வியாழன், 10 ஏப்ரல், 2025

அரசியல்னா CBI, ED, IT, EC, Supreme Court மாநில கட்சிகளை மிரட்டி, கட்சியை உடைத்து, பணம் பறிக்கிற வேலை?

May be an image of 1 person and text

 Kandasamy Mariyappan :  அரசியல்னா என்னான்னு தெரியுமா..!?
டெல்லியில் உட்கார்ந்து கொண்டு CBI, ED, IT, EC, Supreme Court,  ராணுவத்தை வைத்து, மாநில கட்சிகளை மிரட்டி, கட்சியை உடைத்து, பணம் பறிக்கிற வேலை என்று நினைத்தாயா...!!!
May be an image of 2 people

பணக்காரரான நடேசன் முதலியார், மருத்துவம் படித்துவிட்டு, Practice பண்ணலாம் என்று வந்தால்......
கல்லூரி, மருத்துவமனை, நீதிமன்றம், அரசியல் என்று எல்லா இடங்களிலும் ஒரு குறிப்பிட்ட கூட்டம் மட்டுமே உட்கார்ந்து கொண்டு ஆதிக்கம் செய்ததை சகிக்க முடியாமல்..,
நம்ம பசங்களையும் படிக்க வைப்போம் என்று, எல்லோரும் வாங்க, படிங்கன்னு விடுதியை கட்டி...
பிறகு பார்ப்பனர்கள் இல்லாதவர்கள் சங்கம் என்று உருவாக்கி, அதை தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்று மாற்றி...
டாக்டர் மாதவன் நாயரையும், கபாலீசுவரர் கோவிலில் அவமானப்பட்ட பணக்காரர் திரு. தியாகராயரையும் சேர்த்துக்கொண்டு Justice partyஐ தொடங்கி அதை நீதிக்கட்சியாக மாற்றி, சாதிவாரி பிரநிதித்துவம் (Proportionate Representation) வேண்டும் என்று கேட்டு,
உடல்நிலை சரியில்லாமல் இருந்த பொழுதும் நம்ம மக்களோட எதிர்காலம் முக்கியம் என்று இங்கிலாந்து பாராளுமன்றத்திற்கே சென்று சாதிவாரி பிரநிதித்துவம் (Proportionate Representation) வேண்டும் என்று கேட்டு, அங்கேயே டாக்டர் மாதவன் நாயர் தன் உயிரை விட்டு...
மான்டேக் - செம்ஸ்ஃபோர்ட் கொடுத்த Quashi Federalஐ பயன்படுத்தி தேர்தலில் நின்று ஆட்சியை பிடித்து...

புதன், 9 ஏப்ரல், 2025

திமுக எம்.பி.வில்சன் : நீதிமன்ற தீர்ப்பு அனைத்து ஆளுநர்களுக்கும் பொருந்தும்:

 hindutamil.in : நீதிமன்ற தீர்ப்பு அனைத்து ஆளுநர்களுக்கும் பொருந்தும்: திமுக எம்.பி.வில்சன் தகவல்
சென்னை: தமிழக அரசு - ஆளுநர் இடையேயான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தமிழக ஆளுநருக்கு மட்டுமின்றி, அனைத்து மாநில ஆளுநர்களுக்கும் பொருந்தும் என்று திமுக எம்.பி. வில்சன் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி - தமிழக அரசு இடையிலான வழக்கின் தீ்ர்ப்பு நேற்று வெளியான நிலையில், தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, திமுக எம்.பி. வில்சன் சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன்பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

இலங்கை வடபகுதிக்கு மகாவலி நீர் - 27 கிலோமீட்டர் நீளமான நீர் சுரங்க பாதை!

May be an image of train and railroad


Mohamed Ali Yaseer Arafath  : இலங்கை வடபகுதிக்கு மகாவலி நீர் செல்வதற்காக  நிர்மாணிக்கப்பட்டு வரும் 27 கிலோமீட்டர் நீளமான நீர் சுரங்க பாதை!
தெற்காசியவிலேயே மிக நீளமான Northcentral Canal நீர்ச்சுரங்கம் இது!.
இதுதான் உண்மையான வடக்கின் வசந்தம்!
நூறு ஆண்டுகளுக்கு முதல் யாழ்ப்பாண புத்திசாலி சமூகம் ( மகாதேவா அறிக்கை) பரிந்துரை செய்த வடக்கு திசையில் மஹாவலி திசைதிருப்பம் படிப்படியாக நிறைவேறுகிறது.
மொரகஹகந்த நீர் மஹாகனதராவை அடைந்து,
 பின்னர் கனகராயன் ஆறு வழியாக,
 யாழ்ப்பாணம் நீரேரி தொண்டமானாறு வரை சென்று,
 பருத்தித்துறை முனைக்கு அண்மையில் மஹாவலி நீர் வெளியேறும்,
 யாழ்ப்பாணம் சுண்ணாம்பு பாறை நிலத்தடி நீர் உப்பாதலை தடுக்கும்

சமூக ஊடகங்களை விட்டு Shalin Maria Lawrence ஏன் ஒதுங்க முடிவு செய்தார்?

