சனி, 19 ஆகஸ்ட், 2017

தினகரனின் சிலிப்பர் செல் ?உலகின் ஊழல் மிகுந்த கட்சிகளில் 4 வது இடத்தில அதிமுக? போட்டோ ஷாப்?


அதிமுகவில் இருந்து சசிகலா குடும்பத்தை ஓரங்கட்டிவிட்டு ஈபிஎஸ் அணியும் ஓபிஎஸ் அணியும் இணைய நேரம் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் சசிகலாவை இன்று பெங்களூர் சிறையில் சந்தித்து பேசினார் டிடிவி தினகரன். ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி விசாரணை மற்றும் போயஸ் கார்டன் வேதா நிலையம் ஜெயலலிதாவின் அரசு நினைவிடமாக மாற்றப்படும் என்ற இரண்டு அறிவிப்பையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று அறிவித்தார். இதனையடுத்து ஓபிஎஸ் அணியும், ஈபிஎஸ் அணியும் ஒன்றாக இணைய உள்ளது. இந்த பரபரப்பான சூழலில் பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவை சந்திக்க அவரது பிறந்த நாளான இன்று சிறைக்கு சென்றார் டிடிவி தினகரன். சிறையில் சசிகலாவை சந்தித்து ஆலோசனைகளை பெற்ற தினகரன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய தினகரன், சசிகலா சில முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார். எனவே அடுத்தடுத்து ஆபரேஷன்கள் நடக்கும். ஜெயலலிதா மரணத்திற்கு விசாரணை கமிஷன் அமைத்துள்ளது எங்களுக்கு பின்னடைவு இல்லை. இதன் மூலம் சசிகலா மீது எந்த தவறும் இல்லை என்பதை நாங்கள் நிரூபித்து பத்தரை மாத்து தங்கமாக வெளிவருவோம் என கூறினார் தினகரன். மேலும், எடப்பாடி பழனிச்சாமி அணியில் எங்கள் ஆதரவு எம்எல்ஏக்கள் ஸ்லீப்பர் செல்கள் மாதிரி பலர் இருக்கின்றனர். மேலூர் பொதுக்கூட்டத்துக்கு வராதவர்கள் தேனியில் நடைபெறும் பொதுக்கூட்டத்துக்கு வருவார்கள் என்றார். வெப்துனியா

மே. வங்க உள்ளாட்சி: 148 வார்டுகளில் 140 வார்டுகளில் மம்தா பானர்ஜி பிரமாண்ட வெற்றி!

மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல்: மம்தா பானர்ஜி வெற்றி!மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, பாஜக-வைப் பின்னுக்குத்தள்ளி பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது.
மேற்கு வங்க மாநில உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 17) தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் மேற்கு வங்க மாநிலத்தின் ஆளும்கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய அளவில் வெற்றியை அடைந்துள்ளது. இதில் பாஜக பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தின் 7 நகராட்சிகளில் உள்ள 148 வார்டுகளில், ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 140 இடங்களை வென்றுள்ளது. மீதியுள்ள 8 இடங்களில் 6இல் பாஜக வெற்றி பெற்றுள்ளது. ஒன்றில் இடது சாரியும், கடைசி ஒன்றில் சுயேச்சை வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர்.
கிழக்கு மிட்னாபூர் மாவட்டம் பிர்பும், தெற்கு தினாஜ்பூர், ஜல்பாய்குரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 7 நகராட்சிகளில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

பி பார்ம் கையெழுத்து அதிகாரம்: பன்னீர் அணியின் பலத்த செக்!

‘பி பார்ம்’ கையெழுத்து அதிகாரம்: பன்னீர் அணியின் பலத்த செக்!
“7.30 மணிக்கு வர்றதா சொன்னாங்க... 8.00 ஆச்சு, 8.45 ஆச்சு... இன்னும் யாருமே வரலையே... எனக்கு கிச்சன்ல வேலை இருக்கு எப்பதான் வருவீங்களோ?” என்று ஃபேஸ்புக்கில் ஓர் இல்லத்தரசி நேற்று இரவு போஸ்ட் போடும் அளவுக்கு தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களும் நேற்று ஆகஸ்ட் 18 இரவில் மெரினா ஜெயலலிதா நினைவிடத்திலேயே கண்வைத்திருந்தனர்.
காரணம், பிப்ரவரி 7ஆம் தேதி இரவு இதேபோலத்தான் பன்னீர்செல்வம், ஜெயலலிதா நினைவிடத்துக்குவந்து தியானத்தில் ஈடுபட்டு அதிமுக-வின் பிளவுக்கு வித்திட்டார். இந்த நிலையில் 194 நாள்கள் கழித்து மீண்டும் ஜெ. நினைவிடத்திலேயே இரு அணிகளும் முறைப்படி இணைப்பு விழா நடத்துவதாக பரவிய தகவலால் நேற்று மாலை முதலே மெரினாவில் பரபரப்பு ஏற்பட்டது.

ராமதாஸைச் சந்திக்கிறார் திருநாவுக்கரசர்!

தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர், தன் மகள் திருமண விழா அழைப்பிதழைப் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் கட்சியினருக்குக் கொடுப்பதற்கு இன்று ஆகஸ்ட் 19ஆம் தேதி புதுச்சேரி வருகிறார். அத்துடன் தைலாபுரம் தோட்டத்தில் மருத்துவர் ராமதாஸைச் சந்தித்து திருமண விழா அழைப்பு கொடுக்க அப்பாய்ட்மென்ட் பெற்றுள்ளார்.
ஏற்கெனவே பாமக தலைமை, பாஜகவைத் தள்ளிவைத்து வரும் நிலையில் திருநாவுக்கரசு, ராமதாஸ் சந்திப்பு கூட்டணிக்கான அச்சாரம் என்கிறார்கள் பாமக-வினர்.
பாஜக அரசு கொண்டுவரும் மக்களுக்கு எதிரான திட்டங்களுக்கு எதிராக பாமக வலிமையான போராட்டங்களை நடத்தி வருகிறது. சமீபகாலமாக பெட்ரோலிய கெமிக்கல் தொழிற்சாலைக்கு எதிராகப் பலவிதமான போராட்டங்களை நடத்திவருகிறார்கள். இந்த நிலையில் திருநாவுக்கரசர் குடும்ப நிகழ்ச்சி, தேர்தல் கூட்டணி களமாக அமையும் என்கிறார்கள் காங்கிரஸ் பிரமுகர்கள். minnambalam

இலங்கை கடற்படை தளபதியாக தமிழர் நியமனம் ! ரியல் அட்மிரல் சின்னையா !

கடற்படையின் புதிய தளபதியாக ரியல் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் சற்று முன்னர் இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடற்படையின் 21ஆவது தளபதியாக ரியட் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், கடற்படையின் தற்போது தளபதியாக பதவி வகிக்கும் வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பாதுகாப்பு படைகளின் பிரதானியாக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாம் இணைப்பு இலங்கையில் இடம்பெற்ற மூன்று தசாப்த கால யுத்தத்திற்குப் பின்னர் முதன்முறையாக இலங்கையின் முப்படைகளில் ஒன்றான கடற்படைக்கு தமிழர் ஒருவரை தளபதியாக நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக அணிகள் இணைப்பு முயற்சி தோல்வி ... பன்னீர்செல்வம் புதிய பதவி கோரிக்கை!

அதிமுகவின் இரு அணிகளும் இணைய விருப்பதாக தகவல்கள் பரவின. ஜெ.நினைவிடத்தில் அணிகள் இணைப்பை நடத்தி முடித்ததும் கட்சி தலைமை செல்வது என்று முடிவெடுத்திருந்தானர். இதற்கிடையில் இரு தரப்பினர் இடையேயும் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளது. அணிகள் இணைப்பு தொடர்பாக முதல்வர் பழனிச்சாமியுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர்கள் புறப்பட்டுவிட்டனர். ஓபிஎஸ் அணியின் ஆலோசனையும் நிறைவு பெற்று விட்டது. ஆனாலும் இன்னமும் இரு அணிகளும் ஏன் இணையாமல் இருக்கின்றன. ஆட்சியிலும், கட்சியிலும் பதவி, பொறுப்பை பிரித்துக்கொடுப்பதில் ஏற்பட்டுள்ள குழப்பம்தான் அணிகள் இணைப்பின் தாமதத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அதிமுக அணிகள் இணைப்பில் இழுபறி ஏற்பட்டுள்ளதால் இரு அணிகளும் இணையும் என்ற எதிர்ப்பார்ப்பில் மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தில் கூடிய எம்.எல்.ஏக்கள் கலைந்து செல்கின்றனர்.நக்கீரன்

‘வேதா நிலையம்’ நினைவு இல்லப்பணி தீவிரம்.. எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை!

சென்னை, ஆக.18:முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் உள்ள ‘வேதா நிலையம்’ அரசுடமையாக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததை தொடர்ந்து, அந்த வீடு காவல் துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தினகரனால் நியமிக்கப்பட்ட தனியார் பாதுகாப்பு படையினர் வெளியேற்றப்பட்டனர். வீட்டில் இருந்த மற்றவர்களும் வெளியே செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். வீட்டிற்குள் செல்பவர்கள் காவல் துறையின் பரிசோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்படுகின்றனர்.‘வேதா நிலையம்’ நினைவு இல்லமாக மாற்றப்பட்டதற்கான பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி மரணமடைந்தார். இதனைத் தொடர்ந்து அவரது அண்ணன் மகள் தீபா வீட்டிற்குள் செல்ல முயன்றதை தொடர்ந்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. ஆனால் ஜெயலலிதா இல்லாத வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு எதற்காக போடப்பட்டது என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு அங்கிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது.இதனைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனியார் பாதுகாப்பு அதிகாரிகளை நியமித்து இருந்தார்.

