சனி, 27 ஜனவரி, 2024

தமிழ்ல பேசுவியா? காதை திருகிய ஆசிரியையால் சிறுவனின் காது அறுந்தது..! ராயபுரத்தில்

article_image2

tamil.asianetnews.com - vinoth kumar : சென்னையில் தனியார் பள்ளியில் வகுப்பறைக்குள் தமிழில் பேசியதால் 5ம் வகுப்பு மாணவனின் காதை பிடித்து ஆசிரியை திருகியதால் காது அறுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவொற்றியூர் ஜென்ஸ் பார்க் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த கேசவன். இவரது மகன் மனிஷ்(10). இவர் ராயபுரத்தில் உள்ள மான்போர்டு நர்சரி பிரைமரி தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 23ம் தேதி பள்ளி வகுப்பறையில் தமிழில் பேசியதால் பள்ளி ஆசிரியர் நாயகி அவரது காதை பிடித்துக் திருகியுள்ளார்.

காங்கிரசை கடுமையாக விமர்சிக்கும் அமைச்சர் கண்ணப்பன்: சிவகங்கை சீற்றமா?

 மின்னம்பலம் - Aara  : காங்கிரசை ‘காலி’ செய்த திமுக அமைச்சர் கண்ணப்பன்: சிவகங்கை சீற்றமா?
காங்கிரஸ் கட்சி பற்றி திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசிய பேச்சு தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
ஜனவரி 25 மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க பொதுக்கூட்டத்தில் புதுச்சேரியில் பேசிய அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசினார்.
அப்போது அவர், “இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி பெரிய கட்சி. 120 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிற கட்சி. ஆனால் வலிமை இழந்துவிட்டது. உண்மைய ஒத்துக்கணும்.
காங்கிரஸ் காரங்க நம்மகூட இருக்காங்க. அவங்கள குறையா சொல்லலை. அவங்க உழைக்கணும். ஈரோடு இடைத் தேர்தல்ல பார்த்தேன். தலைவர் எவ்வளவு கஷ்டப்பட்டார்னு பார்த்தேன். நாங்க வேலைபாக்குறோம். அமைச்சர்கள் வேலை பாக்குறாங்க. தலைவர் வர்றாரு. செலவு நம்மதான் பண்றோம். அங்க மட்டுமல்ல வர்ற தேர்தல்லையும் அப்படித்தான். அது உலகம் தெரிஞ்ச விஷயம்.
வேலை செய்யணும், கஷ்டப்படணும், அந்த தொகுதிய ஜெயிக்கணும்னு எண்ணம் இருக்கணும். காங்கிரஸ் கட்சி என்னன்னா சீட்டு வாங்குறதுக்குன்னே கட்சி நடத்துறது. அதுல என்ன பிரயோசனம்? மக்களுக்காக உழைக்கணும். ஆனா தேர்தல் நேரத்துல எட்டிப் பாக்குறது மக்கள் மத்தியில எடுபடறதில்லை. பாஜக அதனாலதான் ஆட்டம் போடுது.

JR ஜெயவர்தனவும் SWRDபண்டாரநாயகவும் பூர்வீக தமிழர்கள்தான்

No photo description available.
SWRD.Bandaranayake   -      J.R.Jayavardana

 TSounthar Sounthar :   புகழ்பெற்ற இரு "சிங்கள" இனவாதத் தலைவர்களின் "தமிழ் பூர்வீகம் "!  

17 ஆம் நூற்றாண்டில் தமிழகத்திலிருந்து குடியேறிய “நீலபெருமாள்” என்ற தமிழன் தன்னை “நீலபெருமாள்கே ” என்று சிங்கள பெயர் மாற்றினார் .
நீலபெருமாளின் மகன் வழி வாரிசான “டயஸ் வியசதுங்க பண்டாரநாயக்கா ” [ 1770 இல் பிறந்தார் ] .இவர் கோரலை முதலியாராக இருந்தார்.
இவரது மகன் “டானியல் பண்டாரநாயக்கா”, இவர் ஞானஸ்தானம் பெற்றது 1748 இல் .
“டானியல் பண்டாரநாயக்கா” வின் மகன் “தொன் சொலொமன் பண்டாரநாயக்கா”.
இவர் பிரிட்டிசாருக்கு உளவாளியாக செயல் பட்டவர். இவரது மகன் தொன் கிறிஸ்டோபர் பண்டாரநாயக்கா.
இவரது மகன் தொன் சொலொமன் டயஸ் பண்டாரநாயக்கா.
இவரது புத்திரர் தான் S.W.R.D. பண்டாரநாயக்கா.

நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் விமான விபத்தில் உயிரிழக்கவில்லை.... ! ?

ராதா மனோகர் : நேதாஜி  சுபாஸ் சந்திரபோஸ் விமான விபத்தில் உயிரிழக்கவில்லை!
என்ற கோணத்தில் சற்று நிதானமாக சிந்தித்தால் இந்த விடயத்தில் பல மர்மங்கள் இருப்பது புரியும்!
அந்த விபத்து சம்பவம்  நடந்ததா இல்லையா என்ற வாதப்பிரதி வாதங்கள் ஒரு புறம் இருக்க இப்படித்தான்  நடந்திருக்கும் என்று பலராலும் யூகிக்கப்படும் விடயம் ஒன்றுள்ளது.
அது நேதாஜிக்கு பெருமை சேர்ப்பதாக இல்லை.
என்னதான் சுதந்திரம் அவசியம் என்றாலும் அவர் ஹிட்லரோடு மிகவும் அன்னியோன்னியமாக உறவாடி உதவி கேட்டமை எந்த மனிதரால் ஏற்று கொள்ள முடியாத விடயம்!
அது நாகரிக உலகில் யாராலும் மன்னிக்க முடியாத ஒரு போர் குற்றம் ஆகும்.

