![]() |
டெல்லியில் உட்கார்ந்து கொண்டு CBI, ED, IT, EC, Supreme Court, ராணுவத்தை வைத்து, மாநில கட்சிகளை மிரட்டி, கட்சியை உடைத்து, பணம் பறிக்கிற வேலை என்று நினைத்தாயா...!!!
![]() |
பணக்காரரான நடேசன் முதலியார், மருத்துவம் படித்துவிட்டு, Practice பண்ணலாம் என்று வந்தால்......
கல்லூரி, மருத்துவமனை, நீதிமன்றம், அரசியல் என்று எல்லா இடங்களிலும் ஒரு குறிப்பிட்ட கூட்டம் மட்டுமே உட்கார்ந்து கொண்டு ஆதிக்கம் செய்ததை சகிக்க முடியாமல்..,
நம்ம பசங்களையும் படிக்க வைப்போம் என்று, எல்லோரும் வாங்க, படிங்கன்னு விடுதியை கட்டி...
பிறகு பார்ப்பனர்கள் இல்லாதவர்கள் சங்கம் என்று உருவாக்கி, அதை தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்று மாற்றி...
டாக்டர் மாதவன் நாயரையும், கபாலீசுவரர் கோவிலில் அவமானப்பட்ட பணக்காரர் திரு. தியாகராயரையும் சேர்த்துக்கொண்டு Justice partyஐ தொடங்கி அதை நீதிக்கட்சியாக மாற்றி, சாதிவாரி பிரநிதித்துவம் (Proportionate Representation) வேண்டும் என்று கேட்டு,
உடல்நிலை சரியில்லாமல் இருந்த பொழுதும் நம்ம மக்களோட எதிர்காலம் முக்கியம் என்று இங்கிலாந்து பாராளுமன்றத்திற்கே சென்று சாதிவாரி பிரநிதித்துவம் (Proportionate Representation) வேண்டும் என்று கேட்டு, அங்கேயே டாக்டர் மாதவன் நாயர் தன் உயிரை விட்டு...
மான்டேக் - செம்ஸ்ஃபோர்ட் கொடுத்த Quashi Federalஐ பயன்படுத்தி தேர்தலில் நின்று ஆட்சியை பிடித்து...