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

BBC :ஸ்பெயின் பார்சிலோனா .. வேன் மோதி 13 பேர் கொல்லப்பட்டனர்.. 50 பேர் காயம்

பார்சிலோனாவில் உள்ள புகழ்பெற்ற லாஸ் ராம்ப்ளாஸ் சுற்றுலா பகுதியில் கூட்டத்தில் வேன் மோதிய சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 50 பேர் காயம் அடைந்தனர். அதில் 10 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். அந்த பகுதியில் பாதசாரிகள் நடக்கும் பகுதியில் வேகமாக புகுந்த வேன், அங்கிருந்தவர்கள் மீது மோதி நிற்காமல் சென்றது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், "அந்த வேன் நிற்கும் முன்பாக, பொதுமக்களை குறி வைத்தே வந்தது" என்று தெரிவித்தனர். பார்சிலோனாவில் இருந்து வெளிவரும் எல் பாய்ஸ் நாளிதழ், "டஜன் கணக்கான மக்கள் மீது மோதிய பிறகு, அந்த வேன் ஓட்டுநர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடி விட்டார்" என கூறியுள்ளது. இந்த சம்பவத்தை பயங்கரவாத தாக்குதல் கோணத்தில் உள்ளூர் காவல்துறையினர் விசாரித்து வருவதாக வேறு சில ஊடகங்கள் கூறியுள்ளன. மேலும், ஒன்று அல்லது இரண்டு ஆயுததாரிகள் அங்குள்ள ஒரு மதுபான விடுதிக்குள் சென்று ஒளிந்துள்ளதாகவும் அவை கூறியுள்ளன. அந்த பகுதியில் பணியாற்றி வரும் ஸ்டீவன் டர்னர் பிபிசியிடம் கூறுகையில், "ராஸ் ரம்ப்ளாஸில் மக்கள் மீது வேன் மோதியதை அலுவலகத்தில் இருந்தவர்கள் பார்த்தனர்" என்று கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் உண்மையான படைப்புக்கு வாழ்த்துகள் ராம்! - தரமணி விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு  :   தரமணி அமைந்திருக்கும் சென்னையின் ராஜிவ் காந்தி சாலை, சென்னையின் எந்த  இயல்புக்கும் இலக்கணத்துக்கும் ஆட்படாத ஒரு விநோதப் பிரதேசம்..! சென்னை... ஏன் தமிழகமே மின்வெட்டு இருளில் மூழ்கிக் கிடக்கும்போது, சென்னையின் ஓ.எம்.ஆர் அலுவலகங்கள் 24*7 மின்னொளி/குளிர்சாதனத்தில் திளைத்துக் கிடக்கும். உலகின் அத்தனை கால நேர அட்டவணைப்படியும் ஏதேனும் ஒரு குழு பரபரத்துக் கிடக்கும். ஐ.டி. பூங்கா வேலைக்கு புரசைவாக்கம் வீட்டிலிருந்து கிளம்பும் ஆண்/பெண், அலுவலக வளாகத்துக்குள் நுழைந்ததும் அமெரிக்க மனநிலைக்கு மாறுவார்கள். ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு மில்லியன் கணக்கில் சம்பளம் வாரி வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும். நூற்றுக்கணக்கில் வேலைக்கு ஆள் எடுக்கப்படும். ஒரே நாளில் பலரை துரத்தவும் செய்யும். ஆனால், அவற்றைக் கண்காணிக்க/நெறிமுறைப்படுத்த கொட்டிவாக்கத்தில் ஒரு லேத் பட்டறை தன் தொழிலாளிகளைக் காப்பாற்றும் தொழிலாளர் சட்டங்கள் எதுவும் கூட ஓ.எம்.ஆரில் கை கொடுக்காது.

இந்து பத்திரிகை .. திராவிட இயக்க மலர் வெளியிடப் போகிறதாம் .. நடுநிலை வேஷம்....

Marx Anthonisamy: நடுப்பக்க நாராயணருடன் ஒரு உரையாடல்.. நான்கு நாட்களுக்கு முன் ஒரு தொலைபேசி அழைப்பு.
"சமஸ் பேசுறேன் சார்"
எதிர்பார்க்கவில்லை. யார் தமிழ் இந்து சமசா எனக் கேட்டு உறுதிப் படுத்திக் கொண்டேன். எப்படி இருக்கீங்க ஹெர்னியா ஆபரேஷன் எல்லாம் முடிந்து குணமாயிட்டீங்களா என விசாரித்தேன். என்ன இருந்தாலும் நான் பணி செய்த கல்லூரியில் படித்த மாணவர் அல்லவா. பாசம்..
விஷயத்திற்கு வந்தார். கலைஞர் பொன் விழா வை ஒட்டி திராவிட இயக்கச் சிறப்பிதழ் ஒன்று வெளியிடுகிறார்களாம். இளைஞர்களுக்கு திராவிட இயக்கம் பற்றிய சரியான புரிதலை உருவாக்குவது நோக்கமாம். கட்டுரை ஒன்று கேட்டார்.
நன்றி சொல்லிவிட்டு நான் சொன்னது:
" மன்னிக்க வேண்டும். நான் உங்கள் இதழின் மறைமுக அஜென்டா பற்றியும் அதில் நிரப்பப் பட்டுள்ள இந்துத்துவ ஆதரவு சக்திகள் குறித்தும், நீங்கள் உட்பட, தொடர்ந்து விமர்சித்து வருகிறேன். என்னைப் பொருத்த மட்டில் தினமலர் அல்லது விஜயபாரதம் ஆகியவற்றை விட உங்கள் பத்திரிகை ஆபத்தானது என்பது என் கருத்து. அவை வெளிப்படையாக இந்துத்துவத்தை ஆதரிப்பவை.

ஜெயலலிதாவின் ஆவியை பாட்டிலில் அடைத்து சமுத்திரத்தில் .. ஜெ. ஆவி ஹிட் லிஸ்ட்டில் 27 பேர்! அடேய் அடேய்...

விகடன் :”அவர் கண்களை மூடியபடி, வேகமாக மந்திரங்களை ஜெபித்தபடி பிரசன்ன சோழிகளை உருட்டிவிட்டார். நேரம் ஆக ஆக மந்திர உச்சாடனம் வேகம் பெற்றது. அரை மணி நேரம் ஓடியிருக்கும். கண்களைத் திறந்தார். ‘‘ஜெயலலிதாவின் ஆவியை அழைத்து, நடப்புத் தமிழக அரசியல் நிலவரம் குறித்து விரிவாகப் பேசினேன்’’ என்றார்.

ஸ்ரீவேங்கட சர்மா... பிரசன்ன மந்திர ஜோதிடர். பூர்வீகம், பாலக்காடு. கோவை சிங்கநல்லூரில் தற்போது வசிக்கிறார். கடந்த 16 வருடங்களாக ஸ்ரீமஹாபிரத்யங்கரா தவப் பீடத்தை நடத்தி வருகிறார். ஏற்கெனவே ஒருமுறை, சென்னையில் பிரேத அலைகள் (ஆவிகள்) எங்கெங்கே அலைகின்றன என்பதைக் காட்டுவதற்காக ஆந்தையாருடன் ராத்திரி ரவுண்ட்-அப் சென்ற அதே தாடிக்காரர். அவரிடம் பேசினோம்.
“ஜெயலலிதாவுக்காக ஏற்கெனவே ஒரு பூஜை நடத்தினீர்களே?”

“ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது எனது குருநாதர், சில மந்திர ஜெபங்களை அவருக்காக திருவண்ணாமலையிலிருந்து துவக்கி நடத்தச்சொன்னார். பிறகு, அந்த மந்திரப் பலன்களை நேரடியாக ஜெயலலிதாவிடம் போய்த் தரச் சொன்னார். அதற்காக போயஸ் கார்டன் சென்றேன். சங்கரலிங்கம் என்கிறவரிடம் தந்துவிட்டுப்போகச் சொன்னார்கள்.

லண்டன் ஒருபாலின இந்து திருமணம்

Kalavati Mistry and Miriam Jefferson met more than 20 years ago on a ... in what is believed to be the UK's first interfaith lesbian wedding.
லண்டன்: பிரிட்டனில், ஓரினச் சேர்க்கையாளர்களான இரு பெண்கள், ஹிந்து முறைப்படி திருமணம் செய்தனர். ஐரோப்பிய நாடான பிரிட்டனில் வசித்து வரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண், கலாவதி, 48. அமெரிக்காவின் டெக்சாசைச் சேர்ந்த பெண், மெ
ரிம் ஜெபர்சன். இவர்கள், ஓரினச் சேர்க்கையாளர்களாக, 20 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தனர்.
இருவரும், பிரிட்டனின், லிசெஸ்டர் நகரில், சமீபத்தில், ஹிந்து முறைப்படி திருமணம் செய்தனர்.மந்திரம் முழங்க, தாலி அணிவித்து, மாலை மாற்றி, இருவரும் திருமணம் செய்தனர். இதில், அவர்களது நண்பர்கள் பங்கேற்றனர்.

நடிகர் அல்வா வாசு காலமானார் .... 900 படங்களுக்கு மேல் நடித்தவர் ...

 தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்த அல்வா வாசு கல்லீரல் பாதிப்பு காரணமாக மதுரையில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலமானார். நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நலக் குறைவால் காலமானார் மதுரை: தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்த அல்வா வாசு கல்லீரல் பாதிப்பு காரணமாக மதுரையில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலமானார். தமிழில் 900 படங்களுக்கு மேல் நகைச்சுவை கதாபாத்திரங்கள், குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அல்வா வாசு. இவர் இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். பின்னர் நகைச்சுவை, குணச்சித்திர நடிகரானார். `அமைதிப்படை', ரஜினிகாந்தின் `அருணாச்சலம்', `சிவாஜி', நடிகர் சத்யராஜ் உள்பட பல நடிகர்களின் படங்களில் இவர் நடித்த காட்சிகள் பிரபலம்.

ஜெர்மனி .. தமிழ் பெண்ணை குத்தி கொன்று சூட்கேசில் அடைத்த நைஜீரியா அகதி!

ஜேர்மனியில் தமிழ் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஜேர்மனியில் புகலிடம் கோரிய நைஜீரிய நாட்டவர் ஒருவர் தனது காதலியான தமிழ் பெண் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். என்டனி எனப்படும் நைஜீரிய நாட்டவரே இந்த கொலை செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 22 வயதான ஜேர்மன் மாணவியான சோபிக்கா பர்மநாதன், 28 வயதான என்டனியினால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டதாக நேற்றைய தினம் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளார். சோபிக்கா பர்மநாதன் அகதிகளுக்கான தன்னார்வ பணியில் ஈடுபடுவதால் “Angel of Ahaus” என உள்ளூர் மொழியில் அழைக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது. என்டனியின் முழு பெயரை ஜேர்மன் பொலிஸார் வெளியிடவில்லை. ஜேர்மன் பத்திரிகை ஒன்று வெளியிட்ட அறிக்கைக்கமைய, என்டனி நீதிமன்றத்தில் ஊமையாக இருந்துள்ளார்.

வியாழன், 17 ஆகஸ்ட், 2017

குத்தகை விவசாயிகளாகும் கார்ப்பரேட்டுகள் !

2016 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மோடி அரசு ”மாதிரி விவசாய நிலக் குத்தகைச் சட்டம்” ஒன்றை வெளியிட்டது. அனைத்து மாநிலங்களும் இந்த மாதிரிச்சட்டத்தின் அடிப்படையில் தமது குத்தகைச் சட்டங்களை திருத்த வேண்டுமென்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
  • விவசாயத்தில் உற்பத்தித் திறனை மேம்படுத்துவது;
  • சமத்துவத்தை கொண்டு வருவது;
  • விவசாயிகளுக்குக் கிடைக்கும் வேலைவாய்ப்புகளைப் பன்முகப்படுத்துவது;
  • கிராமப்புற பொருளாதாரத்தை விரைவாக மாற்றியமைப்பது.
ஆகியவையே இந்தப் புதிய சட்டத்தின் நோக்கங்கள் என்று பூசி மொழுகப்பட்ட மொழியில் சொல்கிறது நிதி ஆயோக். இந்தச் சட்டத்தினால் ஏற்படப் போகும் விளைவுகள் என்னென்ன, அரசின் உண்மையான நோக்கம் என்ன என்பதைப் பார்க்கலாம்.

லதா ரஜினியின் ஆஸ்ரம் பள்ளி மூடப்பட்டது ஏன் ? சிஸ்டம் சரியில்லையா ரசனி ?

துறவறத்தின் குறியீடான “ஆஸ்ரம்” தான் அம்மையாரின் பள்ளியின் பெயரும் கூட. அதனால் மற்ற பள்ளிகளை விட பணத்தை அதிகம் இங்கே துறக்க வேண்டும்.
கோடிக்கணக்கில் வருவாயைக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த் “சிஸ்டம் சரியில்லை” என்று அரசியல் சூழல் குறித்து குறைபட்டுக் கொண்டார். தேவைப்பட்டால் சிஸ்டத்தை மாற்ற போருக்கு வருவேன் என்றார். பிறகு காலா, எந்திரன் 2.0 படப்பிடிப்புகளில் கலந்து கொண்டார். நல்ல விளம்பரமும் கிடைத்தது.
அன்னாரின் துணைவியார் “பாபா” படம் வெளிவரும் போதே பாபா டாலர் எனும் செயினைக் கூட ரசிகர்களுக்கு விற்க முயன்ற முதலாளி. டாலரை விட கல்வித் தொழிலில் நிறைய வருமானம் வருமென்பதால் இரண்டு பள்ளிகளை நடத்தி வருகிறார். துறவறத்தின் குறியீடான “ஆஸ்ரம்” தான் அம்மையாரின் பள்ளியின் பெயரும் கூட. அதனால் மற்ற பள்ளிகளை விட பணத்தை அதிகம் இங்கே துறக்க வேண்டும்.

இரசியா - போட்டியில் பழுதாகி வெளியேற்றப்பட்டன இந்திய இராணுவ டாங்கிகள் !

ரசியாவில் உள்ள அலாபினோ பகுதியில் கடந்த ஜூலை 29 முதல் சர்வதேச இராணுவ விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்தியா உட்பட 19 நாடுகள் பங்கேற்றன. முதல் சுற்றுப் போட்டிகளில் இந்திய இராணுவ டாங்கிகள் வெற்றி பெற்றன. ஆனால் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற போட்டியில் பங்கேற்ற இந்திய இராணுவத்தின் டாங்கிகள் போட்டியின் போதே பழுதாகி போட்டியில் தகுதியிழந்து வெளியேற்றப்பட்டன. டில்லியில் அணிவகுக்கும் டி-90-பீஷ்மா ரக டாங்கிகள்

ஸ்டாலினுக்கு தெரியாமல் சபரீசன் தினகரன் கோஷ்டியோடு ரகசிய பேச்சு ... ரசிக்காத திமுக பிரமுகர்கள்!

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என தினகரன் தொடர்ந்து பல்வேறு பகீரத முயற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டார். நேற்று இரவு தினகரன், தனது வீட்டில் செந்தில் பாலாஜி, பழனியப்பன், வெற்றிவேல் என முக்கிய நிர்வாகிகள் சிலருடன் ஆலோசனை மேற்கொண்டாராம். அப்போது, ‘நான் எது சொன்னாலும் கேட்க தயாராக இருப்பது 8 எம்.எல்.ஏக்கள் மட்டும்தான். நமக்காக இப்போ வந்த மீதி இருக்கும் 12 பேரும் கூட பணத்துக்காகத்தான் வந்தாங்க. அவங்க எந்த நேரத்துல எப்படி மாறுவாங்கன்னு தெரியாது. அவங்களை நம்பி பிரயோஜனம் இருக்குமான்னு எனக்கு தெரியலை. இப்படியே போயிட்டு இருந்தால், இந்த ஆட்சிக்கு எதிராக எதையும் செய்யவே முடியாது. திமுக தரப்பில் இருந்து நமக்கு இருக்கும் சப்போர்ட் கூட நம்ம ஆட்கள்கிட்ட இருந்து இல்ல..’ என்று வேதனையோடு சொன்னாராம் தினகரன். தினகரன் இப்படி பேசியதற்கு காரணம் இருப்பதாக சொல்கிறார்கள்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தினகரனுக்கு நெருக்கமான ஒருவர் திண்டுக்கல் போயிருக்கிறார். அங்கே திமுகவின் முக்கிய பிரமுகர் ஒருவரை சந்தித்திருக்கிறார். ‘நாம எல்லாம் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவங்க. ஆட்சியை கலைக்க நாங்க முயற்சி செஞ்சிட்டு இருக்கோம். அதுக்கு உங்க ஒத்துழைப்பு தேவை..’ என்று சொன்னாராம்.

அம்மாவின் புகைப்படம் லீக் .. பார்த்தால் மக்கள் கதறி விடுவார்கள்

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் இருந்த நாள்கள் மர்மமானவை என்றும் அவரது மரணத்தின் காரணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றும் மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் பல்வேறு கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற கடந்த வருடம் செப்டம்பர் 22ஆம் தேதி முதல் டிசம்பர் 5ஆம் தேதி வரை நடந்தவற்றை விசாரணை செய்ய வேண்டும் என்றும் அப்போது அனைத்துமே சசிகலா கட்டுப்பாட்டில்தான் நடந்தன என்றும் ஓ.பன்னீர் அணியினர் இன்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதற்கிடையே சசிகலாவின் தம்பி திவாகரனின் மகன் ஜெயானந்த் கடந்த ஏப்ரல் மாதமே தனது ஃபேஸ்புக்கில், ‘கொலைப் பழி சுமத்தியும் அம்மா அவர்களின் சிகிச்சை படத்தை வெளியிட வில்லை. பச்சை கவுன் உடையில் அம்மாவின் எதிரிகள் அதை பார்க்கக் கூடாது என்பதே காரணம். இது தியாகத் தலைவி சின்னம்மாவின் செயல்’ என்று பதிவிட்டிருந்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது ஜெயலலிதா சவப்பெட்டியில் இருப்பதைப் போல ஓ.பன்னீர் அணி பிரசாரம் செய்ததை அடுத்து ஜெயானந்த் இவ்வாறு பதிவிட்டிருந்தார்.