May be an image of 1 person and text

Ponni Brinda :  It's such a pity. நம்மூரில் அரசியல் பேசுற பெண்களே ரொம்ப கம்மி. எனக்கு எல்லாத்துலயும் உடன்பாடு இல்லை என்றாலும் இவுங்க நிறைய நல்ல கருத்துக்கள் பதிவு செய்வாங்க. கட்சி சார்ந்து அரசியல் பேசுற பெண்கள் மத்தியில் இவுங்களோட சொந்த குரல் எனக்கு பிடிக்கும்.  ஆனா நான் சாதாரணமா ஒரு கேள்வி கேட்க போய் அவங்களுக்கு பதில் சொல்ல மறுக்க நானும் வழக்கம் போல் திருப்பி திருப்பி கேள்வி கேட்க விவாதம் முத்தி unfriend செஞ்சுட்டாங்க என்னை.   அதுக்கப்புறம் இவங்க பதிவுகளை நான் பார்த்ததில்லை. சிலது நியாயமான விமர்சனமா இருந்தாலும், unfortunately, நிறைய பேர் online bullying இவங்கள செஞ்சாங்கனு நினைக்கிறேன். தனியாளாய் இருந்து அதை எதிர்கொண்டது பாராட்டுக்குரிய விஷயம் தான் but it takes a mental toll. Every silenced voice is a loss for us.

செவ்வாய், 8 ஏப்ரல், 2025

தமிழக சட்ட மன்ற வரைவை நிறுத்தி வைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது! உச்ச நீதிமன்ற தீர்ப்பு

 Hindu Tamil :  தமிழக அரசு அனுப்பிய 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவது தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பர்திவாலா மற்றும் மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவைத்த தமிழக ஆளுநரின் செயல் சட்ட விரோதமானது என தீர்ப்பளித்துள்ளது.
‘தமிழக ஆளுநருக்கு எதிராக மாநில அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, அரசியலமைப்பை நீர்த்துப் போகச் செய்யும் பாஜகவின் செயல்பாடுகளுக்கு சவுக்கடி’ என்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள கருத்துகள்:

ஒரு முன்னாள் புலியின் ஒப்புதல் வாக்குமூலம்! கூர்வாளின் நிழலில் இருந்து..

May be an image of 4 people

பொன். கரிகாலன் :  கூர்வாளின் நிழலில் இருந்து..
புலிகளின் மகளிர் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழினி எழுதிய நூலில் இருந்து
ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த சமாதான முன்னெடுப்புகள் ஒரு புறம் இருக்க, இயக்கத்தின் உள் கட்டமைப்புகளில் பல மாறுதல் கள் ஏற்ப்பட தொடங்கின.
அதில் முக்கியமானது இயக்கத்தின் ஆளணி பலத்துடன் தொடர்பு டையது, இயக்கத்தின் ஆணி வேரே அதில்தான் அடங்கியிருந்தது.
அது கொஞ்சம் கொஞ்ச மாக ஆட்டம் காணத் துவங்கி இருந்தது.
கிழக்கு மாகாண தளபதியாக இருந்த கருணா அம்மான் தன்னுடைய கட்டுப் பாட்டில் இருந்த ஆயிரக்கணக் கணக்கான போராளிகளுடன் விடுதலைப் புலிகள் இயக்கத் தில் இருந்து பிரிந்து செல்வ தாக அறிவித்து இருந்தார்.

அமைச்சர் நேரு வீட்டில் ED ரெய்டு... 12 ஆண்டுகளுக்கு பிறகு சோதனை ஏன்? - என்.ஆர்.இளங்கோ கேள்வி! -

nnambalam.co - Selvam : அரசியலமைப்பின் படி தமிழக முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பும் போதெல்லாம் அதனை எதிர் கொள்ள முடியாமல் காலங்கடந்து சட்டத்தை மீறி திமுக அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை சோதனைகள் நடைபெறுகின்றன என்று திமுக சட்டத்துறை செயலாளரும் மூத்த வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ எம்.பி தெரிவித்துள்ளார். ED Raids in Minister KN Nehru House
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, அவரது மகனும் பெரம்பலூர் எம்பியுமான அருண் நேரு, அமைச்சரின் சகோதரர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை நேற்று (ஏப்ரல் 7) சோதனை நடத்தியது.