மன்சூர் அலிகான் கட்சி பெயரை அதிரடியாக மாற்றினார் ... நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு?

தினத்தந்தி : கட்சி பெயரை மாற்றிய மன்சூர் அலிகான்... நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு...?
மன்சூர் அலிகான் ஏற்கனவே ‘தமிழ் தேசிய புலிகள்' என்ற பெயரில் கட்சி தொடங்கி நடத்தி வந்தார்.
சென்னை,
பிரபு நடித்த 'வேலை கிடைச்சிடிச்சு' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மன்சூர் அலிகான், 'கேப்டன் பிரபாகரன்' படத்தின் மூலம் நட்சத்திர அந்தஸ்தை அடைந்தார். அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் 250 படங்களுக்கு மேல் நடித்ததுடன், பல படங்களை தயாரித்தும் இருக்கிறார்.
நடிகர் மன்சூர் அலிகான் ஏற்கனவே 'தமிழ் தேசிய புலிகள்' என்ற பெயரில் கட்சி தொடங்கி நடத்தி வந்தார். தற்போது அந்த கட்சியின் பெயரை 'இந்திய ஜனநாயக புலிகள்' என்று மாற்றி இருக்கிறார். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவும் முடிவு செய்துள்ளார்.

நிதிஷ்குமார் பிரதமர் ஆக வாய்ப்புள்ளது... Nitishkumar likely to become PM Had He Stayed In INDIA : அகிலேஷ் யாதவ்

 மின்னம்பலம் -christopher :  ”நிதிஷ்குமார் பிரதமர் ஆக வாய்ப்புள்ளது… ஆனால்” : அகிலேஷ் யாதவ்
நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியில் இருக்கும் பட்சத்தில் அவர் இந்தியாவின் பிரதமராக வாய்ப்பு உள்ளது என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.   வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவான இந்தியா கூட்டணியில் சமீபத்தில் நடந்துவரும் மாற்றங்கள் தேசிய அரசியலில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.
காங்கிரஸ் உடன் திமுக, திருணமூல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட 28 கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை அமைத்தன.

சமீபத்தில் தொகுதி பங்கீடு குறித்து கூட்டணியில் பேச்சுவார்த்தை எழுந்த நிலையில்,

மாலத்தீவு வரும் சீனக் கப்பல் - மாலத்தீவு மீதான சீனாவின் செல்வாக்கை குறைக்க முடியுமா?

BBC News தமிழ் : இந்தியாவுக்கு மாலத்தீவுக்கும் இடையிலான ராஜ்ஜீய மோதல்களுக்கு மத்தியில், மாலத்தீவில் உள்ள இரண்டு முக்கிய எதிர்க்கட்சிகள் மாலத்தீவு அரசின் ‘இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு’ குறித்துக் கவலை தெரிவித்துள்ளன.
மேலும், இந்தியாவை ‘மிக நீண்டகால நட்பு நாடு’ என்றும் கூட்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளன.
மாலத்தீவு அரசாங்கம், ஆய்வுகளை மேற்கொள்வதற்காக ஒரு சீனக் கப்பல் மாலத்தீவு துறைமுகத்தில் நிறுத்தப்படுவதற்கு அனுமதியளிக்கப் பட்டதாகவும், அது துறைமுகத்தில் நிறுத்தப்படும் எனவும் அரசாங்கம் கூறியதைத் தொடர்ந்து இந்தக் கூட்டறிக்கை வெளியாகியுள்ளது.

மவுனம் காக்கும் நிதிஷ் : இந்தியா கூட்டணியில் தொடரும் குழப்பம்! மறுக்கும் கட்சித் தலைவர்..

மின்னம்பலம்  - christopher :  மறுக்கும் கட்சித் தலைவர்… மவுனம் காக்கும் நிதிஷ் : இந்தியா கூட்டணியில் தொடரும் குழப்பம்!
மம்தா பானர்ஜி, அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோர் இந்தியா கூட்டணிக்கு நெருக்கடிகள் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், அடுத்ததாக பிகாரில் இருந்து முதல்வர் நிதிஷ்குமார் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். ஆனால் இதை அவரது கட்சித் தலைமை மறுத்துள்ளது.
தற்போது ராஷ்டிரிய ஜனதா தளத்தின் ஆதரவோடு பிகார் முதல்வராக இருக்கும் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார், மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேரப் போகிறார் என்றும் அவர் பாஜக ஆதரவோடு முதல்வராக புதியதாக பதவியேற்கப் போகிறார் என்றும் தகவல்கள் பிகாரில் இருந்து வந்துள்ளன. இது இந்திய அரசியல் அரங்கையும், இந்தியா கூட்டணியையும் ஒரு சேர அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