கிணறு ! கிராம மக்களை ஏமாற்றிய பன்னீர்செல்வம் .. லட்சுமிபுரம் மக்கள் போராட்டம்

கிணறு விவகாரம்: ஓ.பி.எஸ்.ஸுக்கு எதிராகப் போராட்டம்!
முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்திற்குச் சொந்தமான கிணற்றை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி லட்சுமிபுரம் கிராம மக்கள் மீண்டும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் பகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி பெயரில் தென்னந்தோப்பு உள்ளது. இங்கு 2 மிகப்பெரிய கிணறுகள் உள்ளன. மேலும் புதிதாக ஒரு கிணறு வெட்டும் பணி நடைபெற்று வந்தது. இதனால் ஊராட்சிக்கு குடிநீர் எடுக்கும் கிணற்றில் தண்ணீர் வற்றத் தொடங்கியதாக கூறப்படுகிறது. ஊராட்சியில் குடிநீர் பற்றாக்குறை நிலவியது.
இதனால் கிணற்றை ஊராட்சியிடம் ஒப்படைக்கக் கோரி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு 3 மாதங்களுக்குக் கிணற்றில் இருந்து இலவசமாகத் தண்ணீர் எடுத்துக்கொள்ளவும், கிராமத்தினர் அந்த நிலத்தை வாங்கினால் கிணற்றை தானமாக தருவதாகவும் ஓ.பி.எஸ். தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

உபி மருத்துவ மனை நிதி 2016-17 ஆண்டில் 15.9 கோடியிலிருந்து, 7.8 கோடியாக குறைக்கப்பட்டது.

மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைக்கான ஆண்டு நிதி நிலை ஒதுக்கீட்டை பாதியாக குறைத்த ஆதித்யநாத். கோரக்பூர் மருத்துவமனைக்கான ஒதுக்கீடு 2016-17 ஆண்டில் 15.9 கோடியிலிருந்து, 7.8 கோடியாக குறைக்கப்பட்டது. சாமியார் பயலையெல்லாம் சி.எம் ஆக்குனா இப்படித்தான் இருக்கும்

வாஞ்சிநாதன் ! முத்துராமலிங்க தேவர் ! மறைக்கப்பட்ட வரலாறுகள் முகநூல் / தமிழ் இந்து பொழுது போக்குகள் ..

தமிழறிஞர் பொ. வேல்சாமி தனது முகநூலில் எழுதிய பதிவு: ஜவஹர்லால் நேருவிற்கு தமிழ் இலக்கியத்தை அறிமுகப்படுத்தினேன்…. நண்பர்களே…. ஜவஹர்லால் நேரு ஒருமுறை தமிழ்நாட்டிற்கு வருகை தந்தபோது தமிழ்மொழியின் சிறப்பைப் பற்றி கேள்வியுற்று அதைப்பற்றி தெரிந்துகொள்ள ஆவல் கொண்டார். அப்பொழுது நண்பர்கள் என்னைச் சிபாரிசு செய்தார்கள். நேருவுக்கு நான் தான் தமிழ்மொழியின் வரலாற்றுப் பெருமைகளைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தேன். தமிழகத்தில் என்னிடம் தமிழின் வரலாற்றுச் சிறப்பைப் பற்றிய செய்திகளை கேட்டுக் கொண்டார் நேரு. பின்னர் வங்க இலக்கிய வரலாறு என்ற நூலுக்கு ஒரு முன்னுரை எழுதுகின்றார். அந்த முன்னுரையில் இதைப் பற்றி குறிப்பிடுகின்றார். அதன் பின்பு நேரு அவர்கள் என்னிடம் தொலைபேசியில் பேசும்போது, அவரை நான் நேரு மாமா என்றுதான் கூப்பிடுவேன். காரணம் எனக்கு வயது ஐந்து.
குறிப்பு
உண்மையில் நேரு அவர்களுக்கு தமிழ்மொழியின் வரலாற்றுச் சிறப்பைப் பற்றி கூறியவர் பள்ளியக்ரஹாரம் அறிஞர் கந்தசாமி பிள்ளை அவர்கள் என்பதை பேராசிரியர் பாவலரேறு ச.பாலசுந்தரம் ஐயா அவர்கள் என்னிடம் கூறினார்.
முரளிதரன் காசி விஸ்வநாதன் அவர்களுக்கு நன்றி.
எழுத்தாளர் வாசுதேவன் தனது முகநூலில் எழுதிய பதிவு:
வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகள்..
முத்துராமலிங்க தேவர் அவர்கள் பால்ய பருவத்தில் தவக்கோலத்தில் இருந்தபோது, அவருடைய அன்னை தேவரின் தேஜஸ் முகத்தை பார்த்து தன் குலதெய்வ கோவில் பூசாரி ஒச்ச தேவரிடம் அழைத்துப்போனார்…பூசாரி அம்மையாரை உச்சிமுகர்ந்து, இது சாதாரண குழந்தை இல்லை… தாய்க்கு பெருமை சேர்க்கும் குழந்தை என்றவர், அந்த குழந்தையின் காதில் ரகசியமாக ஒரு கட்டளையிட்டார்….

கர்நாடகாவில் இந்திரா கேன்டீன்... காலை உணவு 5... மதிய உணவு 10 ரூபாய்

பெங்களூரு: தமிழகத்தில் செயல்படும் அம்மா உணவகம் போல், காங்கிரஸ் ஆட்சி நடக்கும் கர்நாடக மாநிலம் பெங்களூரில், இந்திரா உண வகத்தை, அந்த கட்சியின் துணைத் தலைவர் ராகுல், நேற்று திறந்து வைத்தார்.
 கர்நாடக மாநிலத்தில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் உள்ள ஏழைகளுக்கு,மாதந் தோறும், 'அன்ன பாக்யா' திட்டத்தின் கீழ்,7 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. சுதந்திர தின விழாவில் பேசிய, முதல்வர் சித்த ராமையா, 'ஏழை மக்களின் பசியைப் போக்க, 100 கோடி ரூபாய் செலவில், மலிவு விலை உணவகங்கள் திறக்கப்படும்' என்றார். இதையடுத்து, பெங்களூரில் நேற்று, முன்னாள் பிரதமரும், காங்.,மூத்த தலைவருமான, .மறைந்த, இந்திரா பெயரில், 'இந்திரா உணவகம்' துவங்கப் பட்டது. இந்த உணவகத்தை, காங்., கட்சி யின் துணைத் தலைவர் ராகுல் துவக்கி வைத்து, அங்கு வழங்கபட்ட உணவை சுவைத்தார்இந்த உணவகத் தில், காலை உணவு, ஐந்து ரூபாய்க் கும், மதியம் மற்றும் இரவு உணவு, 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி : ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்கப்படும்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டார். அதற்குப் பிறகு முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ''ஜெயலலிதா இறப்பு குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும். விசாரணை ஆணையம் ஜெயலலிதா இறப்பு குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்படுகிறது. ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவிடமாக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பிலும், பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கோரிக்கை எழுந்துள்ளது. வேதா நிலையம் அரசு நினைவிடமாக மாற்றப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும்'' என்று முதல்வர் தெரிவித்தார். தினகரன்

புறக்கணிக்கப்படும் தென்மாவட்டங்கள் ... இந்து பத்திரிகையின் ஆய்வு!

கடந்த பத்து ஆண்டுகளாக  தெற்கு மாவட்டங்கள் புறக்கணிக்க படுவதாக   குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. அதைக் காதுகொடுத்துக் கேட்கத்தான் எந்தக் கட்சிக்கும் நேரமில்லை! ஒரு பயணம் போதும்: தெற்கு எந்தளவுக்குப் பின்தங்கியுள்ளது என்பதை அறிய ஊர் ஊராகப்போய் ஆய்வு நடத்தவேண்டிய அவசியமில்லை. ஒரே ஒரு ரயில் பயணம் போதும். சென்னையிலிருந்து திருச்சி வரையில் இரட்டை ரயில் பாதையில் சூப்பர் ஃபாஸ்ட்டில் பயணிப்போர், அதே வேகத்தில் தெற்கே கன்னியாகுமரிக்கோ, ராமேஸ்வரத்துக்கோ போய்வர முடியாது. காரணம், இரட்டை ரயில் பாதை இடையிலேயே நின்றுவிடும். சென்னைக்குத் திரும்பிச் செல்ல, ஒரு மாதத்துக்கு முன்பே ரயிலில் முன்பதிவு செய்தால்தான் உண்டு.
சாலை மார்க்கமாக சென்னை - கன்னியாகுமரிக்கு நான்குவழிச் சாலையில் செல்வோர், மதுரைக்கு வந்ததும் ‘எங்கே ரோட்டக்காணோம்?’ என்று தேட வேண்டிய நிலை. காரணம் என்.எச் - 47-ல் மதுரையிலிருந்து திருமங்கலம் வரை சாலை துண்டு விழுந்துவிட்டது. இன்று நேற்றல்ல கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தச் சாலை இப்படித்தான் சபிக்கப்பட்டுக் கிடக்கிறது. சமீபத்தில் நடந்த சட்டமன்ற கூட்டத்தில், ‘தயவுசெய்து முதல்வர் அவர்கள், மதுரை ரிங்ரோட்டில் காரில் பயணிக்க வேண்டும்’ என்று திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கெஞ்சிக்கேட்டதன் அர்த்தம் நேரில் பார்த்தால்தான் புரியும்.

உ . பி- 77 குழந்தைகள் மரணம் ... மருந்து கம்பனிகளின் பரிசோதனையா? ஆக்சிஜன் இல்லாமையா?

jose.kissinger": கோரக்பூர் கொடுரம் குறித்து ஒரு மருந்து விற்பனைப் பிரதிநிதியின் பதிவு. என்னால இன்னைக்கு வேற எந்த பதிவ பற்றியும் சிந்திக்க முடியல. ஒன்னு ரெண்டு இல்ல மொத்தம் 77 குழந்தைங்க செத்து போய் இருக்காங்க. முதலில் ஆக்சிஜன் சப்ளை செய்யும் கம்பெனிக்கு ரூ 64 லட்சம் பணம் பட்டுவாடா செய்யவில்லை அதனால் அந்த ஆக்சிஜன் சப்ளை செய்யும் நிறுவனம் சப்ளையை நிறுத்தி விட்டது என்கிறார்கள். ஆனால் இப்பொழுது மூளை பாதிப்பால் 77 குழந்தைகள் இறந்துவிட்டதாக செய்திகள் கசிகிறது. நிற்க. நான் 8 ஆண்டுகள் Industrial and Medical gases தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்தவன், செய்கிறவன் என்கிற முறையில் சொல்கிறேன்.

