடி கப்பலில் கடத...
      • நிரூபமா ராவிற்கு பிரியாவிடை அளிக்கும் வகையில் ஜனா...
      • போர்ச்சுகல் சிறுமி காஷ்மீரில் மீட்பு 4 ஆண்டுகளுக்க...
      • President: இளமையில் வெறுப்பை வளர்த்து விட்டு பின் ...
      • மோகன்லால் மமூட்டி விவகாரம் முடி மறைக்க முயற்சி?
      • கனடாவில் மனைவியை வெட்டி கொன்ற பஞ்சாபி கணவன்
      • தலைவராக இசையமைப்பாளர் தேவா செயலாளராக நடிகை சச்சு ...
      • பாமகவில் விடுதலை சிறுத்தைகள் பொதுக்குழுவில் முடிவ...
      • நீதிபதி தினகரன்:நீதித்துறை மீது நம்பிக்கையில்லை
      • தமிழகம் முழுவதும் போராட்டம் : ராமதாஸ் அறிவிப்பு
      • பதட்டத்தில் சேலம் வீரபாண்டி ஆறுமுகம் கைது எதிரொலி
      • முக ஸ்டாலின் திடீர் கைது...விடுதலை!
      • ஸ்டாலின் திடீர் கைது
      • கல்வி வெற்றிகரமான வியாபாரம் குழப்பத்தின் உச்சம்!
      • ஆசிரியர் அடித்து மாணவன் கொலை, காட்டுமிராண்டித்தனமா...
      • இடம் தேடி அலையும் "செம்மொழி இன்னொரு சமச்சீராக்காம...
      • மாடா? மடிக் கணினியா?
      • வீரபாண்டி ஆறுமுகம் மீண்டும் கைது; போலீசாருடன் தி.ம...
      • திருமாவளவன் தி.மு.க. கூட்டணியை விட்டு விலகுவது பற்...
      • மத வன்முறை தடுப்பு சட்டத்துக்கு ஜெயலலிதா கடும் எதி...
      • ஆனந்தசங்கரி: சம்பந்தர் பற்றி விமர்சனங்களைச் செய்ய ...
      • Ratna Jeevan Hoole ரதன ஜீவன் ஹூல் போலிஸ் விசாரணையில்
      • கலைஞர்: திமுகவை பழிவாங்குவதற்காக ஜெயலலிதா தவறான ஆய...
      • திமு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் அதிகாலையில் கைது
      • வடக்கு ஊடகவியலாளர்களுக்கு நாளை பயிற்சிப் பட்டறை
      • உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் இனந்தெரியாத நப...
      • மட்டு. வங்கி கொள்ளை சம்பவம்: வெளிநாடு தப்பிச்செல்ல...
      • அமெரிக்க அரசை விட அதிக பணம் வைத்துள்ள ஆப்பிள்!
      • கலைஞர் டிவி சொத்துக்கள் முடக்கம்?
      • 10 நிமிடம் தாமதமாக கையெழுத்து, வீரபண்டியரிடம் போலி...
      • யாழ் மக்களின் சாபக்கேடுதான் உதயன் .ஈ.பி.டி.பி யின்...
      • டக்ளஸ் தேவானந்தா ஆலயங்களில் வழிபடுவதை கொச்சைப்படுத...
      • ஹிஸ்புல்லாவின் வீடமைப்புத் திட்டம்.ஈரான் உதவியுடன்...
      • சம்பந்தன்: ஆனந்த சங்கரி,சித்தார்த்தன் போன்று டக்ளஸ...
      • Police: அந்தப் பெண் அழகாக இருந்ததால் கடத்தினேன் : ...
      • திமுகவைக் கண்டித்து நாளை மெட்ரிக் பள்ளிகள் போராட்டம்:
      • திமுகவின் மாணவர் ஸ்டிரைக் பிசுபிசுத்தது
      • லாட்டரி அதிபர் மார்ட்டின் கோர்ட்டில் சரண் இளைஞன் ப...
      • Jaffna கோஷ்டி மோதல் வானை நோக்கிச் சுட்டுக் கட்டுப்...
      • யாழில் மக்களை மிரட்டும் மினிவான்கள்,தம்பி மிச்சக்க...
      • திமுகவுக்குக் கண்டனம்.வகுப்புப் புறக்கணிப்புப் போர...
      • London speech எம்.ஏ. சுமந்திரன் Sumanthiran
      • ஜொள் ஹிந்த்! 34 வயதானா ஹீனா ரப்பானி பாகிஸ்தானின் ம...
      • லண்டனில் சுமந்திரன் கூறியமை தமிழ்க் கூட்டமைப்பின் ...