வெள்ளி, 26 ஜனவரி, 2024

மலையக மேட்டு குடி கொழும்பு வாழ் துபாய் வாழ் கனடா வாழ் மலையக இளைஞர்கள்

May be an image of 3 people, beard and people smiling

Ling Chinnaav : If you don't have bread,Please manage with cakes... என்பதாகத்தான் தம்மை ஒரு மேட்டு குடியாக காட்டிக்கொள்ள விரும்பும் கொழும்பு வாழ் துபாய் வாழ் கனடா வாழ் மலையக இளைஞர்களின் கருத்தாக இருக்கிறது.  
இவர்கள் டாலரில் சம்பளம் வாங்குவதனால், சக அறிவிப்பாளரோடு ஃபோர்க்கில் சாப்பிடுவதனால், பகல் சாப்பாட்டுக்கு பீட்ஸா சாப்பிடுவதனால், பிக் மீயில் செல்வதனால்  தேசிய நீரோட்டத்தில் சட்ட பூர்வமாக தாம் இணைந்துவிட்டதாக நினைத்து கொண்டு இன்னும் ஏண்டா ஏழை, கஷ்டம், ஆயிரம் ரூபாய் சம்பளம்ன்னு பொலம்புறீங்க என்ற கேள்வியை தான் பிரதானபடுத்துகிரார்கள்.
நிற்கும் நிலம் எனதில்லை என்ற வலியை இவர்கள் தொடர்ந்து ஏளன படுத்த முயற்சித்து கொண்டே  இருக்கின்றார்கள்.
உண்மையில் மலையகத்தைவிட வறுமையில் இருப்பது யாழ்பாணம்தான். திடுக்கிட வேண்டாம்.
நிஜம்தான்.  அது வெளியில் வராது.
நல்லூர் திருவிழா அதை வெளியில் காட்ட விடாது.

பீகார் ஆளுநர் - நிதிஷ்குமார் திடீர் சந்திப்பு- முதல்வர் பதவி ராஜினாமா?

tamil.oneindia.com - Mathivanan Maran : பாட்னா: பீகார் மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை முதல்வர் நிதிஷ்குமார் திடீரென சந்தித்து பேசி வருகிறார்.
இந்த சந்திப்பின் போது தற்போதைய ஆர்ஜேடி-ஜேடியூ-காங்கிரஸ் கூட்டணி அரசின் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யும் கடிதத்தை நிதிஷ்குமார், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் கொடுக்கக் கூடும் என தெரிகிறது.
இதனையடுத்து பாஜக ஆதரவுடன் நாளை மறுநாள் மீண்டும் புதிய ஆட்சியை அமைத்து முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்க கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சவூதி அரேபியாவில் மது விற்பனைக்கு தடை இல்லை .., மதுபானக்கடையை திறக்க இளவரசர் முகமதுபின் சல்மான் அறிவிப்பு

மாலை மலர் : மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு இருந்த சவுதி அரேபியாவில், முதல் முதலாக மதுபானக்கடையை திறக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டு உள்ளதாக இளவரசர் முகமதுபின் சல்மான் அறிவித்து உள்ளார்.
சவுதி அரேபியா நாட்டின் ரியாத் நகரத்தில் முஸ்லிம் அல்லாத வெளிநாட்டினருக்காக மதுபானங்கள் விற்பனை செய்ய மதுபானக்கடை ஒன்று விரைவில் திறக்கப்பட உள்ளது.
இவர்கள் மது பெற வேண்டும் என்றால் வெளியுறவு அமைச்சகத்திடம் அனுமதி குறியீடு பெற்று,'மொபைல் செயலி' மூலம் பதிவு செய்ய வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த மதுபானக் கடையின் வாடிக்கையாளர்களாக பெரும்பாலும் தூதரகங்களில் பணியாற்றுபவர்களே இருப்பார்கள்.

இந்தியா கூட்டணியில் விரிசல் .. திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மீ தனித்து போட்டி?

மாலை மலர் :  கொல்கத்தா மத்தியில் 3-வது முறையாக பா.ஜ.க ஆட்சிக்கு வருவதை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 28 எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கியது.
சுமார் 4 ஆலோசனைக் கூட்டங்கள் நடந்துள்ள நிலையில் அந்த கூட்டணியில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தின் 42 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என முதல் மந்திரி மம்தா பானர்ஜியும், பஞ்சாப்பில் 13 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடும் என முதல் மந்திரி பகவந்த் மானும் அறிவித்தனர்.
இந்நிலையில், திரிணாமுல் காங்கிரசின் மாநிலங்களவை எம்.பி. இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

பிரிட்டன் தபாலக கணினி சாப்ட்வேர் கோளாறால் 4000 பேர் நடுவீதியில்

sam Jeyabalan : தமிழர்கள் உட்பட நிரபராதிகளை சிறைக்கு அனுப்பிய பிரித்தானிய தபாலகங்கள்!
20 ஆண்டுகளாக போராடும் நிரபராதிகள்!!
இன்றும் குற்றவாளிகளாகவே இறந்து போகும் தபாலக மேலாளர்கள்!!!
40க்கும் மேற்பட்ட நிரபராதிகள் குற்றவாளிகளாக மரணித்த நிலையில் 20 வருடங்களாக தொடரும் பிரச்சினையில் அப்பாவிகளுக்கு நீதி கிட்டவில்லை.
இன்னமும் பலர் சிறைத்தண்டனை அனுபவிக்கின்றனர்.
இவர்கள் செய்த குற்றம் பிரித்தானிய மக்களுக்கான அடிப்படைச் சேவைகளில் ஒன்றான தபாலகச் சேவையை வழங்கியது மட்டுமே.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல ஆயிரம் என்றும் இழப்பீடு பெறுவதற்கு உரித்துடையவர்கள் மட்டும் 4,000 பேர் என்றும் தெரியவருகின்றது.
இவர்களில் ஆயிரம் பேர் வரை நீதி மன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு குற்றவாளிகளாக்கப்பட்டு சிறைத் தண்டணையும் வழங்கப்பட்டது.
இவற்றையெல்லாம் தாங்க முடியாது என்று 15 ஆண்டுகள் போஸ்ற்ஒபிஸ் (Postoffice) நடத்திய சப் போஸ்ற் மாஸ்ரர் (Sub Post Master) அப்துல் அப்டீன் தற்போது 88 வயது தன்னுடைய மனைவி வனசாவுடன் 2005 இல் இலங்கைக்குச் சென்று வாழ்கின்றார்.