1. முதலில் ஆக்சிஜன் சப்ளை என்பது இரண்டு முறைகளில் செய்வோம். ஒன்று 6m3 or 10m3 அளவுள்ள சிலிண்டர்களில். மற்றது பெரிய 1000 gallons அளவுகளுக்கு மேலுள்ள stationary tanker களில்.

2. இதனை பெரிய மருத்துவமனைக்கு நிச்சயமாக டேங்கர்களில் தான் சப்ளை செய்வோம். அந்த கேஸ் liquified நிலையில் இருக்கும். அதை வாயுவாக்க தேவையான evaporator பொருத்தி இருப்பதால் அதை பாதுகாக்க கேஸின் அளவை monitor சேய்யும் கருவியும் அதில் பொருத்தப்பட்டே இருக்கும். ஆக oxygen இருப்பை அது automatic ஆகவே தெரியப்படுத்தும்.

வந்தே மாதரம் இஸ்லாமிய வெறுப்பு பாடல் ... அதனுள் உறைந்திருப்பது பங்கிம் சந்திர சட்டர்ஜி என்னும் பார்ப்பனியம்.

Bankim Chandra Chattopadhyay, who is considered as the father of Hindu Rashtra,
He was very fond of British rulers and never considered them as people who loot India, and he preached that ‘Muslims are our sole enemy’. His love for British masters could be seen in the last lines of Anandmath, where when some of the sanatan cadres who have succeeded in overthrowing Muslim rulers now wanted to fight against Britishers, a mystic leader appears and pacifies them that the sanatan virtue could only be restored under the rule of Englishman as King, so the sanatans should not wage war against them. The leader convinces the sanatans that they have become successful by eliminating Muslim rule and now should let the English reign continue.
thagadoor.sampath : வந்தே மாதரம்! வாழ்த்துப்பாடலா?இசுலாமியர்களுக்கு இந்தப் பாடலின் மீது என்ன வெறுப்பு?
“வந்தே மாதரம்!” வாழ்த்துப்பாடலா? உத்திரப்பிரதேச மாநிலம் ஜாமியத் உலாமா இ ஹிந்த் என்னும் இசுலாமியர் களின் அமைப்பு மூன்று நாள் மாநாட்டினை டியோ பாண்ட் எனும் இடத்தில் நடத்தி, ‘வந்தே மாதரம்’ பாடலை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியது. அப்பாடல் இசுலாத்துக்கு எதிரானது என்றும் தீர்மானம் கூறியது. அம்மாநாட்டில் இந்தியாவின் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மார்க் ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் சீதாராம்யெச்சூரி போன்றவர்கள் பங்கு கொண்டனர்.
‘வந்தே மாதரம்’ பாடல் தேசபக்திப் பாடல் என்றும், தாய்நாட்டை வணங்குகி றோம் என்பது பொருள் என்றும், அதனை எதிர்த்துத் தீர்மானம் போட்ட மாநாட்டில் எப்படி உள்துறை அமைச்சர் சிதம்பரம் பங்கேற்கலாம் என்றும் பாரதீய ஜனதா உள்ளிட்ட சங்பரிவார்க் கூடாரம் கூச்சல் போடுகிறது.
1) “வந்தே மாதரம்” பாடல் என்பது என்ன?
ஒரு தேச பக்திப் பாடலை இசுலாமி யர்கள் ஏன் எதிர்க்கிறார்கள்? அப்படி யென்றால் இசுலாமியர்களுக்குத் தேசபக்தி இல்லையா? சங்பரிவார் வகையறாக்கள் கூறி வருவது மெய்தானோ என்ற அய்யப் பாடு மக்கள் மத்தியில் நிலவுதல் இயற் கையே!

அவன் யாருன்னு கண்டுபிடிங்க ஒறவுகளே....

Damodaran “ஊழல் அற்ற இந்தியாவை உருவாக்குவோம்”! “ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்டு வருவோம்”!
“இந்திய மக்கள் ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் வீதம் வங்கியில் கணக்கு துவங்கி போடுவோம்! ## இப்படி புளுகி ஆட்சிக்கு வந்தவர் மோடி .... அவர் வடநாட்டு மோடி
இங்கே தெற்கில் ஒரு மோடி இருக்கின்றான்
கச்சத்தீவை புடிங்கிட்டு வருவேன்
காவேரியில் தண்ணீர் கொண்டாந்துருவேன்
விவசாயத்தை அரசு வேலை ஆக்குவேன்
த.நா மின் துறை கடன்களை கட்டமாட்டேன் அரசு கடன்களை கட்டமாட்டேன் மாஞ்சா நோட்டிஸ் விட்ருவேன்..
வந்தேறிகளை துரத்திடுவேன்
எல்லாத்தையும் மாத்திடுவேன் ....
என் கிட்ட அந்த விளையாட்டெல்லாம் வச்சுக்காதீங்க
என்றெல்லாம் வாய்க்குவந்தபடி எல்லாம் பொய்மூட்டைகளை அவுத்து விட்டு தொம்பிகளை சிந்திக்க தெரியாத அப்பாவி மக்களை ஏமாத்திகிட்டு இருக்கான் ...ஒருத்தன்

நீட்-தொடரும் பொய் பிரச்சாரங்கள்

நீட் தேர்வில் இருந்து ஓராண்டு விலக்கு எனும் பிச்சை போடப்பட்டதாக வந்த செய்திகள் கேட்டே பல நீட் வெறியர்கள் பொங்குவது விந்தையாக இருக்கிறது.மாணவமாணவிகளுக்கு அழைக்கப்படும் அநீதி என்று கூசாமல் எப்படி பொய் சொல்ல முடிகிறது என்று விளங்கவில்லை.2016 ஆம் ஆண்டு வரை தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் ,தமிழக அரசு பணத்தில் நடக்கும் கல்லூரிகளில் ,தமிழக அரசு கோட்டாவான 85 சதவீத இடங்களில் ,தமிழக சட்டமன்றம் எடுத்த முடிவுகளின் அடிப்படையில் தான் மாணவமாணவிகள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.திடீர் என்று சாதிவெறியர்கள் ,சாதிவெறி எச்ச நீதிமன்றத்தின் துணையோடு அணைத்து இடங்களும் நீட் மூலம் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று சொல்லுவது தான் அநீதி,மாநில உரிமைகளுக்கு முற்றிலும் எதிரான மற்றும் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரான ஒன்றே தவிர தமிழக அரசு எடுக்கும் முடிவு சட்டத்துக்கு எதிரான ஒன்று அல்ல.
அகில் இந்திய தேர்வுகள் கடந்த 30 ஆண்டுகளாக நடந்து வருகின்றன.திருட்டுத்தனமாக தமிழ்நாட்டில் கவர்னர் ஆட்சி இருந்த போது மத்திய அரசுக்கு 15 சதவீத இடங்கள் தாரை வார்த்து கொடுக்கப்பட்டு விட்டது.அதனை போராடி மீட்காததால் தான் இன்று மொத்தத்தையும் இழக்கும் சூழல்,மற்றும் வன்மத்தோடு தமிழகத்தின் எதிரிகள் ஆனந்த கூத்தாடுவதை வேடிக்கை பார்க்கும் சூழல் உருவாகி இருக்கிறது.

சிக்காகோ விவேகானந்தர் மறைக்கப்பட்ட செய்திகள் .... அதிலும் உல்டா...

Sivasankaran.Saravanan : 1893ம் ஆண்டு அமெரிக்கா சிகாகோ நகரில் நடைபெற்ற சர்வமத மாநாட்டில் விவேகானந்தர் பங்கு பெற்றார் அல்லவா? விவேகானந்தர், "லேடிஸ் & ஜென்டில்மேன் " என்பதற்கு பதிலாக "சகோதர சகோதரிகளே " என்றழைத்து பலரது பாராட்டை பெற்றார் என்று நாம் பள்ளியில் படித்தது ஞாபகத்துக்கு வருகிறதா!
சரி அந்த மாநாட்டின் இலட்சிணை இது. இதிலே புத்தமதம், கிறித்தவம், யூதம், முஸ்லீம் எல்லாம் இடம்பெற்றுள்ளன. ஆனால் இந்துமதம் என்ற பெயர் இடம்பெறவில்லை . மாறாக பிராமனிசம் (Brahminism) என்பதுதான் இடம்பெற்றுள்ளது. விவேகானந்தர் பேசிய உரையிலும் பிராமனிசம் என குறிப்பிடப்பட்டுள்ளதை பற்றி எதுவுமே வாய் திறக்கவில்லை . இதிலிருந்து இரண்டு விஷயங்கள் நமக்கு தெரியவருகின்றன.
1. ஹிந்து மதம் என்ற ஒன்றை உலக நாடுகள் போன நூற்றாண்டு வரை அங்கீகரிக்கவோ அடையாளம் காணவோ இல்லை .
அல்லது
2. பார்ப்பனியம் தான் ஹிந்து மதம் எனக்கருத முடிகிறது. விவேகானந்தரும் பார்ப்பனிய மதத்தின் பிரதிநிதியாகவே சென்றுள்ளார்.