      • பாடசாலைகளை இன அடிப்படையில் வகைப்படுத்துவதை தவிர்க்...
      • ஹெபடைடிஸ் பி கல்லீரல் நோய்த் தடுப்பூசி இலவசம்: அமை...
      • சிங்கப்பூர் பெரிய தொழிலதிபர்கள் பட்டியலில் இந்தியர...
      • Jeyalalitha சாய ஆலைப் பிரச்னைக்கு ரூ.200 கோடியில் ...
      • பாகிஸ்தான் அணு ஆயுதம் தயாரிப்பதை தடுத்த அமெரிக்கா,...
      • ஸ்டாலின், அழகிரி, கனிமொழி...யார் பெறுவார் இந்த அரி...
      • வடக்கில் வெற்றிலை வேருன்றி விட்டதை மறுக்க முடியாது
      • சங்கராச்சாரியர் காதில் ஒரு கானாப் பாட்டு!?!ஓஷோ
      • இசை அமைப்பாளர்களுக்கும் கவிஞர்களுக்கும் ராயல்டி தர...
      • நடிகர் அஜய் தற்கொலை
      • புலி வேட்டைக்கு போன கோட்டா மஹாராஜா கார் ஏலம்
      • Subramaniam Swamy ஹார்வர்ட் மாணவர்கள் போர்க்கொடி.ச...
      • ஆக 5-க்குள் சமச்சீர் புத்தகங்களை வழங்க- அரசுக்கு உ...
      • எடியுரப்பா ராஜினாமா வெறும் 25 MLA க்களே ஆதரவு அதிர...
      • கப்பம் செலுத்தப்படாததால் பட்டனராசி கொலை
      • யாழில் குறையக்கூடிய3 ஆசனங்களை கொழும்பு போன்ற பல்த...
      • We should have appointed some qualified candidates...
      • 130 Tamil refugees held in Rajahmundry Andhra
      • Software வேகம். ஜங்க் புட், பிட்சா, ஆண் பெண் பேதமி...
      • ஹைடெக் கருப்பு பணப்பரிமாற்றம் நடப்பது எப்படி?
      • உலகின் மிகப் பெரிய தீவிரவாத, போதைப் பொருள் வங்கி இ...
      • சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி நீதிமன்ற...
      • தேவையில்லாமல் தற்போது பிரச்னையில் நாங்கள் சிக்கியி...
      • எடியூரப்பா பதவி விலக பாஜக அதிரடி உத்தரவு!சட்ட சபை ...
      • வீரபாண்டி ஆறுமுகம் - மு.க.அழகிரி சந்திப்பு.பரபரப்ப...
      • அதிமுக வழக்கறிஞர் ஒப்புதல் வாக்கு மூலம் அரசுக்கு ...
      • samacheer சமச்சீர்கல்வி samacheer Dance?
      • கடைந்தெடுத்த பொய்யை பெரியதாக வெளியிட்டிருக்கும் தி...
      • சஞ்சய் தத் மேடையில் நடிப்பதை விட சினிமாவில் நடிப்ப...
      • வியாபாரியை அரை நிர்வாணப்படுத்தி சித்ரவதை இன்ஸ்பெக்...
      • ஒரு பெண்ணிடம் ஒரு முறை மட்டுமே,நகராட்சி தி.மு.க., ...
      • கலைஞர் டெலிபோனையே ஒட்டுக்கேட்ட ஜாபர் சேட் அதிகாரி...
      • காங்கேசன் துறைமுக அபிவிருத்தி ஆரம்பம் இந்திய உயர்...
      • தேவேந்திரமுனை நடை பயணம் பருத்தித்துறை வெளிச்சவீட்ட...
      • புலிப் பயங்கரவாதத்தை நாமே தோற்கடித்தோம் - பொன்சேகா
      • ஜெயலலிதா, மோடிக்கு அல்கொய்தா கொலை மிரட்டல்!
      • தமிழர் ஒருவரை கனடாவிலிருந்து நாடு கடத்த உத்தரவு,யு...
      • 2 கோடி பெறுமதியான நகைகள் மீட்பு; கல்கிசையில் தமிழ்...
      • விநாயகமூர்த்தி முரளிதரன்: சுமந்திரன் தெரிவித்துள்ள...
      • நல்லூர் திருவிழாவில் இம்முறை தமிழ்ப் பொலிஸாரே கடமை...
      • President has a bigger mandate including from mino...
      • பஜரோவை வைத்தியசாலைக்கு தியாகம் செய்த அரச அதிபர் I...
      • வரதட்சிணை வழக்கு: சிரஞ்சீவி மருமகன் சரண் youtube