இலங்கையில் 470 யானைகள் மின்சார வேலிகளால் உயிரிழப்பு கடந்த வருடத்தில் மட்டும்..

தேசம் நெட்  arulmolivarman : நாடளாவிய ரீதியில் தரக்குறைவான மின் வேலிகளை ஆய்வு செய்யும் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
தரமற்ற மின்சார வேலிகளால் காட்டு யானைகள் உயிரிழப்பது கடந்த காலத்தில் பதிவாகியிருந்த நிலையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் தரமற்ற மின்வேலிகளை அகற்றி தரமானதாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக மீனவர்களைக் கைது செய்த பாகிஸ்தான் கடற்படை

File video

 நக்கீரன்  : தமிழக  மீனவர்கள் ஆறு பேரை பாகிஸ்தான் கடற்படை கைது செய்திருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் குஜராத்தில் மீன்பிடி தொழில் செய்வதற்காக சென்றிருந்தனர். கடந்த 18ஆம் தேதி காசிமேடு மீனவர்கள் குஜராத் சென்றிருந்தனர். போர்பந்தரில் இருந்து ஆள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றிருந்த நிலையில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஆறு தமிழக மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவது தமிழக அரசியல் களத்தில் பல்வேறு கண்டனங்களை உருவாக்கி வரும் நிலையில்,

வியாழன், 25 ஜனவரி, 2024

பாடகி பவதாரிணி உடல் நல குறைவால் இலங்கையில் காலமானார்! இசைஞானி இளையராஜாவின் மகளும் பிரபல ...

தினமலர் : சென்னை: இளையராஜா மகள் பவதாரிணி உடல் நல குறைவால் இன்று (25-ம் தேதி) இலங்கையில் காலமானார்
பிரபல இசையமைப்பாளரான இளையராஜாவின் மகள் பவதாரினி. இவர் சினிமாவில் பின்னணி பாடகியாகவும் இருந்து வந்துள்ளார். இவர் கடந்த சில ஆண்டுகளாக கல்லீரல் புற்று நோயால் அவதியுற்று வந்தார். இந்நிலையில் அவர் மேல்சிகிச்சைக்காக இலங்கைக்கு சென்றிருந்தார். அங்கு உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலன் இன்றி காலமானார். தொடர்ந்து அவரது உடல்நாளை சென்னைக்கு கொண்டு வரப்படகூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாரதி திரைப்படத்தில் மயில் போல பொண்ணு என்ற பாடலை பாடிய பவதாரிணிக்கு தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னணி பாடகியாக மட்டுமல்லாமல் 10க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

News 7 செய்தியாளர் தாக்கப்பட்டார் - காவல் ஆய்வாளர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் - முதல்வர் உத்தரவு

கலைஞர் செய்திகள் - KL Reshma :  தமிழ்நாடு செய்தியாளர் தாக்கப்பட்ட விவகாரம் : காவல் ஆய்வாளர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் - முதல்வர் உத்தரவு !
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் நேச பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணிபுரிந்து வரும் நிலையில், பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை வெளிகொண்டு வரும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனால் இவருக்கு அவர்களிடம் இருந்து கொலை மிரட்டல்கள் வந்துள்ளது.

சிறுமி சித்ரவதை விவகாரம்... பல்லாவரம் எம்எல்ஏவின் மகன், மருமகள் ஆந்திராவில் கைது!

Asianet :
tamil.asianetnews.com  - SG Balan :  பணிப்பெண்ணை சித்ரவதை செய்த வழக்கில், பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா ஆகிய இருவரும் தனிப்படை போலீசாரால் ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்ட்டோ மதிவாணன். அவரது மனைவி மெர்லினா. இவர்கள் தங்களது வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணை அடித்து துன்புறுத்தியதாக வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இசைஞானி இளையராஜா இலங்கை வருகை .. அமோக வரவேற்பு

Cinesamugam  Aathira : எனது இசைக்கு மயங்காத தமிழர்கள் உலகிலும் இல்லை! இலங்கை வந்த இளையராஜாவுக்கு அமோக வரவேற்பு!
தமிழ் திரையுலகின் இசைஞானியாக புகழப்பட்டு வருபவர் தான் இளையராஜா. இவருடைய பாடல்கள் என்றும் மங்காத தீபச் சுடர் போன்றது.
1000 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கும் இசைஞானி இளையராஜா காலத்திற்கேற்ப இந்த ஆந்தாலஜிக்கும் இசையமைத்திருக்கிறார்.
தமிழில் மட்டுமில்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி எனப் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
மேலும், இசைத்துறையில் உயரிய விருது என அழைக்கப்படும் 'பத்ம பூஷன்' விருதையும் இளையராஜா பெற்றிருக்கின்றார்.

இலங்கை அமைச்சர் சனத் நிஷாந்த வாகன விபத்தில் உயிரிழப்பு!

hirunews.lk :  இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த வாகன விபத்தில் உயிரிழப்பு! (காணொளி)
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.
கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இன்று(25) அதிகாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், இராஜாங்க அமைச்சரும் இன்னும் நால்வரும் பயணித்த வாகனம் கொள்கலன் ஊர்தியொன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தரும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில் உயிரிழந்துள்ளனர்.