புதன், 16 ஆகஸ்ட், 2017

பேய்களின் ஆட்சியில் – 71 வது சுதந்திர தினம் ...


ஆக்சிஜன் பற்றாக்குறையால் பாஜக ஆளும் உ.பி மாநிலத்தில் 70 குழந்தைகள் மரணமடைந்துள்ள நிலையில் பல குழந்தைகளின் உயிரை தன் சொந்த முயற்சியில் காப்பாற்றியவர் கஃபீல் கான். ஆனால் இப்போது அவர் யோகி அரசால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்//

மாண்புமிகு பாரதப் பிரதமர் திருவாளர் மோடி அவர்களின் உரையைப் புரிந்து கொள்வதிலும், அதில் அவர் உதிர்த்துள்ள பொய்களையும் உண்மைகளையும் இனம் பிரித்துப் பார்ப்பதிலும் சில பல சிக்கல் உண்டு. முதலில், நரகல் ஆற்றில் நீந்தும் திறமை வேண்டும்; அடுத்து, அக்காமாலாவை அசூயை இன்றிக் குடிக்கும் ஆற்றல் வேண்டும்; மேலும், உண்மைகளை அறிந்து வெடித்துப் போகாத இதயம் வேண்டும். மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள்; நாம் மாண்புமிகு பிரதமர் அவர்களின் சுதந்திர தின வாய்ப்போக்கில் ஒரு சில அம்சங்களை மாத்திரம் பிரித்து மேயப் போகிறோம்.
சவடால் 1 : உலகமே வியக்கும் வண்ணம் மிக குறைந்த காலத்தில் ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி வெற்றி பெற்றுள்ளது. உண்மை : பல்வேறு அரசாங்கங்களின் சுமார் 17 ஆண்டு கால முயற்சியின் பலனாகவே ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டது. அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி மாநில அரசுகளின் உரிமைகளைப் பறித்துள்ளதோடு, குழப்பமான வரிவிதிப்பு முறைகளையும் கொண்டுள்ளது. இதன் காரணமாக சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் மீளமுடியாத சிக்கலில் மாட்டியுள்ளனர். ஜி.எஸ்.டி முறையை முன்பு அறிமுகம் செய்த காங்கிரசின் ப.சிதம்பரமே, மோடி அரசால் அமல்படுத்தப்பட்ட வரிவிதிப்பு முறை ஜி.எஸ்.டியின் அடிப்படைக்கே முரணானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்து பத்திரிகையின் வாஞ்சிநாதன் - முத்துராமலிங்க தேவர் உல்டா.... ஏன்?

Karthik Raaja இந்தக் கட்டுரை குறித்து வாஞ்சிநாதனின் தம்பியின் பேரன் கோபாலகிருஷ்ணனிடம் பேசினேன். இந்தக் கட்டுரை குறித்துப் பேசுவதற்காக, தான் இப்போது இந்து அலுவலகத்திற்குத்தான் போய்க்கொண்டிருப்பதாகக் கூறினார். வாஞ்சிநாதனுக்கு பிறந்த பெண் குழந்தை அவர் இருக்கும்போதே இறந்துவிட்டது என்று தெரிவித்த கோபாலகிருஷ்ணன், வாஞ்சிநாதனின் மனைவி பொன்னம்மாள் சென்னையிலிருந்து மீண்டும் திருநெல்வேலிக்கு வந்த பிறகுதான் முத்துராமலிங்கத் தேவர் அவரைச் சென்று பார்த்ததாகச் சொல்கிறார். இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் லட்சுமி, ஜெயகிருஷ்ணன் ஆகியோர் யாரேன்றே தெரியாது என்கிறார் கோபாலகிருஷ்ணன். இந்தக் கட்டுரை யாரைப் பற்றி நல்அபிப்ராயம் உருவாக்குவதற்காக எழுதப்பட்டது? - முரளிதரன் காசி விஸ்வநாதன்

நீட் அவசர சட்டம்:மத்திய சட்ட அமைச்சகம் ஓப்புதல்

புதுடில்லி: நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் தமிழக அரசின் ஓராண்டு அவசர சட்டத்திற்கு மத்திய அரசின் சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு ஓராண்டு விலக்கு பெற வழிவகை செய்யும் அவசர சட்ட முன்வரைவை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு சார்பில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நீட் தேர்வில் விலக்கு அளிக்கலாம் என மத்திய அரசின் தலைமை வக்கீல் கருத்து கூறியிருந்தார். இதை ஏற்று, இந்த ஆண்டு நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு மத்திய அரசு விலக்கு அளிக்க மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.சட்ட வரைவுக்கு சுகாதாரத்துறை, உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தவுடன் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமலர்

தொழிலாளி முருகன் குடும்பத்தை நேரில் சந்தித்த கேரள முதல்வர்


மருத்துவ உதவி மறுக்கப்பட்டதால் மரணமடைந்த, தமிழக தொழிலாளி முருகனின் குடும்பத்தாரை, முதல்வர் பிணராயி விஜயன் இன்று சந்தித்தார்.முருகன் குடும்பத்தாருக்கு அவசியமான உதவிகளை அரசு வழங்கும் எனவும், அவர்களின் இழப்பிலும் துயரத்திலும் கேரள மக்கள் பங்குகொள்வதை தெரிவித்தார். முன்னதாக, மருத்துவமனைகள் அவசர சிகிச்சையளிக்காததால் உயிரிழந்த முருகன் உறவினர்களிடம் கேரள மக்களின் சார்பாக முதல்வர் பினராயி விஜயன் மன்னிப்புக் கோரியது குறிப்பிடத்தக்கது. மேலும் விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் உடனடியாக சிகிச்சையளிக்க தேவைப்பட்டால் புதிய சட்டம் இயற்றப்படும் என்றும் பினராயி விஜயன் அறிவித்திருந்தார்.

அல்வா வாசு ! கடைசி கட்டத்தில் ஒரு நடிகனின் வாழ்க்கை... உதவுங்கள் ! - நடிகர் சங்கம் வேண்டுகோள்

சென்னை: அல்வா வாசு எனும் நல்ல நடிகனின் வாழ்க்கை மருத்துவமும் கைவிட்ட நிலையில் கடைசி கட்டத்தில் நிற்கிறது. அவரது குடும்பத்துக்கு உதவுங்கள் நல்ல உள்ளங்களே என்று நடிகர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
இயக்குநர் மணிவண்ணனால் அறிமுகமான நடிகர் அல்வா வாசு. 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆறு மாதங்களாக வாய்ப்பில்லாமல், உடல் நிலையும் சரி இல்லாமல் இருந்தவர், இன்று கவலைக்கிடமாக உள்ளார்.இதுகுறித்து நடிகர் சங்க துணைத் தலைவர் பொன்வண்ணன் விடுத்துள்ள அறிக்கை: 500 படங்களுக்கு மேல் நடித்தவர் நடிகர் அல்வா வாசு. இயக்குநர் மணிவண்ணன் அவர்களிடம் உதவி இயக்குனராக இருந்து இயக்குனாரான அந்த பொறுப்பு கிடைக்காமல் நடிகராகவே பயணித்து பல படங்களில் அவர் நடித்துள்ளார். பெரிய அளவில் அவர் சம்பாதிக்கவே இல்லை.

BBC :நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் ஆசிரியர் மருது ராஜ் நீக்கம்

ஜெயலலிதாவுடன் மருது அழகுராஜ் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாக செயல்பட்டுவந்த "நமது எம்.ஜி.ஆர்" ஆசிரியராக இருந்த மருது அழகுராஜ் அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். நிர்வாக காரணங்களுக்காக அவர் நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக சசிகலா அணி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்திருக்கிறார். இது குறித்து மருது அழகுராஜிடம் கேட்டபோது, அந்தச் செய்தியை உறுதிசெய்த அவர், "2008ஆம் ஆண்டில் முதல்வர் ஜெயலலிதாவால் பணியில் அமர்த்தப்பட்டேன். இப்போது எழுதுகோல் பறிக்கப்பட்டிருக்கிறது" என்று மட்டும் தெரிவித்தார். சென்னையில் புதன்கிழமையன்று செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள் இது குறித்துக் கேட்டபோது, "நிர்வாகத்தின் கொள்கைகளை மீறி அவர் செயல்பட்டதால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்" என்றார். சில நாட்களுக்கு முன்பு நமது எம்.ஜி.ஆர் நாளிதழில், "காவி அடி, கழகத்தை அழி" என்ற பெயரில் கவிதை ஒன்று வெளியானது. அந்தக் கவிதையில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. மேலும், "மோடியா, இந்த லேடியா? எனச் சவால் விட்ட இயக்கத்தை மூன்றாகப் பிளந்ததும் ஈரிலையை முடக்கி இன்னல்கள் தந்ததும்" என்று பாரதிய ஜனதா கட்சி மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. அந்த கவிதையை "சித்ரகுப்தன்" என்ற பெயரில் மருது அழகுராஜ் எழுதியிருந்தார்.

பாவனா : நான் தற்கொலை செய்து கொள்ளவேண்டுமா? பினராயி விஜயனுக்கு கடிதம்.