      • எல்லாத்துக்கும் காரணம் அட்டர்னி ஜெனரல் வாகனாவதி தா...
      • Air Mallu India? ஏர் 'மலையாள' இந்தியா
      • திமுக கூட்டணியிலிருந்து பாமக விலகல்-மாற்று அணி அற...
      • கலாநிதி மீது மோசடி புகார்.கேபிள் ஆபரேடரை கடத்தி மி...
      • தலிபான்கள் ஆடம்பர ஆடைகளுக்கு தீ வைப்பு,கலாசாரம் கா...
      • ஜெயலலிதாவின் தோழி சசிகலா பெங்களூரு கோர்ட்டில் ஆஜர்
      • நீதியின் முன் ராசாவின் குரல் அருண் ஷோரியும் தயாநித...
      • கறக்குற விஷயத்தில் கரெக்ட்டா இருக்கணும்.உடன்பிறவா
      • லாட்டரி தொழிலதிபரும் உடன்பிறவா ஏரியாவில் போய் நின்...
      • நாமதான் பெரிய மெஜோரிட்டிலே இருகொம்லே உடன்பிறவா வியாதி
      • தேர்தல் நிதி தராத கம்பனிக்கு பனிஷ்மென்ட் ,ஜெயாவின்...
      • கலைஞர்: உறவும் இல்லை பகையும் இல்லை கனிமொழி அமைச்ச...
    • ►  07/17 - 07/24 (147)
    • ►  07/10 - 07/17 (118)
    • ►  07/03 - 07/10 (136)
    • ►  06/26 - 07/03 (126)
    • ►  06/19 - 06/26 (131)
    • ►  06/12 - 06/19 (116)
    • ►  06/05 - 06/12 (137)
    • ►  05/29 - 06/05 (124)
    • ►  05/22 - 05/29 (90)
    • ►  05/15 - 05/22 (89)
    • ►  05/08 - 05/15 (64)
    • ►  05/01 - 05/08 (70)
    • ►  04/24 - 05/01 (37)
    • ►  04/17 - 04/24 (41)
    • ►  04/10 - 04/17 (30)
    • ►  04/03 - 04/10 (60)
    • ►  03/27 - 04/03 (49)
    • ►  02/20 - 02/27 (3)
    • ►  02/13 - 02/20 (8)
    • ►  01/02 - 01/09 (2)
  • ►  2010 (4237)
    • ►  12/19 - 12/26 (3)
    • ►  12/05 - 12/12 (84)
    • ►  11/28 - 12/05 (170)
    • ►  11/21 - 11/28 (179)
    • ►  11/14 - 11/21 (184)
    • ►  11/07 - 11/14 (177)
    • ►  10/31 - 11/07 (164)
    • ►  10/24 - 10/31 (194)
    • ►  10/17 - 10/24 (144)
    • ►  10/10 - 10/17 (154)
    • ►  10/03 - 10/10 (144)
    • ►  09/26 - 10/03 (128)
    • ►  09/19 - 09/26 (99)
    • ►  09/12 - 09/19 (140)
    • ►  09/05 - 09/12 (162)
    • ►  08/29 - 09/05 (172)
    • ►  08/22 - 08/29 (178)
    • ►  08/15 - 08/22 (133)
    • ►  08/08 - 08/15 (138)
    • ►  08/01 - 08/08 (138)
    • ►  07/25 - 08/01 (122)
    • ►  07/18 - 07/25 (120)
    • ►  07/11 - 07/18 (131)
    • ►  07/04 - 07/11 (121)
    • ►  06/27 - 07/04 (126)
    • ►  06/20 - 06/27 (77)
    • ►  06/13 - 06/20 (89)
    • ►  06/06 - 06/13 (91)
    • ►  05/30 - 06/06 (82)
    • ►  05/23 - 05/30 (81)
    • ►  05/16 - 05/23 (73)
    • ►  05/09 - 05/16 (30)
    • ►  05/02 - 05/09 (39)
    • ►  04/25 - 05/02 (21)
    • ►  04/18 - 04/25 (14)
    • ►  04/11 - 04/18 (23)
    • ►  04/04 - 04/11 (15)
    • ►  03/28 - 04/04 (19)
    • ►  03/21 - 03/28 (12)
    • ►  03/14 - 03/21 (14)
    • ►  03/07 - 03/14 (19)
    • ►  02/28 - 03/07 (18)
    • ►  02/21 - 02/28 (8)
    • ►  02/14 - 02/21 (4)
    • ►  02/07 - 02/14 (3)