DMK உபிக்கள் திமுகவின் சாதனை நூல்களை கண்டுகொள்ளாமல் கள்ள மவுனம்? .... சங்கிகள் நேரெதிர்!

May be an image of 2 people and text

Ravi Kumar :  சங்கிகளுக்கும் திமுக உ பி களுக்கும் உள்ள வேறுபாடு இதுதான்.
திமுகவில் இருக்கிற ஒருவர் ஒரு நூலை எழுதினால் அந்த நூலை வாங்கிப் படிப்பதோ அதைப்பற்றி பேசுவதோ அல்லது எழுதுவதோ அல்லது அந்த நூலைப் பிரபலப்படுத்துவதோ திமுககாரர்களுக்கு பிடிக்காத வேலை.
என்றைக்குமே அதை வெகு எளிதாக அவர்கள் கடந்து போவார்கள்.
 எவனோ ஒரு பைத்தியக்காரன் எதையோ கிறுக்கி வைத்திருக்கிறான் இதை நாம் ஏன் வாங்க வேண்டும்? நாம் ஏன் ஆதரிக்க வேண்டும்?
நாம் ஏன் இதற்காக பரப்புரை செய்ய வேண்டும் என்பதுதான் இங்கே சமூக வலைதளங்களில் களமாடிக் கொண்டிருக்கிற சோ கால்ட் திமுக காரர்களின் மனநிலை.
ஆனால் சங்கிகள் அப்படி அல்ல.சங்கிகளின் கொள்கை வெறி  இன்று இந்தியா முழுவதும் பரவி வீழ்த்தவே முடியாத சக்தியாக பாரதிய ஜனதா கட்சியை மாற்றியுள்ளது.

புதன், 24 ஜனவரி, 2024

(EVM போல) கணினி மென்பொருளால் பிரிட்டன் தபால் துறையில் நடந்த மிகப்பெரும் நிதி மோசடி

 450 வழக்குகளில் நீதிபதிகள் மென்பொருள் பொய் சொல்லாது என்று தவறாக நம்பி, வேறு எந்த தடயம், சாட்சிகள் எதையும் பார்க்காகாமல் முட்டாள்தனமான தீர்ப்புகள் கொடுத்தார்கள். நீதித்துறை அழுகிப் போனால் நாடு சர்வ நாசமாகும்!

Arun Bala :    தேவிந்தர் மிஸ்ரா.
இந்திய வம்சாவளியைச் சார்ந்த தேவிந்தர் இலண்டனில் வசிப்பவர்; சொந்தமாக டாக்சி ஓட்டுகிறார்;  பத்து பதினோரு ஆண்டுகளுக்கு முன் தான் அக்கவுன்டிங் படித்த சீமாவை இந்தியா போய் திருமணம் செய்து இலண்டனுக்கு அழைத்து வந்திருந்தார்.
இப்போது அவரை எப்படியாவது அவரது தாய் தந்தையரிடம் பேச வைத்து, இப்போதைக்கு பிரச்சினையைச் சமாளிக்க முடிவெடுத்த தேவிந்தர், சீமா இருந்த இடத்திற்கு ஃபோன் செய்து, கெஞ்சி அனுமதி வாங்கி, சீமாவைப் ஃபோனில் பிடித்து, இந்தியாவில் இருக்கும் மாமனார் மாமியாருக்கு கான்பரன்ஸ் கால் போட்டுப் பேச வைத்துச் சமாளித்து முடிப்பதற்கும், சிறை அதிகாரிகள் நேரம் முடிந்து விட்டதால் அழைப்பைத் துண்டிக்கச் சொல்வதற்கும் சரியாக இருந்தது.

அயோத்தி ராமர் கோவில் குறித்து இஸ்லாமிய நாடுகள் ( OIC ) கவலை தெரிவிப்பது ஏன்?

BBC News தமிழ் :  இஸ்லாமிய மற்றும் முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளின் அமைப்பான இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு(OIC) அயோத்தியில் ராம் கோவில் கட்டப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
ஓஐசி செவ்வாயன்று ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், "இந்திய நகரமான அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட அதே இடத்தில் 'ராமர் கோவில்' கட்டப்பட்டது கவலைக்குரியது,” என இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள நாடுகள் கூறியுள்ளன.
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள புதிய ராமர் கோவிலை ஜனவரி 22ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்கள், பாலிவுட்டின் பிரபல நடிகர், நடிகைகள், பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

உதயநிதி 27 ஆம் தேதி பொறுப்பு முதல்வர் ஆகிறார்!

மின்னம்பலம் - Aara :  “தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஜனவரி 23ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த அமைச்சரவை கூட்டத்தில் இலாகா இல்லாத அமைச்சராக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி மற்றும் உடல்நல குறைவால் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் தவிர மற்ற அமைச்சர்கள் பங்கேற்றனர்.
இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் மிக முக்கியமான முடிவு ஒன்று மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
ஜனவரி 5ஆம் தேதி மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில், உதயநிதி… துணை முதல்வருக்கு முன் பொறுப்பு முதல்வர்? என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

டொனால்டு டிராம்புக்கு ஜனாதிபதி தேர்தலுக்கான முதல் வெற்றி

மாலை மலர்  : அமெரிக்காவில் இந்த வருட இறுதியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட இருக்கிறார்.
குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுவதாக தெரிவித்தார். அதேவேளையில் விவேக் ராமசாமி, ரான் டி சான்டிஸ், கரோலினா மாநில கவர்னர் நிக்கி ஹாலே ஆகியோரும் போட்டியிடுவதாக அறிவித்தனர்.
இதனால் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவது யார்? என்பதற்கான தேர்தல் நடத்தப்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் நான்கு பேரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

கிரகாம் என்றொரு மானிடன்.. இந்தப் படுகொலை உலகின் கொடுஞ்செயல் பட்டியலில் நிச்சயம் இடம்பெறும்.