அமைச்சர் துரைமுருகனுக்கு மாற்றுத் திறனாளிகள் கண்டனம்

 hindutamil.in : சென்னை: தமிழக அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலத் தலைவர் தோ.வில்சன், பொதுச் செயலாளர் பா.ஜான்சிராணி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஊனமுற்றவர்களை மதிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு `ஊனமுற்றோர்' என்ற சொல்லையே தவிர்த்து `மாற்றுத் திறனாளிகள்' என குறிப்பிட்டதோடு, அத்துறையின் பெயரையும் மாற்றுத் திறனாளிகள் துறை என மாற்றினார்.
மேலும், அத்துறைக்கு அவரே பொறுப்பான அமைச்சராகவும் இருந்தார். அதேபோன்று, தற்போதும் திமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகள் துறைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பாளராக உள்ளார்.

6800 கிழக்கு போராளிகளை காவு கொண்ட வடக்கு போர்- கருணா அம்மானின் 21 வருட நினைவலைகள்

May be an image of text

M R Stalin Gnanam  :  காலத்தே வாழும் கருணாம்மானின் கேள்விகள் (21 வருட நினைவுகள்)
தமிழ் அரசியல் சூழலில் அதிகம் உச்சரிக்கப்பட்ட சொல் எதுவெனக் கேட்டால் அது 'துரோகி' என்பதேயாகும். துரையப்பா தொடங்கி அது இன்றுவரை தொடருகின்றது.
இந்த தொடர்ச்சியில் கருணாம்மானின் பெயரும் சுமார் இருபது வருடங்களாக படாத பாடுபட்டு வந்திருக்கின்றது.
அண்மையில் உதயமான  'கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின்' உருவாக்கத்தையும்  அதில் கருணாம்மானின் வகிபாகத்தையும் தொடர்ந்து  மீண்டும் அவர் மீதான துரோக சேறடிப்புகளை பரவலாக  காண முடிகின்றது.
கருணாம்மானை துரோகி என்பதற்கு அவர் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறியதே அடிப்படைக்கு காரணமாகின்றது.

திங்கள், 7 ஏப்ரல், 2025

வக்பு வாரிய சட்டத்திற்கு எதிராக திமுக இன்று வழக்கு|DMK files case against Waqf Board Act

 தினத்தந்தி :  சென்னை - வக்பு சட்ட திருத்த மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. அதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்ததால், சட்ட வடிவம் பெற்று விட்டது. இதற்கிடையே, வக்பு வாரிய சட்ட திருத்தத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ளன.
 இந்த நிலையில், வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக இன்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளதாக அக்கட்சியின் தலைவரும் முதல் அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் நேற்று பேசியதாவது:-

பாம்பன் பாலம் புதுப்பொலிவுடன் மீண்டும் திறந்து வைக்கப்பட்டது

 மாலை மலர  :  ராமேஸ்வரத்தில் நடைபெறும் விழாவில் வணக்கம் என தமிழில் பிரதமர் மோடி தனது உரையைத் தொடங்கினார்.
அப்போது ராம நவமி நன்னாளில் ஸ்ரீராம் என முழக்கமிடுங்கள் என பிரதமர் கூறிய உடன் அனைவரும் ஸ்ரீராம் என முழக்கமிட்டனர்.
விழாவில் அவர் மேலும் கூறியதாவது:-
ராம நவமி நாளில் ராமநாத சுவாமி கோவிலில் தரிசனம் செய்தது எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன். ராமேஸ்வரம் பாரத ரத்னா கலாம் அவர்களின் பூமி, அறிவியலும் ஆன்மீகவும் இணைந்தது தான் வாழ்வு என்பதை நினைவுபடுத்துகிறது.

ஞாயிறு, 6 ஏப்ரல், 2025

டிரம்புக்கு எதிராக 50 மாகாணங்களில் போராட்டம் ஏன்? – சில மாதங்களிலேயே மக்கள் ஆதரவு சரிவு!

 BBC News தமிழ்:   ராபின் லிவின்சன் கிங், ஜென்னா மூன், பெர்ன்ட் டெபுஸ்மன் ஜூனியர்
 அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் மக்கள் திரண்டு பெரியளவிலான போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜனவரி மாதம் டிரம்ப் அமெரிக்க அதிபரானதிலிருந்து அவருக்கு எதிராக நடக்கும் மிகப்பெரிய போராட்டம் இது.
"ஹேண்ட்ஸ் ஆஃப்" (Hands Off) எனும் பெயரில், அமெரிக்காவின் 50 மாகாணங்களிலும் 1,200 இடங்களில் பேரணிகள் நடத்த போராட்டக்காரர்கள் திட்டமிட்டிருந்தனர். பாஸ்டன், சிகாகோ, லாஸ் ஏஞ்சலிஸ், நியூ யார்க் மற்றும் வாஷிங்டன் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் சனிக்கிழமை ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.