மலையாள நடிகை   கேரளா  மாநில
முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்தக் கடிதத்தில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட தாம் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்று அம்மாநில சட்டமன்ற உறுப்பினர் பிசி.ஜார்ஜ் விரும்புகிறாரா எனப் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை, முதலமைச்சர் பினராயி விஜயனுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
தற்கொலை செய்துகொள்ளவா ?  : முதல்வருக்கு நடிகை கடிதம்மலையாள திரையுலகப் பெண்களுக்காக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள WCC யின் முகநூல் பக்கத்தில் இந்தக் கடிதத்தை அவர் வெளியிட்டுள்ளார். அதில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட தம்மைப் பற்றி பூஞ்சார் சட்டமன்ற உறுப்பினர் ஜார்ஜ் தொடர்ந்து அவதூறு பேச்சுகளை பேசி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

நூடுல்ஸ் சாப்பிட்ட மாணவி மரணம்!

கரூரில் நூடுல்ஸ் சாப்பிட்ட எட்டாம் வகுப்பு மாணவி மரணமடைந்துள்ளதாகக் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் பெரியவரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவருடைய மகளான ஜீவசக்தி(14), தனியார் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் கடந்த ஆகஸ்ட்-13 ஆம் தேதி நூடுல்ஸ் சாப்பிட்டுவிட்டு தனது தம்பியுடன் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஜீவசக்திக்கு திடீரென வாந்தி, வாயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அவருடைய பெற்றோர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பின் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று(ஆகஸ்ட்-15) மதியம் உயிரிழந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய தந்தை நூடுல்ஸ் சாப்பிட்டதால் தான் தனது மகள் உயிரிழந்தார் என்று வெள்ளியனை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் பெரியவரப்பட்டி கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மின்னம்பலம்

ட்ராபிக் ராமசாமியின் வரலாறு படமாகிறது ... எஸ் ஏ. சந்திரசேகர் நடிக்கிறார் !

எஸ்.ஏ.சிக்கு கைகொடுக்கும் டிராஃபிக் ராமசாமி
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளது. நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் இந்த படத்தில் டிராபிக் ராமசாமியாக நடிக்கவிருக்கிறார். இப்படத்தை எஸ்.ஏ.சியுடன் பல காலம் உதவி இயக்குநராய் பணிபுரிந்த விஜய் விக்ரம் இயக்கவுள்ளார். க்ரீன் சிக்னல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் மற்றும் இதர ஆர்ட்டிஸ்ட் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று( ஆகஸ்ட்15) சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை சாலிகிராமத்தில் உள்ள எஸ்.ஏ.சியின் அலுவலகத்திற்கு சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி வருகை தந்துள்ளார்.
தள்ளாத வயதிலும் தனிஒருவராக அரசை எதிர்த்து, மக்களுக்காக குரல் கொடுத்து வருபவர் டிராஃபிக் ராமசாமி. பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு பொதுநல வழக்குகளைத் தொடுத்தார். இதில் பெரும்பாலானவை மக்களுக்குச் சாதகமாக அமைந்தாலும், பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வந்தவர். இதன் காரணமாக அரசியல்வாதிகளும், ரவுடிகளும் அவரைப் பலவாறு தொந்தரவு செய்ததோடு, கொலை செய்யவும் முயற்சி செய்தனர். அவருடைய வாழ்க்கையில் நிறைய சம்பவங்கள் நடந்துள்ளன.அவற்றுள் நிறைய சம்பவங்கள் திரைப்படமாக்குவதற்கான சாத்தியங்கள் நிறைய இருக்கின்றன. இதன் காரணமாகத்தான் அவருடைய வாழ்க்கையை படமாக எடுக்கவுள்ளனர்.

கலைஞர் உடல் நிலை மருத்துவ அறிக்கை ... வீடு திரும்பினார் !

கருணாநிதி:  ஹெல்த் ரிப்போர்ட்!
கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக முதுமை காரணமாக கோபாலபுரம் இல்லத்திலேயே ஓய்வு எடுத்து வரும் திமுக தலைவர் கருணாநிதி இன்று ஆகஸ்டு 16 ஆம் தேதி காலை 6.30 மணிக்கு தான் வழக்கமாக சிகிச்சை பெறும் ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
‘கலைஞருக்கு என்னாச்சு... கலைஞருக்கு என்னாச்சு?” என்று வாட்ஸ் அப் மெசேஜ்கள், போன் அழைப்புகள் விசாரித்துக் கொண்டிருக்கும்போதே இன்று காலை 11 மணிக்கெல்லாம் சிகிச்சை முடிந்து காவேரி மருத்துவமனையில் இருந்து கோபாலபுரம் இல்லத்துக்குத் திரும்பிவிட்டார் கருணாநிதி.
’’திமுக தலைவர் கருணாநிதிக்கு PEG எனப்படும் செயற்கை உணவுக் குழாய் மாற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது’’ என்று காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள பத்திரிகைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருணாநிதியின் உடல் நலம் இப்போது எப்படி உள்ளது என்பதைதெரிந்துகொள்ளும் முன் அவரது மெடிக்கல் ஹிஸ்டரியைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்.

மாஃபா பாண்டியராஜன் :எங்கள் தர்மயுத்தத்துக்கு கமல் ஆதரவு தர வேண்டும்!

நடிகர் கமல்ஹாசன் எங்களது தர்மயுத்தத்துக்கு ஆதரவு தர வேண்டும் என முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியைச் சார்ந்த மாஃபா பாண்டியராஜன் கூறியதாவது:
''கமல் பொது விஷயங்களில் ஆர்வம் காட்டுகிறார். ஜல்லிக்கட்டு போராட்டம் நிகழ்ந்தபோது ஓபிஎஸ்ஸிடம் கமல் மூன்று முறை தொலைபேசியில் பேசினார். கமல் சொன்ன கருத்துகளைக் கேட்டுக்கொண்ட ஓபிஎஸ் ஜல்லிகட்டு பிரச்சினைக்கு ஒரு உன்னதமான தீர்வு கண்டார். அப்போது கமல் ஓபிஎஸ்ஸிடம் நல்ல தொடர்பில் இருந்தார்.
இப்போது கமல் ட்வீட்டைப் பொறுத்தவரையில் 140 எழுத்துகளுக்குள் கருத்தை சொல்ல வேண்டி இருப்பதால் பல விஷயங்கள் இப்படியும் புரிந்து கொள்ளலாம் அப்படியும் புரிந்து அகொள்ளலாம் என்கிற மாதிரி உள்ளன. அதனால் நாங்கள் எப்போது ரியாக்ட் பண்ண வேண்டுமோ அப்போது மட்டும் ரியாக்ட் செய்கிறோம்.

கலைஞர் மீண்டும் மருத்துவ மனையில் அனுமதி .. காவேரி ..

சென்னை: மருத்துவ பரிசோதனைக்காக தி.மு.க., தலைவர் கருணாநிதி இன்று(ஆக.,16) காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தி.மு.க., தலைவர் கருணாநிதி, கடந்த சில மாதங்களுக்கு முன், உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை, ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்க, தொண்டையில் துளையிட்டு, 'டிராக்கியோஸ்டமி' சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த 7 மாதங்களாக அவர் கோபாலபுரம் வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார். வீட்டிலிருந்தபடியே அவருக்கு மருத்துவ சிகிச்சை தொடர்ந்து வந்தது.> இந்நிலையில் இன்று அதிகாலை மீண்டும் அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனைக்காகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்று மாலையே அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருடன் ராசாத்தி அம்மாள், கனிமொழி, தமிழரசு மற்றும் செல்வி ஆகியோர் உடன் உள்ளனர். இது குறித்து மருத்துமனை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் : '' தி.மு.க தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் பி.இ,ஜி., டியூப் மாற்றப்படுவதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் இன்றே டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் '' என குறிப்பிடப்பட்டுள்ளது. தினமலர்

லதா ரஜினிகாந்த் பள்ளிகூடத்துக்கு பூட்டு வாடகை பாக்கி ..2 கோடி ரூபாய் ..

சென்னை கிண்டியில் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா நடத்தி வரும் பள்ளியின் வாடகை தொகையை செலுத்தாததால் அப்பள்ளிக்கு உரிமையாளர் பூட்டு போட்டதால் மாணவர்கள் பரிதவித்தனர். ரூ. 2 கோடி வாடகை பாக்கி: ரஜினி மனைவி லதா நடத்திய கிண்டி பள்ளிக்கு பூட்டு போட்ட உரிமையாளர் ஆலந்தூர்: சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் அருகே நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா நடத்தும் ஆஸ்ரம் பள்ளி இயங்கி வந்தது. இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வந்தனர். வாடகை கட்டிடத்தில் இந்த பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு கடந்த 2009-ம் ஆண்டு முதல் வாடகை பாக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கட்டிட உரிமையாளர் வெங்கடேஷ் வரலு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் இருதரப்பினரையும் அழைத்து நீதிபதி சமரசம் செய்தார். ரூ. 11 கோடி அளவுக்கு வாடகை பாக்கி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.