May be an image of 5 people, blonde hair and people smiling

Balakrishnan R :   ஆனந்த விகடனில் வெளியான எனது தமிழ் நெடுஞ்சாலை தொடரில் ஒரு கட்டுரை இது.
கிரகாம் என்றொரு மானிடன்
ஜனவரி 23, 1999. தீ வைத்துக் கொளுத்தப்பட்ட அந்த வேனுக்கு அருகே சென்றபோது என் இதயம் படபடத்தது. கிரகாம் ஸ்டூவர்ட்ஸ் ஸ்டேன்ஸுடன் அவரின் குழந்தைகள் பிலிப்பும் திமோத்தியும் கருகிக்கிடந்தார்கள். அந்தக் கறுப்பு தினத்தின் கனத்தை இறக்கிவைக்க முடியாமல் இன்றுவரை சுமக்கிறேன்.
அதிகாலை 4 மணிக்கு விடாமல் ஒலித்தது தொலைபேசி. இந்த நேரத்தில் யார் என்று பதறியடித்து எழுந்தேன். கிரகாமின் மனைவி கிளாடிஸ் பேசினார். "மனோகர்பூரில் கிரகாம், பிலிப், திமோத்திக்கு ஏதோ அபாயம் நேர்ந்திருக்கிறது. பயமாக இருக்கிறது. நீங்கள் விசாரிக்க முடியுமா?" என்று கேட்டார்.

ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க நீதிமன்றம் ஆணை! வழக்கு செலவாக கர்நாடக அரசுக்கு 5 கோடி ,,

tamil.oneindia.com - Vignesh Selvaraj :  பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க பெங்களூர் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக 1996ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.

செவ்வாய், 23 ஜனவரி, 2024

தமிழ்நாட்டு கோயில்களில் பாஜகவினர் பொது வழிபாடு என்ற பெயரில் அரசியல்? முறியடித்த தமிழக அரசு?

 மின்னம்பலம் - Aara  :  டிஜிட்டல் திண்ணை: அறநிலையத்துறைக்குள் அயோத்தீ… சேகர்பாபுவை சுற்றி என்ன நடக்கிறது?
அயோத்தியிலே பால ராமர் சிலையை பிரதிஷ்டை செய்து புதிய கோவிலை திறந்து வைத்து பிரதமர் மோடி விரிவான உரையாற்றியிருக்கிறார். இது மின்னம்பலத்தில் தனி செய்தியாக வெளிவந்திருக்கிறது. இதேநேரம் தமிழ்நாட்டில் இந்த நிகழ்வு குறித்து ஆளுங்கட்சியான திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே கடுமையான அரசியல் மோதல்கள் நடைபெற்றுள்ளன .
ராமர் கோவில் திறப்பு விழா அன்று தமிழக கோயில்களில் சிறப்பு வழிபாடுகள், நேரடி ஒளிபரப்புகள் செய்ய தமிழ்நாடு அரசு தடை விதிப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜனவரி 21 ஆம் தேதி குற்றம் சாட்டினார்.

தமிழ்நாட்டில் 6,18,90,348 வாக்காளர்கள்! ஆண்கள் 3,03,96,330 0 பெண்கள் 3,14,85,724 - மூன்றாம் பாலினத்தவர் 8,294

tamil.oneindia.com - Mani Singh S : சென்னை: சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் தான் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்கள் உள்ளனர் என்றும், மிக குறைந்த வாக்காளர்களை கொண்ட சட்டமன்ற தொகுதியாக நாகப்பட்டினம் மாவட்டத்திற்குட்பட்ட 164-கீழ்வேளூர் உள்ளது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறும் எனத் தெரிகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதனால், தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.
இந்த நிலையில், இன்று இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வெளியிட்டார்.

புதுச்சேரியில் கட்டி முடித்த ஒரே மாதத்தில் சரிந்து விழுந்த கட்டடம்

BBC News தமிழ் :   புதுச்சேரியில் மூன்று அடுக்கு மாடி கட்டடம் சரிந்து விழுந்தது. கட்டி ஒரு மாதமே ஆன நிலையில், புதுமனை புகுவிழா கூட நடைபெறவில்லை.
புதுச்சேரி ஆட்டுப்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சாவித்திரி. கணவர் ரங்கநாதன் உயிரிழந்த நிலையில், இவர் தனது மகள் சித்ரா மற்றும் மருமகன் சுரேஷ் ஆகியோருடன் வசித்து வருகிறார்.
இவர்கள் அதே பகுதியில் அரசு இலவசமாக கொடுத்த பட்டா இடத்தில் மூன்று மாடி வீடு கட்டி வந்தனர்.
இந்த வீட்டின் கட்டுமான பணிகள் கடந்த மாதம் முடிந்த நிலையில், வருகின்ற 26 ஆம் தேதி வீட்டின் புதுமனை புகுவிழா நடத்த சாவித்திரி திட்டமிட்டிருந்தார்.