கோபுரம் கழுவ போன தீவட்டிகள்

கோபுரம் கழுவ போன தீவட்டிகள்
வரலாற்று புனை கதை! சிபி பதிப்பக வெளியீடு - 150 ருபாய்

வாழ்வியல் சிந்தனைகள்

வாழ்வியல் சிந்தனைகள்

Sibi Pathippagam 1E North Street Athanur . Madurai 625503

Chozharajan Alangaram : விலை ரூ 220... இந்தியாவுக்குள் தபால் செலவு பதிப்பகத்தார் பொறுப்பு... வெளிநாடுகளுக்கு தபால் செலவு தனி... 8838211644 என்ற எண்ணுக்கு GPAY செய்து, இதே எண்ணுக்கு வாட்ஸாப்பில் முகவரியை அனுப்பவும்... அருகில் உள்ள QR CODEஐ ஸ்கேன் செய்தும் பணம் அனுப்பலாம்.

கடந்த வார செய்திகள்

 

  • தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய ரூ.25 ஆயிரம் கோடியில் க...
  • உரிமம் பெறாத லிப்டில் இருந்து தவறி விழுந்து இளைஞர்...
  • திமுக பூங்கோதை ஆலடி அருணாவை தோற்கடிக்க ஹரி நாடருக்...
  • ரஷிய அதிபர் ;விளாடிமிர் புட்டினுக்கு கைது வாரண்ட் ...
  • திருச்சி சிவாவை நேரில் சந்தித்த கே.என். நேரு
  • புதுசேரி அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் ...
  • சேர்ச்சுக்கு வரும் பெண்களுடன் ஆபாச வீடியோ: கன்னிய...
  • துக்ளக் சோ flashback : மோடி தான் பிரதராக வேண்டு...
  • நடிகை மீனாவை தனுஷ் திருமணம் செய்து கொள்ளப் போகிறார...
  • ஈவிகேஸ் இளங்கோவன் உடல்நிலை: மருத்துவர் பேட்டி!
  • திருச்சி சம்பவங்கள் ... பஹ்ரைன் நாட்டிலுருந்து தி...
  • நியூசிலாந்தில் நிலநடுக்கம்.. ரிக்டரில் 7.1 ஆக பதிவ...
  • ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு நெஞ்சுவலி - மருத்துவமனை...
  • திருச்சி சிவா அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் அடிதடி...
  • ஈரானில் பொதுவெளியில் நடனமாடிய பெண்களின் பாதுகாப்பு...
  • கொலையாளியை காட்டிக்கொடுத்த நாய் 4 KM மேடுபள்ளங்க...
  • பெருமாள் முருகன் எழுதிய 'பைர்' நாவல் -புக்கர் பரிச...
  • சவுக்கு சங்கர் எம்.எம்.அப்துல்லா இடையே நடந்த மோதல்...
  • நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியம் என்னவெனில்.....
  • பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கைது
  • The Elephant Whisperers: “ஆஸ்கர் விருது பெற்ற முதல...
  • ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அசுர சாதனை! நாட்ட...
  • CM சார் தேங்க்ஸ் .. பிரஷாந்த் கிஷோர் சொன்னதுமே.. ப...
  • பட்டாசு வெடித்ததால் அமைச்சரின் கார் கண்ணாடி உடைந்த...
  • நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது தெலுங்கு இ...
  • 13 மாநிலங்களில் காங்கிரஸ் தலைவர்களை மாற்ற முடிவு- ...
  • தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர் தாக்கப்பட்டதாக வீடியோ....
  • அங்கீகரிக்க முடியாது'.. தன்பாலின திருமணத்திற்கு ஒன...
  • பிரதமர் மோடி : எனக்கும், பாஜகவுக்கும் கல்லறை தோண்ட...
  • பா.ஜ.க.விடம் ஒருபோதும் பணிய மாட்டேன் - லாலு பிரசாத...
  • அதிரடி செய்திகள்
  • இலக்கியா செய்திகள்
  • soodram
  • epdpnews
  • jaffnamuslim
  • எழுகதிர் செய்திகள்
  • வீரகேசரி செய்திகள்
  • tamilmirror
  • ஹிரு செய்திகள்
  • தேசம்நெட் செய்திகள்
  • மலையக குருவி செய்திகள்
  • ceylonmirror
  • தாயகம்
  • infolanka.news
  • espncricinfo.live-cricket-score
  • தமிழ் மிரர் செய்திகள்
  • தினகரன் செய்திகள்
  • தினக்குரல் செய்திகள்
பட சாளரம் தீம். Blogger இயக்குவது.