வாழும் நாடுகளை சொந்தவீடாக நினைக்கமுடியாத சீக்கியர்களின் நிலை


ராதேஷ் சிங், ஒரு பாகிஸ்தானிய சீக்கியர், பெஷாவரிலுள்ள ஒரு கோயிலில் பேசுகிறார். தன் பாட்டனார், இந்தியாவில் பஞ்சாப் மாகாணத்திலிருந்து 11 வயதில் தங்கள் எளிய கிராமத்தை விட்டு வெளியேறி, வெகுதூரத்தில் ஆப்கான் எல்லையின் வடமேற்குப் பகுதியில் உள்ள பெஷாவர் நோக்கி வந்துவிட்டதாகக் கூறுகிறார். இந்தியத் துணைக்கண்டத்தின் பிரிவினையின் எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு, பாக்கிஸ்தான் சீக்கியர்கள் இந்தியாவையோ அல்லது பாக்கிஸ்தானையோ இன்றுள்ள சீக்கிய இளம் தலைமுறையினர் தங்கள் சொந்த வீடாக உணரமுடியாத நிலையில் உள்ளதாக அவர் கூறுகிறார். ஆங்கிலேயர்கள் இந்திய நாட்டை விட்டு வெளியேறும் முன் இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து பாகிஸ்தானை பிரித்த போது பாதிப்புக்குள்ளானது இந்துக்களும் முஸ்லிம்களும் மட்டுமல்ல சீக்கியர்களும்தான்.
பிரிவினையின் 70 ஆண்டுகள் கடந்த நிலையில், பாகிஸ்தானிய சீக்கியர்கள், இந்தியாவையோ அல்லது பாகிஸ்தானையோ தங்கள் வீடாக நினைக்கமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

ராஜபாளையம் .. தடுப்பணையை சீரமைத்து 15 லட்சம் லிட்டர் மழை நீர் சேகரிப்பு: இளைஞர்கள் முயற்சி

சொக்கலிங்காபுரத்தில் பராமரிப்புக்கு முன் புதர் மண்டி கருவேலமரங்கள் வளர்ந்து சேதமடைந்திருந்த தடுப்பணை. சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படாமல் சேதமடைந்து கிடந்த தடுப்பணையை சீரமைத்து 3 கிராம மக்கள் பயன்பெறும் வகையில் பராமரித்து வருகின்றனர் ராஜபாளையம் அருகே உள்ள கிராம மக்கள்.
வறட்சி மாவட்டங்களில் ஒன்றான விருதுநகரில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான நீராதாரங்களாக விளங்கக் கூடிய ஆறுகளோ, ஏரிகளோ இல்லை. இந்நிலையில், 3 கிராம மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் முயற்சி மேற்கொண்டு அதில் வெற்றி கண்டுள்ளனர் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கலிங்காபுரம் கிராமத்தினர். சொக்கலிங்காபுரம்- மீனாட்சிபுரம் கிராமங்களுக்கு இடையே வடிகால் ஓடை உள்ளது.

வெள்ளக்காரங்கிட்டயே அடிமையா இருந்திருக்கலாம் ! சுதந்திர தின சிந்தனைகள் ..

35 ரூபாயில முடிய வேண்டிய சாப்பாடு இப்போ 48 ரூபா ஆகுது. கேட்டா GST -யாம். என்ன எழவுன்னே தெர்ல; வரி போடுறோம். ஆனா விலையெல்லாம் ஏறாதுன்னு சொன்னான். இப்போ எத பாத்தாலும் வாங்க பயமா இருக்கு.
சுதந்திர தினம் குறித்து மக்களின் கருத்தறிய காஞ்சிபுரம் நகரத்தை பெரும் மழையில் வலம் வந்தோம்.
சிலர் சுதந்திர தினம் குறித்து சுதந்திரமாக கருத்து தெரிவிக்கத் தயங்கினர். மக்கள் தங்களது பிரச்சினைகைளக் கூறினாலே “ஆன்டி இன்டியன்” என்று முத்திரை குத்துகிறார்கள் காவிக் கட்சியினர்.  அதனாலென்ன? “என் போட்டவோட நான் சொன்னத கொட்ட எழுத்துல போடு.. கொண்டாடுறவனுங்க என் வீட்டுக்கு வரட்டும் நான் பாத்துக்கிறேன்,  என்கிறார்கள் உழைக்கும் பெண்கள்!  சிலரோ எந்த பேப்பர்ல போடுவீங்க? நாளைக்கே போட்டுடுவீங்களா? போலிஸ் பிடிச்சுக்குமே என்று கேட்டனர்!
சுதந்திர தின கேள்வி, பேட்டி என்றதுமே போலீசிடம் சிக்கிய கைதி போல அச்சப்படும் தொழிலாளிகள், “நாட்டு நடப்பு அப்படி இருக்குதுப்பா. உண்மைய சொன்னா எங்களுக்குதான் சிக்கல்” என்று ஆரம்பித்து உள்ளக் குமுறலை கொட்டுகிறார்கள். அவர்களில் சிலரை சந்தியுங்கள்.

தமிழகத்தைப் பலியிடும் புரோக்கர் ஆட்சி !

காண்டிராக்ட் முதல் மணல் கொள்ளை வரை அனைத்திலும் அனைவருக்கும் பங்கு வழங்குவதன் மூலம், அ.தி.மு.க. வில் ”உட்கட்சி ஜனநாயகத்தை” எடப்பாடி உருவாக்கி வருவதாக கூறுகின்றன பத்திரிகைகள்.
சுயமரியாதையே இல்லாதவனோடு சண்டை போடுவது கடினம்” என்று ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பெரியார் கூறியிருப்பதாக நினைவு. இன்று அந்த நிலையில்தான் தமிழகம் இருக்கிறது.
ஊழல் வழக்கில் சிறை செல்லவேண்டிய நிலை ஏற்பட்டபோது, முதல்வர் நாற்காலியில் அமரவைப்பதற்குப் பொருத்தமான ஒரு ”உடல்” ஜெயலலிதாவுக்குத் தேவைப்பட்டது. ”அறிவோ, சொரணையோ, தன்மானமோ கடுகளவும் இல்லாத நபர்” என்று ஜெயா-சசி குற்றக்கும்பலால், தேடி அலசித் தெரிவு செய்யப்பட்ட ”உடல்” தான் பன்னீர்செல்வம்.
அந்த பன்னீருக்கு பல் முளைத்துவிட்டது என்று தெரிந்தவுடன், அரச பதவியில் அமர்த்துவதற்கு பன்னீரைவிடத் தாழ்ந்த அடிமை என்று எடப்பாடி தெரிவு செய்யப்பட்டார்.

வாஞ்சிநாதன் - ஆஷ்துரை பற்றிய கட்டுகதைகள்! வாஞ்சிநாதன் பார்பன பயங்கரவாதி?

இல்லாததை இட்டுக்கட்டி தங்களை உயர்ந்தவர்களாகக் காட்டிக் கொள்வது பார்ப்பனீயத்தின் சூழ்ச்சித்திறன். கடந்த கால வரலாற்றை எளிதாக அறிந்து கொள்ள வாய்ப்புள்ள இக்காலத்திலேயே இப்படி புளுகுகின்றார்கள் என்றால், ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எப்படியெல்லாம் புளுகியிருப்பார்கள். தோழர். Soman Raja : தி இந்து தமிழ் நாளிதழ் சுதந்திர தினத்தை முன்னிட்டு வாஞ்சிநாதன் பற்றிய பேட்டி ஒன்றை அவரது மகள்வழிப் பேரன் என்று சொல்லி ஜெயகிருஷ்ணன் என்பவரிடம் வாங்கி வெளியிட்டுள்ளது.
வாஞ்சிநாதன் ஆஷ்துரையை சுட்டுக்கொன்றபோது நிர்கதியாக நின்ற தனது பாட்டி (வாஞ்சிநாதன் மனைவி) ஒரு கர்ப்பிணி என்றும் அந்த நேரத்தில் முத்துராமலிங்க தேவர்தான் அவரை தன் கூண்டு வண்டியில் ஏற்றி சுற்றித்திரிந்து தலைமறைவாக வைத்து காப்பாற்றினார் என்றும் அந்த பேட்டியில் அவர் சொன்ன செய்தியை அப்படியே வெளியிட்டிருக்கிறது இந்து. வாஞ்சிநாதன் ஆஷ்துரையை கொன்ற நாள் 1911 ஜூன் 17. முத்துராமலிங்கத் தேவர் பிறந்தது 1908 அக்டோபர் 30. ஆக ஆஷ்துரை கொல்லப்பட்ட போது முத்துராமலிங்கத் தேவருக்கு வயது 2 வயது 8 மாதம். இந்தக்குழந்தை தான் வாஞ்சிநாதன் மனைவியை மூன்று மாதகாலம் தன் கூண்டு வண்டியில் வைத்து சுற்றியதாக புனையப்பட்டுள்ளது.

முதல்வர் சித்தராமையா :கன்னட மொழிக்கு எதிரான அடக்குமுறையை சகித்து கொள்ள முடியாது

கர்நாடகத்தில் கன்னட மொழிக்கு எதிரான அடக்குமுறையை சகித்து கொள்ள முடியாது என முதல்-மந்திரி சித்தராமையா சுதந்திர தின விழா உரையில் பேசினார். கன்னட மொழிக்கு எதிரான அடக்குமுறையை சகித்து கொள்ள முடியாது: முதல்வர் சித்தராமையா பெங்களூரு: பெங்களூரு மானேக்ஷா மைதானத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. முதல்–மந்திரி சித்தராமையா தேசியக் கொடி ஏற்றி உரையாற்றினார். சித்தராமையா பேசுகையில், கர்நாடகத்தில் கன்னட மொழிக்கு எதிரான அடக்குமுறையை சகித்து கொள்ள முடியாது என்றார். பல்வேறு மொழி, கலாசாரம் கொண்ட பன்முக சமூகத்தில் நாம் வாழ்கிறோம். இதுதான் நமது நாட்டின் வலிமை. இருந்தாலும் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு நம்முடைய மொழி, கலாசாரங்களை பாதுகாப்பதன் மூலம் தான் நாம் வளர்கிறோம். இதுதான் வேற்றுமையில் ஒற்றுமையாகும். ஒவ்வொரு மாநிலமும் அலுவலக மொழியை கொண்டுள்ளது. அந்த மொழியை முதன்மையாக பயன்படுத்தி கொள்ள அரசியல் சாசனம் இடம் அளிக்கிறது.