சுப்பிரமணியன் சுவாமி தொடர் தாக்குதல்! அயோத்தியில் தன்னை முன்னிறுத்தும் மோடி!

minnambalam.com ara  அயோத்தியில் ராமர் கோவிலை திறந்து வைத்து, பால ராமர் சிலையை நிறுவியதன் மூலம் இன்று இந்தியா மட்டுமல்ல, உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் பிரதமர் மோடி.
அயோத்தியில் இந்த நிகழ்ச்சியில் அவர் மட்டுமே பிரதானமாக முன்னிறுத்தப்பட்ட நிலையில், தனது நெருங்கிய சகாவான உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட அமைச்சர்களை எல்லாம் நாட்டின் ஒவ்வொரு பகுதியில் உள்ள ராமர் கோயில்களுக்கு வழிபடுமாறு அனுப்பிவிட்டார்.
இந்த நிலையில் பாஜகவுக்குள் இருந்தே இவ்விவகாரத்தில் மோடியை நோக்கி கண்டன அம்புகளை ஏவி வருகிறார் பாஜகவைச் சேர்ந்தவரான சுப்பிரமணியன் சுவாமி.

திங்கள், 22 ஜனவரி, 2024

அயோத்தி கோயிலின் சிமெண்டு மணல் தூசிகளை கழுவும் பணி நடக்கும் புனிதமான முகூர்த்தத்தில்

ராதா மனோகர்  :  அயோத்தி ராமன் கோயில் குடிபுகு விழாவை ஒட்டி எக்கச்சக்கமான அலப்பறை ஒலிக்கிறது
ஒரிஜினல் ராமாயணத்தை எழுதியவன் என்ற வகையில் இது பற்றி எனது கருத்தை ஒருவரும் கேட்கவில்லை
சங்கிகளிடம் நன்றி எல்லாம் எதிர்பார்க்க முடியாதுதான்
இருந்தாலும் மனசு கேக்கலை
அந்த ஒரிஜினல் ராமகதாவை மீண்டும் ஒரு தடவை மனனம் செய்து பார்த்தல்தான் முறையென்று படுகிறது
அதுவும் அந்த அயோத்தி கோயிலின்  சிமெண்டு மணல் தூசிகளை கழுவும் பணி நடக்கும் புனிதமான முகூர்த்தத்தில் எனது ராமாயணமும் .. கோல நிலவோடு சேர்ந்த குளிர்தென்றல்
அந்த சிங்கார மன்மதனின் சன்னதியில் ..
ம்ம்ம் முடிஞ்சா மேற்கொண்டு வாசியுங்க ..
அயோத்தி ராமனின் மறுபக்கம் .. இதுவரை சொல்லாமல் மறைத்த பல பக்கங்கள்

அயோத்தி ராமர் கோவில் கருவறையில் கால் தடுக்கி விழப்போன மோடி.. பதறிய அர்ச்சகர்கள்..

Ram Temple Inauguration: PM Modi misses the feet and slipped in garbh grah when ram lalla statue pran prthishta

tamil.oneindia.com  - Nantha Kumar R :  அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை யொட்டி கருவறையில் பிரதமர் மோடி பிரான் பிரதிஷ்டை செய்தார். இந்த வேளையில் அவர் கால் தடுக்க கீழே விழப்போனதால் அங்கிருந்த அர்ச்சகர்கள் பதறிப்போன சம்பவம் பரப்பை ஏற்படுத்தியது.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கான சிறப்பு பூஜைகள் கடந்த 16ம் தேதி தொடங்கியது. கடந்த 17 ம் தேதி அயோத்தி ராமர் கோவிலில் 5 வயது பால ராமர் சிலை கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
Ram Temple Inauguration: PM Modi misses the feet and slipped in garbh grah when ram lalla statue pran prthishta

மகாராஷ்டிரா: பெண்ணின் நாக்கை அறுத்துக் கொத்தடிமையாக பயன்படுத்திய கும்பல் - BBC News

BBC News தமிழ்  : இந்த முகங்களுக்கு பின்னால் ஒரு ஆழ்ந்த சோகம் மறைந்துள்ளது. அவர்களால் சரியாக பேச கூட முடியவில்லை. தங்களின் அடையாளத்தை அவர்கள் தொலைத்துவிட்டனர். காரணம் கொடூரமான, மனிதாபிமானமற்ற சித்ரவதைகளுக்கு அவர்கள் ஆளாகியுள்ளனர்.
மனித கடத்தலுக்கும், கட்டாய வேலைக்கும் உள்ளான இவர்கள் கடந்த 10, 15 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக பயன்படுத்தப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவின் அஹ்மத் நகருக்கு உட்பட்ட பேல்வண்டி பகுதியில் நடந்த இந்த உண்மை டிசம்பர் 18 அன்று காவல்துறை சோதனையின் போது வெளிச்சத்திற்கு வந்தது.
அடையாளம் தெரியாத சடலங்கள் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பல்வேறு விஷயங்கள் தெரியவந்துள்ளன.

பனிப் புயலால் 90 பேர் பலி - பல US மாநில மக்கள் அவதி

மாலை மலர்  : கடந்த ஒரு வாரத்தில் மட்டும், பருவநிலையில் தோன்றிய தீவிர வானிலை மாற்றங்களினால் அமெரிக்காவில் 89 பேர் உயிரிழந்துள்ளனர்.
பல மாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவுடன் பனிப்புயலும் தாக்கி மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கி உள்ளது.
டென்னிசி மாநிலத்தில் 25 பேரும், ஒரேகான் மாநிலத்தில் 16 பேரும் கடும் பனிப்பொழிவால் உயிரிழந்ததையடுத்து அங்கெல்லாம் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி இல்லினாய்ஸ், பென்சில்வேனியா, மிசிசிபி, வாஷிங்டன், கென்டுக்கி, விஸ்கான்சின், நியூயார்க், நியூ ஜெர்சி உள்ளிட்ட 8 மாநிலங்களில் உயிரிழப்பு நடந்துள்ளது.

ஞாயிறு, 21 ஜனவரி, 2024

ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தமும் கடமை தவறிய இந்திய ஒன்றிய அரசும்

 ராதா மனோகர் :  Floating  People -  இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நூற்றாண்டுகளாக மக்கள் அங்கும் இங்குமாக போய்வந்தனர் என்பது வரலாறு!
இலங்கை சுதந்திரம் அடைந்த பின்பு இப்படியாக போக்கு வரவு செய்துகொண்டிருந்த மக்களின் தொகையானது இலங்கையில் . குறிப்பாக சிங்கள மக்களிடையே ஒரு குடிப்பரம்பல் அச்ச உணர்வை உண்டாக்கியது.
இதன் காரணமாகவே ஒரு இந்திய எதிர்ப்பு மனநிலை அங்கு உருவானது.
பல்வேறு தொழில்கள் காரணமாகவும் வியாபார நோக்கங்களுக்காகவும் ஏறக்குறைய ஐம்பதுகள் வரை இந்த போக்கு வரத்து வாழ்வியல் தொடர்ந்தது.
இலங்கையில் ஆட்சிக்கு வந்த அத்தனை அரசுகளும் இது தொடர்பாக இந்திய அரசோடு பல தடைவைகள் பேச்சுக்களை நடத்தி இருந்தன..
ஸ்ரீமாவோ சாஸ்திரி ஒப்பந்தம் இது விடயத்தில் ஒரு தீர்வை நோக்கி இருந்தது

அந்த ஒப்பந்தத்தில்  இந்தியா ஐந்தே கால் இலட்சம் மக்களுக்கு இந்திய குடியுரிமை கொடுப்பதென்றும்,
இலங்கை மூன்றே முக்கால் இலட்சம் மக்களுக்கு இலங்கை குடியுரிமை கொடுப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டது

இனி திருமணத்தில் வரும் பரிசுகளுக்கும் வரி கட்ட வேண்டும்.. முழு விபரம் இதோ..

article_image1

tamil.asianetnews.com  -  Raghupati R  : திருமண பரிசுகளுக்கு வரி செலுத்த வேண்டும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. இது தொடர்பான கணக்கீடு மற்றும் விதிகளை அறிந்து கொள்ளுங்கள்.
இந்தியாவில் திருமணங்கள் மிகவும் ஆடம்பரமாகவும், ஆடம்பரமாகவும் நடைபெறுகின்றன. இதற்காக பெரும் தொகையை குடும்பத்தினர் செலவிடுகின்றனர். மணமகன் மற்றும் மணமகளுடன், அவர்களின் பெற்றோரும் திருமணத்தில் பல பரிசுகளைப் பெறுகிறார்கள். பல திருமணங்களில் இந்த பரிசுகளின் மதிப்பு லட்சங்கள் மற்றும் கோடிகள்.

இலங்கையில் இருந்து 40 இந்திய மீனவர்கள் விடுதலை

 hirunews.lk ;  தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 40 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், நேற்று 40 பேரையும் இலங்கை அரசாங்கம் விடுவித்துள்ளது.
ஆனால், பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் இலங்கை வசமே உள்ளது. எனவே, படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
மீனவர்களை மட்டும் விடுதலை செய்வதால் எந்த பலனும் இல்லை, படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சேலத்தில் 5 லட்சம் பேர்! சேலத்தில் இன்று போக்குவரத்து மாற்றம்.. திமுக இளைஞரணி மாநாடு எதிரொலி

tamil.oneindia.com - Nantha Kumar R : சேலம்: சேலத்தை அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில், திமுக இளைஞரணி மாநில மாநாடு இன்று நடைபெற உள்ளது. இதனால் சேலம்-ஆத்தூர் ரோடு உள்பட சில இடங்களில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மாற்று பாதையில் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாடு இன்று நடைபெற உள்ளது. பெத்தநாயக்கன்பாளையத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள அரங்கில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான நிகழ்ச்சிகள் நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
Salem-attur road today traffic change due to DMK youth wing conference

யாழ்ப்பாணத்தில் கடைகளை எரிக்க பெல்ஜியத்தில் இருந்து பணம் கொடுத்த தமிழ் பெண்

 ceylonmirror.net - jeevan : கோடிக் கணக்கான சொத்துகளை தீயிட்டு கொளுத்த ஒப்பந்தம் போட்டவர் பெல்ஜியத்தில் வாழும் யாழ்பாண பெண்னொருவராம்.
பெல்ஜியத்தில் வசிக்கும் யாழ்பாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஒப்பந்தம் கொடுத்து யாழ்ப்பாணத்தில் உள்ள பிரமாண்ட துணி கடைக்கு தீ வைத்துள்ளது குறித்து போலீசார் கண்டறிந்து , சம்பந்தப்பட்ட மூவரை கைது செய்துள்ளனர்.
யாழ்.நகரில் தீயினால் நாசமான ஜவுளிக்கடை, ஒப்பந்தத்தின் பேரில் தீயிட்டு கொளுத்தப்பட்டதாகவும், அதற்கான ஒப்பந்தம் பெல்ஜியத்தில் வாழும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவரினால் வழங்கப்பட்டுள்ளதாகவும் , யாழ்.பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சந்தேகநபர்கள் மூவர் இன்று (20) கைது செய்யப்பட்டுள்ளனர்.